Saturday 25 September 2021

FEROZ KHAN ,HINDI ACTOR BORN 1939 SEPTEMBER 25 - 2009 APRIL 27

 

FEROZ KHAN ,HINDI ACTOR BORN

1939 SEPTEMBER 25 - 2009 APRIL 27

ஃபெரோஸ் கான் (ஹிந்தி: फ़िरोज़ ख़ान, உருது: فېروز خان (செப்டம்பர் 25 , 1939- ஏப்ரல் 27, 2009) ஹிந்தி பட உலகில் ஒரு நடிகர், பட எடிட்டர், தயாரிப்பாளர் மற்றும் இயக்குனராக இருந்தவர். அவருடைய அதிரடி பாணி , அமெரிக்க கௌபாய் நடை மற்றும் புகை பிடிக்கும் பாங்கு போன்றவை வழக்கமான பாலிவுட் ஹீரோவின் போக்கை முற்றிலும் மாற்றி அமைத்தது. கிழக்கின் க்லின்ட் ஈஸ்ட்வுட் என்று அவர் அழைக்கப்பட்டார். சினிமா தொழிலின் நாகரிக நாயகனாக அவர் இருந்தார்.[4][5][6]



1970கள் மற்றும் 1980களில் அவர் 50க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் தோன்றினார். 1980ல் அவர் நடித்து இயக்கிய வெற்றிப் படமான குர்பானி அவருக்கு இந்தியாவின் மிக விரும்பப்பட்ட ஹீரோ என்ற பெயரைத் தந்தது. அத்தகைய சாதனயைத் தொடர்ந்த கான் மேலும் தயாவான் (1988) மற்றும் ஜன்பாஸ் (1986)[1][2] என்ற இரண்டு வெற்றிப் படங்களை இயக்கினார். 1970ஆம் ஆண்டு வெளிவந்த ஆத்மி அவுர் இன்சான் என்ற படத்திற்கான பிலிம்ஃபேரின் சிறந்த துணை நடிகர் விருதை வென்றார், மற்றும் 2000 ஆம் ஆண்டு பிலிம்ஃபேரின் வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டு கௌரவிக்கப்பட்டார்.




ஆரம்பகால வாழ்க்கை[தொகு]

ஃபெரோஸ் கான் இந்தியாவின் பெங்களூரில் ஷியா இஸ்லாமிய குடும்பத்தில் பிறந்தார். அவருடைய தந்தை சாடிக் அலி கான் தனொலி ஆப்கானிஸ்தானின்[4][5][6] காசணி மாகாணத்தை சேர்ந்த ஒரு ஆப்கானியர் ஆவார். அவர் தாயார் பாத்திமா ஈரானைச் சேர்ந்தவரவார். இவர் பெங்களூரில் உள்ள பிஷப் காட்டன் ஆண்கள் பள்ளி மற்றும் புனித கேர்மைன் ஆண்கள் மேனிலைப் பள்ளியில் படித்தார். சஞ்சய் கான், ஷாரூக் கான் (தொழிலதிபர்), சமீர் கான் மற்றும் அக்பர் கான் (இயக்குனர்) இவருடைய சகோதரர்கள் ஆவர். இவருக்கு தில்ஷாத் பிபி என்ற சகோதரி இருந்தார். பெங்களூரில் பள்ளி பருவம் முடிந்த பின் 1960 இல் மும்பை வந்த இவர் டிடி என்ற படத்தில் முக்கிய வேடத்தில் முதல் முறையாக தோன்றினார்.


தொழில் வாழ்க்கை[தொகு]

அடுத்த 5 வருடங்கள். இரண்டாம் தர வேடங்களில் நடிக்க நேர்ந்தது. 1960கள் மற்றும் 1970களின் தொடர்ந்த காலங்களில், குறைந்த பட்ஜெட் படங்களை பிரபலம் இல்லாத நடிகைகளை வைத்து தயாரித்தார். 1962 இல் டார்சன் கோஸ் டு இந்தியா என்ற ஆங்கில பெயரிடப்பட்ட படம் ஒன்றில் சிமி கறேவாளுடன் தோன்றினார். 1965இல் வெளி வந்த ப்ஹனி மஜும்தரின் ஊன்சே லோக் அவருடைய முதல் வெற்றி படமாக அமைந்தது.அதில் ராஜ் குமார் மற்றும் அசோக் குமார் போன்ற பிரபல நடிகர்களுக்கு எதிராக அவருடைய நடிப்பு கவனிக்கப்பட்டதாக அமைந்தது.[7] அதே வருடம் ஆர்சோ என்ற படத்தில் சாதநாவுடன் ஒரு தியாகம் செய்யும் காதலர் வேடத்தில் நடித்தார். இதன் மூலம் முதல் தர இரண்டாம் நிலை வேடங்களில்நடிக்கும் நடிகரானார். ஆத்மி அவுர் இன்சான் (1969) என்ற படம் மூலம் பிலிம்ஃபேரின் சிறந்த துணை நடிகர் விருதை வென்றார். தனது சகோதரர் சஞ்சய் கானுடன் சேர்ந்து உபாசனா ,(1967) மேலா (1971) மற்றும் நகின் (1976) போன்ற வெற்றிப் படங்களில் தோன்றினார்.


திரைப்பட துறையில் சிறந்து விளங்க 1971 ஆம் ஆண்டு ஒரு வெற்றிகரமான தயாரிப்பாளர் மற்றும் இயக்குனராக மாறினார். அபராத் என்ற திரைபடத்தை அவர் முதல்முறையாக இயக்கினார். ஜெர்மனியில் நடக்கும் கார் பந்தயம் காண்பிக்கப்படும் முதல் இந்திய படமாக அது அமைந்தது. அதில் மும்தாஸ் கதாநாயகியாக நடித்தார். 1975ஆம் ஆண்டு தர்மாத்மா என்ற திரைபடத்தை தயாரித்து, இயக்கி, நடித்து வெளியிட்டார். ஆப்கானிஸ்தானில் தயாரிக்கப்பட்ட முதல் இந்திய திரைப்படமாக அது அமைந்தது. மேலும் அவர் நடித்து, இயக்கி மற்றும் தயாரித்த முதல் மாபெரும் வெற்றி படமாக அமைந்தது. நடிகை ஹேமா மாலினி அப்படத்தில் ஒரு கவர்ச்சிகரமான வேடத்தில் தோன்றினார்.[8] ஹாலிவுட் திரைப்படம் காட்பாதரை மனதில் கொண்டு இப்படம் எடுக்கப்பட்டது.


1970களிலும், 1980களிலும் அவர் பாலிவூடின் முன்னணி நட்சத்திரமாக பல படங்களை இயக்கியும், நடித்தும் திகழ்ந்தார். பகத் தன்ன சாட் (1974) என்ற பஞ்சாபி திரைப்படத்திலும் அவர் நடித்தார். ஜீனத் அமன் உடன் நடித்து 1980இல் வெளி வந்த குர்பானி திரைப்படம் அவருடைய சினிமா வாழ்கையின் மிக பெரிய வெற்றி படமாக அமைந்தது. அத்திரைப்படம் பாகிஸ்தான் பாப் பாடகி நசியா ஹசனுக்கு பின்னணி பாடும் துறையில் ஒரு திருப்பு முனையாக அமைந்தது. அவருடைய ஆப் சைசா கோயி[7] என்ற பாடல் மிக பிரபலமானது. 1986இல் ஜான்பாஸ் என்ற மிக பெரிய வெற்றி படத்தை அவர் நடித்து இயக்கினார். சிறந்த நடிகர் குழுவை கொண்ட அப்படம் அவருடைய ஒரு மிகச் சிறந்த படமாக அமைந்தது .[9] அப்படம் சிறந்த பாடல்களையும், சிறந்த ஒளிபதிவையும் கொண்டிருந்தது. 1988ஆம் ஆண்டு அவர் தயாவான் என்ற படத்தை இயக்கி நடித்தார். தென்னிந்திய திரைப்படமான நாயகனின்மறு தயாரிப்பாக அது இருந்தது. யால்கார் (1992) என்ற படத்தை இயக்கி நடித்த பின், நடிப்பிலிருந்து 11 ஆண்டுகள் நீண்ட ஓய்வு எடுத்துகொண்டார்.


அவரின் மகன் ஃபார்டீன் கானின் சினிமா வாழ்க்கை பிரவேசம் 1998இல் வெளியான பிரேம் அக்கன் என்ற தோல்வி படம் மூலம் நிகழ்ந்தது. 2003 இல் வெளியான ஜனஷீன் படத்தை தயாரித்து இயக்கியதின் மூலம் அவர் திரை உலகத்தில் மறுபடியும் பிரவேசித்தார். அப்படத்தில் அவருடைய மகன் ஃபார்டீனும் நடித்தார். அவருடைய படங்களில் எப்போதும் விலங்குகளை நடிக்க வைத்தார். ஜனஷீன் படத்தில் ஒரு சிம்பன்சி மற்றும் சிங்கம் நடிக்க வைக்கப்பட்டது. ஆனால் பீபில் பார் அனிமல்ஸ் ஹரியானா[1] இயக்கத்தின் தலைவர் நரேஷ் கட்யன் அப்படத்தின் தயாரிப்பாளர், இயக்குனர் மற்றும் நடிகருக்கு எதிராக பாரிடபாத் நீதி மன்றத்தில் விலங்குகளுக்கு எதிராக கொடுமை புரிந்ததாக வழக்கு தொடர்ந்தார். அவருடைய மகனுடன் ஏக் கிலாடி ஏக் ஹசினா (2005) என்ற படத்தில் தோன்றிய இவரின் கடைசி படம் வெல்கம் (2007) என்ற திரைபடமாகும்.


ஃபெரோஸ் கான் தன்னுடைய ஒப்புயர்வற்ற பாணியால் அவர் காலத்தில் மற்ற அனைவரையும்விட முன்னிலை வகித்தார். அது அவருடைய திரைப்படங்களிலும், பாடல்களிலும் பிரதிபலித்தது. அவருடைய குர்பானி, தர்மாத்மா போன்ற ஹிந்தி திரைப்படங்கள் காலத்தால் அழியாதவையாகும். அவர் ஒரு சூப்பர் ஸ்டாராக கருதப்படாவிட்டாலும் பல வருடங்கள் அவர் புகழ் பெற்று சிரஞ்சீவியாக விளங்கினார்.


2006 ஆம் ஆண்டு மே மாதம், ஃபெரோஸ் கான் தனது சகோதரரின் திரைப்படமான தாஜ் மஹால் படத்தை ஆதரிக்க வேண்டி பாகிஸ்தான் சென்றார். அப்போது பாகிஸ்தான் ஜனாதிபதி பெர்வேஸ் முஷாரப் அவரை இருட்டடிப்பு செய்தார். அங்கு சென்றபோது அவர் குடித்துவிட்டு பாகிஸ்தான் பாடகர் மற்றும் செய்தியாளர் பாக்ஹ்ர்-ஏ-ஆழம் என்பவரை அவமதித்தார் மற்றும் பாகிஸ்தானை பற்றி அவதுறாக பேசினார் என்று பாகிஸ்தான் உளவு துறை முஷாரப்புக்கு தகவல் கொடுத்திருந்தது. அத்தகவல் கீழ்க்கண்டாவாறு இருந்தது :


"நான் ஒரு கர்வமுள்ள இந்தியன். இந்தியா ஒரு மதச் சார்பற்ற நாடு. பாகிஸ்தான் போல் இல்லாமல் இங்குள்ள இஸ்லாமியர்கள் முன்னேற்றம் அடைந்து கொண்டிருகிறார்கள். நமது ஜனாதிபதி ஒரு இஸ்லாமியர் மற்றும் நமது பிரதமர் ஒரு சீக்கியர் ஆவார். பாகிஸ்தான் இஸ்லாமின் பேரில் உருவாக்கப்பட்டது. ஆனால் இங்கு "இஸ்லாமியர்களே மற்ற இஸ்லாமியர்களைக் கொல்வதைப் பார்க்க முடியும்"


இவை அனைத்தையும் ஃபெரோஸ் கான் மறுதினம் மறுத்தார்.


இந்தியாவில் உள்ள பாகிஸ்தான் ஹை கமிஷன், வெளியுறவு மற்றும் உள்துறை அமைச்சகங்கள் அவருக்கு எதிர்காலத்தில் விசா அளிக்க மறுத்தது.[10]


சொந்த வாழ்க்கை[தொகு]

பெரோஸ் கானுக்கு ஃபார்டீன் கான் என்ற மகன் இருந்தார், இவர் பாலிவுட்டின் முன்னாள் நடிகையான மும்தாஸ் அவர்களின் மகள் நடாஷா கான்யை மணந்துள்ளார். இவருக்கு லைலா கான் என்ற மகள் இருக்கிறாள்[3]இவர் ஃபார்ஹான் ஃபர்னிச்சர்வாலா என்பவரை திருமணம் செய்து கொண்டார். லைலா, ரோஹித் ராஜ்பால் என்ற தேசிய நிலை டென்னிஸ் விளையாட்டு வீரரை மணந்து பின்னர் விவாகரத்து செய்தார். பின்னர் 2010 -இல் ஃபர்னிச்சர்வாலாவை மணந்து கொண்டார்.


விருதுகள் மற்றும் பரிந்துரைகள்

பிலிம்ஃபேர் சிறந்த புதுமுகம் விருது:டிடி (1960)

பிலிம்ஃபேர் சிறந்த துணை நடிகர் விருது ஆத்மி அவுர் இன்சான்(1970)

பிலிம்ஃபேர்சிறந்த துணை நடிகருக்கான பரிந்துரை இன்டர்நேஷனல் க்றுக்(1974)

பிலிம்ஃபேர் வாழ்நாள் சாதனையாளர் விருது, 2001

பிலிம்ஃபேர்சிறந்த வில்லன் பரிந்துரை ஜனஷீன் திரைப்படம்,(2003)[11]

ஜீ சினி விருது வாழ்நாள் சாதனையாளர்,2008

'தொழிலின் பெருமை' என்ற மாக்ஸ் ஸ்டார்டஸ்ட் விருது,2009[12][13]

பட பட்டியல்

டிடி (1960)

மெயின் சாதி கரனே சலா (1962)

டார்சன் கோஸ் டு இந்தியா (1962) ... பிரின்ஸ் ரகு குமார்

பஹுராணி (1963) ... விக்ரம்

சுஹாகண் (1964) ... ஷங்கர்

சார் தேர்வேஷ் (1964) ... கமர் பக்த்

தீஸ்ரா கவுன் (1965)

ஊன்சே லோக் (1965) ... ரஜினிகாந்த்

ஏக் சபேரா ஏக் லூதெரா (1965) ... மோகன்/விஜய் பிரதாப் சிங்

ஆர்ஷூ (1965) ... ரமேஷ்

தஸ்வீர் (1966)

மெயின் வோஹி ஹூன் (1966) ... விஜய்

ஒஹ் கோயி அவுர் ஹோகா (1967)

ராத் அவுர் தின் (1967) ... திலிப்

சி ஐ டி 909 (1967)

அவுரத் (1967)

ஆக் (1967) ... ஷன்கர்

ப்யாசி சாம் (1969) ... அசோக்

ஆத்மி அவுர் இன்சான் (1969) ... ஜெய் கிஷன் ஜே கே

சபார் (1970) ... சேகர் கபூர்

மேலா (1971)

ஏக் பஹேலி (1971) ... சுதிர்

உபாசனா (1971)

அபராத் (1972) ... ராம் கானா

கஷ்மகாஷ் (1973)

கிஸான் அவுர் பகவான் (1974)

கஹஹோட்டே சிக்கி (1974) ... குதிரை ஓட்டி

கீதா மேரா நாம் (1974)

பகத் தன்ன சாட் (1974) ... ராமு

அஞ்சான் ராஹேன் (1974) ... ஆனந்த்

இன்டர்நேஷனல் க்ரூக் (1974) ... SP ராஜேஷ்

ராணி அவுர் லல்பரி (1975) ... குலிவேர்

கால சோனா (1975) ... ராகேஷ்

ஆ ஜா சனம் (1975) ... Dr. சதீஸ்

தர்மாத்மா (1975) .... ரன்பீர்

ஷராபாத் சோத் டி மைனே (1976)

கபிலா (1976)

நகின் (1976) ... ராஜ்

ஜாது தோனா (1977) ... Dr. கைலாஷ்

தரிந்தா (1977)

சுனொதி (1980)

குர்பானி (1980) ... ராஜேஷ் குமார் / கைலாஷ் நாத்

' க்ஹூன் அவுர் பாணி /0} (1981)

கச்சே ஹீரே (1982) ... கமல் சிங்க்கின் மருமகன்

ஜான்பாஸ் (1986) ... இன்ஸ்பெக்டர் ராஜேஷ் சிங்

தயாவான் (1988) ... ஷங்கர் வாக்மரே

மீட் மேரே மன் கா (1991)

யால்கார் (1992) ... ராஜேஷ் அஷ்வினி குமார்

பிரேம் ஆகன் (1998) ...

' ஜனஷீன்(/0} (2003) ... சபா கரீம் ஷா

சித்தப்பா (2005) ... ராமன்

ஏக் கிலாடி ஏக் ஹசீனா (2005) ... ஜெஹன்கிர் கான் (சிறப்பு தோற்றம்)

ஓம் சாந்தி ஓம் (2007) ... அவராக (சிறப்பு தோற்றம்)

வெல்கம் (2007) ... ரன்பீர் தன்ராஜ் சட்டா (RDX)

இறப்பு மற்றும் இறுதி ஊர்வலம்

2009 ஏப்ரல் மாதம் புற்றுநோய்க்கு அவர் பலியானார். அவர் நோய்வாய்பட்டிருந்தபோது பெங்களூரில் உள்ள அவரது பண்ணை வீட்டிற்கு திருமபினார்.


அவர் மிக விரும்பிய பெங்களூர், ஓசூர் ரோடு, ஷியா கபரிஸ்தானில் தனது தாயாரின் சமாதி அருகே அவரது உடல் அடக்கம் செய்யப்பட்டது. திரை உலகின் பிரபலங்கள், நெருங்கிய நண்பர்கள், உறவினர்கள் உள்பட ஆயிரக்கணக்கானோர் அவரது இறுதி ஊர்வலத்தில் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர். நிஜ வாழ்க்கையை விட பெரிதான அவரது வாழ்க்கை முறைக்காகவும் மற்றும் சினிமாவில் அவரது திறமைக்காகவும் அவர் நினைவுகொள்ளபட்டார்.[2][22]



Whenever we think of retro Hindi films with foot-tapping music, bikini-clad heroines, stylish heroes, and fast car chases we instantly remember Feroz Khan. The flamboyant Khan's movies used to have a high tint of Western culture and style. Be it the exotic international locations or car racing scenes in ‘Apradh’(1972), the Indian version of ‘The Godfather’(1972) in ‘Dharmatma’(1975) (shot in Afghanistan), the very stylish ‘Qurbani’(1980) or the whole cowboy setup in ‘Jaanbaaz’(1986), this Khan was always ahead of his times. Feroz Khan was in the gossip columns for several reasons but one of the very controversial ones was the extra martial affair and a live-in relationship with Jyotika.


Right from his bachelorhood days Feroz Khan was branded as a womanizer. Things changed when this casanova met Sundari. It was love at first sight for these two and after a while Feroz and Sundari became the talk of the town. After dating for around five years, they decided to get married in the year 1965. After a few years of marriage, they were blessed with a daughter Laila and son, Fardeen. As time passed, Feroz got busy with his work and Sundari got busy with home and the kids. Like in most marriages, the romance took a back when Feroz strayed.


Feroz met a very attractive air hostess, Jyotika Dhanrajgir from the famous Dhanrajgir family and fell madly in love with her. When Sundari got wind of this affair, she decided to end their marriage. Feroz however, surprised everyone when he moved to Bangalore with Jyotika and began a live-in relationship with her. Feroz and Jyotika tryst with love continued for more than a decade. While Jyotika pressed Feroz to marry her, the handsome star was not too keen to take the plunge. Finally, Jyotika decided to move out of this relationship as she was fed up of Feroz’s fake assurances. In a shocking interview, Feroz denied even knowing Jyotika. This interview shattered Jyotika’s dreams and she left him for good and settled in London.





Feroz was heartbroken when Jyotika left him. Sundari on the other hand, started her own business and was doing well for herself. Feroz was always a friend to her and a dear father to his children. Sundari's new found confidence and independence helped in developing a mature friendship between her and Feroz. Feroz began bonding more with his family. He also realized that Sundari was the only woman who really understood him. Gradually, Feroz came back to Sundari and his estranged kids but the relationship with was never quite the same again, quite understandably. He lived separately under the same roof and started focusing on his work.


The style icon breathed his last on April 27, 2009 in his Bangalore home.Fun Facts -


Sundari had a daughter named Sonia from her previous relationship. Feroz and Sundari decided to keep this as a secret from the media at the time of their marriage. Later Sonia used to work as the continuity in-charge in many of Feroz’ films like ‘Qurbani’ (1980). She used be credited on screen as Sony Shahani. Sonia got married to the world famous business man, Rajendra Sethia.


Feroz and Sundari’s daughter Laila Khan was born in 1970 & son Fardeen Khan was born in 1974.





Feroz was very fond of Mumu (Mumtaaz). They shared a great rapport on the sets and were friends. Later, Feroz’s son Fardeen got married to Mumtaaz’s daughter Natasha Madhwani.


Daughter Laila Khan got married to Farhan Furniturewala. Farhan is the former husband of Pooja Bedi.


Jyotika’s sister Sabrina Dhanrajgir, was the costume designer in Feroz Khan directed film Yalgaar (1992).


COMMENTS


 Sundari and Feroze lived in the same house on two different floors. They never reconciled, and never spoke to each other. She was and is a very strong woman. But just from these pictures,

 Feroze definitely had a type. 


Feroz and sundri hated each other and there was no friendship. They lived in the same building becoz she had no where to go and lived with fardeen. Mumtaz had an affair for many years with feroze but I guess thats normal in bollywood.


Fardeen Khan is having an affair with Rekha Tourani who lives in Dubai.


Feroze was never faithful , this was the last straw. Sundari ket telling him to sort himself out or she'll leave him. He thought these were empty threats as she had no way of supporting herself. He was shocked when she did finally walk out of the marriage . I'm sure it must have been difficult for the lady but I have immense respect for her refusal to put up with a sham of a marriage.


Every Friday, there's a new story about a yesteryear star two timing his wife and kids, starting a life with his mistress and then ending that too to go back to his wife. Poor wives had to put up with this and take these cheating ass men back. SAD




S.W.R.D. PANDARA NAYAKKA BORN 1899 JANUARY 8 - 1956 SEPTEMBER 26

 


S.W.R.D. PANDARA NAYAKKA BORN 1899 JANUARY 8 - 1956 SEPTEMBER 26 


செப்டம்பர் 26: அமரர் பண்டாரநாயக்க நினைவு தினம்



ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஸ்தாபக தலைவரும் முன்னாள் பிரதமருமான எஸ். டபிள்யூ.ஆர்.டி. பண்டாரநாயக்காவின் 61 வது நினைவு தினம் செப்டம்பர் இருபத்தாறாகும். இலங்கை வரலாற்றில் இருபதாம் நூற்றாண்டின் முன்னரைப் பகுதியில் தனித்துவமிக்க அரசியல் தலைவராக விளங்கியவர் அமரர் எஸ்.டபிள்யூ.ஆர்.டி. பண்டாரநாயக்க ஆவார். இவர் நாட்டின் சமூக, கலாசார, பொருளாதார மற்றும் அரசியல் துறைகளின் மறுமலர்ச்சிக்கு அளித்துள்ள பங்களிப்புக்கள் அழியாத் தடம் பதித்திருக்கின்றன.


அவர் மறைந்து ஆறு தசாப்தமாகியுள்ள போதும், இன்றும் நினைவு கூரப்படுகிறார்.


அமரர் பண்டாரநாயக்க 1899 ஜனவரி 8 ஆம் திகதி ஹொரகொல்லவில் பிறந்தார். செல்வச் செழிப்புமிக்க மகாமுதலி சேர் சொலமன் டயஸ் பண்டாரநாயக்கவுக்கும், டெஸி எஸிலின் ஒபேசேகரவுக்கும் மகனாக அவர் பிறந்தார்.


கல்கிசை சென். தோமஸ் கல்லூரியில் இரு மொழி கல்வி பெற்றார். இக்கல்வியை பூர்த்தி செய்த பண்டாரநாயக்க, 1919 இல் இங்கிலாந்து சென்று ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் இணைந்து சட்டத் துறையில் உயர் கல்வியைத் தொடர்ந்தார். பல்கலைக்கழக காலத்தில் அவர் ஏனைய துறைகளிலும் தமது திறமைகளை வெளிப்படுத்தினார்.


ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் சட்டத்துறையில் கற்ற பண்டாரநாயக்க பரிஸ்டர் பட்டத்தை பெற்று 1925 பெப்ரவரி 27 ஆம் திகதி தாயகம் திரும்பினார். தனக்கு அளிக்கப்பட்ட வரவேற்பின் போது உரையாற்றிய பண்டாரநாயக்க, தமது நாடு காலனியாதிக்கத்துக்கு உட்பட்டிருப்பதால் மக்களும் நாடும் அனுபவிக்கும் வேதனையை சுட்டிக்காட்டியதோடு அவற்றிலிருந்து விடுதலை பெறுவதற்கான முக்கியத்துவத்தை எடுத்துக் கூறினார்.


‘நாட்டுக்காக அரசியலைத் தெரிவு செய்ய மக்கள் விரும்புவார்களாயின் தாம் மக்களை ஆளும் ஆட்சியாளனாகவன்றி மக்கள் சேவகனாக கடமையாற்ற தயாராக உள்ளேன்’ என்றார்.இந்நாட்டை பிரித்தானிய காலனித்துவத்திலிருந்து விடுவிப்பதற்கான வழிமுறைகள் குறித்தும் அவர் சிந்திக்கத் தொடங்கினார். இதற்கென மக்கள் மத்தியில் தேசிய சிந்தனையை கட்டியெழுப்புவதன் அவசியத்தையும் உணர்ந்து அன்றைய காலகட்டத்தில் செயற்பாட்டிலிருந்த இலங்கை தேசிய சங்கத்திலும் அவர் இணைந்து தீவிரமாக செயற்படலானார்.


1926 டிசம்பர் 14ஆம் திகதி கொழும்பு மாநகரசபைக்கு நடைபெற்ற தேர்தலில் மருதானை வட்டாரத்தில் இவர் போட்டியிட, இவருக்கு எதிராக தொழிற்சங்கத் தலைவர் ஈ. ஏ. குணசிங்க தேர்தலில் களமிறங்கினார். 615 மேலதிக வாக்குகளால் குணசிங்கவை தோற்கடித்து இவர் மாநகர சபை உறுப்பினரானார். அதனூடாக நேரடி அரசியலில் பிரவேசித்த இவர், மக்கள் சேவகனாக மாறினார். மாநகர சபை உறுப்பினராக பதவி வகித்த காலத்தில் மக்கள் சேவைக்கு அளித்த முன்னுரிமை காரணமாக மக்களின் விருப்பத்திற்குரிய தலைவராக மாறினார் பண்டாரநாயக்கா.


இவ்வாறான சூழலில் 1931 மே 04 ஆம் திகதி நடைபெற்ற தேர்தலில் வெயாங்கொட தொகுதியில் போட்டியிட்டு அரச பிரதிநிதிகள் சபைக்கு இவர் தெரிவானார். அதனைத் தொடர்ந்து அரசியலின் ஊடாக நாட்டினும் மக்களினும் சுபீட்சத்திற்காகவும் சுதந்திரத்திற்காகவும் தொடர்ந்து உழைக்கலானார்.


இவர் 1940 ஒக்டோபர் 03 ஆம் திகதி ஸ்ரீமாவோ பண்டாரநாயக்கவை திருமணம் செய்து குடும்ப வாழ்வில் பிரவேசித்தார். அதனூடாக இவருக்கு இரண்டு பெண் குழந்தைகளும் ஒரு ஆண் குழந்தையும் கிடைக்கப் பெற்றனர். இவர்களில் சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க பிற்காலத்தில் இந்நாட்டின் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக மக்களால் தெரிவு செய்யப்பட்டார். அநுர பண்டாரநாயக்க பிற்காலத்தில் இந்நாட்டின் சபாநாயகரானார். சுனேத்ரா பண்டாரநாயக்க இந்நாட்டின் முன்னணி சமூக செயற்பாட்டாளராக விளங்குகிறார்.


பண்டாரநாயக்க ‘எனக்கு முதல் நாடு’ என்ற எண்ணக்கருவை இந்நாட்டுக்கு அறிமுகப்படுத்தினார். இந்த நிலையில் 1945 ஜனவரி 19ஆம் திகதியன்று ‘சுதந்திர இலங்கைச் சட்டத்தை அவர் அரச பேரவைக்கு கொண்டுவந்தார். அது தனித்துவமிக்க சுயாதீனமான இலங்கைக்கான முதலாவது ஆவணமாகும். இந்த ஆவணம் இந்நாட்டு சுதந்திரத்தின் தேவையையும் தனித்துவத்தையும் எடுத்துக்காட்டக் கூடியதாக விளங்கியது. பிரித்தானியர் அச்சட்டத்திற்காக இலங்கைக்கு உடனடியாக சுதந்திரத்தை வழங்க முன்வரவில்லை. ஆனாலும் நாலாண்டுகள் கடந்த நிலையில் 1948 பெப்ரவரி 04 ஆம் திகதி இந்நாட்டுக்கு சுதந்திரம் வழங்கினர். அது டொமினியன் அந்தஸ்து கொண்ட சுதந்திரமாகவே இருந்தது.


சுதந்திர இலங்கையின் முதலாவது பிரதமராக டி. எஸ் சேனநாயக்க பதவியேற்றார். அவர் தலைமையிலான அரசாங்கத்தில் இவர் சுகாதாரம் மற்றும் உள்ளூராட்சி அமைச்சராக பதவியேற்றார். இந்நாட்டுக்கு வழங்கப்பட்ட சுதந்திரத்தை பண்டாரநாயக்க விமர்சனக் கண்கொண்டுதான் நோக்கினார். இது தொடர்பில் அவர் ‘பெளதீக ரீதியில் நாடு பெற்றுக் கொண்ட பேரளவிலான சுதந்திரம்’ என்று அடிக்கடி கூறலானார்.


Founders S.W.R.D.Bandaranaike and D.A.Rajapaksa

S.W.R.D.Bandaranaike and D.A.Rajapaksa

நாட்டின் சுதந்திரம், தனித்துவம் தொடர்பில் கொண்டிருந்த பார்வையின் அடிப்படையில் டி.எஸ். சேனநாயக்கவின் அரசிலிருந்து 1951 ஜுலை 12 ஆம் திகதி பண்டாரநாயக்க வெளியேறி எதிரணிக்கு சென்றார். அவருடன் அமரர் டி.ஏ. ராஜபக்‌ஷவும் இணைந்து சென்றார். அதன் பின்னர் மேலும் சிலர் எதிரணிக்கு சென்றனர்.


இவர்கள் ஒன்றிணைந்து 1951 செப்டம்பர் முதலாம் திகதி கண்டியில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அமைப்பதற்கான நடவடிக்கைகளை ஆரம்பித்தனர். அவர்களுடன் கலாநிதி பதியுதீன் மஹ்மூத், எஸ். தங்கராசா, ரி.பி இலங்கரத்ன உள்ளிட்ட மேலும் பல முக்கியஸ்தர்கள் அன்று இணைந்து கொண்டனர். அங்கு கட்சிக்கான ஆட்சேர்ப்பும் இடம்பெற்றது.


மறுநாளான 1951 செப்டம்பர் 02 ஆம் திகதி கொழும்பு புதிய நகர மண்டபத்தில் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது. இக்கட்சியை நாடெங்கிலும் மக்கள் மத்தியில் பரவலாக்குவதற்காக பண்டாரநாயக்கவும் அவரது தோழர்களும் இரவு பகல் பாராது அயராது உழைத்தனர். இதன் பயனாக கட்சி அமைக்கப்பட்ட ஒரு வருட காலப்பகுதிக்குள் நடைபெற்ற பொதுத்தேர்தலில் போட்டியிட்டு முதன் முறையாக 08 ஆசனங்களை வென்றெடுத்தது ஸ்ரீ.லசு.க. அவர்களில் பண்டாரநாயக்கவும், டி.ஏ ராஜபக்‌ஷவும் அடங்கியிருந்தனர். அந்த 8 ஆசனங்களையும் கொண்டு எதிர்க்கட்சி அரசியலினூடாக நாட்டுக்கும் நாட்டு மக்களுக்கும் ஸ்ரீ.ல.சுதந்திர கட்சி ஆற்றிய சேவைகளின் பயனாக சொற்ப காலத்தில் ஆட்சிபீடமேறும் கட்சியென்ற அந்தஸ்தை அக்கட்சி பெற்றுக் கொண்டது.


1956 ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத்தேர்தலில் ஸ்ரீல.சு.கட்சி தலைமையிலான கூட்டணி வெற்றிபெற்று ஆட்சிபீடமேறியதோடு இந்நாட்டின் மூன்றாவது பிரதமராக எஸ். டபிள்யூ. ஆர். டி. பண்டாரநாயக்க பதவியேற்றார். அந்த அரசாங்கத்தில் டி.ஏ. ராஜபக்‌ஷ நிலங்கள் மற்றும் நில மேம்பாட்டு அமைச்சின் நாடாளுமன்ற செயலாளராக நியமிக்கப்பட்டார். பண்டாரநாயக்க தலைமையிலான அரசாங்கம் பதவிக்கு வந்ததும் கட்டுநாயக்க விமான நிலையம் மற்றும் திருகோணமலை சீனக்குடாவில் விமானப்படை முகாம்களை அகற்றியதோடு அங்கு பறந்து கொண்டிருந்த பிரித்தானியகொடிகளை இறக்கி, இந்நாட்டின் சிங்கக் கொடியைப் பறக்க விட்டார்.


மேலும் இவர் சிங்கள மட்டும் சட்டத்தை நாட்டுக்கு அறிமுகப்படுத்தினார். தமிழ் பேசும் மக்களின் தேவைகளையும் அபிலாஷைகளையும் யதார்த்தபூர்வமாக உணர்ந்து தமிழரசுக் கட்சி தலைவர் எஸ்.ஜே.வி. செல்வநாயகத்துடன் 1957 ஜுலை 26 ஆம் திகதியன்று உடன்படிக்கை செய்து கொண்டார்.


சிங்களம் மட்டும் சட்டத்தினால் ஏற்படும் விளைவுகளை தவிர்ப்பதற்காக தமிழ்மொழி விஷேட ஏற்பாடுகள் சட்டத்தையும் நிறைவேற்றினார். துறைமுகங்களையும் விமான நிலையங்களையும் பஸ் போக்குவரத்தையும் அரசு​ைடமையாக்கினார். தொழிலாளர்களின் நலன் கருதி ஊழியர் சேமலாப நிதியத்தை ஆரம்பித்தார். மே தினத்தை பொதுவிடுமுறை தினமாக்கினார். நாட்டின் நலன்களை முன்னிறுத்தி அணிசேராக் கொள்கையை முன்னெடுத்தார். அத்தோடு ரஷ்யாவுடனும் சீனாவுடனும் இராஜதந்திர உறவுகளையும் ஆரம்பித்தார். அமரர் செல்வநாயகத்துடன் செய்து கொண்ட உடன்படிக்கையைத் தொடர்ந்து தென்பகுதியில் ஏற்பட்ட எதிர்ப்புகளுக்கும் ஆட்சேபனைகளுக்கும் இவர் துணிகரமாக முகங்கொடுத்து வந்தார். ஆனபோதிலும் அந்த உடன்படிக்கையிலிருந்து பின்வாங்க வேண்டிய நிலை அவருக்கு இறுதியில் ஏற்பட்டது. என்றாலும் அவர் மக்கள் சேவைக்கு முன்னுரிமை தொடர்ந்தும் செயற்பட்டு வந்தார்.


இவ்வாறான சூழலில் 25.09.1959 அன்று பிரதமரின் கொழும்பு -7 லுள்ள ரொஷ்மிட் பி​ளேஸ் இல்லத்திற்கு வந்த தல்துவே சோமராம தேரர் எவரும் எதிர்பாராத நிலையில் பிரதமர் மீது துப்பாக்கி பிரயோகம் செய்தார். அதனால் படுகாயமடைந்த பண்டாரநாயக்காவுக்கு கொழும்பு வைத்தியசாலையில் ஆறு மணித்தியாலய சத்திரசிகிச்சை அளிக்கப்பட்டது. அச்சிகிச்சை பலனளிக்காத நிலையில் 1959 செப்டம்பர் 26ஆம் திகதி பண்டாரநாயக்கா உயிரிழந்தார். தல்துவே சோமராம தேரரின் ரவைகள் பண்டாரநாயக்கவை மௌனிக்கச் செய்த போதிலும் அவர் நாட்டுக்கும் மக்களுக்கும் ஆற்றிய சேவைகள் என்றும் அழியா தடம்பதித்தவையாக இடம்பிடித்து விட்டன. முன்மாதிரி மிக்க அரசியல் தலைவராக அவரை அடையாளப்படுத்தியுள்ளது.

எஸ். டபிள்யூ. ஆர். டி. பண்டாரநாயக்கா 


சொலமன் வெஸ்ட் ரிட்ச்வே டயஸ் பண்டாரநாயக்கா (ஆங்கில மொழி: Solomon West Ridgeway Dias Bandaranaikeசிங்களம்සොලමන් වෙස්ට් රිජ්වේ ඩයස් බණ්ඩාරනායක, சுருக்கமாக, எஸ். டபிள்யூ. ஆர். டி. பண்டாரநாயக்கா (S. W. R. D. Bandaranaike, சனவரி 8, 1899 - செப்டெம்பர் 26, 1959) இலங்கையின் நான்காவது பிரதமர் ஆவர். இவர் பிரதமராக பதவி வகித்த போது பௌத்த பிக்கு ஒருவரால் துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்யப்பட்டார்.


குடும்பம்[தொகு]

பிறப்பால் பண்டாரநாயக்கா ஓர் அங்கிலிக்கன் கிறிஸ்தவராவார். இவரது வம்சாவளிகள் இந்தியாவில் இருந்து வந்தவர்கள் என்றும், கண்டி இராச்சியத்தில் ஆலயம் ஒன்றின் பூசகராகப் பணியாற்றிய நீலப்பெருமாள் பாண்டாரம் என அழைக்கப்படுபவரிடம் இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது.[2] பின்னர் தங்கள் பெயரை பண்டாரநாயக்க என சிங்கள வடிவில் மாற்றியது, பின்னர் போர்த்துக்கேயக் கட்டுப்பாட்டுப் பகுதிக்கு இடம்பெயர்ந்து டயஸ் என்ற பெயரை ஏற்றுக்கொண்டது. அவர்கள் போர்த்துகீசியம், டச்சு மற்றும் பிரித்தானிய மொழிபெயர்ப்பாளர்களாகப் பணியாற்றினர்.[3]. சர் சொலமன் டயஸ் பண்டாரநாயக்க இவரது தந்தையாவார். சிறுவயதில் ஏற்பட்ட நோய்கள் காரணமாக பாடசாலை செல்லாத இவர் வீட்டில் இருந்தபடியே கல்வி கற்றார். 15 வயதில் பாடசாலை செல்லத் தொடங்னார். பின்னர் இங்கிலாந்தின் ஒக்ஸ்போட் பல்கலைக்கழகத்தில் சட்டத்தரணியாகக் கல்வி கற்று முடித்த பின்னர் இலங்கை அரசியலில் ஈடுபடத் தொடங்கினார். பண்டாரநாயக்க இலங்கையில் அரசியல் செல்வாக்கு மிகுந்து காணப்பட்ட இரத்வத்தை பரம்பரையைச் சேர்ந்த சிறிமாவோ திருமணம் செய்து கொண்டார். தனது கணவரின் மரணத்துக்குப் பின்னர் சிறிமாவோ கணவரின் கட்சியின் சார்பில் தேர்தலில் போட்டியிட்டு வென்றதன் மூலம் உலகின் முதல் பெண் பிரதமரானார்.[4] இவர் இலங்கையின் பிரதமரும் அதிபருமான சந்திரிகா குமாரத்துங்க, அனுரா பண்டாரநாயக்கா மற்றும் சுனேத்திரா பண்டாரநாயக்காவின் தகப்பனாரும் ஆவர்.

அரசியல் வாழ்க்கை[தொகு]

பண்டாரநாயக்கா ஓர் அங்கிலிக்கன் கிறிஸ்தவராகப் பிறந்தபோதும் அரசியல் நோக்கங்களுக்காகத் தம்மை ஓர் பௌத்தராகவே அடையாளம் காட்டினார். ஐக்கிய தேசியக் கட்சியில் 1931 முதல் 1951 வரை இணைந்த இவர் பல்வேறு பதவிகளை வகித்தார். இவர் 1951 இல் ஐக்கிய தேசியக் கட்சியில் இருந்து பிரிந்து தனியாக இலங்கை சுதந்திரக் கட்சியினைத் தோற்றுவித்தார்.

1956 இல் பிரதமராகிய பண்டாரநாயக்கா இலங்கையின் அதிகாரப்பூர்வ மொழியாக இருந்த ஆங்கிலத்தை இல்லாதொழித்து சிங்களத்தை மாத்திரமே அதிகாரப்பூர்வ மொழியாக்கினார்.

கொலை[தொகு]

தனது அலுவலகத்தில் வேலை செய்து கொண்டிருக்கும் போது அங்கு வந்த ஞானசார பௌத்த பிக்குவால் சுட்டுக் கொலை செய்யப்பட்டார். மரணச் சடங்குகள் கிறிஸ்தவ முறையிலேயே இடம்பெற்றன.

விட்டுச் சென்றவை[தொகு]

1950 இன் நடுப்பகுதியில் தமிழைப் புறக்கணித்து தனிச் சிங்கள கோட்பாடுகளைக் கையாண்டனர். இதுவே இலங்கை இனப்பிரச்சினைக்கு முதல்வித்தாக அமைந்தது எனபது இப்போது பலரும் ஏற்றுக் கொள்ளும் கருத்தாகும். தனிச் சிங்கள சட்டத்தால் தமிழ்ப் பகுதிகளில் ஏற்பட்ட அமைதியின்மையை நீக்கும் நோக்குடன் செய்யப்பட்ட பண்டாரநாயக்க செல்வநாயகம் ஒப்பந்தத்தையும் எதிர்க்கும் விதமாக பௌத்த பிக்கு ஒருவரால் பண்டாரநாயக்கா சுட்டு படுகொலை செய்யபட்டதை அடுத்து மேலும் அப்போது எதிர்கட்சியில் ஜே. ஆர். ஜெயவர்த்தனாவினதும் போராட்டங்கள் காரணமாக கிழித்தெறிந்தார்.[5] இதன் மூலம் நாட்டின் தலைமை சிங்கள பௌத்த பேரினவாதத்துக்கு தலை குனியும் நிலைமையை உருவாக்கியவர் இவராகவே கருதப்படுகிறார்.[6]

BROTHER CUT OFF HEAD OF RAPED PERSON ,WHO RAPED HER SISTER

 


தங்கையை சீரழித்த கயவனின் தலையை கொய்த அண்ணன்!

தங்கையை சீரழித்த கயவனின் தலையை கொய்த அண்ணன்!

கர்நாடக மாநிலம் தும்கூரில் பள்ளிக்குச் சென்ற தனது தனது தங்கையை கற்பழித்தவனை தலை வேறு முண்டம் வேறாக ஆக்கிய பாசக்கார அண்ணன். சரியான தீர்ப்பு!



Friday 24 September 2021

DIGESTING TRACT FUNCTIONGS


உயிரணுவும், கழிவு நீக்கமும்



கழிவு நீக்கத் தத்துவத்தை இங்கு சுருக்கமாகப் பார்க்கலாம்.


செல்களில் உருவாகும் கழிவுகளை மூன்றாகப் பிரிக்கலாம்.


🔸

1. சாதாரணக் 

               கழிவுகள்


நம் உடலில் கழிவுகள் உருவாதல் என்பது உணவைச் செரிக்கும் போது உடலுக்குத் தேவையற்ற பொருட்கள் பிரித்தெடுக்கப்

படுவதுதான். சாதாரண நிலையில் உடலில் கழிவுகள் இருந்து கொண்டே தான் இருக்கும். இக்கழிவுகளை உடலே வெளியேற்றிக் கொள்கிறது. தினமும் 

வியர்வை மூலமும், சிறுநீர் மூலமும், மலம் மூலமும் இன்னும் பிற வழிகளிலும் இப்படியான சாதாரணக் கழிவுகள் வெளியேறுகின்றனஇப்படி தொந்தரவுகள் எதுவும் தராமல் வெளியேறும் கழிவுகள்  சாதாரணக் கழிவுகள் ஆகும்.


🔸

2. தேக்கமுற்ற 

                கழிவுகள்

சாதாரணக் கழிவுகளை உடல் இயல்பாக வெளியேற்றும். நாம் நம்முடைய இயற்கை விதிகளை 

(பசி, தாகம் தூக்கம்,...) 

மீறும் போது உடல் தன்னியல்பில் இருந்து சற்றே விலகுகிறது. எளிமையாக வெளியேறியிருக்க வேண்டிய கழிவு  வெளியேறாமல் தேங்குகிறது. 

இந்த கழிவுகள் தான் தேக்கமுற்ற கழிவுகள்.





🔸

இவற்றையும் 

உடல் தான் வெளியேற்றுகிறது. ஆனால், 

சாதாரணக் கழிவுகள் போல இயல்பாக வெளியேறாமல், 

பல வகையான தொந்தரவுகள் மூலம் வெளியேற்றப்

படுகிறது. 


🔸

தேக்கமுற்ற 

            கழிவுகள் வெளியேறும் 

            போது ஏற்படும் 

         இடர்களைத் தான் நாம்         

        நோய்கள் 


என்ற பெயரால் அழைக்கிறோம்.


🔸

3. இசாயனக் 

                கழிவுகள்.


தேக்கமுற்ற கழிவுகள் தொந்தரவுகளோடு வெளியேற்றப்

பட்டுக் கொண்டிருக்கும் போது நாம் இரண்டு தவறுகளைச் செய்கிறோம். 


🔸

ஒன்று 

கழிவு தேங்குவதற்குக் காரணமான இயற்கை விதி மீறல்களை இன்னும் தொடர்ந்து கொண்டிருப்பது. 


🔸

இரண்டு  கழிவுகள் வெளியேறு

வதற்காக 

உடலால் உருவாக்கப்பட்ட தொந்தரவுகளை தற்காலிகமாக நிறுத்துவதற்கான முயற்சிகள்.


🔸

இக்காரணங்களால் தேக்கமுற்ற கழிவுகள் மறுபடியும் செல்லினுள் தேங்குவது தான்  இரசாயனக் கழிவுகள்.


🔸

இராசாயனக் 

             கழிவுகள்


சாதாரணக் கழிவுகள் தேக்கமடைந்

-தவையாக மாறும் போதே அதன் தன்மை மோசமானதாக மாறுகிறது. எடுத்துக்காட்டாக, நாம் தினமும் 

மலம் கழிக்கிறோம். இது ஒரு அன்றாட பழக்கமாக இருக்கும் போது அன்றாடம் உருவாகும் மலம் உடனே வெளியேற்றப்

படுவதால் அதன் தன்மை சாதாரணமாக இருக்கும். ஆனால், நமக்கு திடீரென்று இரண்டு, மூன்று நாட்கள் மலம் போகவில்லை என்று வைத்துக் கொள்வோம். இப்படி ஏற்பட்ட மலச்சிக்கலுக்குப் பின்பு மூன்று நாட்களுக்குப் 

பிறகு மலம் வெளியேறினால் அதன் தன்மை எப்படி இருக்கும்? சாதாரணமாக வெளியேற்றும் மலத்திற்கும், தேங்கி பின்பு வெளியேறும் மலத்திற்கும் தன்மை வேறுபாடு இருக்குமல்லவா? தேங்கிய மலம் குறுக்கப்பட்ட தன்மையோடும், அதன் அமிலத்தன்மை 

மிக அதிகமாகவும், கடுமையான ஒட்டும் தன்மை மற்றும் துர்நாற்றம் போன்றவற்றோடும் இருக்கும். 

இது போலத்தான் சாதாரணமாக செல்லில் இருந்து வெளியேற வேண்டிய கழிவுகள் தேங்கி தேக்கமுற்ற கழிவுகளாக மாறுகிறது. 

இப்படி மோசமான தேக்கமுற்ற கழிவுகள் 

இரசாயனக் கழிவுகளாக மாறினால் 

செல் என்ன ஆகும் ?


🔸


சாதாரணக் கழிவுகளைப் போல, இவற்றை எளிதாக வெளியேற்றி

விட இயலாது. நுரையீரல் செல்களில் 

சளி என்ற சாதாரணக்கழிவு இருந்தால் இருமல் மூலம் வெளியேற்றலாம். ஆனால், ரசாயனக் கழிவை இவ்வாறு வெளியேற்றினால் நுரையீரலின் 

பிற பகுதிகள் பாதிக்கப்படும். கழிவு பயணிக்கும் ஒவ்வொரு பகுதியும் பாதிப்படையும், எனவே, 

நம்முடைய செல் இரசாயனக் கழிவை வெளியேற்ற 

புதிய உத்தியைக் கையாள்கிறது.


🔸

செல்லின் 

படத்தைப் பாருங்கள். அதில் சிறிய துகள்கள் போல செல் சுவரின் அருகில் 

இருப்பவை தான் லைசோ

           சோம்கள் இவை செல்களால் தேவைக்கேற்ப உருவாக்கப்

படுகின்றன.


🔸

லைசோ 

           சோம்கள் என்ற அழிக்கும் பொருட்கள்

நம்முடைய செல்களில் இரசாயனக் கழிவுகள் தேங்குகிற போதே, அது செல்லினில் உள்ள திரவத்தில் கலந்து விடாதவாறு ஒரு பாதுகாப்பு ஏற்பாட்டைச் செய்கிறது. 


🔸

நம் செல், 

ஏற்கனவே இரசாயனமாக இருக்கக்கூடிய இக்கழிவு 

செல் திரவத்தில் கலந்து விட்டால் இது செல்லை அழித்து விடும் அல்லவா ? எனவே கழிவுப் பொருளைச் சுற்றி ஒரு சவ்வு போன்ற அமைப்பை செல் ஏற்படுத்துகிறது. கழிவுகளின் இரசாயனத் தன்மை செல்லை பாதிக்காதவாறு இந்த சவ்வுப் 

                பொருள் பாதுகாக்கிறது. 

இது தற்காலிக ஏற்பாடுதான் ஏனென்றால் ஏற்கனவே கழிவுகள் உருவாகக் காரணமான நம்முடைய இயற்கைக்கு மாறான பழக்க வழக்கங்கள் தொடர்ந்து கொண்டிருந்தா

லோ, இரசாயன மருந்துகள் மூலம் கழிவுகளை உடலுக்குள் அமுக்க முயன்றாலோ, செல்களில் உள்ள இரசாயனக் கழிவுகள் பெருகலாம். அல்லது அதன் தன்மை இன்னும் மோசமாகலாம். எனவே இந்தச் சவ்வு அமைப்பை செல் தற்காலிகமாக ஏற்படுத்திக் கொள்கிறது.


🔸

நாம் ஏற்கனவே பார்த்த லைசோசோம்கள் தான் இரசாயனக் கழிவுகளை அழிக்கும் போர் வீரர்கள். 

லைசோ சோம் என்ற மருத்துவச் சொல்லிற்கு அழிக்கும் 

               பொருள் என்று அர்த்தம். ஆங்கிலத்தில் 

சூசைட் சாக்ஸ் (தற்கொலைப் 

            பைகள்) 

என்றும் இதை அழைப்பார்கள். உலகத்தின் முதல் தற்கொலைப்

படையை உருவாக்கியது மனித உடலின் செல்களாகத் தான் இருக்கும்.


🔸

தற்கொலைப்படை எவ்விதமாக தன் எதிரிகளை அழிக்கிறது? அழிக்கும் தன்மையுள்ள வெடி பொருட்களோடு எதிரியின் மீது தாக்குதல் நடத்துகிறது. தானும் அழிந்து எதிரியையும் அழிப்பது தான் தற்கொலைப்படை அதே போலத்தான் இந்த 

லைசோ சோம்கள். கழிவுகளின் தன்மையையும், அளவையும் பொறுத்து 

லைசோ சோம்கள்.. உருவாகி வளர்கின்றன. செல்லில் நலமான சூழல் நிலவுகிற போது கழிவுகளைத் தாக்குகின்றன. நலமான சூழலை விரதம், 

              ஓய்வு 

என்று நாம் ஏற்படுத்தினாலும் சரி, அல்லது காய்ச்சல், 

               சோர்வு என்று உடலே ஏற்படுத்திக் கொண்டாலும் சரி அவற்றை செல்கள் பயன்படுத்திக் கொள்கின்றன.


🔸

லைசோ 

                சோம்கள் ரசாயனக்கழிவு

களின் மேல் மோதுகின்றன. இங்கு ஒரு சந்தேகம் வரலாம். 

லைசோ சோம்கள் இருப்பது செல்சுவரின் அருகில், 

ரசாயனக் கழிவுகள் இருப்பது இன்னொரு இடத்தில். 

எப்படி அங்கு சென்று மோதும் ? 

செல்லில் இருக்கும் செல்திரவத்தின் மீதுதான் எல்லா உறுப்புகளும் மிதந்து கொண்டிருக்

கின்றன. (கோழி முட்டை போல). லைசோசோம் 

எங்கு சொல்ல முடிவெடுக்கிறதோ அங்கு நகர்கிறது தாக்குதல் நடத்துகிறது. 


🔸

மனிதன் 

       என்பவன் ஒரு உயிர் அல்ல. உடலில் உள்ள ஒவ்வொரு      

          செல்லும் 

               ஒரு உயிர். 

அதிலும், செல்லிற்குள் இருக்கும் 

லைசோ சோம் தனியாக முடிவெடுக்கிறது. தனியாகப் பிறந்து, தனியாகச் செத்தும் போகிறது. அதுவும் ஒரு உயிர் தான். எண்ணற்ற உயிர்களால் ஆனதுதான் 

மனித உடல்.


🔸

லைசோ சோம் தாக்குதலில் சிக்கிய ரசாயனக் கழிவுகள் அழிந்து போகின்றன. தாக்குதல் நடத்திய லைசோ      

          சோம்களும் 

அழிந்து போகின்றன. தற்கொலைப் 

              பைகள் என்று எவ்வளவு பொருத்தாமாகப் பெயர் சூட்டியிருக்

கிறார்கள் உயிரியல் விஞ்ஞானிகள். அழிந்த கழிவுகளில் இருந்து நுண்ணிய துகள்கள் கூட எஞ்சாத அளவுக்கு இத்தாக்குதல் நடந்து முடிகிறது. செல்லிற்கும் பாதிப்பில்லை. உடலுக்கும் பாதிப்பில்லை. அப்படியானால் லைசோசோம் தான் அழிந்து விட்டதே வேறு 

லைசோ சோமுக்கு செல் என்ன செய்யும் ? 

இப்போது மறுபடியும் செல்லின் படத்தை பாருங்கள். ஒரு செல்லில் நிறைய லைசோ சோம்கள் இருக்கின்றன. அப்படியும் செல்லுக்கு புதிதாக 

லைசோ 

             சோம்கள் தேவைப்பட்டால் உருவாக்கிக் கொள்ளும்.


🔸

உடலின் 

மிகச் சிறிய துகளான செல்லில் நடைபெறும் 

இயக்கம் இது ! 

உடலில் இருக்கும் கழிவுகள் வெளியேற்றப்பட வேண்டுமா, அல்லது அழிக்கப்பட வேண்டுமா ? என்பதை ஒவ்வொரு செல்லும் தானே முடிவு செய்து, தானே இயங்குகிறது.


🔸

இந்த செல்லின் அடிப்படையைக் கொண்டு, ஒவ்வொரு உள்ளுறுப்பையும், உடலின் இயக்கங்களையும் அணுகுவோ

மானால் - 

உடலை முழுமையாகவும், எளிமையாகவும் புரிந்து கொள்ள முடியும்.


🔸

நாளை....


     செரிமான 

          மண்டலம்.....

🔸

நன்றி 


அக்குபங்சர்    

          மருத்துவர்

அ.உமர் பாரூக் 

M.Acu, M.Sc(Psy), D.Litt,

SPLEEN AND ITS FUNCTIONS

 

SPLEEN AND ITS FUNCTIONS




மறைவான 

   உறுப்புகளும், 

       செரிமானமும்


🔸


இங்கு நாம் பார்த்த உறுப்புகள் மட்டுமல்லாமல் இன்னும் சில உறுப்புகள் செரிமானத்திற்

கான அடிப்படை வேலைகளைச் செய்கின்றன. உடலியல் அமைப்பில் செரிமான உறுப்புக்களாக

இவை கருதப்படுவ

தில்லை. ஆனால், செரிமான இயக்கத்தில் பெரும் பங்காற்றுகின்ற இவ்வுறுப்புகள் இல்லையென்றால் செரிமானம் நடைபெறாது.





🔸

மண்ணீரல்


இரத்த அணுக்களை உற்பத்தி செய்யும், வயதான இரத்த அணுக்களைக் கொல்லும் ஒரு இடமாகவே மண்ணீரல் கருதப்படுகிறது. ஆனால், மரபுவழி அறிவியல்

விளக்கும் செரிமானத்தின் 

மிக முக்கியமான உறுப்பு மண்ணீரல் ஆகும். உணவுப் பொருளை 

நாம் வாயில் 

இடும் போதே உழிழ்நீர்ச் சுரப்பிற்கு வழிகாட்டுவது மண்ணீரல் ஆகும். வாயில் செரிமானம் நடைபெற்றுக் கொண்டிருக்கும் போதே அங்கிருந்து உணவு ஆற்றலை மண்ணீரல் பெற்று, உடலிற்கு வழங்குகிறது. ஆற்றலைக் கருவிகளால் பார்க்க முடியாமல் போவதால் 

கருவி வழி நவீன அறிவியல் இக்கருத்து முதன்மை பெறவில்லை. ஆனால் நடைமுறையில் இதை நாம் எளிமையாகப் புரிந்து கொள்ளலாம்.


🔸


உணவு முழுமையாகச் செரித்து, அதன் ஆற்றல்கள் இரத்தத்தை அடைய இரண்டரை மணி நேரம் முதல் நான்கு மணி நேரம் வரை ஆகும் என்று கூறுகிறது 

நவீன அறிவியல், தொடர்ந்து நான்கு, ஐந்து நாட்களாக பட்டினி கிடக்கும் ஒருவருக்கு கண்கள் பஞ்சடைத்துப் போகும். காதுகளின் கேட்கும் திறன் குறைந்து போயிருக்கும். உடல் பலவீனம் அடைந்து சோர்ந்து போயிருக்கும் இப்போது அவருக்கு உணவைக் கொடுத்துப் பாருங்கள். 


🔸

முதல் கவள உணவை வாயில் இட்டு, மென்று கொண்டிருக்கும் போதே அவருடைய கண்களும், காதுகளும் ஆற்றல் பெறும். அவருடைய குரல் வலிமை பெறுவதையும் நம்மால் பார்க்க முடியும், வாயில் இட்ட உணவு இரைப்பைக்குள் போவதற்கு முன்பே அவரது உடல் ஆற்றல் பெறுகிறது. இந்த ஆற்றலை

அளிப்பதுதான்          

     மண்ணீரல். 


🔸


உணவு வாயில் அரைக்கப்படும் போதே அதிலிருந்து ஆற்றலை மண்ணீரல் பிரித்தெடுத்து உடலுக்கு

அளிக்கிறது. உடலில் அமைந்திருக்கும் எல்லா, உள்

உறுப்புக்களுக்கும் 

ஆற்றல் அளிப்பது மண்ணீரலின் வேலையாகும். உள்ளுறுப்புக்களின் சுருங்கி விரியும் இயக்கம், அதன் நிலைத்தன்மை போன்றவற்றை மண்ணீரல் பராமரிக்கிறது. வாயில் செரிமானம் துவங்குவது முதல் பெருங்குடலில் கழிவாக வெளியேற்றப்படும் வரை 

ஒவ்வொரு 

         நிலையிலும் மண்ணீரல் 

         முக்கியப் பங்காற்றுகிறது.


🔸

   பிற

              உறுப்புகள்


நுரையீரல்,     

         

            சிறுநீரகம், 


இருதயம் 

                    

போன்ற உறுப்புக்களும் செரிமானத்தில் மறைமுகப் பங்காற்றுகின்றன. செரிமானத்தில் உணவு செரிக்கப்படும் போது அது எரிக்கப்படுகிறது. அங்கு காற்றின் பங்கு முக்கியமானது. 

முழு உடலிற்கும் நேரடியாகக் காற்றையும், 

காற்று ஆற்றலை அளிப்பது நுரையீரல் ஆகும். 

அதே போல, உணவை நாம் வாயில் இடுவதற்கும் முன்பாக அதன், மணம் மூக்கின் வழியே உள்ளே போகிறது. அவ்வாறு நுரையீரலின் வெளிப்புற உறுப்பான மூக்கு உள்ளே அனுப்பும் மணம் உமிழ் நீர்ச் சுரப்பில் முக்கியப் பங்காற்றுகிறது. செரிமானத்தின் 

           துவக்கமே மூக்கில் 

        இருந்து தான் துவங்குகிறது.


🔸


செரிமான இயக்கத்தில் நீர்த்தேவை மிக முக்கியமானது. உடலில் எங்கெல்லாம் நீர்த்தேவை ஏற்படுகிறதோ அதை தாகம் மூலம் அறிவிப்பதும், உணவில் உள்ள 

நீர் ஆற்றலை பிரித்து முழு உடலுக்கு அளிப்பதும் சிறுநீரகத்தின்  

         முக்கியமான வேலையாகும். செரிமானத்தில் சிறுநீரகத்தின் வேலையை இன்னும் எளிமையாகப் புரிந்து கொள்ளலாம். சிறுநீரகம் பாதிக்கப்பட்ட நோயாளிக்கு 

பசி உணர்வே இருக்காது. அப்படியே சாப்பிட்டாலும் உணவை செரிக்கிற தன்மை உடலிற்கு குறைந்து போயிருக்கும். செரிமானத்தின் முக்கியத் தேவையான 


🔸

நீர்ச் 

   செரிமானத்தை நடத்துவது 

        சிறுநீரகம் ஆகும்.


🔸

அதே போல, இதயம். செரிமானத்திற்குத் தேவையான வெப்பத்தை அளிப்பதும், உணவில் இருந்து கிடைக்கும் வெப்பத்தை 

முழு உடலுக்கு அளிப்பதும் இதயத்தின் வேலையாகும். செரிமானத்தின் இறுதியில் கிடைக்கும் 

உயிர் வேதியியல் பொருட்களை இரத்தத்தின் மூலம் முழு உடலிற்கும் கிடைக்கக் செய்வது இதயம் ஆகும். 


🔸

மேற்கண்ட 

முக்கிய உறுப்புகள் அல்லாமல் இன்னும் சிறு உறுப்புகளும் செரிமானத்தில் பங்கேற்கின்றன. அதில் சில உறுப்பு  குடல்வால். சிறுகுடலும், பெருங்குடலும் சந்திக்கும் பகுதியில்தான் அப்பெண்டிஸ் 

                 என்ற குடல்வால் அமைந்துள்ளது. பெருங்குடலிற்குள் செல்லும் கழிவுகளில் இருந்து சத்துக்களைப் பிரிந்தெடுப்பதற்கு, குடல்வாலில்    

         சுரக்கப்படும் நீர் 

பயன்படுகிறது.


🔸

நம் உடலில் 

உள்ள ஒவ்வொரு அணுவும் 

உடலில் நிகழும் எல்லா இயக்கங்களிலும் பங்கு பெறுகின்றன. 

அது போலவே, செரிமானம் என்பது தனித்தனியான உறுப்புகள் தொடர்பான தனி வேலையில்லை. முழு உடலும், 

அதன் உறுப்புகளும் பங்கு பெறும் ஒருங்கிணைந்த இயக்கம் தான் செரிமானம். உடலில்  

ஐந்து  மூலகங்களும்

(நிலம்,நீர், நெருப்பு, காற்று, மரம்) 

தம் உறுப்புகளின் வாயிலாக நடத்தும் ஆற்றல் பெறும் இயக்கமே செரிமானம் ஆகும்.


🔸

உடலின் 

ஒட்டு மொத்த இயக்கத்தையும் முழுமையாகப் புரிந்து கொள்வதற்காக, மண்டல வாரியான பகுப்பு பயன்படுகிறது. மண்டலங்கள் 

மூலம் நாம் புரிந்து கொள்வது உடல் இயக்கத்தின் 

ஒரு பகுதிதான் என்பதையும், உடலின் 

ஒவ்வொரு இயக்கத்திலும் 

முழு உடலும் ஒருங்கிணைந்து பங்கேற்கிறது என்பதையும் மனதில் கொள்ள வேண்டும். இந்த அடிப்படையை 

நாம் மறந்து விடும் போது உடலை உயிரற்ற இயந்திரமாக பார்க்கும் தவறான பார்வைக்குள் சிக்கிக் கொள்வோம்.


🔸

        நாளை....


 இரத்த

        சுற்றோட்ட

            மண்டலம்....


🔸

நன்றி 


அக்குபங்சர் மருத்துவர்

அ.உமர் பாரூக் 

M.Acu, M.Sc(Psy), D.Litt,

Thursday 23 September 2021

FREEDOM FIGHTER - KALPANA DUTTA BORN 1913 ,JULY 27 -FEBRUARY 8 ,1995

 



வீராங்கனை கல்பனா தத்தா பிறந்ததினம் – 1913ஜூலை 27-FEBRUARY 8 ,1995

பாரதநாட்டு விடுதலைக்கு ஆண்களுக்கு எந்தவிதத்திலும் குறைவில்லாமல் பாடுபட்ட பல்வேறு பெண்களும் உண்டு. அந்த வரிசையில் ஒளிவிடும் தாரகையாக விளங்கிய கல்பனா தத்தாவின் பிறந்தநாள் இன்று.

இன்று பங்களாதேஷ் நாட்டின் ஒரு பகுதியாக உள்ள சிட்டகாங் மாவட்டத்தில் ஒரு சிறிய கிராமத்தில் 1913ஆம் ஆண்டு ஜூலை 27ஆம் நாள் பிறந்தவர் கல்பனா தத்தா . தனது பள்ளியிறுதித் தேர்வில் வெற்றிபெற்ற பிறகு கல்பனா கல்கத்தா நகரில் அமைந்துள்ள பெதுன் கல்லூரியில் சேர்ந்தார். அங்கே விடுதலைப் போராட்ட வீராங்கனைகள் பீனாதாஸ், பிரிதிலதா வடேகர் ஆகியோரின் தொடர்பு அவருக்குக் கிடைத்தது. சுதந்திரப் போராட்டத்தில் கல்பனாவும் இணைந்து கொண்டார். 

பபுகழ்பெற்ற புரட்சியாளர் சூர்யாசென் தலைமையிலான குழு ஓன்று ஆயுதம் தாங்கிய போராட்டத்தை முன்னெடுத்தது. கல்பனா அதில் ஐக்கியமானார். 1930ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் சிட்டகாங் நகரில் உள்ள ஆங்கில ஆயுதக் கிடங்கை புரட்சியாளர்கள் தாக்கி அங்கே உள்ள ஆயுதங்களை கொள்ளை அடித்தார்கள். போராளிகளைக் கைது செய்ய ஆங்கில அரசு தேடுதல் வேட்டையைத் தொடங்கியது. 1931ஆம் ஆண்டு ஆங்கிலேயர்கள் கூடும் கிளப் ஒன்றில் தாக்குதல் நடத்த போராளிகள் முடிவு செய்தனர். அங்கே இடத்தை வேவு பார்க்கும் பணியில் ஈடுபட்டிருந்த கல்பனாவை அரசு கைது செய்தது. பிணையில் விடுதலையான கல்பனா தலைமறைவானார். 



1933ஆம் வருடம் பிப்ரவரி மாதம் சூரியாசென் கைது செய்யப்பட்டார். ஆனால் அங்கே இருந்த கல்பனா தப்பியோடி விட்டார்.  1933ஆம் வருடம் மே மாதம் கல்பனா கைது செய்யப்பட்டார். சிட்டகாங் சதி வழக்கு மறுபடி விசாரணைக்கு வந்தது. கல்பனாவை நாடுகடத்துமாறு நீதிமன்றம் உத்திரவு பிறப்பித்தது. ஆனால் 1939ஆம் ஆண்டு கல்பனா விடுதலை செய்யப்பட்டார். 

இயல்பாகவே அன்றய போராளிகள் கம்யூனிச சித்தாந்தத்தில் ஈடுபாடு உடையவர்களாக இருந்தார்கள். விடுதலையான கல்பனாவும் கம்யூனிஸ்ட் கட்சியில் சேர்ந்தார். 1940ஆம் ஆண்டு மீண்டும் கல்லூரியில் சேர்ந்து தனது பட்டப்படிப்பையை கல்பனா முடித்தார். 1943ஆம் ஆண்டு கம்யூனிஸ்ட் கட்சித் தலைவரான பூரண சந்திர ஜோஷியைத் திருமணம் செய்து கொண்டார். 1943ஆம் ஆண்டு ஏற்பட்ட வங்காள பஞ்சத்திலும், பின்னர் தேசப் பிரிவினையைத் தொடர்ந்து ஏற்பட்ட கலவரத்தில் நிவாரணப் பணிகளியில் கல்பனா செயலாற்றினார். 

கணவர் ஜோஷியோடு இணைந்து கல்பனா சிட்டகாங் ஆயுதக் கிடங்கை கொள்ளையடித்தது பற்றிய தனது அனுபவங்களை புத்தகமாக எழுதி வெளியிட்டார். கொல்கத்தா நகரில் இயங்கி வரும் புள்ளியியல் கல்லூரியில் பணியாற்றிய கல்பனா 1995ஆம் ஆண்டு பிப்ரவரி 8ஆம் நாள் காலமானார். 

கால ஓட்டத்தில் கல்பனா தத்தா போன்ற தியாகிகள் நினைவு கொள்ளப்படாமல் போகலாம், ஆனாலும் அவர்களின் தியாகங்கள் வீணாகிவிடாது என்பதில் ஐயமில்லை 

S.MANJUBHASHINI -- Indian Freedom Fighter & Social Activist (1906-1996 )

 





S.MANJUBHASHINI -- Indian Freedom Fighter & Social Activist (1906-1996 )

Manjubhashini, called Rajamma at home, was born on September 24, 1906 into a conservative, illustrious and affluent family. After having studied upto Std.VIII in the Presidency Girls School in Egmore, she was married at the tender age of 12, to Mr.Subramaniam,, who went on to become a Lawyer and later Judge of the Madras High Court. Manjubhashini was keen to complete her school education and supported by her husband went on to complete her S.S.L.C.



From her childhood itself, Manjubhashini was caught in the hypnotic spell of Gandhiji’s call for freedom and soon after her 24th Birthday – this young mother of 4 children –. - ‘Manjumma’ flung aside the comforts of hearth and home and threw herself into India’s freedom struggle, bravely courting imprisonment in Quit India Movement- 1942.

- She participated in the burning of foreign goods at Thambu Chetty Street along with Durgabai Deshmukh, in the Salt Satyagraha organized by Rajaji at Vedaranyam.

- She spent 1 ½ years as a detenue in Vellore Jail along with Ammu Swaminathan. When, in 1941-42, hundreds of Indians were forced out of Burma, she organized a camp in Madras for the refugees and helped rehabilitate them.

- With her hurricane lamp of love Manjumma was like India’s Khadi-clad Florence Nightingale, even as she tended the refugees.

- Before plunging herself in social welfare activities, she was a very Active member in the National Movement in T.Nagar,

- Representing the Women’s Section of the Congress Incharge of arranging meetings, conferences Enrolling women members, canvassing votes for candidates etc.

She organized and trained the 10,000 strong Sevadal (women volunteers) of the Congress. When Gandhiji visited Madras at the Hindi Prachar Sabha, she organized his prayer meeting and took responsibility for the food arrangements.

She and her volunteers worked for five whole days totally devoted to their duties.

After her release from jail in 1943, she decided to take up constructive social service as indicated to her by Mahatma Gandhi. She had long felt the need for a home for destitute and abandoned children. At that time except for some Missionary institutions involved in this humanitarian service there were virtually very few institutions in Tamil Nadu of this type being run by any other service organization.

Encouraged by Shri.K.Kamaraj she got Bala Mandir registered in 1949 and started out with two children in two cottages in the Congress Grounds. An initial donation of Rs.10,000/- formed the nucleus fund. She was able to enlist the interest of other prominent persons like Shri.Ramnath Goenka, Shri.T.R.Venkataraman Sastriar, Dr.U.Krishna Rao, Mrs.A.V.Kuttimalu Ammal, Mr.Suryanarayana Rao, M.L.C., Mrs.Saroj Goenka etc. who formed the first working committee, with Shri.Kamaraj as President till he passed away in 1974 and herself as Honorary General Secretary till her passing in 1996. She was also able to inspire several social workers to devote their time to Bala Mandir.

It is not too much to claim that Mrs.Manjubhashini was a pillar of Bala Mandir, a guiding spirit under whose leadership the institution has grown to this extent and has All India recognition. Almost single-handedly in the initial stages, she took up this task, overcame many difficulties and frustrations and made it a success. Over the years, under her able guidance, Bala Mandir has grown like a ‘Banyan Tree’ into a Premier National Welfare Organisation sheltering and caring for thousands of children

over the years, and spreading its branches into Educational, Vocational and Rehabilitation and health programmes.

Besides being the main spirit for the creation of such a large and useful organization, she had involved herself in many other activities as well. She was responsible for the starting of the Hindustan Scouts Association in Madras and had served the organization as Honorary Secretary for several years. She founded the Tamil Nadu Branch of the Indian Council for Child Welfare and served the organization for several years as its Honorary Secretary. She was also convenor of the Women’s India Association, and a member of the Madras Legislative Council for 12 years.

Always clad in simple white khadi, she made Bala Mandir her daily pilgrimage for nearly 50 years. Even at 90, and in failing health, ‘Work at Bala Mandir was Worship’ – evidently a life time commitment to a cause. Come rain or shine, you could find her in the Bala Mandir campus daily, administering to the needs of the children.

The happiness of hundreds of Bala Mandir children whose parents failed to or could not bring them up, is testimony to what a good cause could achieve in the hands of a capable and devoted administrator.

A selfless and dedicated Social Worker, she always chose to stay way from publicity and limelight, she donated the entire cash proceeds of the Government of India National Award and Rajiv Gandhi Memorial Award which she received to Bala Mandir. She was the 1st recipient of the Central Government Award for Child Welfare and it was one of the few awards she accepted on behalf of Bala Mandir.

Her command over language and Accountancy – despite only being S.S.L.C. was remarkable and stunned many an administrator and Auditor.

Her success was marked by her outstanding decisiveness, which included the conviction and courage to take decisions to ensure the best for her children, even against the current of opposition.

Brave and resolute, she epitomized the ideals of Indian Womanhood through Service, struggle and Sacrifice. She passed away on 23rd September 1996, leaving behind her legacy of this temple of care and love for the deprived young Bala Mandir.


S.MANJUBHASHINI -- Indian women Freedom Fighters
S.MANJUBHASHINI -- Indian Freedom Fighter






Manjubhashini, called Rajamma at home, was born on September 24, 1906 into a conservative, illustrious and affluent family. After having studied upto Std.VIII in the Presidency Girls School in Egmore, she was married at the tender age of 12, to Mr.Subramaniam,, who went on to become a Lawyer and later Judge of the Madras High Court. Manjubhashini was keen to complete her school education and supported by her husband went on to complete her S.S.L.C.

From her childhood itself, Manjubhashini was caught in the hypnotic spell of Gandhiji’s call for freedom and soon after her 24th Birthday – this young mother of 4 children –. - ‘Manjumma’ flung aside the comforts of hearth and home and threw herself into India’s freedom struggle, bravely courting imprisonment in Quit India Movement- 1942.

  • She participated in the burning of foreign goods at Thambu Chetty Street along with Durgabai Deshmukh, in the Salt Satyagraha organized by Rajaji at Vedaranyam.
  • She spent 1 ½ years as a detenue in Vellore Jail along with Ammu Swaminathan. When, in 1941-42, hundreds of Indians were forced out of Burma, she organized a camp in Madras for the refugees and helped rehabilitate them.
  • With her hurricane lamp of love Manjumma was like India’s Khadi-clad Florence Nightingale, even as she tended the refugees.
Before plunging herself in social welfare activities, she was a very
  • Active member in the National Movement in T.Nagar,
  • Representing the Women’s Section of the Congress
  • Incharge of arranging meetings, conferences
  • Enrolling women members, canvassing votes for candidates etc.
She organized and trained the 10,000 strong Sevadal (women volunteers) of the Congress. When Gandhiji visited Madras at the Hindi Prachar Sabha, she organized his prayer meeting and took responsibility for the food arrangements.
She and her volunteers worked for five whole days totally devoted to their duties.
After her release from jail in 1943, she decided to take up constructive social service as indicated to her by Mahatma Gandhi. She had long felt the need for a home for destitute and abandoned children. At that time except for some Missionary institutions involved in this humanitarian service there were virtually very few institutions in Tamil Nadu of this type being run by any other service organization.

Encouraged by Shri.K.Kamaraj she got Bala Mandir registered in 1949 and started out with two children in two cottages in the Congress Grounds. An initial donation of Rs.10,000/- formed the nucleus fund. She was able to enlist the interest of other prominent persons like Shri.Ramnath Goenka, Shri.T.R.Venkataraman Sastriar, Dr.U.Krishna Rao, Mrs.A.V.Kuttimalu Ammal, Mr.Suryanarayana Rao, M.L.C., Mrs.Saroj Goenka etc. who formed the first working committee, with Shri.Kamaraj as President till he passed away in 1974 and herself as Honorary General Secretary till her passing in 1996. She was also able to inspire several social workers to devote their time to Bala Mandir.

It is not too much to claim that Mrs.Manjubhashini was a pillar of Bala Mandir, a guiding spirit under whose leadership the institution has grown to this extent and has All India recognition. Almost single-handedly in the initial stages, she took up this task, overcame many difficulties and frustrations and made it a success. Over the years, under her able guidance, Bala Mandir has grown like a ‘Banyan Tree’ into a Premier National Welfare Organisation sheltering and caring for thousands of children.

over the years, and spreading its branches into Educational, Vocational and Rehabilitation and health programmes.

Besides being the main spirit for the creation of such a large and useful organization, she had involved herself in many other activities as well. She was responsible for the starting of the Hindustan Scouts Association in Madras and had served the organization as Honorary Secretary for several years. She founded the Tamil Nadu Branch of the Indian Council for Child Welfare and served the organization for several years as its Honorary Secretary. She was also convenor of the Women’s India Association, and a member of the Madras Legislative Council for 12 years.

Always clad in simple white khadi, she made Bala Mandir her daily pilgrimage for nearly 50 years. Even at 90, and in failing health, ‘Work at Bala Mandir was Worship’ – evidently a life time commitment to a cause. Come rain or shine, you could find her in the Bala Mandir campus daily, administering to the needs of the children.

The happiness of hundreds of Bala Mandir children whose parents failed to or could not bring them up, is testimony to what a good cause could achieve in the hands of a capable and devoted administrator.

A selfless and dedicated Social Worker, she always chose to stay way from publicity and limelight, she donated the entire cash proceeds of the Government of India National Award and Rajiv Gandhi Memorial Award which she received to Bala Mandir. She was the 1st recipient of the Central Government Award for Child Welfare and it was one of the few awards she accepted on behalf of Bala Mandir.

Her command over language and Accountancy – despite only being S.S.L.C. was remarkable and stunned many an administrator and Auditor.

Her success was marked by her outstanding decisiveness, which included the conviction and courage to take decisions to ensure the best for her children, even against the current of opposition.