Showing posts with label JUNE 26. Show all posts
Showing posts with label JUNE 26. Show all posts

Thursday, 27 August 2020

M.M.DHANDAPANI DESIGAR BORN 1908 AUGUST 27 - 1972 JUNE 26



M.M.DHANDAPANI DESIGAR  
BORN 1908 AUGUST 27 - 1972 JUNE 26


எம்.எம்.தண்டபாணி தேசிகர் (பிறப்பு: ஆகத்து 27, 1908

தமிழிசை உலகிலும், திரைப்படங்கள் மூலம் அழியாத புகழ் வாய்ந்த பல தமிழ்ப் பாடல்களைப் பாடியும் புகழ் பெற்று விளங்கியவர் எம்.எம்.தண்டபாணி தேசிகர் அவர்கள். மதுரை முத்தையா தண்டபாணி தேசிகர் என்பது இவருடைய முழுப் பெயர். இவருடைய பன்முகப் பெருமைகள் தமிழிசை, திரைப்படங்கள், பாடலாசிரியர் போன்ற பல வகைகளிலும் வெளிப்பட்டு மக்களின் ஏகோபித்த அன்பைப் பெற்றவர். இவருடைய பாடல்களைப் பாடாத தமிழ் இசை மேடைகளே இல்லையெனலாம். "தாமரைப் பூத்த தடாகமடி" என்கிற பாட்டைப் பாடிய இவரை ஒரு காலத்தில் தமிழிசை மேடைகளில் நினைவுகூராதவர்களே இல்லை.

தஞ்சை மாவட்டம் நன்னிலம் அருகிலுள்ள திருச்செங்காட்டாங்குடி என்பது இவர் பிறந்த ஊர். இந்த ஊரின் பெயரைச் சொன்னதும் பிள்ளைக் கறி சமைத்த சிறுத்தொண்டரின் நினைவு வரவேண்டுமே! கல்கியின் "சிவகாமியின் சபதம்" நெடுங்கதையில் பல்லவ மன்னன் நரசிம்ம பல்லவன் வாதாபி மீது படையெடுத்து முற்றுகையிட்ட போது, அவன் படையில் தளபதியாக இருந்த சிறுத்தொண்டர் அந்தக் கோட்டை வாயிலில் இருந்த ஒரு விநாயகரை வேண்டிக் கொண்டு அந்த சிலையைப் பெயர்த்து எடுத்துக் கொண்டு வந்து தன் சொந்த கிராமமான திருச்செங்காட்டாங்குடியில் பிரதிஷ்டை செய்ததாக எழுதுகிறார். இன்றும் அவ்வூர் சிவன் கோயில் பிரகாரத்தில் வாதாபி கணபதியின் சந்நிதி இருப்பதைப் பார்க்கலாம்.

1908 ஆகஸ்ட் 27இல் இவர் பிறந்தார். இவருடைய தந்தையார் பெயர் முத்தையா தேசிகர். ஆலயங்களில் தேவாரம் பாடுபவர்கள் இவர்கள். இவருடைய கணக்கிலடங்கா தமிழ்ப் பாடல்கள் குறித்தும், இவர் நடித்த திரைப்படங்கள் குறித்தும் "ராண்டார்கை" எனும் எழுத்தாளர் எழுதி வைத்திருக்கிறார்.

தேவார இசை பாடும் குடும்பமாதலால் இவர் முதன்முதலில் தேவாரப் பாடல்களில்தான் பயிற்சி பெற்றார். இவருடைய தந்தையார்தான் இவருக்கு முதல் குரு. இவருடைய இளமைப் பருவத்தில் சட்டையப்ப நாயனக்காரர் என்பவரிடமும் இவரது இசைப் பயிற்சி நடந்தது. மாணிக்க தேசிகர் என்பவரிடமும் பிறகு கும்பகோணம் ராஜமாணிக்கம் பிள்ளை எனும் புகழ்பெற்ற வயலின் வித்வானிடமும் இசை பயின்றார். தன்னுடைய இருபதாவது வயதில் கச்சேரி செய்யத் தொடங்கிய இவரை அந்த நாள் இசை மேதைகள் பலரும் பாராட்டி மகிழ்ந்திருக்கிறார்கள்.

தேசிகருடைய பாட்டு என்றால் இவரது அழுத்தமான சாரீரமும், சுருதி பிசகாமல் பாடும் திறமையும் தமிழிசையில் தனி ஆர்வம் கொண்டு இவர் பாடும் தமிழ்ப்பாடல்களுக்கு இவர் பால் ஈர்ப்பும், இவர் இசையில் ஆர்வமும் ஏற்படும். இவருடைய தோற்றம், இசை ஆகியவை இவரை திரையுலகில் கொண்டு போய்ச் சேர்த்தது. நந்தனார் எனும் திரைப்படத்தில் திருநாளைப்போவாராக (நந்தனார்) நடித்தார்.

திருமிழிசை ஆழ்வார், வல்லாள மகராஜன், பட்டினத்தார் ஆகிய படங்கள் இவரது பெருமைக்குச் சான்றாகும். இவர் சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக் கழக இசைக் கல்லூரியின் முதல்வராக இவர் பதினைந்து ஆண்டுகள் சிறப்பாகப் பணி புரிந்திருக்கிறார். அங்கு பணியாற்றிய காலத்தில் இவர் "தமிழ்ப் பாமாலை" எனும் நூல் ஒன்றை வெளியிட்டிருக்கிறார்.
இவர் பாடிய ஏராளமான தமிழ்ப் பாடல்கள் அமரத்துவம் வாய்ந்தவை. அவை அனைத்தையும் பட்டியலிடுவது என்பது சிரமமான காரியம் என்றாலும் ஓரிரெண்டை இங்கு குறிப்பிடுவது பொறுத்தமாக இருக்கும். அவை "தாமரைப் பூத்த தடாகமடி", "ஜகஜ்ஜனனி சுகவாணி கல்யாணி", "இன்பக் கனா ஒன்று கண்டேன்", "தூது நீ சொல்லிவாராய்", "பிறவா வரம் தாரும்", "வருகலாமோ", "சிவலோக நாதனைக் கண்டு", "என்னப்பன் அல்லவா, என் தாயும் அல்லவா", "ஐயே! மெத்தக் கடினம்" இவை போன்ற பாடல்களைச் சொல்லலாம்.

தமிழகத்தில் ராஜா சர் அண்ணாமலை செட்டியார், ராஜாஜி, கல்கி, ரசிகமணி போன்றோர் தமிழிசை இயக்கத்துக்காகப் பாடுபட்டவர்கள். அப்படிப்பட்ட ராஜா சர் அண்ணாமலைச் செட்டியாரின் பல்கலைக் கழகத்தில் பணியாற்றிய இவர் தமிழிசைக்காக அரும்பாடு பட்டிருக்கிறார். 1940களில் தமிழிசை இயக்கம் தமிழ் நாட்டை ஒரு உலுக்கு உலுக்கியது எனலாம். அப்போது தமிழ்ப் பாடல்களைப் பாடி புகழ்பெற்ற பல பாடகர்களில் தேசிகரும் ஒருவர்.

அந்த காலகட்டத்தில் கர்நாடக இசை உலகில் தெலுங்கு, சமஸ்கிருதம் ஆகிய மொழிகளில் பாடியிருக்கும் சற்குரு ஸ்ரீதியாகராஜர், முத்துசாமி தீக்ஷிதர், சியாமா சாஸ்திரி, புரந்தரதாசர் போன்றவர்களின் கீர்த்தனைகள்தான் அதிகம் பாடப்பட்டு வந்தன. முந்தைய இசை நிகழ்ச்சிகளில் தமிழ்ப் பாடல்கள் கச்சேரியின் நிறைவில் துக்கடாக்கள் என்ற பெயரில் மட்டுமே பாடப்பட்டன. தமிழிசை இயக்கத்தின் பலனாக இசை மேடைகளில் தமிழ்ப் பாடல்களும் முக்கியமாகப் பாடப்பட்டன. மகாகவி பாரதியார், கோபாலகிருஷ்ண பாரதியார், அருணாசல கவிராயரின் இராம நாடகக் கீர்த்தனைகள், முத்துத்தாண்டவர், பாபநாசம் சிவன் ஆகியோரின் பாடல்கள் தமிழிசைக்கு உதவியாக இருந்தன.

இவருடைய இசைப் பணிகளுக்கிடையே திரைப்படங்களிலும் நடித்தார் அல்லவா? 1935இல் இவர் "பட்டினத்தார்" எனும் படத்தில் நடித்தார். 1937இல் "வல்லாள மகாராஜா" எனும் படத்திலும் 1938இல் "தாயுமானவர்" படத்திலும் 1939இல் "மாணிக்கவாசகர்" படத்திலும், 1942இல் ஜெமினி எஸ்.எஸ்.வாசன் எடுத்த "நந்தனார்" படத்திலும் 1948இல் "திருமழிசை ஆழ்வார்" எனும் படத்திலும் நடித்தார். இவருடைய படங்கள் அனைத்திலும் இவருடைய பாடல்கள் சிறப்பம்சமாகத் திகழ்ந்து. தமிழிசையிலும் திரைப்படங்களிலும், இசை ரசிகர் உள்ளங்களிலும் சிறப்பான இடத்தைப் பெற்ற எம்.எம்.தண்டபாணி தேசிகர் 26-6-1972 அன்று இவ்வுலக வாழ்வை நீத்தார். வாழ்க தண்டபாணி தேசிகர் புகழ்!

---------------------------------------------------------------------------------

எம். எம். தண்டபாணி தேசிகர் (பிறப்பு: ஆகத்து 27, 1908 - சூன் 26, 1972) ஒரு தமிழிசைக் கலைஞர். இவர் அண்ணாமலை பல்கலைக்கழகத்தின் இசைத்துறைத் தலைவராக 15 ஆண்டுகள் பணியாற்றி உள்ளார். பல தமிழ்த் திரைப்படங்களிலும் நடித்துள்ளார்

வாழ்க்கைச் சுருக்கம்[தொகு]
தண்டபாணி தேசிகர் சென்னை மாகாணம் நன்னிலத்துக்கு அருகில் உள்ள திருச்செங்காட்டங்குடி என்ற ஊரில் முத்தையா தேசிகருக்கு மகனாகப் பிறந்தார். மாணிக்க தேசிகர், கும்பகோணம் ராசமாணிக்கம் பிள்ளை ஆகியோரிடம் இசைப் பயிற்சி பெற்றார். தெருவெங்கும் திருப்பாக்களைப் பாடி, தேவாரப் பாடகாசிரியராக அமர்ந்திருந்த தண்டபாணி தேசிகரை பட்டினத்தார் திரைப்படம் அவரைச் சென்னைக்கு இழுத்து வந்தது. பட்டினத்தார், நந்தனார் உட்படப் பல திரைப்படங்களில் நடித்துள்ளார்.

1952 தியாகராசர் ஆராதனை சம்பவம்[தொகு]
1952 தியாகராசர் ஆராதனை விழாவில் தண்டபாணி பாட அழைக்கப்பட்டார். அவரின் வழமை போல அவர் தமிழ்ப் பாட்டு ஒன்றோடு தொடங்கினார். பின்னர் அவர் தெலுங்கு, சமசுகிருத பாடல்களைப் பாடினார். இறுதியாக அவரின் வழமை போல தமிழ்ப் பாட்டோடு முடித்தார். தமிழ்ப் பாடல்களைப் பாடியது அங்கிருந்தவர்களுக்கு ஆத்திரம் ஊட்டியது. இவர் பாடி முடித்தவுடன் தண்ணீர் தெளித்து சுத்தம் செய்தனர். பல கருநாடக இசைக் கலைஞர்கள், நாளிதழ்கள் இவரைக் கடுமையாக விமர்சித்தன. தமிழ்ப் பாடல்களால் தியாகராசர் ஆராதனையில் புனிதத்தை கலைத்து விட்டதாகக் அவர்கள் சாடினார்கள்.[1]

நடித்த திரைப்படங்கள்[தொகு]
பட்டினத்தார் (1936)
வள்ளாள மகாராஜா (1937)
தாயுமானவர் (1938)
மாணிக்கவாசகர் (1939)
நந்தனார் (1942)
திருமழிசை ஆழ்வார் (1948)
.

Tuesday, 26 June 2018

ACTOR SERUKALATHOOR SAAMA ( ACT AS GHOST IN MARMAYOGI ) BORN 1904 JUNE 26





ACTOR SERUKALATHOOR SAAMA 
( ACT AS GHOST IN MARMAYOGI )
BORN 1904 JUNE 26




செருக்களத்தூர் சாமா (Serukalathur Sama, பிறப்பு: சூன் 26, 1904 - ) அல்லது செருகுளத்தூர் சாமா என்பவர் ஒரு தமிழ்த் திரைப்பட நடிகரும், பாடகரும் ஆவார். இவர் பொதுவாகவே புராணக் கதைகளுடன் சம்பந்தப்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். அதிலும் இவர் கிருஷ்ணர் வேடத்தில் அதிக முறை நடித்துள்ளார். இவர் 1930 ஆம் 40 ஆம் ஆண்டுக் காலங்களில் திரைப்படங்களில் நடித்தார்.[1].

இளமைக் காலம்[தொகு]

சாமாவின் இயற்பெயர் சுவாமிநாதன் என்பதாகும். தஞ்சாவூரில் செருக்களத்தூர் என்ற ஊரில் மிராசுதாரராக இருந்த வைத்தியநாதய்யர் என்பவருக்குப் பிறந்தார்.[2] சாமாவின் ஐந்தாவது வயதில் தாயார் இறந்து விடவே, தந்தையார் மறுமணம் செய்து கொண்டார். இதனால் தாய்மாமன் இவரை தஞ்சைக்கு அழைத்துச் சென்று அங்குள்ள கல்யாணசுந்தரம் உயர்நிலைப் பள்ளியில் சேர்த்தார். அத்துடன் கருநாடக இசையையும் கற்றுக் கொண்டார். எஸ்.எஸ்.எல்.சி சோதனையில் சித்தி பெற்ற பின்னர் திருமணம் புரிந்து கொண்டார். இவருக்கு மூன்று பெண் பிள்ளைகள். திருமணம் முடித்த பின்னர் வேலை தேடும் பொருட்டு தம்பியுடன் சென்னை சென்றார். அங்கு இந்தியக் காங்கிரஸ் கட்சியின் அலுவலகத்தில் எழுத்தராக வேலை கிடைத்தது. இரண்டு மாதங்கள் அங்கு பணியாற்றிய பின்னர் சென்னை காஸ்மாபாலிட்டன் கிளப்பில் எழுத்தராகப் பத்து ஆண்டு காலம் பணியாற்றினார்.[2] இங்கு பணியாற்றிய காலத்தில் இவரது சில பாடல்களை ஹிஸ் மாஸ்டர்ஸ் வாய்ஸ் நிறுவனத்தினர் இசைத்தட்டுகளில் வெளியிட்டனர்.[2] இதனால் இவருக்கு நாடகங்களில் நடிக்கும் வாய்ப்புக் கிடைத்தது.

திரைப்படங்களில் பணி[தொகு]

ஜி.பி.சி. ஸ்டூடியோவில் மேக்கப்மேன் ஆகப் பணியாற்றிய மாமா ராஜு என்பவர் சாமாவை நேசனல் மூவிடோன் ஸ்டூடியோவுக்கு அறிமுகப்படுத்தினார். அவர்களது முதல் படமான வள்ளி கல்யாணம் படத்தில் நாரதராக நடித்தார்.[2] அதன் பின்னர், இயக்குனர் ஏ. நாராயணனின் கீழ் பணியில் சேர்ந்தார். ஓராண்டு காலம் அவருடன் பணியாற்றிய பின்னர் திரௌபதி வஸ்திராபகரணம் (1934) திரைப்படத்தில் கிருஷ்ணனாக வேடமேற்று நடித்தார். தொடர்ந்து மாயா பஜார் (1935), கருடகர்வ பங்கம், பாமா பரிணயம், சிந்தாமணி ஆகிய அடுத்தடுத்த படங்களில் கிருஷ்ணன் வேடத்திலேயே நடித்தார். சிந்தாமணி படத்தில் இவர் பாடிய பாடல்கள் இவருக்குப் புகழ் தேடித் தந்தன. பின்னர் அம்பிகாபதி படத்தில் கம்பன் வேடத்தில் நடித்தார். தொடர்ந்து பல படங்களில் நடித்தார்.

பாரத் பிக்சர்சு என்ற பெயரில் தனது சொந்தப் படத் தயாரிப்பு நிறுவனம் ஒன்றை சாமா ஆரம்பித்தார். இதன் மூலம் 1940 ஆம் ஆண்டில் ஷைலக் என்ற திரைப்படத்தைத் தயாரித்து வெளியிட்டார். இப்படத்தில் அவர் ஷைலக்காக நடித்தார். இப்படம் அவருக்குப் பெரும் நட்டத்தை ஏற்படுத்தியது. ஆனாலும் தொடர்ந்து சுபத்ரா அர்ஜூனா (1941), ராஜசூயம் (1942) என இரண்டு திரைப்படங்களைத் தயாரித்தார். இப்படங்களும் தோல்வியடையவே, கம்பனியை மூடி விட்டார்.[2] சிறிது காலத்தின் பின்னர் மீண்டும் படங்களில் நடிக்க ஆரம்பித்தார்.

1942-இல் ‘ஜெமினி ஸ்டூடியோஸ்’-ன் மாபெரும் வெற்றித்தயாரிப்பான ‘நந்தனார்’ படத்தில் வேதியர் கதாபாத்திரத்தில் செருகளத்தூர் சாமா

SHAHU IV MAHARAJ ,ACTIVIST BORN 1874 JUNE 26 - 1922 MAY 6







SHAHU IV MAHARAJ  ,ACTIVIST 
BORN 1874 JUNE 26 - 1922 MAY 6





நான்காம் சாகுமகராசர் (Shahu IV -Rajarshi Shahu 26 ஜுன், 1874 – 6 மே, 1922) மகாராட்டிர மாநிலத்தின் கோல்காப்பூர் சமாஸ்தான மன்னர். 'இராஜர்சி சாகுஜி சத்திரபதி' எனவும் 'சத்திரபதி சாகுஜி மகராஜ்' எனவும் அறியப்பட்டார். சமூகப் புரட்சியாளராகத் தன்னை அடையாளப்படுத்திக் கொண்ட ஒரே மன்னர். 1902 ஆம் ஆண்டிலேயே, தனது நிர்வாகத்திற்கு உட்பட்ட பகுதிகளில் பிற்படுத்தப்பட்டோர் அனைவருக்கும் 50 விழுக்காடு வேலைவாய்ப்பிற்கான இடங்களை ஒதுக்கி ஆணை பிறப்பித்தார். சாதி வேற்றுமை களையப் பாடுபட்டவர். பிராமண ஆதிக்கத்தினை எதிர்த்துப் புரட்சி செய்தவர். அம்பேத்கரின் இயக்கத்தில் துணை நின்று சமூக நீதியை நிலைநாட்டியவர்.

‘சாதியத்தோடு இணக்கம் கொள்ளாத சாகு மகாராசர்’ எனும் கட்டுரையைப் படித்தேன். இந்தியாவில் முதன் முதலில் 1895-இல் மைசூர் மன்னராட்சியில் பார்ப்பனரல்லாதாருக்கு இட ஓதுக்கீடு அரசாணை வெளியிடப்பட்டது. இதை எதிர்த்து பார்ப்பனர்கள் முறையிட்டதின் விளைவாக இந்த அரசாணை 1921-இல் நடைமுறைக்கு வந்தது. மைசூர், கோல்காபூர், பரோடா ஆகிய மன்னராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் இடஒதுக்கீடு நடைமுறைப் படுத்தப்பட்டது.

இதற்கு மூலக்காரணமாக திகழ்ந்தவர் மருத்துவர் தாரவாட் மாதவன் நாயர் என்கிற டி. எம். நாயரே ஆவார். இவர்தான் இட ஒதுக்கீட்டின் தேவையை மன்னராட்சிக்கு உட்பட்ட மேற்கண்ட மூன்று இளவரசர்களுக்கும் கற்பித்தார் என்பது வரலாறு. இந்த ஒதுக்கீட்டின் தந்தை மருத்துவர் தாரவாட் மாதவன் நாயர் என்பதை மக்களுக்கு நினைவூட்டுவது நமது கடமையாகும்.

SAMUEL CROMPTON , SCIENTIST BORN 1753 DECEMBER 3 - 1827 JUNE 26




SAMUEL CROMPTON , SCIENTIST 
BORN 1753 DECEMBER 3 - 1827 JUNE 26





சாமுவேல் கிராம்ப்டன் (Samuel Crompton, 3 டிசம்பர் 1753 – 26 சூன் 1827) ஆங்கிலேயக் கண்டுபிடிப்பாளரும், நெசவுத் துறையின் முன்னோடியும் ஆவார். யேம்சு ஆர்கிரீவ்சு, ரிச்சார்ட் ஆர்க்ரைட் ஆகியோரின் ஆக்கங்க ளை ஆராய்ந்ததில் இவர் மியுனூற்ற ற்பொறி யை 1779 இல் கண்டுபிடித்தார். இங்கிலாந்தில் ஏற்பட்ட 
தொழி ற்புர ட்சியில் இது முக்கிய பங்களிப்பாகப் பார்க்கப்ப டுகிறது.[1][2]

About 1779, Samuel Crompton succeeded in producing a mule-jenny, a machine which spun yarn suitable for use in the manufacture of muslin.[6] It was known as the muslin wheel or the Hall i' th' Woodwheel,[7] from the name of the house in which he and his family now lived.[8] The mule-jenny later became known as the spinning mule. There was a strong demand for the yarn which Crompton was making at Hall i' th' Wood but he lacked the means to take out a patent. The prying into his methods forced Crompton to choose between destroying his machine or making it public. He adopted the latter alternative after promises by a number of manufacturers to pay him for the use of the mule but all he received was about £60. [9] He then resumed spinning on his own account, but with indifferent success.[citation needed]

The mule-jenny twisted the rovings using rollers in the manner of Arkwright's frame, while the spindle carriage moved back and forth 54 inches to stretch the thread, and then to gather it in the spinning spindles in the manner of Hargreaves jenny. [10] The mule's importance was that it could spin thread better than could be done by hand, which led to ever finer thread. Coarse thread (40s) sold for 14 shillings per pound whilst (80s) spun on his mule sold at 42 shillings a pound.[11]

MALAYALAM ACTOR SURESH GOBI BORN 1960 ,JUNE 26









MALAYALAM ACTOR SURESH GOBI 
BORN 1960 ,JUNE 26

சுரேஷ் கோபி கொல்லத்தில் 
ஜுன் 26, 1960ல் பிறந்தார்

சுரேஷ் கோபிநாதன் நாயர் என்ற முழுப் பெயரின் சுருக்கமே சுரேஷ் கோபி என்பதாகும். இவர் மலையாள திரைப்பட நடிகர் ஆவார். இவர் கேரள மாநிலம் கொல்லத்தில் ஜுன் 26, 1960ல் பிறந்தார். இவரது பெற்றோர் ஞானலட்சுமி மற்றும் கோபிநாதன் பிள்ளை ஆவார்கள். மலையாள மொழிப் படங்களில் அதிகமாக நடித்தாலும் ஒரு சில தமிழ்ப் படங்களிலும் நடித்துள்ளார். இவரது மனைவியின் பெயர் ராதிகா. இவருக்கு நான்கு குழந்தைகள் இருக்கிறார்கள்: கோகுல், பாக்யா, பாவனா, மற்றும் மாதவ். சுரேஷ் கோபி தற்போது சாஸ்தமங்களத்தில் வசித்து வருகிறார். இவருடைய தன்னுடைய மனிதநேய முயற்சிகளால் மிகவும் பிரபலமானார்.

ஐ, சமஸ்தானம், தீனா, கற்பூர முல்லை, நிரபராதி போன்ற படங்களில் நடித்திருப்பவர் மலையாள நடிகர் சுரேஷ் கோபி. மம்மூட்டி, மோகன்லாலுக்கு அடுத்தபடியான ரசிகர்களை தன்பக்கம் இழுத்து வைத்திருப்பவர். இவர் பாஜவில் இணைந்து மாநிலங்களவை உறுப்பினராகவும் பொறுப்பு ஏற்றார். சமீபத்தில் சுரேஷ்கோபி வெளியிட்ட ஒரு அறிவிப்பு திரையுலகினரையும் அவரது ரசிகர்களையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. 30 வருடமாக நடிப்பில் ஈடுபட்டிருந்தவர் இனி நடிப்புக்கு முழுக்குபோட முடிவு செய்திருப்பதாக கூறியதே அதிர்ச்சிக்கு காரணம்.

திடீரென்று இந்த முடிவை எடுத்ததற்கு என்ன காரணம் என தெரியாமல் குழப்பம் அடைந்தனர். தற்போது அவரே உருக்கமான விளக்கம் அளித்திருக்கிறார். ‘எனது தந்தை இறந்தபோது திரையுலத்திலிருந்து யாருமே வந்து எனக்கு ஆறுதல் சொல்லவில்லை. இரக்கமற்ற இத்திரையுலகில் நான் ஏன் தொடர்ந்து நீடிக்க வேண்டும். எனவேதான் நடிப்பிலிருந்து விலக முடிவு செய்தேன்’ என குறிப்பிட்டிருக்கிறார்.

கொச்சி, மாநிலங்களவை ​ உறுப்பினரும், மலையாள நடிகருமான சுரேஷ் கோபி பா.ஜ.க.,வில் இணைந்தார்.கேரளாவில் நடந்த சட்டமன்ற தேர்தலின் போது பா.ஜ.க கட்சியின் சார்பாக பிரச்சாரம் செய்த எம்.பி.சுரேஷ் கோபி தற்போது அதிகாரப்பூர்வமாக பாரதிய ஜனதா கட்சியில் இணைந்துள்ளார்.

இந்தாண்டு ஏப்ரல் மாதம் சுரேஷ் கோபியை கலைத்துறை சார்பில் மாநிலங்களவை உறுப்பினராக மத்திய அரசு நியமித்தது. மலையாள சினிமாவில் மாநிலங்களவைக்கு தேர்வு செய்யப்பட்ட முதல் எம்.பி. என்ற பெருமைக்குரியவர் சுரேஷ் கோபி என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது பா.ஜ.க.,வில் இணைந்துள்ள சுரேஷ் கோபி, மத்திய சினிமா வளர்ச்சி கழகத்தின் தலைவராகவும் பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.







MA.PO.SIVAGNANAM ,FREEDOM FIGHTER BORN 1906 JUNE 26- 1995 OCTOBER 3






MA.PO.SIVAGNANAM ,FREEDOM FIGHTER 
BORN 1906 JUNE 26- 1995 OCTOBER 3



ம. பொ. சிவஞானம் (சூன் 26, 1906 - அக்டோபர் 3, 1995) இந்தியாவைச் சேர்ந்த விடுதலைப் போராட்டக்காரரும் சிறந்த தமிழறிஞரும் ஆவார். இவர் ம.பொ.சி என அறியப்படுபவர். சிலப்பதிகாரத்தின் மீது இவர் கொண்டிருந்த ஆளுமையின் காரணமாக இவர் சிலம்புச் செல்வர் என அழைக்கப்பட்டார். 2006 ஆம் ஆண்டில் இவரது நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு தமிழக அரசு இவரது நூல்களை நாட்டுடைமையாக்கி சிறப்பித்தது.

வாழ்க்கைக் குறிப்பு[தொகு]
மயிலாப்பூர் பொன்னுசாமி சிவஞானம் என்பதே ம. பொ. சி. என்று ஆயிற்று. சென்னை விளக்குப் பகுதியிலுள்ள சால்வன் குப்பம் என்ற பகுதியில் 26/6/1906 அன்று பிறந்தார். மிகவும் ஏழ்மையான குடும்பத்தில் பிறந்த இவரின் பள்ளிப்படிப்பு மூன்றாம் வகுப்போடு முடிந்தது. குழந்தைத் தொழிலாளியாக நெசவுத் தொழில் செய்தார். பின்னர் அச்சுக் கோக்கும் பணியில் சேர்ந்தார். இத்தொழிலை அவர் அதிக நாள் செய்து வந்தார். 31 ஆம் வயதில் திருமணம் நடந்தது. ஒரு மகன் இரு மகள்கள் எனக் குழந்தைகள். பின்னர் விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்டுச் சிறைவாசம், காங்கிரஸ் இயக்கத்தில் சேர்ந்து சிறந்த சொற்பொழிவாளராகத் திகழ்ந்தார். எழுநூறு நாட்களுக்கு மேல் சிறையில் இருந்தார். ம.பொ.சி. தன் சிறைவாசத்தைச் சிலப்பதிகாரத்தைக் கற்றுக்கொள்ளப் பயன்படுத்தினார். ஆயினும் சிறைவாசம் அவருக்களித்த பரிசு தீராத வயிற்றுவலி. வாழ்நாளின் இறுதிவரை அவரை அந்த வயிற்று வலி வதைத்தது.

தமிழரசுக் கழகம்[தொகு]

தமிழரசுக் கழக மாநாடு
1946 ஆம் ஆண்டில் தமிழரசுக் கழகம் என்ற இயக்கத்தைத் தொடங்கினார். ஆகஸ்ட் 8, 1954 ஆம் ஆண்டில், ம.பொ.சி. காங்கிரசிலிருந்து விலகினார்.

போராட்டங்கள்[தொகு]
மெட்ராஸ் ஸ்டேட் என்பதை மாற்றி தமிழ்நாடு என்ற பெயரை வைக்கப் பேராடினார். மொழிவாரியாக மாநிலங்கள் பிரிக்கப்பட்டபோது 'மதராஸ் மனதே' என்று ஆந்திரர்கள் சென்னையைக் கேட்டபோது, அதனை எதிர்த்துப் போராடித் தமிழகத் தலைநகராகச் சென்னையை இருத்தினார். திருவேங்கடத்தையும் (திருப்பதி) தமிழகத்துடன் இணைக்கப் போராடினார், அதில் வெற்றி கிடைக்கவில்லை. ஆனால் அப்போராட்டத்தால் திருத்தணி தமிழகத்துக்கு கிடைத்தது. குமரி மாவட்டம், செங்கோட்டை, பீர் மேடு, தேவிக்குளம் போன்றவை தமிழகத்துக்கு கிடைக்க போராடினார். குமரியும் செங்கோட்டையும் தமிழகத்துக்கு கிடைத்த போதும் பீர் மேடு, தேவிக்குளம் கேரளத்துடன் இணைக்கப்பட்டன.

நூல்கள்[தொகு]
பாரதியார்[தொகு]
பாரதியின் எழுத்துக்கள் மூலம் ம. பொ. சி சங்க இலக்கியங்களின் அறிமுகம் பெற்றார். ம. பொ. சியின் தமிழ் அறிவையும், புலமையையும் வளர்த்த பெருமை பாரதியையே சாரும். பாரதியை பற்றி ம. பொ. சி பல ஆராய்ச்சி நூல்களை எழுதியுள்ளார்:

வள்ளலாரும் பாரதியும் [1965].
எங்கள் கவி பாரதி [1953].
பாரதியாரும் ஆங்கிலமும் [1961].
பாரதி கண்டஒருமைப்பாடு [1962].
உலக மகாகவி பாரதி [1966].
பாரதியார் பாதையிலே [1974].
பாரதியின் போர்க்குரல் [1979].
பாரதியார் பற்றிய ம.பொ.சி.பேருரை [1983].
என்னை வளர்த்த பாரதி[2013] ம.பொ.சி கூறி விக்கிரமன் (எழுத்தாளர்), நாகராஜன் தொகுத்தது

சிலப்பதிகாரம்[தொகு]
சிலப்பதிகாரத்தின் புகழை முதல் பரப்பிய பெருமை ம. பொ. சியை சாரும். இக்காப்பியத்தின் மேல் கொண்ட ஆழ்ந்த காதலால் தன் மகள்களுக்கு கண்ணகி, மாதவி என பெயர் சூட்டினார். ரா. பி. சேதுப்பிள்ளை மூலம் 'சிலம்பு செல்வர்' என்னும் பட்டம் பெற்றார். சிலப்பதிகாரம் பற்றி ம. பொ. சி. எழுதிய நூல்கள்:

சிலப்பதிகாரமும் தமிழரும் [1947]
கண்ணகி வழிபாடு [1950]
இளங்கோவின் சிலம்பு [1953]
வீரக்கண்ணகி [1958]
நெஞ்சையள்ளும் சிலப்பதிகாரம் (உரை) [1961]
மாதவியின் மாண்பு [1968]
கோவலன் குற்றவாளியா? [1971]
சிலப்பதிகாரத் திறனாய்வு [1973]
சிலப்பதிகார யாத்திரை [1977]
சிலப்பதிகார ஆய்வுரை [1979]
சிலப்பதிகார உரையாசிரியர்கள் சிறப்பு [1980]
சிலப்பதிகாரத்தில் யாழும் இசையும் [1990]
சிலம்பில் ஈடுபட்டதெப்படி? [1994]
சிலப்பதிகார விழா[தொகு]
1950 ல் சென்னை இராயபேட்டை காங்கிரஸ் திடலில் ம.பொ.சியின் முயற்சியால் தமிழ் வரலாற்றில் முதன்முதலாக சிலப்பதிகார மாநாடு நடைப்பெற்றது.ரா.பி.சேதுப்பிள்ளை தொடங்கி வைக்க,டாக்டர் மு.வரதராசனார் தலைமை வகித்தார்.பெருந்தைலவர் காமராஜர் உட்பட அனைத்து கட்சி தமிழ் அறிஞர்களும் இதில் கலந்து கொண்டனர்.ம.பொ.சி எதிர்பார்த்ததை போல சிலப்பதிகார விழா மாபெரும் சர்வ கட்சி தமிழ் கலாச்சார விழாவாக மாறியது.அடுத்த ஆண்டு முதல், ம.பொ.சி தன் தமிழரசு கழகம் மூலம் சிலப்பதிகார விழாவை ஆண்டுதோறும் கொண்டாடினர். ம.பொ.சிக்குப் பின், அவர் மகள் ம.பொ.சி.மாதவி பாஸ்கர் தன் தந்தையின் பெயரில் தொடங்கிய அறக்கட்டளை சார்பாக சிலப்பதிகார விழாவை 2013 ஆம் ஆண்டு முதல் கொண்டாடத் தொடங்கினார்.

கப்பலோட்டிய தமிழன்[தொகு]
வ. உ. சிதம்பரனார் செய்த தியாகங்களை உலகறிய செய்தவர் ம.பொ.சி. வ.உ.சியின் வரலாற்றை பற்றி, ம.பொ.சி எழுதிய 'கப்பலோட்டிய தமிழன்' என்னும் நூல் பெருமை வாய்ந்தது. இதன் காரணமாக பின்னாளில் வ.உ.சி, 'கப்பலோட்டிய தமிழன்' என்றே தமிழ்நாடு முழுவதும் போற்றப்பட்டார். பி. ஆர். பந்துலு ம.பொ.சியின் நூலை தழுவி கப்பலோட்டிய தமிழன் என்னும் திரைப்படத்தை இயக்கினார். சிதம்பரனார் பற்றி ம.பொ.சி. எழுதிய நூல்கள்:

கப்பலோட்டிய தமிழன் [1944]
தளபதி சிதம்பரனார் [1950]
கப்பலோட்டிய சிதம்பரனார் (விரிவான பதிப்பு) [1972]
வ.உ.சி சிலைஅமைத்தல்[தொகு]
1939 ஆம் ஆண்டு சென்னை ஜில்லா காங்கிரஸ் கமிட்டியின் செயலாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டதும், வ.உ.சிதம்பரனாருக்கு சிலை வைக்க முயன்று அச்செலவிற்கு பணம் படைத்தோரின் உதவி நாடி அம்முயற்சி தோல்வியுற்றதால் மனம் வருந்தி, ஹாமில்டன் வாராவதியருகிலுள்ள கட்டைத் தொட்டிக் கடைக்காரர்களிடம் சென்று கடைக்கு ஒரு ரூபாய் இரண்டு ரூபாய் என்று கையேந்தி பணம் பெற்றும் டிராம்வே தொழிலாளர் சங்கம், ராயபுரம் அலுமினியம் தொழிலாளர் சங்கம் போன்ற பல்வேறு சங்கங்களின் உதவியோடும் சிலை வைத்ததாகக் குறிப்பிட்டுள்ளார். [1]

வீரபாண்டிய கட்டபொம்மன்[தொகு]
ம.பொ.சி எழுதிய வீரபாண்டிய கட்டபொம்மன் என்னும் வரலாற்று நூல், கட்டபொம்மனின் புகழை எங்கும் பரவ செய்தது. இந்நூலை தழுவி பி. ஆர். பந்துலு வீரபாண்டிய கட்டபொம்மன் என்னும் திரைப்படத்தை இயக்கினார். கட்டபொம்மன் பற்றி ம.பொ.சி. எழுதிய நூல்கள்:

வீரபாண்டிய கட்டபொம்மன் [1949]
கயத்தாற்றில் கட்டபொம்மன் [1950]
சுதந்திர வீரன் கட்டபொம்மன் [1950]
திருவள்ளுவர்[தொகு]
திருவள்ளுவர் பற்றி ம.பொ.சி எழுதிய நூல்கள்”

வள்ளுவர் வகுத்த வழி [1952]
திருவள்ளுவரும் காரல் மார்க்சும் [1960]
திருக்குறளில் கலை பற்றிக் கூறாத்தேன்? [1974]
இராமலிங்க அடிகள்[தொகு]
இராமலிங்க அடிகள் பற்றி ம.பொ.சி. எழுதிய நூல்கள்:

வள்ளலார் கண்ட ஒருமைப்பாடு [1963]
வள்ளலாரும் பாரதியும் [1965]
வள்ளலார் வளர்த்த தமிழ் [1966]
வள்ளலார் வகுத்த வழி [1970]
வள்ளலார் கண்ட சாகாக் கலை [1970]
வானொலியில் வள்ளலார் [1976]
வள்ளலாரும் காந்தியடகளும் [1977]
வள்ளலார் கண்ட ஒருமைப்பாடு (பள்ளிப் பதிப்பு) [1963]
ஆங்கில நூல்கள்[தொகு]
The Great Patriot V.O. Chidambaram Pillai
The First Patriot Veera Pandia Katta Bomman
The Universal Vision of Saint Ramalinga
இவர் நூற்றுக்கும் அதிகமான நூல்களை எழுதியுள்ளார்.

சிறப்புகள்[தொகு]

தமிழக அரசால் வைக்கப்பட்டுள்ள
ம. பொ. சி அவர்களின் திருவுருவச் சிலை
இடம்: செவாலிய சிவாஜி கணேசன் சாலை பாண்டி‍ பஜார் சாலை சந்திப்பில்
சிலம்புச் செல்வர்' என்ற விருது சொல்லின் செல்வர் ரா. பி. சேதுப்பிள்ளை அவர்களால் வழங்கப்பெற்றது.
சென்னை, மற்றும் அண்ணாமலைப் பல்கலைக் கழகங்கள் அவருக்கு டாக்டர் பட்டம் வழங்கி சிறப்பித்தன.
மதுரைப் பல்கலைக் கழகம் 'பேரவைச் செல்வர்' என்ற பட்டம் வழங்கியது.
மத்திய அரசு பத்மஸ்ரீ விருது தந்து போற்றியது.
தமிழக மேலவையின் தலைவராக பணியாற்றினார்.
'செங்கோல்' என்ற ஒரு வார இதழை நடத்தி வந்தார்.
தமிழ் முரசு என்ற இதழை நடத்தினார்.
சென்னை மாநகராட்சியில் ஆல்டர்மேன் மற்றும் கல்விக் குழுத் தலைவராக பணியாற்றினார்

International Day in Support of Torture Victims june 26





International Day in Support of Torture Victims june 26



சித்திரவதைக்கு ஆளானோருக்கான சர்வதேச ஆதரவு நாள் (International Day in Support of Torture Victims), என்பது உலகெங்கணும் உள, உடல் ரீதியாக பல்வேறு சித்திரவதைகளுக்கு ஆளானோருக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் ஐக்கிய நாடுகள் அவையினால் ஜூன் 26ம் நாளன்று கொண்டாடப்படும் ஒரு சிறப்பு நாளாகும்..ஜூன் 26 1987ஆம் ஆண்டில் ஐக்கிய நாடுகள் பொதுச்சபைக் கூட்டத்தில் சித்திரவதைக்கெதிரான தீர்மானம் எடுக்கப்பட்டது. மனித சமூகத்தின் அடிப்படை உரிமைகள் பாதுகாக்கப்படுவதன் மூலமே உலகில் விடுதலை, நீதி, மற்றும் அமைதி ஏற்பட வாய்ப்புண்டு என்பதை இத்தீர்மானம்

எடுத்துக்காட்டுகின்றது.இன்று உலகெங்கணும் ஐநா அவையின் ஆதரவில் 200க்கும் மேற்பட்ட மையங்கள் சித்திரவதைக்கு ஆளானோருக்கு சிகிச்சை அளிக்கின்றன

FRANCISCO PIZARRO WHO KILLED INCA KING ATAHUALPA LATER, ASSASINATED AT LIMA 1541 JUNE 26





FRANCISCO PIZARRO 
WHO KILLED INCA KING ATAHUALPA LATER
ASSASINATED AT LIMA 1541 JUNE 26


1533 இன்கா பேரரசை முடிவுக்குக் கொண்டு வந்த பிரான்சிஸ்கோ பிசாரோ 1541 june 26 லிமாவில் கொல்லப்பட்டான்.

பெரு நாட்டிலிருந்த இன்கா பேரரசினை வெற்றி கொண்ட துணிச்சல் மிகுந்த ஸ்பானிய வெற்றி வீரர் பிரான்சிஸ்கோ பிசாரோ ஆவார். இவர் ஸ்பெயின் நாட்டில் ட்ருஜிலோ என்னும் நகரில் 1475 ஆம் ஆண்டில் பிறந்தார். இவர் கல்வி கற்கவில்லை. பல வகையிலும் இவரை ஒத்த வாழ்க்கையை கொண்டிருந்த ஹெர்னாண்டோ கோர்ட்டே போலவே இவரும் புகழும் பொருளும் தேடிப் புதிய உலகுக்கு வந்தார்.

இன்று ஹைட்டியும், டொமினிக்கன் குடியரசும் அமைந்துள்ள கரீபியத் தீவாகிய ஹிஸ்பானி யோலாவில் இவர் 1502 முதல் 1509 வரை வாழ் ந்தார். 1513 ஆம் ஆண்டில் வாஸ்கோ நூனஸ் டி பால்போவா என்பவரின் தலைமையில் சென்று பசிபிக் பெருங்கடலைக் கண்டுபிடித்த நாடாய் வுக் குழுவில் வரும் ஓர் உறுப்பினராக இடம் பெற்றிருந்தார். 1519 ஆம் ஆண்டில் இவர் பனாமாவில் குடியமர்ந்தார். 1522 ஆம் ஆண்டில் பிசாரோ 47 வயதை எட்டியிருந்தபோது, இன்கா பேரரசுக்குச் சென்று வந்த பாஸ்குவல் டி ஆண்டகோயா என்ற ஸ்பானிய நாடாய்வா ளரிடமிருந்து அந்தப் பேரரசு பற்றி அறிந்தார்.

இதற்குச் சற்று முன்னர் மெக்சிகோவை ஹெர்னா ண்டோ கோர்ட்டே வெற்றி கொண்டதால், மன ஊக்கம் பெற்ற பிசாரோ, இன்கா பேரரசை வெற்றி கொள்ள முடிவு செய்தார். 1524-1525 ஆம் ஆண்டில் இவர் மேற்கொண்ட முயற்சி வெற்றி பெறவில்லை. இவருடைய இரு கப்பல்களும் பெருவைச் சென்றடை யாமலே திரும்பின. 1526-1528 இல் இவருடைய இரண்டாம் முயற்சியில், இவர் பெரு கடற்கரையை அடைந்தார். அங்கிருந்து, தங்கத்துடனும், இலாமா என்ற விலங்குக ளுடனும், சிவப்பிந்தியர்களுடனும் திரும்பினார்.

1528 ஆம் ஆண்டில் இவர் ஸ்பெயினுக்குத் திரும்பிச் சென்றார். அங்கு அடுத்த ஆண்டிலேயே, ஸ்பெயினு க்காகப் பெருவை வெற்றி கொள்வதற்கு ஐந்தாம் சார்லஸ் பேரரசர் பிசாரோவுக்கு அதிகாரம ளித்தார். அதற்கான நிதியையும் வழங்கினார். பிசாரோ பனாமாவுக்குத் திரும்பி தமது படையெடுப்புக்குரிய ஆயுதங்களைச் செய்யலானார்.

அவரது படையினர் 1531 ஆம் ஆண்டில் பிசாரோவின் 56 ஆம் வயதில் பனாமாவிலிருந்து கப்பலில் புறப்பட்டனர். அவர் திரட்டிய படையில் இருநூறுக்கும் குறைவான வீரர்களே இருந்தனர். ஆனால் அவர் வெற்றி கொள்ள முற்பட்ட பேரரசிலோ அறுபது இலட்சத்திற்கும் அதிகமான மக்கள் இருந்தனர்.

அடுத்த ஆண்டில் பிசாரோ, பெரு கடற்கரையை அடைந்தார். 1532 ஆம் ஆண்டில் தம்முடனிருந்த 177 வீரர்களுடனும், 62 குதிரைகளுடனும் இவர் அந்நாட்டின் உட்பகுதிக்குள் படை நடப்புச் செய்தார். பிசாரோ தமது சிறிய படைக்கு தலைமையேற்று ஆண்டிஸ் மலைவரை சென்று, காஜாமார்க்கா என்ற நகரை அடைந்தார். அங்கு இன்கா அரசன் அட்டாஹூவால்ப்பா 40,000 வீரர்கள் கொண்ட ஓர் இராணுவத்துடன் தங்கி யிருந்தான். பிசாரோவின் படை 1532 ஆம் ஆண்டு நவம்பர் 15 ஆம் நாளன்று காஜாமார்க்கா சேர்ந்தது. மறுநாள், பிசாரோவின் வேண்டுகோளுக்கிணங்கி, அட்டாஹூவால்ப்பா தமது படையின் பெரும்பகுதியை பின்தங்கியிருக்கும்படி விட்டு விட்டு, ஆயுதமற்ற 5,000 வீரர்கள் மட்டும் உடன்வர பிசாரோவுடன் பேச்சு நடத்துவதற்கு வந்தான்.

அட்டாஹூவால்ப்பாவின் இந்தச் செயல் புரியாத புதிராக இருக்கிறது. பெரு கடற்கரையில் ஸ்பானியர் தரையிரங்கியதிலிருந்தே, அவர்கள் தங்களுடைய பகையுணர்வையும், ஈவிரக்கமற்ற போக்கினையும் வெளிப்படையாகக் காட்டி வந்தார்கள். அப்படியிருக்க, பிசாரோவின் படைகள் காஜாமார்க்கா வரையில் தடையின்றி, முன்னேறி வருவதற்கு அட்டாஹூ வால்ப்பா ஏன் அனுமதித்தான் என்பது புரியவில்லை. பிசாரோவின் குதிரைகள் மலைச் சாலைகளில் பிசாரோவின் படைகளைச் சிவப்பிந்தியர்கள் தாக்கியிருப்பார்களானால், ஸ்பானியப் படைகளை அவர்கள் அடியோடு அழித்து விட்டிருக்கலாம்.

காஜாமார்க்காவுக்கு, பிசாரோ வந்த பிறகும் அட்டாஹூவால்ப்பா நடந்து கொண்ட விதம் அதை விட விசித்திரமாக இருந்தது. பகைமை பாராட்டும் ஓர் இராணுவத்திடம் ஆயுதம் ஏந்தாமல் நெருங்கிச் சென்றது நம்ப முடியாத முட்டாள்தனமாக இருந்தது. மறைந்திருந்து தாக்குவது இன்காக்களின் பழக்கமாக இருந்தது. அவ்வாறிருந்தும், அவர்கள் இவ்வாறு செய்தது புதிராக இருக்கிறது.

பிசாரோ நமக்குக் கிடைத்த பொன்னான வாய்ப்பை நழுவ விடவில்லை. அட்டாஹூவால்ப்பாவும், ஆயுதமற்ற அவனது வீரர்களும் அருகில் நெருங்கி யதுமே அவர்களை நெருங்கியதுமே அவர்களை தாக்கும்படி தமது வீரர்களுக்கு பிசாரோ ஆணை யிட்டார். அந்தப் போர் அதைப் படுகொலைக் கிளறி என்றே சொல்ல வேண்டும். அரை மணி நேரமே நீடித்தது. ஸ்பானிய வீரர்களில் ஒருவர்கூட கொல்லப்ப டவில்லை. ஒரேயொருவர் மட்டும் காயமடைந்தார். அவ்வாறு காயமடைந்து பிசாரோதான்.

அட்டாஹூவால்ப்பா காப்பாற்ற முயன்ற போது பிசாரோ இலேசாக காயமடைந்தார். அட்டாஹூ வால்ப்பாவை உயிரோடு பிடிக்க பிசாரோ விரும்பினார். அதில் அவர் வெற்றி கண்டார்.

பிசாரோவின் போர்த் தந்திரம் சிறிதும் தவறாமல் செயற்பட்டது. இன்கா பேரரசு பெரும்பாலும் மையம் நோக்கிய ஓர் ஆட்சியமைப்பாக இருந்தது. தெய்வமாகவே கருதப்பட்ட பேரரசிடமே அதிகாரங்கள் அனைத்தும் குவிக்கப்பட்டிருந்தது. பேரரசர் சிறைப்பி டிக்கப்பட்டதுமே ஸ்பானியப் படையெடுப்பை முறியடிக்க என்ன செய்வது என்று தெரியாமல் சிவப்பிந்தியர்கள் திகைத்து நின்றனர்.

அட்டாஹூவால்ப்பா தான் விடுவிக்கப்படுவோம் என்ற நம்பிக்கையில், பிசாரோவுக்கு ஏராளமான தங்கமும், வெள்ளியும் கொடுத்தான். இவற்றின் மதிப்பு 28 கோடி டாலருக்கு அதிகம். ஆனால், சில மாதங்களு க்குள்ளே யே அவனை பிசாரோ தூக்கிலிட்டுக் கொன்றார். 
அட்டாஹூவால்ப்பா கைது செய்யப்பட்டதற்கு ஓராண்டுக்குப் பிறகு, 1533 ஆம் ஆண்டு நவம்பரில், பிசாரோவின் படை வீரர்கள் இன்கா தலைநகர் குஸ்கோவிற்குள் போரிடாமலேயே நுழைந்தனர். அங்கு தமது கைப்பாவைகளாக இயங்க முன் வந்த ஒருவனை புதிய பேரரசனாகப் பிசாரோ நியமித்தார்.


1535 ஆம் ஆண்டில், லிமா என்ற நகரை பிசாரோ நிறுவினார். இது பெரு நாட்டின் புதிய தலைநகராகியது. எனினும், 1536 ஆம் ஆண்டில் பிசாரோவின் கைப்பா வையாக இருந்த பேரரசன் தப்பிச் சென்று ஸ்பானி யருக்கு எதிராகச் சிவப்பிந்தியர்களின் புரட்சியை நடத்தினான். சிறிது காலம் லிமாவிலும், குஸ்கோ விலும் ஸ்பானிய படைகள் முற்றுகை செய்யப்ப ட்டிருந்தன. ஆயினும், அடுத்த ஆண்டில், நாட்டின் பெரும் பகுதியை ஸ்பானியர்கள் எப்படியோ தங்கள் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்தனர். ஆனாலும், 1572 ஆம் ஆண்டு வரையிலும் இன்கா புரட்சி இறுதியாக ஒடுக்கப்படவில்லை. அதற்குள் பிசாரோவும் இறந்து விட்டார்.

ஸ்பானியர்கள் தங்களுக்குள்ளேயே சண்டையிடத் தொடங்கியதால், பிசாரோ வீழ்ச்சியுற நேர்ந்தது. பிசாரோவின் நெருங்கிய சகாவாக இருந்த டிகோ-டி ஆல்மாக்ரோ என்பவர், கொள்ளையிட்ட பொருளில் தமக்குரிய பங்கினைப் பிசாரோ தரவில்லை என்று கூறி பிசாரோவுக்கு எதிராகக் கிளர்ச்சி செய்தார். ஆல்மாக்ரோ சிறைப் பிடிக்கப்பட்டு தூக்கிலிடப்பட்டார். ஆனால், அத்துடன் கிளர்ச்சி முடிந்து விடவில்லை.

ஆல்மாக்ரோவின் ஆதரவாளர்கள் 1541 june 26ஆம் ஆண்டில், லிமாவிலிருந்த பிசாரோவின் அரண்மனை யைத் தாக்கி உள்ளே புகுந்து 66 வயதான பிசாரோவை கொன்றனர்.

@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@

குஸ்கோக நகருக்குள் பிசாரோ வெற்றிகரமாக நுழைந்த எட்டே ஆண்டுகளில் அவருக்கு இந்தக் கதி நேர்ந்தது. பிசாரோ, துணிச்சல் மிக்கவராகவும், மன உறுதி வாய்ந்தவராகவும், சூழ்ச்சி, தந்திரம் கொண்டவராகவும் விளங்கினார். அவர் ஆழ்ந்த சமயப்பற்று மிக்கவராகவும் இருந்தார். கொலையுண்டு இறக்கும் தறுவாயிலும் தம் உடலிலிருந்து வழிந்த இரத்தத்தால், தலையில் ஒரு சிலுவைக் குறியை அவர் வரைந்திருந்ததாகவும், கடைசியாக "இயேசுவே" என்ற சொல்லை முணுமுணுத்தவாறே அவர் உயிர் விட்டதாகவும் கூறுவர். ஆயினும் அவர் நம்ப இயலாத அளவுக்கு பேராசை கொண்டவராகவும், கொடூரமானவராகவும், புகழார்வம் கொண்டவராகவும், நம்பிக்கைத் துரோகம் செய்பவராகவும் இருந்தார். ஸ்பானிய வெற்றி வீரர்களிலேயே மிகவும் கொடுமையாக நடந்து கொண்டவர் பிசாரோ தான் எனலாம்.

ஆனால், பிசாரோவின் கொடூரக் குணம் அவருடைய இராணுவச் சாதனையின் பரிமாணத்தைத் திரை போட்டு மறைக்க அனுமதிக்கலாகாது. மிக அண்மையில், 1967 ஆம் ஆண்டில் மிக அதிக எண்ணிக்கையிலும், அதிகமான இராணுவச் சாதனங்களைக் கொண்டனவாகவும் இருந்த அரபு நாடுகளின் மீது இஸ்ரேலியர்கள் பெரும் வெற்றி கண்டபோது, பலர் வியப்படைந்தனர். அது ஒரு தனிச் சிறப்பு வாய்ந்த வெற்றியாகும். ஆனால், மிகப் பெரிய படைகளை எதிர்த்து மிகச் சிறிய இராணுவங்கள் பெற்ற வெற்றிகளுக்கு வரலாற்றில் நிறையச் சான்றுகள் உண்டு. நெப்போலியனும், மகா அலெக்சாந்தரும் பெரிய இராணுவங்களை எதிர்த்துப் பெரிய வெற்றிகள் பெற்றுள்ளனர். ஜெங்கிஸ்கானுக்குப் பின் வந்த மங்கோலியர்கள் தங்கள் நாட்டை விட குறைந்தது முப்பது மடங்கு பெரிதான சீனாவை வெற்றி கொண்டனர்.

எனினும், 60 இலட்சத்திற்கும் மேற்பட்ட மக்களைக் கொண்ட ஒரு பேரரசை, 180 வீரர்களை மட்டுமே கொண்ட ஒரு படையைக் கொண்டு வெற்றிக் கொள்வது என்பது வரலாற்றிலேயே மிகவும் மலைப்பூட்டும் ஓர் இராணுவச் சாதனையாகும். ஏறத்தாழ 60 இலட்சம் மக்களை கொண்ட ஒரு பேரரசின் மீது 600 வீரர்களை மட்டுமே கொண்ட ஒரு படையுடன் கோர்ட்டே படையெடுத்தார். அவருடைய படை வீரர்களின் எண்ணிக்கையைவிட பிசாரோ படையினரின் எண்ணிக்கை மிகக் குறைவு. அதே சமயம், கோர்ட்டே எதிர் நோக்கிய எதிரிகளின் எண்ணிக்கை அதிகம். பிசாரோவின் சாதனையை மகா அலெக்சாந்தரோ, ஜெங்கிஸ்கானோ செய்திருக்க முடியுமா? முடிந்திருக்காது என்றே கூறலாம். ஏனெனில் அத்துணை பேரளவு எண்ணிக்கையில் எதிரிகள் இருக்கும்போது, அவர்கள் மீது படையெடுக்க அவர்களில் எவரும் நினைத்துக்கூடப் பார்க்க மாட்டார்கள்.

"ஸ்பானியர்கள் சுடுபடைக்கலன்கள், அவர்களுக்கு எதிரிகளை திணற அடிக்கக்கூடிய அளவுக்கு மேம்பட்ட அனுகூலத்தை அளித்திருக்கலாம் அல்லவா?" என்று சிலர் கேட்கலாம். இதற்கு நிச்சயமாக இல்லை என்றே கூற வேண்டும். ஏனெனில், அப்போது பயன்படுத்தப்பட்ட துப்பாக்கிகள் பழம்பாணியில் இருந்தன. அவை எட்டும் தொலைவும மிகக் குறைவு. மேலும், அவற்றில் மீண்டும் வெடி மருந்து செலுத்துவதற்கு நீண்ட நேரம் பிடித்தது. அவற்றிலிருந்து திகிலுண்டாக்கும் அளவுக்குப் பெருத்த ஓசை எழுந்தபோதிலும், வில், அம்பை விட மிகக் குறைவான செயல் விளைவையே அவை கொண்டிருந்தன. அது மட்டுமின்றி, பிசாரோ காஜாமார்க்காவில் நுழைந்தபோது, அவருடைய வீரர்கள் மூவர் மட்டுமே துப்பாக்கி வைத்திருந்தனர்.

இருபது வீரர்களிடம் மட்டுமே வில்லும், அம்பும் இருந்தன. வாள், ஈட்டி போன்ற மரபு ஆயுதங்களா லேயே பெரும்பாலான சிவப்பிந்தியர்கள் கொல்லப்ப ட்டனர். ஸ்பானியர்களிடம் சில துப்பாக்கிகளும் இருந்தபோதிலும், இராணு நோக்கில் அளவுக்கு மீறிய பாதகங்களுக்கு மத்தியிலேயே அவர்கள் போரில் குதித்தார்கள் என்பது தெளிவு. ஸ்பானியர்கள் வெற்றி பெற்றதற்கு, ஆயுத பலத்தைவிட, திறமையான தலைமையும், மன உறுதியுமே தலையாய காரணங்களாகும். பாக்கியதேவதை பிசாரோவின் பக்கம் இருந்தாள் என்பது உண்மையே. அதே சமயம், "துணிச்சல் மிக்கவர்கள் பக்கமே பாக்கிய தேவதை இருப்பாள்" என்ற பழமொழியும் உண்டு.

பிசாரோ நெஞ்சுறுதி வாய்ந்த ஒரு கொள்ளைக்காரர் என்பதை தவிர, அவர் பெருமைக்குரியவர் அல்லர் என்று சில எழுத்தாளர்கள் கண்டித்துள்ளனர். ஆனால், கொள்ளைக்காரர் யாராவது வரலாற்றில் தனது முத்திரையைப் பதித்திருக்கிறார்களா? அவர் வீழ்த்திய பேரரசு இன்றுள்ள பெரு, ஈக்குவடார் நாடுகளையும், சிலி நாட்டின் வட பாதியையும், பொலீவியாவின் ஒரு பகுதியையும் உள்ளடக்கியிருக்கிறது. எஞ்சிய தென் அமெரிக்காவின் மொத்த மக்கள் தொகை அதிகம்.

பிசாரோவின் வெற்றி காரணமாக, அந்த மண்டலம் முழுவதிலும் ஸ்பெயின் நாட்டின் சமயமும், பண்பாடும் புகுத்தப்பட்டன. மேலும், இன்கா பேரரசின் வீழ்ச்சிக்குப் பிறகு, தென் அமெரிக்காவின் வேறெந்தப் பகுதியும் ஐரோப்பிய வெற்றியை வெற்றிகரமாக எதிர்க்கும் வாய்ப்பைப் பெறவில்லை. தென் அமெரிக்காவில் இன்றும் கோடிக்கணக்கான சிவப்பிந்தியர்கள் வாழ்கிறார்கள். ஆயினும், இந்தக் கண்டத்தின் பெரும்பாலான பகுதிகளில், சிவப்பந்தியர்களில் அரசியல் அதிகாரத்தை ஒருபோதும் மீண்டும் பெறவில்லை. அங்கு ஐரோப்பிய மொழியும், சமயமும் பண்பாடும்தான் ஆதிக்கம் பெற்றிருக்கின்றன.

கோர்ட்டே, பிசாரோ இருவரும் தனித்தனியே ஒரு சிறு படைக்குத் தலைமை தாங்கிச் சென்றனர். எனினும், அவர்கள் இருவரும் மிகக் குறுகிய காலத்தில் ஆஸ்டெக், இன்கா என்ற இரு பேரரசுகளையும் வீழ்த்துவதில் வெற்றி பெற்றனர். இதைக் கொண்டு, மெக்சிகோவையும், பெருவையும் ஐரோப்பியர்கள் வெற்றி கண்டது ஓர் தவிர்க்க முடியாத நிகழ்ச்சி எனச் சிலர் கருதுகின்றனர். உண்மையில், ஆஸ்டெக் பேரரசு தனது சுதந்திரத்தைப் பாதுகாத்துக் கொள்வதற்கு வாய்ப்பே இல்லாமலிருந்தது எனலாம். அது, மெக்சிகோ வளைகுடாவுக்கு மிக அருகில் இருந்தது.

கியூபாவிலிருந்து மிகக் குறுகிய நேரத்தில் அங்கு கப்பலில் சென்று விட முடிந்தது. இதனால், அது ஸ்பானியரின் தாக்குதலுக்கு மிக எளிதில் உள்ளாகக் கூடியதாக இருந்தது. கோர்ட்டேயின் சிறிய படையை ஆஸ்டெக்குகள் தோற்கடித்திருந்தாலுங்கூட, ஒரு பெரிய ஸ்பானியப் படை அங்கு அடுத்து படையெடுத்துச் சென்றிருக்கும்.

இதற்கு மாறாக, இன்கா பேரரசு அதிக தற்காப்பான சூழலில் அமைந்திருந்தது. அதன் எல்லையோரமிருந்த ஒரே கடல் பசிபிக் பெருங்கடல்தான். ஸ்பானியக் கப்பல்களுக்கு அட்லாண்டிக் பெருங்கடலை விட, பசிபிக் பெருங்கடலை அணுகுவது மிகுந்த கடினமாக இருந்தது. இன்கா பேரரசு பெரும்படையைப் பெற்றிருந்தது. அதில் மிகப் பெருமளவு மக்கள் வாழ்ந்தனர். அவர்கள் நன்கு ஒருங்கமைக்க ப்பட்டவர்களாக இருந்தனர். தவிரவும், பெருநாடு கரடுமுரடானதாகவும, மலைப்பாங்கானதாகவும் இருந்தது. உலகின் பல பகுதிகளில் மலைப்பாங்கான மண்டலங்களை வெற்றி கொள்வத, ஐரோப்பியக் குடியேற்ற ஆதிக்க வல்லரசுகளுக்கு மிகக் கடினமான காரியமாகவே இருந்திருக்கிறது. 19 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில்கூட 16 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் இருந்ததைவிட மிக முன்னேறிய சுடு படைக்கல ங்களை ஐரோப்பியர்க பயன்படுத்தியபோதும், எத்தியோப்பியாவை வெற்றி கொள்வதற்கு இத்தாலி மேற்கொண்ட முயற்சி வெற்றி பெறவில்லை. அதே போன்று, பிரிட்டிசார், இந்தியாவின் மலைப்பாங்கான கிழக்கு எல்லைப் பகுதியில் ஆதிகுடிகளிடம் எல்லையில்லாத் தொல்லைகளை அனுபவித்தனர்.

நேபாளம், ஆப்கானிஸ்தானம், ஈரான் போன்ற மலைப் பாங்கான நாடுகளில் குடியேற்ற ஆதிக்கத்தை ஏற்படுத்த ஐரோப்பியர்களால் இயலாமற் போயிற்று. பிசாரோவின் படையெடுப்பு தோல்விய டைந்திருந்த ஐரோப்பியர்கள் ஆயுதங்களையும், தந்திரங்களையும் ஓரளவுக்கேனும் அறிந்து கொள்வதற்கு இன்காக்களுக்கு வாய்ப்புக் கிடைத் திருக்குமானால், பின்னர் கணிசமான பெரிய ஐரோப்பிய படைகள் படையெடுத்து வந்திருந்தாலும், அவர்களை எதிர்த்துப் போரிடும் வல்லமையை அவர்கள் பெற்றிருப்பார்கள். சொல்லப் போனால், மிகச் சில துப்பாக்கிகளுடனும், பிசாரோவின் வெற்றிக்கு முன்னர் தாங்கள் திரட்டியிருக்கக்கூடிய படையில் ஒரு சிறிய பகுதியுடனும் சிவப்பிந்தியர்கள் 1536 ஆம் ஆண்டில் தொடங்கிய புரட்சியை அடக்குவதற்கு ஸ்பானியர்களுக்கு 35 ஆண்டுகள் பிடித்தன. பிசாரோ இல்லாதிருந்தாலும் இன்கா பேரரசை ஸ்பானியர்கள் வெற்றி கொண்டிருப்பார்கள் எனக்கூறலாம். ஆனால், அந்த வெற்றி நிச்சயமாக நிகழ்ந்திருக்கும் என உறுதியாகக் கூறுவதற்கில்லை.

இக்காரணங்களினாலேயே இந்தப் பட்டியலில் கோர்ட்டேக்குச் சற்றே முற்பட்டு பிசாரோவுக்கு இடமளிக்கப்பட்டிருக்கிறது. கோர்ட்டே வரலாற்றின் வேகத்தைத் துரிதப்படுத்தினார். ஆனால், பிசாரோ வரலாற்றின் போக்கையை மாற்றினார்





Spanish explorer and conquistador Francisco Pizarro helped Vasco Núñez de Balboa discover the Pacific Ocean, and after conquering Peru, founded its capital city, Lima.
Synopsis

Francisco Pizarro was born circa 1476 in Trujillo, Spain. In 1513, he joined Vasco Núñez de Balboa in his march to the "South Sea," during which Balboa discovered the Pacific Ocean. In 1532, Pizarro and his brothers conquered Peru. Three years later, Pizarro founded the nation's new capital, Lima. Pizarro was assassinated on June 26, 1541, in Lima, Peru, by vengeful members of an enemy faction of conquistadors.

Early Years
Conquistador Francisco Pizarro was born, an illegitimate child, circa 1476, in Trujillo, Spain—an area stricken by poverty. His father, Captain Gonzalo Pizarro, was a poor farmer. His mother, Francisca González, was of humble heritage. Pizarro grew up without learning how to read. Instead, he herded his father's pigs.

As young man, Pizarro heard tales of the New World and was seized by a lust for fortune and adventure. In 1510, he accompanied Spanish explorer Alonzo de Ojeda on a voyage to Urabá, Colombia. Although the expedition was unfruitful, Pizarro proved he could be relied on in a bind.



March to the Sea

In 1513, Pizarro joined conquistador Vasco Núñez de Balboa in his march to the "South Sea," across the Isthmus of Panama. During their journey, Balboa and Pizarro discovered what is now known as the Pacific Ocean, although Balboa allegedly spied it first, and was therefore credited with the ocean's first European discovery.

Ironically, Pizarro later arrested Balboa under the orders of Pedro Arias de Ávila (also known as Pedrarias), Balboa's rival and a known tyrant. Afterward, Pizarro stayed in Panama for a time, where he was awarded an estate, served as mayor of Panama City and amassed a small fortune.

Reconnaissance Voyages
In 1524, Pizarro teamed up with navigator Diego de Almagro and a priest named Fernando de Luque. The first of their reconnaissance voyages went as far as the San Juan River. The next gave Pizarro the chance to explore further south along the coast. In the meantime, Pizarro's chief navigator, Bartolomé Ruiz, forged across the equator and then returned with word of those regions south of the equator.


Conquering Peru

In 1528, Pizarro went back to Spain and managed to procure a commission from Emperor Charles V. Pizarro was to conquer the southern territory and establish a new Spanish province there. In 1532, accompanied by his brothers, Pizarro overthrew the Inca leader Atahualpa and conquered Peru. Three years later, he founded the new capital city of Lima.

Over time, tensions increasingly built up between the conquistadors who had originally conquered Peru and those who arrived later to stake some claim in the new Spanish province. As a result, conquistadors were torn into two factions—one run by Pizarro, and the other by his former associate, Diego Almagro. After taking Cuzco, Almagro engaged Pizarro and his brothers in the Battle of Las Salinas. Upon the Pizarro brothers' victory, in 1538, Hernando Pizarro captured and executed Almagro. On June 26, 1541, in Lima, Peru, members of the defeated party avenged Almagro's death by assassinating Francisco Pizarro.