Friday 16 October 2020

VEERAPANDIYA KATTABOMMAN CONSOLIDATED HISTORY

 

VEERAPANDIYA KATTABOMMAN CONSOLIDATED HISTORY 



KATTABOMMAN DEATH 1799 OCTOBER 17





நாள் : 17.10.1799
இடம் : ஆங்கிலேயர்களின் கயத்தாறு இராணுவ முகாம்
“விசாரணையின் போது கூடியிருந்த பாளையக்காரர் அனைவர் முன்னிலையிலும் நின்ற கட்டபொம்மனது நடத்தை, வீரமும் பெருமிதமும் நிறைந்ததாயிருந்தது. அவன் தன்னைப் பிடித்துக் கொடுக்கத் தீவிரமாக முனைந்த எட்டயபுரம் பாளையக்காரன் மீதும், சிவகிரி பாளையக்காரன் மீதும் இகழ்ச்சியும் வெறுப்பும் நிறைந்த பார்வையை வீசிக் கொண்டிருந்தான்.

இருபுறமும் நின்றிருந்த பாளையக்காரர்களைக் கடுமை நிறைந்த வெறுப்புடன் பார்த்த வண்ணம் தூக்குமேடையை நோக்கிச் சென்ற அவனுடைய நடையில் உறுதியும் துணிவும் தெரிந்தது.”

“மரத்தின் கீழே நின்ற தருணத்தில் வாய்பேச முடியாத தன்னுடைய தம்பியைப் பற்றி மட்டும் அவன் சிறிது வருத்தப்பட்டானென்று எனக்குத் தெரிவிக்கப்பட்டது. தூக்குமேடை ஏறியபோது, ‘இப்படிச் சாவதைவிட கோட்டையைப் பாதுகாப்பதற்காகப் போரிட்டுச் செத்திருக்கலாம்’ என்று அவன் மனம் நொந்து கூறியிருக்கிறான்”.

– கட்டபொம்மன் திரைப்படத்தின் இறுதிக்காட்சியினை நினைவுபடுத்தும் இந்தச் சம்பவம் கற்பனையல்ல. கட்டபொம்மனைத் தூக்கிலேற்றிய ஆங்கிலேயத் தளபதி மேஜர் பானர்மென் தனது இராணுவ நிர்வாகக் கடிதமொன்றில் இப்படித்தான் குறிப்பிட்டிருக்கின்றான்.

அடுத்துவந்த சில ஆண்டுகளில் தென்னிந்திய அளவில் ஆங்கிலேயரை எதிர்த்து பாளையக்காரர்கள் நடத்திய வீரஞ்செறிந்த கிளர்ச்சிக்கு கட்டபொம்மனது தியாகம் ஒரு முன்னறிவிப்பாய் இருந்தது. தமிழகத்தில் தமது நேரடி ஆட்சியை நிறுவுவதற்குத் தடையாக இருந்த பாளையங்கள் எனும் நிர்வாக அமைப்பை ஒழிப்பதற்கு கட்டபொம்மனின் வீழ்ச்சியைப் பயன்படுத்திக் கொண்டார்கள் வெள்ளையர்கள்.

_______________________________________________

மதுரையை நாயக்க மன்னர்கள் கைப்பற்றிய 16ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் தென்தமிழகத்தில் 72 பாளையங்கள் தோற்றுவிக்கப்பட்டன. உள்நாட்டுக் குழப்பங்களாலும், போர்களாலும் சீர்குலைந்த நாட்டுப்புறங்களில் இந்தப் பாளையங்கள் ஓரளவிற்கு அமைதியைக் கொண்டு வந்தன. பாளையக்காரர்கள் ஒரு சிற்றரசருக்குரிய உரிமைகளை அனுபவித்து வந்தனர். வரி தண்டும் உரிமை, காவல் உரிமை, நீதி வழங்கும் உரிமை முதலானவற்றை வாழையடி வாழையாகப் பெற்று வந்தனர். வசூலிக்கும் வரியில் மூன்றில் ஒரு பங்கு மன்னனுக்கும், ஒரு பங்கு படைவீரர்களைப் பராமரிப்பதற்கும், ஒரு பங்கு தனது செலவிற்கும் வைத்துக் கொள்ள அனுமதிக்கப்பட்டனர். தேவைப்படும் சமயங்களில் தனது படை வீரர்களை மன்னனது ஆணைக்கிணங்க அனுப்பவேண்டும். பாளையக்காரர்களை ஐரோப்பாவிலும், சீனாவிலும் இருந்த யுத்தப்பிரபுக்களோடும் ஒப்பிடலாம்.



18ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் நாயக்க மன்னர்கள் வீழ்ச்சியடைய பாளையக்காரர்கள் தங்களது சுயேச்சைத்தன்மையை வளர்த்துக் கொண்டார்கள். இதற்கும் சற்று முன்பாகவே முகலாயப் பேரரசு தமிழகத்தைப் போரில் வென்று ஆற்காட்டு நவாப்பை தமிழகத்தின் கவர்னராக நியமித்தது. 1707இல் ஒளரங்கசீப்பின் மரணத்திற்குப் பின்னர் முகலாயப் பேரரசும் வீழ்ச்சியடைய நவாப்பு சுயேச்சையாக ஆள ஆரம்பித்தான். பாளையக்காரர்கள் அவனது கட்டுப்பாட்டின் கீழ் வந்தார்கள். பேரரசன் ஒளரங்கசீப்புக்கு முன்னதாகவே விவசாயிகள் மீதான முகலாயப் பேரரசின் வரிவிதிப்பு கட்டுக்கடங்காத நிலைக்குச் சென்றது.

இலட்சக்கணக்கில் பெருகிவிட்ட படைகளுக்கு வேலையும், கூலியும் கொடுக்க இயலாத நிலையில் வீரர்கள் நாட்டுப்புறங்களைக் கொள்ளையடித்து காலம் தள்ளினர். மறுபுறம் மையஅரசு கேட்கும் அதிக வரிக்காக நிலக்கிழார்கள் விவசாயிகளைக் கசக்கிப் பிழிந்தனர். விவசாயத்தை மையமாகக் கொண்ட நாட்டுப்புற மக்களுக்கு விளைச்சலில் மிஞ்சியது ஓரளவே. இத்துடன் பஞ்சங்களும் படாதபாடுபடுத்தின. இந்தப் பின்னணியில்தான் முகலாயர்களால் நியமிக்கப்பட்ட ஆற்காட்டு நவாப் பாளையக்காரர்களிடம் அதிகவரி வசூலிக்க ஆரம்பித்தான். எதிர்த்தவர்களை அடக்க கம்பெனியின் படையை வாடகை கொடுத்துப் பயன்படுத்த ஆரம்பித்தான்.

வணிகம் செய்ய வந்த கம்பெனியோ தனது பொருட்களுக்குரிய சந்தை குறுகிய அளவில் இருந்ததால் லாபம் பெறுவதற்கும் தனது வணிக ஆதிக்கத்தை நிறுவிக் கொள்வதற்கும் உள்நாட்டு மன்னர்களின் ஆட்சி விவகாரங்களில் நுழைய ஆரம்பித்தது. தனக்காகக் கம்பெனி செய்த போர்களுக்காகச் செலுத்தவேண்டிய பணத்தை அடைக்கமுடியாத நவாப், இறுதியில் வரிவசூலிக்கும் உரிமையை நேரடியாகக் கம்பெனிக்கே கொடுக்க ஆரம்பித்தான். 1792ஆம் ஆண்டு ஒப்பந்தப்படி தென்தமிழகத்தின் ஆட்சியுரிமை நேரடியாகக் கம்பெனிக்குச் சென்றது. இது ஒப்பந்தமல்ல. கம்பெனியின் நிபந்தனையை நவாப் ஏற்றுக் கொண்டான் என்பதே உண்மை.

ஏற்கெனவே பாளையக்காரர்கள் வசூலித்து வந்த வரியும் அதிகமாகத்தான் இருந்தது. எனினும் மக்களுடன் தொடர்பு கொள்ள வேண்டிய நிர்ப்பந்தம் இருந்ததால் அவர்கள் சற்று நெகிழ்வுத் தன்மையோடு நடந்து கொள்ள வேண்டியிருந்தது. ஆனால், கம்பெனி ஆட்சியில் விளைச்சல் இருந்தாலும், இல்லாவிட்டாலும் ஆயுத பலங்கொண்டு கறாராக வரி வசூலிக்கப்பட்டது. நவாப் மற்றும் கம்பெனியின் இந்தக்கொடுமையினை எதிர்த்து 1750களில் பூலித்தேவன் தலைமையில் சில பாளையங்கள் போரிட்டன.

1772இல் சிவகங்கைச் சீமையின் முத்து வடுகநாதர், கம்பெனிப் படைகளை எதிர்த்துப் போரிட்டு மரணமடைந்தார். அதன் பின் விருப்பாட்சிக்குத் தப்பிச் செல்லும் வேலுநாச்சியாரும், மருது சகோதரர்களும் ஹைதர் அலியின் பாதுகாப்பில் 7 ஆண்டுகள் இருந்துவிட்டு அவரது உதவியுடன் சிவகங்கையை மீண்டும் கைப்பற்றி நவாப்பின் படையை வெளியேற்றுகிறார்கள். கட்டபொம்மனது தாத்தாவும், தந்தையும் கூட கட்டபொம்மனைப் போலப் போராடவில்லை என்றாலும் கப்பம் கட்ட இயலாமல் தலைமறைவாயிருந்திருக்கிறார்கள், கப்பம் கட்டும் வரை சில பணயக்கைதிகளையும் அளித்திருக்கிறார்கள். இப்படிப் பாளையக்காரர்கள் மட்டுமல்ல, மக்களும் கம்பெனியின் கொடூர ஆட்சி குறித்து வெறுப்படைய ஆரம்பித்தார்கள். கம்பெனி முன்னேறிய ராணுவத்தைக் வைத்திருந்த போதிலும் அவர்கள் வெல்லப்படமுடியாதவர்கள் அல்ல என்பதை ஹைதர் அலியும், திப்பு சுல்தானும் தென்னிந்திய மக்களுக்கு நிரூபித்துக் கொண்டிருந்த நேரம்.

_______________________________________________

இந்தச் சூழ்நிலையில்தான் 1791 ஆம் ஆண்டு வீரபாண்டிய கட்டபொம்மன் தனது முப்பதாவது வயதில் பாஞ்சாலங்குறிச்சியின் அரியணை ஏறுகிறார். இதே காலத்தில்தான் கம்பெனியின் நேரடி ஆட்சி திருநெல்வேலிச் சீமையிலும் ஏற்படுகிறது. வரிவசூலிப்பதற்காக கலெக்டர்கள் எனப்படும் ஆங்கிலேய நிர்வாகிகள் நியமிக்கப்படுகின்றனர். இன்றைக்கும் இருக்கும் மாவட்டக் கலெக்டர்கள் மற்றும் அதிகார வர்க்கத்தின் தோற்றுவாய் இதுதான். அன்று கம்பெனியின் நிர்வாகிகளிடையே நடந்த கடிதப் பரிமாற்றங்களைப் பார்க்கும் போது வரி வசூலிப்பதற்குப் பாளையக்காரர்களைத் தடைக் கற்களாகப் பார்த்ததும், அவர்களை ஒழிக்கவேண்டும் என்ற அணுகுமுறையும் தெரிகிறது. அதற்குத் தோதாக அடங்க மறுக்கும் பாளையக்காரர்களையும், அனுசரணையாகப் போகும் அடிவருடிகளையும் பிரித்தாளும் சூழ்ச்சியை மேற்கொள்கின்றனர். அடிவருடிகளுக்கு எலும்புத் துண்டுகளும், கிளர்ச்சியாளர்களுக்குத் தண்டனையும் அதிகவரியும் விதிக்கப்படுகின்றது.

இப்படித்தான் கிளர்ச்சியாளரான கட்டபொம்மனது பாஞ்சாலங்குறிச்சிப் பாளையத்தின் சில பகுதிகள் துரோகி எட்டப்பனுக்குத் தரப்படுகின்றன. அதேபோன்று வானம்பார்த்த புஞ்சைப் பூமியான பாஞ்சாலங்குறிச்சிப் பாளையத்துக்கு ஓரளவு வருவாய் அளித்து வந்த திருவைகுண்டம், ஆழ்வார்திருநகர் போன்ற வளமான பகுதிகளைக் கம்பெனி தனது நேரடி ஆட்சியின் கீழ்க் கொண்டு வருகிறது. கட்டபொம்மன் முறையாகக் கப்பம் கட்டாததால் இந்த நடவடிக்கைகளை எடுத்ததாகக் கூறியது கம்பெனி. சினம் கொண்ட கட்டபொம்மன் இந்தப் பகுதிகளுக்குத் தனது படைகளை அனுப்பி வரி வசூல் செய்கிறார்.

தனது ஆட்சி நிறுவப்பட்ட இடங்களிலெல்லாம் வரிவசூல் என்ற பெயரில் வெளிப்படையான கொள்ளையை நடத்தி வந்த கம்பெனி, கட்டபொம்மனது இந்த நடவடிக்கையை ‘கொள்ளை’ என்று குற்றம் சாட்டியது. இந்தக் காலகட்டத்தில் இராமநாதபுரம் திருநெல்வேலிப் பகுதிகளுக்கு ஜாக்சன் எனும் ரவுடி கலெக்டராக நியமிக்கப்படுகிறான். வணிகம் செய்து லாபமீட்டுவதைக் காட்டிலும் மக்களை நேரடியாகக் கொள்ளையடிப்பதையே தனது வணிகக் கொள்கையாக வைத்திருந்த கிழக்கிந்தியக் கம்பெனி, அதற்குப் பொருத்தமான நபர்களையே அதிகாரிகளாக இந்தியாவுக்கு அனுப்பி வைத்தது. வரிவசூல் இலக்கை வசூல் செய்து தர அதிகாரிகளை ஊக்கப்படுத்தும் பொருட்டு, அவர்கள் சொந்த முறையில் கொள்ளையடித்துச் சொத்து சேர்த்துக் கொள்ளவும் அனுமதித்தது.

தன்னுடைய அடாவடித்தனங்களுக்குப் பணிய மறுத்த கட்டபொம்மன் மீது உடனே படையெடுக்க வேண்டுமென்று ஜாக்சன் மேலிடத்திற்கு கடிதம் எழுதுகின்றான். திப்புவை ஒழிக்க தன் சக்திகள் அனைத்தையும் திரட்டிக் கொண்டிருந்த கம்பெனி நிர்வாகம், ஜாக்சனின் கோரிக்கையை வேறு வழியின்றி மறுத்தது. கட்டபொம்மனிடம் பேசித் தீர்க்குமாறு அறிவுறுத்தியது. உடனே, ஜாக்சன் அநாகரீகமான மொழியில் கட்டபொம்மனுக்கு ஒரு கடிதம் எழுதுகிறான். அதில் வரிபாக்கி நிறைய சேர்ந்து விட்டதென்றும், கட்டபொம்மனது நடவடிக்கைகள் கம்பெனிக்கு மிகுந்த கோபத்தை ஏற்படுத்தியுள்ளதெனவும், அழிவைத் தேடிக்கொள்ள வேண்டாமென்றால் தன்னை இரண்டு நாட்களில் இராமநாதபுரத்தில் சந்திக்க வேண்டுமெனவும் குறிப்பிடுகின்றான்.

இச்சம்பவம் நடைபெற்ற 1798ஆம் ஆண்டு தென்மாவட்டங்கள் மழையின்றிப் பஞ்சத்தால் தவித்த காலம். வடமாவட்டங்களில் இருந்து மக்கள் உணவுத் தானியங்களைக் கொண்டு வருவதற்குக்கூட மாட்டு வண்டிகள் இல்லை. அத்தனையும் கம்பெனியின் மைசூர் படையெடுப்பிற்காகக் கொண்டு செல்லப்பட்டு விட்டன. சோற்றுக்கே வழியில்லாமல் தென்மாவட்ட மக்கள் மடிந்து கொண்டிருந்த சூழ்நிலையில்தான் கட்டபொம்மனது வரிபாக்கியை ஜாக்சன் ஈவிரக்கமின்றி வசூலிக்க முற்படுகிறான்.

இந்தச் சூழ்நிலை பாளையக்காரர்கள் மத்தியில் கம்பெனி எதிர்ப்புக் கிளர்ச்சிக்கு வித்திடுகிறது. எனினும் கிளர்ச்சிப் பாளையங்களின் ஒருங்கிணைவு உறுதியடையாதலால், தனியொரு பாளையமாய் வெள்ளையர்களை எதிர்ப்பதில் உள்ள சிக்கலை உணர்ந்த கட்டபொம்மன், ஜாக்சனை தன் படை பரிவாரங்களுடன் சந்திக்க முடிவு செய்கிறார். நாள் குறித்த ஜாக்சனோ கட்டபொம்மனை தன் சுற்றுப்பிரயாணத்தில் ஊர் ஊராகச் அலைக்கழித்து, 23 நாட்கள் கழித்து இராமநாதபுரத்தில் சந்திக்கிறான்.

பேசவந்த கட்டபொம்மன் மற்றும் அவரது மந்திரி தானாதிபதி சிவசுப்ரமணியபிள்ளை இருவரையும் நிற்கவைத்து மூன்று மணிநேரம் விசாரணை செய்கிறான். இறுதியில் கணக்கு பார்த்ததில் வரிபாக்கி அதிகமில்லை என்று தெரியவருகிறது. இருப்பினும் கட்டபொம்மனைக் கைது செய்ய ஜாக்சன் முற்படுகையில் அவர் தன் வீரர்களுடன் ஆங்கிலேய வீரர்களைத் தாக்கிவிட்டுத் தப்பிக்கிறார். பாஞ்சாலங்குறிச்சி திரும்பும் வழியில் பழிவாங்கும் நடவடிக்கையாக கம்பெனியின் ஊர்களைச் சூறையாடுகிறது கட்டபொம்மனின் படை. தானாதிபதிப்பிள்ளை மட்டும் வெள்ளையர்கள் கையில் சிக்குகிறார். அவரைச் சித்ரவதை செய்து திருச்சி சிறையில் அடைக்கிறார்கள்.

தன்னை அவமானப்படுத்திய ஜாக்சனுக்கு வீரத்துடன் பாடம் கற்பித்த கட்டபொம்மனை அடக்குவதற்கு அப்போதும் கம்பெனி தயங்கியது. காரணம், மைசூர்ப் போர் முடியவில்லை. எனவே, கட்டபொம்மனை சென்னை வந்து விளக்கமளிக்குமாறு கோரியது. அவரது நல்லெண்ணத்தைப் பெறும் வகையில் தானாதிபதியை சிறையில் இருந்து விடுவித்ததோடு, அடாவடி ஜாக்சனைப் பதவியிலிருந்தும் நீக்கியது. இதே ஜாக்சன் பின்னாளில் கம்பெனியாலேயே பொறுக்கமுடியாத அளவிற்கு ஊழல் செய்ததனால் வெளியேற்றப்படுகிறான். கட்டபொம்மனும் சென்னை சென்று சுயமரியாதையுடன் விளக்கமளித்துத் திரும்புகிறார்.

_______________________________________________

கம்பெனியின் ஒரு கலெக்டரையே மாற்றவைத்த கட்டபொம்மனது வீரம் ஏனைய பாளையக்காரர்களிடம் புகழாய்ப் பரவுகிறது. இந்நிலையில் புதிய கலெக்டராய் லூஷிங்டன் பதவியேற்கிறான். அதே சமயம் கம்பெனியுடனான கட்டபொம்மனது முரண்பாடு அரசியல் ரீதியில் கூர்மையடைகிறது.

1799ஆம் ஆண்டின் துவக்கத்தில்தான் ஆங்கிலேயர்களை எதிர்த்த பாளையக்காரர்கள் தென்னிந்திய அளவில் கூட்டணிகளை ஏற்படுத்த முயல்கின்றனர். இதில் திண்டுக்கல் சீமைக்கு கோபால நாயக்கரும், இராமநாதபுரம் சிவகங்கைச் சீமைக்கு மருது சகோதரர்களும், நெல்லைச் சீமைக்கு கட்டபொம்மனும் தலைமையேற்கிறார்கள். இவர்களுக்கிடையே நெருங்கிய தொடர்பு ஏற்படுகின்றது. சிவகங்கையுடன் தொடர்பு ஏற்படுத்திக்கொள்ளக்கூடாது என்ற லூஷிங்டனது எச்சரிக்கையை மீறி மருது சகோதரர்களின் தூதர்களை பழவனேரி எனும் இடத்தில் சந்தித்து அவர்கள் அனுப்பிய 500 வீரர்களுடன் கட்டபொம்மன் பாஞ்சாலங்குறிச்சி திரும்புகிறார்.

நெல்லைச்சீமையில் இருக்கும் கோலார்பட்டி, காடல்குடி, குளத்தூர், நாகலாபுரம், ஏழாயிரம் பண்ணை முதலிய பாளையக்காரர்கள் கட்டபொம்மனுடன் அணிசேருகின்றனர். கட்டபொம்மனுக்கு ஆதரவளிப்பதாக அவரது தூதர்களிடம் கள்ளர் நாட்டைச்சேர்ந்த பாளையக்காரர்களும் உறுதியளிக்கின்றனர். மேற்குத் தொடர்ச்சி மலையடிவாரத்திலிருந்த சிவகிரிப் பாளையம் போர்த்தந்திர ரீதியில் முக்கியமான பகுதி. இதன் பாளையக்காரன், கம்பெனியை ஆதரித்த போதிலும் இவனது மகன் கட்டபொம்மனை ஆதரித்தார். எனவே இவரையே பாளையக்காரராக மாற்ற முயற்சிக்கிறார் கட்டபொம்மன். மேலும் கம்பெனியின் இராணுவ நடமாட்டத்தை ஒற்றறிய தானாதிபதிப் பிள்ளையின் சகோதரரையும் சென்னைக்கு அனுப்பி வைக்கிறார். கட்டபொம்மனது இத்தகைய அரசியல் நடவடிக்கைகளால் ஆத்திரமடைகின்றனர் கம்பெனிக்காரர்கள். இனியும் சகிக்கமுடியாது என்ற நிலைக்கு லூஷிங்டன் வருகிறான். பிரிட்டிஷ் ஆதிக்கத்துக்கு மாபெரும் சவாலாக விளங்கி வந்த திப்பு சுல்தான் மே 1799இல் வீரமரணம் எய்தவே, கம்பெனியின் பீரங்கிகள் கட்டபொம்மனை நோக்கித் திரும்புகின்றன.

_______________________________________________

உடனே தன்னை வந்து சந்திக்குமாறு கட்டபொம்மனுக்கு கட்டளையிடுகிறான் லூஷிங்டன். முறையான அழைப்பு (கவுல்) இன்றி சந்திக்க இயலாதென கட்டபொம்மன் மறுக்கிறார். போர்த் தயாரிப்புக்குப் போதிய அவகாசம் பெறும் நோக்கத்துடன் அப்போது நடந்த கடிதப்போக்குவரத்தில் கட்டபொம்மன் நிதானமான போக்கையே கடைப்பிடிக்கிறார். ஆனால், கம்பெனியோ அவரது நடவடிக்கைகளை மட்டும் வைத்து மதிப்பிடுகிறது.

இறுதியில் செப் 1,1799 அன்று பானர்மென் தலைமையில் ஆங்கிலேயப்படை பாஞ்சாலங்குறிச்சியை முற்றுகையிடுகிறது. இவ்வளவு சீக்கிரம் படையெடுப்பு இருக்கும் என்று கட்டபொம்மன் எதிர்பார்க்கவில்லை. பெருமளவு வீரர்களும், ஊமைத்துரையும், தானாதிபதியும் திருச்செந்தூரில் நடக்கும் ஆவணிமாதத் திருவிழாவுக்குச் சென்றிருந்த நேரமது. இராமலிங்க முதலியார் என்பவனைத் தூது அனுப்பி கட்டபொம்மனைச் சரணடையச் சொல்கிறான் பானர்மேன். சரணடைய மறுத்து கோட்டையிலிருந்த 1500 வீரர்களுடன் போரிடுகிறார் கட்டபொம்மன். தூது செல்லும் சாக்கில் கோட்டையின் பலவீனங்களை இராமலிங்க முதலியார் வேவு பார்த்துச் சொல்லியிருந்தும் பானர்மென்னால் கோட்டைக்குள் நுழைய முடியவில்லை.

முற்றுகையைப் பற்றிக் கேள்விப்பட்ட ஊமைத்துரையும், தானாதிபதிப்பிள்ளையும் சில வீரர்களும் வெள்ளையர்களின் அணிவகுப்பை உடைத்துக்கொண்டு கோட்டைக்குள் நுழைகிறார்கள். போர் தீவிரமடைகிறது. சுந்தரலிங்கம், வெள்ளையத்தேவன் முதலான வீரர்கள் வீரமரணம் அடைகிறார்கள். சில வெள்ளைத் தளபதிகளும் கொல்லப்படுகிறார்கள். இன்னும் பல இடங்களிலிருந்து வரும் கம்பெனியின் படைகளுக்காக பானர்மென் காத்திருக்கிறான். இனிமேலும் கோட்டையில் இருப்பது உசிதமல்ல என்று கட்டபொம்மனும் ஏனையோரும் முற்றுகையை உடைத்துக் கொண்டு தப்பிக்கின்றனர்.

தப்பிச் சென்றவர்களை கோலார்பட்டியில் எட்டப்பனின் படை எதிர் கொள்கிறது. அந்தச் சண்டையில் நாகலாபுரத்தின் சௌந்தரபாண்டியனும், தானாதிபதிப்பிள்ளையும் பிடிபடுகின்றனர். இருவரையும் பானர்மென் தூக்கிலிடுகிறான். தானாபதியின் தலையைத் துண்டித்து பாஞ்சாலங் குறிச்சியில் நட்டு வைக்கிறான். தனது மன்னனை விவேகத்துடன் வழிநடத்தி, அவனது துன்பங்களில் பங்கெடுத்த தானாதிபதி முதல் தியாகியானார். மருதிருவருடன் இணைந்து போரைத் தொடர்ந்து நடத்தும் நோக்கத்தில் கட்டபொம்மனும் அவரது இளவல்களும் சிவகங்கை நோக்கி விரைகின்றனர்.
இதனை எதிர்பார்த்து சிவகங்கை எல்லையில் காளாப்பூர் காட்டில் பதுங்கியிருந்த துரோகி தொண்டைமானின் படை அனைவரையும் கைது செய்கிறது. வெள்ளையனின் கையால் சாவதைவிட தற்கொலையே மேல் என்று கத்தியை எடுத்த கட்டபொம்மனின் கையை முறுக்கி கட்டி இழுத்துச் செல்கிறது தொண்டைமானின் படை.

கயத்தாறு கட்டபொம்மன் நினைவுத்தூண் - இடிக்கப்பட்ட பாஞ்சாலங்குறிச்சி கோட்டை
கயத்தாறு கட்டபொம்மன் நினைவுத் தூண் - இடிக்கப்பட்ட பாஞ்சாலக்குறிச்சி கோட்டை
கயத்தாறில் தன் மீது சுமத்தப்பட்ட ‘குற்றங்களை’ கட்டபொம்மன் மறுக்கவில்லை. உயிர்ப்பிச்சை கேட்கவுமில்லை. ஒரு தேசபக்தனுக்கேயுரிய கம்பீரத்தோடு “ஆம். கம்பெனிக்கு எதிராக பாளையங்களைத் திரட்டினேன், போர் நடத்தினேன்” என்று சுற்றி நின்ற பாளையக்காரர்கள் வெட்கித் தலை குனியும் வண்ணம் முழங்கியவாறு தூக்குமேடையேறினார் கட்டபொம்மன்.

கட்டபொம்மனின் இளவல்களான ஊமைத்துரை, சிவத்தையா ஆகியோருடன் பல உறவினர்களும் வீரர்களும் பாளையங்கோட்டைச் சிறையில் அடைக்கப்பட்டனர். கட்டபொம்மன் அணியிலிருந்த நாகலாபுரம், ஏழாயிரம் பண்ணைப் பாளையக்காரர்கள் சென்னைச் சிறையில் அடைக்கப்பட்டு அங்கேயே இறந்தனர். குளத்தூர் பாளையக்காரர் வயதானவர் என்பதாலும், கோலார்பட்டிப் பாளையக்காரர் கண் பார்வையற்ற இளைஞர் என்பதாலும் விடுவிக்கப்பட்டனர். கிளர்ச்சியாளர்களது பாளையங்கள் அனைத்தும் கலைக்கப்பட்டன. பாஞ்சாலங்குறிச்சிக் கோட்டையை இடித்து உழுதுவிட்டு ஊரின் பெயரையே கூட மாற்றினார்கள் வெள்ளையர்கள்.

தனது அடிவருடிப் பாளையங்களையும் வெள்ளையர்கள் விட்டு வைக்கவில்லை. அவர்களது கோட்டைகளும் இடிக்கப்பட்டன. பாளையக்காரர்கள் அனைவரும் வெறும் ஜமீன்தார்கள் ஆக்கப்பட்டனர். “படை வைத்துக் கொள்ளக்கூடாது, அலங்காரத்துக்காகக் கூட இடுப்பில் வாள் இருக்கக்கூடாது, குடிமக்கள் கூட ஆயுதம் வைத்திருக்கக் கூடாது, மீறினால் மரணதண்டனை” என்று அறிவித்தான் பானர்மேன்.

இரண்டே ஆண்டுகளில் மரணத்தை வென்றது பாஞ்சாலங்குறிச்சி. பாளையங்கோட்டை சிறையைத் தகர்த்துவிட்டு ஊமைத்துரையும், சிவத்தையாவும் கட்டபொம்மனது கோட்டையை மீண்டும் எழுப்பினார்கள். மருது சகோதரர்களுடன் சேர்ந்து மீண்டும் போர் தொடங்கினார்கள்.

கட்டபொம்மனது நினைவும் பாஞ்சாலங்குறிச்சியின் வீரவரலாறும் மக்கள் மனங்களில் இன்றளவும் நிலைத்து நிற்கின்றன. கட்டபொம்மன் வரலாறு 16க்கும் மேற்பட்ட கதைப் பாடல்களாய் பாடப்பட்டு வருகிறது. இன்றைக்கும் சித்திரைமாதம் அங்கே நடக்கும் சக்கதேவி திருவிழாவின் இரண்டாம் நாள் இரவில் விடிய விடிய நடக்கிறது கட்டபொம்மன் நாடகம்.

இதோ, வெள்ளி முளைக்கும் நேரத்தில் தொடங்குகிறது வெள்ளையத் தேவன் மனைவி வெள்ளையம்மாளின் ஒப்பாரி. அது ஆங்கிலேயர் காலக் கொடுமைகளை எண்ணி அழும் மக்களின் இயலாமை தோற்றுவிக்கும் சோகம். காலனியாதிக்க அடக்கு முறைக்கு எதிராகப் போராடி வீழ்ந்த வீரர்களின் காப்பியச் சோகம். இன்னும் சூரியன் உதிக்கவில்லை. அந்தக் கண்ணீரும் நிற்கவில்லை.



VEERA PANDIYA KATTABOMMAN -CRITICS


தமிழ்வாணன் எழுதிய ‘(வீரபாண்டிய) கட்டபொம்மன் ஒரு கொள்ளைக்காரன்!’ என்ற அந்த நூலில் உள்ள பல செய்திகள் நமக்கு ஆச்சியமாக இருக்கிறது. தெலுங்கு மொழி பேசும் ராஜகம்பளம் நாயக்கர் இனத்தில் பிறந்தவர் கெட்டிபொம்முலு வம்சத்தில் வந்த கட்டபொம்முலு-வை, பந்தலு என்ற தெலுங்கன் எடுத்த திரைப்படத்தில் வைக்கப்பட்ட போலி பட்டபெயர்தாம் வீரபாண்டியன் கட்டபொம்மன்.

தெலுங்கு கட்டபொம்முலு என்கிற வீரபாண்டிய கட்டபொம்மன் ஒரு கொள்ளைக்காரன் மட்டுமல்லாது ஒரு கோழை என்கிறார் தமிழ் வாணன்!
தெலுங்கு கட்டபொம்முலு என்கிற வீரபாண்டிய கட்டபொம்மன் ஒரு கொள்ளைக்காரன் மட்டுமல்லாது ஒரு கோழை என்கிறார் தமிழ் வாணன்!

கட்டபொம்முலு-வின் முன்னோர்கள் ஆந்திர மாநிலம், பெல்லாரி-யிலிருந்து விசயநகர ஆட்சிக்காலத்தில் தமிழகத்திற்கு குடிபெயர்ந்து வந்தவர்கள். பந்தலு என்ற தெலுங்கன் எடுத்த திரைப்படத்தில் காட்டப்பட்ட கதைக்கும் உண்மையான கட்டபொம்முலு-வைப் பற்றி நாம் எண்ணிக் கொண்டிருப்பதற்கும் பல முரண்பாடுகள் இருப்பதை பார்க்க இயலும்.

முதலில் என்னை வியப்பில் ஆழ்த்தியது கட்டபொம்மனின் தாய் மொழி தெலுங்கு என்பதாகும். பலபேர் இன்று வரை கட்டபொம்மனை பச்சைத் தமிழன் என்றே போற்றிப் பரப்புரை செய்து வருகிறார்கள். ஒரு தெலுங்கனைத் தமிழன் என்று காட்டிக் கொள்வதில் தமிழர்களுக்கு என்ன பெருமையோ அல்லது தமிழ்நாட்டில் வாழும் தெலுங்கர்களுக்குத் தான் என்ன சிறுமையோ தெரியவில்லை. ஆக மொத்தத்தில் கட்டபொம்மன் தெலுங்கன் என்பதில் முதலில் தெளிவு கொள்வோம். இனி கட்டபொம்மனின் உண்மையான பெயரான “கட்டபொம்முலு” என அழைப்போம்.

கட்டபொம்முலு- வின் பரம்பரையில் முதலாமவன் கட்ட பிரமையா ஆவான். இவன் மகன் கட்டபிரமையா என்ற முதலாம் ஜெகவீரப் பாண்டிய கட்டபொம்முலு என்பவனே முதல் பாஞ்சாலங்குறிச்சி பாளையக்காரனாவான் (1709-1736). இவரே கட்டபொம்முலு கொள்ளுப் பாட்டனும் ஆவார்.

கட்டபொம்முலு – வுக்கும் வெள்ளையன் கலெக்டர் ஜாக்சனுக்கும் இடையே ஏற்பட்ட ஒரு நிகழ்ச்சியை தமிழ்வாணன் அவர்கள் தன்னுடைய ‘கட்டபொம்மன் கொள்ளைக்காரன்!’ நூலில் குறிப்பிட்டுள்ளதை மிகச் சுருக்கமாக இங்கே குறிப்பிட விரும்புகிறேன்.

திருநெல்வேலி கலெக்டர் ஜாக்சன், வரிகட்டச் சொல்லி கட்டபொம்முலு – வுக்கும் கடிதம் மேல் கடிதம் அனுப்புகிறார். கட்டபொம்முலு – வோ தவணை மேல் தவணை சொல்லித் தட்டிக் கழித்து வருகிறான். இதனால் ஆத்திரம் கொண்ட ஜாக்சன், தன்னை 05.09.1798 அன்று இராமநாதபுரத்திற்கு நேரில் வந்து பார்த்து விளக்கம் தரவேண்டும் இல்லையேல் பாஞ்சாலங்குறிச்சிப் பாளையம் பறிமுதல் செய்யப்படும் என்று கடிதம் அனுப்பினார்.


ஜாக்சனின் கடிதத்தைக் கண்டதும் கட்டபொம்முலு குறிப்பிட்ட நாளில் ஜாக்சனைப் பார்க்க இராமநாதபுரத்திற்குத் தன் பறிபாரங்களுடன் செல்கிறார். கட்டபொம்முலு தன்னைப் பார்க்க வருகிறார் என்று அறிந்ததும் ஜாக்சன் குற்றாலத்திற்குக் கிளம்பி விடுகிறார். கட்டபொம்முலு ஜாக்சனை சந்திப்பதற்காக, ஜாக்சனை பின் தொடர்ந்து குற்றாலத்திற்கு செல்கிறார். அங்கும் கட்டபொம்முலு பார்க்க ஜாக்சன் மறுத்து விடுகிறார். இப்படியே ஒவ்வொரு ஊராக அதாவது சொக்கம்பட்டி, சேத்தூர், சிவகிரி, சிறிவில்லிபுத்தூர், பேரையூர், பவாலில், பள்ளிமடை, கமுதி என்று சுற்றி இறுதியில் இராமநாதபுரத்தை வந்தடைந்தார் ஜாக்சன். கட்டபொம்முலு ஜாக்சன் சென்ற ஊருக்கெல்லாம் அவரை பின் தொடர்ந்து சென்றார். இதில் எந்த ஊரிலும் கட்டபொம்முலு-வை சந்திக்க விரும்பாமல் அலைகழித்து வந்தார்.

இறுதியில் கட்டபொம்முலு இராமநாதபுரத்தில் ஜாக்சனை சந்தித்து விளக்கம் கொடுத்தான். வரிகட்டாமையைப் பற்றி ஜாக்சன் கேட்க, தான் கட்ட வேண்டிய பணத்தையும் கையோடு கொண்டு வந்துள்ளதாகக் கூறினான். அடுத்து அரசு கிராமங்களில் குழப்பம் ஏற்படுத்தியது தொடர்பாக கேட்க, அப்படியேதும் நான் செய்யவில்லை என்று கட்டபொம்முலு மறுத்துக் கூறுகிறார். இறுதியாக, “நமக்குள் ஏற்பட்ட இந்த உரையாடலைச் சென்னைத் தலைமைக்கு அனுப்புகிறேன் அதற்கான பதில் வரும் வரை நீங்கள் இங்கு இருக்க வேண்டும்” என்று ஜாக்சன் கூறியதும் கட்டபொம்முலு அங்கிருக்க அஞ்சி, தப்பிவிடுகிறார். அவர் தப்பும் போது ஏற்படுகிற கலவரத்தில் ஒரு வெள்ளைக்கார கொலை செய்யப்படுகிறான். கட்டபொம்முலு அமைச்சனும் ஆலோசகனுமான தானாபதிப் பிள்ளையும் கைது செய்யப்படுகிறார்.

இந்த நிகழ்வு கட்டபொம்முலு வீரனாகக் காட்டுகிறதா? அல்லது வெள்ளையனுக்கு அடிபணிந்தவனாகக் காட்டுகிறதா? மேற்கண்ட நிகழ்வு பற்றிய பதிவு இன்றும் ஆவணக் காப்பகத்தில் இருக்கிறது என்கிறார், தமிழ் வாணன். அப்படி என்றால் கட்டபொம்முலு வெள்ளையனுக்கு அஞ்சினான் என்பதில் எந்த ஐயமும் இல்லை.

அந்நூலில் குறிப்பிட்டுள்ள மற்றுமொரு நிகழ்வைக் குறிப்பிட வேண்டும். அதாவது கட்டபொம்முலு-வை தூக்கில் போடுவதற்கு கூறப்பட்ட காரணங்களும் நிகழ்வுகளும் ஆகும்.

கட்டபொம்முலு, தன்னுடைய ஆட்சிக்குட்பட்ட பாளையத்தை விடுத்து மற்றைய பாளையங்களில் அவ்வப் போது கொள்ளையடித்து வந்துள்ளான் என்று கூறிப்பிட்டுள்ளார். அதில் ஊற்று மலைப் பாளையத்தார், தங்கள் பாளையத்தில் கட்டபொம்முலு கொள்ளையடித்ததை வெள்ளையனிடம் புகார் தெரிவித்துள்ளார். அடுத்து சிவகிரி பாளையத்தில் தந்தைக்கும் மகனுக்கும் ஆட்சியைப் பிடிப்பதில் ஏற்பட்ட போட்டியில் கட்டபொம்முலு தலையிட்டு குழப்பம் ஏற்படுத்தியது, மற்றுமொன்று தனது தம்பி மற்றும் தனது அமைச்சன் தானாபதிப் பிள்ளையின் மகன் திருமணத்திற்காக வெள்ளையனின் நெற் களஞ்சியத்தைத் தன் ஆட்களை விட்டுக் கொள்ளையடித்தது என கொள்ளை விரிகிறது. இது போன்ற புகார்களை அடுத்து கட்டபொம்முலு-வை மேஜர் பானர்மென் தன்னை சந்தித்து விளக்கம் தரக் கூறுகிறார். கட்டபொம்முலு ஜாக்சனை சந்திக்க முதலில் ஐந்து நாட்களைக் கடத்துகிறான். தன்னை சந்திக்காமல் காலம் கடத்தியதால் பானர்மென் பாஞ்சாலங்குறிச்சியின் மீது படையெடுக்கிறார். சண்டை நடக்கும் போதே கட்டபொம்மன் தனது பாளையத்தில் இருந்து தப்பிவிடுகிறார். (இந்த இடத்தில் தமிழ்வாணன் ஒன்றைக் குறிப்பிடுகிறார் அதாவது கட்டபொம்முலு தப்பித்ததே திருச்சியில் உள்ள வெள்ளைகார மேல் அதிகாரியிடம் சென்று மன்னிப்புக் கேட்டு தப்பிவிடலாம் என்பதற்காகவே தப்பினான் என்கிறார்).
கட்டபொம்முலு-வை பிடிப்பதற்காக பானர்மேன் எட்டயபுர பாளையத்தில் உள்ள, நன்கு வழிகளைத் தெரிந்த சில வீரர்களை கேட்டுப் பெற்றுக் கொண்டு கட்டபொம்மனைத் தேடலானான். அதன் பிறகு கட்டபொம்முலு புதுக்கோட்டைப் பாளையத்தில் உள்ள ஒரு காட்டில் மறைந்திருப்பதை அறிந்ததும் பானர்மேன் கட்டபொம்முலு-வைப் பிடித்துத் தரும்படி கேட்கப் புதுக்கோட்டைப் பாளையத் தளபதி அம்பலக்காரன் தலைமையிலான குழு கட்டபொம்முலு-வைப் பிடித்து பானர்மேனிடம் ஒப்படைத்தார்கள். மேல் குறிப்பிட்டுள்ள காரணங்களை சுட்டிக் காட்டியே தூக்கில் கட்டபொம்முலு-வை போடுகிறார்கள்.

நமது வருத்தங்கள் எவையென்றால் :

– ஒரு தெலுங்கன் கட்டபொம்முலு- என்பவனை மறைத்து தமிழன் என்று பரப்புரை செய்வது…

– வெள்ளைக்காரனுக்கு அவ்வப்போது பணிந்து சென்ற ஒருவனை முழுக்க முழுக்க வெள்ளையனை எதிர்த்தான் என்று பரப்புரை செய்வது.

– எட்டப்பன் என்ற ஒருவர் பற்றிய செய்தியை, தமிழ்வாணன் அவர்கள் புத்தகத்தில் எங்குமே குறிப்பிடவேயில்லை. ஆனால் திரைபடத்தில், காட்டிக் கொடுத்தான் என்று எட்டப்பன் என்று ஒரு தமிழன் மீது பலி போடப்பட்டுள்ளது.

– ஆக, கட்டபொம்முலு என்று எடுக்கப்பட்ட திரைப்படம் வரலாற்றுப் பிழையாகவே இருக்கிறது. அதில் “வானம் பொழிகிறது பூமி விளைகிறது உனக்கேன் தரவேண்டும் கிஸ்தி (வரி)” போன்ற நீண்ட வசனங்களை எப்படி அவன் தமிழில் பேசியிருப்பான். திரைப்படத்திற்காக இவையெல்லாம் புகுத்தப்பட்டிருக்கிறது என்பதை இனியாவது நாம் புரிந்து கொள்ள வேண்டும். தமிழ் ஊடகங்களும் தெலுங்கு கட்டபொம்முலு-வைப் பற்றி உண்மை செய்திகளை மட்டும் இனி வாசிக்க வேண்டும். தமிழர் வரலாற்றை மறைக்கலாகாது!
Image may contain: 1 person, text





vVEERAPANDIYA KATTA BOMMAN ,

FREEDOM FIGHTER BORN 1760 JANUARY 3







வீரபாண்டிய கட்டபொம்மன், தமிழகத்தில் ஆங்கிலேயர் ஆட்சியை எதிர்த்துப் போரிட்ட 18ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த பாளையக்கார மன்னர் ஆவார். இவர் தெலுங்கு மொழி பேசும் ராஜகம்பளம் நாயக்கர் இனத்தில் பிறந்தவர்.இவருடைய முன்னோர்கள் ஆந்திராவிலிருந்து விசயநகர ஆட்சிக்காலத்தில் தமிழகத்திற்கு குடிபெயர்ந்து வந்தவர்கள் ஆவர்.
கட்டபொம்மன் பெயர் காரணம்[மூலத்தைத் தொகு]
அழகிய வீரபாண்டியபுரம்[1] எனும் ஊரில் (இன்றைய ஒட்டபிடாரம்) ஆட்சிபுரிந்து வந்த ஜெகவீரபாண்டியனின் (நாயக்க வம்சம்) அவையில் அமைச்சராக பொம்மு என்கிற கெட்டி பொம்மு (தெலுங்கு)[1] இடம்பெற்றிருந்தார். இவரது பூர்வீகம் ஆந்திர மாநிலம், பெல்லாரி ஆகும். வீரமிகுந்தவர் என்ற பொருளை தெலுங்கில் உணர்த்தும் கெட்டி பொம்மு எனும் சொல் நாளடைவில் கட்டபொம்மு என்று மாறி பின் தமிழில் கட்டபொம்மன் என்ற சொல்லாயிற்று[1]. ஜெகவீரபாண்டியனின் மறைவிற்குப்பின் அரசகட்டிலில் ஏறிய கட்டபொம்மு பின் ஆதி கட்டபொம்மன் என்று மக்களால் அழைக்கப்பட்டார். இவரே பொம்மு மரபினரின் முதல் கட்டபொம்மன்[1].

இந்த பொம்மு மரபில் வந்தவர்களே (திக்குவிசய கட்டபொம்மன்) ஜெகவீர கட்டபொம்மன், ஆறுமுகத்தம்மாள் தம்பதியர். இவர்களின் புதல்வரே வீரபாண்டியன் எனும் இயற்பெயர் கொண்ட வீரபாண்டிய கட்டபொம்மனாவார்[1]. இவர் நாயக்க வம்ச அரசாட்சியில் தொடர்ந்து வருவதால் பொம்மு நாயக்கர் [1] என்று மக்களால் அழைக்கப்பட்டார்.

வாழ்க்கை[மூலத்தைத் தொகு]

ஜனவரி 3 1760 அன்று ஆறுமுகத்தம்மாள் - திக்குவிசய கட்டபொம்மு தம்பதியருக்கு, பாஞ்சாலங்குறிச்சியில் பிறந்தவர் வீரபாண்டிய கட்டபொம்மன். பெப்ரவரி 2, 1790 அன்று 47 வது[சான்று தேவை] பாளையக்காரராகப் பொறுப்பு ஏற்றுக்கொண்டார்.அப்போது அவருக்கு வயது முப்பது ஆகும்.வீரபாண்டிய கட்ட பொன்னனுக்கு குமாரசாமி என்ற ஊமைத்துரை, துரைச்சிங்கம் என்ற இரு சகோதரர்களும், ஈசுவர வடிவு, துரைக்கண்ணு என்ற இரு சகோதரிகளும் இருந்தனர். இவரது துணைவியார் வீரசக்கம்மாள். இவர்களுக்குப் பிள்ளைப் பேறு இல்லை. இவர் 9 ஆண்டுகள், 8 மாதம், 14 நாட்கள் அரசுப் பொறுப்பிலிருந்தார்.

போர்[மூலத்தைத் தொகு]

கும்பினியார் தங்களுடைய ஆட்சியை நிலைநாட்டிக் கொள்வதற்காக பாளையக்காரர்களிடம் வரி வசூலிப்பது என முடிவு செய்தனர். நெல்லை மாவட்டத்தில் வரிவசூலிக்கும் பொறுப்பை ஏற்றிருந்த ஆங்கிலேய தளபதி மாக்ஸ்வெல்லால் பாஞ்சாலங்குறிச்சி பாளையத்தாரர் வீரபாண்டிய கட்டபொம்மனிடம் வரிவசூலிக்க முடியவில்லை. இதனடிப்பையில் கி.பி. 1797 இல் முதன் முதலாக ஆங்கிலேய தளபதி ஆலன் துரை பாஞ்சாலங்குறிச்சிக் கோட்டைக்கு பெரும்படையுடன் போரிட வந்தார். 1797 - 1798 இல் நடந்த முதல் போரில் கோட்டையை தகர்க்க முடியாமல் வீரபாண்டிய கட்டபொம்மனிடம் ஆலன் துரை தோற்று ஓடினார். அதன் பின்னர் நெல்லை மாவட்டக் கலெக்டர் ஜாக்சன் துரை வீரபாண்டிய கட்ட பொம்மனைச் சந்திக்க அழைத்தார். கட்டபொம்மனை அவமானப்படுத்த நினைத்து வேண்டுமென்றே பல இடங்களுக்கு வரச்சொல்லி சந்திக்காமல் அலைக்கழித்தார். இறுதியில் செப்டம்பர் 10, 1798 இல் இராமநாதபுரத்தில் சந்தித்தார். அப்போது தந்திரத்தால் வீரபாண்டிய கட்டபொம்மனைக் கைது செய்ய முயன்றார். அதை முறியடித்து வீரபாண்டியக் கட்டபொம்மன் மீண்டும் பாஞ்சாலங்குறிச்சியை வந்தடைந்தார். செப்டம்பர் 5, 1799 இல் பானர்மென் என்ற ஆங்கிலேயத் தளபதியால் பாஞ்சாலங்குறிச்சி கோட்டை முற்றுகையிடப்பட்டது. அங்கு கடும் போர் நடைபெற்றது. போரில் பல ஆங்கிலேயர்கள் உயிரிழந்தனர். இருப்பினும் கோட்டை வீழ்ந்துவிடும் என்ற நிலையில் வீரபாண்டிய கட்டபொம்மன் கோட்டையை விட்டு வெளியேறினார். செப்டம்பர் 9 1799 இல் ஆங்கிலேயர்களால் பாஞ்சாலங்குறிச்சி கோட்டை கைப்பற்றப்பட்டது. அக்டோபர் 1, 1799 இல் புதுக்கோட்டை மன்னர் விஜயரகுநாத தொண்டமானால் வீரபாண்டிய கட்டபொம்மன் கைது செய்யப்பட்டு கும்பினியாரிடம் (கிழக்கிந்திய கம்பெனி) ஒப்படைக்கப்பட்டார். அக்டோபர் 16 1799 இல் ஆங்கிலேயத் தளபதி பேனர்மேன் ஆணைப்படி கயத்தாற்றில் தூக்கிலிடப்பட்டார்.


வீரபாண்டிய கட்டபொம்மனை கயத்தாற்றில் தூக்கிலிடப்பட்ட நினைவிடத்தின் முழு தோற்றம்
















உள்ளே அமைந்துள்ள நினைவுத்தூண் உள்ள படிமம்





மதுரையில் நிறுவப்பட்டுள்ள கட்டபொம்மன் சிலை
மீண்டும் எழுந்த பாஞ்சாலங்குறிச்சிக் கோட்டை[மூலத்தைத் தொகு]
கட்டபொம்மன் தூக்கிலிடப்பட்டதோடு பாஞ்சாலக் குறிச்சியின் வரலாறு முடிந்து விடவில்லை. ஆங்கிலேயர்களால் பாளையங்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டிருந்த கட்டபொம்மனின் சகோதரர் ஊமைத்துரை 02.02.1801 இல் பாஞ்சாலக் குறிச்சி வீரர்களால் மீட்கப்பட்டார். பாஞ்சாலக் குறிச்சிக் கோட்டைக்குப் புத்துயிர் கிடைத்தது. ஊமைத்துரையைக் கைது செய்ய வந்த மேஜர் மெக்காலே கோட்டையினுள் செல்ல முடியாமல் திரும்பினார். அவர் தலைமையில் ஒரு பெரும்படை 30.03.1801 இல் கோட்டையை முற்றுகையிட ஆரம்பித்து 24.05.1801 இல் அதனைக் கைப்பற்றியது. தப்பி, காளையார் கோவில், விருப்பாட்சி, திண்டுக்கல் என்று ஓடிய ஊமைத்துரையும் அவர் தம்பி துரைசிங்கமும் கைது செய்யப்பட்டு பாஞ்சாலக் குறிச்சி பீரங்கி மேட்டில் தூக்கிலிடப்பட்டனர். பாஞ்சாலங்குறிச்சி என்கிற பெயரையே தமிழகத்தின் வரைபடத்திலிருந்து நீக்கினர் வெள்ளையர். கோட்டை முற்றிலும் தகர்க்கப்பட்டுத் தரைமட்டமாக்கப்பட்டது.

1974-ஆம் ஆண்டு பாஞ்சாலங்குறிச்சியில் பழங்காலத்துக் கோட்டையின் வடிவினை ஒத்த ஒரு கோட்டையினை அன்றைய தமிழக முதல்வர் திரு. மு.கருணாநிதி எழுப்புவித்தார். அது இன்றளவும் வீரபாண்டியனின் புகழ்பாடி நிற்கிறது. கோட்டை, கொத்தளம், கொலுமண்டபம், ஜக்கம்மா தேவி ஆலயம் அனைத்தும் மீண்டும் தோன்றின. நினைவுக் கோட்டையை உள்ளடக்கிய 6 ஏக்கர் பரப்பினைச் சுற்றி மதில் சுவர் எழுப்பப்பட்டுள்ளது. உள்ளே தொல்பொருள் ஆய்வு மையமும் உள்ளது. மண்டபத்தின் உள்ளே கட்டபொம்மனின் வீரவரலாறு ஓவியங்களாகத் தீட்டப்பட்டுள்ளது. இக்கோட்டை 1977 முதல் சுற்றுலாத் துறையின் பராமரிப்பில் இயங்கி வருகிறது.

தற்போது 35 ஏக்கர் பரப்பிற்கு மேல் உள்ள பழைய கோட்டையின் அடிப்பகுதிக் கட்டிடங்கள் தொல்பொருள் ஆய்வுத் துறையின் பராமரிப்பின் கீழ் உள்ளன. கட்டபொம்மன் பயன்படுத்திய ஆயுதங்கள், அவர் காலத்து மக்கள் பயன்படுத்திய பல்வேறு பொருட்கள், அணிகலன்கள் நாணயங்கள் போன்றவை தொல்பொருள் ஆய்வுத் துறையினரால் கண்டெடுக்கப்பட்டு சென்னையில் தமிழ்நாடு அரசு அருங்காட்சியகத்தில் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன.

தூக்கிலிடப்பட்ட கயிறு மாயம்[மூலத்தைத் தொகு]

ஆங்கிலேயத் தளபதியின் ஆணைப்படி 1799ம் ஆண்டு அக்டோபர் 16ம் நாள் கயத்தாற்றில் தூக்கிலிட பயன்படுத்தப்பட்ட தூக்குக்கயிறு மதுரை மாவட்டம், திருமங்கலம் அரசு நீதிமன்றத்தின் ஆவணக் காப்பகத்தில் (டார்க் ரூம்) பாதுகாக்கப்பட்டது. நாடு சுதந்திரம் அடைந்ததிலிருந்து, அதே கட்டிடத்தில்தான் திருமங்கலம் தாலுகா அலுவலகமும் செயல்பட்டு வருகின்கிறது. அங்கிருந்த ஆவணக் காப்பகமும் தாலுகா அலுவலகத்துடன் இணைக்கப்பட்டது. இதே காப்பகத்தில் தான் ஆங்கிலேயர் காலத்து முக்கிய சம்பவங்கள் தொடர்பான ஆவணங்களும், கட்டபொம்மனை தூக்கிலிட்ட கயிறும் இருந்தது. இந்த காப்பகத்தை பராமரித்து வந்த அலுவலக உதவியாளர், கட்டபொம்மனின் தூக்குக் கயிறு காணாமல்போன விசயத்தை முதலில் சொல்ல, அதிகாரிகள் யாரும் கண்டு கொள்ளவில்லை. அந்த உதவியாளரும் பணியிலிருந்து ஓய்வுபெற்று மறைந்துவிட்ட நிலையில், கயிறு உண்மையிலேயே காணாமற் போய்விட்டது என 2013ம் ஆண்டு அக்டோபர் மாதம் உறுதி செய்துள்ளனர்[2].



வீரபாண்டிய கட்டபொம்மன் அஞ்சற்தலை
மணிமண்டபம்[மூலத்தைத் தொகு]
கட்டபொம்மன், மற்றும் ஊமத்துரை பற்றிய நினைவு புகைப்படக் கண்காட்சியுடன் நினைவு மண்டபம் ஒன்று கட்டப்பட்டு வருகிறது. [3].

பாஞ்சாலங்குறிச்சிக்கான பயண தூரம்[மூலத்தைத் தொகு]
தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள தூத்துக்குடி, எட்டயபுரம் போன்ற ஊர்களிலிருந்து பாஞ்சாலங்குறிச்சிக்கு பேருந்து வசதி உள்ளது. மேலும் சில இடங்களிலிருந்து பாஞ்சாலங்குறிச்சிக்கான தூரம்

ஒட்டப்பிடாரம் - 3 கி.மீ
எட்டயபுரம் - 23 கி.மீ
தூத்துக்குடி - 25 கி.மீ
கயத்தாறு - 40 கி.மீ
கோவில்பட்டி - 38 கி.மீ
திருச்செந்தூர் - 70 கி.மீ






THE REAL TRIAL ON KATTABOMMAN





புதுக்கோட்டையார் பிடித்துக் கொடுத்து



24.9.1799 இல் புதுக்கோடை அரசர் விஜயரகுநாத தொண்டைமான் எழுதி ய கடிதம் 29.9.1799 இல் கலெக்டர் லூஷ’ங்டனுக்கு கிடைத்தது. கும்பெனியாரை வாழ்த்தித் துவங்கும் அந்த கடிதம் தரும் விபரம் இதோ. மலைகளிலும் குன்றுகளிலும் எல்லாப் பக்கமும் என்னுடைய படையினரை பகைவர்கள் மறைந்திருக்கும் இடத்தை கண்டுபிடிப்பதற்காக நிறுத்தி வைத்திருந்தேன். இறைவனின் கிருபையாலும், கும்பெனியாரின் செழிப்பினாலும், மற்றும் என்னுடைய நல் அதிர்ஷ்டத்தாலும், சிவகங்கை தாலூகாவிலுள்ள கலியாப்பூர் என்ற ஊரிலுள்ள காட்டிலே, கட்டபொம்மனும் அவனது தம்பி ஊமத்துரையும் மற்றும் அவர்களது உறவினர்கள் ஆக ஏழு பேர்களுடன் இருப்பதாகக் கண்டுபிடிக்கப்பட்டு, நேற்று இரவு எனது படைகளை அனுப்பி அவர்களைச் சூழ்ந்து கொண்டு மிகுந்த எச்சரிக்கையுடனும், முயற்சியுடனும் அவர்கள் கைது செய்யப்பட்டனர். (சர்தார் திருக்களம்பூர் முத்துவைரவ அம்பலக்காரர் தலைமையில் சென்ற படை கட்டபொம்மனைப் பிடித்தது. இவரைப் புகழ்ந்து பாடிய கும்மிப்பாடலும் இருக்கிறது).

உயிரைவிடத் துணிந்த உத்தமன்

கலியாப்பூர் காட்டிலே கைது செய்யப்பட்டபோது தன்னைத் தானே கொன்று உயிரை மாய்த்துக் கொள்ள வீரபாண்டிய கட்டபொம்மன் முன் வந்தான். ஆனால் எனது படையினர் கட்டபொம்மனது கரங்களைக்கட்டி கைது செய்து கொண்டு வந்து விட்டார்கள். கட்டபொம்மனைப் பற்றி உங்களுக்கு மிகவும் நன்றாகத் தெரியும் அவரைப் பாதுகாப்பாக ஒரு நாள் வைத்துக் கொள்வது கூட மிகவும் கடினமான காரியமாகும். ன்று அந்தக் கடிதத்தில் குறிப்பிட்டதிலிருந்து கட்டபொம்மன் புதுக்கோட்டை அரசரின் ஆட்களால் பிடிக்கப்பட்டபோது உயிரை விட அங்கேயே முன் வந்த செய்தியையும், ஒரு நாள் கூட அவரைப் பாதுகாப்பாக வைத்துக் கொள்வது கடினம் என்ற கடிதவரிகளால், கட்டபொம்மனின் பேராற்றலையும் நாம் நன்கு உணர முடிகிறது. கட்டபொம்மன் கைதுசெய்யப்பட்ட போது அவர்களிடம் ஐந்து பட்டாக் கத்திகள், நான்கு பிச்சுவாக்கள், ஒரு கத்தி, ஒரு பாக்குவெட்டி ஆகியவையும் இருந்தன. கட்டபொம்மன் கைது செய்யப்பட்டதை அறிந்ததும் மேஜர் பானர்மென் உடனே கட்டபொம்மனையும் அவரைச் சேர்ந்தவர்களையும் தகுந்த பாதுகாப்புடன் மதுரையிலிருக்கும் கமாண்டிங் ஆபிசரிடம் ஒப்படைக்க கோரி 29.9.1799 இல் கயத்தாற்றிலிருந்து கொண்டு, ஜோசய்யாவெப் என்ற அரசுச் செயலாளருக்கு அவசரக் கடிதம் எழுதினார். 


அந்தக் கடிதத்திலேயே மேஜர் பானர்மென் தனது உள்ளக் கிடக்கையை வெளிப்படுத்தியுள்ளார். கும்பெனி அரசுக்கு எதிராக கலகம் விளைவிக்கும் பாளையக்காரர்களுக்கு மரண தண்டனை விதித்திட எனக்கு அளிக்கப்பட்டுள்ள அதிகாரத்தை மேற்கொள்ள கட்டபொம்மு நாயக்கரை மதுரையிலிருந்து கயத்தாற்றிற்கு கொண்டுவர எனது ராணுவத்தினரின் ஒரு பிரிவை அங்கு அனுப்பி வைக்கிறேன். உங்களின் முந்தையப் பிரகடனப்படி கட்டபொம்மு நாயக்கர் அரசுக்கு எதிராகக் கலகம் விளைவித்தவர் என்று சூழ்நிலைகளினால் குறிப்பாக சுட்டிக்காட்டப்படுவதால் அவர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டுமென்பதை எனது கடமையாகவே கருதுகிறேன் என்று குறிப்பிட்டிருப்பதன் மூலம் கட்டபொம்மனை தூக்கிலே போடுவது என்று ஏற்கனவே பானர்மென் முடிவு செய்துவிட்டது புலனாகிறது.


கயத்தாற்றில் கட்டபொம்மன்




வெள்ளைக் கும்பெனிப் படையினரால் மதுரையிலிருந்து 5.10.1799 இல் வீர பாண்டிய கட்டபொம்மன் கயத்தாற்றிற்கு கொண்டு வரப்பட்டார்.


அங்கு திருநெல்வேலி பாளையக்காரர்கள் எல்லோரையும் வரவழைத்து ஒரு கூட்டத்தைக் கூட்டத் தயாரானார் மேஜர் பானர்மென். 16.10.1799 இல் மந்தமான பனி படர்ந்த வேளையில் கருமேகங்கள் சூழ்ந்து கொண்டிருந்த வேளையில் தென்பகுதியைச் சேர்ந்த பாளையக்காரர்கள், குறிப்பாக திருநெல்வேலி சீமையைச் சேர்ந்தவர்களும் நூற்றுக் கணக்கில் கூடியிருந்தனர். அவர்களுக்கு கௌரவமான இருக்கைகள் அளிக்கப்பட்டு, மற்றைய பாளையக்காரர்கள் அங்கு வரிசை வரிசையாக உட்கார்ந்திருந்தனர். சூரியன் உதயமாகி நாழிகை ஏழானது; சிறையிலிருந்த கட்டபொம்மனை படையினர் மிகுந்த பாதுகாப்புடன் அழைத்து வந்தனர். (வீரபாண்டிய கட்டபொம்மனை சிறை வைத்திருந்த அந்தக் கட்டிடம் இன்றும் கயத்தாற்றில் உள்ளது;


 இடிந்து பாழாகி வரும் அந்த வரலாற்றுச் சிறப்பிற்குரிய கட்டிடத்தை தமிழக அரசு பாதுகாத்து நினைவுச் சின்னமாக்கிட வேண்டும்). மேஜர் பானர்மென் அங்கு விசாரணையைத் துவங்க ஆரம்பித்தார். ராபர்ட் ட்யூரிங் (Robert Turing), ஜார்ஸ் ஹ“யஸ் (George Hughes), பிர்கட்டு (Pirkett), பிரௌன் (Brown) முதலிய தளகர்த்தனர் பானர் மென்னுடைய இருபக்கமும் அமர்ந்திருந்தனர். குதிரைப்படைகளும், காலாட்படையினரும் டர்னர் (Turner) டல்லாசு தலைமையில் அணிவகுத்து நின்று கொண்டிருந்தனர். 16.10.1799 காலை 10 மணிக்கு கயத்தாற்றில் விசாரணை துவங்கியது.


இராமலிங்க முதலியார்

தொண்டை மண்டிலம் திருமணம் என்ற ஊரில் பிறந்தவர் இராமலிங்கமுதலியார்; மேஜர் பானர்மெனுக்கு (துபாஷி) மொழி பெயர்ப்பாளராகப் பணியாற்றியவர். கும்பெனியாரின் அந்தரங்க நம்பிக்கைக்குரிய இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்துஸ்தான், பிரெஞ்சு, ஆங்கிலம் முதலிய மொழிகளை அறிந்தவர். இவரே அங்கு முதலில் சாட்சியமளித்தார். 5.9.1799 இல் கட்டபொம்மனை பாஞ்சாலங்குறிச்சி கோட்டைக்குள் சென்று அவர் சந்தித்துப் பேசிய விபரங்களை அங்கு எடுத்துச் சொன்னார். கட்டபொம்மன் சரணாகதி அடைய வேண்டும் என்று வற்புறுத்தியதையும் அதற்கு கட்டபொம்மன் மறுப்புத் தெரிவித்தது பற்றியும் குறிப்பிட்டார். இவ்வாறே துபாஷ் இராமலிங்க முதலியாருடன் சென்ற ஹவுல்தார் இபுராகீம்கானும், ஹரிக்கார்சாமி அய்யரும் சாட்சியமளித்தனர்.

கெடி வேட்டூர் நாயக்கர்

5.9.1799 இல் கோட்டைக்குள் கட்டபொம்மனுடன் இருந்த கட்டபொம்மனின் மாமனார் கெடி வேட்டூர் நாயக்கரும், அங்கு சாட்சியாக விசாரிக்கப்பட்டார். சாட்சிகளின் விசாரணை முடிந்ததும் கட்டபொம்மன் மீது கீழ்க்கண்ட குற்றச்சாட்டுக்கள் படிக்கப்பட்டது.

குற்றச்சாட்டுக்கள்

1. கும்பெனிக்குரிய கிஸ்தியை செலுத்தவில்லை.
 2. கலெக்டர் லூஷிங்டன் விடுத்த உத்திரவுகளுக்கு சரியான பதில் தரவில்லை. தம்மை வந்து கண்டுபோகும்படி பலமுறை அவர் விரும்பி அழைத்தும் அந்த உத்திரவினை கட்டபொம்மன் உதாசினப்படுத்தினார். 
3. கும்பெனியாரின் பொறுப்பிலுள்ள திருவைகுண்ட தானியக் கிடங்கை கொள்ளையடித்த தானாபதி பிள்ளையை பிரிட்டிஷ் அதிகாரிகளிடம் கட்டபொம்மன் ஒப்படைக்க மறுத்தார்.
4. சிவகிரி பாளையத்தைத்தாக்கி அந்தப் பாளையத்திலுள்ள மக்களையும், விவசாயிகளையும் கட்டபொம்மன் கொடுமைப்படுத்தினார்.
 5. தனது இராணுவ நடவடிக்கைகளினால் தென் பிராந்திய பிரிட்டிஷ் ராணுவத்தைச் சேர்ந்த கும்பெனியின் படை அதிகாரிகள் பலருடைய கொலைக்கு கட்டபொம்மன் காரணமாக இருந்தார்.

பதில்கள்


கட்டபொம்மன் மீது சுமத்தப்பட்ட இந்தக் குற்றச்சாட்டுகளுக்கு பதில் சொல்லும்படி கட்டபொம்மனிடம் கேட்கப்பட்டது. அப்போது இந்தக் குற்றச்சாட்டுகளுக்கு சுருக்கமாக பதில் தந்தார் கட்டபொம்மன் அவரது பதில்கள் துபாஷிஇராமலிங்கமுதலியாரால் மொழிபெயர்க்கப்பட்டு பானர்மென்னுக்குச் சொல்லப்பட்டது.

கட்டபொம்மனின் முழக்கம்



1. நான் இது வரையில் யாருக்கும் கிஸ்தி செலுத்தியதில்லை பாஞ்சாலங்குறிச்சி பாளையக்காரர் எவருக்கும், அவர் எவ்வளவு பெரியவராக இருந்தாலும், எப்பொழுதும் அவருக்கு கிஸ்தி செலுத்த வேண்டும் என்று நினைக்கவே இயலாது. ஆகவே நான் கிஸ்தி செலுத்த மறத்தேன். என்னுடைய நண்பர்களானாலும், பகைவர்களானாலும் யாரும் என்னை அவமரியாதை குற்றஞ்சுமத்திட முடியாது. 

கும்பெனி சர்க்காரின் அதிகாரிகள் தங்களுடைய கடமைகளின் நிமித்தம் என்னை வந்து பார்த்து, என்னோடு உரையாடி இருக்கிற பொழுதெல்லாம், அவர்கள் மிகுந்த மரியாதையுடன் நடத்தப்பட்டிருக்கிறார்கள். அவர்களை அழைத்துக் கேட்டால் இதனை அவர்களே உறுதிப்படுத்துவார்கள்.

நான் பணியாளன் அல்ல



திருநெல்வேலிக்கு வந்து கலெக்டர் அலுவலகத்திலே கலெக்டரைப் பார்ப்பதற்கு காத்திருக்க வேண்டும் என்ற உத்திரவினால் நான் மிகுந்த சினங் கொண்டேன். நான் கலெக்டரின் சொந்தப் பணியாளர் அல்ல. 2. காட்டிக் கொடுப்பது கூடிய காரியமல்ல 3. திருவைகுண்டத்தில் என்னுடைய மானேஜர் தானாபதி பிள்ளை செய்தது தவறுதான் என்பதை ஒப்புக் கொள்கிறேன். கும்பெனியாரின் தானியக் கிடங்கை கொள்ளையடித்தது சரியான காரியமல்ல. ஆனால் அந்த வேளையில் மிகுந்த வறட்சி நிலவியது. மழையும் பொய்த்துப் போயிற்று. யாருக்கும் ஒருவிதமான தானியங்களும் கிடைக்கவில்லை. ஆதலால் தானியக் கிடங்கைப் பலவந்தமாகத் திறந்து மக்களை அங்கிருக்கும் தானியங்களை எடுத்துச் செல்ல அவர் அனுமதித்திருப்பார் என்று நம்புகிறேன். என்னுடைய அனுமதி இல்லாமல் இந்தக் காரியத்தை செய்ததற்காக அவர் என்னிடம் மன்னிப்புக் கேட்டார் கம்பெனியாரால் தண்டிக்கப்பட்டு விடுவோம் என்று என்னுடைய பாதுகாப்பையும் நாடினார்.

 நான் அவருக்குப் பாதுகாப்பு நல்கினேன். தன்னிடம் அடைக்கலம் புகுந்த ஒரு மனிதனை காட்டிக் கொடுப்பது கட்டபொம்மு நாயக்கரால் ஆகக்கூடிய காரியமல்ல. அதற்குப் பின்னும் கொள்ளையடிக்கப்பட்டதாகச் சொல்லப்பட்ட எழுநூறு கோட்டை தானியங்களுக்குரிய 3300 ரூபாயுடன் அபராதம் எழுநூறும் சேர்த்து நாலாயிரம் ரூபாயினைக் கொடுப்பதற்கு நான் முன் வந்தேன். ஆனால் கும்பெனியார்கள் அதனை ஏற்றுக் கொள்ளவில்லை. 4. தங்களுடைய விவசாயிகள் மற்றும் குடிமக்களால் ஏற்படும் கலவரங்களை ஒடுக்க எனது உதவியை என்னுடைய சகோதரப் பாளையக்காரரான சிவகிரிப் பாளையக்காரர் உட்பட பலர் நாடியிருக்கிறார்கள். அவர்கள் அழைத்ததின் பேரில் அவர்களுக்கு உதவிட நான் சென்றிருக்கிறேன். கும்பெனி சர்க்கார் அவர்களுக்கு ஒருபோதும் உதவியதும் இல்லை. அவர்களைப் பற்றி கவலைப் பட்டதும் இல்லை.

 5. எனதருமை பாஞ்சாலங்குறிச்சியை முதன் முதலாக தாக்க வந்தது கும்பெனியாரின் தளகர்த்தர்களாகிய நீங்களே. என் போன்ற பண்பும், சுயமரியாதையுமுள்ள ஒரு மனிதன் என்ன செய்வான் என்று நீங்கள் எதிர்பார்க்கிறீர்கள்? சரண் அடைந்து விடுவானா? அல்லது உங்களது நிபந்தனைகளை ஏற்றுக்கொள்வானா?.... பின்னதாக எனது அருமைக் கோட்டை உங்களால் முற்றுகை இடப்பட்டு உங்களது பீரங்கிகள் எனது கோட்டைச் சுவர்களுக்கு நேராக குறிபார்த்து வைக்கப்பட்டிருந்த நேரத்தில், இத்தகைய சூழ்நிலைகளை திருச்சிராப்பள்ளியில் இருக்கும் கும்பெனியாரின் உயர் அதிகாரிகளை நேரில் சென்று சந்தித்து விரிவாக விளக்க வேண்டுமென்பதற்காக எனது விசுவாசமுள்ள உதவியாளர்களுடன் ரகசியப்பாதை வழியாக தப்பிச் சென்றேன். ஆனால் நான் எனது மக்களை நிர்கதியாக கைவிட்டு விட்டு ஓடிவிட்டதாக கேவலமான வதந்தியைப் பரப்பினீர்கள். என்னை உயிருடன் பிடிப்பதற்காக என் தலைக்கு ஒரு விலையை நிர்ணயித்தீர்கள் நான் காட்டிக் கொடுக்கப்பட்டு பிடிபடுவதற்கு உதவிட புதுக்கோட்டை தொண்டைமான், எட்டயபுரம் பாளையக்காரர்கள் மற்றவர்களுக்கு அந்த ஆசை காட்டுதல் போதுமானதாக இருந்தது.

எதிரியே நீதிபதியா?

இதற்கிடையில் பாஞ்சாலங்குறிச்சியில் கிடைத்தது அத்தனையும் கொள்ளையிட்டீர்கள். கொள்ளையிட்ட அந்தக் கும்பலுக்கு நீங்களே தலைமை தாங்கிச் சென்றீர்கள். அப்படிப்பட்ட நீங்களே இன்று என்மீது குற்றஞ் சுமத்துபவராகவும் ஆகி இருக்கிறீர்கள். (இரு தரப்பினர் போரிட்டபோது, ஒரு தரப்பிற்கு தலைமை தாங்கிய ஒருவரே (பானர்மென்) மற்றொரு தரப்பை (கட்டபொம்மனை) விசாரிக்கும் நீதிபதியாக இருந்த விந்தைச் செயல், யுத்த கால வரலாற்றில் நடைபெற்றிராத ஒரு சம்பவமாகும்) என்னை வாதாடச் சொல்கிறீர்கள்? இதில் வாதாட என்ன இருக்கிறது? இது தான் தலைவிதி; நான் இதனை ஒத்துக் கொள்கிறேன். நீங்கள் இஷ்டப்படுவது போல் என்னை என்ன வேண்டுமானாலும் செய்து கொள்ளுங்கள் என்றார் கட்டபொம்மன்.

சதி ஆலோசனை

தலைமை தாங்கிய பானர்மென் வீரபாண்டிய கட்டபொம்மனைப் பார்த்து மேலும் ஏதாவது சொல்ல விரும்புகிறீர்களா? என்று திரும்பவும் கேட்டபோது, மௌனம் சாதித்தார் கட்டபொம்மன். விசாரணை நடத்திய அந்தக்குழு சிறிது களைப்போடு, அவர்களுடைய குறிப்புக்களைத் திருப்பிப் பார்த்துக் கொண்டது, அவர்களுக்குள் சிறிது ஆலோசனையும் செய்தது.

திட்டமிட்டபடி தூக்கு

ப்போது மதிய நேரமாயிற்று, மாலையின் நிழல்கள் சென்னைக்குச் செல்லும் அந்த நெடுஞ்சாலையின் மீது படியத் துவங்கியது. காவலுக்கு நின்ற வீரர்களின் குதிரைகள் திமிர ஆரம்பித்தன; சலசலத்தன. கரிய மேகங்கள் வானத்தில் மெல்ல நகர்ந்து கொண்டிருந்தன. கட்டபொம்மனின் பதிலுக்குப் பின்னர் தலை நரைத்து ஓய்ந்து போன உருவமாக மேஜர் பானர்மென் நிசப்த நிலையில் தோற்றமளித்தார். பின் ஏற்கனவே திட்டமிட்டபடி கட்டபொம்மனுக்கு தூக்கின் மூலம் மரண தண்டனை விதித்திட வேண்டுமென்ற தீர்ப்பினை எழுதி, அத்துடன் இந்தத் தண்டனை இன்றைய தினத்திற்குள் நிறைவேற்றப்பட வேண்டு என்றும் குறிப்பிட்டார். உடனிருந்த மற்ற வெள்ளை அதிகாரிகள் அங்கிருந்து எழுந்து சென்றார்கள்..உடனடியாக கும்பெனிப் படையினரும், கும்பெனியின் விசுவாச ஊழியர்களும் கட்டபொம்மனை பொறுப்பேற்றுக் கொண்டார்கள். திட்டமிட்டபடி தூக்குத் தண்டனையை நிறைவேற்றிடத் தயாரானர்கள்.

கட்டைப் புளியமரத்தில

ஏற்கனவே தூக்குமரமாகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்த கட்டை புளிய மரத்தடிக்கு கட்டபொம்மனை அழைத்துச் சென்றார்கள்.ஒரு படை வீரன் மரத்தின் மீது ஏறினான். ஒரு கிளையிலிருந்து ஒரு கயிற்றைக் கட்டி அந்த முடிச்சை கீழே தொங்க விட்டான். மற்றொரு வீரன் ஒரு சிறிய ஏணிப்படியை அந்த தொங்கும் கயிற்றுக்கு அருகில் தள்ளி வைத்தான். தற்காலிகமாகச் செய்யப்பட்ட அந்த ஏணியின் ஐந்து படிகளில் கட்டபொம்மன் ஏறிச் சென்றார். நினைவுகளில் தன்னை மறந்தவராக, தொண்டையை கனைத்துக் கொண்டு தன்னைச் சுற்றிலுமிருந்த கூட்டத்தை கடைசியாகப் பார்வையிட்டார் கட்டபொம்மன். அதன் பின் அந்த தூக்கு முடிச்சைக் கையிலெடுத்து தனது கழுத்தை அதற்குள் தானே செலுத்திக் கொண்டார். வெள்ளைக்காரர்களுடன் சுதேசி வீரர்களும் கட்டபொம்மனைச் சுற்றி பேச்சற்ற நிசப்தமாக நின்று கொண்டிருந்தனர்.

ஓ! முருகக் கடவுளே

கட்டபொம்மன் இறுதியாக மிகுந்த சப்தமிட்டு ஓ! முருகக் கடவுளே என்று திருச்செந்தூரின் முருகனை நோக்கிக் கூறிவிட்டு, தன் கீழுள்ள படியைத் தானே உதைத்துத் தள்ளினார். கழுத்து நெறிக்கப்பட்டு, கயிறு கழுத்தைச் சுற்றி இறுகியது. இரண்டு மனி நேரம் தொங்கிய உடல் இரண்டு மணிநேரம் எல்லோரும் பார்க்கும் வண்ணம், கட்டபொம்மனது உடல் அந்த மரத்தில் தொங்கியது. முந்தைய இரவில் கட்டபொம்மனுடன் சிறையிலிருந்த தம்பி ஊமத்துரையும், அவரது சொந்தப் பணியாளரும் கட்டபொம்மனின் இறுதிக்கிரியைகள் செய்வதற்காக அழைத்து வரப்பட்டார்கள். அருகிலிருந்த இடிந்து போன ஒரு கோயிலுக்குப் பக்கத்தில் காய்ந்து போன மரக்கிளையில் ஒரு பெரிய நெருப்பு உண்டாக்கப்பட்டது.

முப்பத்தொன்பது வயதில் மாப்புகழ்

39 வயது நிரம்பிய தங்களது தலைவனுக்காகக் காத்துக் கொண்டிருந்த அந்தக் கூட்டத்திலிருந்த ஆண்களும், பெண்களும் அழுது கொண்டிருந்தார்கள். சுற்றியிருந்த கூட்டத்தினர் தலைவணங்க நின்று கொண்டிருக்க கட்டபொம்மனது உயிரற்ற உடல் எரியூட்டப்பட்டது.

வீரமங்கை ஆர்க்ஜோன்

பதினைந்தாம் நூற்றாண்டில் வெள்ளையரை எதிர்த்து வீரப்போர் புரிந்த பிரெஞ்சு தேச வீர மங்கை ஆர்க் ஜோனை மக்கள் அறிய பொது இடத்தில் உயிரோடு தீ வைத்துக் கொளுத்திய வெள்ளையர், கயத்தாற்றில் கட்டபொம்மனது உடலுக்கும் வெள்ளையர்கள் கொள்ளி வைத்தனர். அன்று மூண்ட தீ, நூற்றி ஐம்பது ஆண்டுகள் கழித்து அவர்களை அழிக்கும் ஊழித்தீயாக சுதந்திரத் தீபமாக ஜொலிக்கப் போகிறது என்பதனை அப்போது இறைவனைத் தவிர எவர் தான் அறிந்திருக்க முடியும்?.

இம்மாமன்னன் வராலாற்றைப் படித்தால் நல்உள்ளங்களின் மனம் கணக்கத்தான் செய்யும் தன்னாட்டிற்காக தன்னுயிற் ஈன்ற ஈடில்லா இவன் புகழ் ஓங்குக. மக்கள் மத்தியில் இவன் புகழ் பரப்பிய கலைத்தாயின் மூத்த மகன் தியாகி சின்னையா மன்றாயரின் நடுமகன் நடிகர் திலத்தின் புகழும் சேர்ந்தோங்குக.

தொகுப்பு : இரத்தினவேல மேற்கொண்டார்


பிறர் கருத்துக்கள் 

பொருளடக்கம்  [மறை]
1 பக்கவகை
2 மிகை நவிற்சி
3 மேலும் தெரிந்து கொள்ள:
4 பயண தூரம் சரியா?
பக்கவகை[மூலத்தைத் தொகு]
வீரபாண்டிய கட்டபொம்மன் ஒரு பாண்டியன் அல்ல. சரியான பக்கவகைக்கு இது மாற்ரப்படவேண்டும். ஆனால் இக்கட்டுரையை எந்தப் பக்கவகையில் சேர்ப்பதென்று எனக்குத் தெரியவில்லை. மேலே காணப்படும் கட்டுரையின்படி இவர் நாயக்கர் வம்சத்தைச் சேர்ந்தவராக இருக்கக்கூடும். இந்திய சுதந்திரப் போராட்ட வீரர்கள் பக்கவகையிலும் சேர்த்துக்கொள்ளலாம். Mayooranathan 14:06, 4 மே 2006 (UTC)

நான் பகுப்பு:குறுநில மன்னர்கள் என்ற பக்கவகையுள் இட்டுள்ளேன். விடுதலைப் போராட்ட வீரர்கள் என்ற பகுப்பு பொருத்தமாயிராது. அவர் இந்தியா விடுதலை இயக்கத்தில் இருக்கவில்லை, ஆங்கிலேயரின் கிழக்கிந்துய நிறுவனத்தின் ஆதிக்கத்தை மட்டுமே எதிர்த்தார். -- Sundar \பேச்சு 06:51, 5 மே 2006 (UTC).
// கட்ட பொம்மன் பாண்டியன் என்று எங்குமே சொந்தம் கொண்டாட வில்லை. இவர்களை தமிழக விடுதலை போராட்ட வீரர்கள் என்ற தலைப்பில் சேர்க்கலாம். இந்தியாவில் விடுதலைப் போராட்டம் தொடங்குவர்தற்கு அரைநூற்றாண்டு முன்பே இங்கே விடுதலைப் போரினை தொடங்கியவர்கள் தமிழகத்தின் வீரஞ்செறிந்த மன்னர்கள். ///

மிகை நவிற்சி[மூலத்தைத் தொகு]
கட்டுரையில் "கயத்தாற்றில் தூக்கில் வீரமரணத்தைத் தழுவிக் கொண்டார்". இப்படி ஏன் செண்டிமெண்டலாக, புனைத்து எழுத வேண்டும்???. "தூக்கிலிடப்பட்டர்" என எழுதினால் போதாதா? தூக்கிலிடப்படுபவர்கள் நிச்சயமாக மரணம் தான் அடைவர். அதனால் "மரணம் அடைந்தார்" என கூட எழுதவேண்டாம். --161.12.7.4 10:42, 6 டிசம்பர் 2006 (UTC)--விஜயராகவன் 10:44, 6 டிசம்பர் 2006 (UTC)

விஜய், நீங்கள் பல கட்டுரைகளையும் படித்துப் பார்த்து கருத்து தெரிவித்து வருவது குறித்து மகிழ்ச்சி. இது போன்ற சிறு குறைகளை பேச்சுப் பக்கத்தில் குறிப்பிடத்தேவையில்லை. நேரடியாக கட்டுரைப் பக்கத்திலேயே நீங்கள் மாற்றங்களை செய்து தொகுத்தல் சுருக்கத்தில் தெரியப்படுத்தி விடுங்கள். தற்போதைக்கு, நீங்கள் சுட்டிக்காட்டியகுறையை நான் சரி செய்கிறேன். நன்றி--Ravidreams 16:28, 6 டிசம்பர் 2006 (UTC).

ஈரிடங்களில் "வெள்ளையர்" களை "ஆங்கிலேயர்" ஆக் மாற்றினேன். நபர்களை தோல் நிரத்தினாலேயே குறிப்பிடும் பழக்கத்தை தவிற்க்க.--விஜயராகவன் 17:32, 6 டிசம்பர் 2006 (UTC)

வெள்ளையன் என்று குறிப்பிடும் வழக்கம் நம் வரலாற்று நூல்களில் உள்ளது தான். நீங்கள் குறிப்பிடும் மாற்றம் நன்று.--Ravidreams 17:51, 6 டிசம்பர் 2006 (UTC)


ரவி குறிப்பிட்டது போல கட்டுரைகளை குறை சொல்லி பேச்சு பக்கத்தில் இடக்கூடாது அதற்கு மாற்றாக ஏதாவது கட்டுரையில் பங்களிக்கவேண்டும் அல்லது சரியானத் தகவலை இடவேண்டும் மேற்கோள்களுடன். கட்டுரையாளர் அவருக்கு கிடைக்கும் தகவலை வைத்து உள்ளிடுகின்றார். அந்த மேற்கோளகள் சரியில்லையென்றால் விவாதம் வரலாம். அல்லது மாற்றி இடலாம். குறை சொல்லி வேண்டுமென்றே இட்டார்கள் என்று குறிப்பிடுகின்றார்கள். இது தவிர்க்கப்படவேண்டும். பொம்மு நாயக்கர் எனப்படும் வீரபாண்டிய கட்டபொம்மன் ஆந்திராவை சேர்ந்த பெல்லாரியில் இருந்து (அவர் மூதாதையர்) வந்தவர்கள். நாயக்கர் வம்சுத்து மன்னர் எடுத்து வளர்த்தார். அந்த வம்சத்து மூன்றாம் தலைமுறை அல்லது இரண்டாம் தலைமுறை மன்னர்தான் பாண்டிய கட்டபொம்மு நாயக்கர். இதன் மேற்கோள்கள் நூலகத்தில் உள்ளன. வந்தவுடன் உள்ளிடுகின்றேன். பிறருக்கு கிடைத்தால் உள்ளிடலாம். எட்டப்பர், பொம்மு நாயக்கர் சர்ச்சைகளும் உள்ளிடலாம் தனிப்பகுதியாக. குங்குமத்தில் இந்த சர்ச்சைகள் வந்துள்ளன. தொலைக்காட்சியிலும் வந்துள்ளன. பல இடங்களில் பொம்மு நாயக்கரை குற்றம் சொல்வது போல் தான் இருக்கும். இவைகளை உள்ளிட்டால் நமது தகவற் களஞ்சியம் சுவையாக இருக்கும். இது அனைவருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.--செல்வம் தமிழ் 04:38, 24 ஜூன் 2009 (UTC)

// கயத்தாற்றில் தூக்கில் வீரமரணத்தைத் தழுவிக் கொண்டார் எந்பது ஒன்றும் செண்டிமென்ட் இல்லை. பானர்மேந் தன் கைப்பட எழுதிய குறிப்புகளில் கட்டபொம்மனின் இறுதி நிமிடங்களை விவரிக்கின்றார். சிங்கம் போந்று நடந்து போய் (விடுதலைப் போரின் வீர மரபுகள் புத்தகத்தில் மருது ஓவியர் இதனை அழகாக வரைந்து இருப்பார்) தானே தூக்கு மாட்டிக் கொண்டு வீரமரணம் எய்தவந் கட்டபொம்மன். அவர் தூக்கிலிடப்படவில்லை, தானே தூக்கு கயிற்றை மாட்டி தூக்கிட்டுக் கொண்டார்///

மேலும் தெரிந்து கொள்ள:[மூலத்தைத் தொகு]
“கட்டபொம்மனின் ஒரு தவறான சரித்திரம் நாட்டிலே பரவி வீரவரலாறு ஆயிற்று” என்று எழுதினார் அறிஞர் தமிழ்வாணன். “பானர்மேன்னிடம் அகப்பட்டுத் தொல்லைகளுக்கு ஆளாகாமல், லூசிங்க்டனிடம் சராணாகதி அடைய எண்ணினார் கட்டபொம்மு” என்கிறார் தி.நா.சுப்ரமணியம் தமது நூலின் பக். 165 ல். இதனை “கோலார்பட்டியிலிருந்து தப்பியோடிய கட்டபொம்மன் எப்படியும் திருச்சி அடைந்துவிட எண்ணினான். அங்குள்ள கும்பினி அதிகாரிகளிடம் சராணாகதி அடைந்து உயிர் பிச்சைக் கேட்பதே கட்டபொம்மனது நோக்கம்” என்று எடுத்துக்காடியுள்ள பகுதியால் அறியலாம். இந்தக் கருத்தை கட்டபொம்மன் புகழ்பாடிய ஜெகவீரபாண்டியனாரும் மறுக்காமல் உறுதி செய்து தமது நூலின் பக்.297 ல் வெளியிட்டுள்ளார். ஆனால் வரலாற்று அறிஞர் ம.போ.சி. “கசாப்புக்கடைக்காரனிடம் அடைக்கலம் புகும் ஆடு போன்று, தொண்டைமானிடம் அடைக்கலம் புகுந்தான் கட்டபொம்மன்.” என்று கூறுகிறார். இதற்கு என்ன காரணமோ தெரியவில்லை. நேரிடையாக மோதி தோற்று, பின் படைபெருக்க வேண்டி, சின்ன மறவர் நாட்டுச் சிங்கங்கள் மருதுபாண்டியரிடம் தஞ்சமானான் ஊமைத்துரை, அவர்களிடம் உதவி வேண்டினான், அவன் வீரன். ஊமைத்துரை போன்று உதவி வேண்டியா கட்டபொம்மன் புதுக்கோட்டை முட்புதர் அடர்ந்த காடுகளின் தஞ்சமானான்? இது தான் விருப்பு வெறுப்பற்ற வரலாற்று ஆராய்ச்சியின் கண்ணோட்டமா? ம.போ.சி சிந்திக்கவில்லை போலும்! வரலாற்று உண்மைகளை எல்லாம் மறைத்துவிட்டு “பிடித்துக் கொடுத்தான் என்பதற்கும், காட்டிக் கொடுத்தான் என்பதற்கும்” வேறுபாடுகள் அறியாது புரியாது புரிந்து கொள்ளச் சக்தியும் இல்லாது தவறாக வரலாற்றினை தீட்டியுள்ளார் என்று நாம் அவரை குறை முடியாது! அவருடைய இயல்பு அது என்றால் யார் என்ன சொல்ல? வீரமரணமா? “பாஞ்சாலங்குறிச்சியை விட்டு வெளியேறாது அக்கோட்டையைக் காப்பாற்றும் புனிதப் போரிலே, வீரமரணம் எய்தாமல் போனேனே” என்று சொல்லி தூக்கு கையிற்றை தானே எடுத்துக் கழுத்தில் மாட்டிக் கொண்டானாம். இதை ம.போ.சியே தனது நூலில் எடுத்துக்காட்டியுள்ளார். வணங்காமுடி: வீரபாண்டிய கட்டபொம்மனுக்கு தன்மானி என்றும், பகைவர்களாலும் போற்றத்தக்க மாவீரன் என்றும், தலைகுனியாத வணங்காமுடி என்றும் வீரப்பட்டயம் சூட்டிட ஏதேனும் உள்நோக்கம் இருந்து தான் ஆக வேண்டும் ம.போ.சிக்கு. தான் எடுத்தக் கொண்ட வலுவில்லாத கருத்தை நிலைநாட்ட ம.போ.சி எடுத்துக் கொண்ட முயற்சியும், செயலும் அறிஞர் பெருமக்கள் அறிவர். வந்தான் பானர்மேன்: பாஞ்சை சென்ற ஒரு குறுகிய எல்லைக்கு உள்ளாக இருந்து கொண்டு, சூழ்நிலையால் தன்னை தானே அரசன் என்றும் வீரபாண்டியன் என்ற பட்டம் சூட்டிக்கொண்டான் கட்டபொம்ம நாயக்கன். தமது தம்பியின் திருமணத்திற்காகவும், அமைச்சர் சுப்பிரமணியப் பிள்ளையின் மகன் திருமணத்திற்காகவும் கும்பினியாரின் நெற்களஞ்சியத்தைக் கொள்ளையடித்தார்கள். காவலாரக இருந்த பாண்டித்தேவனையும் கொலை செய்துவிட்டுத் தப்பிவிட்டார்கள. இதனால் கும்பினித்தளபதி பனார்மேன் கட்டபொம்மன் மீது குற்றம் சாட்டி, விசாரணை செய்ய வேண்டி டேவிசன் மூலம் ஆணை அனுப்பினான். பானர்மேன் மிகக் கொடூரமானவன், எதற்கும் அஞ்சாதவன். ஆனால் நீதிமான்! அவன் கையில் அகப்பட்டால் மீளமுடியாது என்பதை அறிந்து திருச்சிக்கு சென்று மேல் அதிகாரிகளை சந்திக்க எண்ணியிருந்தான் கட்டபொம்மன். இந்நிலையில் பானர்மேன் படை நடத்தி, தீவிரத் தாக்குதலுக்குப் பிறகு, பஞ்சை கோட்டையை கைப்பற்றி , கட்டபொம்மனை தேடினான். ஆனால், கட்டபொம்மன் இரவோடு இரவாக தப்பி சென்றுவிட்டான். கோலார்பட்டியில் தஞ்சமானான். இதை ஒற்றர் மூலமாக அறிந்தான் தளபதி பானர்மென். படையை நடத்தினான். கோலார்பட்டியை நோக்கிப் படை வருகிறது என்பதை அறிந்த கட்டபொம்மன் வடக்கு நோக்கி ஓட்டமெடுத்தான். திருச்சிக்குத் தான் போவான் என்று வழி நெடுகிலும் காவால் போட்டான் பானர்மேன். ஆனால் சிவகங்கை ஆளியூர் பகுதியை அடைந்து, திருச்சி செல்லாமல் இடையில் புதுக்கோட்டை மன்னர் ஆட்சிக்குட்பட்ட திருக்களம்பூர் அருகேயுள்ள முட்புதர்கள் அடர்ந்த காட்டிற்கும் மேற்கே உள்ள கலியபுரம் என்னும் சிறு கிராமத்தில் பதுங்கிக் கொண்டான். இதையறிந்த பானர்மேன் தமது மேலதிகாரியான கலெக்டர் லூசிங்க்டன்’னிடம் தெரிவித்தான். லூசிங்க்டன் தன்னுடைய ஆட்சிக்குட்பட்ட புதுக்கோட்டை தொண்டைமான் அவர்களுக்கு ஒரு ஓலை அனுப்பினான்.”வீரபாண்டிய கட்டபொம்மன் தப்பி வந்து உன்னுடைய எல்லைப் பகுதியில் தங்கி இருக்கிறான். அவனைத் தேடி கண்டுபிடித்து கும்பினிப் படையினரிடம் ஒப்படைக்கவேண்டும்” என்பது ஓலையின் வாசகம்.அம்பலக்காரர் கும்மி: வெள்ளையரின் நட்புக்கு உரித்தாக இருந்து வந்த தொண்டைமான் தமது படைத்தளபதி முத்துவீர பைரவ அம்பலக்காரார் மூலமாக படை அனுப்பித் தேடச் செய்தார். அம்பலக்கரரின் தீவிர முயற்சியால் திருக்களம்பூர்க்காடு, கலியபுரம் கிராமத்தில் பதுக்கி இருந்த கட்டபொம்மனை பாய்ந்து சென்று கைது செய்தனர். அவனுடன் இருந்த ஆறு பேர்களையும் கைது செய்தனர். 23.09.1799 ல் வெள்ளைத் தளபதிகளிடம் ஒப்படைத்தனர். கைது செய்யும் போது அவர்களிடம் ஒரு பெரிய போராட்டமே நடந்திருக்கிறது. இதனை ‘அம்பலக்காரர் கும்மி’ என்று நாட்டுப் பாடல் மூலம் அறியலாம். Under Instruction of Mr.Lousington, Collector of Tinnevelly, The Kattabomman Captured by Thondaman in Sathirapathi Forest on 23/09/1799. (History of Tennevelly – By B.Coldwell P.112) இந்த வரலாறு உண்மையை ம.போ.சி அவர்கள் மறைத்துள்ளார். “புதுக்கோட்டை மன்னன் விஜயரகுநாத தொண்டைமான் கட்டபொம்மனின் அருமை நண்பன், ஆம்; ஆங்கிலேயனை கட்டபொம்மன் பகைப்பதற்கு முன் அந்த நிலை நீடிப்பதாக நம்பி மாவீரன் கட்டபொம்மன் புதுக்கோட்டையானின் நட்பை நாடி அவனிடம் சென்றான். கசாப்புக்கடைக்காரனிடம் அடைக்கலம் புகும் ஆடு போன்று, தொண்டைமானிடம் அடைக்கலம் புகுந்தான் கட்டபொம்மன்.” “நயமாகப் பேசி விருந்துபச்சாரங்கள் நடத்தி, இரண்டு நாட்கள் தங்க வைத்தான். பின் மாடியில் தூங்கும் போது கைது செய்யப்பட்டான் கட்டபொம்மன். காட்டிக் கொடுத்தான் தொண்டைமான்”என்று ம.போ.சி. அவர்கள் தமது நூலின் பகுதி ௧, பக்.52 ல் குறிப்பிட்டுள்ளார். வரலாற்று வல்லுநர் என்று பாராட்டுப் பெற்ற ம.போ.சி அவர்கள் எவ்வளவு வன்மையான வார்த்தைகளைப் பயன்படுத்தியுள்ளார். தொண்டைமானும், கட்டபொம்மனும் அருமை நண்பர்கள் என்று வரலாற்றுக்கு செய்தியையும் கூறுகிறார். இது வரலாற்று அறிஞர்களால் ஏற்றுக் கொள்ளப்படவில்லை. “மக்களே நான் வேண்டாமென நினைக்கத் தொடக்கி விட்ட பின்னர் எனக்கெதற்கு ஆட்சியையும் அந்தஸ்தும்” எனக் கூறியவர் புதுக்கோட்டை இளமன்னர். சமஸ்தானக் கணக்குப்படி இருப்புத் தொகை கருவூலத்தில் இருக்கிறது, அந்தத் தொகையை ஒப்படைக்கிறேன் என்று கூறி 1948 ம் ஆண்டு பிப்ரவரி முதல் நாள் சர்தார் வல்லபாய் பட்டேல் அவர்களிடம் சென்று புதுக்கோட்டை சமஸ்தானத்தை ஒப்படைத்தவர் மன்னர் இராஜகோபால தொண்டமான் அவர்களேயாவர். புதுக்கோட்டை சென்னையுடன் இணைக்கப்பட்டது என்பதை வரலாறு பக்.159 ல் அறிஞர் சஞ்சீவி அவர்கள் குறிப்பிட்டுள்ளார். இந்தியக் கண்டத்திலேயே எவருக்கும் ஏற்படாத துணிவு புதுக்கோட்டை மன்னர் தொண்டைமான் அவர்களுக்குத் தான் ஏற்பட்டது. தமிழத்தின் மானம் காத்த வீரப்பரம்பரையினர் புதுக்கோட்டை மன்னர்கள். அப்படிப்பட்ட அவர்களா காட்டிக் கொடுத்த பரம்பரை…? இது தான் அரசியலுக்கு அப்பாற்பட்ட சரித்திர ஆராய்ச்சி என்றால், அப்படிப்பட்ட ஆராய்ச்சி திறன் நாட்டில் வேருடன் அழிக்கபடத்தக்க ஒன்றாகும் என்பது சரி. மக்கள் கருத்தும் அதுவாகத் தான் இருக்கும். (இனிமேல் எவனாவது தொண்டைமான் காட்டிக் கொடுத்தார் என்று சொன்னால் அவன் நாவை கட்டி விடலாம். சரி தானே!) எனவே, தொண்டைமான் அவர்கள் காட்டிக் கொடுத்தாரா? கட்டபொம்மனை பிடித்துக் கொடுத்தாரா? உண்மை நிகழ்ச்சிகளை எடுத்துக் கட்டியுள்ளோம். தீர்ப்பு வழங்க வேண்டியது மக்கள் கடமை.

// தமிழகத்தில் பொதுவாக ராஜ ராஜ சோழன் காலத்திற்கு பின்பு பேர்ரசு அரசு வடிவம் நிலை பெற்றது. அதாவது, குறுநில மன்னர்கள் (ஒன்று அல்லது இரண்டு ஊர்கள்) பேரரசுக்கு கப்பம் கட்டுவர். பேரரசின் பதவிக்காக சேர, சோழ, பாண்டிய மன்னர்களுக்காக சண்டை நடக்கும். நீண்ட காலத்திற்கு முகலாயர் வந்த பின்பும் இதே நிலை நீடித்தது. இந்த நிலையைதான் காரல் மார்க்ஸ் தனது இந்தியா பற்றிய கட்டுரைகளில் "நீண்ட நெடிய மெள�ந அமைதி என்று குறிப்பிட்டார். முகலாயர்களை வெற்றிக் கொண்ட தெலுங்கு மன்னர்கள் தங்கள் நிலையினை வலுவாக்க தமிழகம் முழுவதையும் பாளையப்பட்டுக்களாக பிரித்து தங்கள் வம்சத்தின்ரை நியமித்தனர். அந்த வழியில் கட்ட பொம்மன் முன்னோர்கள் பாஞ்சாலங்குறிச்சியை ஆளும் வாய்ப்பு பெற்றநர். இதுதான் உண்மை. ஆங்கிலேயர்கள் முகலாயர்களிடம் இருந்து (ஆற்காட்டு நவாப்) ஆட்சி உரிமையை பெற்ற பின்பு, கட்டபொம்மன் இந்த நீண்ட நெடிய பழக்கத்தின் காரணமாக வரி கட்டினார். ஆநால் வெள்ளையர்கள் ரயத்துவாரி என்று அதாவது விளைச்சல் குறைந்த போதும் மக்களை கசக்கி பிழிந்து வரி கட்ட வேண்டும் என்று சொன்ன போது, அதனை எதிர்த்து மக்கள் பக்கம் நின்றான். ஜாக்சன் துரை அவ்வாறு வரி கேட்டு கொடுமை படுத்திய போது அதனை அப்போதைய கலெக்டரிடம் கொண்டு போய் ஜாக்சன் மாற்றப்பட்டார். ஆநால் பானர்மேந் அதே முறையிநை கையாண்ட போது, ஆங்கிலேயருக்கு எதிராக திப்பு சுல்தான் தலைமையில் கூட்டணி அமைத்து போரிட்டனர். ஆநால் ஆயுதங்கள் இருந்தாலும் (ஒவ்வொரு படைவீரனும் ஒரு துப்பாக்கி, வாள், குதிரை பராமரிக்க வேண்டும்), புதிய போர் முறைகள் (கிரமாம முறையில் படை நடத்தல் - ஆங்கிலேய படங்களில் இதை பார்க்கலாம்) தெரியாதலால் தோல்வியுற்றனர். ஆநால், வெள்ளையினரின் காலை நக்கி, வெள்ளையர்களுக்கு ஏவல் நாயாக பணியாற்றி வரி வாங்கி கொடுத்தவர் புதுக்கோட்டை மற்றும் எட்டையப்புரம் மன்னர்கள். ஆநால், மேலே எழுதியுள்ள கட்டுரையாளர் உண்மைக்கு புறம்பாக கட்டபொம்மன் மீது அவதூறு இழைக்கின்றார். - அறிவுடைநம்பி

// ///வெள்ளையினரின் காலை நக்கி, வெள்ளையர்களுக்கு ஏவல் நாயாக பணியாற்றி வரி வாங்கி கொடுத்தவர் புதுக்கோட்டை மற்றும் எட்டையப்புரம் மன்னர்கள்.///திரு அறிவுடை நம்பி சொல்வது சரி என்று வைத்துக் கொண்டால் 72 பாளையங்களும் 18 மறவர் பாளையங்கள் தவிர்த்து மீதம் இருந்த 54 பாளையக்காரர்கள் யாருக்கு அடிமையாய் இருந்தனர்?

உங்களின் உணர்வுப்படி கேட்க வேண்டுமென்றால் "வெள்ளையினரின் காலை நக்கி, வெள்ளையர்களுக்கு ஏவல் நாயாக பணியாற்றி வரி வாங்கி கொடுத்தவர்களில் எத்தனை தெலுங்கு கன்னட பாளையக்கார்கள் அடங்குவர்?" - இது எதிர் கேள்வி. எமது இயல்பு இதுவல்ல. - தனியன்

பயண தூரம் சரியா?[மூலத்தைத் தொகு]
கோவில்பட்டிக்கும், எட்டயபுரத்துக்குமிடையில் பத்து கிலோமீட்டருக்குள்தான் இருக்கும் என நினைக்கிறேன். கோவில்பட்டியிலிருந்து எட்டயபுரம் எவ்வளவு கி.மீ? --தேனி.எம்.சுப்பிரமணி./உரையாடுக. 15:17, 10 ஆகத்து 2011 (UTC)

இதை இப்போதுதான் பார்க்கிறேன். இரண்டுக்கும் இடையே 15 கி.மீ. தொலைவு, தேனி.எம்.சுப்பிரமணி. -- சுந்தர் \பேச்சு 08:20, 26 சூலை 2012 (UTC)
பகுப்பு: ஆண்டு நிறைவுகள்



VEERAPANDIA KATTA BOMMAN 
வீரபாண்டிய கட்டபொம்மன் 
தூக்கில் இடப்பட்ட நாள் 16 அக்டோபர் 1799






வீரபாண்டிய கட்டபொம்மன், தமிழகத்தில் ஆங்கிலேயர் ஆட்சியை எதிர்த்துப் போரிட்ட 18ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த பாளையக்கார மன்னர் ஆவார். இவர் தெலுங்கு மொழி பேசும் ராஜகம்பளம் நாயக்கர் இனத்தில் பிறந்தவர்.இவருடைய முன்னோர்கள் ஆந்திராவிலிருந்து விசயநகர ஆட்சிக்காலத்தில் தமிழகத்திற்கு குடிபெயர்ந்து வந்தவர்கள் ஆவர்.
கெட்டிபொம்முலு (வீரபாண்டிய கட்டபொம்மன்)
Kattabomman.jpg
ஆட்சிகி.பி 1790- கி.பி 1799
முடிசூட்டு விழாகி.பி 1790
முன்னிருந்தவர்ஜெகவீர கட்டபொம்மன்
அரச குலம்நாயக்க மன்னர்
தந்தைஜெகவீர கட்டபொம்மன்
தாய்ஆறுமுகத்தம்மாள்
கட்டபொம்மன் பெயர் காரணம்
அழகிய வீரபாண்டியபுரம்[1] எனும் ஊரில் (இன்றைய ஒட்டபிடாரம்) ஆட்சிபுரிந்து வந்த ஜெகவீரபாண்டியனின் (நாயக்க வம்சம்) அவையில் அமைச்சராக பொம்மு என்கிற கெட்டி பொம்மு (தெலுங்கு)[1] இடம்பெற்றிருந்தார். இவரது பூர்வீகம் ஆந்திர மாநிலம், பெல்லாரி ஆகும். வீரமிகுந்தவர் என்ற பொருளை தெலுங்கில் உணர்த்தும் கெட்டி பொம்மு எனும் சொல் நாளடைவில் கட்டபொம்மு என்று மாறி பின் தமிழில் கட்டபொம்மன் என்ற சொல்லாயிற்று[1]. ஜெகவீரபாண்டியனின் மறைவிற்குப்பின் அரசகட்டிலில் ஏறிய கட்டபொம்மு பின் ஆதி கட்டபொம்மன் என்று மக்களால் அழைக்கப்பட்டார். இவரே பொம்மு மரபினரின் முதல் கட்டபொம்மன்[1].

இந்த பொம்மு மரபில் வந்தவர்களே (திக்குவிசய கட்டபொம்மன்) ஜெகவீர கட்டபொம்மன், ஆறுமுகத்தம்மாள் தம்பதியர். இவர்களின் புதல்வரே வீரபாண்டியன் எனும் இயற்பெயர் கொண்ட வீரபாண்டிய கட்டபொம்மனாவார்[1]. இவர் நாயக்க வம்ச அரசாட்சியில் தொடர்ந்து வருவதால் பொம்மு நாயக்கர் [1] என்று மக்களால் அழைக்கப்பட்டார்.

வாழ்க்கை
ஜனவரி 3 1760 அன்று ஆறுமுகத்தம்மாள் - திக்குவிசய கட்டபொம்மு தம்பதியருக்கு, பாஞ்சாலங்குறிச்சியில் பிறந்தவர் வீரபாண்டிய கட்டபொம்மன். பெப்ரவரி 2, 1790 அன்று 47 வது[சான்று தேவை] பாளையக்காரராகப் பொறுப்பு ஏற்றுக்கொண்டார்.அப்போது அவருக்கு வயது முப்பது ஆகும்.வீரபாண்டிய கட்ட பொன்னனுக்கு குமாரசாமி என்ற ஊமைத்துரை, துரைச்சிங்கம் என்ற இரு சகோதரர்களும், ஈசுவர வடிவு, துரைக்கண்ணு என்ற இரு சகோதரிகளும் இருந்தனர். இவரது துணைவியார் வீரசக்கம்மாள். இவர்களுக்குப் பிள்ளைப் பேறு இல்லை. இவர் 9 ஆண்டுகள், 8 மாதம், 14 நாட்கள் அரசுப் பொறுப்பிலிருந்தார்.

போர்
கும்பினியார் தங்களுடைய ஆட்சியை நிலைநாட்டிக் கொள்வதற்காக பாளையக்காரர்களிடம் வரி வசூலிப்பது என முடிவு செய்தனர். நெல்லை மாவட்டத்தில் வரிவசூலிக்கும் பொறுப்பை ஏற்றிருந்த ஆங்கிலேய தளபதி மாக்ஸ்வெல்லால் பாஞ்சாலங்குறிச்சி பாளையத்தாரர் வீரபாண்டிய கட்டபொம்மனிடம் வரிவசூலிக்க முடியவில்லை. இதனடிப்பையில் கி.பி. 1797 இல் முதன் முதலாக ஆங்கிலேய தளபதி ஆலன் துரை பாஞ்சாலங்குறிச்சிக் கோட்டைக்கு பெரும்படையுடன் போரிட வந்தார். 1797 - 1798 இல் நடந்த முதல் போரில் கோட்டையை தகர்க்க முடியாமல் வீரபாண்டிய கட்டபொம்மனிடம் ஆலன் துரை தோற்று ஓடினார். அதன் பின்னர் நெல்லை மாவட்டக் கலெக்டர் ஜாக்சன் துரை வீரபாண்டிய கட்ட பொம்மனைச் சந்திக்க அழைத்தார். கட்டபொம்மனை அவமானப்படுத்த நினைத்து வேண்டுமென்றே பல இடங்களுக்கு வரச்சொல்லி சந்திக்காமல் அலைக்கழித்தார். இறுதியில் செப்டம்பர் 10, 1798 இல் இராமநாதபுரத்தில் சந்தித்தார். 


அப்போது தந்திரத்தால் வீரபாண்டிய கட்டபொம்மனைக் கைது செய்ய முயன்றார். அதை முறியடித்து வீரபாண்டியக் கட்டபொம்மன் மீண்டும் பாஞ்சாலங்குறிச்சியை வந்தடைந்தார். செப்டம்பர் 5, 1799 இல் பானர்மென் என்ற ஆங்கிலேயத் தளபதியால் பாஞ்சாலங்குறிச்சி கோட்டை முற்றுகையிடப்பட்டது. அங்கு கடும் போர் நடைபெற்றது. போரில் பல ஆங்கிலேயர்கள் உயிரிழந்தனர். இருப்பினும் கோட்டை வீழ்ந்துவிடும் என்ற நிலையில் வீரபாண்டிய கட்டபொம்மன் கோட்டையை விட்டு வெளியேறினார். செப்டம்பர் 9 1799 இல் ஆங்கிலேயர்களால் பாஞ்சாலங்குறிச்சி கோட்டை கைப்பற்றப்பட்டது. அக்டோபர் 1, 1799 இல் புதுக்கோட்டை மன்னர் விஜயரகுநாத தொண்டமானால் வீரபாண்டிய கட்டபொம்மன் கைது செய்யப்பட்டு கும்பினியாரிடம் (கிழக்கிந்திய கம்பெனி) ஒப்படைக்கப்பட்டார். அக்டோபர் 16 1799 இல் ஆங்கிலேயத் தளபதி பேனர்மேன் ஆணைப்படி கயத்தாற்றில் தூக்கிலிடப்பட்டார்.


வீரபாண்டிய கட்டபொம்மனை கயத்தாற்றில் தூக்கிலிடப்பட்ட நினைவிடத்தின் முழு தோற்றம்

வீரபாண்டிய கட்டபொம்மனை கயத்தாற்றில் தூக்கிலிடப்பட்ட நினைவிடத்தின் முழு தோற்றம்

உள்ளே அமைந்துள்ள நினைவுத்தூண் உள்ள படிமம்

உள்ளே அமைந்துள்ள நினைவுத்தூண் உள்ள படிமம்

மதுரையில் நிறுவப்பட்டுள்ள கட்டபொம்மன் சிலை


மதுரையில் நிறுவப்பட்டுள்ள கட்டபொம்மன் சிலை

மீண்டும் எழுந்த பாஞ்சாலங்குறிச்சிக் கோட்டை
கட்டபொம்மன் தூக்கிலிடப்பட்டதோடு பாஞ்சாலக் குறிச்சியின் வரலாறு முடிந்து விடவில்லை. ஆங்கிலேயர்களால் பாளையங்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டிருந்த கட்டபொம்மனின் சகோதரர் ஊமைத்துரை 02.02.1801 இல் பாஞ்சாலக் குறிச்சி வீரர்களால் மீட்கப்பட்டார். பாஞ்சாலக் குறிச்சிக் கோட்டைக்குப் புத்துயிர் கிடைத்தது. ஊமைத்துரையைக் கைது செய்ய வந்த மேஜர் மெக்காலே கோட்டையினுள் செல்ல முடியாமல் திரும்பினார். அவர் தலைமையில் ஒரு பெரும்படை 30.03.1801 இல் கோட்டையை முற்றுகையிட ஆரம்பித்து 24.05.1801 இல் அதனைக் கைப்பற்றியது. தப்பி, காளையார் கோவில், விருப்பாட்சி, திண்டுக்கல் என்று ஓடிய ஊமைத்துரையும் அவர் தம்பி துரைசிங்கமும் கைது செய்யப்பட்டு பாஞ்சாலக் குறிச்சி பீரங்கி மேட்டில் தூக்கிலிடப்பட்டனர். பாஞ்சாலங்குறிச்சி என்கிற பெயரையே தமிழகத்தின் வரைபடத்திலிருந்து நீக்கினர் வெள்ளையர். கோட்டை முற்றிலும் தகர்க்கப்பட்டுத் தரைமட்டமாக்கப்பட்டது.

1974-ஆம் ஆண்டு பாஞ்சாலங்குறிச்சியில் பழங்காலத்துக் கோட்டையின் வடிவினை ஒத்த ஒரு கோட்டையினை அன்றைய தமிழக முதல்வர் திரு. மு.கருணாநிதி எழுப்புவித்தார். அது இன்றளவும் வீரபாண்டியனின் புகழ்பாடி நிற்கிறது. கோட்டை, கொத்தளம், கொலுமண்டபம், ஜக்கம்மா தேவி ஆலயம் அனைத்தும் மீண்டும் தோன்றின. நினைவுக் கோட்டையை உள்ளடக்கிய 6 ஏக்கர் பரப்பினைச் சுற்றி மதில் சுவர் எழுப்பப்பட்டுள்ளது. உள்ளே தொல்பொருள் ஆய்வு மையமும் உள்ளது. மண்டபத்தின் உள்ளே கட்டபொம்மனின் வீரவரலாறு ஓவியங்களாகத் தீட்டப்பட்டுள்ளது. இக்கோட்டை 1977 முதல் சுற்றுலாத் துறையின் பராமரிப்பில் இயங்கி வருகிறது.

தற்போது 35 ஏக்கர் பரப்பிற்கு மேல் உள்ள பழைய கோட்டையின் அடிப்பகுதிக் கட்டிடங்கள் தொல்பொருள் ஆய்வுத் துறையின் பராமரிப்பின் கீழ் உள்ளன. கட்டபொம்மன் பயன்படுத்திய ஆயுதங்கள், அவர் காலத்து மக்கள் பயன்படுத்திய பல்வேறு பொருட்கள், அணிகலன்கள் நாணயங்கள் போன்றவை தொல்பொருள் ஆய்வுத் துறையினரால் கண்டெடுக்கப்பட்டு சென்னையில் தமிழ்நாடு அரசு அருங்காட்சியகத்தில் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன.

தூக்கிலிடப்பட்ட கயிறு மாயம்
ஆங்கிலேயத் தளபதியின் ஆணைப்படி 1799ம் ஆண்டு அக்டோபர் 16ம் நாள் கயத்தாற்றில் தூக்கிலிட பயன்படுத்தப்பட்ட தூக்குக்கயிறு மதுரை மாவட்டம், திருமங்கலம் அரசு நீதிமன்றத்தின் ஆவணக் காப்பகத்தில் (டார்க் ரூம்) பாதுகாக்கப்பட்டது. நாடு சுதந்திரம் அடைந்ததிலிருந்து, அதே கட்டிடத்தில்தான் திருமங்கலம் தாலுகா அலுவலகமும் செயல்பட்டு வருகின்கிறது. அங்கிருந்த ஆவணக் காப்பகமும் தாலுகா அலுவலகத்துடன் இணைக்கப்பட்டது. இதே காப்பகத்தில் தான் ஆங்கிலேயர் காலத்து முக்கிய சம்பவங்கள் தொடர்பான ஆவணங்களும், கட்டபொம்மனை தூக்கிலிட்ட கயிறும் இருந்தது. 

மதுரையில் நிறுவப்பட்டுள்ள கட்டபொம்மன் சிலை
இந்த காப்பகத்தை பராமரித்து வந்த அலுவலக உதவியாளர், கட்டபொம்மனின் தூக்குக் கயிறு காணாமல்போன விசயத்தை முதலில் சொல்ல, அதிகாரிகள் யாரும் கண்டு கொள்ளவில்லை. அந்த உதவியாளரும் பணியிலிருந்து ஓய்வுபெற்று மறைந்துவிட்ட நிலையில், கயிறு உண்மையிலேயே காணாமற் போய்விட்டது என 2013ம் ஆண்டு அக்டோபர் மாதம் உறுதி செய்துள்ளனர்[2].


வீரபாண்டிய கட்டபொம்மன் அஞ்சற்தலை

வீரபாண்டிய கட்டபொம்மன் அஞ்சற்தலை
மணிமண்டபம்
கட்டபொம்மன், மற்றும் ஊமத்துரை பற்றிய நினைவு புகைப்படக் கண்காட்சியுடன் நினைவு மண்டபம் ஒன்று கட்டப்பட்டு வருகிறது. [3].

பாஞ்சாலங்குறிச்சிக்கான பயண தூரம்
தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள தூத்துக்குடி, எட்டயபுரம் போன்ற ஊர்களிலிருந்து பாஞ்சாலங்குறிச்சிக்கு பேருந்து வசதி உள்ளது. மேலும் சில இடங்களிலிருந்து பாஞ்சாலங்குறிச்சிக்கான தூரம்

ஒட்டப்பிடாரம் - 3 கி.மீ
எட்டயபுரம் - 23 கி.மீ
தூத்துக்குடி - 25 கி.மீ
கயத்தாறு - 40 கி.மீ
கோவில்பட்டி - 38 கி.மீ
திருச்செந்தூர் - 70 கி.மீ



வீரபாண்டிய கட்டபொம்மனின் வாரிசுகள்

நெடிய உருவம். தலைப்பாகையுடன், கூரிய பார்வையுடன் எங்களிடம் வந்து தன்னை வீரபாண்டிய கட்டபொம்மனின் வாரிசு என்று அறிமுகப்படுத்திக் கொண்டவரின் பெயர் ஜெகவீர பாண்டிய பீமராஜா.  அமைதியான மனிதர். எங்களிடம் அன்பாகப் பழகி 'பேச நேரம் இருக்கின்றதா' என்று கேட்டுக் கொண்டு தனது கதையைக் கூறினார்.

வீரபாண்டிய கட்டபொம்மனின் வாரிசுகள் பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்ட நிலையில் தான் தற்போது வாழ்கின்றனராம். அவர்களுக்கு வசிப்பதெற்கென்று எந்த கோட்டையுமில்லை. குறிப்பாக இவரது தொழில் ஊர் ஊராகச் சென்று ஜோதிடம் பார்ப்பது. ஆனால் எங்கு சென்றாலும் மீண்டும் பாஞ்சாலங்க்குறிச்சிக்கு வந்து விடுவாராம்.

சுதந்திர போராட்டத்தின் போது வீரபாண்டிய கட்டபொம்மனுக்கு பெரிதும் உதவிய பாளைய பகுதிகளுக்குச் சென்று மரியாதை செலுத்துவதை இன்றளவும் அவர்களது வாரிசுகள் பின்பற்றி வருகின்றனராம்.  நினைவு நாட்கள், சிறப்பு நாட்களில் அவரகளை சந்திக்கச் சென்று சிறப்பு நினைவு நாள் பூஜையில் கலந்து கொண்டு வருவதை பல ஆண்டுகளாக வழக்கமாக வைத்திருக்கின்றார் இவர்.






ஆங்கிலேயர்களுக்கு எதிராக சுதந்திரப் போராட்டத்தின் போது கட்டபொம்மனுக்கு ஆதரவாக செயல்பட்ட பாளையங்களில் கோவை மாவட்டத்தைச் சேர்ந்த தளி பாளையம் முக்கியத்துவம் வாய்ந்ததாகும். அந்த உடுமலை அருகிலுள்ள தளி பாளையத்தை ஆட்சி செய்த எத்தலப்பன் சிலை திருமூர்த்தி அணை பகுதியில் உள்ளதாம். போராட்டத்தில் உயிர் நீத்த தளி பாளையக்காரர் சிலைகளுக்கு கட்டபொம்மன் வாரிசுகள் என்ற அடிப்படையில் ஆண்டுதோறும் மரியாதை செலுத்துவதை கடமையாக இவர் வைத்திருக்கின்றார்.






சரி. இவர் எந்த வகையில் வீர பாண்டிய கட்டபொம்மனின் நேரடி வாரிசு என்று கூறிக் கொள்கின்றார் என்பதை அறிய அவரிடம் இதனைக் கேட்டபோது ஒரு விளக்கம் கூறினார். ஆங்கிலேயர்களுக்கு எதிரான போராட்டத்தில் வீரபாண்டிய கட்ட பொம்மன் தூக்கிலிடப்பட்டதை அடுத்து அவரது மனைவி ஜக்கம்மாள் என்ற மல்லம்மாள் நிபந்தனை கைதியாக திருச்சி சிறையில் வைக்கப்பட்டிருந்திருக்கின்றார். அப்போது சிறையிலிலேயே கர்ப்பிணியாக இருந்த மல்லம்மாளுக்கு இரட்டை ஆண் குழந்தைகள் பிறந்துள்ளன. அவர்களின் ஒருவரின் பரம்பரையில் வந்தவர் தான் இந்த ஜெகவீரபாண்டிய பீமராஜா என்று தன்னைப் பற்றிய தகவலை வழங்கினார். இவர் வீரபாண்டிய கட்டபொம்மனுக்கு அடுத்து ஐந்தாவது தலைமுறையாம்.








கட்டபொம்மனின் ராஜ்யம் பிற பாளையக்காரர்களுக்குப் பிரித்து அளிக்கப்பட்டதால் 1872ம் ஆண்டுக்குப் பிறகு மாதந்தோறும் 52.50 ரூபாய் பென்ஷனாக கட்டபொம்மனின் வாரிசுகளுக்கு வழங்கப்பட்டு வந்துள்ளது. முன்னாள் இந்தியப் பிரதமர் திருமதி இந்திரா காந்தி அவர்கள் அறிமுகப்படுத்திய ஜமீன் ஒழிப்பு சட்டத்தின் அடிப்படையில் ஜமீன் குடும்பத்தினருக்கு வழங்கப்பட்டு வந்த பென்ஷன் தடை செய்யப்பட்ட போது இவர்களுக்கும் அதே நிலை ஏற்பட்டிருக்கின்றது. 

பின்னர் தி.மு.க கட்சி தமிழகத்தில் ஆட்சிப் பொறுப்பேற்ற சமயத்தில் ஜமீன் வாரிசுகளுக்கு 50 ரூபாய் பென்ஷன் தொகை மீண்டும் வழங்க ஆரம்பிக்கப்பட்டதாம். அந்த உதவித்தொகை படிப்படியாக உயர்த்தப்பட்டு இப்போது 1000 ரூபாய் வழங்கப்படுகின்றதாம்.  இந்த உதவித் தொகை போதாததால் வருமையில் வாழ்வதாககவும் வருனமானத்திற்கு ஜோதிடம் பார்த்து பொருளீட்டுவதைத் தொழிலாக செய்து வருவதாகவும் வீமராஜா குறிப்பிட்டார்.

நினைவு மண்டபம் கட்டப்பட்ட பின்னர் இந்த வாரிசுகளுக்கு அங்கேயே பக்கத்திலேயே குடியிருக்கவும் வசதியும் செய்து கொடுத்திருக்கின்றது தமிழக அரசு. ஆனால் தற்போது இந்தக் குடியிருப்பு போதிய பராமரிப்பு இல்லாத நிலையில் இருப்பதால் வாரிசுகள் சிலர் வேறு இடங்களுக்கு குடியிருப்பை காலி செய்து விட்டு சென்று விட்டனராம்.  ஆனால் வீமராஜாவும் அவரது குடும்பமும் இங்கேயே இருக்க வேண்டும் என்று உறுதியுடன் இருந்து வருகின்றார்களாம். 


வீமராஜாவின் மகன் தற்போது ஒரு தனியார் கம்பெனியில் வேன் ஓட்டுனராகப் பணிபுரிகின்றாராம். நினைவு மண்டபம் கட்டப்பட்டுள்ள இடத்திலேயே கட்ட பொம்மனின் வாரிசுகளுக்கு வேலை வாய்ப்புக் கிடைத்தால் அங்கேயே இருந்து வாழ முடியும். கட்ட பொம்மனின் கோட்டை அமைந்திருந்த 30 ஏக்கர் நிலத்தில் தற்போது  6 ஏக்கர் பரப்பில் மட்டுமே மேம்பாட்டு பணிக,ள் நினைவு மண்டபம் ஆகியவை நிர்மானிக்கபப்ட்டிருக்கின்றன. பிற பகுதிகள் குப்பை கிடங்காக உள்ளன.அப்பகுதியிலும் பல வரலாற்றுச் சின்னங்கள் உள்ளன. தொல்பொருள் ஆய்வுத் துறையினர் அப்பகுதியையும் ஆய்வு செய்யவேண்டும்  என்றும்  கூறினார்.

சுதந்திர போராட்டத்தின் போது தனது மூதாதையரான வீர பாண்டிய கட்டபொம்மனுக்கு உதவியவர்களையும் மறக்காமல் நினைத்துப் பார்க்க வேண்டும் என்பதிலும் மிகவும் ஆர்வத்துடன் இருக்கின்றார் வீமராஜா. வீரபாண்டிய கட்டபொம்மனுக்கு அப்போது உதவிய  கோவை மாவட்டத்தின் தளி பாளையம், திண்டுக்கல் மாவட்டத்தின்  விருப்பாச்சி பாளையம்  ஆகிய பாளையக்காரர்களின் வரலாற்றுச் சின்னங்களையும் பாதுகாக்கவும் அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும். எவ்வளவு பிரச்சனைகள் ஏற்பட்டாலும் தானும் தனது குடும்பத்தினரும் பாஞ்சாலங்குறிச்சியை விட்டு போகமாட்டோம் என்று உறுதியுடன் எங்களிடம் பேசினார்.


சில நிகழ்ச்சிகளில் தான் கலந்து கொண்ட படங்களையும் அவர் சில நிகழ்ச்சிகளில் சிறப்பு செய்யப்படும் சில படங்களையும் எங்களுக்குக் காட்டினார். ஆச்சரியமாகவும் பிரமிப்பாகவும் இருந்தது. காலம் மாறிக் கொண்டிருக்கின்றது. இனிமேலும் ஜமீன், அரச பரம்பரை என்ற ஒரு தகுதியை மட்டும் வைத்துக் கொண்டு பொருளாதார சலுகைகளை எதிர்பார்ப்பது என்பது தற்கால நிலைக்கு ஒத்துவராத ஒன்று. கால மாற்றத்துக்கு ஏற்றவாறு தன்னையும் மாற்றிக் கொண்டு கல்வி, தொழில் மேம்பாடு, சுய காலில் நின்று தனது குடும்பத்தை பேணுதல் என்ற நிலையில் அரச ஜமீன் வாரிசுகளும் எல்லா சாதாரண குடிமகனைப் போல வாழ பழகிக்கொள்ள வேண்டிய கட்டாயத்திர்கு வந்து கொண்டிருக்கின்றார்கள்.

இந்த நினைவு மண்டபத்தில் நடந்த அனைத்துமே அளவில்லா பிரமிப்பு உணர்ச்சியையே கொடுத்திருந்ததால் மதியம் 4 மணியை நெருங்கிக் கொண்டிருந்தாலும் பசி மறந்து  நிகழ்வுகளில் ஒன்றிப் போயிருந்தோம்.

வீமராஜாவிடம் நன்றி சொல்லி விடை பெறும் போது எங்களிடம் ஜோதிடத்தில் நம்பிக்கை இருக்கின்றதா என்று கேட்டார். ஆமாம் என்றோம். உடனே கையைக் காட்டுங்கள் என்று கூறி எங்கள் ஐந்து பேருக்கும் கைரேகை ஜோதிடம் பார்த்து ஒவ்வொருவருக்கும் தனித்தனியாக பலன் கூறினார்.  அவருக்கு நன்றி கூறி ஜோதிடத்திற்கு பணம் கொடுத்து விட்டு புறப்படும் போது எங்களிடம் வந்து தூரத்தில் எங்கள் வாகனத்திற்கு அருகில் நிற்கும் ஒருவரைக் காட்டி "அவர் ஏதும் சொன்னால் நம்ப வேண்டாம். அவரும் தன்னை வீரபாண்டிய கட்டபொம்மனின் வாரிசு என்று சொல்லிக் கொண்டு புதிதாக இங்கு வந்திருக்கின்றார்." என்று எச்சரித்தார். இது என்ன ஆச்சரியம்? எத்தனை வாரிசுகள் உண்மையில் இருக்கின்றார்கள் என்று ஓரளவு திகைப்பு தோன்றத்தான் செய்தது. 



அவர் சொன்னது போலவே நாங்கள் வாகனத்திற்கு அருகில் வரவும் எங்களிடம் வந்து தன்னை தானும் வீரபாண்டிய கட்டபொம்மனின் வாரிசு என்று கூறிக் கொண்டு பேச வந்தார். இவரிடமும் பேசியிருக்கலாம். ஆனால் நாங்கள் உடன் ஒட்டப்பிடாரம் செல்ல வேண்டிய நிலை. மாலை 4:30 மணிக்குள் அங்கு சென்று சேர வேண்டும். ஆக அவரிடம் வணக்கம் சொல்லி அவசரமாக கிளம்பும் நிலையை சொல்லி வாகனத்தில் ஏறி ஒட்டப்பிடாரம் நோக்கி புறப்பட்டோம்.

அன்புடன்
சுபா

No comments:

Post a Comment