Wednesday 28 February 2018

PADMA PRIYA , SOUTH INDIAN ACTRESS BORN 1980 FEBRUARY 28




PADMA PRIYA , SOUTH INDIAN ACTRESS 
BORN 1980 FEBRUARY 28





பத்மபிரியா தென்னிந்தியத் திரைப்பட நடிகை ஆவார். இவர் தமிழ், மலையாளம், வங்காளம், தெலுங்கு போன்ற மொழிப்படங்களில் நடித்து வரும் இவர் பல மாநில, தேசிய விருதுகளை வென்றுள்ளார். சீனு வசந்தி இலட்சுமி என்னும் தெலுங்கு திரைப்படம் மூலம் திரை உலகிற்கு அறிமுகம் ஆனவர்.
பிறப்பு[மூலத்தைத் தொகு]
பத்மபிரியா தில்லியில் வசித்த தமிழ் பெற்றோரின் மகள் ஆவார். இவரின் தந்தை ஜானகிராமன், இந்திய ராணுவத்தில் பணிபுரிந்தவர் மற்றும் தாய் விஜயா ஆவார். பத்மபிரியா தில்லியில் பிறந்து, பஞ்சாப்பில் வளர்ந்தார்


பிரிகேடியர் ஜானகிராமன்-விஜ யா  தம்பதிகளின் மகளான பத்ம பிரியா. கடந்த 2003ஆம் ஆண்டில் சீனு வசந்தி லட்சுமி எண்ர தெலு ங்கு படம் மூலம் அறிமுகமாகி, பின் தமிழில்  ‘தவமாய் தவமிருந் து’  படத்தின் மூலம் 2005 ஆம் ஆண்டு  அறிமுகமானவர் 

 நடிகை பத்மப்ரியா. அதற்கு பிறகு ‘பட்டியல்’, ‘சத்தம் போடாதே’, ‘மிருகம்’, ‘பொக்கிஷம்’, ‘இரும்புக் குதிரை முரட்டு சிங்கம்’ மற்றும் ‘தங்க மீன்கள்’ உள்ளிட்ட படங்களில் நடித் திருக்கிறார். இறுதியாக ‘பிரம்மன்’ படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாடி உள்ளார்.

தமிழ்ப் படங்கள் மட்டுமன்றி தெலுங்கு, மலையாளம், கன்னடம், பெங்காலி, இந்தி ஆகிய மொழிகளிலும் நாயகியாக நடித்திரு க்கிறார். ‘மிருகம்’ படத்தில் நடித்ததிற்காக தமிழக அரசின் சிறந்த நடிகைக்கான சிறப்பு விருது பெற்றவர்.  பத்ம பிரியா தனது நீண்ட நாள் காதலரான ஜாஸ்மின் ஷா  என்பவரை  மும்பையில் இன்று பத்மப்ரியா திருமணம் செய் துகொண்டார். இதில், இருவரது குடும்பத்தினர் மற்றும் நெருங்கிய உறவினர்கள் மட்டுமே கல ந்துகொண்டார்கள்.

இருவருமே நியூயார்க் பல்கலைக்கழகத் தில் மாஸ்டர் டிகிரி படித்தபோது அறிமுகமாகி பின்பு காதலர்களாக மாறினார்கள். மணமகன் ஜாஸ் மின் ஐஐடியில் மெக்கா னிக்கல் என்ஜீனியரிங் படித்துவிட்டு, அமெரிக்காவில் பொதுநிர்வாகம் பற்றிய படிப்பில் மாஸ்டர் டிகிரி வாங்கி உள்ளார். அமெரிக்காவில் தற் போது ஒரு தனியார் நிறுவனம் ஒன்றில் பணி புரிந்து வருகிறார் .

த‌னது காதல் கணவரை திருமணம் செய்து கொண்டாலும் அவரது அனுமதியுடன் எங்கள் திருமணத்திற்குப்பிறகும் தொடர்ந்து நடிப்பேன் என்று பத்மபிரியா கூறியுள்ளார்.



Filmography[edit source]


YearFilmRoleLanguageNotes
2004Seenu Vasanthi LakshmiVasanthiTelugu
KaazhchaLakshmi MadhavanMalayalam
AmruthamSainaba GopinathanMalayalam
2005Thavamai ThavamirundhuVasanthi RamalingamTamil
RajamanikyamMalliMalayalam
2006VadakkumnathanMeeraMalayalam
PattiyalSarojaTamil
AshwaroodanSitalakshmiMalayalam
Bhargava Charitham Moonam KhandamSophiaMalayalam
Karutha PakshikalPoongodiMalayalam
Yes Your HonourMaya RavishankarMalayalam
2007Anchil Oral ArjunanPavithraMalalyalam
VeeralipattuPoojaMalayalam
Satham PodatheyBhanumathiTamil
ParadesiUshaMalayalam
Naalu PennungalKunnipennuMalayalam
TimeSusan Mary ThomasMalayalam
MirugamAzhagama AyyanarTamil
2008PachamarathanalilAnu SachidanandanMalayalam
My Mother's LaptopPayalMalayalam
2009Bharya Swantham SuhruthuSreelakshmi VallabhanMalayalam
PokkishamNadiraTamil
Katha Parayum TheruvoramNeerajaMalayalam
Kana KanmaniMaya RoyMalayalam
Pazhassi RajaNeeliMalayalam
Bhoomi MalayalamFousiaMalayalam
2010StrikerMadhuHindi
Irumbukkottai Murattu SingamPappaliTamil
Andari BanduvayaPadduTelugu
ThamassuDr. ShanthiKannada
Kutty SrankRevammaMalayalam
2011Aidondla AiduKannada
SeniorsIndhuMalayalam
SnehaveeduSunandaMalayalam
NaayikaGracyMalayalam
2012Aparajita TumiKuhuBengali
CobraSherlyMalayalam
ManjadikuruRojaMalayalam
Bachelor PartyItem dancerMalayalamCameo appearance
No. 66 Madhura BusSoorya PadmamMalayalam
Ivan MegharoopanAmminiMalayalam
PoppinsKanthaMalayalam
2013Maad DadDr. RasiyaMalayalam
Papilio BuddhaCollectorMalayalam
Ladies and GentlemanJyothyMalayalam
Thanga MeenkalEvitaTamil
2014BrahmanTamilCameo appearance
Iyobinte PustakamRahelMalayalam
2017TiyaanVasundhara DeviMalayalam
Patel S. I. R.Rajeswari / RaajiTelugu
Prethamunde SookshikukaMalayalam
CrossroadSeemaMalayalam
ChefRadha MenonHindi
OrphanBengaliFilming
2018Sivaranjiniyum Innum Sila PengalumTamilDelayed

ANGELABABY ,CHINESE ACTRESS PLASTIC DOLL BORN 1989 FEBRUARY 28



ANGELABABY ,CHINESE ACTRESS 
PLASTIC DOLL -BORN 1989 FEBRUARY 28







Angelababy is a famous Chinese actress, model and singer based in Hong Kong. Her birth name is Angela Yeung Wing and she is nicknamed Baby. She has starred in many web series and in some Chinese and Hong Kong films, but is best known for her performance in the film ‘Mojin-The Lost Legend’. Recently, she made her debut in Hollywood with the film ‘Hitman-Agent 47’. Chosen by Southern Metropolis Daily as one of the New Four Dan Actresses, she has won many awards for her modeling projects and films. She also made news when a Ruili clinic accused her as a recipient of several plastic surgeries. She later underwent an examination at a hospital in Beijing to determine if she had any signs of plastic surgery, and the examination concluded that her face showed no signs of prior surgical work.
Childhood & Early Life

Angelababy was born Angela Yeung Wing on February 28, 1989 in Shanghai. Angela is her English name which she later combined with her nickname Baby to form her stage name.
Angelababy's father is a half-Chinese and half-German whereas her mother is from Shanghai. She is her parent's first child and has seven years younger brother named Keven Yang Fan.
Her father used to run an apparel business in Shanghai. Angela grew up there till she was 12 and then moved to Hong Kong with her family.
She joined Notre Dame College and earned a degree from there.
Angelababy's interest in fashion was induced by her father. She loved going to her father's store and enjoyed experimenting with new looks.
When she was 14, her classmate sent her photographs to a modeling agency. The agency liked the pictures and signed her for a modeling assignment.
Angelababy's full-fledged career started at the age of 17. She was spotted by Style International Agency, which signed her for Jay Chou's Hong Kong Concert.

Career
Angelababy made her big screen debut in 2007. She continued acting in many films as supporting cast until she got the role of the protagonist in "Love You You".
In 2015, she started acting in television series and also made her Hollywood debut.
Along with acting and modeling, Angelababy tried her luck in singing and got featured in many soundtracks.
Angela became the first Asian celebrity to be featured in a Gucci advertisement. She is also a spokesperson for Mercedes Benz, Asia.
She has been made the ambassador of China's Panda Protection Research Centre and Child Development Centre of China.

Trivial Matters: Angelababy made her debut with this comedy film in 2007. She was cast in the supporting role and her character was named Taya.
Short of Love: Angelababy played an angel in this rom-com. Directed by James Yuen, the film was released on June 5, 2009.
All's Well, Ends Well: This is the fifth release of the series with the same name. Angelababy played the “Princess of the Flowerland”. The movie was released on 11 February 2010.
Love You You: Angela for the first time played the female lead in this romantic comedy film. It was released on 30 September 2011. She played the character named Xia Mi.
First Time: This movie was released in 2012 and is a remake of South Korean film "...ing". Angela portrayed the character Song Shiqiao, who is a myasthenia patient and dreams of becoming a ballet dancer.

Young Detective Dee-Rise of the Sea Dragon: This action-mystery film was released in 2013. Angela played a beautiful courtesan named Yin Ruiji.
Hitman-Agent 47: Angelababy entered Hollywood with this American action thriller film. She was seen in a cameo character ‘Diana Burnwood’, who worked as a handler of Agent 47. The movie hit the theatres in 2015.
Mojin-The Lost Legend: Based on the novel "Ghost Blows Out the Light", the film was released on December 18, 2015. Angelababy played the love interest of the male lead in this super hit action fantasy film.
Independence Day-Resurgence: This is her second Hollywood film and it released in 2016. She was cast in a supporting role in this American science fiction film. Angela played a Chinese pilot and lieutenant named Rain Lao.
Love Yunge from the Desert: This Chinese television series marked Angelababy's television debut. She played a shy but intelligent girl named HouYunge. Aired from 13 September to 23 November 2015, the show was highly criticized for its poorly researched content.
General & I: Angelababy's next television series where she played a military strategist, Bai Pingting. The series was aired from January 2 to February 10, 2017. Although the series was well received by the audience, Angelababy's performance was a letdown.
Music Career

Bottom of the Heart (2011): Angelababy sang this track from "Love You You" with singer Jin Lin.
We Can Smile Together (2012): This single is an original soundtrack from Angelababy's film "First Time".
Today You Will Marry Me (2015): Angelababy accompanied Ni Ni, Chen Xiao and Zhu Yawen for this OST from the film Bride Wars.
Green Skirt (2015): She sang this single OST which was used in her televtelevision series "Love Yunge from the Desert".


Awards & Achievements
2013 Hong Kong Society of Cinematographers Awards: Angelababy won the "Most Charismatic Actress" award for her amazing performances in the year 2013.
2013 13th Chinese Film Media Award: For her performance in the film "First Time", Angelababy was awarded the "Most Anticipated Actress" award.
2013 9th Huading Awards: Angelababy won this award in the category of the actress with the most media popularity.
2014 21st Beijing College Student Film Festival: Yet again, Angelababy won the award in the popular actress category for "Young Detective Dee: Rise of the Sea Dragon".

33rd Hundred Flowers Awards: For her excellent performance in the film "Mojin: The Lost Legend", Angelababy won the award in the "Supporting Role-Female" category.
Personal Life
Angelababy had a secret affair with 12 years senior Chinese actor Huang Xiaoming. In 2015, her manager confirmed the news to media.
On 27 May 2015, their marriage was registered in Qingdao and had a lavish wedding afterward. Angela was called the Kim Kardashian of China because of the extravagance.
The 30 million dollar wedding included an exclusive Dior wedding gown, a 10-foot tall wedding cake, and expensive gifts for guests such as cell phones. Her giant six-carat wedding ring cost a whopping 1.5 million Dollars.
On 17 January 2017, Angelababy gave birth to a baby boy and nicknamed him "Little Sponge".


Controversy
A cosmetic surgery clinic accused Angelababy to have under gone many surgeries. The clinic even labeled her as “plastic doll”. Angelababy sent a legal notice to the concerned company for these allegations. Angela produced her medical reports that stated her looks to be genuine and came out clean.
Business Ventures

Besides acting and modeling, Angelababy is also a businesswoman who has invested in several business ventures. She opened a nail parlor and a lifestyle store to start off. Thereafter, in collaboration with a fellow actor, she invested in cafe chains.
She has also made investments in e-commerce site Ymatouto and beverage brand “HeyJuice”.
Angelababy has donated 2.6 million dollars to a charity program to help young entrepreneurs.
Net Worth
Angelababy ranked as the No. 12 highest earning Chinese celebrity on Forbes' 2015 China Celebrity List.
She earned 41 million Yuan (6.4 million Dollars) in 2015.

KUMARIMUTHU TAMIL COMEDY ACTOR DIED 2016 FEBRUARY 28



KUMARIMUTHU TAMIL COMEDY ACTOR 
DIED 2016 FEBRUARY 28





தமிழ்த் திரைப்படங்களில் நகைச்சுவை வேடங்களில் நடித்து புகழ்பெற்றவர் நடிகர் குமரிமுத்து. எம்.ஆர்.ராதாவின் மேடை நாடகங்களில் நடித்த இவர் பின்னர் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் சுமார் 1000 படங்களுக்கு மேல் நடித்துள்ளார். ‘ஊமை விழிகள்’, ‘கை கொடுக்கும் கை’, ‘இது நம்ம ஆளு’, ‘சின்ன பூவே மெல்ல பேசு’, ‘புது வசந்தம்’ உள்ளிட்ட படங்களில் இவரது நடிப்பு தனி அடையாளம் பெற்றது.

கடந்த சனிக்கிழமை அவருக்கு திடீரென மூச்சுத் திணறல் ஏற் பட்டு, தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் நேற்று அதிகாலை காலமானார்.


கலைமாமணி விருது பெற்றவ ரான குமரிமுத்து, தென்னிந்திய நடிகர் சங்கத்தில் பதவி வகித்தவர். தி.மு.கவில் கலை, இலக்கிய பேரவை துணைத்தலைவராகவும் இருந்தார். குமரிமுத்துவுக்கு புண்ணியவதி என்ற மனைவியும், செல்வபுஷ்பா, எலிசபெத் மேரி, கவிதா ஆகிய 3 மகள்களும், ஐசக் மாதவராஜன் என்ற மகனும் உள்ளனர்.

குமரிமுத்துவின் உடல் சென்னை நந்தனத்தில் உள்ள அவரது வீட்டில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. அவரது உடலுக்கு தமிழ்த் திரையுலகினர், நடிகர் சங்க நிர்வாகிகள் மற்றும் திமுக உறுப்பினர்கள் பலரும் அஞ்சலி செலுத்தி வருகிறார்கள். இன்று மாலை 3 மணி அளவில் மந்தைவெளி கல்லறைத் தோட்டத்தில் அவரது உடல் நல்லடக்கம் செய்யப்படும்.


குமரிமுத்துவின் மறைவு குறித்து திமுக தலைவர் கருணாநிதி வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி யில், “குமரிமுத்து மறைந்த செய்தி அறிந்து திடுக்கிட்டேன். குமரிமுத்துவின் மறைவினால் வருந்தும் அவருடைய குடும்பத்தா ருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரி வித்துக்கொள்கிறேன்.”

திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி: “கலைவாணரை போலவே குமரியிலிருந்து கலைத் துறைக்கு வந்த குமரிமுத்துவும் கலைவாணரைப் போலவே சிரிக்கவும் சிந்திக்கவும் வைக்கும் நகைச்சுவையை நமக்கு வழங்கினார். அவரது மறைவு அதிர்ச்சியையும் வேதனையையும் அளிக்கிறது.”

தென்னிந்திய நடிகர் சங்கம் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி: “நடிகர் சங்கத்துக்காக குமரிமுத்து ஆற்றிய அரும்பணிகளையும் சங்க நலனுக்காக குரல் கொடுத்து போராடியதையும் சங்க முன்னேற்றத்துக்கான பல்வேறு யோசனைகளை சமீபகாலம் வரையிலும் வழங்கியதையும் நன்றியுடன் நினைவுகூர்கிறோம்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.


நகைச்சுவை நடிகர் குமரிமுத்து சென்னையில் காலமானார். அவருக்கு வயது 78.

RAJENDRA PRASAD , FIRST RASHTRAPATHY OF INDEPENDENT INDIA DIED 1963 FEBRUARY 28



RAJENDRA PRASAD ,
FIRST  RASHTRAPATHY OF 
INDEPENDENT INDIA DIED 
1963 FEBRUARY 28




டாக்டர் இராஜேந்திரப் பிரசாத் Dr. Rajendra Prasad இந்தி: डा॰ राजेन्द्र प्रसाद; 
3 டிசம்பர் 1884 – 28 பிப்ரவரி 1963) இந்தியாவின் முதல் குடியரசுத் தலைவரும் இந்திய விடுதலைப் போராட்ட வீரரும் ஆவார். காங்கிரஸ் கட்சித் தலைவர்களுள் ஒருவர். 1950 முதல் 1962 வரை இந்திய குடியரசுத் தலைவராக இருந்தார். இரு முறை குடியரசுத் தலைவர் பதவிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரே குடியரசுத் தலைவர்.
இளமை[மூலத்தைத் தொகு]

இவர் 1884ம் ஆண்டு டிசம்பர் 3ம் தேதி பீகாரின் சிவான் எனுமிடத்தில் பிறந்தார். இவருடைய தந்தை மகாவீர சாகி பெர்சிய மொழியிலும் சமஸ்கிருத மொழியிலும் தேர்ந்திருந்தார். இவரது தாயார் கமலேசுவரி தேவி சமயப் பற்றுள்ள ஒரு மாது ஆவார். சிறு வயதில் தன் குடும்பத்தாராலும் நண்பர்களாலும் ‘ராஜன்’ என அழைக்கப்பட்டார். தனது 12 ஆம் வயதில் ராஜவன்சி தேவி என்ற பெண்ணை மணந்தார். திருமணத்திற்குப் பின்பு பிரசாத் தனது தமையனார் மகேந்திர பிரசாத்துடன் வசித்து வந்தார்.

கல்வி[மூலத்தைத் தொகு]

இராஜேந்திர பிரசாத்திற்கு ஐந்து வயதானபோது ஒரு இஸ்லாமிய மௌல்வியிடம் (tutelage of a Moulavi) பெர்சியம், இந்தி மற்றும் கணிதம் கற்க இவருடைய பெற்றோர் ஏற்பாடு செய்தனர்.சாப்ரா மாவட்டத்திலுள்ள பள்ளியில் பிரசாத் தனது தொடக்கக் கல்வியை முடித்தார். பின்னர் டி. கே கோஷ் அகாடமியில் இரண்டாண்டு பயின்றார். கல்கத்தா பல்கலைக் கழகத்தில் நுழைவுத் தேர்வு எழுதி மாதம் ரூ.30 உதவித் தொகைப் பெற்று தனது இடைநிலைக் கல்வியைத் தொடர்ந்தார். கல்கத்தா பல்கலைக்கழகத்தில் பயின்று 1907ம் ஆண்டு பொருளியலில் முதுகலைப் பட்டம் பெற்றார். படிக்கும் காலத்தில் பீகார் மாணவர் அவையை உருவாக்கினார் இராசேந்திர பிரசாத். பல்வேறு கல்லூரிகளில் பேராசிரியராகவும் பின்னர் கல்லூரி முதல்வராகவும் செயலாற்றியுள்ளார். பேராசிரியராக பணியாற்றிக்
கொண்டிருக்கும்போதே சட்டத்தில் மேற்படிப்பு படித்து தேர்வில் முதல் மாணவனாக தங்கப் பதக்கத்தை வென்றார். பின்னர் சட்டத்துறையில் முனைவர் பட்டமும் பெற்றார்.

விடுதலைப்போரில் ஈடுபாடு[மூலத்தைத் தொகு]
மிகப் புகழ் பெற்ற வழக்குரைஞராக பணியாற்றி வந்த இவர், மகாத்மா காந்தியின் ஒத்துழையாமை இயக்கத்தால் கவரப்பட்டு தன் வேலையைத் துறந்து, அவ்வியக்கத்தில் இணைந்தார்.தரையைத் துடைப்பது ,கழிவறையைக் கழுவுவது,பாத்திரம் துலக்குவது போன்ற பணிகளை ஆசிரமத்தில் செய்து வந்தார். பீகார் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட
மக்களுக்கு நிதி திரட்ட கிளம்பினார் ஆங்கிலேய கவர்னர் திரட்டியது மாதிரி மூன்று மடங்கு அதிகமாக முப்பத்தி எட்டு லட்சம் திரட்டினார்.[1] 'வெள்ளையனே வெளியேறு' என்ற போராட்டத்தில் கலந்து கொண்டதால் 1942ம் ஆண்டு கைது செய்யப்பட்டு மூன்றாண்டு கால சிறைவாசத்திற்குப் பின் 1945ம் ஆண்டு ஜூன் மாதம் 15ம் தேதி விடுதலையானார்.

பதவி[மூலத்தைத் தொகு]

1946ம் ஆண்டு இந்திய அரசியலமைப்பு அவையின் தலைவராக நியமிக்கப்பட்ட இவர், 1947ம் ஆண்டு காங்கிரஸ் கட்சியின் தலைவராக மூன்றாம் முறையாகப் பதவியேற்றார். இந்தியா சுதந்திரம் அடைந்த இரண்டரை ஆண்டுகளுக்குப்பின் புதிய அரசியலமைப்பு ஏற்றுக் கொள்ளப்பட்டதைத் தொடர்ந்து, 1950ம் ஆண்டு இந்தியாவின் முதல் குடியரசுத் தலைவராகப் பதவியேற்றார் இராசேந்திர பிரசாத். 1952, 1957 ஆகிய ஆண்டுகளில் இரண்டு முறை குடியரசுத் தலைவராகப் பதவியேற்ற ஒரே குடியரசுத் தலைவரான இராஜேந்திரப் பிரசாத் 1962ம் ஆண்டு வரை பதவியிலிருந்து, பின் ஓய்வு பெற்றார்.

அரசாங்கத்துக்கு எதிரான போராட்டங்களில் கலந்து கொண்டார் என எந்த பணியிலும் ஈடுபடக் கூடாது என அரசு விதித்த தடையை மீறி, சிந்து மற்றும் பஞ்சாப் மாகணங்களில் நிலநடுக்கம் ஏற்பட்ட பொழுது நிவாரணப் பணிகளில் ஈடுபட்டார். காந்தியின் அழைப்புக்கு இணங்கி ஆங்கிலேய கல்விக்கூடத்தை விட்டு மகனை வெளியேற்றினார். காங்கிரசின் தலைவராகப் போஸிற்குப் பின் ,கிருபாளினிக்குப் பின் பதவியேற்றார்.

விருது[மூலத்தைத் தொகு]

இவருக்கு இந்தியாவின் உயரிய விருதான பாரத ரத்னா விருது வழங்கப்பட்டது. இந்திய முதல் குடியரசுத் தலைவர் இராசேந்திர பிரசாத் 1963ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 28ம் தேதி காலமானார்.

KAMALA NEHRU,FREEDOM FIGHTER DIED 1936 FEBRUARY 28





KAMALA NEHRU,FREEDOM FIGHTER 
DIED 1936 FEBRUARY 28




கமலா  நேரு (ஆகஸ்ட் 1, 1899 - பிப்ரவரி 28, 1936) என்பவர், இந்திய விடுதலைப் போராட்ட வீரரும், இந்தியாவின் முதல் பிரதமருமான ஜவஹர்லால் நேருவின் மனைவியும், இந்தியாவின் முதல் பெண் பிரதமராக இருந்த இந்திரா காந்தியின் தாயாரும் ஆவார். இவர் மிகவும் உண்மையானவராகவும், தேசபக்தி மிக்கவராகவும், எளிதில் உணர்ச்சி வசப்படக் கூடியவராகவும் இருந்தார்.[
இளமைப்பருவம்[மூலத்தைத் தொகு]

கமலா நேரு ஆகஸ்ட் 1, 1899 அன்று பிறந்தார். அவர் பழைய டில்லியில் காஷ்மீர் பிராமணக் குடும்பத்தைச் சேர்ந்தவர்.[1] இவரது பெற்றோர் ராஜ்பதி-ஜவஹர்மால் கௌர் ஆவர். இவர் தன் பெற்றோருக்கு மூத்த பிள்ளை ஆவார். இவரது சகோதரர்கள் சாந்த் பகதூர் கௌர் மற்றும் பயிரியலாளர் ஆன கைலாச் நாத் கௌர். இவரது சகோதரி ஸ்வரூப் கத்ஜு. இவர் தனது வீட்டிலிருந்து பண்டிட் மற்றும் மௌல்வியின் வழிக்காட்டுதலின் மூலம் கல்வி பெற்றார்.

திருமணம்[மூலத்தைத் தொகு]


கணவர் நேரு, மகள் இந்திராவுடன் கமலாநேரு -1918
இவருடைய பதினேழாம் வயதில் பண்டிட் ஜவஹர்லால் நேருவை மணந்தார். 1917 ஆம் ஆண்டில் இவருக்குப் பெண் குழந்தை பிறந்தது. அக்குழந்தைக்கு இந்திரா பிரியதர்ஷினி எனப் பெயர் சூட்டப்பட்டது. 1924 ஆம் ஆண்டில் ஒரு ஆண் குழந்தை பிறந்து ஒரு வாரத்திலேயே இறந்துவிட்டது.[2]

நண்பர்கள்[மூலத்தைத் தொகு]
கமலா நேரு சிறிது காலம் சபர்மதி ஆசிரமத்தில் தங்கியிருந்த போது அவருக்கு கஸ்தூரிபாய் காந்தியுடனும் பிரபாவதி தேவியுடனும் நெருங்கிய நட்பு ஏற்பட்டது.[3]

இறப்பும் தாக்கமும்[மூலத்தைத் தொகு]
பிப்ரவரி 28, 1936 அன்று கமலா நேரு காச நோய் பாதிப்பால் சுவிட்சர்லாந்திலுள்ள லாசன்னில் காலமானார். லாசக்னா இடுகாட்டில் இவரது உடல் தகனம் செய்யப்பட்டது.

இவருக்கு நினைவு செலுத்தும் வகையில் கமலா நேரு கல்லூரி, கமலா நேரு பூங்கா, கமலா நேரு தொழில்நுட்ப கழகம்(சுல்தான்பூர்), கமலா நேரு மருத்துவமனை ஆகியவற்றுக்குப் பெயரிடப்பட்டுள்ளன.

Tuesday 27 February 2018

CHANDRASHEKHAR AZAD ,FREEDOM FIGHTER DIED 1931 FEBRUARY 27




CHANDRASHEKHAR AZAD ,FREEDOM FIGHTER
DIED 1931 FEBRUARY 27




சந்திரசேகர ஆசாத் (Chandra Shekhar Azad, உருது: چندر شیکھر آزاد; இந்தி: चंद्र शेखर आज़ाद; 23 சூலை 1906 – 27 பெப்ரவரி 1931) என அழைக்கப்படும் சந்திரசேகர சீதாராம் திவாரி இந்திய விடுதலை போராட்ட வீரர்களில் ஒருவர். இந்துசுத்தான் குடியரசு அமைப்பு மீளுருவாக்கம், ககோரி ரயில் கொள்ளை, பகத் சிங் போன்றவர்களை வழிநடத்துதல், இந்துசுத்தான் சோசலிசக் குடியரசு அமைப்பு உருவாக்கம், பிரித்தானிய அதிகாரி சான்டர்சு கொலை போன்றவற்றைச் செய்தவர்.
வாழ்க்கை வரலாறு[மூலத்தைத் தொகு]
சிறுவயது[மூலத்தைத் தொகு]
ஆசாத் 23 சூலை 1906ல் பண்டிட் சீதாராம் திவாரி மற்றும் ஜக்ரானி தேவி என்ற தம்பதியருக்கு உத்தரப் பிரதேசம் மாநிலத்திலுள்ள பதர்க்கா என்னும் ஊரில் பிறந்தார்.[1] இவரது தந்தை அலிஜார்பூரில் பணியாற்றிய போது இவர் தன் இளமைப்பருவத்தை மத்திய பிரதேச சபூவா மாவட்டத்தில் கழித்தார். அப்போது அவர் அம்மாவட்ட பில் பழங்குடிகளிடம் முறையாக வில்வித்தை கற்றார். அது அவருக்கு போராட்டக் காலத்தில் உதவியது.


இவரது தாயான தேவி இவரை காசியிலுள்ள வித்யா பீடத்தில் சமசுகிருதம் கற்க அனுப்புமாறு அவருடைய தந்தையிடம் கூறி ஏற்கச் செயதார். இவரது 15ஆவது வயதில் இவர் ஒத்துழையாமை இயக்கத்தில் இணைந்ததற்காகக் கைது செய்யப்பட்டு குற்றவியல் நடுவரிடம் கொண்டு செல்லப்பட்டார். நடுவர் அவரிடம் அவரது பெயர், தந்தைப்பெயர் மற்றும் அவரது முகவரியை அடுத்தடுத்து கேட்க அதற்கு அவர் முறையே விடுதலை (இந்தி - ஆசாத்), சுதந்திரம் மற்றும் சிறை என்று பதிலளித்தார். உடனே நடுவர் அவருக்கு மிகுந்த தண்டனையுடன் கூடிய சிறை செல்லுமாறு உத்தரவிடவே நான் அப்படிக்கூறினால் தான் நீங்கள் என்னைச் சிறைக்கு அனுப்புவீர்கள் என்றுதான் கூறினேன் என்று கூற அந்நடுவரகத்தில் உள்ளவர்கள் அனைவரும் சிரித்து விட்டனர். அதற்கு நடுவர் மிகவும் கோபமடைந்து அவருக்கு 15 பிரம்படி கொடுக்கக் கட்டளையிட ஒவ்வொரு அடிக்கும் அவர் பாரத் மாதா கி ஜெ எனக்கூறினார். அதுவரை சந்திரசேகர சீதாராம் திவாரி என்ற பெயருடன் அறியப்பட்டவர் அதற்குப் பிறகு சந்திரசேகர ஆசாத் என்று அழைக்கப்பட்டார்.

இளமைப்பருவம்[மூலத்தைத் தொகு]

காந்தி, 1922ல் ஒத்துழையாமை இயக்கத்தைக் கைவிட்ட பின்னரும் ஆசாத் தனது நிலைப்பாட்டில் உறுதியாக இருந்தார். முழுச் சுதந்திரத்தை எந்த வழியினும் அடைய வேண்டும் என்பதற்காக தன்னைத்தானே அர்பணித்துக் கொண்டார். இவரது இளம்வயதில் இவரை பிரன்வேசு சாட்டர்ச்சி என்பவர் இந்துசுத்தான் குடியரசு அமைப்பை ஆரம்பித்த ராம் பிரசாத் பிசுமில் என்றவரிடம் அறிமுகப்படுத்தினார். விளக்குத்தீயில் தன் கையை எரித்துத் தனது தேசபக்தியை வெளிப்படுத்திய பின் பிசுமில் அவரைத் தன் அமைப்பில் சேர்த்துக் கொண்டார். சாதி, மத பணப் பேதமில்லாத அனைவருக்கும் சுதந்திரம் என்ற இந்துசுத்தான் குடியரசு அமைப்பின் கொள்கை ஆசாத்தை மிகவும் ஈர்த்தது. அதன்பின் அந்த அமைப்பை வளர்ப்பதற்காக பிரித்தானிய அரசாங்க பொருட்களை அவர் கூட்டாளிகளுடம் சேர்ந்து பிசுமிலின் சொந்த ஊரான சாசகான்பூர் வட்டாரத்திலேயேக் கொள்ளை அடிக்க ஆரம்பித்தார். அதில் 1925ல் நடந்த ககோரி ரயில் கொள்ளையும் ஒன்று. மேலும் சோசியலிச வழியிலேயே நாளைய இந்தியாவும் இந்திய சுதந்திரமும் இருக்க வேண்டுமென எண்ணினார்.

ஜான்சி[மூலத்தைத் தொகு]

ஆசாத் ஜான்சியையே தன் அமைப்பின் தலைமைச் செயலகமாக சிறிது காலம் வைத்திருந்தார். ஜான்சியை அடுத்து 15 கிலோமீட்டர் தூரமுள்ள ஆர்ச்சா காடுகளையே தன் அமைப்பின் சண்டைப் பயிற்சிக் கூடமாகப் பயன்படுத்தினார். மேலும் அவரே தன் அமைப்பினருக்குப் போர்பயிற்சிகளைக் கற்றும் கொடுத்தார். ஆர்ச்சா காடுகளுக்குப் பக்கம் சதார் ஆற்றங்கரையிலுள்ள அனுமன் கோயிலில் கூடாரம் அமைத்து அதையே வசிப்பிடமாகப் பயன்படுத்தினார். அப்போது தர்மபுரம் கிராமத்தின் குழந்தைகளுக்குப் போர்ப்பயிற்சி அளிப்பதன் மூலம் அம்மக்களின் நன்மதிப்பை பெற்றார். அக்கிராமத்தின் பெயரான தர்மபுரம் பின் மத்திய பிரதேச அரசாங்கத்தால் ஆசாத்புரம் என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது.

அவர் ஜான்சியில் வசித்தபோது சதார் சந்தையிலுள்ள பண்டல்கண்ட் மோட்டார் கேரேஜில் வாகனம் ஓட்டும் பயிற்சி பெற்றார். சதாசிவ மல்கபுர்கார், விசுவநாத வைசம்பாயன், பகவன் தாசு மகவுர், ஜான்சி பண்டிட் ரகுநாத் விநாயக் துளேகர், பண்டிட் சீதாராம் பாசுகர் பகவத் போன்றோர் இவரின் அமைப்பில் இணைந்தனர். மேலும் நய் பசுத்தியிலுள்ள ருத்ர நாராயண சிங் மற்றும் நாக்ராவிலுள்ள சீதாராம் பாசுகர் பகவத் வீடுகளிலும் சிறிது காலம் தங்கியிருந்தார்.

பகத்சிங்கும் ஆசாத்தும்[மூலத்தைத் தொகு]

இந்துசுத்தான் குடியரசு அமைப்பு 1924ல் ராம் பிரசாத் பிசுமில், யோகேசு சந்தர் சேட்டர்ஜி, சசிந்திரநாத் சன்யால், சசிந்திரநாத் பக்ச்சி போன்றவர்களால் ஒத்துழையாமை இயக்கத்தை அடுத்த 2 ஆண்டுகளில் ஆரம்பிக்கப்பட்டது. 1925ல் இவ்வமைப்பால் நடத்தப்பட்ட ககோரி ரயில் கொள்ளையை அடுத்து பிரித்தானிய அரசாங்கம் புரட்சியாளர்களை அழிக்கத் தீவிரப்படுத்தப்பட்டது. பிரசாத், அசஃபகுலா கான், தகூர் ரோசன் சிங், ராசேந்திர நாத் லகரி போன்றவர்கள் இக்கொள்ளையில் சம்பந்தப்பட்டதால் அவர்கள் கொல்லப்பட்டனர். ஆசாத், சக்ரவர்த்தி, மற்றும் முராரி சர்மா போன்றவர்கள் பிடிக்கப்பட்டனர். ஆசாத் மீண்டும் இந்துசுத்தான் குடியரசு அமைப்பை மீளுருவாக்கினார். மேலும் ஆசாத்திற்கு பகத் சிங், சுக்தேவ், ராஜ்குரு போன்றவர்களுடன் நெருங்கிய தொடர்பு வைத்திருந்த பகவதி சரன் அரோரா என்றவருடன் பழக்கம் இருந்தது. அவர்கள் அனைவரும் இணைந்து இந்துசுத்தான் குடியரசு அமைப்பை இந்துசுத்தான் சோசலிசக் குடியரசு அமைப்பு என்ற பெயருடன் மறு உருவாக்கம் செய்தனர். அதன்படி சோசியலிச முறையில் இந்தியா விடுதலை அடைவதை அவர்கள் கொள்கையாகக் கொண்டனர்.

மறைவு[மூலத்தைத் தொகு]

பெப்ரவரி 27, 1931 அன்று அலகாபாத் அல்ஃப்ரட் பூங்காவில் தன் இயக்கத்தவரான் சுக்தேவுடன் பேசிக்கொண்டிருந்த போது பிரித்தானிய காவல்துறையினர் சுற்றி வளைத்தனர். சுக்தேவைத் தப்பிக்க விட்டுவிட்டு நீண்ட நேரம் காவல்துறையினரிடம் போராடினார். காலில் குண்டடிபட்டதால் ஆசாத்தால் அங்கிருந்து தப்பிக்க இயலாமல் போனது. தன் துப்பாக்கியில் ஒரு தோட்டா மட்டும் மட்டுமிருக்க காவல்துறையினரிடம் உயிருடன் பிடிபடக்கூடாது என்பதால் தன்னைத்தானே சுட்டுக்கொண்டார். ஆனால் பிரித்தானிய காவல்துறையினர் அவரை என்கவுண்டரில் சுட்டுக் கொன்றதாகவே கூறினர். அவர் பயன்படுத்திய துப்பாக்கி அலகாபாத் அருங்காட்சியகத்திலும் அதன் ஆவணங்கள் லக்னோ சி.ஐ.டி. தலைமையகத்திலும் உள்ளது.

பிரபலம்[மூலத்தைத் தொகு]
ஆசாத் கொல்லப்பட்ட இடமான அல்ஃப்ரெட் பூங்கா அதன் பிறகு சந்திரசேகர ஆசாத் பூங்கா என்றே அழைக்கப்பட்டது. மேலும் அவரது பெயரில் பள்ளிகள், கல்லூரிகள், வீதிகள் மற்றும் பொதுக்கழகங்கள் தொடங்கப்பட்டுள்ளன.