Showing posts with label 2019. Show all posts
Showing posts with label 2019. Show all posts

Saturday, 31 July 2021

VASANTHI B.A PASSED AWAY 1941 JULY 26 -2019 OCTOBER 29

 



VASANTHI B.A PASSED AWAY  

1941 JULY 26 -2019 OCTOBER 29



பழம்பெரும் தமிழ், தெலுங்கு மற்றும் மலையாள நடிகை. அந்தக் காலத்திலேயே பட்டப்படிப்பு பயின்றவர். சரஸா பி.ஏ.,, மாடப்புறா [1962], பலே பாண்டியா [1962], என்னதான் முடிவு [1965] உள்ளிட்ட பல தமிழ்த் திரைப்படங்களிலும் ‘அம்மயெ காணான்’ [1962] உள்ளிட்ட பல மலையாளம் மற்றும் சபாஷ் சூரி [1964] (பெரிய இடத்துப் பெண்), சிரி சம்படலு [1962], மஞ்சி மனசிலு [1962] [தமிழில் வெளிவந்த ‘குமுதம்’ படத்தின் தழுவலே இப்படம்] போன்ற தெலுங்குப் படங்களிலும் நடித்தவர்.




Vasanthi, the veteran actress, who had been addressed as Vasanthi BA, as she was one among the few graduates in the film industry on those days, passed away due to age-related health issues. She made her film debut with a Malayalam film, Minnaminungu in the year 1957. Her Telugu debut happened in the year 1960 and Tamil debut in 1961 with GEMINI GANESAN and Vyjayanthimala Bali in “Thennilavu.”




She had shared the screen space with “MGR” in Madappura and SIVAJIGANESAN in Bale Pandiya. Her last on-screen appearance was for a Malayalam film, Snehikkan Oru Pennu in 1978. Vasanthi had produced a couple of Telugu films too. She was married to P Seenivasan, who is a DMK politician. He had been the deputy speaker in DMK rule. He passed away in 2012. May Vasanthi’s soul rest in peace! Condolences to her family and friends!

Saturday, 24 July 2021

SRIRAM , INDIAN ACTOR 1927 NOVEMBER 16 - 2019 DECEMBER 19

 


SRIRAM , INDIAN ACTOR 

1927 NOVEMBER 16 - 2019 DECEMBER 19

குறைவான படங்கள், நிறைவான நடிப்பு

3


நாடகம் வளர்த்த மதுரை, பல சிறந்த கலைஞர்களைத் தமிழ்த் திரைக்கு அளித்திருக்கிறது. அவர்களில் அழகே உருவான நடிகர், ஸ்ரீராம் என்று அழைக்கப்பட்ட மதுரை ஸ்ரீராமுலு நாயுடு. பக்ஷிராஜா ஸ்டுடியோவை கோவையில் நிறுவிப் பல வெற்றிப்படங்களைத் தயாரித்த அதன் முதலாளியின் பெயரும் ஸ்ரீராமுலு நாயுடுவாக இருந்தது. இதனால் நடிகர் ஸ்ரீராமுலு நாயுடு தனது பெயரை ஸ்ரீராம் என மாற்றிக்கொண்டார்.


எம்.ஜி.ஆர், சிவாஜி, ஜெமினி கணேசன், என்.டி.ஆர், எஸ்.எஸ்.ஆர் என்று புகழ்பெற்று விளங்கிய கதாநாயகர்களுக்கு மத்தியில், தனது தனித்த, உயரமான, அழகான தோற்றத்தால் 50-களின் இறுதியில் கவனம் பெறத் தொடங்கினார் ஸ்ரீராம். ‘பார்க்க மட்டுமல்ல, பழகுவதிலும் உதவி என்று வருபவர்களுக்குக் கிள்ளிக்கொடுக்காமல் அள்ளிக்கொடுப்பதிலும் இவர் ‘ஹேண்ட்சம் ஹீரோ’ எனப் பாராட்டி எழுதியிருக்கின்றன அன்றைய பத்திரிகைகள்.




ஜெமினியிலிருந்து…





மதுரையில் பிறந்து வளர்ந்த பட்டதாரியான ஸ்ரீராம், ஜெமினி ஸ்டுடியோவின் படங்களால் ஈர்க்கப்பட்டார். எப்படியாவது ஜெமினியில் சேர்ந்துவிட வேண்டும் என்ற கனவுடன் சென்னை வந்தார். ஆனால், ஜெமினி ஸ்டுடியோவில் தன்னைப் போலவே நூற்றுக்கணக்கான ‘ஜெமினி பாய்ஸும் கேர்ள்ஸும்’ இருப்பதைக் கண்டு திகைத்துப்போனார். ஆனால் தனது தோற்றம், இதர திறமைகள் மீது அவருக்கு நம்பிக்கை இருந்தது. ஒருநாள் ஜெமினி தயாரிக்கும் படத்தில் தனக்கு நல்ல வேடம் கிடைக்கும் எனக் காத்திருந்தார். அவரது நம்பிக்கை வீண்போகவில்லை. பின்னால் ஜெமினிக்குப் புகழ் சேர்த்த படங்களில் ஒன்றாக மாறிய ‘சம்சாரம்’ படத்தில் ஸ்ரீராமுக்கு முக்கியக் கதாபாத்திரம் கொடுக்கப்பட்டாலும் தொடக்கத்தில் அவருக்கு அங்கே வசனம் இல்லாத ‘கூட்டத்தில் ஒருவன்’ வேடங்களே கிடைத்தன. அவற்றில் ஒன்று ஜெமினியின் பிரம்மாண்ட காவியமாகிய ‘சந்திரலேகா’வில் குதிரை வீரனாக அவர் நடித்தது.


ஆனால், ‘சந்திரலேகா’ தயாரிப்பில் இருக்கும்போதே எழுத்தாளர், இயக்குநர் கே.வேம்புவின் கண்களில் பட்டார் ஸ்ரீராம். ‘சந்திரலேகா’ வெளியான அதே ஆண்டில் வேம்பு, கதை, வசனம் எழுதி இயக்க, மெட்ராஸ் டாக்கீஸ் சௌந்தரராஜன் தயாரித்து வெளியிட்ட ‘மதனமாலா’(1948) படத்தில் ஓர் அழகிய ராஜகுமாரனாக குதிரையேறிவந்தார். அரசனுக்குப் பயப்படாமல் அரசவை நாட்டியக்காரி மதனமாலாவை காதலித்துக் கரம்பற்றினார். விக்கிரமனாக அந்தப் படத்தில் ஸ்ரீராம் வரும் காட்சிகளுக்குத் திரையரங்கில் விசில் பறந்தது.இளம் ரசிகைகளின் முகம் வெட்கத்தால் சிவந்தது.


இளம் ரசிகர்களின் ‘ஹீரோ’


அரச உடையில் சரி, சாதாரண குடும்பத்துப் பையனாக ஸ்ரீராம் எப்படி இருப்பார் என்பதை அடுத்த ஆண்டே வெளியான ‘நவஜீவனம்’ காட்டியது. ஸ்ரீராமைச் சுற்றித்தான் ‘நவஜீவனம்’ படம் நகர்ந்தது. எளிய தொழிலாளி நாகையா. அவருடைய மனைவி கண்ணாம்பா. பெற்றோரை இழந்ததால் தனது தம்பி ஸ்ரீராமைச் சிறுவனாகத் தன் வீட்டுக்கு அழைத்துவந்துவிடுகிறார் நாகையா. கண்ணாம்பாவும் ஸ்ரீராமைத் தன் மகனாகவே ஏற்றுக்கொள்கிறார். வளர்ந்து கல்லூரி மாணவன் ஆகும் ஸ்ரீராம் சக மாணவி வரலட்மியைக் காதலிக்கிறார்.


06chrcj_sreeram ஸ்ரீராம் right

வரலட்சுமி நூல் மில் முதலாளியின் மகள். பணக்கார சம்பந்தம் நம்மைப் போன்ற சாமானியர்களுக்கு ஆகாது என்று அண்ணனும் அண்ணியும் எச்சரிக்கிறார்கள். ஆனால், வளர்த்தவர்கள் சொல் கேளாமல் வரலட்சுமியைக் கல்யாணம் செய்து கொள்ளும் ஸ்ரீராம், மாமனாரின் திடீர் மரணத்துக்குப் பின் முதலாளி ஆகிறார்.


அண்ணன், அண்ணியைத் தன்னுடன் வற்புறுத்தித் தங்கவைத்துக்கொள்ளும் அவர், தான் ஒரு தொழிலாளியின் தம்பி என்பதை மறந்து ஆடம்பரத்தில் மூழ்கித் திளைக்கிறார். மனைவியைக் கடிந்துகொள்ளும் அண்ணியை அடித்தும்விடுகிறார். அண்ணனும் அண்ணியும் வீட்டைவிட்டு வெளியேறிய பிறகு, ஸ்ரீராமுக்கு வாழ்க்கை புரிந்துவிடுகிறது. பிரிந்த குடும்பம் மீண்டும் இணைகிறது. கண்ணாம்பா தயாரித்து நடித்த இந்தப் படத்தில் நாகையா, கண்ணம்பாவுக்கு சற்றும் சளைக்காத நடிப்பைக் கொடுத்துப் பாராட்டு பெற்றார் ஸ்ரீராம்.


முதன்முறையாகத் திரைப்படங்களுக்கான விருதுகளை வழங்க தமிழக அரசு முடிவு செய்தபோது 1949-ல் சிறந்த திரைப்படமாக ‘நவஜீவனம்’ தேர்ந்தெடுக்கப்பட்டது. இந்தப் படத்தின் மூலம் அன்றைய கல்லூரி மாணவ, மாணவியர் ரசித்துப் பார்க்கும் நாயகனாக ஸ்ரீராம் மாறினார். இதைப் பயன்படுத்திக்கொள்ளும்விதமாக ஜெமினி நிறுவனம் அடுத்து தயாரித்த ‘சம்சாரம்’ படத்தில் அவருக்கு முக்கிய வேடம் அளித்தது. கிராமத்துப் பட்டிக்காட்டானாக இருந்து, பின் நவநாகரிக இளைஞனாக மாறும் இருபரிமாணக் கதாபாத்திரத்தில் வெளுத்து வாங்கிய ஸ்ரீராமுக்கு உயர்தரமான நகைச்சுவை, குணச்சித்திர நடிப்பு கைவந்த கலையாக இருந்தது.


பன்முக நாயகன்


வெறும் 23 படங்களே நடித்திருக்கும் ஸ்ரீராமின் சிறப்பு, கதாநாயகனாக மட்டுமே நடிப்பேன் என அடம்பிடிக்காமல் தொடர்ந்து நடித்தது. இரண்டாவது கதாநாயகன், வில்லன், பாசமான தம்பி, பாசமான அண்ணன், பட்டிக்காட்டான், கோடீஸ்வரன், வீரம் செறிந்த இளவரசன் என பல வண்ணத் துணைக் கதாபாத்திரங்களில் தன் நடிப்புத் திறமையை நிறைவாகப் பளிச்சிடச் செய்திருக்கிறார். பிசிறு தட்டாத கணீர் குரல், நாடகத்தனம் குறைந்த ஸ்டைலான நடிப்பு, எம்.ஜி.ஆர்., ரஞ்சன் ஆகிய நடிகர்களுக்கு இணையாக வாள் சுழற்றும் திறன், சிறந்த குதிரையேற்ற வீரர், நல்ல காரோட்டி எனப் பல திறமைகள் கொண்டவர் ஸ்ரீராம். சொந்தப் படம் தயாரித்ததால் அதிக நஷ்டத்தைச் சந்தித்த நடிகர்களில் ஒருவராக ஆனார். ‘மலைக்கள்ளன்’ படத்தில் எம்.ஜி.ஆருக்கு வில்லனாகவும் ‘பழனி’ படத்தில் சிவாஜிக்குத் தம்பியாகவும் நடித்த ஸ்ரீராம், இந்திப் படவுலகில் நுழைந்திருந்தால் வெற்றியை ஈட்டியிருக்கலாம்.




‘மர்மமாய்’ மறைந்த கலைஞர்


கடைசியாக அவர் தயாரித்து நடித்த படம் ‘மர்மவீரன்’. அமெரிக்க எழுத்தாளர் ஜான்ஸ்டன் மெக்கல்லியின் (Johnston McCulley) புகழ்பெற்ற ‘ஸோரோ’ வரிசை நாவல்களின் சாகசக் கதாபாத்திரமான டான் டியாகோவை நினைவூட்டும் வேடத்தில் மகேந்திரனாகவும் பரம்வீர் ஆகவும் ‘மர்ம வீரனில்’ இரண்டு பரிமாணங்களில் ஸ்ரீராம் வழங்கிய நடிப்பு சாகசமும் சவால்களும் நிறைந்தது. சிவாஜி கணேசன், ஜெமினி கணேசன், என்.டி.ஆர். எஸ்.வி.ஆர், வி.கே.ஆர், ஆர்.நாகேஷ்வரராவ் என அன்று திரையில் ஒளிர்ந்த அத்தனை ஜாம்பவான் நடிகர்களும் ஸ்ரீராமின் நட்புக்காக ‘மர்மவீர’னில் நடித்துக் கொடுத்தார்கள். படத்தின் கிளைமாக்ஸ் சண்டைக்காட்சியில் ‘எலெக்ட்ரிக்’ வாள் சண்டை என்ற புதுமையைப் புகுத்திய ஸ்ரீராம் ரசிகர்களுக்குப் பல்சுவை விருந்தளித்தார். பெரும் பொருட்செலவில் உருவான இந்தப் படம், நான்கு வாரங்களுக்குமேல் ஓடாததால் பெரும் நஷ்டத்தைச் சந்தித்தவர், சாதனைகள் படைக்கு முன்பே மறைந்தார்.


படங்கள் உதவி: ஞானம்


ஸ்ரீராம் -பழம்பெரும் தமிழ் நடிகர். 1950-1960-களில் தமிழ்ப் படங்களில் இவரது பங்களிப்பிருந்தது.இவர் ஒரு தயாரிப்பாளரும் ஆவார்.

விண்ட்ஸர் பிக்சர்ஸ் தயாரித்து எல்.எஸ்.ராமச்சந்திரன் இயக்கி 1952-இல் வெளிவந்த ‘கலாவதி’, ஜெமினி ஸ்டூடியோஸ் தயாரித்து ஆர்.நாகேஸ்வர ராவ் இயக்கி 1952-இல் வெளிவந்த ‘மூன்று பிள்ளைகள்’, பக்ஷிராஜா ஸ்டூடியோஸ் தயாரிப்பில் ஏ.எஸ்.ஏ.சாமியும் சி.எஸ்.ராவும் இணைந்து இயக்கிய 1953-இல் வெளிவந்த ‘பொன்னி’ யில் லலிதா, பத்மினியுடனும், பக்ஷிராஜா ஸ்டூடியோஸ் தயாரிப்பில் எஸ்.எம்.ஸ்ரீராமுலு நாயுடு இயக்கிய 1954-இல் வெளிவந்த ‘மலைக்கள்ளன்’, மெர்க்குரி பிலிம்ஸ் தயாரித்து சி.சீனிவாசராவ் இயக்கத்தில் 1954-இல் வெளிவந்த ‘போன மச்சான் திரும்பி வந்தான்’ படத்தில் குசலகுமாரியுடன் இணைந்தும், ஜெமினி ஸ்டூடியோஸ் தயாரித்து கே.ஜே.மஹாதேவன் இயக்கி ரி.ஆர்.ராமச்சந்திரன் கதாநாயகனாக நடித்த 1954-இல் வெளிவந்த ‘ராஜி என் கண்மணி’,ஸ்ரீ கணேஷ் மூவிடோன் தயாரிப்பில் சுந்தர்ராவ் நட்கர்னி இயக்கத்தில் 1955-இல் வெளியான ‘கோடீஸ்வரன்’ படத்தில் ராகினியுடன் இணைந்தும், அரவிந்த் பிக்சர்ஸ் தயாரித்து வி.கிருஷ்ணன் இயக்கத்தில் 1955-இல் வெளிவந்த ‘முல்லை வனம்’, ஆனந்தா புரொடக்‌ஷன்ஸ் தயாரிப்பில் கே.எஸ்.பிரகாஸ்ராவ் இயக்கத்தில் 1956-இல் வெளிவந்த ‘மறுமலர்ச்சி’, ஜூப்லி ஆர்ட் பிலிம்ஸ் தயாரிப்பில் ரி.ஆர்.ரகுநாத் இயக்கத்தில் 1956-இல் வெளிவந்த ‘மர்ம வீரன்’ மற்றும் சத்ர்ன் பிலிம்ஸ் தயாரிப்பில் ரி.பி.சுந்தரம் இயக்கி 1958-இல் வெளிவந்த ‘மாய மனிதன்’ மற்றும் வல்லவன் ஒருவன் போன்ற குறிப்பிட்ட சில படங்களில் இவர் நடித்துள்ளார்.

1960-இல் வெளிவந்த வெற்றிப்படமான ‘நீலாவுக்கு நெறஞ்ச மனசு’ படத்தில் பேபி உமாவின் அண்ணனாக அமைதியான கதாபாத்திரத்தில் மிகச் சிறப்பாக நடித்திருப்பார். இப்படத்தின் இறுதியில் பண்டரிபாயைக் கரம் பிடிப்பார். ஜெமினியின் வெற்றித்தயாரிப்பான ‘சம்சாரம்’ படத்தில் வேணு என்ற கதாபாத்திரத்தில் நகைச்சுவை ததும்ப யதார்த்தமாக நடித்திருப்பார்.

கோடீஸ்வரன் படத்தில் கே.ஏ.தங்கவேலுவின் மகனாகவும் சிவாஜிகணேசனின் நண்பராகவும் ராகினியின் காதலராகவும் நடித்திருப்பார். ‘மர்ம வீரன்’ என்ற படத்தைத் தயாரித்துள்ளார்.


Veteran actor Shriram Lagoo passed away in Pune. He was 92. The actor leaves behind a legacy of over 165 films  and numerous plays. He has starred in Hindi and Marathi movies in lead roles and supporting roles. Regardless of the length of his role, the actor always left an impact. His scenes with Amitabh Bachchan in the movie Lawaaris are nothing less than iconic. He played a drunkard in the movie, and did it better than what Big B did it in movies like Amar Akbar Anthony or Sharaabi. His performance in the film Gharonda won him a Filmfare Award. His film Pinjra won the  National Film Award for Best Feature Film in Marathi in 1973. Veteran Actor Shriram Lagoo Passes Away At the Age of 92.

In this feature, we will be talking about some of Shriram's best work in the cinema. Thankfully, some samples of his work are available to watch on YouTube. His world-famous play, Natsamrat, is also available to watch in its full capacity, and you should definitely check it out. YouTube also has his full movie, Pinjara, for you to watch legally. Here we are listing down 5 scenes featuring Sriram Lagoo, as a tribute to his sheer talent. 




This Masteclass In Acting From Lawaaris (Laawaris)

In this scene, Sriram's character Gangu Ganpat reveals to his 'son' Heera, played by Amitabh Bachchan, that he is adopted. This revelation by Gangu in a drunken stupor leaves Heera shell shocked. The way this plays out is beautiful and Sriram's acting here is a masterclass.

Shades of A Flawed Man (Ghazab)

The lead roles in this movie were played by Rekha and Dharmendra. Shriram had a supporting role. In this scene, his character breaks it to his wife about having a second family. He announces that he is leaving her for the second woman in his life. Shriram doesn't make a villain out of the character. The performance of a flawed man is layered here.

This Scene With Shatrughan Sinha (Berehem)

You have to put your best foot forward, when it just conversation driving the scene. Especially, when the conversation is limited to two people sitting across a table in a dimly lit room. Shatrughan and Shriram hold their ground here.

Ace in Comedy (Nasihat)

Shriram was not just a serious actor. He had a funny bone, too. His comic timing in this film, Nasihat, is proof that no genre was incapable for the talented actor.

The Typical Bollywood Father (Sargam)

Shriram also had the capability to play the roles to the gallery. Here is performance as the typical Bollywood father in the 70s shows us how he helped shape the image of Bollywood fathers.

In his long career - spanning over four decades - Shriram Lagoo has worked in Hindi, Marathi and Gujarati cinema and theatre. That is not all. During his early days, he was a surgeon. In fact, he started his stint as an actor while studying in a medical college. He extensively participated in theatre. He moved abroad for his studies but the love for acting always brought him back. He will be missed.


Monday, 15 February 2021

P.S.SEETHA LAKSHMI ,TALENTED ACTRESS DIED 2019 FEBRUARY 28

 P.S.SEETHA LAKSHMI ,TALENTED ACTRESS  

DIED 2019 FEBRUARY 28



எம்.ஆர்.ராதா நடித்த ரத்தக்கண்ணீரை எல்லோருக்கும் தெரியும். எம்.ஆர்.ஆர் வாசு, ராதாரவி இருவரும் ரத்தக்கண்ணீர் நாடகத்தில் எம்.ஆர்.ராதா பாத்திரத்தை நடித்து மேடையேற்றியிருக்கிறார்கள்.
ரத்தக்கண்ணீர் நாடகம் முழுக்க முழுக்க பெண்கள் நடித்து மேடையேற்றப்பட்டிருக்கிறது.
ராதா நடித்த வேடத்தில் பி.எஸ் சீதாலட்சுமி நடித்திருந்திருக்கிறார். அவர் நடிப்பை பார்த்த ராதா பிரமித்துப்போய் சீதாலட்சுமியிடம் சொல்லியிருக்கிறார்
“ சீதா, என்னையே நான் இந்த நாடகத்தில் பார்த்தேன்.”
எம்.ஜி.ஆர் நாடகங்களிலும் நடித்தவர். சிவாஜி நாடகங்களிலும் நடித்தவர்.
வீர பாண்டிய கட்டபொம்மன் நாடகத்தில் சீதாலட்சுமி “வெள்ளையம்மா” ரோலில் நடித்தவர். படத்தில் பத்மினி வெள்ளையம்மாவாக நடித்தார்.
'வெள்ளையம்மா, வந்துதுடியம்மா ஒன் காளைக்கு ஆபத்து.'
உதயசூரியன் நாடகத்தில் மு.கருணாநிதியுடன் நடித்திருக்கிறார்.
அவர் பழம்பெரும் நடிகை பி.எஸ். சீதாலட்சுமியென்றாலும் 1960களில் தான் மிகவும் பிரபலம்.
தனுஷ் நடித்த ’சீடன்’ வரை நடித்திருக்கிறார்.

அப்போது சுந்தரிபாய், சி.கே.சரஸ்வதி போன்றவர்கள் போல வில்லி நடிப்பில் தனித்துவம் காட்டியவர். அவருடைய நடிப்பு காரணமாக ‘சிடு மூஞ்சி சீதாலட்சுமி’ என்று இவரை திரையில் பார்த்தவுடன் ரசிகர்கள் கத்துவார்கள். வெடு, வெடு என்று வசனம் பேசுவார்.
பாசமலரில் பி.எஸ்.ஞானத்தை பார்த்தவுடன் பெண்கள் திட்டுவார்கள். அது போல பி.எஸ்.சீதாலட்சுமியும் சினிமா தியேட்டரில் படம் ஓடும்போது திட்டு வாங்குவார். சீதாலட்சுமி சாயல் எஸ்.என்.லட்சுமிக்கு சகோதரியா என்று பலரை குழம்ப வைத்திருக்கிறது.
நவராத்திரியில் சாவித்திரி சந்திக்கும் பல பாத்திரங்களில் சீதாலட்சுமியும் ஒருவர்.
எங்க வீட்டுப்பிள்ளை படத்தில் நம்பியாருக்கு அக்காவாக வருபவர் சீதாலட்சுமி தான். அதே வருடம் ’அன்புக்கரங்கள்’ படத்தில் சிவாஜிக்கு அம்மாவாக படு சீரியஸ் ரோல் செய்தார். “காகிதத்தில் கப்பல் செய்து கடல் நடுவே ஓடவிட்டேன். மணலெடுத்து வீடு கட்டி மழை நீரில் நனைய விட்டேன்… அம்மா நீ கொடுத்த நிழலை விட்டு யார் நிழலில் போய் இருப்பேன்.” – உருக்கமான பாடல் காட்சியில் சிவாஜி நெகிழ்த்துவார்.
பணம் படைத்தவன் படத்தில் டி.எஸ்.பாலையாவுக்கு மனைவியாக, எம்.ஜி.ஆரின் அம்மாவாக சீதாலட்சுமி.
உயர்ந்த மனிதனில் சிவகுமாரிடம் சிடுமூஞ்சியை காட்டினாலும் அன்பை பாந்தமாக வெளிப்படுத்துவார். கோபம் இருக்கும் இடத்தில் குணம் இருக்கும் என்பதை நடிப்பில் இயல்பாக காட்டியவர்.

இவருடைய கணவர் பிரபல எடிட்டர் கே.பெருமாள். இயக்குனர் ஏ.காசிலிங்கத்தை குருவாக சொல்வார்.
எம்.ஜி.ஆர் படங்களில் எடிட்டராக இருந்தவர் கே.பெருமாள். நாடோடி மன்னனுக்கே இவர் தான் எடிட்டர்.
சீதாலட்சுமியம்மாளுக்கு குழந்தைகள் இல்லை. இவர் ஒரு ஆலமரம். டி.ஆர்.ராஜகுமாரி போல சொந்தங்களுக்காக வாழ்க்கையை தியாகம் செய்தவர். தம்பி, தங்கை பிள்ளைகளை வளர்த்து ஆளாக்கியவர்.
இவருடைய தங்கை மகள் டான்ஸ் மாஸ்டர் ராதிகா. இவர் மூத்த சகோதரர் டான்ஸர் கார்த்திக். சீதாலட்சுமியை அம்மாவாக பார்த்தவர்கள். ஹேர் டிரஸ்ஸர் புஷ்பா இவருடைய இன்னொரு தங்கை மகள்.
மிஸ்கினின் முகமூடியில் டான்ஸ் மாஸ்டராக பணிபுரிந்திருக்கிறார். மரியான், 555, சிகரம் தொடு, ரோமியோ ஜூலியட், தாரை தப்பட்டை, விஷாலின் கத்திச்சண்டை, விஜய் சேதுபதியின் தர்மதுரை, உதயநிதியின் கண்ணே கலைமானே போன்ற படங்களிலும் டான்ஸ் மாஸ்டர் ராதிகா தான். ராதிகாவின் கணவர் இளையராஜா இசைக்குழுவில் இருப்பவர். வயலினிஸ்ட் பழனியப்பன்.
இதை ஏன் சொல்ல வேண்டியிருக்கிறதென்றால் ஒரு கலைப்பரம்பரை இவரில் தொடர்கிறது.

எட்டு வயது முதலே நாடகங்களில் நடிக்கத் துவங்கியவர். இவரது சொந்த ஊர் இராமநாதபுரம். 1951-ஆம் ஆண்டு சென்னைக்குக் குடிபெயர்ந்தார். சிவாஜிகணேசன், கே.ஆர்.ராமசாமி, எஸ்.எஸ்.ஆர், இவர்களோடு பற்பல நாடகங்களில் நடித்தது மட்டுமின்றி எம்.ஜி.ஆர் நாடக மன்றத்தின் பல நாடகங்களில் நடித்துள்ளார்.ரவீந்தர் எழுதிய “அட்வகேட் அமரன்” மற்றும் “இன்பக் கனவு” நாடகங்களில் அம்மா வேடம் ஏற்று நடித்தவர் இவர்.
படப்பிடிப்பு நேரம் தவிர்த்த மற்ற நேரங்களில் ‘பேசாமடந்தை’யாக, ‘வாயில்லா பூச்சி’யாக அதிகம் பேசாத நபராக இருக்கின்ற இவர் ‘தொழில்’ என்று ஈடுபடும்போது எங்கிருந்து அவருக்கு ஓர் உற்சாகம், உத்வேகம், கலைஆற்றல் பீறிட்டு வருகிறதோ தெரியாது. பாத்திரத்தில் அப்படியே லயித்து ஒன்றிப் போய்விடுவார்.
கலைவாணர் என்.எஸ்.கே. மற்றும் ராஜகோபால் போன்றவர்களுடன் நகைச்சுவை ஜோடியாக நடித்து மிகுந்த பாராட்டுகள் பெற்றார். நடிப்பிசைப் புலவர் கே.ஆர்.ராமசாமியுடன் இணைந்து அறிஞர் அண்ணா எழுதிய “வேலைக்காரி”, “ஓர் இரவு”, மற்றும் ஏ.எஸ்.ஏ.சாமி எழுதிய “துளிவிஷம்”, போன்ற நாடகங்களில் உள்நாட்டிலும் மற்றும் மலேசியா போன்ற நாடுகளுக்குச் சென்று நடித்தும் பிரபலமானார்.எம்.ஜி.ஆரின் பல படங்களுக்கு எடிட்டராகப் பணிபுரிந்த பெருமாள் என்பவரை 1956-ஆம் ஆண்டு திருமணம் புரிந்துக் கொண்டார்.
நாடகமே உலகம், அன்னமிட்டக்கை, திருமலை தென்குமரி, உரிமைக்குரல், தங்கக்கோபுரம், நீதிபதி, திலகம், நான் யார் தெரியுமா, சத்திய சுந்தரம், காரைக்கால் அம்மையார் உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்ட தமிழ்ப் படங்களில் குணச்சித்திரம்,வில்லி,நகைச்சுவைக் கதாபாத்திரங்களில் நடித்தவர்.கணீரென்ற குரலுக்குச் சொந்தக்காரர்.
பி.எஸ்.சீதாலக்ஷ்மி குறித்து http://nagoori.wordpress.com/ வலைத்தளத்தில் காணக்கிடைக்கப் பெற்ற செய்தி. நன்றி:- திரு.அப்துல் கையூம்.
எம்.ஜி.ஆர் நாடக மன்ற நாடகங்களில் நடித்த நடிகைளில் இன்னொரு பிரபலம் பி.எஸ்.சீதாலக்ஷ்மி. அவரைப் பற்றி ஒரு சில வார்த்தைகள் சொல்லியே ஆக வேண்டும்.. எட்டு வயது முதலே நாடகங்களில் நடிக்கத் தொடங்கியவர்.
எம்.ஜி.ஆர். நாடக மன்றம் தொடங்குவதற்கு இரண்டு வருடங்களுக்கு முன்னர் அதாவது 1951-ஆம் ஆண்டு தன் பெற்றோருடன் ராமநாதபுரத்திலிருந்து வந்து சென்னைக்கு குடிபெயர்ந்தார். குடும்பத்தின் பொருளாதாரச் சூழ்நிலை காரணமாக சிறுவயதிலிருந்தே முத்துச்சாமி நாடாரின் நாடகக்குழு போன்றவற்றில் இணைந்து பணியாற்றிய அனுபவம் இவருக்கு இருந்தது.
சிவாஜி, கே.ஆர்.ராமசாமி, எஸ்.எஸ்.ஆர், இவர்களோடு பற்பல நாடகங்களில் நடித்தது மட்டுமின்றி எம்.ஜி.ஆர் நாடக மன்றத்தின் பல நாடகங்களில் நடித்துள்ளார்.
ரவீந்தர் எழுதிய “அட்வகேட் அமரன்” மற்றும் “இன்பக் கனவு” நாடகங்களில் அம்மா வேடம் ஏற்று நடித்தவர் இவர். இவருடைய அலட்சியமான நடிப்பும், எடுப்பான குரலும் துடிப்பான பேச்சும் எம்.ஜி.ஆருக்கு மிகவும் பிடித்துப் போயிருந்தது. லாயிட்ஸ் ரோட்டில்தான் பெரும்பான்மையான நாடக ஒத்திகைகள் நடைபெறும்.
சரியான நேரத்தில் ஒத்திகைக்கு வரவேண்டும். என்பதில் கண்டிப்பாக இருந்தார் எம்.ஜி.ஆர்.ஆர். யாராவது தாமதமாக வந்தால் பள்ளி வாத்தியார் போன்ற கண்டிப்புடன் கதவைச் சாத்தி விட்டு வெளியே கால்கடுக்க நிற்க வைத்து விடுவார். இதற்கு பயந்தே நாடகக் கலைஞர்கள் அனைவரும் குறித்த நேரத்தில் ஒத்திகைக்கு ஆஜராகி விடுவார்கள். நேரம் தவறாமல் வருவதை ஒரு வழக்கமாக்கிக் கொண்டிருந்தார் சீதாலக்ஷ்மி.
தான் பேச வேண்டிய வசனத்தை முன்கூட்டியே ரவீந்தரிடம் “ஸ்கிரிப்ட்” கேட்டு வாங்கிக்கொண்டுச் சென்று அதற்கேற்றவாறு மனனம் செய்துக் கொண்டு வந்து பிழையின்றி அவர் ஒப்பிப்பார். வசனங்களை, உணர்ச்சிகளைக் கொட்டி ஏற்ற இறக்கத்துடன் எப்படி பேசவேண்டும் என்று பயிற்றுவிப்பதில் ரவீந்தருக்கு நிகர் அவரே. மற்ற நேரங்களில் ‘பேசாமடந்தை’யாக, ‘வாயில்லா பூச்சி’யாக அதிகம் பேசாத நபராக இருக்கின்ற இவர் ‘தொழில்’ என்று ஈடுபடும்போது எங்கிருந்து அவருக்கு ஓர் உற்சாகம், உத்வேகம், கலைஆற்றல் பீறிட்டு வருகிறதோ தெரியாது. பாத்திரத்தில் அப்படியே லயித்து ஒன்றிப் போய்விடுவார்.
“அட்வகேட் அமரன்” நாடகத்தில் ஒரு க்ளைமாக்ஸ் காட்சி இடம்பெறும். தாயார் வேடத்தில் நடிக்கும் பி.ஸ்.சீதாலக்ஷ்மிக்கு எம்.ஜி.ஆர்தான் தன் உண்மையான மகன் என்று தெரிய வருகிறது. துக்கம் தொண்டையை அடைக்க அவரை கட்டிப்பிடித்து அழுவார். இவருடைய அழுகைக்கு ஈடு கொடுத்து எம்.ஜி.ஆரும் அதைவிட உணர்ச்சியைக் கொட்டி அழுவார். மேடையில் “ஜுகல் பந்தி” நடப்பது போலிருக்கும். நடந்துக் கொண்டிருப்பது நாடகம் என்பதையும் மறந்து ரசிகர்களும் விசும்பலுடன் அழ ஆரம்பித்து விடுவார்கள்.
“எல்லோரையும் அழவைத்து வேடிக்கை பார்ப்பவரல்லவா நீங்கள்” என்று மறைமுகமாக சீதாலக்ஷ்மியின் நடிப்புத்திறனைப் பாராட்டுவார் பழம்பெரும் வில்லன் நடிகர் ஓ.ஏ.கே.தேவர்.
எம்.ஜி.ஆருக்கு அழவேத் தெரியாது என்று பொதுவாகவே ஓர் அபிப்பிராயம் நிலவுவது உண்டு. ஆனால் அது உண்மையல்ல.
நிருபரொருவர் எம்.ஜி.ஆரிடம் “நாடகத்திற்கும் சினிமாவிற்கும் இடையே உங்கள் அனுபவத்தில் என்ன வித்தியாசத்தைக் கண்டீர்கள்?” என்று கேட்டபோது “எனக்கு அழுவதென்றால் மிகவும் இஷ்டம். நாடகத்தில் கிளிசரீன் எல்லாம் பயன்படுத்த மாட்டேன். சினிமாவிலும் கிளிசரீன் உபயோகப்படுத்தவே கூடாது என்பதில் பிடிவாதமாக இருந்தேன். ஒரு சில படங்களில் நான் அழுது படப்பிடிப்பு செய்த காட்சிகளில் திரையில் அழுவது போலவே தெரியாது. அதிகப்படியான விளக்கின் சூட்டில் கன்னத்தில் விழுமுன்னரே கண்ணீர் உலர்ந்து விடும். அதற்குப் பிறகுதான் நான் கிளிசரீன் போடவே ஆரம்பித்தேன்” என்று பேட்டி கொடுத்தார்.
சீதாலக்ஷ்மி நாடகங்களில் சின்னச் சின்ன பாத்திரங்களே ஏற்று நடித்தார். நாடகத்தின் மூலம் அவருக்கு கிடைக்கின்ற வருமானம் மிகச் சொற்பமான தொகையாகவே இருந்தது. சிவாஜி நாடக மன்றம் நடத்திய “வேங்கையின் மைந்தன்”, “தேன்கூடு”, “நீதியின் நிழல்”, “களம் கண்ட கவிஞன்”, “வீரபாண்டிய கட்டபொம்மன்”, “ஜஹாங்கீர்” போன்ற நாடகங்களில் நடித்துள்ளார். கலைஞர் கருணாநிதி எழுதிய “உதயசூரியன்” நாடகத்தில் காவல்துறையினரை மையமாக வைத்துப் இவர் பாடும் தாலாட்டுப் பாடல் காட்சி பலமுறை தடை செய்யப்பட்டிருக்கிறது.
கலைவாணர் என்.எஸ்.கே. மற்றும் ராஜகோபால் போன்றவர்களுடன் நகைச்சுவை ஜோடியாக நடித்து மிகுந்த பாராட்டுகள் பெற்றார். நடிப்பிசைப் புலவர் கே.ஆர்.ராமசாமியுடன் இணைந்து அறிஞர் அண்ணா எழுதிய “வேலைக்காரி”, “ஓர் இரவு”, மற்றும் ஏ.எஸ்.ஏ.சாமி எழுதிய “துளிவிஷம்”, போன்ற நாடகங்களில் உள்நாட்டிலும் மற்றும் மலேசியா போன்ற நாடுகளுக்குச் சென்று நடித்தும் பிரபலமானார்.
எம்.ஜி.ஆரின் பல படங்களுக்கு எடிட்டராகப் பணிபுரிந்த பெருமாள் என்பவரை 1956-ஆம் ஆண்டு திருமணம் புரிந்துக் கொண்டார். எம்.ஜி.ஆரின் எத்தனையோ படங்களில் அம்மாவாக, சகோதரியாக, நாத்தனாராக, வில்லியாக நடித்து ரசிகர்களின் மனதில் இடம் பெற்ற அற்புதமான கலைஞர் இவர்.



SEETHALAKSHMI1 By S Subhakeerthana CHENNAI: Every person has a story to tell, and when it comes to the yesteryear actress P S Seethalakshmi, it’s one of poverty and hopelessness. The veteran actor who had starred as mother or grandmother in over 100 films during the 1960s and 1970s is scrambling to make ends meet. The ailing 86-year-old had shared screen space with legends like M G Ramachandran, Chief Minister J Jayalalithaa and Sivaji Ganesan.alls of her home in Saligramam are covered with black-and-white photographs from her old films. Medicines and syrup bottles lie on the table, and trash is scattered everywhere. “TV channels regularly telecast the movies I had been a part of. I can barely recollect things these days, but I remember a few of my dialogues. Please don’t think I watch serials; I hate watching them,” she laughs. “I looked fit and beautiful in Enga Veetu Pillai (1965), Aandavan Kattalai (1964), Anbu Karangal (1965), Petralthaan Pillaiya (1966) etc. But when I look at my reflection, I feel sorry for myself. It has been 7-8 years since I acted even in serials. I have blood pressure, high diabetes and can’t move on my own. I never thought that I’d become like this. It’s a curse to be busy once and now be home doing nothing,” she tears up.Recalling her association with Jayalalithaa, she tells us, “We have worked together. Those were golden days. Amma knows me pretty well and she has immense love towards me. That time, I was residing parallel to her house near Poes Garden. Many times, she has served me food. I used to visit her place often. She’s Dhairiyalakshmi and I still remember how she walks in a brisk way like an angel! I like the way she is. She would be unfazed and cope with any given situation. I think we should learn that from her. Somehow, we lost touch. And I think it’s my misfortune. Before I die, I need to see Amma. That’s my only wish!

Wednesday, 14 October 2020

BABY SAROJA ,CHILD ACTRESS BORN 1931 JANUARY 28 - 2019 OCTOBER 14

 

BABY SAROJA ,CHILD ACTRESS BORN 

1931 JANUARY 28 - 2019 OCTOBER 14



.சரோஜா ராமாமிருதம் (பிறப்பு: 28 ஜனவரி 1931 - இறப்பு: 14 அக்டோபர் 2019[1]) என்பவர் பேபி சரோஜா என்னும் பெயரில் 1930களில் தமிழ்த் திரைப்படங்களில் குழந்தை வேடங்களில் நடித்தவர். இவர் பாலயோகினி (1937), தியாகபூமி (1939), காமதேனு (1941) ஆகிய தமிழ்த் திரைப்படங்களில் நடித்துள்ளார்.[2


வாழ்க்கைச் சுருக்கம்

பிரபல திரைப்பட இயக்குனர் கே. சுப்பிரமணியத்தின் சகோதரர் கே. விசுவநாதன், மற்றும் வத்சலா ஆகியோருக்குப் பிறந்தவர் சரோஜா. தந்தை விசுவநாதன் சென்னையில் சித்திரா டாக்கீசு என்ற பெயரில் திரையரங்கு ஒன்றை நடத்தி வந்தார். பேபி சரோஜா நடித்த மூன்று திரைப்படங்களையும் கே. சுப்பிரமணியமே தயாரித்திருந்தார். காமதேனு திரைப்படத்தில் சரோஜாவின் தந்தையும் (கே. பி. வத்சல்), தாயும் கதாநாயகனாகவும் கதாநாயகியாகவும் நடித்திருந்தனர்.[3] அக்காலகட்டத்தில் கலிபோர்னியா மாநிலம் சாந்தா மொனிக்காவைச் சேர்ந்த ஷெர்லி டெம்பிள் என்ற குழந்தை நட்சத்திரம், பிரமாதமான நடிப்பால் உலகப் புகழ் பெற்றிருந்தார். அதே சமயம் இந்தியாவில் சரோஜா அவர்கள் தன் நடிப்புத் திரமையைக் கொண்டு எல்லோராலும் பாராட்டப் பட்டு இந்தியாவின் ஷிர்லி டெம்பிள் என்று மக்களால் போற்றப்பட்டார். மேலும் அப்போது தமிழ்நாட்டில் பிறந்த சில பெண் குழந்தைகளுக்குப் ”சரோஜ” என்று பெயர் சூட்டினார்கள்.[4]




இறப்பு

பேபி சரோஜா மூப்பின் காரணமாக ஏற்பட்ட உடல்நலக் குறைவால் 2019 அக்டோபர் 14 ஆம் நாள் காலமானார். இறக்கும்போது அவருக்கு வயது 88.[5][1]


மக்களின் பார்வையில் அதிகம் படாமல் கடந்து போன ஒரு செய்தி இந்தியாவின் முதல் குழந்தை நட்சத்திரம் சரோஜா காலமானார் என்பதாகும். அவரை பற்றிய ஒரு சின்ன பிளாஷ்பேக்.


தமிழ் சினிமாவின் முதல் குழந்தைகளுக்கான திரைப்படமாக 1937ல் வெளியானது பாலயோகினி. இப்படத்தின் மூலம் 5 வயது குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார் பேபி சரோஜா. 1931ல் சென்னையில் மிகப்பெரிய தேசபக்தி மிக்க, கலைக்குடும்பத்தில் பிறந்தவர் பேபி சரோஜா. பக்திப் படங்கள், புராணப் படங்கள், சமூகப் படங்கள் வரும் காலகட்டத்தில் முதலில் வந்த குழந்தைகள் படம் இது. இதனை கே.சுப்ரமணியம் இயக்கினார். இப்படத்தில் சரோஜாவின் நடிப்பு, சொந்த குரலில் பாடிய பாடல்கள் அவரை ஒரே படத்தில் புகழின் உச்சிக்கு கொண்டு சென்றது.


அன்றைய ஹாலிவுட் பட உலகின் உலகப்புகழ் பெற்ற குழந்தை நட்சத்திரமாக விளங்கியவர் ஷர்லி டெம்பிள். பேபி சரோஜாவை இந்தியாவின் ஷர்லி டெம்பிள் என்று அழைத்தனர். பாலயோகினி படம் வெளியான பின்பு பிறந்த பல பெண் குழந்தைகளுக்கு சரோஜா என்றே பெயர் வைத்தனர். சரோஜா மை, சரோஜா பவுடர், சரோஜா சாந்து, சரோஜா வளையல் என்று அப்போது சரோஜா பெயரில் அழகு சாதன பொருட்கள் விற்கப்பட்டன.




பாலயோகினியை தொடர்ந்து கல்கி எழுதிய தியாக பூமி படத்தை இயக்கினார் கே.சுப்ரமணியம். தேசபக்தி மிக்க இப்படம் பிரிட்டிஷ் அரசால் தடை செய்யப்பட்டது. கே.டி.மகாதேவன், எஸ்.டி.சுப்புலட்சுமி இணைந்து நடித்த இப்படத்தில் பேபி சரோஜாவையும் நடிக்க வைத்தார் .


இந்த படத்திற்கு பிறகு பேபி சரோஜாவின் புகழ் மேலும் உயர்ந்தது. துணிப்பைகள், நோட்டுப் புத்தகங்கள் என எல்லாவற்றிலும் பேபி சரோஜாவின் படம் அச்சிடப்பட்டது. பிரபல இசையமைப்பாளர் எஸ்.ராஜேஸ்வர்ராவ் இசையில், நந்தில் ஜஸ்வந்லால் இயக்கியப் படம் 1941 ல் வெளியான காமதேனு பேபி சரோஜா நடித்த மூன்றாவது படம். அவர் நடித்த கடைசி படமும் இதுதான்.


மூன்றே படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்து பிரிட்டிஷ் இந்தியாவின் புகழ்பெற்ற முதல் குழந்தை நட்சத்திரம் என்ற பெயர் பெற்றவர் பேபி சரோஜா. 88 வயது வரை சென்னையில் வசித்து வந்த அவர் கடந்த மாதம் 14ந் தேதி காலமானார்.


சாதாரண ரோஜா அல்ல, சரோஜா!


சென்ற திங்­கட்­கி­ழமை, ‘தமிழ் சினி­மா­வின் முதல் குழந்தை நட்­சத்­தி­ரம்’ என்று பறை­சாற்­றப்­பட்ட பேபி சரோஜா மறைந்து விட்­டார்.


‘இந்­தி­யா­வின் ஷர்லி டெம்­பிள்’ என்று பிர­பல ஹாலி­வுட் குழந்தை நட்­சத்­தி­ரத்­திற்கு நிக­ரா­கத் தென்­னாட்­டில் பேசப்­பட்ட பேபி சரோஜா, தமிழ் சினி­மா­வின் ஆரம்ப பதிற்­றாண்­டு­க­ளில் மூன்றே படங்­க­ளில் நடித்­தா­லும், அவ­ருக்­குக் கிடைத்த வர­வேற்­பால் தமிழ் சினிமா சரித்­தி­ரத்­தின் பக்­கங்­க­ளில் நீங்­காத இடத்­தைப் பெற்­றி­ருக்­கி­றார்.





பேபி சரோஜா, திரு­ம­ண­மா­ன­பின் சரோஜா ராமா­மி­ரு­த­மாகி, தானே மூன்று பேபி­கள் (ஒரு பெண், இரண்டு ஆண்­கள்) பெற்­றெ­டுத்து, 88 வயது தாண்­டிய நிலை­யில் கால­மா­கி­யி­ருக்­கி­றார். சின்ன வய­தி­லேயே பெரிய புகழ் பெற்­று­விட்­டா­லும், பெரி­ய­வள் ஆன­வு­டன், சினிமா புகழ் பெற­வேண்­டும் என்று அவ­ருக்­குத் தோன்­றவே இல்­லை­யாம்.


இன்­றைய தலை­மு­றை­யி­ன­ருக்கு அவ­ரைக் குறித்­துத் தெரி­யாது. அத­னால் தான் ஒரு பிர­பல நாளி­த­ழில் அவ­ரு­டைய படத்­திற்­குப் பதி­லாக இன்­னொரு குழந்தை நடி­கை­யின் படத்­தைப் போட்­டுக் ‘காமெடி’ செய்­து­விட்­டார்­கள்!


சுமார் எண்­பது ஆண்­டு­க­ளுக்கு முன் வந்த ‘பால­யோ­கினி’ என்ற படத்­தில் சிறு­மி­யாக அறி­மு­க­மான பேபி சரோஜா சக்கை போடு போட்­ட­தால்­தான், தமிழ்­நாட்­டில் திரும்­பிய பக்­க­மெல்­லாம் குழந்­தை­க­ளுக்கு ‘சரோஜா, சரோஜா’ என்று பெயர் வைத்­தார்­கள் என்­பது சினிமா சரித்­திர ஐதீ­கம்.


இதற்கு ஏதா­வது அத்­தாட்சி உண்டா என்று கேட்­கி­றீர்­களா? ‘நாற்­பது வருட தமிழ் சினிமா’ என்ற தலைப்­பில் ‘இல்­லஸ்­டி­ரே­டெட் வீக்லி’ என்ற பிர­பல ஆங்­கில பத்­தி­ரி­கை­யில் ஏப்­ரல் 20, 1962ல் எழு­திய நிரு­பர் கோபா­ல­கி­ருஷ்­ணன், ‘‘தங்­கள் மகள் ‘பால­யோ­கினி’ என்ற படத்­தில் வந்த பேபி சரோ­ஜா­வைப்­போல் சுட்­டி­யாக இருக்­க­வேண்­டும் என்று நினைக்­காத தமிழ்­நாட்­டுப் பெற்­றோர்  இருந்­தி­ருக்­க­மாட்­டார்­கள்’’ என்று எழு­தி­யது ஒரு சின்ன சான்று.


இந்த எதிர்­பார்ப்­பு­டன் பெயர் சூட்­டப்­பட்­டுத்­தானோ என்­னவோ, ஒரு (ஈ.வி.) சரோஜா திரைப்­ப­டங்­க­ளில் ‘ஆடோ ஆடு’ என்று ஐம்­ப­து­க­ளி­லும் அறு­ப­து­க­ளி­லும் ஆடி­னார்.   இன்­னொரு (எம்) சரோஜா, தங்­க­வே­லு­வு­டன் கைகோர்த்­துக்­கொண்டு, ‘மன்­னார் அண்ட் கோவி’ன் வண்­ட­வா­ளங்­க­ளைத் தண்­ட­வா­ளத்­தில் ஏற்­றி­னார்! இவர்­கள் இரு­வ­ரும் முன்பே மறைந்து விட்­டார்­கள்...


எப்­பவோ ஒரு சில படங்­க­ளில் நடித்த ஒரு ‘குழந்தை’ நடி­கை­யின் மறைவு அவ்­வ­ளவு பெரிய சங்­க­தியா, செய்­தியா என்று கேட்­க­லாம். கேப்­ப­தில் தப்­பில்லை. ஏனென்­றால் பேபி சரோஜா அதை­யெல்­லாம் தாங்­கு­வாள். அவ்­வ­ளவு திறமை உடை­ய­வள். அவள் முகத்­தில் உணர்ச்­சி­கள் காட்­சிக்­குக் காட்சி மாறும். நன்­றாக நடிப்­ப­தோடு சிறப்­பாக பாட­வும் செய்­வாள்.  நல்ல திற­மை­சாலி. அத­னால்­தான் ஒரு சிறந்த இயக்­கு­ந­ரால் நல்ல படங்­க­ளில் நடிக்­க­வைக்­கப்­பட்ட போது அவள் வைரம் போல் மின்­னி­னாள். இதை­யெல்­லாம் இன்­றும் கூட யார் வேண்­டு­மா­னா­லும் பார்த்­துக் கொள்­ள­லாம். ஒரு காலத்­தில் புனே­வில் உள்ள திரைப்­பட ஆவண காப்­ப­கத்­தில் மட்­டும் இருந்த, பேபி சரோஜா முக்­கிய வேடத்­தில் நடித்த ‘தியாக பூமி’ இப்­போது யூ டியூ­பில் கூட இருக்­கி­றது. என்ன, பிரதி சில இடங்­க­ளில் மங்­க­லாக இருக்­கும். ஆனால் இரு­ளில்­தானே நட்­சத்­தி­ரம் தெரி­யும்!


பேபி சரோஜா தமிழ் சினி­மா­வுக்கு வரு­வ­தற்­குக் கார­ண­மாக இருந்­த­வர், அவ­ளு­டைய பெரி­யப்­பா­வான  பிர­பல திரை இயக்­கு­நர் கே. சுப்­பி­ர­ம­ணி­யம்.


மவு­னப்­ப­டங்­க­ளுக்கு  கதை­கள் எழு­திக் கொண்­டி­ருந்த கிரி­மி­னல் லாய­ரான சுப்­பி­ர­ம­ணி­யம், தன்­னு­டைய முதல் பேசும் பட­மான ‘பவ­ளக்­கொ­டி’­­­யில் தியா­க­ராஜ பாக­வ­த­ரை­யும் எஸ்.டி.சுப்­பு­லட்­சு­மி­யை­யும் அறி­மு­கப்­ப­டுத்­தி­ய­வர். தான் இயக்­கிய கதா­நா­ய­கியை பாகஸ்­த­ரா­கக்­கொண்டு அவர் அமைத்த மத­ராஸ் யுனை­டெட் ஆர்­டிஸ்ட்ஸ் கார்ப்­ப­ரே­ஷன் என்ற தயா­ரிப்பு ஸ்தாப­னத்­தின் வாயி­லாக அவர் எடுத்த முதல் படம், ‘பால­யோ­கினி’ . இந்­தப் படத்­தில்­தான் அவர் தன்­னு­டைய தம்பி மக­ளான ஏழு வயது சரோ­ஜாவை அதே பெய­ரில் அறி­மு­கப்­ப­டுத்­தி­னார். ‘‘லட்ச ரூபாய் செல­வில் அவர் எடுத்த படத்­திற்கு  நூறு ரூபாய் பரிசு ஏற்­ப­டுத்தி, பொது ஜனங்­க­ளி­ட­மி­ருந்து தம் கதைக்கு சரி­யான முடிவை தெரிந்து கொண்­டார்,’’ என்ற ஒரு அரிய செய்தி, 1951ல் வந்த ஒரு ‘குண்­டூசி’ இத­ழில் ஒளிந்­து­கொண்­டி­ருக்­கி­றது.


பிரா­மண வித­வை­கள் அனு­ப­விக்­கும் துன்­பங்­கள், பிரிட்­டிஷ் ஆட்­சி­யின் கீழ் நில­விய வேலை­யில்லா திண்­டாட்­டம், ஆங்­கி­லே­ய­ரின் கைக்­கூ­லி­யான ஒரு உதவி கலெக்­ட­ரின் மனி­தா­பி­மா­ன­மற்ற, ஒழுக்­க­மற்ற செயல்­பா­டு­கள், போலீ­சா­ரின் கொடு­மை­யான போக்கு, ஜாதிய கொடு­மை­கள் என்று அன்­றைய சமூ­கத்­தில் நில­விய பல தீமை­களை உணர்ச்­சி­க­ர­மான சிறந்த திரைக்­க­தை­யின் வாயி­லாக நன்­றாக முன்­வைத்­தார் இயக்­கு­நர் சுப்­பி­ர­ம­ணி­யம். படத்­தில் பல சிறு­மி­களை அவர் அறி­மு­கப்­ப­டுத்­தி­னார்.


இவர்­க­ளில் பேபி ருக்­மணி (பின்­னா­ளில் குமாரி ருக்­ம­ணி­யாக ‘ஸ்ரீவள்­ளி’­­­யில் அசத்­தி­ய­வர், நடிகை லட்­சு­மி­யின் தாய்), பிரு­க­தாம்­பாள், பால­ச­ரஸ்­வதி (சில படங்­க­ளில் நடித்­த­பின், ஐம்­ப­து­க­ளில் பின்­ன­ணிப் பாட­கி­யாக தடம் பதித்­த­வர்), பேபி சரோஜா முத­லி­யோர்


இடம்­பெற்­றார்­கள்.    


பிரா­மண வித­வை­கள் மொட்டை அடித்­துக் கொண்டு ஒதுங்கி வாழ­வேண்­டும் என்ற சமூ­கக்­கட்­டுப்­பாடு இருந்த காலத்­தில், சீதா­லட்­சுமி என்ற வித­வை­யைத் அதே பாத்­தி­ரத்­தில் சுப்­பி­ர­ம­ணி­யம் நடிக்க வைத்­தது அவர் மீது வம்பு வழக்­கு­க­ளுக்கு வகை செய்­தது. ஆனால் இரு­த­ய­மற்ற சம்­பி­ர­தா­யங்­க­ளுக்கு இடம் கொடுக்­கக்­கூ­டாது என்­ப­தில் சுப்­பி­ர­ம­ணி­யம் உறு­தி­யாக இருந்­தார்.


கடை­சி­யில், சமூ­கத்­தின் பிரச்­னை­க­ளுக்கு  ‘பால­யோ­கி­னி’­­­யில் தீர்­வாக ஒலிக்­கி­றது, பேபி சரோ­ஜா­வின் குழந்­தைத்­தன்மை கலந்த குரல். உச்­சக்­கட்­டத்­தில் சிறுமி சரோ­ஜா­வுக்கு கொடுத்த ஸ்தான­மும், அவள் படத்­தில் அழ­கா­கப் பாடிய, ‘கண்ணே பாப்பா, மிட்­டாய் வாங்­கித் தரு­கி­றேனே நான்’ என்ற பாட­லும் நல்ல வர­வேற்­பைப் பெற்­றன. ‘ஜாவோ ஜாவோ ஏ மேரே சாதோ’ என்று ‘பூரண் பக்த்’ என்ற இந்தி படத்­தில் கே.சி.டே  பாடிய பாட­லின் மெட்­டிற்கு எழு­தப்­பட்ட தமிழ்ப் பாடலை நன்­றா­கக் கற்று, தன்­னு­டைய மழைலை மாறாத குர­லில் பாடி­யி­ருந்­தாள் பேபி சரோஜா.


 ‘பால­யோ­கினி’ என்ற ஒரே படத்­தில் சரோ­ஜா­வின் புகழ் உச்­சத்­திற்­குப் போனது. அவள் தோற்­ற­மும், நடிப்­பும், பாட்­டும் அப்­படி. சரோ­ஜா­வின் அழ­கை­யும் சாமர்த்­தி­யத்­தை­யும் கண்டு பிர­மித்த தமி­ழர்­கள், தாங்­கள் பெற்ற ரோஜாக்­க­ளுக்­கும் ‘சரோஜா’ என்று பெயர் வைக்­கத் தொடங்­கி­னார்­கள். பின்­னா­ளில், அந்த வகை­யில்­தானோ என்­னவோ கே. சுப்­பி­ர­ம­ணி­யம் கன்­ன­டத்­தில் எடுத்த ‘கச்­ச­தே­வ­யானி’ படத்­தின் வாயி­லாக ஒரு ‘கன்­ன­டத்­துப் பைங்­கிளி’, சரோ­ஜா­தேவி என்ற பெய­ரில் தமிழ்­நாட்­டுக்கு வந்து சேர்ந்­தது!


பெரும் சங்­கீத நட்­சத்­தி­ர­மான தியா­க­ராஜ பாக­வ­த­ரின் ‘சிந்­தா­ம­ணி’­­­யும், ‘அம்­பி­கா­ப­தி’­­­யும் ரசி­கர்­க­ளைக் கொள்­ளைக் கொண்ட 1937ல், சென்னை பிலிம் லீக் நடத்­திய சினிமா தேர்­த­லில், பேபி சரோஜா ஓங்கி நின்ற ‘பால­யோ­கி­னி’­­­யும் முன்­ன­ணி­யில் நின்­றது!


‘பால­யோ­கினி’ வாயி­லாக பேபி சரோஜா அடைந்த புக­ழுக்கு ஒரு வழக்­கும் சான்­றாக இருக்­கி­றது.  காதர்  இஸ்­மா­யில் கம்­பெனி என்ற இறக்­கு­மதி நிறு­வ­னம் ஜப்­பா­னி­லி­ருந்து சந்­தன சோப்பை இறக்­கு­மதி செய்து, அதை ‘சரோஜா சாண்­டல் சோப்’ என்ற பெய­ரில் விற்­பனை செய்து வந்­தது. சுதே­சிப் பொருட்­களை மட்­டும் பயன்­ப­டுத்­த­வேண்­டும் என்ற கொள்கை உடைய இயக்­கு­நர் சுப்­பி­ர­ம­ணி­யம், சரோ­ஜா­வின் பெயர் ஜப்­பான் சோப்பை விற்­கப் பயன்­ப­டு­வ­தற்கு எதி­ராக வழக்­குப் போட்டு அதை நிறுத்­தி­னார்! இந்த செய்தி, என்­னு­டைய முன்­னாள் கணி­தப் பேரா­சி­ரி­யர் எம்.ஆர். ரங்­க­ரா­ஜன் எழு­திய கே.சுப்­பி­ர­ம­ணி­யத்­தின் வாழ்க்கை சரி­தத்­தில் உள்­ளது.


பேபி சரோஜா முக்­கிய பாத்­தி­ரத்­தில் நடித்த அடுத்த படம், ‘தியாக பூமி’. கல்­கி­யின் தொடர் நாவ­லின் அடிப்­ப­டை­யில் எடுக்­கப்­பட்ட இந்­தப் படம், இரு­பது வாரங்­கள் ஓடிய பிறகு பிரிட்­டிஷ் ஆட்­சி­யா­ளர்­க­ளால் தடை செய்­யப்­பட்­டது.  


‘தியாக பூமி’­­­யில் பேபி சரோஜா நடித்த சாரு என்ற பாத்­தி­ரம் இடம்­பெற்ற ஒரு காட்­சி­யைக் கல்கி இப்­படி விவ­ரித்­தார்:


‘‘அன்று சாயங்­கா­லம்... சாரு சாவ­டிக்­குப்­பத்­திற்­குத் திரும்­பிய போது, குதித்­துக்­கொண்டு வீட்­டிற்­குள் போனாள்.


‘தாத்தா, தாத்தா, இன்­னிக்கு ஒரு சமாச்­சா­ரம் நடந்­தது. உனக்கு அதைச் சொல்­லவே மாட்­டேன்,’ என்­றாள்!


‘நீ சொல்­லாம போனா நானும் கேட்­கவே மாட்­டேன்’, என்­றார் சாஸ்­திரி!


‘நீ கேக்­காம போனா நான் அழு­வேன்’, என்­றாள் சாரு!


அவ­ரு­டைய மடி­யில் உட்­கார்ந்­து­கொண்டு, ‘தாத்தா, இன்­னிக்கு ஒரு மாமி­யைப் பாத்­தோம். ரொம்ப ரொம்ப நல்ல மாமி’, என்று சொல்­லி­விட்டு, சற்று மெது­வான குர­லில், ‘அந்த மாமி என்­னைக் கட்­டிண்டு முத்­த­மிட்டா, தாத்தா’, என்­றாள்’’.


கல்கி இப்­படி வர்­ணிக்­கும் காட்­சி­யில்,  குழந்தை சாருவை முத்­த­மிட்ட மாமி, வேறு யாரும் இல்லை. சாருவை பெற்­றெ­டுத்த தாய்­தான்! ஆனால் இந்த சங்­கதி அந்த நல்ல மாமிக்கோ, அவ­ளால் முத்­த­மி­டப்­பட்ட சாரு­வுகோ தெரி­யாது! அந்த ‘ரொம்ப நல்ல மாமி’­­­யின் நிஜ­மான தந்தை, தன்னை சாரு­வின் வளர்ப்பு தாத்­தா­வா­கக் கரு­திக்­கொண்­டி­ருக்­கும் சம்பு சாஸ்­தி­ரி­தான் !


பாட்டு, நடிப்பு, நாட்­டி­யம் என்று பல­வித உருக்­க­மான காட்­சி­க­ளில் பேபி சரோஜா ‘தியாக பூமி’­­­யில் அற்­பு­த­மாக நடித்­தாள். கே. சுப்­பி­ர­ம­ணி­யத்­தின் திரைக்­கதை, வச­னம், இயக்­கம் மற்­றும் தயா­ரிப்­பில் உரு­வான ‘தியாக பூமி’­­­யின் கதை­யில் சில ஓட்­டை­கள் இருந்­தா­லும்,  தர­மான நடிப்பு, அள­வான சங்­கீ­தம், நல்ல வச­னங்­கள், வித்­தி­யா­ச­மான கிளை­மேக்ஸ், தேசிய போராட்­டத்­தின் எழுச்சி, அடுக்கு மொழி வச­னங்­கள் இல்­லாத சீர்த்­தி­ருத்­தம் என்று பல சிறந்த அம்­சங்­கள் இருந்­தன. இவற்­றின் நடு­நா­ய­க­மாக சாரு­வாக நடித்த பேபி சரோ­ஜா­வின் கவர்ந்­தி­ழுக்­கும் வசீ­கர பிம்­பம் ஜொலித்­தது. இந்­துஸ்­தானி மெட்­டில் அவள் பாடிய, ‘சொல்லு காந்தி தாத்­தா­வுக்கு ஜே ஜே ஜே’ என்ற பாட­லும் வெற்றி அடைந்­தது.


கடை­சி­யாக, ‘காம­தேனு’ (1941) என்ற படத்­தில் பேபி சரோஜா நடித்­தாள். இதை இயக்­கி­ய­வர், இந்தி சினி­மா­வில் தலை­யாய இயக்­கு­நர்­க­ளில் ஒரு­வ­ராக கருத்­தப்­பட்ட நந்த்­லால் ஜஸ்­வந்த்­லால். ஆனால் படம் நல்ல வர­வேற்பை பெற்­ற­தா­கத் தெரி­ய­வில்லை.


‘காம­தே­னு’­­­விற்­குப் பிறகு, இரண்­டாம் உல­கப் போரின் பீதி சென்­னை­யில் பர­வி­ய­தால், குடும்­பத்­தா­ரு­டன்  பாப­நா­சம் சென்­றாள் பேபி சரோஜா. அங்கே கர்­நா­டக இசை, வீணை வாசிப்பு, சமஸ்­கி­ருத மொழி பயிற்சி ஆகி­ய­வற்­றில் ஈடு­பட்­டாள். பிறகு ெபங்­க­ளூரு வாசம், மத்­திய சங்­கீத கல்­லூ­ரி­யில் இசை மற்­றும் ஓவி­யப் பாடம், 1955ல் திரு­ம­ணம், 35 வரு­டங்­கள் மும்பை வாசத்­திற்­குப் பிறகு மீண்­டும் சென்னை என்று வாழ்க்கை வட்­டம் நிறை­வ­டைந்­தி­ருக்­கி­றது.   பேபி சரோ­ஜா­வின் மர­ணத்­தால் உறங்­கிக்­கொண்­டி­ருந்த அந்­தக் காலத்து நினை­வு­கள் மீண்­டும் வலம் வரு­வ­தற்­கான வாய்ப்­பும் வந்­தி­ருக்­கி­றது. சுட்­டி­யான குட்­டீஸ் வரு­வார்­கள், போவார்­கள். ஆனால் வெகு­ஜன ஊட­க­மான சினி­மா­வின் முதல் சுட்­டி­யான குட்டி, பேபி சரோ­ஜா­தான் என்ற சரித்­தி­ரம் அப்­ப­டியே இருக்­கும்.

Monday, 17 August 2020

KERALA FLOODS 2019





KERALA FLOODS 2019
.26 நொடிகளில் குழந்தையை மீட்ட
கண்ணையா குமார் யார்?

கண்ணையா குமார், கேரளாவில் ஏற்பட்ட வரலாறு காணாத வெள்ள பாதிப்பில் இருந்து மக்களை காப்பாற்றவந்த தேசிய பேரிடர் மீட்புக்குழுவில் முக்கியமாக பேசப்படுகிறார்.

பெரியாறு நதியில் வெள்ளம் கரைபுரண்டு வந்த நேரத்தில், இடுக்கி மாவட்டம் செருதொனி பகுதியில் ஒரு தந்தையின் கைகளில் இருந்த சிறு குழந்தையை எடுத்துக்கொண்டு, ஒரு பாலத்தை ஓடிக்கடந்தார் கண்ணையா. அவர் பாலத்தைத் தாண்டியதும் அந்த இடம் தகர்ந்து பாலம் உள்வாங்கி கடல்போல காட்சியளித்தது.

சென்னையில் இருந்து கேரளா வந்துள்ள 10 படைப்பிரிவுகளில், பேரிடர் மீட்புக் குழுவைச் சேர்ந்த கண்ணையா ஒரு மீட்புப் பணி காவலர். குழந்தையை மீட்கும் பணியை முடிக்க கண்ணையா எடுத்துக்கொண்டது வெறும் 26நொடிகள் என்கிறார்கள் மீட்புக் குழுவில் உள்ள மற்ற அதிகாரிகள்.

கரையேறியதும், கண்ணையாவுக்கு எவ்வாறு நன்றி சொல்வதென்றே தெரியாமல் குழந்தையின் தந்தை நெகிழ்ந்துபோனார்.

''பாதிக்கப்பட்ட எல்லோரும் என் குடும்பம்''

சமூக வலைத் தளங்களில் பிரபலமாகிவிட்ட பீகாரைச் சேர்ந்த கண்ணையாகுமார், தனது மூன்று சகோதரர்கள், பெற்றோர் என குடும்ப உறுப்பினர்களுக்கு உதவவும், தனது குடும்பத்தை வறுமையில் இருந்து மீட்கவும் பள்ளிப்படிப்பு முடித்ததும், அரசுப்பணித் தேர்வுகளை எழுதினார். பேரிடர் மேலாண்மை மீட்புக்குழுவில் கடந்த ஆறு ஆண்டுகளாக பணிபுரிகிறார்.

'என் குடும்பத்தை காப்பாற்றுவதற்காக நான் அரசு வேலைக்குச் சேர்ந்தேன். தற்போது பலரையும் காப்பாற்றுகிறேன் என்பதில் மகிழ்ச்சி. எனது மூன்று சகோதரர்களில் இருவர் தற்போது இந்திய ராணுவத்தில் இருக்கிறார்கள். ஒரு சகோதரர் காஷ்மீரில் வேலைசெய்கிறார்.

நாங்கள் சந்தித்துக் கொள்வது அரிது. ஆனால் தற்போது வேலை எங்களுக்குப் பிடித்துவிட்டது. எங்கள் பெற்றோரும் பெருமையாக இருக்கிறார்கள். இப்போது பாதிக்கப்பட்ட ஒவ்வொருவரும் என் குடும்பம் ஆகிப்போனார்கள்'' என்கிறார் கண்ணையா.

கேரளாவில் நடக்கும் மீட்பு பணிகள் குறித்துப் பேசிய அவர், ''வெள்ள மீட்புப் பணிகளுக்காக கேரளா செல்கிறோம் என்பது மட்டும் தெரியும். இங்குவந்தபோது நாங்கள் நிறைய வேலைசெய்யவேண்டும் என்பது புரிந்தது. நாங்கள் வந்துள்ள இடுக்கி மாவட்டத்தில் நிலச்சரிவு அதிகம்.

செருதொனி பகுதியில் 26 ஆண்டுகளுக்கு பிறகு, முன்பு நதி இருந்த இடத்தில் வெள்ளம் பாய்கிறது. செருதொனி பேருந்துநிலையம் இருந்த இடம் தெரியவில்லை. தென்னந் தோப்புகள் மூழ்கியுள்ளன. உதவி கேட்கும் குரலுக்காக காத்திருக்கிறோம்'' என்கிறார் கண்ணையா.

'இயற்கையை கணிக்க முடியாது''

மீட்புக்குழுவைச் சேர்ந்த மற்றொரு பணியாளர் கிரிபால் சிங் பேசும்போது வெள்ள மீட்புப் பணி அனுபவத்தை விளக்கினார்.

''இயற்கை சீற்றம் என்றால் பெரும்பாலும் நம்முடைய கணிப்பு எதுவும் சரியாக இருக்காது. எதற்கும் தயாராக இருக்கவேண்டும் என்பது மட்டுமே எங்களுக்கு சொல்லப்படும் மந்திரம்.

மீட்கப்படவேண்டியவர்கள் எவ்வளவு ஆழத்தில் சிக்கியுள்ளார்கள்? என்பதைப் பொருத்து அவர்களை கரைக்கு கொண்டுவர எடுக்கும் நேரம் முக்கியம். கரைக்கு கொண்டு வந்ததும் முதலுதவி உடனடியாக செய்யவேண்டும்.

அச்சத்தில் இருக்கும் மக்களுக்கு எங்கள் வேலை நம்பிக்கை கொடுக்கும். உயிரை காப்பற்றுவதற்கு நாங்கள் எடுக்கும் முயற்சியில் பாதிக்கப்பட்டவர்களும் சேர்ந்தே செயல்படுவார்கள்'' என்றார்.

கேரளாவில் அடுத்த இரண்டு நாட்களும் கடுமையான மழை இருக்கும் என்ற அறிவிப்பு உள்ளதால், மீட்புப்படகு, ஜாக்கெட், மருந்துகள் உள்ளிட்டவற்றை தயாராக வைத்துக்கொண்டு மழையைக் கண்காணித்தபடி பணியில் ஈடுபட்டுள்ளனர் மீட்புப்பணியாளர்கள்.
.

94 ஆண்டுகளுக்குபின் பேரிடரை சந்தித்த கேரளா: மாநிலமெங்கும் நிவாரண முகாம்கள் அமைப்பு

கடவுளின் சொந்த தேசம்'(God's own country) என்ற அடைமொழியுடன் அழைக்கப்படும் கேரளா, 94 ஆண்டுகளுக்கு பிறகு கோரமான வெள்ள பேரிடரைச் சந்தித்துள்ளது.

கடந்த இரண்டு வாரங்களில் கேரளாவின் 14 மாவட்டங்களும் முழுவதும் பாதிக்கப்பட்டு, 67 பேர் பலியாகியுள்ளனர். குறிப்பாக புதன்கிழமை (15ஆகஸ்ட்) அன்று 25பேர் பலியாகியுள்ளதாக கேரள அரசு அறிவித்துள்ளது.

எல்லா மாவட்டங்களிலும் நிவாரண முகாம்கள் செயல்படத்தொடங்கியுள்ளன. மாநிலத்தில் உள்ள அனைத்து (14) மாவட்டங்களிலும் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

சாலைகளில் சேதாரம், பல இடங்களில் போக்குவரத்து,மின்சாரம் துடிக்கப்பட்டு , கேரளாவின் பல பகுதிகள் தீவுகள் போல தோன்றுகின்றன. இதுவரை கடுமையான வெள்ளத்தைச் சந்திக்காத கொச்சின்,பாலக்காடு,வயநாடு போன்ற இடங்களில் முதல்முறையாக வெள்ளம் கரைபுரண்டு நகரம் மற்றும் கிராமங்களை சூழ்ந்துள்ளது.

பிபிசி தமிழிடம் பேசிய மீட்பு படையினர் கொச்சின் பகுதியில் உள்ள கம்பெனிபாடி பகுதியில் இதுவரை வெள்ளத்தை சந்திக்காத மக்கள் சிலர் தங்கள் வீடுகளுக்குள் இடுப்பளவு தண்ணீர் புகுந்தாலும் வெளியேற மனமில்லாமல் இருப்பதாக கூறுகின்றனர்.

'கம்பெனிபாடியில் சுமார் 200 குடும்பங்களை வெளியேற்றவேண்டும். பலர் கைகளில் குழந்தைகளை வைத்துக்கொண்டு, வெள்ளம் வடிந்துவிடும். நாங்கள் பிறகு வருகிறோம் என்கிறார்கள். நிலைமை மோசமாகியுள்ளது என்பதை உணர்த்தினாலும் சிலர் தங்களது உடைமைகளை விட்டுவர மறுக்கின்றனர்,'' என ஜோஸ் என்ற மீட்புப்பணியாளர் பிபிசி தமிழிடம் தெரிவித்தார்.

கேரளவில் முக்கியமாக கொண்டாப்படும் ஓணம் பண்டிகை ஆகஸ்ட்15ல் தொடங்கினாலும், பெரும்பாலான ஊர்களில் அதற்கான சுவடே இல்லை. கேரள அரசு இந்த ஆண்டு ஓணம் திருவிழா கொண்டாடத்தை ரத்து செய்துவிட்டு,நிவாரணப் பணிகளுக்கு நிதியை செலவு செய்யப்போவதாக அறிவித்துள்ளது.

கொச்சி சர்வதேச விமான நிலையமும் 18ஆம் தேதி வரை மூடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

கேரளாவில் உள்ள 27அணைகளும் முழுவதுமாக திறக்கப்பட்டதால், வீடுகள்,தென்னை,பாக்கு,தேயிலை,ரப்பர் என எல்லா விளைநிலங்களிலும் வெள்ளம் தனது தடத்தைப் பதித்துச் சென்றது. 26 ஆண்டுகளுக்கு பிறகு, இடுக்கி அணையின் ஐந்து மதகுகளும் திறக்கப்பட்டு, பெரியார் நதி முழுவீச்சில் முன்னர் பாய்ந்த இடங்களில் தற்போது பயணிக்கிறது

இடுக்கி மாவட்டத்தில் நீரில் மூழ்கிய ஒரு தென்னைமர தோப்புக்கு சொந்தக்காரான விக்ரமன்(65) பேசும்போது தனது தென்னந்தோப்பு இருந்த சுவடுகூட தற்போது இல்லை என்கிறார்.

''இதுவரை நாங்கள் விவாசயம் செய்துவந்தோம். தற்போது அகதியைப்போல உணர்கிறோம். எங்களின் நிலங்கள் எங்கு உள்ளன என்று தெரியாது. எங்கள் ஊர் முழுவதும் வெள்ளக்காடாக கட்சியளிக்கிறது. எங்களின் தேவைகளை இந்த ஆண்டு விளைச்சலைக் கொண்டு சமாளிக்க எண்ணியிருந்தோம். அது தற்போது கானல் நீராகிவிட்டது'' என்று அவர் தெரிவித்தார்.

சுமார் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் வீடுகளை இழந்து, 300க்கும் மேற்பட்ட வெள்ளநிவாரண முகாம்களில் தங்கியுள்ளனர். தொடர்ந்து நிலச்சரிவு ஏற்படுவதால், முகாம்களில் இருந்து வெளியேற யாரும் விரும்பவில்லை.


வெளியூர்களில் இருந்து காய்கறிகள் உள்ளிட்ட சரக்குகளை ஏற்றிவரும் லாரிகள் கேரளாவுக்கு வருவதில் சிரமம் உள்ளது.

வெளிமாநில லாரிகள் வந்துசேரும் முக்கிய சாலையான கண்டைனர் சாலை முழுவதுமாக மூழ்கியுள்ளது என்பதால் பல லாரிகள் அங்கேயே நிறுத்தப்பட்டுள்ளன. ''இடுக்கி அணையில் உள்ள நீர் கண்டைனர் சாலைக்கு அருகில் உள்ள ஏரிகளுக்கு வந்து கடலில் சேரும். இங்குள்ள கடைகள் முழுவதுமாக மூழ்கிவிட்டன. லாரிகளை நிறுத்திவிட்டு எங்கள் உயிரை காப்பாற்றி கொள்ள வேண்டிய நிலையில் இருக்கிறோம்,'' என்கிறார் வணிகர் சுந்தரம்.
.