Saturday 17 October 2020

KEERTHI SURESH ,SOUTH INDIAN ACTRESS BORN 1992 OCTOBER 17

 

KEERTHI SURESH ,SOUTH INDIAN ACTRESS 

BORN 1992 OCTOBER 17



.                                                                                     

கீர்த்தி சுரேஷ் ஓர் இந்தியத் திரை ப்பட நடிகை ஆவார். தமிழ், மலையாளம், தெலுங்கு உள்ளிட்ட தென்னிந்திய மொழித் திரைப்படங்களில் நடித்து வருகிறார்.[1] 2000களில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான இவர், 2013 ஆவது ஆண்டில் கீதாஞ்சலி மலையாளத் திரைப்படத்தின் மூலமாக கதாநாயகியாக அறிமுகமானார். இவர் தமிழில் விக்ரம் பிரபு நடித்த இது என்ன மாயம் திரைப்படத்தில் நடித்துள்ளார்.

வாழ்க்கைக் குறிப்பு

கீர்த்தி சுரேஷ் 1992, அக்டோபர் 17 ஆம் நாளில் சுரேஷ்குமார், மேனகா ஆகியோருக்கு சென்னையில் பிறந்தார். கேரள மாநிலம், திருவனந்தபுரத்தில் உள்ள கேந்திரிய வித்யாலயா பள்ளியில் பள்ளிப்படிப்பை முடித்தார்.கீர்த்தி சுரேஷ் குழந்தை நட்சத்திரமாக 2000-ஆண்டில் திரைப்படங்களில் நடித்து திரையுலகில் அறிமுகமான இவர், 2013-ஆம் ஆண்டு கீதாஞ்சலி என்னும் மலையாள திரைப்படத்தில் நாயகியாக நடித்து திரையுலகில் நடிகையாக மீண்டும் நடிக்க தொடங்கியுள்ளார்.




தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவர் கீர்த்திசுரேஷ். விஜய், விஷால், சிவகார்த்திகேயன் என தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்துவிட்டார். ஆடல், பாடல், கவர்ச்சி என்று மட்டும் இல்லாமல் நடிப்புக்கு முக்கியத்துவம் தரும் கதைகளை தேர்வு செய்து நடித்து வருகிறார் கீர்த்தி சுரேஷ்.


இவர் நடித்த மகாநடிகை திரைப்படம் ரசிகர்கள் மட்டும் இல்லாது சினிமா துறையினரையும் ஆச்சரியப்பட வைத்தது. அந்த அளவிற்கு தத்ரூபமாக நடித்திருந்தார் கீர்த்தி சுரேஷ். கடைசியாக தளபதி விஜய் நடிப்பில் வெளியான சர்க்கார் படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தார்.

திரையுலகில் அறிமுகமாகி மலையாள திரைப்படங்களில் தொடர்ந்து நடித்து வந்துள்ள இவர், 2015-ஆம் ஆண்டு ஏ.எல்.விஜய் இயக்கத்தில் விக்ரம் பிரபு நாயகனாக நடித்த இது என்ன மாயம் திரைப்படத்தில் நாயகியாக நடித்து தமிழ் திரையுலகில் நடிக்க தொடங்கியுள்ளார். இத்திரைப்படத்தில் பெரிதும் அறியப்படாத இவர், 2016-ஆம் ஆண்டு சிவகார்த்திகேயன் - பொன்ராம் கூட்டணியில் வெளிவந்த ரஜினி முருகன் திரைப்படத்தில் நாயகியாக நடித்து டீமில் திரையுலகில் பிரபலமாகியுள்ளார்.





இத்திரைப்படத்திற்கு பின்னர் இவர் தொடரி, ரெமோ, பைரவா ஆகிய திரைப்படங்களில் தமிழ் முன்னணி நடிகர்களுடன் நடித்து இவர் தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக சித்தரிக்கப்பட்டார்.


அங்கீகாரம்


சிறந்த அறிமுக நடிகைக்கான ஏசியாநெட் விருது - கீதாஞ்சலி (2014), சிறந்த அறிமுக நடிகைக்கான தென்னிந்திய சர்வதேச திரைப்பட விருது - கீதாஞ்சலி (2014), சிறந்த அறிமுக நடிகைக்கான நானா திரைப்பட விருது - கீதாஞ்சலி (2014), சிறந்த துணை நடிகைக்கான வயலார் திரைப்பட விருது - கீதாஞ்சலி, ரிங் மாஸ்டர்.


இவர் 2019-ஆம் ஆண்டு இவர் நடிப்பில் வெளிவந்த மகாநதி திரைப்படத்திற்காக சிறந்த நடிகைக்கான தேசிய விருது பெற்றுள்ளார்





தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவர் கீர்த்திசுரேஷ். விஜய், விஷால், சிவகார்த்திகேயன் என தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்துவிட்டார். ஆடல், பாடல், கவர்ச்சி என்று மட்டும் இல்லாமல் நடிப்புக்கு முக்கியத்துவம் தரும் கதைகளை தேர்வு செய்து நடித்து வருகிறார் கீர்த்தி சுரேஷ்.


இவர் நடித்த மகாநடிகை திரைப்படம் ரசிகர்கள் மட்டும் இல்லாது சினிமா துறையினரையும் ஆச்சரியப்பட வைத்தது. அந்த அளவிற்கு தத்ரூபமாக நடித்திருந்தார் கீர்த்தி சுரேஷ். கடைசியாக தளபதி விஜய் நடிப்பில் வெளியான சர்க்கார் படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தார்.தற்போது நீண்ட ஓய்வில் இருக்கும் கீர்த்தி சுரேஷ் சமீபத்தில் ஹிந்தி படம் ஒன்றில் ஒப்பந்தமாகியுள்ளார். மறைந்த பிரபல நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் தயாரிக்கும் படத்தில் நாயகியாக நடிக்கவுள்ளார் கீர்த்தி சுரேஷ்.





இந்நிலையில் போட்டோஷூட் ஒன்றிற்கு போஸ் கொடுத்த நடிகை கீர்த்தி சுரேஷின் சில புகைப்படங்கள் செம வைரலாகிவருகிறது. அதில் மிகவும் அழகாக காட்சியளிக்கிறார் கீர்த்தி சுரேஷ். இதோ அந்த புகைப்படங்கள்.


நடிகையர் திலகம் படம் மூலம் தேசிய விருது பெற்று இந்திய சினிமாவையே திரும்பி பார்க்கவைத்த நடிகை கீர்த்தி சுரேஷ் உடல் எடை குறைப்பதற்காகச் சில காலம் சினிமாவில் இருந்து ஒதுங்கி இருந்தார்.இவர் தற்போது தமிழில் பென்குயின்,ரஜினியின் அண்ணாத்த மற்றும் தெலுங்கில் மிஸ் இந்தியா ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.மேலும் இவர் அடுத்ததாகத் தெலுங்கு சூப்பர்ஸ்டார் மகேஷ் பாபு படத்தில் நாயகியாக நடிக்கவுள்ளதாகச் சமீபத்தில் தகவல்கள் வெளியான நிலையில் கீர்த்தி சுரேஷிற்கு விரைவில் திருமணம் நடக்கவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. கீர்த்தி சுரேஷின் அப்பாவான சுரேஷ்குமார் அவருக்குத் திருமணம் செய்து வைக்க முடிவு எடுத்திருப்பதாகவும், பாஜகவைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவரின் மகனுடன் கீர்த்திக்கு திருமணம் நடக்கவுள்ளதாகக் கூறப்படுகிறது. மேலும் கீர்த்தி சுரேஷின் அப்பா சுரேஷ்குமார் பாஜகவில் இருப்பது குறிப்பிடத்தக்கது.

 




தமிழ் சினிமாவில் எப்பொழுதும் கேரளாவிலிருந்து வரும் நடிகைகளுக்கு மிகப் பெரிய வரவேற்பு இருக்கும், அன்று முதல் இன்று வரை தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளாக இருப்பவர்கள் முக்கால்வாசிப்பேர் கேரளாவில் இருந்து வந்தவர்கள்தான்.அந்தவகையில் கேரளாவில் இருந்து வந்தவர்களில் கீர்த்தி சுரேஷும் ஒருவர், சினிமா வாரிசுகளான இவர் தமிழில் இது என்ன மாயம் என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார், அதன்பிறகு சிவகார்த்திகேயன் நடித்த ரஜினி முருகன் என்ற திரைப்படத்தின் மூலம் நடித்து பிரபலம் அடைந்தார்.


இந்த திரைப்படத்தில் என் செல்லக்குட்டி உன்ன காண என்ற பாடல் ஒட்டுமொத்த ரசிகர்களின் கவனத்தையும் ஈர்த்தது, அதன்பிறகு டாப் கீர் போட்டு தூக்குவது போல் ஒரேடியாக முன்னணி நடிகர்களுடன் தொடர்ந்து நடித்து வந்தார், பழம்பெரும் நடிகை சாவித்திரியின் கதாபாத்திரத்தில் நடித்து சினிமாவில் தனக்கான முத்திரையைப் பதித்தார்.தற்பொழுது கீர்த்தி சுரேஷ் பாலிவுட் வரை சென்றுள்ளார் இந்த நிலையில் இவரின் சிறுவயது புகைப்படம் ஒன்று இணையதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.


No comments:

Post a Comment