Saturday 30 November 2019

T.R.RAMACHANDRAN ,TAMIL LEGEND ACTOR BORN 1917 JANUARY 9-1990 NOVEMBER 30



T.R.RAMACHANDRAN ,TAMIL LEGEND ACTOR 
BORN 1917 JANUARY 9-1990 NOVEMBER 30



டி. ஆர். இராமச்சந்திரன் (சனவரி 9, 1917[1] - நவம்பர் 30, 1990) பழம்பெரும் தமிழ்த் திரைப்பட நடிகர் ஆவார்.[2][3] கிட்டத்தட்ட 150 திரைப்படங்களில் கதாநாயகனாகவும், பிற முக்கிய வேடங்களிலும், துணை வேடங்களிலும் நடித்துள்ளார். எந்த வேடத்தில் நடித்தாலும், நகைச்சுவை நடிகராகவே இவரின் நடிப்பு பெரும்பாலும் அமைந்திருந்தது.
வாழ்க்கைச் சுருக்கம்
இராமச்சந்திரனின் கரூர் மாவட்டத்திலுள்ள திருக்காம்புலியூரில் விவசாயியாக இருந்த ரங்காராவ், ரங்கம்மாள் ஆகியோருக்கு 1917 சனவரி 9 இல் பிறந்தார். இவருக்கு இரு சகோதரர்கள். நான்கு வயதிலேயே தாய் இறக்கவே தந்தை மறுமணம் செய்து கொண்டார். இராமச்சந்திரன் பாட்டியாரின் ஊரான குளித்தலையில் உள்ள பள்ளிக்கூடத்தில் படித்தார்.[4]

நாடகங்களில் நடிப்பு
இராமச்சந்திரனுக்குப் படிப்பில் ஈடுபாடு இருக்கவில்லை. குடும்ப நண்பர் இராகவேந்திரராவ் என்பவரின் நாடக அனுபவங்களைக் கேட்ட இராமச்சந்திரனுக்கு நாடகங்களில் நடிக்க விருப்பமேற்பட்டது. தந்தையின் அனுமதியுடன், 1936 ஆம் ஆண்டில் மதுரையில் ஜகந்நாத அய்யர் நடத்தி வந்த ‘பாலமோகன ரஞ்சித சங்கீத சபா‘ என்ற நாடகக் கம்பனி கொல்லத்தில் முகாமிட்டிருந்த போது அவர்களது நாடகங்களில் சிறிய வேடங்களில் நடித்தார். இக்கம்பனி சில காலத்திலேயே மூடப்பட்டதை அடுத்து உள்ளூரைச் சேர்ந்த மணி ஐயர் என்பவர் இக்கம்பனியை நடத்தி வந்தார். இவருடன் நாடகக் கம்பனியில்
பணியாற்றிய எஸ். வி. வெங்கட்ராமன் (பின்னாளில் பிரபலமான இசை அமைப்பாளர்) புதிதாகத் தொடங்கிய நாடகக் கம்பெனி ஒன்றில் ராமச்சந்திரனும் அவரது குழுவினரும் சேர்ந்தனர். கருநாடகத்தில் கோலார் நகரில் தங்கியிருந்து நாடகங்களை நடத்தினர். அங்கும் அவர்களுக்குப் பெரும் நட்டம் ஏற்படவே, வெங்கட்ராமன் திரைப்பட வாய்ப்புகளை எதிர்பார்த்து பெங்களூர் சென்றார்.[4]

திரைப்படங்களில் நடிப்பு
வெங்கட்ராமன் பெங்களூரில் ஏ. வி. மெய்யப்பச் செட்டியாரை சந்தித்தார். அவரது பிரகதி பிக்சர்ஸ் திரைப்பட நிறுவனம் நந்தகுமார் என்ற திரைப்படத்தை தயாரித்து வந்தது. இத்திரைப்படத்தில் நடிப்பதற்கு வெங்கட்ராமனின் நாடகக் கம்பெனி நடிகர்கள் அனைவரும் ஒப்பந்தம் செய்யப்பட்டனர். டி. ஆர். ராமச்சந்திரன் டி. ஆர். மகாலிங்கத்திற்கு நண்பனாக நடித்தார்.[4] 1938 இல் வெளிவந்த இப்படம் வெற்றி பெற்றது. அதன் பின்னர் இரண்டாண்டுகள் எந்த வாய்ப்பும் இல்லாமல் காலத்தைக் கழித்த இராமச்சந்திரனுக்கு, வாயாடி திரைப்படத்தில் மாதுரிதேவியுடன் நடிப்பதற்கு வாய்ப்புக் கிடைத்தது.[4] பின்னர் நவீன மார்க்கண்டேயா, திருவள்ளுவர், வானரசேனை, ஆகிய படங்களில் நடித்தார்.[4] 1941-ல், மெய்யப்ப செட்டியாரின் தயாரிப்பில் வெளியான சபாபதி என்ற முழு நீள நகைச்சுவைத் திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்தார். இப்படம் பெரு வெற்றி பெற்றதை அடுத்து டி. ஆர். இராமச்சந்திரனின் புகழும் பரவியது. தொடர்ந்து பல படங்களில் நடித்த இராமச்சந்திரன், ஏவிஎம் ஸ்டூடியோ முதன் முதலாக 1947 இல் தயாரித்த நாம் இருவர் படத்தில் நகைச்சுவை வேடத்தில் நடித்தார். வாழ்க்கை (1949) என்ற வெற்றிப் படத்தில் வைஜயந்திமாலாவுக்கு சோடியாக நடித்தார்.[5] பி. ஆர். பந்துலு தயாரித்த கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி படத்தில் டி.ஆர்.ராமச்சந்திரன் கதாநாயகனாக நடித்தார். சிவாஜி கணேசன் இரண்டாவது கதாநாயகனாக நடித்தார்.[6]

படங்கள் தயாரிப்பு

ராமச்சந்திரன் 1954 ஆம் ஆண்டில் சொந்தத்தில் படக்கம்பெனி தொடங்கி ‘பொன் வயல்’ என்ற படத்தைத் தயாரித்தார். இதில், ராமச்சந்திரனின் ஜோடியாக அஞ்சலிதேவி நடித்தார். இத்திரைப்படத்திலேயே சீர்காழி கோவிந்தராஜன் பின்னணிப் பாடகராக அறிமுகமானார். எழுத்தாளர் தேவன் எழுதிய கோமதியின் காதலன் என்ற கதையை அதே பெயரில் திரைப்படமாகத் தயாரித்து, சாவித்திரியுடன் சோடியாக நடித்தார்.[5]

சொந்த வாழ்க்கை
டி. ஆர். இராமச்சந்திரனின் திருமணம் 1948-ல் நடந்தது. ஜெயந்தி, வசந்தி என்று 2 மகள்கள். திரைப்படத்துறையில் இருந்து ஓய்வு பெற்ற பின்னர், அமெரிக்காவில் மகளுடன் வசித்து வந்தார். அங்கு அவர் 1990 ஆம் ஆண்டில் காலமானார்.[6]

டி.ஆர்.ராமச்சந்திரன் ஹீரோ, சிவாஜி செகண்ட் ஹீரோ - டி.ஆர்.ஆர் நினைவு தினக் கட்டுரை

'கண்ணால பேசிப் பேசிக் கொல்லாதே...காதால கேட்டுக் கேட்டுச் செல்லாதே...'என்ற பாடலில் நடிகர் டி.ஆர்.ராமச்சந்திரனின் உடல் மொழியை ரசிக்காதவர்களே இருக்க முடியாது. 1940-ம் ஆண்டுகளில் தமிழ் சினிமாவில் நகைச்சுவை கதாபாத்திரங்களில் கோலோச்சியவர் டி.ஆர். செல்வந்தர் குடும்ப இளைஞர்களைப் பிரதிபலிக்கும் கேலியான கதாபாத்திரங்களில் வெளுத்துக் கட்டியவர். முட்டாள்தனம், புத்திசாலித்தனம், குறும்புத்தனம், அப்பாவித்தனம், வெட்கம் கலந்த காதல் உணர்ச்சி என கலவையான உடல் மொழிக்குச் சொந்தக்காரர். ஒருவிதமான பதற்றம் கலந்த இவரது நகைச்சுவை உணர்ச்சி தமிழ் சினிமா ரசிகர்களைக் கட்டிப் போட்டது.
காமெடி நடிகர்களுக்குத் தனியாகக் கதை எழுதி நாயகனாக்குவது என்பதை அப்போதே தொடங்கிவைத்தவர் டி.ஆர். இவர் ஹீரோவாக நடித்த, 'கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி' படத்தில் சிவாஜியே செக்கண்ட் ஹீரோதான். இந்தப் படத்தில் சிவாஜிக்கு ஜோடி பத்மினி என்றால், டி.ஆர்க்கு ஜோடி ராகினி. வைஜெயந்திமாலா, அஞ்சலிதேவி, சாவித்ரி எனப் பல முன்னணி கதாநாயகிகள் இவருக்கு ஜோடியாக நடிக்கத் தயங்கவில்லை. 

கரூர், திருக்காம்புலியூர் கிராமத்தில் 1917ம் ஆண்டு பிறந்தார் டி.ஆர். ராமச்சந்திரன். அப்பா ரங்காராவ் விவசாயி. சிறுவயதிலேயே அம்மாவை இழந்த டி.ஆர்.க்கு பள்ளிப் படிப்பு சுத்தமாகவே பிடிக்கவில்லை. திண்ணைப் பள்ளியில் படிக்கப் பிடிக்காமல் காணாமல் போய்விடுவார். பிறகு தேடிப் பிடித்துக் கூட்டி வருவார்கள். பிறகு குளித்தலையில் உள்ள குருகுலப் பள்ளியில் சேர்க்கப்பட்டார். ' எனக்கு படிப்பு வேண்டாம். நாடகத்தில் நடிக்க வேண்டும்' என்ற கோரிக்கையை வைத்தார். காரணம். குடும்ப நண்பர் இராகவேந்திரராவ் என்பவரின் நாடக அனுபவங்களைக் கேட்ட இராமச்சந்திரனுக்கு நாடகங்களில் நடிக்க விருப்பமேற்பட்டது.

பரீட்சை முடிந்து விடுமுறைக்கு வரும்போதெல்லாம், மகனை வாய்ப்பாட்டு கற்றுக்கொள்ள வைத்தார் அப்பா. வாய்ப்பாட்டுடன் ஆர்மோனியமும் கற்றுக்கொடுத்தவர் கரூர் ராகவேந்திராவ். இவர் நாடகங்களில் பின்பாட்டுப் பாடும் பாடகர். அவர் நடிப்பது போன்ற பாவனைகளுடன் பாடக் கற்றுக்கொடுக்க, ராமச்சந்திரனுக்கு நடிப்புமீது காதல் வந்துவிட்டது. பிறகு அப்பா அனுமதியுடன் ராகவேந்திரராவுடன் ஒட்டிக்கொண்ட ராமச்சந்திரன் திருச்சி, தஞ்சாவூர், மதுரை என்று நாடகக் குழுக்களுடன் ஊர் சுற்றியிருக்கிறார். பிறகு மதுரையில் தங்கியபோது அங்கே நாடகக் கம்பெனியில் சேர அனுமதி கேட்டு அப்பாவுக்குக் கடிதம் எழுத, மகனின் விருப்பத்துக்கு அவர் தடை போடவில்லை.

தந்தையின் அனுமதியுடன், 1936 ஆம் ஆண்டில் மதுரையில் ஜகந்நாத அய்யர் நடத்தி வந்த ‘பாலமோகன ரஞ்சித சங்கீத சபா‘ என்ற நாடகக் கம்பெனி கொல்லத்தில் முகாமிட்டிருந்த போது, அவர்களது நாடகங்களில் சிறிய வேடங்களில் நடித்தார். ஜெகன்நாத ஐயர் வாத்தியாராகவும் முதலாளியாகவும் இருந்து நடத்திவந்த இந்த நாடகக் குழுவில் ஸ்திரீ பார்ட் போடுபவர்களுக்குத் தோழியாக நடிக்க ஆரம்பித்தார் ராமச்சந்திரன். தங்க இடம், மூன்று வேளை சாப்பாடு உட்பட மாதம் 3 ரூபாய் சம்பளத்துடன் கலை வாழ்க்கையைத் தொடங்கினார். இவரது நடிப்புத்திறமையைக் கண்ட சக நடிகரான எஸ்.வி. வெங்கடராமன் (மீரா படத்துக்கு இசையமைத்தவர்) பின்னாளில் தனியாக நாடக கம்பெனி தொடங்கியபோது 25 ரூபாய் சம்பளத்துடன் ராமச்சந்திரனை அழைத்துக் கொண்டு வந்தார். அங்கும் அவர்களுக்குப் பெரும் நட்டம் ஏற்படவே, வெங்கட்ராமன் திரைப்பட வாய்ப்புகளை எதிர்பார்த்து பெங்களூர் சென்றார்.

வெங்கட்ராமன், பெங்களூரில் ஏ. வி. மெய்யப்பச் செட்டியாரை சந்தித்தார். அவரது பிரகதி பிக்சர்ஸ் திரைப்பட நிறுவனம் நந்தகுமார் என்ற திரைப்படத்தைத் தயாரித்து வந்தது. இத்திரைப்படத்தில் நடிப்பதற்கு வெங்கட்ராமனின் நாடகக் கம்பெனி நடிகர்கள் அனைவரும் ஒப்பந்தம் செய்யப்பட்டனர். காரைக்குடியில் வெங்கட்ராமன் குழு திறமையைக் கண்டார் ஏ.வி.மெய்யப்பச் செட்டியார். அதிலும், தனித்துத் திறமையைக் காட்டிய ராமச்சந்திரனை செட்டியாருக்கு ரொம்பவே பிடித்துப் போய்விட்டது. டி.ஆர். ராமச்சந்திரன், டி. ஆர். மகாலிங்கத்திற்கு நண்பனாக நடித்தார். 1938 இல் வெளிவந்த இப்படம் வெற்றி பெற்றது. அதன் பின்னர் இரண்டாண்டுகள் எந்த வாய்ப்பும் இல்லாமல் காலத்தைக் கழித்த இராமச்சந்திரனுக்கு, வாயாடி திரைப்படத்தில் மாதுரிதேவியுடன் நடிப்பதற்கு வாய்ப்புக் கிடைத்தது. பின்னர் நவீன மார்க்கண்டேயா, திருவள்ளுவர், வானரசேனை ஆகிய படங்களில் நடித்தார். 

இரண்டாம் உலகப்போர் சமயத்தில் மக்கள் மன இறுக்கத்துடன் இருந்தார்கள். இந்த நேரத்தில் நகைச்சுவைப் படங்கள் ரசிகர்களுக்கு நல்ல ரிலீஃபாக இருக்கும் என்று நினைத்த மெய்யப்பச் செட்டியார், பம்மல் சம்பந்த முதலியார் எழுதிய நகைச்சுவை நாடகமான ‘சபாபதியை’, அதே பெயரில் படமாக்குவது என்று முடிவு செய்தார். ஏற்கனவே சபாபதி நாடகத்தில் நடித்திருந்த ராமச்சந்திரனை நாயகனாக்கினார் செட்டியார்.

1941-ல், மெய்யப்ப செட்டியாரின் தயாரிப்பில் வெளியான சபாபதி என்ற முழு நீள நகைச்சுவைத் திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்தார். இப்படம் வெற்றி பெற்றதை அடுத்து டி. ஆர். இராமச்சந்திரனின் புகழும் பரவியது. தொடர்ந்து பல படங்களில் நடித்த இராமச்சந்திரன், ஏவிஎம் ஸ்டூடியோ முதன் முதலாக 1947 இல் தயாரித்த நாம் இருவர் படத்தில் நகைச்சுவை வேடத்தில் நடித்தார். வாழ்க்கை (1949) என்ற வெற்றிப் படத்தில் வைஜயந்திமாலாவுக்கு ஜோடியாக நடித்தார். 

படத்தின் ஹீரோ என்றால், நல்ல பலசாலியாக, வாள்வீச்சு தெரிந்திருக்க வேண்டும் என்கிற கோட்பாடுகளை எல்லாம் தகர்த்தவர் டி.ஆர். சபாபதி படத்திற்காக 140 ரூபாய் சம்பளம் தரப்பட்டது. 100 நாட்களுக்கு மேல் திரையிடப்பட்ட இப்படம் வெற்றிப் படமாகி பெரும் புகழ் தந்தது. இந்தப் படத்தில் 5 பாடல்களை சொந்தக் குரலில் பாடினார் டி.ஆர். சபாபதி படத்திற்கான மொத்த பட்ஜெட் 32,000 ரூபாய்.

டி.ஆர். ராமச்சந்திரன் நடித்த படங்களில் இணைந்த சில கலைஞர்களுக்கு, அப்படமே முதல் படமாக அமைந்தது. வாழ்க்கை (1949) படத்தில் நடித்த வைஜெயந்திமாலாவுக்கு அதுவே முதல் படமாக அமைந்தது. வானம்பாடி (1963) படத்தில் "யாரடி வந்தார் என்னடி சொன்னார்' என்ற பாடல் காட்சியில் நடனமாடியதன் மூலம் ஜோதிலட்சுமி, தனது முதல் திரைப்பயணத்தை துவங்கினார். வித்யாபதி (1946) படத்தில்தான் முதன் முதலாக எம்.என்.நம்பியார் அறிமுகமானார். சகடயோகம் படமே வி.என்.ஜானகி நாயகியாக நடித்த முதல் படம். பொன்வயல் படத்தில்தான் சீர்காழி கோவிந்தராஜன் முதன் முதலில் பாடினார். தயாரிப்பாளர் ஏவி.மெய்யப்ப செட்டியார் இயக்கிய முதல் படம் சபாபதி (1941) (செட்டியாருடன் சேர்ந்து இயக்கியவர் ஏ.டி.கிருஷ்ணசாமி).

திரைப்படங்களிலிருந்து ஓய்வுபெற்றபின், அமெரிக்காவில் தன் மகள்கள் ஜெயந்தி, வசந்தி ஆகியோருடன் வசித்து வந்தார். 1990-ம் ஆண்டு, இதய அறுவை சிகிச்சையின்போது காலமானார். அவர் மறைந்தாலும் அவரது உருண்டையான கண்களையும் வித்தியாசமான உடல் மொழியையும் ரசிகர்களால் மறக்கவே முடியாது.
நன்றி : சினிமா விகடன் Last updated : 17:46 (30/11/2015)


கோலிவுட்டின் முதல் காமெடி ஹீரோ டி.ஆர்.ராமச்சந்திரன்!
January 9, 2019 by admin
டி. ஆர். ராமச்சந்திரன் இன்னிய யூத்-களுக்கு தெரியாத பெயர்

பழம்பெரும் தமிழ்த் திரைப்பட நடிகரான இவர் கிட்டத்தட்ட 150 திரைப்படங்களில் கதாநாயகனா கவும், பிற முக்கிய வேடங்களிலும், துணை வேடங்களிலும் நடித்துள்ளார். எந்த வேடத்தில் நடித்தாலும், நகைச்சுவை நடிகராகவே இவரின் நடிப்பு பெரும்பாலும் அமைந்திருந்தது.

1940-ம் ஆண்டுகளில் தமிழ் சினிமாவில் நகைச்சுவை கதாபாத்திரங்களில் கோலோச்சியவர் டி.ஆர்.

அதிலும் செல்வந்தர் குடும்ப இளைஞர்களைப் பிரதிபலிக்கும் கேலியான கதாபாத்திரங்களில் வெளுத்துக் கட்டியவர். முட்டாள்தனம், புத்திசாலித்தனம், குறும்புத்தனம், அப்பாவித்தனம், வெட்கம் கலந்த காதல் உணர்ச்சி என கலவையான உடல் மொழிக்குச் சொந்தக்காரர். ஒரு விதமான பதற்றம் கலந்த இவரது நகைச்சுவை உணர்ச்சி தமிழ் சினிமா ரசிகர்களைக் கட்டிப் போட்டது.



இன்னும் சொல்லப் போனால் காமெடி நடிகர்களுக்குத் தனியாகக் கதை எழுதி நாயகனாக்குவது என்பதை அப்போதே தொடங்கி வைத்தவர் இந்த ரியல் டி.ஆர்-தான். இவர் ஹீரோவாக நடித்த, ‘கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி’ படத்தில் சிவாஜியே செகண்ட் ஹீரோதான். அந்தப் படத்தில் சிவாஜிக்கு ஜோடி பத்மினி என்றால், டி.ஆர்க்கு ஜோடி ராகினி.  மேலும் வைஜெயந்திமாலா, அஞ்சலி தேவி, சாவித்ரி எனப் பல முன்னணி கதாநாயகிகள் இவருக்கு ஜோடியாக நடிக்கத் தயங்கவில்லை.

அப்போது இரண்டாம் உலகப்போர் சமயத்தில் மக்கள் மன இறுக்கத்துடன் இருந்தார்கள். இந்த நேரத்தில் நகைச்சுவைப் படங்கள் ரசிகர்களுக்கு நல்ல ரிலீஃபாக இருக்கும் என்று நினைத்த மெய்யப்பச் செட்டியார், பம்மல் சம்பந்த முதலியார் எழுதிய நகைச்சுவை நாடகமான ‘சபாபதியை’, அதே பெயரில் படமாக்குவது என்று முடிவு செய்தார். மேலும் ஏற்கனவே சபாபதி நாடகத்தில் நடித்திருந்த ராமச்சந்திரனை நாயகனாக்கினார் செட்டியார்.

1941-ல், மெய்யப்ப செட்டியாரின் தயாரிப்பில் வெளியான சபாபதி என்ற முழு நீள நகைச்சுவைத் திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்தார். இப்படம் வெற்றி பெற்றதை அடுத்து டி. ஆர். ராமச் சந்திரனின் புகழும் பரவியது. தொடர்ந்து பல படங்களில் நடித்த ராமச்சந்திரன், ஏவிஎம் ஸ்டூடியோ முதன் முதலாக 1947 இல் தயாரித்த நாம் இருவர் படத்தில் நகைச்சுவை வேடத்தில் நடித்தார். வாழ்க்கை (1949) என்ற வெற்றிப் படத்தில் வைஜயந்திமாலாவுக்கு ஜோடியாக நடித்தார்.

ஒருப் படத்தின் ஹீரோ என்றால், நல்ல பலசாலியாக, வாள்வீச்சு தெரிந்திருக்க வேண்டும் என்கிற கோட்பாடுகளை எல்லாம் தகர்த்தவர் டி.ஆர். (தகவல் திரட்டு : கட்டிங் கண்ணையா)

சபாபதி படத்திற்காக 140 ரூபாய் சம்பளம் தரப்பட்டது. 100 நாட்களுக்கு மேல் திரையிடப்பட்ட இப் படம் வெற்றிப் படமாகி பெரும் புகழ் தந்தது. இந்தப் படத்தில் 5 பாடல்களை சொந்தக் குரலில் பாடினார் டி.ஆர். சபாபதி படத்திற்கான மொத்த பட்ஜெட் 32,000 ரூபாய்.

டி.ஆர். ராமச்சந்திரன் நடித்த படங்களில் இணைந்த சில கலைஞர்களுக்கு, அப்படமே முதல் படமாக அமைந்தது. வாழ்க்கை (1949) படத்தில் நடித்த வைஜெயந்திமாலாவுக்கு அதுவே முதல் படமாக அமைந்தது. வானம்பாடி (1963) படத்தில் “யாரடி வந்தார் என்னடி சொன்னார்’ என்ற பாடல் காட்சியில் நடனமாடியதன் மூலம் ஜோதிலட்சுமி, தனது முதல் திரைப்பயணத்தை துவங்கினார். வித்யாபதி (1946) படத்தில்தான் முதன் முதலாக எம்.என்.நம்பியார் அறிமுகமானார். சகடயோகம் படமே வி.என்.ஜானகி நாயகியாக நடித்த முதல் படம். பொன்வயல் படத்தில்தான் சீர்காழி கோவிந்தராஜன் முதன் முதலில் பாடினார். தயாரிப்பாளர் ஏவி.மெய்யப்ப செட்டியார் இயக்கிய முதல் படம் சபாபதி (1941) (செட்டியாருடன் சேர்ந்து இயக்கியவர் ஏ.டி.கிருஷ்ணசாமி).

திரைப்படங்களிலிருந்து ஓய்வுபெற்றபின், அமெரிக்காவில் தன் மகள்கள் ஜெயந்தி, வசந்தி ஆகியோருடன் வசித்து வந்தார். 1990-ம் ஆண்டு, இதய அறுவை சிகிச்சையின்போது காலமானார். அவர் மறைந்தாலும் அவரது உருண்டையான கண்களையும் வித்தியாசமான உடல் மொழியையும் ரசிகர்களால் மறக்கவே முடியாது.

ஹேப்பி பர்த் டே டிஆர்

நவம்பர் 30. டி.ஆர்.ராமச்சந்திரனின் நினைவு தினம்.
===
நகைச்சுவை நடிகர்களின் பெரும் புகழைப் பார்த்து அவர்களுக்கு ஏற்ற கதையை எழுதி, நாயகனாக்குவது இன்றைய கண்டுபிடிப்பு அல்ல. அந்தக் காலத்திலேயே தொடங்கிவிட்டது. அப்படித் தொடங்கி வைத்தவர்களில் ஒருவர்தான் டி.ஆர். ராமச்சந்திரன். இவர் ஹீரோவாக நடித்த ‘கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி’ படத்தில், அன்று முன்னணி நாயகனாக வளர்ந்துவிட்ட சிவாஜி கணேசன் இரண்டாவது ஹீரோவாக நடித்தார் என்றால், பார்த்துக்கொள்ளுங்கள். இதில் சிவாஜிக்கு ஜோடி பத்மினி என்றால் ராமச்சந்திரனுக்கு ஜோடி ராகினி. நகைச்சுவை நாயகனாக அடைந்த வெற்றியால், ராகினி மட்டுமல்ல, வைஜெயந்திமாலா, அஞ்சலிதேவி, சாவித்ரி, ஸ்ரீரஞ்சனி எனப் பல முன்னணிக் கதாநாயகிகள் இவருக்கு ஜோடியாக நடிக்கத் தயங்கவில்லை. டி.ஆர். ராமச்சந்திரன் நாடகம் வழியாக சினிமாவுக்கு வந்தவர். 25 படங்களில் கதாநாயகனாக நடித்த இவர், அதன் பிறகு நகைச்சுவை, குணச்சித்திர கதாபாத்திரங்களில் சுமார் 30 ஆண்டு காலம் நிலையான செல்வாக்குடன் சாதனை படைத்தவர்.

காவிரி மைந்தர்

கரூரிலிருந்து 22 கிலோ மீட்டர் தொலைவில் இருக்கும் திருக்காம்புலியூர் என்ற கிராமத்தில் 1917-ல் பிறந்தவர். அப்பா ரங்காராவ் எளிய விவசாயி. ராமச்சந்திரன் நான்கு வயது சிறுவனாக இருக்கும்போதே அம்மாவை இழந்தார். தாயை இழந்த ஏக்கம் தெரியக் கூடாது என்பதற்காக மகனுக்கு அதிக செல்லம் கொடுத்து வளர்த்தார் அப்பா. ஆறு வயதில் திண்ணைப் பள்ளியில் சேர்த்தார். ஆனால் பள்ளிக்கூடத்திலிருந்து திடீர் திடீரென்று ராமச்சந்திரன் காணாமல் போய்விடுவார். தேடிப்போனால், ஆடுகள், கோழிகளோடு அன்புடன் பேசிக்கொண்டிருப்பார்.

உள்ளூர் பள்ளிக்கூடம் சரிவராது என முடிவு செய்து குளித்தலையில் ஒரு குருகுலப்பள்ளியில் சேர்த்துவிட்டு வந்துவிட்டார் அப்பா. வீட்டு ஞாபகமாகவே இருந்த ராமச்சந்திரனுக்கு படிப்பு பாகற்காய் ஆனது. பள்ளிக் கல்வியைக் கஷ்டப்பட்டு முடித்தவரைத் திருச்சி நேஷனல் கல்லூரியில் சேர்க்க நினைத்திருக்கிறார் அப்பா. ஆனால் படிப்பு வேண்டாம் எனக்கு நடிப்பு போதும் என்று கிளம்பிவிட்டார் ராமச்சந்திரன்.

பாட்டு போட்டுக் கொடுத்த ரூட்

பரீட்சை முடிந்து விடுமுறைக்கு வரும்போதெல்லாம், மகனை வாய்ப்பாட்டு கற்றுக்கொள்ள வைத்தார் அப்பா. வாய்ப்பாட்டுடன் ஆர்மோனியமும் கற்றுக்கொடுத்தவர் கரூர் ராகவேந்திராவ். இவர் நாடகங்களில் பின்பாட்டுப் பாடும் பாடகர். அவர் நடிப்பது போன்ற பாவனைகளுடன் பாடக் கற்றுக்கொடுக்க, ராமச்சந்திரனுக்கு நடிப்புமீது காதல் வந்துவிட்டது. பிறகு அப்பா அனுமதியுடன் ராகவேந்திரராவுடன் ஒட்டிக்கொண்ட ராமச்சந்திரன் திருச்சி, தஞ்சாவூர், மதுரை என்று நாடகக் குழுக்களுடன் ஊர் சுற்றியிருக்கிறார். பிறகு மதுரையில் தங்கியபோது அங்கே நாடகக் கம்பெனியில் சேர அனுமதி கேட்டு அப்பாவுக்குக் கடிதம் எழுத, மகனின் விருப்பத்துக்கு அவர் தடை போடவில்லை.

3 ரூபாயிலிருந்து 25 ரூபாய்
மதுரையின் புகழ்பெற்ற நாடக கம்பெனிகளில் ஒன்றான ‘பாலமோகன ரஞ்சித சங்கீத சபா’வில் நடிகராகச் சேர்ந்தார் ராமச்சந்திரன். ஜெகன்நாத ஐயர் வாத்தியாராகவும் முதலாளியாகவும் இருந்து நடத்திவந்த இந்த நாடகக் குழுவில் ஸ்திரீ பார்ட் போடுபவர்களுக்குத் தோழியாக நடிக்க ஆரம்பித்தார் ராமச்சந்திரன். தங்க இடம், மூன்று வேளை சாப்பாடு உட்பட மாதம் 3 ரூபாய் சம்பளத்துடன் கலை வாழ்க்கையைத் தொடங்கினார். இவரது நடிப்புத்திறமையைக் கண்ட சக நடிகரான எஸ்.வி. வெங்கடராமன் (மீரா படத்துக்கு இசையமைத்தவர்) பின்னாளில் தனியாக நாடக கம்பெனி தொடங்கியபோது 25 ரூபாய் சம்பளத்துடன் ராமச்சந்திரனை அழைத்துக் கொண்டு வந்தார்.

நண்பரின் கம்பெனியில் சேர்ந்த அதிர்ஷ்டம் உடனடியாக அவருக்குப் படவாய்ப்பைக் கொண்டுவந்தது. காரைக்குடியில் வெங்கட்ராமன் குழு திறமையைக் கண்ட ஏ.வி.மெய்யப்பச் செட்டியார், பிரகதி பிக்சர்ஸ் கம்பெனியுடன் இணைந்து தயாரித்த ‘நந்தகுமார்’படத்தில் நடிக்க வெங்கட்ராமன் நாடகக் குழுவில் இருந்த அத்தனை பேரையும் ஒப்பந்தம் செய்தார். இதுதான் ராமச்சந்திரன் நடித்த முதல்படம். இதில் சின்னக் கதாபாத்திரம் என்றாலும் தனித்துத் திறமையைக் காட்டிய ராமச்சந்திரனை மெய்யப்பச் செட்டியாருக்குப் பிடித்துப் போய்விட்டது.

திருப்புமுனை

இரண்டாம் உலகப்போர் சமயத்தில் மக்கள் மன இறுக்கத்துடன் இருந்தார்கள். இந்த நேரத்தில் நகைச்சுவைப் படங்கள் ரசிகர்களுக்கு நல்ல ரிலீஃபாக இருக்கும் என்று நினைத்த மெய்யப்பச் செட்டியார், பம்மல் சம்பந்த முதலியார் எழுதிய நகைச்சுவை நாடகமான ‘சபாபதியை’அதே பெயரில் படமாக்குவது என்று முடிவு செய்தார். நாடக வடிவில் இருந்ததைத் திரைக்கு மாற்றி எழுதும்படி ஏ.டி. கிருஷ்ணசாமியைக் கேட்டுக்கொண்டார். ஏற்கனவே சபாபதி நாடகத்தில் நடித்திருந்த ராமச்சந்திரனை நாயகனாக்கினார் செட்டியார்.

மிகப் பெரும் வெற்றியை பெற்ற இந்தப் படம், ராமச்சந்திரனுக்குப் பெரிய திருப்புமுனையாக அமைந்தது. அதன்பிறகு ஏ.வி.மெய்யப்பச் செட்டியாரின் செல்லப் பிள்ளையானார் ராமச்சந்திரன். உலக போர் முடிந்த பிறகு சென்னைக்கு ஏ.வி.எம் ஸ்டூடியோ இடமாற்றம் செய்யப்பட்டது. இதன்பிறகு ஏ.வி.எம் தயாரித்த பெரும்பாலான வெற்றிப் படங்களில் ராமச்சந்திரனுக்காவே ரகளையான காமெடி கதாபாத்திரங்கள் முக்கியவத்துடன் உருவாக்கப்பட்டன.

உயர்தட்டு நகைச்சுவைக்கு உதாரணம்

40களில் செல்வச் செழிப்புடன் வளர்ந்த மேட்டுக்குடி இளைஞர்களைப் பிரதிபலிக்கும் கேலியான கதாபாத்திரங்களில் வெளுத்துக் கட்டியவர். முட்டாள்தனம், புத்திசாலித்தனம் ஆகியவற்றின் கலவையுடன் குறும்புத்தனம், அப்பாவித்தனம், வெட்கமும் கொஞ்சம் அம்மாஞ்சித்தனமும் கலந்த காதல் உணர்ச்சி, இவற்றுடன் தனது அபாரமான உடல்மொழியால் ரசிகர்களை வயிறுகுலுங்கச் சிரிக்கவைத்த நகைச்சுவைக்கு டி. ஆர். ராமச்சந்திரன் சிறந்த உதாரணம். கதாநாயகிகள் தங்களது கண்களை நடிக்கப் பயன்படுத்துகிறார்களோ இல்லையோ, இவர் தனது உருண்டையான கண்களைப் பயன்படுத்தினார். இவர் உருட்டி விழிப்பதைப் பார்த்ததுமே ரசிகர்கள் விழுந்து விழுந்து சிரிக்க ஆரம்பித்தார்கள். அவர் ஏற்றுக்கொண்ட பெரும்பாலான பாத்திரங்கள் மேட்டுக்குடி வாழ்வை நகைச்சுவையாக்கின.

50க்கும் அதிகமான படங்களில் தனக்கான பாடல்களைப் பாடி நடித்த இவர், ரசனையுடன் பல படங்களைத் தயாரித்தும் நடித்திருக்கிறார். திரைப்படங்களிலிருந்து ஓய்வுபெற்றபின் அமெரிக்காவில் தன் மகள்களுடன் வசித்துவந்தார். கடந்த 1990-ம் ஆண்டு, இதய அறுவை சிகிச்சையின்போது காலமானர். அவர் மறைந்தாலும் அவரது உருண்டையான கண்களையும் வித்தியாசமான உடல் மொழியையும் ரசிகர்களால் மறக்கவே முடியாது

VANI JEYARAM ,INDIAN SINGER LEGEND BORN 1945 NOVEMBER 30


VANI JEYARAM ,INDIAN SINGER 
LEGEND BORN 1945 NOVEMBER 30




வாணி ஜெயராம் (பிறப்பு: நவம்பர் 30, 1945) திரைப்படப் பின்னணிப் பாடகி. இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் உட்பட பல இந்திய மொழிகளில் பாடியுள்ளார்.[2][3]வாணி ஜெயராம் இந்திய திரைப்படப் பின்னணிப் பாடகி ஆவார். இவரின் இசைப்பயணம் 1971ஆம் ஆண்டு குட்டி ௭ன்ற இந்தி திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். அன்று முதல் நான்கு தலைமுறைகளாக பின்னணி பாடி வருகிறார். இந்திய திரைப்படப் பாடல்களை பாடியிருந்தாலும் தனி ஆல்பம் மற்றும் பக்திப்பாடல்களை பாடியுள்ளார். வெளிநாடுகள் சென்று பல இசை நிகழ்ச்சிகளை வழங்கியுள்ளார்.

சொந்த வாழ்க்கை மற்றும் பின்னணி[மூலத்தைத் தொகு]
வாணிஜெயராம் தமிழ்நாட்டில் உள்ள வேலூரில் ஒரு இசைக்குடும்பத்தில் பிறந்தவர். இவரின் தாயார் பெயர் பத்மாவதி.

தொடக்கம்[மூலத்தைத் தொகு]

தமிழ்த் திரையுலகில் முதன்முதலாக 1974ஆம் ஆண்டு தீர்க்கசுமங்கலி ௭ன்ற திரைப்படத்தில் கவிஞர் வாலி இயற்றிய மல்லிகை ௭ன் மன்னன் மயங்கும் பாடலை ம. சு. விசுவநாதன் இசையில் பாடினார்.அதன் பின்னர் ஏழு சுவரங்களுக்குள், கேள்வியின் நாயகனே, ௭ன்னுள்ளே ௭ங்கும் ஏங்கும் கீதம், யாரது செல்லாமல் நெஞ்சள்ளி போவது, கவிதை கேளுங்கள் கருவில், போன்ற கடினமான பாடல்களை தமிழ்த்திரையுலகில் பதிவுசெய்துள்ளார். இவர் திரையிசை, பாப், கஜல், பஜனை, நாட்டுப்புறப் பாடல்களும் பாடியுள்ளார்.இவர் தமிழ்நாட்டை சேர்ந்த பாடகி ௭ன்றாலும் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி, மராத்தி, ஒடியா, குஜராத்தி மற்றும் பெங்காளி ௭ன பல இந்திய மொழிகளில் பாடல்களை பாடியுள்ளார். வாணிஜெயராம் மூன்று முறை சிறந்த பின்னணி பாடகிக்கான இந்திய தேசிய விருதுகளைப் பெற்றுள்ளார். இவர் தமிழ்நாடு, ஆந்திரா, ஒடிசா மற்றும் குஜராத் மாநில விருதுகளையும் சிறந்த பின்னணிப் பாடகிக்கான விருதுகளை பெற்றுள்ளார்.

பாடல்கள்[மூலத்தைத் தொகு]

1.நித்தம் நித்தம் நெல்லு சோறு! 2.மல்லிகை என் மன்னன் மயங்கும்.. 3.என்னுள்ளில் எங்கோ ஏங்கும் ஜீவன்.. 4.ஏழு ஸ்வரங்களுக்குள் எத்தனை பாடல்! 5.என் கல்யாண வைபோகம் உன்னோடு தான்! 6.வேறு இடம் தேடி போவாளோ? தனிப்பாடல்கள் தவிர டூயட் பாடல்களை முன்னணி பாடகர்களோடு பாடியிருக்கிறார். "ஒரே நாள் உன்னை நான் நிலாவில் காண்கிறேன்", "பாரதி கண்ணம்மா", "பூந்தென்றலே...", "நினைவாலே சிலை செய்து உனக்காக வைத்தேன்" என இவர் பாடிய ஒவ்வொன்றும் முத்து முத்தனாவை.[4], இவ்வளவு சிறந்த பாடல்கள் பலவற்றை கொடுத்த வாணி ஜெயராம் அவர்களுக்கு இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துகள்!

பெற்ற தேசிய விருதுகள்[மூலத்தைத் தொகு]
1975 – தேசிய விருது – சில பாடல்கள் (அபூர்வ ராகங்கள்)
1980 – சிறந்த பின்னணி பாடகிக்கான தேசிய விருது – சில பாடல்கள் (சங்கராபரணம்)
1991 – சிறந்த பின்னணி பாடகிக்கான தேசிய விருது – "அனத்திநீயர ஹர" (சுவாதி கிரணம்)



oddities
miscellaneous
Published:30 Nov 2016 1 PMUpdated:30 Nov 2016 1 PM
வாணி ஜெயராமின் இந்த க்ளாஸிக்குகளை கேட்டிருக்கிறீர்களா? #HBDvanijayaram
Vikatan Correspondent
வாணி ஜெயராமின்  இந்த க்ளாஸிக்குகளை கேட்டிருக்கிறீர்களா?  #HBDvanijayaram
வாணி ஜெயராமின் இந்த க்ளாஸிக்குகளை கேட்டிருக்கிறீர்களா? #HBDvanijayaram
பாடகி வாணி ஜெயராம் அவர்களின் பிறந்தநாள் இன்று. தன் குரலினால் மக்களின் மனதை மயக்க வைத்தவர் இவர். இதுவரை 10,000 க்கும் மேற்பட்ட பாடல்களை பாடியுள்ளார். வேலூரில் பிறந்து வளர்ந்த இவர், வேலை பார்த்தது வங்கி ஊழியராக... வேலை மாற்றம் காரணமாக மும்பை சென்ற இவரது திறமையை அடையாளம் கண்டு கொண்டது ஹிந்தி திரையுலகம். பின்பு, தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம், குஜராத்தி,மராத்தி, ஒடியா என பல்வேறு மொழிகளில் பல்லாயிரக்கணக்கான பாடல்களைப் பாடியுள்ளார். அதுமட்டுமல்லாமல், பாடிய பல மொழிகளில் அம்மாநிலத்தின்  உயரிய விருதுகளை பெற்றிருக்கிறார்.

கிராமிய பாடலாக இருந்தாலும் சரி, கர்நாடக பாடலாக இருந்தாலும் சரி, பாடலின் நயங்களால் மக்களை அந்த இடத்திலிருந்தே உணர வைப்பதில் வல்லவர். தமிழக இசை வரலாற்றில் நீங்கா இடம் பிடித்தவர். காதல் பாடலாக இருந்தாலும், பெண்களின் மனதை வெளிப்படுத்தும் பாடலாக இருந்தாலும் , டூயட்  பாடலாக இருந்தாலும், அந்த காதாபாத்திரமாகவே மாறி பாடக்கூடியவர். இந்நாளில் அவருடைய  சிறந்த பாடல்கள்  சிலவற்றை பார்ப்போம்.

நித்தம் நித்தம் நெல்லு சோறு!





தமிழ் ரசிகர்களால் மறக்கவே முடியாத பாடல் இது. பாடல் தொடக்கத்தில் இருந்து முடிவு வரை அப்படியே ஒரு கிராமத்து பெண் பாடுவது போலவே பாடி  முடித்திருப்பார். இந்தப்பாடலை கேட்டு முடித்த பிறகும்  அதிலிருந்து மீண்டு வர சில நேரம் ஆகும். அப்படியான  இசையும், குரலும், வரிகளும் பின்னிப் பிணைந்து இருக்கும். 

"பச்சரிசி சோறு.. உப்பு கருவாடு...

சின்னமனூரு வாய்க்கா செலு கொண்ட மீனு

குருத்தான மொல கீற வாடாத சிறு கீற

நெனைக்கையிலே எனக்கு இப்போ எச்சி ஊறுது

அள்ளி தின்ன ஆச வந்து என்னை மீறுது"

என இளையராஜாவின் இசையில்,  கங்கை அமரனின் வரிகளில் மனதை மயக்கும் பாடல் இதோ!



மல்லிகை என் மன்னன் மயங்கும்....









கணவனுக்கு பிடித்த மல்லிகை பூவை சூடிக்கொள்ளவா ? என மனைவி கேட்டு பாடும்  பாடல் இது.

"குளிர் காற்றிலே தளிர்ப் பூங்கொடி

கொஞ்சிப்  பேசியே அன்பை பாராட்டுது

என் கண்ணன் துஞ்சத்தான்

என் நெஞ்சம் மஞ்சம் தான்

கையோடு நான் அள்ளவோ"

என மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் அவர்களின் இசையில் கவிஞர் வாலி எழுதிய பெண்களின் மனம் கவர்ந்த பாடல் இதோ!



என்னுள்ளில்  எங்கோ ஏங்கும் ஜீவன்...







ஒரு பெண் காதல் வயப்படும்போது உணரும் உணர்ச்சிகளை குரலிலேயே தந்து அசத்தியிருப்பர் வாணி ஜெயராம். ரோசப்பூ  ரவிக்கைக்காரி படத்தில் வரும் இப்பாடல்  காட்சிக்கு பின்னே ஓடும். ஆனால்  கதாநாயகியின் உணர்ச்சிகளை பாட்டு வெளிப்படுத்தும்.

"என்னுள்ளில் எங்கோ எங்கும் கீதம்

ஏன் கேட்கிறது ஏன் கேட்கிறது

ஆனால் அதுவும் ஆனந்தம்"

என தொடங்கும் இப்பாடல் கவிஞர் புலமைப்பித்தன் எழுதி இசைஞானி இளையராஜா இசையமைத்ததாகும்.



ஏழு ஸ்வரங்களுக்குள் எத்தனை பாடல்!







வாணி ஜெயராம் அவர்கள்,  இந்த பாடலுக்காக தேசிய விருது பெற்றார். அபூர்வ ராகங்கள் படத்தின் டைட்டில் சாங் இது. இந்த பாடல் தவிர்த்து, கேள்வியின் நாயகனே பாடலும் வாணி ஜெயராம் பாடியதுதான். படத்தின் முதல் பாடலையும்  இறுதிப் பாடலையும் வாணி ஜெயராமிடம் இயக்குநர் ஒப்படைத்திருக்கிறார் என்றால் பாருங்கள், அவர் மேல் வைத்திருந்த நம்பிக்கையின் அளவுகோலை!  இந்த பாடலை  தத்துவப் பாடல் என்றே  சொல்லலாம். கவிஞர் கண்ணதாசனின்,

"ஆரம்பத்தில் பிறப்பும் உன் கையில் இல்லை

இதில் அடுத்தடுத்த நடப்பும் உன் கையில் இல்லை

பாதை வகுத்த பின்பு பயந்தென்ன லாபம் - அதில்

பயணம் நடத்திவிடு மறைந்திடும் பாவம்"

என்ற வரிகளில், எம்.எஸ்.விசுவநாதன் இசையில் அந்த பாடல் இதோ!



என் கல்யாண வைபோகம் உன்னோடு தான்!









காதலனை பார்த்து உருகி பாடும் பாடல் இது. காதலை கூறும்போது வெட்கத்துடன் நளினத்துடன் கூறுகிறாள் இந்த நங்கை. அது வேறு யாருமல்ல நம் பாடகி தான்.

"உறங்காமல் நெஞ்சம் உருவாக்கும் ராகம்

உனக்கல்லவோ கேட்பாயோ மாட்டாயோ

சுகம் கொண்ட சிறு வீணை விரல் கொண்டு மீட்டு

மாலையும் அதிகாலையும் நல்ல சஙீதம் தான்………"

என இளையராஜாவின் இசையில்  நனைந்திட அப்பாடல்  இதோ!



வேறு இடம் தேடி போவாளோ?






பாடல்களில் பல்வேறு உணர்ச்சிகளை கொடுப்பவர் வாணி ஜெயராம்  என்று முன்பே கூறியதற்கு உதாரணம் இப்பாடல். இயலாமையில், வாழ்க்கையின் விளிம்பில் நிற்கும் பெண்ணின் மனக்குரலை பதிவு  செய்திருக்கிறார். உள்ளார்ந்த உணர்வுகளை வெளிப்படுத்தும் பாடல்கள் மனதை கணமாக்கும்.

"சிறு  வயதில் செய்த பிழை

சிலுவையென சுமக்கின்றாள்

இவள் மறுபடியும் உயிர்ப்பாளோ

மலரெனவே முகிழ்ப்பாளோ"

என்ற ஜெயகாந்தனின்  கனத்த வரிகளோடு எம்.எஸ்.விஸ்வநாதன் இசையில் அந்த பாடல் இதோ!

தனிப்பாடல்கள் தவிர டூயட் பாடல்களை முன்னணி பாடகர்களோடு பாடியிருக்கிறார். "ஒரே நாள் உன்னை நான் நிலாவில் காண்கிறேன்", "பாரதி கண்ணம்மா", "பூந்தென்றலே...", "நினைவாலே சிலை செய்து உனக்காக வைத்தேன்" என இவர் பாடிய ஒவ்வொன்றும் முத்து முத்தனாவை. இவ்வளவு சிறந்த பாடல்கள் பலவற்றை கொடுத்த வாணி ஜெயராம் அவர்களுக்கு இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துகள்!

அ .அருணசுபா  

மாணவ பத்திரிகையாளர் 






புகழ்பெற்ற பழைய திரைப்படங்களை மீண்டும் வெளியிடும்போது, அந்தப் படத்தில் ‘ஹிட்டடித்த’ பாடல்களின் பட்டியலை அச்சிட்டு.. ‘இனிய பாடல்கள் நிறைந்த படம்’ என்று விளம்பரப்படுத்துவார்கள்.

ஆச்சரியகரமாக.. 1974-ம் வருடம் தமிழ்ப் புத்தாண்டு தினத்தில் ரிலீஸ் ஆன ‘தீர்க்க சுமங்கலி’ படத்தின் சுவரொட்டியில், படம் வெளிவரும் முன்பே பிரபலமாகியிருந்த ‘மல்லிகை என் மன்னன் மயங்கும் பொன்னான மலரல்லவோ’ என்ற பாடலின் முதல் வரியைக் குறிப்பிட்டு விளம்பரம் செய்திருந்தார்கள். அப்படி விளம்பரம் செய்யத் தூண்டிய குரல், அன்று துளிர்விட்டிருந்த புதிய பாடகியான வாணி ஜெயராமினுடையது.

இந்தப் படத்துக்கு முன்பே 1973-ம் வருடம் வெளிவந்த ‘வீட்டுக்கு வந்த மருமகள்’, ‘சொல்லத்தான் நினைக்கிறேன்’ ஆகிய இரு படங்களில் வாணி ஜெயராம் பாடி இருந்தாலும் அவரது குரலை இல்லம் தோறும் கொண்டு சேர்த்த பெருமை ‘தீர்க்க சுமங்கலி’க்குக் கிடைத்தது.

1945 - நவம்பர் 30-ம் தேதி வேலூரில் ‘கலைவாணி’ என்கிற வாணி ஜெயராம் பிறந்தார். இசைப் பரிச்சயமும் பக்தியும் மிக்க தமிழ்க் குடும்பம் அவருடையது. கடலூர் ஸ்ரீனிவாச அய்யங்கார், டி.ஆர். பாலசுப்ரமணியம், ஆர்.எஸ். மணி ஆகியோரிடம் கர்னாடக இசையைப் பயின்றுவந்த சிறுமி வாணிக்கு சிலோன் வானொலியில் ஒலிபரப்பான லதா மங்கேஷ்கர், முகம்மது ரபி, மன்னா டே ஆகியோரது பாடல்களைக் கேட்கக் கேட்கத் தானும் திரைப்படங்களில் பாடவேண்டும் என்ற ஆசை துளிர்விட்டது.

பாலிவுட்டில் அறிமுகம்

சென்னை வந்து ராணி மேரிக் கல்லூரியில் பட்டப் படிப்பை முடித்தார். பாரத ஸ்டேட் வங்கியில் வேலை கிடைத்தது. திருமணத்துக்குப் பிறகு பணி மாறுதல் வாங்கிக்கொண்டு மும்பையில் வசித்தார். வாணியின் இசை ஆர்வத்தை ஊக்குவிக்கும் கணவராக ஜெயராம் அமைந்ததால் உஸ்தாத் அஹ்மத் கானிடம் முறையாக ஹிந்துஸ்தானி இசை கற்றுக்கொண்டார். இசை அவருக்கு வானளாவிய தன்னம்பிக்கையைத் தந்தது. வங்கி வேலையை ராஜினாமா செய்துவிட்டு முழுமூச்சாக இசையில் இறங்கினார்.

திரையிசையில் இயங்கியவர்கள் அவரது குரலையும் பாடும் திறனையும் கேட்டு ‘இன்று போய் நாளை வா’ என்று சொல்ல முடியாமல் தவித்தார்கள். வசந்த் தேசாய் முந்திக்கொண்டார்.

1971-ம் வருடப் புத்தாண்டு தினத்தில் வெளிவந்த ‘குட்டி’ (GUDDI) என்ற இந்திப் படத்தில், வசந்த் தேசாயின் இசை அமைப்பில் ‘போலே ரே பப்பி ஹரா’ என்ற ‘மியான் மல்ஹார்’ ராகப் பாடலைப் பாடி திரையுலகில் பின்னணிப் பாடகியாக அறிமுகமானார். வாணி ஜெயராமின் குரல் அறிமுகமும் அந்தப் படத்தில் நாயகியாக அறிமுகமான ஜெயா பாதூரியின் (பின்னாளில் அமிதாப் பச்சனின் மனைவி ஆனார்) குடும்பப் பாங்கான தோற்றமும் இணைந்து பெரும் மாயத்தை செய்ய ரசிகர்கள் கிறங்கிப் போனார்கள்.

அறிமுகப் பாடலே அபார வரவேற்பைப் பெற்றது. அந்த ஒரு பாடலே வாணி ஜெயராமை முன்னணிப் பாடகியரின் வரிசையில் இடம்பெறச் செய்தது. அதன்பின் ஒரு தமிழ்க் குரல் இந்தியில் கொண்டாடப்படும்போது தமிழில் தவறவிடுவார்களா? அதுவும் திரைப் பாடல்கள் அனைத்தும் கவிதைகளுக்கு இணையான இடத்தில் உயர்ந்து நின்ற இசைப் பொற்காலத்தில், அவை வாணி ஜெயராமின் குரலில், இனிமை கூடி ஒலிக்கும்போது கொண்டாடாமல் இருப்பார்களா?

இன்று ரசிகர்களால் ‘வாணி அம்மா’ என்று அழைக்கப்படும் அவரது திரையிசைப் பயணம் எழுதி முடிக்க முடியாத சாதனைகளை உள்ளடக்கியது. ஏனெனில் அவர் பாடாத இந்திய மொழியே இல்லை எனும் அளவுக்குச் சாதனைகள் படைத்திருக்கிறார். மதங்களைக் கடந்து பக்திப் பாடல்களையும் தனி ஆல்பங்களிலும் பாடியிருக்கிறார்.

தெய்விகத் தன்மையும் சங்கதிகளும்

‘ஏழு ஸ்வரங்களுக்குள்’, ‘மழைக்கால மேகம் மகராஜன் வாழ்க’, ‘முத்தமிழில் பாடவந்தேன்’ என அவர் பாடிய எந்தப் பாடலை எடுத்துக்கொண்டாலும் அதில் நயமும் இனிமையும் கைகோத்துக்கொண்டிருக்கும். இவற்றுக்கெல்லாம் அடிநாதமாக ஒரு தெய்விகத் தன்மை குரலில் இழைந்தோடும். வாணி பாடும் சிறப்பம்சமே பாடல்களின் இடையில் அவர் வெளிப்படுத்தும் சங்கதிகள் தான். "இந்த இடத்தில் இந்த சங்கதி போடவேண்டும்" என்று தீர்மானித்துக்கொண்டு அவர் பாடமாட்டார். அவர் பாடிக்கொண்டே போவார். சங்கதிகள் தாமாகவே வந்து விழுந்துகொண்டே இருக்கும்.

‘அபூர்வ ராகங்கள்’ படத்தில் இடம்பெற்ற ‘ஏழு ஸ்வரங்களுக்குள்’ ‘சங்கராபரணம்’ படத்தில் இடம்பெற்ற ‘மானஸ ஸஞ்சரரே’, ‘ஸ்ருதிலயாலு’ தெலுங்குப் படத்தில் இடம்பெற்ற ‘ஆலோகயே ஸ்ரீ பாலகிருஷ்ணம்’ ஆகிய பாடல்களுக்காக மூன்று முறை அகில இந்திய சிறந்த பின்னணிப் பாடகிக்கான தேசிய விருதைப் பெற்றவர்.

‘புனித அந்தோனியார்’ படத்தில் ‘மண்ணுலகில் இன்று தேவன் இறங்கி வருகிறார்’, பி. சுசீலாவுடன் இணைந்து ‘பாத பூஜை’ படத்தில் ‘கண்ணாடி அம்மா உன் இதயம்’, ‘அந்தமான் காதலி’யில் ‘நினைவாலே சிலை செய்து’, ‘சினிமாப் பைத்தியம்’ படத்தில் ‘என் உள்ளம் அழகான வெள்ளித்திரை’, ‘தங்கப்பதக்க’த்தில் ‘தத்திச் செல்லும் முத்துக் கண்ணன் சிரிப்பு, ‘பாலாபிஷேக’த்தில் ‘ஆலமரத்துக் கிளி’ எனக் கேட்டதுமே இதயத்துள் ஈரம் படச் செய்யும் குரலினிமையுடன் அவர் பாடிய பாடல்களின் பட்டியல் மிகப் பெரிது.

உணர்வு நிலைகளின் ஊர்வலம்

குரலினிமைக்கு மட்டுமல்ல; கதாபாத்திரத்தின் உணர்ச்சிகளைத் தனது குரலை மாற்றாமலேயே கொண்டுவந்துவிடும் திறமை கைவரப் பெற்றிருந்தார். ஒரு பெண்ணின் விரக தாபத்தை வெளிப்படுத்தும் பாடல்களாக ‘ரோசாப்பூ ரவிக்கைக்காரி’ படத்தில் ‘என்னுள்ளே ஏதோ’, ‘அழகே உன்னை ஆராதிக்கிறேன்’ படத்தில் இடம்பெற்ற ‘நானே நானா’, ‘சிறை’ படத்தில் ‘நான் பாடிக்கொண்டே இருப்பேன்’ ஆகியவற்றைக் குறிப்பிடலாம். அதேபோல் காதலனால் ஏமாற்றப்பட்ட பெண்ணின் ஆற்றாமையைக்

குரலில் சித்தரிக்கும் ‘சவால்’ படத்தின் ‘நாடினேன்.. நம்பினேன்’, ‘சம்சாரம் அது மின்சாரம்’ படத்தின் ‘கட்டிக் கரும்பே கண்ணா’, ‘மயங்குகிறாள் ஒரு மாது’ படத்தில் ‘ஒருபுறம் வேடன். மறுபுறம் நாகம்’, ‘காலங்களில் அவள் வசந்தம்’ படத்தில் ‘மணமகளே உன் மணவறைக் கோலம்’ ஆகிய பாடல்களை எடுத்துக்காட்டலாம்.

தாய்மை அடைந்த பெண்ணின் பல்வேறு உணர்வு நிலைகளை வெளிப்படுத்தியதில் ‘திக்கற்ற பார்வதி’யின் ‘ஆகாயம் மழை பொழிஞ்சா’, ‘சொல்லத்தான் நினைக்கிறேன்’ படத்தின் ‘மலர்போல் சிரிப்பது பதினாறு’ ‘சாவித்திரி’ படத்தில் ‘வாழ்ந்தால் உன்னோடு வாழ்ந்திருப்பேன்’ ஆகிய பாடல்கள் சிறந்த உதாரணங்கள்.

மாற்று இல்லாத பாடகர்!

கடலில் அசைந்தாடும் படகைப் போல உள்ளத்தை அசைக்கும் வாணி ஜெயராமின் பல பாடல்கள் ஒன்று ‘மீனவ நண்பன்’ படத்தில் இடம்பெற்ற ‘பொங்கும் கடலோசை’. ‘அவன்தான் மனிதன்’ படத்தில் இடம்பெற்ற ‘எங்கிருந்தோ ஒரு குரல் வந்தது’ சரணங்களில் ஏற்ற இறக்கங்களுடன் ஜாலம் புரியும் பாடல். காதலர்களின் தேசிய கீதமாக நீண்ட காலம் ஒலித்த ‘ஒரே நாள் உனை நான்’ என்ற ‘இளமை ஊஞ்சலாடுகிறது’ படப் பாடலில் காதல் வழிந்தோடுவதைக் கேட்கமுடியும். இவருக்கு மாற்று யாருமில்லை என்று எண்ணத்தக்க வகையில் எல்லாப் பாடல்களிலும் அவர் வெளிப்படுத்தும் சஞ்சாரங்கள் பிரமிக்க வைப்பவை.

கிட்டத்தட்ட இந்தியாவின் அனைத்து மொழிகளிலும் பாடியிருக்கிறார் வாணி ஜெயராம். எந்த மொழியில் பாடினாலும் அவரது உச்சரிப்பு துல்லியமாக இருக்கும். "எல்லா பாஷைகளிலும் அவற்றினுடைய த்வனி தவறாமல் உச்சரிக்கும் வல்லமை பெற்ற வாணி ஒரு ஆயுட்கால பாடகியே" - என்று கவியரசு கண்ணதாசனால் பாராட்டப்பட்டவர். 30.11.2019 அன்று தனது 75-ம் வயதில் அடியெடுத்து வைக்கும் வாணி ஜெயராம், பெற்றோர் சூட்டிய பெயருக்கு அர்த்தம் சேர்த்துவிட்ட அபூர்வத் திறமையாளர்.

எப்படி வந்தது பெயர்?

எழுத்தாளர் சிவசங்கரியும் வாணி ஜெயராமும் சகோதரிகளைப்போல தோற்றமளிப்பார்கள். சிவசங்கரியின் எழுத்துக்கு வாணி ஜெயராம் ரசிகையாகவும் வாணி ஜெயராமின் குரலுக்கு சிவசங்கரி ரசிகையாகவும் இருக்க, பொது விழா ஒன்றில் சந்தித்துக்கொண்டபோது அறிமுகமாகிக்கொண்ட இருவரும் இன்றுவரை இணை பிரியா தோழிகள். வாணி ஜெயராம் பற்றி நெகிழ்ந்து எழுதியிருக்கும் சிவசங்கரி, கலைவாணி என்ற பெயர் அவருக்கு எப்படி வந்தது என்பதைப் பகிர்ந்திருக்கிறார்.

"வாணி அவர் வீட்டில், நிசப்தமான சூழ்நிலையில் ஆர்மோனியம் பின்னணியில் ஒலிக்க பஜன்களும், தும்ரியும் பாடுவதைக் கேட்பது ஓர் அலாதி அனுபவம்.

வாணியிடம் எனக்கு ரொம்பப் பிடித்த சமாசாரம் அவருடைய எளிமையான குணம். ஒரு ஆடம்பரம், ஒரு திமிர் பேச்சு, ஒரு பெருமைப் பீத்தல்? ம்ஹும்..! ஒன்றும் கிடையாது. யாராவது பாடச் சொன்னால் கொஞ்சம்கூட தயங்காமல் உடனேயே வாணி பாடிக் காட்டி நான் பலமுறை பார்த்துவிட்டேன்.

ஒருநாள் பேச்சுவாக்கில் 'கலைவாணி என்று உனக்கு எப்படி இத்தனை பொருத்தமாய் பேர் வைத்தார்கள்?' என்றேன். வாணி ஒரு நிமிஷம் பேசாமல் இருந்தார். அப்புறம் சொன்னார்,

"இது வரைக்கும் நான் யார் கிட்டவும் இதைச் சொன்னதில்லை; ஏன்னா விளம்பரத்துக்காக இல்லாததையும் பொல்லாததையும் சொல்ற மாதிரி சிலருக்குத் தோணலாம். ஆனா நா சொல்லப் போறது ஒரு சத்தியமான சம்பவம். நா எங்கப்பா அம்மாவுக்கு எட்டாவது பெண். நான் பிறந்ததுலே அவர்களுக்குக் கொஞ்சம் வருத்தம்தான். அதனால் பதினைஞ்சு நாள் வரைக்கும் புண்ணியாகவசனம் செய்யாமல், பேர்கூட வைக்காம இருந்தாளாம்.

அப்போ வீட்டுக்கு வந்த ஜோஸியர் ஒருத்தர் என் பிறந்த நேரத்தை வைத்து ஜாதகம் கணிச்சுட்டு ‘பூர்வ ஜென்மத்திலே தேனும் பாலுமா பகவானுக்கு அபிஷேகம் பண்ண பலனோட உங்கப் பெண் பிறந்திருக்கா, இவ சரஸ்வதி அம்சம், இவளோட பெருமை உங்களுக்குப் பிற்காலத்துலே புரியும்’னு சொன்னாராம். அதுக்கப்புறம் தான் அம்மா எனக்கு ‘கலைவாணி’னு பேர் வைச்சா’என்றாள். இன்றைக்கும் வாணியின் ஜாதகத்தில் அன்று ஜோஸியர் எழுதின குறிப்புகள் அப்படியே உள்ளன. அதை என் இரண்டு கண்களால் பார்த்தவள் நான்” என்று குறிப்பிட்டிருக்கிறார்.

- பி.ஜி.எஸ். மணியன்,
தொடர்புக்கு: pgs.melody@gmail.com | படங்கள் உதவி: ஞானம்





Vani Jairam (born as Kalaivani on 30 November 1945), also credited as Vani Jayaram, also fondly called as Meera of modern India, is an Indian singer. She is best known as a playback singer in South Indian cinema. Vani's career started in 1971 and has spanned over four decades. She has done playback for over thousand Indian movies recording over 10,000 songs. In addition, she has recorded thousands of devotionals and private albums and also participated in numerous solo concerts in India and abroad.[2]

Renowned for her vocal range and easy adaptability to any difficult composition, Vani has often been the choice for several composers across India through the 1970s until the late 1990s. Apart from Tamil, she has sung in several Indian languages, such as Hindi, Telugu, Malayalam, Kannada, Marathi, Odia, Gujarati and Bengali languages.[3]

Vani won the National Film Awards for Best Female Playback Singer three times and also has won State Government awards from the states of Odisha, Andhra Pradesh, Tamil Nadu and Gujarat.[3] In 2012, she was honored with the Filmfare Lifetime Achievement Award – South for her achievements in South Indian film music.[4] In July 2017 she was honored with the Best Female Singer at the NAFA 2017 event at New York City.[5]

Early life and career
Vani Jairam was born as Kalaivani in Vellore in Tamil Nadu, in a Tamil family of classically trained musicians as a fifth daughter in a family of six daughters and three sons. Her mother Padmavathi, trained under Ranga Ramunaja Iyengar, enrolled her into his classes where he taught her a few Muthuswami Dikshitar kritis. Later she was given a formal Carnatic training under the guidance of Kadalur Srinivas Iyengar, T. R. Balasubramanian and R. S. Mani. Vani was glued to the Radio Ceylon channel and was attracted towards Hindi film songs to the extent that she used to memorize and reproduce the entire orchestration of the songs that used to repeatedly play on the Radio.[6] At the age of 8, she gave her first public performance at the All India Radio, Madras.Vani Jairam was a student of Queen Mary's College in Madras University.[7][8] Post her studies, Vani was employed with the State Bank of India, Madras and later in 1967, she was transferred to the Hyderabad branch.[9]

Post her marriage in the late 1960s, Vani moved to Mumbai with her husband Jayaram to set up her family. Upon request, she was transferred to the Mumbai branch of her bank. Knowing her singing skills, Jayaram persuaded Vani to get trained in the Hindustani classical music and she got enrolled under Ustad Abdul Rehman Khan of the Patiala gharana. Her rigorous training under him made her quit from her bank job and take up music as her profession. She learnt the nuances of various vocal forms such as Thumri, Ghazal and Bhajan under Khan's tutelage and gave her first public concert in 1969.[10] In the same year, she was introduced to the composer Vasant Desai who was recording a Marathi album with singer Kumar Gandharv. Upon listening to her voice, Desai roped in her to sing the song "Runanubandhacha" for the same album along with Kumar Gandharv. The album released to much popularity among the Marathi audience and the duet song was well received. She sang with veteran vocalist of agra charan Pt. Dinkar Kaikini in movie "Meera". The music was given by none other than Pt. Ravi Shankar.[6]

Career
Telugu cinema
Vani's contribution towards Telugu cinema and devotional songs has been extensive and widespread. She recorded her first Telugu song for the film Abhimanavanthulu (1973). The song "Eppativalekaadura Naa Swami" composed by S. P. Kodandapani was a classical dance based song. Her songs for the film Pooja (1975) brought her to the forefront in Telugu cinema. The songs "Poojalu Cheya" and "Ennenno Janmala Bandham" became household hits and cemented her position. It was for the K. Viswanath's musical film Sankarabharanam (1979), Vani towered her popularity by singing five songs and winning her second National Film award for all the songs collectively. She was also awarded with Andhra Pradesh government's Nandi Award for Best Female Playback Singer for the same songs. She went on to collaborate with director Viswanath and music director K. V. Mahadevan for many films like Seetamalakshmi (1978), Sruthilayalu (1987), Sankarabharanam and Swati Kiranam. Later in 1990, the same team produced the film Swati Kiranam which was again musically noted and all the songs sung by Vani were received well. She received her third National Film Award for the film.

Apart from K. V. Mahadevan, Vani recorded many Telugu songs for Rajan-Nagendra, Satyam, Chakravarthy, M. S. Viswanathan and Ilaiyaraaja. She recorded most of the dubbed songs from Tamil composed by Ilaiyaraaja.

Telugu Songs
Year Film Song Composer(s) Co-Singer(s)
1975 Pooja "Anthata Nee Roopam" Rajan–Nagendra S. P. Balasubrahmanyam
"Ennenno Janmala"
"Ningi Nela Okatayeene"
"Poojalu Cheya Poolu"
1978 Maro Charitra "Vidhi Cheyu Vinthalanni" M. S. Viswanathan
Vayasu Pilichindi "Nuvvadigindi Enaadaina" Ilaiyaraaja
1979 Guppedu Manasu "Kanne Valapu Kannela Pilupu" M. S. Viswanathan S. P. Balasubrahmanyam
"Nenaa Paadanaa Paata"
1980 Sankarabharanam "Broche Varevaru Ra" K. V. Mahadevan S. P. Balasubrahmanyam
"Dorakunaa Ituvanti Seva"
"Manasa Sancharare"
"Paluke Bangaaramaayena"
"Ye Teeruga Nanu"
1981 Seethakoka Chiluka "Minneti Sooridu Vachenamma" Ilaiyaraaja S. P. Balasubrahmanyam
"Saagara Sangamame"
"Alalu Kalalu"(Duet) Ilaiyaraaja
"Alalu Kalalu"(Solo)
1987 Sankeertana "Devi Durga Devi" Ilaiyaraaja S. P. Balasubrahmanyam
Sruthilayalu Aalokaye Shree Bala" K. V. Mahadevan
"Inni Raasula Yuniki" S. P. Balasubrahmanyam
"Shri Gananatham" Purnachandar
1988 Swarnakamalam "Andela Ravamidhi" Ilaiyaraaja S. P. Balasubrahmanyam
Gharshana (D) "Rojalo Lethavannele" Ilaiyaraaja
"Oka Brundavanam"
"Kurisenu Virijallule" S. P. Balasubrahmanyam
1992 Swati Kiranam "Theli Manchu Karigindi" K. V. Mahadevan
"Pranati Pranati"
"Anatineeyara"
"Jaliga Jabilamma" K. S. Chithra
"Shruti Neevu"
"Konda Konallo Loyallo"
"Om Guru"
"Shivani Bhavani Sarvani"
"Vaishnavi Bhargavi"
Hindi cinema
Main article: List of Hindi songs recorded by Vani Jairam
Vani's good professional association with Vasant Desai resulted in her breakthrough with the film Guddi (1971) directed by Hrishikesh Mukherjee. Desai offered Vani to record three songs in the film amongst which the song "Bole Re Papihara", featuring Jaya Bachchan in the lead role, became a talk-of-the-town song and gave her instant recognition. Composed in Miyan Ki Malhar raag, the song showcased her classical prowess and subsequently fetching her many laurels and awards including the Tansen Samman (for best classical-based song in a Hindi film), the Lions International Best Promising Singer award, the All India Cinegoers Association award, and the All India Film-goers Association award for the Best Playback Singer in 1971. Her other song Humko Mann Ki Shakti Dena became a school prayer since the release of the song in 1971 and continues to be even now. She toured entire Maharashtra state accompanying her mentor, Desai, and taught many Marathi songs for school children.

She went on to sing a few songs each for music directors of Hindi cinema, which remain popular, including the Chitragupta song ,a classical Naushad compositions More Saajan Souten Ghar from Pakeezah (1972) and Dulhan Badi Jadugarni, a duet with Asha Bhosle in Aaina (1977)), Madan Mohan composition Pyar Kabhi Kam Na Karna Sanam, a duet with Kishore Kumar in the film Ek Mutthi Aasmaan (1973)), R. D. Burman song Zindagi Mein Aap Aaye, a duet with Mukesh in Chhalia (1973), Shyamji Ghanshyamji composition Teri Jheel Si Gehri from film Dhuan Ki Lakeer, a duet with Nitin Mukesh, and the solo song Aa Balam composed by Kalyanji Anandji in the film Dharm Aur Qanoon.

She sang several songs composed by O.P. Nayyar from the film Khoon Ka Badla Khoon (1978) including duets with Mohammed Rafi and also with Uttara Kelkar and Pushpa Pagdhare).She sang the duet song Maine Tumhe Paa Liya with Rafi composed by Laxmikant Pyarelal in Jurm Aur Sazaa, and a duet with Manna Dey in Parinay (1974) composed by Jaidev and the solo song Pee Kahan in Solva Sawan (1979) by Jaidev.

The song "Mere To Giridhar Gopal" in Meera (1979), composed by Pandit Ravi Shankar, won her first Filmfare Award for Best Female Playback Singer.[11] She recorded as many as 12 bhajans for the film Meera which became highly popular.

Tamil cinema
Main article: List of Tamil songs recorded by Vani Jairam
While Vani's popularity continued to soar in Bollywood cinema, she started getting offers from the South Indian industry. In 1973, she recorded her first Tamil song for the film Thayum Seiyum under the music direction of S. M. Subbaiah Naidu. However, the film remains unreleased till date and the song remained in the cans. Her first released song was a duet romantic song with T. M. Soundararajan for the film Veettukku Vandha Marumagal (1973). The song "Or Idam Unnidam" was composed by the duo Sankar Ganesh, with whom, Vani went on to record maximum songs in Tamil cinema. Immediately after this, she was employed by one of the most successful director-composer duos, K. Balachander and M. S. Viswanathan, for their successful film Sollathaan Ninaikkiren for a solo song "Malarpol Sirippathu Pathinaaru". Thus began her long association with the top rated music directors in Tamil cinema. Her biggest break came through the song "Malligai En Mannan Mayangum" from the film Dheerga Sumangali (1974), again composed by M. S. Viswanathan. The song received laurels and accolades for both its composition and vocal rendition. It was in the same year, she recorded a duet song with S. P. Balasubrahmanyam for music director Vijaya Bhaskar for the film Engamma Sapatham. It was later reported that Vani's voice featured in all the films which had Vijaya Bhaskar as the composer in both Tamil and Kannada film industries.

The year 1975 turned out to be the first most eventful year for Vani since she won her first National Film Award for Best Female Playback Singer for the songs she rendered in the film Apoorva Raagangal. The songs "Ezhu Swarangalukkul" and "Kelviyin Nayagane" made her popularity soar to heights and she became to be known as the singer who would always get selected to sing difficult compositions. She was flooded with singing offers from all the top rated music composers including M. S. Viswanathan, Kunnakkudi Vaidyanathan, Sankar Ganesh, V. Kumar, K. V. Mahadevan, G. K. Venkatesh and Vijaya Bhaskar. In 1977, she first recorded her voice for Ilaiyaraaja's composition in the film Bhuvana Oru Kelvi Kuri. She won her first Tamil Nadu State Film Award for Best Female Playback for the song "Naane Naana" composed by Ilaiyaraaja for the film Azhage Unnai Aarathikkiren (1979). With Ilaiyaraaja, Vani went on to record many popular songs in the 1980s for the films such as Mullum Malarum (1978), Rosappo Ravikaikaari (1979), Anbulla Rajinikanth (1984), Nooravathu Naal (1984), Vaidehi Kathirunthal (1984), Oru Kaidhiyin Diary (1985) and Punnagai Mannan (1986). In 1994, composer A. R. Rahman recorded her voice for the film Vandicholai Chinraasu for a duet song with S. P. Balasubrahmanyam. Later in 2014, she recorded a portion of the Thiruppugazh composed by Rahman, for the period film Kaaviyathalaivan and followed it with the song "Narayana" in the film Ramanujan.[12]

Vani recorded hundreds of Tamil songs both in solo and duet formats. Many of her duet songs have been recorded along with T. M. Soundararajan, P. B. Srinivas, K. J. Yesudas, S. P. Balasubrahmanyam and Jayachandran. Songs like "Ezhu Swarangalukkul", "Keliviyin Nayagane", "Ennulil Engo", "Yaaradhu Sollamal", "Megamae Megamae", "Kavidhai Kelungal", "Nadhamenum Kovililae", "Aana Kana" and "Sugamana Raagangale" are considered amongst the best compositions to be recorded in Vani's voice.

Malayalam cinema
Main article: List of Malayalam songs recorded by Vani Jairam
Vani Jayaram made her Malayalam debut in 1973 by recording the solo song "Sourayudhathil Vidarnnoru" composed by Salil Chowdhary for the film Swapnam.[13] The song became hugely popular giving a good credibility to Vani and gave her career a breakthrough. She went on to record over 600 songs in Malayalam cinema. Vani collaborated with all the popular Malayalam composers such as M. K. Arjunan, G. Devarajan, M. S. Viswanathan, R. K. Shekhar, V. Dakshinamoorthy, M. S. Baburaj, Shyam, A. T. Ummer, M. B. Sreenivasan, K. Raghavan, Jerry Amaldev, Kannur Rajan, Johnson, Raveendran and Ilaiyaraaja. Her rendition for the song "Aashada Maasam", composed by R. K. Shekhar for the film Yudhabhoomi (1976) met with wide appreciation and further increased her popularity. In 1981, she sang "Kanana Poikayil Kalabham" along with K. J. Yesudas in the composition of M. K. Arjunan for the film Ariyapedatha Rahasyam directed by P. Venu. After a long hiatus, Vani returned to Malayalam cinema in 2014 by recording a duet song for the film 1983,[14] and followed it up with a duet song in Action Hero Biju (2016).

Some of Vani's Malayalam songs including "Thiruvonapularikal" (Thiruvonam), "Dhoomthana" (Thomasleeha), "Seemantha Rekhayil" (Aasheervaadam), "Naadan Paatile", "Nimishangal", "Thedi Thedi", "Moodal Manjumai Yamini", "Ee Raagadeepam", "Mandhaarapoo", "Taarake", "Hrudayathin Madhura", "Neelambarathile", "Navaneetha Chandrike", "Oru Raaga Nimishatil", "Thechi Pootha", "Yamini Nin Choodayil" amongst others are widely popular and considered among the best hits.[15] Most of Vani's duets in Malayalam are recorded with K. J. Yesudas and P. Jayachandran.

Tile Song "Marathe Marikurumbe" in the Film "Puli Murugan" rendered by Vani Jairam was Short Listed in 70 Songs which were considered eligible for Nomination to Oscar Award 2018, under the Category "Original Song".

Kannada cinema
Main article: List of Kannada songs recorded by Vani Jairam
Music director Vijaya Bhaskar who worked with Vani in Tamil films introduced her to Kannada cinema in 1973 for the film Kesarina Kamala. She recorded two songs in the film which was immediately followed by her breakthrough song "Bhaavavemba Hoovu Arali" from the film Upasane (1974). This song cemented her position in Kannada films which lasted for three decades. After Vijaya Bhaskar gave her a career break, she was employed immediately by top running composers such as G. K. Venkatesh, M. Ranga Rao, Rajan-Nagendra, Satyam, Upendra Kumar, T. G. Lingappa, L. Vaidyanathan and Hamsalekha. The combination of Puttanna Kanagal (director) - Vijaya Bhaskar - Vani Jayaram produced many popular songs backed with strong female-centric themes. She modulated her voice and accent for the song "Happiest Moment" from the film Bili Hendthi (1975).

With her contemporary singer S. Janaki, Vani recorded few female duets notably "Madhumasa Chandrama" (Vijaya Vani (1976)) and "Teredide Mane O Baa Athithi" (Hosa Belaku (1982)). With actor-singer Rajkumar, she recorded many popular songs in 1980s. Most of her duet songs in Kannada have been with Rajkumar, P. B. Srinivas, S. P. Balasubrahmanyam, P. Jayachandran and K. J. Yesudas. Some of her most memorable songs include "Ee Shatamanada Madari Hennu", "Besuge Besuge", "Belli Modave Elli Oduve", "Jeevana Sanjeevana", "Deva Mandiradalli", "Haadu Haleyadaadarenu", "Kannada Naadina Karavali", "Priyathama Karuneya Thoreya", "Sada Kannali Pranayada", "Endendu Ninnanu Marethu", "Hodeya Doora O Jothegara".

Other languages
Besides Hindi and South Indian languages, Vani Jairam has made recordings in Gujarati, Marathi, Marwari, Haryanvi, Bengali, Oriya, English, Bhojpuri, Rajasthani, Badaga, Urdu, Sanskrit, Punjabi and Tulu 19 languages totally. She has been awarded many prestigious awards, among them are Best Female Playback Singer for states of Gujarat (1975), Tamil Nadu (1980) and Orissa (1984).One of her most famous Marathi songs, "Runanubandhachya", is a duet with the classical Hindustani singer Kumar Gandharva. This song was composed by Vani's mentor Vasant Desai for a Marathi drama called Dev Deenaghari Dhaavlaa. The lyrics were written by Bal Kolhatkar.[citation needed].

Vani Jairam has recorded "Holi Songs" and "Thumri Dadra & Bhajans" with Pandit Briju Maharaj. She has also recorded "Gita Govindam" composed by Prafullakar with Odissi Guru Kelucharan Mohopatra playing the Pakhawaj. Vani Jairam has also released "Murugan Songs" with songs written by her with music composed by her.

Awards
The P. Suseela Trust honoured Vani Jairam at a grand function in Hyderabad, with a citation and a purse of one lakh. The event was widely covered on television. On 28 May 2014, Vani was felicitated in Bhubaneshwar for her contribution to Odia cinema. Preceding it was the PBS Puraskar Award in Hyderabad, instituted in memory of the inimitable P.B. Srinivos. On 30 July 2014, Yuva Kala Vahini, an organisation in Hyderabad, presented her the 'Pride of Indian Music' Award.[16]

National Film Awards
1975 – Best Female Playback Singer Tamil– Various songs (Apoorva Raagangal)
1980 – Best Female Playback Singer Telugu– Various songs (Sankarabharanam)
1991 – Best Female Playback Singer Telugu – "Anathineeyara Hara" (Swathi Kiranam)
Filmfare Award
2015- Nominated for Filmfare Award for Best Female Playback Singer – "Olanajali Kuruvi" - 1983 (2014 Malayalam Film)
2013– The 60th South Indian Filmfare Award for Lifetime Achievements
1980 – Filmfare Award for Best Female Playback Singer – "Mere Toh Giridhar Gopal" (Meera)
State Awards
1972 – Gujarat State Film Award for Best Female Playback Singer – Ghoongat
1979 – Tamil Nadu State Film Award for Best Female Playback – Azhagae Unnai Aradhikkiren
1979 – Nandi Award for Best Female Playback Singer – Sankarabharanam
1982 – Odisha State Film Award for Best Singer – Debjani
Other awards
1972 – Mian Tansen Award Best Film Playback Singer of 'Classical Song' in Films for "Bol Re Papi Hara" given by Sur Singar Samsad, Mumbai.
1979 – Her songs in the Pandit Ravi Shankar scored film Meera brought her the Film World (1979) Cine Herald (1979) for "Mere To Giridhar Gopal".
1991 – Kalaimamani Award from Tamil Nadu State for her contribution to Tamil film music.
1992 – The youngest artist to be awarded the "Sangeet Peet Samman"
2004 – M.K. Thyagarajar Bhagavathar – Life Time Achievement Award from Tamil Nadu Government[17]
2005 – Kamukara Award for her outstanding contribution to film music in general and in all the four South Indian languages in particular.[18]* 2006 – Mudhra Award of Excellence from Mudhra Academy, Chennai.[19]
2012 – Subramanya Bharathi award for her contribution to music.[20]
2014 - Life Time Achievement Award of Radio Mirchi given at Hyderabad on 16 August 2014
2014 - Asiavision Awards - Best Playback Singer Award for the song 'Olanjali Kuruvi' from the Film "1983'
2014 - Kannadasan Award by Kannadasan Kazagam,Coimbatore[21]
2015 - Life Time Achievement Award from Raindropss on Women Achievers Award Ceremony Chennai.
2016 - Red fm Music awards 2016 for Best Duet with Yesudas
2017 - Vanitha Film Awards -Best singer
2017 - Ghantasala National Award[22]
2017 - North American Film Awards - New York- 22 July 2017 - Best Female Playback Singer - Malayalam
2018 - M.S. Subbulakshmi Award given by Sankara Nethralya - Chennai - 27 January 2018
2018 - Pravasi Express Awards Singapore, Life Time Achievement Award - 14 July 2018.
Other titles
2004: Kamukara Award[23]
2007: South Indian Meera[24] 


``கணவர் போன பிறகு எனக்குப் பேசுவதற்கு தெம்பில்லை!'' -பாடகி வாணி ஜெயராம் உருக்கம்
பின்னணி பாடகி வாணி ஜெயராம் ஹலோ சொல்வதே குயில் கூவுவது போலத்தான் இருக்கும். ஆனால், சமீப காலமாக அவர் போனை எடுக்கும் போதெல்லாம் அவர் குரலில் எப்போதும் குடிகொண்டிருக்கும் பழைய உற்சாகத்தை உணர முடியவில்லை. இது குறித்து அவரிடம் கேட்டதற்கு மிகுந்த யோசனைக்குப் பிறகு, ``ஜெயராம்ஜிக்கு உடம்பு சரியில்லை. ஹாஸ்பிடல்ல அட்மிட் செய்திருக்கோம். நான் அவர்கூட இருக்கிறதால சட்டுனு போனை எடுக்க முடியுறதில்லை'' என்றார். தொடர்ந்து ``இதைப் பற்றியெல்லாம் செய்தி போட்டுடாதீங்க. என் குரலை நேசித்தவர்களுக்கு என் கஷ்டங்கள் தெரியவே கூடாது. ஜெயராம்ஜி நல்லபடியாக மீண்டு வந்ததற்கு அப்புறம், நடந்ததை எல்லோருக்கும் சொல்லலாம். இப்ப அவர் ஹாஸ்பிட்டலில் இருப்பதை யாருக்கும் சொல்லிடாதீங்க ப்ளீஸ்'' என்றவரின் வேண்டுகோளை, ஜெயராமின் கடைசி நிமிடம் வரைக்கும் காப்பாற்றினேன்.

இன்று காலை 8 மணியளவில் வாணி ஜெயராமின் மொபைலுக்கு முயல, போனை எடுத்தவர், `என்னால் பேச முடியலை. ஜெயராம்ஜி என்னைவிட்டுப் போன பிறகு பேசுவதற்கும் எனக்குத் தெம்பில்லாமல் போய்விட்டது'' என்றவரின் குரல் உடைந்துவிட்டது.

வாணி ஜெயராமை இசையுலகம் `குயில்' என்றுதான் கொண்டாடி வருகிறது. அவர் தன் துணையைப் பிரிந்து வாழ முடியாத `அன்றில் பறவை'. கணவர் துணையில்லாமல் அவர் எங்கேயும் சென்றதில்லை. இசை நிகழ்ச்சிகளாகட்டும், சாதாரண கண் பரிசோதனை ஆகட்டும் கணவர் துணை இல்லாமல் அவர் தனியாகச் சென்றதே இல்லை. தற்போது தன் கணவரை பிரிந்த துயரத்திலிருந்து மீண்டு வரத் தெம்பில்லாமல் முடங்கிக்கிடக்கிறார் வாணி ஜெயராம்.

காமராஜரும் மாலைக்கல்லூரியும்👇👇









காமராஜரும் மாலைக்கல்லூரியும்👇👇
****************************************
ஒருமுறை ஒரு பெண் காமராஜரிடம் வந்து, தான் நல்ல மார்க் வாங்கி இருப்பதாகவும், தான் கேட்ட
physics major இல் சீட் கிடைக்க வில்லை என்றும் சொல்லி வருத்தப்பட்டாளாம்.

காமராஜர் சம்பந்தப் பட்டவர்களை கூப்பிட்டு கேட்க,
கல்லூரி முதல்வர் 12 மாணவிகளுக்குத் தான் lab வசதி இருப்பதால், 13 வதாக இன்னொரு பெண்ணைச்சேர்க்க இயலாது என்று சொல்ல,
#காமராஜர்,

"உங்கள் வீட்டில் எத்தனை பேருக்கு சமைக்கிறீர்கள் ?" என்று கேட்டாராம்.

அந்த கல்லுரி முதல்வர் "நாலு பேருக்கு " என்று சொல்ல,

இன்னும் 4 பேர் வந்தால் என்ன பெரிய பாத்திரங்கள் இருக்கிறதா" என்று கேட்டாராம்.

அதற்கு அந்த கல்லுரி முதல்வர், ."இல்லை; ஒரு முறை சாதம் செய்து விட்டு, இரண்டாம் முறையும் செய்வேன்" என்று சொன்னாராம்..

அதையே ஏன் கல்லூரியிலும் செய்யக் கூடாது.
3.30 க்கு காலேஜ் முடிந்ததும், இன்னும்
12 பேருக்கு காலேஜ் வைத்து, அதே lab ஐ யூஸ் பண்ணலாமே என்று சொல்ல,

அப்படி பிறந்தது தான்
#மாலை_கல்லூரி...

Image may contain: 1 person, smiling, closeup