Showing posts with label 1975. Show all posts
Showing posts with label 1975. Show all posts

Sunday, 4 October 2020

SANGHAVI,TAMIL ACTRESS BORN 1975 OCTOBER 4 .

 



SANGHAVIசங்கவி தமிழ் நடிகை 
பிறப்பு  4 அக்டோபர் 1975





சங்கவி (பிறப்பு: அக்டோபர் 4, 1975) இந்தியத் திரைப்பட நடிகை ஆவார். இவருடைய இயற்பெயர் காவ்யா ரமேஷ். திரையுலகிற்காக தன் பெயரை சங்கவி என மாற்றிக் கொண்டார். தமிழ், தெலுங்கு மற்றும் கன்னட மொழிப் படங்களில் நடித்துள்ளார். 
தமிழ்த் தொலைகாட்சி நெடுந்தொடர்களிலும் நடித்துள்ளார். இவர் இந்தியாவின் கர்நாடக மாநிலம் மைசூரில் பிறந்தவர். இவருடைய தந்தை மைசூர் மருத்துவக் கல்லூரிப் பேராசிரியர் மட்டும் அல்லாமல் காது, மூக்கு, தொண்டை மருத்துவரும் ஆவார். சங்கவி தன்னுடைய பள்ளி படிப்பை மைசூரில் உள்ள மரியப்பா பள்ளியில் பயின்றார்.

1993-ம் ஆண்டில் வெளிவந்த ‘அமராவதி’ என்ற படத்தில் அஜித்குமார் ஜோடியாக அறிமுகமானவர் சங்கவி. விஜய் ஜோடியாக ‘ரசிகன்,’ ‘கோயம்புத்தூர் மாப்பிள்ளை’ ஆகிய படங்களில் நடித்து இருந்தார். தொடர்ந்து, ‘நாட்டாமை,’ ‘கட்டுமரக்காரன்,’ ‘லக்கிமேன்,’ ‘சேலம் விஷ்ணு,’ ‘மன்னவா,’ ‘உளவுத்துறை,’ ‘ரிஷி’ உள்பட பல படங்களிலும் அவர் நடித்து இருக்கிறார்.

கடந்த சில வருடங்களாக அவர் தமிழ் படங்களில் நடிக்கவில்லை. சினிமாவை விட்டு ஒதுங்கியிருந்தார். இந்தநிலையில் தொழில் அதிபர் வெங்கடேஷ் என்பவருடன் சங்கவிக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டது. சங்கவி-வெங்கடேஷ் திருமணம் பெங்களூரில்  நடைபெற்றது. ‘‘இது, காதல் திருமணம் அல்ல. 



இரண்டு பேரின் பெற்றோர்களாலும் நிச்சயிக்கப்பட்ட திருமணம். திருமணத்துக்குப்பின், நான் தொடர்ந்து நடிப்பேன். அதற்கு என் கணவர் அனுமதி கொடுத்து இருக்கிறார்’’ என்று சங்கவி தெரிவித்துள்ளார்.


தமிழ் சினிமாவில் 90களில் கலக்கி வந்த நாயகி தான் நடிகை சங்கவி.இவர் தமிழ் சினிமாவின் அன்றைய கலாகட்டத்தில் முன்னணி நடிகையாக வளம் வந்தவர்.இவர் தமிழ் திரையுலகில் தனது முதல் படமான அமராவதி படத்தில் தல அஜித் அவர்களுடன் இணைந்து அதன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகி தமிழ் சினிமா ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றவர்.இவர் பின்பு தமிழ் திரையுலகில் பல படங்களில் நடித்து இன்று வரைக்கும் பல ரசிகர்களை தான் வசம் வைத்துள்ளார்.நடிகை சங்கவி அவர்கள் பஞ்சதந்திரம், ஆணை போன்ற படங்களில் முன்னணி பிரபலங்களுடன் நடித்து வெற்றி படமாகவே இருந்தது.


தற்போது இவர் படங்களில் நடிப்பதை நிறுத்திவிட்டார்.இவர் பல படங்களை நடித்து திருமணம் செய்து கொண்ட பிறகு பின்பு படங்களில் நடிக்க வில்லை.நடிகை சங்கவி அவர்கள் 38 வயதில் பெங்களுரு வை சேர்ந்த வெங்கடேசன் என்பவரை தொழிலதிபரை திருமணம் செய்து கொண்டார்.இவர் தற்போது கணவருடன் பெங்களுருவில் வசித்து வரும் இவர் அதிக படியான படங்களில் நடிக்காமல் ரசிகர்களை வருத்தத்தில் ஆழ்த்தினர்.இவர் திருமணமாகி தற்போது 42வயதில் குழந்தையை பெற்றுள்ளார்.இவர் சமுக வலைதளங்களில் அக்டிவாக இருந்து வருகிறார்.தற்போது தனது குழந்தையுடன் புகைப்படம் ஒன்றை வெளியிட்டு அந்த புகைப்படத்திற்கு கேப்சன் ஒன்றை பதிவிட்டுள்ளார்.அதில் இவர் அழகான தேவதை என குறிப்பிட்டுள்ளார்.மேலும் அந்த பதிவிற்கு அவரது ரசிகர்கள் அனைவரும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகினறனர்.மேலும் அந்த புகைப்படத்தை இணையதளத்தில் பரப்பி மற்றும் லைகுகளை குவித்த வண்ணம் வருகின்றனர்.அந்த புகைப்படம் கீழே உள்ளது.

Friday, 2 October 2020

K.KAMARAJ ,RIGHT POLITICIAN EARN NO MONEY BORN 1903 JULY 15 - 1975 OCTOBER 2

 

K.KAMARAJ ,RIGHT POLITICIAN EARN NO MONEY 

BORN 1903 JULY 15 - 1975 OCTOBER 2




“பூகோளம் என்பது நதிகள், மலைகள், பயிர் வகைகள், மக்கள் வாழ்க்கை என்பதைக் பற்றிக் கூறும் கல்வி என்றால் பலரைவிட நான் நன்கறிவேன். புத்தகப் படிப்புதான் பூகோளம் என்றால் அது எனக்குத் தெரியாது, அது எனக்குத் தேவையும்மில்லை”.

காமராஜ்

@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@

கனரக கொதிகலன் தொழிற்சாலை என்ற மிகுமின் அழுத்த சக்தி மூலம் செயல்படும் ஒரு மாபெரும் தொழிற்சாலையை இந்தியாவில் நிர்மாணித்து தர ஒரு செக் நாட்டு நிறுவனம் முன்வந்தது. இதை தமிழகத்தில் தொடங்க, மத்திய அரசிடம் ஒப்புதல் வாங்கி வந்தார் காமராஜ். மத்திய அரசு துறை அதிகாரிகளும், செக்நாட்டு தொழில் முனைவர்களும் இணைந்து தமிழகத்தில் பொருத்தமான இடம் தேடி வலம் வந்தனர்.பரந்த வெளி, தூய்மையான நீர், தேவையான மின்சக்தி, போக்குவரத்துக்கான தொடர்வண்டி வசதி இத்தனையும் கூடிய ஓர் இடத்தைத் தமிழக அதிகாரிகளால் காட்டமுடியவில்லை. அலைந்து சோர்ந்து போன செக் நாட்டு தொழில் முனைவர்கள் அத்தொழில்கூடமமைக்க தமிழகத்தில் தக்க இடமில்லை என்ற முடிவெடுத்துக் கிளம்பத் தயாரானார்கள். இதைக் கேள்வியுற்ற காமராஜ் அவர்களையும் உடன் சென்றாய்ந்த நம்மவர்களையும் அழைத்தார். அமைதியாக விசாரித்தார். அதிகாரிகள் சுட்டி காட்டிய இடங்களையும் உடன் விசாரித்தார். அதிகாரிகள் சென்று காட்டிய இடங்களைப் பட்டியலிட்டனர். அவர்கள் கேட்க்கும் வசதிகள் ஒரு சேர அமைந்த இடத்தைக் காட்ட முடியவில்லை என்றனர்.


ஆனால் தமிழகத்தின் ஒவ்வொரு மாவட்டத்தின் மூலை முடுக்குகளையெல்லாம் தமது சுற்றுபயணங்கள் மூலம் நன்கறிந்திருந்த காமராஜ் ஒரு கணம் சிந்தித்து விட்டுக் “காவிரியாற்றங்கரையில் திருவெறும்பூர் என்ற ஊர் இருக்கிறதே, அந்த இடத்தைக் காட்டினீர்களா?”, அதிகாரிகள் இல்லையென்று தலையாட்டினார்கள்.“ஏன்?… இவங்க கேட்டிற எல்லா வசதிகளும் அங்கே இருக்கே, போய் முதல்ல அந்த இடத்தை காட்டிட்டு எங்கிட்ட வாங்க” என்றார்.என்ன ஆச்சர்யம்! அந்த இடத்தைப் பார்வையிட்ட செக் நாட்டு வல்லுனர்களுக்கு அந்த இடம் எல்லா வகைகளிலும் பொருத்தமான இடமாக தொன்றியது.


அங்கு உருவாகி இன்று உலக நாடுகளுக்கு தன் செய்பொருளை ஏற்றுமதி செய்யும் “பெல்” என்றழைக்கப்படும் பாரத் ஹெவி எலக்ட்ரிக்கல்ஸ் லிமிடெட் (BHEL) என்ற பெருமைவாய்ந்த நிறுவனமே அது.காமராஜ் ஆட்சிப் பொறுப்பேற்ற சில ஆண்டுகள் வரை எதிர்கட்சி மேடைகளில் அவர் உயர்நிலைப் படிப்பைக் கூட முடிக்காதவர், இவருக்கு ஆளும் ஆற்றல் எப்படியிருக்கும் என்று கிண்டல் வார்த்தைகளை வீசியதுண்டு.

அப்போது காமராஜ் மிக அடக்கமாக கூறினார், “பூகோளம் என்பது நதிகள், மலைகள், பயிர் வகைகள், மக்கள் வாழ்க்கை என்பதைக் பற்றிக் கூறும் கல்வி என்றால் பலரைவிட நான் நன்கறிவேன். புத்தகப் படிப்புதான் பூகோளம் என்றால் அது எனக்குத் தெரியாது, அது எனக்குத் தேவையும்மில்லை”.


.



சட்டத்தை இயற்றும் நாமே சட்டத்தைப் பின்பற்றவில்லை என்றால் மற்றவர்கள் சட்டத்தை எப்படி கடைப்பிடிப்பார்கள். முதலமைச்சர் என்றால் எப்படியும் போகலாமா?

@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@


முதலமைச்சராகப் பெருந்தலைவர் காமராஜர் பதவியில் இருந்த நேரம் ஒருநாள் இரவு கூட்டத்தில் கலந்துகொண்டு தனது வீட்டுக்குக்காரில் திரும்பினார்.சென்னையில் ஒரு வழிப்பாடை ஒன்றில் கார் சென்று கொண்டிருந்தது. அந்த வழியில் கார் செல்ல அனுமதி இல்லை. எனவே உடனே காமராஜர் காரை நிறுத்தச் சொன்னார்.

“ஏன் கார் செல்ல அனுமதியில்லாத பாதையில் செல்கிறார்? காரைத்திருப்பு” என டிரைவரிடனம் கண்டிப்புடன் சொன்னார். “ஐயா, இந்த ராத்திரி நேரத்தில் போக்குவரத்து ரொம்ப குறைவாகத்தானே இருக்குது. இந்தப்பாதை வழியே போனால் சீக்கிரம் வீட்டுக்குப் போய்விடலாம்” என்றார் டிரைவர்.

“இரவு நேரமென்றால் எப்படி வேண்டுமானாலும் போகலாமா? கூட்டம் இல்லை என்று இப்போது போனால் இது எப்போதும் பழக்கமாகிவிடும்.

சட்டத்தை இயற்றும் நாமே சட்டத்தைப் பின்பற்றவில்லை என்றால் மற்றவர்கள் சட்டத்தை எப்படி கடைப்பிடிப்பார்கள். முதலமைச்சர் என்றால் எப்படியும் போகலாமா?” என டிரைவரிடம் கூறிவிட்டு ஒழுங்கான பாதையில் செல்லுமாறு கட்டளையிட்டார்.

“சட்டம் இருந்தால் அதனை யாராக இருந்தாலும் மதித்து நடக்க வேண்டும்” என்பது காமராஜரின் எண்ணமாகும்.


Image may contain: one or more people


“உழைப்புக்கு ஏற்ற கூலி கேட்பதே சிறந்தது”-காமராஜ் -சிவகிரியில்


காமராஜர் ஒரு கூட்டத்தில் கலந்து கொண்டு பேச இருந்த நேரத்தில் கூட்டத்திலிருந்த சிலர் “உழுபவனுக்கே நிலம் சொந்த்ம்” என ஓங்கி குரல் கொடுத்தார்கள். வர்களை அமைதியாக இருக்கும்படி சைகை காட்டினார்.

காமராஜர். பின்னர் பேசும் போது நீங்களெல்லாம் குரல் எழுப்பவது போல எல்லோரும் கேட்க ஆரம்பித்தால் “நூற்றுக்குத் தொண்ணூறு சதவீத மக்கள் பட்டினியால் கிடக்க வேண்டிய நிலை உருவாகிவிடும்.” என்றார் கூட்டம் அமைதியானது. எல்லோரும் காமராஜர் என்ன சொல்லப் போகிறார்? என ஆர்வத்துடன் இருந்தனர்.

‘உழுபவனுக்குநிலம் சொந்தம்’ என நாம் சொல்கிறோம். நெற்கதிரை அறுப்பதற்குச் செல்லும் தொழிலாளர்கள் ‘கதிர் அறுப்பவர்களுக்கே நெல் சொந்தம்’ என்றுசொல்லி நெற்கதிர்களை அவர்கள் வீட்டுக்கு எடுத்துச் சென்று விட்டால் கஷ்டப்பட்டு உழைத்த தொழிலாளர்களின் நிலை என்ன ஆகும்?

பின்னர் நெல்லை அரிசியாக ஆக்குவதற்கு அரிசி ஆலைக்குக் கொண்டு போகிறோம். அங்கு நெல்லை அரைத்துக் கொடுத்தவர் ‘தனக்கே அரிசி சொந்தம்’ என்று சொல்லிவிட்டால் நெல் உரிமையாளர்கள் நிலை என்னவாகும்?வெறும் கையோடுதானே திரும்ப வேண்டிய நிலைவரும். கடைசியில் சோறு சொந்தம்’ ன்று சொல்லிவிட்டால் எல்லோர் நிலையும் என்ன ஆகும்? பட்டினிதானே? இந்த நிலை நாட்டில் ஏற்படக்கூடாது.


“உழைக்கும் ஒவ்வொருவருக்கும் தங்கள் உழைப்புக்கு ஏற்றவாறு கூலி கேட்க வேண்டும் எனபதுதான் நல்லது” என எளிமையாக விளக்கம் தந்தார் காமராஜர்.“உழைப்புக்கு ஏற்ற கூலி கேட்பதே சிறந்தது” எனப்து காமராஜரின் கருத்து ஆகும்.


Image may contain: 1 person, standing and text


அரசப் பணியில் இருப்பவர்கள் லஞ்சம் வாங்கிவிட்டு தகாத செயல்களுக்கு துணை போக்க்கூடாது”

-காமராஜர்.

@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@

ஒருமுறை பெருந்தலைவர் காமராஜரும், எழுத்தாளர் சாவியும் ஊட்டியில் சந்தித்தார்கள். முதலமைச்சராக இருந்த காமராஜர், எழுத்தாளர் சாவியை அருகில் அழைத்து “ஊட்டி ஏரியை சுற்றுலாப் பயணிகள் வந்து தங்கும் வகையில் அழகு படுத்தணமுமாம். அதற்கு என்ன செய்ய வேண்டும் என நான் வந்து பார்க்க வேண்டுமாம். வாருங்கள் படகில் போய்வருவோம்” என்றார்.படகு சவாரி செய்யும்போதே “ஊட்டினா.. அது பணக்கார்ர் களுக்கு மட்டும் உரிய இடம் என்ற நிலை இருக்கக்கூடாது. அதை ஏழைகளும் அனுபவிக்க வேண்டும். இந்த ஏரியைச்சுற்றி நிறைய மரங்கள் உள்ளன. இந்த மரங்களுக்கு நடுவே சின்ன காட்டேஜ்கள் கட்டி குறைந்த வாடைக்குக் கொடுக்க வேண்டும். சமையலுக்கு பாத்திரங்கள் கூட அரசாங்கமே கொடுத்திடனும். வாடையாக பத்து ரூபாய்க்கு மேல் வசூலிக்கக்கூடாது.

ஆனால் படுபாவிங்க இங்கே மரத்தைக்கூட வெட்டிவிடுகிறார்கள். மரத்தை வெட்டக்கூடாது என்று சட்டம் இருக்கிறது. சட்டம் இருந்த என்ன பலன்? கலெக்டரைக் கூப்பிட்டு நல்ல சாப்பாடு போட்டுவிட்டால்பதும் ‘வெட்டிக்கொள்ளுங்கள்’ எனச் சொல்லிவிடுவார்ள் என்ற மிகவும் வருத்தத்தோடு காமராஜர் சொல்லிக்கொண்டே போனார்.படகு போய்க்கொண்டே இருந்தது. சிறிது நேரத்தில் “அதோ அங்கே பாருங்கள் இப்போதுதானே இதைப்பற்றிச் சொன்னேன்” என்றார் காமராஜர்.

அங்கே பார்த்தால்… ஒருபெரிய மரம் வெட்டப்பட்டு சாய்ந்து கிடந்தது. கலெக்டருக்கு நல்ல சாப்பாடு கிடைத்துவிட்டதாக நினைத்தாராம் எழுத்தாளர் சாவி.அரசப் பணியில் இருப்பவர்கள் லஞ்சம் வாங்கிவிட்டு தகாத செயல்களுக்கு துணை போக்க்கூடாது” என்பது காமராஜரின் கொள்கையாகும்.


Image may contain: 1 person, closeup


தம்பி உனக்கு நான் வேறு நல்ல துண்டு வாங்கித் தருகிறேன். ஆனால் இந்த துண்டை நாம் தொடக்கூடாது.

ஏழைப் பிள்ளைகள் படிக்கும் பள்ளிக்குக் கொடுக்கக் கூடியதாகும். ஏழைகளுக்கு உதவுவதற்காகவே இந்த ஏற்பாடு

- காமராஜர்

@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@


முதல்வராக இருந்தபோது பெருந்தலைவர் காமராஜர், சுற்றுப்பயணம் செய்து கொண்டிருந்தார். அப்போது அவருக்கு நிறைய ஊர்களில கதர் துண்டுகள் போர்த்தி மரியாதை செய்தார்கள். நிறைய துண்டுகள் போர்த்தப்பட்டதைக் கவனித்த ஒரு தீவிர தொண்டர், “இவ்வளவு துண்டுகளையும் வைத்து காமராஜர் இனி என்ன செய்வார்? நம்மைப் போன்ற தொண்டர்களுக்குத்தானே கொடுக்கப்போகிறார்” என்று எண்ணி ஒரு பெரிய துண்டை எடுத்து தனக்கு வைத்துக்கொண்டார்.


கூட்டம் முடிந்து தங்கும் இடத்திற்கு வந்ததும் அந்த தொண்டரைக் காமராஜர் அழைத்து “ஒரு துண்டை நீ எடுத்து வைத்திருக்கிறாய் அல்லவா? அதை அந்த மூட்டையில் சேர்த்துவிடு” என்றார். அந்தத் தொண்டர் அதிர்ந்து நின்றார். “ஒரு சாதாரண துண்டை எடுத்ததற்கு இவ்வளவு தூரம் நினைவு வைத்து தலைவர் கேட்டுவிட்டாரே” என மனம் வருந்தினார்.


“தம்பி உனக்கு நான் வேறு நல்ல துண்டு வாங்கித் தருகிறேன். ஆனால் இந்த துண்டை நாம் தொடக்கூடாது. ஏனென்றால்..இதெல்லாம் சென்னையில் உள்ள பாலமந்திர் என்ற ஏழைப் பிள்ளைகள் படிக்கும் பள்ளிக்குக் கொடுக்கக் கூடியதாகும். ஏழைகளுக்கு உதவுவதற்காகவே இந்த ஏற்பாடு” என்றார் காமராஜர்.


“ஏழைகளுக்கு உதவிடுங்கள்” என்ற கருத்தை அழகாக விளக்கினார் காமராஜர்


Image may contain: 2 people, indoor


வீரமிருந்தால் என் நெஞ்சில் துப்பாக்கியால் சுடுங்கள். காந்தியடிகளைக் கோட்சே சுட்டுக் கொன்றான். அதனால் காந்தியடிகள் அமரரானார். அதைப் போலவே பெருமை எனக்கும் கிடைக்கட்டும்

@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@

“நோயினால் மடிந்தவர்களைவிட பயத்தினால் இறந்தவர்களே அதிகம்” என்பார்கள். எதற்கெடுத்தாலும் நாளும் பயந்து வாழுகின்ற மக்கள் உண்டு.

“அஞ்சி அஞ்சி சாவார் – அவர்அஞ்சாத பொருளில்லை அவனியிலே”


என பாட்டுக்கொரு புலவர் பாரதியார் தெளிவாக நாட்டு மக்களின் நிலையை அன்றேபடம் பிடித்துக் காட்டினார். “கோழையாய் வாழ்வதைவிட வீரனாகச் சாவதே மேல்” என்பது நாட்டுப்பற்று மிக்க நல்லவர்களின் கருத்தாகும்.நம் நாட்டு விடுதலைக்காகத் தூக்குக் கயிற்றை முத்தமிட்டவர்கள் ஏராளம். குண்டடிபட்டுச்செத்தவர்கள் ஏராளம். குண்டாந்தடியால் தாக்கப்பட்டவர்கள் ஏராளம். நாட்டுக்காக – விடுதலைக்காக, பாடுபட்ட நல்லவர்கள் வாழ்ந்த நம் நாட்டில், காமராஜர் வாழ்க்கையிலும் ஒரு சம்பவம் நடந்தது.1949ஆம் ஆண்டு திருச்சியில் ஒருபொதுக்கூட்டம் நடந்தது. தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக இருந்த காமராஜர் அந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசும்போது கருணாநிதியின் தூண்டுதலில் குழப்பம் உண்டாக்க வெடிகளை வீசினார்கள்.


மேடை அருகே வெடி வெடித்ததும் கூட்டம் கலைய ஆரம்பித்தது.உடனே காமராஜர் “கூட்டத்தில் குழப்பம் உண்டாக்க நினைப்பவர்கள் இது மாதிரி வெடிப்பதில் பலனில்லை. வீரமிருந்தால் என் நெஞ்சில் துப்பாக்கியால் சுடுங்கள். காந்தியடிகளைக் கோட்சே சுட்டுக் கொன்றான். அதனால் காந்தியடிகள் அமரரானார். அதைப் போலவே பெருமை எனக்கும் கிடைக்கட்டும். வீரப்பரம்பரையிலே வந்தவர்கள் வியாதியில் கஷ்டப்பட்டு இறந்தார்கள் என்பது பெருமை கிடையாது” என அஞ்சாது உரையாற்றினார். கூட்டம் அமைதியானது.


Image may contain: 1 person, standing


“நீங்கள் ஏன் இங்கு நிற்கிறீர்கள். நீங்கள் போய் படுங்கள். என்னை யாரும் தூக்கிச் செல்ல மாட்டார்கள்”

எளிமையைக் கடைப்பிடிப்பதன்மூலம் சிறப்பான வாழ்க்கை வாழலாம் என்பதைக்கர்மவீர்ர் காமராஜர் அடிக்கடி உணர்த்தி வந்தார். முதலமைச்சராகப் பணி யாற்றிய காமராஜர் ஒருமுறை மதுரை விருந்தினர் மாளிகையில் தங்க நேரிட்டது.மின்சாரக் கோளாறு காரணமாக அப்போது மின்விளக்குகள் விருந்தினர் மாளிகையில் ஒளி வீசவில்லை. ரிப்பேர் செய்ய ஆட்கள் வந்திருந்தார்கள். அப்போது காமராஜர் “நான் படுக்க வேண்டும். எனவே அறையினுள் இருக்கும் கட்டிலை எடுத்து வந்து அந்த வேப்பமரத்தின் கீழ் வையுங்கள்” என்றார்.


வேப்பமரத்தின் கீழ் கட்டிலைக் கொண்டுவந்தார்கள். காமராஜர் கட்டிலில் படுத்துக்கொண்டார். அப்போது காமராஜரின் அருகில் காவலுக்காக ஒரு போலீஸ்காரர் நின்றார். அந்தப்போலீஸ் கார்ரைப் பார்த்த காமராஜர் “நீங்கள் ஏன் இங்கு நிற்கிறீர்கள். நீங்கள் போய் படுங்கள். என்னை யாரும் தூக்கிச் செல்ல மாட்டார்கள்” என்று கூறி அனுப்பி வைத்துவிட்டார்.தனது காவலுக்கு பல்வேறு படைகளோடு உலா வரும் அரசியல்வாதிகள் மத்தியில் காமராஜர் வித்தியாச மானவராக திகழ்ந்தார்.







Thursday, 3 September 2020

CHINESE BEAUTIFUL ACTRESS JIANG QINBIN BORN 1975 SEPTEMBER 3






CHINESE BEAUTIFUL ACTRESS JIANG QINBIN
BORN 1975 SEPTEMBER 3

Jiang Qinqin (born September 3, 1975) is a Chinese actress. She is sometimes credited as Shui Ling (simplified Chinese: 水灵; traditional Chinese: 水靈), a stage name given to her by Taiwanese writer Chiung Yao while she was involved in the production of the television series Tears in Heaven.










Career[edit]
Jiang started learning Beijing Opera at the age of 10 and entered the Beijing Film Academy in 1994 after attaining first place in the entrance examination. She graduated from the academy four years later and joined Beijing Film Studio.In 1997, she starred in Tears in Heaven, an adaptation of a novel by Chiung Yao. Following that, she played a number of tragic roles, including Gu Manlu in Affair of Half a Lifetime (2002), Mu Nianci in The Legend of the Condor Heroes (2003), and Niu Hongmei in A Loud Slap (2004).[1]

Jiang married actor Chen Jianbin on February 22, 2006, whom she co-starred with in Qiao's Grand Courtyard.
Their son was born on January 8, 2007.

Friday, 24 July 2020

VIJAY ANTONY ,MUSIC DIRECTOR /ACTOR BORN 1975 JULY 24


VIJAY ANTONY ,MUSIC DIRECTOR /ACTOR
 BORN 1975 JULY 24




விஜய் ஆண்டனி (பிறப்பு: சூலை 24, 1975)[1] இந்தியா, தமிழ்நாட்டின் ஓர் முன்னணி திரைப்பட இசையமைப்பாளர் ஆவார். தற்போது திரைப்படத்தில் நடிப்பதிலும் ஆர்வம் காட்டி வருகிறார்.
வாழ்க்கை வரலாறு
விஜய் ஆண்டனி தமிழ்நாடு மாநிலம், கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவிலில் 1975 ஆம் ஆண்டு பிறந்தார். இவரது தந்தை இவருக்கு 7 வயது இருக்கும் போது இறந்து விட்டார். விஜய் ஆண்டனி துவக்கத்தில் ஒலிப் பொறியாளராகப் பணி புரிந்து பின்னர் இசையமைப்பாளரானவர். தமது கல்லூரிப் படிப்பை முடித்தப் பின்னர் தாமே ஆடியோபைல்ஸ் என்ற ஒலியரங்கை நிறுவினார். அங்கு ஒலி பொறியாளராக சோதனைகள் செய்து தொலைக்காட்சிகளுக்கும் ஆவணப்படங்களுக்கும் சில இசைத்துண்டுகளை (jingles) அமைத்தார்.[2] அப்போது ஆஸ்கார் ரவிச்சந்திரன் தமது டிஷ்யூம் என்ற திரைப்படத்திற்கு இசையமைக்க அழைத்தார். ஆனால் விஜய் இசையமைத்த முதல் திரைப்படமாக சுக்ரன் திரைப்படம் முதலில் வெளிவந்தது.
இவரது அண்மைய திரைப்படம் விஜய் நடித்த வேட்டைக்காரன் படமாகும்.

மேலும் இவர் கன்னடப் படம் புத்திவந்தா விற்கு இசையமைத்துள்ளார், இது தமிழ்ப்படம் நான் அவனில்லையின் மறுபதிப்பு திரைப்படமாகும்.
2009ஆம் ஆண்டு பிரான்சில் நடைபெற்ற கான் கோல்டன் லயன் விருதை சிறந்த இசைக்காக டைம்ஸ் ஆஃப் இந்தியாவிற்காக தயாரித்த "நாக்க முக்கா" வணிகப்படத்திற்காகப் பெற்றார்.
தமது இசையமைப்பில் பல புதுமுக பாடகர்களுக்கு வாய்ப்பு கொடுப்பவர் என்ற பெருமை உடையவர்.
மேலும் 2016 ஆம் ஆண்டு வெளியான பிச்சைக்காரன் திரைப்படத்தில் தனது இயல்பான நடிப்பை வெளிப்படுத்தி தமிழ் மக்களின் மனதில் நீங்காத இடத்தை பிடித்துக்கொண்ட விட்டார் என்றே கூற வேண்டும்.
வர் திரைப்படங்களுக்கு இசையமைப்பதற்கு முன்னர் தொலைக்காட்சி தொடர்களில் இசையமைப்பாளராக பணியாற்றியுள்ளார். இவர் இசையமைத்த முதல் தொடர் சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட சின்ன பாப்பா பெரிய பாப்பா தொடர் ஆகும். இதனை தொடர்ந்து இவர் 2006-ஆம் ஆண்டு கனா காணும் காலங்கள், 2007-ஆம் ஆண்டு காதலிக்க நேரமில்லை தொடங்களுக்கு இசையமைப்பாளராக பணியாற்றியுள்ளார்.
இவர் இசையமைத்த தொலைக்காட்சி நாடக தொடர்களின் பிரபலத்தை தொடர்ந்து இவர் திரையுலகில் இசையமைப்பாளராக அறிமுகமானவர்.
பிரபலம்
இவர் இசையமைப்பாளராக திரையுலகில் அறிமுகமாகி ஆத்திசூடி, டைலாமோ, நாக்கு முக்க பாடல்கள் மூலம் திரையுலகில் பிரபலமானவர். இவர் 2012-ஆம் ஆண்டில் நான் திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்து நடிகராகவும் அறிமுகமாகியுள்ளார். இவர் தேர்ந்தேடுக்கும் திரைக்கதை முற்றிலும் மாறுபட்ட காரணத்தால் இவர் திரைத்துறையில் இவரின் திரைப்படங்கள் ரசிகர்களின் மத்தியில் அதிக கவனத்தை ஈர்க்கின்றது.
அங்கீகாரம்
2009ஆம் ஆண்டு பிரான்சில் நடைபெற்ற கான் கோல்டன் லயன் விருதை சிறந்த இசைக்காக டைம்ஸ் ஆஃப் இந்தியாவிற்காக தயாரித்த "நாக்க முக்கா" வணிகப்படத்திற்காக பெற்றார்.தமது இசையமைப்பில் பல புதுமுக பாடகர்களுக்கு வாய்ப்பு கொடுப்பவர் என்ற பெருமை உடையவர்.

கரோனா பாதிப்பால் அவதிப்படும் திரைப்படத் தயாரிப்பாளர்களின் நலனுக்காக தனது சம்பளத்தைத் தானாகக் குறைத்துக்கொண்டுள்ளார் நடிகர் விஜய் ஆண்டனி.
கரோனா பாதிப்பால் அவதிப்படும் திரைப்படத் தயாரிப்பாளர்களின் நலனுக்காக தனது சம்பளத்தைத் தானாகக் குறைத்துக்கொண்டுள்ளார் நடிகர் விஜய் ஆண்டனி. உலகெங்கும் பேரழிவை ஏற்படுத்திவரும் கரோனா பெருந்தொற்று தென்னிந்தியத் திரையுலகத்தையும் பெரிதாகப் பாதித்திருக்கும் இந்த நேரத்தில், நடிகர் விஜய் ஆண்டனி, தற்போதைய நெருக்கடியை கருத்தில் கொண்டு, ஒப்புக்கொண்ட சம்பளத்தில் இருந்து 25% சதவீதம் குறைத்திருக்கிறார் (ஒரு ‌கோடி ரூபாய் அளவில்). இதன் மூலம், அவர் நடித்து வரும் 3 படங்களின் தயாரிப்பாளர்களும் பயன் அடையவுள்ளார்கள்.

இதுதொடர்பாக விஜய் ஆண்டனி வெளியிட்டிருக்கும் செய்திக் குறிப்பு:
விஜய் ஆண்டனி தற்போது பெப்சி சிவா தயாரிப்பில் “தமிழரசன்” என்ற படத்தில் நடித்து முடித்தார். தற்போது அம்மா கிரீயேஷன்ஸ் T. சிவா தயாரிப்பில் “அக்னி சிறகுகள்” என்ற படத்திலும், இயக்குனர் செந்தில் குமாரின் ஓபன் தியேட்டர் மற்றும் இன்பினிட்டி பிலிம் வென்சர்ஸ் நிறுவனம் சார்பில் எடுக்கப்படும் “காக்கி” என்ற படத்திலும் நடித்து வருகிறார். இந்த மூன்று படங்களும் 2020-ல் வெளியாகும் திட்டத்தில் எடுக்கப்பட்டு வந்தன.
எல்லாமே திட்டப்படி சென்றுகொண்டிருந்த நேரத்தில், கரோனா ஊரடங்கு தமிழ் சினிமாவை மொத்தமாகப் புரட்டி போட்டிருக்கிறது. 50 நாட்களுக்கு மேலாக எந்தப் பணிகளும் நடக்காமல், திரையரங்குகளும் இயங்காமல், பல படங்கள் அப்படியே கிடப்பில் போடப்பட்டன. புது படங்கள் திரையரங்குகளில் வெளியிட மேலும் மூன்று மாதங்கள் ஆகும் என்ற சூழ்நிலையில், தன்னை நம்பி திரைப்படங்கள் தயாரித்த தயாரிப்பாளர்கள் பாதிக்கப்படக் கூடாது என்ற நல்ல எண்ணத்தில், விஜய் ஆண்டனி தாமாகவே முன்வந்து தனக்கு ஒப்புக்கொள்ளப்பட்ட சம்பளத்தில் 25 சதவீதத்தைக் குறைத்து கொள்ளுமாறு இந்த மூன்று படங்களின் தயாரிப்பாளர்களுக்கும் சொல்லி விட்டார். இந்தச் சம்பளக் குறைப்பு மூலம், மூன்று தயாரிப்பாளர்களும் தங்கள் படங்களின் மொத்த பட்ஜெட்டைக் குறைத்து, வெகு விரைவில் அவர்களின் படங்களை எந்தப் பிரச்சனைகளும் இல்லாமல் வெளியிட முடியும் என்று விஜய் ஆண்டனி நம்புகிறார்.
விஜய் ஆண்டனியின் இந்த தாராள மனதை “அக்னி சிறகுகள்” தயாரிப்பாளர் டி. சிவா மனமுவந்து பாராட்டி, இவ்வாறு கூறினார்:
தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்களுக்காக ஒரு முன்னணி நடிகர் தாமாகவே முன்வந்து தன் சம்பளத்தை குறைத்துக் கொண்டது அனைவரும் பாராட்ட வேண்டிய, தமிழ் சினிமாவுக்கு முன்னுதாரணமாக இருக்க போகும் ஒரு நடவடிக்கை. அவரைப் போலவே அனைத்து நடிகர்களும் தொழில்நுட்ப கலைஞர்களும் தங்களின் சம்பளத்தில் ஒரு பகுதியையே தாமாகவே முன்வந்து விட்டுக் கொடுத்து அனைத்து தயாரிப்பாளர்களையும் இந்த இக்கட்டான நேரத்தில் காப்பாற்ற வேண்டும் என்று அன்போடு கேட்டு கொள்கிறேன். அப்படி செய்தால் தான், தற்போது வெளியாகக் காத்திருக்கும் படங்களும், முடிக்கவிருக்கும் படங்களும் எந்த நிதிச் சிக்கலும் இல்லாமல் வெளியாகும். இப்படி ஒரு முன்னுதாரணமான செயலை செய்து தயாரிப்பாளர்களுக்கு உதவும் விஜய் ஆண்டனியை மனதார பாராட்டுகிறேன் என்றார்.
@mangeshkarlata

Monday, 25 May 2020

SUCHITRA MURALI ,MALAYALAM ACTRESS BORN 1975 JULY 22






SUCHITRA MURALI ,MALAYALAM 
ACTRESS  BORN 1975 JULY 22



மலையாள சினிமாவின் பிரபலமான இயக்குநர் ப்ரியதர்ஷன். இவரது இயக்கத்தில் தமிழ் சினிமாவில் பல படங்கள் வெளிவந்துள்ளன. சமீபத்தில் உதயநிதி நடிப்பில் வெளிவந்த நிமிர் படமும் இவர் இயக்கியதுதான். விக்ரம் படத்தில் இரண்டாவது ஹீரோயினாக நடித்த லிஸி இவரது முன்னாள் மனைவி என்பது குறிப்பிடதக்கது.மலையாளம் தவிர தெலுங்கு, கன்னடம், ஹிந்தியிலும் பல படங்களை இயக்கியுள்ளார் ப்ரியதர்ஷன் அவர்கள்.

அந்த வகையில் தமிழில் இவர் இயக்கத்தில் முதல் முதலாக வெளிவந்த திரைப்படம் கோபுர வாசலிலே. 1991-ம் ஆண்டும் இப்படம் வெளியானது. படத்தில் கார்த்திக் ஹீரோவாக நடிக்க இவருக்கு ஜோடியாக பானுப்ரியா மற்றும் மலையாள நடிகை சுசித்ரா ஆகியோர் நடித்திருந்தனர்.இப்படத்தில் சுசித்ரா அவர்கள் ஃப்ளாஷ்பேக் காட்சியில் கார்த்திக்கின் காதலியாக நடித்திருப்பார். ஒரு சில காட்சிகளில்
நடித்திருந்தாலும் ரசிகர்களின் மனதில் அவர் நடித்த காட்சிகளும், காதல் கவிதைகள் படித்திடும் நேரம்.. என்ற பாடலும் இன்றளவும் நீங்காத இடம்பிடித்தவை.இளையராஜாவின் இசையில் படத்தின் அனைத்து பாடல்களும் சூப்பர்ஹிட் ஆனது.

1978-ம் ஆண்டு குழந்தை நட்சத்திரமாக அறிமுகம் ஆனவர் சுசித்ரா. பல படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்த இவர் 1990-இல் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற மோகன்லாலின் நம்பர் 20 மெட்ராஸ் மெயில் என்ற மலையாளத் திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகம் ஆனார். தமிழில் கார்த்திக் நடிப்பில் வெளியான கோபுர வாசலிலே மற்றும் ஏர்போர்ட், ஸ்நேகிதியே, காசி உட்பட சில படங்களில் நடித்துள்ளார் சுசித்ரா.கேரள மாநில தலைநகர் திருவனந்தபுரத்தை பிறப்பிடமாக கொண்ட இவரது பெற்றோர் கருணாகரன் – உஷா தம்பதியராவர். இவருடன் பிறந்தவர்கள் சுமித்ரா என்ற சகோதரியும், தீபு கருணாகரன் என்ற சகோதரனும் ஆவர். இவர் முரளி என்பவரை 2002-ஆம் ஆண்டில் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு நேகா என்ற ஒரு மகள் உள்ளார்.



Suchitra Murali,[1] commonly known by her stage name Suchitra, is an Indian film actress. Debuting in a lead role with the 1990 film No.20 Madras Mail at the age of 14, she has appeared mostly in Malayalam films as well as a few films in Tamil.
Personal life
Suchitra is born to Karunakaran and Usha. She has a sister Sumitra and a brother Deepu Karunakaran, who works as a director.[2] She had her primary education from Holy Angel's Convent Trivandrum.[3] Suchitra became a mainstream actress at a very young age when she was cast as the heroine in the film No.20 Madras Mail. She left the industry after her marriage to Murali in March 2002. The couple has a daughter Neha and are settled in U.S. She has opened a dance school there called "Naatya Graha Dance Academy".

Career
Suchitra, who debuted as a heroine in the film No.20 Madras Mail did numerous films in Malayalam in the 90s, mostly with heroes like Mammooty, Mohanlal, Mukesh, Jagadeesh and Siddique. Widely regarded as one of the most beautiful actresses in the 90s, Suchitra was very popular among the youth due to her eye-catching physique and her versatility in acting. By the time she left the industry at the young age of 26 she had already acted in 38 movies. She also acted in a handful of Tamil films. The 1991 release Gopura Vasalile, along with Karthik Muthuraman and Bhanupriya, was her most popular Tamil movie.

Suchitra is also a trained Indian Classical dancer. She was trained in Bharatanatyam, Mohiniyattam, and Kuchipudi by Guru V. Mythili.

Other activities

Suchitra was the Joint Secretary twice (1997-2000 & 2000-2003) in the AMMA. Her versatility and application during her tenure was well appreciated by the other members.[4] Suchitra was also seen recently as a celebrity judge in episodes of the popular reality shows Idea Star Singer and Vodafone Comedy Stars, both on Asianet. She also represented Kerala in the "Miss World Pageant" held in Bangalore in 1997.

About
Actress who is mostly known for appearing in Malayalam and Tamil films, such as Oothikachiya Ponnu (1981), Thakshashila (1995) and Aabharanacharthu (2002). She has also been a judge on the talent show Idea Star Singer.

Before Fame
She got her start as a child actress, appearing in the film Aaravam (1978) when she was just three years old. 

Trivia
She opened her own dance school called Naatya Graha Dance Academy. 

Family Life
She married a man named Murali and has a daughter named Neha. She has a sister named Sumitra and a brother named Deepu Karunakaran, who is a film director. 

Associated With
She co-starred with Vikram in the drama Kasi (2001). 

Filmography[edit]


YearFilmRoleCo-starLanguageNotes
1978AaravamMalayalamChild Artist
1978AdimakkachavadamMalayalamChild Artist
1979Ente Sneham Ninakku MathremMalayalamChild Artist
1980AngaadiMalayalamChild Artist
1981AambalpoovuMalayalamChild Artist
1981Oothikachiya PonnuMalayalamChild Artist
1984SwarnagopuramMalayalamChild Artist
1987VruthamUshaMalayalamChild Artist
1989UnknownHindi
1990No.20 Madras MailDevi R. NairMohanlal & AsokanMalayalamDebut Film as Heroine (Aged only 14)
1990KuttettanNurseMammoottyMalayalam
1990KshanakkathuSales girlNiyazMalayalam
1990CommanderMalayalam
1990EnquiryMalayalam
1990Paadatha Veenayum PaadumMalayalam
1991ChakravarthyMalayalam
1991AbhimanyuRadhaShankarMalayalam
1991Mimics ParadeLathaJagadheeshMalayalam
1991EzhunnallathuSunandaJayaramMalayalam
1991MookkillarajyathuDance TeacherMukeshMalayalam
1991Kadinjool KalyanamRamaniJayaramMalayalam
1991Nayam VyakthamakkunnuRosiliMammoottyMalayalam
1991AthirathanNimmySuresh GopiMalayalam
1991Gopura VasalileKasthuriKarthik MuthuramanTamil
1991BharathamRadhaLalu AlexMalayalam
1992Kallan Kappalil ThanneGayathriJagadishMalayalam
1992ThalastaanamSupriyaVijayakumarMalayalam
1992MantrikacheppuMercySiddiqueMalayalam
1992NeelakurukkanMeeraAshokanMalayalam
1992Mr & MrsAshwathiSiddiqueMalayalam
1992Kasargod Khader BhaiLathaJagadheeshMalayalam
1992Makkal MahatmyamAmmuSaikumar,MukeshMalayalam
1993KavadiyattamThankamaniSiddiqueMalayalam
1993BhagyavaanMeenaVijayaraghavanMalayalam
1993SthreedhanamSushammaBaijuMalayalam
1993SowbhagyamRejiniJagadheeshMalayalam
1993Sthalathe Pradhana PayyansGouriJagadheeshMalayalam
1993Kanyakumariyil Oru KavithaAnniceVineethMalayalamGlamour Role
1993CheppadividyaInspector's wifeSiddiqueMalayalam
1993AirportUmaSathyarajTamil
1994TharavaduRajaniGaneshMalayalam
1994KashmeeramMithraKrishnakumarMalayalam
1994Sukham SukhakaramStellaBalachandra MenonMalayalam/Tamil
1994PadhaviUnknownRahmanMalayalam
1995ThakshashilaMottiSuresh GopiMalayalam
1995AavarthanamMalayalam
1996HitlerGayathriMammoottyMalayalamSister role
1996Ammuvinte AangalamarMalayalam
1997ShibiramShineyManok K JayanMalayalam
1998AattuvelaMalayalam
1999RishivamshamDrama artistMalayalam
2000SnegithiyeAdv. SouminiJyothikaTamil
2000PuraskaaramMalayalam
2001AchaneyanenikkishtamSofiaLakshmi GopalaswamiMalayalam
2001KakkakkuyilSethu Lakshmi Bhai's kinMohanlal,MukeshMalayalam
2001Rakshasa RajavuMayaMammoottyMalayalam
2001KasiValliVikramTamil
2002AabharanacharthuSavithrikuttyKrishnakumarMalayalam
2007RaakilipattuAdv. SouminiJyothikaMalayalamShot in 2000
Bilingual with Snegithiye
2011Again Kasargod Khader BhaiLatha-MalayalamArchive footage
Cameo