Wednesday 26 August 2020

VIRUDHUNAGAR IN 1960`S





VIRUDHUNAGAR IN 1960`S




.விருதுநகரில் பொதுவாக யாரும் ஹோட்டலில் 1960 களில் வாங்கி சாப்பிடும் வழக்கம் அறவே கிடையாது .வீட்டில் இருக்கும் கஞ்சியோ ,கூழோ சாப்பிட்டு நிறைவடைந்தது நமது விருதுநகர் .யாருக்காவது உடம்புக்கு சரி இல்லை என்றால் மட்டும் இட்டலி வாங்க தங்கம் ஓட்டலுக்கு செல்வோம் .கூடவே ரெண்டு பாத்திரம் சட்னி வாங்க ஒன்று .சாம்பார் வாங்க ஒன்று .வாங்கும் இட்டலியோ ஒன்னு பத்து பைசா . அந்த சாம்பாருக்கு ம் ,சட்னிக்கு வீட்டுக்குள்ளே அடிதடிதான்.தெப்பம் தெற்கு பக்கம் தங்கம் ஓட்டல் . அப்போது சாப்பிட்டதுக்கு பில் போடும் வழக்கமோ ,துண்டுசீட்டு கொடுக்கும் வழக்கமோ அறவே கிடையாது . சாப்பிட்டு முடிச்சிட்டு கல்லாப்பெட்டி அருகே வரும்போது ஒரு ரூவா இருவது பைசா , அடுத்து கட்டம் போட்ட சட்டை எண்பது பைசா என்று மனக்கணக்கிலே சரியாக கணக்கு சொல்வார்கள் சப்பிளையர்கள் .அதை நினைக்கையில் எனக்கு இப்போதும் வியப்புதான் .


கேவியஸ் பள்ளி எதிரே coronation ஹோட்டல் . தையல் மாலுக்குள் ஒரு ஓட்டல் .தையல் மாலுக்குள் எதிரில் ஒரு ஓட்டல் .உக்காந்து சாப்பிடக்கூடிய ஓட்டல்கள் அநேகமாக இவை தான் . ஆஞ்சநேயா ஹோட்டல் மாரியம்மன் கோவிலுக்கு பின்புறம் ஒன்றும் அரசு மருத்துவமனை பக்கத்திலும் உண்டு
இப்போது எல்லோருடைய அமோக பாராட்டுதலையும் ,பெற்று சிவகாசி மதுரை ,சாத்தூர் வட்டாரங்களிலும் புகழ்பெற்ற விருதுநகர் புரோட்டா வை முதன் முதலில்
அறிமுகப்படுத்தியது coronation ஹோட்டல் தான் .பரோட்டாவை பக்குவமாக எண்ணெய் குளியலில் குளிப்பாட்டி முருகலோடு தயாரித்தவர்கள் இவர்கள் தான் .மட்டன் சாப்பாட்டிற்கு இப்போது அல்லாபிச்சை யும் ,பர்மாக்கடையும் இருப்பது போல அப்போது coronation ஹோட்டல் . தவிர சுக்கா வறுவலை பக்காவா எண்ணையை தாராளமா விட்டு மிளகுசீரகம் தூக்கலாய் கலந்து அறிமுகப்
படுத்தியதும் coronation ஹோட்டல் தான் . நான் ஏழாம் வகுப்பு படிக்கும்போது கிளாஸ்லயே மிக வளர்த்தியாய் ஒருவர் நான் குரூப் லீடராய் இருக்கும் போது என்னுடைய குரூப்பில் சேர்ந்தார் .
அவர் coronation ஹோட்டல் முதலாளி பையன் . இப்ப அவங்கள்லாம் பாதை மாறி நொடித்து போய் விட்டார் . . . தவிர மாத சாப்பாட்டுக் கடைகளும் அங்கங்கே இருக்கும் .அங்கல்லாம்
சுகாதாரம் இருக்காது . கும்மிருட்டில் வலது கையால் சாப்பிட்டு கொண்டே இடது கையால் ஈ ஓட்டிகிட்டே சாப்பிட வேண்டியிருக்கும் .
தவிர தெரு ஓரத்திலும் சிலர் சுவையாக தோசை ,இட்டலி விற்பார்கள் . ஆனால் சீக்கிரத்தில் விற்று விடும் .சுப்ரமணிய வித்தியாசாலை பக்கத்தில்
தாயம்மாள் வடை ,மற்றும் இடியாப்பங்கள் பிரசித்தி பெற்றவை .அப்போது அதற்கு பெயர் பூச்சி .பூச்சியைப்போல் இருப்பதால் அந்த பெயர் .அதே போல்
தோசை என்றால் அது ஊத்தப்பம் தான் .இப்போது நைசாக இருப்பது தோசை கனமாக இருப்பது ஊத்தப்பம் என்று மருவியிருக்கிறது
.அப்போதெல்லாம் கருப்பட்டி காப்பிதான் .சீனியை மியூசியம் தில் தான் பார்க்கமுடியும் .
சிலசமயங்களில் பள்ளிக்கூடம் பக்கத்திலே மிட்டாய் வியாபாரி பொன்வண்டு விற்பார் . தீப்பெட்டிகளில் அடைத்து சாயங்காலம் அது சொர்க்அடிப்பதை பார்த்து மகிழ்வோம் .அதில் புள்ளிவைத்த பொன்வண்டு ராஜா வண்டு .
1960 `s
பொன்வண்டு காலம் மட்டுமல்ல
பொற்காலமும் கூட





  • Syed Mohamed விருதுநகர் கமல் ஹோட்டல் மிகவும் பிரசித்தி பெற்று ஒரு சமயம் இயங்கியது. நான் சிறுவனாக இருக்கும்போது, எனது தந்தை அங்கே சாம்பார் ரசம் போன்றவைகளை வாங்கி வருவார் வீட்டில் சமைக்கும் பதார்த்தங்களை விட அக்கடையில் வாங்கும் குழம்பு வகைகள் இன்றும் நாவில் ருசிக்கிறது... தற்போது, அந்தக் கடை ஏன் இல்லை என்ற விவரம் கூட தெரியவில்லை... மேலும் மாரியம்மன் கோவில் பின்புறம் ஒரு அய்யர் ஓட்டல் இருக்கும் அங்கு கிடைக்கும் குலோப் ஜாமுன் பற்றி தற்போது நினைத்தாலே இனிக்கும்... அதன் நிலையும் அறியேன்...
  • Nagarajan K மாரியம்மன் கோவில் பின்னால் இருந்த ஹோட்டல் பெயர் ஆஞ்சனேயவிலாஸ் .அங்கே தகட்டு பக்கவடைன்னு ஒன்னு போடுவாங்க .ஊர்ல
    எங்கயும் அது போட்டதே இல்லை

No comments:

Post a Comment