Showing posts with label FUNCTIONS. Show all posts
Showing posts with label FUNCTIONS. Show all posts

Friday, 24 September 2021

SPLEEN AND ITS FUNCTIONS

 

SPLEEN AND ITS FUNCTIONS




மறைவான 

   உறுப்புகளும், 

       செரிமானமும்


🔸


இங்கு நாம் பார்த்த உறுப்புகள் மட்டுமல்லாமல் இன்னும் சில உறுப்புகள் செரிமானத்திற்

கான அடிப்படை வேலைகளைச் செய்கின்றன. உடலியல் அமைப்பில் செரிமான உறுப்புக்களாக

இவை கருதப்படுவ

தில்லை. ஆனால், செரிமான இயக்கத்தில் பெரும் பங்காற்றுகின்ற இவ்வுறுப்புகள் இல்லையென்றால் செரிமானம் நடைபெறாது.





🔸

மண்ணீரல்


இரத்த அணுக்களை உற்பத்தி செய்யும், வயதான இரத்த அணுக்களைக் கொல்லும் ஒரு இடமாகவே மண்ணீரல் கருதப்படுகிறது. ஆனால், மரபுவழி அறிவியல்

விளக்கும் செரிமானத்தின் 

மிக முக்கியமான உறுப்பு மண்ணீரல் ஆகும். உணவுப் பொருளை 

நாம் வாயில் 

இடும் போதே உழிழ்நீர்ச் சுரப்பிற்கு வழிகாட்டுவது மண்ணீரல் ஆகும். வாயில் செரிமானம் நடைபெற்றுக் கொண்டிருக்கும் போதே அங்கிருந்து உணவு ஆற்றலை மண்ணீரல் பெற்று, உடலிற்கு வழங்குகிறது. ஆற்றலைக் கருவிகளால் பார்க்க முடியாமல் போவதால் 

கருவி வழி நவீன அறிவியல் இக்கருத்து முதன்மை பெறவில்லை. ஆனால் நடைமுறையில் இதை நாம் எளிமையாகப் புரிந்து கொள்ளலாம்.


🔸


உணவு முழுமையாகச் செரித்து, அதன் ஆற்றல்கள் இரத்தத்தை அடைய இரண்டரை மணி நேரம் முதல் நான்கு மணி நேரம் வரை ஆகும் என்று கூறுகிறது 

நவீன அறிவியல், தொடர்ந்து நான்கு, ஐந்து நாட்களாக பட்டினி கிடக்கும் ஒருவருக்கு கண்கள் பஞ்சடைத்துப் போகும். காதுகளின் கேட்கும் திறன் குறைந்து போயிருக்கும். உடல் பலவீனம் அடைந்து சோர்ந்து போயிருக்கும் இப்போது அவருக்கு உணவைக் கொடுத்துப் பாருங்கள். 


🔸

முதல் கவள உணவை வாயில் இட்டு, மென்று கொண்டிருக்கும் போதே அவருடைய கண்களும், காதுகளும் ஆற்றல் பெறும். அவருடைய குரல் வலிமை பெறுவதையும் நம்மால் பார்க்க முடியும், வாயில் இட்ட உணவு இரைப்பைக்குள் போவதற்கு முன்பே அவரது உடல் ஆற்றல் பெறுகிறது. இந்த ஆற்றலை

அளிப்பதுதான்          

     மண்ணீரல். 


🔸


உணவு வாயில் அரைக்கப்படும் போதே அதிலிருந்து ஆற்றலை மண்ணீரல் பிரித்தெடுத்து உடலுக்கு

அளிக்கிறது. உடலில் அமைந்திருக்கும் எல்லா, உள்

உறுப்புக்களுக்கும் 

ஆற்றல் அளிப்பது மண்ணீரலின் வேலையாகும். உள்ளுறுப்புக்களின் சுருங்கி விரியும் இயக்கம், அதன் நிலைத்தன்மை போன்றவற்றை மண்ணீரல் பராமரிக்கிறது. வாயில் செரிமானம் துவங்குவது முதல் பெருங்குடலில் கழிவாக வெளியேற்றப்படும் வரை 

ஒவ்வொரு 

         நிலையிலும் மண்ணீரல் 

         முக்கியப் பங்காற்றுகிறது.


🔸

   பிற

              உறுப்புகள்


நுரையீரல்,     

         

            சிறுநீரகம், 


இருதயம் 

                    

போன்ற உறுப்புக்களும் செரிமானத்தில் மறைமுகப் பங்காற்றுகின்றன. செரிமானத்தில் உணவு செரிக்கப்படும் போது அது எரிக்கப்படுகிறது. அங்கு காற்றின் பங்கு முக்கியமானது. 

முழு உடலிற்கும் நேரடியாகக் காற்றையும், 

காற்று ஆற்றலை அளிப்பது நுரையீரல் ஆகும். 

அதே போல, உணவை நாம் வாயில் இடுவதற்கும் முன்பாக அதன், மணம் மூக்கின் வழியே உள்ளே போகிறது. அவ்வாறு நுரையீரலின் வெளிப்புற உறுப்பான மூக்கு உள்ளே அனுப்பும் மணம் உமிழ் நீர்ச் சுரப்பில் முக்கியப் பங்காற்றுகிறது. செரிமானத்தின் 

           துவக்கமே மூக்கில் 

        இருந்து தான் துவங்குகிறது.


🔸


செரிமான இயக்கத்தில் நீர்த்தேவை மிக முக்கியமானது. உடலில் எங்கெல்லாம் நீர்த்தேவை ஏற்படுகிறதோ அதை தாகம் மூலம் அறிவிப்பதும், உணவில் உள்ள 

நீர் ஆற்றலை பிரித்து முழு உடலுக்கு அளிப்பதும் சிறுநீரகத்தின்  

         முக்கியமான வேலையாகும். செரிமானத்தில் சிறுநீரகத்தின் வேலையை இன்னும் எளிமையாகப் புரிந்து கொள்ளலாம். சிறுநீரகம் பாதிக்கப்பட்ட நோயாளிக்கு 

பசி உணர்வே இருக்காது. அப்படியே சாப்பிட்டாலும் உணவை செரிக்கிற தன்மை உடலிற்கு குறைந்து போயிருக்கும். செரிமானத்தின் முக்கியத் தேவையான 


🔸

நீர்ச் 

   செரிமானத்தை நடத்துவது 

        சிறுநீரகம் ஆகும்.


🔸

அதே போல, இதயம். செரிமானத்திற்குத் தேவையான வெப்பத்தை அளிப்பதும், உணவில் இருந்து கிடைக்கும் வெப்பத்தை 

முழு உடலுக்கு அளிப்பதும் இதயத்தின் வேலையாகும். செரிமானத்தின் இறுதியில் கிடைக்கும் 

உயிர் வேதியியல் பொருட்களை இரத்தத்தின் மூலம் முழு உடலிற்கும் கிடைக்கக் செய்வது இதயம் ஆகும். 


🔸

மேற்கண்ட 

முக்கிய உறுப்புகள் அல்லாமல் இன்னும் சிறு உறுப்புகளும் செரிமானத்தில் பங்கேற்கின்றன. அதில் சில உறுப்பு  குடல்வால். சிறுகுடலும், பெருங்குடலும் சந்திக்கும் பகுதியில்தான் அப்பெண்டிஸ் 

                 என்ற குடல்வால் அமைந்துள்ளது. பெருங்குடலிற்குள் செல்லும் கழிவுகளில் இருந்து சத்துக்களைப் பிரிந்தெடுப்பதற்கு, குடல்வாலில்    

         சுரக்கப்படும் நீர் 

பயன்படுகிறது.


🔸

நம் உடலில் 

உள்ள ஒவ்வொரு அணுவும் 

உடலில் நிகழும் எல்லா இயக்கங்களிலும் பங்கு பெறுகின்றன. 

அது போலவே, செரிமானம் என்பது தனித்தனியான உறுப்புகள் தொடர்பான தனி வேலையில்லை. முழு உடலும், 

அதன் உறுப்புகளும் பங்கு பெறும் ஒருங்கிணைந்த இயக்கம் தான் செரிமானம். உடலில்  

ஐந்து  மூலகங்களும்

(நிலம்,நீர், நெருப்பு, காற்று, மரம்) 

தம் உறுப்புகளின் வாயிலாக நடத்தும் ஆற்றல் பெறும் இயக்கமே செரிமானம் ஆகும்.


🔸

உடலின் 

ஒட்டு மொத்த இயக்கத்தையும் முழுமையாகப் புரிந்து கொள்வதற்காக, மண்டல வாரியான பகுப்பு பயன்படுகிறது. மண்டலங்கள் 

மூலம் நாம் புரிந்து கொள்வது உடல் இயக்கத்தின் 

ஒரு பகுதிதான் என்பதையும், உடலின் 

ஒவ்வொரு இயக்கத்திலும் 

முழு உடலும் ஒருங்கிணைந்து பங்கேற்கிறது என்பதையும் மனதில் கொள்ள வேண்டும். இந்த அடிப்படையை 

நாம் மறந்து விடும் போது உடலை உயிரற்ற இயந்திரமாக பார்க்கும் தவறான பார்வைக்குள் சிக்கிக் கொள்வோம்.


🔸

        நாளை....


 இரத்த

        சுற்றோட்ட

            மண்டலம்....


🔸

நன்றி 


அக்குபங்சர் மருத்துவர்

அ.உமர் பாரூக் 

M.Acu, M.Sc(Psy), D.Litt,

Sunday, 25 October 2020

LIVER FUNCTIONS IN OUR BODY


 



LIVER  FUNCTIONS IN OUR BODY

இரவு 11 மணி முதல் அதிகாலை 3 மணி வரை பித்தப்பை மற்றும் கல்லீரல் நேரம். இது இரத்தத்தை தூய்மைப்படுத்தும் நேரம்.

இந்த நேரத்தில் கல்லீரல் உச்சி முதல் பாதம் வரையில் உள்ள இரத்தங்களை தன்னிடம் வரவழைத்து அதில் உள்ள நச்சுக்களை முறிக்கும் வேலையை செய்வான்.

முறிக்கப்பட்ட நச்சுக்களை ஒரு மில்லியன் வடிப்பான்களை(Nephrons) தன்னகத்தே கொண்ட சிறுநீரகம் நச்சுக்களை வடித்து சிறுநீர்ப்பைக்குள் தள்ளிவிடுவான்.

பின் காலை சிறுநீர் செல்லும் வேளையில், விடிய விடிய இரத்தத்தை தூய்மை செய்யும் போது பிரிக்கப்பட்ட நச்சுக்கள் அனைத்தும் சிறுநீர்பை வெளியேற்றிவிடுவான். அதனால் தான், காலை போகும் முதல் சிறுநீர் பழுப்பு நிறம் மற்றும் நாற்றம் நிறைந்ததாக உள்ளது.

அது அனைத்தும் கல்லீரலால் முறிக்கப்பட்ட நச்சுக்கள். புடுங்கும் ஆணி அனைத்தும் தேவை இல்லாத ஆணி தான். எனவே இதை பிடித்து பரிசோதனை செய்ய வேண்டிய எந்த அவசியமும் இல்லை.

பாருங்கள் உறுப்புகள் எப்படி ஒற்றுமையாக இயங்குகிறது என்று. ஒன்று பட்டால் உண்டு வாழ்வு என்பதை உடல் உறுப்புகளிடம் இருந்து நாம் கற்றுக்கொள்ளலாம்.

கல்லீரல் உங்கள் இரத்தத்தை தூய்மை செய்யும் இந்த வேளையில்

நீங்கள்

இரவுப் பணியில் இருந்தாலோ !

உணவை அமுக்கிக்கொண்டு இருந்தாலோ !

கண் விழித்திருந்தாலோ !

தொலைக்காட்சி பார்த்துக்கொண்டிருந்தாலோ !

கைப்பேசி நோண்டிக்கொண்டிருந்தாலோ !

கதை பேசிக்கொண்டிருந்தாலோ !

ஏதேனும் யோசனை செய்து கொண்டிருந்தாலோ !

போர்வை இழுத்து தலையுடன் போத்தி, யார் யார் என்ன என்ன Status வைத்திருக்கிறார்கள் என பார்த்துக்கொண்டிருந்தாலோ !

கல்லீரல் இரத்தத்தை துய்மை செய்யும் வேலை ஸ்தம்பித்துவிடும். இந்த வேலை நடக்காது.

முட்டி முட்டி முடிந்தவரை இரத்தத்தை தூய்மை செய்ய முயற்சிப்பான், அவன் நேரத்தை நீங்கள் அபகரித்து அவனுக்கு நேரம் தர மாட்டீர்கள், பின் மீண்டும் அடுத்த நாள் அவன் நேரத்திற்காக காத்திருப்பான்.

நீங்கள் அடுத்த நாளும் கல்லீரல் நேரத்தில் தூங்குவதை தவிர அனைத்து சேட்டைகளும் செய்து கொண்டிருப்பீர்கள்.

மீண்டும் முட்டி முட்டி முடிந்தவரை இரத்தத்தை தூய்மை செய்ய முயற்சிப்பான். அவன் நேரத்தை நீங்கள் அபகரித்து அவனுக்கு நேரம் தர மாட்டீர்கள், பின் மீண்டும் அடுத்த நாள் அவன் நேரத்திற்காக காத்திருப்பான்.

மீண்டும் உங்களின் சேட்டைகள் தொடரும்.

இப்படி தொடர்ந்து நடக்கும் போது என்ன ஆகும் தெரியுமா ?

கல்லீரல் இரத்தத்தை தூய்மை செய்யும் வேலையில், நீங்கள் தூங்காமல் வேறு ஏதேனும் செய்து கொண்டிருந்தால், இரத்தத்தில் உள்ள நச்சுக்கள் வெளியேறாமல் இரத்தத்திலேயே தங்கிவிடுகிறது.

ஒரு கண்ணாடி டம்ளரில் தண்ணீர் எடுத்துக்கொள்ளுங்கள். அதில் ஏதாவது ஒரு பொடி போட்டு கலந்துகொண்டே இருந்தால் அந்த நீரின் அடர்த்தி அதிகரித்து திடமாகுமா ? அல்லது திரவமாகவே இருக்குமா ?

திடமாகும் அல்லவா. அதேப்போல் தான்.

நீங்கள் இரவு தூங்காமல், கல்லீரலுக்கு அதன் நேரத்தை கொடுக்காததால், நச்சை முறிக்க நேரம் இல்லாமல், நச்சுக்கள் அனைத்தும் இரத்தத்திலேயோ தங்கி, இரத்தம் சாக்கடை போல் கெட்டியாக மாறிவிடுகிறது.

கெட்டியான இந்த இரத்தத்தை இதயம் Pump செய்ய சிரமப்பட்டு வேகம் குறையும். இந்த நேரத்தில் நீங்கள் ECG எடுத்து பார்த்தால் இதயம் Low pump rate காட்டும். உடனே உங்களுக்கு இதயக்கோளாறு என்று சொல்லிவிடும் ஆங்கில மருத்துவம்.

பிரச்சனை இதயத்திலா ? அல்லவே அல்ல

Low pump rate ற்கு காரணம் கெட்டியான இரத்தம்.

கெட்டியான இரத்தத்திற்கு காரணம் நீங்கள் தூங்காமல் இருந்தது.

இப்பொழுது பிரச்சனை எங்கு என்று பாமரன் கூட அறிவான்.

இரவு தூங்காமல், இப்படி இரத்தம் கெட்டியாகி கழிவுகள் இரத்தத்திலேயே தங்கிவிடுவதால் நச்சு வெளியேறாத இந்த இரத்தம் செல்லும் இடமெல்லாம் பல்வேறு விதமான நோய்களை உருவாக்கிவிடுகிறது.

என்ன நோய் என்று கேட்கிறீர்களா ? ஒரு வரியில் சொல்ல வேண்டும் என்றால் உலகில் உள்ள அனைத்து நோய்களும் என்று சொல்லலாம். ஆம் இது தான் நோய்களுக்கு மிக முக்கிய காரணம்.

நீங்கள் என்ன தான் இயற்கையில் விளைந்த உணவுகளை எடுத்தாலும். இரவு நேரம் கழித்து உறங்கினால் உங்களுக்கும் இதே நிலை தான்.

உணவில் மட்டும் அல்ல, வாழ்க்கை முறையிலும் வர வேண்டும் மாற்றம்.

சிலர் சிரித்துக்கொண்டே சொல்வார்கள் பகலில் தூங்கி சமன் செய்து விடுவேன் என்று நீங்கள் சமன் செய்யவில்லை உங்களுக்கு நீங்களே சமாதி கட்டிக்கொள்கிறீர்கள்.

இரவு தூங்கினால் மட்டுமே இரத்தம் தூய்மை பெறும் உடல் உஷ்ணம் குறையும் பகலில் தூங்கினால் நோய் தான் வரும். பகலில் அரை மணி நேரம் ஓய்வு எடுக்கலாமே தவிர தூங்க கூடாது.

No photo description available.