Wednesday 28 October 2020

FIRST COLLEGE IN USA FOUNDED IN MASSACHUSETTS ON 1636 OCTOBER 28

 



FIRST COLLEGE IN USA FOUNDED
IN MASSACHUSETTS ON 1636 OCTOBER 28
( HARVARD UNIVERSITY )


Engraving of Harvard College by Paul Revere, 1767

The colonial colleges are nine institutions of higher education chartered in the American Colonies before the United States of America became a sovereign nation after the American Revolution.[1] These nine have long been considered together, notably in the survey of their origins in the 1907 The Cambridge History of English and American Literature.[2] Seven of the nine colonial colleges are part of the Ivy League athletic conference: Harvard, Penn, Yale, Princeton, Columbia, Brown, and Dartmouth. (The eighth member of the Ivy League, Cornell University, was founded in 1865.)

The two colonial colleges not in the Ivy League are now both public universities—the College of William & Mary in Virginia and Rutgers University in New Jersey. William & Mary was a royal (state) institution from 1693 until the American Revolution. Between the Revolution and the American Civil War, it was a private institution. The college suffered significant damage during the Civil War and began to receive public support in the 1880s. William & Mary officially became a public college in 1906, and Rutgers became the state university of New Jersey after World War II.

DAUGHTER - IN - LAW

 

DAUGHTER - IN - LAW



அது வேறு காலம்!

களை பிடுங்கி, கொஞ்சம் கம்மங் கதிர்களை அறுத்து வரும்போதே, பாக்கியத்தின் மனதில் ஏதோ பட்டது...
'ஒருவேளை, இன்று பாரி அழைப்பானோ... கட்டாயம் வரவேண்டும் என்று வற்புறுத்துவானோ?'
அதே போலத்தான் ஆயிற்று.
ஒரு மணி போல சற்றே கண்ணயர்ந்த போது, 'மொபைல் போன்' அலறியது.
''அம்மா... பாரி பேசுறேன்... என்னா பண்ணுற, எப்புடி இருக்குற?'' என்றான்.
''இன்னைக்கு களை எடுக்கிற வேல முடிஞ்சுதுப்பா... உலை கொதிச்சு அடங்குச்சு... கொஞ்சம் படுக்கலாம்ன்னு பாத்தேன்... சொல்லுப்பா... நீ, சுவாதி, புள்ளங்க எல்லாம் நல்லா இருக்கீங்களா?'' என்றாள். குரலில் உற்சாகத்தை வரவழைத்துக் கொள்வது, கடினமாகவே இருந்தது.
''அதெப்படிம்மா... ஏண்டா மூணாவது புள்ள பெத்துகிட்டோம்ன்னு இருக்கு... அவங்கம்மா அப்பப்ப வந்து பாத்துக்குறாங்க... சுவாதி இன்னும் முழுசா, 'நார்மல்' ஆகலே, 'டெலிவரி'க்கு பின், வரச் சொன்னா நீயும் பிகு பண்ணிக்கிற... அம்மா, இப்ப தயவுசெஞ்சு மறுப்பு எதுவும் சொல்லாதே... களை எடுக்கிற வேல முடிஞ்சாலே பாதி முடிஞ்ச மாதிரி தான்... பத்து நாள் இங்க வந்து தங்கிட்டு போ... 'ப்ளீஸ்' எனக்காக, உன் பேரப் புள்ளைகளுக்காக!''
''சரிப்பா வரேன்.''
''உண்மையாவா... அப்புறம் மாத்த மாட்டியே... மருந்தடிக்கணும், மோட்டார், 'ரிப்பேர்' பாக்கணும்ன்னு காரணம் தேடி,'' என்றான் வேகமாக.
''இல்லப்பா... வரேன்... பத்து நாள் தானே?''
''ரொம்ப, 'தாங்க்ஸ்' மா... சுவாதி, பிரபு, மிருது எல்லாம் அவ்வளவு சந்தோஷப்படுவாங்க... எனக்கே எவ்வளவு பிடிக்கும் தெரியுமா, உன் சமையல்... சரிம்மா, வெச்சுடறேன்.''
வாசல் கதவு மெல்ல திறந்து, உள்ளே வந்தாள், வள்ளி.
''என்ன மகன் பேசுனானா... என்னவாம், வந்து, வேலைக்காரி, சமையல்காரி வேலை பாத்துட்டு போன்னு சொல்றானா...'' என்றாள்.
''ம்ம்ம்... அவந்தான்... ஆனா, வீட்டு வேலை செய்யுறதுல ஒண்ணும் பிரச்னை இல்லே வள்ளி,'' என்று இழுத்தாள் பாக்கியம்.
''பின்ன?''
''மருமக தான்.''
''அதானே பாத்தேன்... பொறந்த வீட்டுப் பெருமைய எடுத்து வுடுறாளா... உன்னை கிராமத்து பொம்பளன்னு மட்டம் தட்டுறாளா?''
''அதெல்லாம் இல்ல,'' என்று சமாளித்தாள், பாக்கியம்.
சுவாதி, பொதுவாக நல்ல பெண். மகனாக தேடிக்கொண்ட பெண், என்றாலும், பண்பு, மரியாதை தெரிந்தவள். அத்தை, அத்தை என்று வாய் நிறைய அழைப்பவள். ஆனால், ஒரு சில விஷயங்களில் அவள் நடந்து கொள்வது தான் பாக்கியத்திற்கு பிடிக்கவே இல்லை.
பேரக் குழந்தை பிரபுவுக்கு ஏழு வயதாகிறது. மிருதுளாவுக்கு, ஆறு. பெண் குழந்தை தான் செல்லம், சுவாதிக்கு.
பிரபுதான் சாப்பிட தட்டு எடுத்து வைக்க வேண்டும் என்பாள். தோசை சுட, தேங்காய் துருவ, துணி காயப்போட, தண்ணீர் பிடிக்க வேண்டும் என்று கட்டாயப்படுத்துவாள். 'டிவி' பார்க்கும்போது, மிருதுளா தரையில் உட்கார்ந்தால், அவளை எழுப்பி, 'குஷன் சேரில்' அமரச் சொல்வாள். பிரபுவை தரையில் உட்கார வைப்பாள்.
மிருது, கராத்தே வகுப்பு, பிரபு, கர்நாடக சங்கீத வகுப்பு என்று போகின்றனர். 'டிவி' பார்க்கும்போது ரிமோட், மிருதுளா கையில் தான் இருக்க வேண்டும். சினிமாவா, 'பீச்'சா இல்ல பூங்காவா... எங்கே போகலாம் என்பதை மிருதுளா தான் தீர்மானிக்க வேண்டும்.
மிருதுளா குட்டி ரொம்ப அழகு தான். நல்ல புத்திசாலி தான். பிரபு அடர்ந்த கருமை, இறுக்கமான முகம் தான். அதற்காக, பெண்ணை தலையில் துாக்கி வைத்து கொண்டாட வேண்டுமா... மகனை காலில் போட்டு மிதிக்க வேண்டுமா...
அதுவும் கடைசியாக போனபோது நடந்தது, பாக்கியத்திற்கு மிகுந்த மன வருத்தத்தை ஏற்படுத்தியது.
பச்சை குழந்தைக்கு பாலுாட்டியபடி இருக்க, பிரபு உள்ளே வருவதும், போவதுமாக இருந்தான். என்னதான் தாய், மகன் என்றாலும், கூச்சம் இருக்க வேண்டாமா... அவள் பாட்டுக்கு அவனிடம் சாதாரணமாக பேசிக்கொண்டே இருக்கிறாள்; மழலையோ பால் அருந்தியபடி இருக்கிறது. பாக்கியத்திற்கு, 'திக்'கென்றாகி விட்டது. வெளியில் வந்து விட்டாள்.
மகனிடம் எந்த புகாரும் சொல்லி வழக்கமில்லை. அப்படியே சொன்னாலும், 'என்னம்மா நீ... சுவாதி, பெங்களூர்ல வளர்ந்த பொண்ணு... 'மாடர்னா' இருக்கிறவ... அவளுக்கு எல்லாம் தெரியும்...' என்று தான் அடக்குவான்.
இதெல்லாம் பிடிக்காமல் தான் கிளம்பி வந்தவள், மூன்று மாதங்கள் ஆகியும், சென்னைக்கு போகவேயில்லை. மாமண்டூரில் இருந்து கூப்பிடுகிற துாரம் தான். மனதும் அடித்துக் கொள்கிறது தான். இருந்தாலும், பிடிக்கவில்லை.
தன் இள வயது காலத்தை நினைத்துப் பார்த்தாள்...
ஆம்பிளை பசங்க சைக்கிளில் சுற்றுவர். பெண் பிள்ளைகளும், ஓரக்கண்ணால் அவர்களை பார்ப்பர். அவ்வளவு தான், அதற்கு மேல் தைரியம் கிடையாது.
குளம், ஆறு என்று நீர் பிடிப்புகளில், 'தொப் தொப்'பென்று குதித்து, பெண் பிள்ளைகளின் கவனம் ஈர்ப்பர். கடப்பாரை நீச்சல், முங்கு நீச்சல் என்று படம் காட்டுவர்.
சைக்கிளை, 'சர்க்கஸ்' போல ஓட்டிக் காட்டி, இறுக்கமாக சட்டை போட்டு, கிராப் வெட்டி, 'ஸ்டைலாக' வருவர். பார்வை முழுக்க பெண்கள் மேல் இருக்கும். கோதை அக்கா மாதிரி ஒரு சில பெண்கள் தைரியமாக, 'ரெக்கார்டு' நோட்டுகள் பரிமாறிக் கொள்வர்.
ஏன், விமலாக்கா போல காதலித்தவர்களும் உண்டு. விமலாக்காவின் அப்பாவுக்கு திடீர் கேரளா மாற்றல் வந்தபோது, அவள் அழுதுகொண்டே போனாள். அவளால் நேசிக்கப்பட்ட பால்ராஜ், தாடி வளர்த்து, பேச்சு குறைந்து, கண்ணில் குழி விழுந்து, பள்ளிக்கூடம் விட்டே நின்றது கூட நடந்தது.
அப்படி இருந்தது ஆணும், பெண்ணும் வளர்ந்த காலம். ஈர்ப்பும் இருந்தது, அச்சமும் இருந்தது. ஆசையும் பட்டனர், அளவாகவும் இருந்தனர். இயற்கையில் இருந்த சமநிலை, இளைய மனங்களிலும் இருந்தது.
இப்படி வெட்கம், கூச்சம் இல்லாமல், மனப்பண்பாடு இல்லாமல், கட்டுப்பாடும், மரியாதையும் இல்லாமல், ஒருநாளும் இருந்ததே இல்லை.
மன விருப்பம் இல்லாமலே சென்னைக்கு கிளம்பினாள், பாக்கியம்.
அதே போல தான் இருந்தது மகனின் வீடு.
மகனை விரட்டிக் கொண்டிருந்தாள், சுவாதி.
''பிரபு... என்ன வேடிக்கை பாத்துகிட்டு... பாப்பாக்கு, 'டயப்பர்' மாத்த சொன்னேனே, மாத்தினியா?
''வேலம்மா பெருக்கி, தண்ணி தெளிச்சுட்டாங்களா... பிரபு கண்ணு, அன்னிக்கு சொல்லிக் கொடுத்தேன்ல, நாலு புள்ளி, நாலு வரிசைல, அந்த ஸ்டார் கோலம் போடுப்பா வாசல்ல.
''மிருது, நாளைக்கு உனக்கு, 'கேரம் போர்டு டோர்னமென்ட்' இருக்கில்ல... போடாம்மா, போய், 'பிராக்டிஸ்' பண்ணு.
''பிரபு, நீ வெளில கிளம்பறதுக்கு முன், மிருதுவோட சைக்கிளை நல்லா துடைச்சு வெச்சிடு என்ன?''
பாக்கியத்திற்கு ஒரு வாரத்திற்கு மேல் இருக்க முடியவில்லை. சுவாதியின் நாட்டாமை, எரிச்சலை தந்தது. பேரனை, ஒருதலைபட்சமாக நடத்துவதும், கண்டிப்பு காட்டுவதும் பிடிக்கவே இல்லை.
''பயிருக்கு, தண்ணி பாச்சணும்... நான் கெளம்பணும்மா சுவாதி,'' என்றாள் ஜன்னலை பார்த்தபடி.
''கோவமா அத்தை?'' என்றாள், சுவாதி.
''இல்லம்மா... நா யாரு கோவப்பட... உன் வீடு இது... உன் விருப்பப்படி தான் இருக்கும்... எனக்கு தான் வேல இல்லே இங்க.''
''இல்லே அத்தே... வருத்தம் உங்களுக்கு... புரியுது... பிரபுகிட்ட, 'ஸ்டிரிக்டா' இருக்கேன்... மிருதுகிட்ட, 'சாப்ட்டா' இருக்கேன்... பிடிக்கலே உங்களுக்கு... சரியா?''
''ஆமா... ஏம்மா அப்பிடி?''
''சொல்றேன் அத்தே... உங்க காலம் வேறே... எல்லாத்துலயும் ஒரு ஒழுங்கு இருந்த காலம்... குறிப்பா, ஆண்கள்கிட்டே சுய கவுரவம், சுய கட்டுப்பாடு இருந்த அழகான காலகட்டம் அது... காதல்ல தோக்கிற ஆண் என்ன செஞ்சான் அத்தை... தேவதாஸ் மாதிரி தண்ணி அடிச்சான், தாடி வளத்தான், தன்னைத் தானே அழிச்சுகிட்டான்...
''இப்போ, என்ன செய்றான்... காதலித்த பெண் மேலே, 'ஆசிட்' அடிக்கிறான்... பொது இடத்துல, கத்தியால வெட்டி கொல்றான்... காதலன்னு சொல்லிக்கிறவனும், அவளை தனியான இடத்துக்கு கூட்டிட்டு போய் நண்பர்களோட சேர்ந்து சீரழிக்கிறான்... இதை விட கொடுமையா, ஏழு, எட்டு வயசு பெண் குழந்தைகளை வன்கொடுமை செஞ்சு, படுகொலையே செய்யுறான்...
''ஏன் அத்தை... இதுல யார் மேல குற்றம் சொல்றது... யார் பொறுப்பு இதுக்கு... பெரும்பாலும் தாய்மார்கள் தான் பொறுப்பு... ஆண் பிள்ளைகளை பெத்துட்டா, அவங்களுக்கு தனியா ஒரு கர்வம் வந்துடுது...
''ஊட்டி விடுறது, இடுப்புல துாக்கி வெச்சுகிட்டு நடக்கிறது, கொஞ்சோ கொஞ்சுன்னு கொஞ்சி, சின்ன வயசுலயே அவனை சோம்பேறி ஆக்கிடறாங்க... அம்மாக்கு தலைவலின்னா, ஒரு மாத்திரை வாங்க தெரியாது பையனுக்கு... காபி போட்டு கொடுக்கத் தெரியாது... அம்மா என்கிற வேலைக்காரியால வளர்க்கப்படும் பையன்கள், தனக்கு வருகிற மனைவியையும் வேலைக்காரியாத்தானே பாப்பாங்க... மனைவியோடு போயிடுமா, எல்லா பெண்களையும் அப்படித்தான் பாப்பாங்க...
''தனக்கு அடிமை இவள், இன்பமூட்ட மட்டுமே ஆனது தான் பெண் குலம். தன் சந்தோஷத்துக்காக, இவளை என்ன வேண்டுமானாலும் செய்யலாம்ன்னு நினைப்பாங்க... பாசம் என்கிற பெயர்ல சமூக விரோதிகள், சோம்பேறிகள், முரடன்கள், உதவாக்கரைகள்ன்னு உருவாக்குகிற அம்மாக்கள் போல, நான் இருக்கக் கூடாதுன்னு முடிவு பண்ணேன் அத்தை...
''பிரபுவுக்கு, பெண்கள் மேல மரியாதை வரணும், தானும், தங்கையும் சமமான உரிமை கொண்டவர்கள்ன்னு தெரியணும்... ஆணாலும், வீட்டு வேலை எல்லாத்தையும் செய்ய முடியும்ன்னு உணரணும். குழந்தை பிறப்பு என்கிறது, பெண்ணுக்கு எவ்வளவு பெரிய சாதனைன்னு தெரியணும், பெண் உடல் என்பது, மகத்தான ஆளுமை கொண்டது, தாய்ப்பால் என்பது, சிசுவின் உயிரையே தாங்கிப் பிடிப்பது என்கிறதை அவன் உணரணும்... பிரபுவுக்கு, இப்போ எல்லாம் தெரியும் அத்தை...
''தன் தங்கையை, பாட்டியை, அம்மாவை, டீச்சரை, தோழிகளை அவனால பரிவோட நேசிக்க முடியும்... நல்ல குடிமகனா, இந்த சமூகத்துக்கு பங்காற்ற முடியும்... ஆணோட வலிமையுடனும், பெண்ணோட மென் மனதுடனும், அவன் அற்புதமா வளர்கிறான் அத்தை... சொல்லுங்க... நான் செய்யிறதுல ஏதாவது தப்பு இருக்கா?''
''இல்லம்மா... இல்லவே இல்ல,'' என்று நெகிழ்ச்சியுடன் மருமகளை அணைத்துக் கொண்டாள், பாக்கியம்

VANI BHOJAN BORN 1988 OCTOBER 28

 


VANI BHOJAN BORN 1988 OCTOBER 28



வாணி போஜன்
பிறப்பு 28 அக்டோபர் 1988 (அகவை 29)
ஊட்டி, நீலகிரி மாவட்டம் தமிழ்நாடு
தேசியம் இந்தியா
பணி நடிகை, மாடல்
செயல்பட்ட
ஆண்டுகள் 2005 – அறிமுகம்
வாணி போஜன் (Vani bhojan, பிறப்பு:28 அக்டோபர், 1988) ஓர் தமிழ் மாடல் மற்றும் சின்னத்திரை நடிகை ஆவார்.[1] இவர் 150க்கு மேற்பட்ட விளம்பர படங்களில் நடித்துள்ளார்.[சான்று தேவை] விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ஆஹா தொடரில் அறிமுகம் ஆனார். தொடர்ந்து ஜெயா டிவியில் மாயா, சன் தொலைக்காட்சியில் தெய்வமகள் என நடித்து வருகிறார்.

ஆரம்ப வாழ்க்கை
இவர் அக்டோபர் 22, 1988 ஆம் ஆண்டு நீலகிரி மாவட்டம், ஊட்டியில் பிறந்தார். இவரது அப்பா போஜன் மற்றும் அம்மா பார்வதி ஆவார். இவருக்கு ஒரு அண்ணனும் உள்ளார். இவர் கிங்ஃபிஷர் விமானத்தில் பணிப்பெண்ணாக 3 ஆண்டுகள் பணிபுரிந்தார். அதோடு வடிவமைப்பு விளம்பர வேலையும் செய்து வந்ததார். இப்போது வடிவமைப்பு விளம்பரம் மூலமாக சின்னத்திரையில் நடித்துவருகிறார்.

சின்னத்திரையில்
இவர் விஜய் தொலைக்காட்சியில் ஆஹா தொடரில் அறிமுகம் ஆனார். அதனைத் தொடர்ந்து ஜெயா தொலைக்காட்சியில் மாயா, சன் தொலைக்காட்சியில் தெய்வமகள் ஆகிய சின்னத்திரையில் நடித்துவருகிறார்.


Vani Bhojan was born on 28th of October 1988, in Ooty, Nilgiri District, Tamilnadu. She did her Schooling in Boarding School, Ooty and Completed her Bachelor of Arts in English Literature in Government Arts College, Stone House Hill, Ooty.
Vani Bhojan father is a wildlife photographer also he does shoots for modeling. Her mother is a housewife and she has an elder brother who is married
After her studies, she joined as Air Hostess in King Fisher Airlines and her family shifted to Chennai from Ooty. Her friend suggested her to do Modelling and that’s how she is now in Deivamagal and Lakshmi Serials.

While she was doing modeling she got an opportunity to act in Jaya TV serial called ‘Maya’ in 2012. After Maya, Vani Bhojan grabbed as the serial lead in Ahaa serial which was telecasted in Vijay TV.

After Ahaa serial, she had signed in Deivamagal Serial which was telecasted in Sun TV and produced by Vikatan Production in 2013. She was doing in the role Sathya Priya. Deivamagal Sathya Priya is the most known face in Television industry. Deivamagal Serial brings all fame to the Vani Bhojan and it was one of the most watching serials in Tamilnadu. Almost all episodes of this serial will hit 1 Million Youtube Views. It is now 4th year the serial is running successfully. She also grabbed the best television serial actress Vikatan award in 2017.

In the meantime, Vani Bhojan also started acting as the lead in ‘Lakshmi vanthachu’ serial which is being telecasted in Zee Tamil TV channel.

Vani Bhojan Marriage
Vani Bhojan was not yet married. In an interview, she said that she had no idea to get married sooner. Also, she said that she likes the people who talk in local Chennai language.

Vani Bhojan Salary
Vani Bhojan is one the highest paid Tamil serial Actress. The report said that she is being paid Rs. 25,000 INR per day shooting.

Lesser Known Facts About Vani Bojan
Vani Bojan is also a Trained Yoga Teacher. She had also hosted a Show Yoga Program on Malaysian TV channel.
The acting was not her ambition.
She was the one who first approached to act in ‘Moodar Koodam’ Movie. She denied and Oviya grabbed the opportunity.
She is the biggest fan of Actor Dhanush.
Vani has been acted in more than 150 Television commercial ads.
Vani Bhojan has huge female followers than any other serial Actresses.

CINEMA HERO`S USUAL STORY

 

CINEMA HERO`S USUAL STORY



அர்ஜுன் ,தனுஷ் ,அமிதாப் ,சல்மான்கான் ,சஞ்சய் தத் கமல் ,ரஜினி ,இவர்கள் அனைவருமே பெண்களுக்கு வாய்ப்பு தருவது ,தங்கள் படுக்கைகளை
பகிர்ந்த பிறகே .இதில் ஆச்சர்யம் ஏதுமில்லை .

பெங்களூர்: நடிகை ஸ்ருதி ஹரிஹரன், நடிகர் அர்ஜுன் மீது அளித்த பாலியல் புகாரை அடுத்து பெங்களூர் போலீசார் 3 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்துள்ளனர். இதையடுத்து அர்ஜுன் கைது செய்யப்படுவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. 'விஸ்மயா' என்ற கன்னட திரைப்படத்தில் நடித்தபோது, தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக நடிகை ஸ்ருதி ஹரிகரன் சமீபத்தில் 'மீடு' இயக்கத்தின் மூலமாக தெரிவித்தார். விஸ்மயா திரைப்படத்தின் தயாரிப்பாளரும் அர்ஜுன் தான். அவர் தன்னை நெருங்கி பின்னால் இருந்து கட்டி பிடித்ததாகவும், தனியாகத்தான் இருக்கிறேன் வீட்டுக்கு வா என்று இரட்டை அர்த்தத்தில் கூறியதாகவும் சுருதி குற்றம்சாட்டி வந்தார்.

வழக்கு தொடர்ந்தார் இந்தக் குற்றச்சாட்டை அர்ஜுன் மருத்துவந்தார். இது தொடர்பாக சமீபத்தில் கர்நாடக திரைப்பட வர்த்தக சபையில் சமரச பேச்சுவார்த்தைக்கு அழைக்கப்பட்டது. ஆனால் அதில் பங்கேற்ற அர்ஜுன், தான் சமரசமாக போகத் தயாரில்லை, தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் தண்டனை அனுபவிக்கவேண்டும் என்று பேட்டியளித்தார். முன்னதாக ஸ்ருதி மீது 5 கோடி ரூபாய் கேட்டு மானநஷ்ட வழக்கை நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார் அர்ஜுன்.

கைது அச்சம் இந்த நிலையில், ஸ்ருதி ஹரிஹரன் அளித்த புகாரின் பேரில், அர்ஜுன் மீது இந்திய தண்டனைச் சட்டம் 354, 354-ஏ, மற்றும் 509 ஆகியவற்றின் கீழ் கப்பன் பார்க் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து உள்ளனர். எனவே அர்ஜுன் கைது செய்யப்படுவாரா என்ற பரபரப்பு எழுந்துள்ளது. இதுகுறித்து அவர் தரப்பு வழக்கறிஞரான சியாம் சுந்தரிடம் கேட்டபோது, இந்த புகாரின் பேரில் அர்ஜுனை கைது செய்வதற்கான வாய்ப்பு கிடையாது என்று நம்மிடம் தெரிவித்தார். வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் தனது வழக்கறிஞர்களுடன் அர்ஜுன் தொடர்ந்து ஆலோசனை நடத்தி வருகிறார்

இரண்டரை வருடங்கள் விஸ்மயா திரைப்பட ஷூட்டிங் நடைபெற்ற காலகட்டங்களில் 2015ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 2016ஆம் ஆண்டு ஜூலை மாதம் ஆகியவற்றில் அத்துமீறல் நடைபெற்றதாக ஸ்ருதி ஹரிகரன் தெரிவித்துள்ளார். அந்த காலகட்டத்தில் திரைப்பட சூட்டிங் நடைபெற்ற ஹெப்பால், யூ.பி.சிட்டி உள்ளிட்ட பெங்களூரின் பல பகுதியில் அத்துமீறல் நடந்துள்ளதாக புகாரில் ஸ்ருதி கூறியுள்ளார்.

சாட்சிகள் ஆனால் அப்பகுதிகளில் பதிவான சிசிடிவி காட்சிகள் இப்போது கிடைப்பது சிரமம் என்பதால் அர்ஜுனுக்கு எதிராக வலுவான ஆதாரங்கள் எதையும் இதுவரை ஸ்ருதி வழங்கவில்லை என்று கூறப்படுகிறது. அதேநேரம், நடந்த சம்பவத்திற்கு சாட்சிகள் இருப்பதாக ஸ்ருதி கூறியுள்ளார்..

RETIRED DOGS MURDERED WHY ?

 

RETIRED DOGS MURDERED WHY ?




ஓய்வு பெறும் இந்திய இராணுவ நாய்கள்

 கொலை செய்யப்படுவது ஏன்?
#
அவற்றிற்கு பேசும் சக்தி இல்லை என்பதே
################################################
இந்தியாவின் காவல் பிரிவில் மட்டுமின்றி, ராணுவ படைகளிலும் கூட நாய்கள் இடம் பெற்றுள்ளன. இராணுவ வீரர்கள் போல, இராணுவ நாய்களுக்கும் பணி காலம் மற்றும் ஓய்வு பெறுவதற்கான காலம் இருக்கிறது. இராணுவத்தில் பணியாற்றிய வீரர்களுக்கு அவரவர் படிப்பு மற்றும் ஓய்வு பெறும் காலத்தில் அவர்கவகித்த பதவி சார்ந்த வேறு அரசு வேலைகள் தரப்படும். ஆனால், இராணுவத்தில் நாட்டுக்காக பணியாற்றிய நாய்களுக்கு என்ன நிலை ஏற்படுகிறது என்று உங்களுக்கு தெரியுமா?


ஆர்.டி.ஐ'யில் இருந்து கிடைக்கப்பட்டதாக கூறப்படும் பதிலில், ஓய்வு பெறும் இராணுவ நாய்கள் வலியற்ற முறையில் கொலை செய்யப்படும் என்று கூறப்பட்டுள்ளது. ஓய்வு பெறும் இராணுவ நாய்களை ஏன் கொல்கிறார்கள்? ஓய்வு பெறும் நாய்களை மட்டும் தான் கொல்கிறார்களா? இதற்கான காரணங்கள் என்ன?

நாய்கள் மட்டுமல்ல! இராணுவ நாய்கள் மட்டுமல்ல, குதிரைகளும் கூட உடற்தேர்வு குறைப்பாடு அல்லது நோய்வாய்ப்பட்டு போகும் போது, ஓய்வுபெறும் காலத்தை எட்டும் போது கொலை செய்யப்படுவதாக கூறப்படுகிறது. Euthanasia என்று கூறப்படும் மனிதர்களால் வலியின்றி பிராணிகள் கொலை செய்யப்படும் முறையில் இராணுவ நாய்கள் மற்றும் குதிரைகள் கொலை செய்யப்படுகின்றன.
திறன்! இதுக்குறித்து இராணுவ உயர் அதிகாரிகள் கூறும் போது, "ஒவ்வொரு இராணுவ நாயும் ஏதோ ஒரு சிறப்பு பிரிவில் பயிற்சி பெறுகின்றன. வெடிக்குண்டு கண்டிபிடித்தல், பாதுகாத்தல், விபத்து, காயம் பட்டவரை கண்டறிதல், காலாட்படை ரோந்து, கண்காணிப்பு என பல திறன் வேலைகளில் இராணுவ நாய்கள் பணிபுரிகின்றன

நிபந்தனை! இராணுவ நிபந்தனைகளின் படி தெரியாதவர்கள், தவறானவர்களின் கைகளில் இராணுவ நாய்கள் நோய் வாய்ப்பட்டோ, திறன் இழந்தோ, ஓய்வுபெற்ற பிறகோ சிக்கினால் அதனால் ஏதேனும் தவறுகள் ஏற்படலாம். அதனால் தேசத்திற்கு அபாயங்கள் ஏற்படவும் வாய்ப்புகள் உள்ளன. இதனால் தான் இராணுவ நாய்கள் சில காரணங்களால் இராணுவ பணியில் இருந்து விலகும் நிலை ஏற்படும் போது நிரந்தரமான, நிம்மதியான உறக்கமளிக்கப்பட்டு பிரியாவிடை பெறுகிறது என்று கூறுகிறார்கள்.


வகைகள்! பொதுவாக இராணுவ பிரிவில் லேப்ரடர்ஸ் (Labradors), ஜெர்மன் ஷெப்பர்ட் (German shepherds), பெல்ஜியன் ஷெப்பர்ட் (Belgian shepherds) போன்ற வகைகளை சேர்ந்த நாய்கள் தான் பயன்படுத்தப்படுகின்றன. இவற்றிலும் அவற்றின் குணாதிசயம், காலநிலைக்கு ஏற்ப மாற்றங்கள் மற்றும் அவற்றின் இயற்கை பண்புகள், பழகும் விதம் கொண்டு தான் இராணுவத்திற்கு தேர்வு செய்கிறார்கள்.
திறனற்று! பெரும்பாலும் குண்டுகள் கண்டுபிடிக்க, ரோந்து போன்ற வற்றுக்கு தான் இராணுவ நாய்கள் பயன்படுத்த படுகின்றன. இதனால் அவைகள் சோர்வடையவும், ஆரோக்கியம் குறைந்து போகவும் வாய்ப்புகள் உள்ளன. ஆனால், அவற்றுக்கான பயிற்சிகள் நிச்சயம் தொடர்ந்து அளிக்கப்படும். ஒருவேளை காயங்கள் ஏற்பட்டோ, நோய் உண்டாகியோ, வயது மூப்பினாலோ அவற்றால் தொடர்ந்து இராணவத்தில் பணிபுரிய முடியாது என்ற நிலை ஏற்படும் போது வலியற்ற முறையில் கொலை செய்யப்படுகின்றன

பாதுகாப்பான கைகளில்... ஏன் பாதுகாப்பானவர்கள் கைகளில் ஓய்வுபெறும் நாய்களை ஒப்படைக்க கூடாது என்று சிலர் கேள்வி எழுப்புகிறார்கள். ஆனால், அவை வளர்ந்த விதம், அவை பெற்ற பயிற்சி போன்றவை மிகவும் இரகசியமானவை. அவற்றை பொதுமக்கள் கைகளில் அவ்வளவு எளிதாக கொடுத்துவிட முடியாது. எனவே, தான் வேறு வழியே இல்லாமல் அவை கொலை செய்யப்படுகின்றன என்று இராணுவ அதிகாரிகள் கூறுகிறார்கள்.

விலங்குகள் ஆர்வலர்கள்! இராணுவம் அல்லது இராணுவத்தினர் ஒன்றும் கடவுள் இல்லை. அவர்கள் எப்படி ஒரு உயிரை பறிக்கலாம் என்று சிலர் விலங்குகள் ஆர்வலர்கள் கூறியுள்ளனர். ஓய்வுபெறும் நாய்களுக்கு உண்ண உணவும், தங்க இடம் மட்டும்தானே தேவை. அதற்கான நிதியை இராணுவம் நிச்சயம் ஒதுக்கலாம். அவற்றை சாகும் வரை பாதுகாக்கலாம் என்றும் கூறுகிறார்கள்

பீட்டா ஆர்வலர்! விலங்குகள் பாதுகாப்பு அமைப்பான பீட்டாவை சேர்ந்த ஒருவர், விலங்குகளை ஏதோ சும்மா கொன்றுவிட முடியாது. தங்க வைக்க இடமில்லை, பாதுகாக்க முடியாது, பயனில்லை என்றெல்லாம் கூறி கொலை செய்வது தவறு. ஆனால், வேறு வழியின்றி இராணுவத்தில் நாய்கள் வலியற்ற முறையில் இறக்கும் நிலை தொடர்ந்து வருகிறது என்று தனது வருத்தத்தை தெரிவித்துள்ளார்.

பாதுகாப்பு! வெளியில் இருந்து பார்க்கும் நமக்கே... நாய்கள் கொல்லப்படுவது சோகத்தை ஏற்படுத்தும். ஆனால், அதை தன்னுடனே வளர்த்து, பயிற்சி அளிக்கும் நபர்களால் அவ்வளவு எளிதாக கொலை செய்துவிட முடியாது. வீட்டில் வளர்க்கப்படும் நாய்களை பிரிந்தாலே கண்கலங்கும் ஆட்கள் இருக்கிறார்கள். இது நாட்டிற்காக வளர்க்கப்படும் நாய்கள். இவற்றுக்கு அளிக்கப்படும் பயிற்சிகள். அவை தனது வேலையின் போது கண்டறிந்த, அனுபவம் பெற்ற விஷயங்கள் யாவும் மிகவும் இரகசியமானவை. ஒருவேளை தவறானவர்கள் கைகளுக்கு சென்றால் நிச்சயம் அது அபாயமான காரியங்களுக்கு பயன்படுத்தப்படலாம். ஆகவே தான் இராணுவ நாய்கள் கொலை செய்யப்படுகின்றன.

கொலை செய்யப்படும் நாய்களை மரியாதையுடன் அடக்கம் செய்யப்படுகின்றன என்றும் கூறப்படுகிறது.

VAZHAPPADI RAMAMOORTHY DIED 2002 OCTOBER 22

 


VAALAPPADI RAMAMOORTHY 

 DIED 2002 OCTOBER 22



வாழப்பாடி ராமமூர்த்தி 

மறைவு நாள்

___________

வாழப்பாடி ராமமூர்த்தியின் மறைவு நாள் (27-10-2020) இன்று.

ராஜுவ் படுகொலைப் பகுதியான ஸ்ரீபெரும்புதூர் காங்கிரஸ் பொதுக்கூட்டம்,டி.ஆர்.கார்த்திகேயன் தலைமையிலான சிறப்புப் புலனாய்வுக் குழு விசாரணை, டில்லியில் வர்மா,ஜெயின் கமிஷன்களின் விசாரணை ஆகிய செய்திகளை முழுமையாக எழுதிய  ஒரே செய்தியாளன் இந்தியாவிலேயே அடியேன் மட்டுமே.

படுகொலைக் களத்தில் நடந்தவை எனக்கு நினைவில் உள்ளன.


சில மேடைகளில் வாழப்பாடி குறித்து அவதூறு., ராஜுவ் படுகொலைச் சதியில் வாழப்பாடிக்கும் பங்காம். "படுகொலைப் போது மாநிலக் காங்கிரஸ் தலைவர் வாழப்பாடி ஏன் அருகே இல்லை" என்பது குற்றச்சாட்டு. 

நேரில் கண்டவன் என்ற முறையில் அதை நான் அறிவேன்.

விழா தொடங்க இரண்டு மணி நேரத்துக்கு முன்பே நான் விழா மேடை அருகே சென்றுவிட்டேன்.

 ராஜீவ் காந்தி ஸ்ரீபெரும்புதூர் பொதுக்கூட்ட மேடை அருகே வந்தபோது அவருடன் வாழப்பாடியும் வந்தார்.

 அப்போது ராஜீவ் காந்தியைத் தொண்டர்கள் சூழ்ந்து கொண்டு வாழ்த்து முழக்கங்களை எழுப்பிய வண்ணம் இருந்தனர். அவர்களின் அன்பில் திளைத்துப்போன ராஜீவ்காந்தி, தள்ளி நின்ற வாழப்பாடி ராமமூர்த்தியை அருகில் அழைத்தார்.



" நான் மேடைக்கு வருவதற்கு முன்னதாகவே நீங்கள் மேடைக்குச் செல்லுங்கள்.  வேட்பாளர்களை எல்லாம் சீராக நிறுத்தி வைத்துவிடுங்கள். அவர்களை அறிமுகப்படுத்தி நான் பேச வேண்டும்."

  என இந்த தகவல்களை அவர் தெரிவித்தார். பின் தட்டிக்கொடுத்து வாழப்பாடியை அனுப்பிவிட்டார். அதனையடுத்து வாழப்பாடி ராமமூர்த்தியும் மேடை மேல் வந்தார்.

 அங்கே நின்றிருந்த வேட்பாளர்களை எல்லாம் வரிசையாக நிறுத்தி வைத்தார். "ஒவ்வொரு வேட்பாளரின் பெயரை ராஜீவ்காந்தி உச்சரிக்கும் பொழுதும் அந்த வேட்பாளர் மட்டும் மேடைக்கு முன்னால் வந்து ராஜீவ் காந்தி அருகில் நிற்க வேண்டும். மேடைக்கு முன்னால் இருக்கின்ற பொதுமக்களைப் பார்த்து வணங்க வேண்டும்." என்றெல்லாம் ஒவ்வொரு வேட்பாளரிடமும் சென்று அவர்களுக்கு விளக்கம் கொடுத்துக் கொண்டிருந்தார் வாழப்பாடி.அந்த விளக்கங்களை முழுமையாக அவர் சொல்லிக் கொண்டிருந்த அதே நேரத்தில் மேடை அருகே கீழே ராஜீவ்காந்தி, வரிசையாக நின்றிருந்த வருகையாளர்களிடம் பேசிக்கொண்டிருந்தார்.

  அப்போது தான்  குண்டுவெடிப்பு நிகழ்ந்தது. 

அப்போது பத்திரிகையாளர்களின் பகுதி அருகில் வெடிகுண்டுப்பெண் தணுவின் துண்டிக்கப்பட்ட தலை பறந்து வந்து விழுந்தது.

  பத்திரிகையாளர் இடத்தில் அமர்ந்தவாறு நான் அனைத்து நிகழ்ச்சிகளையும் பார்த்துக் கொண்டிருந்தேன். ஆகவே வாழப்பாடி மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டுகள் அர்த்தமற்றவை என்பதுதான் எனது விழி பார்வைக் கருத்து.

 முதுபெரும் பத்திரிகையாளர் நாத்திகம் பாலனின் இருதய நோய் குறித்து நானும் பிடிஐ ராமசாமியும் வாழப்பாடியிடம் தெரிவித்தோம். அவரின் நேரடி பார்வையில்  சிலரின் உதவிகளுடன் அப்பல்லோ மருத்துவமனையில் அறுவைசிகிச்சை வெற்றிகரமாக நடந்தது.

வாழப்பாடியை பாலன் செல்லமாக 'கூரா' என்றே கூப்பிடுவது வழக்கம். வாழப்பாடி இறந்தபோது அஞ்சலி செலுத்த பாலன் வந்தார்.

"கூரா....என் உயிரைக் காப்பாற்றிக் கொடுத்து விட்டு நீங்கள் போய்ச் சேர்ந்துவிட்டீர்களே!" என்று கதறியக் கோலம் அடிக்கடி என் நெஞ்சில் நிழலாடுகிறது.


நூருல்லா ஆர்.   ஊடகன்

27-10-2020.  9655578786


              -ஆர்.நூருல்லா

MAHABHARAT AND ARAVANS - KOOTHANDAVAR HISTORY

 

MAHABHARAT AND ARAVANS -

KOOTHANDAVAR HISTORY



மகாபாரதம் என்னும் தீஞ்சுவை இதிகாசத்தை இயற்றியவர் வியாசர். சமஸ்கிருதத்தில், ஒரு லட்சத்து 20 ஆயிரம் ஸ்லோகங்களை கொண்ட இக்காப்பியத்தை, தமிழில் மொழி பெயர்த்தவர்களில் முக்கியமானவர் வில்லிப்புத்தூரார். பெயர் தான் வில்லிப்புத்தூராரே தவிர, இவரது ஊர் விழுப்புரம் மாவட்டம் திரு முனைப்பாடி அருகிலுள்ள சனியூர் ஆகும். இவரது தந்தை பழுத்த வைணவர். அவர் பெரியாழ்வார் மீது கொண்ட பற்றினால், ஸ்ரீவில்லிப்புத்தூரில் வசித்த அவரது பெயரை தன் மகனுக்கு சூட்டினார். வில்லிப்புத்தூராரோ சிவனையும் ஆராதித்து வந்தார். வியாசர் எழுதிய 18 பருவங்களை 10 பருவங்களாகச் சுருக்கி 4351 பாடல்களுடன் மகாபாரதத்தை எழுதி முடித்தார்.

குரு வம்சத்தின் பங்காளிகளுக்கு இடையே நிலத்துக்காக நடைபெற்ற மாபெரும் போர்தான் மகாபாரதப் போர். இதைக் களமாகக் கொண்டு ஆசிரியரான வியாசர் மாபெரும் காப்பியத்தைப் படைத்துள்ளார்.

மகாபாரதத்தில் பகவான் கிருஷ்ணன் கீதையைப் போதித்து, வாழ்க்கையின் யதார்த்த நிலையைச் சுட்டிக்காட்டியுள்ளதால், இதை ஐந்தாவது வேதம் என்றும் சொல்லுவர். ரிக், யஜூர், சாம, அதர்வண வேதங்களை படித்தவர்கள் கூட புரிந்து கொள்ளுவது கடினம். ஆனால், மகாபாரதம் பாமரனும் படித்து புரிந்து கொள்ளக்கூடியது. சூதாட்டத்தின் கொடுமையை விளக்கக்கூடியது. இந்த வேதத்தைப் படித்தவர்கள் பிறப்பற்ற நிலையை அடைவர் என்பது ஐதீகம்


சந்தனு மஹாராஜாவுக்கு முதல் மனைவி கங்கை மூலம் தேவவிரதன் என்றொரு மகன் பிறக்கிறான். அதன் பின் மனைவி கங்கை மஹாராசா சந்தனுவை விட்டுப் பிரிந்து சென்றுவிடுகிறார். மஹாராசா சந்தனு பின்னர் சத்யவதி என்ற பெண்மீது ஆவல்கொண்டு அவளை மணக்க விரும்புகிறார். ஆனால் தன் மகளுக்குப் பிறக்கும் குழந்தைகள்தான் நாட்டை ஆள்வார்கள் என்று அரசர் வாக்குறுதி அளித்தால்தான் பெண்ணை மணமுடித்துத் தரமுடியும் என்று சத்யவதியின் தந்தை சொல்கிறார். மூத்த பையன் தேவவிரதன் இருக்கும்போது இவ்வாறு செய்வது சரியல்ல என்பதால் சந்தனு மறுத்துவிடுகிறார்.

இந்த உண்மை தெரியவந்ததும், தேவவிரதன் தான் இனி அரசனாகப் போவதில்லை என்றும் திருமணமே செய்துகொள்ளப் போவதில்லை என்றும் சூளுரைக்கிறார். வானில் இருந்து தேவர்கள் அவர்மீது பூமாரி பொழிகிறார்கள். அவர் செயற்கரிய சபதம் செய்ததனால் அன்றிலிருந்து அவர் பீஷ்மர் என்று அழைக்கப்படுகிறார்.

சந்தனு சத்யவதியை மணம் செய்துகொள்கிறார். அவர்களுக்கு சித்ராங்கதன், விசித்ரவீர்யன் என்று இரு ஆண் குழந்தைகள் பிறக்கின்றன. மஹாராசா சந்தனுவுக்குப் பின்பு சித்ராங்கதன் சில காலம் அரசாண்டு, மணம் செய்துகொள்ளாமலேயே இறந்துபோகிறான். விசித்ரவீர்யன் அடுத்து அரசனாகிறான். அம்பா, அம்பிகா, அம்பாலிகா என்ற மூன்று அரச குமாரிகளுக்குச் சுயம்வரம் நடக்கும் இடத்திலிருந்து அவர்களை பீஷ்மர் தூக்கிக்கொண்டு வந்து விசித்ரவீர்யனுக்கு மணம் முடிக்க முற்படுகிறார்.


அம்பா விசித்ரவீர்யனை மணக்க விரும்பாமல் நெருப்பில் மூழ்கி இறந்துபோகிறாள். அம்பிகாவையும் அம்பாலிகாவையும் விசித்ரவீர்யன் மணந்துகொண்டாலும் அவர்களுக்குக் குழந்தைகள் பிறப்பதற்கு முன்னரேயே விசித்ரவீர்யன் இறந்துபோகிறான்.

இப்போது நாட்டை ஆள யாரும் இல்லை. பீஷ்மர் தான் செய்துகொடுத்த சத்தியத்தின் காரணமாக நாட்டை ஆள மறுக்கிறார். சத்யவதி வியாசரை வேண்டிக்கொள்ள, அவரது அருளால், ராணிகள் இருவருக்கும் குழந்தைகள் பிறக்கின்றன. இவர்கள்தான் திருதராஷ்டிரனும் பாண்டுவும். கூடவே அருகில் இருக்கும் வேலைக்காரிக்கும் விதுரன் என்ற குழந்தை பிறக்கிறது.

திருதராஷ்டிரனுக்குக் கண் பார்வை கிடையாது. பாண்டுவுக்கு தோலில் நோய். திருதராஷ்டிரனுக்கு காந்தாரியையும்; பாண்டுவுக்கு குந்தி, மாத்ரி என்ற இருவரையும் மணம் செய்துவைக்கிறார் பீஷ்மர்.

திருதராஷ்டிரன்-காந்தாரி தம்பதிக்கு 100 குழந்தைகள் பிறக்கின்றனர். அவர்களின் முதலாமவன் துரியோதனன். இவர்கள் 100 பேரும் கௌரவர்கள் என்று அழைக்கப்படுகின்றனர். குந்திக்கு மூன்று பையன்கள்: யுதிஷ்டிரன்(தருமர்), பீமன், அர்ஜுனன். மாத்ரிக்கு இரு பையன்கள்: நகுலன், சகாதேவன். இந்த ஐவரும் சேர்ந்து பஞ்ச "பாண்டவர்கள்" என்று அழைக்கப்படுகிறார்கள்.

குந்திக்கு ஒரு முனிவர் சில மந்திரங்களைக் கற்றுத் தந்திருக்கிறார். அந்த மந்திரங்களை உச்சரித்தால் தேவர்கள் அருளால் அவளுக்குக் குழந்தை பிறக்கும். ஆனால் தனக்குத் திருமணம் ஆகும் முன்னரே அவள் இந்த மந்திரங்களை முயற்சித்துப் பார்க்கிறாள். அப்போது ஒரு குழந்தை பிறந்துவிடுகிறது. பயந்துபோன குந்தி அந்தக் குழந்தையை ஒரு கூடையில் வைத்து ஆற்றில் விட்டுவிடுகிறாள். அந்தக் குழந்தையை ஒரு தேரோட்டி எடுத்து வளர்க்கிறார். அந்தக் குழந்தைதான் கர்ணன். குந்தியின் மகனாகப் பிறந்தாலும் கர்ணனுக்கு நெருங்கிய நண்பனாக இருப்பது துரியோதனன்தான்.

கௌரவர்களுக்கும் பாண்டவர்களுக்கும் ஆரம்பத்திலிருந்தே சண்டை. சிறுவர்களாக இருக்கும்போதே போட்டி நிலவுகிறது. இவர்களுக்கு துரோணர் என்ற குரு கலைகளைக் கற்றுக்கொடுக்கிறார்.

திருதராஷ்டிரன் கண் பார்வைக் குறைபாடு உள்ளவர் என்பதால் பாண்டுவே நாட்டை ஆள்கிறார். ஆனால் காட்டில் இருக்கும்போது பாண்டுவுக்கு மரணம் ஏற்படுகிறது. பாண்டுவுடன் கூடவே மனைவி மாத்ரி உடன்கட்டை ஏறி இறக்கிறார்.

பாண்டவர்களும் கௌரவர்களும் அரசாளும் வயதை அடையும்போது, பெரியவர்கள் அனைவரும் சேர்ந்து தருமருக்கே (யுதிஷ்டிரனுக்கே) முடி சூட்டுகின்றனர். இது கௌரவர்களுக்குக் கடும் கோபத்தை வரவழைக்கிறது. துரியோதனன் அரக்கால் ஆன மாளிகை ஒன்றைக் கட்டி, பாண்டவர்களை விருந்துக்கு அழைத்து, அவர்களை அங்கு தங்கவைக்கிறான். இரவில் மாளிகையை எரித்துவிடுகிறான். ஆனால் துரியோதனைன் சதித் திட்டத்தை பாண்டவர்கள் (இதனை முன்னமேயே) ஊகித்து, தப்பி, காட்டுக்குள் சென்றுவிடுகின்றனர். காட்டில் இருக்கும்போது ஒரு சுயம்வரத்தில் அர்ஜுனன் திரௌபதியை வெல்கிறான். தாய் குந்தியின் ஆணைப்படி பாண்டவர்கள் ஐந்து திரௌபதியை மணக்கின்றனர்.

பாண்டவர்கள் மீண்டும் நாட்டுக்கு வந்து தங்களுக்கான நிலத்தைப் பங்குபோடுமாறு கேட்கின்றனர். அவர்களுக்குக் கிடைத்த காண்டவ வனம் என்ற பகுதியை அழித்து இந்திரப்பிரஸ்தம் என்ற நாடாக மாற்றுகின்றனர். அவர்களது அழகான நாட்டைப் பார்த்து ஆசைப்படும் துரியோதனனுக்கு அவன் மாமா சகுனி உதவி செய்ய வருகிறார்.

சூதாட்ட விருந்து ஒன்றை துரியோதனன் ஏற்படுத்தி, (தருமரை)யுதிஷ்டிரனை அதில் கலந்துகொள்ள அழைக்கிறான். சூதாட்டத்தில் யுதிஷ்டிரன் (தருமர்) வரிசையாகத் தோற்று தன் நாடு, சொத்து அனைத்தையும் இழக்கிறான். அத்துடன் நில்லாமல், தன் தம்பிகள், தான், தன் மனைவி திரௌபதி என அனைத்தையும் இழக்கிறான். முடிவில் பெரியவர்கள் தலைப்பட்டு அடிமை நிலையை மாற்றி, பாண்டவர்கள் 12 ஆண்டுகள் காட்டிலும், ஓராண்டு யாராலும் கண்டுபிடிக்கமுடியாமலும் நாட்டிலும் இருக்கவேண்டும் என்று சொல்கின்றனர்.

இந்தக் காலம் முடிவுற்றதும் பாண்டவர்கள் மீண்டும் நாட்டுக்குத் திரும்பிவந்து; தங்கள் சொத்துகளைத் திரும்பக் கேட்கின்றனர். கிருஷ்ணர் பாண்டவர்கள் தரப்பில் தூது செல்கிறார். ஆனால் துரியோதனன் ஊசி முனை அளவு நிலம் கூடத் தரமாட்டேன் என்று சொல்லிவிடுகிறான். இதன் விளைவாக மகாபாரதப் போர் குருட்சேத்திரத்தில் நடைபெறுகிறது.

போரில் பாண்டவர்கள் வெல்கின்றனர். ஆனால் பேரழிவு ஏற்படுகிறது. இரு தரப்பிலும் கடுமையான உயிர்ச் சேதம். பீஷ்மர், துரோணர் முதற்கொண்டு அனைவரும் கொல்லப்படுகின்றனர். கௌரவர்கள் 100 பேரும் கொல்லப்படுகின்றனர். கர்ணனும் கொல்லப்படுகிறான். பாண்டவர்கள் ஐவரும் பிழைத்திருந்தாலும் அவர்களுடைய பிள்ளைகள் அனைவரும் கொல்லப்படுகின்றனர். இறுதியில் கிருஷ்ணன் அருளால் அர்ஜுனனின் மகன் அபிமன்யுவின் மனைவி உத்தரையின் வயிற்றில் இருக்கும் கரு ஒன்று மட்டும் உயிர் பிழைக்கிறது. அந்தக் குழந்தைதான் பரீட்சித்து.

பரீட்சித்து வளர்ந்து பெரியவன் ஆனதும் அவனுக்குப் பட்டம் கட்டிவிட்டு, பாண்டவர்கள் அனைவரும் இமய மலைக்குச் சென்று உயிர் நீர்த்தனர்.

மஹாபாரதம் விரிவாக பகுதி - 1

கதாபாத்திரங்களும் உறவு முறையும்:

பாண்டு: பஞ்ச பாண்டவர்களின் தந்தையார் ஆவார். பாண்டுவிற்கு இரு மனைவியர். முதல் மனைவி குந்திதேவி. இரண்டாவது மனைவியின் பெயர் மாத்ரி. குந்தி இவருடைய முதல் மனைவியாவார். பாண்டு விசித்திர வீரியனின் மனைவியான அம்பாலிகா வேத வியாசருடன் கூடிப் பிறந்தவர். வேதவியாசருடன் அம்பாலிகா கூடிய போது முனிவரது தோற்றங்கண்டு வெளிறிப் போனமையால் பாண்டுவும் வெளிறிய தோற்றத்திற் பிறந்தார். பாண்டு மன்னன் வேட்டையாடுவதில் விருப்பம் உடையவன். ஒரு முறை வேட்டைக்குச் செல்லும் போது இணை மான்களில் ஒரு மானைக் கொன்று விடுகிறான்.

குந்தி: பஞ்ச பாண்டவர்களின் தாயார் அவார். இவர் பாண்டுவின் முதல் மனைவியாவார். மேலும் கிருஷ்ணனின் தந்தையாகிய வாசுதேவனின் சகோதரியுமாவார். சூரசேனனின் மகளாகிய பிரீதா என்ற இயற்பெயருடைய இவர் குந்திபோஜ மன்னனால் தத்தெடுக்கப்பட்டு வளர்க்கப்பட்டதால் குந்தி என்ற பெயர் பெற்றார்.

சாந்தனு: மகாபாரதக் கதையில் வரும் அஸ்தினாபுரத்தின் அரசன் ஆவார். பாண்டவர்களுக்கும் கௌரவர்களும் இவரது வழித்தோன்றல்கள் ஆவர். கங்காதேவியை மணந்ததால் வீட்டுமர் (பீஷ்மர்) எனும் மகனும், சத்யவதி எனும் பரதவகுலத்தைச் சேர்ந்தவரை மணந்ததால் கௌரவரின் மூதாதையான சித்ராங்கதன் எனும் மகனும், பாண்டவரின் முதாதையான விசித்திரவீரியன் எனும் மகனும் இவருக்கு உள்ளனர். சாந்தனு இறந்த பின் சத்யவதி பீஷ்மரின் துணையோடு நாட்டை ஆண்டு வந்தாள்.

வீடுமர் அல்லது பீஷ்மர்: மகாபாரதத்தின் தலையாய கதைமாந்தர்களில் ஒருவர் ஆவர். பீஷ்மர் சாந்தனுவிற்கும் கங்கைக்கும் மூத்த மகனாகப்பிறந்தார். சாந்தனு துஷ்யந்தனுக்கும், பரதனுக்கும் அடுத்த அரசன் ஆவார். பீஷமர் அரசியலை தேவர்களின் குருவான பிரகஸ்பதியிடம் இருந்தும் வேதங்களை வசிஷ்டரிடம் இருந்தும் வில்வித்தையை பரசுராமரிடம் இருந்தும் கற்றுக்கொண்டார்.

தன் தந்தை, சத்தியவதி பால் கொண்ட விருப்பினை நனவாக்க, பிரமச்சாரியாக வாழ்ந்தது மட்டுமன்றி, அரசாட்சியையும் துறந்தார். இதனால் இவர் பெற்றதே இச்சா மரணம் - தான் விரும்பும் போதே மரணம் என்ற வரமாகும்.

போரின் போது சிகண்டி என்பானை முன்னிறுத்தி பாண்டவ சேனை சண்டையிட, பீஷ்மரோ அவன் முற்பிறப்பில் தன்னை கொல்வேன் என்று வஞ்சினமுரைத்த பெண்ணென்றுணர்ந்து, பெண்ணை கொல்லல் அறமாகது என்று தன்னுடலில் அம்பு தாக்கவும் திரும்பத்தாக்காமல் இருந்தார். ஆயினும் தன் தந்தையிடம் பெற்ற இச்சா மரண வரத்தினால், அம்புப் படுக்கையில் இருந்தும் உயிர் நீங்காமல், தன் உயிரை நீக்க விரும்பிய போதே உயிர்நீத்தார்.

மகாபாரதப் போருக்குப் பின்னர் தருமனுக்கு நல்லுபதேசங்களையும், அதனைத் தொடர்ந்து விஷ்ணு சஹச்ர நாமம் எனும் பக்தி நூலையும் தந்துள்ளார்.

வசிட்டர்: (வசிஷ்டர்) மாமுனிவர் (மகரிசி, மகா இருடி) ஏழு புகழ்பெற்ற இருடிகளுள் (ரிசிகளுள்) ஒருவர். வேத காலத்தில் வாழ்ந்ததாகக் கூறப்படும் மாமுனிவர்களுள் இவரும் ஒருவர். வேதங்களின் பல மந்திரங்களை இவர் உருவாக்கியுள்ளார். இவர் பேரைக்கொண்ட பல சுலோகங்கள் இருக்கு வேதத்தின் ஏழாம் மண்டலத்தில் உள்ளது. இருக்கு வேதத்தில் இந்த ஏழாவது மண்டலத்தில் இருக்கு 7.33 இல், பத்து அரசர்களின் மாபெரும்போர் என்னும் நிகச்சியில் இவருடைய குடும்பத்தாரும் இவரும் ஆற்றிய பணியைப் போற்றப்படுகின்றது. மாந்தகுலத்தைச் சேர்ந்த ஒருவரைப் புகழும் ஒரே சுலோகம் இத்வே என்பர். இவர் பெயரால் வழங்கும் நூல் வசிட்ட சம்ஃகிதை (Vasishta Samhita). இவரது மனையாளின் பெயர் அருந்ததி. தேவலோகப் பசுக்களான காமதேனு மற்றும் நந்தினி, இவையிரண்டையும் இவரே பராமரித்து வந்தார். மன்னர் கௌசிகர் இப்பசுக்களைப் பறிக்க முயன்று அதில் தோற்று, பின்பு நோன்பிருந்து தன் தவ வலிமையால் பிரம்ம இருடி விசுவாமித்ரர் என்று பெயர் பெற்றார்.

பரசுராமர் அல்லது பரசுராம பார்கவர்: என்பவர் இந்து புராணங்களில் விஷ்ணுவின் ஆறாவது அவதாரம் ஆவார். இவரது காலம் திரேத யுகம் ஆகும். இவர் ஜமதக்னி முனிவரின் மகன் ஆவார். பரசு என்றால் கோடாலி என்று பொருள். இவர் கடுந்தவம் செய்து சிவ பெருமானிடம் இருந்து ஒரு கோடாலியைப் பெற்றார். அதனால் இவர் பரசு-ராமர் என்று அழைக்கப்படுகிறார். கடல் கொந்தளித்த போது இவர் அதனை அடக்கி கொங்கணக் கடற்கரைப் பகுதிகளைக் காத்தார் என்பதும் தொன்ம நம்பிக்கை.

விதுரன்: அஸ்தினாபுரத்தின் அரசிகளான அம்பிகா, அம்பாலிகா ஆகியோரின் பணிப்பெண்ணின் மகன் ஆவார். இவர் எம தர்மனின் அவதாரமாகவும் கருதப்படுகிறார். இவர் வியாசருக்கும் அப்பணிப்பெண்ணுக்கும் பிறந்தவர். இவர் திருதராஷ்டிரனுக்கும் பாண்டுவுக்கும் சகோதரன் முறை ஆவார். விதுரன் அவர்களுக்கு அமைச்சராக இருந்தார்.

அம்பிகா: காசி மன்னனின் மகளும் அஸ்தினாபுரத்து மன்னன் விசித்திரவீரியனின் மனைவியும் ஆவார். இவரும் இவருடைய சகோதரிகளான அம்பா, அம்பலிகா ஆகியோரும் தங்களுடைய சுயம்வரத்தின்போது பீஷ்மரால் வலுக்கட்டாயமாக கொண்டுசெல்லப்பட்டனர். பீஷ்மர் இவர்களை சத்யவதியிடம் விசித்திரவீரியனின் திருமணத்திற்காக ஒப்படைத்தார்.

விசித்திரவீரியன் இறந்து விட்டதால் அரசுக்கு வாரிசு வேண்டி சத்யவதி தனது மற்றொரு மகனான வியாசரிடம் அம்பிகாவை அனுப்பி வைத்தார். அப்பொது அச்சத்தினால் அம்பிகா தனது கண்களை மூடிக்கொண்டதால் அவர்களுக்கு பிறந்த திருதராஷ்டிரன் குருடனாகப் பிறந்தார். இவரின் புதல்வர்களே கௌரவர்கள் எனப்படுகின்றனர்.

இரண்டாம் முறை அம்பிகா செல்லாமல் தனது வேலைக்காரியை அனுப்பினாள். அவர்களுக்கு பிறந்தவரே விதுரன் ஆவார்.

சகுனி: கௌரவர்களின் தாயான காந்தாரியின் தம்பி ஆவார். இவர் தனது மருமகனான துரியோதனனிடம் மிகுந்த அன்பு கொண்டிருந்தார். இவர் பாண்டவர்களுடன் சூதாடி அவர்களுடைய நாட்டை தனது மருமகனுக்கு வென்று கொடுத்தார். இவர் பாண்டவர்களில் ஒருவரான சகாதேவனால் கொல்லப் பட்டார்.

மாதுரி: மாதுரா அரசின் இளவரசியும் பாண்டுவின் இரண்டாவது மனைவியும் ஆவார். பாண்டு அத்தினாபுரம் செல்லும் வழியில் மாத்ரா அரசின் சாலியன் என்னும் அரசனைச் சந்தித்தான். பின்னர் இருவரும் நண்பர்கள் ஆயினர். பின்னர் சாலியன் மாதுரியைப் பாண்டுவுக்குக் மணமுடித்து வைத்தான்.

நகுலன்: பாண்டுவின் இரண்டாவது மனைவியான மாத்ரியின் புதல்வராவார். இவர் அஸ்வினி தேவர்களின் மூலமாக பிறந்தவர். இவரும் சகாதேவனும் இரட்டையர்கள் ஆவர். நகுலனும் சகாதேவனும் குதிரைகளையும் பசுக்களையும் காக்கும் வரம் பெற்று விளங்கினர். நகுலன் மிகவும் அழகானவராகக் கூறப்பட்டுள்ளார்.

தருமன்: பாண்டு மற்றும் குந்தி ஆகியோரின் மகன் ஆவார். இவர் பஞ்ச பாண்டவர்களில் மூத்தவர். இவர் துர்வாச முனிவரின் வரத்தின் காரணமாக குந்திக்கு எமதர்மன் மூலம் பிறந்தவர். குருச்சேத்திரப் போரில் பாண்டவர்களின் தலைவராய் இருந்தவர். இவர் அத்தினாபுரம் மற்றும் இந்திரப்பிரசுத்தம் ஆகியவற்றின் அரசர். இவர் அறிவியல்,மதம் மற்றும் நிர்வாகத் திறமை கொண்டவராய் திகழ்ந்தவர். தருமரின் தந்தை பிராமணர் ஒருவரால் சபிக்கப்பட்டார். அந்த சாபத்தின் விளைவாக தருமரின் தந்தை அரச பதவியைத் துறந்து தம் மனைவியரோடு வாழ்ந்து வந்தார். ஒரு காலத்தில் குந்தி (தருமரின் தாய்) துருவாச முனிவரிடம் வரம் வேண்டியிருந்தாள். அதை இப்போது தனபதியிடம் தெரிவித்தாள். அதன்படி அவள் இறைவனிடம் பிள்ளை வரம் வேண்டினாள். அவ்வாறு பிறந்த பிள்ளை தான் தருமர்.
எமனுக்குத் தருமன் என்னும் பெயர் உண்டு. [1]

வீமன் பாண்டு மற்றும் குந்தி ஆகியோரின் மகன் ஆவார். இவர் வாயு பகவானுக்கும் குந்திக்கும் பிறந்தவர். இவர் மிகுந்த வலிமையுடையவர். இவர் காட்டில் வசித்த பொழுது இடும்பி என்ற பெண்ணை மணம் செய்து கொண்டார். இவர்களின் மகன் கடோற்கஜன். மேற்கு இந்தியாவில் பாயும் பீமா ஆறானது இவரது பெயராலேயே அழைக்கப்படுகிறது. பார்பாரிகன் இவரது பேரன்.

அருச்சுனன் அல்லது அர்ஜூனன்: பஞ்ச பாண்டவர்களில் மூன்றாமவன். கிருஷ்ணரின் நண்பன். சிறந்த வில் வித்தைக்காரராக சித்தரிக்கப்படும் இவன், பாண்டவர், மற்றும் கௌரவர்களுக்கு குருவான துரோணரின் முதன்மையான சீடன். பகவத் கீதையானது, குருட்சேத்திரப் போரின் முன் இவனுக்கும் கிருஷ்ணருக்கும் இடையே நடைபெற்ற உரையாடலாக மகாபாரதத்தில் இடம் பெறுகிறது.
இவனுக்கு வழங்கும் வேறு பெயர்கள் ஆவன:
விஜயன்
தனஞ்செயன்
காண்டீபன்

சகாதேவன்: பாண்டுவின் இரண்டாவது மனைவியான மாத்ரியின் புதல்வராவார். இவர் அஸ்வினி தேவர்களின் மூலமாக பிறந்தவர். இவரும் நகுலனும் இரட்டையர்கள் ஆவர்.

பாண்டவர் ஐவரில் சகாதேவனே இளையவர் ஆவார். மேலும் அவர்களில் சகாதேவனே புத்திக்கூர்மை மிக்கவர். தன்னுடைய சகோதரன் நகுலனைப் போல் வாள் வீச்சில் சிறந்தவராக விளங்கினார்.
இவர் மகத நாட்டு மன்னனான ஜராசந்தனின் மகளை மணந்து கொண்டார். இவரது மச்சினனின் பெயரும் சகாதேவன் ஆகும்.

துரியோதனன்: கௌரவர்களில் மூத்த சகோதரனாவான். இவனுக்கு கடைசிவரை கர்ணன் உற்ற தோழனாக இருக்கின்றமை குறிப்பிடத்தக்கது. இவன் குருட்டு அரசனான திருதராஷ்டிரனதும், காந்தாரியினதும் மூத்த மகன். பீமனால் தொடை பிளந்து கொல்லப்படுகிறான்.

துச்சாதனன்:. இந்த இதிகாசத்தின்படி, கண்பார்வையற்ற மன்னனான திருதராட்டிரனுக்கும், அவனது மனைவியான காந்தாரிக்கும் பிறந்த நூறு பிள்ளைகளுள் ஒருவனே இவன்.

துச்சாதனன் பிறப்பு
காந்தாரி கர்ப்பமுற்றாளாயினும் அது நீண்டகாலம் நீடித்துச் சென்றதேயன்றிப் பிள்ளை பிறக்கவில்லை. வெறுப்புற்ற காந்தாரி தனது வயிற்றில் அடித்துக்கொண்டாள். திருதராட்டிரனின் தம்பியான பாண்டுவின் மனைவி ஏற்கெனவே மூன்று பிள்ளைகளைப் பெற்றிருந்ததும் அவளுக்குப் பொறாமையை ஊட்டியிருந்தது.

அவள் வயிற்றில் அடித்துக்கொண்டதனால் அவள் வயிற்றிலிருந்து சாம்பல் நிறமான தசைப் பிண்டம் ஒன்று அவள் வயிற்றிலிருந்து வெளிவந்தது. காந்தாரி மிகுந்த துயருற்றாள். அவளுக்கு நூறு புதல்வர்கள் பிறப்பார்கள் என வாழ்த்திய பெரியவரான வியாசரிடம் அவள் முறையிட்டாள். வியாசர் அப் பிண்டத்தை நூறு பாகங்களாகப் பிரித்து, நெய் நிறைந்த பானைகளிலே இட்டு மூடி அவற்றை மண்ணிலே புதைத்து வைத்தார்.

ஓராண்டின் பின் முதல் பானை திறக்கப்பட்டபோது அதிலிருந்து துரியோதனன் வெளிப்பட்டான். இரண்டாவது பானையில் இருந்து வெளிவந்தவனே துச்சாதனன் ஆவான். துச்சாதனன் துரியோதனன் மீது மிகுந்த பற்றுக் கொண்டிருந்தான். அவனுடன் இணைந்து பாண்டவர்களைக் கொல்வதற்காகப் பல திட்டங்களையும் தீட்டினான்.

துகிலுரிப்பு
பாண்டவர்களில் மூத்தோனாகிய தருமன் துரியோதனன் ஆகியோரின் சதிவலையில் வீழ்ந்து தனது பொருளெல்லாம் சூதிலே தோற்றான். பின்னர் தனது தம்பியரையும், மனைவியான திரௌபதி (பாஞ்சாலி)யையும் கூடப் பணயம் வைத்துச் சூதாடினான் அவர்களையும் இழந்தான். இதனைத் தொடர்ந்து, துரியோதனன் ஆணைப்படி திரௌபதியை அவைக்கு இழுத்துவந்த துச்சாதனன், அவளது சேலையை உரிய முற்பட்டான். கண்ணனுடைய சக்தியால் இழுக்க இழுக்கத் பாஞ்சாலியின் சேலை நீண்டுகொண்டே இருந்தது.

இதனால் பாஞ்சாலி காப்பாற்றப்பட்டாலும் சினம் கொண்ட அவள், துச்சாதனனின் இரத்தத்தைக் கூந்தலில் தடவினாலன்றித் தனது கலைந்த கூந்தலை முடிப்பதில்லை எனச் சபதம் எடுத்தாள். பீமனும் அவனது நெஞ்சைப் பிளந்து இரத்தத்தைக் குடிப்பேன் எனச் சூழுரைத்தான்.

யுயுத்சு திருதராஷ்டிரனுக்கும் அவரின் அரண்மனைப் பணிப்பெண் ஒருவருக்கும் பிறந்த மகன் ஆவார். இவர் துரியோதனன் முதலான கௌரவர்களுக்கு சகோதரன் முறை கொண்டவர்.
பாண்டவர்களை கௌரவர்கள் அவமரியாதை செய்தது பிடிக்காத யுயுத்சு குருச்சேத்திரப் போரின் போது பாண்டவர் அணியில் சேர்ந்தார். போரின் முடிவில் பிழைத்த திருதராஷ்டிரனின் புதல்வர் இவர் ஒருவரே ஆவார்.

துச்சலை: துரியோதனின் சகோதரி. இவளது கணவன் பாரதப் போரில் அருச்சுனனால் கொல்லப்பட்டான். இவளுக்கு சுரதா என்னும் ஒரு மகன் இருந்தான். குருசேத்திரப் போரின் பின்னர் தர்மனின் அசுவமேத யாகத்துக்காக சிந்து நாட்டுக்கு வந்த அருச்சுனனுடன் துச்சலையின் பேரன் போர் புரிந்தான். துரியோதனனது சகோதரியை தனது சகோதரியாகவே கருதிய அருச்சுனன் சுரதாவின் மகனைக் கொல்லாமல் சிந்து நாட்டை விட்டு அகன்றான்.

திரௌபதி: பஞ்ச பாண்டவர்களின் மனைவி. சூதாட்டத்தில் தருமர் தன் நாடு முதல் அனைத்தையும் இழந்த நிலையில் இறுதியாக அவரின் மனைவியான திரெளபதியை வைத்து சூதாடினார். ஆயினும் அங்கே சகுனியின் கபட ஆட்டத்தால் தருமர் தோல்வியடைந்தார். இதன் காரணமாக திரெளபதி கௌரவர்களுக்குச் சொந்தமானார். இதன் போது கௌரவர்கள் திரெளபதியை சபையிலே துகிலுரிந்து அவமானப்படுத்த நினைத்தபோதும் அது கிருஷ்ணரின் உதவியால் கைகூடாமல் போனது.

இடும்பி: இடும்பனின் உடன்பிறந்தவள். காட்டுவாசியான இவள் பீமனை விரும்பினாள். பீமனுக்கும் இடும்பிக்கும் பிறந்தவனே கடோத்கஜன்.

பாண்டவர்களின் வனவாச காலத்தில் இடும்பன் இடும்பியைப் பாண்டவர்களைக் கொன்று இறைச்சியாக்கி வருமாறு அனுப்புகிறான். பாண்டவர்களில் ஒருவனான பீமனைக் கண்டு இடும்பி அவனை விரும்புகிறாள். ஓர் அழகியான பெண்ணாக மாறி பீமனை அணுகுகிறாள். நீண்ட நேரம் இடும்பி திரும்பி வராததால் இடும்பன் பீமனைக் கொல்ல வருகிறான். பீமனுக்கும் இடும்பனுக்கும் நடந்த சண்டையில் இடும்பன் கொல்லப்படுகிறான். பின்னர் இடும்பி பீமனைத் திருமணம் செய்கிறாள். இவர்களுக்குக் கடோத்கஜன் பிறக்கிறான். வனவாசத்தின் பின்னர் இடும்பியும் பீமனும் மீண்டும் சந்தித்தார்களா என்பது பற்றித் தெரியவில்லை.

ஹிமாச்சல் பிரதேசத்தின் சில பகுதிகளில் இடும்பியை வழிபடுவோர் உள்ளனர்.

கடோற்கஜன்: இடும்பிக்கும் பீமனுக்கும் பிறந்தவன். இராட்சசிக்குப் பிறந்தவனாகையால் மந்திர வலிமைகள் உடையவனாக இருந்தான். இவனது தலை பானை போலிருந்ததால் கடோற்கஜன் என்ற பெயர் பெற்றான். இவனது மனைவி அகிலாவதி. நாககன்னியான அகிலாவதி கேட்ட அனைத்துக் கேள்விகளுக்கும் பதிலளித்தே அவளைத் திருமணம் செய்தான். கடோற்கஜன் தனது தந்தையைப் போலவே கதாயுதத்தால் போரிட்டான். கர்ணனால் பாரதப் போரில் கொல்லப்பட்டான்.

அகிலாவதி: ஒரு நாக கன்னிகை. பீமனின் மகனான கடோற்கஜனைத் திருமணம் செய்தாள். அகிலாவதி கேட்ட அனைத்துக் கேள்விகளுக்குப் பதிலளித்தே அவளைக் கடோற்கஜன் மணம் புரிந்தான்.

அகிலாவதியின் மகனே பார்பரிகா. பார்பரிகாவுக்கு இவள் தோற்கும் பக்கத்துடன் சேர்ந்து போரிடப் பழக்கினாள். பார்பரிகா பாரதப்போரின் பதினான்காம் நாளில் கௌரவருடன் இணைந்து போரிடத் தொடங்கி பீமன், காடோற்கஜன், அருச்சுனன் ஆகியோரையும் வென்றான். கிருஷ்ணனால் கொல்லப்பட்டான்.

இவர் வசுதேவருக்கும் உரோகிணி தேவிக்கும் பிறந்த ஒரே மகள் ஆவார். சுபத்திரை வசுதேவர் சிறையில் இருந்து கிருட்டிணரால் மீட்கப்பட்ட பிறகு பிறந்தவர். எனவே அவருடைய சகோதரர்களைக் காட்டிலும் மிகவும் இளையவர். ஆதலால் மிகுந்த செல்வாக்குடன் வளர்க்கப்பட்டார்.

உத்தரை: விராடனின் மகள். உத்தரனின் சகோதரி. அர்ச்சுனனின் மகனான அபிமன்யுவை மணம் செய்தாள். அபிமன்யு பாரதப் போரில் இறந்ததால் இள வயதில் விதவையானாள். பாரதப் போரில் அபிமன்யு இறந்த பின் உத்தரைக்குப் பிறந்த குழந்தையே குரு வம்சத்தின் ஒரே வாரிசு ஆகும். அக்குழந்தை பின்னர் அஸ்தினாபுர அரசனானான்.

உலுப்பி அல்லது உலூப்பி: அருச்சுனனின் பல மனைவிகளில் ஒருத்தியாவாள். அருச்சுனன் மணிப்பூரில் இருந்தபோது, நாக கன்னிகை உலுப்பி அவன் மீது மோகம் கொண்டு மயங்குகிறாள். அருச்சுனனை மயக்கமருந்து கொடுத்து தனது பாதாள உலகிற்கு கொணரச் செய்கிறாள். அங்கு இணங்காத அருச்சுனனை வற்புறுத்தி திருமணம் செய்து கொள்கிறாள். அவர்களுக்கு அரவான் என்ற மகன் பிறக்கிறான். பின்னர் கணவனின் பிரிவால் வாடும் சித்திராங்கதாவுடன் அருச்சுனனை சேர்த்து வைக்கிறாள்.

அருச்சுனன் மற்றும் சித்திராங்கதாவின் மகன் பாப்புருவாகனனின் வளர்ச்சியில் பெரும்பங்காற்றுகிறாள். போர் களத்தில் அருச்சுனன் பாப்புருவாகனனால் கொல்லப்படும்போது அவனை உயிர்ப்பிக்கிறாள்.

பீஷ்மர் குருச்சேத்திரப் போரில் அருச்சுனனால் கொல்லப்பட்டதால் அவரது சோதரர்களான வசுக்கள் இட்ட சாபத்திலிருந்து அருச்சுனனை காப்பாற்றுகிறாள்.

சித்திராங்கதை (அல்லது சித்திராங்கதா): அர்ஜுனனின் மனைவிகளுள் ஒருவர் ஆவார். அர்ஜுனன் தனது வனவாசத்தின் போது இந்தியாவின் பலபகுதிகளில் சுற்றித் திரிந்தார். அப்போது அவர் இமயமலைக்கு கிழக்கே உள்ள மணிப்பூர் என்னும் இடத்திற்குச் சென்றார். அங்கு அவர் மணிப்பூர் மன்னனின் மகளான சித்திராங்கதையைச் சந்தித்தார்.

அருச்சுனன் அவரை மணம் செய்து கொள்ள விரும்பி மன்னரை வேண்டினார். அதற்கு அவர் அவ்வூர் வழக்கப்படி சித்திராங்கதையின் குழந்தைகள் மணிப்பூர் அரசின் வாரிசுகள் என்றும் அவர்களை அருச்சுனனோடு அனுப்ப முடியாது என்றும் கூறிவிட்டார். அருச்சுனன் சித்திராங்கதையையும் அவள் குழந்தைகளையும் கூட்டிச்செல்வதில்லை என்று உறுதிகொடுத்து மணமுடித்துக் கொண்டார். இவர்களுக்கு பாப்புருவாகனன் என்ற மகன் பிறந்தான். அவனே மணிப்பூர் அரசின் வாரிசு ஆவான்.

அபிமன்யு: அர்ஜுனனுக்கும் கிருஷ்ணரின் சகோதரியான சுபத்திரைக்கும் பிறந்த மகன் ஆவார். அபிமன்யு தனது இளமைப்பருவத்தை தனது தாயின் ஊரான துவாரகையில் கழித்தான். இவர் தனது தந்தையான அர்ஜுனனிடம் போர்ப்பயிற்சி பெற்றான். பின்னர் இவனுக்கும் விராட மன்னனின் புதல்வி உத்தரைக்கும் திருமணம் நடந்தது. இவர் இந்திரனுடைய பேரன் ஆகையால் நிறைய வரங்கள் பெற்றிருந்தான். மிகச்சிறந்த வீரனாகவும் திகழ்ந்தான்.

குருச்சேத்திரப் போரின் பதின்மூன்றாவது நாளில் கௌரவர்கள் சக்கரவியூகம் அமைத்துப் போரிட்டனர். இதனுள் சென்று போர் புரிந்த அபிமன்யு அதில் உயிரிழந்தான்.

அரவான்: இரவன், இராவத் மற்றும் இராவந்த் என்றும் அறியப்படுகிறார். அரவான் பாண்டவ இளவரசன் அருச்சுனன் மற்றும் நாக இளவரசி உலுப்பி ஆகியோரின் மகன்.

அரவான் கூத்தாண்டவர் வழிபாட்டு மரபின் முக்கியக் கடவுளாக உள்ளார். ”கூத்தாண்டவர்” என்பது இந்த வழிபாட்டு மரபில் அரவானுக்கு வழங்கப்படும் பொதுவான பெயர். திரௌபதி வழிபாட்டு மரபிலும் இவர் முக்கியப் பங்கு வகிக்கிறார். இந்த இரண்டு வழிபாட்டு மரபுகளும் தென்னிந்தியாவில் அரவானைக் கிராம தெய்வமாக வழிபடும் பகுதிகளிலிருந்து தோன்றியவை. அரவான், அலி என்று அழைக்கப்படும் திருநங்கைகள் (இவர்கள் தென்னிந்தியாவில் அரவாணி என்றும், தெற்கு ஆசியா முழுவதும் ஹிஜிரா என்றும் அறியப்படுகின்றனர்) சமூகத்தின் காவல் தெய்வமுமாவார்.

மகாபாரதக் காப்பியத்தின் முக்கியக் கருப்பொருளான, 18 நாட்கள் நடைபெற்ற குருட்சேத்திரப் போரில் (மகாபாரதப் போர்) அரவான் வீரமரணம் அடைவதாக மகாபாரதம் சித்தரிக்கிறது. போரில் பாண்டவர்கள் வெற்றி பெறுவதற்குக் காளி அருள் வழங்க வேண்டும் என்பதற்காக அரவான் தன்னையே பலி கொடுத்ததைச் சிறப்பிக்கும் மரபும் தென்னிந்திய சமூகத்தில் உள்ளது.

தன்னையே பலி கொடுத்ததற்காகக் கிருஷ்ணர் அரவானுக்கு வழங்கிய மூன்று வரங்களில் ஒன்றே கூத்தாண்டவர் வழிபாட்டு மரபின் மையமாக உள்ளது. அரவான், தான் இறப்பதற்கு முன்பு திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று வேண்டிக்கொண்டார். மோகினி என்ற பெண் வடிவமாக மாறி கிருஷ்ணர் அரவானின் வேண்டுதலை நிறைவேற்றினார். இந்த நிகழ்வு, தமிழ்நாட்டில் உள்ள கூவாகம் என்ற இடத்தில் 18 நாள் திருவிழாவில் நினைவுகூரப்படுகிறது. இதில் முதலில் அரவானை திருநங்கைகளுக்கும் அந்த ஊரைச் சேர்ந்த அவருக்கு நேர்ந்துவிடப்பட்ட ஆண்களுக்கும் திருமணம் செய்து வைக்கின்றனர். அடுத்து அரவான் பலியிடல் நிகழ்த்தப்பட்டபின்னர் அவர்கள் விதவைக் கோலம் கொள்கின்றனர்.

MANILAL GANDHI ,BORN 1892 OCTOBER 28 - 1956 APRIL 5

 

MANILAL GANDHI ,BORN 

1892 OCTOBER 28 - 1956 APRIL 5




மணிலால் காந்தி (ஆங்கிலம்: Manilal Mohandas Gandhi) (28 அக்டோபர் 1892 – 5 ஏப்ரல் 1956) [1][2], மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி, கஸ்தூரிபாய் காந்தி இணையரின் இரண்டாவது மகனாவார். மணிலால் இராஜ்கோட்டில் பிறந்தார். 1897இல் முதன் முறையாக தென்னாப்பிரிக்கா சென்று, டர்பனுக்கு அருகில் உள்ள போனிக்சு ஆசிரமத்தில் சிறிதுகாலம் இருந்தார். பிறகு இந்தியா திரும்பினார். 1917இல் மீண்டும் தென்னாப்பிரிக்கா சென்ற மணிலால், போனிக்சு ஆசிரமத்தில் குசராத்தி-ஆங்கிலம் ஆகிய மொழிகளில் வெளியிடப்பட்ட ’இந்தியன் ஒபீனியன்’ என்ற வார இதழில் பணியாற்றினார். 1918இல் அந்த இதழ் தொடர்பான பெரும்பங்கு பணிகளை மேற்கொண்ட மணிலால் , 1920-ல் அதன் ஆசிரியர் ஆனார். தன் தந்தைபோலவே நிறவெறி ஆட்சியாளர்களால் மணிலால் பலமுறை சிறை சென்றார். அவர் இறந்த 1956-ம் ஆண்டுவரை அவ்விதழின் ஆசிரியராக இருந்தார்.

1927-ல் மணிலால் சுசிலா மஷ்ருவாலா என்பவரை மணந்தார். இவர்களுக்கு சீதா (1928), இலா (1940) என இரு பெண் குழந்தைகளும், அருண் காந்தி (1934) என்கிற மகனும் ஆவர். அருண், இலா ஆகியோர் சமூக, அரசியல் செயற்பாட்டாளர்கள் ஆவர். சீதாவின் மகளான உமா டி.மெஸ்திரி அண்மையில் மணிலால் வரலாறு குறித்த புத்தகத்தை வெளியிட்டார். [3]




MANILAL MOHANDAS GANDHI  
BORN 1892 OCTOBER 1892





Manilal Mohandas Gandhi (28 October 1892 – 5 April 1956[1][2]) was the second son of Mahatma Gandhi and Kasturba Gandhi. Manilal was born in Rajkot, British India. In 1897 Manilal traveled to South Africa for the first time, where he spent time working at the Phoenix Ashram near Durban. After a brief visit to India, in 1917 Manilal returned to South Africa to assist in printing the Indian Opinion a Gujarati-English weekly publication, at Phoenix, Durban. By 1918, Manilal was doing most of the work for the press and took over in 1920 as editor. Like his father, Manilal was also sent to jail several times by the British colonial government after protesting against unjust laws. He remained editor until 1956, the year of his death. Manilal died from a cerebral thrombosis following a stroke.

Legacy[edit source]


In 1927, Manilal married Sushila Mashruwala (1907-1988), and had two daughters, Sita (1928) and Ela (1940), and one son, Arun (1934). Arun and Ela are also social-political activists. Uma D. Mesthrie, Sita's daughter, recently published a biography on Manilal.[3

மணிலால் காந்தி (ஆங்கிலம்: Manilal Mohandas Gandhi) (28 அக்டோபர் 1892 – 5 ஏப்ரல் 1956) [1][2], மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி, கஸ்தூரிபாய் காந்தி இணையரின் இரண்டாவது மகனாவார். மணிலால் இராஜ்கோட்டில் பிறந்தார். 1897இல் முதன் முறையாக தென்னாப்பிரிக்கா சென்று, டர்பனுக்கு அருகில் உள்ள போனிக்சு ஆசிரமத்தில் சிறிதுகாலம் இருந்தார். பிறகு இந்தியா திரும்பினார். 1917இல் மீண்டும் தென்னாப்பிரிக்கா சென்ற மணிலால், போனிக்சு ஆசிரமத்தில் குசராத்தி-ஆங்கிலம் ஆகிய மொழிகளில் வெளியிடப்பட்ட ’இந்தியன் ஒபீனியன்’ என்ற வார இதழில் பணியாற்றினார்.


 1918இல் அந்த இதழ் தொடர்பான பெரும்பங்கு பணிகளை மேற்கொண்ட மணிலால் , 1920-ல் அதன் ஆசிரியர் ஆனார். தன் தந்தைபோலவே நிறவெறி ஆட்சியாளர்களால் மணிலால் பலமுறை சிறை சென்றார். அவர் இறந்த 1956-ம் ஆண்டுவரை அவ்விதழின் ஆசிரியராக இருந்தார்.
1927-ல் மணிலால் சுசிலா மஷ்ருவாலா என்பவரை மணந்தார். இவர்களுக்கு சீதா (1928), இலா (1940) என இரு பெண் குழந்தைகளும், அருண் காந்தி (1934) என்கிற மகனும் ஆவர். அருண், இலா ஆகியோர் சமூக, அரசியல் செயற்பாட்டாளர்கள் ஆவர். சீதாவின் மகளான உமா டி.மெஸ்திரி அண்மையில் மணிலால் வரலாறு குறித்த புத்தகத்தை வெளியிட்டார்.

KADAVOOR JAMEEN -DINDIGUL DISTRICT MOUNTAIN PLACE

 

KADAVOOR JAMEEN -DINDIGUL DISTRICT MOUNTAIN PLACE




"கடவூர் ஜமீனின் ஆளுகையில் இருந்த மலையைப் பற்றி யாருக்குத் தெரியும்?" - ஒரு மலையேறும் கரூர்க்காரரின் கதை!

இருபது வருடங்களுக்கு முன்பு, எங்கள் பதினெட்டு ஊர்களிலும் டி.வி-யோ, தியேட்டரோ இல்லை. அதனால், 'ஒளியும் ஒலியும்' பார்ப்பதற்காக 500 அடி மலையேறி அந்தப் பக்கம் இருக்கும் திண்டுக்கல் மாவட்டத்துக்குப் படையெடுப்போம்.

மலையும் மலை சார்ந்த இடங்களையும் சுற்றிப் பார்க்காதவர்கள் யார்தான் இருக்க முடியும்? அவற்றை எத்தனை முறை பார்த்தாலும் எவருக்கும் சலிப்பு ஏற்படாது என்பது உண்மைதான். அதனால்தான் பலரும் சுற்றுலாத்தலம் சம்பந்தப்பட்ட மலைக்குன்றுகளில் மலையேற்றம் காண்கின்றனர். அப்படியான கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு மலைப் பகுதிக்குத்தான் அனுபவம் வாய்ந்த தெற்கு அய்யம்பாளையத்தைச் சேர்ந்த முத்துசாமி என்பவரோடும் பாலா என்ற இளைஞரோடும் பயணித்தோம்...

"இந்த மலை, கரூர் மாவட்டம், கடவூர் அருகே மாவட்ட எல்லையாக உள்ள தெற்கு அய்யம்பாளையம் உள்ளிட்ட 18 ஊர்களைச் சுற்றி காம்பஸை வைத்து வரைந்ததுபோல் வட்டவடிவில் உள்ளது. இதை தெற்கு, வடக்கு, மேற்கு, கிழக்கு மலைகள் எனப் பெயர்வைத்து அழைக்கின்றனர். அதோடு, இன்னும் சில மலைகளைத் தொப்பிசாமி மலை, புள்ள முழுங்கி மலை என்று சுவாரஸ்யமான பெயர்களையும் வைத்து அழைக்கிறார்கள்" என்ற முத்துசாமி, "இந்த மலைப்பாதை கரடுமுரடாக இருக்கும். மேலும், இங்குப் பெயர் தெரியாத விஷ ஜந்துக்களும் நிறைய இருக்கும். எதற்கும் எச்சரிக்கையுடன் இருங்கள்" என்று அறிவுறுத்தியபடியே தொடர்ந்தார்.

"இந்த மலையின் அடிவாரத்தில்தான் என்னுடைய ஊர் இருக்கிறது. ஆனால், இப்படி மலையேறி இருபது வருடங்களுக்கு மேலாகுது. உசிலை, விராலி, செமுனா, இண்டுமுள், தெரளி, சுளுந்தை, வெடத்தலையான் என இங்குப் பெருகியிருக்கும் பல மரங்களுடைய விறகுகளைப் பொறுக்குவதற்காக இளஞ்சிறார்களோடு அடிக்கடி வருவேன். அப்புறம், இந்த மலையில் இயற்கையாக விளைந்துகிடக்கும் காரக்காய், பொவுஞ்சி, வீரப்பழம், சூரப்பழம், களிப்பூலாம் பழம், கொள்ளுக்குறிச்சான், நரி நத்தைப் பழம், செமுனாப் பழம், பொடாத்திப் பழம், ஆனைப்பழம் எனப் பல பழங்களைப் பறித்துத் தின்போம். தலையில் தேய்ப்பதற்கு மரிக்கலாம்பட்டையையும், வீட்டில் குழம்பு வைப்பதற்கு காட்டுச் சுண்டைக்காயையும் பறித்துச் செல்வோம். விடுமுறை நாள்களில் இங்குதான் ஆடு, மாடுகளை மேய்க்க வருவோம். ஆனால் வீட்டில் உள்ளவர்கள், 'மலைமேல மோகினி, பிசாசு எல்லாம் இருக்கு. அங்கே போகாதீங்க'னு சொல்வாங்க. ஆனால், நாங்கள் அவர்களின் பேச்சையெல்லாம் கேட்காமல்தான் மலைக்குச் செல்வோம். அவையெல்லாம் இனி, திரும்பவே வராத காலம்" என்று ஏக்கப் பெருமூச்சுவிட்ட அவர், திடீர் என யாரும் எதிர்பாராத வகையில், எதிரில் இருந்த ஒரு மரத்துமீது ஏறினார்.


"இந்த மரத்தில்தான் சிறுவர்களுடன் ஏறி 'குரங்கு தாவுதல்' விளையாடுவோம்" என்றவர், பின்னர் அதிலிருந்து கீழ் இறங்கி நடைபாதையின் ஓரத்திலிருந்த கள்ளிச்செடிகளைப் பார்வையிட்டார். பின், ஒரு குச்சியை எடுத்து அந்தச் செடியில், 'எம்.வி' என்று எழுதி ரசித்துப் பார்க்கிறார். பின் அதனருகில் இருந்த ஆனைப்பழங்களைப் பார்த்து, "அய்யோ, இதைத் தின்று எவ்வளவு வருடமாகிவிட்டது" என்று ஆசையோடு பறித்துத் தின்றவர், எங்களுக்கும் கொடுத்தார். பின்னர் குறிப்பிட்ட ஓர் இடம் வந்ததும், "நாம் வரவேண்டிய இடத்துக்கு வந்துவிட்டோம்" என்றார். அந்த இடத்தில், முத்துசாமி முன்பே சொன்னதுபோலவே பெரிய அளவில் கருங்கற்களால் ஆன நிலை போன்ற அமைப்பு இருக்கிறது. அதில், இரண்டு பிரமாண்ட கதவுகள் இருந்ததற்கான அறிகுறிகள் தென்படுகின்றன. அதைப் பார்வையிட்ட நம்மிடம், "இதுதான் அந்தக் கதவு கணவாய். 100 வருடங்களுக்கு முன்பு திண்டுக்கல்லைச் சேர்ந்தவர்கள் எங்கள் ஊர் பக்கமாக வந்துசெல்வதற்கு இதுதான் வாசலாக இருந்தது. அந்நியர்கள் எவரும் எங்கள் பகுதிக்குள் வந்துவிடக்கூடாது என்பதற்காகத்தான் கடவூர் ஜமீனால் இந்த நிலைக் கதவு அமைக்கப்பட்டது. இங்கு 10-க்கும் மேற்பட்ட பாதுகாவலர்கள் நியமிக்கப்பட்டதுடன், அந்நியர்கள் வந்தால் அவர்களைத் தடுத்து நிறுத்தவும் இதை அமைத்திருந்திருக்கிறார்கள். அப்போது மலைகளுக்குக் கீழே இருக்கும் 18 பட்டிகள் மட்டுமின்றி, இந்த மலைகளும் ஜமீன் ஆளுமையின்கீழ்தான் இருந்திருக்கிறது.

இருபது வருடங்களுக்கு முன்புதான் இந்த மலைகள் வனத்துறையின் கட்டுப்பாட்டுக்கு வந்திருக்கிறது. இந்த மலைக்குள் இருக்கும் எங்கள் கிராமங்களுக்கு வெளியில் இருந்துவர இரண்டு வழிகள்தான் இருந்திருக்கின்றன. ஒன்று, நடந்துபோகும் இந்தக் கதவு கணவாய் வழி. மற்றொன்று, பாலவிடுதி வழியாக வாகனங்களில் போய்வரும் வழி. ஆனால், மறைந்த கருணாநிதி முதல்வராக இருந்தபோது, கிழக்கு மலையைக் குடைந்து பொன்னணியாறு அணையை அமைத்தார். அதன் ஓரமாக ஒரு சாலையும் அமைக்கப்பட்டது. இதனால் மூன்று வழியானது. அதன்பிறகு, திண்டுக்கல் செல்வதற்கு கதவு கணவாய் வழியாக மலையேறி இறங்க வேண்டும் என்பதால், சேவாப்பூர் வழியாக மலையைக் குடைந்து சாலையமைத்தனர். இதையும் சேர்த்து மொத்தம் நான்கு வழியாகிவிட்டது. இதனால், தற்போது இந்தக் கதவு கணவாய் வழியை யாரும் பயன்படுத்துவதில்லை.

இருபது வருடங்களுக்கு முன்பு, எங்கள் பதினெட்டு ஊர்களிலும் டி.வி-யோ, தியேட்டரோ இல்லை. அதனால், ஒளியும் ஒலியும் பார்ப்பதற்காக 500 அடி மலையேறி அந்தப் பக்கம் இருக்கும் திண்டுக்கல் மாவட்டத்துக்குப் படையெடுப்போம். அதேபோல, அய்யலூரில் இருந்த லாலாகிருஷ்ணன் என்கிற டூரிங் டாக்கீஸுக்குப் படம் பார்க்கச் செல்வோம். படம் பார்த்து முடித்துவிட்டு வரும்போது, நரி, காட்டுப் பன்றி, மான் என விலங்குகளின் நடமாட்டம் இருக்கும். இதனால் டார்ச் லைட்டின் உதவியுடன் இந்த மலை வழியாகவே உயிரைக் கையில் பிடித்துக்கொண்டு வீட்டுக்கு வருவோம். அப்படி வரும் எங்களை வீட்டில் உள்ள பெரியவர்கள் அடிப்பார்கள். அதேபோல், வாராவாரம் நடக்கும் அய்யலூர் சந்தையில் ஆடு, மாடு, கோழி, காய்கறிகள் விற்கவோ வாங்கவோ இந்த வழியாகத்தான் மக்கள் போய் வருவார்கள். ஆனால், தற்போது எல்லாரும் வாகனங்களில் சாலை வழியாகப் போகிறார்கள். ஆனால், இந்த மலையும், கதவு கணவாயும் எப்போதும்போல எங்களுக்கு அரணாகத்தான் இருக்கிறது" என்றார், புன்னகையுடன்.

"முத்துசாமி அண்ணன், இந்த மலையிலே பலமுறை ஏறியிருக்கிறார். ஆனால், நான் இரண்டு தடவை மட்டுமே ஏறியிருக்கிறேன். இவர் சொன்ன மரங்கள் மற்றும் பழங்களின் பெயர்களை எல்லாம் நான் இதுவரை கேட்டதில்லை. இந்தக் கதவு கணவாய் வழியாக ஊருக்குள் அந்நியர்களோ அல்லது தீய சக்திகளோ வந்துவிடக்கூடாது என்பதற்காக ஊர் மக்கள் ஒன்றுகூடி பூஜை செய்வார்கள். மற்றபடி, அவ்வளவாக இந்தப் பக்கம் யாரும் வருவதில்லை. சிலருக்கு, இப்படி ஓர் இடம் இருப்பதுகூடத் தெரியாது. நம் உடம்பையும், மனதையும் இந்த மலை புத்துணர்ச்சியாக்கும் என்று எங்கள் ஊரில் இருக்கும் முதியவர்கள் சொல்வார்கள். அதை, இப்போது உணர முடிகிறது" என்றார் பாலா, புத்துணர்ச்சியுடன்.

MARRIAGE - FIVE IN ONE LABOUR WARD, THREE MARRIED AT A TIME IN KERALA

 

MARRIAGE - FIVE IN ONE LABOUR WARD,

THREE MARRIED AT A TIME IN KERALA



கேரளா: ஒரே பிரசவத்தில் பிறந்த மூன்று சகோதரிகளுக்கு ஒரே நாளில் திருமணம்!


தன் ஐந்து பிள்ளைகளுக்கும் ஒரே நாளில், ஒரே மேடையில் திருமணம் செய்துவைக்க விரும்பினார் கேரளாவைச் சேர்ந்த ரமாதேவி.கேரள மாநிலம் திருவனந்தபுரம் மாவட்டம் போத்தன்கோடு பகுதியைச் சேர்ந்த பிரேம்குமார் - ரமாதேவி தம்பதிக்கு ஐந்து குழந்தைகள். ஐந்து குழந்தைகளும் ஒரே பிரசவத்தில், சில நிமிட இடைவெளியில் பிறந்தவர்கள். 1995-ம் ஆண்டு நவம்பர் மாதம் 18-ம் தேதி ஓர் ஆண் குழந்தை, நான்கு பெண் குழந்தைகள் என நிகழ்ந்த ரமாதேவியின் பிரசவம், கேரளாவில் கொண்டாடப்பட்டது. ஒரே பிரசவத்தில் பிறந்த ஐந்து குழந்தைகள் என கேரள மீடியாவில் அது முக்கியச் செய்தியானது.உத்திர நட்சத்திரத்தில் பிறந்த தன் குழந்தைகளுக்கு உத்ரஜா, உத்ரா, உதாரா, உத்தமா, உத்ரஜன் எனப் பெயரிட்டு வளர்த்தனர் பிரேம்குமாரும் ரமாதேவியும். தன் ஐந்து குழந்தைகளையும் ஐந்து ரத்தினங்கள் என்று கொஞ்சிய பெற்றோர், அவர்களை 'பஞ்சரத்னம்' என ஆசையுடன் அழைத்தனர்.


ஐந்து குழந்தைகளுக்கும் பிறந்தநாள், அவர்களை முதன்முதலாகப் பள்ளியில் சேர்த்த நாள், அவர்களுக்குப் பொதுத்தேர்வு முடிவு வரும் நாள் என்று எல்லாமே அந்தக் குடும்பத்தில் அதிக மகிழ்ச்சியுடனும் உலகத்துக்கு ஆச்சர்யத்துடனுமே நடந்தது.

பஞ்ச ரத்தினங்கள்

இதற்கிடையில், ரமாதேவிக்கு இதயத்தில் பிரச்னை ஏற்பட்டது. மருத்துவச் செலவு கையை மீறிச் சென்றது. சிறு வியாபாரியான பிரேம்குமார், கடன் பிரச்னையால் மனமுடைந்து 2004-ம் ஆண்டு தற்கொலை செய்து கொண்டார். ஐந்து குழந்தைகளுடன் கஷ்டப்பட்ட ரமாதேவிக்கு கேரள அரசு, கூட்டுறவு வங்கியில் வேலை வழங்கியது. அதன்பிறகு குழந்தை களை கஷ்டப்பட்டு வளர்த்து ஆளாக்கினார் ரமாதேவி.ஐந்து குழந்தை களையும் உடை முதல் பழக்கவழக்கங்கள் வரை அனைத்திலும் ஒரே மாதிரியாக வளர்த்த ரமாதேவி, அவர்கள் அனைவருக்கும் ஒரே நாளில், ஒரே மேடையில் திருமணம் செய்து வைக்க விரும்பினார். இதற்காகக் கடந்த ஆண்டு நவம்பரிலிருந்து ஏற்பாடுகள் செய்யத் தொடங்கினார்.


ஃபேஷன் டெக்னாலஜி படித்துள்ள உத்ராவிற்கு ஆயூரைச் சேர்ந்த, தற்போது மஸ்கட்டில் ஹோட்டல் மேலாளராக இருக்கும் அஜின் குமார் நிச்சயக்கப்பட்டார்.கொச்சி அமிர்தா மருத்துவக் கல்லூரியில் மயக்க வியல் டெக்னீஷியனாகப் பணிபுரியும் உத்ரஜாவுக்கு, பத்தணம் திட்டாவைச் சேர்ந்த மயக்கவியல் டெக்னீஷியன் ஆகாஷ் நிச்சயக் கப்பட்டார்.ஆன்லைன் ஊடகத்தில் செய்தியாளராகப் பணிபுரியும் உதாராவிற்குக் கோழிக்கோடைச் சேர்ந்த பத்திரிகையாளர் மகேஷ் நிச்சயக்கப்பட்டார்.திருவனந்தபுரத்தில் தனியார் மருத்துவமனையில் மயக்கவியல் டெக்னீஷிசியனாகப் பணிபுரியும் உத்தமாவிற்கு மஸ்கட்டில் அக்கவுன்டன்டாகப் பணிபுரியும் வட்டியூர்காவு பகுதியைச் சேர்ந்த வினீத் நிச்சயக்கப்பட்டார்.



குருவாயூரில் வைத்து நடந்த திருமணம்

கடந்த ஏப்ரல் மாதம் ரமாதேவியின் நான்கு மகள்களின் திருமணமும் ஒரே நாளில் குருவாயூரில் நடக்க இருந்தது. கொரோனா ஊரடங்குக் காரணமாக திருமணம் தள்ளிவைக்கப்பட்டது. இந்த நிலையில் கடந்த 25-ம் தேதி தன் 'பஞ்சரத்னங்களில்' மூன்று பேருக்கு குருவாயூர் கோயிலில் திருமணத்தை முடித்துள்ளார் ரமாதேவி. உத்ரஜாவிற்கு நிச்சயக்கப்பட்ட வரன் குவைத்தில் பணிசெய்துவருகிறார். கொரோனா காலம் என்பதால் போக்குவரத்துக் கட்டுப்பாடுகளால் அவரால் ஊர்திரும்ப இயலவில்லை. எனவே, அவர்களது திருமணம் மட்டும் தள்ளிவைக்கப்பட்டுள்ளது. விரைவில் அவர்களது திருமணம் நடக்கும் என்கிறார் ரமாதேவி.