Monday 17 August 2020

KERALA FLOODS 2019





KERALA FLOODS 2019
.26 நொடிகளில் குழந்தையை மீட்ட
கண்ணையா குமார் யார்?

கண்ணையா குமார், கேரளாவில் ஏற்பட்ட வரலாறு காணாத வெள்ள பாதிப்பில் இருந்து மக்களை காப்பாற்றவந்த தேசிய பேரிடர் மீட்புக்குழுவில் முக்கியமாக பேசப்படுகிறார்.

பெரியாறு நதியில் வெள்ளம் கரைபுரண்டு வந்த நேரத்தில், இடுக்கி மாவட்டம் செருதொனி பகுதியில் ஒரு தந்தையின் கைகளில் இருந்த சிறு குழந்தையை எடுத்துக்கொண்டு, ஒரு பாலத்தை ஓடிக்கடந்தார் கண்ணையா. அவர் பாலத்தைத் தாண்டியதும் அந்த இடம் தகர்ந்து பாலம் உள்வாங்கி கடல்போல காட்சியளித்தது.

சென்னையில் இருந்து கேரளா வந்துள்ள 10 படைப்பிரிவுகளில், பேரிடர் மீட்புக் குழுவைச் சேர்ந்த கண்ணையா ஒரு மீட்புப் பணி காவலர். குழந்தையை மீட்கும் பணியை முடிக்க கண்ணையா எடுத்துக்கொண்டது வெறும் 26நொடிகள் என்கிறார்கள் மீட்புக் குழுவில் உள்ள மற்ற அதிகாரிகள்.

கரையேறியதும், கண்ணையாவுக்கு எவ்வாறு நன்றி சொல்வதென்றே தெரியாமல் குழந்தையின் தந்தை நெகிழ்ந்துபோனார்.

''பாதிக்கப்பட்ட எல்லோரும் என் குடும்பம்''

சமூக வலைத் தளங்களில் பிரபலமாகிவிட்ட பீகாரைச் சேர்ந்த கண்ணையாகுமார், தனது மூன்று சகோதரர்கள், பெற்றோர் என குடும்ப உறுப்பினர்களுக்கு உதவவும், தனது குடும்பத்தை வறுமையில் இருந்து மீட்கவும் பள்ளிப்படிப்பு முடித்ததும், அரசுப்பணித் தேர்வுகளை எழுதினார். பேரிடர் மேலாண்மை மீட்புக்குழுவில் கடந்த ஆறு ஆண்டுகளாக பணிபுரிகிறார்.

'என் குடும்பத்தை காப்பாற்றுவதற்காக நான் அரசு வேலைக்குச் சேர்ந்தேன். தற்போது பலரையும் காப்பாற்றுகிறேன் என்பதில் மகிழ்ச்சி. எனது மூன்று சகோதரர்களில் இருவர் தற்போது இந்திய ராணுவத்தில் இருக்கிறார்கள். ஒரு சகோதரர் காஷ்மீரில் வேலைசெய்கிறார்.

நாங்கள் சந்தித்துக் கொள்வது அரிது. ஆனால் தற்போது வேலை எங்களுக்குப் பிடித்துவிட்டது. எங்கள் பெற்றோரும் பெருமையாக இருக்கிறார்கள். இப்போது பாதிக்கப்பட்ட ஒவ்வொருவரும் என் குடும்பம் ஆகிப்போனார்கள்'' என்கிறார் கண்ணையா.

கேரளாவில் நடக்கும் மீட்பு பணிகள் குறித்துப் பேசிய அவர், ''வெள்ள மீட்புப் பணிகளுக்காக கேரளா செல்கிறோம் என்பது மட்டும் தெரியும். இங்குவந்தபோது நாங்கள் நிறைய வேலைசெய்யவேண்டும் என்பது புரிந்தது. நாங்கள் வந்துள்ள இடுக்கி மாவட்டத்தில் நிலச்சரிவு அதிகம்.

செருதொனி பகுதியில் 26 ஆண்டுகளுக்கு பிறகு, முன்பு நதி இருந்த இடத்தில் வெள்ளம் பாய்கிறது. செருதொனி பேருந்துநிலையம் இருந்த இடம் தெரியவில்லை. தென்னந் தோப்புகள் மூழ்கியுள்ளன. உதவி கேட்கும் குரலுக்காக காத்திருக்கிறோம்'' என்கிறார் கண்ணையா.

'இயற்கையை கணிக்க முடியாது''

மீட்புக்குழுவைச் சேர்ந்த மற்றொரு பணியாளர் கிரிபால் சிங் பேசும்போது வெள்ள மீட்புப் பணி அனுபவத்தை விளக்கினார்.

''இயற்கை சீற்றம் என்றால் பெரும்பாலும் நம்முடைய கணிப்பு எதுவும் சரியாக இருக்காது. எதற்கும் தயாராக இருக்கவேண்டும் என்பது மட்டுமே எங்களுக்கு சொல்லப்படும் மந்திரம்.

மீட்கப்படவேண்டியவர்கள் எவ்வளவு ஆழத்தில் சிக்கியுள்ளார்கள்? என்பதைப் பொருத்து அவர்களை கரைக்கு கொண்டுவர எடுக்கும் நேரம் முக்கியம். கரைக்கு கொண்டு வந்ததும் முதலுதவி உடனடியாக செய்யவேண்டும்.

அச்சத்தில் இருக்கும் மக்களுக்கு எங்கள் வேலை நம்பிக்கை கொடுக்கும். உயிரை காப்பற்றுவதற்கு நாங்கள் எடுக்கும் முயற்சியில் பாதிக்கப்பட்டவர்களும் சேர்ந்தே செயல்படுவார்கள்'' என்றார்.

கேரளாவில் அடுத்த இரண்டு நாட்களும் கடுமையான மழை இருக்கும் என்ற அறிவிப்பு உள்ளதால், மீட்புப்படகு, ஜாக்கெட், மருந்துகள் உள்ளிட்டவற்றை தயாராக வைத்துக்கொண்டு மழையைக் கண்காணித்தபடி பணியில் ஈடுபட்டுள்ளனர் மீட்புப்பணியாளர்கள்.
.

94 ஆண்டுகளுக்குபின் பேரிடரை சந்தித்த கேரளா: மாநிலமெங்கும் நிவாரண முகாம்கள் அமைப்பு

கடவுளின் சொந்த தேசம்'(God's own country) என்ற அடைமொழியுடன் அழைக்கப்படும் கேரளா, 94 ஆண்டுகளுக்கு பிறகு கோரமான வெள்ள பேரிடரைச் சந்தித்துள்ளது.

கடந்த இரண்டு வாரங்களில் கேரளாவின் 14 மாவட்டங்களும் முழுவதும் பாதிக்கப்பட்டு, 67 பேர் பலியாகியுள்ளனர். குறிப்பாக புதன்கிழமை (15ஆகஸ்ட்) அன்று 25பேர் பலியாகியுள்ளதாக கேரள அரசு அறிவித்துள்ளது.

எல்லா மாவட்டங்களிலும் நிவாரண முகாம்கள் செயல்படத்தொடங்கியுள்ளன. மாநிலத்தில் உள்ள அனைத்து (14) மாவட்டங்களிலும் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

சாலைகளில் சேதாரம், பல இடங்களில் போக்குவரத்து,மின்சாரம் துடிக்கப்பட்டு , கேரளாவின் பல பகுதிகள் தீவுகள் போல தோன்றுகின்றன. இதுவரை கடுமையான வெள்ளத்தைச் சந்திக்காத கொச்சின்,பாலக்காடு,வயநாடு போன்ற இடங்களில் முதல்முறையாக வெள்ளம் கரைபுரண்டு நகரம் மற்றும் கிராமங்களை சூழ்ந்துள்ளது.

பிபிசி தமிழிடம் பேசிய மீட்பு படையினர் கொச்சின் பகுதியில் உள்ள கம்பெனிபாடி பகுதியில் இதுவரை வெள்ளத்தை சந்திக்காத மக்கள் சிலர் தங்கள் வீடுகளுக்குள் இடுப்பளவு தண்ணீர் புகுந்தாலும் வெளியேற மனமில்லாமல் இருப்பதாக கூறுகின்றனர்.

'கம்பெனிபாடியில் சுமார் 200 குடும்பங்களை வெளியேற்றவேண்டும். பலர் கைகளில் குழந்தைகளை வைத்துக்கொண்டு, வெள்ளம் வடிந்துவிடும். நாங்கள் பிறகு வருகிறோம் என்கிறார்கள். நிலைமை மோசமாகியுள்ளது என்பதை உணர்த்தினாலும் சிலர் தங்களது உடைமைகளை விட்டுவர மறுக்கின்றனர்,'' என ஜோஸ் என்ற மீட்புப்பணியாளர் பிபிசி தமிழிடம் தெரிவித்தார்.

கேரளவில் முக்கியமாக கொண்டாப்படும் ஓணம் பண்டிகை ஆகஸ்ட்15ல் தொடங்கினாலும், பெரும்பாலான ஊர்களில் அதற்கான சுவடே இல்லை. கேரள அரசு இந்த ஆண்டு ஓணம் திருவிழா கொண்டாடத்தை ரத்து செய்துவிட்டு,நிவாரணப் பணிகளுக்கு நிதியை செலவு செய்யப்போவதாக அறிவித்துள்ளது.

கொச்சி சர்வதேச விமான நிலையமும் 18ஆம் தேதி வரை மூடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

கேரளாவில் உள்ள 27அணைகளும் முழுவதுமாக திறக்கப்பட்டதால், வீடுகள்,தென்னை,பாக்கு,தேயிலை,ரப்பர் என எல்லா விளைநிலங்களிலும் வெள்ளம் தனது தடத்தைப் பதித்துச் சென்றது. 26 ஆண்டுகளுக்கு பிறகு, இடுக்கி அணையின் ஐந்து மதகுகளும் திறக்கப்பட்டு, பெரியார் நதி முழுவீச்சில் முன்னர் பாய்ந்த இடங்களில் தற்போது பயணிக்கிறது

இடுக்கி மாவட்டத்தில் நீரில் மூழ்கிய ஒரு தென்னைமர தோப்புக்கு சொந்தக்காரான விக்ரமன்(65) பேசும்போது தனது தென்னந்தோப்பு இருந்த சுவடுகூட தற்போது இல்லை என்கிறார்.

''இதுவரை நாங்கள் விவாசயம் செய்துவந்தோம். தற்போது அகதியைப்போல உணர்கிறோம். எங்களின் நிலங்கள் எங்கு உள்ளன என்று தெரியாது. எங்கள் ஊர் முழுவதும் வெள்ளக்காடாக கட்சியளிக்கிறது. எங்களின் தேவைகளை இந்த ஆண்டு விளைச்சலைக் கொண்டு சமாளிக்க எண்ணியிருந்தோம். அது தற்போது கானல் நீராகிவிட்டது'' என்று அவர் தெரிவித்தார்.

சுமார் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் வீடுகளை இழந்து, 300க்கும் மேற்பட்ட வெள்ளநிவாரண முகாம்களில் தங்கியுள்ளனர். தொடர்ந்து நிலச்சரிவு ஏற்படுவதால், முகாம்களில் இருந்து வெளியேற யாரும் விரும்பவில்லை.


வெளியூர்களில் இருந்து காய்கறிகள் உள்ளிட்ட சரக்குகளை ஏற்றிவரும் லாரிகள் கேரளாவுக்கு வருவதில் சிரமம் உள்ளது.

வெளிமாநில லாரிகள் வந்துசேரும் முக்கிய சாலையான கண்டைனர் சாலை முழுவதுமாக மூழ்கியுள்ளது என்பதால் பல லாரிகள் அங்கேயே நிறுத்தப்பட்டுள்ளன. ''இடுக்கி அணையில் உள்ள நீர் கண்டைனர் சாலைக்கு அருகில் உள்ள ஏரிகளுக்கு வந்து கடலில் சேரும். இங்குள்ள கடைகள் முழுவதுமாக மூழ்கிவிட்டன. லாரிகளை நிறுத்திவிட்டு எங்கள் உயிரை காப்பாற்றி கொள்ள வேண்டிய நிலையில் இருக்கிறோம்,'' என்கிறார் வணிகர் சுந்தரம்.
.

No comments:

Post a Comment