Saturday 17 October 2020

PRANITHA SUBHASH ACTRESS BORN 1992 OCTOBER 17

 

PRANITHA SUBHASH ACTRESS 

BORN 1992 OCTOBER 17



பிரணிதா சுபாஷ் (ஆங்கிலம்:Pranitha Subhash) இவர் ஒரு இந்திய திரைப்பட நடிகையும், வடிவழகியும் ஆவார். மேலும் இவர் அக்டோபர் 17, 1992 ஆம் ஆண்டு பிறந்தார். மற்றும் தென்னிந்த மொழிகளான தமிழ், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழித் திரைப்படங்களில் நடித்துள்ளார்.


2010 ஆம் ஆண்டில் தெலுங்குத் திரைப்படமான போக்கிரி திரைப்படத்தின் கன்னடப் பதிப்பில் முதன் முதலாக நடித்தார்.

சமூக சேவைகளில் மிகவும் நாட்டம் கொண்ட நடிகை பிரணிதா ஆசிரியையாக செயல்பட்டதோடு, ஒரு அரசு பள்ளியை தத்தெடுத்துள்ளார்

பெங்களூரு : கன்னடத்தில் முன்னணி நடிகையாக இருந்து வருபவர் நடிகை பிரணிதா சுபாஷ். இவர் அரசு பள்ளி ஒன்றை தத்தெடுத்துள்ளார்.


கன்னடத்தில் முன்னணி நடிகையாக இருந்து வருபவர் நடிகை பிரணிதா சுபாஷ். இவர் 2010ல் ‘போக்கிரி’ என்ற கன்னட படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார். அதையடுத்து தமிழில் ‘எனக்கு வாய்த்த அடிமைகள்’, ‘ஜெமினி கணேசனும் சுருளிராஜனும்’, ‘உதயன்’, ‘சகுனி’, ‘மாஸ் என்கிற மாசிலாமணி’ ஆகிய தமிழ் படங்களில் நடித்துள்ளார்.நடிகை பிரணிதா 1992ல் அக்டோபர் 17ம் தேதி பிறந்தார். இவருக்கு இன்று பிறந்தநாள். இவர் எப்போதும் ரசிகர்களுடன் இணைய தொடர்பில் இருந்து வருகிறார். அதற்காக சமீபத்தில் புதிய ஆப் ஒன்றை அறிமுகம் செய்துள்ளார்.


நடிகை பிரணிதா தமிழ், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளில் பல படங்களில் நடித்து வருகிறார்.பிரணிதா வசிக்கு ஊரில் உள்ள ஒரு அரசு பள்ளியில் 7ம் வகுப்பு ஆங்கில ஆசிரியையாகவும் செயல்பட்டு வருகின்றார்.சென்னை:சில வருடங்களுக்கு முன் தமன்னாவுக்கும், கோலிவுட் ஹீரோவுக்கும் இடையே ஏற்பட்ட மனக்கசப்பு காரணமாக கோபம் அடைந்தார். தமிழ் படங்களை ஏற்காமல் தெலுங்கு படங்களில் மட்டும் நடித்து வந்தார். ஒரு வருடத்துக்கு மேல் இந்த கோபம் நீடித்தது. பின்னர் அஜீத் ஜோடியாக பிவீரம்' படத்தில் நடித்து கோபத்தை கைவிட்டு சகஜநிலைக்கு திரும்பினார்.





அதுபோல் ஒரு நிலைமை பிசகுனி' படத்தில் நடித்த பிரணிதாவுக்கு ஏற்பட்டது. தெலுங்கில் திரிவிக்ரம் இயக்கும் படமொன்றில் நடிக்க ஒப்புக்கொண்டிருந்தார். படப்பிடிப்பில் அவர் பொருத்தமான காஸ்டியூம் அணியவில்லை, எதிர்பார்த்த நடிப்பையும் வெளிப்படுத்தவில்லை என்று இயக்குனர் கோபம் அடைந்தார். படப்பிடிப்பு தளத்திலேயே பிரணிதாவுக்கு டோஸ்விட்டார். கோபம் அடைந்த பிரணிதா அங்கிருந்து வெளியேறினார். அவருக்கு பதிலாக நித்யா மேனனை இயக்குனர் ஒப்பந்தம் செய்தார்.இயக்குனர் மீது இருந்த கோபத்தால் இனி தெலுங்கு படங்களில் நடிப்பதில்லை என்று முடிவு செய்திருந்தாராம்.


அவரது கோபம் மாதக்கணக்கில்கூட நீடிக்கவில்லை. தமிழில் விக்ரம் பிரபு நடித்த பிஅரிமா நம்பி' தற்போது தெலுங்கில் ரீமேக் ஆகிறது. இதில் விஷ்ணு மன்ச்சு ஹீரோ. இப்படத்தில் ஹீரோயினாக நடிக்க பிரணிதாவுக்கு அழைப்பு வந்தது. உடனே அதை அவர் ஏற்றுக்கொண்டார். சினிமாவில் இதெல்லாம் சகஜமப்பா என்று இன்டஸ்ரிக்காரர்கள் கமென்ட் அடிக்கின்றனர்.


தமிழில் சகுனி, மாஸ் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள பிரணிதா, ஊரடங்கால் உணவின்றி தவிப்பவர்களுக்கு உதவ முன்வந்துள்ளார்.


உணவின்றி தவிப்பவர்களுக்கு உதவிக்கரம் நீட்டும் பிரணிதா

பிரணிதா

கொரோனா வைரஸ் பரவலை தடுக்க நாடு முழுவதும் 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.  இந்த ஊரடங்கால் மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. பலர் தினசரி உணவுக்கு கஷ்டப்படுகின்றனர். இதற்காக பல்வேறு திரையுலகை சேர்ந்த பிரபலங்கள் தங்களால் இயன்ற உதவியை செய்து வருகின்றனர்.


பிரணிதா


அந்த வகையில் தமிழில் சகுனி, மாஸ் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள பிரணிதா தனது அறக்கட்டளை மூலம் உதவ முன்வந்துள்ளார். இதற்காக நிதி திரட்டும் முயற்சியில் இறங்கி உள்ளார். அறக்கட்டளை மூலம் 40 சதவீதம் நிதியை திரட்டிவிட்டார். மீதித்தொகையையும் திரட்டும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார். இந்த தொகையை வைத்து ஏழை எளிய மக்களுக்கு உணவும், உதவி பொருட்களும் வழங்க இருப்பதாக தெரிவித்துள்ளார். பிரணிதாவின் இந்த செயலுக்கு சமூக வலைத்தளங்களில் பாராட்டுகள் குவிந்த வண்ணம் உள்ளன.




என்ன தான் கோடி, கோடியாக சம்பாதித்தாலும் இப்படி சமூக அக்கறையுடன் இருக்கும் நட்சத்திரங்கள் சிலர் மட்டுமே இருக்கின்றனர்.சினிமாவில் பல நடிகைகள் வந்த சுவடு தெரியாமல் போய் விடுவர். அந்த வரிசையில் முதலிடத்தில் இருப்பவர் நடிகை பிரணிதா.

அழகும் அறிவும் உள்ள அழகான பெண்ணாக அறிமுகமான பிரணிதா, அதன்பிறகு கதை தேர்வில் சொதப்பி தமிழ் சினிமாவிலிருந்து வெளியேறினார். இவர் நடிப்பில் வெளிவந்த சகுனி, மாசு என்கிற மாசிலாமணி, எனக்கு வாய்த்த அடிமைகள் போன்ற படங்கள் மக்களிடையே பெரிய வரவேற்பைப் பெறாததால் தமிழிலிருந்து கன்னடத்திற்கு இடம் பெயர்ந்தார்.




அங்கேயும் போதிய வரவேற்பு கிடைக்காத நிலையில் தற்போது பட வாய்ப்புகளுக்காக அவ்வப்போது ஹாட் போட்டோசூட்களை நடத்தி இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு வருகிறார்.அந்த வகையில் தற்போது, அரைகுறை ஆடையில் நீச்சல் குளத்தில் மிதந்த படி போஸ் கொடுத்து ” கோடை காலத்தில் என் வழியில் மிதந்து கொண்டிருக்கிறேன் ” என்று கேப்ஷன் கொடுத்துள்ளார்.


No comments:

Post a Comment