Showing posts with label SASIKALA. Show all posts
Showing posts with label SASIKALA. Show all posts

Sunday, 17 May 2020

THE STORY OF SASIKALA BECAME SISTER OF JEYALALITHA.




THE STORY OF  SASIKALA BECAME 
SISTER OF JEYALALITHA.
சசிகலா ஜெயலலிதாவின் உடன்பிறவாச் சகோதரியான கதை,

1991-ம் ஆண்டு ஜெயலலிதா முதல் அமைச்சராக பொறுப்பேற்பதற்கு முன்பே சசிகலா, ஜெயலலிதாவின் இணைபிரியாத் தோழியாகி இருந்தார். சசிகலா இல்லாமல் ஜெயலலிதா இல்லை என்ற நிலை அப்போதே உருவாகி இருந்தது. அதனால்தான், போயஸ் கார்டன் மற்றும் கட்சிக்குள் இருந்து தினகரன், திவாகரன், நடராசனை ஒதுக்கி வைத்த ஜெயலலிதாவால் சசிகலாவை விலக்கவே முடியவில்லை; விலகவும் அவர் விரும்பவில்லை. அதே நேரத்தில் சசிகலாவின் கணவர் நடராசனிடம் ஜெயலலிதா கொஞ்சம் எச்சரிக்கையைக் கடைபிடிக்க ஆரம்பித்தார். “நம்மை அரியணையில் ஏற்றி வைக்க நடராசனால் இத்தனை திட்டங்களைத் தீட்ட முடிகிறதென்றால்... நம்மை அரியணையில் இருந்து இறக்குவதற்கும் நடராசனால் பல திட்டங்களைத் தீட்ட முடியும்” என்ற எச்சரிக்கை அது. நடராசனின் செயல்பாடுகளும் ஜெயலலிதாவின் உள்ளுணர்வு ஒலித்த எச்சரிக்கைக்கு ஏற்பவே இருந்தன. தனிப்பட்ட முறையில் அ.தி.மு.க எம்.பி-க்களை அழைத்துக் கொண்டு போய் மத்திய அமைச்சர்களைச் சந்திப்பது, தமிழகத்தில் உள்ள ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் அதிகாரிகள் வட்டத்தை தனக்கு நெருக்கமானவர்களைக் கொண்டு நிரப்புவது, தன் தயவு இல்லாமல் ஜெயலலிதாவால் எதையும் செய்ய முடியாது என்று பேசுவது, பேட்டி கொடுப்பது என்று புதிராகவே நடராசன் வலம் வந்தார். கடைசிவரை ஜெயலலிதாவால் அவரைக் கட்டுப்படுத்தவே முடியவில்லை. அதனால் வெறுத்துப்போய் கொஞ்சம் ஒதுக்கி மட்டும் வைத்தார்.

சசிகலா விவகாரத்தில் அதைக்கூட அவரால் செய்ய முடியவில்லை. தமிழகத்துக்கே முதல்வர் ஆன பிறகும்கூட சசிகலாவின் தயவு இல்லாமல் ஜெயலலிதாவால் செயல்பட முடியவில்லை. முதல்வராகும் வரை இணை பிரியாத்தோழி என்றளவில் இருந்த ‘ஜெயலலிதா-சசிகலா நட்பு’, ஜெயலலிதா முதல்வரான பிறகு, ‘சசிகலா, ஜெயலலிதாவின் உடன் பிறவாச் சகோதரி’ எனச் சொல்லும் கட்டத்தை நோக்கி நகர்ந்தது. தினகரன், திவாகரன், நடராசனுக்குப் பதில் சசிகலாவின் அண்ணன் விநோதகன் போயஸ் தோட்டத்துக்குள் ஆட்சி செய்து கொண்டிருந்தார். தமிழகத்தை கேடு காலம் மெல்லச் சூழத் தொடங்கியது. அதேநேரத்தில், சசிகலா குடும்பத்துக்கு நல்ல யோகம் பொங்கிப் பிரவாகம் எடுக்கத் தொடங்கி இருந்தது. திருத்துறைப் பூண்டியில் விநோதகன் ஆடம்பரத் திருமண மண்டபம் ஒன்றை கட்டத் தொடங்கினார். அந்தக் காலத்திலேயே அது முழுமையான ஏ.சி வசதி செய்யப்பட்ட திருமண மண்டபமாக கட்டப்பட்டது. திருத்துறைப் பூண்டி பேருந்து நிலையமே இடம் மாற்றத்தில் சிக்கி சில நாள்கள் தவித்துப்போனது.

தமிழகத்தின் இருண்ட காலம் தொடக்கம்!

ஜெயலலிதா ஆட்சிக்கு வந்த ஆறே மாதத்தில், 7 துப்பாக்கிக் சூடுகள் தமிழகத்தில் நடந்தன. ஜெயலலிதாவை விமர்சித்த எதிர்கட்சித் தலைவர்கள் கொலை வெறியோடு துரத்தி துரத்தி தாக்கப்பட்டனர். ப.சிதம்பரத்துக்கு எதிராக, திருச்சி விமான நிலையத்தில் அ.தி.மு.க-வினர் கருப்புக் கொடி காட்டும் போராட்டத்தை அறிவித்தனர். பெயருக்குத்தான் அது கருப்புக் கொடி காட்டும் போராட்டம். ஆனால், உண்மையில் அது சிதம்பரத்தை சின்னபின்னப்படுத்துவதற்கான திட்டம். அதில் இருந்து தப்பித்து, உயிரைக் காப்பாற்றிக் கொள்ள சிதம்பரம் பட்டபாடு அவர் மனதில் இன்னும் இருக்கிறது. இப்போது அவரைச் சந்தித்து அந்தச் சம்பவம் குறித்துக் கேட்டாலும், அது ஏற்படுத்திய வடுவை அவர் வார்த்தைகளில் உணர முடியும். மணிசங்கர் அய்யர் பாண்டிச்சேரி வரை துரத்தி அடிக்கப்பட்டார். ஆளும்கட்சியை விமர்சித்த பத்திரிகைகளின் குரல்வளைகள் நெரிக்கப்பட்டன. மற்ற ஆட்சிகளிலும் அது நடக்கும். ஆனால், அவதூறு வழக்குகள், தொலைபேசியில் கெட்ட வார்த்தைகளால் நடத்தப்படும் அர்ச்சனை என்ற அளவில் மட்டுமே இருக்கும். ஆனால், ஜெயலலிதா ஆட்சியில் ஆளும் கட்சியை, ஜெயலலிதாவை விமர்சித்த பத்திரிகைகளை அடக்க, பாக்ஸர் வடிவேலு போன்ற ரவுடிகள் களம் இறக்கப்பட்டனர். கொலைவெறித் தாக்குதல்கள் தொடுக்கப்பட்டன.

கொல்லப்பட்ட தராசு பத்திரிகை ஊழியர்கள் தாராசு பத்திரிகை ஊழியர்கள் சுப்பிரமணி, சத்தியமூர்த்தி கொல்லப்பட்டனர். நக்கீரன் கோபாலுக்கு ஒவ்வொரு நாளும் ஒவ்வொருவிதமான தலைவலி காத்திருந்தது. திடீரென்று நக்கீரன் அலுவலகத்தில் மட்டும் கரண்ட் கட் ஆகும்; திடீரென்று நக்கீரன் அலுவலகத்துக்குள் போலீஸ் படை உள்ளே நுழையும்; விசாரணை என்ற பெயரில் நக்கீரன் கோபாலை படுத்தி எடுத்துவிடுவார்கள். ஆசிட் வீச்சு, ஆட்டோவில் குண்டர்கள், அடி-தடி, ரவுடிகள் ராஜ்ஜியம், துப்பாக்கிச் சூடு, ஒவ்வொரு துறையிலும் ஊழல்... ஊழல்... ஊழல்... என தமிழகம் அல்லோலகல்லோலப்பட்டது. ஆறே மாதத்தில் இந்த ஆட்டம் என்றால், மீதமிருக்கும் நான்கறை ஆண்டுகளையும் கடத்தப் போகிறோம் என்று தெரியாமல் தமிழகம் விழி பிதுங்கி நின்றது. தமிழகம் கண்ட இந்த வேதனைகள் எல்லாவற்றுக்கும் பின்னால் ஆளும் கட்சி இருந்தது; ஆளும் கட்சிக்குப் பின்னால் ஜெயலலிதா இருந்தார்; ஜெயலலிதாவுக்குப் பின்னால் சசிகலா
இருந்தார்; சசிகலாவுக்குப் பின்னால் சசிகலா குடும்பம் இருந்தது. ஆனால், அவர்கள் எல்லாம் வேறு உலகத்தில் இருந்தனர். தமிழக அரசியல் அதுவரை காணாத ஆடம்பரத்தைக் காணத் தொடங்கியது. தனிப்பட்ட முறையில் ஜெயலலிதாவும் சசிகலாவும் அப்போது அனுபவித்த ஆடம்பரங்களை, அதிகாரத்தின் உச்சத்தை, உலகத்தையே ஒரு காலத்தில் தன் கட்டுப்பாட்டில் வைத்திருந்த விக்டோரியா மாகராணியேகூட அனுபவித்திருப்பாரா? என்பது சந்தேகம் தான். அவற்றைப் புரிந்துகொள்ள வேண்டுமானால் அந்த காலத்தில் ஜெயலலிதாவும் சசிகலாவும் சேர்ந்து அரங்கேற்றிய சில சம்பவங்களைத் திரும்பிப் பார்க்க வேண்டும். கும்பகோணம் மகாமகம், மதுரை உலகத் தமிழ் மாநாடு, வளர்ப்பு மகன் திருமணம், மிரட்டி வாங்கப்பட்ட மாளிகைகள், போயஸ் கார்டன் வீட்டில் இருந்த வைர-வைடூரிய-தங்க நகைகளின் மதிப்பு, ஜெயலலிதா, சசிகலா பெயரில் வாங்கிக்குவிக்கப்பட்ட சொத்துக்களின் கதைகளுக்குள் போய் வரவேண்டும். அந்தச் சொத்துக்கள், சொகுசுகள், ஆடம்பரங்களின் கதைகளுக்குப் பின்னால்தான், ஜெயலலிதா ஏன் சசிகலாவை விலக்கி வைக்கவில்லை என்பதற்கான காரணம் இருக்கிறது. சசிகலா ஏன் ஜெயலலிதாவை விட்டு விலகவில்லை என்பதற்கான காரியமும் அதற்குள்தான் ஒளிந்திருக்கிறது.

1992 பிப்ரவரி 18-ம் தேதி கும்பகோணம் மகாமகம். அதற்கான நாள் நெருங்க நெருங்க பலவிதமான சர்ச்சைகளும், இனம் புரியாத அச்சமும் தமிழகத்தில் பரவிக் கொண்டிருந்தன. கும்பகோணம் மகாமகக் குளத்தில் முதல் அமைச்சர் ஜெயலலிதா நீராடப் போகிறார் என்ற செய்தி மேலும் பதற்றத்தை உருவாக்கியது. கும்பகோணம் முழுவதும் ஜெயலலிதாவின் வானுரய கட்-அவுட்களால் நிறைந்து போனது. அ.தி.மு.க-வினர் தீவிர வசூல் வேட்டையில் இறங்கினர். 17-ம் தேதியே போலீஸ் கெடுபிடிகள் தொடங்கின. ஜெயலலிதா நீராடுவதற்காக பல லட்சங்களைக் கொட்டி குளியலறை அமைக்கப்பட்டது. “முதல்வர் வந்து நீராடிவிட்டுப் போகும்வரை பக்தர்கள் யாரும் குளத்தில் இறங்கக்கூடாது” என்று போலீஸ் கட்டுப்பாடு விதித்தது. திகிலடைந்தவர்கள் மகாமகத்துக்கு முதல் நாளே நீராடிவிட்டுக் கிளம்பினர். மகமகத்தன்று காலை 8.30 மணிக்கு குளத்தருகே பக்தர்கள் மெதுவாகக் கூடத் தொடங்கினர். போலீஸ் அவர்களைக் கட்டுப்படுத்தியது. அந்தக் கட்டுப்பாடு எல்லாம், 9.30 மணி வரை மட்டுமே. அதன்பிறகு, குளத்தில் நின்ற மக்கள் கூட்டம் வேகமாகக் கூடிக் கொண்டே போனது. போலீஸால் அதைக் தடுக்க முடியவில்லை. ஜெயலலிதா நீராடுவதைப் பார்க்க மக்கள் கூட்டம் முண்டியடித்துக் கொண்டு அந்த இடத்தை நோக்கி முன்னேறிக் கொண்டே இருந்தனர். ஜெயலலிதா வருவதற்கு ஒரு மணி நேரத்துக்கு முன்பே குளத்தருகே வந்த தேவாராம் ஐ.ஜி. பைனாகுலரில், மக்கள் நெருக்கியடித்து அவதிப்படுவதைப் பார்த்துக் கொண்டிருந்தார். ஆனால், அவர் கையை விட்டு எல்லாம் போய் இருந்தது. அவரால் வேடிக்கை மட்டுமே பார்க்க முடியும் சூழல் அப்போது. சரியாக காலை 11.32 மணிக்கு ஜெயலலிதா நீராடுவதற்காக பிரத்யோகமாக அமைக்கப்பட்டு இருந்த பகுதிக்கு வந்தார். அங்கிருந்து கூட்டத்தைப் பார்த்துக் கையசைத்தார்.

ஜெயலலிதா கை அசைத்ததை அவருக்கு நேர் எதிரில், வடக்கு வீதிப்பக்கம் இருந்தவர்களால் பார்க்க முடியவில்லை. இடையில் இருந்த ஒரு கோயில் அவர்களை மறைத்தது. எனவே, அந்தப் பகுதியில் இருந்தவர்கள் முன்னுக்கு வந்து பாங்கூர் தர்மசாலா கட்டடத்தின் வெளிப்புறம் இருந்த கிரில் வைத்த கட்டைச் சுவர் மீது ஏற முயன்றனர். அதைத் தொடர்ந்து இரும்பு கிரில் கட்டைச் சுவரோடு சாய்ந்தது. அதில் நசுங்கி பலர் இறந்தனர். அந்தத் துயரம் ஏற்படுத்திய ஓலம், பதற்றத்தில் பாதிக்கப்பட்டவர்கள் தெறித்து ஓடத் தொடங்கினர். அதே நேரத்தில் குளத்துக்குள் இருந்தவர்கள் வெளியில் ஏறி ஓடத் தொடங்கினர். இதனால், நேரேதிரில் பதற்றத்தோடு ஓடிய கும்பல், கூட்டம் ஒன்றும் புரியாமல், ஒன்றோடு ஒன்று மோதி, கீழே விழுந்து, நசுங்கி, மூச்சுத் திணறி உயிரைவிட்டது. அதற்கு நூறு அடி தூரத்துக்குள் சசிகலா ஒரு குடத்தில் மகாமகக் குளத்தின் தண்ணீரை அள்ளி அள்ளி ஜெயலலிதாவின் தலையில் ஊற்றினார். அதன்பிறகு ஜெயலலிதா அதேபோல் சசிகலாவின் தலையில் தண்ணீரை ஊற்றினார். கொஞ்சம் தள்ளி மக்கள் உயிரை விட்டுக் கொண்டிருந்தனர். நிகழ்ச்சியை வர்ணித்தவர்களின் வர்ணனை ஒலியில் மக்களின் மரண ஓலம் ஜெயலலிதா-சசிகலாவின் காதுகளில் விழவில்லை. போலீஸ் தரப்பில் பலியானவர்களின் எண்ணிக்கை 48 என்று சொல்லப்பட்டது. ஜெயலலிதாவும் சசிகலாவும் கும்பகோணத்தில் இருந்து தனி ஹெலிகாப்டரில் இரண்டறை மணிக்கு மேல்தான் கிளம்பினார்கள். ஆனால், இறந்த உடல்கள் வைக்கப்பட்டு இருந்த குடந்தை மருத்துவமனைப் பக்கமோ... காயம்பட்டவர்கள் சிகிச்சை பெற்ற அவசர சிகிச்சைப் பிரிவையோ திரும்பிக்கூட பார்க்கவில்லை. ‘ரெட் கிராஸ்’ அமைப்பின் ஆம்புலன்ஸ்கள் மட்டும் இறந்தவர்களையும் காயம்பட்டவர்களையும் தேடி அலறிக் கொண்டிருந்தது.

தமிழகம் முழுவதும் கடும் சர்ச்சைகளை எழுப்பிய இந்த விவகாரத்துக்குப் பின்னால், சசிகலாவின் செல்வாக்கு கார்டனுக்குள் இன்னும் கூடியது. அதன்பிறகு அவர் தினம்தோறும் நமது எம்.ஜி.ஆர் அலுவலகத்துக்குச் செல்ல ஆரம்பித்தார். அதோடு எப்போதும் சசிகலா-நடராசனுக்கு ஆகாத ஆர்.எம்.வீ-யின் அமைச்சர் பொறுப்பும் பறிக்கப்பட்டது.
.

Friday, 27 July 2018

SASIKALA ALIAS RAJANI FILM ACTRESS BORN 1965 JULY 27







SASIKALA ALIAS RAJANI FILM ACTRESS 
BORN 1965 JULY 27



சசிகலா என்று தமிழில் அறியப்பட்ட சாசி கவுர் மல்கோத்ரா(Shashi Kaur Malhotra) இந்திய திரைப்பட நடிகை ஆவார். தமிழில் இளமைக் காலங்கள் திரைப்படத்தில் அறிமுகமான இவர் சுமார் 33 தமிழ் திரைப்படங்களில் நடித்துள்ளார். இரச்சணி என்ற பெயரில் தெலுங்கு திரைப்பட உலகில் அறியப்பட்டார்.

Rajani (born Shashi Kaur Malhotra)[1] is an Indian film actress
 born 1965 july 27 known for her works predominantly in Telugu cinema (as Rajani), Kollywood (as Sasikala), and a few Kannada and Malayalam films.[2]

She was starred in 150 feature films including, Seetharama Kalyanam, Rendu Rella Aaru, Aha Naa Pellanta opposite Rajendra Prasad, Majnu opposite Nagarjuna and Seetaramula Kalyanam opposite Balakrishna. She also starred in Kannada films including Jai Karnataka a remake of 1987 Bollywood hit Mr. India) with Ambareesh and Neenu Nakkare Haalu Sakkare with Vishnuvardhan. She was then starred in Bharathan's Malayalam hit Padheyam opposite Mammootty.


Personal life
Rajani Praveen was born in Bengaluru to V. N. Malhotra, a Punjabi father and Sulochana, a Kannadiga mother.[4] She was married to an NRI Dr. Mullagiri Praveen in 1998, and they have three children. [5]

Filmography
Telugu
Brahma Mudi, 1985
Rendu Rella Aaru, Vindhya, 1985
Adapadachu, 1985
Bharya Bhartala Bhandham, 1985
Lanchavataram, 1985
Idena Nyayam, 1985
Pelli Niku Akshtintalu Naku, 1985
Naga Devatha, 1986
Brahma Rudrulu, 1986
Seetarama Kalyanam, 1986
Manchi Manasulu, 1986
Pratidwani, 1986
Cowboy No. 1, 1986
Maruti, 1986
Majnu, 1987
Nene Raju Nene Mantri, 1987
Collector Gari Abbai, 1987
Agni Putrudu, 1987
Bhale Mogudu, 1987
Thayarama Thandava Krishna, 1987
Udayam, 1987
Gundamma Gari Krishnulu, 1987
Ramu, 1987
Sardar Dharmanna, 1987
Donga Kapuram, Bharati, 1987
Muddubidda, 1987
Chinnari Devatha, 1987
Sahasa Putrudu, 1987
Hantakudi Veta, 1987
Aha Naa Pellanta, 1987
Brahma Putrudu, 1987
Shankaravam, 1988
Ugranetrudu, 1988
Samsaram, 1988
Jeevana Ganga, 1988
Chalaki Mogudu Chadastapu Pellam, 1988
Bhama Kalapam, 1988
Murali Krishnudu, 1988
Chikkadu Dorakadu, 1988
Gaduggai, 1989
Bandhuvulostunnaru Jagratha, 1989
Dhruva Nakshatram, 1990
Prananiki Pranam, 1990
Tamil

Ilamai Kaalangal (1983) - Debut in Tamil
Sabaash (1984)
Kadamai (1984)
Shankari (1984)
Kuzhandai Yesu (1984)
Madras Vaathiyaar (1984)
Theerpu En Kaiyil (1984)
Kaval Kaithigal (1984)
Sattathai Thiruthungal (1984)
Kuva Kuva Vaathugal (1984)
Theerpugal Thirutthapadalaam (1985)
Anbin Mugavari (1985)
Naagam (1985)
Enaitha Kodugal (1985)
Navagraha Nayagi (1985)
Thanga Mama 3D (1985)
Ilankandru (1985)
Sigappu Nila (1985)
Oomai Vizhigal (1986)
Kutravaaligal (1986)
Kolusu (1986)
Mann Soru 1986
Vettai (1986)
Sirai Kaithi (1987)
Shankar Guru (1987)
Inaindha Kaigal (1990)
Vetri Vizha (1990)
Gnana Paravai (1990)
En Pottukku Sondhakkaran (1991)
Naane Varuven (1992)
Unna Nenachen Pattu Padichen (1992)
Oor Mariyadhai (1992)
Kannada
Jai Karnataka (1989)
Mathsara (1990)
Nagini (1990)
Neenu Nakkare Haalu Sakkare (1991)
Entede Bhanta (1992)
Preethi Maado Hudugarigella (2002)
Malayalam
Devatha (1965)
Kadamattathachan (1966)
Panimudakku (1972)
Agninakshathram (1977)
Inakkili 1984
Padheyam 1993

Monday, 18 December 2017

SASIKALA 1981 NEWS PAPER ARTICLE




SASIKALA  1981 
NEWS PAPER ARTICLE




1981லேயே பத்திரிக்கையில் வெளியான சசிகலாவின் பேட்டி -

 அப்போதே பலமுறை சிங்கப்பூர் சென்றாராம்
கடந்த 1983ம் ஆண்டு பத்திரிகை ஒன்றில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தோழி வி.கே.சசிகலா, பேட்டி அளித்துள்ளார். அதில், தமிழகத்தில் முதல் வீடியோ கம்பெனியை தொடங்கி நடத்தியவர், 1981ம் ஆண்டு சிங்கப்பூர் சென்றார் என பதிவாகியுள்ளது.
மேலும், கடந்த 1984ம் ஆண்டு, ஜெயலலிதாவுக்கு, வி.கே.சசிகலா பழக்கமானார். பின்னர், தோழிகளாயினர் என்பது குறிப்பிடத்தக்கது. அப்பத்திரிகையில் உள்ள பதிவுகள் வருமாறு:-
திருமதி சசிகலா சென்னையில் “வினோத் வீடியோ விஷன்” வினோத் வீடியோ விஷன் என்கிற வீடியோ கம்பெனியை நடத்தி வருகிறார். தமிழ்நாட்டில் வீடியோ கம்பெனி நடத்துகிற முதல் பெண்மணி இவர்தான்.
வீடியோ தொழில் தொடங்கலாம் என்கிற எண்ணம் இவருக்கு எப்படி வந்தது?
“81ல் சிங்கப்பூர் போயிருந்தேன். ஊர் திரும்பும்போது, ஒரு வீடியோ செட் என் சொந்த உபயோகத்திற்காக வாங்கி வந்தேன். ஓராண்டு கழித்துதான் நாமே சொந்தமாக வீடியோ எடுக்கலாமே என்று தோன்றிற்று. என் கணவரிடம் சொன்னேன். ஓ.கே. என்றார்.

பொதுவாக பல வீடியோ கம்பெனிகளும் திருமணம், வரவேற்பு போன்ற ‘இன்டோர்’ நிகழ்ச்சிகளைத் தான் வீடியோவில் படம் பண்ணுகிறார்கள். திருமணம் மட்டும் இல்லாமல், அவுட்டோர் நிகழ்ச்சிகளையும் சிரத்தை எடுத்து விடியோ பண்ண வேண்டும் என்று நினைத்தேன்
சென்னை அரசினர் மருத்துவமனையில் ஒருவருக்கு இதய ஆபரேஷன் நடந்தது. அதை அப்படியே வீடியோவில் படமாக்கி கொடுத்தோம். சிகிச்சை நடந்த விதத்தை மற்ற டாக்டர்களுக்கும், மருத்துவம் பயிலும் மாணவர்களுக்கும் செல்லித் தருவதற்கு இந்த வீடியோ படங்கள் உதவி கரமாய இருக்கும்.
தமிழ்நாட்டிற்கு உல்லாச பயணிகளாய் வரும் வெளிநாட்டினர். இங்குள்ள பல அரிய காட்சிகளை ஸ்டில் போட்டோக்களாகத்தான் எடுத்துப் போய் கொண்டிருந்தார்கள். இப்போது சென்னையில் நிறைய வீடியோ கம்பெனிகள் இருப்பதால், அவர்கள் ஸ்டில் போட்டோக்களுக்கு பதிலாக, வீடியோ படங்களை எடுத்துக் கொள்ள விரும்புகிறார்கள். இப்படி எங்களை அணுகி கேட்ட பல உல்லாச பயணிகளுக்காக மகாபலிபுரம், கன்னியாகுமரி, மதுரை போன்ற ஊர்களுக்கு வீடியோ எடுத்திருக்கிறோம்
மதுரை, தர்மபுரி ஆகிய மாவட்டங்களின் சிறப்பையும், பெருமைகளையும் விளக்கும் வகையில் டாக்குமென்ட்ரி படங்களும் வீடியோவில் செய்திருக்கிறோம்.

அரசு பொருட்காட்சி நடைபெறும் இடங்களில் இந்த டாக்குமென்ட்ரி படங்கள், மக்களுக்கு திரையிட்டு காட்டப்படுகின்றன. இப்படி வீடியோவில் முதன்முதலாக செய்தி படங்கள் எடுக்கத் தொடங்கி இருப்பதும் நான்தான்
அரசியல் பொதுக் கூட்டங்கள், சுற்றுப்பயண நிகழ்ச்சிகள் போன்றவைகளையும் வீடியோ எடுத்துத் தருகிறோம். இதுவும் எங்கள் சோதனை முயற்சிதான். ஆனாலும், பெரிய வெற்றியை தந்தது.
இப்போது பள்ளிக் குழந்தைகளுக்காக கிராமியக் கலைகள், விளையாட்டு முறைகள், விஞ்ஞானப் பாடங்கள் போன்றவைகளையும் வீடியோ படம் எடுத்துக் கொடுக்கவிருக்கிறோம்.”
ஒரு வீடியோ காஸட்டில் உள்ள படம் ஒரிஜினலானதா அல்லது வேறு காஸட்டிலிருந்து திருட்டு பதிவு செய்யப்பட்டதா என்பதை எப்படி கண்டுப் பிடிப்பது?
“படத்தை போட்டு பார்த்த உடனேயே தெரிந்துவிடும். பிக்ஸரில் சரியாக கிளாரிட்டி இருக்காது. அதுமட்டுமல்லாமல் ஆடியோவும் தேய்ந்துவிடும்.
பொதுவாக நம்மூரில் வீடியோ தொழில் எப்படி இருக்கிறது?
“மேல்தட்டு மக்களிலேயே இன்னும் பலபேருக்கு வீடியோ போய்ச் சேரவில்லை. நமது அரசாங்கம் சுங்கவரி என்ற பெயரில் ஏராளமாய் பணம் தீட்டிவிடுகிறார்கள். அவ்வளவு வரி கொடுத்து வீடியோ இறக்குமதி செய்வதானால், அடக்கவிலை அதிகமாகும். இதனால், இங்கே வீடியோ தொழில் சுறுசுறுப்படையாமல் இருக்கிறது.
இவ்வாறு வி.கே.சசிகலா, அந்த பத்திரிகையில் பேட்டியளித்துள்ளார்

Monday, 20 November 2017

MGR சூப்பிப்போட்ட கொட்டையும், வெறும் தொலியையும் கைப்பற்றி என்ன பயன் ?



MGR , சூப்பிப்போட்ட கொட்டையும், வெறும் தொலியையும் கைப்பற்றி என்ன பயன் ?



இந்த சொத்தை எப்போது கைப்பற்ற போகிறார்கள் ?
ஊழலை ஒழிப்பேன்னு சொல்லி ஆட்சிக்கு வந்தார் தலைவர் எம்ஜியார் . தன்னுடைய வருமான வரி பாக்கிக்கு வி .என் .ஜானகி பெயரில் இருந்த 
வீட்டை விற்று ௨,50 ,000 கட்டினார். அங்க ஆரம்பிச்ச பிராடு வேலை அவரையும் அவர் சீடரையும் ,சிஷ்யை ஜெயலலிதாவையும் அவர் வழியிலேயே பிரயாணம்  நடத்தியது .ஆட்சியின் அவலமோ சொல்லிமாளாது .ஒரு கட்டத்தில் கருணாநிதியே தேவலை என்று தமிழகம் மட்டும் ஒவ்வொரு வருடமும் ௨% தேய்ந்தே வந்தது .கருணாநிதி பதவி விட்டு போகும்போது 15 வது இடத்தில இருந்த தமிழகம் 26 ஆம் இடத்துக்கு கடைசிக்கு தள்ளப்பட்டது .
முன்னேற்றம் என்று பார்த்தால் ஆயிரக்கணக்கில்  லஞ்சம் வாங்கியவர்கள் லட்சக்கணக்கில் வாங்கினார்கள் .திட்டங்களை நிறைவேற்றாமல் 
நிறைவேற்றியதாய் கணக்கு காட்டி கோடிக்கணக்கில் லஞ்சம் பெற்றார் எம்ஜியார் . இவரே ஊழலின் ஊற்று கண் . இதெல்லாம் தன் வள்ளல் தன்மையால் மக்களின் அறியாமை ,பல்பொடி ,செருப்பு , என்ற இலவசங்களை வழங்கி மூடி மறைத்தார் .இவருடைய சொத்துக்கள் சசி ,ஜெயா சொத்துக்களை விஞ்சி கருணாநிதி சொத்து க்கு இணையாக ஊழலில் திளைத்து மாண்டு போனார் எம்ஜியார் .மறந்து போன மக்கள் .இந்த சொத்தை எப்போது கைப்பற்ற போகிறார்கள் ?
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@

கேடு கெட்ட தமிழர்கள் சார் நாம்....

ஒரு பைக் வாங்க எவ்ளோ நாள் நண்பா கனவு கண்டிருப்போம்?
ஒரு ஃபோன் வாங்க எவ்ளோ நாள் நண்பா ஏங்கி தவிச்சிருப்போம்?
ஒரு நல்ல பிராண்டட் டிரெஸ் பிராண்டட் ஷூ எப்போ போட்டுருப்போம்?
அட ஒரு ஃபிகர உஷார் பண்ண எவ்ளோ ரிஸ்க் எடுத்திருப்போம்? பணக்காரனா நம்மல காட்டிக்க எவ்ளோ வேஷம் கட்டியிருப்போம்?
“புடிச்சத படிக்க, நினைச்சத செய்ய, ஆசைப்பட்டத அடைய” என எவ்வளவு போராடியிருப்போம்.
ஆனால் உதயநிதி ஸ்டாலினோ? துரை தயாநிதியோ? அருள்நிதியோ? திவாகரன் மகன் ஜெய்ஆனந்தோ? 
இளவரசி மகன் விவேக் ஜெயராமனோ? கார்த்திக் சிதம்பரமோ? இப்படி எதுக்காகவாவது ஏங்கியிருப்பாங்களா?

25 வயசுக்கு பிறகு தான் நமக்கெல்லாம் குடும்ப பாரம் என்றால் என்ன என்றே தெரிய ஆரம்பிக்குது, மாதம் 50,000 சம்பாதித்தால் கூட 3 லட்ச ரூபாவை சேமிக்க 10 வருஷம் போராட வேண்டியிருக்கு, ஆனால் அழகிரி மகன் சினிமா தாயாரிப்பாளர், ஸ்டாலின் மகன் நடிகர் மற்றும் தயாரிப்பாளர், 27 வயசுல ஒரு டிவி சேனலுக்கு அதிபர் ஆகின்றான் விவேக் ஜெயராமன், வருங்கால கல்வி மஹானாகின்றான் ஜெய்ஆனந்த். துபாயில் பல ஆயிரம் கோடிகளில் நட்சத்திர ஓட்டல் அதிபராகிரார் கார்த்திக் சிதம்பரம்... 5000 ருபாய் மாசம் சேமிக்க அல்லாடிகிட்டு இருக்கையில் 1000 கோடி ரூபாய்க்கு விவேக் பெயரில் ஜாஸ் சினிமாஸ் வாங்கப்பட்டது என்ற செய்தியை கேட்டப்போ என்னை மாதிரி எவனாவது ஒருத்தனாவது “எவன் அப்பன் வீட்டு காசுடா இதெல்லாம்” என கோவப்பட்டதுண்டா?

உதயநிதியையும், துரைதயாநிதியையும், விவேக்கையும் ஜெய்ஆனந்தையும்,கார்த்திக் சிதம்பரத்தையும் பெத்தவங்க எல்லாம் திறமைசாலிகள் எனில் நம்மை பெத்தவங்க எல்லாம் முட்டாளா? இல்லை நாம தான் திறமையற்றவர்களா? பெத்தவங்களை சார்ந்து வாழ்ந்து வளர்ந்து நிற்கும் அவங்களுக்கே இவ்வளவு இருக்கும் போது., சொந்த கைய ஊன்றி எழுந்து நிற்கும் நமக்கெல்லாம் எவ்வளவு இருக்கனும்?
டிடிவி வீட்ல ரைடாம்? ஒண்ணும் கிடைக்கலையாம்? அய்... ஜாலி... என சந்தோஷப்படுவதற்கு என்ன சார் காரணம்?
உங்க சாதிப்பற்றா? இல்ல அவங்க உங்க சொந்தக்காரங்களா? இல்ல பிஜேபி எதிர்ப்பு மனநிலையா?போயஸ் கார்டனில் ரைடாம்? அய்யஹோ... கோவிலாக மதிக்கப்பட வேண்டிய அம்மா வாழ்ந்த வீட்டில் ரைடா? என கோவப்பட வைப்பது எது சார்? உங்க கட்சி பாசமா? இல்ல அந்த கட்சியில் வாங்கி தின்ன விசுவாசமா?

அந்த கோவிலில் வாழ்ந்த தெய்வம்.. தான் சாகும் போதும் கூட ஊழல் குற்றவாளியாகவே இருந்தாங்க அதுவாவது ஞாபகம் இருக்கா சார்?
உன்னையும் என்னையும் ஏய்த்து உனக்கும் எனக்கும் எட்டாக்கனியாக இருக்கும் பல விஷயங்களை எளிமையாக அடைந்து வாழ்ந்து பெருத்து அசுரராய் நிற்பவர்களை நம்மால் எதிர்க்க முடியவில்லை எனில் எவனோ ஏறி மிதிக்கின்றான் எனில் அதைக்கண்டு மகிழ்ச்சி கொள், உன் உரிமைகளையும் உனது இனப்பற்றையும் காட்ட இது நேரமில்லை, நம் இயலாமையின் வலிக்கு எவனோ ஒருவன் மருந்து போடுகின்றான் என நினைத்துக்கொள். இன்றைக்கு இவனை மிதிப்பவன் தவறு செய்தால் நாளைக்கு எவனோ ஒருவன் மிதிப்பான் என நம்பிக்கை கொள். திருடனாய் இருந்தாலும் தமிழன் எனில் ஆதரவு கொடுக்கனும் என்ற முட்டாள் தனம் இருக்கும் வரை நம்ம அப்பனும் பாட்டனும் சலாம் போட்ட மாதிரி தான் நாளைக்கு உன் மகனும் என் மகனும் விவேக்குக்கோ? ஜெய் ஆனந்துக்கோ? உதயநிதிக்கோ துரை தயாநிதிக்கோ? கார்த்திக் சிதம்பரத்துக்கோ? சலாம் அடிப்பானுங்க.

என்னடா ஸ்டாலின், அழகிரி,கனிமொழி, சிதம்பரம், சசிகலா, திவாகரன், தினகரனை எல்லாம் விட்டுட்டேனே என பார்க்குறீங்களா? அவங்களுக்கெல்லாம் தான் நாம சலாம் அடிச்சிகிட்டு இருக்கோமே இத சொல்ல எதுக்கு வெட்கப்பட்டுகிட்டு.
மானத்தமிழன் சார்...!

சூப்பிப்போட்ட கொட்டையும், வெறும் தொலியையும் கைப்பற்றி என்ன பயன் ?