Monday 31 August 2020

THE GREAT TRAIN ROBBERY OF GOLD 1855 MAY 22





THE GREAT TRAIN ROBBERY 
OF GOLD 1855 MAY 22
.ஓடும் ரயிலில் நடந்த தங்க கொள்ளை, 22 மே 1855

தமிழகத்தில் முதல் முறையாக ஓடும் ரயிலில் கொள்ளை நடந்துவிட்டதாம், ஊடகங்கள் பொங்குகின்றன, ஆனால் உலகில் என்ன நடந்திருக்கின்றது?

உலகின் மிக பிரபலமான கொள்ளை இன்றுவரை இங்கிலாந்தில் நடந்த ஓடும் ரயிலில் நடந்த தங்க கொள்ளை, 22 மே 1855ல் நடந்த பிரமாண்ட கொள்ளை அதுஒரு கொள்ளை எப்படி அடிக்கபடவேண்டும் , எப்படி திட்டமிட வேண்டும் என்பதற்கு இன்றுவரை அகராதியாக திகழும் சம்பவம் அது.

அதாவது ரயிலின் ஒரு பெட்டியில் தங்கம் கொண்டு செல்லபடும், ரயில் புறப்பட 5 நிமிடம் முன்னால்தான் காவலோடு ஏற்படும், சீல் வைக்கபட்டு ரயில் கிளம்பும், இறங்குமிடமும் கடும் காவல் ரயில் நிற்காது, ஒரே வீக்னஸ் பயணிகள் ரயிலின் ஒரு பெட்டியில் இது இணைக்கபட்டிருக்கும்அதன் லாக்கரில் 4 சாவிகள் வசதி உண்டு, பிரமாண்ட லாக்கர் அது, உருவாக்கவே 2 வருடம் ஆனது. உடைப்பதோ, தூக்குவதோ சாத்தியமே இல்லை.சாவிகள் இன்றி திறக்கமுடியாது, 4 சாவிகளும் ஒரே நேரத்தில் செலுத்தபடவேண்டும்.

ஒரு சேர 4 அதிகாரிகள் திறப்பார்கள், தங்கம் நிரப்பபட்டு சீல் வைக்கபடும், பின் சேருமிடத்தில் அதுபோல் 4 அதிகாரிகள் காவல் சூழ திறப்பார்கள். 4 சாவிகளும் 4 இடங்களில் பாதுகாப்பாக இருக்கும். உச்சமாக ஒரு அதிகாரி கழுத்திலே சாவி தொங்கவிட்டிருப்பது யாருக்கும் தெரியாது, 4ம் சாவி இடம் மாறி மாறி பாதுகாக்கபடும்.

இதில் எப்படி கொள்ளை சாத்தியம்

ஒரு பெரும் கில்லாடி திட்டமிட்டான், ஒரு விலை மாது உட்பட 3 பேரை சேர்த்துகொண்டான், 4 சாவிகளையும் கடும் பாதுகாப்பிலும் தந்திரமாக நுழைந்து நகல் எடுத்தான். ஒரு முறை ஒத்திகையும் பார்த்தான், எல்லாம் டைமிங் ஒத்திகை,

எப்படி 4 சாவி நகல் எடுத்தான், எப்படி செய்தான் என்பதெல்லாம் மயிர் கூச்செறியும் விஷயங்கள், எழுதினால் தாங்காது. ஆனால் அட்டகாசமான வில்லன், நம்ம ஊர் திருடர்கள் எல்லாம் சும்மா.

கொஞ்சம் உளறிய ஒரு கூட்டாளியினை கொன்றும் போட்டான்.எப்படி ஒத்திகை பார்த்தான் என்றால், பிணபெட்டியில் பிணமாக ரயிலேறி படுத்துகொண்ட கில்லாடி அவன்.ஒரு சுபநாளில் கொள்ளையிட திட்டமிட்டான், எல்லாம் சரி, அவனும் அவளும் ரயில் ஏறினர். நடு வழியில் ரயில்பெட்டி மேல் நடந்து சிறிய துளை வழியாக இறங்கி லாக்கரை திறந்து தங்கத்தை எடுத்துவிட்டு, மிக சரியாக கூட்டாளி நிற்க சொன்ன இடத்தில் எறிந்துவிட்டு சாதுர்யமாக வந்து அமர்ந்தும் கொண்டான், டைமிங்

லண்டனே அலறியது, பிரிட்டன் அவமானத்தில் சிவந்தது, ஸ்காட்லாந்து யார்டு களமிறங்கியது, என்ன பெரிய கில்லாடி என்றாலும் ஒரு விஷயத்தில் மாட்டுவான் அல்லவா? அவன் மறந்தது என்ன? அது புகை வண்டி. ரயில்பெட்டி மேல் இவன் திறமை காட்டியபொழுது உடலெல்லாம் கரி அப்பி கொண்டது, அது முகத்திலும் இருந்தது, சிலர் கவனித்ததை போலிசிடம் சொன்னார்கள்

அவ்வளவுதான் எல்லா பயணிகள் வந்தவர்கள், போனவர்கள் எல்லோரையும் சோதித்து குற்றவாளியியில் ஒருவனை பிடித்தார்கள், அவன் மூலவரை காடிவிட்டான். அவர் அடுத்த காப்பி கடையில் காபி குடித்தபொழுது பிடித்தார்கள்.

அவன் லண்டனில் மகா பிரபலமானான், இப்படி ஒரு கில்லாடியா என அவனை கோர்ட்டில் ஆஜர் படுத்தியபொழுது பார்க்க அடுத்த நாடுகளில் இருந்தெல்லாம் மக்கள் விசா வாங்கி வந்தார்கள். லண்டன் கண்ட பெரும் கூட்டத்தில் அதுவும் ஒன்று
கோர்ட்டில் அவன் கொடுத்த வாக்குமூலத்தில் அரண்டு போய் இருந்தது நீதிமன்றம், இப்படியும் ஒருவன் திட்டமிட முடியுமா? இவ்வளவு நுட்பமா? என வியந்தார்கள்.நமது நாட்டில் இப்படி ஒரு அறிவாளியா என சிலர் காலரை தூக்கிகொண்டார்கள்.

அவன் பக்க்கத்து கல்லறை தோட்டத்தில் கல்லறையில் தங்கத்தை புதைத்து வைத்ததாக சொல்லிவிட்டு வெளிவந்தான், ஒரு பெண் வாயில் முத்தம் கொடுத்தாள், அவள் அதே விலைமாது.

முத்தம் கொடுத்தவள் வாய்க்குள் ஒரு பின்னை செலுத்திவிட்டு சென்றதை யாரும் கவனிக்கவில்லை, அந்நாளைய குதிரை வண்டி காவலில் செல்லும்பொழுது அந்த பின்னை வைத்து கை விலங்கினை திறந்து தப்பினான் அவன்.

அதன் பின் அவனையும் காணவில்லை, அவளையும் காணவில்லை ,பெரும்பான்மை தங்கத்தையும் காணவில்லை, உலகிலே கொள்ளையிட்டு அகபபட்டால் எப்படி மீதி தங்கத்தோடு தப்பி என்ன செய்யவேண்டும், என திட்டமிட்ட முதல் கொள்ளையன் அவனே, அவ்வளவு எச்சரிக்கை அவனுக்கு.இன்று வரை உலகின் சுவாரஸ்யமான கொள்ளை அது, உலகறிவுள்ள திருடர்களுக்கெல்லாம் அவனே குரு, துர் ஆத்மா, வழிகாட்டி எல்லாம், அப்படி ஒரு திறமையான திருடன் இனி பிறக்க வாய்ப்பில்லை என்கின்றார்கள், பெரும் கொள்ளையர்கள் அவன் ஆளுயர படத்தினை வைத்து ரகசியமாக வணங்குவர் என்பார்கள்

இப்பொழுது என்ன நடந்திருக்கின்றது, சேலத்தில் இருந்து சென்னை வந்த ரயிலில் அதே போல 340 கோடி ரூபாய் ஓடும் ரயிலில் கொள்ளையடிக்க பட்டிருக்கின்றது, தமிழ்நாடு அலறுகின்றது

இங்கிலாந்து கொள்ளையில் ஸ்காட்லாண்டு யார்டு தன்னை யார் என நிரூபித்தது, இதில் தமிழக போலிஸ் எப்படி தன்னை நிருபிக்கின்றது என பார்க்கலாம்
மகா சுவாரஸ்யமான கொள்ளை இது, குற்றவாளிகள் பிடிபடும்பொழுதுதான் உண்மை தெரியும், இப்பொழுதெல்லாம் குற்றவாளிக கழுத்தினை அறுத்துகொள்கின்றார்களாம், ஆனாலும் ஒரு விவர வட்டம் வெளிவரும்
.

VISWESWARAIYA ,ENGINEER OF DAMS BORN 1861 SEPTEMBER 15 - 1962 APRIL 12





VISWESWARAIYA ,ENGINEER OF DAMS 
BORN 1861 SEPTEMBER 15 - 1962 APRIL 12

மோக்ஷகுண்டம் விஸ்வேஸ்வரையா

(பிறப்பு: 1861 செப். 15- மறைவு: 1962, ஏப். 12)
மோக்ஷகுண்டம்
விஸ்வேஸ்வரையாஅறிவியல் வளர்ச்சியின் பயன்பாட்டுத் துறை தான் பொறியியல். உலகின் நிலையை பகுத்து ஆராய்வது அறிவியல். அதனால் கிடைக்கும் கோட்பாடுகள், கண்டுபிடிப்புகளைப் பயன்படுத்தி, புதிய வடிவமைப்புகள், கட்டமைப்புகள், சமுதாய வளர்ச்சிக்கான கருவிகளை உருவாக்குவது பொறியியல்.இன்று உலகுக்கு அதிகமான பொறியாளர்களையும் தொழில்நுட்ப நிபுணர்களையும் அளிக்கும் நாடாக இந்தியா உள்ளது. இதற்கு அடிகோலியவர்களுள் ஒருவர், ‘முன்னுதாரணமான பொறியாளர்’ என்று போற்றப்படும் மோக்ஷகுண்டம் விஸ்வேஸ்வரையா.எடுத்துக்கொண்ட பணியில் சிரத்தை, காலநிர்வாகம், அர்ப்பணமயமான கடும் உழைப்பு ஆகியவற்றின் மொத்த உருவமாக விஸ்வேஸ்வரையா போற்றப்படுகிறார். பிரிட்டீஷ் இந்திய அரசு அவரை மிகவும் மதிக்கத்தக்க குடிமகனாகக் கொண்டாடியது.

கர்நாடக மாநிலம், சிக்கபல்லபூர் மாவட்டம், முத்தனஹல்லியில் 1861 செப். 15-இல் வசதியான ஸ்மார்த்த பிராமணக் குடும்பத்தில் பிறந்தவர் விஸ்வேஸ்வரையா. அவரது முன்னோர், ஆந்திர மாநிலம், மோக்ஷகுண்டம் என்ற கிராமத்தைச் சேர்ந்தவர்கள். பெங்களூரில் உயர்நிலைக் கல்வியை முடித்த பின், அங்குள்ள மத்தியக் கல்லூரியில் பி.ஏ. பயின்ற விஸ்வேஸ்வரையா, அடுத்து புனே பொறியியல் கல்லூரியில் கட்டுமானப் பொறியியலில் பி.இ. பட்டம் பெற்றார்.

அவரது முதல் அரசுப் பணி, மும்பை பொதுப்பணித் துறையில் உதவி செயற்பொறியாளராகத் துவங்கியது (1885). பிறகு இந்திய பாசன ஆணையப் பணியில் அவர் இணைந்தார். அப்போது தக்காணப் பீடபூமியில் தனித்துவமான பாசனத் திட்டங்களை உருவாக்கி பெயர் பெற்றார்.பிறகு நாசிக், சூரத், புனே, மும்பை ஆகிய பகுதிகளில் பல்வேறு உயர்நிலைகளில் பொறியாளராக அவர் பணியாற்றினார். அப்போது சீனா, ஜப்பான், எகிப்து, அமெரிக்கா, கனடா போன்ற நாடுகளுக்குச் சென்று கட்டுமானத் துறையின் வளர்ச்சிகளைக் கண்டுவந்து, அவற்றை நம் நாட்டில் நடைமுறைப்படுத்தினார்.

1903-இல் அவர் வடிவமைத்து உருவாக்கிய தானியங்கி வெள்ளமடை மதகு (Automatic weir water Floodgates) உள்நாட்டில் உருவாக்கப்பட்ட சிறந்த கண்டுபிடிப்பாகும். நீர்த்தேக்கங்களில் தண்ணீரின் அதிகபட்ச இருப்பையும் அணையின் பாதுகாப்பையும் உறுதிப்படுத்தும் அந்த மதகுக்காக காப்புரிமையையும் (1903) விஸ்வேஸ்வரையா பெற்றார்.அந்த மதகு முதன்முதலாக புனே அருகிலுள்ள கடக்வஸ்லா நீர்த்தேக்கத்தில் நிறுவப்பட்டது. அதன் வெற்றிக்குப் பிறகு, டைக்ரா அணை, கிருஷ்ணராஜ சாகர் அணை உள்ளிட்ட பல நீர்த்தேக்கங்களில் அந்த மதகு பொருத்தப்பட்டது.

ஏமன் நாட்டின் ஏடன் நகருக்கு அரசால் 1906-07-இல் விஸ்வேஸ்வரையா அனுப்பப்பட்டார். அப்போது அங்கு அவர் ஆய்வு நடத்தி வடிவமைத்த, குடிநீர் விநியோகம்- சாக்கடை வடிகால் அமைப்பு, அந்நாட்டு அரசால் நடைமுறைப்படுத்தப்பட்டது.1909-இல் பிரிட்டீஷ் அரசுப் பணியிலிருந்து விருப்ப ஓய்வு பெற்ற விஸ்வேஸ்வரையா, மைசூரு அரசின் தலைமைப் பொறியாளராகவும் செயலாளராகவும் இணைந்தார். 1913-இல் நான்காம் கிருஷ்ணராஜ உடையார் மன்னராக இருந்தபோது, மைசூரு திவானாகப் பொறுப்பேற்றார்.

1918 வரை அங்கு திவானாகப் பணியாற்றிய காலகட்டத்தில் மைசூரு நகரின் வளர்ச்சிக்கு பல திட்டங்களைச் செயல்படுத்தினார். பத்ராவதி எஃகு ஆலை, மைசூரு வேளாண்மை பல்கலைக்கழகம், கர்நாடகா சோப் நிறுவனம், மைசூரு வர்த்தகக் கழகம், சிவசமுத்திர நீர்வீழ்ச்சியில் மின்னுற்பத்தித் திட்டம், ஸ்டேட் பாங்க் ஆஃப் மைசூரு ஆகியவை விஸ்வேஸ்வரையாவின் முயற்சியால் அமைந்த நிறுவனங்கள்.அவரது திட்ட வரைவாலும், மேற்பார்வையிலும் உருவானதுதான் மாண்டியாவில் காவிரியின் குறுக்கே கட்டப்பட்ட கிருஷ்ணராஜ சாகர் நீர்த்தேக்கம். இந்த அணை மைசூரு பகுதியின் பாசனத்தில் பெரும் புரட்சியை உருவாக்கியது. இந்த அணையின் முன்புறம் நிறுவப்பட்டுள்ள பிருந்தாவன் தோட்டம் அழகிய பூங்கா ஆகும். இங்கு அமைக்கப்பட்டுள்ள, நீரின் சக்தியால் இயங்கும் பலவிதமான வண்ண நீரூற்றுகள் சுற்றுலாப் பயணிகளை வெகுவாக ஈர்க்கின்றன.

பெங்களூரில் அவர் துவங்கிய அரசு பொறியியல் கல்லூரி, தற்போது விஸ்வேஸ்வரையா பொறியியல் பல்கலைக்கழகமாக வளர்ந்துள்ளது. தனியார் பலர் அவரது ஊக்குவிப்பால் பல துறைகளில் புதிய நிறுவனங்களைத் துவக்கினார்கள். அவரது திட்டமிட்ட பணிகளால் மைசூரு அரசு பல முனைகளில் வளர்ச்சியுற்றது. எனவேதான் ‘நவீன மைசூரின் தந்தை’ என்று அவர் போற்றப்படுகிறார்.

விசாகப்பட்டினம் துறைமுகத்தை கடல் அரிப்பிலிருந்து காக்கும் வகையிலான கட்டுமான வடிவமைப்பை விஸ்வேஸ்வரையா அளித்தார். தவிர ஹைதராபாத் நகரை வெள்ளச் சேதத்திலிருந்து தடுக்கும் கட்டமைப்பையும் அவர் அளித்தார் (1908). திருப்பதியிலிருந்து ஏழு மலைகளைத் தாண்டி திருமலைக்குச் செல்லும் வகையில் அற்புதமான மலைப்பாதையையும் தார்ச்சாலையையும் விஸ்வேஸ்வரையா வடிவமைத்தார். இவை அவருக்கு பெரும் புகழைத் தந்தன.
விஸ்வேஸ்வரையாவின் அரும்பணிகளைக் கெüரவிக்கும் வகையில், 1911-இல் பிரிட்டீஷ் அரசு அவருக்கு சர் பட்டம் வழங்கியது. அன்றுமுதல் அவர் ‘சர். எம்.வி.’ என்று பிரபலமாக அழைக்கப்பட்டார்.

பல கெüரவ டாக்டர் பட்டங்களும், விருதுகளும் பெற்ற விஸ்வேஸ்வரையா, சர்வதேச கட்டுமானப் பொறியாளர் சங்கத்தின் கௌரவ உறுப்பினராகத் தேர்வு செய்யப்பட்டார். பெங்களூரு அறிவியல் கழகத்தின் ஃபெல்லோஷிப்பும் அவருக்கு வழங்கப்பட்டது. 1923-இல் கூடிய இந்திய அறிவியல் காங்கிரஸ் மாநாட்டின் தலைவராக விஸ்வேஸ்வரையா தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இந்தியாவின் மீள் கட்டமைப்பு (1920), திட்டமிட்ட இந்தியப் பொருளாதாரம் (1934) ஆகிய நூல்களை அவர் எழுதியிருக்கிறார். அவரது பெயர் தாங்கி பல கல்வி நிறுவனங்கள் இயங்குகின்றன. அவரைப் பெருமைப்படுத்த பெங்களூரில் அனைத்திந்திய உற்பத்தியாளர் கூட்டமைப்பால் உருவாக்கப்பட்ட விஸ்வேஸ்வரையா பொறியியல், தொழில்நுட்ப அருங்காட்சியகம், ஒவ்வொரு மாணவரும் காண வேண்டிய அரிய பொக்கிஷமாகும்.

நாட்டின் பெருமைக்குரிய உயர் விருதான ‘பாரத ரத்னா ’ விஸ்வேஸ்வரையாவுக்கு 1955-இல் வழங்கப்பட்டது.
1962, ஏப். 12-இல் தனது 101 வயதில் அவர் மறைந்தார்.

இந்திய பொறியியல் வானில் துருவ நட்சத்திரமாக ஒளிரும் விஸ்வேஸ்வரையாவின் பிறந்த தினம், தேசிய பொறியாளர் தினமாக ஆண்டுதோறும் கொண்டாடப்படுகிறது.
.

Sunday 30 August 2020

TARA SUKKO HEAD SENT TO SHAHJAKHAN BY AURANGAZEEB 1659 AUGUST 30


TARA SUKKO  HEAD SENT TO SHAHJAKHAN 
BY AURANGAZEEB 1659 AUGUST 30
.
ஆகஸ்ட் 30 ,1659

அவுரங்கசீப்பின் பார்வைக்கு அனுப்பப்பட்டது தாரா சுக்கோவின் தலை .!
அதை ஷாஜகானுக்கு அனுப்பினார் அவுரங்கசீப் !!
அன்றிரவு பெரிய விருந்து .வெற்றிகரமாக தன் ஒரு சகோதரன் வெற்றிக்காக கொண்டாடினாள் சகோதரி ரோஷனா பேகம் !!! ஆகஸ்ட் 30 ,1659

.தாரா சுக்கோ ஷாஜகானின் முதல் மகன் ஆவார் .அவுரங்கசீப் பிற்கும் இவருக்கும் சிறிய வயது முதல் ஆகாது .பிரிய மகன் தாரா சுக்கோ சொன்னபடி யெல்லாம் ஷாஜகான் ஆடினார்

.அவுரங்கசீபை எவ்வளவு அவமானப் படுத்த முடியுமோ
அவ்வளவு தூரம் அவமானப் படுத்தினர் ஷாஜகானும் ,இந்த நிலையில் ஒரு அவசர செய்தி " ஷாஜகானின் உடல்நிலை மோசம் "

முராட் பக்ஸ் தன்னை அரசராக முடிசூடி குஜராத்தை விழுங்கி கொண்டார் . ஷா சுஜாவும் அதையே தான் செய்தார் வங்கத்தின் அரசர் ஆனார் .

அவுரங்கசீப் நிதானமாய் முன்னேறினார் .


தாராவிற்கு படைபலம் அதிகம் .மேலும் ஷாஜகான் துணை வேறு .ஆனால் படை நடத்தும்
அனுபவம் இல்லாதவர் .அவுரங்கசீப்புக்கோ படை நடத்துவதில் சூரர் .படைபலம் குறைவு .கூடவே மீர் ஜூம்லா ,தக்காண சுல்தான்கள் ஆதரவு.

முதலில் முரத் பாக்சுடன் இணைந்தார் .தாராவின் படைக்கும் ,அவுரங்கசீப்பிற்கும் சண்டை .வெற்றி பெற்று ஆக்ரா சென்றார் .போர் முடிவுற்றதும் " ஆலம்கீர் " என்று பொறிக்கப்பட்ட வாளுடன் வரவேற்றார் ஷாஜகான் .

என்னை சந்திக்க வா மகனே ...என்ற கடிதம் வேறு . அவுரங்கசீப் நிதானமாய் சிந்தித்தார் .தன்னை கொலை செய்ய சதி நடக்கிறது என்று சந்தேகப்பட்டார் .

தந்தையே கோட்டையை என்னிடம் ஒப்படையுங்கள் ..கடிதம் எழுதினார் .

கோட்டையை அடையுங்கள் - இது ஷாஜகான்


மூன்று நாள் பொறுமை காத்தார் அவுரங்கசீப் .நாலாவது நாள் கோட்டைக்கு செல்லும் யமுனை நதி நீரை நிறுத்தினார்

மனம் வெறுத்து போய் தனயன் கட்டளையை மீற முடியாமல் கோட்டை கதவை திறந்தார் . அவசரப்படவில்லை அவுரங்கசீப் .

ரெண்டுநாள் கழித்து சகோதரி ஜஹானாராவிடம் இருந்து ஒரு கடிதம் அதில் பேரரசில் பெரும்பகுதியை எடுத்துக்கொள் .சகோதரர்களுக்கு கொடுக்க வேண்டிய நியாயமான பங்கை கொடுத்து விடு .
தந்தை இது சமந்தமாய் பேச விரும்புகிறார் .

குழப்பத்தில் அவுரங்கசீப் !

சகோதரி ரோஷனா விடம் இருந்து ஒரு எச்சரிக்கை கடிதம்

அண்ணா ! உன்னை அழைத்து பேசுவதாக நடித்து அங்குள்ள பலம் வாய்ந்த அலி பெண்களால்
தாக்கி கொலை செய்வதாக திட்டம் .எச்சரிக்கையாய் இரு .

மறுநாள் அவுரங்கசீப்பின் மகன் ஒரே உதவியாளன் உடன் சென்று தாத்தாவை பார்க்க அனுமதி கேட்டான்
திடீரென்று ஷாஜகானின் பாதுகாவலரை தாக்கி கொன்றான் .அவுரங்கசீப் தந்தையை சந்திக்கவே இல்லை கைது செய்யப்பட்டு கோட்டைக்குள்ளே சகல சௌகரியங்களுடன் சிறை வைக்கப்பட்டார் ஷாஜகான்
ஆசனத்தில் அமர்ந்து நிர்வாகத்தை தானே ஏற்று நடத்து வதாய் அறிவித்தார் .முடி சூட்டி கொள்ளவில்லை

என் எதிரிகள் தோற்கடிக்கப்பட்டுள்ளனர் -இன்னும் ஓழிக்கப்படவில்லை

இதற்கிடையில் ஷாஜகான் தன் மகன் முரத்துக்கு கடிதம் எழுதினார்

" நீ அவுரங்கசீபை வீழ்த்தி அரியணையை கைப்பற்று
ஆட்சிப்பொறுப்பை நீயே ஏற்று நடத்து "
இந்த கடிதம் முராத் எங்கோ தவற விட்டு விட்டார் .அது அவுரங்கசீப் கையில் கிடைத்தது

உன்னை பார்த்து நாள் ஆகிறது .என்னோடு உணவருந்த வா என் சகோதரனே என்று அவுரங்கசீப்
கடிதம் எழுதினார் .விருந்தில் தாராளமாய் மது பரிமாறப்பட்டது .துணைக்கு ஒரு அடிமை பெண் .
முரத் பக்ஸ் கழித்த கடைசி சந்தோச நாள் அதுவே

.அதன் பிறகு கொலைக்குற்றம் சாட்டப்பட்டு
1661 டிசம்பரில் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது

.அடுத்து சுஜா . போர்க்களத்தில் தப்பி ஓடி
பழங்குடியினரால் கிழக்கு வங்கத்தில் ( பங்களாதேஸ் ) கொலை செய்யப்பட்டார்

தாரா கொலை
----------------------

குஜராத்தில் பல ஆயத்தங்கள் செய்வதாய் தகவல் .உடனே அங்கு சென்றார் அவுரங்கசீப் .
ஓட ஓட துரத்தி மாலிக் ஜவான் என்ற நண்பரிடம் அடைக்கலம் புகுந்தார் .அவரோ " தாராவை
பிடித்து வைத்துள்ளேன் " என்று அவுரங்கசீப்புக்கு தகவல் அனுப்பினார்

நலிவடைந்த ஒரு பெண் யானை .அதன் மேல் கிழிந்த உடையில் கைகால்கள் கட்டப்பட்டபடி
தாரா சுக்கோ .பேராசை ஆள ஒருவர் மட்டும் போதும் .தாரா ஆபத்தானவன் ,அழிக்கப்பட வேண்டியவன்
நீ உண்மையான இஸ்லாமியனாக நடந்து கொள்ளவில்லை
மதத்துரோகம் செய்திருக்கிறாய்

மரணதண்டனை நிறைவேற்றப்பட்டது
ஆகஸ்ட் 30 ,1659

.
.



மரணதண்டனை நிறைவேற்றப்பட்டது
ஆகஸ்ட் 30 ,1659

அவுரங்கசீப்பின் பார்வைக்கு அனுப்பப்பட்டது தாரா சுக்கோவின் தலை .!
அதை ஷாஜகானுக்கு அனுப்பினார் அவுரங்கசீப் !!
அன்றிரவு பெரிய விருந்து .வெற்றிகரமாக தன் ஒரு சகோதரன் வெற்றிக்காக கொண்டாடினாள் சகோதரி ரோஷனா பேகம் !!! ஆகஸ்ட் 30 ,1659

N.S.KRISHNAN ,COMEDY ACTOR BORN 1908 NOVEMBER 29 - 1957 AUGUST 30





N.S.KRISHNAN  ,COMEDY ACTOR BORN 
1908 NOVEMBER 29 - 1957 AUGUST 30


தமிழ் திரைப்படத்துறையில் ‘கலைவாணர்’ என அழைக்கப்பட்ட என். எஸ். கிருஷ்ணன் அவர்கள், இறப்பு: ஆகஸ்ட் 30, 1957

தமிழ் சினிமா உலகில் ஒரு புகழ்பெற்ற நகைச்சுவை நடிகர் மற்றும் பாடகர் ஆவார். நகைச்சுவையில் சமூக சீர்த்திருத்தக் கருத்துக்களை உட்படுத்தி, சினிமா ரசிகர்களை சிரிக்கவைத்ததோடு மட்டுமல்லாமல், சிந்திக்க வைத்தவர். “சிந்திக்கத் தெரிந்த மனித குலத்துக்கு சொந்தமானது சிரிப்பு” என்ற பாடல் ஒன்றே என். எஸ். கலைவாணரின் நகைச்சுவைக் கலந்த சிந்தனைக்கு எடுத்துக்காட்டாகும். தமிழ் சுனிமா உலகில் நகைச்சுவைக்கென தனி பாணியை உருவாக்கிக் கொண்டு, பிறர் மனதைப் புண்படுத்தாமல் நகைச்சுவைகளைக் கையாளும் அற்புதக் கலைஞன். தமிழில் மட்டுமல்ல, இந்தியாவிலேயே இணையற்ற நகைச்சுவை நடிகராக விளங்கிய இவர், உலகப் புகழ்பெற்ற சார்லி சாப்ளின் போல, சிரிப்புடன் சிந்தனையையும் கலந்து கொடுத்தவர். ஒரு நாடகக் கலைஞனாகத் தன்னுடைய வாழ்க்கையைத் தொடங்கி, பிறகு இந்திய சினிமா வரலாற்றிலேயே நகைச்சுவையில் அறிவுபூர்வமான பல கருத்துக்களை விதைத்து, மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தி, சுமார் ஐம்பது ஆண்டுகளைக் கடந்து, சினிமா ரசிகர்களின் மனதில் இன்றும் வாழ்ந்துகொண்டிருக்கும், அவரின் வாழ்க்கை வரலாறு மற்றும் திரைத்துறைக்கு அவர் ஆற்றியப் பங்களிப்பினை விரிவாகக் காண்போம்.

பிறப்பு: நவம்பர் 29, 1908

பிறப்பிடம்: நாகர்கோயில், தமிழ்நாடு மாநிலம், இந்தியா

பணி: நடிகர், பின்னணிப் பாடகர் மற்றும் எழுத்தாளர்

இறப்பு: ஆகஸ்ட் 30, 1957

நாட்டுரிமை: இந்தியன்

பிறப்பு

அவர், 1908 ஆம் ஆண்டு நவம்பர் 29 ஆம் நாள் இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்திலுள்ள “நாகர்கோவிலுக்கு” அருகில் ஒழுங்கினசேரி என்ற இடத்தில், ‘சுடலையாண்டி பிள்ளை’, என்பவருக்கும், ‘இசக்கியம்மாலுக்கும்’ மகனாக ஒரு ஏழ்மையான குடும்பத்தில் பிறந்தார்.

ஆரம்ப வாழ்க்கை

மிகவும் ஏழ்மையான குடும்பத்தில் பிறந்ததால், கல்வி என்பது அவருக்கு எட்டாக்கனியாகவே போய்விட்டது. நான்காம் வகுப்புடன் தன்னுடைய பள்ளிப்படிப்பைப் நிறுத்துக்கொண்ட அவர், சிறுவயதிலேயே நாடகக் கொட்டையில் தின்பண்டங்கள் விற்கத் தொடங்கினார். நாளடைவில் நாடகங்கள் அவரை மிகவும் ஈர்த்ததால், ஒரு நாடகக்குழுவில் சேர்ந்து சிறிதுகாலம் நடித்து வந்தார். அதன் பிறகு தன்னுடைய நண்பர்களுடன் இணைந்து ஒரு நாடகக்குழுவை தொடங்கிய என். எஸ். கிருஷ்ணன் அவர்கள், பல நாடகங்களை இயக்கியும் நடித்தும் வந்தார்.

சினிமா பயணம்

தன்னுடைய நாடகக் குழு மூலம் பல நாடகங்களை மேடையில் அரங்கேற்றி வந்த அவர், திரைப்படத்தில் நடிக்க வாய்ப்புகள் கிடைத்தது. இவர் நடித்த முதல் படம் ‘சதிலீலாவதி’. இருந்தாலும், திரைக்கு முதலில் வந்த படம் ‘மேனகா’ என்ற திரைப்படம் ஆகும். பெரும்பாலும், சொந்தமாக நகைச்சுவை வசனங்களை எழுதி, அதையே நாடகத்திலும், திரைப்படங்களிலும் பயன்படுத்துவதை வழக்கமாக கொண்டுவந்த அவர், தொடர்ந்து பல படங்களில் நடித்து வந்தார். குறுகிய காலத்திற்குள் சுமார் 150 –க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்த அவர், நகைச்சுவையில் புதிய மறுமலர்ச்சியையை ஏற்படுத்தி விட்டார். மேலும், இவருடைய மனைவி மதுரம் அவர்கள், ஒரு பிரபலமான நடிகை என்பதால், இருவரும் இணைந்து பல படங்களில் நடித்தனர். தமிழ் சினிமா வரலாற்றில் நகைச்சுவையை, சினிமா காட்சிகளாக மட்டுமின்றி, பாடல்களாகவும் அமைக்க முடியும் என நிரூபித்தார். சொந்தக் குரலில் கருத்தாழமிக்க பல பாடல்களைப் பாடியுள்ள இவர் ‘பணம்’, ‘மணமகள்’ போன்ற திரைப்படங்களையும் இயக்கியுள்ளார்.

சிரிக்க வைத்த மாபெரும் சிந்தனையாளர் கலைவாணர்

இவருடைய நகைச்சுவைக் காட்சிகள் வெறும் பொழுதுபோக்குக்காக மட்டுமல்லாமல், வாழ்வியலை ஒரு சில நொடிகளிலேயே புரிய வைக்கும் ஆற்றலை உண்டாக்கியவையாகும். யார் மனதையும் புண்படுத்தாமல், நகைச்சுவை மூலமாக சிந்தனை மிகுந்த கருத்துக்களை வெளிப்படுத்தினார். அறிவியல் கருத்துக்களையும், தன்னுடைய நகைச்சுவை வாயிலாக வெளிப்படுத்தியவர். பல சீர்த்திருத்த கருத்துக்களை திரைப்படங்களில் துணிவோடு எடுத்துக் கூறியவர். குறிப்பாகச் சொல்லப்போனால் என். எஸ். கிருஷ்ணன் அவரகள், சாதாரண நகைச்சுவை நடிகர் மட்டுமல்ல, தன்னுடைய சிரிப்பால் அனைத்து மக்களையும் சிந்திக்க வைத்தவர். இதானால் தான் இவருக்கு “கலைவாணர்” என்ற பட்டம் 1947 ஆம் ஆண்டு சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள நடராஜா கல்வி கழகத்தின் சார்பில் கொடுக்கப்பட்டு கெளரவிக்கப்பட்டார்.

அவர் நடித்த சில திரைப்படங்கள்

‘சதிலீலாவதி’, ‘அம்பிகாபதி’, ‘சந்திர காந்தா’, ‘மதுரை வீரன்’, ‘காளமேகம்’, ‘சிரிக்காதே’, ‘உத்தம புத்திரன்’, ‘சகுந்தலை’, ‘ஆர்யமாலா’, ‘கதம்பம்’, ‘மங்கம்மா சபதம்’, ‘ஹரிச்சந்திரா’, ‘ஹரிதாஸ்’, ‘பர்மா ராணி’, ‘பவளக்கொடி’, ‘பைத்தியக்காரன்’, ‘சந்திரலேகா’, ‘நல்லத்தம்பி’, ‘மங்கையர்க்கரசி’, ‘தம்பிதுரை’, ‘பவளக்கொடி’, ‘ரத்னகுமார்’, ‘மங்கம்மாள்’, ‘வனசுந்தரி’, ‘பணம்’, ‘அமரக்கவி’, ‘காவேரி’, ‘டாக்டர் சாவித்திரி’, ‘முதல் தேதி’, ‘ரங்கோன் ராதா’, ‘பைத்தியக்காரன்’, ‘ஆர்ய மாலா’, ‘மங்கையர்க்கரசி’, ‘ராஜா ராணி’, ‘பவளக்கொடி’, ‘சகுந்தலை’, ‘மணமகள்’, ‘நல்லகாலம்’, ‘ராஜா தேசிங்கு’.

அவர் பாடிய சில பாடல்கள்

‘ஜெயிலுக்குப் போய் வந்த’, ‘பணக்காரர் தேடுகின்ற’, ‘ஆசையாக பேசிப்பேசி’ (பைத்தியக்காரன்), ‘ஒண்ணுலேயிருந்து’, ‘இடுக்கண் வருங்கால்’ (முதல் தேதி), ‘சங்கரியே காளியம்மன்’ (ரங்கோன் ராதா), ‘காட்டுக்குள்ளே’, ‘ஒரு ஏகாலியைப்’, ‘ஆரவல்லியே’ (ஆர்யா மாலா), ‘கண்ணா கமலக் கண்ணா’, ‘கண்னேந்தன்’ (கண்ணகி), ‘இருக்கிறது பார் கீழே’ (மங்கையர்க்கரசி), ‘கண்ணே உன்னால்’, ‘சந்திர சூரியன்’ (அம்பிகாபதி), ‘தீனா..மூனா.. கானா…’ (பணம்), ‘உன்னருளால்’, ‘என் சாண் உடம்பில்’ (ரத்னமாலா), ‘சிரிப்பு இதன் சிறப்பை’ (ராஜா ராணி), ‘வாதம் வம்பு பண்ண’, ‘காசிக்குப் போனா கருவுண்டாகுமென்ற’ (டாக்டர் சாவித்திரி), ‘நித்தமும் ஆனந்தமே’, ‘விஜய காண்டிபா வீரா’, ‘அன்னம் வாங்கலையோ’, ‘இவனாலே ஓயாதத் தொல்லை’ (பவளக்கொடி), ‘இன்னுக்கு காலையில’, ‘வெகுதூரக்கடல் தாண்டி’ (சகுந்தலை), ‘நல்ல பெண்மணி’, ‘ஆயிரத்திதொள்ளாயிரத்தி’, ‘சுதந்திரம் வந்ததுண்ணு’ (மணமகள்), ‘சும்மா இருக்காதுங்க’ (நல்லகாலம்).

தேசபக்தி

பாரதத்தின் தந்தை எனப் போற்றப்படும், மகாத்மா காந்தியின் தீவிர பற்றாளராக விளங்கிய என். எஸ். கிருஷ்ணன் அவர்கள், காந்தியடிகளின் மறைவுக்குப் பின்னர், அவருடைய நினைவைப் போற்றும் வகையில், அப்பொழுதே ஐம்பதாயிரம் ரூபாய்க்கு மேல் தமது சொந்தப் பணத்தினை செலவிட்டு, தன்னுடைய ஊரில் அவருக்கு நினைவுத்தூண் எழுப்பினார்.

கலைவாணரின் சிந்தனையில் உதிர்ந்த ஒரு துளி

1957 ஆம் ஆண்டு நடந்த தமிழக சட்டசபை தேர்தலில் அண்ணாவின் சார்பாக பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அந்த தேர்தலில், அண்ணாவை எதிர்த்து ஒரு மருத்துவர் போட்டியிட்டார். அப்பொழுது காஞ்சிபுரத்தில் நடந்த கூட்டத்தில், அவர், பேசுகையில் ஆரம்பத்தில் இருந்து கடைசி வரை அந்த மருத்துவரை பற்றியே புகழ்ந்து பேசிவந்தார். இறுதியில், ‘இவ்வளவு நல்லவரை நீங்கள் சட்டசபைக்கு அனுப்பினால் உங்களுக்கு வைத்தியம் பார்ப்பது யார்? அதனால் டாக்டரை உங்கள் ஊரிலேயே வைத்துக்கொள்ளுங்கள், சிறந்த பேச்சாளரும், எழுத்தாளருமான அறிஞர் அண்ணாவை சட்டசபைக்கு அனுப்புங்கள்’ என முடித்தார்.

இல்லற வாழ்க்கை

1931 ஆம் ஆண்டு நாகம்மை என்னும் பெண்மணியைத் திருமணம் செய்துகொண்டார். அதன் பிறகு, ஒரு முறை “வசந்தசேனா” படப்பிடிப்பிற்காக புனேவிற்கு சென்ற போது, டி. எம். மதுரம் என்ற நடிகையுடன் காதல் வயப்பட்ட இவர், விரைவில் திருமணமும் செய்துக்கொண்டனர். இவர் திருச்சியிலுள்ள ஸ்ரீரங்கத்தை சேர்ந்தவர் ஆவார். பின்னர், டி. எம். மதுரத்தின் தங்கை வேம்பு என்பவரை மூன்றாம் மனைவியாக மணம் புரிந்தார். நாகம்மைக்கு கோலப்பன் என்னும் மகனும், டி. எம். மதுரத்திற்கு ஒரு பெண் குழந்தையும், வேம்புக்கு நான்கு மகன்களும், இரண்டு மகள்களும் பிறந்தனர்.

கொலைக் குற்றச்சாட்டு

இந்து நேசன் பத்திரிக்கை ஆசிரியர், லட்சுமி காந்தன் கொலை வழக்கில் அப்பொழுது பிரபல கதாநாயகனாக இருந்த தியாகராஜ பாகவதருடன் குற்றம் சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டார். சுமார் 30 மாதங்கள் சிறைவாசத்திற்குப் பிறகு விடுதலை செய்யப்பட்ட என். எஸ். கிருஷ்ணன் அவர்கள், மீண்டும் படங்களில் நடிக்கத் துவங்கினார். இந்நிகழ்வு, இவரின் கலைப் பயணத்திற்கு ஒரு கரும்புள்ளியை ஏற்படுத்தினாலும், தொடர்ந்து பல திரைப்படங்களில் நடித்து, தமிழ் சினிமாவில் “கலைவாணர்” எனப் புகழப்பட்டார்.

மறைவு

நகைச்சுவையில் புதிய புரட்சியை ஏற்படுத்திய என். எஸ் கிருஷ்ணன் அவர்கள், 1957 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 30 ஆம் தேதி, தன்னுடைய நாற்பத்தொன்பதாவது வயதில் காலமானார். தமிழ்நாடு அரசு, அவரது நினைவாக, சென்னையில் உள்ள அரசு அரங்கத்திற்கு, ‘கலைவாணர் அரங்கம்’ எனப் பெயர் சூட்டியது.

தமிழ் சினிமாவில் பல கலைஞர்கள் உருவாகி, சாதித்து, மறைந்திருக்கலாம், ஆனால், என். எஸ். கலைவாணரைப் போல், நகைச்சுவையில் சமூக சீர்திருத்தக் கருத்துக்களைத் திரைப்படங்களில் துணிவோடு எடுத்துக்கூறியவர் எவரும் இல்லை. கருத்துக்களை வழங்குவதில் மட்டும் இவர் வள்ளலாக இருந்துவிட வில்லை, தமது வாழ்க்கையிலும் ஆயிரக் கணக்கானவர்களுக்குப் பணத்தை வாரி வழங்கிய அற்புத மனிதர் ஆவார். உண்மையை சொல்லப்போனால், என். எஸ். கிருஷ்ணன் அவர்களை நகைச்சுவை நடிகர் என்ற வட்டத்துக்குள் அடைத்துவிட முடியாது, சிரிப்பு மொழியில் சீர்திருத்த விதிகளைத் தூவிய மாபெரும் சிந்தனையாளர். காலங்கள் மாறினாலும், திரைப்படத்துறையில் மாற்றங்கள் பல நிகழ்ந்தாலும், என். எஸ். கலைவாணர் அவர்கள் நூற்றாண்டுகள் பல கடந்தும், கலையுலகில் சாகா சரித்திர நாயகனாக வாழ்ந்துவருகிறார் என்பதில், எந்தவித ஐயமும் இல்லை.
Image may contain: 1 person, smiling

MADURAI VEERAN HISTORY


MADURAI  VEERAN HISTORY




17-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த மதுரை வீரன், நாயக்கர் அரசு காலத்தில் வழிப்பறி கொள்ளையர்களை அடக்க பயன்படுத்தப்பட்டார். மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் பொட்டுக் கட்டி விடப்பட்டிருந்த செளராஷ்டிர சமூகத்தைச் சேர்ந்த வெள்ளையம்மாள் என்ற பெண்ணை மீட்பதற்காக கோயிலுக்குள் நுழைய முயன்ற மதுரை வீரனை, உயர் சாதியினர் கை, கால்களை வெட்டி கொலை செய்ததுதான் உண்மையான வரலாறு.
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
ஆதித் தமிழர் பேரவையின் தொழிலாளர் அணி சார்பில் வெளியிடப்பட்ட "மதுரை வீரன் உண்மை வரலாறு' என்ற நூலுக்கு தடை விதிக்கப்பட்டிருப்பதை எதிர்த்து, நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கவும், ஆளுநரிடம் முறையிடவும் முடிவு செய்திருப்பதாக பேரவையின் நிறுவனர் இரா.அதியமான் தெரிவித்தார்.
இதுகுறித்து கோவையில் செய்தியாளர்களிடம் சனிக்கிழமை அவர் கூறியதாவது:

மதுரை வீரன் குறித்து கடந்த 2007-ஆம் ஆண்டில் பேராசிரியர் அருணன் 64 பக்கங்கள் கொண்ட ஒரு நூலை எழுதியுள்ளார். அதில் இல்லாத வரலாற்றுத் தகவல்களை சேகரித்து கடந்த 2013-இல் எழுத்தாளர் ராயப்பன் எழுதிய "மதுரை வீரன் உண்மை வரலாறு' என்ற நூலுக்கும், செந்தில் மள்ளர் என்பவரின் "வேந்தர் குலத்தின் இருப்பிடம் எது' என்ற நூலுக்கும் தமிழக அரசு அண்மையில் தடை விதித்துள்ளது. இந்த நூல் வெளியாகி 2 ஆண்டுகளுக்குப் பிறகு அரசு இப்போது தடை விதித்திருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
அந்த நூலில் தலித் மக்களின் கடவுளாகப் போற்றப்படும் மதுரை வீரனின் வரலாற்றை மட்டுமே கூறியுள்ளோம். நூலின் எந்த ஓர் இடத்திலும் எந்த ஒரு சமுதாயத்தைக் குறித்தும் குறைவாகவோ, தாழ்த்தியோ எழுதவில்லை. ஆய்வு இலக்கியமான மதுரை வீரன் நூலை அதிமுக அரசு தடை செய்திருப்பது கருத்துரிமைக்கு எதிரானது மட்டுமின்றி ஒடுக்கப்பட்ட மக்களின் மீதான அரசின் அடக்குமுறையை காட்டுவதாகவும் உள்ளது.

ஏற்கெனவே கடந்த 1956-இல் வெளியான மதுரை வீரன் திரைப்படத்தில் அருந்ததியர் சமூகத்தில் பிறந்த மதுரை வீரனை, அரச குடும்பத்து வாரிசாக தவறாக சித்திரித்துள்ளனர். 17-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த மதுரை வீரன், நாயக்கர் அரசு காலத்தில் வழிப்பறி கொள்ளையர்களை அடக்க பயன்படுத்தப்பட்டார். மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் பொட்டுக் கட்டி விடப்பட்டிருந்த செளராஷ்டிர சமூகத்தைச் சேர்ந்த வெள்ளையம்மாள் என்ற பெண்ணை மீட்பதற்காக கோயிலுக்குள் நுழைய முயன்ற மதுரை வீரனை, உயர் சாதியினர் கை, கால்களை வெட்டி கொலை செய்ததுதான் உண்மையான வரலாறு.

இந்த நூலுக்குத் தடை விதிக்கப்பட்டிருப்பதன் மூலம், எழுத்தாளர் பெருமாள் முருகனின் மாதொரு பாகன் நூலைப் போலவே இதுவும் முகநூல், கட்செவி அஞ்சல், மின்னஞ்சல் போன்ற ஊடகங்கள் மூலமாகப் பரவும் வாய்ப்பை அரசே ஏற்படுத்திக் கொடுத்துள்ளது. இருப்பினும் இந்த நூலின் மீதான தடையை நீக்காவிட்டால் மாநிலம் முழுவதிலும் போராட்டங்கள் நடத்தப்படும். முன்னதாக நூலின் மீதான தடையை நீக்க வலியுறுத்தி உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்க உள்ளோம். மேலும், மாநில ஆளுநரிடமும் மனு அளிக்க இருப்பதாக அதியமான் கூறினார்.







கருப்பு, ஐயனார் போல மதுரைவீரனும் பரவலாக எல்லோரும் வணங்கும் கடவுளாக இருக்கிறார். மதுரை வீரன் கதைப்பாடலும், மதுரைவீரன் கூத்தும் இந்தக் கதையை காலங்காலமாக மக்களிடம் கொண்டுவந்து சேர்த்திருக்கின்றன. சரித்திரங்களை படங்களாக கொண்டு செல்லும் முயற்சியில் எம்.ஜி.ஆர் எடுத்து நடித்த படம் “மதுரைவீரன்”.



எல்லா தெய்வங்களைப் போல சாதிபாராமல் வணங்கினாலும், மதுரைவீரன் சத்திரியன் அல்ல, சக்கிலியன் என்று சொல்வோரும் உண்டு. ஆனால் கதைப் பாடல்களில் அரசனின் மகனாகவே மதுரைவீரன் சித்தரிக்கப்பட்டிருக்கிறான். தாழ்த்தப்பட்ட ஒருவனை தலைவனாக ஏற்றுக் கொள்ளாத மக்கள் இருக்கிறார்கள். கதையில் திரிபு ஏற்படுத்தி தந்திருக்கும் வாய்ப்பு இருக்கிறது. உண்மை எதுவென மதுரைவீரனை குலதெய்வமாக வணங்கும் நண்பர்கள் தான் சொல்லவேண்டும்.



கதை :



வாரணவாசி பாளையம் அரச குடும்பம், ராணிக்குக் குழந்தை பிறக்கிறது. ஆண் குழந்தை. சந்தோஷத்துடன் தமுக்கடித்து அறிவிக்கிறார்கள். ஆனால் ‘கொடி சுற்றிப் பிறந்திருக்கிற குழந்தையால் அரசுக்கும், குடிமக்களுக்கும் ஆபத்துவரும். அதனால் குழந்தையைக் காட்டில் கொண்டுபோய் விட்டுவிடவேண்டும்’ என்று சொல்கிறார் அங்குள்ள ஜோதிடர். ராணிக்குப் பிரிய மனமில்லை. மன்றாடிக் கெஞ்சுகிறார். இருந்தும், கதற கதறக் குழந்தையைப் பிரிக்கிறார்கள். கொண்டு போய் ஊர் எல்லையிலுள்ள காட்டில் விடுகிறார்கள் காவலர்கள்.

காட்டிற்குள் வந்த தாழ்த்தப்பட்ட ஜோடி அந்தக் குழந்தையை எடுத்து வளர்க்கிறது. வீரன் என்று பெயரிடுகிறார்கள். என்னதான் திறமையிருந்தாலும், தன்னைத் தாழ்ந்த சாதி என்று சொல்லி ஒதுக்கும்போது கோபப்பட்டு எதிர்க்கிறான் வீரன். ஆற்றில் விழுந்த ராஜகுமாரியான பொம்மியைக் காப்பாற்றுகிறான். பிறகு அரண்மனையை விட்டுத் தள்ளி பொம்மி விரதம் இருக்கும்போது காவலுக்குப் போகிறான். காதல் உருவாகிறது. அரண்மனையில் இருப்பவர்களுக்கு இதெல்லாம் பிடிக்கவில்லை. வீரனைப்பிடித்து யானை மிதித்து சாகவேண்டும் என்று தீர்ப்பளிக்கிறார்கள். அந்த நேரத்தில் யானையில் வந்து காப்பாற்றுகிறாள் பொம்மி.

திரும்பவும் வீரனைப் பிடிக்க திருச்சி மன்னரின் படை உதவியைக் கேட்கிறார்கள். வீரன், பொம்மி இருவரையும் பிடித்து திருச்சி மன்னர்முன் நிறுத்துகிறார்கள். சாதியை ஒரு பொருட்டாக நினைக்காமல் திருமணத்துக்குச் சம்மதம் தெரிவிக்கிறார் மன்னர். கூடவே, தனது தளபதியாக்கி திருமலைமன்னரின் அழைப்பை ஏற்று மதுரைக்கு அனுப்புகிறார்.

திருடர்களின் பிடியில் சிக்கியிருக்கிறது மதுரை. அழகர் மலைப்பகுதியில் சங்கிலிக் கருப்பன் தலைமையில் ஒரு கொள்ளைக்கூட்டம். அதைப் பிடிப்பதற்கு முன்பு அரண்மனை நாட்டியப் பெண்ணான வெள்ளையம்மாள் வீட்டில் கொள்ளை. போய்த் தடுக்கிறான் வீரன். அந்த வேகம் வெள்ளையம்மாளின் மனதைக் கவர்கிறது. திருமலை மன்னரும் அவள் மேல் காதலுடன் இருக்கிறார். இதில் வீரன் தலையிடுவதை அவர் விரும்பவில்லை.

பத்து நாட்களுக்குள் கொள்ளைக் கூட்டத்தைப் பிடிக்கக் கெடு விதிக்கிறார். மாறு வேடத்துடன் கொள்ளையர்கள் தங்கியிருக்கிற இடத்தைச் சுற்றி வளைக்கிறான் வீரன். பல பொருட்களை மீட்கிறான். கொள்ளைக் கூட்டத்தின் தலைவன் மட்டும் தப்பிவிடுகிறான்.

பத்து நாட்களுக்கான கெடு முடியாத நிலையில், மீட்ட பொருட்களை மொத்தமாக அரசனிடம் ஒப்படைப்பதற்காக வீட்டில் வைத்திருக்கிறான். பௌர்ணமி அன்று வெள்ளையம்மாள் வீட்டுக்குப் போகிறான். அரசனின் நெருக்கடி தாங்கமாட்டாமல் தன்னைச் சாகடித்துக் கொள்ள தயாராகிறாள் வெள்ளையம்மாள். வீரன் தடுத்து அவளையும் மனைவியாக்கிக் கொள்கிறான்.

திருமலை மன்னருக்குக் கோபம். வீரனைக் கைது செய்கிறார்கள். விசாரணை நடக்கிறது. திருடர்களுக்கு வீரன் உதவியாக இருந்ததாக பொய்க் குற்றம் சுமத்தப்படுகிறது. வாதாடுகிறான் வீரன். பலனில்லை. மாறு கை, மாறு கால் வாங்க உத்தரவிடுகிறார்கள்.

மாட்டு வண்டியில் கட்டிய நிலையில் வீரனைக் கொண்டு போகிறார்கள். அதற்குள் மன்னனிடம் போய்ச் சண்டையிடுகிறாள் வெள்ளையம்மாள். மன்றாடுகிறாள் பலனில்லை. கடைசியில் மனம் மாறி, கொலைக்களத்திற்குப் போகிறார் மன்னர்.


அதற்குள் கொலைக்களப் பீடத்தின் மீது நிறுத்தி மாறுகை மாறுகால் வாங்கி விடுகிறார்கள். துடிதுடித்து வீரன் உயிர் துறந்ததும், அவனது மனைவிகளான பொம்மியும், வெள்ளையம்மாளும் கூடவே விழுந்து உயிர்துறக்கிறார்கள்.




INTRODUCTION
Madurai Veeran is a Tamil folk deity popular in southern Tamil Nadu, India. His name was derived as a result of his relationship with the city of Madurai and he is the protector of Madurai. Madurai Veeran protected Madurai and Madurai Meenakshi Amman Temple and is still protecting Madurai and all of his devotees.

Worship
Madurai Veeran is commonly worshiped as a guardian deity by the Tamils. When the town of Madurai was troubled by bandits, the Pandyan king ordered Veeran to fight. Veeran then met Vellaiyammal, a royal danseuse, and both of them were attracted against each other.
The Pandyan king, who was himself attracted to Vellaiyammal, did not encourage this affair. Some people in the king’s court complained to the king that the delay in attacking the robbers was due to the fault of Madurai Veeran. This made the king to become furious, and chopped his one hand and one leg and afterwards he ordered his guards to kill him also. On hearing about this, Bommi and Vellaiyammal(both of them loved Madurai Veeran), asked the king for the injustice caused to Madurai Veeran.
History says, that Madurai Veeran is brought back to life by the effort of Bommi and Vellaiyammal. Veeran, thereafter has taken his shelter in Madurai Meenakshi Amman Temple.
A shrine was later erected at the east gate of Meenakshiamman Temple by the Pandyan king. The story persists through the singing of songs and street theatre.

Temples
Today there are several temples dedicated to Madurai Veeran across tamilnadu, kerala, Malaysia, Singapore and south africa. One famous temple dedicated to Madurai Veeran is situated in Hanumanthapuram,Chenglepet District,Chenglepet,Tamilnadu. At this temple there are shrines for 18 feet statue Maduraiveeran, Pachaiamman,Nataraja,Bhairavar and Karrupannaswamy besides seven kannimars. All of these deities are KULADEIVAM to many people and also are KAVAL DEIVANGAl for all the people who worship them. He still protects his devotees from thieves and he is worshipped by everyone, without any caste discrimination.
Nearby my home, one small road side temple is dedicated to Madurai Veeran in Agaram, Chennai. People will gather in that temple during festivals and give their offerings.

CONCLUSION
Madurai veeran who is a guardian of Madurai, will also be with us as our guardian, and will protect us from all sorts of problems, and safeguard us from our enemies. We can worship Madurai veeran by going to his temples or otherwise, we can worship him at our home with his picture. He will definitely answer to our prayers and will be with us. Let us pray to the Great and Brave Madurai Veeran for our wellness in our life and chant his nama ‘OM SREE MADURAI VEERANE NAMAHA’.


WRITTEN BY
R.HARISHANKAR







.

RICHARD ATTENBOROGH ,ACTOR BORN 1923 AUGUST 29- 2014 AUGUST 24




RICHARD ATTENBOROGH ,ACTOR 
BORN 1923 AUGUST 23 - 2014 AUGUST 24




ரிச்சர்ட் ஆட்டன்பரோ (Richard Attenborogh 29 ஆகத்து 1923[2] - 24 ஆகத்து 2014) ஆங்கிலேய நடிகர், திரைப்பட இயக்குநர், தயாரிப்பாளர், மற்றும் தொழிலதிபர் ஆவார். இயக்குனர் மற்றும் தயாரிப்பாளராக 1983 ல் காந்தி திரைப்படத்திற்காக இரண்டு அகாதமி விருதுகளை பெற்றார். அத்துடன் நான்கு பாஃப்ட்டா விருதுகளையும், நான்கு கோல்டன் குளோப் விருதுகளையும் பெற்றார். இவர் நடித்த கிரேட் எஸ்கேப், ஜுராசிக் பார்க் போன்ற திரைப்படங்கள் இவருக்குப் புகழ் பெற்றுத் தந்தன.[3]
இவரது சகோதரர் சர் டேவிட் ஆட்டன்பரோ, இயற்கை வரலாற்றாளரும், ஒலிபரப்பாளரும் ஆவார்.

இளமைக்காலம்[மூலத்தைத் தொகு]
அட்டன்பரோ இங்கிலாந்தின் கேம்பிரிட்ஜ்ஜில் 29 ஆகஸ்ட் 1923 அன்று பிறந்தார். லீசெஸ்டரில் உள்ள வைக்ஸ்டன் ஆண்கள் இலக்கணப் பள்ளியில் படித்தார். இரண்டாம் உலகப் போரின் போது, ராயல் விமானப்படையில் பணியாற்றினார். 1960 களின் தொடக்கம் வரை, அட்டன்பரோ பிரிட்டனில் ஒரு நல்ல நடிகராக அறியப்பட்டார்.
நடிப்புத் தொழில்[மூலத்தைத் தொகு]முதன்முறையாக இன் விச் வீ செர்வ் என்ற திரைப்படத்தில் (1942)நடித்தார். அதில் அவர் ஒரு வெறிச்சோடிய கப்பலோட்டி போல் நடித்திருக்கிறார். பின்பு 1947 இல் பிரைட்டன் ராக் என்ற படத்தில் பின்கி என்ற கதாபாத்திரமாக நடித்தார். 1949 ஆம் ஆண்டில், பாக்ஸ் ஆபிஸில் அவரை ஆறாவது மிக பிரபலமான பிரிட்டிஷ் நடிகர் என்று பொதுமக்கள் வாக்களித்தனர்.[4]

நியூ அட்வென்ச்சர்ஸ் (1943) திரைப்படத்தில் ரயில்வேத்துறைப் பணியாளராகவும், எ மேட்டர் ஆப் லைப் அண்ட் டெத் (1946) திரைப்படத்தில் ஆங்கில பைலட்டாகவும் நடித்தார். நீண்ட இடைவெளிக்குப் பின் ஜுராசிக் பார்க் (1993) திரைப்படத்தில் நடித்தார். தொடர்ந்து மிராக்கில் ஆன் தர்ட்டிபோர்த் ஸ்டீட் (1994), ஹாம்லட் (1996), எலிஸபெத் (1998) ஆகிய படங்களில் நடித்த இவர், சாப்லின் (1992) திரைப்படத்தை இயக்கினார். 2007 வரை பல படங்களை இயக்கியுள்ளார். [5]
இழப்பு[மூலத்தைத் தொகு]
2004 ஆம் ஆண்டு டிசம்பர் 26 இல்அ ட்டன்பரோ தாய்லாந்தில் ஏற்பட்ட சுனாமியில் தன் மகள் ஜேன் , மாமியார் ஆட்ரி மற்றும் பேத்தி லூசியையும் இழந்தார்
இறப்பு[மூலத்தைத் தொகு]அட்டன்பரோ சிறிது காலம் உடல் நலம் குன்றி இருந்தார் .2014 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 24 இல் மரணம் அடைந்தார் . அவருக்கு இறக்கும் போது மனைவி ,இரு குழந்தைகள் ,ஆறு பேரக்குழந்தைகள் மற்றும் இரு கொள்ளு பேரர்கள் இருந்தனர் .அவர் மனைவி 2016 ஜனவரி 19 இல் மரணம் அடைந்தார்

Saturday 29 August 2020

ACTRESS PRATHIYUSHA RAPED AND MURDERED BY HER LOVER AND HIS ASSOCIATES




ACTRESS PRATHIYUSHA RAPED AND MURDERED BY HER LOVER AND HIS ASSOCIATES

நடிகை பிரதியுஷா பலாத்காரம் செய்து கொலை : 15 ஆண்டுக்கு பின் தாய் புகார்

.பிரதியுஷா தற்கொலை செய்யவில்லை. அவளை பலாத்காரம் செய்து கொலை செய்துவிட்டனர் என்று நடிகை பிரதியுஷாவின் அம்மா திடுக்கிடும் தகவலை வெளியிட்டுள்ளார்.

தமிழில் ‘மனுநீதி’, ‘தவசி’, ‘சவுண்ட் பார்ட்டி’ என சில படங்களில் ஹீரோயினாக நடித்தவர், பிரதியுஷா. நடிகை பிரதியுஷா தெலுங்கில் பல படங்களில் நடித்துள்ளார்.

இவர் கடந்த 2002ம் ஆண்டு தன் காதலருடன் தற்கொலை செய்துகொண்டார். ஆனால் உயிருக்குப் போராடிய காதலன் பிழைத்துவிட்டார். இந்த வழக்கு இன்னும் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இந்நிலையில் பிரதியுஷாவின் அம்மா ஹைதராபாத்தில் பேட்டியளித்துள்ளார்.

அதில் ‘‘என் மகள் தற்கொலை செய்யவில்லை. விஷமும் குடிக்கவில்லை. அவளை நண்பர்கள் பாலியல் பலாத்காரம் செய்து கொன்றுவிட்டு அவளின் வாயில் விஷத்தை தடவி நாடகத்தை நடத்தியுள்ளனர். அதற்கான காயங்கள், நகக் கீரல்கள் அவளின் உடல் முழுவதும் காணப்பட்டது. ஆனால் என் மகள் தற்கொலை செய்துகொண்டாள் என வழக்கை முடித்துவிடுவார்கள். குற்றவாளிகள் விடுதலையாவார்கள். ஆண்டவன் அவர்களை தண்டிப்பான். 15 வருடமாக தீர்ப்பு கிடைக்கும் என போராடிவரும் எனக்கு யாருடைய ஆதரவும் இல்லை’’ என பிரதியுஷாவின் அம்மா கதறி அழுதுள்ளார்.


சென்னை : தமிழில் முரளியுடன் ‘மனுநீதி', பிரபுவுடன் ‘சூப்பர் குடும்பம்', விஜயகாந்த்துடன் ‘தவசி', சத்யராஜுடன் ‘சவுண்ட் பார்ட்டி' உள்பட பல படங்களில் ஹீரோயினாக நடித்தவர் பிரதியுஷா. தவிர, தெலுங்கிலும் பல படங்களில் நடித்துள்ளார்.  இவர் தனது குடும்பத்துடன் ஐதராபாத்தில் வசித்து வந்தார். கடந்த 2002ம் ஆண்டு பிரதியுஷா மர்மமான முறையில் மரணம் அடைந்தார். தனது காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால் காதலன் சித்தார்த் என்பவருடன் சேர்ந்து விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டதாக கூறப்பட்டது. இந்த சம்பவத்தில் சித்தார்த் அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்தார். இதுகுறித்து கோர்ட்டில் வழக்கு நடந்து வருகிறது. இன்னும் விசாரணை முடியவில்லை.

இந்நிலையில், பிரதியுஷாவின் தாயார் சரோஜினி நேற்று முன்தினம் அளித்த பேட்டியில் சரமாரியாக குற்றம் சாட்டியுள்ளார்.  அவர் கூறியிருப்பதாவது:

என் மகள் விஷம் குடித்து சாகவில்லை. அவளை சில பேர் பலாத்காரம் செய்து வாயில் வலுக்கட்டாயமாக விஷம் ஊற்றி சாகடித்து இருக்கின்றனர். அவளது கழுத்தில் நகக்கீறல்கள் இருந்தன. அது மறைக்கப்பட்டு இருக்கிறது. பாய் பிரண்ட் என்று சொல்லப்பட்டவர், தன் உதட்டில் விஷத்தை தடவிக்கொண்டு, மயக்கம் அடைந்தது போல் நடித்து இருக்கிறார். இந்த சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளிகள் விடுதலை ஆகலாம். ஆனால், எனக்கு ஏற்பட்ட மன வலியும், ஆண்டவனும் அவர்களை நிச்சயம் தண்டிக்கும்.

இந்த சம்பவத்தால் என் மகன் மனநிலை பாதித்து இருக்கிறான். அந்த அதிர்ச்சியில் இருந்து இன்னும் அவன் மீளவில்லை. இதுவரை போலீசார் ஒரே ஒரு ஆதாரத்தைக்கூட சேகரிக்கவில்லை. என் மகள் அணிந்திருந்த உடையையும் என்னிடம் கொடுக்கவில்லை. சம்பவம் நடந்து 15 வருடங்கள் ஆகிறது. யாருமே எனக்கு ஆதரவு தெரிவித்து குரல் கொடுக்கவில்லை. நான் தனியாக நீதி கேட்டு போராடிக் கொண்டிருக்கிறேன். இவ்வாறு சரோஜினி மனக்குமுறலுடன் கூறினார்.

VIJAYAKUMAR TAMIL ACTOR BORN 1943 AUGUST 29



VIJAYAKUMAR TAMIL ACTOR 
BORN  1943 AUGUST 29



விஜயகுமார் (பிறப்பு: ஆகத்து 29, 1943) தென்னிந்திய திரைப்பட நடிகராவார். பல்வேறு வகையான கதாபாத்திரங்களில் பெருமளவு இவர் தமிழ்த் திரைப்படங்களில் நடித்துள்ளார். ஒரு சில இந்தி மற்றும் தெலுங்கு மொழிப் படங்களில் நடித்த இவர் தற்பொழுது தந்தை வேடங்களில் நடித்து வருகிறார். 1961ல் வெளிவந்த சிறீ வள்ளி என்ற திரைப்படத்தில் முருகனாக நடித்துள்ளார், 400க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார்.[3]
இவர் தஞ்சாவூர் மாவட்டம்பட்டுக்கோட்டை அருகிலுள்ள நாட்டுச்சாலை என்ற சிற்றூரில் பிறந்தார். இவரின் முதல் மனைவி பெயர் முத்துக்கண்ணு, மற்றும் திரைப்பட நடிகையான மஞ்சுளாவை இரண்டாவதாக திருமணம் செய்துக்கொண்டார். முதல் மனைவிக்கு பிறந்தவர் நடிகர் அருண் விஜய் ஆவார். இவருக்கு கவிதா, அனிதா, வனிதா, பிரிதா, சிறீதேவி என்ற பெண்கள் உள்ளனர்.
சின்னத்திரையிலும் நடிக்கத்தொடங்கியுள்ள இவர் 'தங்கம்' தொடரில் ரம்யா கிருஷ்ணனுக்கு தந்தையாக நடித்துள்ளார்.
இவர் தென்னிந்திய நடிகர் சங்கத்தின் முன்னால் துணைத் தலைவராக பதவி வகித்திருந்தார்.



Vijayakumar is a Tamil film actor and politician. born
1943 August 29 Along with predominant work in Tamil cinema since 1973, he has acted in a few Hindi, Malayalam and Telugu movies. He also works in television serials.
Early life[edit]
Vijayakumar was born in Nattuchalai, Pattukkottai taluk, Thanjavur dist, Tamil Nadu, India. His birth name Panchaksharam was changed as Vijayakumar for film. He debuted in the 1961 Tamil movie Sri Valli.[3] Again in 1964 with the help of his uncle, he came to Chennai and tried for chances but could not make it but he only got a small role in the movie Kandhan Karunai as one of the devargal, arrested by the Asura king, Surapadma. Later in 1973 he got an offer to act in films.[3] His first major role was in Kailasam Balachander's Aval Oru Thodar Kathai in 1974.
Professional career[edit]
His journey in filmdom began as a child actor in the film Sri Valli in 1961. Vijaykumar was the little Lord Murugan in 'Sri Valli' starring Sivaji Ganesan and Padmini.[4] But not many offers were forthcoming for the little actor, he was supposed to play Lord Murugan in Kandhan Karunai but instead Sivakumar played that role. Vijayakumar acted as a small role as one of the Lords that was arrested by Surapadman.[5] In 1973 Vijayakumar got his first break in Ponnukku Thanga Manasu directed by Devaraj-Mohan.[6] The other hero in the film was Sivakumar. The success of Ponnuku Thanga Manasu got him a permanent place in Tamil cinema.[3] Vijayakumar was a popular actor the seventies along who acted alongside leadering actors such as MGR in Indrum Pol Endrum Vazhgha, Sivaji Ganesan in Dheepam and Kamal Haasan in Neeya. While Vijayakumar was a popular supporting actor, he did play the lead role in during the 1970s, in films such as Aval Oru Thodarkathai, Mathura Geetham and Azhage Unnai Arathikkiren.

Vijayakumar continued to act in supporting roles in the early 1980s. After a brief slump, Vijayakumar's second innings came in 1988 with Mani Ratnam's Agni Natchathiram where he played the role of Phrabu Ganesan and Karthik Muthuraman's father. The movie told the story of two half brothers who fight for their father's love and property. During the 1990s, Vijayakumar was frequently seen in father roles such as Nattamai and Baasha. During the same time, Vijayakumar also played lead roles in award winning films such as Kizhakku Cheemayile and Anthimanthaarai with Bharathiraaja. The latter took him close to winning the National Film Award for Best Actor eventually missing it by one vote.[3] Vijayakumar continued to play senior roles during the 2000s, eventually the actor was seen in more grandfather roles . In the last few years the actor has reduced his film commitments and focused on television serials. Vijayakumar has acted in over 400 films, primarily in Tamil, but also brief stints in Telugu cinema.
Personal life[edit]
Vijayakumar's family consists of wives Muthukannu and Manjula,[7][8] daughters Kavitha, Anitha, Vanitha, Preetha, Sridevi and son Arun Vijay. Sridevi is his youngest child. So far, Arun and his father have appeared together on screen four times—in Pandavar Bhoomi, Malai Malai Maanja Velu and Kuttram 23.
He was the vice-president of South Indian Nadigar Sangam until 18 October 2015. He was also a member of the All India Anna Dravida Munnetra Kazhagam. On March 16, 2016, Vijayakumar joined the BJP in the presence of Union minister of state for road transport highways and shipping. Sri Pon Radhakrishnan said he would campaign for the saffron party for this Assembly election.
On 23 July 2013, Manjula died in Chennai. She was 59.[9