Sunday 26 January 2020

M.N.ROY FREEDOM FIGHTER BORN MARCH 21-1954 JANUARY 1954



M.N.ROY  FREEDOM FIGHTER BORN 
MARCH 21-1954 JANUARY 1954




மனபேந்திர நாத் ராய் அல்லது எம். என். ராய் (M. N. Roy, 21 மார்ச்சு 1887 - 26 ஜனவரி 1954) இந்தியா விடுதலை அடைய புரட்சிச் செயல்களில் ஈடுபட்டவர். ஒரு கம்யூனிஸ்ட்டு, போராளி, சிந்தனையாளர், நாத்திகர் என்று இவர் போற்றப்படுகிறார்.

பிறப்பும் படிப்பும்
இவரது இயற்பெயர் நரேந்திர நாத் பட்டாச்சாரியா. தந்தை ஒரு புரோகிதர்.[1] ராய் மேற்கு வங்கத்தில் ஆர்பிலியா என்னும் ஊரில் பிறந்தார். அவருடைய பள்ளிப்படிப்பு ஆர்பிலியாவில் தொடங்கியது. வங்கத்தொழில்க் கழகத்தில் பொறியியலும் வேதியியலும் கற்றார். சொந்த முயற்சியில் தொடர்ந்து படித்து தம் அறிவைப் பெருக்கிக்கொண்டார்.

தேசிய உணர்ச்சி
19ஆம் நூற்றாண்டின் இறுதியில் இந்திய தேசிய உணர்ச்சி எங்கும் பரவத்தொடங்கியது. பங்கிம் சந்திர சட்டர்ஜி, விவேகானந்தர் ஆகியோரின் எழுத்துகளைப் படித்து உணர்வு பெற்றார். பிரித்தானிய அரசுக்கு எதிராகப் போராடி இந்தியா விடுதலை பெறவேண்டும் என்று விரும்பினார். ஆயுதப்புரட்சி மூலம் மாற்றம் காணலாம் என்று நம்பினார்.

பொதுவுடைமைக் கட்சி
மெக்சிக்கோவிலும் இந்தியாவிலும் பொதுவுடைமைக் கட்சியைத் தொடங்கினார். தொழிலாளர் பற்றிய சட்டங்களைப் படித்து அவற்றில் ஆழ்ந்த அறிவு பெற்றார். மெக்சிக்கோவிலிருந்து உருசியாவுக்குச் சென்றார். அங்கு லெனின், டிராட்ஸ்கி, ஸ்டாலின் ஆகியோரின் நட்பைப் பெற்றார். 1923இல் கம்யூனிஸ்டுக் கொள்கைத் திட்டம் வகுக்கப்பட்டது. இக்கொள்கைத் திட்டத்தில் எம். என். ராயின் கருத்துக்களும் விவாதிக்கப்பட்டன. பின்னர் உஸ்பெகிஸ்தான், சீனா ஆகிய நாடுகளுக்கும் சென்று பொதுவுடைமைக் கருத்துகளைப் பரப்பினார்.

இந்தியாவுக்குத் திரும்பல்
1930 டிசம்பரில் இந்தியாவுக்குத் திரும்பினார். ஜவகர்லால் நேரு, சுபாஸ் சந்திர போஸ் ஆகியோரைச் சந்தித்துப் பேசினார். இந்தியாவில் காங்கிரஸ் கட்சியில் சேர விரும்பினார். இருப்பினும் காந்தியடிகளின் தலைமையை அவர் விரும்பவில்லை. பம்பாயில் கைதாகி சிறைக்குச் சென்றார். இன்டிபெண்டென்ட் இந்தியா என்னும் இதழை நடத்தினார். ஏஐடியூசி என்னும் தொழிற்சங்கத்திற்குப் புத்துயிர் கொடுத்துத் தொடங்கி வைத்தார்.


ஆனால் பிற்காலத்தில் முதலாளிய சனநாயகத்தையும் கம்யூனீசத்தையும் வெறுத்து ஒதுங்கினார். புரட்சிகர மனிதநேயம் என்ற கொள்கைக்காக தம் இறுதிக் காலத்தில் பாடுபட்டார். 1954இல் டேராடூனில் இறந்தார்.



எம் என் ராய் இளம் வயதிலேயே 12 நாடுகளை சுற்ற வாய்பு பெற்றவர். கம்யூனிசம், தேசவிடுதலை இயக்கம், மானுட இயம் என பயணித்தவர். லெனின், ஸ்டாலின் உள்ளிட்ட சோவியத் தலைவர்கள் ஜெர்மன் மற்றும் சீனத்தலைவர்களுடன் உயர் மட்டத்தில் பணியாற்றியவர். திறந்த மனதுடன் புதியன கண்டு அஞ்சாமல் பரிசீலித்து கருத்தை மாற்றிக்கொள்ள தயங்காதவர். தீரா தாகம் கொண்ட வாழ்க்கைப்பாதைக்கு சொந்தக்காரர்.
ராய் தனது 14 வயதிலேயே வங்க புரட்சிகர தொடர்புகள் கிடைக்கப்பெற்றவர். ஆயுதம் வாங்க எனக்கிளம்பி பர்மா, இந்தோனேஷியா, சீனா, ஜப்பான் நாடுகளில் பயணித்து அமெரிக்கா சென்றடைந்தார் . அங்கிருந்து மெக்சிகோ சென்று கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலராக வாய்ப்பு பெற்றார். சோவியத் தொடர்புகளால் மாஸ்கோ சென்றார்.
 சோவியத், ஜெர்மன், சீன கம்யூனிஸ்ட் இயக்கங்களுடனும், இரண்டாவது அகிலத்திலும் பெற்ற பயிற்சிகள் மூலம் உச்சம் சென்று பின்னர் வீழ்ச்சி அடைந்தவர் ராய்.  தாய்நாட்டிற்கு 16 ஆண்டுகள் கழிந்து 1930ல்  திரும்ப நேரும் சூழல் அவருக்கு அமைந்தது. மார்க்சிய கருத்தாயுதத்துடன் பிரிட்டிஷ் ஏகாதிபத்திய எதிர்ப்பில் பங்கேற்கும் எண்ணத்துடன் ராய் செயல்படத்துவங்கினார். சுபாஷ், காங்கிரஸ் சோசலிஸ்ட்கள், கம்யூனிஸ்ட்கட்சி, ராயிஸ்ட்கள் என நான்கு இடது பிரிவுகளின் ஏற்ற இறக்க உறவுகளுடன் காங்கிரஸ் தலைமையுடன் விமர்சனபூர்வ உறவைக் கொண்டிருந்தார் ராய்.

  சிறை அனுபவங்களுக்கு பின்னர் 1940ல் ராடிகல் டெமாக்ரடிக் கட்சி துவங்கினார்.  காங்கிரசுடன் மட்டுமல்லாது கம்யூனிசத்துடனும் அவர் விமர்சனபூர்வ உறவுகளை மேற்கொள்ளத்துவங்கினார். இரண்டாம் உலகப்போர் காலத்தில் சோவியத்திற்கு நெருக்கமான நிலைப்பாட்டை எடுத்தாலும் ராய்க்கு  மரியாதை நாட்டிலும் சோவியத்திலும் கிடைக்கவில்லை. 1948ல் ராடிகல் கட்சிக்கும் மேலாக  Renaissance- New Humanism  என செல்லத்துவங்கினார். ஜனநாயகமா- டோடலிட்டேரியனிசமா என்கிற விவாதத்தை ஆரம்பத்திலேயே துவக்கியவராக ராய் இருந்தார். முதலாளித்துவமா சோசலிசமா என்கிற கேள்விக்கான பதிலையும் அவர் அதில் பார்த்தார். ஸ்டாலினுக்கு மிகத் துணிச்சலாக அவர் எழுதிய கடித வாசகம் ஒன்றை தனது நினைவலைகளில் குறிப்பிடுகிறார். “ I cannot reconcile myself to the idea that decency, loyalty and honesty should have no place in the catalogue of Bolshevik virtues". போல்ஷ்விக்குகளின் நன்னடத்தை குறித்த விமர்சனமாக அவ்வாக்கியம் இங்கு அமைந்தது.
காரணகாரிய அறிவிற்கு ராய் முன்னுரிமை கொடுத்தார். 1937 பைஸ்பூர் காங்கிரஸ் அமர்வின்போது காந்தி தனது மாலைநேர பிரார்த்தனை நிகழ்விற்கு ராயை அழைத்தார். ராய் செல்லவில்லை. மானுட முன்னேற்றத்தில் காந்தியடிகள் ஓரடி முன்வைத்து ஈரடி பின் இழுத்துவிடுகிறார் என ராய் கருதினார். நேருவை மட்டுமே மேற்குலக பாணி மனிதனாக காங்கிரசில் பார்க்கமுடிகிறது என்றார் ராய். இந்துவைதீக முறையிலான தேசிய முன்வைப்பு முஸ்லீம் வகுப்புவாத வளர்ச்சிக்கும் உதவியது. ஆகையால் மகாத்மா காந்தி விழைந்த இந்து முஸ்லீம் ஒற்றுமை உருவாகவில்லை என்கிற விமர்சனம் ராயிடம் இருந்தது. அதேநேரத்தில் காந்தி தோற்ற இடத்தில் மற்றவர் வெல்லவும் முடியாது என்பதையும் அவர் புரிந்திருந்தார். காந்தியின் காஸ்மோபாலிடன் மனிதநேயப் பார்வையின் அவசியத்தை அவர் அனைவரும் உணரவேண்டும் என வேண்டினார்.
காலகாலமாக நிலவும் சில மதிப்பீடுகளை நிலமான்ய-முதலாளித்துவ வகைப்பட்டவை என ஒதுக்கிவிட்டால் எதிக்ஸ் என்பதே  இருக்காது. எந்த வர்க்கமும் வர்க்கப்போராட்டத்தால் முற்றிலுமாக அழிக்கப்படுவதில்லை என்கிற உண்மையையும் நாம் அறிய வேண்டும். சமூக நலன்கள் என்பவை வர்க்கங்கள் சேர்ந்து வாழவேண்டிய நிர்பந்தத்தத்தையும் தருகின்றன என்பதையும் உணரவேண்டும்.
பொருளாதார அடிப்படையில் கூட உபரிமதிப்பு என்பதை ஒழிப்பது நடைமுறையில் சாத்தியமல்ல. தங்கள் நுகர்வைவிட மிஞ்சக்கூடிய உற்பத்தி என்பதை சமூகம் செய்துகொண்டே இருக்கவேண்டியுள்ளது. அதே நேரத்தில் ஒரு வர்க்கம் உபரியை உறிஞ்சுவது என்பது ஏற்புடையதல்ல. இதில் பொருளாதார அம்சம் மட்டுமல்லாமல் நெறிசார்ந்த அம்சங்களும் உள்ளன என்றார் ராய்.
வரலாறை படைக்கும் மனிதர்கள் என நாம் பேசுகிறோம். முன்னதாக ஒவ்வொருவரும் தனி மனிதர்களாக இருக்கின்றோம். சமூகம் எனும் தொகுப்பில் உறுப்பு தனிமனிதர் என்கிறோம். தனிமனிதர்களின் தொகுப்பாகவே சமூகம் இருக்கிறது. அவனின் பெருமிதம், படைப்பாற்றல் ஆகியவை குறித்த விழிப்படைந்த மனிதனாக அவன் இருக்கவேண்டியுள்ளது. எனவே சமூகம் என்பது வழிதான். தனிமனிதன்தான் அதன் முடிவு எல்லை என்கிற பார்வையை எம் என் ராய் தந்தார். தனிமனித சுதந்திர மறுப்பு என்பதன் மூலம் விடுதலைக்கான பாதை அமையாது .
 Therefore, “the purpose of all rational human endeavour, collective as well as individual, should be the attainment of freedom in ever larger measure, and freedom if real only as individual freedom”
இருக்கின்ற வலிமையானது எதுவோ அது சரியானது என ஹெகல் தொடங்கினால் மார்க்ஸ் வருகின்ற வலிமையானது சரி என முடிக்கிறார். (Hegelian doctrine held that ‘that present might is right’. Marx projecting the Hegelian doctrine into future declared that ‘coming might to be also right’).  அவர் ஹெகலை நேராக நிமிர்த்தியிருக்கலாம் ஆனால் தன் மூளையை அதில் வைத்து அதை மார்க்ஸ் செய்துள்ளார் என்பது ராய் தரும் விளக்கம்.
ராய் தன்னை மார்க்சின் ஸ்பிரிட்சுவல் வாரிசு என அழைத்துக்கொண்டார். மார்க்ஸ் மகத்தான மனிதாபிமானி. மனிதன் தன்னை புரட்சியின் மூலம் விடுவித்துக்கொள்ளமுடியும் என்பதுகூட வலிமையான நெறி அறைகூவல்தான். அதை மார்க்ஸ் ரொமாண்டிஸ்ட் ஆக செய்தார் என்றார் ராய். மனிதனின் மீளாக்க படைப்புத்திறன் மீது மார்க்சின் நம்பிக்கை கோடிக்கணக்கானவரை கிளர்ந்தெழ செய்துள்ளது என்பதை அவர் புறக்கணிக்கவில்லை.
காந்தி குறித்தும் அவருக்கு விமர்சனவகைப்பட்ட பார்வையே இருந்தது. தேசம் காந்தி இரண்டும் ஒரே அர்த்தம் தரும் இணைச்சொற்களாக மாறிவிட்டன, தேசம் தேசபக்தி எனப்பேசுபவர்கள் காந்தியர்கள் என கருதப்படுகின்றனர் என்றும் தேசபக்தி குறுக்கப்பட்டுவிட்டதாகவும் ராய் கருதினார். காந்தி குறித்த உரை ஒன்றை அவர் ஏப்ரல் 21, 1940ல் பரிசால் எனும் பகுதியில் வழங்கினார். தேசியவாதிகளிலேயே உயர் ஆத்மாவாக காந்தி இருக்கலாம். ஆனால் காந்திய கோட்பாடுகளை ஏற்பவர் மட்டுமே விடுதலை போராட்டத்தில் தகுதியான பங்களிப்பை தருகிறார் என உரிமைகோருவது  விவாதத்திற்குரிய அம்சம் என்றார் ராய்.
மாஸ்கோவில் இருந்தபோது ராய் தனது ’மாறும் கட்டத்தில் இந்தியா’ என்கிற அவரது புகழ்வாய்ந்த ஆக்கத்தில் காந்தி குறித்த மதிப்பீடுகளை வைக்கிறார். அது நடைமுறை அரசியலுக்குரிய ஒன்று என்பதால் அரசியலில் நெறி என்பதில் நடைமுறை சார்ந்த மதிப்பீடுகளையும் வைக்கவேண்டியுள்ளது. தீர்க்கதரிசிகளின் வெளிப்பாடு போன்ற ஒன்றல்ல காந்தியம். அது நடைமுறை செயல் தத்துவம். அவர் கருதுகோள்களில் தன்னை வெளிப்படுத்திக்கொள்ளவில்லை. காரியங்களில் செயல்முறைகளில் தன்னை வெளிப்படுத்திக்கொண்டவர். எனவே காந்தியம் என்பது உடோபியனிசமல்ல. அதே நேரத்தில் காந்தியத்தால் அரசியலில் நெறி என்பதில் வெற்றி பெறமுடியவில்லை. நவீன கலாச்சாரத்தின் நெருக்கடிகளுக்கு அதனால் தீர்வை தரமுடியாமல் போனது. இன்றுள்ள சூழலில் காந்தியத்தை அமுல்படுத்துவது இயலாதாகியுள்ளது என்கிற முடிவிற்கு ராய் வந்தார்.
மேற்கு மற்றும் முதலாளித்துவ சமூகம் குறித்த காந்தியின் விமர்சனங்களை ராய் ஏற்றாலும் அவர் முன்வைக்கும் மாற்றுகள் சாதிய்மானவையல்ல என்றார். அவர் பேசிவரும் ’அன்பின் வழியது உய்வு’  என்றால் சுயராஜ்யம் சொர்க்கத்திலிருந்து வந்தால்தான்  உண்டு என ராய் கேலிபட பேசினார். ராய்க்கு காந்தியுடன் தொழிற்துறை சமூகம் பற்றிய கருத்துவேறுபாடு இருந்தது. உயர் கல்வி என்பது நவீன தொழில்நுட்பத்திற்கு அவசியமானது. நவீன தொழில்நுட்பம் இல்லையேல் சுதந்திரம்-சமத்துவம்- ஜனநாயகத்தை உறுதி செய்வது இயலாத ஒன்று என ராய் கருதினார். தொழிற்துறை இல்லாத சமூகத்தில் உயர்கல்விக்கு பெரும் செலவு பிடிக்கும் என்றார்.
நமது பெண்களுக்கும் அய்ரோப்பிய அமெரிக்க பெண்கள் போல் சுதந்திரம் தேவை. அதன் பொருள் இந்தியப்பெண்மை என்பதை கைவிடுவதாக பொருள் கொள்ளவேண்டாம். ராய்க்கு வைதீக தேசியம் (orthodox nationalism)  மீது விமர்சனம் இருந்தது. முதலாளித்துவம் தேவைப்பட்டாலும் அங்கு பொருள்வகைப்பட்டு நிலவும் பேராசை நமக்கு தேவையில்லை. மேற்குலக வளர்ச்சியை உள்வாங்கும்போது  காந்திய எளிமையை எடுத்துக்கொள்ளும் இசைவை ராய் நல்குவதாக நாம் புரிந்துகொள்ளலாம். மேற்கை நிராகரிக்காமல் இந்தியவகைப்பட்டு தூய்மைப்படுத்திக்கொள்ளமுடியும் என்கிற  synthesis  பார்வையை ராய் முன்வைக்கிறார். நமது சமூகத்தின் மூடநம்பிக்கைகள் சார்ந்த மதப்பார்வையை விட்டொழித்து காரணகாரிய அறிவு முறையை கைக்கொள்ளவேண்டினார் ராய்
காந்தியின் ‘return to village’ என்பதையும் ராய் அம்பேத்கார் போலவே நிராகரித்தார். பாரம்பரிய சமூக அலகுகளை- பழக்க வழக்கங்களை அப்படியே நீடிக்கவைத்துக்கொண்டு புதிய சமூக நிர்மாணம் செய்வது இயலாது- வளர்ச்சியும் உருவாகாது என ராய் கருதினார். அதே போல் காந்தியின் பட்டினிப்போராட்டங்களை ஒருவகை கட்டாயப்படுத்தல் (a form of moral coercion) என்றே ராய் கருதினார். பகுத்தறிவு சார்ந்த விவாத முறையில் பிறரை ஏற்க செய்யாமல் பட்டினிகிடந்து நிர்பந்தம் உருவாக்குவது- கட்டாயப்படுத்துவது ஏற்பிற்குரியதல்ல என்கிற விமர்சனம் ராயிடம் இருந்தது. காந்தியின் அரசியல் பகுத்தறிவு அரசியல் அல்ல- நெறிசார்ந்த அரசியல் என்றார் ராய். காந்தியம் என்பது ஒருவகை நோய்த்தன்மையை கொடுத்துவிடும் என்கிற கடும் விமர்சனமும் அவரிடம் இருந்தது.  மாற்றாக Radicalist ideas are healthy   என ராய் கருதினார்.
ஒரு கட்டத்தில் காந்தியும் ராயை  முதல் எதிரி என்றார். பிலிப் ஸ்பிராட் போன்றவர்கள் காந்தியம் ஒருவகை பாசிசம் என வகைப்படுத்தி பேசிவந்தனர். காந்தியின் மறைவிற்குப் பின்னர் ராயின் பார்வையில் சற்று நிதானம் ஏற்பட்டது. தனது தீவிர மனிதாபிமானம் என்பதில் அவர் காந்தியின் மதம் குறித்த பார்வையை நிராகரித்தாலும் பொருளாதார மய்யம் நீக்குதல், நெறிசார்ந்த வழிமுறைகள் , கட்சி அரசியல் என்பதைவிட மக்கள் ஒருங்கிணைப்பு போன்ற அம்சங்களில் காந்தியை நெருங்கினார். அவரின் மறுமலர்ச்சி தேசியம் என்பதை அவர் விமர்சித்து வந்தார்.
காந்தி தியாக மரணமுற்றார் என்கிற செய்தி ராயிடமும் தாக்கத்தை ஏற்படுத்தியது. அவரை விமர்சித்துவந்த ராய் 1948 பிப்ரவரி, ஏப்ரலில் காந்தி மீதான தமது மரியாதையை உணர்த்தும் வண்ணம் இரு கட்டுரைகளை எழுதினார். காந்தியின் செய்தி சர்வாம்சத்தன்மை கொண்டு மனிதாபிமான அடையாளமாகவும் நெறிசார்ந்த ஒன்றாகவும் இருக்கிறது என்றார் ராய்.
மார்க்சை பொறுத்தவரை மானுடத்தின்வேர் மனிதன்தான். காந்திக்கு மனிதன் ஆன்மசக்தி. இருவரின் அணுகுமுறை வேறானது. ராய் மனிதன்தான் அனைத்தின் அளவையும் என்பதை ஏற்றிருந்தார். காந்தியும் ராயும் தனிமனிதனுக்கு மிக முக்கியத்துவத்தை கொடுத்தனர். மார்க்சியத்தில் பொருளாதார சமத்துவ வலியுறுத்தல் இருந்தால் ராயிடமும் காந்தியிடமும் நெறிசார்ந்த வலியுறுத்தல்கள் இருந்தன. நெறியான மனிதர்கள் அமையும்போது சரியான சமூகத்தை கட்டி அமைக்கப்படமுடியும் என காந்தி கருதினார். ராயும் ’மாரல் சமூகத்திற்கு மாரல் மனிதன்’ என்றார்.  ஆயுதங்களற்ற ஆன்ம சக்தியில் நியாயம் பெற இயலும் என காந்தி வலியுறுத்தினார்.
மாஸ்கோவில் 1921ல் ராய் எழுதிய India in Transition  ஆக்கத்தில் காந்தி குறித்த விமர்சனங்களே இருந்தன. இரண்டாவது அகிலத்தில் லெனின் ராய்- பிற நாட்டு கம்யூனிஸ்ட் தலைவர்களின் விவாதங்களின் அடிப்படையில் அவ்வாக்கம் எழுதப்பட்டிருந்தது. பூர்ஷ்வா இயக்கங்களுக்கு ஆதரவு என லெனின் சொல்வதை கைவிட்டு காலனிய பாட்டாளி இயக்கத்திற்கு கம்யூனிஸ்ட் இயக்கங்கள்  ஆதரவு நிலைப்பாட்டை எடுக்கவேண்டும் என ராய் கருதினார். மக்களை பெருமளவு திரட்டும் சக்திவாய்ந்த காந்தி- காங்கிரஸ் தலைமை புரட்சிகர சக்தியாகதானே இருக்கமுடியும்- அதற்கு ஆதரவு தருவது சரியான அணுகுமுறையாக இருக்கும் என லெனின் கருதினார். காங்கிரஸ் தலைமை புரட்சிக்கு துரோகம் செய்துவிடும் என்றார் ராய்.
காந்தியின் பங்குபாத்திரம் குறித்து லெனினுக்கும் எனக்கும் வேறுபாடு இருந்தது என ராய் தெரிவித்தார். மக்களின் மத்தியகால மனநிலக்கு காந்தியின் சமய சிந்தனைகள் தீனிபோடுவதாக லெனினிடம்  ராய் குற்றம் சாட்டினார். ‘I reminded Lenin of the dictum that I had learnt from him: that without a revolutionary ideology, there could be no revolution.’ These arguments formed the basis of the position on Gandhi – அதாவது புரட்சிகர கொள்கை இல்லாமல் புரட்சி சாத்தியப்படாது என்பது ராயின் பதிவாக இருந்தது
ராயின் மார்க்சியம் சார்ந்த சர்வதேசிய பார்வை தேசியம் என்பதை ஏற்க அவருக்கு தடையாக இருந்தது. இதனால் தேசிய விடுதலை இயக்கத்தை சந்தேகக் கண்கொண்டே அவரால் பார்க்க முடிந்தது. அதனால்  எதார்த்த நிலைகளின்படியிலான காந்திய மதிப்பீடுகளை அவரால் செய்ய இயலவில்லை.
இத்தருணங்களில் ராயின் துணைவியாரான எவ்லின் அவர்களும் காந்தியை கடுமையாக விமர்சித்தே கட்டுரைகள் எழுதிவந்தார். புத்தி சாதுர்யமான பொருளாதார திட்டம் ஏதுமில்லாதவர் காந்தி என்பது அவர்களின் தலையாய விமர்சனமாக இருந்தது. வர்க்க மோதலை புரிந்துகொள்ளாமல் வறட்டுபிடிவாத சமூக ஒற்றுமை என காந்தி பேசி வருவதாகவும் ராய் விமர்சித்தார். The revolt against the Raj  is a question of economics, not metaphysics.’ என்றனர் ராய் தம்பதியர். காந்தி எந்திரங்களின் காலத்தை கற்காலத்திற்கு திருப்ப நினைக்கிறார் என வறட்டுத்தனமாகவும் ராய் பேசிவந்தார்.
காந்தி மேற்கின் நாகரீகம் பற்றி விமர்சிக்கிறார். எளிய வாழ்க்கை என்கிறார் என்பது உண்மைதான்.  காந்தியின் முதலாளித்துவ சமூகம் பற்றிய விமர்சனம் என்பது புரட்சிகர கண்ணோட்டமற்றது. சொத்துரிமையை காப்பதாக இருக்கிறது. Gandhi embodies both Revoultion and Reaction, he must perish in the fierce clash   என எழுதினார் ராய்.
நீர்த்துப்போகும் பலவீனமான மாற்றங்கள் மட்டுமே காந்தியிடம் இருக்கிறது என்ற ராயிடம் அவர் சிறையில் அடைக்கப்பட்ட ஆண்டுகளில் சில மாற்றங்கள் வரத்துவங்கின. சிறையில் மற்ற தலைவர்களைப் போலவே ராய் ஏராளமாய் படித்தார். நெறிசார்ந்த வாழ்வு- அரசியல் என்பதை தீவிரமாக கருதத்துவங்கினார். மார்க்சியத்திடமிருந்து அவர் விலகத்துவங்குகிறார் என்கிற எண்ணம் பரவியது. அரசியல் சுதந்திரம், சமூக மகிழ்ச்சி, பொருளாதார சுபிட்சம் என்பதற்கெல்லாம் அப்பாலானது ஆன்ம விடுதலைக்கான இலக்கு என ராய் பேசத்துவங்கினார். அவர் ஆன்மீகவாதிகளின் மொழியில் பேசவில்லை என்றாலும்  அவர் பேசத்துவங்கிய spiritual freedom  என்பது மார்க்சியர்களின் சொல்லாடல்களில் ஒன்றல்ல.
அவரின் சிறைக்குறிப்புகளின்படி பார்த்தால் அவர் காந்தி நோக்கி நகர்ந்துவிட்டார் என சொல்வதற்கு இல்லை. அரவிந்தர், விவேகானந்தர் பதங்களை ராய் பயன்படுத்துகிறார். Indian Renaissance  என்பதை விளக்க ஆரம்பிக்கிறார். சுயமுரண்பாடுகளின் மூட்டை காந்தியம் என்கிற விமர்சனத்தை அவர் கைவிடவில்லை. மக்களை அது அன்பு அகிம்சை என்கிற பெயரில் செயலிழக்க பலமிழக்க செய்துவிடும் என்றே எழுதிவந்தார். அவரின் சிந்தனைகள் செயல்பாடுகள்  ‘the ideological reflex’ of India’s ‘cultural backwardness’ and ‘superstition’ க்குத்தான் உதவிகரமாக இருக்கும் என்றார்
உண்மையான வளர்ச்சிக்கு காந்தி தடையாக இருப்பதாகவே ராய் கருதினார். ஆனால் 1940களின் இறுதியில் காந்திய சீடர்களைவிட காந்தியின் சரி தவறை தானே மேலாக புரிந்துகொண்டுள்ளதாகவும் எழுதினார். காந்தியை அரசியல் விழிப்புணர்வாளர்- வெகுஜனங்களைத் தட்டி எழுப்பியவர் என்று புகழ்ந்தார். இந்திய மக்களின் உருவம் என உயர்வுபடுத்தினார்.
ராய்க்கு நெருக்கமாக இருந்த பிலிப் ஸ்ப்ராட்  ராயின் எழுத்துக்களின் தொகுப்பு ஒன்றிற்கு முன்னுரை எழுதியிருந்தார். அதில் காந்தி குறித்த ராயின் மதிப்பிடுகள் குறித்து தெளிவுபடுத்துகிறார்.  காந்தி குறித்த ராயின் விமர்சனம் அந்நியர் நாட்டவர் ஒருவர் செய்வது போலவே அமைந்தது. மக்களுக்கு  புரியும் வகையில் அவரால் வைக்க இயலவில்லை. அவர் காந்தியைப் போலவோ அவரது சீடர்கள் போலவோ யோசித்து அதன் பலாபலன்களை அறியாதவராக இருந்தார் என்பது பிலிப் தரும் செய்தி.. விடுதலைகாலத்தில் நடந்த வகுப்புக்கலவரங்களின் நேரத்தில் காந்தியின் செயல்பாடுகள் ராயை மாற்றியதாக ஸ்ப்ராட் சொல்கிறார்
  எம் என் ராய் காந்தியின் அரசியல் நிலைப்பாடுகளை அவரின் தத்துவப்பார்வையை விமர்சித்தவர்தான். ஆனால் அவரின்  greatness  மீது அளப்பரிய மரியாதை கொண்டவர்.  எம் என் ராயின் பார்வையில்  விமர்சனம் என்பது உரிய பாராட்டை ஒதுக்கிய ஒன்றல்ல (criticism does not exclude appreciation).  கண்மூடித்தனமான பக்தியோ கீழ்ப்படிதலோ  தமக்கு இல்லை என்றும். அவரை மனோ உந்துதல்படி பார்க்காமல் விமர்சன ஒளியில் தான் பார்ப்பதாகவும் ராய் தெரிவித்தார். விமர்சித்தாலே எதிரியாக புரிந்துகொள்ளப்படுகிறோம்.  critical appreciation   என்பதன் மதிப்பு சமூகத்திற்கு தெரியாமல் இருக்கிறது என்றார் ராய்.
கோட்பாடுகளை ஆய்விற்கு உட்படுத்தும்போது நாம் நிராகரிக்க வேண்டியதாக இருந்தாலும் சில அம்சங்கள் நமக்கு நிறைவு தரக்கூடியதாக உயர் மதிப்பீட்டிற்குரியதாக காணப்படலாம். அதை நேர்மறையாக மதிப்பிட்டு நாம் பாராட்டவேண்டும். காந்தியின் மீது வழிபாடு செய்பவர்களைவிட விமர்சனரீதியாக பார்க்கும் தனக்கு அவர் குறித்த மேலான புரிதலும் உயர் மதிப்பீடுகளும் இருப்பதாக ராய் எழுதினார்.
காந்தி வரலாற்றில் தீர்க்கதரிசியாக இடம் பெறமாட்டார். ஆனால் மக்களை அரசியல்ரீதியாக பெரும் விழிப்பிற்கு உள்ளாக்கியவர் எனப் பெயர் பெறுவார். நமது விடுதலைப் போராட்டம் காந்தி நுழைந்த 1920க்கு பின்னர்தான் உருவானது என்பதை ராய் ஏற்கவில்லை.. இந்திய மக்களின் உருவாக்கம்தான் மகாத்மா காந்தி என்றே அவர் மதிப்பிட்டார். அது வரலாற்றுத் தருணம். மக்களின் மொழியில்  காந்தி பேசினார்.  மக்களும் அவரை கொண்டாடி பின் சென்றனர். ஆனால் மக்களின் புரிதல் உணர்வு கீழான நிலையில்தான் இருந்தது. ஒருவர் உயர அவர்களையும் உயர்த்த அவர்கள் அளவு இறங்கி வரவேண்டியிருந்தது. இப்படி தன்னை இறக்கிக்கொள்வதே மகத்தானது.  The greater homage would be to regard and respect Gandhiji as the embodiment of the primitive, blind, spontaneous spirit of revolt of the masses. அவரின் அரசியல் முதிர்ச்சியற்றது, பழுதானது என்றெல்லாம் விமர்சிக்கலாம்.  வரலாறே சிறந்த மனிதர்களின்  சுயவரலாறுதான் என்கிற புரிதல் இப்போதில்லை. அவர்கள் அவதாரம் அல்ல. அவர்கள் தங்கள் காலத்தின் சரியான பிரதிநிதியாக இருக்கிறார்கள் என்பதில் அவர்கள் மேன்மை தங்கியுள்ளது. காந்தி அப்படிப்பட்ட மேன்மையாளர்.  Greatness cannot be unlimited.  நான் காந்தியை முட்டாள்தனமாக தொழுது வணங்கமாட்டேன். அவரின் உண்மையான மகத்துவம் போற்றுவேன் என்றார் ராய்.
தேசப்பெருமித துறவி காந்தி. அதே தீவிர பெருமித இறைவியாக எழுந்த அகண்ட இந்துஸ்தானுக்கு அவர் பலியிடப்பட்டார். அந்த வெறித்தனம் அதன் சொந்த தேசம் பேசிய துறவியையே பலியாக கேட்டுவிட்டது. மகாத்மாவின் மொழியானது தியாகம் சுயதுன்பம் அனுபவிப்பதை தாண்டிய ஒன்று. நெறிசார்ந்த மனிதாபிமான அப்பீல் கொண்டது அதன் சிறப்பு என எழுதினார் ராய்.
காந்தி ராமராஜ்யம் அல்லது கடவுளின் ராஜ்யம் என பேசிவந்தார். எனக்கு சொர்க்கம் என்றால் என்ன எனத் தெரியாது. தூரபார்வைக் கொண்டு  பார்க்கவேண்டும் என்கிற அவாவும் எனக்கில்லை. நிகழ்காலம் நன்றாக மைந்து நடைபெறும் என்றால் எதிர்காலமும் வேறுமாதிரியாக அமையாது என நம்புகிறேன் என்றார் காந்தி
 காந்தியின் அகிம்சை கோட்பாடு அரசியல் நடைமுறையில் நேர்மை என்பதை இணைத்தது. ஆனாலும் தனிப்பட்ட முறையில்தான் அவர் அதை கடைப்பிடிக்கமுடிந்தது. அவரின் அரசியல் சீடர்கள் பலர் மீறும்போது அவர் வாளா இருக்கவேண்டியிருந்தது. அந்த நேரத்தில் அவர் அரசியல் மனிதனாக மட்டுமே இருக்க முடிந்தது. அதை அவர் மனம் ஒப்பி செய்தார் என ராய் சொல்லவில்லை.. அவரது நெறிகள் மற்றவர்க்கு வறட்டுகோட்பாடுகளாக தெரிந்தது. அவர் பண்டைய முனிவர்களின் ஞானிகளின் மத அனுபவங்களுடன் அதனை குழைத்தார். ஆனால் பகுத்தறிவு அரசியல் நடைமுறை என்ற பெயரில் அவற்றை நிராகரிக்காமல் செக்யூலர் பார்வையில் ஏற்கமுடியும் என ராய் கருதினார். ’அதிகாரஅரசியல்’வழிகளைப்பற்றி கவலைப்படாமல் போய்க்கொண்டிருக்கிறது. இதனால் காந்தி பொருத்தமில்லை என்ற சூழலும் உருவாக்கப்படுகிறது. ஆனால் காந்தி அரசியலை தூய்மைப்படுத்த விழைந்தார் என்பதை எவ்வாறு புறக்கணிக்க முடியும் என ராய் வினவினார் . மற்ற மத தீர்க்கதரிசிகளைப்போலவே காந்தியும் தனது தோல்வியை கண்டுள்ளார். தனிமனித சுத்ந்திரம் இல்லையெனில் மனிதாபிமானம் சாத்தியப்படுவதில்லை என்பதை ராய் இந்திய அனுபவங்களில் கண்டைந்தார்.
ஆதார நூல்கள்
1. Men I Met    M N Roy
2. Mahatma and Roy A study in Contrast and convergence Hari singh Verma





ரஷ்யப் புரட்சியின் தாக்கத்தால் ‘பக்கிங்காம் அண்டு கர்னாடிக் மில்’லில் (பி&சி) 1918 ஏப்ரல் மாதம் 27இல் ‘சென்னை தொழிலாளர் சங்கம்’ தொடங்கப்பட்டது. அதன்பிறகு தென்னிந்தியாவில் இத்தகைய பல தொழிற்சங்கங்கள் தொடங்கப்பட்டன. தோழர்கள் சர்க்கரை செட்டியார், சிங்காரவேலர் இந்த முயற்சிகளின் மையமாக இருந்தனர். இந்தப் போக்கு வடக்குக்கும் பரவியது.

தாக்கத்தின் தொண்டர் மரபு

இந்தியாவுக்கான கம்யூனிஸ்ட் கட்சியை 1920இல் ரஷ்யாவில் எம்.என்.ராய் உருவாக்கினார். இந்திய மண்ணில் 1925இல் சிங்கார வேலர் தலைமை தாங்கிய கூட்டத்தில் கம்யூனிஸ்ட் கட்சி உருவாக்கப்பட்டது என்று இரண்டு நிகழ்வுகள் உள்ளன. இரண்டும் ரஷ்யப் புரட்சியின் குழந்தைகள்தான்.



தோழர்கள் எம்.என்.ராயும் சிங்காரவேலரும் மக்களுக்கான அறிவாளிகள். இந்தியக் கம்யூனிஸ இயக்க வளர்ச்சியில் அவர்களது பங்கு பெரிதும் மேதமை சார்ந்தது. மூளை உழைப்பு சார்ந்தது. அவர்களுக்கு இணையான ஒருவர் உண்டு. அவரது உழைப்பு அர்ப்பணிப்பு மிக்க தொண்டர் பாரம்பர்யத்தின் தோற்றுவாய். இந்திய அரசியல் வானில் மேகங்களாக மிதந்த மார்க்சியத்திலிருந்து நம்மீது பொழிந்த மழையாக அவர் இருந்தார். நமக்குள் விதைகளாகி உயிர்த்தார். அவர்தான் ரஷ்யாவால் பயிற்சி தரப்பட்ட தோழர் அமீர் ஹைதர் கான்.


1930களின் தொடக்கத்தில் சென்னையிலும் வடஇந்தியாவிலும் கட்சியின் அமைப்பை உருவாக்குவதிலும் அதைப் பலப்படுத்துவதிலும் அவர் பெரும்பங்காற்றினார்.





அம்மாவையும், கை ராட்டையையும் ஞாபகப்படுத்திய, அந்த சர்வோதய சங்கக் கட்டடம்


அம்மாவையும், கை ராட்டையையும் ஞாபகப்படுத்திய, அந்த சர்வோதய சங்கக் கட்டடம்




டாக்டர்களின் ஆலோசனையை காட்டிலும், நண்பர்களின் ஆலோசனையை பின்பற்றுவதே பெரும்பாலானவர்களின், 'சாய்ஸ்!' நானும் அதற்கு விதிவிலக்கல்ல. என் சுகரையும், ரத்த அழுத்தத்தையும் மாதந்தோறும் பரிசோதித்து, மாத்திரைகளையும்,'இன்சுலினை'யும் வழங்கும் டாக்டர், 'உணவு கட்டுப்பாடு மற்றும் நடைபயிற்சி முக்கியம்...' என்று, பலமுறை சொல்லியும் பொருட்படுத்தாமல் இருந்தேன்.
''நாளைலேர்ந்து, 'பீச்'சுல நடைபயிற்சிக்கு வர்றீங்க. நீங்க வர்றீங்களா இல்லையான்னு, நான் எங்கிருந்தாவது, பார்த்துட்டு இருப்பேன்,'' என்று, நண்பர், அறிவுறுத்திய போது, தட்ட முடியவில்லை.
மறுநாள் முதல், நானும், மனைவியும், 'பீச்'சில் நடை பயில ஆரம்பித்தோம்.
அப்போது நாங்கள், சென்னை ராயப்பேட்டை, போஸ்ட் ஆபீஸ் மாடியில் இருந்த, 'குவாட்டர்சில்' தான் குடியிருந்தோம்.
அங்கிருந்து, 'ஸ்கூட்டி'யில் மெரீனா பீச்சுக்கு வந்து, நடை பயின்ற பின், வண்டியை எடுத்து வீடு திரும்புவது வாடிக்கையானது. உழைப்பாளர் சிலையை கடந்து செல்லக் கூடாது என்பது, பள்ளிப் பருவத்திலேயே அம்மா சொல்லி இருக்கிறார். அதனால், அந்த எல்லையை ஒருபோதும் கடந்து சென்றதுமில்லை; செல்வதுமில்லை.
ஒரு ஜனவரி, 30ம் தேதியன்று, காந்தி சிலையை கடந்து நடந்து கொண்டிருக்கும் போது தான், அந்த காட்சி, எங்கள் கண்களில் பட்டது. காந்தி சிலை முன், ஆண்களும், பெண்களுமாய் சிலர் அமர்ந்து, 'ரகுபதி ராகவ ராஜாராம்... பதீத பாவன சீதாராம்...' என்று முணுமுணுத்தபடியே, கையால் ராட்டையில் நுால் நுாற்றுக் கொண்டிருந்தனர்.
அந்த காட்சி, எனக்கு இரண்டு விஷயங்களை ஞாபகப்படுத்தியது. ஒன்று, என் அம்மா. இரண்டாவது, முன்னாள் சபாநாயகர் க.ராஜாராம். இருவருமே இப்போது உயிருடன் இல்லை.
வார்டு கவுன்சிலர்கள் கூட, 10 பேருடன் புடைசூழ வலம் வந்து கொண்டிருக்கும் அரசியலில், வானளாவிய அதிகாரம் படைத்த பதவியில் இருந்தும், சிறிதும், 'பந்தா' காட்டாத அரசியல்வாதி அவர்.
காமராஜர் சாலையில், நடை பயிற்சிக்கு வரும் அனைவரிடமும், கொஞ்சம் கூட, 'ஈகோ' பார்க்காமல், இரண்டு கைகளையும் குவித்து, முகத்தில் புன்னகையோடு, வணக்கம் சொல்வது, ராஜாராமின் பண்பாடு. எங்களுக்கும் அவர் அப்படித்தான் அறிமுகமானார்.
'ரகுபதி ராகவ ராஜாராம்' பாடல், ராஜாராமை நினைவூட்ட, அவர்கள் நுாற்றுக் கொண்டிருந்த கை ராட்டை, அம்மாவை ஞாபகப்படுத்தியது.
அப்போது நாங்கள், திருவல்லிகேணி திருவட்டீஸ்வரன்பேட்டை, நாகப்பையர் தெருவில் குடியிருந்தோம்.
என்னவென்று ஊகிக்க முடியாத நோயால் பீடிக்கப்பட்டு, கீழ்ப்பாக்கம், 'லண்டன் தொட்டி' மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்தார், அப்பா.
பூந்தமல்லி நெடுஞ்சாலையில் உள்ள, கீழ்ப்பாக்கம் மெடிக்கல் காலேஜ் மருத்துவமனைக்கு தான், அப்படியொரு திருநாமம். மெடிக்கல் காலேஜ் மருத்துவமனைக்கும், லண்டன் தொட்டிக்கும் என்ன தொடர்பு என்று தெரியவில்லை. அலோபதி மருத்துவம் மட்டுமின்றி, சித்தா, ஆயுர்வேதம் மற்றும் யூனானி வைத்தியமும் அங்கே இருந்தது.
ஆயுர்வேத சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்தார், அப்பா. அப்போது, முதல்வராக இருந்தார், காமராஜர்.
என்ன கோளாறு என்பது தெரியாத நிலையில், அப்பாவின் சிகிச்சை மாதக் கணக்கில் நீண்டு கொண்டிருந்தது.
வீட்டில், 'வாழ்க்கை படகு' தள்ளாட ஆரம்பித்தது.
அம்மாவின் கழுத்திலும், கையிலும், காதிலும் அலங்கரித்த நகைகள் ஒவ்வொன்றாய் காணாமல் போய், அவரது பெயரில் மட்டுமே, தங்கம் மிச்சமிருந்தது.
மனிதநேயம் முற்றிலும் மறைந்து, சுயநலம் மட்டுமே கோலோச்சத் துவங்காத கால கட்டம் அது.
அம்மா படும் அவஸ்தைகளையும், அவள் சூழ்நிலையையும் உணர்ந்தவராய், பக்கத்து, 'போர்ஷனில்' குடியிருந்த, பாலு மாமா, ஒருநாள், மரப் பெட்டி மற்றும் காகிதப் பொட்டலத்தோடும் வந்து நின்றார்.
அவரை நிமிர்ந்து பார்த்து, 'என்ன...' என்று கேட்டாள், அம்மா.
'ஆத்துல இருந்துண்டே சம்பாதிக்க, நான் ஒரு உபாயம் சொல்லட்டுமா?' என்றார்.
'என்ன சொல்லப் போறேள்?'
அம்மாவின் முன் அமர்ந்த, பாலு மாமா, மரப் பெட்டியை திறந்தார். வீட்டுப் பாடம் எழுதிக் கொண்டிருந்த நான், அம்மாவின் அருகில் சென்று, எட்டிப் பார்த்தேன்.
அது ஒரு கை ராட்டை.
பிரித்து வைக்கப்பட்டிருந்த அதன் பாகங்களை இணைத்து பொருத்தினார், பாலு மாமா.
பெரிய சக்கரத்திலிருந்து சிறிய சக்கரத்திற்கும், சிறிய சக்கரத்திலிருந்து, 'தக்ளி'க்கும் இணைப்பு கொடுத்தார். தக்ளி பொருத்தி இருந்த கட்டையை, உரிய கோணத்தில் சாய்த்து வைத்தார். சக்கரங்களும், தக்ளியும் லகுவாக சுழல, கொஞ்சம் கிரீசை தடவி, முன்னோட்டம் பார்த்தார். ராட்டையும், தக்ளியும் சுலபமாக சுழன்றன.
பொட்டலத்திலிருந்து பஞ்சை எடுத்து, தக்ளியில் இணைத்து, வலது கையால், பெரிய சக்கரத்தின் பிடியை சுழற்றி, இடது கையால் நுால் நுாற்று, குறிப்பிட்ட அளவு நுாற்றதும், ராட்டையை நிறுத்தினார். நுாற்ற நுாலை தக்ளியின் மேல் பாகத்தில் சுற்றி, மீண்டும் ராட்டையை சுழற்றி, பம்பரமாய் செயல்பட்டார்.
பத்து நிமிடத்தில், அவரது இடது கையில் பிடித்திருந்த பஞ்சு முழுவதும் நுாலாக மாறி, தக்ளிக்கு இடம் பெயர்ந்திருந்தது.
அம்மாவும், நானும் அந்தக் காட்சியை பிரமிப்புடன் பார்த்துக் கொண்டிருந்தோம்.
அடுத்து, பஞ்சை லாவகமாக தக்ளியில் இணைத்து, தொடர்ந்து நுாற்றுக் காட்டிக் கொண்டிருந்தார், பாலு மாமா.
இரண்டாவது பஞ்சு, எட்டு நிமிடத்திலும், மூன்றாவது பஞ்சு, ஐந்து நிமிடத்திலும் நுாலாக மாறி, தக்ளியை நிறைத்திருந்தது.
'ஆத்துல இருந்துண்டே இப்படி நுால் நுாத்துக் கொடுத்து, காசு சம்பாதிக்கலாம் மாமி...' என்றார்.
'சம்பாதிக்கலாம் சரி. ஆனா, எனக்கு நுால் நுாக்கத் தெரியாதே...' என்றாள் அம்மா.
'இது ஒண்ணும் பெரிய கஷ்டமில்லே மாமி. இப்போ நீங்க பார்த்தேள்ல, ஒரு மணி நேரம் இல்லேன்னா ரெண்டு மணி நேரத்துல ஈசியா கத்துக்கலாம்!'
'அது சரி. ஆனா, அதுக்கு ராட்டை வாங்கணும்; பஞ்சு வாங்கணும். நுாத்த நுாலை யாரு வாங்கிப்பா... எங்கே விக்கணும்ன்னு நேக்கு ஒண்ணும் தெரியாதே...' என்றாள்.
'கவலையே படாதீங்கோ, சர்வோதய சங்கத்துல வாங்கிப்பா. நான் அங்கதான் வேலை செய்யறேன். ஓஞ்ச நேரத்துல நுாக்கலாம்னு தான், நான் இதை வாங்கினேன். இப்ப என்னால முடியலை. பரண் மேல போட்டு வெச்சிருந்தேன்.
'இப்போ நீங்க கஷ்டப்பட்டுண்டிருக்கேள். ஏதோ என்னால் ஆன உதவி. இதை வெச்சுக்குங்கோ. நாளை சங்கத்துக்கு வாங்கோ, அறிமுகப்படுத்தி, உங்களை மெம்பராக்கி வைக்கிறேன். வாரம், 10 ரூபா சம்பாதிக்கலாம். கொஞ்சம் சிரமப்பட்டா, 15 ரூபா கூட சம்பாதிக்கலாம்...' என்றார், பாலு மாமா.
அவர் யோசனையும், அணுகுமுறையும், அம்மாவுக்கு பிடித்து இருந்தது.
'சங்கம் எங்கே இருக்கு?'
'பிராட்வேல!'
'ரொம்ப துாரமா இருக்கும் போல இருக்கே?'
'திருவல்லிக்கேணி போஸ்ட் ஆபீஸ் எதிர்க்க, 32 - 32-ஏ பஸ் ஏறினா, சங்கத்தோட வாசல்ல இறக்கி விடுவா. 20 பைசா தான், வண்டிச் சத்தம். ஒவ்வொரு தடவையும் நீங்களே வரணும்ன்னு இல்லை. இதோ இவன்ட்ட கொடுத்து அனுப்புங்கோ. அங்க தான் நான் இருக்கேனே, பார்த்துக்கறேன்...' என்றார், பாலு மாமா.
அம்மா சம்மதித்தாள்.
அதன் பின், அந்த ராட்டையைப் போலவே சுழலத் துவங்கினாள். இயந்திரங்கள் கூட ஒருநாள் ஓய்வெடுத்து உட்காரும். அம்மா சும்மா உட்கார்ந்து, ஒருநாள் கூட நான் பார்த்ததில்லை.
தக்ளியில் நுாற்று வைக்கப்பட்டிருக்கும் நுால்களை இணைத்து சிட்டங்களாக்க வேண்டும். அதற்கு ஒன்றின் மீது ஒன்றாக பொருத்தக் கூடிய இரண்டு சட்டங்கள் உண்டு.
ராட்டையின் சிறிய சக்கரத்தில் அந்த சட்டங்களைப் பொருத்தி, தக்ளியில் உள்ள நுாலை அதில் சுற்ற வேண்டும். ஒரு தக்ளியில் உள்ள நுால் முடிந்தவுடன், அதனுடன் அடுத்த தக்ளியில் உள்ள நுாலை முடிச்சு போடாமல் லாவகமாக இணைக்க வேண்டும்.
பெரும்பாலோர் எச்சில் தொட்டு தான் இணைப்பர். அம்மா, டம்ளரில் தண்ணீர் வைத்து, அதில் தொட்டு இணைப்பாள்.
அதை பார்த்து நானும், ராட்டையில் நுால் நுாற்க கற்றுக்கொண்டேன். ஆனால், நான் நுாற்கும் நுால், சற்று கனமாக இருந்ததால், என்னை, ராட்டையைத் தொட விட மாட்டாள், அம்மா. நுாலின் கனம் கூடுதலாக இருந்தால், நுாலுக்கான, 'ரேட்' குறைந்து விடும்.
நுாலை சட்டத்தில் சுற்றுவதும், சுற்றியதை பிரித்து, முறுக்கி சிட்டங்களாக்குவதும், சிட்டங்களை சங்கத்தில் கொடுத்து பஞ்சும், பணமும் வாங்கி வருவதுமே, என் பணி.
அம்மா, வாரம், 15 சிட்டம் நுாற்பாள். ஒரு சிட்டம், ஒரு ரூபாய். 15 ரூபாயில், மூன்று ரூபாய்க்கு பஞ்சு வாங்கி, மீதி, 12 ரூபாயை அம்மாவிடம் தருவேன்; எனக்கு, எட்டணா தருவாள்.
'எனக்கெதுக்கம்மா காசு?'
'வெச்சுக்கோ. கூடமாட இருந்து ஒத்தாசை செய்யறோல்லியோ. அதுக்குத்தான்!'
அந்த எட்டணாவை, நான், செலவு செய்ய மாட்டேன். பள்ளிக் கூடத்தில் தேசிய சேமிப்பு அட்டை கொடுத்திருந்தனர். 20 கட்டங்கள் இருக்கும், அந்த அட்டையில் ஒவ்வொரு கட்டத்திலும், 25 காசு மதிப்புள்ள தேசிய சேமிப்பு ஸ்டாம்ப் ஒட்ட வேண்டும்.
தபால் அலுவலகத்தில், ஸ்டாம்ப் கிடைக்கும். கட்டங்கள் பூர்த்தியானதும், அதை தபால் அலுவலகத்தில் கொடுத்து, நம் பெயரில் சேமிப்பு வங்கி கணக்கு துவக்கலாம்.
அம்மா கொடுக்கும் எட்டணாவுக்கு, இரண்டு ஸ்டாம்ப் வாங்கி, அதில் ஒட்டி பத்திரப்படுத்தினேன். அட்டையை சீக்கிரம் பூர்த்தி செய்யும் ஆவலில், பஸ்சுக்கு கொடுக்கும் காசை மிச்சப்படுத்தி, நடந்து சென்று சேமித்துக் கொண்டிருந்தேன்.
அப்பாவின் உடல் நிலை தேறவேயில்லை. அவ்வப்போது, 'டிஸ்சார்ஜ்' ஆகி வீட்டுக்கு வருவதும், மறு மாதமே மீண்டும், 'அட்மிட்' ஆவதுமாக இருந்தார்.
'லண்டன் தொட்டி' அரசு மருத்துவமனை என்பதால், செலவு இல்லை.
இடையே, சங்கத்தின் திண்டுக்கல் கிளைக்கு மாறுதலாகிப் போனார், பாலு மாமா. போகும் போது, அவரது ஞாபகமாக இருக்கட்டும் என்று, கை ராட்டையை அம்மாவையே வைத்துக் கொள்ளச் சொல்லிச் சென்றார்.
வெள்ளிக்கிழமை தான், சங்கத்தில் நுாலை வாங்கி, பஞ்சும், பணமும் தருவர். அதுவும் மாலை, 6:00 மணிக்குள் செல்ல வேண்டும். கதவை மூடி விடுவான், காவலாளி.
கதவை மூடி விட்டால், உள்ளே இருப்பவர்கள் தான் வெளியே வர முடியுமே தவிர, வெளியில் இருப்பவர்கள் யாரும் உள்ளே செல்ல முடியாது.
அதன்பின், அடுத்த வெள்ளிக் கிழமை தான் நுாலை கொடுத்து, பணத்தையும், பஞ்சையும் வாங்க முடியும். மாலை, 4:00 மணிக்கு, பள்ளி விடும். அன்று, தமிழாசிரியர் கோபால சக்கரவர்த்தி நடத்திய பாடத்தை சரியாக எழுதாததால், 'இம்போசிஷன்' எழுதச் சொன்னார்.
வந்ததும் வராததுமாய், புத்தக பையை வைத்து, நுால் பையை எடுத்து, ஓட்டமும் நடையுமாய் புறப்பட்டேன். சங்கத்தை தொட்டபோது, ஏக களேபரமாய் இருந்தது. நல்ல வேளை, மெயின் கதவு மூடாமல் திறந்திருந்தது.
வரிசையில் நின்றேன். எனக்கு முன் நின்று கொண்டிருந்தவர்கள், சங்கத்தை சகட்டு மேனிக்கு திட்டிக் கொண்டிருந்தனர். ஏன் திட்டுகின்றனர் என புரியாமல், கொஞ்சம் கொஞ்சமாக வரிசையில் முன்னேறினேன்.
என் முறை வந்ததும், சிட்டங்களை கொடுத்து சீட்டை வாங்கி, 'கவுன்டரில்' கொடுத்தேன்.
'என்ன வேணும்?'
'பஞ்சும், பணமும் தான்...' என்றேன்.
'தம்பீ... இனி, நுாலுக்கு பணம் கிடையாது. இதோ இங்கே இருக்குற பொருட்கள்ல என்ன வேணுமோ, அதை நுாலோட மதிப்புக்கு வாங்கிக்க. அரசு உத்தரவு...' என்றார், கவுன்டர் கிளார்க்.
நீம் குளியல் சோப்பு, நீம் வாஷிங் சோப்பு, நீம் டூத் பேஸ்ட், கருப்பட்டி வெல்லம், செக்கில் ஆட்டிய எண்ணெய் வகைகள் என்று, அலமாரி முழுவதும் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன.
'ஐயா... இந்த பணத்துல தான் அரிசி, பருப்பு வாங்கணும். சோப்பையும், பேஸ்டையும் வாங்கி போய் சோறு பொங்க முடியாதுய்யா...' என்றேன்.
'புரிஞ்சுக்க தம்பீ... இவ்வளவு நாள் கொடுக்கலையா... அரசு உத்தரவு, அதை மீறி எங்களால எதுவும் செய்ய முடியாது...' என்றார் உறுதியாக.
உள்ளே நுழைந்தபோது இருந்த களேபரத்துக்கும், வரிசையில் நின்று கொண்டிருந்தவர்கள் சங்கத்தை திட்டிக் கொண்டிருந்ததற்கும் காரணம் புரிந்தது.
'என்னமோ போங்க; எதையாச்சும் கொடுங்க...' என்றேன்.
நுாலின் மதிப்புக்கு சில சோப்பு, பற்பசையை கொடுத்தார். அம்மாவிடம் கொடுத்து, விஷயத்தைச் சொன்னேன்.
'நல்ல வேளை, நீ பஞ்சு வாங்கிண்டு வரலை...' என்று, அதை வாங்கி வைத்த அம்மா, ராட்டையை பிரித்து, பெட்டியில் மூடி, பரணில் வைத்தாள்.
'நம்பினவாளை கடவுள் கைவிட மாட்டாண்டா... சி.என்.கே., ரோடு, 100ம் நெம்பர் ஆத்துல, நாளை கார்த்தால என்னை சமையலுக்கு கூப்பிட்டிருக்கா. அவாத்து மாமிக்கு உடம்பு சரியில்லையாம். இப்பத்தான் மாமா சொல்லிட்டு போனார்.
'மாசம், 60 ரூபா தருவாளாம். நீ, பஞ்சு வாங்கிண்டு வந்திருந்தா, நுாக்கவும் முடியாது; நுாத்ததை விக்கவும் முடியாது; வீணாத்தான் போயிருக்கும்...' என்றாள் அம்மா.
கண் இமைக்காமல் அம்மாவையே பிரமிப்புடன் பார்த்துக் கொண்டிருந்தேன். அவளது மனோ தைரியத்தை என்னவென்று சொல்வது?
அம்மாவையும், கை ராட்டையையும் ஞாபகப்படுத்திய, அந்த சர்வோதய சங்கக் கட்டடம், 60 ஆண்டுகளுக்குப் பின், இப்போது எப்படி இருக்கிறது என்று பார்க்க வேண்டும் போலிருந்தது.

எஸ்ஸாரெஸ்

INDEPENDECE FIRST AMENDED BY CONGRESS ON 1930 JANUARY 26





ஜன., 26, 1930ல் தான், '
முழு சுவராஜ்யம் மொத்த சுதந்திரம்

இந்திய அரசியலமைப்பு சட்டம், ஜனாதிபதியின் கையெழுத்தை பெற்று, அமலுக்கு வந்த நாளை தான், இந்திய குடியரசு தினமாக கொண்டாடுகிறோம்.

ஜனவரி, 26ம் தேதியன்று கொண்டாட காரணம், ஜன., 26, 1930ல் தான், 'முழு சுவராஜ்யம் மொத்த சுதந்திரம்' என்ற கோரிக்கையை வைத்தது, காங்கிரஸ்.
இந்திய அரசியலமைப்பு சட்டத்தை, அம்பேத்கருடன் இணைந்து இறுதி வடிவம் கொடுத்த பிரபலங்கள்: ஜவஹர்லால் நேரு, ராஜாஜி, வல்லபாய் படேல், கணேஷ் வாசுதேவ் மாவலன்கர், சியாமா பிரசாத் முகர்ஜி, ராஜேந்திர பிரசாத், கே.என்.முன்ஷி, அபுல்கலாம் ஆசாத் மற்றும் பல்வந்த்ராய் மேத்தா ஆகியோர்.
இவர்களை தவிர, அல்லாடி கிருஷ்ணசாமி அய்யர், என்.கோபாலசாமி, முகமது சதுல்லா, பி.எல்.மிட்டர் மற்றும் டி.பி.கைத்தான் ஆகியோரை ரகசிய உறுப்பினர்கள் என கூறுவர்.
இந்த அரசியலமைப்பு சார்ந்த தொகுப்பு முழுவதையும், தன் அழகான கையெழுத்தால் எழுதியவர், பிரேம் பீகாரி நரைன் ரெய்சதா.

ஒரே சமயத்தில், ஹிந்தி, ஆங்கிலம் என, இரண்டிலும் அரசியலமைப்பு சட்டம் உருவானது. கையால் உருவாக்கப்பட்ட காகிதத்தில், இது எழுதப்பட்டது. ஆங்கிலத்தில், 221 பக்கங்களுடன்,
13 கிலோ எடை கொண்டது. ஹிந்தியில், 251 பக்கம்.
இதில், 284 உறுப்பினர்களும் கையெழுத்திட்டனர்; அதில், 15 பேர் பெண்கள். முழுமையாக கையெழுத்து பெற்ற பின், ஜன., 26, 1950ல் நடைமுறைக்கு வந்தது. 395 நிரந்தர விதிகள் மற்றும் 12 அட்டவணைகள் இதில் அடக்கம்.
முதன்முதலில், பிரேம் பீகாரியால், கையால் எழுதப்பட்ட, அரசியலமைப்பு சட்டம் அழிய, 1,000 ஆண்டுகள் ஆகுமாம்.
16 x 22 அங்குலம் கொண்டது. ஹீலியம் வாயு நிரப்பப்பட்ட ஒரு பெட்டியில், ஹிந்தி அரசியலமைப்பு சட்ட புத்தகத்தை, 'பார்லிமென்டின் லைப்ரரி'யில் பாதுகாப்பாக வைத்துள்ளனர்.
'இது, முழுக்க முழுக்க என்னுடைய அரசியலமைப்பு தொகுப்பு அல்ல; பெரும்பாலானவை, 1935ம் ஆண்டு சட்டங்களிலிருந்து எடுக்கப்பட்டவையும் உண்டு...' என, அப்போதே கூறியுள்ளார், அம்பேத்கர்.

இந்த அரசியலமைப்பு சட்டத்திற்கு, இன்று, பல திருத்தங்கள் வந்து விட்டன. முதல் திருத்தம், 1951ல் வந்தது. அது, 'ஜமின்தாரி முறை' ஒழிக்கப்பட்டது; பின்தங்கிய வகுப்புகள், எஸ்.சி., - எஸ்.டி., பிரிவினரின் முன்னேற்றத்துக்கு வழி வகுப்பது என்பவை, இதில் இடம்பெற்றன.
அடுத்து, ஏழாவது திருத்தம். 1956ல் வந்த இதில் தான், மொழிவாரி மாநிலங்களும், யூனியன் பிரதேசங்களும் ஏற்படுத்த வழி செய்யப்பட்டன.
மூன்றாவது, 86வது திருத்தம்.
2002ம் ஆண்டு வந்த இதில், படிப்பு அடிப்படை உரிமையாக மாற்றப்பட்டது.
'ஆர்.டி.இ., ஆக்ட்...' என்பது, அதன் பெயர்.
நான்காவது, 101வது திருத்தம். 2016ல், ஜி.எஸ்.டி., அறிமுகப்படுத்தப்பட்டு, மறைமுக வரிகள் ஒழிக்கப்பட்டன. ஏப்., 1, 2010ல், இதை அமல்படுத்த முதல் முயற்சி மேற்கொள்ளப்பட்டது. இறுதியாக, செப்., 8 2016ல், ஜனாதிபதியின் கையெழுத்து கிடைத்த பின்தான் அமலுக்கு வந்தது.
ஜன., 12, 2019ல், 103வது திருத்தம் மேற்கொள்ளப்பட்டது. இதன்படி, பொது பிரிவில், ஏழைகளுக்கு, 10 சதவீத ஒதுக்கீடு ஏற்படுத்தப்பட்டுள்ளது.

ஆர்.வெங்கட்ராமன், ஜனாதிபதியாக இருந்தபோது தான், அதிகபட்சமாக, 14 திருத்தங்கள் ஏற்கப்பட்டன. இதில், முக்கியமானது, 61வது திருத்தம். இதன்படி ஓட்டு போடுபவர்களின் வயது, 21லிருந்து, 18 ஆக குறைக்கப்பட்டது.

டாக்டர் ராஜேந்திர பிரசாத் RAJENDRA PRASAD


டாக்டர் ராஜேந்திர பிரசாத்



இருமுறை, இந்திய ஜனாதிபதியாக இருந்த பெருமை, டாக்டர் ராஜேந்திர பிரசாத்துக்கு உண்டு. ஜனாதிபதியான அவர், தன் தமக்கை படவதி தேவியுடன் வசித்து வந்தார். ஜன., 25, 1960ம் ஆண்டு இரவு, தமக்கை படவதிதேவி காலமாகி விட்டார். 

அடுத்த நாள் காலை, குடியரசு தினம்.

தமக்கை இறந்த செய்தி வெளியானால், குடியரசு தின கொண்டாட்டங்களுக்கு இடையூறாக இருக்கும் என்று கருதிய, ராஜேந்திர பிரசாத், அதை வெளியிடவில்லை. அடுத்த நாள், ராணுவ அணிவகுப்பை பார்வையிட்டு, ராஜ்பவனுக்கு திரும்பிய சில நிமிடங்களுக்கு பிறகே, தமக்கையின் மரண செய்தி வெளியில் தெரிவிக்கப்பட்டது.

Friday 24 January 2020

CHINNA ANNAMALAI ,FREEDOM FIGHTER BORN 1920 JUNE 18- 1980 JUNE 18


CHINNA ANNAMALAI ,FREEDOM FIGHTER 
BORN 1920 JUNE 18- 1980 JUNE 18


சின்ன அண்ணாமலை (ஜூன் 18 1920 - ஜூன் 18 1980) தமிழ்ப் பண்ணை சின்ன அண்ணாமலை என அறியப்படும் இவர் ஒரு இந்திய விடுதலைப் போராட்ட வீரர், அரசியல்வாதி, பேச்சாளர் தமிழ் எழுத்தாளர், திரைப்படத் தயாரிப்பாளர்[

வாழ்க்கை வரலாறு
சிவகங்கை மாவட்டம், காரைக்குடி வட்டம் ஒ சிறுவயல் கிராமத்தைப் பிறப்பிடமாகக் கொண்ட இவரது பெற்றோர் 'பாங்கர்' நாச்சியப்ப செட்டியார்- மீனாட்சி தம்பதியினர்.

தயாரித்த திரைப்படங்கள்
"ஐந்து லட்சம்', "கடவுளின் குழந்தை', "தங்க மலை ரகசியம்' உள்ளிட்ட பல திரைப்படங்களை தயாரித்து வெளியிட்டுள்ளர்.

வெளியிட்ட நூல்கள்
சின்ன அண்ணாமலை, தனது தமிழ்ப் பண்ணைப் பதிப்பகத்தின் வழியாகப் பின்வரும் நூல்களை வெளியிட்டார்:

பாரதிபிறந்தார்' கல்கி
பெயர்க் காரணம்
1944 ல் நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் பிள்ளைக்கு ஒரு விழாவில் ரூ.20,000 நிதி திரட்டி பண முடிப்பு அளித்தார் அண்ணாமலை. அவ்விழாவில் ராஜாஜி "சின்ன அண்ணாமலை" என்று அழைத்தார். அதுவே அண்ணாமலையின் பெயராக பிரபலமானது.[3] இவருடைய படைப்புகளை தமிழக அரசு நாட்டுடைமையாக்கியுள்ளது.[4] டி.கே.சி., கலில், டி.எஸ்.சொக்க லிங்கம், நாமக்கல் கவிஞர் ஆகியோரின் புத்தகங்களை வெளியிட்டுள்ளார். "சங்கப் பலகை" என்ற வாரப்பத்திரிகையும் நடத்தினார்.தமிழ்ப் பண்ணை' பதிப்பகம் பொறுப்பாளராகவும் இருந்தவர்.[5]

இயற்றியுள்ள நூல்கள்
கண்டறியாதன கண்டேன்
கதைக்குள்ளே கதை
சர்க்கரைப் பந்தல்
சிந்திக்க வைக்கும் சிரிப்புக் கதைகள்
சிரிப்புக்கதைகள், தொகுத்துப்பதிப்பித்தவர் சீனி. விசுவநாதன் 1961 ஏப்ரல், மேகலைப் பதிப்பகம், சென்னை.
சுவை நானூறு
சொன்னால் நம்ப மாட்டீர்கள் (நூல்)
தலையெழுத்து
ராஜாஜி உவமைகள்[6]
வெளியிட்ட நூல்கள்
சின்ன அண்ணாமலை தனது தமிழ்ப்பண்ணையின் வழியாக பல நூல்களை வெளியிட்டார். அவற்றுள் சில:

பாரதி பிறந்தார், கல்கி
வ. உ. சிதம்பரனார், ம. பொ. சிவஞானம்
இவற்றையும் காண்க
தேசியமயமாக்கல்

கடந்த சனி, ஞாயிறு கடுமையான காய்ச்சல். . சும்மா படுத்துக் கிடக்கையில் மனம், குமட்டிக்கொண்டிருக்கும் வயிறு, குழம்பிக் கசக்கும் நா, அனல் தகிக்கும் செவிகள் இவற்றிலேயே சிக்கிக் கிடக்கும். கண்களை மூடினால் கிறக்கம் வந்து,, தயாராக நிற்கும் தீக்கனவுகள் எழுந்து வந்து அலைக்கழிக்கும். கூடவே அம்மா. நான் வாசித்துக்கொண்டிருக்கும் வரை நார்மல். அதுதான் அம்மா என் மன உடல் நலனுக்கு அவர்கள் வகுத்து வைத்திருக்கும் எல்லை. அம்மாவை நார்மலாக வைத்திருக்க ஒரே வழி நான் ஏதேனும் வாசித்துக்கொண்டிருப்பதே.

படுத்திருக்கும் சோபா சாய்மானம் முழுவதும் புத்தகங்களால் நிரப்பி வைத்திருக்கிறேன். அதிலிருந்து ஒன்றை உருவினேன். சந்தியா பதிப்பகம் வெளியீடான சின்ன அண்ணாமலை அவர்கள் தனது வாழ்வின் முக்கிய மற்றும் சுவையான தருணங்களை எழுதி, கட்டுரைத் தொகுதியாக வெளிவந்த ‘’சொன்னால் நம்பமாட்டீர்கள்’’ நூல் கிடைத்தது. சின்ன அண்ணாமலை வாழ்க்கைத் தருணங்கள் குறித்தும் ‘’சொன்னால் நம்பமாட்டீர்கள்’’ நூல் குறித்தும் முன்பு ஒரு உரையாடலில் என்னிடம் குறிப்பிட்டிருந்தீர்கள். அந்த நூலை இப்போதுதான் வாசிக்கிறேன்.

இன்று இந்தியப் பிரதமருக்கு எதிராக ‘’வீரமாக’’ கம்பு சுற்றிக்கொண்டிருக்கும் ஆனந்த விகடனின் நாற்பத்தி ஒன்றாம் ஆண்டு தீபாவளி மலர் வாசிக்கக் கிடைத்து. முப்பத்தி ஐந்து கட்டுரைகள். ஜே சி குமரப்பா, அவர்களின் செல்வத்தின் பொறுப்புகள் என்றொரு கட்டுரை அதைத் தவிர எல்லா கட்டுரையும் சும்மா பக்கம் நிரப்பும் கட்டுரைகள். உள்ளடக்கத்தின் கீழே தெளிவாக ‘’இந்த மலரின் கதைகள் கட்டுரைகள் உட்பட யாவும் கற்பனையே எதையும் யாரையும் குறிப்பிடுவன அல்ல’’ என குறிப்பிடப்பட்டுள்ளது. கட்டுரை ஒன்றின் தலைப்பு ‘’பா – ஸ்ரீமதி கஸ்தூரி பா அம்மை’’ அதாவது காந்தி என்ற பெயர் கூட குறிப்பிடப் படவில்லை. அப்புறம் கீழ்க்கண்ட குறிப்பின் படி ‘’கட்டுரை’’ உட்பட கற்பனையே. இப்படித்தான் ஆங்கிலேயே ஆட்சி முன்பு பம்மிக் கிடந்திருக்கிறது விகடன். இது போன்ற சூழலில்தான் சின்ன அண்ணாமலை பத்திரிகை நடத்துகிறார். [வழமை போல மனைவியின் நகைகளை விற்றுத்தான்] விகடனுக்கு இணையாக தீபாவளி மலர் கொண்டு வந்து நஷ்டம் அடைகிறார். வங்கப் பஞ்சம் எனும் நூல் வெளியீட்டு தண்டனை அடைந்து சிறை செல்கிறார்.

sinna


காந்தியை தொட்டுப்பார்ப்பது என்பது அக்காலத்தில் கிட்டதட்ட ஒரு புனிதக்கடமை போல இருந்திருக்கிறது. என் அம்மாவை பெற்ற அப்பா, காந்தி திருச்சி வருகையில், கூட்டத்தில் முண்டி அடித்து நுழைந்து, அவரை தொட்டுப் பார்த்த கதையை என் சிறு வயதில், அன்றைய பரவசம் சிறிதும் குன்றாமல் சொல்லி இருக்கிறார். வைக்கம் முகமது பஷீர் அவரது பால்யத்தில் இதே போல காந்தியை தொட்டுவிட்ட கதையை ஒரு கட்டுரையில் பரவசத்தோடு எழுதி இருப்பார். ஒரு புறம் தீண்டாமை, மறுபுறம் தீண்டும் இன்பம். சின்ன அண்ணாமலை காந்தியை தொட்டுவிட்ட அனுபவமே இந்த நூலின் முதல் கட்டுரை. அங்கே துவங்கிய அண்ணாமலை ஹரிஜன் இதழை தமிழில் நடத்த காந்தி அவருக்கு அனுமதி அளிக்கும் நிலை வரை உயர்கிறார். காந்தி கேட்கிறார் ‘’நஷ்டம் வராம நடத்துவியா?’’ [லாபம் இரண்டாம் பட்சம்,நஷ்டம் வரக் கூடாது அதுவே குறைந்த பக்ஷ வெற்றி] ராஜாஜி சொல்கிறார் ‘’அண்ணாமலையும் உங்களைப்போல வைசியர்தான்’’ காந்தி ‘’அச்சா அச்சா’’ என புன்னகையுடன் அனுமதி அளிக்கிறார்.

அண்ணாமலை அடையும் இந்த உயர்வு,அவரது உழைப்பாலும், சூழலாலும் அவர் அடைந்தது என்பதைக் காட்டிலும், அவருள் இலங்கி, அவரது ஆற்றலாகவும், அவரது மீறலாகவும் வெளிப்படும் இயற்கையின் ஷாத்ரகுணத்தால் என்பதை, அந்த ‘’ஷாத்ரத்தின் வெளிப்பாட்டை’’, வாசகன் உணர்வதே இந்த தன்வரலாற்றுக் குறிப்பு நூலை முக்கிய நூலாக உயர்த்துகிறது. பதின் வயது. மலேஷியா, பள்ளிக்காலத்தின் போதே, அங்கு மதுவுக்கு எதிராக அங்குள்ள மக்களை திரட்டி போராடுகிறார். அங்குள்ள அரசு அவரை கப்பலேற்றி மீண்டும் இந்தியாவுக்கு அனுப்புகிறது. இப்படி பதின் பருவம் முதலே, அண்ணாமலைக்குள் இலங்கும் இந்த மக்களை திரட்டும் ஆற்றலும், சரியான ஒன்றின் பொருட்டு அரசை எதிர்க்கும் துணிவும் அவரை தேசிய விடுதலைப் போராட்ட முன்னணி தலைவர்கள் வசம் கொண்டு சேர்க்கிறது.

அண்ணாமலை, மக்களை திரட்டும் கலையில் எந்த அளவு தேர்ச்சி கொண்டவர் என்பதற்கு, அவர் மும்பையில் கிங்காங் தாராசிங் குஸ்திபோட்டிக்கு மக்களை திரட்டும் யுக்தி கொண்டு அறியலாம். போராட்ட குணத்துக்கு திருவாடனை சிறை உடைப்பு சம்பவத்தை சுட்டலாம். அவரது ஆதர்சம் ராஜாஜி கலந்து கொள்ளாத ஆகஸ்ட் புரட்சி. ஆனாலும் அண்ணாமலை அதில் ஈடுபடுகிறார். கைதாகிறார். திருவாடனையில் சிறைவைக்கப்படும் அவரை, ஆயிரக்கணக்கில் ஊர் மக்கள் ஒன்று கூடி சிறையை உடைத்து மீட்கிறார்கள். கலவரத்தில் போலிஸ் துப்பாக்கியால் சுட, அண்ணாமலையை காப்பாற்ற ஊர் மக்களில் சிலர், அண்ணாமலைக்கு பாதுகாப்பாக அவர் முன் நின்று, சூடு வாங்கி இறக்கிறார்கள். இறந்துபோக வேண்டியது நாம், பதிலாக வேறு சிலர் நமது கண் முன்னால்,அந்த மரணத்தை தான் ஏற்றுக் கொள்கிறார்கள். இந்த நிலையில் நாம் இருந்தால்?. …….மீண்டபின் சித்தம் கலங்கி விடும். தன் இயல்பால் ஷாத்ரமும்,மீறலும் கொண்ட ஆளுமையால் மட்டுமே இப்படி ஒன்றை கடந்து வர முடியும். அண்ணாமலை அத்தகு ஆளுமை. அவருக்கு இது நேர்கிறது.கடந்து வருகிறார்.

நூலுக்குள் வெவ்வேறு கட்டுரைகள் ஊடே, மெல்லிய சித்திரமாக ராஜாஜியின் ஆளுமையும், வளர்ச்சியும்,வீழ்ச்சியும் துலங்கி வருகிறது. ராஜாஜி முதன்முதலாக அண்ணாமலையின் இல்லத்துக்கு வருகிறார். உணவு நேரம். ராஜாஜி இயல்பாக தனக்கும் பரிமாற சொல்கிறார். அண்ணாமலையின் மனைவியார் ‘’நீங்க ஆசாரம் எல்லாம் பாக்க மாட்டீங்களா’’ என தயக்கத்துடன் வினவுகிறார். ராஜாஜி அவருக்கு [மகாபாரத்தில் வரும் ‘’யார் பிராமணன்’’ எனும் விவாதத்தின் சாரத்தை] எது ஆசாரம், எது பிராமணத்துவம் என விளக்குகிறார். அன்று துவங்கி இறக்கும் கணம் வரை திருமதி அண்ணாமலை ராஜாஜி அவர்களின் சிஷ்யை போன்றே ஆகி விடுகிறார். ராஜாஜி இயற்கை எய்திய தகவல் கேட்டு, அதிர்ச்சியில் உயிர் இழக்கும் அளவு அவர் மேல் அன்பு பூண்டவராக இருக்கிறார்.திருமதி அண்ணாமலை. ஒரு முறை காவல் துறை உயர் பதவிக்கு ஆளெடுப்பு நடக்கிறது. வழமை போல பிர்ப்படுத்தப்பட்டோர் கோட்டாவில் யாரும் அப்ளே செய்யவில்லை எனும் சால்ஜாப்புடன் வேறொரு இடைநிலை சாதிக்காரருக்கு அப் பணி மாற்றி வழங்கப்படும் நிலை. ராஜாஜி ஊடே புகுந்து, சம்பந்தப்பட்ட ஆட்களை பிடித்து, பிர்ப்படுத்தப்பட்டோர் கோட்டா வழியே, சரியான நபருக்கு அந்தப் பணி சென்று சேரும் வகை செய்கிறார். ஒரு முறை ஒரு பதவிக்காக,பிற்ப்படுத்தப்பட்ட வகுப்பை சேர்ந்த ஒருவர் போட்டி இடுகிறார். அனுமதி ராஜாஜி வசம் பெற வேண்டும். ராஜாஜி இதில் போட்டி இட உனக்கு என்ன தகுதி இருக்கிறது என வினவுகிறார். போட்டியாளரும் பதிலளிக்கிறார். அவர் போனதும் ராஜாஜி அண்ணாமலை வசம் சொல்கிறார் ‘’இந்தப் பதவிக்கு தன்னுடைய தகுதியாக, தான் செய்த பணிகளை அவர் பட்டியல் இட்டார், மாறாக தனது சாதிகோட்டா உரிமை என அவர் சொல்லி இருந்தால் அவரை இரண்டாம் பட்சமாகவே வைத்திருப்பேன்’’. இத்தகு ராஜாஜிதான், காமராஜருடன் இணைந்து செல்ல இயலாமல், தனது கல்விக் கொள்கையை திரித்து, தன்னை சிவில் சமூகத்தின் ஆதரவில் இருந்து விலக்கிய,திமுக உடன் இணைந்து தேர்தலில் காமராஜரை தோற்க்கடித்து [ இந்த நூலுக்குள் பேசப்படாவிட்டாலும் ராஜாஜிக்கு இணையான ஆளுமை சரிவுதான் காமராஜருடயதும்] காங்கிரசுடன் சேர்ந்து தானும் தோற்கிறார்.

கூட்டம் சேர்க்கும், அதை தனது ஆளுகைக்குள் வைத்திருக்கும் வித்தை தெரிந்தவராக சின்ன அண்ணாமலை இருந்தாலும், எதிலும் தனது எல்லை எது என்பதை அறிந்தவராகவும் இருக்கிறார். உதாரணமாக அவர் தற்செயலாக தலைமையேற்கும் தொல்காப்பிய மாநாடு. அண்ணாமலை தனக்கு தொல்க்காப்பியம் குறித்து ஏதும் தெரியாது என முன்பே சொல்லி விடுகிறார். இருப்பினும் அமைப்பாளர்கள் அவரது ‘’தன்னடக்கத்தை’’ கைவிட்டு தொல்காப்பியம் குறித்து பேச அழைகிறார்கள். அண்ணாமலையும் மேடை ஏறி, அது ஒரு நல்ல நூல், அனைவரும் வாசிக்கவேண்டிய நூல், தமிழின் சொத்து, என பொதுப்படையாக பேசிக்கொண்டே போகிறார். மக்களை கட்டிப் போடும் பேச்சு. பேச்சு சுவாரஸ்யத்தில் ஒரே ஒரு இடத்தில் அடித்து ஆடி விடுகிறார். தொல்க்காப்பியத்தில் ஏழு சமஸ்க்ருத வார்த்தைகள் உண்டு எனும் அவரது ஆய்வை முன்வைத்த தருணமே அது. அவருக்கு அடுத்து பேச வரும் இரண்டாமவர் ‘’நான் ஆய்ந்த வரையில் நான்கு சமஸ்க்ருத சொற்களே உண்டு, மீதி மூன்று சொல் எது ‘’ என கேட்டு இருப்பிடம் அமைகிறார். அண்ணாமலை என்னடா இது என முழிக்கத் துவங்க, மூன்றாமவர் பேச எழுகிறார். அவர் தனது ஆய்வில் பதினோரு சமஸ்க்ருத சொற்களை கண்டடைந்ததாக சொல்கிறார். இதன்பிறகே அண்ணாமலை மூச்சு விடுகிறார். ஆம் இரண்டாமவர் தன்னை கேட்டால் மூன்றாமவரை கைகாட்டி விட்டு விடலாம் இல்லையா.

நூலின் பல சுவாரஸ்யமான அத்யாயங்களில் ஒன்று, சின்ன அண்ணாமலை ராஜாஜியுடன் இணைந்து மஞ்சள் பத்திரிகைகளை ஒழிக்க எடுக்கும் நடவடிக்கை. ஒரே ஒரு ஆபாச பத்திரிகை மட்டும் அத்தனை தடைகளையும் மீறி,[அதுதான் முன்னணி மஞ்சள் பத்திரிக்கையும் கூட] தமிழகத்தினுள் பவனி வருகிறது. காரணம் அது பதிப்பிக்கப்படுவது பெங்களூரில். பத்திரிகை தலைப்பை சொன்னால் நம்பமாட்டீர்கள். தலைப்பு ‘’இந்து நேசன்’’. சொன்னால் நம்பமாட்டீர்கள் எனும் தலைப்பின் கீழ் எழுதப்பட்ட தொடர் என்பதால் பெரும்பாலான அத்யாயங்கள் சொன்னால் நம்பமாட்டீர்கள் எனும் முத்தாய்ப்புடன் முடிகிறது. உண்மையில் பல நம்பமுடியாத சம்பவங்கள் தனது வாழ்நாளில் கண்டவர்தான் சின்ன அண்ணாமலை. மும்பையில் கலவரத்தில் தன்னை காப்பாற்றி வீடு சேர்க்கும் முஸ்லிம் ட்ரைவர், தலைமறைவு வாழ்வில் தன்னை மறைத்து வைத்து காப்பாற்றும் காவல்துறை அதிகாரி, சிறை வாழ்வில் தனக்கு முகமறியா காதலியாக தொடர் கடிதம் எழுதும் சிறுவன், என பல கதாபாத்திரங்களை உள்ளடக்கிய வாழ்க்கைக்கதை சின்ன அண்ணாமலையுடையது.

இந்தியாவில் காந்தி பணிபுரிந்த வருடங்களை, காந்தி யுகத்தை ராமச்சந்திர குகா கீழ்க்கண்டவாறு வரையறை செய்கிறார்.

//ஒரே சமயத்தில் மத சீர்திருத்தம், அரசியல் விடுதலை, ஜனநாயக அடிப்படை உரிமை, தொழில் புரட்சி, கல்வி, பெண் விடுதலை, சமூகநீதிக்கான நவீன நோக்கு, என அனைத்து நேர்மறை அம்சங்களையும் நோக்கி புரண்ட தேசம் உலகில் பிறிதொன்றில்லை.//

தேசத்தின் இந்த புரண்டுநகரும் திருகுகண்ணிக்கு எத்தனையோ ஆற்றல்கள் துணை நின்றிருக்கிறது. அந்த ஆற்றலின் திவலை சின்ன அண்ணாமலையில் வெளிப்படுவதைஇந்த தன்வரலாற்று நூலில் காண இயல்வதே இந்த நூலை எளிய.நூல் எனும் தளத்திலிருந்து உயர்த்தி, இதை முக்கிய நூலாக்குகிறது.

கடலூர் சீனு






சின்ன அண்ணாமலை (ஜூன் 18 1920 - ஜூன் 18 1980) தமிழ்ப் பண்ணை சின்ன அண்ணாமலை என அறியப்படும் இவர் ஒரு இந்திய விடுதலைப் போராட்ட வீரர், அரசியல்வாதி, பேச்சாளர் தமிழ் எழுத்தாளர், திரைப்படத் தயாரிப்பாளர்[

வாழ்க்கை வரலாறு
சிவகங்கை மாவட்டம், காரைக்குடி வட்டம் ஒ சிறுவயல் கிராமத்தைப் பிறப்பிடமாகக் கொண்ட இவரது பெற்றோர் 'பாங்கர்' நாச்சியப்ப செட்டியார்- மீனாட்சி தம்பதியினர்.

தயாரித்த திரைப்படங்கள்
"ஐந்து லட்சம்', "கடவுளின் குழந்தை', "தங்க மலை ரகசியம்' உள்ளிட்ட பல திரைப்படங்களை தயாரித்து வெளியிட்டுள்ளர்.

வெளியிட்ட நூல்கள்
சின்ன அண்ணாமலை, தனது தமிழ்ப் பண்ணைப் பதிப்பகத்தின் வழியாகப் பின்வரும் நூல்களை வெளியிட்டார்:

பாரதிபிறந்தார்' கல்கி
பெயர்க் காரணம்
1944 ல் நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் பிள்ளைக்கு ஒரு விழாவில் ரூ.20,000 நிதி திரட்டி பண முடிப்பு அளித்தார் அண்ணாமலை. அவ்விழாவில் ராஜாஜி "சின்ன அண்ணாமலை" என்று அழைத்தார். அதுவே அண்ணாமலையின் பெயராக பிரபலமானது.[3] இவருடைய படைப்புகளை தமிழக அரசு நாட்டுடைமையாக்கியுள்ளது.[4] டி.கே.சி., கலில், டி.எஸ்.சொக்க லிங்கம், நாமக்கல் கவிஞர் ஆகியோரின் புத்தகங்களை வெளியிட்டுள்ளார். "சங்கப் பலகை" என்ற வாரப்பத்திரிகையும் நடத்தினார்.தமிழ்ப் பண்ணை' பதிப்பகம் பொறுப்பாளராகவும் இருந்தவர்.[5]

இயற்றியுள்ள நூல்கள்
கண்டறியாதன கண்டேன்
கதைக்குள்ளே கதை
சர்க்கரைப் பந்தல்
சிந்திக்க வைக்கும் சிரிப்புக் கதைகள்
சிரிப்புக்கதைகள், தொகுத்துப்பதிப்பித்தவர் சீனி. விசுவநாதன் 1961 ஏப்ரல், மேகலைப் பதிப்பகம், சென்னை.
சுவை நானூறு
சொன்னால் நம்ப மாட்டீர்கள் (நூல்)
தலையெழுத்து
ராஜாஜி உவமைகள்[6]
வெளியிட்ட நூல்கள்
சின்ன அண்ணாமலை தனது தமிழ்ப்பண்ணையின் வழியாக பல நூல்களை வெளியிட்டார். அவற்றுள் சில:

பாரதி பிறந்தார், கல்கி
வ. உ. சிதம்பரனார், ம. பொ. சிவஞானம்
இவற்றையும் காண்க
தேசியமயமாக்கல்

கடந்த சனி, ஞாயிறு கடுமையான காய்ச்சல். . சும்மா படுத்துக் கிடக்கையில் மனம், குமட்டிக்கொண்டிருக்கும் வயிறு, குழம்பிக் கசக்கும் நா, அனல் தகிக்கும் செவிகள் இவற்றிலேயே சிக்கிக் கிடக்கும். கண்களை மூடினால் கிறக்கம் வந்து,, தயாராக நிற்கும் தீக்கனவுகள் எழுந்து வந்து அலைக்கழிக்கும். கூடவே அம்மா. நான் வாசித்துக்கொண்டிருக்கும் வரை நார்மல். அதுதான் அம்மா என் மன உடல் நலனுக்கு அவர்கள் வகுத்து வைத்திருக்கும் எல்லை. அம்மாவை நார்மலாக வைத்திருக்க ஒரே வழி நான் ஏதேனும் வாசித்துக்கொண்டிருப்பதே.

படுத்திருக்கும் சோபா சாய்மானம் முழுவதும் புத்தகங்களால் நிரப்பி வைத்திருக்கிறேன். அதிலிருந்து ஒன்றை உருவினேன். சந்தியா பதிப்பகம் வெளியீடான சின்ன அண்ணாமலை அவர்கள் தனது வாழ்வின் முக்கிய மற்றும் சுவையான தருணங்களை எழுதி, கட்டுரைத் தொகுதியாக வெளிவந்த ‘’சொன்னால் நம்பமாட்டீர்கள்’’ நூல் கிடைத்தது. சின்ன அண்ணாமலை வாழ்க்கைத் தருணங்கள் குறித்தும் ‘’சொன்னால் நம்பமாட்டீர்கள்’’ நூல் குறித்தும் முன்பு ஒரு உரையாடலில் என்னிடம் குறிப்பிட்டிருந்தீர்கள். அந்த நூலை இப்போதுதான் வாசிக்கிறேன்.

இன்று இந்தியப் பிரதமருக்கு எதிராக ‘’வீரமாக’’ கம்பு சுற்றிக்கொண்டிருக்கும் ஆனந்த விகடனின் நாற்பத்தி ஒன்றாம் ஆண்டு தீபாவளி மலர் வாசிக்கக் கிடைத்து. முப்பத்தி ஐந்து கட்டுரைகள். ஜே சி குமரப்பா, அவர்களின் செல்வத்தின் பொறுப்புகள் என்றொரு கட்டுரை அதைத் தவிர எல்லா கட்டுரையும் சும்மா பக்கம் நிரப்பும் கட்டுரைகள். உள்ளடக்கத்தின் கீழே தெளிவாக ‘’இந்த மலரின் கதைகள் கட்டுரைகள் உட்பட யாவும் கற்பனையே எதையும் யாரையும் குறிப்பிடுவன அல்ல’’ என குறிப்பிடப்பட்டுள்ளது. கட்டுரை ஒன்றின் தலைப்பு ‘’பா – ஸ்ரீமதி கஸ்தூரி பா அம்மை’’ அதாவது காந்தி என்ற பெயர் கூட குறிப்பிடப் படவில்லை. அப்புறம் கீழ்க்கண்ட குறிப்பின் படி ‘’கட்டுரை’’ உட்பட கற்பனையே. இப்படித்தான் ஆங்கிலேயே ஆட்சி முன்பு பம்மிக் கிடந்திருக்கிறது விகடன். இது போன்ற சூழலில்தான் சின்ன அண்ணாமலை பத்திரிகை நடத்துகிறார். [வழமை போல மனைவியின் நகைகளை விற்றுத்தான்] விகடனுக்கு இணையாக தீபாவளி மலர் கொண்டு வந்து நஷ்டம் அடைகிறார். வங்கப் பஞ்சம் எனும் நூல் வெளியீட்டு தண்டனை அடைந்து சிறை செல்கிறார்.

sinna

காந்தியை தொட்டுப்பார்ப்பது என்பது அக்காலத்தில் கிட்டதட்ட ஒரு புனிதக்கடமை போல இருந்திருக்கிறது. என் அம்மாவை பெற்ற அப்பா, காந்தி திருச்சி வருகையில், கூட்டத்தில் முண்டி அடித்து நுழைந்து, அவரை தொட்டுப் பார்த்த கதையை என் சிறு வயதில், அன்றைய பரவசம் சிறிதும் குன்றாமல் சொல்லி இருக்கிறார். வைக்கம் முகமது பஷீர் அவரது பால்யத்தில் இதே போல காந்தியை தொட்டுவிட்ட கதையை ஒரு கட்டுரையில் பரவசத்தோடு எழுதி இருப்பார். ஒரு புறம் தீண்டாமை, மறுபுறம் தீண்டும் இன்பம். சின்ன அண்ணாமலை காந்தியை தொட்டுவிட்ட அனுபவமே இந்த நூலின் முதல் கட்டுரை. அங்கே துவங்கிய அண்ணாமலை ஹரிஜன் இதழை தமிழில் நடத்த காந்தி அவருக்கு அனுமதி அளிக்கும் நிலை வரை உயர்கிறார். காந்தி கேட்கிறார் ‘’நஷ்டம் வராம நடத்துவியா?’’ [லாபம் இரண்டாம் பட்சம்,நஷ்டம் வரக் கூடாது அதுவே குறைந்த பக்ஷ வெற்றி] ராஜாஜி சொல்கிறார் ‘’அண்ணாமலையும் உங்களைப்போல வைசியர்தான்’’ காந்தி ‘’அச்சா அச்சா’’ என புன்னகையுடன் அனுமதி அளிக்கிறார்.

அண்ணாமலை அடையும் இந்த உயர்வு,அவரது உழைப்பாலும், சூழலாலும் அவர் அடைந்தது என்பதைக் காட்டிலும், அவருள் இலங்கி, அவரது ஆற்றலாகவும், அவரது மீறலாகவும் வெளிப்படும் இயற்கையின் ஷாத்ரகுணத்தால் என்பதை, அந்த ‘’ஷாத்ரத்தின் வெளிப்பாட்டை’’, வாசகன் உணர்வதே இந்த தன்வரலாற்றுக் குறிப்பு நூலை முக்கிய நூலாக உயர்த்துகிறது. பதின் வயது. மலேஷியா, பள்ளிக்காலத்தின் போதே, அங்கு மதுவுக்கு எதிராக அங்குள்ள மக்களை திரட்டி போராடுகிறார். அங்குள்ள அரசு அவரை கப்பலேற்றி மீண்டும் இந்தியாவுக்கு அனுப்புகிறது. இப்படி பதின் பருவம் முதலே, அண்ணாமலைக்குள் இலங்கும் இந்த மக்களை திரட்டும் ஆற்றலும், சரியான ஒன்றின் பொருட்டு அரசை எதிர்க்கும் துணிவும் அவரை தேசிய விடுதலைப் போராட்ட முன்னணி தலைவர்கள் வசம் கொண்டு சேர்க்கிறது.

அண்ணாமலை, மக்களை திரட்டும் கலையில் எந்த அளவு தேர்ச்சி கொண்டவர் என்பதற்கு, அவர் மும்பையில் கிங்காங் தாராசிங் குஸ்திபோட்டிக்கு மக்களை திரட்டும் யுக்தி கொண்டு அறியலாம். போராட்ட குணத்துக்கு திருவாடனை சிறை உடைப்பு சம்பவத்தை சுட்டலாம். அவரது ஆதர்சம் ராஜாஜி கலந்து கொள்ளாத ஆகஸ்ட் புரட்சி. ஆனாலும் அண்ணாமலை அதில் ஈடுபடுகிறார். கைதாகிறார். திருவாடனையில் சிறைவைக்கப்படும் அவரை, ஆயிரக்கணக்கில் ஊர் மக்கள் ஒன்று கூடி சிறையை உடைத்து மீட்கிறார்கள். கலவரத்தில் போலிஸ் துப்பாக்கியால் சுட, அண்ணாமலையை காப்பாற்ற ஊர் மக்களில் சிலர், அண்ணாமலைக்கு பாதுகாப்பாக அவர் முன் நின்று, சூடு வாங்கி இறக்கிறார்கள். இறந்துபோக வேண்டியது நாம், பதிலாக வேறு சிலர் நமது கண் முன்னால்,அந்த மரணத்தை தான் ஏற்றுக் கொள்கிறார்கள். இந்த நிலையில் நாம் இருந்தால்?. …….மீண்டபின் சித்தம் கலங்கி விடும். தன் இயல்பால் ஷாத்ரமும்,மீறலும் கொண்ட ஆளுமையால் மட்டுமே இப்படி ஒன்றை கடந்து வர முடியும். அண்ணாமலை அத்தகு ஆளுமை. அவருக்கு இது நேர்கிறது.கடந்து வருகிறார்.

நூலுக்குள் வெவ்வேறு கட்டுரைகள் ஊடே, மெல்லிய சித்திரமாக ராஜாஜியின் ஆளுமையும், வளர்ச்சியும்,வீழ்ச்சியும் துலங்கி வருகிறது. ராஜாஜி முதன்முதலாக அண்ணாமலையின் இல்லத்துக்கு வருகிறார். உணவு நேரம். ராஜாஜி இயல்பாக தனக்கும் பரிமாற சொல்கிறார். அண்ணாமலையின் மனைவியார் ‘’நீங்க ஆசாரம் எல்லாம் பாக்க மாட்டீங்களா’’ என தயக்கத்துடன் வினவுகிறார். ராஜாஜி அவருக்கு [மகாபாரத்தில் வரும் ‘’யார் பிராமணன்’’ எனும் விவாதத்தின் சாரத்தை] எது ஆசாரம், எது பிராமணத்துவம் என விளக்குகிறார். அன்று துவங்கி இறக்கும் கணம் வரை திருமதி அண்ணாமலை ராஜாஜி அவர்களின் சிஷ்யை போன்றே ஆகி விடுகிறார். ராஜாஜி இயற்கை எய்திய தகவல் கேட்டு, அதிர்ச்சியில் உயிர் இழக்கும் அளவு அவர் மேல் அன்பு பூண்டவராக இருக்கிறார்.திருமதி அண்ணாமலை. ஒரு முறை காவல் துறை உயர் பதவிக்கு ஆளெடுப்பு நடக்கிறது. வழமை போல பிர்ப்படுத்தப்பட்டோர் கோட்டாவில் யாரும் அப்ளே செய்யவில்லை எனும் சால்ஜாப்புடன் வேறொரு இடைநிலை சாதிக்காரருக்கு அப் பணி மாற்றி வழங்கப்படும் நிலை. ராஜாஜி ஊடே புகுந்து, சம்பந்தப்பட்ட ஆட்களை பிடித்து, பிர்ப்படுத்தப்பட்டோர் கோட்டா வழியே, சரியான நபருக்கு அந்தப் பணி சென்று சேரும் வகை செய்கிறார். ஒரு முறை ஒரு பதவிக்காக,பிற்ப்படுத்தப்பட்ட வகுப்பை சேர்ந்த ஒருவர் போட்டி இடுகிறார். அனுமதி ராஜாஜி வசம் பெற வேண்டும். ராஜாஜி இதில் போட்டி இட உனக்கு என்ன தகுதி இருக்கிறது என வினவுகிறார். போட்டியாளரும் பதிலளிக்கிறார். அவர் போனதும் ராஜாஜி அண்ணாமலை வசம் சொல்கிறார் ‘’இந்தப் பதவிக்கு தன்னுடைய தகுதியாக, தான் செய்த பணிகளை அவர் பட்டியல் இட்டார், மாறாக தனது சாதிகோட்டா உரிமை என அவர் சொல்லி இருந்தால் அவரை இரண்டாம் பட்சமாகவே வைத்திருப்பேன்’’. இத்தகு ராஜாஜிதான், காமராஜருடன் இணைந்து செல்ல இயலாமல், தனது கல்விக் கொள்கையை திரித்து, தன்னை சிவில் சமூகத்தின் ஆதரவில் இருந்து விலக்கிய,திமுக உடன் இணைந்து தேர்தலில் காமராஜரை தோற்க்கடித்து [ இந்த நூலுக்குள் பேசப்படாவிட்டாலும் ராஜாஜிக்கு இணையான ஆளுமை சரிவுதான் காமராஜருடயதும்] காங்கிரசுடன் சேர்ந்து தானும் தோற்கிறார்.

கூட்டம் சேர்க்கும், அதை தனது ஆளுகைக்குள் வைத்திருக்கும் வித்தை தெரிந்தவராக சின்ன அண்ணாமலை இருந்தாலும், எதிலும் தனது எல்லை எது என்பதை அறிந்தவராகவும் இருக்கிறார். உதாரணமாக அவர் தற்செயலாக தலைமையேற்கும் தொல்காப்பிய மாநாடு. அண்ணாமலை தனக்கு தொல்க்காப்பியம் குறித்து ஏதும் தெரியாது என முன்பே சொல்லி விடுகிறார். இருப்பினும் அமைப்பாளர்கள் அவரது ‘’தன்னடக்கத்தை’’ கைவிட்டு தொல்காப்பியம் குறித்து பேச அழைகிறார்கள். அண்ணாமலையும் மேடை ஏறி, அது ஒரு நல்ல நூல், அனைவரும் வாசிக்கவேண்டிய நூல், தமிழின் சொத்து, என பொதுப்படையாக பேசிக்கொண்டே போகிறார். மக்களை கட்டிப் போடும் பேச்சு. பேச்சு சுவாரஸ்யத்தில் ஒரே ஒரு இடத்தில் அடித்து ஆடி விடுகிறார். தொல்க்காப்பியத்தில் ஏழு சமஸ்க்ருத வார்த்தைகள் உண்டு எனும் அவரது ஆய்வை முன்வைத்த தருணமே அது. அவருக்கு அடுத்து பேச வரும் இரண்டாமவர் ‘’நான் ஆய்ந்த வரையில் நான்கு சமஸ்க்ருத சொற்களே உண்டு, மீதி மூன்று சொல் எது ‘’ என கேட்டு இருப்பிடம் அமைகிறார். அண்ணாமலை என்னடா இது என முழிக்கத் துவங்க, மூன்றாமவர் பேச எழுகிறார். அவர் தனது ஆய்வில் பதினோரு சமஸ்க்ருத சொற்களை கண்டடைந்ததாக சொல்கிறார். இதன்பிறகே அண்ணாமலை மூச்சு விடுகிறார். ஆம் இரண்டாமவர் தன்னை கேட்டால் மூன்றாமவரை கைகாட்டி விட்டு விடலாம் இல்லையா.

நூலின் பல சுவாரஸ்யமான அத்யாயங்களில் ஒன்று, சின்ன அண்ணாமலை ராஜாஜியுடன் இணைந்து மஞ்சள் பத்திரிகைகளை ஒழிக்க எடுக்கும் நடவடிக்கை. ஒரே ஒரு ஆபாச பத்திரிகை மட்டும் அத்தனை தடைகளையும் மீறி,[அதுதான் முன்னணி மஞ்சள் பத்திரிக்கையும் கூட] தமிழகத்தினுள் பவனி வருகிறது. காரணம் அது பதிப்பிக்கப்படுவது பெங்களூரில். பத்திரிகை தலைப்பை சொன்னால் நம்பமாட்டீர்கள். தலைப்பு ‘’இந்து நேசன்’’. சொன்னால் நம்பமாட்டீர்கள் எனும் தலைப்பின் கீழ் எழுதப்பட்ட தொடர் என்பதால் பெரும்பாலான அத்யாயங்கள் சொன்னால் நம்பமாட்டீர்கள் எனும் முத்தாய்ப்புடன் முடிகிறது. உண்மையில் பல நம்பமுடியாத சம்பவங்கள் தனது வாழ்நாளில் கண்டவர்தான் சின்ன அண்ணாமலை. மும்பையில் கலவரத்தில் தன்னை காப்பாற்றி வீடு சேர்க்கும் முஸ்லிம் ட்ரைவர், தலைமறைவு வாழ்வில் தன்னை மறைத்து வைத்து காப்பாற்றும் காவல்துறை அதிகாரி, சிறை வாழ்வில் தனக்கு முகமறியா காதலியாக தொடர் கடிதம் எழுதும் சிறுவன், என பல கதாபாத்திரங்களை உள்ளடக்கிய வாழ்க்கைக்கதை சின்ன அண்ணாமலையுடையது.

இந்தியாவில் காந்தி பணிபுரிந்த வருடங்களை, காந்தி யுகத்தை ராமச்சந்திர குகா கீழ்க்கண்டவாறு வரையறை செய்கிறார்.

//ஒரே சமயத்தில் மத சீர்திருத்தம், அரசியல் விடுதலை, ஜனநாயக அடிப்படை உரிமை, தொழில் புரட்சி, கல்வி, பெண் விடுதலை, சமூகநீதிக்கான நவீன நோக்கு, என அனைத்து நேர்மறை அம்சங்களையும் நோக்கி புரண்ட தேசம் உலகில் பிறிதொன்றில்லை.//

தேசத்தின் இந்த புரண்டுநகரும் திருகுகண்ணிக்கு எத்தனையோ ஆற்றல்கள் துணை நின்றிருக்கிறது. அந்த ஆற்றலின் திவலை சின்ன அண்ணாமலையில் வெளிப்படுவதைஇந்த தன்வரலாற்று நூலில் காண இயல்வதே இந்த நூலை எளிய.நூல் எனும் தளத்திலிருந்து உயர்த்தி, இதை முக்கிய நூலாக்குகிறது.


கடலூர் சீனு



ஈவேரா, ராமரை செருப்பு கொண்டு அடித்ததை இந்துக்களுக்கு விளக்க போஸ்டர் அடித்து ..

அதை கருணாநிதி தடை செய்ய .. அதை சென்னை உயர்நீதி மன்றத்தில் எதிர்த்து வெற்றி கொண்டவர் பெயர்:-

சின்ன அண்ணாமலை .. (ஜூன் 18 1920 - ஜூன் 18 1980) - கவிஞர் கண்ணதாசனின்
சகோதரர்

டேய் ஈவேரா .. மண்ணுடா .. கருணாநிதி யார் தெரியுமா ... திராவிடம் டா என்று பேசி திரிபவர்கள் இந்த சின்ன அண்ணாமலை யார் என்று தயவு செய்து படியுங்கள் ..

அவர் ஒரு சுதந்திரப் போராட்ட வீரர். அவருக்காக இருபதாயிரம் மக்கள் ஒன்று சேர்ந்து அவர் அடைக்கப்பட்டிருந்த திருவாடனை சப் ஜெயிலை உடைத்து அவரை வெளிக் கொணர்ந்திருக்கிறார்கள். இப்போது அல்ல 1942 ஆகஸ்ட் புரட்சியின் போது...ராஜாஜியின் தொண்டர், 'சிறிய திருவடி' என்று அன்போடு அழைக்கப் பட்டவர்!!

விரிவாக இவரை பற்றி படிக்க

=========================
http://ilakkiyapayilagam.blogspot.com/2011_06_01_archive.html
==========================

சிறந்த பேச்சாளர். நகைச்சுவை உணர்வு அதிகம். அப்படிப்பட்டவரைப் பற்றி பெருந்தலைவர், கர்மவீரர் காமராஜ் அவர்கள் சொன்னதைப் பார்க்கலாம்.

"நாட்டுக்கு நமது சின்ன அண்ணாமலை செய்திருக்கும் சேவை மகத்தானது. அவருடைய பேச்சைக் கேட்டுப் பல இளைஞர்கள் சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டது எனக்குத் தெரியும். சின்ன அண்ணாமலையின் தலைக்கு விலை வைத்தது ஆங்கில அரசாங்கம். ஒரு மாதம் வெள்ளைக்கார அரசாங்கத்தை ஸ்தம்பிக்க வைத்தவர் சின்ன அண்ணாமலை.

இவரைக் கைது செய்ய முடியாமல் இவரது பெற்றோரையும் உற்றார் உறவினர்களையும் சொல்லொணாக் கொடுமைகள் செய்தது ஆங்கில ஏகாதிபத்யம். போலீசாரின் துப்பாக்கி முன் அஞ்சாது மார்பைக் காட்டி நின்று 'வந்தேமாதரம்' என்று முழங்கியவர் சின்ன அண்ணாமலை.

ஆங்கில அரசாங்கம் 1942 ஆகஸ்டில் இவரைக் கைது செய்து திருவாடனை சிறையில் அடைத்தது. 24 மணி நேரத்தில் மக்கள் ஒன்று திரண்டு அச்சிறையைப் பட்டப் பகலில் உடைத்து இவரை விடுதலை செய்து விட்டார்கள்.

இப்படி மக்களே சிறையை உடைத்து விடுதலை செய்தது உலக சரித்திரத்திலேயே இதுதான் முதல் தடவையாக இருக்கும் என்று எண்ணுகிறேன். அப்படி சரித்திரத்தில் எழுதப்பட வேண்டிய சிறந்த தியாகி சின்ன அண்ணாமலை. இன்றும் இவரது கையில் துப்பாக்கிக் குண்டு பாய்ந்த இடத்தில் தழும்பு இருப்பதைக் காணலாம்."

சுமார் 20,000 கூடி சிறையை உடைத்து இவரை வெளியில் அழைத்து வந்த பொது பல சுடப்பட்டு இறந்தனர் .. பலர் ஊனமாயினர் .. இவர் கையில் குண்டு காயம் ..

இவர தமிழகம் முழுவதும் நடை பயணம் செய்து சுதந்திர தீயை வளர்த்தவர் ...

முக்கியமான விசயம் .. நாடு விடுதலை அடைந்து காங்கிரஸ் ஆட்சியிலும் கட்சிளும் எந்த பதவியும் ஏற்கவில்லை !!

அப்பேர்ப்பட்ட மா மனிதர்தான் பெரியாருக்கு ... திராவிட தீதுகளுக்கும் எதிராக .. ராம பிரான் அவமதிக்கப்பட்ட பொது சட்ட போராட்டம் நடத்தி வெற்றி கொண்ட மகான் ..

https://indiankanoon.org/doc/1710030/

இவர் அன்று ஈவேராவின் கொடுமைக்கும் அதோடு கருணாநிதி அரசின் நேரடி உதவிக்கும் எதிராக சட்ட போர் நடத்தி .. யாரும் எதிர்த்து பேச முடியாத படி சரித்திரத்தில் பதிவு செய்ய வைத்து விட்டு சென்றதால் இன்று இவர்கள் நடக்கவே இல்லை என்று பேசுவதை ... மறுக்க முடிகிறது

வாழ்க இந்த மகான் ..

விஜயராகவன் கிருஷ்ணன்