Wednesday 26 June 2019

TZUNAMI-எனது உயிரைக் காப்பாற்றிய என்னுயிரே



எனது உயிரைக் காப்பாற்றிய என்னுயிரே உன்னை என் வாழ்வின் இறுதி வரை மறக்க மாட்டேன்"


மரண விளிம்பில் அந்த தைரியம் எப்படி வந்தது? - சுனாமியில் நண்பனை மீட்டவரின் கதை #MyVikatan

நம் வாசகர் தியாகராஜன் 2004-ம் ஆண்டு சுனாமி அலைகளில் தன் மாற்றுத் திறனாளி நண்பரைக் காப்பாற்றிய தருணத்தைக் கட்டுரையாகப் பகிர்ந்துள்ளார்..

இடம் : கல்லூரி மாணவர் விடுதி, கடற்கரை, கடலூர். நாள் : டிசம்பர் 26 (ஞாயிறு), 2004. நேரம் : காலை 8 மணி (ஏறத்தாழ). இதுவும் ஒரு வழக்கமான காலையாகவே உதித்திருந்தது. காலை உணவை முடித்துவிட்டு செய்முறை பதிவேட்டினை நிரப்பிக்கொண்டிருந்தேன். நான் அப்போது கல்லூரி மூன்றாம் ஆண்டு பயின்று கொண்டிருந்தேன். எங்கள் கல்லூரிக்கும் கடற்கரைக்கும் இடைவெளி சுமார் 500 மீட்டர்தான் இருக்கும். கல்லூரியின் அருகிலேயே விடுதியும் இருந்தது.

மாற்று திறனாளியைக் காப்பாற்றிய தியாகராஜன்..

விடுதிக்கும் கடற்கரைக்கும் இடைவெளி சுமார் 500 முதல் 600 மீட்டர்தான் இருக்கும். எங்கள் விடுதிக்கும் கடற்கரைக்கும் இடையில் பெரிய மைதானம் இருக்கும். அங்கே அவ்வப்போது கிரிக்கெட் விளையாடுவார்கள். இது வேறு எங்கும் இல்லாத சூழல் என்பதால் எங்களுக்கு என்ன கவலைகள் இருந்தாலும் விடுதியின் மொட்டை மாடியில் அமர்ந்து கடலையும் கடல் சார்ந்த இடங்களையும் வேடிக்கை பார்த்தபடி அமர்ந்தால் அது சுகமான அனுபவமாக இருக்கும். அன்று ஞாயிற்றுக் கிழமை என்றாலும்கூட எனக்குக் கொஞ்சம் அதிகமாக எழுத்து வேலைகள் இருந்ததால் வேறு வழியில்லாமல் சாப்பிட்ட உடனேயே அந்தப் பதிவேடுகளில் நேரத்தைச் சிதைத்துக்கொண்டிருந்தேன். விடுதியின் வெளிப்பகுதியில் போர்டிகோவில் விடுதி நண்பர்கள் பேசிக்கொண்டிருந்தார்கள். என்னுடைய அறை அதை ஒட்டியே இருந்ததால் அவர்களின் சொற்பொழிவுகள் நன்றாகக் கேட்டது. அவற்றுள் சில நடிகர்களின் பெயரும், ``மச்சி", ``மாமா", ``மாப்ள" போன்ற சொற்களும் அடிக்கடி விழுந்தன. இப்படியாகக் கழிந்த சில நிமிடங்களுக்குப்பின். அங்கு நான் இதுவரை கேட்டிராத அலறல் சத்தங்கள் கேட்டன.

'என்னடா கடல் தண்ணி வெளிய வருது!!??' 'டேய் பயங்கரமா வருது டா ' 'கடல் பொங்கி வருது போல டா' 'எல்லாரையும் கூப்டுங்கடா' இது போன்ற பல கூச்சல்கள். எனக்கு அதற்குமேல் உள்ளே இருப்புக் கொள்ளவில்லை. ஏடுகளை அப்படியே போட்டுவிட்டு வெளியே ஓடி வந்தேன். கடல் நீர் மிக வேகமாக எங்களை நோக்கி வந்து கொண்டிருந்தது. அதற்குப் பெயர் சுனாமி என்பது அப்போது தெரியாது. சுனாமி என்ற உடன் தசாவதாரம், The Day After Tomorrow போன்ற படங்களில் வருவதுபோல உங்கள் எதிரே பல மீட்டர் உயரத்தில் தண்ணீர் தொட்டியைக் கவிழ்த்ததுபோல அரை ப்ரேமுக்கு தண்ணீர் மலைபோல திரண்டு வரும் என்று நினைக்காதீர்கள்.





முதலில் வரும் நீர் சுமார் ஒன்று முதல் இரண்டு மீட்டர் உயரத்தில்தான் இருந்தது. அன்று தொலைக்காட்சி செய்திகளில் ஒளிபரப்பிய இந்தோனேசிய ஒளிப்பதிவைக் கண்டவர்கள் நலம். உயரம் குறைவாக இருப்பினும் அதன் வேகம் மிக அதிகம். அந்த நீர் கடற்கரையை ஒட்டி இருந்த சிறு கட்டடத்தில் மோதி சுமார் இரண்டு மின் கம்பங்களின் உயரத்துக்கு எழுந்தது. இவ்வளவு விளக்கமாக எழுத நான் என்னவோ அங்கு ஒரு அரைமணி நேரம் நின்று ஆராய்ச்சி செய்துகொண்டிருந்தேன் என்று நினைக்காதீர்கள். நான் வெளியே வந்து 3-5 விநாடிகள்தான் பார்த்திருப்பேன். அதற்கு சில மாதங்கள் முன்பு வெளியாகி இருந்த 'The Day After Tomorrow' படத்தினை நான் பார்த்திருந்ததால், அதுபோல் இதுவும் ஒரு பேரழிவு என்று நான் யூகித்திருக்க வேண்டும். உடனே பக்கத்தில் இருந்த என் அறையினுள் ஓடினேன் (உள்ளிருந்தவர்களிடம் வெளியே போக சொல்லி கூவிக்கொண்டே). 2-3 விநாடிகளில் என் அறையில் விரித்து வைத்திருந்த பதிவேடுகளை மூடி மேலே அலமாரியில் வைத்துவிட்டு வெளியே ஓடினேன். இதில் இன்னொரு கவனிக்க வேண்டிய விஷயம் நான் அலமாரியின் கீழ் அடுக்கில் இருந்த எனது பெட்டியை தூக்கி மேல் அடுக்கில் வைத்துவிட்ட பின்னரே வெளியே ஓடினேன். இது எல்லாமே 'அந்த சில' விநாடிகளில். இந்த இடத்தில் நான் ஏன் வெளியே ஓட வேண்டும்? அந்தக் கட்டடத்தின் மாடியின் மேல் போயிருக்கலாமே என்று நினைப்பவர்களுக்குச் சிறு விளக்கம். எங்கள் விடுதி ஒரே தளம்( தரை தளம்) மட்டுமே கொண்ட கட்டிடம். மேலே சென்றால் மொட்டை மாடி . அவ்வளவே. அந்த சில விநாடிகளில் என் மனதில் பல எண்ணங்கள், யோசனைகள் வேறு என்னென்னவோ.




எல்லாமே உயிர்பிழைப்பினை ஒட்டியது. அதாவது வரக்கூடிய தண்ணீர் எவ்வளவு என்பதோ, அதன்பின் விளைவுகள் என்னென்ன என்பதோ எதுவும் தெரியாது. கடல் நீர் பொங்கி வருகிறது என்றால் அந்தக் கட்டடம் என்ன? பலமாடி கட்டடம் என்ன? காடென்ன? மலையென்ன? எல்லாமே மூழ்குவதற்கான சாத்தியங்கள் உள்ளன என்பதை நான் மனதில் கொண்டிருந்தேன். எல்லாம் சில வெளிநாட்டுப் படங்களின் தாக்கம். எனவே, இப்படி சில கூறுகளை ஆராய்ந்து அதற்கு முடிவையும் அந்த சில விநாடிகளில் எடுத்துவிட்டு அதன்படி வெளியே ஓடினேன். அங்கே ஏற்கெனவே வெளியே நின்றவர்கள் ஓடிக்கொண்டிருந்தார்கள். நானும் அவர்களுடன் ஓட்டம் பிடித்தேன், வெறித்தனமாக வரும் தண்ணீரை பார்த்தபடி. இப்போது எனக்கும் தண்ணீருக்கும் 500 மீட்டருக்குள் இருக்கும். அங்கே காலையில் கடற்கரையில் தங்களது கார்களை நிறுத்திவிட்டு நடைப்பயிற்சி சென்றவர்களை ஏற்கெனவே தண்ணீர் விழுங்கியிருந்தது. இப்போது அந்த மைதானத்தில் கிரிகெட் விளையாடியவர்களுக்கு மிக அருகில் வந்து கொண்டிருந்தது. அவர்கள் அலறியபடி ஓடி வந்தார்கள். நான் சில அடிகள் எடுத்து வைத்திருப்பேன். அங்கே என்னுடன் விடுதியில் இருந்த முத்துகுமரன் என்பவன் அலறினான். "ண்ணா!!!" இங்கு முத்துக்குமரனை பற்றி கண்டிப்பாக கூற வேண்டும். (அவன் முதலாம் ஆண்டு பயின்றான், மாற்றுத்திறனாளி. இரண்டு கால்களும் செயல்படாது. இரண்டு புறமும் தாங்கியைக் கொண்டுதான் ஒவ்வொரு அடியையும் எடுத்து வைக்க வேண்டும்.




தியாகராஜன் காப்பாற்றியது இவரைதான்..
எங்கள் ஊருக்கு அருகில்தான் அவனுடைய ஊர். எனவே, நாங்கள் ஏற்கெனவே நன்றாக அறிமுகம் ஆகியிருந்தோம். படிப்பில் அதிக ஆர்வம் காட்டுவான்.) நான் அறைக்குள் சென்று வெளியே வருவதற்குள் அவன் கட்டடத்தில் இருந்து சில மீட்டர் தொலைவிற்கு வெளியேறியிருந்தான். அப்போதுதான் அந்த அலறல் ("ண்ணா!!!") என் காதில் விழுந்தது. அதுவும் அவனைத் தாண்டி நான் இரண்டு அடிகள் வைத்தபின். அதன் பிறகே நான் அவனைக் கவனித்தேன். அதுவரை தண்ணீரை மட்டுமே பார்த்துக்கொண்டு ஓடினேன்.

"காப்பாத்துங்கண்ணா." அவனது முகத்தில் மரணத்தின் விளிம்பில் இருக்கும் ஒரு மனிதனின் உணர்வுகளைப் பார்த்தேன். அந்த அலறலில் பரிதாபமும் அழுகையும் கலந்திருந்தது. நான், முன்னால் ஓடியவர்களில் எனக்குத் தெரிந்த ஒருவனைக் கத்தி கூப்பிட்டேன். திரும்பினான். நான் சைகையால் இவனைக் காட்டினேன். அதன்பிறகு அவன் திரும்பவில்லை. அப்போது நான் இரண்டு விநாடிகள் யோசித்திருப்பேன். உடனே அவனை என் தோளில் தூக்கினேன். அப்போது நானே 48-52 கிலோ எடை மட்டுமே இருப்பேன். அவனுடைய எடையும் அதற்குக் கீழ் இருக்காது. இருப்பினும் இன்றுவரை நான் அவனை எப்படி தூக்கினேன் என்று தெரியாது (இவன் என்ன இரண்டாம் ராஜ மௌலியோ என்று நினைத்துவிடாதீர்கள் ). அவனை அப்படி தூக்கியபடி சில மீட்டர்கள் ஓடினேன். அங்கிருந்து சுமார் 200 மீட்டர்கள் ஓடினால் ஒரு சுற்றுசுவர் வரும் (அது ஒரு காவல் உயரதிகாரியின் மாளிகையின் சுற்றுச்சுவர்). அது கொஞ்சம் பழங்காலத்து சுவர். எனவே, அந்தச் சுவரைத் தாண்டிவிட்டால் ஒரு தற்காலிக பாதுகாப்பு என்று என் மனதில் ஒலித்தது. என் தோளில் அவனுடன் நான் ஓடிய அந்த சில நிமிடங்களில் என் நெஞ்சே வெடித்துவிடும் அளவுக்கு விரிந்தது. இருப்பினும் அன்றைய நாள்களில் நான் தினமும் காலையில் கடற்கரையை ஒட்டிய ஈரத்தில் சுமார் மூன்று கிலோமீட்டர்கள் தொலைவில் இருந்த துறைமுகத்துக்கு ஓட்டப்பயிற்சி எடுத்திருந்ததால் இது சாத்தியமாகியிருக்க வேண்டும். இருந்தாலும் அப்போது என் மனதில் 'உயிரே போனாலும் இவனைக் காப்பாற்றாமல் விடக் கூடாது' என்றெல்லாம் நினைக்கவில்லை.

'முடிந்த வரை முயற்சி செய்து பார்ப்போம், ஒருவேளை இறுதி நிமிடங்களில் முடியாத நிலை வரும்போது நாம் மட்டுமேயாவது ஓடிவிடுவோம் ("உசுருக்கு ஒண்ணுன்னா நாங்க தண்ணி மேலையே ஓடுவோம்"- வடிவேல் சொல்வதைப்போல இருந்தாலும் அது நகைப்புக்கானது அல்ல. மரண விளிம்பில் ஒரு மனிதனின் தைரியம். "Survival of the fittest") என்றே என் மனதில் இருந்தது. இன்னொரு விஷயம் அவன் என் தோளில் இருக்கும்போதும் அவனுடைய தாங்கி இரண்டையும் அவன் கையிலிருந்து விடவில்லை. அது அவ்வப்போது என் காலில் இடித்தது. ``எவ்ளோ தூரத்துல தண்ணி வருது பாரு" அப்போதும் அவனிடம் நான் கேட்டேன். அவன் என்ன சொன்னான் என்று கேட்கவில்லை. ஒரு விநாடியில் பின்னால் திரும்பிப் பார்த்தேன். அப்போது அந்த மைதானத்தைத் தாண்டியிருந்தது. அங்கே கிரிக்கெட் விளையாடியவர்கள் அதில் கலந்துவிட்டிருந்தனர். கரையோரம் விட்டிருந்த 15-20 மீன்பிடிப் படகுகள் அந்தத் தண்ணீரில் மிதந்து வந்தன. அதோடு இரண்டு மூன்று கார்கள் தலைகீழாக மிதந்து வந்தன. இன்னும் பல பொருள்கள் மிதந்து வந்திருக்க கூடும், நான் அவற்றைக் கவனிக்கவில்லை. இப்போது அந்த சுற்றுச்சுவர் எனக்கு 10 மீட்டர் தொலைவே இருந்தது. எனது கால்கள் சொல்லமுடியாத வலியைக் கண்டது. மார்பும் முன்பு இருந்ததைவிட இரண்டு மூன்று மடங்கு அதிகமாக மூச்சு வாங்கியது. இருப்பினும் அதே வேகத்தைக் குறைக்கவில்லை. சுவரின் அருகில் சென்றதும் கிட்டத்தட்ட கீழே போட்டேன் அவனை.

மைதானத்தைத் தாண்டி உள்ள சிறு பள்ளத்தைக் கடந்து எங்களுக்கு 20 மீட்டர் தொலைவில் தண்ணீர் இரைச்சலுடன் வந்தது. அவனை ஒரே விநாடியில் தூக்கி சுவரின் மேல் வைத்தேன். சுவர் என் கழுத்து உயரம் இருக்கும். அதன் உட்புறம் அந்தச் சுவரை ஒட்டி மண்மேடு இருந்தது. அதில் அவன் இறங்கிவிட்டான். நானும் மேலே ஏறி உட்புறம் குதித்து ஓடினேன். அந்தச் சுற்று சுவரின் வாயிலில் எப்போதும் துப்பாக்கி ஏந்திய காவலர்கள் இருப்பார்கள். அவர்கள் நம்மை ஏதோ சதியாளர்கள் என்று நினைத்துச் சுட்டுவிடுவார்களோ என்ற பயம் வேறு எனக்கு. ஆனால் தண்ணீரின் இரைச்சலைக் கேட்டு, பார்த்து அவர்கள் ஓடியிருக்க வேண்டும்.


ஒருவரையும் அங்கு காணவில்லை. அதன்பின் நான் நகருக்குள் ஓடி தீயணைப்பு நிலையத்தில் சொல்லி அந்த சிவப்பு நிற வண்டியில் விடுதிக்கு வந்து அதன்மேல் இருந்தவர்களை வெளியேற்றி கூட்டிச்சென்றேன். அப்போது தண்ணீர் வடிந்திருந்தது. விடுதியின் உட்புறம் சென்று பார்த்தேன். அரை அடி உயரத்திற்கு களிமண். அங்கங்கே பலவகை மீன்கள். நான் எனது லுங்கியை மாற்றிவிட்டு அங்கிருந்த எனது பேன்ட்டை அணிந்துகொண்டு வெளியேறினேன். முத்துக்குமரனை அவன் இருந்த இடத்தில் விட்டுவிட்டுச் சென்று இருந்தால் அதற்கு சற்றுத் தள்ளி இருந்த கருவேல புதர் வேலியில் அவனைக் கண்டேடுத்திருக்க நேர்ந்திருக்கும். அவ்வாறு சில உடல்களை மறுநாள் கண்டெடுத்ததாக அறிந்தேன். நான் அடுத்த நாள் வரை ஊருக்குச் செல்லவில்லை. வீட்டுக்கு போன் செய்து அனைத்தையும் தெரிவித்தேன். தொலைக்காட்சி செய்தியில் அவர்களும் பார்த்ததாக அதிர்ச்சியுடன் கூறினார்கள். முத்துகுமார் அன்றைய தினமே வீட்டுக்குச் சென்று நடந்த அனைத்தையும் அவனுடைய வீட்டில் சொல்லியிருக்கிறான். அன்று மாலை அவனது தந்தை எங்கள் வீட்டுக்கு வந்து அனைத்தையும் கூறி நெகிழ்ந்ததாகப் பின்னர் அறிந்தேன் (அவற்றில் ``கடவுள் மாதிரி", ``சாமிய்யா அவன்", ``உங்க பையன் இல்லனா" போன்ற சொற்களும் அடக்கம்). அவனைச் சந்தித்து பல வருடங்கள் அகிவிட்டன. தற்போது அவன் சென்னையில் ஏதோ ஒரு நல்ல வேலையில் இருப்பதாக சில வருடங்கள் முன்பு அறிந்தேன். அன்று அவனுக்கு நான் கடவுளாக தெரிந்திருக்கக் கூடும். இன்றும் எனது 'ஆட்டோகிராப்' எனப்படும் பதிவில் அவன் எழுதியதை (``எனது உயிரைக் காப்பாற்றிய என்னுயிரே உன்னை என் வாழ்வின் இறுதி வரை மறக்க மாட்டேன்") படிக்கும்போது அந்த நிகழ்வுகள் அனைத்தும் அப்படியே மனதில் காட்சிகளாய் விரியும்.

Sunday 16 June 2019

'டாப் சிலிப்' உருவான சுவாரஷ்ய வரலாறு; தெய்வமாக போற்றப்படும் 'ஹியூகோ வுட்'








'டாப் சிலிப்' உருவான சுவாரஷ்ய வரலாறு; தெய்வமாக போற்றப்படும் 'ஹியூகோ வுட்'

தென்னிந்தியாவில் ஐந்து மாநிலங்களை இணைக்கும் அழகிய மேற்குத் தொடர்ச்சி மலைத்தொடர் (Western Gates) “யுனெஸ்கோ’வின் உலகப் பாரம்பரியப் பட்டியலில் இடம்பெற்றுள்ளது. இம்மலைத்தொடர் அரபிக்கடலிருந்து வரும் குளிர்காற்றை தடுத்து, மழைப்பொழிவைத் தருகிறது. இதன்மூலமே, தமிழகத்தின் 40% நீர்த்தேவையையும், கேரளத்தின் 100% நீர்த்தேவையையும் நிறைவு செய்யப்படுகிறது. 

8841-அடி உயரமுடைய ஆனைமுடி என்ற மலை உச்சியைக்கொண்ட இம்மலைத் தொடர் உலகில் பல்லுயிரின பெருக்கம் மிக்க பத்து இடங்களில் ஒன்று. இங்குள்ள பத்துக்கும் மேற்பட்ட தேசிய சரணாலயங்கள் பாதுகாக்கப்பட்ட பல்லுயிரின பெருக்கத்திற்கு வழிவகை செய்கிறது. அரிய உயிரினங்கள், மூலிகைகள் நிறைந்த பகுதியாகவும் உள்ளது. 5000-வகைத் தாவரங்கள், 139-வகைப் பாலூட்டிகள், 508-பறவைகள் 179-நீரிலும், நிலத்திலும் வாழும் உயிரினங்கள் இந்த மலைத்தொடரில் வாழ்கின்றன. உலகளவில் அழியும் நிலையில் உள்ள 325-வகை உயிரினங்கள் இங்கே கடும் போராட்டத்திற்கிடையில் உயிர் வாழ்வதாக ஆய்வறிக்கைகள் கூறுகின்றது. இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த ஆனைமலைத் தொடரிலுள்ள “டாப்சிலிப்”. என்ற இடம் இரண்டு புலிகள் சரணாலயங்களுக்கு தாயாக விளங்குகிறது. 

யானை, புலி, மான், காட்டெருமை, மயில்கள் என பலவகை வனவிலங்குகளையும் “டாப்சிலிப்”.க்கு சென்றால் நேரில் பார்க்கமுடியும். தற்போது இயற்கை எழில் கொஞ்சும் இந்த இடம். ஒரு நெடிய வரலாற்றையும், பெரும் துயரத்தையும் மையமாக கொண்டுள்ளது. 

ஒரு நூற்றாண்டுக்கு முன்பாக மொட்டையாகி, பொட்டல் காடாகிப்போன இந்த மலைப்பகுதியை மீண்டும் இயற்கையான சோலையாக மாற்றிய ஒரு ஆங்கிலேயரை பற்றியதுதன் இந்த தொடர். இதற்காக நாம் உலக வரலாறில் கொஞ்சம் பின்னோக்கிச் செல்வோம். 

இருநூறு ஆண்டுகளில் இந்திய நாட்டின் பெரும்பாலான பகுதிகளை கிழக்கிந்திய கம்பெனியினர் கைப்பற்றி ஆட்சி அதிகாரத்தை பிடித்தாலும், கொங்கு நாடான கோவை மண்டலத்தை அவர்களால் கைபற்ற முடியவில்லை. காரணம், மைசூரை தலைமையாக கொண்டு ஆட்சி செய்த திப்புசுல்தானின் ஆளுமையின் கீழ் கொங்கு நாடு இருந்தது. திப்புவின் எல்லைக்குள் ஆங்கிலேயர்களால் நுழைய முடியவில்லை. மைசூர் அருகிலுள்ள ஸ்ரீரங்கப்படிணத்திலிருந்த திப்புவை சூழ்ச்சியால் வீழ்த்தி பல ஆண்டுகள் நடந்த மைசூர் போரை 1799-ல், முடிவுக்கு கொண்டுவந்த பிறகுதான் கொங்குநாடு ஆங்கிலேயர் வசமானது. 

புதிதாக தங்களுக்கு கிடைத்த கொங்கு நாட்டை எப்படி நிர்வாகிப்பது என்பது குறித்த ஆய்வுக்காக 1801-ல், சென்னை மாகாண கவர்னர் ஜெனரலாக இருந்த எட்வார்டு கிளிவ் (Edward Clive) என்பாவரின் உத்தரவின் பேரில் சென்னையிலிருந்து நடையாகச் புறப்பட்ட மருத்துவ அலுவலரும், ஆய்வாளரும் இயற்கை ஆர்வலரான டாக்டர்.பிரான்சிஸ் புக்கானன் (Buchanan Francis Hamilton) என்ற ஆங்கிலேயர், கேரளா கடற்கரை வரை பயணம் மேற்கொண்டார். 

கொங்குநாட்டில் வசித்துவந்த கிராமப்புற மக்களை சந்தித்து அவர்களின் உணர்வுகளை அரசுக்கு தெரிவிக்கும் விதமாக பயணம் மேற்கொண்ட இவர் மற்றவர்களை போல இல்லாமல், முற்றிலும் கிராமங்களின் வழியே நடந்து சென்றுள்ளார். பொள்ளாச்சியிலிருந்து மலபார் நோக்கி பயணம் செய்யும் போது அங்கிருந்த ஒரு மாபெரும் வனப்பகுதியை பார்த்துள்ளார். மலையின் அடிவாரத்திலிருந்து 24-கல் தொலைவில் இருந்த “ஆனைமலை” என்ற ஊர் வரை இம்மலைக்காடுகள் பரந்திருந்தன, அங்கே பல அறிய உயிரினங்கள் வாழ்ந்தாகவும், யானைகள் நிறைந்திருந்த காடுகள் இருந்ததால் தான் “ஆனைமலை” என்ற பெயர் ஏற்பட்டுள்ளது என்று தனது பயண நூலில் (A Journey from Madras through the countries of Mysore, Canura and Malabar) குறிப்பிட்டுள்ளார். 

பொள்ளாச்சி, ஆனைமலை வழியாக பயணம் மேற்கொண்ட இவர் அங்குள்ள காடுகளின் வளத்தைப் பற்றியும் அதிலுள்ள தேக்கு, பலா, கடம்பு, வேங்கை, ஈட்டி, கடுக்காய் உள்ளிட்ட வலிமையான மரங்களைப் பற்றியும், மரங்களை வெட்டி வெளியில் கொண்டுவர முடியாத அளவுக்கு அவை உயர்ந்தோங்கி வளர்ந்துள்ளது என்பதைப் பற்றியும் பக்கம் பக்கமாகத் தனது பயண நூலில் எழுதிக் கொடுத்துவிட்டார். 

18-நூற்றாண்டின் துவக்கத்தில், ஐரோப்பாவில் மிகப்பெரும் தொழில் புரட்சி ஏற்பட்டதன் காரணமாக அங்கே ஏராளமான புதிய தொழிற்சாலைகள் உருவாகின. ஐரோப்பிய நாடுகளில் “ஓக்” மரங்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டது. இங்கிலாந்தின் காடுகளிலிருந்த வலிமையான “ஓக்” மரங்கள் அனைத்தும் வெட்டி முடிக்கப்பட்ட நிலையில், புதிதாக கப்பல் கட்டவும், தொழிற்சாலைகளை அமைக்கவும், புதிய இரயில் பாதைகளை அமைக்க, துறைமுகங்கள் கட்ட, தந்திக்கம்பம் நட எனப் பல்வேறு பணிகளுக்காக பெருமளவில் மரம் தேவைப்பட்டது. அப்போது தான், தங்களின் காலனியில் உள்ள ஆனைமலைப்பகுதியில் பெருமளவில் தேக்குமரம் இருப்பதை மேற்கண்ட அறிக்கையின் மூலம் பிரிட்டிஷ் அரசு தெரிந்தது. 

ஐரோப்பிய நாட்களில் உள்ள “ஓக்” மரங்களைப் போலவே உயரமும் வலிமையும் கொண்டிருந்ததால், இந்த தேக்கு மரங்களை “இண்டியன் ஓக்” என்று பிரிட்டிஷார் குறிப்பிட்டனர். ஆனைமலைப்பகுதியில் இருந்த “இண்டியன் ஓக்” மரங்களை, வெட்டும் வேலையை துவக்கியது பிரிட்டிஷ் அரசு. இதற்காக, பொள்ளாச்சியிலிருந்து மலையின் அடிவாரம் வரை தெற்காகவும் மேற்காகவும் பாதைகள் அமைக்கப்பட்டது. 

பின்னர் மலை மக்களை ஏற்றி மரங்களை வெட்ட உத்தரவிட்டனர். தேயிலை, காபி, ஏலக்காய், மிளகு போன்ற பயிர்களை நட்டு வளர்ப்பதற்கு ஆனைமலைப்பகுதியில் உள்ள இயற்கை சூழல் ஏற்றதாக இருப்பதை தெரிந்த கிழக்கிந்திய கம்பெனியின் பெரும் தொழிலதிபர்கள் காடுகளை அழித்து அதிலிருக்கும் மரங்களை வெட்டி தங்களின் மன்னர்களுக்கு பரிசாகக் கொடுத்துவிட்டு மரம் வெட்டிய பல்லாயிரம் ஏக்கர் நிலங்களை தங்கள் கையகப்படுத்தி சீர்செய்து தேயிலைத் தோட்டம் அமைத்தனர். 


மலை மீதிருந்த பெரும் நிலங்கலெல்லாம் பிரிட்டிஷ் முதலாளிகளின் கைவசமானது. வால்பாறை பகுதிகளிலும், அதன் பின்புறத்தில் உள்ள கொடைக்காணல் மலைச்சரிவிலும் இப்போது உள்ள பல தேயிலை தோட்டங்கள் எல்லாமே இயற்கையான காடுகளை அழித்து அந்த இடத்தில் ஆங்கிலேயர்களால் உருவாக்கப்பட்ட “எஸ்டேட்” என்ற “பசும் பாலைவனங்களே. 

மாலையின் கீழே இருந்த சிறு,சிறு நிலங்களில் இருந்த மரங்கள் வெட்டப்பட்டு அந்த நிலங்கள் ஆங்கிலேயருக்கு அடிமையாக இருந்த இந்திய “ஜமீன்”களின் கைக்கு போனது. 
ஆணைமலைக்கு மேற்கிலுள்ள மலை மீது மக்கள் நேராக ஏறமுடியாத அளவுக்கு உயரமாக இருந்ததால் சேத்துமடை வழியாக மலைமீது மக்கள் ஏற்றப்பட்டனர். பல்லாயிரம் ஏக்கர் பரப்பளவிலிருந்த உயர்ந்தோங்கிய தேக்கு மரங்கள் வெட்டப்பட்டு மலை உச்சியிலிருந்த ஒரு சமதளத்தில் கொண்டுவந்து அடுக்கப்பட்டது. சாலை வசதியில்லாத மலைப்பகுதியில், 2000-அடி உயரத்தில் இருந்த அந்த மரங்களை கீழே கொண்டுவர ஆங்கிலேயர்கள் மேற்கொண்ட நடவடிக்கைக்கு பெயர்தான் “ஆபரேஷன் டாப்சிலிப்” என்பது. 

இந்த நடவடிக்கையின் படி மலை உச்சியில் இருந்த ஒரு சமதளத்திலிருந்து கீழ் நோக்கிச் செல்லும் ஒரு பள்ளத்தின் வழியாக அடுக்கப்பட்டிருந்த மரத்துண்டுகளை கீழே தூக்கிப்போட்டனர். ஆயிரக்கணக்கில் போடப்பட்ட மரத்துண்டுகள் ஒன்றோடு ஓன்று மோதி, முட்டி, சரிந்து கீழே வந்து விழுந்தது. இப்போது சர்க்கார்பதி மின் உற்பத்தி நிலையத்திற்கு அருகில் இருந்த பள்ளத்தில் வந்து விழுந்த மரங்களை மாட்டு வண்டியின் மூலமாக சுப்பேகவுண்டன் புதூரில் கொண்டுவந்து சேர்த்தனர். 


Vanavil New1
அங்கிருந்து புகைவண்டி மூலமாக இந்த மரங்கள் கொச்சின் துறைமுகத்துக்கும், இந்தியாவின் பிறபகுதிகளுக்கும் எடுத்துச் செல்லப்பட்டது. இதற்காகவே ஆனைமலை ரோடு ரயில்வே ஸ்டேஷன் துவக்கப்பட்டது. மலையிலுள்ள பாறை இடுக்குகளில் சிக்கும் மரங்கள் தென்மேற்கு பருவ மழைக்காலத்தில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடிவரும்போது உப்பாற்று தண்ணீரில் மிதந்துகொண்டு வரும். இப்போதுள்ள அம்பராம்பாளையம் அருகில் ஒதுங்கும் அந்த மரத்துண்டுகளை அங்கே சேகரித்து வைத்துள்ளனர். 
இப்படியாக மலை முகட்டிலிருந்து மரங்களை கீழே தள்ளப்பட்ட இடத்திற்கு “டாப்ஸ்லிப்” (Top Slip) என்று பெயர் ஏற்பட்டுள்ளது. முதன் முதலாக இங்கே துவங்கிய ஒரு அஞ்சலகத்திற்குத்தான் “டாப் ஸ்லிப்” என்ற பெயர் அதிகாரப்பூர்வமாக ஆங்கிலேயர்களால் சூட்டப்பட்டது. இப்போது உள்ள அரசு நடுநிலைப்பள்ளிக்கு பக்கத்தில் உள்ள பள்ளத்தில் தான் அந்த காலகட்டத்தில் மரங்களை தூக்கி கீழே தள்ளிவிடும் வழியாக இருந்துள்ளது. 

ஆனைமலை காடுகளில் வெட்டவெட்ட குறையாமல் இருந்த மரங்களை வெட்டி வெளியே கொண்டுவர முடியாத நிலையில், 1850-ஆம் ஆண்டு, கேப்டன் மைக்கேல் என்பவரால், “டாப்சிலிப்”பிலிருந்து வால்பாறைக்கு செல்லும் வழியிலுள்ள சிச்சுழி என்ற இடம்வரை 11 கி.மீ. நீளத்திற்கு ஒரு பதை அமைக்கபட்டது. 1956- கேப்டன் கோஷ்லிங் என்பவரால், இப்போதுள்ள பரம்பிக்குளம் செல்லும் வழியில் ஒரு புதிய பாதை அமைத்துள்ளார். இந்த வழியில், யானைகளால் இழுக்கப்பட்ட பெட்டிகள் மூலம் மரங்கள் ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்துக்கு கொண்டு செல்லப்பட்டன. 

இங்கிலாந்தின் மறைமுகத் தேவைக்காக ஆனைமலையில் மீதமிருந்த மரங்களும் கோடாலிக்கு பலியானது. இந்த மலைப்பகுதியில், அதிகமான மரங்களை வெட்டி, காடு திருத்திய வேட்டைகாரன்புதூர் ஒப்பந்த(ஜாமீன்)தாரர் ஒருவருக்கு பிரிட்டிஷ் அரசு, யானை தந்தத்தால் ஆன பல்லக்கு ஒன்றைப் பரிசளித்தது என்று பழைய வரலாற்று கதை ஓன்று உண்டு. 

இங்கிலாந்தின் தேவைக்காகவும், இந்தியாவின் வளர்ச்சிக்காகவும் பெருமளவில் மரங்கள் வெட்டப்பட்டு காடுகள் அனைத்தும் மொட்டையான நிலையில், மழைப்பொழிவு குறைந்தது. காட்டு விலங்குகள் நாட்டுக்குள் படையெடுத்து. அடுத்தடுத்து ஏற்பட்ட மரத்தின் தேவைகளுக்காகவும் இந்திய காடுகளை வளர்க்கவேண்டிய அவசியம் பிரிட்டிஷ் அரசுக்கு ஏற்பட்டது. 

1855-ல், இந்தியா காடுகளுக்கென தனி சட்டம், தனி அமைச்சகம், தனித்தனி அதிகாரிகள் உருவாக்கப்பட்டது. இந்தியாவில் பணியாற்றும் ICS, IPS பணியாளர்கள் போலவே, வனத்துறைக்கு என தனியாக IFS என்ற புதிய படிப்பும் இங்கிலாந்தில் ஏற்படுத்தப்பட்டது. இதன் பயனாக ஆனைமலைக்காடுகலெல்லாம் அழிந்து போய் மொட்டையாக இருந்த 1915-ஆண்டு வாக்கில் (Top Slip) பகுதிக்கு “ஹியூகோ வுட்” (Hugo Francis Andrew Wood)என்ற IFS அலுவலர் வந்து சேர்ந்தார். 

செயல்திட்டம்:- 

குறிப்பிட்ட சில காட்டுப்பகுதிகளில் உள்ள மரங்களை குறைந்தது 25-ஆண்டுகளுக்குத் வெட்டாமலிருப்பது. அப்படியே தேவைக்காக வெட்டினாலும், ஒன்றுக்கு நான்காக மரங்களை நடுவது. இதன் மூலம் இயற்கையாக வளர்ந்துள்ள காடுகளின் வளம் குறையாது. மாறாக மரவளம் பெருகும் என்று அந்த செயல்திட்ட அறிக்கையில் “ஹியூகோ வுட்” கூறியிருந்தார். 

இந்தியா முளுவதுமுள்ள அரசு அலுவலகங்களுக்கு தேவையான நாற்காலி, மேசை செய்ய தேவையான மரசட்டங்கள் Top Slip-லிருந்து பயனமாகின. 

அப்போது ஒன்றிணைந்த சென்னை மாகாணத்திலும், இப்போது கேரளா மாநிலத்தின் கட்டுபாட்டில் உள்ள பரம்பிக்குளம் வனப்பகுதியிலும், ஆனைமலை புலிகள் காப்பக வணபகுதியிலும் உள்ள தேக்கு மரங்கள் அனைத்துமே “ஹியூகோ வுட்” போட்ட விதைதான் என்கின்றனர் அங்குள்ள காடர் இன பழங்குடி மக்கள். 

மருத்துவ வசையில்லாத அந்த கலத்தில், காசநோய் தாக்குதலுக்கு உள்ளானதாக தெரியவரும் இவர் பணி ஓய்வு பெற்ற பின் குன்னூரில் தங்கியுள்ளார். 24.10.1933-ல், மெட்ராஸ் ரீஜென்சி முதன்மை வனப்பதுகாவலருக்கு தான் எழுதிய உயில்(WIll) சாசனத்தில், தனது உடலை, தான் நேசித்த ஆனைமலை காட்டிலுள்ள தான் வசித்த,வந்த “மவுன்ட் ஸ்டுவார்ட்” வீட்டுக்கு அருகிலேயே புதைக்கப்பட வேண்டுமென்று எழுதியதுடன், அவரது கல்லறை அமைக்கவும் அதை பராமரிக்கவும் ஒரு தொகையையும் ஒதுக்கி வைத்திருந்தார். 

12.12.1933- அன்று அவர் மரணமடைந்த பின் அவரது உடல் “டாப் ஸ்லிப்” கொண்டுவரப்பட்டு அவர் வாழ்ந்துவந்த “மவுன்ட் ஸ்டுவார்ட்” இல்லத்தின் கிழக்கில் அடர்ந்த தேக்குகாடுகளுக்குள் புதைக்கப்பட்டுள்ளது. “ஹியூகோ வுட்” அவர்களின் உடல் இங்கே எடுத்துக்கொண்டு வரும் போது கிட்டத்தட்ட 12-மோட்டார் கார்களில் பிரிட்டிஷ் அரசின் பல துறை அதிகாரிகளும் “டாப் சிலிப்” பகுதிக்கு வந்துள்ளனர். 

சேத்துமடையிலிருந்து “டாப் சிலிப்” பகுதிக்கு இப்போது நாம் செல்லும் பாதை அப்போது “ஹியூகோ வுட்” அவர்களால் குதிரை சவாரிக்காக அமைக்கப்பட்ட பாதை. அதன் வழியாகத்தான் ஹியூகோ வுட்டின் உடல் மலைப்பகுதிக்கு எடுத்துச் செல்லப்பட்டது. ஹியூகோ வுட் உடலைச் சுமந்துகொண்டு சென்ற ஒரு சிறிய லாரியும், அதைத்தொடர்ந்து அதிகாரிகள் பயணம் செய்த 11-மோட்டார் கார்களும் தான் முதன்முறையாக டாப்சிலிப் மலை மீது ஏறிய வாகனங்கள் ஆகும். 

“ஹியூகோ வுட்” அவர்களை அடக்கம் செய்த போது ஏழு வயது சிறுமியாக இருந்த மெக்கரீன் என்ற கோவை மாவட்ட வன அலுவலரின் மகள் கடந்த 2004-ம் ஆண்டில் தனது 83-வயதில், இந்தியாவுக்கு வந்து “ஹியூகோ வுட்” அவர்களின் கல்லறையை பார்த்து விட்டு, “ஹியூகோ வுட்” உடலடக்கம் நடந்த அன்று நிகழ்ந்த சில நினைவுகளை அங்கிருந்த தமிழக வனத்துறை அதிகாரிகளுடன் பகிர்ந்து சென்றுள்ளார். 

18-ம் நூற்றாண்டில் அழிந்துபோன ஒரு மலையை “ஹியூகோ வுட்”. மறு சீரமைப்பு செய்துள்ளார். இந்த நூற்றாண்டில் அழிந்துபோன ஏராளமான மலைகளை மறு சீரமைப்பு செய்ய இன்னும் ஆயிரம் “ஹியூகோ வுட்” பிறக்கவேண்டும். 
பெ.சிவசுப்ரமணியம்.

--- கட்டுரை, படங்கள்: பெ.சிவசுப்ரமணியம்.




கோவை மாவட்டத்தில் உள்ள சுற்றுலா தலங்களில் முக்கியமானது வால்பாறை. கோவையில் இருந்து 100 கி.மீ. தூரத்திலும், பொள்ளாச்சியில் இருந்து 60 கி.மீ. தூரத்திலும் உள்ளது. தேயிலை தோட்டங்கள், அடர் வனப்பகுதிகள் என ரம்மியமான இடம். இங்கு சுற்றிப் பார்க்க ஏராளமான இடங்கள் உள்ளன. வாடகை வாகனம் எடுத்துக் கொண்டால் எளிதாக சுற்றிப் பார்க்கலாம். கோவையில் இருந்து பொள்ளாச்சி வழியாக வால்பாறை செல்ல வேண்டும். காலை உணவினை பொள்ளாச்சியில் முடித்து, செல்லும் வழியில் இருந்த ஆழியார் அணையில் வண்டி நின்றது. இங்குதான் கடந்தவாரம் 50 ஆண்டுகளை கொண்டாடிய ஶ்ரீதரின் காதலிக்க நேரமில்லை திரைப்படம் படகாக்கப்பட்ட இடம்.
IMG_5058830930643

அதிகாலையில் பனி மூட்டம் மூடியிருக்கும் வேளையிலும் மழைக்காலங்களில் மேகங்கள் உருவாகி தேயிலைத் தோட்டங்களைத் தழுவிச் செல்லும் காட்சி கண்ணுக்கு விருந்து, நெஞ்சிற்கு சுகம், கற்பனைக்கு ஊற்று. தேயிலைத் தோட்டங்களுக்கு இடையே மான் குட்டிகள் துள்ளி ஒடும் காட்சியும் அருமையானது.
IMG_5063954410061

தேயிலைத் தோட்டங்களுக்கு இடையே ஓடும் ஒரு நதி, பல திரைப்படங்களில் பாடல் காட்சிகளில் இடம்பெற்ற இடம். சிவாஜி கணேசன், ஜெயலலிதா நடித்த படம் சுமதி என் சுந்தரி படமாக்கப்பட்ட இடம் இங்குதான். பொட்டு வைத்த முகமோ என்று இருவரும் ஆடிப்பாடும் இடம் இதுதான்.இங்குள்ள தோட்டங்களுக்கு இடையே ஒரு பெருமாள் கோயிலும் உண்டு. மலையின் உச்சியில் அழகாகக் கட்டப்பட்டுள்ள அக்கோயிலில் சுவாமி தரிசனத்திற்குப் பின்னர் இரண்டு மூன்று மணி நேரம் அமைதியாகக் கழிக்கலாம். இப்பகுதிகளில் நாம் நகரங்களில் காணும் அணில் செந்நிறத்தில் இருப்பதை காணலாம்.
IMG_5071423686982

ஆழியாறை நெருங்குவதற்கு முன்பு வண்டியை நிறுத்துங்கள். அங்கு ஓர் அருவி உள்ளது. குரங்கருவி, மிகச் சிறிய அருவிதான் என்றாலும், அருவிக்கு சற்று முன்னால் குளம் போல நீர் தேங்கி இருக்கும் பகுதியில் அமர்ந்து கொண்டு சுகமாகக் குளிக்கலாம்.காலை நேரத்தில் குரங்கருவிக்கு நீராடச் செல்பவர்களுக்கு குறைந்த விலையில் வீட்டில் சுட்ட இட்லி, தோசை, வடை கிடைக்கும். மிக ருசியாக இருக்கும்.
ஆச்சரியபட வைத்த ஆழியார் அணை :
IMG_5077211870693

தோட்டம் சரியாக பராமரிக்கபடவில்லை என்ற வருத்தத்துடன் உள்ளே உளவினோம். நீண்ட படிகள் ஏறி தண்ணீர் தேக்கத்தை காணச்சென்ற போது அங்கே ஓர் அழகிய ரம்மிய காட்சி காத்திருந்தது. வாழ்வில் மிக ரசித்த காட்சியில் இது மூன்றாம் இடத்தை பிடிக்கின்றது. எல்லா நேரமும் இவ்வளவு அழகான காட்சி இதே இடத்தில் கிடைக்குமா என்பது சந்தேகம் தான். மேலெழுந்த சூரியனை மறைத்து நின்ற மேகங்கள். அந்த மேகங்களை எப்படியேனும் தாண்டி வெளியே வரவேண்டும் என்று துடித்த சூரியக்கதிர்கள். அந்த கதிர்கள் தூரத்தே இருந்த மலையில் அடிவாரத்தில் தண்ணீர் மீது பட்டு தெறித்த காட்சி. ஆகா. மீண்டும் கிடைக்குமா?
IMG_5089161235073

அந்தமான் தீவுகள் சென்றிருந்த போது, ஓரு கடற்கரையில் நாங்கள் நால்வர் மட்டும் இருந்தோம். அந்தி சாயும் பொழுது. கண்ணின் பார்வை எவ்வளவு தூரம் தெரியுமோ அவ்வளவு தூரம் கடல். இளநீல நிறத்தில் நீர். இடப்பக்கம் சின்ன மலைக்குன்று. தூரத்தில் சில குன்றுகள். வலப்பக்கம் சூரியன் மறைய காத்திருந்தது. அற்புதம் என்னவெனில் கடலில் அலைகள் ஏதும் இல்லை. முட்டி அளவு தண்ணீர் மட்டுமே சுமார் அரை கிலோ மீட்டர் தூரத்திற்கு. அந்த நேரத்தில் புகைப்படங்களில் ஆர்வம் ஆரம்பிக்காத நேரம். கருவியில் படம்பிடிக்காமல் போனாலும் இன்றும் கண் முன்னே விரிகின்றது.

ஆழியார் அணையில் சிறிது நேரம் கழித்துவிட்டு, எதிரே இருந்த மீன் காட்சியகத்திற்கு சென்றோம். இங்கு மீன்களும் அழகு, அதனைவிட அழகு நேர்த்தியாக மீன்களுக்கு கீழே அடிக்கி வைத்திருந்த கற்கள். வித வித வண்ணங்களில், வேறு வேறு வடிவங்களில், மிக நேர்த்தி. கண்டிப்பாக இந்த சின்ன காட்சியகத்தை அட இங்க என்ன இருக்க போகுது என்று விட்டுவிடாதீர்கள்.

தேயிலை தோட்ட தேன்:

மலை ஏறத்துவங்கியதும் சின்னதாக ஓரு அருவி இருந்தது. ஆள் நடமாட்டமே இல்லை. இரண்டே நிமிடங்களில் அங்கே நான் முதலில் அருவியில் குளிக்க, அப்பாவும் வாகன ஓட்டுனர் விஸ்வநாதனும் சேர்ந்து கொண்டனர். முந்தைய நாள் கோவை குற்றாலத்தில் குளித்ததை விட நீரின் வெப்பம் சற்று கூடுதலாக இருந்தது. அரை மணி நேரம் அங்கேயே நீரில் அமர்ந்திருந்தோம். பின்னர் இன்னும் பார்க்க நிறைய இருக்கின்றது என வெளியே வந்துவிட்டோம். அப்பா கொஞ்ச நேரம் மரம் நிழலில், அருவின் ஓசையில், மெல்லிய காற்றில் திட்டு ஒன்று உறங்கினார். இந்த சமயம் விசுவின் காதல் கதை வெளிவந்தது. தான் எப்படி தன் மனைவியை காதலித்து கைப்பிடித்தார், பிரச்சனைகள் என்ன, எப்படி இப்போது சமாளிக்கிறார்,குழந்தை, தொழில் என்று பேசிக்கொண்டே இருந்தார். அண்ணா அண்ணா என்று தான் என்னை அழைத்தார். அந்த மனிதனுக்குள் தான் எத்தனை அனுபவம், இவை அனைத்தையும் மூடிக்கொண்டு பேசியபடியே பயணம் முழுக்க வந்தார்.

மொத்தம் நாற்பது ஊசிமுனை வளைவுகள் (Hairpin Bend). மெதுவாக வண்டி ஏறியது. வழியில் எங்கெங்கெல்லாம் அழகான காட்சி தென்படுகின்றதோ அங்கெல்லாம் நின்றது. மற்ற ஓட்டுனராக இருந்தால் சலிப்புற்று போயிருப்பார்கள். வேறு எங்கும் இதுவரை காணக்கிடைக்காத அளவிற்கு எங்கும் தேயிலைத்தோட்டங்கள். வால்பாறையை அடைந்ததும் அப்பாவின் வங்கி கிளைக்கு சென்று எங்கு தங்கலாம் என விசாரித்தோம். மதிய உணவினை முடித்துவிட்டு கொஞ்ச நேரம் உறங்கிவிட்டு சோலையார் அணைக்கு கிளம்பினோம்.

IMG_5103148802663


சோலையார் அணை :

சோலையார் அணை சுமார் 15 கி.மீ தொலைவில் இருந்தது. மெதுவாக வண்டி ஊர்ந்து சென்றது. அணையில் ஏதோ வேலை செய்து கொண்டிருந்ததால், மின்சாரம் தயாரிக்கும் இடத்திற்கு செல்ல தீர்மானித்தோம். ஒரு வண்டி மட்டும் செல்லக்கூடிய மண் பாதை. விசு லாவகமாக வண்டி ஓட்டி சென்றார். வழியில் இருவர் வண்டியை வழிமறித்தனர். ஒரு மலையாளகாரர், மற்றொருவர் தமிழர். Fullஆக இருந்தார். “பாத்து போங்க அங்க யானை ஒன்னு இருக்கு..”. ஏதோ சாதாரணமாக, டீ சாப்பிடுகின்றீர்களா என்பது போல சொன்னார். “யானை ஏதாச்சும் செய்யுமா?” என எங்கள் வண்டியில் இருந்து. அவரும் சலிக்காமல். “நேத்து ஒரு பஸ்ஸை வழிமறிச்சி, வெரட்டிடுச்சி. மெதுவா போனா எதுவும் பண்ணாது, பயப்பட வேண்டாம்..” வடிவேலு வேலு திரைப்படத்தில் சொல்லுவார் “பயப்படதாவங்க எல்லாம் பயப்படுறவங்க கிட்ட பயப்படாம போ பயப்படாம போன்னு சொல்றீங்களே”.. வண்டி சீறிக்கொண்டு சென்றது. ஓட்டலை நோக்கி. அருகே இருந்த மார்கெட்டிற்கு சென்று இரவு எங்கு உண்ணலாம் என்று தேடினோம். கண்டுபிடித்தோம். உண்டோம். குடும்ப சபை கூடி முக்கிய அறிவிப்புகள், முடிவுகள் எடுத்து உறங்கினோம்.

IMG_5115850575296


காலை 4 மணிக்கு அப்பா எல்லோரையும் எழுப்பிவிட்டார். வாங்க இரவினை ரசியுங்கள் என்று படாதபாடு படுத்திவிட்டார். மெட்டை மாடிக்கு சென்று நட்சத்திரங்கள் மிக அருகில் இருப்பதை கண்டு, குளிர் தாங்காமல் மீண்டும் போர்வைக்குள் புகுந்தேன். கலைஞரின் கட்டுரைகள் புத்தகத்தை படித்தபடி மீண்டும் தூங்கினேன். தூங்கினோம். ஒழுங்காக காலை ஆறு மணிக்கு எழுந்திருந்தால் நல்ல நடை சென்றிருக்கலாம்.

காலை நேராக ஆணைமுடி சிகரத்திற்கு சென்றோம். வழியில் சித்தி விநாயகர் கோவிலுக்கு சென்றோம். அங்கே பல லட்சம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள விநாயகர் சிலை அற்புதமாக இருந்தது. அந்த கோவிலில் இருக்கும் பூசாரி ரசிக்கவல்ல மனிதர். எழுபத்தி இரண்டு வயதாகின்றது. An interesting humorous wonderful Personality (இது பாலச்சந்தர், பாரதிராஜா மாதிரி வசனங்கள் நடுவே பீட்டர் விடும் ஒரு முயற்சி ) . விசுவும் அவரும் செம கலக்கல். ஆணைமுடி என்கின்ற கிராமத்தில் தேநீர் அருந்தினோம். அங்கே எங்களோடு சிவா (3092) என்பவர் சேர்ந்து கொண்டார். சிவா உள்ளூர்வாசி. அப்பா காலத்தில் திருநெல்வேலியில் இருந்து இங்கே வந்துவிட்டனர். தொழிற்சாலையில் பணி புரிகின்றார். நாங்கள் சென்ற தினம் விடுமுறையில் இருந்தார். அந்த ஊரைப்பற்றியும் தொழிலாளிகளின் கஷ்டங்களை பற்றியும் சொன்னார். எங்களை ஆணைமுடி சிகரத்திற்கு அழைத்து சென்றார். ஆணைமுடி சிகரம் , தென் இந்தியாவில் மேகக்கூட்டங்கள் வரும் மிக உயர்ந்த சிகரமாம். கலக்கலான இடம். அருகே சின்ன முருகன் கோவிலுக்கு அழைத்து சென்றார். சுயம்பு கோவில்.

அங்கிருந்து தேயிலை தோட்ட நடுவே பிருந்தாவனம் போல இடம் ஒன்றுக்கு அழைத்து சொன்றார். ஒவ்வொரு செடியின் மகிமை, இடம் பற்றி, மரம் பற்றி ஏராளமான விஷயம் சொன்னார். மூன்று மகன்கள். அடுத்த முறை செல்லும் போது ஆணை முடியில் ஒரு வீடு எடுத்து கொடுத்து, சமையலுக்கு ஏற்பாடு செய்வதாக வாக்களித்தார். (அடுத்த பயணம் நண்பர்களோடு விரைவில் !!!) ஆரஞ்சு தோட்டத்திற்கு சென்றோம். வால்பாறையினை சுத்தி வந்தோம். மதியம் உணவு முடித்து மீண்டும் கோவைக்கு பயணித்தோம்.

நிச்சயமாக நேரம் போதவில்லை. மேலும் பெற்றோர்களுடன் சென்றதால் அதிக இடங்களை கண்டுபிடிக்க முடியவில்லை. நிச்சயம் மூன்று நாட்கள் தங்கி நன்றாக ரசிக்க ஏராளமான இடம் இங்கே இருக்கின்றது.

IMG_5123320572715


பார்க்க வேண்டிய இடங்கள்:-

1. சோலையார் அணை
2. நீரணை
3. அதிரம்பள்ளி அருவி (20 கி.மீ) (புன்னகை மன்னன் அருவி)
4. ஆனைமுடி சிகரம்
5. பூஞ்சோலை
6. பாலாஜி கோவில்
7. சித்தி விநாயகர் கோவில்
8. காடம்பறை அணை
9. குரங்கு அருவி (Monkey Falls)

எங்கு தங்குவது:-

ஒரே ஒரு நல்ல விடுதி மட்டும் இருக்கின்றது. தங்கலாம் !!! : Green Hill Hotels P.Ltd, StateBank Road, Valparai Ph: 044523- 222861 . மின்னஞ்சல் : greenhillhotel@hotmail.com
எப்படி செல்வது:-

கோவை, பொள்ளாச்சியில் இருந்து வால்பாறைக்கு பஸ் வசதி உள்ளது. வால்பாறை – டாப்சிலிப் 3 நாள் பேக்கேஜ் டூரில், வால்பாறையில் இருந்து டாப்சிலிப் வரை சுற்றி பார்க்கலாம். பொள்ளாச்சியில் இறக்கி விடுவார்கள். 8 பேர் செல்லும் வாகனத்துக்கு ரூ.5 ஆயிரம் முதல் ரூ.6 ஆயிரம் வரை ஆகும். வால்பாறையில் தங்குமிடங்கள், ஓட்டல்கள் உள்ளன. கோவையில் இருந்து பொள்ளாச்சி சென்று அங்கிருந்து பேருந்தில் செல்லலாம். வால்பாறையில் ஜீப்புகள் கிடைக்கின்றது. அல்லது கோவையில் இருந்தே ஒரு வண்டி வைத்துக்கொண்டு போகலாம், வழியில் நின்று ஆற அமர ரசிக்கலாம்.

உணவு:

வெளியூருக்கு செல்லும் போது இந்த உணவு பிரச்சனை பெரும் பிரச்சனையாக இருக்கும். வால்பாறையில் எங்கு விசாரித்ததிலும் ஒரே ஒரு ஓட்டலில் மட்டும் சாப்பிட சொல்லி பரிந்துரைத்தார்கள். உணவு நன்றாக கிடைக்கும். லட்சுமி செட்டிநாடு மெஸ். ஐந்து சகோதரர்கள் நடத்துகின்றார்கள். இவர்களை விசாரித்தால் கூட எங்கெல்லாம் செல்லலாம் என்று உதவுவார்கள்.

வால்பாறை போன்ற இடங்களில் இங்கு தான் அழகாக இருக்கும் என்று சொல்ல முடியாது, அவரவர் ரசனைக்கேற்றவாரு எங்கும் நின்று ரசிக்கலாம். இதுவரை வால்பாறையை சிற்றுலா தளமாக தமிழக அரசு அறிவிக்கவில்லை என்ற வருத்தம் இருந்தாலும், அப்படி அறிவிக்காத்தால் இன்னும் இந்த அழகு கெடாமல் பத்திரமாக பாதுகாக்கப்படுகின்றது என்பதில் ஆனந்தம்.

பார்க்க வேண்டிய இடங்கள்:

பாலாஜி கோயில் பூங்கா:

வால்பாறையில் இருந்து கருமலை வரை வாகனத்தில் சென்று, அங்கிருந்து அரை கி.மீ. நடந்து சென்றால் பாலாஜி கோயில். கோயிலை சுற்றி பூத்து குலுங்கும் மலர்கள் கண்களை கவரும். சிறுவர் பூங்கா ரம்மியமானது. வால்பாறையில் பளிங்கு கல்லால் உருவாக்கப்பட்ட சித்தி விநாயகர் கோயில், திருப்பதி போலவே மலையில் கருமலை பாலாஜி கோயில் ஆகியவை உள்ளன. இதன் அருகே அழகிய பூங்கா, இறைச்சல்பாறை நீர்வீழ்ச்சி உள்ளது. வால்பாறையில் மே 31-ம் தேதி தொடங்கி 3 நாட்களுக்கு கோடை விழா நடக்கிறது.

அக்காமலை புல்வெளி:

பாலாஜி கோயிலில் இருந்து 7 கி.மீ. தொலைவில் உள்ளது. பச்சை பட்டாடை உடுத்தியதுபோன்ற அழகிய புல்வெளி. இதை காண வனத்துறையிடம் அனுமதி பெற வேண்டும். முகவரி: வனத்துறை அலுவலகம், பனகல் மாளிகை, சைதாப்பேட்டை, சென்னை. வெள்ளமலை குகை: கருமலையில் இருந்து 5 கி.மீ. தொலைவில் சிறுகுன்றா சாலையில் அமைந்துள்ளது. சின்னக்கல்லார் அணையில் இருந்து மலையை குடைந்து 4 கி.மீ. தூரம் அமைக்கப்பட்ட குகை, கால்வாய் ஆகியவற்றை காணலாம்.

சின்னக்கல்லார் நீர் வீழ்ச்சி + சின்னக்கல்லார் அணை:

வெள்ளமலை குகையில் இருந்து 17 கி.மீ. தொலைவில் உள்ளது. வெள்ளமலை குகையின் நுழைவாயில் இங்கு உள்ளது. அணையில் இருந்து நீர் குகைக்குள் செல்வதை பார்க்கலாம். சின்னக்கல்லார் நீர் வீழ்ச்சி: சின்னக்கல்லார் அணையில் இருந்து 2 கி.மீ. தூரத்தில் அமைந்துள்ளது. மர தொங்கு பாலம் வழியாக செல்ல வேண்டும். தென்னிந்தியாவின் சிரபுஞ்சி என பெயர் பெற்றது. அருவிக்கு செல்ல கட்டணம் ஒரு நபருக்கு ரூ.115.

கீழ்நீராறு அணை:

சின்னக்கல்லார் நீர் வீழ்ச்சியில் இருந்து 12 கி.மீ. தூரத்தில் உள்ளது. அடர் வனப்பகுதிக்குள் அமைந்த அணை.

கூழாங்கல் ஆறு:

கீழ்நீராறு அணையில் இருந்து 8 கி.மீ. தூரம். இருபுறமும் தேயிலை தோட்டங்களுக்கு இடையில் அமைந்துள்ள இந்த ஆறு கூழாங்கற்கள் நிறைந்தது. இங்கிருந்து 3 கி.மீ. தூரத்தில் வால்பாறையை அடையலாம்.

வில்லோனி பள்ளத்தாக்கு:

வால்பாறையில் இருந்து 5 கி.மீ. தூரத்தில் உருளிக்கல் ரோட்டில் உள்ளது. ஆங்கிலேயர்கள் வால்பாறைக்கும் வில்லோனிக்கும் இடையில் விஞ்ச் அமைத்து பயணித்துள்ளனர். வில்லோனியில் விஞ்ச் அமைத்ததற்கான தடயங்கள் இப்போதும் உள்ளன. இங்கிருந்து வால்பாறைக்கு செல்லும் வில்லோனி குதிரைப்பாதை காணலாம். அதற்குள் செல்ல அனுமதி இல்லை.

மானாம்பள்ளி நீர் மின் உற்பத்தி நிலையம்:

வில்லோனியில் இருந்து 20 கி.மீ. தொலைவில் உள்ள உருளிக்கல் பகுதியில் உள்ளது. சோலையார் அணையில் இருந்து பரம்பிக்குளம் அணைக்கு கொண்டு செல்லப்படும் நீர் இங்கு மின்சாரம் உற்பத்தி செய்து வெளியேற்றப்படுகிறது. இங்கிருந்து வெளியேறும் நீர் மீன்பாறை ஆறாக பரம்பிக்குளம் அணைக்கு செல்கிறது. மானாம்பள்ளி நீர் மின் உற்பத்தி நிலையம், மீன்பாறை செல்ல வனத்துறையின் அனுமதி பெற வேண்டும். போன்: 04259&235385.
சோலையார் அணை: மானாம்பள்ளி மின் உற்பத்தி நிலையத்தில் இருந்து 20 கி.மீ. தூரம். ஆக்டோபஸை போல் 75 கி.மீ. சுற்றளவில் அமைந்துள்ள அணை.

தமிழகத்திலேயே உயரமானது (345 அடி). அணையில் இருந்து கேரளாவுக்கு செல்லும் ஆற்று பள்ளத்தாக்கு ரம்மியமானது. இங்கு மீன் சாப்பாடு பிரசித்தம்.

அதிரப்பள்ளி அருவி:

சோலையார் அணையில் இருந்து சாலக்குடி செல்லும் ரோட்டில் 50 கி.மீ. தூரத்தில் உள்ளது. புன்னகை மன்னன் படத்தில் இடம் பெற்ற அருவி. அருவியும், அருவிக்கு முன்பாக நீண்ட சமவெளி ஆறும் பிரமிக்க வைப்பவை. நல்லமுடி பூஞ்சோலை: சோலையார் அணையில் இருந்து 15 கி.மீ. தொலைவில் முடீஸ் ரோட்டில் உள்ளது. இயற்கை எழில் சூழ்ந்த இடம். பள்ளத்தாக்கில் யானைகள், காட்டெருமைகளை காணலாம்.

ஹைபாரஸ்ட் நம்பர்பாறை காட்சி முனை:

நல்லமுடி பூஞ்சோலையில் இருந்து 5 கி.மீ. தொலைவில் உள்ளது. அந்த காலத்து தமிழக, கேரள சமஸ்தான எல்லை சின்னங்களை காணலாம். இங்கிருந்து கேரளா மலைவாழ் குடியிருப்பு மற்றும் விவசாய பகுதிகள், இடைமலையாறு, இடைமலையாறு அணை ஆகியவற்றை காணலாம்.

புதுத்தோட்டம்:

வால்பாறையில் இருந்து 3 கி.மீ. தூரத்தில் பொள்ளாச்சி ரோட்டில் அமைந்துள்ளது. காட்டெருமைகள், காட்டு பன்றிகள், சிங்கவால் குரங்குகள், மான்கள் கடந்து செல்லுமிடம்.

கவர்க்கல்:

வால்பாறை & பொள்ளாச்சி மலைப்பாதையில் உயர்வான பகுதி. வால்பாறையில் இருந்து 13 கி.மீ. தொலைவில் உள்ளது. இப்பகுதி பெரும்பாலும் அடர்த்தியாக பனி சூழ்ந்திருக்கும். வாகனத்தில் விளக்கை எரிய விட்டு பாதுகாப்பாக ஓட்டிச் செல்ல வேண்டும். யானைகள் கடக்கும் பகுதி.

வாட்டர்பால்ஸ்:

வால்பாறை & பொள்ளாச்சி மலைப்பாதையில் 20 கி.மீ. தொலைவில் உள்ளது. குளிக்க வசதியில்லை. பார்த்து ரசிக்கலாம். இங்கு நறுமணம் மிக்க ஜகருண்டா வகை மலர்கள் பூத்துக்குலுங்கும். ஒரிஜினல் டீ கிடைக்கும்.

டைகர் காட்சி முனை:

வால்பாறை & பொள்ளாச்சி மலைப்பாதையில் 22 கி.மீ. தொலைவில் உள்ளது. இங்கிருந்து பார்த்தால் வனப்பகுதிக்குள் அமைந்த காடம்பாறை கிராமம், ஆதிவாசி குடியிருப்புகளை காணலாம்.

லோம்ஸ் வியூ:

வால்பாறை & பொள்ளாச்சி மலைப்பாதையில் மொத்தமுள்ள 41 ஹேர்பின் வளைவுகளில், கீழிருந்து மேலாக உள்ள 9வது வளைவில் அமைந்துள்ளது. இங்கிருந்து ஆழியார் அணையையும், பொள்ளாச்சி வரை தெரியும் பசுமையையும் காணலாம்.

மங்கி ஃபால்ஸ்:

இங்குதான் பகலில் ஒர் இரவு படத்தில் வரும் பாடல் இளமை எனும் பூங்காற்று, ஶ்ரீதேவியின் பாடல் படமாக்கப்பட்ட இடம். வால்பாறை & பொள்ளாச்சி மலைப்பாதையில் 40 கி.மீ. தூரத்தில் அமைந்துள்ளது. இங்கு குளிக்க அருகேயுள்ள வனத்துறை செக்போஸ்ட் அலுவலகத்தில் டிக்கெட் வாங்க வேண்டும். நபருக்கு ரூ.15, கேமரா கட்டணம் ரூ.25. அருவியில் குரங்குகள் அதிகம்.

ஆழியார் அணை:

வால்பாறை மலையின் அடிவாரத்தில் அமைந்துள்ளது. 120 அடி உயரமுள்ள அணை. ஆண்டு முழுவதும் 100 அடிக்கு குறையாமல் நீர் இருக்கும். அணைக்கட்டில் பூங்கா உள்ளது. படகு சவாரியும் செய்யலாம். சுடச்சுட பொரித்த மீனை இங்கு சுவைக்கலாம். அணையின் எதிரே உள்ள மீன்காட்சியகத்தில் வெளிநாட்டு மீன்கள் உள்ளன. அணையை ஒட்டி வேதாத்ரி மகரிஷியின் அறிவுத்திருக்கோயில் உள்ளது.

மாசாணியம்மன் கோயில்:

பொள்ளாச்சியில் இருந்து டாப்சிலிப் செல்லும் வழியில் ஆனைமலை ஊர் உள்ளது. இங்குள்ள மாசாணியம்மன் கோயில் பிரபலமானது.

டாப்சிலிப்:

தமிழக – கேரள எல்லையில் உள்ள டாப் ஸ்லிப்பை நோக்கி. இந்திராகாந்தி தேசியப் பூங்கா என்று அழைக்கப்படும் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிக்கு உட்பட்டது டாப் ஸ்லிப். இங்குள்ள பெரிய மரங்களை வெட்டி உருட்டிவிடுவார்களாம். தடையேதும் இன்றி அந்த கட்டைகள் மலையடிவாரத்திற்கு வந்து விழுமாம். அதனால் டாப் ஸ்லிப் என்று பெயர் வந்தது.

இவ்விடத்தின் உண்மை பெயர் வேட்டைக்காரன் புதூர். இங்கு பிளாஸ்டிக் பொருட்களோ, இரைச்சல் போடும் இசைக் கருவிகளுக்கோ, போதைப் பொருட்களுக்கோ அனுமதி இல்லை. மறைத்துக் கொண்டு போய் சிக்கனால் சிறைதான்.

டாப் ஸ்லிப்பின் நுழைவுப் பகுதியிலேயே மிக விசாலமான புல் வெளியைக் காணலாம். அங்குள்ள தமிழ்நாடு வனத்துறையின் விருந்தினர் மாளிகைகளில் தங்கும் வாய்ப்பு கிடைத்தால் இரவில் உலவ வரும் கரடியில் இருந்து சிறுத்தை வரை எல்லாவற்றையும் பார்க்கலாம்.

டாப் ஸ்லிப்பில் இருந்து காட்டிற்குள் சென்று சுற்றிப்பார்க்க யானை சவாரி வசதி உள்ளது. இங்கிருந்து மேலும் சிறிது தூரம் சென்றால் கேரள எல்லை. கேரள எல்லைப் பகுதிக்குள் போகும் அந்த சாலையில் அடர்ந்த வனப்பகுதிக்குள் வாகனத்தில் சென்றால் தமிழகமும், கேரளமும் இணைந்து நிர்வகித்து வரும் பரம்பிக்குளம் ஆழியாறு திட்டத்தின் கீழ் வரும் 3 அழகிய அணைக்கட்டுகளைப் பார்க்கலாம்.

ஒன்று பெருவாரிப்பள்ளம், மற்றொன்று தூணக்கடவு, எல்லாவற்றுக்கும் மேல் இறுதியாக அந்த சாலையின் முடிவாக மலையின் உச்சியில் பரம்பிக்குளம் தண்ணீரை தேக்கி வைக்க கட்டப்பட்டுள்ள பரம்பிக்குளம் அணை. 2700 அடி உயரத்தில் இந்த அணை உள்ளது.

இப்பகுதி மிக அருமையான பொழுதுபோக்கிடமாகும். மலையும், நீரும், பறவைகளின் ஒலியும், காற்றும் சுகமான அனுபவங்கள்.

வேட்டைக்காரன் புதூரில் இருந்து பரம்பிக் குளம் அணை வரை செல்லும் பாதையில் ஆங்காங்கு நிறுத்தி அடர்ந்த வனப்பகுதியை ரசித்துப் பார்க்கலாம்.

இரண்டு நாட்கள் போதும். ஒரு நாள் வால்பாறை, மறுநாள் டாப் ஸ்லிப். மனதுக்கு இதம் தரும் இனிய சுற்றுலாவாக இருக்கும்.

பொள்ளாச்சியில் இருந்து 15 கி.மீ. சமதளத்திலும், 13 கி.மீ. மலைப்பாதையிலும் சென்றால் டாப்சிலிப்பை அடையலாம். கடல்மட்டத்துக்கு மேல் சுமார் 450 மீட்டர் உயரத்தில் உள்ளது. டாப்சிலிப்பில் யானை சவாரி செல்லலாம். 4 பேருக்கு கட்டணம் ரூ.400. வனத்துறையின் வாகனத்தில் சுற்றி பார்க்க ஒரு நபருக்கு கட்டணம் ரூ.25. இங்கு மூலிகை பண்ணையும் உள்ளது.

பரம்பிக்குளம் அணை:


பரம்பிக்குளம் அணை கேரளாவில் இருந்தாலும், அணை நிர்வாகம் தமிழக பொதுப்பணித்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. சோலையார் அணையில் இருந்து வரும் நீர் இங்கு தேக்கமாகிறது. டாப்சிலிப்பில் இருந்து 20 கி.மீ. தூரத்தில் உள்ளது. கேரள எல்லையில் இருந்து கேரள வனத்துறை வாகனத்தில் பரம்பிக்குளம் அணை வரை வன உலா செல்லலாம். நபருக்கு கட்டணம் ரூ.140.

Tuesday 4 June 2019

அத்திப்பூ athippoo



அத்திப்பூ

கம்பம் அருகே கேகே பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் உள்ள மரத்தில் அத்திப்பூ பூத்துள்ளது.ஐம்பது ஆண்டுகளுக்கு ஒருமுறை பூக்கும் அத்தியை மனிதன் வாழ்நாளில் ஒருமுறை மட்டுமே பார்க்க குடியும்.
காணக்கிடைக்காதது அரிதாக கிடைத்தால் அதை ‘அத்திப் பூத்தாற்போல’ என்பார்கள். காரணம், அத்தி மரத்தில் பூ பூப்பதை பார்ப்பது அரிது. கண்டு காய் காய்க்கும், காணாமல் பூ பூக்கும் என்ற விடுகதையே அத்தியினால் தான் உருவானது.அத்தி மரத்தின் இலை, பால், பழம், பிஞ்சு, காய், பட்டை என அனைத்துமே மருந்தாகவோ அல்லது துணை மருந்தாகவோ சித்த மருத்துவத்தில் பயன்படுகிறது. கம்பம் அருகே உள்ள காமயகவுண்டன்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஏழு அத்தி மரங்கள் உள்ளன. இதில் ஒரு மரத்தில் ஒரு பூ மட்டும் பூத்துள்ளது.

தற்போது அத்திப்பழ சீசன் என்பதால் இங்குள்ள மரங்களில் அத்தி பழுத்துள்ளது. பழுத்த பழங்கள் வீணாக மண்ணில் விழுந்து கிடக்கிறது. இதன் மகத்துவமும், மருத்துவப்பலனும் மக்களுக்கு தெரியாததால் ஒருசிலரைத்தவிற யாரும் இந்த பழங்களை எடுத்துச் செல்வதில்லை.அத்தியின் மகத்துவம் குறித்து அரசு ஆரம்ப சுகாதார நிலைய சித்தமருத்துவர் சிராஜூதீன் கூறுகையில், ` அத்திப் பழம் மருத்துவ குணங்கள் நிறைந்த பழமாகும். குறிப்பாக, சர்க்கரை நோய், சர்க்கரைப் புண், உடல் வீக்கம், நீர்க்கட்டிகள், புண், சொறி சிரங்கு, நமைச்சல் போன்ற பாதிப்புகள் உள்ளவர்களுக்கு அத்திப் பழம் மிகச் சிறந்த பலன் தருகிறது. மேலும் இவை கல்லீரல் மண்ணீரல் அடைப்புகள், வீக்கங்களைப் போக்கும். ஆசனவாய் வெடிப்பு மற்றும் மூலத்திற்கு அருமருந்தாகும். கண்களின் பார்வையைக் கூட்டும் வைட்டமின் ஏ, நிக்கோடினிக் அமிலம், அஸ்கார்பிக் அமிலம் போன்றவை அத்திப் பழத்தில் பெருமளவில் அடங்கியிருக்கின்றன. மற்ற பழங்களைக் காட்டிலும் அத்திப் பழத்தில் தாது உப்புகளும், சத்துப் பொருட்களும் அடங்கியிருக்கின்றன. இரும்புச் சத்து அத்திப் பழத்தில் அதிகமாக இருப்பதால், இதைத் தொடர்ந்து சாப்பிட்டு வருபவர்களுக்கு இரத்தச் சோகை நோய் வராது. இரத்த உற்பத்தி அதிகரித்து, நோய் எதிர்ப்பாற்றலும் உடலில் அதிகரிக்கும். எனவே அத்திப்பழங்களை வீணாகாமல் பயன்படுத்த வேண்டும்’ என்று கூறினார்.


ஒரு இடத்தில் அத்தி மரம் இருக்கிறதென்றால் அதற்கு கீழே நீரோட்டமும் நன்றாக இருக்கிறது என்பது அறிகுறி. பூமிக்கு அடியில் நீரூற்று, நீரோடை குறைந்த அடிகளில் இருக்கும் என்ற ஐதீகமும் உண்டு. இதனை நாங்கள் பரிசோதித்தும் பார்த்திருக்கிறோம். 

அத்திப் பழத்தில் செய்த சிலவற்றை எல்லைத் தெய்வங்களுக்கு, சக்தி பீடங்கள் என்று சொல்வார்களே காஞ்சி காமாட்சி, ஆதிசங்கரர் செய்த சக்தி 108 சக்தி பீடங்களில் உள்ள அம்பாளுக்கு நெய் வேத்தியமாக அதனை பயன்படுத்துவார்கள். அத்தி பழத்தில் அடை மாதிரி தட்டி அதனை நெய் வேத்தியத்திற்குப் பயன்படுத்துவார்கள். இதுபோன்று அம்பாளுக்கு வைப்பதன் மூலம் நிறைய சக்தி கிடைக்கும் என்பது போன்றும் உண்டு. 
அடுத்து, மதுரையில் கம்ப ராமாயத்ணதை அரங்கேற்றம் செய்தார்களே, அது இந்த அத்தி மரத்தில் வைத்துதான் செய்தது. சரியானதா, தகுதியானதா, தரமானதா இருந்தால் அந்த ஓலைச் சுவடி கட்டு அத்தி மரப் பலகையில் நீடிக்கும், இல்லையென்றால் மூழ்கிவிடும். இதுபோன்ற தெய்வீகச் சக்தி உடையதும் இந்த அத்தி. 

இதில் அத்திப்பூ பூப்பதே தெரியாது. அதனால் அத்தி மரப் பட்டையை தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து குடித்தால் உடம்பு நன்றாக விருத்தியாகும். ரத்த விருத்தியெல்லாம் கொடுக்கும். அத்திக்காய், அத்திக்காய் பிஞ்சு இதையெல்லாம் பொரியல் செய்து சாப்பிட்டால் எல்லா சக்தியும் கிடைக்கும். குறிப்பாக தசை இறுகும். சிலருக்கு தொங்கு தசை இருக்கும். அதெல்லாம் நீங்கி, எலும்பு வலுப்பெறும். 
அதேபோல, அத்தி மரப்பலகையில் உட்கார்ந்து சில செயல்கள் செய்தால் அந்தச் செயல் நீடிக்கும். தோஷங்கள் நீங்குவதற்கு மாட்டுக்கு அகத்திக்கீரை கொடுப்பார்கள். அதைவிட அத்தி இலை கொடுத்தால் மிகவும் விசேஷம். எல்லா தோஷமும் நீங்கும். அத்திப் பழத்தைச் சாப்பிட்டால் வாய் துர்நாற்றம் முடி வலுவடைந்து வளர்வதற்கும் பயனுள்ளதாக இருக்கும். மூட்டு வலி போன்ற பிரச்சனைகளையும் நீக்கும். விட்டமின் ஏ, பி, சி, டி என்று எல்லாமே இருக்கிறது. அதனால் அத்தி மரம் என்பது அவ்வளவு விசேஷமான மரம். 
அதனால் அத்தி மரத்தை நட்டு, அதைப் பராமரித்து அதில் கிடைக்கக் கூடியதையெல்லாம் எடுத்து சாப்பிட்டு வந்தால் அது நல்லது. தவிர, தோஷ நிவர்த்தியாகவும் அது இருக்கிறது. கணவன், மனைவி பிரிந்தவர்களையும் அது சேர்க்கும். எல்லா வகையிலும் பலமானதாக இருக்கும். இதுபோன்ற அமைப்புகள் இதற்கு உண்டு.

shenbagavalli Dam



shenbagavalli Dam



இன்றைய முல்லைப்பெரியாறு அணைக்காக தமிழகம் மற்றும் கேரளாவும் அடித்துக்கொள்வது உலகம் அறிந்து ஒன்று. ஆனால் இந்த முல்லைப்பெரியாறு அணைக்கே நதிமூலம் சிவகிரி மலைகள் என்றால் பலருக்கும் தெரியாது. தமிழகம், கேரளத்தை ஒன்றிணைக்கும் மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதியின் அடிவாரப் பகுதியில் அமைந்துள்ளது சிவகிரி.
செண்பகவல்லி அணை... முல்லைப் பெரியாறு அளவுக்குப் பேசப்படாத ஓர் அணையின் கதை!
இன்றைய சூழ்நிலையில் தமிழகம் தண்ணீருக்காக பிற மாநிலங்களைச் சார்ந்தே இருக்க வேண்டியுள்ளது. காவிரியாக இருந்தாலும் சரி, முல்லைப்பெரியாறு அணையாக இருந்தாலும் சரி பக்கத்து மாநிலங்களின் ஒப்புதல் இல்லாமல் தமிழகத்துக்குள் தண்ணீர் வருவது கடினம்தான். மன்னராட்சி காலத்தில் மக்களுக்காக உருவாக்கப்பட்ட தண்ணீர்த் திட்டங்கள் மக்களாட்சி காலத்தில் தண்ணீரை வைத்து அரசியல் நடத்தும் அரசியல்வாதிகள் காலில் மிதிபட்டு வருவது கூடுதல் சோகம். 

இப்படியான சூழ்நிலையில் அரசுகளின் அலட்சியத்தால் ஒருதலைமுறை மறந்துபோன தென்தமிழகத்தைச் செழிக்க வைத்த ஓர்  அணைக்கட்டு மறக்கடிக்கப்பட்ட வரலாற்றைத்தான் பார்க்கப்போகிறோம். தென்தமிழகத்தின் முக்கிய மாவட்டமான திருநெல்வேலி மாவட்டம் வாசுதேவநல்லூரிலிருந்து 13 கி.மீ தொலைவில் இருந்ததுதான் செண்பகவல்லி தடுப்பணை. 200 வருடங்களுக்கு மேலாக மூன்று மாவட்ட மக்களின் பாசனத்துக்கு, குடிநீருக்கு ஆதாரமாய் இருந்துவந்த இந்தத் தடுப்பணையின் ஒரு பகுதியில் உடைப்பு ஏற்பட்டு 35 வருடங்களுக்கு மேலாகிவிட்டது. ஆனால் இன்னும் அதற்கு ஒரு தீர்வு ஏற்படவில்லை. நீதிமன்றங்கள் உத்தரவிட்டும் தீர்வு என்பது கானல் நீராகிவிட்டது.

செண்பகவல்லி


மன்னர்களின் மக்கள் நேசம்!


இன்றைய முல்லைப்பெரியாறு அணைக்காக தமிழகம் மற்றும் கேரளாவும் அடித்துக்கொள்வது உலகம் அறிந்து ஒன்று. ஆனால் இந்த முல்லைப்பெரியாறு அணைக்கே நதிமூலம் சிவகிரி மலைகள் என்றால் பலருக்கும் தெரியாது. தமிழகம், கேரளத்தை ஒன்றிணைக்கும் மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதியின் அடிவாரப் பகுதியில் அமைந்துள்ளது சிவகிரி. அடர் வனப்பகுதியான இங்கு ஆண்டு முழுவதும் வற்றாத நீர் பெருக்கெடுக்கும். கடலில் வீணாகக் கலந்துவந்த இந்த நீரை மக்களுக்குப் பயன்படுத்தும் நோக்கில் 1700 காலவாக்கில் சிவகிரி ஜமீன் அன்றைய திருவிதாங்கூர் கேரளா மன்னரின் உதவியை நாடி ஓர் ஒப்பந்தத்தை ஏற்படுத்துகிறார். அந்த ஒப்பந்தத்தின்படி மேற்கே கன்னிமர் ஆற்றில் ஓடி 30 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள இடுக்கி மாவட்டம் வழியாக முல்லைப் பெரியாறுக்குச் சென்று கலந்த நீர் கிழக்கு முகமாகத் திருப்பப்பட்டு செண்பகவல்லி கால்வாய் ஏற்படுத்தப்பட்டது. நதிநீர் இணைப்பைப் பற்றி நாம் தற்போது பேசிவரும் நிலையில் அன்றைய காலகட்டத்தில் காட்டுப்பகுதியில் கிடைத்த கல், மண்ணைக் கொண்டே நதிநீரைத் திருப்பிவிட்டு தங்கள் மக்களின் வாழ்வில் செழிப்பை ஏற்படுத்தினார் சிவகிரி ஜமீன். 

200 ஆண்டுக்கால வற்றாத ஜீவநதி!

1773-ம் ஆண்டு ஜமீனின் முயற்சியால் வாசுதேவநல்லூர் தலையணைப் பகுதிக்கு மேற்கே செண்பகவல்லி கால்வாய் 40 சதுர கி.மீ பரப்பளவில் உருவாகியது. மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் உருவாகும் தேவியாறு, பேச்சிகோவிலாறு, உள்ளாறு, ஈச்சன் ஓடை, சாகநதி, நிச்சநதி உள்ளிட்ட சிற்றாறுகள் இந்த அணைக்குத் தண்ணீரை தாரை வார்த்தது. இந்தக் கால்வாய் தீர்த்தபாறை என்னும் பகுதியில் அமைக்கப்பட்டு அங்கிருந்து மூன்று மாவட்டங்களில் உள்ள 25,000 ஏக்கருக்கும் அதிகமான நிலங்கள் 200 ஆண்டுகளுக்கும் மேலாகப் பயன்பெற்று வந்தன. 1603 அடி உயரத்திலும் 928 அடி தூரத்திற்கும் சிமென்ட் இல்லாமல் சுண்ணாம்புக் கற்களால் அணையின் சுவர் கட்டப்பட்டது. இதன் நீளம் 2531 அடி. அகலம் 10 அடி. உயரம் 15 அடியாகும். இந்த அணையிலிருந்து அகாலத்தில் விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம், வெம்பக்கோட்டை, தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம், நெல்லை மாவட்டம் வாசுதேவநல்லூர், சங்கரன்கோவில், குருவிகுளம் பகுதியிலுள்ள நிலங்கள் பாசன வசதி பெற்றன.

சிவகிரி மலைகள்

செண்பகவல்லி அணையிலிருந்து நீர்வரத்துகள் தீர்த்தப்பாறை என்ற இடத்திற்கு வந்து அங்கிருந்து தலையணை என்ற இடத்தை அடைந்து இரண்டு பிரிவாகப் பிரிகின்றது. ஆண்டு முழுவதும் வற்றாத ஜீவநதியாய்ப் பெருக்கெடுத்து வந்த செண்பகவல்லி அணையில் 1950-ம் ஆண்டு கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதில் தடுப்பணையின் ஒருபகுதியில் உடைப்பு ஏற்படக் கிழக்கு நோக்கிப் பாயவேண்டிய நீர் மேற்கு நோக்கி முல்லைப்பெரியாற்றில் கலந்துவிட்டது. ஆனால் இந்த உடைப்பை அப்போதைய தமிழக முதல்வர் காமராஜர் முயற்சியில் தமிழக அரசு சீரமைத்தது. ஆனால் இயற்கையின் கோர தாண்டவம் சும்மா இருக்கவில்லை. 1969-ம் ஆண்டே மீண்டும் பெருமழை பெய்ய தடுப்புச் சுவர் மீண்டும் இடிந்துவிட்டது. இதனால் தண்ணீர் வரத்து மறுபடியும் முல்லைப் பெரியாறுக்கே சென்றது. 

தண்ணீர் அரசியல்!

1969-ம் ஆண்டு உடைப்பு ஏற்பட்ட விஷயம் அப்போது முதல்வராக இருந்த எம்ஜிஆர் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. தடுப்பணை அமைந்திருக்கும் பகுதி இடுக்கி மாவட்டத்தில் இருந்ததால் கேரள அரசோடு பேச்சுவார்த்தை நடத்தினார் எம்ஜிஆர். அதன்பயனாக கேரள அரசு அணையை மீண்டும் புதுப்பித்து தருவதாக அதற்காக கண்டிஷன் ஒன்றையும் விதித்தது. தடுப்பணையைப் புதுப்பிக்கச் செலவாகும் 10.30 லட்ச ரூபாயில் பாதி பணத்தைத் தமிழக அரசு தர வேண்டும் என்பதுதான் அந்த கண்டிஷன். கேரள அரசின் நிபந்தனைப்படி தமிழக அரசு சார்பில் 5.15 லட்சம் பணமும் கொடுக்கப்பட்டது. ஆனால் கொடுக்கப்பட்ட பணமும், திட்டமும் கிடப்பில் போடப்பட்டன. வருடங்கள் பல மாறின. அரசாங்கங்கள் பல மாறின. ஆனால் இரு மாநில அரசியல்வாதிகளும் இந்தத் தடுப்பணையைச் சரி செய்ய முன்வரவில்லை. கம்யூனிஸ்ட் அரசாக இருந்தாலும் சரி, காங்கிரஸ் அரசாக இருந்தாலும் சரி அணைகட்ட முனைப்பு காட்டவில்லை. அதே  நிலைதான் தமிழகத்திலும், தி.மு.க வந்தாலும், அ.தி.மு.க வந்தாலும் இந்தப் பகுதியில் இந்தப் பிரச்னையைச் சொல்லி வாக்கு கேட்கிறார்களே தவிர அதற்கான தீர்வை ஏற்படுத்த நினைக்கக் கூட இல்லை. 

கடைசியாக 30 வருடங்கள் கழித்து அச்சுதானந்தன் தலைமையிலான கேரள அரசு 2006-ம் ஆண்டு தமிழக அரசுக்கு இந்த விவகாரத்தில் ஒரு கடிதம் அனுப்பியது. அதில், `இது புலிகள் வாழும்பகுதி. இங்கு தடுப்பணை கட்டினால் வனவிலங்களுக்கு பாதிப்பு ஏற்படும்" எனக் கூறி தடுப்பணை கட்டக்கொடுத்த தொகையை அரசுக்கே திருப்பி அனுப்பியது. இதே காலகட்டத்தில் சிவகிரி விவசாயிகள் சங்கத்தினர் நீதிமன்ற கதவைத் தட்டவும் தவறவில்லை. விவசாயிகள் சார்பில் உயர்நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்ட வழக்கில் எட்டு வாரகாலத்திற்குள் தடுப்பணை சீரமைக்கும் பணியை முடித்து, நீதிமன்றத்திற்குக் கேரள அரசு அறிக்கை அளிக்க வேண்டும் எனஉத்தரவும் பிறப்பிக்கப்பட்டது. 

செண்பகவல்லி அணை

ஆனால், இத்தீர்ப்பை கேரள அரசு மதிக்கவில்லை. தமிழக அரசும் உருப்படியான எந்தவித நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை என்பது கூடுதல் சோகம். கேரள அரசு இப்போது ஒட்டுமொத்த தடுப்பணைச் சுவரையும் இடித்துவிட்டதாக இந்தப் பகுதி விவசாயிகள் மத்தியில் பேச்சு எழுந்துள்ளது. இதுதொடர்பாக சிவகிரியைச் சேர்ந்த விவசாயி குருசாமி என்பவரிடம் தொடர்புகொண்டு பேசினோம். ``பருவமழையின் போதும், கோடைக்காலத்தின் போதும் பெருக்கெடுத்து வரும் ஆறாக இருந்தது. உடைப்பு பிறகு 35 வருடமாகப் போராடிவிட்டோம். ஆனால் இன்னும் தீர்வு கிடைக்கவில்லை. இதில் என்ன அரசியல் இருக்கிறது என்று தெரியவில்லை. 

இந்த அணையின் உடைப்பு என்பது 70 மீட்டரிலிருந்து 100 மீட்டருக்குள்தான். தற்போதைய காலகட்டத்தில் இதற்கு ஆகும் செலவு ரூ.5 கோடி மட்டுமே. பல கோடி கொடுத்து பாலங்களைக் கட்டும் இந்த அரசாங்கம், இதற்குச் செலவு செய்ய மறுப்பது ஏன் எனத் தெரியவில்லை. அ.தி.மு.க, தி.மு.க என யார் ஆட்சிக்கு வந்தாலும் இதைக் கண்டுகொள்ள மறுக்கின்றனர். உயர் நீதிமன்றம் தீர்ப்பு கொடுத்தும் அணையை கட்ட கேரள அரசு முன்வரவில்லை. தமிழக அரசும் இதைக் கண்டுகொள்ளவில்லை. செல்வச் செழிப்பாக முப்போகம் விளைந்த எங்கள் பூமியில் இப்போது குடிநீருக்கே பஞ்சம் நிலவிவருகிறது. காலத்தின் கொடுமையா அல்லது அரசாங்கத்தின் அலட்சியமா எனத் தெரியாமல் நாங்கள் பரிதவித்து வருகிறோம். பல கட்ட போராட்டங்களை நடத்திவிட்டோம். இனியாவது அரசாங்கங்கள் முன்வருமா எனத் தெரியவில்லை" என வேதனை தெரிவித்தார். 

கால்வாயில் உடைப்பு ஏற்பட்ட பகுதி

இந்தத் தடுப்பணையைக் காட்டுக்குள் சென்று பார்வையிட்ட தென்காசி தொகுதியின் முன்னாள் எம்பி லிங்கத்தைத் தொடர்புகொண்டு பேசினோம். ``நான் எம்பியான பிறகு செண்பகவல்லி அணைப்பகுதியில் ஏற்பட்ட உடைப்பை நேரடியாகச் சென்று பார்வையிட்டேன். அங்கு எடுத்த வீடியோ காட்சிகள், புகைப்படங்களை கொண்டு போய் அப்போதைய கேரள முதல்வர், நீர்ப்பாசனத்துறை அமைச்சர் ஆகியோருக்குத் தபால் மூலம் அனுப்பி வைத்தோம். மேலும் அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங், தமிழக முதல்வர் கருணாநிதி ஆகியோரை நேரில் சந்தித்து முறையிட்டேன். கோரிக்கையை ஏற்று கருணாநிதி ரூ.40 லட்சம் ஒதுக்கீடு செய்தார். 

கால்வாய் உடைப்பு ஏற்பட்டுள்ளது மலைப்பகுதி. இதைச் சரி செய்ய வேண்டும் என்றால் சாதாரணமாக சுவர் எழுப்பப்படும் செலவை விட 5 மடங்கு அதிக செலவு ஆகும். ஆனால் தமிழக பொதுப்பணித்துறை அதிகாரிகள் மதிப்பீட்டின் படி கருணாநிதி 40 லட்ச ரூபாய் மட்டுமே ஒதுக்கீடு செய்தார். இதை வைத்து சுவர் எழுப்புவது கடினம். சுவர் எழுப்ப குறைந்தது ரூ.10 கோடிக்கு மேல் செலவு ஆகும். நாங்களும் இந்த விஷயத்தில் நடவடிக்கை எடுத்தோம் எனக் காண்பிப்பதற்காக எம்ஜிஆரும், கருணாநிதியும் நடந்துகொண்டனர்.

லிங்கம் எம்.பி

இது ஒருபுறம் இருக்க கேரள அரசிடம் சென்று முறையிட்டால், ``முல்லைப் பெரியாறு பிரச்னையைத் தீர்த்தால் மட்டுமே இந்தப் பிரச்னையைத் தீர்க்கமுடியும்" எனத் திட்டவட்டமாகக் கூறிவிட்டார்கள். செண்பகவல்லி அணையில் ஏற்பட்ட உடைப்பால்தான் முல்லைப் பெரியாறு அணையின் நீர்வரத்து அதிகரித்துக் காணப்படுகிறது. இந்த உடைப்பை சரி செய்துவிட்டால் பெரியாறு அணையின் நீர்வரத்து குறைந்துவிடும். ஆனால் இந்த அடிப்படையை மறந்துவிட்டு முல்லைப் பெரியாறு அணையைக் காரணியாக வைத்து விளையாடுகிறார்கள். இந்த உடைப்பு சரி செய்யப்பட்டால் தமிழகத்துக்கு 16 டிஎம்சி தண்ணீர் கிடைக்கும். 

தமிழக நீர்ப்பிடிப்பு பகுதியிலிருந்துதான் செண்பகவல்லி அணைப் பகுதி நீர் உற்பத்தியாகிறது. ஆனால் கேரளா வழியே நீர் கடந்து வருவதால் உடைப்பைச் சரி செய்ய கேரளாவின் அனுமதி பெறவேண்டியுள்ளது. தமிழகத்தில் இருந்ததுதான் அணைப்பகுதி பக்கம். அதனால் கேரள அரசிடம் அனுமதி பெற்று தமிழக அரசே சரி செய்யலாம். ஆனால் அதற்கு மாறாக நாங்கள் நிதி ஒதுக்கிவிட்டோம் எனக்கூறி தமிழக அரசு ஒதுங்கிக்கொள்கிறது. இதைச் செய்ய அரசு முன்வருமா எனத் தெரியவில்லை. மூன்று மாவட்ட மக்களின் 35 ஆண்டுக்கால சோகம் எப்போது தீரும் எனத் தெரியவில்லை" என்றார்.

மறத்துப் போன மக்கள் நேசம்!

முல்லைப் பெரியாறு அணை பிரச்னையை மட்டும் வைத்துக் காய் நகர்த்தும் தமிழக அரசு இப்பிரச்னையை அம்போவென விட்டுவிட்டநிலையில் அரிசி, இறைச்சி, காய்கறி, பால், மணல், செங்கல், மின்சாரம், வாழைப்பழங்கள், சிமென்ட் என அனைத்தையும் தமிழகத்தை நம்பியே வாழ்நாளைக் கழிக்கும் கேரள மாநிலம், வீணாய்க் கடலில் கலக்கும் பல நதிகளின் நீரைத் தமிழகத்துக்கு தராமல் இருப்பது என்ன வகை நியாயமோ?

மன்னர்கள், ஜமீன்தார்கள் காலத்திலிருந்த மக்கள் நேசம், மனித நேயம் போன்றவை மக்களாட்சி காலத்தில் இல்லாமல்