Showing posts with label emperor. Show all posts
Showing posts with label emperor. Show all posts

Sunday, 28 March 2021

On this day in AD 193,march 28 the Roman emperor Pertinax was assassinated at Rome

 




On this day in AD 193,march 28 the Roman emperor Pertinax was assassinated at Rome

Text by Benedict Segal

Publius Helvius Pertinax was born at Alba Pompeia in Liguria on 1 August, 126 the son of Helvius Successus, a man of humble origins who may have been a freedman. His mother’s identity is unknown. Pertinax received a basic Roman education, which led him initially to become a teacher before joining the Roman army as an officer through the patronage of the senator Claudius Pompeianus.

AV

AV aureus of Pertinax. Obverse has laureate head of emperor r., IMP CAES P HELV PERTIN AVG. Reverse has Providentia left, right hand upraised below star, PROVID DEOR COS II. Image kingly courtesy Classical Numismatics Group.

He was appointed the commander of a cohort of Gallic auxiliaries in Syria under Antoninus Pius in which post he served with distinction in the Parthian War which broke out in 162. This led to a promotion as one of the military tribunes of Legio VI Victrix, then stationed in Britain. From there he was transferred to Moesia as the prefect of a cavalry unit; as a man of knightly rank (an eques) Pertinax had thus reached the end of his period of obligatory service.

Around 168 he was moved into the imperial administration as procurator of the alimenta system, whereby poor children received public funds for their upkeep; his area of operation ran along the Via Aemilia in northern Italy.

He was next put in charge of the Roman fleet stationed on the Rhine, before obtaining another procuratorship (in effect a financial officer) in the province of Dacia. Intrigues within the court of Marcus Aurelius led to his dismissal from this post, but when Italy was invaded by Germanic tribes in 170, Pertinax’ old patron Pompeianus engineered his return as his right-hand man to deal with the threat.

The success of this endeavour prompted the emperor to lift Pertinax from equestrian to senatorial rank by enrolling him in the Senate in 174 with the rank of ex-praetor. He was given command of Legio I Adiutrix with which he cleared the provinces of Noricum and Raetia of the marauding Germanic tribesmen.

His achievement resulted in a consulship in 175 followed by a string of governorships – Upper Moesia, Lower Moesia and Dacia – culminating in the governorship of Syria around 180. However, two years later, for reasons that are unclear he was forced to retire to his estates in Liguria by Commodus’ over-mighty Praetorian Prefect, Perennis.

Yet when Perennis fell from power, Commodus sought to not cut ties with Pertinax and called him to the governorship of Britain in 185, emphasising his importance to the imperial powers. At this time Britain’s legions were in an unruly mood. One even mutinied and almost killed Pertinax.

He restored discipline but earned the legions’ resentment; this led him to request removal from his position after a few years. In 188 his long and very varied career was capped with the governorship of Africa.

Then, on 31 December 192 the murder of Commodus changed Pertinax’ life forever: whilst it is unclear whether he knew anything of Commodus’ assassination, he was rumoured to be the preferred choice of the conspirators.

Being asked by the Praetorian prefect Laetus to accept the throne, he was warmly received by the Senate, and so by the son of a freed slave had made it to the throne of the Roman Empire. Cassius Dio tells us he was a conscientious ruler who attempted to plug a large gap in the public finances by selling of the property (especially the luxury items) amassed by Commodus.

Pertinax’ great mistake, however, was in reigning in the licence which the praetorians and imperial freedmen had enjoyed under his predecessor. This caused a good deal of resentment and Laetus and the praetorians sought another man to replace Pertinax with; they settled on the consul Quintus Sosius Falco.

Pertinax catching onto the plot surprisingly decided to pardon Falco claiming that he would see no senator executed during his reign, even for valid reasons. Dio tells us that thereafter Laetus began murdering praetorian guardsmen, claiming to be acting under orders from Pertinax.

A band of soldiers worried they might be next then broke into the imperial palace and confronted the emperor. Pertinax did not seek refuge and spoke bravely to the soldiers; but one of their number would not listen to reason and attacked Pertinax.

His comrades followed, killing the emperor 87 days into his reign. Pertinax was 67 years old. The soldiers cut off his head and paraded it atop a spear. After Pertinax’ death, the empire would be, in effect, auctioned off to the highest bidder by the Praetorian guardsmen. It would be purchased by Didius Julianus.

Tuesday, 25 August 2020

JAHANGIR,THE MOGHUL EMPEROR




JAHANGIR,THE MOGHUL EMPEROR

Jahangir was the fourth Mughal emperor, counted amongst the greatest Indian Emperors. He ruled over India for a period of 22 years from 1605 to 1627, and was well known for his love for fine arts. As the eldest surviving son of the Mughal Emperor Akbar the Great, he was trained for succession from a young age. He was tutored by the best teachers his father could find and was given expert training in civil and military administration. With time he grew impatient for succession and revolted against his father in 1599 ,minted coin on his own name,
REBELLION COIN AGAINST AKBAR 1599-1600
but was unsuccessful
. The relations between Akbar and Jahangir became strained as a result of this revolt, After father`s death he ascended to the throne shortly . As emperor, he proved to be an excellent administrator and his reign was marked by political stability and economic growth. He had a profound interest in fine arts and patronized the European and Persian arts, and played a major role in the development of Mughal arts. Having inherited a rich legacy from his father, he continued with several of Akbar’s policies. Jahangir was also notorious for his vices. He was addicted to alcohol, opium, and women, and was infamous for the acts of brutality he inflicted upon the Sikhs.


Childhood & Early Life
He was born as Nur-ud-din Mohammad Salim on 31 August 1569 in Fatehpur Sikri to Mughal Emperor Akbar and his Rajput wife Mariam-uz-Zamani Begum (also known as Jodha Bai). He was the emperor’s much longed for son.
As the eldest surviving son of Akbar, he was named the successor quite early on in life. The emperor ensured that the prince received education from the best possible tutors. Salim learned Persian, Turki, Arabic, Hindi, arithmetic, history, and geography among other subjects. He also developed an interest in composing verses.
The prince was also trained in civil and military administration and was placed in charge of a regiment of troops during the Kabul expedition of 1581. He was promoted to the rank of an army officer by 1585.
Salim grew impatient with time and revolted against Akbar in 1599. His attempt was unsuccessful and this incident created a rift between the father and son. 

Accession & Reign
Akbar died on 27 October 1605. A few days after his father’s death, Salim ascended the throne with the title of Nur-ud-din Muhammad Jahangir Badshah Ghazi on 3 November 1605.
He came to the throne at a time of great political chaos. There were several other contenders to the throne, and Jahangir was challenged by his own son, Prince Khusrau Mirza. Jahangir defeated the prince in 1606 and confined him in the fort of Agra. As punishment Khusrau Mirza was blinded.
Jahangir continued with several of his father’s policies. Like Akbar, he too embarked on a series of military campaigns aimed at expanding the territories under Mughal rule. He successfully ended an ongoing war with the Rajput principality of Mewar, in 1614.
In 1622, he sent his son, son Prince Khurram (later Shah Jahan), to fight against the combined forces of Ahmednagar, Bijapur and Golconda. Khurram emerged victorious following the conflicts and soon he challenged his own father for the throne. Jahangir was able to subdue his rebellious son and retain power.

Jahangir had a deep interest in matters relating to arts and culture. During his reign he encouraged artists and painters, and is credited to have played a leading role in the development of Mughal arts and culture. He also patronized European and Persian arts. The emperor was also known for his architectural works, the most famous work undertaken during his reign being the exquisite Shalimar Gardens in Kashmir.
Jahangir, though notorious for the brutality he inflicted upon his own kin, was also known for his sense of fairness and justice,  He enacted several liberal decrees which showed his great concern for the welfare of his citizens, and installed the famous golden "chain of justice".
Like Akbar, Jahangir’s rule was also characterized by religious tolerance. However, the Mughals developed hostile relations with the emerging clan of Sikhs led by the fifth Sikh guru, Arjan Dev. The guru had supported Jahangir's rebel son Khusrau Mirza which prompted Jahangir to order Arjan Dev’s execution. The guru was viciously tortured to death.


The Mughal emperor was a complex person. Even though a successful ruler, he was infamous for his brutality. He was also addicted to alcohol, opium, and women. He has been criticized for giving his wife Nur Jahan too much power in the imperial court.

Major Works
Jahangir is most famous for installing the golden "chain of justice” outside the castle of Agra. The chain, which was attached to some bells, would ring the bells when pulled and summon the emperor. It was meant to be a link between the citizens and the emperor, and it was announced that any aggrieved person ringing the bells would be granted a personal audience with the emperor.





Personal Life & Legacy

NOORJAHAN

Jahangir was married several times. Some of his wives were Saliha Banu Begum, Khas Mahal Begum, Jagat Gosain Begum, Malika Shikar Begum, Sahib Jamal Begum, Malika Jahan Begum, Nur-un-Nissa Begam, Koka Kumari Begum, and Kanwal Rani Begum.
His most prominent and powerful wife was Mehr-Un-Nisa or Nur Jahan, who miinted coin on her name .
COIN OF NOORJAHAN
the widow of a rebel officer, Sher Afgan, of Mughals. He married her in 1611 and she went on to greatly influence the emperor during the later period of his reign.

Jahangir died of an illness on 7 November 1627. At the time of his death, he was traveling from Kashmir to Lahore. Jahangir was succeeded by his third son, Prince Khurram who took the title of Shah Jahan.

Jahangir has often been portrayed in Indian films and television serials, some of them being the 1939 film ‘Pukar’, the 1953 film ‘Anarkali’, and the 1960 film ‘Mughal-e-Azam’.


Tuesday, 6 February 2018

CHARLES II , EMPEROR OF BRITISH EMPIRE DIED 1685 FEBRUARY 6












CHARLES II , EMPEROR OF BRITISH EMPIRE


DIED 1685 FEBRUARY 6



இரண்டாம் சார்லசு (Charles II, 29 மே 1630 – 6 பெப்ரவரி 1685)[1] இங்கிலாந்து, இசுக்கொட்லாந்து, அயர்லாந்து இராச்சியங்களின் பேரரசராக 1660 முதல் 1685 வரை இருந்தவர்.

இங்கிலாந்து உள்நாட்டுப் போரின் இறுதிக் கட்டத்தில் இரண்டாம் சார்லசுவின் தந்தையும் இங்கிலாந்தின் பேரரசருமான முதலாம் சார்லசு 1649 சனவரி 30 அன்று வைட்ஹால் அரண்மனையில் தூக்கிலிடப்பட்டார். இசுக்கொட்லாந்தின் நாடாளுமன்றம் இரண்டாம் சார்லசை இசுக்கொட்லாந்தின் அரசராக 1649 பெப்ரவரி 5 இல் அறிவித்தது.[2] ஆனால், இங்கிலாந்து நாடாளுமன்றம் பொதுநலவாய இங்கிலாந்து என்ற இடைக்கால அரசை அமைத்து, [ஆலிவர் கிராம்வெல்]]லின் தலைமையில் குடியரசானது. கிராம்வெல் 1651 செப்டம்பர் 3 இல் வூஸ்டர் என்ற இடத்தில் இடம்பெற்ற சண்டையில் இரண்டாம் சார்லசுவைத் தோற்கடித்தார்.[3] இதனை அடுத்து சார்லசு பிரான்சுக்குத் தப்பி ஓடினார். கிராம்வெல் இங்கிலாந்து, இசுக்கொட்லாந்து, அயர்லாந்து ஆகிய மூன்று நாடுகளினதும் ஆட்சியாளராக இருந்தார். இரண்டாம் சார்லசு அடுத்த ஒன்பதாண்டு காலம் நாடு கடந்த நிலையில் பிரான்சு, டச்சுக் குடியரசு, எசுப்பானிய நெதர்லாந்து ஆகிய நாடுகளில் வாழ்ந்து வந்தார்.[4]

1658 இல் கிராம்வெல்லின் இறப்பை அடுத்து இடம்பெற்ற அரசியல் சிக்கல் நிலையில், முடியாட்சி மீண்டும் அறிமுகப்படுத்தப்பட்டு,[5] முடிக்குரியவராக இருந்த இரண்டாம் சார்லசு பிரித்தானியாவுக்கு அழைக்கப்பட்டார்.[6] 1660 மே 29 இல் அவரது 30வது அகவையில் இலண்டனில் அவருக்குப் பெரும் வரவேற்பு அளிக்கப்பட்டது. 1660 முதல், அனைத்து அரச ஆவணங்களும் அவர் 1649 இல் தந்தைக்குப் பின்னர் ஆட்சிப் பொறுபை ஏற்றவர் என்று மாற்றப்பட்டன.

சார்லசுவின் இங்கிலாந்து நாடாளுமன்றம் இங்கிலாந்து திருச்சபையின் நிலையை உயர்த்திக் கொள்ள கிளாரண்டன் குறியீடு என அறியப்படும் சட்டங்களை இயற்றியது. சார்லசு மதசகிப்புத் தனமைக் கொள்கைக்கு ஆதரவளித்தாலும், கிளாரண்டன் குறியீட்டு சட்டங்களுக்கு அனுமதி அளிக்க வேண்டியதாயிற்று.[7] இவரது ஆட்சிக் காலத்தின் ஆரம்பத்தில் இரண்டாம் ஆங்கிலேய-டச்சுப் போர் இடம்பெற்றது. 1670 இல், அவரது தாய்-வழிச் சகோதரரான பிரான்சின் பதினான்காம் லூயி அரசனுடன் டோவரில் ஓர் இரகசிய ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார்.
இதன்படி மூன்றாம் ஆங்கில-இடச்சுப் போரில் லூயி சார்லசுவிற்கு உதவியளிக்க முன்வந்தார்.[8] பதிலுக்கு சார்லசு தான் கத்தோலிக்கத்துக்கு நாள் குறிப்பிடப்படாத பின்னொரு நாளில் மதம் மாறுவதாக லூயியிற்கு இரகசிய வாக்குறுதி அளித்தார். இரண்டாம் சார்லசு தனது 1672 ஆம் ஆண்டு அரசப் பிரகடனம் மூலம் கத்தோலிக்கர்களுக்கும் புரட்டத்தாந்து எதிர்பாளர்களுக்கும் சமயச் சுதந்திரம் அளிப்பதற்கு முயற்சி மேற்கொண்டார். ஆனால், ஆங்கிலேய நாடாளுமன்றத்தின் வற்புறுத்தலின் பேரில் அப்பிரகடனத்தைத் திரும்பப் பெற்றார். 1679 இல் சார்லசுவின் சகோதரரும், அடுத்த முடிக்குரியவருமான யோர்க் இளவரசர் இரண்டாம் ஜேம்சு ஒரு கத்தோலிக்கர் என்பது தெரிய வந்தது. இந்த நெருக்கடியின் மூலம் நாடாளுமன்றத்தில் முடியாட்சிக்கு எதிரான விக் கட்சியும், சார்பான டோடி கட்சியும் உருவாயின. 1683 இல் சார்லசையும், ஜேம்சையும் படுகொலை செய்வதற்கான திட்டமும்
வெளிக்கொணரப்பட்டது. விக் கட்சியினர் சிலர் கைது செய்யப்பட்டு தூக்கிலிடப்பட்டனர். வேறு சிலர் நாடு கடத்தப்பட்டனர். சார்ல்ஸ் 1781 இல் நாடாளுமன்ரத்தைக் கலைத்து, 1685 பெப்ரவரி 6 இல் இறக்கும் வரை தனியாக ஆட்சி நடத்தினார். இவர் இறக்கும் தறுவாயில் கத்தோலிக்கத்துக்கு மதம் மாறினார்.


ஆலிவர் கிராம்வெல், மற்றும் பியூரித்தான்களின் பத்தாண்டுகளுக்கும் மேலான கடுமையான ஆட்சிக் காலத்தின் பின்னர் சார்லசுவின் ஆட்சிக்காலத்தில் நாடு வழமை நிலைக்குத் திரும்பியதன் மூலம் சார்லசு ஒரு "களிப்பு மிக்க பேரரசன்" என மக்களால்
அறியப்பட்டார். சார்லசின் மனைவி கேத்தரினுக்குப் பிள்ளைகள் எவரும் இல்லை.[9] ஆனாலும், சார்லசுசிற்கு வேறு தகாத உறவுகளின் மூலம் 12 பிள்ளைகள் இருந்தனர். சார்லசிற்குப் பின்னர் இரண்டாம் ஜேம்சு பேரரசான முடி சூடினார்.

Monday, 16 October 2017

Hongzhi Emperor 1487- 1505.........4





Hongzhi Emperor 1487- 1505 ..........4

காங் சி 1487–1505


மன்னர் காங் சி 1487–1505அப்போது ரஷ்ய மன்னராக இருந்த மகா பீட்டருடன் (பீட்டர் தி கிரேட்) நட்பாகப் பழகி வந்தார்.

ஒரு கட்டத்தில் ‘எங்கள் நாட்டு மாணவர்கள் பெய்ஜிங்கில் கல்வி கற்கலாமா?’’ என்று ரஷ்ய மன்னர் கேட்க, அதை ஒரு கவுரவமாக கருதிய சீன மன்னர் இதற்கு ஒப்புக் கொண்டார். மாணவர்களோடு கூடவே வந்து சேர்ந்தனர் ரஷ்ய பாதிரிமார்கள்.

ஐரோப்பியர்களின் வருகைக்கு சீனாவில் பிள்ளையார் சுழி போடப்பட்டது. ஐரோப்பியர்கள் தங்கள் வணிகத்தையும் சீனாவில் தொடங்கினர். இவர்களின் மரியாதையான பழக்க வழக்கங்கள் சீனர்களுக்குப் பிடித்திருந்தன. கிறிஸ்தவ மதப் பிரதிநிதிகள் வேறு விதத்திலும் சாமர்த்தியம் காட்டினார்கள். புத்த சன்யாசிகள் போல உடை உடுத்தி, சீன அதிகாரிகளின் நட்பைப் பெற்று பிறகு மெல்ல மெல்ல கிறிஸ்தவ மதத்தைப் பரப்பினார்கள்.

1514-ல் இருந்து 1784 வரை 

அடுத்தடுத்து பல நாடுகள் சீனாவில் தங்கள் வணிகத்தைத் தொடங்கின. போர்ச்சுக்கல், ஸ்பெயின், ஹாலந்து, பிரிட்டன், பிரான்ஸ் என்று இவை வரிசைக்கிரமமாக சீனாவில் கால் பதித்தன.

சீனர்களுக்குக் குழப்பம் வந்தது. இவர்களின் ஒரே நோக்கம் வணிகம்தானா?

அதுவும் முதன்முதலில் வந்து சேர்ந்த போர்ச்சுக்கீசியர்கள் சீன மன்னரின் கட்டளைகளுக்கு கீழ்ப்படிய மறுத்தார் கள். கொதித்துப் போன சீனர்கள் போர்ச்சு கீசியர்களைக் கொன்று குவித்தார்கள். எந்த அந்நிய சக்தியின் வணிகமும் இனி தேவையில்லை என்ற முடிவுக்கு வந்தார்கள். பரந்திருந்த சீனாவால் தனக்குத் தேவைப்படும் அனைத்தையும் தயாரித்துக் கொள்ள முடிந்தது.

ஆனால் ஐரோப்பியர்களுக்கு சீனா தேவைப்பட்டது. சீன பட்டு, சீனத் தேயிலை ஆகியவை காந்தம்போல் அவர்களைக் கவர்ந்தன. தவிர மக்கள் தொகை அதிகமான சீனாவில் தங்கள் இயந்திரங்களை மிக அதிக அளவில் விற்க முடியுமே. மீண்டும் மீண்டும் பேச்சுவார்த்தை நடந்தது.

சீனா ஒருவழியாக ஒப்புக் கொண்டது. ஆனால் வணிகத்துக்குப் பல நிபந்தனை களை விதித்தது. ‘கான்ட்டன் துறைமுகத்தில் மட்டும்தான் வெளிநாடுகள் வணிகம் செய்யலாம். சீனர்களை கூலியாட்களாக நியமிக்கக் கூடாது. வணிகக் கிடங்குகளுக்கு பெண்களை அழைத்துவரக் கூடாது. வியாபாரம் செய்யும் காலம் மட்டும்தான் கான்ட்டன் நகரில் அந்நியர்கள் வசிக்கலாம்’.

பிற நாடுகள் ஒப்புக் கொண்டன. பிரிட்டனுக்கு மட்டும் இது மிகவும் கவுரவக் குறைச்சலாக இருந்தது. சீனர்களுக்கு ஓபியம் எனும் போதை மருந்தை கொஞ்சம் கொஞ்சமாக இறக்குமதி செய்து லாபம் பார்க்கத் தொடங்கியது.

இதனால் நேர்ந்த உரசல்களை இதே பகுதியில் ஹாங்காங் குறித்து எழுதியபோது விளக்கமாகவே பார்த்திருக்கிறோம்.

பிரிட்டனுக்கும் சீனாவுக்குமிடையே நடைபெற்றது ‘முதல் அபினி யுத்தம்’. பிரிட்டிஷ் படை சீனாவில் சில சிறிய தீவுகளை தன் வசம் ஆக்கிக் கொண்டது. மஞ்சூ சக்ரவர்த்தி நடுங்கினார். சமாதானம் பேசினார். இதைத் தொடர்ந்து ஹாங்காங் ‘நூறு வருட குத்தகைக்கு’ பிரிட்டனுக்குத் தாரை வார்க்கப்பட்டது. தவிர போதை மருந்து வியாபாரம் ஒப்பந்தத்தின் மூலம் சட்டப்பூர்வமாகவே ஆக்கப்பட்டது.

இந்த நிலையில் சீன அரசுக்கும் எதிர்ப்பு நாடுகளுக்கும் சமாதானம் செய்து வைக்க முன்வந்தது ரஷ்யா. இந்த ‘சமாதானப் பேச்சினால்’ சீனாவுக்கு பலத்த நஷ்டம் ஏற்பட்டது. தனது 11 துறைமுகங்களை பிரிட்டன் மற்றும் பிரான்ஸ் நாட்டு வணிகத் துக்குச் சீனா திறந்துவிட்டது.

கிறிஸ்துவ பாதிரிமார்களுக்குப் பாதுகாப்பு அளித்தது. (இதன் காரணமாக மத மாற்றங்கள் பகிரங்கமாகவே நடைபெறத் தொடங்கின). நாட்டாமை செய்த ரஷ்யா ஆமோர் என்ற சீன மாகாணத்தை ‘அன்புடன் பெற்றுக் கொண்டது’. ஆக வடக்கிலிருந்து ரஷ்யா நெருக்க, சீனாவின் அன்னாம் பகுதியை பிரான்ஸ் ஆக்கிரமித்துக் கொள்ள, ஹாங்காங் பிரிட்டனுக்குச் செல்ல சீனா கதறத் தொடங்கியது. அதற்கென்று அந்த காலகட்டத்தில் எந்த நட்பு நாடும் இல்லாமல் போனது.

அடுத்து சீனாவை கபளீகரம் செய்ய முயற்சித்தது ஜப்பான். ஒரு யானையை ஓர் எறும்பால் தின்ன முடியுமா என்பதுபோல் வியப்படைய வேண்டாம். அப்போது ஜப்பான் பெரும் பேராசை பிடித்த நாடாக இருந்தது.

1536 முதல் 1598 வரை ஹிதயோஸி என்பவர் ஜப்பானின் பிரதமராக விளங்கினார். அவர் சீனாவை தன்வசம் ஆக்கிக் கொள்ள நினைத்தார். அதற்கு முதல் கட்டமாக கொரியாவை வசப்படுத்திக் கொள்ள தீர்மானித்தார். (அப்போது கொரியப் பகுதி சீனாவின் ஆதிக்கத்தில் இருந்தது).

கொரியாவை நோக்கி ஜப்பான் ராணுவம் செல்ல, பதறிப் போன சீனா தனது ராணுவ வீரர்களை கொரியாவுக்கு அனுப்பியது. இருதரப்பினரும் மோதிக் கொள்ள, கொரியாவில் ரத்த ஆறு ஓடியது.

இடையே ஜப்பானியப் பிரதமர் இறந்துவிட போர் நின்றது. ஆனால் அதே சமயம் ஜப்பானிலும் கிறிஸ்தவப் பாதிரிமார்கள் நுழைந்தார்கள். பிரிட்டன், ரஷ்யா, பிரான்ஸ், ஹாலந்து போன்ற ஐரோப்பிய நாடுகள் ஒவ்வொன்றாக ஜப்பானில் நுழைந்தன, மிரட்டின. சீனாவில் நடந்த அதே நாடகக் காட்சிகள்.

ஆனால் ஜப்பான் கொஞ்சம் வக்கிரமாக யோசித்தது. ‘அமெரிக்கா - ஐரோப்பிய சக்திகளிடம் நாம் அடிபணிந்துவிட்டோம். நாமும் யாரையாவது ஆட்டிப் படைத்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்!

இந்த யோசனையைச் செயலாற்ற ஜப்பான் தேர்ந்தெடுத்த நாடு சீனா.


JIAJING EMPEROR - 1521- 1567 MING DYNASTY 2



 JIAJING EMPEROR - 1521- 1567 MING DYNASTY 2 

மிங் வம்சாவளி ஆட்சி 1521–1567





சீனப் பெருஞ்சுவர் நமக்குத் தெரியும். ஆனால் அதற்கெல்லாம் பல நூற்றாண்டுகளுக்கு முன்பாகவே சீனா தன்னைச் சுற்றி ஒரு கற்பனைச் சுவரை எழுப்பிக் கொண்டிருந்தது. பிற நாடுகளை அது ஒரு பொருட்டாக நினைத்ததே இல்லை. தங்களுடையதுதான் புராதனமான கலாச்சாரம் என்ற எண்ணம் கொண்ட நாடு.

முதலில் கரன்ஸி நோட்டை வெளியிட்ட நாடு எது? நாங்கள்தான். பட்டாசுகளை முதலில் தயாரித்த நாடு? நாங்கள்தான். தத்துவத்திலிருந்து இசை வரை மிகவும் பாரம்பரியமான செல்வாக்கு கொண்ட நாடு எது? சந்தேகமென்ன, நாங்கள்தான். வேறு எந்த அந்நிய சக்தியும் அடக்கி ஆளாத நாடு எது? நாங்களேதான்.

சீனர்கள் கொண்டிருந்தது நியாயமான பெருமைகள்தான். ஆனால் இப்படியொரு கற்பனைச் சுவரை எழுப்பிக் கொண்டதில் சீனர்கள் தங்களைச் சுற்றி நடக்கும் விஷயங்களில் கவனம் செலுத்தத் தவறி விட்டார்கள். தட்டச்சில் நான்தான் மேதை என்று சொல்லிக் கொண்டே இருந்தால் எப்படி? அதுவும் கணினி அறிமுகமாகி ஜாலங்கள் செய்யத் தொடங்கிய பிறகு? அப்படித்தான் ஆகிவிட்டது சீனா. அறிவியலும், தொழில் நுட்பமும் உலகெங்கும் பரவியபோது சீனா கண்களை மூடிக் கொண்டிருந்தது.

ஒரு கட்டத்தில் அது கண் திறந்தபோது நிலைமை கைமீறியதாக மாறிவிட்டிருந்தது. ஐரோப்பிய நாடுகள் தங்களை ‘நாங்களே உயர்ந்தவர்கள்’ என்று எண்ணத் தொடங்கி விட்டிருந்தன.

ஆனால் ஒரு வித்தியாசம். தன்னை உயர்வாக நினைத்த சீனா அந்த மகிழ்ச்சியோடு காலம் தள்ளியது. ஆனால் தங்களை உயர்வாக நினைத்த ஐரோப்பிய நாடுகள் பிற நாடுகளை ஆக்கிரமிக்கத் தொடங்கியிருந்தன.

இந்தக் காலகட்டத்தில் சீனாவை மிங் வம்சத்தைச் சேர்ந்த அரசர்கள் ஆட்சி செய்யத் தொடங்கினார்கள்.

இந்த ஆட்சியில் திருநங்கைகளுக்கு முக்கிய பொறுப்பு இருந்தது. சொல்லப்போனால் ஒருவிதத்தில் சீனாவின் தலையெழுத்தை மாற்றி அமைத்ததில் அவர்களுக்கும் பங்கு உண்டு.

ஸி ஸுங் என்ற சீன சக்ரவர்த்திக்குப் பல உதவியாளர்கள் இருந்தார்கள். அவர்களில் வே சுங் ஸியென் என்ற திருநங்கையும் ஒருவர். இவருக்கு திறமைகள் மிக அதிக மாக இருந்தன. அடிக்கடி தன் புத்திசாலித் தனத்தை வெளிப்படுத்திக் கொண்டிருந்தார். ராஜ விசுவாசம் அவரிடம் அளவுக்கு அதிகமாகவே இருந்தது. இதனால் சக்ரவர்த்திக்கு அவரை மிகவும் பிடித்துப் போனது. அந்த உதவியாளர்மீது மிகுந்த நம்பிக்கை கொள்ளத் தொடங்கினார்.

ஆட்சி தொடர்பான பல விஷயங்களை அவரிடம் ஒப்படைத்தார் சக்ரவர்த்தி. அரசு அறிக்கைகளை தயார் செய்யும் பொறுப்பும் அவற்றில் ஒன்று.

தனக்கு இவ்வளவு அதிகாரங்கள் கிடைத்ததும் வே சுங் ஸியென் செய்த முதல் காரியம் தன் இனத்தைச் சேர்ந்த பலரையும் அரசாங்கத்தில் முக்கியப் பதவிகளில் அமர்த்தியதுதான். ஆயிரக்கணக்கான திருநங்கைகள் அரசுப் பணிகளில் அமர்த்தப்பட்டார்கள்.

அடுத்ததாக வே சுங் ஸியென் செய்த காரியம் அராஜகமானது. தனக்காக நாட்டில் கோயில்களை எழுப்பச் செய்தார். மக்களில் பலரும் இந்தப் போக்கை வெறுத்தார்கள்.

“என்னை ஒன்பதாயிரம் ஆண்டுகள் என்று பிறர் குறிப்பிட வேண்டும்” என்று கட்டாயப்படுத்தினார். எதற்காக இப்படிக் குறிப்பிட வேண்டும்? காரணம் இருந்தது. அக்காலத்தில் சீனச் சக்ரவர்த்திகளை ‘பத்தாயிரம் ஆண்டுகள்’ என்று அழைப்பது வழக்கம். (அதாவது அவரது புகழ் குறைந்தது அவ்வளவு ஆண்டுகள் நிலைத் திருக்குமாம்). ‘நான் சக்ரவர்த்தியைவிட கொஞ்சம்தான் குறைந்தவள். எனவே என்னை ஒன்பதாயிரம் ஆண்டுகள் என்று குறிப்பிட்டால் என்ன தப்பு?’ என்று நினைத்தார் வே சுங் ஸியென்.

ஒருகட்டத்தில் சக்ரவர்த்தி இறந்தார். அடுத்து அவருடைய மகன் முடிசூட்டிக் கொண்டார். முடிசூடியதும் அவர் செய்த முதல் காரியம் வே சுங் ஸியெனை பதவி இறக்கம் செய்ததுதான். இதனால் மனம் நொந்து போனார் வே சுங் ஸியென். அடுத்த தாக புதிய மன்னன் தனக்கு ஏதாவது தண்டனை அளிப்பானோ, தான் கைது செய்யப்படுவோமோ என்றெல்லாம் பயந்த அவர் தற்கொலை செய்து கொண்டார்.

வே சுங் ஸியென் தலைக்கனமாக நடந்து கொண்டது மன்னனுக்குப் பிடிக்கவில்லையே தவிர அவர் திருநங்கை என்பதற்காக பதவி நீக்கப்படவில்லை. இதற்கு ஒரு முக்கிய சான்று, அரசுப் பணிகளில் இருந்த பிற திருநங்கைகள் பதவி நீக்கப்படவில்லை.

ஆக மிங் வம்சாவளி ஆட்சியில் பல திருநங்கைகள் தொடர்ந்து அரசுப் பதவிகளை அலங்கரித்தார்கள். முக்கியமாக ஒற்று வேலைகளில் அவர்களுக்கு தனித் திறமை இருந்தது.

இப்படிப்பட்ட மிங் வம்ச அரசர்கள் சீனாவை ஆண்டு கொண்டிருந்த போதுதான் மஞ்சூக்கள் சீனாவை ஆக்ரமிக்கத் தொடங்கினார்கள்.

சீனாவின் வடகிழக்கில் இருந்தது மஞ்சூரியா. அந்தப் பகுதியைச் சேர்ந்தவர்கள் மஞ்சூக்கள். தொடக்கத்தில் சீனாவின் எல்லைப் பகுதிகளை தங்கள் வசம் கொண்டு வந்தார்கள். பிறகு துணிச்சல் பெற்று பெய்ஜிங்கை (அக்காலத்தில் அதன் பெயர் பீகிங்) நோக்கி படையோடு கிளம்பினார்கள்.

சீனா அதிர்ந்தது. முதல் முதலாக சீனர்கள் சந்தித்த வெளிநாட்டு எதிர்ப்பு.

Friday, 4 November 2016

AURANGAZEB , LAST POWERFUL EMPEROR OF MUGHUL DYNASTY BORN 1618 NOVEMBER 3


AURANGAZEB , LAST POWERFUL 
EMPEROR OF MUGHUL DYNASTY 
BORN  1618 NOVEMBER 3


நான் என் கையால் செய்து விற்ற தொப்பிகளுக்கான பணம் நான்கு ரூபாய்களும் இரண்டு அனாக்களும் ஆய்பேகா என்னும் நபரின் வசம் உள்ளன. அதைக்கொண்டு என்னுடல் மீது போர்த்தவேண்டிய கஃபன் துணியை வாங்கிக்கொள்ளுங்கள்.
ஔரங்கசீப்



ஔரங்கசீப் (1618-1707) முகலாய பேரரசின் ஒரு குறிப்பிடத்தகுந்த பேரரசர்களில் ஒருவர் ஆவார். ஷாஜகான் மற்றும் மும்தாஜின் தம்பதியர்களின் ஐந்தாவது வாரிசாவார். 
ஔரங்கசீப்
மயிலாசனத்தில் அமர்ந்தபடி ஔரங்கசீப்.
Flag of the Mughal Empire (triangular).svg 6ஆம் முகலாய அரசர்
ஆட்சிக்காலம்31 ஜூலை 1658 – 3 மார்ச் 1707
முடிசூடல்13 ஜூன் 1659, செங்கோட்டைதில்லி
முன்னையவர்ஷாஜகான்
பின்னையவர்முதலாம் பகதூர் சா
பட்டத்து அரசி (மனைவி)தில்ராஸ் பானு பேகம்
பிற மனைவியர்நவாப் பாய் பேகம்
தில்ராஸ் பானு பேகம்
பேகம் உதயபுரி
வாரிசு
முகமது சுல்தான்
முதலாம் பகதூர் சா
அசாம் ஷா
சுல்தான் முகமது அக்பர்
முகமது காம் பாக்ஷ்
சேப்-உன்-நிசா
சினாத்-உன்-நிசா
முழுப்பெயர்
அபு முசாபர் முகையுதீன் முகமது அவுரங்கசீப்
மறைவுக்குப் பின் சூட்டப்பட்ட பெயர்
{{{posthumous name}}}
மரபுதைமூரியர்
தந்தைஷாஜகான்
மரபுதைமூரியர்
தாய்மும்தாசு மகால்
அடக்கம்குல்தாபாத், அவுரங்காபாத்
சமயம்இசுலாம்
இவர் ஆலம்கீர் (பாரசீக மொழியில் ஆலம்கீர் எனில் பிரபஞ்சத்தை ஆளப்பிறந்தவன் என பொருள்) என அழைக்கப்பட்டார். இவரது ஆட்சி காலம் கி.பி. 1658 இலிருந்து கி.பி. 1707 வரையாகும். இவரது ஆட்சிகாலத்தில் முகலாயப் பேரரசு காபுலில் இருந்து தமிழ்நாடு வரை பரந்து விரிந்திருந்தது. 


Mughal Empire under Aurangzeb shown in red borders

இந்தியாவை ஒருங்கிணைத்து, திறம்பட ஆட்சி செய்த முதல் பேரரசர் ஆவார். முகலாய மன்னர்களில் அக்பரும் அவுரங்கசீப் ஆகிய இருவர் மட்டுமே 49 ஆண்டுகள் சாகும் வரை நாட்டை ஆண்டவர்கள்

சகோதரப்போர்[தொகு]

கி.பி 1657 ம் ஆண்டு ஷாஜகான் நோயினால் படுத்த படுக்கையானார். அரசர் தரிசனம் கிடைக்காததால் அரசர் இறந்துவிட்டதாக வதந்தி பரவியது. 

A painting from circa 1637 shows the brothers (left to right) Shah Shuja, Aurangzeb and Murad Baksh in their younger years.

அவுரங்கசிப்பின் சகோதரர் தாராஷிகாவும் ஷாஜஹானின் பெயரால் சில மோசடிகளில் இறங்கியதும், எதிரிகள் ஆட்சியை கைப்பற்ற தீவிர முயற்சிகள் நடைபெறுவதையும் அறிந்த அவுரங்கசிப் தன் சகோதரர் தாராஷிகவுடன் போரிட படையெடுத்தார். இந்தசெய்தி அறிந்த தரஷிகோவும் ஷாஜகானும் அவரை எதிர்த்து படையை அனுப்பினார்கள். ஆனால் விதி ஆரங்கசீபுக்கு ஆசி வழங்கியது.


Sepoys loyal to the Mughal Emperor Aurangzeb maintain 
their positions around the palace, at Aurangabad, in 1658. 

மிக மோசமாக தோல்வியை சந்தித்து டெல்லி படை. ஆக்ராவை கைப்பற்றியவுடன் சிறிதும் தாமதிக்காமல் டெல்லி விரைந்தது அவுரங்க்சீபின் படை. டெல்லியில் தாரஷிகோவின் படையை சின்னாப்பின்னப்படுத்தினார் 


Aurangzeb becomes emperor.

அவுரங்கசீப். தாரஷிகோ படுதோல்வியடைந்து சிந்து பகுதியை நோக்கி பின்வாங்கினார். டெல்லியை கைப்பற்றியவுடனேயே ஷாஜகானை சிறைபிடித்தார். தனது மற்ற இரு சகோதரர்களான ஷுஜாவையும் முராதையும் முழுவதுமாக வெற்றிகொண்டு ஆலம்கீராக முடிசூட்டிக்கொண்டார்.


அவுரங்கசீப் தனது அரசவையில்
இப்போரில் அவுரங்கசீப் வெற்றி பெற்று ஆக்ரா கோட்டைக்குள் நுழைந்து தாராவை விரட்டியடித்தார். ஷாஜகானையும் அடிபணியச் செய்தார். ஆக்ரா கோட்டையில் அந்தப்புறப்பகுதியில் ஷாஐகானை சிறைவைத்தார். ஆனால், அவுரங்கசீப் தமது தந்தையை மோசமாக நடத்தவில்லை. அடுத்த எட்டு ஆண்டுகள் ஷாஜகான் தனது மகள் ஜகனாராவின் அன்பான சேவையில் காலத்தை கழித்தார். 1666ல் ஷாஜகான் இறந்தார். அவரது உடல் தாஜ்மஹாலில் மும்தாஜின் கல்லறைக்கு அருகிலேயே அடக்கம் செய்யப்பட்டது. 


பேரரசர் ஆலம்கீர்[தொகு]

அவுரங்கசீப் தனது அரசவையில்

இவரது ஆட்சிகாலம் வரலாற்று ஆய்வாளர்களால் மிகுந்த விமரிசனத்திற்கு உட்பட்டதாகும். தனது ஆட்சியை கந்தகாரிலிருந்து தெற்கே செஞ்சி வரை விரிவுபடுத்தினார்.

ஆலம்கீரின் வரலாறு

திறமைமிக்க முகலாய அரசர்களில் அவுரங்கசீப்பும் ஒருவர். அவர் ஆலம்கீர் அல்லது உலகை வெல்பவர் என்ற பட்டத்தைச் சூட்டிக் கொண்டார். முதல் பத்தாண்டுகள் அவர் மேற்கொண்ட படையெடுப்புகள் யாவும் வெற்றியில் முடிந்தன. சிறுசிறு கிளர்ச்சிகளை அவர் நசுக்கினார். ஆனால், அவரது ஆட்சிக் காலத்தில் பிற்பகுதியில் பெரும் சிக்கல்களை சந்திக்க வேண்டியிருந்தது. ஜாத்துக்கள், சத்நாமியர்கள் மற்றும் சீக்கியர்களும்கூட அவருக்கு எதிராக கிளர்ந்தெழுந்தனர். அக்கிளர்ச்சிகள்யாவும் அவுரங்கசீப்பின் கடுமையான சமயக்கொள்கையின் எதிர்விளைவுகளேயாகும்

மராட்டியரும் இராசபுத்திரரும்[தொகு]
இராசபுத்திரர் சில காலங்களாக முகலாயப் பேரரசோடு நட்புறவு கொண்டே இருந்தனர். ஆனால் அவுரங்கசீப் ஆட்சியில் நிலை மாறியது. சமகாலத்தில் சிவாஜியின் கீழ் மராட்டியர் தக்காணத்தில் ஒரு பலமிக்க அரசை நிறுவியிருந்தனர். இவரின் ஆட்சியில் மராட்டிய மன்னர் சத்ரபதி சிவாஜி இறந்ததால் மராட்டியர் நட்டை பிடித்ததோடு சிவாஜியின் மகனான சம்பாஜியை சிறை பிடித்தார். 


The Mughal Army under the command of Aurangzeb recaptures Orchha in October 1635.
சம்பாஜியின் மகனான சாகுவை கவனித்து வந்த இராசாராமோடு போரிட்டு மராட்டியத்தில் சில கோட்டைகளை அவுரங்கசீப் பிடித்துக் கொண்டார். இராசாராம் தமிழக்த்தில் இருந்த செஞ்சி கோட்டைக்கு வந்துவிட்டார். இவ்வாறு சிவாஜியின் கீழ் இருந்த மராட்டியரோடு ஏறக்குறைய தென்னிந்தியாவில் 25 வருடங்களுக்கு மேலாக அவுரங்கசீப் பல போர்களை சந்திக்க வேண்டி இருந்தது. மேலும் மராட்டியில் பல கோட்டைகளை பிடிக்க எண்ணி முடியாத அவுரங்கசீப் அந்த மனவருத்தத்தாலேயே ஆமத் நகரில் இறந்தார். பேரரசர் தெற்கே வந்ததால் வட இந்தியாவில் முகலாயப் பேரரசு சிதைய ஆரம்பித்து நாளடைவில் மறைந்தது.

தக்காணத்தால் ஏற்பட்டச் சிறப்பு[தொகு]

தென்தென்னிந்தியாவின் நிலப்பகுதிகளை தக்காண பீடபூமி என்பர். வட இந்தியாவையும், தென் இந்தியாவையும் பிரிக்கும் விந்திய மலைத்தொடர்களைத் தாண்டி முகலாயப் படை தென்னிந்தியாவை வென்றுக் கொண்டிருந்தார்.1698-பிப்ரவரி 7-இல், அவுரங்கசீப்பின் தளபதி, சூல்பிகார் கான் தமிழகத்தின் செஞ்சியை வென்றார். அகமகிழ்ந்த பேரரசர் அவுரங்கசீப் அத்தளபதியையே அப்பகுதிக்கு ஆளுநராக (நவாப்) ஆக்கினார். 


A painting from Padshahnamadepicts Prince Aurangzeb facing a maddened war elephant named Sudhakar.[5]

வெற்றிக் கொண்ட தென்னிந்தியப் பகுதிகளுக்கு தலைநகராக ஐதராபாத் என அறிவித்தார்.அத்தலைநகரில் இருந்து தென்னிந்தியாவை, தில்லியின் அவுரங்கசீப்பின் கீழ், அதிபராக(நிஜாம்=நிசாம்) இருந்து ஆட்சி செய்தவர்களே, ஐதராபாத் நிசாம்கள் என அழைக்கப் பட்டனர். செஞ்சியை தலைநகராகக் கொண்டு ஆண்டாலும், இன்றைய தமிழகம், ஆந்திரம், கன்னட மாநிலங்களின் பகுதிகளும் அதில் இணைந்திருந்தால், ஜீல்பிகார் கான் கர்நாடக நவாபு என்றே அப்போது அழைக்கப்பட்டார்.பின்னர், 1710 ஆம் ஆண்டில், ஆளுநராக (நவாப்) வந்த சதாத்துல்லாகான் (முகம்மது செய்யது) செஞ்சிக்கு பதிலாக, ஆற்காட்டை தலைநகரமாக மாற்றினார். அதனால், கர்நாடக நவாபு, ஆற்காட்டு நவாபு என அழைக்கப்பட்டார்.

Aurangzeb seated on a golden throne holding a Hawk in the Durbar. Standing before him is his son, Azam Shah.
இத்தகைய சிறப்பான ஆட்சி மேலாண்மை காரணமாகவே, அவுரங்கசீப் பேரரசரால், இந்தியாவின் பெரும்பகுதியை கட்டி ஆளமுடிந்தது. அதனாலேயே இப்பேரரசர், இந்தியாவை ஒருங்கிணைந்த முதல் பேரரசர் என்ற வரலாற்றுப் புகழை அடைந்தார்.

தக்காணக் கொள்கை 

முகலாயரின் தக்காணக் கொள்கை அக்பரின் ஆட்சிக் காலத்திலிருந்தே தொடங்குகிறது. காந்தேஷ், பீரார் ஆகியவற்றை அக்பர் கைப்பற்றினார். அகமது நகரில் மாலிக் ஆம்பருடன் ஜஹாங்கீர் போரிட்டார். ஷாஜகான் ஆட்சிக்காலத்தில் தக்காண ஆளுநராக இருந்த அவுரங்கசீப் தீவிரமான தக்காணக் கொள்கையை பின்பற்றினார். 

Aurangzeb seated on the Peacock Throne.
முகலாயப் பேரரசராக பொறுப்பேற்றவுடன் அவுரங்கசீப் தமது ஆட்சிக்காலத்தில் முதல் இருபத்தியைந்து ஆண்டுகள் வடமேற்கு எல்லைப்பகுதியில் கவனம் செலுத்தினார். அத்தருணத்தில்தான் மராட்டிய அரசர் சிவாஜி வடக்கு மற்றும் தெற்கு கொங்கணப்பகுதியில் தனக்கென ஒரு தனி அரசை ஏற்படுத்திக்கொண்டார். 

சொந்த வாழ்க்கை[தொகு]


ஆலம்கீரின் வரலாறு

’ஆலம்கீர்’ எனில் பெர்சிய மொழியில் ‘பிரபஞ்சத்தை வெல்லப் பிறந்தவன்’ என்று பொருள். 1695ல் அவுரங்கசீபை நேரில் பார்த்த இத்தாலியைச் சேர்ந்த பயணி ’கேர்ரி’ என்பவர் எழுதியுள்ள குறிப்புகளின்படி அவுரங்கசீப் அதிக உயரம் இல்லை. அவரது மூக்கு பெரியது. கொஞ்சம் ஒடிசலான உடல்வாகு. எளிமையான தோற்றம். ‘நிக்கோலா’வின் கூற்றுப்படி, அவுரங்கசீப் தலைப்பாகையில் ஒரே ஒரு கல் மட்டும் தான் பொருத்தப்பட்டிருக்கும். அதிக அலங்காரங்கள் கிடையாது. பெரும்பாலும் வெள்ளை நிற உடைகளையே அணிவார். அவையும் விலை உயர்ந்த்து இல்லை.

Dagger (Khanjar) of Aurangzeb (Badshah Alamgir).
“ஆலம்கீரின் சொந்தவாழ்க்கை மிக எளிமையானதாகும். தன்னை எப்பொழுதுமே கடவுளின் அடிமையாக பாவித்துக்கொண்டார்.இஸ்லாத்தினை நன்றாக கடைபிடித்த ஒரே முகலாயமன்னர் இவர் மட்டுமே.எந்த சூழ்நிலையிலும் ஐந்து வேளையும் தொழ த‌வரியதில்லை அரசு கஜானாவை தனது சொந்த செலவிற்கு இவர் பயன்படுத்தியது கிடையாது. தனக்காக ஆடம்பர செலவில் மாளிகைகள் கட்டியது இல்லை.

1707ம் ஆண்டு வெள்ளிக்கிழமை ஃபஜ்ர் (அதிகாலை) தொழுகையை நிறைவேற்றிவிட்டு கலிமாவை (இஸ்லாமிய மூலமந்திரம்) உச்சரித்த வண்ணம் ஔரங்கசீபின் உயிர் பிரிந்தது. அவர் உண்மையில் எப்படிப்பட்டவர் என்பதை அவருடைய உயில் காட்டுகிறது:


அவுரங்கசீப்பின் உயில்[தொகு]

நான் என் கையால் செய்து விற்ற தொப்பிகளுக்கான பணம் நான்கு ரூபாய்களும் இரண்டு அனாக்களும் ஆய்பேகா என்னும் நபரின் வசம் உள்ளன. அதைக்கொண்டு என்னுடல் மீது போர்த்தவேண்டிய கஃபன் துணியை வாங்கிக்கொள்ளுங்கள்.



தன் கையால் திருக்குர்ஆனை எழுத்துப்பிரதி எடுத்து விற்றதன் மூலம் கிடைக்கப்பெற்ற‌ முன்னூற்று ஐந்து ரூபாய்கள் என் வசமுள்ளன. நான் இறக்கும் அன்று அந்தப் பணத்தை ஏழைகளுக்கு தானமாகக் கொடுத்துவிடுங்கள். (முகலாயர்கள், நூலாசிரியர் -முகில், பக். எண் 307-312).


என் தலையை எதைக்கொண்டும் மூடாமல் திறந்து வைத்துவிடுங்கள். இறைவன் எனக்கு கருணை காட்ட அது உதவும்.