Showing posts with label ANNAMALAI. Show all posts
Showing posts with label ANNAMALAI. Show all posts

Saturday, 29 May 2021

CHINNA, ANNAMALAI ,BIOGRAPHY

 

CHINNA ANNAMALAI BIOGRAPHY



இந்த படம் சின்ன அண்ணாமலை அவர்களின் மணிவிழா நிகழ்ச்சி யில எடுத்தப்படம்
ஜி.கே. மூப்பனார் , ஆனந்த் தியேட்டர் உமாபதி நடிகர்திலகம் சின்ன அண்ணாமலை யுடன் எடுத்த ப்டம்
இது தான் சின்னஅண்ணாமலையின் கடைசி படம்..(தனக்கு சிறிது நேரத்தில ஏற்பட இருக்கும் மரணத்தை அறியாமல் அமர்ந்திருக்கும் காட்சி .. நெஞ்சு கணக்கிறது)
18 குடம் சொம்பு ஜலத்தை (புன்யாஜலத்தை) தலையில் ஊற்றிய பொழது . அப்படியே சாயந்து விட்டார்
சுப நிகழ்ச்சி சோக நிகழ்ச்சியாக மாறியது
சுதந்திர போராட்ட வீரர்
வெள்ளைகாரன் இவர் இருக்கும் இடம் அறிய கர்ப்பினி மனைவியை காலில் அடித்து சித்திரவதை க்கு உள்ளானார்

Friday, 24 January 2020

CHINNA ANNAMALAI ,FREEDOM FIGHTER BORN 1920 JUNE 18- 1980 JUNE 18


CHINNA ANNAMALAI ,FREEDOM FIGHTER 
BORN 1920 JUNE 18- 1980 JUNE 18


சின்ன அண்ணாமலை (ஜூன் 18 1920 - ஜூன் 18 1980) தமிழ்ப் பண்ணை சின்ன அண்ணாமலை என அறியப்படும் இவர் ஒரு இந்திய விடுதலைப் போராட்ட வீரர், அரசியல்வாதி, பேச்சாளர் தமிழ் எழுத்தாளர், திரைப்படத் தயாரிப்பாளர்[

வாழ்க்கை வரலாறு
சிவகங்கை மாவட்டம், காரைக்குடி வட்டம் ஒ சிறுவயல் கிராமத்தைப் பிறப்பிடமாகக் கொண்ட இவரது பெற்றோர் 'பாங்கர்' நாச்சியப்ப செட்டியார்- மீனாட்சி தம்பதியினர்.

தயாரித்த திரைப்படங்கள்
"ஐந்து லட்சம்', "கடவுளின் குழந்தை', "தங்க மலை ரகசியம்' உள்ளிட்ட பல திரைப்படங்களை தயாரித்து வெளியிட்டுள்ளர்.

வெளியிட்ட நூல்கள்
சின்ன அண்ணாமலை, தனது தமிழ்ப் பண்ணைப் பதிப்பகத்தின் வழியாகப் பின்வரும் நூல்களை வெளியிட்டார்:

பாரதிபிறந்தார்' கல்கி
பெயர்க் காரணம்
1944 ல் நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் பிள்ளைக்கு ஒரு விழாவில் ரூ.20,000 நிதி திரட்டி பண முடிப்பு அளித்தார் அண்ணாமலை. அவ்விழாவில் ராஜாஜி "சின்ன அண்ணாமலை" என்று அழைத்தார். அதுவே அண்ணாமலையின் பெயராக பிரபலமானது.[3] இவருடைய படைப்புகளை தமிழக அரசு நாட்டுடைமையாக்கியுள்ளது.[4] டி.கே.சி., கலில், டி.எஸ்.சொக்க லிங்கம், நாமக்கல் கவிஞர் ஆகியோரின் புத்தகங்களை வெளியிட்டுள்ளார். "சங்கப் பலகை" என்ற வாரப்பத்திரிகையும் நடத்தினார்.தமிழ்ப் பண்ணை' பதிப்பகம் பொறுப்பாளராகவும் இருந்தவர்.[5]

இயற்றியுள்ள நூல்கள்
கண்டறியாதன கண்டேன்
கதைக்குள்ளே கதை
சர்க்கரைப் பந்தல்
சிந்திக்க வைக்கும் சிரிப்புக் கதைகள்
சிரிப்புக்கதைகள், தொகுத்துப்பதிப்பித்தவர் சீனி. விசுவநாதன் 1961 ஏப்ரல், மேகலைப் பதிப்பகம், சென்னை.
சுவை நானூறு
சொன்னால் நம்ப மாட்டீர்கள் (நூல்)
தலையெழுத்து
ராஜாஜி உவமைகள்[6]
வெளியிட்ட நூல்கள்
சின்ன அண்ணாமலை தனது தமிழ்ப்பண்ணையின் வழியாக பல நூல்களை வெளியிட்டார். அவற்றுள் சில:

பாரதி பிறந்தார், கல்கி
வ. உ. சிதம்பரனார், ம. பொ. சிவஞானம்
இவற்றையும் காண்க
தேசியமயமாக்கல்

கடந்த சனி, ஞாயிறு கடுமையான காய்ச்சல். . சும்மா படுத்துக் கிடக்கையில் மனம், குமட்டிக்கொண்டிருக்கும் வயிறு, குழம்பிக் கசக்கும் நா, அனல் தகிக்கும் செவிகள் இவற்றிலேயே சிக்கிக் கிடக்கும். கண்களை மூடினால் கிறக்கம் வந்து,, தயாராக நிற்கும் தீக்கனவுகள் எழுந்து வந்து அலைக்கழிக்கும். கூடவே அம்மா. நான் வாசித்துக்கொண்டிருக்கும் வரை நார்மல். அதுதான் அம்மா என் மன உடல் நலனுக்கு அவர்கள் வகுத்து வைத்திருக்கும் எல்லை. அம்மாவை நார்மலாக வைத்திருக்க ஒரே வழி நான் ஏதேனும் வாசித்துக்கொண்டிருப்பதே.

படுத்திருக்கும் சோபா சாய்மானம் முழுவதும் புத்தகங்களால் நிரப்பி வைத்திருக்கிறேன். அதிலிருந்து ஒன்றை உருவினேன். சந்தியா பதிப்பகம் வெளியீடான சின்ன அண்ணாமலை அவர்கள் தனது வாழ்வின் முக்கிய மற்றும் சுவையான தருணங்களை எழுதி, கட்டுரைத் தொகுதியாக வெளிவந்த ‘’சொன்னால் நம்பமாட்டீர்கள்’’ நூல் கிடைத்தது. சின்ன அண்ணாமலை வாழ்க்கைத் தருணங்கள் குறித்தும் ‘’சொன்னால் நம்பமாட்டீர்கள்’’ நூல் குறித்தும் முன்பு ஒரு உரையாடலில் என்னிடம் குறிப்பிட்டிருந்தீர்கள். அந்த நூலை இப்போதுதான் வாசிக்கிறேன்.

இன்று இந்தியப் பிரதமருக்கு எதிராக ‘’வீரமாக’’ கம்பு சுற்றிக்கொண்டிருக்கும் ஆனந்த விகடனின் நாற்பத்தி ஒன்றாம் ஆண்டு தீபாவளி மலர் வாசிக்கக் கிடைத்து. முப்பத்தி ஐந்து கட்டுரைகள். ஜே சி குமரப்பா, அவர்களின் செல்வத்தின் பொறுப்புகள் என்றொரு கட்டுரை அதைத் தவிர எல்லா கட்டுரையும் சும்மா பக்கம் நிரப்பும் கட்டுரைகள். உள்ளடக்கத்தின் கீழே தெளிவாக ‘’இந்த மலரின் கதைகள் கட்டுரைகள் உட்பட யாவும் கற்பனையே எதையும் யாரையும் குறிப்பிடுவன அல்ல’’ என குறிப்பிடப்பட்டுள்ளது. கட்டுரை ஒன்றின் தலைப்பு ‘’பா – ஸ்ரீமதி கஸ்தூரி பா அம்மை’’ அதாவது காந்தி என்ற பெயர் கூட குறிப்பிடப் படவில்லை. அப்புறம் கீழ்க்கண்ட குறிப்பின் படி ‘’கட்டுரை’’ உட்பட கற்பனையே. இப்படித்தான் ஆங்கிலேயே ஆட்சி முன்பு பம்மிக் கிடந்திருக்கிறது விகடன். இது போன்ற சூழலில்தான் சின்ன அண்ணாமலை பத்திரிகை நடத்துகிறார். [வழமை போல மனைவியின் நகைகளை விற்றுத்தான்] விகடனுக்கு இணையாக தீபாவளி மலர் கொண்டு வந்து நஷ்டம் அடைகிறார். வங்கப் பஞ்சம் எனும் நூல் வெளியீட்டு தண்டனை அடைந்து சிறை செல்கிறார்.

sinna


காந்தியை தொட்டுப்பார்ப்பது என்பது அக்காலத்தில் கிட்டதட்ட ஒரு புனிதக்கடமை போல இருந்திருக்கிறது. என் அம்மாவை பெற்ற அப்பா, காந்தி திருச்சி வருகையில், கூட்டத்தில் முண்டி அடித்து நுழைந்து, அவரை தொட்டுப் பார்த்த கதையை என் சிறு வயதில், அன்றைய பரவசம் சிறிதும் குன்றாமல் சொல்லி இருக்கிறார். வைக்கம் முகமது பஷீர் அவரது பால்யத்தில் இதே போல காந்தியை தொட்டுவிட்ட கதையை ஒரு கட்டுரையில் பரவசத்தோடு எழுதி இருப்பார். ஒரு புறம் தீண்டாமை, மறுபுறம் தீண்டும் இன்பம். சின்ன அண்ணாமலை காந்தியை தொட்டுவிட்ட அனுபவமே இந்த நூலின் முதல் கட்டுரை. அங்கே துவங்கிய அண்ணாமலை ஹரிஜன் இதழை தமிழில் நடத்த காந்தி அவருக்கு அனுமதி அளிக்கும் நிலை வரை உயர்கிறார். காந்தி கேட்கிறார் ‘’நஷ்டம் வராம நடத்துவியா?’’ [லாபம் இரண்டாம் பட்சம்,நஷ்டம் வரக் கூடாது அதுவே குறைந்த பக்ஷ வெற்றி] ராஜாஜி சொல்கிறார் ‘’அண்ணாமலையும் உங்களைப்போல வைசியர்தான்’’ காந்தி ‘’அச்சா அச்சா’’ என புன்னகையுடன் அனுமதி அளிக்கிறார்.

அண்ணாமலை அடையும் இந்த உயர்வு,அவரது உழைப்பாலும், சூழலாலும் அவர் அடைந்தது என்பதைக் காட்டிலும், அவருள் இலங்கி, அவரது ஆற்றலாகவும், அவரது மீறலாகவும் வெளிப்படும் இயற்கையின் ஷாத்ரகுணத்தால் என்பதை, அந்த ‘’ஷாத்ரத்தின் வெளிப்பாட்டை’’, வாசகன் உணர்வதே இந்த தன்வரலாற்றுக் குறிப்பு நூலை முக்கிய நூலாக உயர்த்துகிறது. பதின் வயது. மலேஷியா, பள்ளிக்காலத்தின் போதே, அங்கு மதுவுக்கு எதிராக அங்குள்ள மக்களை திரட்டி போராடுகிறார். அங்குள்ள அரசு அவரை கப்பலேற்றி மீண்டும் இந்தியாவுக்கு அனுப்புகிறது. இப்படி பதின் பருவம் முதலே, அண்ணாமலைக்குள் இலங்கும் இந்த மக்களை திரட்டும் ஆற்றலும், சரியான ஒன்றின் பொருட்டு அரசை எதிர்க்கும் துணிவும் அவரை தேசிய விடுதலைப் போராட்ட முன்னணி தலைவர்கள் வசம் கொண்டு சேர்க்கிறது.

அண்ணாமலை, மக்களை திரட்டும் கலையில் எந்த அளவு தேர்ச்சி கொண்டவர் என்பதற்கு, அவர் மும்பையில் கிங்காங் தாராசிங் குஸ்திபோட்டிக்கு மக்களை திரட்டும் யுக்தி கொண்டு அறியலாம். போராட்ட குணத்துக்கு திருவாடனை சிறை உடைப்பு சம்பவத்தை சுட்டலாம். அவரது ஆதர்சம் ராஜாஜி கலந்து கொள்ளாத ஆகஸ்ட் புரட்சி. ஆனாலும் அண்ணாமலை அதில் ஈடுபடுகிறார். கைதாகிறார். திருவாடனையில் சிறைவைக்கப்படும் அவரை, ஆயிரக்கணக்கில் ஊர் மக்கள் ஒன்று கூடி சிறையை உடைத்து மீட்கிறார்கள். கலவரத்தில் போலிஸ் துப்பாக்கியால் சுட, அண்ணாமலையை காப்பாற்ற ஊர் மக்களில் சிலர், அண்ணாமலைக்கு பாதுகாப்பாக அவர் முன் நின்று, சூடு வாங்கி இறக்கிறார்கள். இறந்துபோக வேண்டியது நாம், பதிலாக வேறு சிலர் நமது கண் முன்னால்,அந்த மரணத்தை தான் ஏற்றுக் கொள்கிறார்கள். இந்த நிலையில் நாம் இருந்தால்?. …….மீண்டபின் சித்தம் கலங்கி விடும். தன் இயல்பால் ஷாத்ரமும்,மீறலும் கொண்ட ஆளுமையால் மட்டுமே இப்படி ஒன்றை கடந்து வர முடியும். அண்ணாமலை அத்தகு ஆளுமை. அவருக்கு இது நேர்கிறது.கடந்து வருகிறார்.

நூலுக்குள் வெவ்வேறு கட்டுரைகள் ஊடே, மெல்லிய சித்திரமாக ராஜாஜியின் ஆளுமையும், வளர்ச்சியும்,வீழ்ச்சியும் துலங்கி வருகிறது. ராஜாஜி முதன்முதலாக அண்ணாமலையின் இல்லத்துக்கு வருகிறார். உணவு நேரம். ராஜாஜி இயல்பாக தனக்கும் பரிமாற சொல்கிறார். அண்ணாமலையின் மனைவியார் ‘’நீங்க ஆசாரம் எல்லாம் பாக்க மாட்டீங்களா’’ என தயக்கத்துடன் வினவுகிறார். ராஜாஜி அவருக்கு [மகாபாரத்தில் வரும் ‘’யார் பிராமணன்’’ எனும் விவாதத்தின் சாரத்தை] எது ஆசாரம், எது பிராமணத்துவம் என விளக்குகிறார். அன்று துவங்கி இறக்கும் கணம் வரை திருமதி அண்ணாமலை ராஜாஜி அவர்களின் சிஷ்யை போன்றே ஆகி விடுகிறார். ராஜாஜி இயற்கை எய்திய தகவல் கேட்டு, அதிர்ச்சியில் உயிர் இழக்கும் அளவு அவர் மேல் அன்பு பூண்டவராக இருக்கிறார்.திருமதி அண்ணாமலை. ஒரு முறை காவல் துறை உயர் பதவிக்கு ஆளெடுப்பு நடக்கிறது. வழமை போல பிர்ப்படுத்தப்பட்டோர் கோட்டாவில் யாரும் அப்ளே செய்யவில்லை எனும் சால்ஜாப்புடன் வேறொரு இடைநிலை சாதிக்காரருக்கு அப் பணி மாற்றி வழங்கப்படும் நிலை. ராஜாஜி ஊடே புகுந்து, சம்பந்தப்பட்ட ஆட்களை பிடித்து, பிர்ப்படுத்தப்பட்டோர் கோட்டா வழியே, சரியான நபருக்கு அந்தப் பணி சென்று சேரும் வகை செய்கிறார். ஒரு முறை ஒரு பதவிக்காக,பிற்ப்படுத்தப்பட்ட வகுப்பை சேர்ந்த ஒருவர் போட்டி இடுகிறார். அனுமதி ராஜாஜி வசம் பெற வேண்டும். ராஜாஜி இதில் போட்டி இட உனக்கு என்ன தகுதி இருக்கிறது என வினவுகிறார். போட்டியாளரும் பதிலளிக்கிறார். அவர் போனதும் ராஜாஜி அண்ணாமலை வசம் சொல்கிறார் ‘’இந்தப் பதவிக்கு தன்னுடைய தகுதியாக, தான் செய்த பணிகளை அவர் பட்டியல் இட்டார், மாறாக தனது சாதிகோட்டா உரிமை என அவர் சொல்லி இருந்தால் அவரை இரண்டாம் பட்சமாகவே வைத்திருப்பேன்’’. இத்தகு ராஜாஜிதான், காமராஜருடன் இணைந்து செல்ல இயலாமல், தனது கல்விக் கொள்கையை திரித்து, தன்னை சிவில் சமூகத்தின் ஆதரவில் இருந்து விலக்கிய,திமுக உடன் இணைந்து தேர்தலில் காமராஜரை தோற்க்கடித்து [ இந்த நூலுக்குள் பேசப்படாவிட்டாலும் ராஜாஜிக்கு இணையான ஆளுமை சரிவுதான் காமராஜருடயதும்] காங்கிரசுடன் சேர்ந்து தானும் தோற்கிறார்.

கூட்டம் சேர்க்கும், அதை தனது ஆளுகைக்குள் வைத்திருக்கும் வித்தை தெரிந்தவராக சின்ன அண்ணாமலை இருந்தாலும், எதிலும் தனது எல்லை எது என்பதை அறிந்தவராகவும் இருக்கிறார். உதாரணமாக அவர் தற்செயலாக தலைமையேற்கும் தொல்காப்பிய மாநாடு. அண்ணாமலை தனக்கு தொல்க்காப்பியம் குறித்து ஏதும் தெரியாது என முன்பே சொல்லி விடுகிறார். இருப்பினும் அமைப்பாளர்கள் அவரது ‘’தன்னடக்கத்தை’’ கைவிட்டு தொல்காப்பியம் குறித்து பேச அழைகிறார்கள். அண்ணாமலையும் மேடை ஏறி, அது ஒரு நல்ல நூல், அனைவரும் வாசிக்கவேண்டிய நூல், தமிழின் சொத்து, என பொதுப்படையாக பேசிக்கொண்டே போகிறார். மக்களை கட்டிப் போடும் பேச்சு. பேச்சு சுவாரஸ்யத்தில் ஒரே ஒரு இடத்தில் அடித்து ஆடி விடுகிறார். தொல்க்காப்பியத்தில் ஏழு சமஸ்க்ருத வார்த்தைகள் உண்டு எனும் அவரது ஆய்வை முன்வைத்த தருணமே அது. அவருக்கு அடுத்து பேச வரும் இரண்டாமவர் ‘’நான் ஆய்ந்த வரையில் நான்கு சமஸ்க்ருத சொற்களே உண்டு, மீதி மூன்று சொல் எது ‘’ என கேட்டு இருப்பிடம் அமைகிறார். அண்ணாமலை என்னடா இது என முழிக்கத் துவங்க, மூன்றாமவர் பேச எழுகிறார். அவர் தனது ஆய்வில் பதினோரு சமஸ்க்ருத சொற்களை கண்டடைந்ததாக சொல்கிறார். இதன்பிறகே அண்ணாமலை மூச்சு விடுகிறார். ஆம் இரண்டாமவர் தன்னை கேட்டால் மூன்றாமவரை கைகாட்டி விட்டு விடலாம் இல்லையா.

நூலின் பல சுவாரஸ்யமான அத்யாயங்களில் ஒன்று, சின்ன அண்ணாமலை ராஜாஜியுடன் இணைந்து மஞ்சள் பத்திரிகைகளை ஒழிக்க எடுக்கும் நடவடிக்கை. ஒரே ஒரு ஆபாச பத்திரிகை மட்டும் அத்தனை தடைகளையும் மீறி,[அதுதான் முன்னணி மஞ்சள் பத்திரிக்கையும் கூட] தமிழகத்தினுள் பவனி வருகிறது. காரணம் அது பதிப்பிக்கப்படுவது பெங்களூரில். பத்திரிகை தலைப்பை சொன்னால் நம்பமாட்டீர்கள். தலைப்பு ‘’இந்து நேசன்’’. சொன்னால் நம்பமாட்டீர்கள் எனும் தலைப்பின் கீழ் எழுதப்பட்ட தொடர் என்பதால் பெரும்பாலான அத்யாயங்கள் சொன்னால் நம்பமாட்டீர்கள் எனும் முத்தாய்ப்புடன் முடிகிறது. உண்மையில் பல நம்பமுடியாத சம்பவங்கள் தனது வாழ்நாளில் கண்டவர்தான் சின்ன அண்ணாமலை. மும்பையில் கலவரத்தில் தன்னை காப்பாற்றி வீடு சேர்க்கும் முஸ்லிம் ட்ரைவர், தலைமறைவு வாழ்வில் தன்னை மறைத்து வைத்து காப்பாற்றும் காவல்துறை அதிகாரி, சிறை வாழ்வில் தனக்கு முகமறியா காதலியாக தொடர் கடிதம் எழுதும் சிறுவன், என பல கதாபாத்திரங்களை உள்ளடக்கிய வாழ்க்கைக்கதை சின்ன அண்ணாமலையுடையது.

இந்தியாவில் காந்தி பணிபுரிந்த வருடங்களை, காந்தி யுகத்தை ராமச்சந்திர குகா கீழ்க்கண்டவாறு வரையறை செய்கிறார்.

//ஒரே சமயத்தில் மத சீர்திருத்தம், அரசியல் விடுதலை, ஜனநாயக அடிப்படை உரிமை, தொழில் புரட்சி, கல்வி, பெண் விடுதலை, சமூகநீதிக்கான நவீன நோக்கு, என அனைத்து நேர்மறை அம்சங்களையும் நோக்கி புரண்ட தேசம் உலகில் பிறிதொன்றில்லை.//

தேசத்தின் இந்த புரண்டுநகரும் திருகுகண்ணிக்கு எத்தனையோ ஆற்றல்கள் துணை நின்றிருக்கிறது. அந்த ஆற்றலின் திவலை சின்ன அண்ணாமலையில் வெளிப்படுவதைஇந்த தன்வரலாற்று நூலில் காண இயல்வதே இந்த நூலை எளிய.நூல் எனும் தளத்திலிருந்து உயர்த்தி, இதை முக்கிய நூலாக்குகிறது.

கடலூர் சீனு






சின்ன அண்ணாமலை (ஜூன் 18 1920 - ஜூன் 18 1980) தமிழ்ப் பண்ணை சின்ன அண்ணாமலை என அறியப்படும் இவர் ஒரு இந்திய விடுதலைப் போராட்ட வீரர், அரசியல்வாதி, பேச்சாளர் தமிழ் எழுத்தாளர், திரைப்படத் தயாரிப்பாளர்[

வாழ்க்கை வரலாறு
சிவகங்கை மாவட்டம், காரைக்குடி வட்டம் ஒ சிறுவயல் கிராமத்தைப் பிறப்பிடமாகக் கொண்ட இவரது பெற்றோர் 'பாங்கர்' நாச்சியப்ப செட்டியார்- மீனாட்சி தம்பதியினர்.

தயாரித்த திரைப்படங்கள்
"ஐந்து லட்சம்', "கடவுளின் குழந்தை', "தங்க மலை ரகசியம்' உள்ளிட்ட பல திரைப்படங்களை தயாரித்து வெளியிட்டுள்ளர்.

வெளியிட்ட நூல்கள்
சின்ன அண்ணாமலை, தனது தமிழ்ப் பண்ணைப் பதிப்பகத்தின் வழியாகப் பின்வரும் நூல்களை வெளியிட்டார்:

பாரதிபிறந்தார்' கல்கி
பெயர்க் காரணம்
1944 ல் நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் பிள்ளைக்கு ஒரு விழாவில் ரூ.20,000 நிதி திரட்டி பண முடிப்பு அளித்தார் அண்ணாமலை. அவ்விழாவில் ராஜாஜி "சின்ன அண்ணாமலை" என்று அழைத்தார். அதுவே அண்ணாமலையின் பெயராக பிரபலமானது.[3] இவருடைய படைப்புகளை தமிழக அரசு நாட்டுடைமையாக்கியுள்ளது.[4] டி.கே.சி., கலில், டி.எஸ்.சொக்க லிங்கம், நாமக்கல் கவிஞர் ஆகியோரின் புத்தகங்களை வெளியிட்டுள்ளார். "சங்கப் பலகை" என்ற வாரப்பத்திரிகையும் நடத்தினார்.தமிழ்ப் பண்ணை' பதிப்பகம் பொறுப்பாளராகவும் இருந்தவர்.[5]

இயற்றியுள்ள நூல்கள்
கண்டறியாதன கண்டேன்
கதைக்குள்ளே கதை
சர்க்கரைப் பந்தல்
சிந்திக்க வைக்கும் சிரிப்புக் கதைகள்
சிரிப்புக்கதைகள், தொகுத்துப்பதிப்பித்தவர் சீனி. விசுவநாதன் 1961 ஏப்ரல், மேகலைப் பதிப்பகம், சென்னை.
சுவை நானூறு
சொன்னால் நம்ப மாட்டீர்கள் (நூல்)
தலையெழுத்து
ராஜாஜி உவமைகள்[6]
வெளியிட்ட நூல்கள்
சின்ன அண்ணாமலை தனது தமிழ்ப்பண்ணையின் வழியாக பல நூல்களை வெளியிட்டார். அவற்றுள் சில:

பாரதி பிறந்தார், கல்கி
வ. உ. சிதம்பரனார், ம. பொ. சிவஞானம்
இவற்றையும் காண்க
தேசியமயமாக்கல்

கடந்த சனி, ஞாயிறு கடுமையான காய்ச்சல். . சும்மா படுத்துக் கிடக்கையில் மனம், குமட்டிக்கொண்டிருக்கும் வயிறு, குழம்பிக் கசக்கும் நா, அனல் தகிக்கும் செவிகள் இவற்றிலேயே சிக்கிக் கிடக்கும். கண்களை மூடினால் கிறக்கம் வந்து,, தயாராக நிற்கும் தீக்கனவுகள் எழுந்து வந்து அலைக்கழிக்கும். கூடவே அம்மா. நான் வாசித்துக்கொண்டிருக்கும் வரை நார்மல். அதுதான் அம்மா என் மன உடல் நலனுக்கு அவர்கள் வகுத்து வைத்திருக்கும் எல்லை. அம்மாவை நார்மலாக வைத்திருக்க ஒரே வழி நான் ஏதேனும் வாசித்துக்கொண்டிருப்பதே.

படுத்திருக்கும் சோபா சாய்மானம் முழுவதும் புத்தகங்களால் நிரப்பி வைத்திருக்கிறேன். அதிலிருந்து ஒன்றை உருவினேன். சந்தியா பதிப்பகம் வெளியீடான சின்ன அண்ணாமலை அவர்கள் தனது வாழ்வின் முக்கிய மற்றும் சுவையான தருணங்களை எழுதி, கட்டுரைத் தொகுதியாக வெளிவந்த ‘’சொன்னால் நம்பமாட்டீர்கள்’’ நூல் கிடைத்தது. சின்ன அண்ணாமலை வாழ்க்கைத் தருணங்கள் குறித்தும் ‘’சொன்னால் நம்பமாட்டீர்கள்’’ நூல் குறித்தும் முன்பு ஒரு உரையாடலில் என்னிடம் குறிப்பிட்டிருந்தீர்கள். அந்த நூலை இப்போதுதான் வாசிக்கிறேன்.

இன்று இந்தியப் பிரதமருக்கு எதிராக ‘’வீரமாக’’ கம்பு சுற்றிக்கொண்டிருக்கும் ஆனந்த விகடனின் நாற்பத்தி ஒன்றாம் ஆண்டு தீபாவளி மலர் வாசிக்கக் கிடைத்து. முப்பத்தி ஐந்து கட்டுரைகள். ஜே சி குமரப்பா, அவர்களின் செல்வத்தின் பொறுப்புகள் என்றொரு கட்டுரை அதைத் தவிர எல்லா கட்டுரையும் சும்மா பக்கம் நிரப்பும் கட்டுரைகள். உள்ளடக்கத்தின் கீழே தெளிவாக ‘’இந்த மலரின் கதைகள் கட்டுரைகள் உட்பட யாவும் கற்பனையே எதையும் யாரையும் குறிப்பிடுவன அல்ல’’ என குறிப்பிடப்பட்டுள்ளது. கட்டுரை ஒன்றின் தலைப்பு ‘’பா – ஸ்ரீமதி கஸ்தூரி பா அம்மை’’ அதாவது காந்தி என்ற பெயர் கூட குறிப்பிடப் படவில்லை. அப்புறம் கீழ்க்கண்ட குறிப்பின் படி ‘’கட்டுரை’’ உட்பட கற்பனையே. இப்படித்தான் ஆங்கிலேயே ஆட்சி முன்பு பம்மிக் கிடந்திருக்கிறது விகடன். இது போன்ற சூழலில்தான் சின்ன அண்ணாமலை பத்திரிகை நடத்துகிறார். [வழமை போல மனைவியின் நகைகளை விற்றுத்தான்] விகடனுக்கு இணையாக தீபாவளி மலர் கொண்டு வந்து நஷ்டம் அடைகிறார். வங்கப் பஞ்சம் எனும் நூல் வெளியீட்டு தண்டனை அடைந்து சிறை செல்கிறார்.

sinna

காந்தியை தொட்டுப்பார்ப்பது என்பது அக்காலத்தில் கிட்டதட்ட ஒரு புனிதக்கடமை போல இருந்திருக்கிறது. என் அம்மாவை பெற்ற அப்பா, காந்தி திருச்சி வருகையில், கூட்டத்தில் முண்டி அடித்து நுழைந்து, அவரை தொட்டுப் பார்த்த கதையை என் சிறு வயதில், அன்றைய பரவசம் சிறிதும் குன்றாமல் சொல்லி இருக்கிறார். வைக்கம் முகமது பஷீர் அவரது பால்யத்தில் இதே போல காந்தியை தொட்டுவிட்ட கதையை ஒரு கட்டுரையில் பரவசத்தோடு எழுதி இருப்பார். ஒரு புறம் தீண்டாமை, மறுபுறம் தீண்டும் இன்பம். சின்ன அண்ணாமலை காந்தியை தொட்டுவிட்ட அனுபவமே இந்த நூலின் முதல் கட்டுரை. அங்கே துவங்கிய அண்ணாமலை ஹரிஜன் இதழை தமிழில் நடத்த காந்தி அவருக்கு அனுமதி அளிக்கும் நிலை வரை உயர்கிறார். காந்தி கேட்கிறார் ‘’நஷ்டம் வராம நடத்துவியா?’’ [லாபம் இரண்டாம் பட்சம்,நஷ்டம் வரக் கூடாது அதுவே குறைந்த பக்ஷ வெற்றி] ராஜாஜி சொல்கிறார் ‘’அண்ணாமலையும் உங்களைப்போல வைசியர்தான்’’ காந்தி ‘’அச்சா அச்சா’’ என புன்னகையுடன் அனுமதி அளிக்கிறார்.

அண்ணாமலை அடையும் இந்த உயர்வு,அவரது உழைப்பாலும், சூழலாலும் அவர் அடைந்தது என்பதைக் காட்டிலும், அவருள் இலங்கி, அவரது ஆற்றலாகவும், அவரது மீறலாகவும் வெளிப்படும் இயற்கையின் ஷாத்ரகுணத்தால் என்பதை, அந்த ‘’ஷாத்ரத்தின் வெளிப்பாட்டை’’, வாசகன் உணர்வதே இந்த தன்வரலாற்றுக் குறிப்பு நூலை முக்கிய நூலாக உயர்த்துகிறது. பதின் வயது. மலேஷியா, பள்ளிக்காலத்தின் போதே, அங்கு மதுவுக்கு எதிராக அங்குள்ள மக்களை திரட்டி போராடுகிறார். அங்குள்ள அரசு அவரை கப்பலேற்றி மீண்டும் இந்தியாவுக்கு அனுப்புகிறது. இப்படி பதின் பருவம் முதலே, அண்ணாமலைக்குள் இலங்கும் இந்த மக்களை திரட்டும் ஆற்றலும், சரியான ஒன்றின் பொருட்டு அரசை எதிர்க்கும் துணிவும் அவரை தேசிய விடுதலைப் போராட்ட முன்னணி தலைவர்கள் வசம் கொண்டு சேர்க்கிறது.

அண்ணாமலை, மக்களை திரட்டும் கலையில் எந்த அளவு தேர்ச்சி கொண்டவர் என்பதற்கு, அவர் மும்பையில் கிங்காங் தாராசிங் குஸ்திபோட்டிக்கு மக்களை திரட்டும் யுக்தி கொண்டு அறியலாம். போராட்ட குணத்துக்கு திருவாடனை சிறை உடைப்பு சம்பவத்தை சுட்டலாம். அவரது ஆதர்சம் ராஜாஜி கலந்து கொள்ளாத ஆகஸ்ட் புரட்சி. ஆனாலும் அண்ணாமலை அதில் ஈடுபடுகிறார். கைதாகிறார். திருவாடனையில் சிறைவைக்கப்படும் அவரை, ஆயிரக்கணக்கில் ஊர் மக்கள் ஒன்று கூடி சிறையை உடைத்து மீட்கிறார்கள். கலவரத்தில் போலிஸ் துப்பாக்கியால் சுட, அண்ணாமலையை காப்பாற்ற ஊர் மக்களில் சிலர், அண்ணாமலைக்கு பாதுகாப்பாக அவர் முன் நின்று, சூடு வாங்கி இறக்கிறார்கள். இறந்துபோக வேண்டியது நாம், பதிலாக வேறு சிலர் நமது கண் முன்னால்,அந்த மரணத்தை தான் ஏற்றுக் கொள்கிறார்கள். இந்த நிலையில் நாம் இருந்தால்?. …….மீண்டபின் சித்தம் கலங்கி விடும். தன் இயல்பால் ஷாத்ரமும்,மீறலும் கொண்ட ஆளுமையால் மட்டுமே இப்படி ஒன்றை கடந்து வர முடியும். அண்ணாமலை அத்தகு ஆளுமை. அவருக்கு இது நேர்கிறது.கடந்து வருகிறார்.

நூலுக்குள் வெவ்வேறு கட்டுரைகள் ஊடே, மெல்லிய சித்திரமாக ராஜாஜியின் ஆளுமையும், வளர்ச்சியும்,வீழ்ச்சியும் துலங்கி வருகிறது. ராஜாஜி முதன்முதலாக அண்ணாமலையின் இல்லத்துக்கு வருகிறார். உணவு நேரம். ராஜாஜி இயல்பாக தனக்கும் பரிமாற சொல்கிறார். அண்ணாமலையின் மனைவியார் ‘’நீங்க ஆசாரம் எல்லாம் பாக்க மாட்டீங்களா’’ என தயக்கத்துடன் வினவுகிறார். ராஜாஜி அவருக்கு [மகாபாரத்தில் வரும் ‘’யார் பிராமணன்’’ எனும் விவாதத்தின் சாரத்தை] எது ஆசாரம், எது பிராமணத்துவம் என விளக்குகிறார். அன்று துவங்கி இறக்கும் கணம் வரை திருமதி அண்ணாமலை ராஜாஜி அவர்களின் சிஷ்யை போன்றே ஆகி விடுகிறார். ராஜாஜி இயற்கை எய்திய தகவல் கேட்டு, அதிர்ச்சியில் உயிர் இழக்கும் அளவு அவர் மேல் அன்பு பூண்டவராக இருக்கிறார்.திருமதி அண்ணாமலை. ஒரு முறை காவல் துறை உயர் பதவிக்கு ஆளெடுப்பு நடக்கிறது. வழமை போல பிர்ப்படுத்தப்பட்டோர் கோட்டாவில் யாரும் அப்ளே செய்யவில்லை எனும் சால்ஜாப்புடன் வேறொரு இடைநிலை சாதிக்காரருக்கு அப் பணி மாற்றி வழங்கப்படும் நிலை. ராஜாஜி ஊடே புகுந்து, சம்பந்தப்பட்ட ஆட்களை பிடித்து, பிர்ப்படுத்தப்பட்டோர் கோட்டா வழியே, சரியான நபருக்கு அந்தப் பணி சென்று சேரும் வகை செய்கிறார். ஒரு முறை ஒரு பதவிக்காக,பிற்ப்படுத்தப்பட்ட வகுப்பை சேர்ந்த ஒருவர் போட்டி இடுகிறார். அனுமதி ராஜாஜி வசம் பெற வேண்டும். ராஜாஜி இதில் போட்டி இட உனக்கு என்ன தகுதி இருக்கிறது என வினவுகிறார். போட்டியாளரும் பதிலளிக்கிறார். அவர் போனதும் ராஜாஜி அண்ணாமலை வசம் சொல்கிறார் ‘’இந்தப் பதவிக்கு தன்னுடைய தகுதியாக, தான் செய்த பணிகளை அவர் பட்டியல் இட்டார், மாறாக தனது சாதிகோட்டா உரிமை என அவர் சொல்லி இருந்தால் அவரை இரண்டாம் பட்சமாகவே வைத்திருப்பேன்’’. இத்தகு ராஜாஜிதான், காமராஜருடன் இணைந்து செல்ல இயலாமல், தனது கல்விக் கொள்கையை திரித்து, தன்னை சிவில் சமூகத்தின் ஆதரவில் இருந்து விலக்கிய,திமுக உடன் இணைந்து தேர்தலில் காமராஜரை தோற்க்கடித்து [ இந்த நூலுக்குள் பேசப்படாவிட்டாலும் ராஜாஜிக்கு இணையான ஆளுமை சரிவுதான் காமராஜருடயதும்] காங்கிரசுடன் சேர்ந்து தானும் தோற்கிறார்.

கூட்டம் சேர்க்கும், அதை தனது ஆளுகைக்குள் வைத்திருக்கும் வித்தை தெரிந்தவராக சின்ன அண்ணாமலை இருந்தாலும், எதிலும் தனது எல்லை எது என்பதை அறிந்தவராகவும் இருக்கிறார். உதாரணமாக அவர் தற்செயலாக தலைமையேற்கும் தொல்காப்பிய மாநாடு. அண்ணாமலை தனக்கு தொல்க்காப்பியம் குறித்து ஏதும் தெரியாது என முன்பே சொல்லி விடுகிறார். இருப்பினும் அமைப்பாளர்கள் அவரது ‘’தன்னடக்கத்தை’’ கைவிட்டு தொல்காப்பியம் குறித்து பேச அழைகிறார்கள். அண்ணாமலையும் மேடை ஏறி, அது ஒரு நல்ல நூல், அனைவரும் வாசிக்கவேண்டிய நூல், தமிழின் சொத்து, என பொதுப்படையாக பேசிக்கொண்டே போகிறார். மக்களை கட்டிப் போடும் பேச்சு. பேச்சு சுவாரஸ்யத்தில் ஒரே ஒரு இடத்தில் அடித்து ஆடி விடுகிறார். தொல்க்காப்பியத்தில் ஏழு சமஸ்க்ருத வார்த்தைகள் உண்டு எனும் அவரது ஆய்வை முன்வைத்த தருணமே அது. அவருக்கு அடுத்து பேச வரும் இரண்டாமவர் ‘’நான் ஆய்ந்த வரையில் நான்கு சமஸ்க்ருத சொற்களே உண்டு, மீதி மூன்று சொல் எது ‘’ என கேட்டு இருப்பிடம் அமைகிறார். அண்ணாமலை என்னடா இது என முழிக்கத் துவங்க, மூன்றாமவர் பேச எழுகிறார். அவர் தனது ஆய்வில் பதினோரு சமஸ்க்ருத சொற்களை கண்டடைந்ததாக சொல்கிறார். இதன்பிறகே அண்ணாமலை மூச்சு விடுகிறார். ஆம் இரண்டாமவர் தன்னை கேட்டால் மூன்றாமவரை கைகாட்டி விட்டு விடலாம் இல்லையா.

நூலின் பல சுவாரஸ்யமான அத்யாயங்களில் ஒன்று, சின்ன அண்ணாமலை ராஜாஜியுடன் இணைந்து மஞ்சள் பத்திரிகைகளை ஒழிக்க எடுக்கும் நடவடிக்கை. ஒரே ஒரு ஆபாச பத்திரிகை மட்டும் அத்தனை தடைகளையும் மீறி,[அதுதான் முன்னணி மஞ்சள் பத்திரிக்கையும் கூட] தமிழகத்தினுள் பவனி வருகிறது. காரணம் அது பதிப்பிக்கப்படுவது பெங்களூரில். பத்திரிகை தலைப்பை சொன்னால் நம்பமாட்டீர்கள். தலைப்பு ‘’இந்து நேசன்’’. சொன்னால் நம்பமாட்டீர்கள் எனும் தலைப்பின் கீழ் எழுதப்பட்ட தொடர் என்பதால் பெரும்பாலான அத்யாயங்கள் சொன்னால் நம்பமாட்டீர்கள் எனும் முத்தாய்ப்புடன் முடிகிறது. உண்மையில் பல நம்பமுடியாத சம்பவங்கள் தனது வாழ்நாளில் கண்டவர்தான் சின்ன அண்ணாமலை. மும்பையில் கலவரத்தில் தன்னை காப்பாற்றி வீடு சேர்க்கும் முஸ்லிம் ட்ரைவர், தலைமறைவு வாழ்வில் தன்னை மறைத்து வைத்து காப்பாற்றும் காவல்துறை அதிகாரி, சிறை வாழ்வில் தனக்கு முகமறியா காதலியாக தொடர் கடிதம் எழுதும் சிறுவன், என பல கதாபாத்திரங்களை உள்ளடக்கிய வாழ்க்கைக்கதை சின்ன அண்ணாமலையுடையது.

இந்தியாவில் காந்தி பணிபுரிந்த வருடங்களை, காந்தி யுகத்தை ராமச்சந்திர குகா கீழ்க்கண்டவாறு வரையறை செய்கிறார்.

//ஒரே சமயத்தில் மத சீர்திருத்தம், அரசியல் விடுதலை, ஜனநாயக அடிப்படை உரிமை, தொழில் புரட்சி, கல்வி, பெண் விடுதலை, சமூகநீதிக்கான நவீன நோக்கு, என அனைத்து நேர்மறை அம்சங்களையும் நோக்கி புரண்ட தேசம் உலகில் பிறிதொன்றில்லை.//

தேசத்தின் இந்த புரண்டுநகரும் திருகுகண்ணிக்கு எத்தனையோ ஆற்றல்கள் துணை நின்றிருக்கிறது. அந்த ஆற்றலின் திவலை சின்ன அண்ணாமலையில் வெளிப்படுவதைஇந்த தன்வரலாற்று நூலில் காண இயல்வதே இந்த நூலை எளிய.நூல் எனும் தளத்திலிருந்து உயர்த்தி, இதை முக்கிய நூலாக்குகிறது.


கடலூர் சீனு



ஈவேரா, ராமரை செருப்பு கொண்டு அடித்ததை இந்துக்களுக்கு விளக்க போஸ்டர் அடித்து ..

அதை கருணாநிதி தடை செய்ய .. அதை சென்னை உயர்நீதி மன்றத்தில் எதிர்த்து வெற்றி கொண்டவர் பெயர்:-

சின்ன அண்ணாமலை .. (ஜூன் 18 1920 - ஜூன் 18 1980) - கவிஞர் கண்ணதாசனின்
சகோதரர்

டேய் ஈவேரா .. மண்ணுடா .. கருணாநிதி யார் தெரியுமா ... திராவிடம் டா என்று பேசி திரிபவர்கள் இந்த சின்ன அண்ணாமலை யார் என்று தயவு செய்து படியுங்கள் ..

அவர் ஒரு சுதந்திரப் போராட்ட வீரர். அவருக்காக இருபதாயிரம் மக்கள் ஒன்று சேர்ந்து அவர் அடைக்கப்பட்டிருந்த திருவாடனை சப் ஜெயிலை உடைத்து அவரை வெளிக் கொணர்ந்திருக்கிறார்கள். இப்போது அல்ல 1942 ஆகஸ்ட் புரட்சியின் போது...ராஜாஜியின் தொண்டர், 'சிறிய திருவடி' என்று அன்போடு அழைக்கப் பட்டவர்!!

விரிவாக இவரை பற்றி படிக்க

=========================
http://ilakkiyapayilagam.blogspot.com/2011_06_01_archive.html
==========================

சிறந்த பேச்சாளர். நகைச்சுவை உணர்வு அதிகம். அப்படிப்பட்டவரைப் பற்றி பெருந்தலைவர், கர்மவீரர் காமராஜ் அவர்கள் சொன்னதைப் பார்க்கலாம்.

"நாட்டுக்கு நமது சின்ன அண்ணாமலை செய்திருக்கும் சேவை மகத்தானது. அவருடைய பேச்சைக் கேட்டுப் பல இளைஞர்கள் சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டது எனக்குத் தெரியும். சின்ன அண்ணாமலையின் தலைக்கு விலை வைத்தது ஆங்கில அரசாங்கம். ஒரு மாதம் வெள்ளைக்கார அரசாங்கத்தை ஸ்தம்பிக்க வைத்தவர் சின்ன அண்ணாமலை.

இவரைக் கைது செய்ய முடியாமல் இவரது பெற்றோரையும் உற்றார் உறவினர்களையும் சொல்லொணாக் கொடுமைகள் செய்தது ஆங்கில ஏகாதிபத்யம். போலீசாரின் துப்பாக்கி முன் அஞ்சாது மார்பைக் காட்டி நின்று 'வந்தேமாதரம்' என்று முழங்கியவர் சின்ன அண்ணாமலை.

ஆங்கில அரசாங்கம் 1942 ஆகஸ்டில் இவரைக் கைது செய்து திருவாடனை சிறையில் அடைத்தது. 24 மணி நேரத்தில் மக்கள் ஒன்று திரண்டு அச்சிறையைப் பட்டப் பகலில் உடைத்து இவரை விடுதலை செய்து விட்டார்கள்.

இப்படி மக்களே சிறையை உடைத்து விடுதலை செய்தது உலக சரித்திரத்திலேயே இதுதான் முதல் தடவையாக இருக்கும் என்று எண்ணுகிறேன். அப்படி சரித்திரத்தில் எழுதப்பட வேண்டிய சிறந்த தியாகி சின்ன அண்ணாமலை. இன்றும் இவரது கையில் துப்பாக்கிக் குண்டு பாய்ந்த இடத்தில் தழும்பு இருப்பதைக் காணலாம்."

சுமார் 20,000 கூடி சிறையை உடைத்து இவரை வெளியில் அழைத்து வந்த பொது பல சுடப்பட்டு இறந்தனர் .. பலர் ஊனமாயினர் .. இவர் கையில் குண்டு காயம் ..

இவர தமிழகம் முழுவதும் நடை பயணம் செய்து சுதந்திர தீயை வளர்த்தவர் ...

முக்கியமான விசயம் .. நாடு விடுதலை அடைந்து காங்கிரஸ் ஆட்சியிலும் கட்சிளும் எந்த பதவியும் ஏற்கவில்லை !!

அப்பேர்ப்பட்ட மா மனிதர்தான் பெரியாருக்கு ... திராவிட தீதுகளுக்கும் எதிராக .. ராம பிரான் அவமதிக்கப்பட்ட பொது சட்ட போராட்டம் நடத்தி வெற்றி கொண்ட மகான் ..

https://indiankanoon.org/doc/1710030/

இவர் அன்று ஈவேராவின் கொடுமைக்கும் அதோடு கருணாநிதி அரசின் நேரடி உதவிக்கும் எதிராக சட்ட போர் நடத்தி .. யாரும் எதிர்த்து பேச முடியாத படி சரித்திரத்தில் பதிவு செய்ய வைத்து விட்டு சென்றதால் இன்று இவர்கள் நடக்கவே இல்லை என்று பேசுவதை ... மறுக்க முடிகிறது

வாழ்க இந்த மகான் ..

விஜயராகவன் கிருஷ்ணன்

Tuesday, 12 November 2019

ANNADURAI ,THE GREAT - CHINNA ANNAMALAI




ANNADURAI ,THE GREAT - CHINNA ANNAMALAI 


திருச்சியில், ஒரு காங்கிரஸ் பொதுக்கூட்டத்தில் பேசிய பின், சென்னை வருவதற்காக ரயில்வே ஜங்ஷனுக்கு வந்தேன். வண்டியில் இடமில்லாமல் அங்குமிங்கும் போய்க் கொண்டிருந்தேன். திடீரென, ஒரு போலீஸ் அதிகாரி வந்து, 'உங்களை, சி.எம்., கூப்பிடுகிறார்...' என்றார்.
'யார், அண்ணாதுரையா...' என்றேன். 'ஆம்' என்றார்.

அவரை பின் தொடர்ந்து, அண்ணாதுரை இருந்த பெட்டிக்கு போனேன். அவர் என்னை வரவேற்று, 'சென்னைக்கு தானே...' என்றார். 'ஆம்' என்றதும், 'என்னுடன் பயணம் செய்வதில், உங்களுக்கு ஆட்சேபனை இல்லையே...' என்றார்.
'இல்லை' என்று கூறி, அவருடன் பயணத்தை துவங்கினேன்; ரயில் நகர ஆரம்பித்ததும், 'உங்களிடம் முதல் வகுப்பு டிக்கெட் இருக்கிறதா?' என்று கேட்டார்.
'வித் அவுட்டில் வருவதாக நினைத்து விட்டீர்களோ... இதோ, என் முதல் வகுப்பு டிக்கெட்...' என்று, டிக்கெட்டை எடுத்து காண்பித்தேன்.
'என் தம்பிமார்களில் சிலர், என்னுடன் வரும் தைரியத்தில் டிக்கெட் வாங்காமல் பயணம் செய்வதுண்டு. அவர்களுக்காக, நான் டிக்கெட் வாங்குவது வழக்கம்; அதனால் தான் கேட்டேன்...' என்றார்.
'நான், உங்களை நம்பி பயணம் செய்பவன் இல்லயே...' என்றேன்.
'நீங்கள் சொல்லும் அரசியல் கருத்து எனக்குப் புரிகிறது; திருச்சிக்கு எங்கே வந்தீர்கள்?' என்று கேட்டார். 'ஒரு காங்கிரஸ் பொதுக் கூட்டத்திற்காக வந்தேன்...' என்றேன்.
'சரி... தி.மு.க., ஆட்சிக்கு வந்திருக்கிறது; இந்த ஆட்சி எவ்வளவு நாள் நீடிக்குமென்று நினைக்கிறீர்கள்?' என்று எக்குத்தப்பான கேள்வியை கேட்டார்.
நான் சிறிது யோசித்து, 'நுால் தீருகிற வரை, கழி சுற்றிக் கொண்டேயிருக்கும்...' என்றேன்.
'விளக்கம் தேவை...' என்றார்.
'இந்தி எதிர்ப்பு என்ற மாயை நீங்கும் வரை, தி.மு.க., ஆட்சி இருக்கும்...' என்றேன்.
'இதுதான், காங்கிரஸ்காரர்களுடைய அபிப்ராயமா?' என்றார்.
'பெரும்பாலோரின் எண்ணம்...' என்றேன்.
'தேர்தலில், காங்கிரஸ் தோற்றதற்கு என்ன காரணம் என்று சிந்தித்தீர்களா...' என்று கேட்டார்.
'கடந்த, 1962ல் நடந்த தேர்தலில் உங்களை காஞ்சிபுரத்தில் தோற்கடித்தது தான், காங்கிரஸ் தோற்றதற்குக் காரணம்...' என்றேன்.
'எப்படி?' என்றார்.
'உங்களை, 1962ல் வெற்றி பெற விட்டிருந்தால், இவ்வளவு முனைப்பாக வேலை செய்து, தங்களுக்கு பரம எதிரியான ராஜாஜி போன்றோருடன் சேர்ந்து, கூட்டணி அமைத்திருக்க மாட்டீர்கள்; எதிர்க்கட்சி தலைவராகவே இருந்திருப்பீர்கள்; காலம் ஓடியிருக்கும். இதை, நான் அப்போதே காமராஜரிடம் சொன்னதுடன், காஞ்சிபுரம் தேர்தல் கூட்டங்களில் பேசவும் மறுத்து விட்டேன்...' என்றேன்
.
பின்னர் இருவரும் படுத்து துாங்கி விட்டோம். காலையில் எழுந்ததும், செங்கல்பட்டு ஸ்டேஷனில், காலை ஆகாரத்தை அன்புடன் எனக்கு அவரே பரிமாறினார். அது முடிந்ததும், என்னிடமிருந்த ஒரு புத்தகத்தை வாங்கிப் பார்த்தார்; அது, நான் எழுதிய, 'மானமே பெரிது' என்ற நாவல்!
'இந்த நாவல், நம் சந்திப்பின் நினைவாக என்னிடமே இருக்கட்டும்; இதில், 'அன்பளிப்பு' என்று எழுதி, கையெழுத்திட்டு தாருங்கள்...' என்று புத்தகத்தை நீட்டினார். கையெழுத்து போட்டுக் கொடுத்தேன்.
மாம்பலம் ஸ்டேஷன் வந்ததும், அண்ணாதுரையிடம் விடைபெற்று, ரயிலை விட்டு இறங்கினேன்.
உண்மையில்,
என் மனதில் அது வரையில், அண்ணாதுரையை பற்றி இருந்த துவேஷ எண்ணம், ஸ்டேஷனை விட்டு ரயில் போனதைப் போல், என் இதயத்தை விட்டு போய் விட்டது!
- சின்ன அண்ணாமலை
வேலைக்காரி

நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் பிள்ளைக்கு நான் சென்னையில் நிதி அளிப்பு விழா நடத்தியதை அறிஞர் அண்ணா அவர்கள் மிகவும் பாராட்டினார். அதிலிருந்து என்னிடம் அவருக்குத் தனியான அன்பு ஏற்பட்டிருந்தது.

அண்ணா அவர்களின் "வேலைக்காரி' என்ற திரைப்படம் வெளிவந்து தமிழகத்தில் ஒரு புதிய புரட்சியைச் செய்தது.
அதன் நூறாவது நாள் விழா கோவை உட்லண்ட்ஸ் ஹோட்டலில் நடைபெற்றது. ஜுபிடர் பிக்சர்ஸ் சோமு அவர்களும் மொகைதீன் அவர்களும் மேற்படி நூறாவது நாள் விழாவிற்கு யாரைக் கூப்பிடலாம் என்று அண்ணாவிடம் கேட்டார்களாம்.
அண்ணா அவர்கள், "விழாவிற்கு நாமக்கல் கவிஞர் தலைமை வகிக்கட்டும். சின்ன அண்ணாமலை பாராட்டிப் பேசட்டும்' என்று சொன்னாராம்.
அதன்படி நானும் நாமக்கல் கவிஞர் அவர்களும் விழாவிற்கு கோவை சென்றோம்.
அப்பொழுதெல்லாம் அண்ணா அவர்களை காங்கிரஸ்காரர்களாகிய நாங்கள் மிகச் சாதாரணமாக நினைத்து, துச்சமாகப் பேசுவோம். ஆனால் அதைப் பற்றி எல்லாம் அவர் கவலைப்பட்டுக் கொள்ளுவதில்லை. கோபப்படுவதுமில்லை. அன்று "வேலைக்காரி' விழாவில் நான் பேசும்போது, ""நான் அண்ணாமலை--அவர் அண்ணாதுரை. நானோ மலை--அவரோ துரை. மலையிலிருந்து தான் நீர்வீழ்ச்சி வருகிறது, அது துறையில்தான் தங்குகிறது. இந்தத் துறையில் ர, தவறிக் கிடக்கிறது. இதைப் போல அண்ணாவின் கொள்கைகள் தவறிக் கிடக்கின்றன. "திராவிட நாடு' என்று அவர் சொல்வதெல்லாம் ஒரு நாளும் நடக்காத காரியம். அதற்காக அவர் செய்யும் முயற்சி, செலவிடும் நேரம் எல்லாம் வீண். அவரது சமுதாய சீர்திருத்தக் கொள்கைகளில் பல எனக்கு உடன்பாடுடையவை. ஆனால் அவரது அரசியல், அபத்தம் என்பது எனது உறுதியான கருத்து. நல்ல வேளை, இந்த "வேலைக்காரி' படத்தில் அவரது சமுதாய சீர்திருத்த எண்ணங்களை மட்டுமே புகுத்தி இருக்கிறார். அரசியல் வாடை இல்லை. நமது சமூகத்தை சீர்திருத்தம் செய்யவேண்டுமென்றால் நூறு "வேலைக்காரி' படம் வந்தாலும் சிரமம்தான். சட்டத்தின் மூலமே நமது சமூகத்தை சீர்திருத்த முடியும். ஜனநாயக யுகத்தில் சமூகப் பழக்க வழக்கங்களுக்கு மாறாகச் சட்டம் செய்தால் தேர்தலில் வெற்றி பெறுவது சிரமமே! அதனால் "வேலைக்காரி' போன்ற படங்கள் மக்களின் மனோநிலையைப் பக்குவப்படுத்தும் கைங்கரியத்தைச் செய்யும். சிறிது சிறிதாகத்தான் ஜனநாயகத்தில் சமூக சீர்திருத்தச் சட்டங்களைக் கொண்டு வர முடியும். ஆகவே அண்ணாவின் "வேலைக்காரி' நூறு நாள் ஓடியதை நான் வரவேற்கிறேன். அண்ணாவை மனதாரப் பாராட்டுகிறேன்'' என்றுபேசினேன்.
பின்னர் அண்ணா பதில் கூறும்போது சிறிதும் முகம் சுளிக்காமல், ""சின்ன அண்ணாமலை பல தியாகங்கள் செய்தவர். புரட்சி செய்து சிறைக் கதவுகளை மக்கள் உடைக்க விடுதலையானவர். தமிழ் வளர்க்கத் தமிழ்ப்பண்ணை நடத்துகிறார். அவரது கருத்துக்களை அலட்சியப்படுத்தி விட முடியாது. அவர் நகைச்சுவையாகவே பேசிவிடுவதால் அவர் எங்களைத் தாக்கினாலும் நாங்கள் சிரித்து மகிழ்வோம்'' என்று இந்த விதமாக என்னைப் பாராட்டிப் பேசினார்.
அரசியல் மேடையில் எவ்வளவோ காரசாரமாக அண்ணாவை நான் தாக்கிப் பேசியிருக்கிறேன். ஆயினும் அண்ணா நேரில் சந்திக்கும்போது அதையெல்லாம் கண்டுகொள்ள மாட்டார். கோபப்பட மாட்டார். அதற்கு மாறாக எங்கு என்னைச் சந்தித்தாலும் மகிழ்ச்சி பொங்கப் பேசுவார்.
ஒரு முறை திருவல்லிக்கேணியில் நடைபெற்ற பம்மல் சம்பந்த முதலியார் விழாவில் அண்ணா அவர்கள் தலைமையில் நான் பேச வேண்டி வந்தது. அப்பொழுது அண்ணா அவர்கள், ""எனது அன்பிற்குரிய நண்பரும், மக்களை மகிழ்விப்பதற்காகவே சொற்பொழிவாற்றுபவருமான திரு. சின்ன அண்ணாமலை இப்பொழுது பேசுவார்'' என்று அறிவித்தார்.
இந்த மாதிரி, மாற்றுக் கருத்துக் கொண்டவர்களையும் தன் வயப்படுத்தக் கூடிய ஆற்றல் அண்ணா அவர்களுக்கு இருந்தது. யாரிடம் திறமை இருந்தாலும் அதை அனுபவிக்கும் அறிவு, அவருக்கு இருந்தது.
"வேலைக்காரி' நூறாவது நாள் விழாவில், அண்ணா அவர்கள் பேசும்பொழுது, ""நாமக்கல் கவிஞரின் ஆற்றலை நாடறியச் செய்தவர், ஏன் நானறியச் செய்தவர் சின்ன அண்ணாமலை. எனது "வேலைக்காரி' நாடகம் சிறப்பான திரைப்படமாக உருவெடுத்து நூறு நாள் ஓடியிருக்கிறது. அதற்காக நான் அகந்தை அடையவில்லை. என்னைவிட மிகச் சிறந்த கதை எழுதக்கூடியவர் நாமக்கல் கவிஞர். அவர் எழுதிய "மலைக்கள்ளன்' என்ற நாவலைப் படித்து நான் பிரமிப்படைந்தேன். ஆங்கிலத்தில் உள்ளது போல் தமிழில் அழகாக நாவல் எழுத முடியுமா? என்று பலர் என்னைக் கேட்டதுண்டு. அவர்களுக்கு நான் சொல்லிக் கொள்வேன், "மலைக்கள்ளனை' ஒரு முறை படித்துப் பாருங்கள் என்று!
இந்த மலைக்கள்ளன் நாவல் கவிஞரால் எழுதப்பட்டு பல ஆண்டுகளாக, கேட்பாரற்றுக் கையெழுத்துப் பிரதியாகக் கிடந்திருக்கிறது. கவிஞரின் ஆற்றலை அறிந்த சின்ன அண்ணாமலை, இந்த அரிய கருவூலத்தைத் தேடி எடுத்து, கண்கவரும் அழகிய நூலாகத் தமிழ்ப்பண்ணை மூலம் வெளியிட்டிருக்கிறார்.
"வேலைக்காரி'யை விடப் பல மடங்கு சிறப்பான கதை "மலைக்கள்ளன்'. அதை யாராவது நல்ல முறையில் திரைப்படமாக்கினால் நிச்சயம், தமிழ் திரைப்படத் துறைக்கு ஒரு வெற்றிகரமான தமிழ்ப்படம் கிடைக்கும்.
ஆற்றல் மிக்கவர் நாமக்கல் கவிஞர். அவரது ஆற்றலை உலகறியச் செய்தவர் சின்ன அண்ணாமலை. ஆகவேதான் இவ்விருவரையும் இந்த விழாவிற்கு அழைக்கச் சொன்னேன்'' என்று அண்ணா அவர்கள் அன்று மிக அருமையாகப் பேசினார்கள்.
சொன்னால் நம்பமாட்டீர்கள், அன்று மாலையே நாராயணன் கம்பெனி திரு. நாராயண அய்யங்கார் அவர்கள் என்னைப் பட்சிராஜா ஸ்டூடியோவிற்குக் கூட்டிக்கொண்டு போய் ஸ்ரீராமலு நாயுடு அவர்களிடம் "மலைக்கள்ளன்' கதையைச் சொல்லச் சொன்னார்கள். சொன்னேன். கதை பிடித்தது. படமாக எடுத்தார்கள். திரு. எம்.ஜி.ஆர்., பானுமதி நடித்தார்கள். படம் பிரமாதமான வெற்றியடைந்தது. எம்.ஜி.ஆருக்கும் சினிமாத் துறையில் அப்படத்தின் மூலம் புதிய திருப்பம் ஏற்பட்டது. "மலைக்கள்ளன்' தமிழ்,தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி மற்றும் பல மொழிகளிலும் திரைப்படமாக எடுக்கப்பட்டது. அத்தனையும் வெற்றிதான்!
"மலைக்கள்ளன்' திரைப்படமாவதற்குக் காரணமாக இருந்த அண்ணா அவர்களை, நானும் நாமக்கல் கவிஞரும் சந்தித்து அவருக்குப் பொன்னாடை போர்த்தி, மாலை மரியாதை செய்து மகிழ்ந்து எங்கள் நன்றியைத் தெரிவித்துக் கொண்டோம்.
நாடோடியாக நடித்தேன்!
பிரபல எழுத்தாளர் "நாடோடி' அவர்களை பெங்களூரில் பாரதி மண்டப நிதி அளிப்பு விழா நிகழ்ச்சியில் கலந்துகொண்டு நிதியைப் பெற்று வருவதற்கு கல்கி ஆசிரியர் திரு. கிருஷ்ணமூர்த்தி அவர்கள் ஏற்பாடு செய்திருந்தார். புறப்பட வேண்டிய கடைசி நிமிஷத்தில் நாடோடி அவர்களால் புறப்பட இயலவில்லை. ஆனால் நிகழ்ச்சி ஏற்பாடு செய்தவர்கள் தடுமாறிவிடக் கூடாதே என்று கல்கி என்னைப் பெங்களூருக்குப் போகும்படி கேட்டுக் கொண்டார்.
நாடோடி பெயரால் "ரிசர்வ்' செய்யப்பட்ட டிக்கெட்டிலே நான் பிரயாணம் செய்ய நேர்ந்தது. பெங்களூர் கண்டோன்மெண்ட் ரயில்வே ஸ்டேசன் வந்ததும் சிலர் மாலையும் கையுமாக ஓடிவந்தனர். "நாடோடி' என்ற பெயர் எழுதியிருந்த ரயில் பெட்டியைக் கண்டுபிடித்து அதன் அருகில் ஓடி வந்தார்கள். வண்டியிலிருந்து இறங்கிய என்னைக் கண்டதும், ""நாடோடி வாழ்க'' ""வாழ்க'' என்று கோஷம் போட்டு வரவேற்று மாலை அணிவித்தார்கள். நானும் புன்னகையுடன் மாலை மரியாதைகளைப் பெற்றுக்கொண்டேன். நான் யார் என்பதை அவர்களிடம் அப்போது சொல்லிக் கொள்ளவில்லை. அப்படியே எல்லோரும் என்னை "நாடோடி' என்றே நினைக்கும்படி மாலை வரை சமாளித்துக் கூட்டத்தில் விஷயத்தை உடைத்துச் சபையைத் திகைக்க வைக்க வேண்டுமென்பது என் திட்டம்.
என்னை வரவேற்று கூட்டிக்கொண்டு போனவர்கள் பெங்களூர் காந்தி நகரில் ஒரு வீட்டில் இறக்கினார்கள். அந்த வீடு திரு. சாமி என்பவருடையது. திரு. சாமி அவர்களின் புதல்வர்கள் மூன்று பேர், புதல்வியவர் ஐந்து பேர். எல்லோரும் உயர்ந்த படிப்பு படித்தவர்கள். "கல்கி'யின் விசிறிகள். என்னை "நாடோடி' என்று நினைத்துக் கொண்டு போட்டி போட்டுக்கொண்டு பிரமாதமாக உபசாரம் செய்தார்கள். என்னுடைய நகைச்சுவை வெடிகளைக் கேட்டு, சிரி சிரி என்று சிரித்தார்கள். "நாடோடி, எழுதிய பல விஷயங்களைக் குறிப்பிட்டுப் பேசினார்கள். எனக்கு அவை எங்கே ஞாபகத்திலிருக்கும்? ஆனால் நான் சமாளித்து, மழுப்பி ஒரு வழியாக கூட்டத்திற்குப் போகும்வரை "நாடோடி'யாகவே நன்றாக நடித்தேன் என்றுதான் சொல்லவேண்டும்.
- சின்ன அண்ணாமலை