Saturday 31 August 2019








30% டெப்ரிசியேஷன், 3 ஆண்டில் வாகனத்தின் விலை ஜீரோ... கைகொடுக்குமா புதிய திட்டம்!
ரஞ்சித் ரூஸோ
2001 பிப்ரவரிக்குப் பிறகு, (19 ஆண்டுகள் கழித்து) கடந்த ஜூலை மாதத்தில் கடுமையான வீழ்ச்சியை சந்தித்துள்ளது ஆட்டோமொபைல் துறை. பொருளாதாரம் யூடர்ன் அடிப்பதை காட்டும் முதல் இண்டிகேட்டர் ஆட்டோமொபைல்தான். இந்த 21-ம் நூற்றாண்டில் நாம் சந்திக்கும் மூன்றாவது மந்தநிலை இது

இதற்கு முன்பு ஏற்பட்ட அனைத்துப் பொருளாதார மந்தநிலையிலும் முதலில் பாதித்தவை கமர்ஷியல் வாகனங்களின் விற்பனை தான். அதற்குப் பிறகு, இது ஒரு நோய் போல அனைத்து செக்மென்ட்டுகளுக்கும் பரவும். டூ-வீலர் செக்மென்ட்தான் கடைசி. ஆனால், பெரும்பாலும் டூ-வீலர் செக்மென்ட்டுக்கு பரவும் முன் மந்தநிலை தானாகவே சரியாகிவிடும். இம்முறை வித்தியாசமாக முதலில் பாதிக்கப்பட்டது கார் செக்மென்ட். அதன்பிறகுதான் கமர்ஷியல் வாகனங்கள். இந்தியாவில் 80 சதவிகித சந்தையை கொண்டிருக்கும் இருசக்கர வாகனங்களும் இப்போது பாதிப்படைந்துள்ளன.

ஆட்டோமொபைல் 
ஆட்டோமொபைல்
vikatan
இந்தப் பாதிப்பு எவ்வளவு பெரியது என்றால், ப கார்களின் விற்பனை கடந்த ஆண்டு ஜூலை மாதத்தை ஒப்பிடும்போது இந்த ஆண்டு -21.56 சதவிகிதமாகக் குறைந்துள்ளது. கமர்ஷியல் வாகனங்களின் விற்பனை 13.57 சதவிகிதம் குறைந்துள்ளது. மூன்று சக்கர வாகனங்கள் 7.43 சதவிகிதமும், டூ-வீலர்கள் 12.93 சதவிகிதமும் விற்பனை இழந்துள்ளன. கிட்டத்தட்ட 50 சதவிகிதத்துக்கும் அதிகமான உள்நாட்டு விற்பனையை இழந்துள்ளோம். அதுவும், ஏற்றுமதி 1.17 சதவிகிதம் உயர்ந்திருக்கும் இதே நேரத்தில் இந்த வீழ்ச்சி என்பது கடுமையாக யோசிக்க வைக்கிறது.

30% Depreciation 
30% Depreciation
Autoity
பல கார், பைக் மற்றும் உதிரிபாக உற்பத்தி நிறுவனங்கள், 'உற்பத்தி இல்லா தினங்கள்' என்று அறிவித்து தங்கள் தொழிற்சாலைகளை சில நாள்கள் மூடிவருகின்றன. லட்சத்துக்கும் மேற்பட்ட ஒப்பந்த மற்றும் தற்காலிகத் தொழிலாளர்கள் வேலை இழந்திருக்கிறார்கள். இந்த மந்த நிலையை சரிகட்ட மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் சில நடவடிக்கைகளை அறிவித்துள்ளார்.

அறிவிக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன?
கார்களுக்கான பதிவுத் தொகையை ரூ.600-ல் இருந்து 5,000 ரூபாய் எனவும், பைக்குகளுக்கு ரூ.50-ல் இருந்து ரூ.1,000 எனவும் 20 மடங்கு வரை உயர்த்துவதாக அறிவித்திருந்தது மத்திய அரசு. தற்போது இந்த பதிவு விலை ஏற்றம் ஜூன் 2020 வரை தள்ளிப்போடப்பட்டுள்ளது.

ஜி.எஸ்.டி வரி செலுத்தியிருக்கும் குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு வரியின் மீதத்தொகை 30 நாள்களுக்குள் கொடுக்கப்படும்.

23 ஆகஸ்ட் 2019-ல் இருந்து 31 மார்ச் 2020 வரை வாங்கும் வாகனங்களின் தேய்மான விலை 15 சதவிகிதத்தில் இருந்து 30 சதவிகிதமாக உயர்த்தப்பட்டுள்ளது.

மின்சார வாகனங்களும், IC இன்ஜின் வாகனங்களும் ஒன்றாக விற்பனை செய்யப்படும். அரசு, மின்சார வாகனங்களுக்கான கட்டுமானம் உருவாக்குவதிலும், பேட்டரி போன்ற உதிரிபாகங்களை உருவாக்கி அதன் ஏற்றுமதியை அதிகரிப்பதிலும் கவனம் செலுத்தும்.

மத்திய அரசு அலுவலகங்களில் பழைய வாகனத்தை மாற்றுவதற்கும், புதிய வாகனங்கள் வாங்குவதற்கும் விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்படுகிறது.

மார்ச் 31, 2020 வரை உருவாக்கப்படும் பிஎஸ்-4 வாகனங்களை மார்ச் 31-ம் தேதி கடந்தபின்னும் பதிவு செய்யலாம்.

பழைய வாகனங்களை அழித்து மறுசுழற்சி செய்யும் ஸ்கிரேப்பேஜ் பாலிசி விரைவில் கொண்டுவரப்படும்.

ரிசர்வ் வங்கி, வங்கிகளுக்கு தரும் கடனின் வட்டியை, அதாவது ரெப்போ ரேட்டை குறைத்துள்ளது. இதனால், மக்களுக்கு கொடுக்கப்படும் வாகன கடன், வீட்டு கடன், மற்றும் இதர சில்லறைக் கடன்களுக்கான வட்டி விகிதத்தை வங்கிகள் குறைக்க வேண்டும்.

இப்போது நடைபெறும் மந்தநிலைக்கு பல காரணங்கள் உண்டு. ஆனால், இதில் ஒரு சில பிரச்சனைகளுக்கு மட்டுமே அரசு தீர்வை அணுகியுள்ளதாக தெரிகிறது.
இந்த முயற்சிகளால் என்ன மாற்றங்கள் ஏற்படும்?
வங்கிகளின் ரெப்போ ரேட்டை இந்த ஆண்டு நான்கு முறை 0.25% ரிசர்வ் வங்கி குறைத்திருக்கிறது. ஆனால், இதன் பலனை வங்கிகள் வாடிக்கையாளர்களுக்குக் கடத்தவில்லை. இப்போது மீண்டும் 0.35% குறைத்துள்ளார்கள். வங்கிகள் அவர்களுக்கு கிடைத்திருக்கும் இந்தச் சலுகையை நிச்சயம் மக்களுக்கும் கொடுக்க வேண்டும் என்று அரசு இப்போது கடுமை காட்டுகிறது. இதனால், மக்கள் வாங்கும் வீட்டுக் கடன், வாகன கடன், பெர்சனல் லோன் போன்றவற்றின் வட்டி குறையும். வாகனங்கள், சொத்துகள் வாங்குவது அதிகரிக்கும்.

மத்திய அரசு வங்கிகளுக்கு 70,000 கோடி ரூபாய் பணம் கொடுத்திருப்பதால் MSME நிறுவனங்களுக்கு கடன்கள் கிடைக்கும். இதனால், டீலர்களும், பாகங்கள் தயாரிக்கும் நிறுவனங்களும் மூடப்படுவதில் இருந்து காப்பாற்றப்படும்.

மார்ச் 31-க்குப் பிறகும் பிஎஸ்-4 வாகனங்களை பதிவு செய்யலாம் என்று அறிவித்திருப்பதால், பிஎஸ்-4 வாகனங்களின் விலை அதிரடியாக குறையும் எனக் காத்திருந்தவர்கள் இனி வாகனம் வாங்கத் தொடங்குவார்கள்.

அரசின் அறிவிப்பில் மிக முக்கியமானது, 31 மார்ச் 2020 வரை வாங்கப்படும் வாகனங்களின் தேய்மான தொகையை (டெப்ரிசியேஷன்) 15 சதவிகிதம் அதிகரித்திருப்பது. இதனால், தற்போது வாங்கும் வாகனங்களின் தேய்மானம் 30 சதவிகிதமாக அதிகரிக்கிறது.
இது எப்படி மாற்றத்தை ஏற்படுத்தும் என்றால், இப்போது ஒரு வாகனத்தை வாங்கும்போது அதன் விலை 3 ஆண்டுகளிலேயே 90 சதவிகிதத்துக்கு குறைந்துவிடும். இதனால், வாங்கும் வாகனத்தை சீக்கிரமே விற்றுவிடுவார்கள். 1 லட்ச ரூபாய் வாகனத்தின் பேப்பர் விலை 10,000 ரூபாயாக இருக்கும். ஆனால், அந்த வாகனம் யூஸ்டு மார்க்கெட்டில் சுமார் 40,000 ரூபாய்க்கு விற்பனையாகும். இதனால் நிறைய புது வாகனங்கள் யூஸ்டு மார்க்கெட்டில் கிடைக்கும்.

இதில் இருக்கும் அட்வான்டேஜை கார்ப்பரேட் நிறுவனங்கள் பெரிதாக பயன்படுத்திக்கொள்வார்கள். எப்படியென்றால், இப்போது ஒரு நிறுவனம் ஐந்து புதிய இலகுரக கமர்ஷியல் வாகனம் வாங்குகிறார்கள். பேப்பரை பொறுத்தவரை அதன் மதிப்பு இன்னும் நான்கு ஆண்டில் பூஜ்ஜியமாக மாறிவிடும். ஆனால், யூஸ்டு மார்க்கெட்டில் இந்த வாகனங்கள் ஒரு கணிசமான விலைக்கு விற்பனையாகும். இதனால், ஒரு குறிப்பிட்டத் தொகை லாபமாகக் கிடைக்கும். டெப்ரிசியேஷன் பூஜ்ஜியமானதால் அவர்களுக்கு வரியும் இருக்காது. இதனால், மீண்டும் புதிய வாகனம் வாங்குவார்கள்.

பொருளாதார மந்தநிலை!
பொருளாதார மந்தநிலை!
ஸ்கிரேப்பேஜ் பாலிசியை அரசு கொண்டுவருவதாகக் கூறியுள்ளது. இந்தக் கூடுதல் தேய்மானமும் ஸ்கிரேப்பேஜ் பாலிசியும் ஒரே நேரத்தில் வருவது பெரிய பலம். தற்போது பயன்படுத்தப்பட்டு வரும் 10 அல்லது 15 ஆண்டு பழைய வாகனங்களை மறுசுழற்சிக்குக் கட்டாயம் கொடுக்க வேண்டும் என்றும், இப்படிக் கொடுத்தால் புது வாகனம் வாங்குபவர்களுக்கு சில சலுகைகள் கிடைக்கும் எனவும், அறிவித்தால் பழைய கார்கள் ஸ்கிரேப்புக்கு வரும். புது வாகனங்கள் அல்லது ஏற்கெனவே பயன்படுத்தப்பட்ட வாகனங்கள் வாங்குவது அதிகரிக்கும். பிரைவேட் கமர்ஷியல் வாகன உரிமையாளர்கள் இதை அதிகம் பயன்படுத்த உந்தப்படுவார்கள்.

மின்சார வாகனம் வந்துவிட்டால் தற்போது பயன்பாட்டில் இருக்கும் IC இன்ஜின் வாகனங்களை நிறுத்திவிடுவார்களா என்ற அச்சம் இருந்தது. இப்போது ஐசி இன்ஜின்களை நிறுத்தப்போவதில்லை என்பதை உறுதியாகச் சொல்லிவிட்டாதால் மக்களுக்க இருந்த அச்சம் குறையும். புது வாகனம் வாங்குவது அதிகரிக்கும்.

எலெக்ட்ரிக் கார்கள்
எலெக்ட்ரிக் கார்கள்
டெஸ்லா
வாகனம் வாங்கும் முடிவில் இருந்தவர்களுக்கு ஏகப்பட்ட குழப்பங்கள் இருந்தன. இப்போது அதில் ஒரு சில குழப்பங்கள் தீர்ந்துள்ளன. ஆனால் இவை போதாது.

கார் விற்பனை வீழ்ச்சியில் உள்ளதால் கார்களுக்கு வசூலிக்கப்படும் ஜிஎஸ்டி வரியை 28 சதவிகிதத்திலிருந்து 18 சதவிகிதமாகக் குறைக்க வேண்டும் என வாகன உற்பத்தியாளர்கள் சங்கம் தொடர்ந்து வற்புறுத்தி வருகிறது. ஆனால், நிதி அமைச்சரின் திட்டத்தில் அது குறித்து எந்த அறிவிப்பும் இல்லை.

RAJASHREE , LEGEND ACTRESS BORN 1945 AUGUST 31




RAJASHREE , LEGEND ACTRESS 
BORN 1945 AUGUST 31




ராஜஸ்ரீ – சில‌ப்ப‌திகார‌த்‌தி‌ன் கதையை மையமாக வை‌த்து வெ‌ளியான ‌த‌மி‌ழ்த் ‌திரை‌ப்பட‌ம் பூ‌‌ம்புகா‌ர். இப்பட‌த்‌தி‌ல் மாத‌வியாக நடி‌த்து புக‌ழ்பெ‌ற்ற ‌பழ‌ம்பெற்ற நடிகை ராஜஸ்ரீ‌. ப‌ல்வேறு பட‌ங்க‌ளி‌ல் நடி‌த்து ம‌க்க‌ள் மனதை‌க் கவ‌ர்‌ந்தவ‌ர். தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாள மொழிகளில் முந்நூற்றுக்கும் மேற்பட்ட படங்களில் நடித்தவர்.

“”ராஜஸ்ரீ பிறந்தது ஆந்திராவில் உள்ள ஏலூர் என்ற கிராமத்தில். அங்கு ராஜஸ்ரீயினுடைய அப்பா ஸ்டேஷன் மாஸ்டராக இருந்தார். இவருடன் கூட பிறந்தது ஒரே ஒரு அக்கா மட்டும் தான். அப்போதே அவருக்கு திருமணமாகி பிள்ளைகள் இருந்தார்கள். ராஜஸ்ரீக்கு பத்து வயதிருக்கும் பொழுது சென்னைக்கு வந்தார். அப்போ தி.நகரில் ராஜஸ்ரீ இருந்த தெருவில் தான் நடிகை ஜமுனா, கிருஷ்ணகுமாரி, ஹீரோ செல்லம் என தெலுங்கு நடிகர்கள் வீடும் இருந்தது.

“நாக தேவதை’ படத்தில் ஜமுனாவின் சின்ன வயசு கதாபாத்திரத்தில் நடித்தார். ஒரே பாட்டுல சின்ன வயசுல இருந்து பெரிய வயசுக்கு மாறுவது மாதிரி காட்சி. அது தான் ராஜஸ்ரீ நடித்த முதல் படம். அதன்பிறகு ஏவி.எம்மில் ராஜஸ்ரீயை நிரந்தர நடிகையாக ஒப்பந்தம் செய்தார்கள். மாதச் சம்பளம். இந்த நேரத்தில் சித்தூர் வி.நாகய்யா “பக்த ராமதாஸ்’ என்று தெலுங்கில் ஒரு படம் எடுத்தார். அந்தப் படத்தில் கண்ணாம்பாவுக்கு ஜூனியராக  நடித்தார்.

அதன் பிறகு தமிழில் கதாநாயகியாக அறிமுகமானது “காதலிக்க நேரமில்லை’ படத்தில்தான். அந்தப் படத்தில் ராஜஸ்ரீ க்கு வாய்ப்பு கிடைத்தது.படம் சூப்பர் ஹிட்டா போனதால் அதை அப்படியே தெலுங்கில் எடுக்கப்பட்டது. அதில் ராஜஸ்ரீ யும், காஞ்சனாவும் தமிழில் நடித்த அதே கதாபாத்திரத்தில் நடித்தனர். அதே படம் இந்தியில் “பியார் கியே ஜான்’னு எடுத்தார்கள். அப்போதும் ராஜஸ்ரீயின் கேரக்டரை அவரே இந்தியில நடித்தார். மூன்று மொழிகளிலும் படம் நல்ல ஹிட். ஆனால் தெலுங்கில் மட்டும் பிளாக் அண்ட் வொயிட்டில் எடுத்தார்கள்.

“பாமா விஜயம்’,ஊட்டி வரை உறவு, “பூவா தலையா’, “அனுபவி ராஜா அனுபவி’, சிவாஜியுடன் “நீலவானம்’ எஸ்.எஸ்.ஆருடன் “பூம்புகார்’, ஜெயசங்கருடன் “செல்வமகள்’ என்று நிறைய தமிழ்ப் படத்தில் நடித்துள்ளார் ராஜஸ்ரீ.

எம்.ஜி.ஆருடன் முதன் முதலில் “கலையரசி’ என்ற படத்தில் நடித்தார். அதில் எம்.ஜி.ஆர். டூயல் ரோல் நடித்திருந்தார். ஒரு ஜோடி பி.பானுமதி, இன்னொரு ஜோடி ராஜஸ்ரீ. அதற்குப் பிறகு அவரோடு நடித்தப் படம் “குடியிருந்த கோவில்’. சிறிய இடைவெளிக்குப்பிறகு அவரோடு “பட்டிக்காட்டு பொன்னையா’, “நேற்று இன்று நாளை’, “நாளை நமதே’ போன்ற படங்களில் நடித்தார். தமிழில் ராஜஸ்ரீ கொஞ்சப் படங்களே நடித்திருந்தாலும் எல்லாமே நல்ல ஹிட் படங்கள்தான். தெலுங்கு, மலையாளம், கன்னட என பல்வேறு மொழிப்படங்களில் நடித்ததனால் நிறைய தமிழ் படங்கள் நடிக்கவில்லை.அதனால் சிவாஜிகணேசன், எம்.ஜி.ஆரின் நிறைய படங்களை இழந்துவிட்டார் ராஜஸ்ரீ. அப்படியிருந்தும் கிட்டதட்ட 300 படங்கள்ல நடித்துள்ளார்.


தமிழில் எம்.ஜி.ஆர். நடித்த “நாளை நமதே’ படம் தான் ராஜஸ்ரீ யினுடைய கடைசிப் படம். அதில் “நாளை நமதே’ன்னு வரும் பாடலில் மட்டும் தான் நடித்துள்ளார். இவரது கணவர் கல்யாணத்துக்குப் பிறகு நடிக்க வேண்டாம் என்று சொல்லிட்டார்.அதனால் இவரது கணவர் இறந்த பிறகு கூட ராஜஸ்ரீ நடிக்க விரும்பவில்லை.

இவரது கணவர் அரசியலில் இருந்தார். வெங்கல்ராவ் முதல்வராக இருந்த காலத்தில் காங்கிரஸ் கட்சியில் அமைச்சராக இருந்தார். என்.டி.ராமராவ் ஆட்சியில் இருந்தபோது கூட எதிர்க் கட்சியில் இருந்தார்.

1983-ல என் மகன் சின்னக் குழந்தையாக இருக்கும்போதே ராஜஸ்ரீயின் கணவர் இறந்துவிட்டார். அதன் பிறகு ஹைதராபாத், விசாகப்பட்டனத்தில் கொஞ்ச நாள் இருந்தார். 1991-இல் தான் மறுபடியும் சென்னை வந்துள்ளார். இங்கு வந்து பத்து வருஷம் யாருடனும் பேசுவதில்லை. எங்கேயும் போவதுமில்லை. நிறைய பேருக்கு ராஜஸ்ரீ இருப்பதே தெரியாது. ராஜஸ்ரீ எங்கேயாவது கடைவீதிக்குப் போனால் கூட கண்டுபிடிப்பதில்லை.

அதன் பிறகு 2009-இல் இவரது பையனுக்கு திருமணம் செய்துள்ளார். அப்போது எல்லாரையும் கூப்பிட்டிருக்கிறார். அப்போது  ஜெயலலிதாவும் சென்றிருக்கிறார். ரொம்ப நேரம் பொறுமையாக இருந்து நிகழ்ச்சிகளைப் பார்த்துட்டு பையனை ஆசிர்வாதம் செய்துவிட்டுப் போயுள்ளார். ஜெயலலிதாதான் இவரைப் பார்த்துட்டு “திரும்பிப் பார்க்கிறேன்’ நிகழ்ச்சியில் பேட்டி எடுத்துக்கொள்ள சொல்லி வலியுறுத்தியுள்ளார்.

30 வருஷமாக ராஜஸ்ரீயை யாருமே பார்க்கவில்லை, இவரது முகமே மறந்து போய் இருக்கும். ராஜஸ்ரீயை யாருக்கும் அடையாளம் கூட தெரியாது. அதனால் வேண்டாம் என்று மறுத்துள்ளார். ஆனால் ஜெயலலிதா விடவில்லை. பேட்டி கொடுத்தார். அப்பறம்தான் ராஜஸ்ரீ இருப்பதே வெளியே தெரிய வந்தது.

சினிமா எக்ஸ்பிரஸ் வார இதழிலிருந்து எடுக்கப்பட்டது.

காதலிக்க நேரமில்லை படத்தில் தனித்தும் ரவிச்சந்திரன், ரி.எஸ்.பாலையா, நாகேஷ் மற்றும் காஞ்சனாவுடனும் ராஜஸ்ரீ



Rajasree (Telugu: మెజెస్టి,AUGUST,31 born 1945), 

also known as Rajasri or Rajashri, is a noted South Indian film actress from 1956 to 1979. She is particularly famous for her portrayal as princess in several folklore Telugu movies opposite N. T. Rama Rao and Tadepalli Lakshmi Kanta Rao and for acting alongside Ravichandran in the Tamil comedy films – Neeyum Nannum, Kadhalikka Neram Illai and Delhi Mappilai. Notable among Rajasri's roles in non-folklore social films in Tamil are as Nimmi in Tamil hit comedy film Kaadhalikka Neramillai, remade as Preminchi Choodu in Telugu, as movie star Bhama in Tamil film Bama Vijayam. She was credited as Gracy in the Malayalam movies she starred in her career since her debut film Bharya (1962) directed by Kunchakko. Rajasree went on to do 200 films spread across the languages – Telugu, Tamil, Kannada, Malayalam (as Gracy) and Hindi from beginning of 1956 to 1979.

Film Industry[edit]
Rajsree first appeared as a child artiste in the Tamil film Naga Devadhai in 1956. She worked as child artiste in films like Bhaktha Ambarisha(1959) and Mangalyam(1960) in Telugu, Aasha Sundari(1960) in Kannada, Petraval Kanda Peruvazhvu (1960)and Baktha Sabari(1960) in Tamil. She debuted as the supporting young heroine with the Malayalam film Bharya (1962). Her character was named Gracy. With the success of her debut Malayalam film, Rajsree was always credited throughout her Malayalam film career as Gracy. Some of her famous Malaylam movies include Kadalamma (1963), Rebecca (1963), Pazhassi Raja (1964), Shakuntala (1965). However, she was cast only as supporting and second lead actress in Tamil films like Sengamala Theevu (1962), Nichaya Thaamboolam (1962), Thendral Veesum (1962), Kalai Arasi(1963), Yarukku Sondham (1963), Kattu Maina (1963) in the period 1962–63. Her portrayal as the courtesean Madhavi in the film Poompuhar brought her new recognition as supporting actress in 1964. It was the film Kadhalikka Neram Illai in 1964, which made her a household name as the main lead heroine. She started receiving more Tamil films from 1964 onwards.

However, she continued to be very selective as far as her choice of doing Malayalam movies was concerned. Her notable films in Malayalam as the lead heroine include Jail (1966), Kadamattathachan (1966), Anarkali (1966), Udhyogastha (1967), Karutha Rathrikal (1967), Kadal (1968), Dial 2244 (1968), Urangatha Sundary (1969), Sree Guruvayoorappan (1972 film), Sreemurukan, Devi Kanyaakumaari (1974). She did about 30 movies in Malayalam. Her last Malayalm film was Vishwaroopam (1978).

It was the Tamil comic classic, `Kaadhalikka Neramillai,' that catapulted Rajasree to national fame. She quoted in an interview "When I got a call from such a big banner as Chitralaya asking me to be present at the studio the next morning, I couldn't believe my ears. Many artistes had been considered for the role, I had heard. The song, `Anubavam Pudhumai,' was the sequence that was shot first. They liked it and I did the film,". Rajasree went on to play the same role in Telugu with Akkini Nageswara Rao and in Hindi with Shashi Kapoor — she was the only one to repeat the role in the remakes. She quoted in interview "I remember Nagesh pulling my leg often shouting out `Dhigilazhagi' whenever I was on the sets,". Hence both during the shooting of Bama Vijayam and everytime she met actor Nagesh, he would always call her as Dhiglazhagi as in the film, a thief refers to her by that name.

It was decided by Sridhar to remake the Kadhallikaa Neram Illai in Hindi as Pyar Kiye Jaa and he retained only Rajasree from the original. Her debut Hindi film was a major box office hit in 1966. This led to her receiving films in Hindi as well. However none of her 4 films in Hindi became a hit except for her debut Hindi film.

She made her debut in Telugu films with Constable Kuthuru (1962) opposite Kanta Rao. She was cast as the heroine of N.T.Rama Rao in films like Aggi Barata(1966), Pidugu Ramudu(1966), Aggi Veerudu(1969), Chitti Chellelu (1969).Her pairing opposite actor Kanta Rao was box office success. The pair Rajasree-Kanta Rao worked in Pakkalo Ballem (1965), Bangaru Timmaraju (1964), Saptaswaralu (1969), Pratigyna Palana (1966), Vijaya Simha(1965), Aggidora (1967), Bhoolokamlo Yamolokam (1966), Devudichchina Bharta (1968), Veera Pooja (1968), Ranabheri (1968), Aggimeeda Guggilam (1968), Oke Kutumbham (1970), Merupu Veerudu (1970), Maa Manchi Akkayya (1970), Prema Jeevulu, Bhale Ettu Chivaraku Chittu (1970), Raite Raju (1970).They worked in another 10 movies where they were not paired opposite each other.She did about 76 films in Telugu. Her last film in Telugu was Andame Anandham (1977).

Her debut film in Kannada was Kantheredu Nodu (1961). The Kannada film Thejaswini, produced by M.Pandaribai, made Rajasree a popular in Kannada film circle. She played second lead supporting roles in Kannada films like Swarna Gowri, Rathna Manjari, Karuneye Kutumbada Kannu, Chandra Kumara. She regularly starred in mythological period films like Santha Thukaram (1963), Shivarathri Mahathme, Shivagange Mahathme with either Rajkumar (actor) or Udaykumar or both in the lead roles. After achieving success in Tamil with Kadhalikka Neram Illai, she decided to do only lead heroine roles even in Kannada from 1964. Her Kannada films as lead heroine include Chandavalliya Thota, Satya Harishchandra (1965 Kannada film), Bala Nagamma (1966 film), Bhale Basava, Mr. Rajkumar (1970), Jwala Mohini, CID 72, C.I.D. Rajanna. She was part of the cast in 14 films in Kannada with Rajkumar (actor) in the lead role. She did 30 films in Kannada with her last movie being Devadhasi (1978).

She went to do comedy films as the lead heroine in Tamil to capitalize on her comic abilities like Bama Vijayam(1967), Anubavi Raja Anubavi (1967), Anubavam Pudhumai (1967), Neeyum Naanum (1968), Delhi Mapillai (1968). These films have developed classic cult status over the years. She then went on to get the second lead heroine roles in films with M.G.Ramachandran in the lead like Thaikku Thalaimagan (1967), Kudiyirundha Koyil (1968), Adimai Penn (1969), Pattikaattu Ponnaiya (1973), Netru Indru Naalai (1974) and Naalai Namadhe (1975). Her other notable films in Tamil include Kallum Kaniyagum, suspense thriller Selva Magal (1967), Siritha Mugam (1968), Patham Pasali (1970), Poi Sollathae (1971), Pattondru Ketten (1971), Yanai Valartha Vanampadi Magan, Amudha (1975), Veeduvarai Uravu (1976). Her last film in Tamil was Iravu 12 Mani (1978). She did more than 50 films in Tamil.

When she received MGR award in 2004 she quoted: "I've done three films with the CM J.Jayalalitha, and I've also acted with her mother Sandhya as her daughter."

Personal life[edit]

Rajasree hails from a village in Eluru, Andhra Pradesh. Her mother tongue is Telugu. She was born with a sister and her father was a railway station master. Rajasree was ten years old when she came to Chennai. Rajasree's husband died suddenly when her child was just four. Yet the actress has kept up her promise to him to this day! "Many ask me why I can't do television now? But I'm reluctant," she says. However, she has not severed ties with the film world. "I still have many friends from the industry. Saroja Devi calls up whenever she's in town. In 2004 Sharada, Vanisri, Jayapradha, Sachu, Padmini, Rajasulochana and I met over lunch. In fact it was Sachu who first called me up and told me about the award," she says. Rajasree spends her time in meditation and being a devotee of Sathya Sai Baba, people can often spot her at Sundaram, their Chennai centre. But today she is a picture of contentment, leading a relaxed life and taking care of her old sister. In 2012, she along-with her friends Saroja Devi, Kanchana, Jamuna, P.Susheela, Anjali Devi, Rajasulochana, Sowcar Janaki, Sechu, Cho Ramaswamy, Jamuna, Vijayakumari met Jayalalithaa at personal reseidence Veda Nilayam of Jayalalithaa.[2]

Awards[edit]


Yesteryear actress Rajasree was honoured with the MGR Award in 2004





அத்தமும் வாழ்வும் அகத்துமட்
டேவிழி அம்புஒழுக

மெத்திய மாதரும் வீதிமட்
டேவிம்மி விம்மியிரு

கைத்தலம் மேல்வைத்து அழும்மைந்
தரும்சுடு காடுமட்டே

பற்றித் தொடரும் இருவினை
புண்ணிய பாவமுமே

-பட்டினத்தார்



வீடு வரை உறவு
வீதி வரை மனைவி
காடு வரை பிள்ளை
கடைசி வரை யாரோ.

கண்ணாதாசன் சென்னை திருவொற்றீயூரில் விப்கோ
கம்பேனியில் வேலை செய்த போது பட்டினத்தார் சமாதிக்கு போவது வழக்கம்.

SHEENABORA MURDER CASE,MYSTERY


SHEENABORA MURDER CASE,MYSTERY




சீனா போரா (Sheena Bora) என்ற 24 வயது இளம்பெண் ஒருவர் மும்பையிலிருக்கும் மும்பை மெட்ரோ ஒன் நிறுவனத்தில் செயல் பணியாளராக பணியாற்றி வந்தார். இவர் ஊடகத் துறையில் பிரபலமாக விளங்கிய இந்திராணி முகர்ஜி மற்றும் சித்தார்த்தா தாஸ் ஆகியோரது மகள் ஆவார். சீனா போராவிற்கு மெக்கேல் போரா என்ற ஒரு தம்பியார் இருக்கின்றார். சீனா போரா தனது தாயாரான இந்திராணி முகர்ஜியின் மூன்றாவது கணவரும், ஸ்டார் இந்தியா நிறுவனத்தின் தலைமை அலுவலராக பணியாற்றிய பீட்டர் முகர்ஜியின் முதலாவது மனைவியின் மகனான ராகுல் முகர்ஜியை காதலித்தும் வந்தார். கடந்த 2012-ஆம் ஆண்டு ஏப்ரல் 24 முதல் அவர் காணாமல் போனார், அதன் பின் அவரைப் பற்றிய தகவல்கள் கிடைக்கவில்லை. இந்நிலையில் கடந்த ஆகஸ்ட் 2015-யில் அநாமதேயர் ஒருவரால் வழங்கப்பட்ட துப்பின் அடிப்படையில் மும்பை காவல்துறையினர் அவருடைய தாயாரான இந்திராணி முகர்ஜியை சீனா போராவை கொலை செய்த குற்றத்திற்காக கைது செய்தனர். அவருடன் இந்திராணி முகர்ஜியின் இரண்டாவது கணவரான சஞ்சீவ் கண்ணா மற்றும் வாகன ஓட்டுநர் சியாம்வர் பிந்துராம் ராய் ஆகியோரையும் கொலைக்கு உடந்தையாக இருந்தனர் என கைது செய்தனர். [1]

வாழ்க்கைக் குறிப்பு

1988-யில் சித்தார்த்தா தாஸ் என்பவரை காதலித்து மணம் புரியாமலேயே ஒன்றிணைந்து வாழத் தொடங்கியிருந்தார் இந்திராணி.[1] [2] 1989-யில் கொல்கத்தாவில் இந்திராணி முகர்ஜி மற்றும் சித்தார்த்தா தாஸ் ஆகியோருக்கு மகளாக பிறந்தவர் சீனா போரா. அவர்களுக்கு 1990-யில் மிக்கேல் போரா என்ற மகனும் பிறந்தார். 1990-ஆம் ஆண்டு சீனா போராவின் பெற்றோர்கள் பிரிந்துவிட்டனர். அதன் பின்னர் கொல்கத்தாவைச் சேர்ந்த ஒரு தொழிலதிபரோடு சில காலம் இந்திராணி ஒன்றிணைந்து வாழ்ந்திருந்தார் எனவும் சொல்லப்படுகின்றது. ஆனால், அவர்கள் பின்னர் பிரிந்து விட்டனர். [3] 1990-யில் இந்திராணி தனது இரு பிள்ளைகளையும் கௌகாத்திக்கு அழைத்துச் சென்று அங்கு தமது பெற்றோருக்கு தத்துக் கொடுத்துவிட்டு வந்துவிட்டார்.பின்னர் குவாகத்தியில் தாத்தா, பாட்டியால் அவர்கள் வளர்க்கப்படனர்.

இந்திராணி முகர்ஜி பின்னர் கொல்கத்தாவைச் சேர்ந்த தொழிலதிபர் சஞ்சீவ் கண்ணாவை மணந்து கொண்டார். அவர்களுக்கு விதி கண்ணா என்றொரு மகளும் இருக்கின்றார். கடந்த 2002-ஆம் ஆண்டு இந்திராணி முகர்ஜியும், சஞ்சீவ் கண்ணாவும் பிரிந்துவிட்டனர். அதே ஆண்டு பீட்டர் முகர்ஜியை மணந்து கொண்டார் இந்திராணி முகர்ஜி. சஞ்சீவ் கண்ணாவிற்கும் இந்திராணி முகர்ஜிக்கும் பிறந்த விதி கண்ணாவை பீட்டர் முகர்ஜி தத்தெடுத்துக் கொண்டார். அதன் பின்னர் இந்திராணியும், அவரது மகள் விதியும் பீட்டர் முகர்ஜியின் கடைசிப் பெயரை தமது பெயர்களோடு இணைத்துக் கொண்டனர்.[1]

இந்நிலையில் இந்திராணி முகர்ஜி தமது மூத்த மகளான சீனா போராவை சந்தித்து அவரை மும்பைக்கு அழைத்து வந்தார். ஆனால் தமது கணவர் பீட்டர் முகர்ஜி உட்பட அனைவரிடமும் சீனா போராவை தமது தங்கை என அறிமுகம் செய்து வைத்திருக்கின்றார். அது மட்டுமின்றி, சீனா போரா, மெக்கேல் போரா ஆகியோர் இருவரும் தமது பிள்ளைகள் என்பதை மறைத்து, தமது சகோதர்கள் என்றே கூறி வந்திருக்கின்றார்.[1] மும்பையிலுள்ள செண்ட் சேவியர் கல்லூரியில் படிப்பதற்கு சீனா போராவிற்கு சீட்டு வாங்கிக் கொடுத்திருக்கின்றார் பீட்டர் முகர்ஜி. அக் கல்லூரியில் படிப்பைத் தொடர்ந்து சீனா போரா கடந்த 2009-யில் பி.ஏ பட்டம் பெற்று, பின்னர் ரிலையன்ஸ் உள்கட்டமைப்பு நிறுவனத்தில் மேலாண்மை பயில்நராக பணிக்குச் சேர்ந்தார். பின்னர் கடந்த 2011-யில் மும்பை மெட்ரோ ஒன் நிறுவனத்தில் செயல் பணியாளராக இணைந்து பின்னர் அங்கு துணை மேலாளராக பணியைத் தொடர்ந்து வந்தார்.[1]

மும்பையில் வாழ்ந்திருந்த சமயத்தில் பீட்டர் முகர்ஜியின் மூத்த தாரத்து மகனான ராகுல் முகரிஜியோடு சீனா போராவிற்கு அறிமுகம் கிடைத்தது. இருவரும் ஒருவகையில் ரத்த சம்பந்தமில்லாத சகோதர முறை என்றாலும் இருவரும் ஒருவரை ஒருவர் காதலிக்கத் தொடங்கினார்கள். 2009-யில் இந்திராணி முகர்ஜியிடம் இருந்து விலகிய சீனா போரா, அவர் காணமல் போகும் வரை ஒன்றாகவே வாழ்ந்தும் வந்தனர். அவர்களின் உறவிற்கு இந்திராணி முகர்ஜி சம்மதம் தெர்விக்கவில்லை. ஆனால், பீட்டர் முகர்ஜி அவர்கள் இருவரும் மணந்து கொள்ள சம்மதம்
தெரிவித்திருந்தார். இந்நிலையில், கடந்த ஏப்ரல் 24, 2012-யில் திடிரென சீனா போரா தனது வேலையிலிருந்து விடுப்பு எடுத்திருக்கின்றார். பின்னர், அவர் பணியாற்றிய நிறுவனத்திற்கு அவருடைய மின்னஞ்சல் முகவரியிலிருந்து ராஜினாமா கடிதம் ஒன்றும் வரப்பெற்றுள்ளது.[1] அதே நாளன்று, சீனா போராவின் செல்பேசியிலிருந்து இனி ராகுலோடு உறவை நீடிக்க விருப்பமில்லை, பிரிந்து விடலாம் என்றொரு குறுந்தகவல் வந்தது.[1] அவருடைய தாயாரான இந்திராணி முகர்ஜியோ சீனா போரா மேல் படிப்பிற்காக அமெரிக்காவிற்கு போய்விட்டார் என கூறிவந்திருக்கின்றார். அதனால் சீனா போரா காணாமல் போனதாக யாரும் காவல்துறையிடம் புகாரும் அளிக்கவில்லை.[1] அவர் உயிரோடு இருப்பதாக நம்பப்பட்டும் வந்திருக்கின்றது. ஆனால், ஏப்ரல் 24, 2012-யின் பின் சீனா போராவை யாரும் பார்த்திருக்கவில்லை.

ராகுல் முகர்ஜியின் புகார் முயற்சி

நன்றாகவே போய்க் கொண்டிருந்த தமது காதல் வாழ்க்கையிலிருந்து சீனா போரா விலகுவதற்கான காரணங்கள் என்ன என புரியாமல் தவித்த ராகுல் முகர்ஜிக்கு சந்தேகம் ஏற்பட்டது. அதனால், கடந்த ஏப்ரல் 2012-யில் வோர்லி காவல்நிலையத்தில் சீனா போராவை காணவில்லை என புகார் கொடுக்க முயன்றிருக்கின்றார் அவர். ஆனால், ராகுல் முகர்ஜியும், சீனா போராவும் அந்தேரியில் வசித்து வந்ததால், புகாரை அங்கு போய் கொடுக்குமாறு வோர்லி காவலர்கள் கூறியிருக்கின்றனர். இதனால் அந்தேரி காவல்நிலையத்திற்கு சென்று புகார் கொடுக்க முயன்றிருக்கின்றார் அவர். ஆனால், அவர் கொடுத்த புகார் காவல்நிலையத்தில் பதிவு செய்யப்படவில்லை. காவல் துறை மீது நம்பிக்கையிழந்த ராகுல் முகர்ஜி பலமுறை இந்திராணி முகர்ஜியை சந்தித்து சீனா போராவைப் பற்றி விசாரித்திருக்கின்றர். ஆனால், இந்திராணி முகர்ஜியோ சீனா போரா மேற்படிப்பிற்காக அமெரிக்கா சென்றுவிட்டதாகவும், ராகுல் முகர்ஜியோடு வாழ விருப்பமில்லை எனவும், மற்றொரு ஆணை அங்கு விரும்புவதாகவும் கூறியிருக்கின்றார். சீனா போராவின் கடவுச்சீட்டு தன்னிடமுள்ளா போது, எப்படி அவரால் அமெரிக்கா செல்ல முடியும் என வினவியிருக்கின்றார் ராகுல் முகர்ஜி. ஆனால், வேறொரு கடவுச்சீட்டைப் பெற்று அமெரிக்கா போய்விட்டதாக கூறியிருக்கின்றார் இந்திராணி முகர்ஜி. பல இடங்களில் தேடியும் சீனா போரா பற்றிய தகவல்கள் கிடைக்காததால், ராகுல் முகர்ஜி தனது தாயார் வசிக்கும் தேராதுன்னிற்கு சென்றுவிட்டார்.[1]

புகார் கொடுப்பதை தடுத்திருக்கின்றார் இந்திராணி முகர்ஜி
கடந்த ஏப்ரல் 2012-யிலிருந்து சீனா போராவை பற்றிய எவ்வித தகவல்களும் கிடைக்காத நிலையில், ராகுல் முகர்ஜியும், சீனா போராவின் தம்பியான மெக்கேல் போராவும் சீனா போராவை காணவில்லை என புகார் கொடுக்க முயன்றிருக்கின்றனர். ராகுல் முகர்ஜியின் வற்புறுத்தல் காரணமாக காவல்துறை ஒருமுறை இந்திராணி முகர்ஜியின் வீட்டுக்கே சென்று விசாரணையும் நடத்தியுள்ளனர். ஆனால், இந்திராணி முகர்ஜியோ சீனா போரா அமெரிக்கா சென்றுவிட்டதாகவும், ராகுல் முகர்ஜி சீனா போராவை தொந்தரவு செய்கின்றதால் எவ்வித தொடர்பு முகவரிகளையும் தர விரும்பவில்லை எனவும் கூறியிருக்கின்றார்.[1]

கொலைச் சம்பவமும் பின்னர் நடந்தவைகளும்

இந்நிலையில் சில மாதங்களுக்கு முன் அநாமதேயர் ஒருவரால் வழங்கப்பட்ட தகவலின் அடிப்படையில் காவல்துறையினர் நடத்திய விசாரணையில் இந்திராணி முகர்ஜி மீது சந்தேகம் எழவே அவரையும் அவருக்கு உடந்தையாக இருந்த ஓட்டுநர் சியாம்வர் பிந்துராம் ராய் ஆகியோரையும் கைது செய்தனர். சியாம்வர் பிந்துராம் ராய் வழங்கிய வாக்குமூலத்தில் இந்திராணி முகர்ஜியே சீனா போராவை கொலை செய்ய திட்டமிட்டார் என்பதும் தெரிய வந்தது. இந்திராணி முகர்ஜியும், அவருடைய முன்னாள் கணவர் சஞ்சீவ் கண்ணாவும் இணைந்தே சீனா போராவை தீர்த்துக் கட்டியுள்ளனர். சம்பவ நாளன்று, மும்பைக்கு விமானத்தில் வந்த சஞ்சீவ் கண்ணா, வோர்லியிலுள்ள ஹில்டாப் விடுதியில் தங்கியிருக்கின்றார். இந்திராணி முகர்ஜியும், சஞ்சீவ் கண்ணாவும் சீனா போராவை கடத்திக் கொலை செய்திருக்கின்றனர். 

கடந்த 2012 ஆம் ஆண்டு ஏப்ரல் 24-ஆம் நாளன்று மாலை ஆறு மணியளவில் சஞ்சீவ் கண்ணாவை அவர் தங்கியிருந்த விடுதியிலிருந்து ஏற்றிக் கொண்ட இந்திராணி முகர்ஜி திட்டமிட்ட படி சீனா போராவை பாந்திராவிலுள்ள நேசனல் கல்லூரியின் லிங்கிங் சாலைக்கு வருமாறு கூறியிருக்கின்றார். இந்திராணியை சந்திக்க சீனா போரா விரும்பவில்லை எனவும், ஆனாலும் தொடர்ந்து வற்புறுத்தியாதால் அவர் அங்கு வந்திருக்கின்றார். அவரை நேசனல் கல்லூரிக்கு அருகே இறக்கிவிட்டு வீடு திரும்பினார் ராகுல் முகர்ஜி. பாந்திராவில் காத்திருந்த சீனா போராவை காரில் ஏற்றிக் கொண்டார் இந்திராணி முகர்ஜி. காரை அவருடைய வாகன ஓட்டுநர் பிந்துராம் ராய் ஒட்ட, பின்னிருக்கையில் சஞ்சீவ் கண்ணா அமர்ந்திருக்கின்றார். ஓட்டுநருக்கு அருகே இந்திராணி முன்னிருக்கையில் அமர்ந்திருக்கின்றார். அப்போது சீனா போராவிற்கு போதை கலந்த தண்ணீரை பருகக் கொடுத்திருக்கின்றார் இந்திராணி முகர்ஜி. பாந்திராவை கார் கடக்கின்ற சமயம், அரை மயக்கத்திலிருந்த சீனா போராவை கழுத்தை நெறித்துக் கொன்றிருக்கின்றார் சஞ்சீவ் கண்ணா. பின்னர் சீனா போராவின் உடலத்தை வோர்லியிலுள்ள தமது வீட்டுக்கு எடுத்துச் சென்ற அவர்கள், ஒரு பையிலிட்டு காரின் பூட்டில் போட்டிருக்கின்றனர். சஞ்சீவ் கண்ணா பின்னர் ஓட்டலுக்கு சென்றுவிடவே, இந்திராணி முகர்ஜி தமது வீட்டிலேயே அன்றிரவு தங்கியிருக்கின்றனர். காரில் உடலத்தைக் கண்காணித்த வண்ணம் உறங்கியிருக்கின்றார் ஓட்டுநர் பிந்துராம் ராய்.

அன்று அதிகாலை, மூவரும் பின்னர் ஒன்றிணைந்து மும்பைக்கு வெளியே இருக்கின்ற ராயக்காடு பகுதிக்கு சென்றிருக்கின்றனர். அங்கு ககோடே என்றொரு கிராமத்தின் காட்டுப் பகுதியில் அதிகாலை 4 மணியளவில் சீனா போராவின் உடலத்தை பெற்றோலிட்டு கொளுத்தியிருக்கின்றனர். உடலம் முழுமையாக எரிந்து சாம்பலாகிய பின்னர், அங்கேயே சாம்பலை புதைத்துவிட்டு, மூவரும் மும்பைக்கு திரும்பியுள்ளனர். அன்றைய தினமே சஞ்சீவ் கண்ணா மும்பையிலிருந்து கொல்கத்தா சென்று விட்டார்.[1]

2012-ஆம் ஆண்டு மே 23 ஆம் நாள், அக் கிராமத்தில் பாதி அழுகிய நிலையில் ஓர் உடலிருப்பதாக ஊரார்கள் காவல்துறையினருக்கு அறிவித்தனர். ஆனால், பாதி எரிந்த நிலையில், பாதி அழுகிய நிலையில் எலும்புகள் மட்டுமே எஞ்சிய நிலையிலிருந்த அந்த உடலத்தை காவல்துறையினரால் அடையாளம் காணமுடியவில்லை. கைப்பற்றப்பட்ட உடலத்தின் மிச்சங்களை மும்பையிலிருக்கும் சேர் ஜாம்சத்ஜி ஜிஜிபாய் மருத்துவமனையின் தரும மருத்துவக் கல்லூரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால், இதைப் பற்றிய முதல் தகவல் அறிக்கையை காவல்துறையினர் பதியவில்லை என்பதும், மேற்கொண்டு எவ்வித விசாரணைகளையும் நடத்தவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.[1] சீனா போரா காணாமல் போயுள்ளார் என்ற தகவலே கடந்த ஆகஸ்ட் 2015 வரை வெளியுலகிற்கு தெரியாமேலேயே இருந்து வந்தது.

கொலை வழக்கின் முடிச்சுகள் அவிழ்ந்தன
ராயக்காடு மாவட்டம் ககோடே கிராமத்தில் கிடைத்த உடலத்திற்கும், சீனா போரா காணமல் போனதற்குமான தொடர்புகளை யாருமே நினைத்துப் பார்க்கக் கூட இல்லை. கிட்டத்தட்ட சீனா போரா காணாமல் போய் 40 மாதங்கள் கழித்தே இந்த உண்மை வெளியுலகிற்கு தெரியவந்திருக்கின்றது. இந்திராணி முகர்ஜி பற்றிய அநாமதேய துப்பு கிடைத்ததும் ஏறத்தாழ நான்கு மாதங்கள் அவருக்குத் தெரியாமல் இந்திராணி முகர்ஜியை கண்காணித்து வந்திருக்கின்றது மும்பை காவல்துறை. அநாமதேயர் வழங்கிய துப்பில் இந்திராணி முகர்ஜியின் தங்கை சீனா போரா காணமல் போனதற்கும் இந்திராணிக்கும் தொடர்பு இருப்பதாகவே ஆரம்பத்தில் காவல்துறை வழக்கைப் பதிவு செய்தது. இந்நிலையில் சட்டவிரோதமாக ஆயுதங்களை வைத்திருந்தார் என மற்றொரு வழக்கில் இந்திராணி முகர்ஜியின் வாகன ஓட்டுநர் பிந்துராம் கைது செய்யப்படவே, அந்த விசாரணையில் அவர் சீனா போராவின் கொலை பற்றியும் உளறியிருக்கின்றனர். இதன் பின்னரே, சீனா போரா வழக்கில் இந்திராணி கைது செய்யப்பட்டார். ஆரம்ப கட்ட விசாரணையில் சீனா போரா அமெரிக்காவில் இருப்பதாக சாதித்து வந்த இந்திராணி முகர்ஜி பின்னர் உண்மையை ஒத்துக் கொண்டிருக்கின்றார்.[1] வாகன ஓட்டுநர் பிந்துராம் ராய் அப்புரூவராக மாறியதால், அவர் கொலைக் குற்றம் பற்றிய முழுத் தகவல்களையும் காவல்துறைக்கு வழங்கிவிட்டார். இந்த செய்தி வெளியாகிய அடுத்த தினம் மெக்கேல் போரா செய்தியாளர்களிடம் வழங்கிய தகவலின் படி, சீனா போராவும், தாமும் இந்திராணி முகர்ஜியின் பிள்ளைகள் எனவும், இந்திராணி சொல்வது போல அவருடைய சகோதரர்கள் இல்லை எனவும் கூறினார். இதைப் பற்றி காவல்துறையினர் விசாரித்த போது, இந்திராணி முகர்ஜியும் உண்மையை ஒத்துக் கொண்டார்.[1]

விசாரணைகள்
சில மாதங்களுக்கு முன் அநாயமதேயர் வழங்கிய துப்பினால் சீனா போரா காணாமல் போகவில்லை கொல்லப்பட்டிருக்கலாம் என காவல்துறையினர் சந்தேகிக்கக் தொடங்கினர். இந்திராணி முகர்ஜியின் வாகன ஓட்டுநர் சியாம் ராயின் கைதும், அவர் வழங்கிய வாக்குமூலத்தின் படி இந்திராணி முகர்ஜியும், அவரது முன்னாள் கணவர் சஞ்சீவ் கண்ணாவும் சீனா போராவை கொன்ற தகவல் தெரிய வந்தது.[1]

இதன் பின்னர் காவலதுறையினர் இந்திராணி முகர்ஜியை கைது செய்தனர்.[1] இந்தியக் குற்றப்பிரிவு 302(கொலை), 201(தடயங்களை அழித்தல்), 34(சதித் திட்டம்) போன்ற பிரிவுகளில் குற்றம்சாட்டப்பட்டுள்ளார். அவரை வரும் ஆகஸ்ட் 31 வரை காவல்துறையினரது கட்டுப்பாட்டில் வைத்திருக்க பாந்திரா பெருநகர அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.[1]

சித்தார்த்தா தாஸ்
சீனா போராவின் தந்தை சித்தார்த்தா தாசை காவல்துறையினர் கண்டறிந்துள்ளனர்.சில்லாங்கில் கல்லூரியில் படிக்கின்ற சமயத்தில் இந்திராணியை சந்தித்திருக்கின்றார் சித்தார்த்தா. அதன் பின் சித்தார்த்தா தாஸ், இந்திராணி ஆகியோர் மணம் புரியாமலேயே இந்திராணியின் பெற்றோரது வீட்டில் ஒன்றிணைந்து வாழ்ந்ததாகவும். அச்சமயத்தில், அவர்களுக்கு சீனா போரா, மிக்கேல் போரா ஆகிய இருவரும் பிறந்ததாகவும் கூறியிருக்கின்றார். சீனா போராவின் பிறந்த நாள் பிப்ரவரி 11, 1987 எனவும் அவர் தெரிவித்திருக்கின்றார்[4]. இந்திராணி முகர்ஜி பணத்தாசை பிடித்தவர் எனவும், அதனாலேயே தன்னை விட்டு பிரிந்து போனார் எனவும், கௌகாத்தியில் வசித்திருந்த சமயம், இரு பிள்ளைகளையும் விட்டுவிட்டு திடிரென ஒரு நாள் இந்திராணி போய்விட்டார் எனவும். அவரை பலமுறை சில்லாங்கில் போய் தேடியதாகவும், ஆனால் கண்டு பிடிக்க முடியவில்லை எனவும் கூறியிருக்கின்றார். மீண்டும் கௌகாத்தியில் தம் பிள்ளைகளிடம் வந்த சமயம், இந்திராணியின் பெற்றோர் அவரை அவமானப்படுத்தி துரத்தி விட்டனர் எனவும் அவர் தெரிவிக்கின்றார்.[5]. அச் சமயத்தில் பொறுப்பற்றிருந்தேன் எனவும், அது தான் செய்த தவறு எனவும், தமது பிள்ளைகளை தன்னோடு வைத்திருக்க விரும்பியதாகவும், ஆனால் இந்திராணியின் பெற்றோர் மறுத்துவிட்டனர் எனவும் தெரிவித்திருக்கின்றார்.[2]

அதன் பின் சித்தார்த்தா தாஸ் கொல்கத்தாவில் இனிப்புக் கடையில் வேலை பார்த்திருக்கின்றார். பலமுறை பிள்ளைகளை காண கௌகாத்திக்கு போயிருக்கின்றார். ஆனால், இந்திராணியின் பெற்றோர்கள் அவரை தடுத்துவிட்டனர். 1998-யில் சித்தார்த்தா பாப்லி என்பவரை திருமணம் செய்து கொண்டு வாழ்ந்து வருகின்றார். 2000-ஆவது ஆண்டு கௌகாத்தி சென்று சீனா போராவை சந்தித்ததாகவும், அவருடைய தொலைபேசி எண்ணைக் கூட மகளிடம் தந்துவிட்டு போனதாகவும், அதன் பின் ஒருமுறை சீனாவோடு பேசியிருப்பதாகவும் தெரிவித்திருக்கின்றார். காவல் துறைக்கு முழு ஒத்துழைப்புக் கொடுக்க விரும்புவதாகவும், ஆனால் அவருடைய மகன் இந்த ஆண்டு தான் 10-ஆம் வகுப்பு தேர்வு எழுதியிருப்பதாகவும், மகனி எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு அவருடைய புகைப்படத்தை வெளியிட வேண்டாம் எனவும் தெரிவித்திருக்கின்றார். "இந்திராணியைப் பற்றி சொல்வதற்கு ஏதுமில்லை, கடந்தவை கடந்தவையே" என சித்தார்த்தாவின் மனைவி பாப்லியும் தெரிவித்திருக்கின்றார்[6].

முடிவு
சீனா போராவை தான் கொலை செய்ததாக இந்திராணி முகர்ஜி ஒப்புதல் அளித்துள்ளதாக செய்திகள் வெளியாகின. அதன் பின்னர் அவர் நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டார். பல நாட்களாக சீனா போரா அமெரிக்காவில் வசிப்பதாகக் கூறிவந்த இவர் செய்திகளில் வந்த தகவல்களால் ஒப்புக்கொண்டார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.[7][8] இதற்கிடையில் இந்திராணியின் கணவர் பீட்டர் முகர்ஜியை சிபிஐ அதிகாரிகள் 19 ஆம் திகதி நவம்பர் மாதம் 2015 ஆம் ஆண்டு கைது செய்தனர்.[9]

Friday 30 August 2019

KARUNANIDHI IMPLEMENTED PROHIBITION 1971 AUGUST 30








 அண்ணாவுக்கு பின்னர் முதல்வரான கருணாநிதி முதன் முதலில் 
மதுவிலக்கை ரத்து செய்தார். 
1971 AUGUST 30 

நாளை தமிழகத்தில் தி.மு.க. தலைமையில் ஆட்சி அமையுமெனில், மதுவிலக்கை அமல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவித்துள்ளார் தி.மு.க. தலைவர் கருணாநிதி. இவரின் கருத்துக்கு, ஆதரவும் எதிர்ப்புமாக பல்வேறு கருத்துகள் சொல்லப்பட்டு வருகின்றன. 

இந்நிலையில், மதுவிலக்கு விஷயத்தில் தமிழகத்தை ஆண்ட கட்சிகள் இதுவரை கடைபிடித்து வந்த நிலைகள் என்னென்ன? மதுவிலக்கு ரத்து செய்யப்பட்டதன் பின்னணி எல்லாம் சுவாரஸ்யமான வரலாறு. அதைப்பற்றி இந்த கட்டுரையில் பார்க்கலாம்.

சுதந்திர இந்தியாவில் 1971-ம் ஆண்டு வரை தமிழகத்தில் மதுவிலக்கு அமலில் இருந்தது. சுதந்திரம் பெற்ற பின்னர் தமிழக முதல்வராக இருந்த ராஜாஜி துவங்கி, ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார், குமாரசாமி ராஜா, காமராஜர், எம்.பக்தவத்சலம், அண்ணா வரை எந்த முதல்வரும் மதுவிலக்கை ரத்து செய்ய முன்வரவில்லை. மதுவிலக்கை ரத்து செய்யலாம் என பல யோசனைகள் இவர்களுக்கு சொல்லப்பட்ட போதும், அதையெல்லாம் இந்த முதல்வர்கள் மறுத்தார்கள்.

தி.மு.க. 1967-ம் ஆண்டு ஆட்சியை கைப்பற்றியபோது, 'அரசின் வருவாயை அதிகரிக்க மதுவிலக்கை ரத்து செய்ய வேண்டும் என அதிகாரிகள் பரிந்துரைத்தனர். மதுவிலக்கை ரத்து செய்தால் ரூ.600 கோடி வருவாய் கிடைக்கும் என அதிகாரிகள் சொன்ன யோசனையை நிராகரித்த அண்ணா, 'மதுவிற்பனையின் மூலம் கிடைக்கும் வருவாய், புழுத்துப்போன தொழுநோயாளி கையில் உள்ள வெண்ணெயை வாங்குவதற்குச் சமம்' என்றார்.


இப்படி சுதந்திர இந்தியாவின் முதல்வர்கள் அனைவரும் அடுத்துவரும் தலைமுறையின் எதிர்காலம் கருதி மதுவிலக்கை ரத்து செய்ய மறுத்து வந்த நிலையில், அண்ணாவுக்கு பின்னர் முதல்வரான கருணாநிதி முதன் முதலில் மதுவிலக்கை ரத்து செய்தார்.


மதுவிலக்கு: கருணாநிதியை முந்துவாரா ஜெயலலிதா? 

1971ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் அப்போதைய தி.மு.க. அரசு மதுவிலக்கை ரத்து செய்து, அவசர சட்டம் கொண்டு வந்தது. அப்படி ஒரு அறிவிப்பு அரசிடமிருந்து வெளியாகிவிடக் கூடாது என கொட்டும் மழையில் கருணாநிதியை தேடிச் சென்ற 80 வயது முதியவர் ராஜாஜியின் கோரிக்கை, அந்த மழையோடு மழையாக கரைந்துபோனது. 

மதுவிலக்கு அமலானதற்கு ஒரு பின்னணி ஒன்று உண்டு. இந்தியாவில் பல மாநிலங்களில் மதுவிலக்கு அமலில் இல்லாததால், 'மதுவிலக்கை அமல்படுத்தும் மாநிலங்களுக்கு மானியம் வழங்கப்படும்' என அறிவித்தது மத்திய அரசு. 'தமிழகத்தில் மதுவிலக்கு அமலில் உள்ளது. எங்களுக்கும் மானியம் தர வேண்டும்' என தமிழகத்தின் அப்போதைய முதல்வர் கருணாநிதி கேட்டபோது, தர மறுத்து விட்டது மத்திய அரசு.

மதுவிலக்கு: கருணாநிதியை முந்துவாரா ஜெயலலிதா? 

'ஏற்கனவே மதுவிலக்கை அமல்படுத்தும் மாநிலங்களுக்கு மானியம் கிடையாது' என மத்திய அரசு அறிவிக்க... 'மதுவிலக்கை அமல்படுத்தியதற்கு இது தண்டனையா?  எனக்கேட்டு, தமிழகத்தில் 1971ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் மதுவிலக்கை ரத்து செய்து, அதற்கான அவசர சட்டம் ஒன்றையும் பிறப்பிக்கச் செய்தார் கருணாநிதி.

பல ஆண்டு காலம் அமலில் இருந்த மதுவிலக்கு, திடீரென ரத்து செய்யப்பட பெரும் சர்ச்சை வெடித்தது. 'நான் சூடமாக இருக்கிறேன்: என்னைச் சுற்றி நெருப்பு இருக்கிறது; நான் என்ன செய்வது...?' என மற்ற மாநிலங்களில் மதுவிற்பனை நடக்கும் போது தமிழகத்தில் மட்டும் எப்படி மதுவிலக்கு சாத்தியமாகும்? என கேள்வி எழுப்பி தனது முடிவை நியாயப்படுத்தினார் கருணாநிதி.

மதுவிலக்கு: கருணாநிதியை முந்துவாரா ஜெயலலிதா? 

அதன் பின்னர் 1974ம் ஆண்டு மதுவிலக்கு மீண்டும் அமலானது. 1983ம் ஆண்டு எம்.ஜி.ஆர். முதல்வராக இருந்த போது, மீண்டும் மதுவிலக்கு ரத்தானது. அதோடு நிறுத்திக்கொள்ளாமல் தமிழகத்தில் மதுவகைகளின் மொத்த விற்பனைக்காக டாஸ்மாக் நிறுவனத்தை 1983-ல் துவக்கினார் எம்.ஜி.ஆர். அதன் பின்னர் தி.மு.க. ஆட்சியில் மதுவிலக்கு அமலாகி, 1990 முதல் 1991 வரையிலும் மீண்டும் மதுவிலக்கு ரத்து செய்யப்பட்டது. 

மதுவிலக்கு: கருணாநிதியை முந்துவாரா ஜெயலலிதா? 

1991ம் ஆண்டு முதல் முறை முதல்வரான ஜெயலலிதா, முதல் கையெழுத்திட்டு மதுவிலக்கை அமலாக்கினார். 2001 வரை மதுவிலக்கு அமலில் இருந்தது. 2001ல் இரண்டாவது முறை முதல்வரான ஜெயலலிதா, மீண்டும் மதுவிலக்கை ரத்து செய்தார். மதுவிலக்கை முதல் கையெழுத்திட்டு துவக்கிய ஜெயலலிதா மீண்டும் மதுவிலக்கை ரத்து செய்த போது, அது கேள்விக்குள்ளாக்கப்பட்டது. 

அப்போது, "மதுவிலக்கால் கள்ளச்சாராயம் பெருகுவதால், மதுவிலக்கை தளர்த்த வேண்டிய அவசியமாகிறது," என விளக்கம் கொடுத்தது அரசு. ஆனால் மதுவிலக்கை ரத்து செய்ததோடு நிறுத்திக்கொள்ளாமல், 2003ம் ஆண்டு அ.தி.மு.க. ஆட்சியில் அரசு நிறுவனமான டாஸ்மாக், நேரடி மது விற்பனையை துவங்கியது. 

இதன் பின்னர் தான் மது விற்பனை தமிழகத்தில் கணிசமாக அதிகரித்தது. மது அரக்கன் கொஞ்சம் கொஞ்சமாக தமிழகத்தில் ஊடுறுவத் துவங்கினான். இந்த 12 ஆண்டுகளில் குடிப்பழக்கம் என்பது வெகுஜன கலாச்சாரத்தின் தவிர்க்கமுடியாத அங்கமாகவும் மாறிவிட்டது. இன்று தேசிய அளவில் அதிக வருவாய் ஈட்டும் பொதுத்துறை நிறுவனம் என்ற அழியாப் பெயர் எடுத்தது தமிழர்களின் குடும்பங்களை அழித்துவரும் 'டாஸ்மாக் நிறுவனம்' 

மதுவிலக்கு: கருணாநிதியை முந்துவாரா ஜெயலலிதா? 

இந்த சூழலில்தான் தமிழகத்தில் மீண்டும் மதுவிலக்கை அமல்படுத்திட வேண்டும் என தமிழருவி மணியனின் 'காந்திய மக்கள் இயக்கம்' உள்ளிட்ட பல்வேறு இயக்கங்கள் தொடர்ச்சியாக போராட்டங்களை முன்னெடுக்கத் துவங்கியுள்ளன. குடியால் தன் குடி கெட்டுவிட்டதை உணரத்துவங்கியிருக்கிறான் தமிழன். மதுக்கடைகள் அடித்து நொறுக்கப்படுகின்றன. சட்டக்கல்லூரி மாணவி நந்தினி, காந்தியவாதி சசிபெருமாள் போன்றவர்களால் தனிநபர் போராட்டமாக துவங்கிய மதுவிலக்கை நோக்கிய போராட்டங்கள், இப்போது மக்கள் திரள் போராட்டமாக மாறி வருகிறது. 

மதுவால் ஏற்பட்ட சாலை விபத்தால் இறந்தவர்கள் இத்தனை பேர், விதவையானவர்கள் இவ்வளவு பேர், தனித்து விடப்பட்ட பெண்கள் இத்தனை, குற்றச்செயல்கள் அதிகரித்தது இவ்வளவு சதவீதம் என வெளிவந்த ஒவ்வொரு புள்ளி விவரங்களையும் மதுவுக்கு எதிரான போராட்டத்தை தீவிரப்படுத்தின. 

எல்லா பிரச்னைகளிலும் வெவ்வேறு போக்கை கையாண்டு வரும் அரசியல் கட்சிகளில் பெரும்பாலான கட்சிகள், அரசின் மதுவிற்பனைக் கொள்கையில் மாற்றம் வேண்டும் என்று ஒன்று சேர்ந்து குரல் கொடுக்க துவங்கியது இப்படித்தான்.

மதுவிலக்கு: கருணாநிதியை முந்துவாரா ஜெயலலிதா? 

எந்த முதல்வரும் மதுவிலக்கை ரத்து செய்வது குறித்து யோசிக்க கூட மறுத்த காலத்தில், மதுவிலக்கை ரத்து செய்தவரும், தனது ஆட்சிக்காலத் தில் அரசு நிறுவனமான டாஸ்மாக் மூலம் மது விற்பனையை கையாண்ட வருமான தி.மு.க. தலைவர் கருணாநிதியின் மதுவிலக்கு அறிவிப்புதான் இதன் உச்சம்.

மதுவிலக்கு தொடர்பான பா.ம.க வின் உறுதி, தமிழகத்தில் தன்னிச்சை யாக கிளர்ந்தெழும் போராட்டங்கள், பத்திரிக்கைளின் தலையங்கங்கள் ஆகியவற்றின் தொடர்ச்சியாகவோ அல்லது திமுகவின் எதிர்காலத்தை எண்ணியோ கருணாநிதி இந்த முடிவெடுத்திருக்கலாம். 

எது எப்படியோ மதுவுக்கு எதிரான தமிழகத்தின் உரத்த குரலுக்கு அது வலு சேர்த்திருக்கிறது. தமிழகத்தில் இன்னும் மதுவிலக்கு குறித்து முதலமைச்சர் ஜெயலலிதா பேசாதது ஒன்றுதான் குறை. அதுவும் விரைவில் நீங்கும் என நம்பிக்கைத் துளிர் லேசாக மனதில் அரும்பியிருக்கிறது. 

மது இல்லாத தமிழகம் விடியட்டும்!

- ச.ஜெ.ரவி

DARA SHUKOH , BROTHER OF AURANGAZEEB MURDERED 1659 , AUGUST 30



DARA  SHUKOH , 
BROTHER OF AURANGAZEEB 
MURDERED 1659 , AUGUST 30



தாரா சிக்கோ (Dara Shukoh, தாரா ஷிக்கோ, பாரசீகம்: دارا شكوه , மார்ச் 20, 1615 – ஆகத்து 30, 1659) முகலாயப் பேரரசன் ஷாஜகானுக்கும் மும்தாஜ் மகாலுக்கும் பிறந்த மூத்த மகனும், முடிக்குரிய இளவரசரும் ஆவார். பாரசீக மொழியில் தாரா ஷிகோ என்றால் “புகழ் வாய்ந்தவன்” என்று பொருள். மன்னர் ஷாஜஹானும், உடன்பிறந்த ஜஹனாரா பேகமும் முகலாய ஆட்சிக்கு வாரிசாக தாரா சிக்கோவைத்தான் எண்ணியிருந்தார்கள். ஆனால், ஒரு கொடூரப் போருக்கு பின்னர், தாரா ஷிகோவை அவருடைய இளைய சகோதரர் அவுரங்கசீப் தோற்கடித்துக் கொலை செய்து ஆட்சிப் பொறுப்பினைக் கைப்பற்றினார்.[1][2][3].

மரணம்

1657-ஆம் ஆண்டு ஷாஜஹான் உடல் நோய்வாய்ப்பட்ட சமயம், அரியணையை கைப் பற்ற அவரின் நான்கு புதல்வர்களிடையே கடும் போராட்டம் ஏற்பட்டது. இவர்களில் தாரா ஷிகோவிற்கும், ஔரங்கசீபிற்குமே அதிக வாய்ப்பிருந்தது. இப்போராட்டத்தின் முதற்கட்டமாக, பெங்காலின் மன்னனாக தன்னை பிரகடனப்படுத்திக் கொண்டார். ஸாஜஹானின் இரண்டாவது மகன் ஷா ஷூஜா. மற்றொரு பக்கம், தாரா ஷிகோ, ஷாஜஹானின் மூன்றாவது மகனான ஔரங்சீபின் மீது படையெடுத்தார்.

உடல் தேறிய ஷாஜஹானின் ஆதரவு இருந்தபோதிலும், ஆக்ராவிற்கு 13 கிலோமீட்டர் தொலைவிலிலுள்ள அமோகர் போர்க் களத்தில் 1658 ஜூன் 8-ஆம் தேதி தாரா ஷிகோவை ஔரங்சீப் தோற்கடித்தார். தோல்விக்கு பிறகு ஆதரவு தேட முயன்ற தாரா ஷிகோ, சிலரின் வஞ்சக சூழ்ச்சியால் கைது செய்யப்பட்டு ஔரங்கசீபிடம் ஒப்படைக்கப்பட்டார். சங்கிலியால் பிணைக்கப்பட்டு, தலை நகரில் அழுக்கேறிய யானையின் மீது கைதியாக இழுத்துச் செல்லப்பட்ட தாரா ஷிகோ, ஔரங்கசீபின் ஆட்களால் 1659 ஆகஸ்ட் 30-ஆம் தேதி கொல்லப்பட்டார். ஔரங்கசீப், இறந்துப் போன உடலிலிருந்து தலையை வெட்டி, அவரது தந்தையிடம் எடுத்துச் சென்றதாகவும் கூறப்படுகிறது.

கொள்கைகள்

தாரா ஷிகோ, மென்மையும், இறையுணர்வும் நிறைந்த சூஃபி அறிஞராக திகழ்ந்தார். அவர் இந்துக்கள், முஸ்லீம்களிடையே மத நல்லிணக்கத்தையும், கூடி வாழ்தலையும் வலியுறுத்தினார். தீவிர மத அடிப்படைவாதியான ஔரங்கசீபை தாரா ஷிகோ வெற்றிக் கொண்டிருந்தால், இந்தியா எவ்வளவு மாறுபாடு அடைந்திருக்குமென்று வரலாற்று ஆய்வாளர்கள் ஊகம் கூறுகின்றனர். தாரா ஷிகோ லாஹூர் நகரின் புகழ் பெற்ற காதிரி சுஃபி ஞானியான மையன் மிர் அவர்களின் மாணாக்கராவார். இதற்கு மையன் மிரின் சீடரான முல்லா ஷா பதக்ஷி உதவினார்.

தாரா ஷிகோ, இந்து மதத்திற்கும், இஸ்லாம் மதத்திற்குமிடையே உள்ள பொதுத்தன்மையை காண மிகுந்த முயற்சி மேற்கொண்டார். இந்த முயற்சியின் விளைவாக, இஸ்லாமிய அறிஞர்கள் படிப்பதற்கென்று, சமஸ்கிருத உபநிஷத்துகளை பாரசீகத்திற்கு மொழிப்பெயர்த்தார். அவரது மிகவுமறிந்த படைப்பான மஜ்ம-உல்-பஹ்ரெயின் (இரு பெருங்கடல்களின் சங்கமம்), சூஃபியிசத்திற்கும், இந்து மதத்தின் ஒரு தெய்வ கோட்பாட்டிற்குமிடையே உள்ள பொதுத்தன்மையை காண முயன்றுள்ளது.

தனது சகோதரன் ஔரங்கசீப்பால் ஏற்றுக்கொள்ளப்பட்டத நுண் கலைகள், இசை, நாட்டியம் ஆகியவைகளின் புரவலராகத் தாரா ஷிகோ திகழ்ந்தார். 1630 –களில் துவங்கிஅவர் இறக்கும் வரை படைத்த எழுத்துக்களும், ஓவியங்களும் சேகரிக்கப்பட்டு தாரா ஷிகோவின் தொகுப்பு என்றழைக்கப்படுகிறது. இந்த தொகுப்பை அவரது மணைவி நதிரா பானுவிற்கு அன்பளிப்பாக கொடுக்கப்பட்டது. அவர் இறந்தபின், தாரா ஷிகோவின் தொகுப்பு முகலாய அரசு நுலகத்திற்குள் எடுத்துக் கொள்ளப்பட்டது. தாரா ஷிகோவின் படைப்புகளின் மீதான அவரது அடையாளங்களை அழிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டாலும், எல்லா படைப்புகளும் அழிக்கப்படவில்லை.

50 உபநிடதங்களை மொழிபெயர்த்த விளைவு அல்லா உபநிஷடம் உருவானதா?: தாரா சிக்கோ (1615-1659) ஜஹாங்கீருடைய புதல்வன், அக்பரின் பேரன். பொதுவாக இவனைப்பற்றி அதிகமாக புகழ்ந்துதான் சரித்திராசிரியர்கள் எழுதி வைத்துள்ளனர். 1657ல் சமஸ்கிருதத்திலிருந்து 50 உபநிடதங்களை பாரசீகத்திற்கு மொழிபெயர்த்துள்ளான் என்று சில குறிப்புகள் கூறுகின்றன. ஆனால், அவன் மற்றவர்களால் அவ்வாறு மொழிபெயர்ப்பு செய்த வேலையை கண்காணித்தான் என்றுள்ளது[1]. எனவே சமஸ்கிருதம் மற்றும் பாரசீகம் தெரிந்த பலர் இதற்காக நியமிக்கப்பட்டிருந்தனர். அதாவது அக்பரது காலத்திற்குப் பிறகுக் கூட இத்தகைய மொழிபெயர்ப்புகள் தொடர்ந்துள்ளன என்று தெரிகிறது. “சிர்-இ-அக்பர்”, என்ற அத்தொகுப்பு “மிகப்பெரிய ரகசியம்” எனப்படுகிறது. அதாவது “கிதாப் அல்-மக்னுன்” (மறைத்து வைக்கப்பட்டுள்ள புத்தகம்) என்று குரானைக் குறிப்பிட்டு, அதுதான் உபநிடதங்கள் என்றும் குறிப்பிட்டான். பாரதத்தில் உபநிடதங்கள் என்றுமே ரகசியமாக இருந்ததில்லை. பல இடங்களில் பண்டிதர்களால் விவாதிக்கப்பட்டு வந்தது. எனவே, முகலாயர் காலத்தில் அது “மிகப்பெரிய ரகசியம்” என்று ழைக்கப்பட்டதற்கறென்ன காரணம் என்று பார்க்க வேண்டும். உபநிடதங்கள் அப்படியே மொழிபெயர்க்கப் பட்டிருந்தால், ஒரு பிரசினையும் இல்லை. ஆனால், மற்றவர்களுக்குத் தெரியக் கூடாது எனும் போது, மொழிபெயர்ப்பில் ஏதோ செய்திருக்கிறார்கள் என்று தெரிகிறது. ஒரு வேளை மேலே குறிப்பிட்ட அல்லா உபநிஷடம் அல்லது அல்லாவுபநிஷத் அல்லது அது போன்ற உபநிடதங்கள் எல்லாம் தயாரிக்கப்பட்டன் போலும்.

சூபித்துவம்–வேதாந்தங்களை ஒப்பிட்டு ஆராய்ச்சி செய்த தாரா சிக்கோ: தாராசிக்கோவின் “மஜ்மா-உல்-பஹ்ரைன்” (இரண்டு சாகரங்களின் சங்கமம்) என்ற புத்தகம், சூபித்துவம் மற்றும் வேதாந்தத்தை ஒப்பீடு செய்து எழுதப்பட்டுள்ள நூலாகும். ஆனால், இதனால் என்ன தாக்கம் என்று சொல்லப்படவில்லை. ஒருவேளை இந்துமதக் கருத்துகளை முகமதிய கருத்துகள் போன்று மாற்றியமைத்து, பாரசீகத்தில் எழுதி அவை சூபி நூல்கள் என்று அறிவித்தார்கள் போலும். சீக்கியர்களின் ஏழாவது குருவான குரு ஹர் ராயுடன் நட்பு கொண்டிருந்தான். ஒருவேளை, இவனும் அக்பர் போலவே, “தீன்-இலாஹி” மதசோதனைகளில் ஈடுபட்டானா என்று தெரியவில்லை. நூர்ஜஹானுக்குப் பிறகு இவன் தான் பட்டத்திற்கு வரவேண்டும் நிலையில் தான், ஔரங்கசீப் இவனுக்கு போட்டியாக கிளம்பி வேலை செய்ய ஆரம்பித்தான். இந்து ராஜாக்களின் ஆதரவு பெற தாரா சிக்கோ முயன்றிருக்கலாம். ஆனால், ஔரங்கசீப் தன்னுடைய வேலையில் குறியாக இருந்தான். இருப்பினும், தனது பதவியை நிலைநிறுத்திக் கொள்ள இத்தகைய வேலைகளில் ஈடுபட்டான் போலும்.

உபநிடதங்களில் நாட்டம், வேட்டையில் குறி, சிற்றின்ப விளக்கம்: தாராசிகோ இத்தகைய மத-ஆராய்ச்சிகளோடு ஓவியத்திலும், வேட்டையிலும் ஈடுபாடு கொண்டிருந்தான். வேட்டைப் பற்றிய ஓவியங்களின் பின்னணியில் பெண்ணின்பம் போன்ற சரச உணர்வுகள் உள்ளன என்று ஆராய்ச்சியாளர்கள் எடுத்துக் காட்டுகிறார்கள்[2]. வேட்டையில், தமது இலக்கின் மீது குறியாக கண்களை வைத்துக் கொண்டு பார்த்து, சுட்டு வீழ்த்துவது வழக்கம். அதேபோல, தனக்குப் பிடித்தமான பெண்ணைப் பார்த்து, அவளை காமவேட்டையில் வீழ்த்துவது ஆணின் திறமை[3]. தாரா சிக்கோவிற்கு இதெல்லாம் பொறுத்தமான விசயங்கள் அல்ல என்று நினைக்க வேண்டாம். ஆன்மீகம், சூபித்துவம் என்றெல்லாம் இருக்கும் போது, இதில் எப்படி மனம் ஈடுபடுகிறது, இது முரண்பாடல்லவோ என்றெல்லாம் எண்ணத்தோன்றும். இந்துக்களின் அஹிம்சையை மதிப்பவன் என்றால், ஏன் வேட்டையில் ஈடுபட்டு மிருகங்களைக் கொன்றிருக்க வேண்டும் என்று கேட்கலாம். ஆனால், இளவரசனாக இருந்த அவன் தனது அரசக்கடமைகள், பாரம்பரியங்கள் முதலியவற்றைப் பின்பற்றித்தான் ஆகவேண்டும்[4] என்று ஆராய்ச்சியாளர்கள் எடுத்துக் காட்டுகிறார்கள்.

பதவிக்காக குறியாக இருப்பது தவறில்லை: உண்மையில் “கிதாப் அல்-மக்னுன்” (மறைத்து வைக்கப்பட்டுள்ள புத்தகம்) என்று குரானைக் குறிப்பிட்டு, அதுதான் உபநிடதங்கள் என்றும் குறிப்பிட்டதையே ஆசார-அடிப்படவாத முகமதியர்கள் ஏற்றுக் கொள்ளமாட்டார்கள். ஆனால், மிருகவேட்டையை காமவேட்டையோடு ஒப்பிடுவதை, எந்த முகலாய அரசனும் தவறு என்று சொல்லமாட்டான். “ஹராம்” என்றதையே “ஹேரம்” ஆக்கி பெண்களை அனுபவித்து வரும் பழக்கத்தைக் கொண்டவர்களுக்கு, இதெல்லாம் சகஜம் என்றுதான் சொல்லவேண்டும். வேட்டையில் விழுந்த மிருகங்கள் எப்படி வேட்டையாடியவர்களுக்கு உணவாகிறதோ, அதுபோலத்தான், ஹேரத்தில் சிக்கிய பெண்களின் கதியும். ஹேரத்தை விட்டு விடுதலையான அல்லது தப்பியோடி வந்த பெண்கள் தாம், அங்கிருக்கும் நிலையை உலகிற்கு சொல்லவேண்டும். தாராசிக்கோ காலத்தினால் பிற்பட்டு வந்தாலும், மதவொப்பீடு, பெண்ணின்பம் என்றெல்லாம் இருப்பதானால் இங்கு குறிப்பிட வேண்டியதாகிறது. ஆனால், இவனே, தனது சகோதரனால் வேட்டையாடிக் கொல்லப்படுகிறான்.

தாராசிக்கோவின் மனைவிகள் குடும்பம் முதலியன: தாரா சிக்கோ நதிரா பானு பேகம் என்ற அழகியப் பெண்ணை 1633ல் கல்யாணம் செய்து கொண்டான். 1659ல் இவள் காலமானாள். 26 ஆண்டு தாம்பத்திய நடத்தியதில் நான்கு மகன்கள் மற்றும் நான்கு மகள்கள் பிறந்தனர். அதாவது அத்தகைய காலகட்டத்திலும், இருவரும் சந்தோஷமாக வாழ்ந்தனர். இருப்பினும் இவனுக்கு பல மனைவிகள் இருந்தனர் என்று தெரிகிறது. ஔரங்கசீப் இவனைக் கொன்ற பிறகு, தாரா சிக்கோவின் மனைவிகள் மற்றும் மகள்கள் முதலியோருக்கு, ஔரங்கசிப்பின் ஹேரத்தில் இடம் கொடுக்கப்பட்டது[5]. இதிலிருந்து, காமம், உடலின்பம் என்றெல்லாம் வரும்போது, முகலாயர்கள் ஒரே மாதிரியாகத்தான் இருந்திருக்கிறார்கள். மேலும், வெட்டையைக் கூட காமரசத்துடன் விளக்கும் திறமை தாரா சிக்கோவிற்கு அனுபவம் இல்லாமல் வந்திருக்க முடியாது. மேலும், இதெல்லாம், அவர்களிடம் சகஜமாக இருந்தது. எனவே மிருகங்களை வேட்டையாடினால், அஹிம்சை பேசக்கூடாது என்பதோ, வேதாந்தம்-குரான் ஒப்பீடு செய்வதால், காமத்தில் ஈடுபடக் கூடாது என்பதோ, அவர்களிடம் எந்தவித கட்டுப்பாடோ, தடையோ, எதிர்ப்போ இல்லை. அவ்வாறு நினைப்பதே முரண்பட்டதாகும்.

தீன் இலாஹியைத் தழுவ வற்புறுத்தல், அதிகாரப்பிரயோகம் முதலியவை மேற்கொண்டது: கான்–இ-ஆஜம் எனப்படுகின்ற மிர்ஜா ஆஜிஜ் கோகா என்பவர் அக்பரின் மதத்திற்குக் கடுமையான எதிர்ப்பைத் தெரிவித்தார். அக்பருடன் வளர்க்கப்பட்டு வந்து, பெரிய படைத்தளபதியானவர், அக்பருக்கு மிக நெருக்கமானவர் அதாவது அக்பரின் “சகோதரன்” (Half-brother) என்று குறிப்பிடப்படுகிறான். 1594ல் அக்பர் தன்னைக் கூப்பிட்டபோது, வெறுப்போடு மறுத்து, மெக்காவுக்குச் சென்று விட்டார். ஆனால், அக்பரது ஆட்கள் அங்கும் துரத்திக் கொடுமைப் படுத்தினர். இதனால், வேறுவழியில்லாமல், தில்லிக்குத் திரும்பி வந்து, அக்பருடன் சமாதானம் செய்து கொண்டு, தீன் இலாஹியை ஏற்றுக் கொண்டார். இதனால், 1580ல் படைத்தலைவரானார், 1587ல் தனது மகளை இளவரசன் மூரதிற்கு திருமணம் செய்து கொடுத்ததால் அக்பருக்கே சம்பந்தியானார்[6]. நண்பன் மற்றும் முசல்மானுக்கே இந்த கதி என்றால், இந்துக்களின் கதி என்னவாகியிருக்கும் என்று யோசிக்க வேண்டியுள்ளது. அதாவது, வலுக்கட்டாயமாக மதம் மாற்றப்பட்டனர், அதற்காக வேண்டிய செயல்கள் யாவும் அthiகாரத்துடன், வன்முறையுடன் மேற்கொள்ளப்பட்டன என்பது தெரிகிறது.

ஜோதிடத்தில் நம்பிக்கை: அக்பர் நவம்பர் 23. 1542ல் பிறந்தபோது, அவருக்கு பத்ர்-உதீன் மொஹம்மது அக்பர் என்று பெயர் வைக்கப்பட்டது.

பத்ர்-உதீன் = பௌர்ணமி அன்று பிறந்த,
மொஹம்மது = மொஹம்மது நபி,
அக்பர் = மிகப்பெரிய, சிறந்த மற்றும் அவரது தாத்தாவின் பெயர், செயிக் அலி அக்பர் ஜாமி[7].
ஆனால், சுன்னத் செய்து பெயர் வைக்கும் போது, உறவினர்கள் மற்றும் ஜோதிடர்களின் அறிவுரைப்படி அவரது பெயர் மற்றும் பிறந்த தேதி மாற்றப்பட்டது. பத்ர்-உதீன் மொஹம்மது அக்பர் என்பது ஜலாலுத்தீன் மொஹம்மது அக்பர் என்றும் பிறந்த தேதி அக்டோபர் 15, 1542 என்று மாற்றப்பட்டது[8]. அக்பருக்கு ஜோதிடத்தில், குறிப்பாக ஆரூடங்களில் அதிக நம்பிக்கை இருந்ததது என்று தெரிகிறது. தமது வம்சாவளியில் மகனால் தந்தைக்கு ஏதாவது தொந்தரவு, பிரச்சினை அல்லது ஆபத்து வரும் என்ற எண்ணம் அவரது மனதில் ஆழமாகப் பதிந்திருந்தது.  முகமதியர், இஸ்லாத்தைக் கடைப்பிடிப்பவர்கள் என்றெல்லாம் சொல்லிக் கொண்டாலும், அரேபியாவில் மற்றும் இஸ்லாம் உலகத்தில் ஜோதிட நம்பிக்கை இருந்து வந்துள்ளது, வருகிறது. அரேபிய-பாரசீக மொழிகளில் பற்பல ஆரூட, ஜோதிட, எதிர்கால பலன்கள் கூறும் புத்தகங்கள் இஸ்லாத்திற்கு முன்பும், பின்மும் இருந்தன. முன்பே குறிப்பிட்டப்படி, மத்தியத்தரைக் கடல் நாடுகளில் இந்துக்கள் 18ம் நூற்றாண்டு வரை வாழ்ந்து, படிப்படியாக மதம் மாற்றப்பட்டாலும், முந்தைய பழக்க-வழக்கக்களை அவர்கள் தொடர்ந்து வேறுவிதமாக பின்பற்றி வந்தார்கள். புத்தகங்களும் அவ்வாறே மாற்றி எழுதப்பட்டன.

JAMUNA ,LEGEND ACTRESS BORN 1936 AUGUST 30


JAMUNA ,LEGEND ACTRESS 
BORN 1936 AUGUST 30


ஜமுனா – பிறப்பு- 30.08.1936 – வயது-77. நிச்சயதாம்பூலம், குழந்தையும் தெய்வமும், தங்கமலை ரகசியம், நல்லதீர்ப்பு, தாய் மகளுக்குக் கட்டிய தாலி, மிஸ்ஸியம்மா போன்ற பல்வேறு தமிழ்ப் படங்களிலும் 198-க்கும் மேற்பட்ட தெலுங்குத் திரைப்படங்களிலும் நடித்த அழகும் ஆற்றலும் கொண்ட புகழ்பெற்ற நடிகை. தெலுங்கில் புட்டில்லு என்ற படத்தில் 1952-இல் அறிமுகமானார். நடிக்க வருமுன் பள்ளியில் மேடையில் நடித்து வந்தார். இந்திப்படங்களிலும் நடித்துள்ளார். ஜுல்லாரி ரமணராவ் என்ற கல்லூரி விரிவுரையாளரை மணந்து கொண்டார். இவர்கட்கு வம்சி கிருஷ்ணா என்ற மகனும் ஷ்ரவந்தி என்ற மகளும் உள்ளனர். தமிழிலும் தெலுங்கிலும் சிவாஜிகணேசன்,ஜெய்சங்கர், ஜெமினிகணேசன்,  நாகேஷ்வரராவ், என்.ரி.ராமராவ், சோபன்பாபு போன்ற பல முன்னணி நடிகர்களும் நடித்தவர்.

அமுதாய்ப் பொழிந்த நிலவு -அந்தநாள் ஞாபகம்

புராணப் படங்களின் ஆதிக்கம் குறையாத ஐம்பதுகளில் தெலுங்கு சினிமாவை சீர்திருத்த சினிமாவாக மாற்றிக்காட்டிய சினிமா சிற்பிகளில் முக்கியமானவர் கரிகாபட்டி ராஜா ராவ். புகழ்பெற்ற மருத்துவராகவும் இருந்த இவர், நாடகம், சினிமா இரண்டையும் சீர்திருத்தக் கருவியாகக் கையாண்டவர். இவரது பெருமைமிகு அறிமுகம்தான் ‘ஆந்திராவின் நர்கீஸ்’ என்று புகழப்படும் ஜமுனா.

தெலுங்கு சினிமாவின் காவிய கால சூப்பர் ஸ்டார்கள் என்.டி.ஆர்., அக்கினேனி நாகேஷ்வர ராவில் தொடங்கி அறுபதுகளின் முன்னணிக் கதாநாயகர் அத்தனை பேருடனும் சுமார் 200 தெலுங்குப் படங்களில் நடித்தவர்.

தமிழில் மிகக் குறைந்த எண்ணிக்கையில் நடித்திருந்தாலும் சிவாஜி, எம்.ஜி.ஆரில் தொடங்கி ஜெய்சங்கர் வரையிலும் ஜோடி சேர்ந்து தமிழ் ரசிகர்களை ஈர்த்த காந்தக் கண்களுக்குச் சொந்தக்காரர். தெலுங்கு, தமிழ் மொழிகளைக் கடந்து இந்திப் பட உலகிலும் வெற்றிக்கொடி நாட்டிய கன்னடத்துப் பெண்.

ஜமுனாவின் தந்தை சீனிவாச ராவ் ஆந்திராவின் குண்டூர் மாவட்டத்தில் உள்ள துக்கிராலா என்ற ஊரில் குடியேறியவர். அந்த ஊரின் கறிமஞ்சள் உலகப்புகழ் பெற்றது. அதையும் பருத்தி இழைகளையும் ஏற்றுமதி செய்யும் வெற்றிகரமான வியாபாரியாக இருந்தார். இவரது மனைவி கவுசல்யாதேவி கர்நாடக சங்கீதப் பாடகியாக இருந்தவர்.

ஜமுனா வட கர்நாடகத்தின் ஹம்பியில் பிறந்தபோது அவரது நட்சத்திரத்தை மனதில் வைத்து அவருக்கு ஜமுனா என்ற நதியின் பெயரை வைத்தார்கள். அம்மாவிடம் இளமையிலேயே வாய்ப்பாட்டு கற்றுக்கொண்டார். பிறகு பரதம் பயின்றார்.

தெலுங்கு சினிமாவில் பின்னாளில் நடிகராக உயர்ந்த ‘கொங்கரா ஜக்கையா’ஜமுனாவின் பள்ளி ஆசிரியர். ஜமுனாவின் நடிப்புத் திறனைக் கண்ட பள்ளி ஆசிரியர் ஜக்கையா, “ உங்கள் மகளை நீங்கள் நாடகங்களில் நடிக்க வைக்கலாமே” என்று அவரது அம்மாவிடம் எடுத்துக் கூற, ஜமுனா பத்து வயது முதல் நாடகங்களில் நடிக்கத் தொடங்கினார். படிப்பிலும் படுசுட்டியாக இருந்ததால் அவரை டாக்டருக்குப் படிக்க வைக்க விரும்பினார் அவரது அப்பா. இதற்காகத் தன் குடும்ப நண்பரான டாக்டர் கரிகாபட்டி ராஜா ராவிடம் மகளை அழைத்துச் சென்று ஆலோசனை கேட்டார்.

ஜமுனாவின் அழகைக் கண்ட அவரோ தனது ‘மா பூமி’ என்ற நாடகத்தில் கதாநாயகியின் தங்கையாக நடிக்க வைத்தார். நாடகத்தில் அவரது நடிப்பைக் கண்ட ராஜா ராவ், ஜமுனாவைப் புகைப்படங்கள் எடுத்து, அவற்றை இந்திப்பட உலகில் புகழ்பெற்ற கேமராமேனாக இருந்த தம் நண்பர் வி. என். ரெட்டிக்கு அனுப்பிவைத்தார்.

“நான் முதல்முறையாகத் தயாரிக்க இருக்கும் படத்துக்கு இந்தப் பெண்ணைக் கதாநாயகி ஆக்கலாம் என்று நினைக்கிறேன். உன் அபிப்ராயம் என்ன?” என்று கேட்டு எழுதினார். ஆனால் இரண்டு மாதங்கள் ஆகியும் வி. என். ரெட்டியிடமிருந்து பதில் இல்லை. இனியும் தாமதிக்க முடியாது என்று எண்ணி, வேறு கதாநாயகியைத் தேட ஆரம்பித்தார்.

அப்போது ரெட்டியிடமிருந்து ஒரு தந்தி வந்தது. அதில் ‘இந்தப் பெண் ஆந்திராவின் நர்கீஸ்’என்று புகழ் பெறுவாள்’என்று செய்தி அனுப்பியிருந்தார். இதற்கு மேலும் தயங்குவாரா கரிகாபட்டியார். உடனடியாக ஜமுனாவைத் தனது படத்தின் கதாநாயகியாக ஒப்பந்தம் செய்தார்.

1953-ல் வெளியான ‘புட்டில்லூ’ என்ற அந்தத் தெலுங்குப் படத்தில் ஜமுனாவின் நடிப்புக்குப் பாராட்டு மழை பொழிந்தது. அடுத்துவந்த மூன்று ஆண்டுகளில் தெலுங்கு சினிமாவின் முன்னணிக் கதாநாயகியாக உயர்ந்தார். அறிமுகப் படம் வெளியான அடுத்த ஆண்டே 1954-ல் வெளியான ‘பணம் படுத்தும் பாடு’ படத்தின் மூலம் தமிழில் இரண்டாவது கதாநாயகியாக அறிமுகமானார்.

எச்.எம்.ரெட்டி தனது ‘ரோகிணி பிக்சர்ஸ்’ பட நிறுவனம் சார்பில், தமிழ், தெலுங்கு, மராத்தி ஆகிய மூன்று மொழிகளில் ஒரே நேரத்தில் தயாரித்த நகைச்சுவைப் படம் இது. என்.டி. ராமராவ் -சவுகார் ஜானகி ஜோடியாக நடித்திருந்த இந்தப் படத்தில் ஜமுனா இரண்டாவது கதாநாயகி. நகைச்சுவை நடிகர் கே.ஏ. தங்கவேலுவுக்கு ஜோடி.

தமிழில் அறிமுகப் படம் தோல்வியடைந்தாலும் 1955-ல் விஜயா – வாகினி ஸ்டூடியோ தயாரித்த ‘மிஸ்ஸியம்மா’ படத்தில் இரண்டாவது கதாநாயகியாக நடிக்கும் வாய்ப்பை ஜமுனாவுக்குப் பெற்றுத் தந்தார் சாவித்திரி. ஜெமினி கணேசனும், சாவித்திரியும் நடித்து ரசிகர்களை உருக்கிய இந்தப் படத்தின் இயக்குநர் எல்.வி.பிரசாத்.

கொட்டக் கொட்ட உருளும் காந்தக் கண்களைக் கொண்டு குழந்தைத்தனம் கொண்ட சீதா என்ற ஜமீன்தார் மகள் வேடத்தில் ஜமுனா பிரமாதமாக நடித்திருந்தார். ‘தமிழ்ப் படவுலகம் ஒரு நல்ல நடிகையைப் பெற்றுக்கொண்டது’ என ஆனந்த விகடன் எழுதியது. தெலுங்கிலும் வெளியாகி வெற்றிபெற்ற இந்தப் படத்தை ஏவி.எம். நிறுவனம் இந்தியில் தயாரிக்க அங்கேயும் வெற்றிபெற்று ‘யாரிந்தப் பெண்மணி?’ எனக் கேட்க வைத்தது.

‘மிஸ்ஸியம்மா’ மூலம் கிடைத்த புகழ் ஜமுனாவைத் தென்னகத்தின் முன்னணிக் கதாநாயகி ஆக்கியது. சாவித்திரி, சரோஜா தேவி, பானுமதி, அஞ்சலி தேவி என ஐம்பதுகளில் ஜொலித்த கதாநாயகிகளில் யாருடைய திறமையிலும் கடுகளவும் சளைதவர் அல்ல என்று பெயர் பெற்றார் ஜமுனா. நளினமான நடனம், கண்ணியம் மீறாத கிளாமர், கண்களால் பேசி நடிக்கும் திறன் என்று கலக்கிய ஜமுனா, 1957-ல் சிவாஜிகணேசனுடன் ‘தங்கமலை ரகசியம்’ படத்தில் நடித்தார்.

அந்தப் படத்தில் சுசீலாவின் தேன் குரலில் ஜமுனா பாடுவது போல் இடம்பெற்ற ‘அமுதைப் பொழியும் நிலவே’ என்ற பாடலில் அவரது பவ்யமான நடிப்பைக் கண் குளிரக் கண்டு, அந்தப் பாடலை பாடாத ஆண், பெண் ரசிகர்களே அன்று இல்லை என்று சொல்லும்விதமாக அனைவரும் பாடிப் பாடி , ஜமுனாவைக் கொண்டாடினார்கள்.

அந்தப் படத்தைத் தொடர்ந்து சிவாஜியுடன் பல படங்களில் நடித்த ஜமுனா, அண்ணா கதை வசனம் எழுதிய ‘தாய் மகளுக்கு கட்டிய தாலி’ படத்தில் எம்.ஜி.ஆருக்கு ஜோடியாக நடித்தார். தெலுங்கு சினிமாவில் ஜமுனாவின் நடிப்புக்குப் பல படங்கள் உதாரணமாக இருக்க, தமிழில் அவரது நடிப்புத்திறன் முழுமையாக வெளிப்பட்டு நின்ற படம் ‘குழந்தையும் தெய்வமும்.’ ஏவி.எம். தயாரிப்பான இந்தப் படத்தில் ஜமுனாவுக்கு ஜோடியாக நடித்தவர் ஜெய்சங்கர்.

ஒரு கட்டத்துக்குப் பிறகு தெலுங்குப் பட உலகுக்குத் திரும்பி அங்கே 15 ஆண்டுகள் கதாநாயகியாக நடித்த அவர், நீண்ட இடைவெளிக்குப் பிறகு ‘தூங்காதே தம்பி தூங்காதே’ படத்தில், கமலுக்கு அம்மாவாக நடித்தார்.

மங்காத புகழுடன் வாழும் ஜமுனாவை 1983-ல், அரசியலுக்கு வருமாறு அழைத்தார் அந்நாளின் பிரதமர் இந்திரா காந்தி. காங்கிரசில் இணைந்து நாடாளுமன்ற உறுப்பினராகவும் தேர்தல் களம் வென்று மக்கள் பணி புரிந்த ஜமுனா, புட்டபர்த்தி சாய்பாபாவின் தீவிர பக்தர். தற்போது அரசியலில் இருந்து விலகி வாழும் ஜமுனா, 1965-இல் கல்லூரிப் பேராசிரியர் ரமண ராவை மணந்து கொண்டார். இந்தத் தம்பதிக்கு வம்சி கிருஷ்ணா, ஸ்ரவந்தி ஆகிய வாரிசுகள் உள்ளனர்.

நன்றி: ‘தி இந்து’ தமிழ் நாளிதழ்



ஜமுனா தென்னிந்தியத் திரைப்பட நடிகை, இயக்குனர் மற்றும் அரசியல்வாதியாவார். இவர் பதினாறு வயதிலிருந்து திரைப்படங்களில் நடித்துக் கொண்டுள்ளார். 1953ல் புட்டிலு திரைப்படத்தில் நடிக்கத் தொடங்கினார்.[1]

எல். வி. பிரசாதின் மிஸ்ஸம்மா திரைப்படத்தில் நடித்தபிறகு இவர் புகழ்பெற்றார்.[2]

இளமைக்காலம்
ஜனா பாய் என்ற இயற்பெ 
யர் கொண்ட ஜமுனா கர்நாடகாவில் உள்ள ஹம்பி எனுமிடத்தில் நிப்பானி ஶ்ரீனிவாசன் ராவ் - கௌசல்யாதேவி ஆகியோருக்குப் பிறந்தார். ஆந்திர பிரதேசத்தில் குண்டூர் மாவட்டத்திலுள்ள துக்கரிலா எனுமிடத்தில் வளர்ந்தார்.[1] நடிகை சாவித்திரி இவருடைய வீட்டில் தங்கியிருந்தார். அதனால் சாவித்திரி ஜமுனாவை திரைப்படத்துறைக்கு வருமாறு அழைத்தார்.

தொழில்
ஜமுனா பள்ளியில் மேடை நடிகராக இருந்துள்ளார். அவருடைய அன்னை ஹார்மோனியம் போன்றவற்றை இசைக்க கற்றுத் தந்தார். டாக்டர் காரிகாபதி ராஜா ராவ் மா பூமி என்ற ஜமுனாவின் நாடகத்தினைப் பார்த்தவர், தன்னுடைய புட்டிலு திரைப்படத்தில் நடிகையாக்கினார்.[1] தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி திரைப்படங்களில் நடித்த ஜமுனா, அரசியலிலும் இணைந்தார். 1980களில் இந்திய தேசிய காங்கிரசில் இணைந்து ராஜமிந்திரி மக்களவைத் தொகுதியில் 1989ல் தேர்வு செய்யப்பட்டார். 1990களில் பாரதிய ஜனதா கட்சியில் இணைந்து அக்கட்சிக்காக பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.


''சாவித்ரி பட விஷயத்துல நடிகை ஜமுனா அப்படிச் சொல்லியிருக்கக் கூடாது!'' - செளகார் ஜானகி

தமிழ்த் திரையுலகில் நடிப்புச் சுடராக வலம் வந்தவர் சாவித்ரி. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் எனப் பல மொழி ரசிகர்களின் மனங்களைக் கவர்ந்தவர். பங்களாக்கள், கார்கள், நகைகள் என செல்வச் செழிப்பின் உச்சத்தில் இருந்தார். அதன்பிறகு, படத் தயாரிப்பில் இறங்கினார். அதில் சந்தித்த பொருளாதார இழப்பு, வருமான வரி பிரச்னை போன்றவற்றால் வறுமையின் பாதாளத்தையும் சந்தித்தார். இந்த நடிப்புத் தேவதையின் இறுதிக் காலம் எப்படி இருந்தது என்பது அனைவருமே அறிந்தது. இந்த நிலையில், நடிகையர் திலகம் சாவித்ரியின் வாழ்க்கையை, தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் இயக்கிவருகிறார், நாக் அஸ்வின். தமிழில் 'நடிகையர் திலகம்' என்கிற அவருடைய பட்டப்பெயரிலும், தெலுங்கில் 'மகாநதி' என்ற பெயரிலும் சாவித்ரியின் வாழ்க்கை வரலாறு உருவாகிவருகிறது. 



அந்தப் படத்தில், சாவித்ரி கதாபாத்திரத்தில், நடிகை கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார். இந்தச் சமயத்தில், சாவித்ரியுடன் நடித்த நடிகைகளில் ஒருவரான ஜமுனா, ''சாவித்ரியுடன் நெருங்கிப் பழகி நடித்தவர்களில் நான் மட்டுமே உயிருடன் இருக்கிறேன். எனக்குத்தான் அவர் தொடர்பான நிறைய தகவல்கள் தெரியும். என்னிடம் அவரைப் பற்றிக் கேட்காமல் அவர் வாழ்க்கையை எப்படிப் படமாக்கலாம்?'' என்று கேள்வி எழுப்பி, சினிமாத்துறையின் ஒட்டுமொத்த கவனத்தையும் தன் பக்கம் திருப்பியிருக்கிறார். இது சர்ச்சையை எழுப்பியுள்ளது. இதுகுறித்து கருத்து அறிய சாவித்ரி காலத்தில் நடித்தவர்களைத் தொடர்புகொண்டோம். 


சாவித்ரி கதாபாத்திரத்தில் நடிக்க கீர்த்தி சுரேஷ் சரியானவர் இல்லை என்று பழம்பெரும் நடிகை ஜமுனா தெரிவித்துள்ளார். நடிகையர் திலகம் சாவித்ரியின் வாழ்க்கை வரலாற்று படத்தில் சாவித்ரியாக கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளார். சாவித்ரியாக கீர்த்தி ஒத்து வர மாட்டார் என்று பலரும் தெரிவித்தனர். இந்நிலையில் இது குறித்து பழம்பெரும் நடிகை ஜமுனா கூறியிருப்பதாவது, நான் 200 படங்களுக்கு மேல் நடித்துள்ளேன். சாவித்ரியுடன் நடித்தவர்களில் நான் மட்டுமே உயிரோடு உள்ளேன். சாவித்ரியை பற்றி எனக்கு நிறைய தெரியும். அப்படி இருக்கும்போது படம் எடுப்பவர்கள் என்னிடம் எதுவும் கேட்காதது வேதனையாக உள்ளது. சாவித்ரியாக நடித்துள்ள பெண்ணுக்கு தெலுங்கு தெரியாது. தெலுங்கு தெரியாமல் அவரால் எப்படி சாவித்ரி கதாபாத்திரத்திற்கு உயிர் கொடுக்க முடியும்?
தற்போதைய நடிகைகள் அரைகுறை உடையில் நடிக்கிறார்கள். எங்கள் காலத்தில் எல்லாம் அப்படி கிடையாது. எனக்கு மகன் பிறந்தபோது குழந்தையை தொட்டிலில் போடும் நிகழ்ச்சிக்கு வந்தார் சாவித்ரி. நல்ல கணவர் அமைய புண்ணியம் செய்திருக்க வேண்டும். ஜெமினி கணேசன் என்னை ஏமாற்றிவிட்டார் என்று கூறி என்னை கட்டிப்பிடித்து அழுதார். ஜெமினி வேண்டாம் என்று எவ்வளவோ கூறியும் கேட்காமல் நீ தானே அவரை திருமணம் செய்து கொண்டாய் என்று சாவித்ரிக்கு ஆறுதல் கூறினேன். அவருக்கு சென்னையில் 3 பங்களா,
கொடைக்கானலில் ஒரு வீடு இருந்தது. சாவித்ரியை போன்று சினிமாவில் வேறு எந்த ஒரு நடிகையும் சம்பாதிக்கவில்லை. அவர் வீட்டில் நீச்சல் குளம் கட்டினார். மைசூரில் இருந்து சந்தன கட்டைகளை வரவழைத்து பூஜை அறையை உருவாக்கினார்.




ஜமுனா கருத்து பற்றி நகைச்சுவை நடிகை சச்சு பேசுகையில், ''தெலுங்குத் திரையுலகில் இன்றும் மரியாதையாக நினைக்கப்படுபவர், சாவித்ரி அம்மா. எனக்குத் தெரிந்தவரை, செளகார் ஜானகி அம்மாவுக்குத்தான் சாவித்ரி அம்மாவைப் பற்றி நிறைய தெரியும்'' என்றார். எனவே, புட்டபர்த்தியில் இருக்கும் செளகார் ஜானகியைத் தொடர்புகொண்டோம். ''என் தங்கை கிருஷ்ணகுமாரி இறந்ததிலிருந்து மனசே சரியில்லைம்மா. அதான் பாபாகிட்ட வந்துட்டேன்'' என்றவரிடம் நடிகை ஜமுனாவின் கருத்து பற்றிச் சொன்னோம். சில நிமிட அமைதிக்குப் பிறகு தொடர்ந்தார் செளகார் ஜானகி. 


''சாவித்ரிகூட நடித்தவர்களில் நானும் இன்னும் உயிரோடதாம்மா இருக்கேன். தவிர, ஒருத்தரின் வாழ்க்கை வரலாற்றையே படமாக எடுத்தாலும், அதில் இயக்குநரின் கற்பனையும் கொஞ்சம் சேரத்தான் செய்யும். சில்க் ஸ்மிதாவின் வாழ்க்கையைப் படமாக எடுத்தபோதும், இது மாதிரியான கருத்துகள் வரத்தானே செய்தது. சாவித்ரி விஷயத்தில், தனக்கு மட்டும்தான் அவர் பற்றி எல்லாம் தெரியும் என்று ஜமுனா சொல்லியிருந்தால், அது சரியான வார்த்தை கிடையாது. நானும் சாவித்ரியும் பல படங்களில் இணைந்து நடித்திருக்கோம்.  அவரும் நானும் 'ஆறத காய' என்ற கன்னடப்படத்தில் நடிக்கும்போதுதான் அவர் நிலைமை மிகவும் சீரியஸாகி, மருத்துவமனையில் சேர்த்தார்கள். அதன்பிறகு சாவித்ரி திரும்பி வரவே முடியாத உலகத்துக்குச் சென்றுவிட்டார். அதனால், அவருடைய கடைசிக் காலங்களில்கூட அவருடன் நான் நல்ல நட்புடன் இருந்திருக்கிறேன். அதனால்,  நிறைய விஷயங்களை மனம்விட்டுப் பேசியிருக்கோம்.

 அவுட்டோர் ஷூட் போகும்போதெல்லாம் நான் செல்ஃப் குக்கிங்தான். நான் சமைச்சதை இருவரும் சேர்ந்து சாப்பிட்டவாறு நிறைய பேசியிருக்கிறோம். பர்சனல் விஷயங்களைப் பேசும்போது, 'உன்னை மாதிரி தைரியம் எனக்கு வராது' என்று அடிக்கடி சொல்வார். சாவித்ரி வாழ்ந்தது, வீழ்ந்தது எல்லாருக்கும் தெரியும். அவர் பற்றிய படம் எடுப்பது குறித்து என் கருத்தைக் கேட்டால், எடுக்கவே வேண்டாம் என்றுதான் சொல்வேன். சாவித்ரி எதனால் வீழ்ந்தார், எப்படியெல்லாம் வீழ்ந்தார் என்று அவர் வாழ்க்கையின் சோகமான பக்கங்களை எல்லாம் சொல்ல வேண்டியிருக்கும். இறந்துவிட்ட ஒருவர் பற்றி ஏன் கிளற வேண்டும்?'' என்றார் செளகார் ஜானகி.