Thursday 29 April 2021

FREEDOM FIGHTER R.CHIDAMBARA BHARATHI BORN 1905 JUNE 5 - 1987 APRIL 30

 


FREEDOM FIGHTER R.CHIDAMBARA BHARATHI 

BORN 1905 JUNE 5 - 1987 APRIL 30

தியாகி ஆர்.சிதம்பர பாரதி

(பிறப்பு:05.06.1905-நினைவு:30.04.1987)


(படம்)



     சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டதற்காகச் சிறைப்பட்டு வட நாட்டுச் சிறைகளில் சுமார் 14 ஆண்டுகள் அடைபட்டுக் கிடந்த தியாகிதான் ஆர்.சிதம்பர பாரதி.


       பெருந்தலைவர் காமராஜ் அவர்களுடைய நெருங்கிய நண்பரான சிதம்பர பாரதி பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் பலமுறை அவர்களுடைய சட்டங்களை மீறியதற்காகக் கைது செய்யப்பட்டார். சுதந்திரத்திற்குப் பிறகு தமிழ் நாடு சட்டமன்றத்திற்கு 1957 தேர்தலில் மானாமதுரை தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டார்.


        ஆர்.சிதம்பர பாரதி 1905 ஜூன் 5ஆம் தேதி மதுரையில் வடக்கு மாசி வீதியில் இருந்த ‘ராமாயணச் சாவடி’ எனும் இவர்களது இல்லத்தில் ரெங்கசாமி சேர்வைக்கும் பொன்னம்மாள் அம்மையாருக்கும் மகனாகப் பிறந்தார். இவர்களுக்கு சிதம்பர பாரதி பதினாறாவது குழந்தை. இவருக்கு எட்டு அண்ணன்மார்களும், ஏழு அக்காமார்களும் இருந்தனர். இவருடைய ஐந்தாவது வயதில் இவருடைய தந்தை காலமானார்.

      வறுமை காரணமாக இவரது படிப்பு நின்று போயிற்று. அப்போது தேசிய இயக்கத்தில் முன்னணியில் இருந்து வீர கர்ஜனை புரிந்து வந்த சுப்பிரமணிய சிவாவின் பால் இவருக்கு பற்று ஏற்பட்டு அவரது அடியொற்றி இவரும் சுதந்திர தாகத்துடன் செயல்படத் தொடங்கினார்.

       சிவா தொடங்கிய பாப்பாரப்பட்டி ஆசிரமத்தில் இரண்டு ஆண்டுகள் இவர் இருந்திருக்கிறார். காங்கிரஸ் தொண்டராக இவர் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்த காலம் இது.


      காங்கிரஸ் மிதவாதிகள், தீவிரவாதிகள் எனப் பிரிந்து கிடந்த நேரத்தில் இவர் பால கங்காதர திலகரின் தலைமையில் இயங்கிய தீவிரவாதப் பிரிவில் வ.உ.சி., சிவா ஆகியோரைப் போல தீவிர காங்கிரஸ்காரராகச் செயல்பட்டு வந்தார்.

          பிரிட்டிஷ் அரசு இவரைப் பல வழக்குகளில் குற்றவாளியாகக் கருதி இவரைத் தேடியது. மதுரையில் காந்தி ஜெயந்தி விழா 1942 அக்டோபர் 2ஆம் தேதி கொண்டாடப் பட்டது.பெரிய காங்கிரஸ் தலைவர்கள் அனைவரும் சிறையில் அடைக்கப்பட்ட சூழ்நிலையில் காங்கிரஸ் பெண் தொண்டர்கள் ஒரு ஊர்வலம் நடத்தினர். அந்த ஊர்வலத்தைக் கலைத்து அனைத்துப் பெண்களையும் கைது செய்து, காட்டுப் பகுதிக்குள் கொண்டு சென்று அவர்களை நிர்வாணமாக்கிவிட்டு போலீசார் திரும்பி விட்டனர்.


      அருகிலிருந்த கிராமத்து மக்கள் அந்தப் பெண்களுக்குத் துணி கொடுத்து மானத்தைக் காப்பாற்றினர். இந்த கொடுஞ்செயலைச் செய்தவர் போலீஸ் அதிகாரி விஸ்வனாதன் நாயர் எனப்படும் தீச்சட்டி கோவிந்தன் ஆவார்.

      அவரைப் பழிவாங்குவதற்காக மதுரை இளைஞர்கள் பலர் ஒன்று சேர்ந்து விஸ்வனாதன் நாயர் மீது திராவகம் வீசி அவரை அலங்கோலப் படுத்திவிட்டனர். அந்தக் குற்றச்சாட்டில் சிறை சென்றவர்களுள் சிதம்பர பாரதியும் ஒருவர். இதனையும் சேர்த்து இவர் மொத்தமாக 14 ஆண்டுகள் சிறைவாசம் அனுபவித்தார்.

      சிறையிலிருந்து விடுதலை ஆனபின் தனது மாமன் மகளான பிச்சை அம்மாளை மணந்து கொண்டார். இவரது ஒரே மகள்தான் சண்முகவல்லி.


      சுதந்திரத்துக்குப் பிறகு இவர் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் ஆனார். இதன் பின்னர் மானாமதுரை தொகுதியில் போட்டியிட்டு 1957இல் சட்டமன்றத்துக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.


       1969இல் காங்கிரஸ் இரண்டாகப் பிளவுபட்டது. இந்திரா காந்தியின் தலைமையில் இந்திரா காங்கிரசும், நிஜலிங்கப்பா, காமராஜ் ஆகியோரின் தலைமையில் சின்டிகேட் காங்கிரசும் உருவாகின. சிதம்பர பாரதி காமராஜ் அவர்களின் தலைமையை ஏற்றுக் கொண்டவரானபடியால் இவரும் சின்டிகேட் காங்கிரசில் செயல்பட்டார்.


       இவருடைய அரசியல் வாழ்க்கையில் எந்த காலத்திலும் ஒரு சிறு குற்றச்சாட்டுக்குக்கூட ஆளாகாமல் ஒரு உண்மையான காந்தியத் தொண்டராகவே விளங்க்கினார். மத்திய அரசு தியாகிகளுக்குக் கொடுக்கும் மரியாதைச் சின்னமான ‘தாமிரப் பட்டயம்’ பெற்ற தியாகி இவர்.


     இவரது மனைவி பிச்சை அம்மாள். இவர்களுக்கு ஒரேயொரு மகள் சண்முகவல்லி கணேஷ், மூன்று பேரப் பிள்ளைகள். இவர் மதுரையில் இருந்த இவருடைய ஆரப்பாளையம் இல்லத்தில் 1987 ஏப்ரல் 30இல் தன்னுடைய 82ஆவது வயதில் காலமானார். வாழ்க தியாகி சிதம்பர பாரதி புகழ்!




MAHMUD OF GAJINI 971 OCTOBER 2 -1030 APRIL 30

 


MAHMUD OF GAJINI 

971 OCTOBER 2 -1030 APRIL 30



கசினியின் மகுமூது அல்லது கஜினி முகமது (Mahmud of Ghazni) (02 அக்டோபர் 971 – 30 எப்ரல் 1030) முகமது தற்கால ஆப்கானித்தான் நாட்டில் உள்ள கஜினி என்ற நகரத்தில் பிறந்த காரணத்தினால், இவரை கசினியின் மகுமூது என்று அழைக்கப்பட்டார். கசானவித்து வம்சத்தில் பிறந்த கசினி மகுமூது தற்கால இந்தியாவை உள்ளடங்கிய பண்டைக் கால நாடுகளைப் பதினேழு முறை தாக்கி வெற்றி வாகை சூடியவர்.[2] இவரையே கசினி முகம்மது என்றும் குறிப்பிடப்படுகிறது.


மங்கோலியர்களை ஆசியா மைனரிலிருந்து (Asia Minor) விரட்டி அடித்து பெருமை பெற்றவர். கசினியின் மகுமூது அக்கால நாடுகளைக் கைப்பற்றி ஆளும் நோக்கத்தில் இல்லாது, உருவ வழிபாட்டாளர்களை வெல்லும் நோக்கிலும், உருவ வழிபாட்டு இடங்களை தகர்க்கும் நோக்கிலும், கோயிலில்களில் உள்ள பெருஞ்செல்வங்களை கொள்ளை அடிக்கும் நோக்கிலும் மற்றும் இந்து, பௌத்தர், சமணர்களை, இசுலாமிய மதத்திற்கு மதம் மாற்றம் செய்யும் நோக்கிலும்[சான்று தேவை], இசுலாம் சமயத்தின் பெயரால் ஜிகாத் எனும், இசுலாமியர் அல்லாதவர்களுக்கு எதிரான போராகவே இருந்தது. கசினி முகமது தனது பேரரசை 998 முதல் 1030 வரை 32 ஆண்டுகள் ஆட்சி புரிந்தார். இவரது வழித்தோன்றல்கள் கி.பி 1159 வரை 129 ஆண்டுகள் கஜினிப் பேரரசை ஆட்சி செய்தனர்.


குடும்பம்

கசினி மகுமூதின் இயற்பெயர் மகுமூது இப்னு சபுக்தசின். தந்தையின் பெயர் அபூ மன்சூர் சபுக்தசின் என்ற துருக்கிய மம்லூக் எனும் அடிமைப் போர் வீரன். இவரது தாய் ஒரு பாரசிகநாட்டு உயர்குடிப் பெண்.[3] மனைவியின் பெயர் கௌசரி செகான். பட்டத்து மகன்கள் பெயர்: சலால் முகமது உத் தெளலா, சிஆப்-உத்-தெளலா மசூத், அப்துல் ரசீத், சுலைமான், சூசா என்பன.


துவக்க அரசியல்

கசினி மகுமூதின் தந்தை அபூ மன்சூர் சபுக்தசின், பாரசிக பேரரசின் கீழ் அடங்கிய ‘புகாரா’ எனும் நாட்டை ஆண்ட இரண்டாம் சாமானிய (Sammanid) குல மன்னரின், ஒரு துருக்கிய அடிமைப் போர் வீரர் ஆவார்.


சாமானிய அரசின் மன்னர் ’இரண்டாம் நூ’ காலத்தில் கசினி மகுமூது குராசான் பகுதியின் அமீர் பதவியில் ’சைப்-உத்-தௌலா’ என்ற பட்டப் பெயருடன் நியமிக்கப்ட்டார்.


பின்பு 997ல் கசினி முகமது, குவாரகானித்து (Qarakhanid) அரசின் சுல்தானாக தன்னைதானே அறிவித்துக் கொண்டார்.[4]


சாமானிய அரசின் அமீர் மிகவும் பலவீனமாக இருந்த காலகட்டத்தில், கசினி மகுமூதும் அவரது தந்தையும் ஒன்று சேர்ந்து 998 இல் சாமானிய அமீரகத்தைக் கைப்பற்றி ஆளத் தொடங்கினர். பின்னர் கந்தகார், லச்கர்கா ஆகிய நகரங்களை கைப்பற்றி நாட்டை விரிவுபடுத்தியதுடன், நாட்டை இராணுவமய மாக்கினார். தன் நாட்டு பகுதிகளை நிர்வாகம் செய்ய ’சேவக் பால்” என்ற பெயருடன் நிர்வாகிகளை நியமித்தார்.


1001 இல் பலமுறை வடமேற்கு இந்திய பகுதிகளில் ஊடுருவி 28. 11. 1001 இல் பெசாவரில் நடந்த போரில் இந்து அரசன் செயபாலனைத் தோற்கடித்தார்.[5]


1002 இல் சிசுட்டன் (Sistan) நாட்டின் மீது படையெடுத்து அந்நாட்டு அரசன் முதலாம் ‘காலப்’பை (Khalaf) வென்று சபாரித்து (Saffarid) அரச குலத்தை பூண்டோடு ஒழித்துக் கட்டினார். இசுலாமியக் கலீபாவின் நல்லாசியுடன் கசினி மகுமூது கசினியின் தெற்கு நோக்கி படை எடுத்து முல்தான் அரசகுல மன்னன் இசுமாயிலை வென்று முல்தான் நாட்டை, தன் நாட்டுடன் இணைத்துக் கொண்டார்.


மேலும் லாகூரை ஆண்ட இந்து அரசன் செயபாலனின் மகன் அனந்தபாலனை 1008 இல் வென்று தற்கால பஞ்சாப் பகுதி முழுவதும் தன் அரசின் கட்டுப்பாட்டில் கொண்டு வந்தார்.[5]





இசுலாம் சமயத்தின் பெயரால் ’ஜிகாத்’ எனும் புனிதப்போர்கள் மூலம் கசினி மகுமூது, கிழக்கு பாரசீகம், தற்கால ஆப்கானித்தான், பாகிசுத்தான், இந்தியாவின் வடமேற்கு பகுதிகள், பஞ்சாப் ஆகிய பகுதிகளை கி.பி., 997 முதல் 1030 இற்குள் கைப்பற்றி தனது ஆளுகையின் கீழ் ஆட்சி செய்தார். பெஷாவர், முல்தான், சிந்து ஆகிய பகுதிகளை ஆளும் மன்னர்களிடம் ஆண்டு தோறும் கப்பம் வசூலித்தார். தான் கைபற்றிய, தாக்கி அழித்த நாடுகளில் கொள்ளையடித்த பெருஞ்செல்வங்களைக் கொண்டு தனது பேரரசை செல்வச் செழிப்பாக்கினார்.


தெற்காசிய படையெடுப்புகள்

கசினி மகுமூது பஞ்சாபை மட்டும் தனது பேரரசில் இணைத்து கொண்டு, இராசபுத்திரகுல மன்னர்கள் ஆளும் நாடுகளை ஆண்டு தோறும் படையெடுத்து வெல்ல உறுதி பூண்டார்.


இந்து, பௌத்த, சமண சமய மன்னர்கள் ஆண்ட நாகர் கோட், தானேசுவரம், கன்னோசி, குவாலியர், கலிஞ்சர் கோட்டை மற்றும் உஜ்ஜைன் போன்ற நாடுகளை வென்று, அந்நாட்டு அரசர்கள் தனது பேரரசுக்கு அடங்கி, ஆண்டு தோறும் கப்பம் கட்டும்படி ஒப்பந்தம் செய்து கொண்டார். மேலும் தனது படைபலத்தை உயர்த்த, ஆயிக்கணக்கான படைவீரர்களையும், குதிரைகளையும் தனது படையில் சேர்த்துக் கொண்டதுடன் நில்லாது அந்நாட்டின் பெருஞ்செல்வங்களை கவர்ந்து சென்றார்.


ஒருவேளை துணைக் கண்ட மன்னர்கள் ஒன்று சேர்ந்து தனது அரசுக்கு எதிராக படை எடுக்கும் எண்ணத்தை அவர்களின் அடி மனதிலிருந்து அடியோடு ஒழித்துக்கட்டவும், தன் மீது பயத்தை ஏற்படுத்தி வைக்கவும், ஆண்டு தோறும் துணைக் கண்ட நாடுகளின் மீது படையெடுத்து, அவற்றை வென்று, மன்னர்களால் கோயில்களிற் பதுக்கி வைக்கப்பட்ட செல்வங்களுக்காக அவற்றை இடித்துக் கொள்ளை அடிக்க உறுதி எடுத்துக்கொண்டார் கசினி மகுமூது.


கசினி மகுமூது இசுலாமிற்கு எதிரான, உருவ வழிபாட்டு இடங்களான காங்கிரா, (நாகர்கோட்) (இமாசல பிரதேசம்), தானேசுவரம், மதுரா, சோமநாதபுரம் (குசராத்து), துவாரகை, மகசுவரம், சுவாலாமுகி போன்ற இடங்களிலிருந்த இந்துக் கோயில்களை இடித்து தரை மட்டம் ஆக்கி இசுலாமிற்கு பெருமை சேர்த்தார்.


இசுலாமிய மதத்திற்கு மதம் மாற மறுத்த சிந்து நாட்டு இந்துக்களை நாட்டை விட்டு வெளியேற்றி, சிந்து நாட்டை தன் அரசின் கட்டுப்பாட்டில் கொண்டு வந்தார்.[5]


போர்க்களங்கள்

கி.பி. 995. சாமனித்து பேரரசின் உள் நாட்டுப் பகைவர்களான ஃபைக் (faiq) மற்றும் அபு அலியின் படைகளை வென்று அவர்களை நாடு கடத்தினார். மேலும் உள்நாட்டு பகைவர்களை ’துசு’ (Tus, Iran) என்ற இடத்தில் நடந்த போரில் விரட்டி அடித்தார்.

கி.பி.,1001. காந்தார நாட்டை ஆண்ட இந்து மன்னர் செயபாலனை பெசாவர் (புருசபுரம்) என்ற இடத்தில் நடந்த போரில் செயபாலனை பிடித்து, தன்னைத்தானே தற்கொலை செய்து கொண்டு இறக்க கட்டளையிட்டார்.[சான்று தேவை]

கி.பி., 1004. தனக்கு கப்பம் கட்ட மறுத்த பாட்டிய (Bhatia) நாட்டு அரசை தன் நாட்டுடன் இணைத்துக் கொண்டார்.[6]

கி.பி., 1005-1006. இந்து அரசன் செயபாலனின் நண்பரும், முல்தான் (Multan) நாட்டு சியா பிரிவு முசுலிம் அரசன் பாதே தாவூதுவையும், இசுமாயிலி ஷியா முசுலிம் மக்கள் கசினி மகமதுவால் படுகொலை செய்யப்பட்டனர்.[7]

பின்னர் கோர் (Ghor) பகுதியின் அமீர் சூரியையும் அவரது மகனையும் சிறை பிடித்து கசினி நாட்டு சிறையில் தள்ளிவிட்டார். பின்னர் அவர்கள் சிறையிலே மாண்டனர்.[8]

குவாரகானித்து (Qarakhanids) பேரரசுடன் போர்புரிந்து, சாமனித்து பேரரசின் நிசாப்பூர் நிலப்பரப்பை மீண்டும் சாமனித்து பேரரசிடம் இணைத்தார். தனக்கு எதிராக திரும்பிய (தன்னால் நியமிக்கப்பட்ட) சேவக்பாலர்களை போரில் தோற்கடித்தார்.

1008. பெசாவரில் நடந்த போரில், கூட்டாக போரிட வந்த உச்சையினி, குவாலியர், கன்னோசி, தில்லி, அஜ்மீர் மற்றும் கலிங்க நாட்டு இந்து அரசர்களை கசினி முகமது வென்று ’காங்கிரா’ (இமாசலப் பிரதேசம்) பகுதியில் பெருஞ்செல்வங்களை கொள்ளை அடித்தார்.[9]

1010. கோரி நாட்டின் அரசர் முகமது பின் சூரி மீது படையெடுத்து வென்றார்.

1010. முல்தான் பகுதியில் கலவரத்திற்கு காரணமான அப்துல் பதே தாவூது என்பவரை போரில் வென்று, சிறைபிடித்து கசினியில் மரணம் வரை சிறையில் அடைத்தார்.

1012-1013. தானேசுவரத்தை போரில் வென்று அந்நாட்டின் செல்வத்தை சூறையாடினார்.[10]

1013. புல்நாத்து (Bulnat) போரில், இந்து மன்னர் திருலோசன பாலனை வென்றார்.

1014. குசராத்து மீது படையெடுத்து தாக்குதல் நடத்தினார்.[11]

1015. லாகூரை தாக்கி அழித்த பின், கடுமையான வானிலை காரணமாக காஷ்மீரை கைப்பற்ற முடியாது திரும்பி சென்றார்.[12]

1017. மீண்டும் காஷ்மீர் மீது படையெடுப்பு. அடுத்து ஆற்றாங்கரை அரசுகளான கன்னோசி, மீரட் மற்றும் மதுரா ஆகிய நாடுகளின் மீது படையெடுத்து வென்று, அளப்பரிய கப்பத் தொகையுடன், குதிரைகள் மற்றும் படைவீரர்களையும் கவர்ந்து தன் படைபலத்தை பெருக்கிக் கொண்டார்.

1018. வட மதுரையை சூறையாடி, மதுராவில் இருந்த கிருட்டிணன் கோயிலை இடித்துத் தள்ளினார்.[13]

1021. லாகூரை வென்று, மாலிக் அயாசுகான் என்பவரை அந்நாட்டு அரசனாக்கினார்.

1023. பஞ்சாப் நாட்டை அதிகாரப்பூர்வமாக தன் நாட்டுடன் இணைத்தார்.[14]

1023. இரண்டாம் முறையாக காசுமீரின் லொஹரா கோட்டையை முற்றுகை இட்டும் கோட்டையை பிடிக்க முடியாது திரும்பி விட்டார்.[சான்று தேவை]

1025 சனவரி மாதம், முப்பதாம் நாள், சோமநாதபுரம் (குசராத்து) கோயில் இடிப்பு: இராசபுதனத்தின் அஜ்மீர்ரை வென்று, தன்னை தடுத்து நிறுத்தி எதிர் நின்று போர் செய்வதற்கு எந்த எதிர்ப்பாளர்கள் இல்லாத நிலையில் சௌராஷ்டிர தீபகற்பத்தில் உள்ள பிரபாச பட்டினத்தின் கடற்கரையில் அமைந்துள்ள சோமநாதபுர சிவன் கோயிலில் உள்ள சிவ இலிங்கத்தை கண்டு வியந்தும், கோயிலின் செல்வக் களஞ்சியத்தையும் கண்டு களிப்புற்றும், உருவ வழிபாட்டுக்கு எதிராக இருக்கும் கசினி முகமது சோமநாதபுர கோயிலை இடித்து தரை மட்டம் ஆக்கியதுடன், சிவலிங்கத்தை சுக்கு நூறாக உடைத்தெறிந்தார்.[15]

அங்கிருந்த ஐம்பதாயிரம் அப்பாவி மக்கள் எவ்வித காரணமின்றி படுகொலை செய்யப்பட்டனர்.[8] இருபதாயிரம் பேரை அடிமைகளாக இழுத்துச் செல்லப்பட்டனர்.[16] பல்லாயிரக்கணக்கான இந்துக்களை கட்டாயமாக இசுலாமிய மதத்திற்கு மதம் மாற்றப்பட்டனர். மத மாற்றத்திற்கு உட்படாத மக்கள் அந்நாட்டை விட்டு வெளியேற்றப்பட்டனர்.[சான்று தேவை] கசினி முகமதுவின் படைகளுக்கு அஞ்சி தப்பி ஓடிய 90 வயது முதியவர் கோகா இராணா என்ற அரசக் குலத் தலைவரை கொலை செய்தனர்.


சோமநாதபுர கோயிலின் சிவலிங்கத்தின் உடைந்த கற்களைக் கொண்டு, 1026ல் கசினியில் உள்ள ’ஜூம்மா மசூதியின்’ (வெள்ளிக்கிழமை தொழுகை மசூதி) வாசற் படிகளிலும் மற்றும் தனது அரண்மனை வாசற்படிகளிலும் பதித்து, இந்துக்களின் மனதை புண்படுத்தினார்.[சான்று தேவை] கோயில் செல்வக் களஞ்சியங்களையும், தங்கம், வெள்ளி மற்றும் சந்தனக் கதவுகளையும், கசினி நகருக்கு அருகில் உள்ள கொரசான் நகருக்கு கொண்டு சென்றார்.


பின் துவாரகை நகரை சூறையாடி அங்குள்ள கிருட்டிணன் கோயிலில் உள்ள வெள்ளியால் ஆன இரண்டு அடி உயர கிருட்டிணன் சிலையை உடைத்தெறிந்தார்.[சான்று தேவை] மேலும் சௌராட்டிர நாட்டில் இருந்த ஆயிரக்கணக்கான இந்து மற்றும் சமணர் கோயில்களை முகமதின் படைகள் இடித்து தள்ளினர்.[சான்று தேவை]


சோமநாதபுரத்தில் மட்டும் கொள்ளையடித்த செல்வங்களின் மதிப்பு இரண்டு மில்லியன் தினார்கள் என்று, கசினி முகமதுவின் படைகளுடன் இந்தியாவிற்கு வந்த இசுலாமிய வரலாற்று அறிஞர் அல்-பருணி தனது நூலில் குறித்துள்ளார்.[சான்று தேவை]


சௌராஷ்டிர நாட்டை தொடந்து ஆள, தனது குலத்தில் பிறந்த ஒருவனை, அரசனாக நியமித்துச் சென்றார்.[சான்று தேவை] பிறகு தன் நாட்டிற்கு திரும்பிச் செல்கையில் இராசபுத்திரகுல அரசர்களுக்கு அஞ்சி, விரைவாக குறுக்கு வழியில் செல்ல, இராசபுதனத்தின் தார் பாலைவனம் வழியாக தனது நாட்டிற்கு திரும்பினார் கசினி முகமது.


1026. ஜாட் இன மக்கள் மீது தாக்குதல்கள் தொடுத்தார்.

1027. மத்திய கிழக்கு ஆசியாவில் உள்ள இராய், பாரசீகம், இசுபாகன் மற்றும் அமதான் ஆகிய பகுதிகளை ’பையித்து’ (Buyid Dynasty) குல பேரரசிடமிருந்து கைப்பற்றினார்.[சான்று தேவை]

1028. செல்சியுக் துருக்கியர்களிடம் மோர்பி, நிசாப்பூர் பகுதிகளை கசினி முகமது இழந்தார்.[சான்று தேவை]

மதசகிப்பற்ற தன்மைகள்

கஜினி முகமதுவின் படையெடுப்புகள் மத சகிப்புத் தன்மை அற்ற அடிப்படையிலேயே இருந்தது. இதனால் இசுலாமியர்களின் கொள்கைகளுக்கு புறம்பாக செயல்படும் மக்களுக்கு எதிராக ஜிகாத் எனும் இசுலாம் வகுத்த புனிதப்போர்களை தொடர்ந்து நடத்தினார். இசுலாமின் சன்னி பிரிவு முசுலிம்களைத் தவிர, இதர பிரிவு முசுலிம்களான ஷியா முஸ்லிம்கள், பையித் ஷியா முஸ்லிம்கள் மற்றும் இசுமாயிலி ஷியா முசுலிம்களையும் படுகொலை செய்தார்.[17]


இறை உருவ வழிபாடு பழக்கம் உள்ள இந்துக்களையும், பௌத்த, சமணர்களையும் கடுமையாக வெறுத்தார். எனவே அவர்களது இறை உருவ வழிபாட்டு இடங்களை தகர்ப்பதில் குறியாக இருந்ததுடன், கோயில்கள், கல்விக்கூடங்கள், பல்கலைகழகங்கள் மற்றும் மடாலயங்களில் உள்ள செல்வங்களை கொள்ளையடித்தல் மற்றும் தீக்கிரையாக்குதல் போன்ற செயல்களில் ஈடுபட்டார்.


மேலும் இந்துக்களை கட்டாயமாக இசுலாமுக்கு மதம் மாற கட்டாயப்படுத்தப்பட்டனர். இசுலாமிற்கு மதம் மாறாத மக்களை அவர்கள் வாழும் பகுதிகளிலிருந்து வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டனர். வெளியேற விரும்பாத மக்களிடமிருந்து வரி விதிக்கப்பட்டனர்.


சாதனைகள்

இராய் (Raay) மற்றும் இசபாகான் (Isfahan) பகுதியில் இருந்த மாபெரும் நூலகங்களை கஜினி நகரத்திற்கு மாற்றிக்கொண்டு வந்தார்.[18]


இதனால் தனது நாட்டின் கல்வி வளத்தை பெருக்கி கொண்டதுடன், தனக்கு கல்வி கற்றுக் கொடுக்க அரசியல், மொழி தொடர்பான அறிஞர்களை நியமித்துக் கொண்டார்.[18]


கி. பி. 1017ல் கசினி முகமதுடன் சேர்ந்து இந்தியா வந்த அறிஞர் அல்-பரூணியைக் கொண்டு, ’இந்திய மக்களும் அவர்தம் நம்பிக்கைகளும்’ என்ற நூலை எழுத ஊக்கமளித்தார்.


இந்தியாவில் கொள்ளை அடித்த செல்வக் களஞ்சியங்களைக் கொண்டு தனது பேரரசை வலுப்படுத்திக் கொண்டார்.


அப்பாசித் கலிபா, அல்-காதிர்-பில்லாவிடமிருந்து தனது பேரரசை விடுதலை அடைந்த நாடு என்ற தகுதியை கேட்டுப் பெற்றுக் கொண்டார்.


இசுலாமுக்கு எதிரான காபிர்கள் (இறை உருவ வழிபாட்டாளர்கள்) மீது புனிதப் போர் மேற்கொண்டதற்காக இசுலாமிய தலைமை மதத் தலைவரான கலிபாவிடமிருந்து ‘ ’யாமின் –உத் – தௌலா’ என்ற மாபெரும் விருது கசினி பெற்றார்.


அல்-பிருணியின் கூற்றுகள்

உருவ வழிபாட்டாளர்களான இந்துக்கள் மீதான ஜிகாத் எனும் புனிதப்போர்களின் (Jihad) போது, கசினி முகமது உடன் வந்த அரபு வரலாற்று அறிஞர் அல்-பரூணி தனது நூலில் கசினி முகமது பற்றிய செய்திகள்:[19]


கசினி முகமது மற்றும் அவரது மகன்களுக்கும அல்லாவின் அருள் இருந்தபடியால், தனது வழித்தோண்றல்களின் நலனுக்காகவும், தனது பேரரசின் நலனுக்காகவும், கசினி நகரத்தின் எல்லைப்புறத்தில் இருந்த இந்து, பௌத்த சமய அரசுகளான, தற்கால கந்தஹார், தற்கால பாக்கித்தான், வடமேற்கு இந்தியா, மதுரா, கன்னோசி, சௌராட்டிர தேசம் மற்றும் இந்தியாவின் பல பகுதிகளையும் கசினி முகமதுவும் அவரது மகன்களும் நடத்திய முப்பது வருட தொடர் தாக்குதல்கள் காரணமாக, இந்திய நாட்டின் செல்வங்களை கொள்ளை அடித்தும், இந்து, சமண, பௌத்த உருவ வழிபாட்டு இடங்களை இடித்தும், இந்துக்கள், பௌத்தர்கள், சமணர்ககளை கட்டாய மதம் மாற்றம் செய்யப்பட்டனர்.[20]


மத மாற்றத்தை விரும்பாத இந்துக்கள், பௌத்தர்கள் மற்றும் சமணர்கள் தற்கால ஆப்கானித்தான் மற்றும் பாகிசுத்தான் பகுதிகளில் இருந்து வெளியேறி தற்கால மகாராட்டிரம், உத்திரப் பிரதேசம், பீகார், வங்காளம் மற்றும் தென்னிந்தியா போன்ற பகுதிகளில் குடியேறினர்.[21]


கஜினி முகமதின் இந்திய படையெடுப்புகளின் தொடர் வெற்றியால், துருக்கியர்களுக்கும், அரேபியர்களுக்கும் இந்தியாவை எளிதாக வெற்றி கொள்ள முடியும் எண்ணம் மனதில் விதைக்கப்பட்டது.


இந்தியாவில் இருந்த அறிவியல், மருத்துவம், சமயம், வானவியல், சோதிடம் தொடர்பான நூல்களை பாரசீக மொழியில் மொழியாக்கம் செய்து தங்கள் நாட்டிற்கு கொண்டு சென்றனர்.


கஜினியின் தொடர் படையெடுப்புகளால் ஆப்கானித்தான் இசுலாமிய மயமானது.


பத்தாம் நூற்றாண்டில் பாரசீக மொழி, பண்பாடு, நாகரிகம் ஆப்கானித்தான் முழுவதும் பரவியது.


காந்தார நாட்டு இந்து மன்னன் சாகியை (Shahi) வெற்றி கொண்டு, தட்சசீலத்தில் (பண்டைய கால நாளந்தா பல்கலைக்கழத்திற்கு இணயானது) இருந்த மாபெரும் பல்கலைக் கழகத்தை தாக்கி அழித்தார் கசினி முகமது. காந்தாரா நாட்டு இந்துக்களை நாட்டை விட்டு வெளியேற்றினார்.


கி. பி., 998 முதல் 1030 வரை ஆட்சி புரிந்த கசினி முகமது இந்தியா மீது 17 முறை படையெடுத்தார்.


மக்கள் மனதில்

தற்கால பாக்கிஸ்தானிலும், ஆப்கானிசுதானிலும், இசுலாமிய மக்கள் இன்று வரை, கசினி முகமதுவை மாபெரும் வெற்றி வீரனாக கொண்டாடுகிறார்கள்.


பாகிசுதான் நாடு, தான் தயாரித்த ஏவுகணைக்கு ’கசினி’ எனும் பெயர் சூட்டி, கசினிமுகமதுவின் நினைவை பாராட்டினர். மேலும் பாகிசுதான் நாட்டு இராணுவம், தனது ஒரு படைப் பிரிவுக்கு ‘கசினி’ என்ற பெயர் சூட்டி கசினி முகமதை பெருமைப்படுத்தினர்.


ஆனால் இந்தியாவில் உள்ள இந்துக்கள் மனதில் கசினி முகமது ஒரு மனிதாபமற்ற, கொடுமைக்கார, கொள்ளைக்கார படையெடுப்பாளர் என்றும், ஈவு இரக்கமற்றவர் என்றும், சோமநாதபுரம் (குசராத்து), சிவன் கோயில், மதுராவில் உள்ள , ஸ்ரீகிருஷ்ணர் பிறந்த இடத்தையும், துவாரகை கிருட்டிணர் கோயிலையும், தட்சசீலத்தில் இருந்த மிகப்பெரிய பல்கலைக்கழகத்தை அழித்ததையும், காந்தாரம், பெசாவர், முல்தான், காங்கிரா மற்றும் லாகூரில் இருந்த பௌத்தர், சமணர் மற்றும் இந்துக் கோயில்களும், மடாலயங்களும், உயர் கல்விகூடங்களையும் கஜினி முகமது இடித்து தரை மட்டம் ஆக்கி, கோயில் செல்வங்களை கொள்ளை அடித்துச் சென்ற நிகழ்வுகள் குறித்து வட இந்திய வரலாற்றில் நீங்காத துயர நினைவாக இந்திய மக்கள் கருதுகிறார்கள்.


பெருமைகள்

இந்தியாவில் முதன்முதலாக இசுலாமிய மதத்தை புகுத்தியவர் என்ற பெருமையை தட்டிச் சென்றவர் கசினி.[சான்று தேவை]

இசுலாமிய தலைமை மத குருவான அப்பாசித்து கலிபா பாராட்டியதுடன், வரலாற்றில் முதன் முதலாக கசினி முகமதிற்கு ’சுல்தான்’ என்ற சிறப்பு விருதினை வழங்கி பெருமை படுத்தப்பட்டார்.

தன் பேரரசின் மேற்கில் குர்திசுதானம் முதல் வடகிழக்கில் சமர்கந்து மற்றும் காசுப்பியன் கடல் (Caspiean Sea) முதல் மேற்கில் யமுனை ஆறு வரையிலும் தனது பேரரசை விரிவு படுத்தினார்.

இந்தியாவில் கொள்ளையடித்த பெருஞ்செல்வங்களைக்கொண்டு தனது பேரரசின் தலைநகரான கசினியை அனைத்து துறைகளிலும் வளப்படுத்தினார்.


பாரசீக மொழி இலக்கியத்தை வளர்த்தார். உயர் கல்வி நிறுவனங்களை நிறுவினார். மத்திய ஆசியாவில் இருந்த அறிஞர்களை ஊக்குவித்து பரிசில்கள் வழங்கினார்.


இந்திய சமூக மக்கள் மற்றும் அவர்களது நம்பிக்கைகள் குறித்தும், தனது இந்திய படையெடுப்புகள் குறித்தும் அல்பருணி என்ற வரலாற்று அறிஞரைக் கொண்டு ‘தாரிக்-அல்-இந்த்’ என்ற நூலை எழுதச் செய்தார்.


கசினி முகமதுவின் புகழ் பாடி, ‘ ஷா நாமா’ எனும் நூலை இயற்றிய கவிஞர் ‘பிர்தௌசி’ ( Ferdowsi) என்பவருக்கு 200 தினார்கள் வெகுமதி அளித்துப் பாராட்டினார் கசினி முகமது.


உயர்நிலை கல்விக்கூடங்களில் கணக்கு, மருத்துவம், அறிவியல், இசுலாமிய மதம், மற்றும் மொழிகள் பற்றிய பாடங்கள் கற்க ஏற்பாடு செய்தார்.


தனது பேரரசு ஒரு இசுலாமிய பேரரசு என்றும், தனது பேரரசின் ஆட்சி மொழியாக பாரசீக மொழியை அறிவித்தார்.


” யாமின் உத் தௌலா அபுல் காசிம் முகமது பின் செபுக்தெசின் “ என்ற மாபெரும் பட்டப் பெயருடன் தனது பேரரசை திறம்பட 32 ஆண்டுகள் ஆட்சி செய்தார்.


தொடர் வெற்றிக்கான காரணங்கள்

கஜினி முகமதின் படைகளில், வளுமிக்க உயர்ரக அரபுக்குதிரைப் படைகள் அதிகமாக இருந்தன. ஆனால் துணைக்கண்ட நாடுகளின் மன்னர்களிடம் வேகமாக பாய்ந்து சென்று தாக்குவதற்கு தேவையான வளு மிக்க குதிரைப்படைகள் குறைவாக இருந்ததும் கசினியின் தொடர் வெற்றிகளுக்கு ஒரு முக்கிய காரணமாகும்.

இந்தியத் துணைக்கண்டத்தில் சத்திரிய வகுப்பினர் மட்டுமே படைவீரர்களாக இருந்தனர். சமூகத்தின் இதர பெரும்பாண்மையானவர்கள், உடல் வளு மற்றும் மன உறுதி இருந்தும்கூட படையணிகளில் சேர்க்கப்படவில்லை. இதனால் இந்துக்களின் படைபலம் பெருக வாய்ப்பு இல்லாமல் போயிற்று.

இந்தியத் துணைக்கண்ட நாடுகளின் மன்னர்களிடம் ஒற்றுமை இன்மையாலும், தங்கள் நாட்டை மாற்றான் நாட்டு மன்னனிடமிருந்து காத்துக் கொள்வதிலேயே கவனமாக இருந்ததாலும், வேற்று நாட்டு மன்னனை, தங்கள் சொந்த நாட்டில் இந்தியத் துணைக்கண்ட நாடுகளின் மன்னர்கள் ஒன்று கூடி சுற்றி வளைத்து தாக்கி அழிக்க முடியவில்லை.

இந்தியத் துணைக்கண்ட மக்கள் பின் பற்றி வந்த இந்து, பௌத்த மற்றும் சமண சமயங்கள், சகிப்புத் தன்மை, அகிம்சை, தியாகம் போன்ற நன்னெறிகளை[சான்று தேவை] அதிகமாக வலியுறுத்திய காரணத்தினால் இந்தியத் துணைக்கண்ட நாடுகளின் மன்னர்களும் படைவீரர்களும், கசினி மகமதுவிற்கு எதிரான போர்களில் வெறித்தனமாக போரிடவில்லை என்று வரலாற்று அறிஞர்கள் கூறுகிறார்கள்.

கசினி பேரரசின் வீழ்ச்சி

கி. பி. 1159ன் இறுதியில் கசினி பேரரசு நலிவடைந்த நிலையில் இருந்த போது, எல்லைப்புற பகை மன்னர்கள், பேரரசின் பல பகுதிகளை கைப்பற்றிக்கொண்டனர். இறுதியாக தற்கால ஆப்கானிசுதானில் உள்ள ’கோரி’ என்ற நகரத்து முகமது என்பவர் கசினி பேரரசை கைப்பற்றினார். அத்துடன் கசினி பேரரசு 1159ல் வீழ்ந்தது.

GAJINI MAHMUD THE VIOLENT DICTATOR

 


GAJINI MAHMUD THE  VIOLENT DICTATOR

ராட்ஸசன் கஜினி

 

கொலைகாரன்,கொள்ளைக்காரன் 

கஜினி முகமதுவின் கொடூரச் செயல்கள்

ச.நாகராஜன்

 


தனது நீண்ட நெடும் வரலாற்றில் ஹிந்துஸ்தானம் பார்த்த கொடூரன்களில் கஜினி முகமது ஒரு பாப ராட்ஸசன்.

 

அவன் செய்த கொடுமைகளை எழுதக் கூடாது என்று செகுலரிஸம் பெயரால் சொல்வது நியாயமில்லை.

வரலாறு மறைக்கப்படக் கூடாது. ஒரு வேளை மறக்கப்பட்டாலும் கூட!

அந்தப் பாவி இஸ்லாமின் பெயரால் ஹிந்துஸ்தானத்தில் செயத அக்கிரமங்களை எழுதவே கை நடுங்கும்.

 

கி.பி 1002ஆம் ஆண்டு அவன் ஹிந்துஸ்தானத்தின் மீது முதல் முறையாகப் படையெடுத்த பின் திரும்பிக் கொண்டிருந்தான்.

அந்த முதலாவது படையெடுப்பில் அவனை எதிர்த்து வீரத்துடன் போரிட்டவன் லாகூரை ஆண்ட ராஜா ஜெயபால்.

அவனை வென்ற கஜினி முகமது 16 நெக்லெஸ்கள் உட்பட ஏராள செல்வத்தைக் கொள்ளையடித்தான். ஒர் நெக்லஸின் மதிப்பு மட்டும் 80000 ஸ்டர்லிங் பவுண்ட் மதிப்பு என்கிறார்  The Muslim Epoh என்ற நூலை எழுதிய ஜே.டி.ரீஸ்.( J.D.Rees I.C.S -First published in 1894)

 

 

ஹிந்து மன்னனான ஜெயபால் கஜினி முகமது மற்றும் அவனது புதல்வனால் தோற்கடிக்கப்பட்டவுடன் இந்தத் தோல்விக்கான முழுப் பொறுப்பையும் தானே ஏற்றான்.

ஆனந்த் பால் என்ற தன் மகனிடம் அரசுப் பொறுப்பை ஒப்படைத்தான்.

 

பின்னர், ஒரு பெரிய சிதையைத் தயார் செய்து அதில் புகுந்து தனக்குத் தானே சிதைய்ல் தீ மூட்டிக் கொண்டு உயிர்த் தியாகம் செய்தான்.

 

அற்புதமான இந்த உயிர்த் தியாகம் பற்றி இதுவரை ஹிந்து மக்கள் அறிந்திருக்கின்றனரா என்பது கேள்விக் குறி.

ஹிந்து தியாகங்களையும் இந்த தேசத்தைத் தற்காத்துப் போரிட்ட வீரச் செம்மல்களையும் பற்றி  பாடப் புத்தகங்களிலோ அல்லது இதர விதமாகவோ எழுத செகுலர் அரசு இடம் தரவில்லை.

 

 

ஜெயபாலின் சிதை பற்றிச்  சொல்பவர் ஃபெரிஷ்டா (Ferishta) என்ற யாத்ரீகர். வரலாற்று ஆசிரியர்.

காளிகட்டைச் சேர்ந்த ஜமீந்தார்கள் கூட இதே போல தங்கள் தொண்டையைத் தாங்களே அறுத்துக் கொண்டு தங்கள் வாரிசுகளிடம் பொறுப்பை ஒப்படைத்தார்களாம். இதை பயணம் செய்த பயணிகள் எழுதி வைத்துள்ளார்கள்.

Sanskrit in Gazni Mohammed Coins!

 

இரண்டு வருடம் கழித்து பாடியாவைச் சேர்ந்த ராஜாவைக் குறி வைத்தான் கஜினி. அவனை மதமாற்றுவதே அவன் முக்கியக் குறிக்கோள்.

 

ஆனால் தீரமிக்க ராஜா மூன்று நாட்கள் இடைவிடாமல் போரிட்டான்.

 

நான்காம் நாள் இரண்டு படை வீரர்களும் செய் அல்லது செத்து மடி என்ற விரதத்துடன் ஒருவரை ஒருவர் எதிர் கொண்டனர்.

திடீரென்று மெக்காவை நோக்கி விழுந்து வணங்கிய கஜினி முகமது” முன்னேறுங்கள்; கடவுள் நம் பக்கம் இருக்கிறார்” என்று கூவினான்.

 

தீவிரமான தாக்குதலை எதிர் கொண்ட ஹிந்து ராஜா தன் கோட்டையை விட்டு வெளியேறி காட்டை அடைந்து தன் வாளால் தன்னை முடித்துக் கொண்டான்.

முதல் மற்றும் இரண்டாம் படையெடுப்பில் அடித்த கொள்ளையைப் பார்த்த கஜினிக்கு ஆச்சரியமாக இருந்தது.

இவ்வளவு செல்வமா?

 

தனது மூன்றாம் படையெடுப்புக்கு ஒரு வருடம் கழித்து ஆசையுடன் ஆயத்தமானான்.

 

ஆனந்த் பாலுடன் போரிட்ட அபுல் ஃபட்டா லோடி ஆனந்த் பால் தோற்கவே, கஜினியிடம் சமாதானம் பேசினான். சமாதானம் உடனே ஏற்கப்பட்டது. ஏனெனில் காஸ்கர் அரசன் கோரஸ்ஸானின் தலை நகரான ஹெராத் என்ற நகரின் மீது படையெடுத்தான்.

 

மிகுந்த தந்திரசாலியான கஜினி இந்த அவசர நிலையில் தனது வெற்றிகளை எல்லாம் ஒரு இந்திய பிரதிநிதியிடம் ஒப்படைத்தான்.

 

அவனது முதல் வேலை ஹிந்துக்கள் அனைவரையும் மதமாற்றம் செய்ய வேண்டும், முகமதியர்களைப் பாதுகாக்க வேண்டும் என்பது தான்.

 

தன் தேச மக்களுக்கு எதிராகத் தானே துரோகம் இழைக்க வேண்டிய நிலை அவனுக்கு ஏற்பட்டது.

1006இல் கஜினி நோக்கிச் சென்ற முகமது, பல்க் என்ற இடம் அருகே நடந்த பெரும் போரில் எலிக் கான் என்பவனை எதிர்த்தான்.

 

போரைப் பற்றி எழுதிய வரலாற்று ஆசிரியர்கள் குதிரைகளின் ஓலமும் வீரர்களின் கைகலப்பு சத்தமும் வானை எட்டியது என்று எழுதியுள்ளனர்.

 

1008இல் லாகூர் மன்னனான ஆனந்த் பாலை ஒரேயடியாக அழிப்பது என்று கஜினி முகமது கங்கணம் பூண்டான்.

ஆனந்த் பாலோ முகமதியர்களை நாட்டை விட்டு விரட்ட வேண்டும் என்ற ஒரே நோக்கத்தில் அனைத்து ஹிந்து மன்னர்களின் உதவியையும் நாடினான். அனைவரும் உடன் பட்டனர்.

 

Ghazni in modern Afghanistan

வரலாறு காணாத அளவில் மிக பிரம்மாண்டமான ஹிந்து சேனை ஒன்று உருவானது.

இந்த சேனையின் பிரம்மாண்டம் எவ்வளவு பெரியது என்றால் பெஷாவர் அருகே அது கஜினி முகமதை நாற்பது நாட்கள் எதிர் கொண்டு போரிட்டது.

 

ஆனால் தந்திரக்காரனான முகமது மன்னனின் யானையைத் துரத்திக் கொண்டே செல்லவே ஹிந்து வீரர்கள் தலைவன் இல்லாத நிலையில் கலங்கி அசந்து நின்றனர்.இந்தத் தருணத்தைப் பயன்படுத்திக் கொண்ட முகமதுவின் சேனை ஹிந்து வீரர்களை கொன்று குவித்தது.

 

இருபதினாயிரம் பேர் போர்க்களத்திலிருந்து ஓடினர்.

அடுத்து, அமிர்த்ஸருக்கு வடகிழக்கில் இருந்த இமயமலை அடிவார நகரான நாகர்கோட்டின் மீது கஜினி முகமது பார்வையைச் செலுத்தினான்.

 

அங்கிருந்து தங்கம், விலை மதிப்புள்ள ரத்தினக்கற்கள், வெள்ளி உள்ளிட்ட ஏராளமான செல்வத்தைக் கொள்ளையடித்தான்.

அந்தக் கால மதிப்பின் படி இது 313,333 ஸ்டர்லிங் பவுண்ட் மதிப்புடையதாகும்.

 

கஜினிக்குத் திரும்பிய முகமது தனது நகருக்கு வெளியே ஒரு பெரிய மைதானத்தைத் தேர்ந்தெடுத்தான்.

அங்கு தான் கொள்ளையடித்த அனைத்தையும் கண்காட்சியாக வைத்தான்.

 

தன் சேனையில் இருந்த படைப்பிரிவு தலைவர்களுக்கு பரிசுகளையும் வீர விருதுகளையும் அளித்தான்.

மக்களுக்கோ ஒரே விருந்து!

 

1011இல் டெல்லிக்கு மேற்குப் பக்கம் 30 மைல் தொலைவில் இருந்த தாணேஸ்வரத்தை நோக்கித் தனது ஆறாம் படையெடுப்பை எடுத்தான்.

புனிதமான யமுனை நதியோ அருகில் இருந்தது. மன்னன் ஆனந்த் பால் தனது சகோதரனை அனுப்பினான்.

 

தாணேஸ்வரத்தை விட்டு விடுவதாயிருந்தால் அந்தப் படையெடுப்பில் கொள்ளை அடிக்கும் கொள்ளைக்காரனான கஜினி முகமது வழக்கமாக எதிர் பார்க்கும் கொள்ளையைத் தந்து விடுவதாக சொல்லி அனுப்பினான்.

 

ஆனால் கோவில் சிலைகளை உடைப்பதையே நோக்கமாகக் கொண்ட கஜினி முகமது அந்த கோரிக்கையை நிராகரித்தான்.

கோவில்கள் இடிக்கப்பட்டன. சிலைகள் உடைக்கப்பட்டன.

இரண்டு லட்சம் பேரை அடிமைகளாகப் பிடித்துக் கொண்டு ஊர் திரும்பினான்.

 

இதனால் ஒவ்வொரு முகமதிய வீரனுக்கும் ஏராளமான அடிமைகள் கிடைத்தனர்.

 

 

தனது ஏழாம் படையெடுப்பில் அந்தப் பாவி எதிர் கொண்டது ஆனந்த் பாலை அடுத்து அரியணை ஏறிய இரண்டாம் ஜெய்பாலை! காஷ்மீரில் இருந்த அனைவரையும் முஸ்லீம்களாக மாறக் கட்டாயப் படுத்தினான்.

 

மாற மறுத்த ஹிந்துக்களைக் கொன்று குவித்தான்.

அவனது எட்டாம் படையெடுப்பும் காஷ்மீரின் மீது தான்.

தன்னை எதிர்த்த படைத்தலைவர்களைத் தண்டிப்பதே இந்தப் படையெடுப்பின் நோக்கமாக அவன் கொண்டிருந்தான்.

கங்கைக் கரையில் அமைந்திருந்த கனௌஜ் நகரின் மீது அவன் பார்வை விழுந்தது.

 

அந்த அழகிய நகரம் செல்வச் செழிப்பிற்கு பெயர் பெற்றது. உலக அளவில் அது ஒரு உன்னதமான நகரம்.

ஒரே ஒரு உதாரணம் சொல்ல வேண்டுமென்றால் அங்கிருந்த வெற்றிலைபாக்கு கடைகள் மட்டும் 30000 என்ற எண்ணிக்கையைத் தொட்டதாம்.

 

அந்த நாட்களில் உலகின் எந்த நாட்டிலும் இந்த எண்ணிக்கையில் வெற்றிலை பாக்கு கடைகள் இல்லை என்றால் இதர கடைகளைப் பற்றியும் கனௌஜின் செல்வச் செழிப்பையும் யாரும் எளிதாக ஊகித்துக் கொள்ளலாம்.

கஜினியின் படையில் ஒரு லட்சம் குதிரைகள் இருந்தன. 20000 போர் வீரர்கள் இருந்தனர்.

 

ஆனால் ராஜாவோ எதிர்ப்பே தெரிவிக்காமல் தோல்வியை ஒப்புக் கொண்டான்.

மதுராவில் அடித்த கொள்ளை சொல்லத்தரமன்று. அனைத்துக் கோவில்களும் இடிக்கப்பட்டன. சிலைகள் உடைக்கப்பட்டன.

தப்பியது மதுரா கோவில் மட்டுமே. ஏன்? அது அவ்வளவு வலுவாக உறுதியாகக் கட்டப்பட்டிருந்தது.

 

 

அதை கஜினி முகமதாலும் கூட இடிக்க முடியவில்லை.

மஹாபன் ராஜா கஜினி தன் மக்களை கொன்று குவிக்கும் கோரத்தைப் பார்த்து கண்ணீர் விட்டான்.

 

தன் மனைவி மக்களுடன் நதியினுள் சென்றான்.

இதே போல ரஜபுதன ராஜாவும் தங்கள் மனைவி மகன்களுடன் தீயை எரியூட்டி அதில் விழுந்து உயிர் துறந்தனர்.

தோல்வியை ஏற்க அவர்கள் மனம் ஒப்பவில்லை.

இப்போது கஜினி அடித்த கொள்ளையின் மதிப்பு அந்தக் கால பண மதிப்பீட்டில் 416000 ஸ்டர்லிங் பவுண்டாகும்!!

 

5300 அடிமைகள், 350 யானைகள் , இது தவிர சிலைகளின் கண்களில் இருந்த விலையே மதிக்க முடியாத மாணிக்கக் கற்கள், முத்துக்கள் பதித்த நெக்லேஸ்கள், நீலக்கற்கள் ஆகியவையும் கொள்ளையில் அடக்கம்.

 

இந்தக் கொள்ளையால் மகிழ்ச்சி அடைந்த கஜினி  ஊருக்குத் திரும்பியவுடன் அங்கு சலவைக் கற்களால் ஒரு பெரிய மசூதியைக் கட்டினான். அதில் இருந்த கம்பளங்களில் விதவிதமான நவரத்தினக் கற்களை இழைத்தான்.

 

அவன் செய்த கொள்ளையையும் கொலையையும் நினைத்தாலே நெஞ்சம் நடுங்கும்.

 

அந்த பாப ராட்ஸசன் செய்த இன்னும் பல கொடுமைகளை இன்னொரு கட்டுரையில் காணலாம்




இந்தியாவை ஆண்ட வெளிநாட்டினர் செய்த அக்கிரமங்களை மஹா கவி பாரதி ஒரே வரியில் சொல்லிவிட்டார்: “ ஆயிரம் ஆண்டு அன்பிலா அந்நியர் ஆட்சி” என்று. அப்படிப்பட்ட அன்பில்லாத கொடுங்கோலர்களில் மிகக் கொடியவர்கள் கஜினி முகமதுவும் அவுரங்கசீப்பும் ஆவர். இந்தியாவின் செல்வத்தைக் கொள்ளையடித்ததோடு நிற்காமல், 12 ஜோதிர்லிங்க தலங்களில் ஒன்றான சோமநாதபுரத்தில் இருந்த 15 அடி உயர சிவலிங்கத்தை சுக்கு நூறாக உடைத்த மதவெறியன் கஜினி முகமது. அவன்கூட ஆந்தைகளிடம் பாடம் கற்று அடங்கி ஒடுங்கிய ஒரு சம்பவம் இதோ:-

 

கஜினி நகருக்கு மேற்கே தொலைதூரத்திலுள்ள கிராமங்களை முகமதுவின் படை வீரர்கள் அழித்து நாசமாக்கி வந்தனர். ஆடுமாடுகளைக் கொள்ளையடிப்பது, பயிர்பச்சைகளை அழிப்பது அகியவற்றில் ஈடுபட்டதால் கிராம மக்கள் ஓடி ஒளிந்தனர். கிராமங்கள் எல்லாம் பாழடைந்த திடல்களாகிவிட்டன.

 

கஜினி முகமதுவிடம் மந்திரியாக வேலை பார்த்த ஒருவருக்கு தெய்வ பக்தி இருந்தது. “இடிப்பாரை இல்லாத ஏமரா மன்னன் கெடுப்பாரிலானும் கெடும்” என்பது வள்ளுவன் குறள். ஆகையால் தன் கடமை கஜினி முகமதுவிடம் சொல்லி அட்டூழியங்களை நிறுத்துவதே என்று உறுதி பூண்டார். அவருக்கு பீர் என்ற முஸ்லீம் சந்யாசி பறவைகளின் பாஷையைக் கற்பித்திருந்தார். இது விஷயம், கஜினி முகமதுவுக்கும் தெரியும். ஒரு நாள் இருவரும் வேட்டையாடப் போனார்கள்.

 

இருவரும் மாலையில் திரும்பிவருகையில் ஒரு மரத்தின் மீது இரண்டு ஆந்தைகள் உட்கார்ந்து பேசிக்கொண்டிருந்தன. கஜினி முகமது, குதிரைகளை நிறுத்தச் சொல்லி, மந்திரியிடம் சொன்னார்:

உனக்குத்தான் பறவைகளின் மொழி தெரியுமே! அவைகள் என்ன பேசிக்கொள்கின்றன? என்று கேட்டார்.

அமைச்சரும் அதை உற்றுக் கேட்பதுபோல கொஞ்ச நேரம் பாவனை செய்தார். பின்னர் வந்து, “அரசே அவைகள் பேசுவதைச் சொல்வதற்குத் தயக்கமாக இருக்கிறது. அது உங்களுக்கு உகந்ததல்ல” என்றார்.

கஜினி முகமது அதைச் சொல்லும்படி வலியுறுத்தவே, “நான் சொல்கிறேன். ஆனால் கோபத்தில் என்னைக் கொன்று விடக்கூடாது” என்று சொன்னார். கஜினி முகமதுவும் ஒரு தீங்கும் வராது என்று உறுதி கூறியவுடன் அமைச்சர் (மந்திரி) சொன்னார்:

அந்த ஆந்தைகளில் ஒன்று ஆண், மற்றொன்று பெண். அவைகள் இரண்டும் கல்யாணப் பேச்சில் ஈடுபட்டுள்ளன. ஒரு ஆந்தையின் பையனை மற்றொரு ஆந்தையின் பெண்ணுக்கு மணம் முடிப்பதைப் பற்றி பேசுகையில் ஆணின் தந்தை (ஆந்தை) சொன்னது: “இதோ பார் உன் பெண்ணை என் பையனுக்குத் திருமணம் செய்யத் தயார்தான். ஆனால் பெண்ணுடன் எனக்கு 50 பாழான கிராமங்களைச் சீதனமாக அனுப்ப வேண்டும்” என்றது. அதற்குப் பெண்ணின் தாயார் “நமது சுல்தான் ஆட்சியில் இருக்கும் வரை பாழாய்ப்போகும் கிராமங்களுக்கு என்ன குறை? 50 என்ன 500 கிராமங்களை வேண்டுமானாலும் தருவேன்” என்றது

கஜினி முகமது இதைக் கேட்டுவிட்டு வெட்கித் தலை குனிந்தான்

GAJINI MOHAMED INVADER

 


GAJINI MOHAMED INVADER

#அறிவோம்_கஜினி_முகமது_பகுதி_3 




இந்தியாவில் நுழைந்த முதல் முஸ்லீம் மன்னனைப் பற்றி பார்த்துக் கொண்டிருக்கிறோம்.ஏற்கனவே பல மன்னர்கள் இருந்தாலும் அவர்கள் அனைவரும் தங்களுக்குள் சிறு சிறு பகுதிகளை ஆக்கிரமித்துக் கொண்டு பிரச்சனையில்லாமல் இருக்கும் பொழுது வம்படியாக கொள்ளையடிக்கும் நோக்கில் புறப்பட்ட இளைஞன் இவன் தான்.

இவன் காபூலில் இருக்கும் போதே ஒரு விசித்திரமான பழக்கத்தைக் கொண்டிருந்தான்.போரில் வென்று கொள்ளையடித்து விட்டு திரும்பும்போது மறக்காமல் அந்த மன்னர்களின் விரல்களையும் வெட்டி எடுத்துக் கொண்டு வருவது அவனது ஸ்டைல்.நாம் தபால் தலைகளை சேகரிப்போமே அது போல.அந்த லிஸ்டில் ஜெயபாலனின் விரல்களும் சேர்ந்து கொண்டது தான் வேதனை.அவனது கலெக்சனில் முதல் இந்திய விரல்கள்.

கஜினிக்கு இந்தியா மிகவும் பிடித்துப் போய் விட்டது.வந்த நோக்கம் இவ்வளவு சீக்கிரம் நிறைவேறுமென்று அவன் நினைத்துக் கூட பார்க்கவில்லை.இந்த வெற்றியின் ருசியால் தான் கி.பி.ஆயிரத்தில் சரியாகத் தொடங்கிய முதல் பயணம் ஆண்டுக்கு ஒரு முறை என்று வழக்கமாகிப் போனது.

பிரச்சனையே இல்லை.எல்லையில் குட்டி குட்டி ராஜாக்கள்.சேர்த்த சொத்துக்களை சரியாக அனைவருக்கும் பிரித்துக் கொடுத்ததால் நீ நான் என்று அவனது படையில் சேர ஆட்கள் க்யூவில் நின்றார்கள்.இந்தப் படையெடுப்பை ஏதோ திருவிழாக் கணக்காக கொண்டாடி விட்டுத் தான் புறப்படவே ஆரம்பிப்பான்.

அடுத்தடுத்த ஆண்டுகளில் சௌராஷ்ட்ரம் கன்னோசி மதுரா தானேஷ்வர்  என இவனது படையெடுப்பு நீண்டு கொண்டே போனது.ஒவ்வொரு முறையும் கஜினி படையின் வாள் வீச்சில் இந்தப் பகுதிகள் ரத்தம் பூசிக் கொண்டன.




இந்த லிஸ்டில் ஒரு முஸ்லீம் மன்னனும் சேர்ந்து கொண்டான்.அப்போது இந்தியாவில் இருந்தது முல்தான் பகுதி.இன்று அது பாகிஸ்தானில் உள்ளது.இந்தப் பகுதியை ஆண்ட மன்னன் சுல்தான் தாவூது.நாம் இன்று முகத்திற்குப் பூசுவோமே முல்தானி மெட்டி.அது இங்கிருந்து தான் வருகிறது.அங்கு மட்டுமே கிடைக்கும் ஒரு வகை மண் அது.அந்த நாட்டின் மன்னனையும் விட்டுவைக்கவில்லை கஜினி படை. 

கொள்ளை என்று இறங்கி விட்டால் அவனுக்கு மதமாவது மண்ணாங்கட்டியாவது.முல்தானை உண்டு இல்லை என்று ஆக்கிவிடுவார்கள் விட்டான்.போரில் வென்றது மட்டுமல்லாமல் அந்தப் பகுதியையே தரைமட்டமாக்கியது விட்டான்.ஆயிரக்கணக்கான தலைகள் தரையில் உருண்டது.சுல்தான் தாவூதும் பரலோகம் அனுப்பப்பட்டான்.

நாம் ஏதோ கஜினியை ஒரு முஸ்லீம் மன்னனாகவும் இந்துக்களின் விரோதியாகவும் நினைத்துக் கொண்டிருக்கிறோம்.ஆனால் அவனது பார்வையே வேறு.நாம் முன்பே கண்ட தைமூரைப் போலவே இவனது செயல்பாடுகளும் இருக்கும்.அவனது நாட்டு மக்கள் மட்டுமே அவனுக்கு முக்கியம்.மற்றவர்கள் அனைவருமே எதிரிகளே.அவர்கள் முஸ்லீம்களா அல்லது இந்துக்களா என்று பார்ப்பதே இல்லை.

ஆரம்பத்தில் அவனது கவனம் அரண்மனை நோக்கியே இருந்தது.போகப்போக ஒரு விஷயத்தைப் புரிந்து கொண்டான்.செல்வங்கள் அனைத்தும் கோயில்களில் உள்ளது என்ற உண்மை தான் அது.கொள்ளையடித்த ஊர்கள் அனைத்தும் சிறிய சிறிய ஊர்களானதால் பெரிய கோயில்கள் எங்கு உள்ளது என்று ஆராய ஆரம்பித்தான்.அப்படி சிக்கியது தான் நாம் இன்றும் பேசிக் கொண்டிருக்கும் சோமநாதபுரப் படையெடுப்பு.இந்திய வரலாற்றில் ஒரு கரும்புள்ளியாகிப் போன படையெடுப்பை நாளை காணலாம்.

                                     வளரும்.


SERVER SUNDARAM 1964 TAMIL MOVIE REVIEW

 



SERVER SUNDARAM 1964 TAMIL MOVIE REVIEW

சர்வர் சுந்தரம் (1964)


கடிவாளம் கட்டிய குதிரையாக ஓடிக்கொண்டிருந்த தமிழ் சினிமாவைத் திசை திருப்பிய திரைப்படங்களைத்தான் ‘டிரெண்ட்செட்டிங் பிலிம்ஸ்’ என்று கொண்டாடி வந்திருக்கிறோம். ஐம்பது ஆண்டுகளுக்கு முன் 11- 12- 1964-ல் வெளியாகித் தமிழ் சினிமா ரசனைக்குப் புது ரத்தம் பாய்ச்சிய படமே ‘சர்வர் சுந்தரம், திரையுலகைக் கதைக் களமாக்கிய முதல் தமிழ்த் திரைப்படம்.

சினிமா ஸ்டுடியோக்களில் எப்படிப் படப்பிடிப்பு நடக்கிறது, பாடல் எப்படிப் பதிவு செய்யப்படுகிறது என்ற ரகசியத்தை உடைத்துக் காட்டியது. இந்தப் படத்திற்குக் கிடைத்த வெற்றியும், விருதுகளும், இதே போன்ற கதையம்சத்துடன் கூடிய பல படங்கள் வெளியாகக் காரணமாக அமைந்தன. அவற்றில் சிவாஜி நடித்த ‘ராமன் எத்தனை ராமனடி’, சிவகுமார் நடித்த ‘ஏணிப்படிகள்’ ஆகிய படங்கள் பெரிய வெற்றியை அடைந்தன.

அன்று முன்னணி நகைச்சுவை நடிகராகக் கொடிகட்டிப் பறந்து கொண்டிருந்தார் நாகேஷ். எம்.ஜி.ஆர். – சிவாஜி இருவருமே தங்களது படங்களில் நாகேஷ் இருக்க வேண்டும் என்று விரும்பினார்கள். இதனால் நாகேஷ் கதைகளில் நுழைக்கப்பட்டார். இரண்டு பேரின் படங்களுக்கும் சிக்கல் வராதவாறு தனது கால்ஷீட்டைக் கவனமாகப் பிரித்துக் கொடுத்து நடித்துவந்தார். என்றாலும் அதிகப் படப்பிடிப்புகள் காரணமாக எம்.ஜி.ஆர்., சிவாஜி ஆகிய இரண்டு பேரின் படப்பிடிப்புகளுக்குப் பல சமயங்களில் தாமதமாகப் போவார் நாகேஷ். ஆனால் அவர்கள் கோபித்துக்கொண்டதில்லை.




இவ்விரு சூப்பர் ஸ்டார்களின் படங்களில் நடித்துவந்த அதேவேளை தன் மனதுக்குப் பிடித்தமான குணச்சித்திர வேடங்கள் கிடைத்தால், அவற்றுக்குச் சம்பளத்தைக் குறைத்துக்கொண்டு நடித்தார். அது போன்ற வேடங்களில் கதாபாத்திரமாக வாழ ஆரம்பித்தார். ஏ.வி.எம். செட்டியாரின் பார்வையில் நாகேஷ் சிறந்த நகைச்சுவை நடிகர் என்பதைவிட, சிறந்த குணச்சித்திர நடிகராகத் தெரிந்தார். அப்போது தமிழ் நாடக மேடைக்கு சமகாலக் கதைகளை நாடகங்களாக எழுதிப் பெயர்பெற்று வந்தார் கே.பாலச்சந்தர். ‘சர்வர் சுந்தரம்’ கே. பாலச்சந்தர் எழுதிய நாடகம்தான். அந்த நாடகத்தைப் பார்த்த செட்டியார், அதை வாங்கித் திரைப்படமாகத் தயாரிக்க முடிவு செய்தார்.

‘ஆயிரத்தில் ஒருவன்’ முதல் கட்டப் படப்பிடிப்பு கேரளாவில் நடந்து கொண்டிருந்தது. அதில் நடித்துக் கொண்டிருந்த நாகேஷிடம் டிரங்க் காலில் பேசினார் செட்டியார். அத்தனை பெரிய பட அதிபர் நம்மிடம் பேசுவதா என்று நெகிழ்ந்த நாகேஷ், படப்பிடிப்பு முடிந்து சென்னை திரும்பியதும் செட்டியாரைச் சென்று சந்தித்தார்.

“சர்வர் சுந்தரம் நாடகத்தோட ரைட்ஸ் வாங்கிவிட்டேன்” என்றார் செட்டியார். “நீங்க ஒரு முடிவு எடுத்துட்டா அது சரியா இருக்கும். ஆனால், நல்ல மார்க்கெட் உள்ள ஹீரோவா போடுங்க” என்றார் நாகேஷ். “இந்தக் கதையில நீதான் நடிக்கணும். அதுதான் சரியா இருக்கும்” என்றார் செட்டியார். “நீங்க முடிவு எடுத்துட்டா அதை மாத்த முடியுமா?” என்றார் நாகேஷ். செட்டியார் சிரித்துவிட்டார். கதை, திரைக்கதை, வசனத்தைக் கே. பாலச்சந்தர் எழுத, சமூகப் படங்களை வரிசையாக இயக்கிப் புகழ்பெற்றிருந்த கிருஷ்ணன்-பஞ்சு படத்தை இயக்க, நாகேஷ் கதையின் நாயகனாக நடித்தார்.

சினிமாவில் பெரிய நடிகனாகப் புகழ்பெற வேண்டும் என்ற ஆசையோடு சென்னைக்கு வருகிறார் நாகேஷ். எனினும் தனது தோற்றம் பற்றிய தாழ்வு மனப்பான்மையால் தவிக்கிறார். வாய்ப்புகளைத் தேடிச் செல்லும் முன் வயிற்றைக் காயவிடக் கூடாது அல்லவா? அதற்காக உணவு விடுதி ஒன்றில் சர்வராக வேலை செய்கிறார். நாகேஷின் உணவு பறிமாறும் குறும்புகளைப் பல வாடிக்கையாளர்கள் ரசிக்கிறார்கள்.

சிலர் சிடுசிடுக்கிறார்கள். அந்த உணவு விடுதியின் உரிமையாளர் மேஜர் சுந்தரராஜன். அவரது மகள் கே.ஆர். விஜயா அங்கே அடிக்கடி வருகிறார். நாகேஷைப் பாராட்டுகிறார். தனது முதலாளியின் மகள் என்பதை அறியாத நாகேஷ், கே.ஆர்.விஜயாவின் ஊக்குவிப்பால் உந்தப்பட்டு அவர்பால் ஈர்க்கப்படுகிறார். பிறகு அவரைக் காதலிக்கத் தொடங்குகிறார். கே.ஆர்.விஜயாவோ தனது கல்லூரி நண்பரான முத்துராமனைக் காதலிக்கிறார். முத்துராமன், நாகேஷின் உயிர் நண்பன்.

ஒருநாள் முத்துராமனிடம் சென்று கே.ஆர். விஜயாவைக் காதலிப்பதாகச் சொல்கிறார் நாகேஷ். அதைக் கேட்டு காதலனாகிய முத்துராமன் துடிக்கிறார். அதைக் காதலியிடம் சொல்ல, அவரும் துடிக்கிறார். நட்பாகப் பழகியது தப்பாகிவிட்டதே என கே.ஆர். விஜயா தவிக்கிறார். இதற்கிடையில் நாகேஷின் திரையுலகத் தேடல் தீவிரமாகிறது. ஒரு கட்டத்தில் நாகேஷின் திறமை கண்டறியப்பட்டு நாடு போற்றும் நடிகனாகிவிடுகிறார். பணம், புகழ், அந்தஸ்து எல்லாமே கிடைக்க, சர்வர் சுந்தரம் இப்போது ஆக்டர் சுந்தரம்.

வாழ்க்கையில் எண்ணியதெல்லாம் கிடைத்த பிறகு அடுத்து என்ன? தனது காதலைத் தெரிவிக்கக் கையில் பூங்கொத்தை ஏந்தியபடி கே.ஆர்.விஜயாவைத் தேடி வருகிறார். அப்போது காதலனும் உடன் இருக்க, நாகேஷ் தன் காதலைச் சொல்ல, அந்த நொடியில் ஆரம்பிக்கும் உணர்ச்சிப் போராட்டம் படத்தின் முடிவாக அமைந்தது. காதல் ஒரு மனிதனை உயர்த்தும். அதேநேரம் அதுவே தோல்வியில் முடிந்தால் அந்த மனிதனின் மனதை உடைப்பதற்குப் பதிலாகப் பண்படுத்தும் என்ற கருத்தைத் தூக்கிப்பிடித்தது பாலச்சந்தரின் தேர்ந்த திரை எழுத்து.

காதல் தோல்விக்குப் பிறகு தாயின் இறப்பை எதிர்கொள்ளும் சர்வர் சுந்தரம், ஒரு எளிய மனிதனாக சர்வர் வேலைசெய்தபோது கிடைத்த நிம்மதி, நடிகனாக உயர்ந்தபோது இல்லை என்பதைப் புரியவைப்பதோடு படம் முடியும். வில்லன் இல்லாத படம்.

ஐம்பதாண்டுகள் மேலாக இன்றும் கொண்டாடப்படும் ‘சர்வர் சுந்தரம்’ படத்தை இன்றைய தலைமுறை ரசிகர்கள் பார்த்தால் அதன் திரைக்கதை நேர்த்தியை, கதாபாத்திரங்களின் கட்டமைப்பைப் பாராட்டித் தள்ளுவார்கள். சிவந்த நிறமும், எடுப்பான தோற்றமும் இருந்தால் மட்டுமே சினிமாவில் நாயகனாக உருவாக முடியும் என்ற மூடநம்பிக்கையைச் சர்வர் சுந்தரம்தான் முதன்முதலாக உடைத்தெறிந்தது.

இந்தப் படத்தில் சர்வர் சுந்தரமாக வாழ்ந்த நாகேஷின் நடிப்புத் திறமை எல்லாப் பரிமாணங்களிலும் சிறப்பாக வெளிப்பட்டு நின்றது. அவரது திரைவாழ்க்கையில் திருப்புமுனையை ஏற்படுத்தியது. படத்தில் வரும் ‘அவளுக்கென்ன அழகிய முகம்’ என்ற பாடலில் தனது நடனத் திறமையையும் சிறப்பாக வெளிப்படுத்தியதால் ‘அழகிய மனம்’ கொண்ட கதாபாத்திரமாக நாகேஷை ரசிகர்களுக்கு மேலும் நெருக்கமாக்கியது.

இந்தப் படத்தின் வழியாகப் பிரபலமாகி ஒரு நட்சத்திர எழுத்தாளராகவும், இயக்குநராகவும் உயர்ந்தார் இயக்குநர் சிகரம் கே. பாலச்சந்தர். இப்படம் தேசிய விருதைப் பெற்றதோடு, இந்தி உட்பட பல மொழிகளில் மறுஆக்கம் செய்யப்பட்டு வெற்றிகளைக் குவித்தது.


Monday 26 April 2021

M.S.VISWANATHAN VS KANNADASAN

 

M.S.VISWANATHAN VS KANNADASAN



கண்ணதாசனைக் கொஞ்சுவார் எம்.எஸ்.விஸ்வநாதன் 

கண்ணதாசனோ, எம்.எஸ்.வி.யைக் கெஞ்சி மிஞ்சுவார்.

இருவருக்கும் அப்படியொரு பந்தம்.

கண்ணதாசனும் எம்.எஸ்.வி.யும் இணைந்துவிட்டால், அந்த வருடத்தின் சூப்பர்ஹிட் பாடல்களின் பட்டியல் நீண்டுவிடும் என்பார்கள்.

🌹அன்று ஊமைப் பெண்ணல்லோ’ பாட்டில், ‘அ ஆ இ ஈ’ சொல்லித்தருவது போல் பாடல் அமைந்திருக்கும். அதில் ஒரு வயலினை இழையவிட்டிருப்பார்.

நம்மையும் பாடம் படிக்க வைத்துவிடுவார்.

🌹மாலைப் பொழுதின் மயக்கத்திலே’ பாட்டில், ‘மா...லைப் பொழுதின்’ என்று சொல்லும்போதே அந்தப் பாடலுக்குள் இருக்கிற சோகம் நமக்குள்ளேயும் வந்துவிடும்.

🌹ஒளிமயமான எதிர்காலம் என் உள்ளத்தில் தெரிகிறது’ பாட்டிலும் மங்கலகரமான இசையைத் தவழவிட்டிருப்பார்.

விஜயகுமாரியின் எதிர்காலம் நன்றாக வேண்டும், சிவாஜி நினைத்தது நடக்கவேண்டும் எனும் பிரார்த்தனை நமக்குள்ளே ஓடும்.

டி.எம்.எஸ்.சையும் பிபிஸ்ரீநிவாஸையும் சேர்ந்து பாட வைக்கும் போது, ரொம்பவே குஷியாகிவிடுவார் எம்.எஸ்.வி.

🌹பொன்னொன்று கண்டேன் பெண் அங்கு இல்லை’ ஆகச்சிறந்த பாடல் 

🌹பாடினாள் ஒரு பாட்டு பால்நிலாவினில் நேற்று...’ என்ற பாடல் துள்ளவைத்துவிடும்.

பி.பி.எஸ். தனியே பாடுகிறார் என்றால் ஒரு விசில் சத்தத்தை துணைக்கு அனுப்பிவிடுவார்.

🌹’நான் பேச நினைப்பதெல்லாம்’ பாட்டுக்கு ‘ம்...ம்ம்ம்.. ம்ம்ம்ம்ம்ம்’ என்று ஹம் செய்யவைத்திருப்பார்.

அந்த ‘ஹம்’தான் பாடலுக்கு இன்னும் ஜீவனைக் கொடுத்து, நம் தூக்கத்தையெல்லாம் விரட்டிவிடும். துக்கத்தையும்தான்!

🌹தாழையாம்பூமுடிச்சு’ பாட்டுக்கு முன்னே ஒரு ஹம்மிங்.

🌹பூமாலையில் ஓர் மல்லிகை’ பாட்டுக்கு முன்னதாக, ஒரு ஹம்மிங்.

🌹நல்லவன் எனக்கு நானே நல்லவன்’ பாடலின் இடையே ஓர் ஹம்மிங்.

🌹‘கல்லெல்லாம் மாணிக்கக் கல்லாகுமா? கலையெல்லாம் கண்கள் சொல்லும் கலையாகுமா?’

பாடலை டி.எம்.எஸ். பாட,

நடுநடுவே எல்.ஆர்.ஈஸ்வரியை விட்டு, ஓர் ஹம்மிங் இசைத்திருப்பார்.

அது நம்மை கட்டிப்போட்டுவிடும்.

🌹நெஞ்சம் மறப்பதில்லை’ என்றொரு பாடல். அந்த ஹம்மிங், உயிரைக் கரைத்துவிடும்.

🌹வாராதிருப்பானோ

வண்ண மலர்க் கண்ணன் அவன்

சேராதிருப்பானோ

சித்திரப் பூம் பாவை தன்னை

🌹உங்கள் பொன்னான கைகள் புண்ணாகலாமா?’, ‘

🌹கேட்டதும் கொடுப்பவனே கிருஷ்ணா கிருஷ்ணா’,

🌹துள்ளுவதோ இளமை’

🌹என்ன பார்வை உந்தன் பார்வை’,

🌹ரோஜாமலரே ராஜகுமாரி...’,

🌹சொல்லத்தான் நினைக்கிறேன்’, ‘

🌹கேள்வியின் நாயகனே’, ‘

🌹வான் நிலா நிலா அல்ல...’, ‘

🌹மலர்ந்தும் மலராத பாதிமலர் போல...’,

🌹’அவளுக்கென்ன அழகிய முகம்...’ என்று எத்தனை பாடல்கள்; எவ்வளவு வெரைட்டிகள்!

🌹அவளுக்கென்ன’ பாடலுக்கு டிரிபிள் பேங்கோஸில் அதகளம் பண்ணியிருப்பார்.

🌹 ‘என்னடி ராக்கம்மா’வுக்கு சோழவந்தான் அலப்பறையை இசையால் தந்து அசத்தியிருப்பார்.

🌹சிப்பி இருக்குது முத்து இருக்குது’ பாடலெல்லாம் எம்.எஸ்.விக்காகவும் கண்ணதாசனுக்காகவும் கே.பாலசந்தர் வைத்த ஆடுகளம் மாதிரி இருக்கும்.

🌹‘முத்துக்களோ கண்கள்’ என்பார். ஏகப்பட்ட கருவிகளையும் மெட்டுகளையும் இணைத்து, ‘

🌹ஒரு ராஜா ராணியிடம் வெகுநாளாக ஆசைகொண்டான்’ என்று மிரட்டுவார்.

அதுதான் மெல்லிசை மன்னர்; அதனால்தான் மெல்லிசை மன்னர்

இந்தக் கால பாஷையில்... கெமிஸ்ட்ரி! ‘ஏழு ஸ்வரங்களுக்குள்’ எத்தனையோ பாடல்களைத் தந்தார். ஸ்வரம் பிரித்துப் பரிமாறினார்.

எம்.எஸ்.வி.யின் பாடல்கள் தனித்துவமும் மகத்துவமும் வாய்ந்தவை. அதுவும் வாத்தியக் கருவிகள் குறைவாக வைத்துக்கொண்டுதான்சாதனை

செய்தவர்