Showing posts with label Delhi. Show all posts
Showing posts with label Delhi. Show all posts

Sunday, 2 August 2020

1911 MARCH 12 DELHI DURBAR



1911 MARCH 11 DELHI DURBAR 



.தர்பார் என்பது பெர்சிய மொழிச் சொல். அரசவை என்று சொல்லலாம். தர்பாரை இந்தியாவுக்கு அறிமுகப்படுத்தியவர்கள் முகலாயர்கள். மாபெரும் சபைதனில் முகலாயப் பேரரசர் தலைமையில் கூடுவார்கள். தர்பாருக்கான நிகழ்ச்சி நிரலில், பேரரசரைப் புகழ்ச்சியால் சொறிந்துவிடும் உரைகள் பிரதானமானவை(அந்தப் பாரம்பர்யமே இன்றைக்குச் சட்டசபை வரை தொடருகிறது). தர்பார் நிகழ்வுகளைக் கண்டுகளிக்கப் பிற ராஜ்யங்களின் / தேசங்களின் விருந்தினர்கள் வருவதும் வாடிக்கை. விருந்தினர்கள் பேரரசருக்குப் பரிசுகள் அளிப்பதும், பதிலுக்குப் பேரரசர் விருந்தினரைப் பரிசுகளால் குளிப்பாட்டித் தன் செல்வாக்கை நிரூபிப்பதும் வழக்கம். ஏதாவது மகிழ்ச்சியான தருணம் என்றால், கேளிக்கை நிகழ்ச்சிகளுடன் கொண்டாடுவார்கள். வியாபார விஷயங்களைப் பேசுவார்கள். எப்போதாவது தர்பாரில் மக்கள் நலத் திட்டங்கள்கூட அறிவிக்கப்படுவதுண்டு.

டெல்லி தர்பார்
காலனி ஆதிக்க இந்தியாவில் மூன்று முறை டெல்லியில் தர்பார் கூட்டப்பட்டது. ‘நாங்களே உங்களை ஆட்சி செய்கிறோம். நீங்கள் அனைவருமே எங்களுக்குக் கட்டுப்பட்டவர்கள்’ என்று பிரகடனப்படுத்தும்விதமாக, பிரிட்டிஷார் இந்த தர்பார்களை வெவ்வேறு தருணங்களில் நடத்தினார்கள். நாங்களும் இந்தியர்களுக்கு, அவர்களது கலாசாரத்துக்கு நெருக்கமானவர்களே என்று காட்டிக்கொள்ளும் தந்திரமும் இதில் உண்டு.

1877 ஜனவரி 1 அன்று, பிரிட்டிஷாரின் முதல் இந்திய தர்பார் டெல்லியில் கூடியது. அதுவரை கிழக்கிந்திய கம்பெனியின் கையில் இருந்த அதிகாரம், பேரரசி விக்டோரியாவுக்கு மாற்றிக் கொடுக்கப்பட்டது. இந்தியாவின் பேரரசியாக விக்டோரியா அறிவிக்கப்பட்ட அந்த தர்பாரில், பல மகாராஜாக்களும் சில ராஜாக்களும் கலந்து கொண்டார்கள். ஆனால், விக்டோரியா கலந்துகொள்ளவில்லை. அப்போதைய இந்திய வைஸ்ராயான லிட்டன், தர்பாருக்குத் தலைமை தாங்கினார்.

டெல்லி தர்பார்
விக்டோரியாவிடமிருந்து வந்த ஒரு செய்தி வாசிக்கப்பட்டது. ‘எங்கள் ஆட்சியின்கீழ் நீங்கள் சுதந்தரம், சமத்துவம், நீதி மற்றும் பாதுகாப்பை உணரலாம். மக்களின் மகிழ்ச்சியைப் பெருக்குவதும், செழிப்பை அதிகரிப்பதும், முன்னேற்றத்தை ஊக்குவிப்பதுமே எங்கள் சாம்ராஜ்யத்தின் முக்கியக் குறிக்கோள்!’

இந்த தர்பாருக்கென ஏகப்பட்ட பணம் அநாவசியமாகச் செலவு செய்யப்பட்டது.

1876-78 காலகட்டத்தில் தென்னிந்தியா கடும் பஞ்சத்தில் சிக்கிக்கொண்டது. சென்னை மாகாணப் பெரும் பஞ்சம் அல்லது தாது வருடப் பஞ்சம் என்றழைக்கப்பட்ட இதன் விளைவாக, சுமார் ஐம்பது லட்சம் முதல் ஒரு கோடி இந்தியர்கள் வரை இறந்துபோனார்கள். இப்படியாக குயின் விக்டோரியாவின் ஆட்சி இங்கே நிர்வாகப் படுதோல்வியுடன் `அமோகமாக’ ஆரம்பமானது.

1903-ன் ஆரம்பத்தில் வைஸ்ராய் கர்ஸன், இரண்டாவது டெல்லி தர்பாரை ஏற்பாடு செய்திருந்தார். அப்போது கிங் ஆக ஏழாம் எட்வர்டும், குயினாக அலெக்ஸாண்ட்ராவும் பதவி ஏற்றிருந்தார்கள். அவர்களை டெல்லிக்கு வரவழைத்து இங்கொரு பதவியேற்பு விழா நடத்த வேண்டுமென்பது கர்ஸனின் திட்டம்.

எல்லா மகாராஜாக்களுக்கும் கர்ஸனிடமிருந்து ஒரு கடிதம் சென்றது. கட்டளை என்றே சொல்லலாம். ‘அருமை மகாராஜாக்களே, தர்பாரில் ஊர்வலம் உண்டு. அதில் நீங்கள் எல்லோரும் அம்சமாக யானைமீது ஏறி வர வேண்டும். உங்களிடம் யானை இல்லை என்று காரணம் சொல்லக் கூடாது. யாரிடமாவது ஒரு யானையைக் கடன் வாங்கிக்கொண்டாவது வந்து சேருங்கள்.’

பல மகாராஜாக்கள் ‘அப்படியே ஆகட்டும்’ என்று ஜால்ரா பதில் அனுப்பினார்கள். ஆனால், பரோடா சமஸ்தானத்தின் மகாராஜா சாயாஜி ராவுக்கு அதில் விருப்பமில்லை. அவர் மானஸ்தர். முதுகெலும்புடன் வாழ்ந்த இந்தியாவின் அரிய மகாராஜாக்களுள் முதன்மையானவர். ‘யானைமேல் உட்கார்ந்து ஊர்வலம் வருவதற்கெல்லாம் என் உடல்நிலை ஒத்துழைக்காது என்பதைப் பணிவுடன் தெரிவித்துக்கொள்கிறேன்’ என்றொரு கடிதத்தைத் தன்மையுடன் அனுப்பிவைத்தார். அந்தக் கடிதம் பரோடா சமஸ்தானத்தின் ரெஸிடென்ட் (பிரிட்டிஷ் பிரதிநிதி) மூலமாக கர்ஸனைச் சென்றடைந்தது.

டெல்லி தர்பார்
கர்ஸனுக்குக் கடுப்பு. எப்படியாவது சாயாஜி ராவின் மூக்கை உடைக்க வேண்டும் என்று நினைத்தார். இன்னொரு கடிதத்தை அனுப்பினார். ‘தர்பாரில் கலந்துகொள்ளும் தங்கள் சமஸ்தானப் படைவீரர்களின் சிவப்பு நிறச் சீருடையை நீலமாக மாற்றிக்கொள்ளுங்கள். ஏனென்றால், வைஸ்ராய்க்குரிய பாதுகாவலர்களின் சீருடையும் சிவப்புதான்.’

கர்ஸன் வேண்டுமென்றே படுத்துகிறார் என்று சாயாஜி ராவுக்குத் தெளிவாகப் புரிந்துபோனது. அவர் கர்ஸனுக்கு இப்படி ஒரு பதிலை அனுப்பினார். ‘நான் தர்பாரில் கலந்து கொள்கிறேன். சொந்த விருப்பத்தினால் அல்ல. கலந்துகொள்ளாவிட்டால், அவமரியாதை செய்துவிட்டதாக நினைப்பீர்கள். அந்தச் சங்கடத்தைத் தவிர்ப்பதற்காகத்தான். என் வளர்ப்புத் தாய் ஜம்னா பாய் சமீபத்தில் இறந்துவிட்டார்கள். சமஸ்தானத்தில் துக்கம் அனுஷ்டிக்கிறோம். ஆகவே ஊர்வலத்தில் என்னாலோ, என் படைவீரர்களாலோ கலந்துகொள்ள முடியாது என்பதையும் தெரிவித்துக்கொள்கிறேன்.’

அதற்குமேல் கர்ஸனால் எந்த எதிர்வினையும் புரிய முடியவில்லை. சாயாஜி ராவ் கொடுத்த கடுக்காயைவிட, கிங் ஏழாம் எட்வர்ட் கொடுத்த அல்வா மிகவும் கசந்தது. எட்வர்ட், ‘தர்பாருக்கெல்லாம் நான் வரல. நீயே பார்த்துக்கோ’ என்று செய்தி அனுப்பியிருந்தார். வேலை மெனக்கெட்டு எல்லா ஏற்பாடுகளையும் செய்திருந்த கர்ஸன் நொந்துபோனார். எட்வர்ட்டுக்குப் பதிலாக அவரின் சகோதரர் இளவரசர் ஆர்தர் வந்தார். கிங்கின் சார்பில் அவரின் பிரதிநிதியாக, கர்ஸனே அனைத்து மரியாதைகளையும் ஏற்றுக்கொண்டார்.

டெல்லி தர்பார்
அநேக மகாராஜாக்கள் கர்ஸனின் கட்டளைக்கேற்ப தலைவணங்கி, யானையில் வலம் வந்து அவருக்கு மரியாதை செய்தனர். தர்பாரில், எல்லோர் முன்னிலையிலும் கர்ஸனை வணங்கினார் சாயாஜி ராவ். பின் தன் இருக்கை நோக்கிச் சென்றவர், ஏதோ நினைத்தவராகச் சட்டென்று திரும்பி, ‘கிங் ஏழாம் எட்வர்டுக்கு என் மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துவிடுங்கள்’ என்றார் நக்கலாக சிரித்தபடியே. அதாவது, என் வணக்கம் வைஸ்ராய்க்கு அல்ல, கிங்குக்கு என்ற அர்த்தத்தில்.

இப்படியாக அன்றைய மதிப்பில் சுமார் £3,00,000 செலவில் இரண்டாவது டெல்லி தர்பார் கர்ஸனால் கோலாகலமாக நடத்தி முடிக்கப்பட்டது. கிங்குக்கான அனைத்து மரியாதைகளும் தமக்குக் கிடைத்ததில் கர்ஸனுக்கும் உள்ளூர சந்தோஷமே.

1911-ல் மூன்றாம் முறையாக டெல்லி தர்பாரைக் கூட்டுவதற்கான சூழ்நிலை வந்தது. புதிய கிங்காக ஐந்தாம் ஜார்ஜும் குயினாக மேரியும் பதவி ஏற்றிருந்தார்கள். அவர்களை இந்தியாவின் பேரரசராக, பேரரசியாக அறிவித்து, கோலாகலக் கொண்டாட்டங்களை அரங்கேற்ற வேண்டுமல்லவா. அப்போது இந்தியாவின் வைஸ்ராயாக ஹார்டிங் (Hardinge) இருந்தார். அவர், ஐந்தாம் ஜார்ஜுக்குப் பெரிய அளவில் மரியாதைசெய்து தன் ‘ராஜ விசுவாசத்தை’ அரங்கேற்ற நினைத்தார். 1911, டிசம்பரில் தர்பாருக்கான நாள் குறிக்கப்பட்டது. அந்த ஜனவரியிலிருந்தே அதற்கான வேலைகள் ஜரூராக ஆரம்பமாயின.

டெல்லி தர்பார்
டெல்லியின் வடக்குப் பகுதியில் மாபெரும் நிலம் ஒன்று தேர்ந்தெடுக்கப்பட்டது. மொத்தம் 17,920 ஏக்கர். அப்போதுதான் அங்கு மக்காச்சோள அறுவடை முடிந்திருந்தது. அந்த விளைநிலத்தைச் சமப்படுத்தும் வேலைகள் ஆரம்பமாயின. எங்கெங்கு, என்னென்ன, எப்படியெப்படி அமைக்க வேண்டும் என்று ஒட்டுமொத்த வரைபடமும் தயாரானது.

தேவையான இடங்களில் தற்காலிகப் பாதைகள் அமைக்கப்பட்டன. நாற்பது மைல்களுக்குத் தார்ச்சாலை போடப்பட்டது. அடுத்ததாக இருப்புப்பாதைகள் முளைக்க ஆரம்பித்தன. சுற்று வட்டாரத்தில் பதினாறு குட்டி ரயில் நிலையங்கள் ஏற்படுத்தப்பட்டன. தர்பார் நடக்கும் நாள்களில் ஒட்டுமொத்த முகாமில் இரண்டரை லட்சம் பேர் கூடுவார்கள் என்று கணக்கிடப்பட்டிருந்தது. அத்தனை பேருக்கும் தேவையான உணவுப்பொருள்கள், காய்கறிகள், இறைச்சி, பால், ரொட்டி, பழங்கள், சோமபானங்கள் எல்லாம் ரயில்களிலும் மோட்டார் வாகனங்களிலும் வந்து இறங்கின. முப்பது இடங்களில் தற்காலிகத் தபால் நிலையங்கள் அமைக்கப்பட்டன. 116 இடங்களில் தபால் பெட்டிகள் தொங்கின. ஆங்கிலம் மற்றும் இந்தியாவின் முக்கியமான இருபது மொழிகளில் தந்தி சேவை ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

கிங் ஜார்ஜ் தங்குவதற்காகவும் பதவியேற்பு விழா மேடைக்காகவும் தனியாக மையப்பகுதியில் எண்பத்து மூன்று ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டது. அதைச் சுற்றிலும் 233 இடங்களில் தனித்தனியே முகாம்கள் அமைப்பதற்காகத் திட்டமிட்டிருந்தார்கள். பதவியேற்பு விழாவில் கலந்துகொள்ளும் பிரிட்டிஷ் விருந்தாளிகளும், இந்தியாவிலுள்ள அனைத்து சமஸ்தான மகாராஜாக்களும், ராஜாக்களும், குட்டி ராஜாக்களும் தங்குவதற்காக அந்த முகாம்கள்.

கிங்கின் முகாமில் தரையெங்கும் பெர்சியக் கம்பளங்கள், கூடாரங்களைச் சுற்றிப் பூச்செடிகள், உத்தரத்தில் கிரிஸ்டல் அலங்கார விளக்குகள். அந்தக் கூடாரத்தை ஒட்டி, 200 பேர் விருந்து உண்ணும் அளவில் ஒரு டைனிங் கூடாரம். கிங்கின் முகாமிலேயே 120 ஐரோப்பிய முக்கியஸ்தர்கள் தங்குவதற்காகச் சிறப்புக் கூடாரங்கள் ஒதுக்கப்பட்டிருந்தன. பில்லியர்ட்ஸ் விளையாடத் தனிக் கூடாரங்கள்.

டெல்லி தர்பார்
ஹைதராபாத், மைசூர், பரோடா போன்ற இருபத்தொரு குண்டு மரியாதைகொண்ட பெரிய சமஸ்தான மகாராஜாக்களுக்குரிய முகாம்கள் என்பது சற்றே பெரியதாக, கிங் முகாமுக்கு அருகிலேயே இருப்பதுபோல அமைக்கப்பட்டிருந்தன. அதேபோல, தரம் வாரியாக முகாம்கள் அமைக்கப்பட்டிருந்தன. ஆயிரக்கணக்கான கூலியாள்கள், கூடாரங்கள் அமைப்பதற்காக வெட்டவெளி மொட்டை வெயிலில் உழைத்தார்கள்.

ஒவ்வொரு மகாராஜாவும் தங்களுக்குரிய முகாமில் தேவையான பிரத்யேக வசதிகளைச் செய்துகொள்ள அனுமதி வழங்கப்பட்டிருந்தது. ‘ஆளுயரக் கண்ணாடியால் கூடாரம் நிறைந்திருக்க வேண்டுமா? அமைச்சுக்கோ. கூடாரத்துக்குள்ளேயே ரோல்ஸ்-ராய்ஸ் வந்து செல்ல வேண்டுமா? ஓட்டிக்கோ. தங்கத்தாலான டாய்லெட்டில்தான் இரண்டுக்குச் சென்று பழக்கமா? போய்க்கோ.’ இவைதவிர மகாராஜாக்கள்,  தங்கள் சொந்த உபயோகத்திற்காகக் குதிரைகள், யானைகள், கார்கள் எதுவேண்டுமானாலும் வைத்துக்கொள்ள அனுமதி வழங்கப்பட்டிருந்தது.

அனைத்து இடங்களிலும் மின்சார வசதி செய்துகொடுக்கப்பட்டது. தர்பார் நடக்கவிருந்த காலம் குளிர்காலம் என்பதால், கிங்கின் கூடாரத்தில் மட்டும் மின்சார ஹீட்டர் பொருத்தப்பட்டிருந்தது. மற்றவர்கள் குளிர்காய, மார்பிள்களாலான கணப்பு அடுப்புகள் அமைக்கப்பட்டிருந்தன.

பதவியேற்பு விழாவுக்கான மேடை தனியாகப் பல ஏக்கர் பரப்பளவில் கட்டப்பட்டிருந்தது. நடுவில் ஓர் உயரமான மண்டபம். அதன்மேல் அலங்கரிக்கப்பட்ட தங்க நிற டூம். மண்டபத்தைச் சுற்றி ஷாமியானா. பல்வேறு அலங்காரங்கள். அந்த நவம்பரின் மத்தியில் விழாவுக்கான எல்லா ஏற்பாடுகளும் முடிந்திருந்தன.

நவம்பரின் இறுதி வாரத்தில் இந்தியாவே டெல்லியை நோக்கி நகருவது போலோர் உணர்வு. எல்லா சமஸ்தானங்களிலிருந்தும் மகாராஜாக்களும், ராஜாக்களும், மற்றவர்களும் விழாவில் கலந்துகொள்வதற்காகப் புறப்பட்டார்கள். மாடு, குதிரை, யானை வண்டிகள் முதல் மோட்டார் வண்டிகள் வரை சக்கரங்கள் கிளப்பிய செம்மண் புழுதியில் டெல்லி சிவந்தது.

டெல்லி தர்பார்
அந்த மூன்றாவது டெல்லி தர்பாரில் கலந்துகொள்வதில் பரோடா மகாராஜா சாயாஜி ராவுக்கு விருப்பமே இல்லை. பழைய கசப்பு அனுபவங்கள் உறுத்தின. இருந்தாலும் பிரச்னை வேண்டாம் என்ற ஒரே காரணத்துக்காக சாயாஜி ராவும் தன் குடும்பத்தோடு டெல்லிக்குக் கிளம்பினார்.

கிங்கும் குயினும் படு அமர்க்களமான வரவேற்புடன் இந்தியாவுக்கு வந்திறங்கினார்கள். பம்பாய்க்கு, அப்போதைய இந்தியாவின் தலைநகரமான கல்கத்தாவுக்கெல்லாம் சென்றுவிட்டு, டிசம்பர் 7 அன்று பதவியேற்பு முகாமுக்குள் அடியெடுத்து வைத்தார்கள். வைஸ்ராய் ஹார்டிங்கின் ஏற்பாடுகளைக் கண்டு மனம் குளிர்ந்தார்கள்.

அடுத்த இரண்டு நாள்களில் பூமியும் குளிர்ந்தது. பருவம் தப்பி வந்த மழை. மிஸ்டர். வருணன் வந்து அமோகமாக விளையாட்டிவிட்டுப் போனார். பல மாதங்கள் பாடுபட்டுச் செய்த ஏற்பாடுகள் எல்லாம் பாழ். குறிப்பாக, போட்டு வைத்திருந்த இருப்புப்பாதையில் பாதி காணாமல் போயிருந்தது. பல கூடாரங்கள் பிய்ந்து தொங்கின. விழா மேடை அலங்காரங்கள் உட்பட அனைத்தும் சர்வ நாசம். விழா நடப்பது சந்தேகம்தான், கிங் கிளம்பிவிடுவார் என்று பேச்சுகள் எழ ஆரம்பித்தன.

வைஸ்ராய் ஹார்டிங் தவிதவித்துப்போனார். விழாவுக்கு மூன்றே நாள்கள்தான் பாக்கியிருந்தன. ஆயிரக்கணக்கான கூலி ஆள்களையும் ராணுவ வீரர்களையும் முடுக்கிவிட்டார். ‘எல்லாத்தையும் சரிபண்ணுங்க. ஒரு சொட்டுத் தண்ணிகூட உள்ள தேங்கி இருக்கக் கூடாது. எல்லாம் மழைக்கு முன்னாடி எப்படி இருந்துச்சோ, அதேமாதிரி ஆகிடணும். இட்ஸ் மை ஆர்டர்.’ கிட்டத்தட்ட மிரட்டத்தான் செய்தார். டிசம்பர் 12-ல் தர்பார். அதற்கு முந்தைய நாளே எல்லாம் இயல்பு நிலைக்குக் கொண்டுவரப்பட்டது. வருணன் ரீ-என்ட்ரி கொடுத்துவிடுவாரோ என்று பயந்து, ஹார்டிங் அடிக்கடி வானத்தைப் பார்த்துக்கொண்டே இருந்தார். வானம் பொய்த்துவிட்டது.

இங்கிலாந்து அரச பரம்பரையில் அதுவரை முடிசூட்டு விழா என்பது லண்டனில் மட்டும்தான் நடைபெற்றுவந்தது. ஜார்ஜும் 1911 ஜூன் 22-ல் லண்டனில் முடிசூட்டிக்கொண்டார். ஆனால், இந்தியாவின் பேரரசராக இங்கு டெல்லி தர்பாரிலும் தனியாக முடிசூட்டிக் கொள்ள விரும்பினார். அவரது விருப்பத்துக்காக ராஜபரம்பரை விதிகள் தளர்த்தப்பட்டன. ஜார்ஜுக்காகப் புதிய கிரீடம் ஒன்று தயார் செய்யப்பட்டது.

லண்டனின் பிரபல நகை நிறுவனமான Garrard & Co-வினர் தயாரித்த அந்த கிரீடத்தின் மதிப்பு அறுபதாயிரம் பவுண்டு, எடை சுமார் ஒரு கிலோ. 6,100 சிறிய வைரக்கற்களோடு, மரகதம், ரத்தினம், நீலக் கற்களும் பதிக்கப்பட்ட அந்தக் கிரீடத்துக்கு வைக்கப்பட்ட பெயர்,    Imperial Crown of India. டெல்லி தர்பாருக்காக எல்லா ஏற்பாடுகளும் செய்யப்பட்ட பிறகுதான் ஜார்ஜுக்கு ஒரு விஷயம் உறுத்த ஆரம்பித்தது.

டெல்லி தர்பார்
இந்தியா, இந்துக்களும் இஸ்லாமியர்களும் நிறைந்த நாடு. அங்கு சென்று கிறிஸ்துவ மத முறைப்படி முடிசூட்டிக்கொள்வது முறையல்ல. வேறென்ன, செய்யலாம்?

ஒன்றும் செய்ய முடியாது. முடிசூடும் நாளும் வந்தது. டிசம்பர் 12, காலை நேரம். எந்தவிதச் சடங்குகளும் இன்றி, கிங் ஐந்தாம் ஜார்ஜ் தனக்குத் தானே முடிசூட்டிக்கொண்டார். குயின் மேரியோடு தர்பாருக்குக் கிளம்பினார். இருவரது தகதக உடைகளுக்குப் பின்னாலும் முழுநீள புசுபுசு அங்கிகளையும் அணிந்திருந்தார்கள். அந்த அங்கிகளைத் தரையில் புரளவிடாமல் பிடித்தபடியே கிங், குயினுக்குப் பின்னால் செல்வதற்கு நான்கு சிறுவர்கள் பணிக்கு அமர்த்தப்பட்டிருந்தார்கள்.

நான்கு குதிரைகள் பூட்டப்பட்ட, தங்கநிறப் பட்டைகளால் அலங்கரிக்கப்பட்ட சிவப்பு நிற சாரட் ஒன்று காத்திருந்தது. கூண்டுள்ள வண்டி அது. ஜார்ஜும் மேரியும் ஏறி அமர்ந்தார்கள். குதிரைப்படை வீரர்கள் முன்னே அணிவகுக்க, தர்பார் மண்டபத்தை நோக்கி சாரட் நகர்ந்தது. அப்போதுதான் மைதானத்தில் ஒரு சலசலப்பு எழுந்து அடங்கியிருந்தது. அலங்காரங்களுடன் நிறுத்தப்பட்டிருந்த யானை ஒன்றுக்கு அந்த தர்பார் பிடிக்கவில்லைபோல. ஆகவே, மதம் பிடித்துவிட்டது. அது தறிகெட்டு அங்கும் இங்கும் ஓட ஆரம்பிக்க, வைஸ்ராய் ஹார்டிங்கின் ரத்த அழுத்தமும் எகிற ஆரம்பித்தது. பாகன்களின் கூட்டு முயற்சியால், யானை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.

மகாராஜாக்கள், ராஜாக்கள், குட்டி ராஜாக்கள், ஐரோப்பிய விருந்தினர்கள், இந்திய பிரிட்டிஷ் அதிகாரிகள் என்று எல்லோருமே தங்களுக்காக ‘தரம் பிரித்து ஒதுக்கப்பட்ட’ இருக்கைகளில் கிங்குக்காகக் காத்திருந்தார்கள். மண்டபத்தின்முன் அரசுப் படை வீரர்கள் அரைவட்ட வடிவில் அணிவகுத்து நின்றார்கள். அந்த மைதானத்தில் பல சமஸ்தானங்களைச் சேர்ந்த வீரர்கள் வியர்வை வழிய வழிய வரிசை கட்டி நின்றார்கள். டெல்லி, பஞ்சாப் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளிலிருந்து சுமார் ஆயிரக்கணக்கான பொதுமக்களும் ‘வரவழைக்கப்பட்டிருந்தார்கள்.’ எனவே, கூட்டம் ஓஹோ!

சாரட், தர்பார் மண்டபத்தின் அருகில் வந்து நின்றது. அந்த மாபெரும் மைதானமே எழுந்து நின்றது. கிங்கும் குயினும் இறங்கி மண்டபத்திலுள்ள சிம்மாசனங்களை நோக்கி நடந்தார்கள். அந்தச் சிறுவர்களும் வால்போல. கிங்குக்குரிய பதவியேற்பு மரியாதையாக நூற்றொரு முறை துப்பாக்கி குண்டுகள் முழங்கின. பிரிட்டிஷ் ராஜ பரம்பரைக் கொடி ஏற்றப்பட்டது. God Save the King! - வாழ்த்துகள் ஒலித்தன. முரசொலி முழங்கியது. பிரிட்டிஷாரின் மூன்றாவது டெல்லி தர்பார் இனிதே ஆரம்பமானது.

ஒவ்வொரு மகாராஜாவாக தர்பார் மண்டபத்துக்கு வந்து கிங்குக்கும் குயினுக்கும் மரியாதை செய்வது அடுத்த நிகழ்ச்சி. அதாவது சிரம் தாழ்த்தி வணக்கம் வைக்க வேண்டும் என்று முன்பாகவே வைஸ்ராய் ஹார்டிங்கிடமிருந்து எல்லா மகாராஜாக்களுக்கும் தகவல் அனுப்பப்பட்டிருந்தது. ஆனால், இந்த விஷயத்தில் இருபத்தொரு குண்டு மரியாதை கொண்ட ஹைதராபாத், பரோடா, குவாலியர், மைசூர், காஷ்மீர் மகாராஜாக்களுக்கு உடன்பாடு இல்லை.

டெல்லி தர்பார்
நாங்களும் மாபெரும் சமஸ்தானத்தின் மகாராஜாக்களே. அதனால், குனிந்தெல்லாம் வணக்கம் முடியாது. இப்படி வெளிப்படையாகச் சொல்லும் தைரியம் சாயாஜி ராவுக்கு மட்டுமே இருந்தது. அதை நாகரிகமான வார்த்தைகளில் ஒரு கடிதமாக எழுதி அனுப்பினார். வைஸ்ராய் அதற்குச் செவிமடுக்கவில்லை. தர்பாருக்கு வந்த மகாராஜாக்களுக்கு ‘கிங்குக்கு எப்படி மரியாதை செய்ய வேண்டும்’ என்று வகுப்பு எடுக்கப்பட்டது. ஒத்திகை செய்தும் காண்பிக்கப்பட்டது. அதாவது, கிங்குக்கு முன் சென்று நின்று மூன்று முறை குனிந்து வணக்கம் வைக்க வேண்டும். கையோடு எடுத்துச் சென்றிருக்கும் பரிசுப் பொருள்களைக் கொடுத்து கௌரவிக்க வேண்டும். பின்பு முதுகைக் காட்டாமல், அப்படியே ரிவர்ஸ் கியரில் கொஞ்ச தூரத்துக்குக் கீழே விழாமல் வந்தபின்பே திரும்பிச் செல்ல வேண்டும். கிங்கின் மூஞ்சிக்கு நேரே முதுகு காட்டி நடந்தால், அது அவமரியாதை. சாயாஜி ராவின் கவனத்துக்கு இந்த விதிமுறைகள் எல்லாம் வரவில்லை. அவருக்கு ஒத்திகை பற்றியும் எதுவும் தெரியாது.

தர்பாரில் மரியாதை செய்யும் படலம் ஆரம்பமானது. இந்தியாவின் மிகவும் உயரிய, செல்வாக்கு மிகுந்த சமஸ்தானமான ஹைதராபாத்தின் நிஜாமுக்கு முதல் வாய்ப்பு. அதாவது, அவர்தான் முதலில் கிங்குக்கு நலுங்கு செய்ய அழைக்கப்பட்டார். அப்போதுதான் ஹைதராபாத்தின் நிஜாமாகப் பதவியேற்றிருந்த கஞ்ச மகாபிரபு ஒஸ்மான் அலிகான், கிங்கை நோக்கி வந்தார். முறைப்படி மூன்று முறை குனிந்து வணக்கம் வைத்தார். அரை மனத்துடன் மரகத நெக்லெஸ் ஒன்றைப் பரிசாகக் கொடுத்துவிட்டு ரிவர்ஸ் கியரில் கிளம்பினார்.

அடுத்த மரியாதைக்குரியவர் பரோடா மகாராஜாதான். தர்பாருக்காக வந்திருந்த மகாராஜாக்களெல்லாம் உற்சவர்போல ஏகப்பட்ட நகைகளைச் சாத்திக்கொண்டு வந்திருந்தார்கள். படு ஆரம்பரமான உடை வேறு. எல்லோரும் பலவித கற்கள் பதிக்கப்பட்ட உடைவாள் வைத்திருந்தார்கள். ஆனால், மற்றவர்களைவிட சாயாஜி ராவ் மிக எளிமையாக வந்திருந்தார்.

குஜராத் பாணி வெள்ளை நிறப் பட்டுடை. தலைப்பாகை. சின்னதாக ஒரு வைரப்பதக்கம். கழுத்தில் ஒரு முத்துமாலை. அவர் இடையில் உடை வாள் இல்லை. தங்கக் கைப்பிடியுடைய கைத்தடி ஒன்றை எடுத்துக்கொண்டு கிங்கை நோக்கிச் சென்றார். தனக்குமுன் சென்ற நிஜாம் எப்படி மரியாதை செய்தார் என்றெல்லாம் சாயாஜி ராவ் கவனிக்கவில்லை.

கிங் முன் சென்று நின்றார். ஒருமுறை குனிந்து வணக்கம் வைத்தார். நகை ஒன்றைப் பரிசாகக் கொடுத்தார். பின் முதுகைக் காட்டியபடி திரும்பி வந்துவிட்டார். வைஸ்ராய் ஹார்டிங்குக்குக் காதில் புகை. நடந்ததை எல்லாம் பார்த்துக் கொண்டிருந்த பலரும் சாயாஜி ராவ், கிங்கை அவமானப்படுத்திவிட்டதாக நினைத்தார்கள். ஆனால், எதுவும் அறியாதவராகத் தன் இடத்தில் வந்து உட்கார்ந்துகொண்டார் சாயாஜி ராவ். விழா மும்முரத்தில் அப்போதைக்கு அதுபற்றிய சர்ச்சை கிளம்பவில்லை.

அடுத்ததாக குவாலியர், மைசூர், காஷ்மீர் மகாராஜாக்கள் மரியாதை செய்தார்கள். அதற்குப்பின் ரேங்க் வாரியாக. அவ்வளவு ஆடம்பரமான உடைகளுடன், நகைகளுடன் மகாராஜாக்கள் கேட் வாக் சென்றதைப் பார்க்கும்போது பேஷன் ஷோ போலத்தான் இருந்தது. பன்னா என்ற சமஸ்தானத்தைச் சேர்ந்த மகாராஜா, கிங்கின் அரியணைமேல் செருகி வைத்துக்கொள்ள 12 இன்ச் விட்டமுள்ள, ரத்தினக் குடை ஒன்றைக் கொடுத்தார். இப்படி விதவிதமான பரிசுகள் குவிந்துகொண்டிருந்தன.

அடுத்ததாக இந்தூர் மகாராஜா திகோஜி ராவ் கிங்கை நோக்கிப் புயல் வேகத்தில் கிளம்பினார். தங்க, வெள்ளிப் பட்டைகளுடன் கூடிய பட்டுடை. உடலெங்கும் ஆபரணங்கள். இடையில் வாள். அதுபோக, கையில் தங்கத்தலான, மரகதக் கல் கைப்பிடிகொண்ட கைத்தடி வேறு. அவ்வளவு உபரி எடையையும் சுமந்துகொண்டு, அந்தப் பளபள தரையில் கால் பதித்த திகோஜி ராவ், தத்தக்கா பித்தக்காவெனத் தடுமாறி விழுந்தார். கைத்தடி இரண்டு துண்டாகிப்போனது. நான்கைந்து பணியாளர்கள் வந்து அவரைத் தூக்கிவிடும்படி ஆகிவிட்டது. அதற்குப்பின் திகோஜி, தன்னைச் சரிப்படுத்திக்கொண்டு, வெகு ஜாக்கிரதையாக நடந்துசென்று கிங்குக்குக் கும்பிடு போட்டார்.

இப்படி ஒவ்வொருத்தராக வந்து குனிந்து நிமிர்ந்து சென்றுகொண்டே இருக்க, நீண்ட நேரத்துக்கு அசுவாரஸ்யமாகப் போய்க் கொண்டிருந்தது தர்பார். சில சின்ன ராஜாக்கள், கிங்குக்குக் கும்புடு போட ஆர்வம் காட்டினார்கள். ஆனால், தகுதியைக் காரணம் காட்டி, அவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது.

அந்த தர்பாரில் ஐந்தாம் ஜார்ஜ் முக்கியமான அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார். ‘இனி இந்தியாவின் புதிய தலைநகரமாக டெல்லி செயல்படும்.’

கல்கத்தா? அது இந்தியாவின் கிழக்கு மூலையில் இருந்தது. எனவே, இந்தியாவின் மையத்திலுள்ள டெல்லியைத் தலைநகரமாக வைத்துக்கொள்ளலாம் என்று பிரிட்டிஷ் அரசு முடிவெடுத்திருந்தது. முகலாயர்களின் ஆட்சிக்குப்பின், மீண்டும் டெல்லி தலைநகரமானது.

கிங்கும் குயினும் யானைமேல் ஊர்வலம் வர ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஆனால், கிங்குக்கு உள்ளுக்குள் உதறலெடுக்க, மறுத்துவிட்டார். மீண்டும் சாரட் ஏறி ஊர்வலம் போனார்கள். முன்னும் பின்னும் பெரும்படைகள். வழியெங்கும் பொதுமக்களின் உற்சாகக் கையசைப்பு. செங்கோட்டையில் உப்பரிகையில் அமர்ந்து ஜார்ஜும் மேரியும் படை வீரர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார்கள்.

மறுநாள் காலை சாயாஜி ராவின் நெருங்கிய நண்பர் கோபால கிருஷ்ண கோகலே, அவரது கூடாரத்துக்கு வேகமாக வந்தார். ‘ஜி, கிங்கை நீங்கள் அவமதித்துவிட்டதாகப் பெரும் சர்ச்சை கிளம்பியுள்ளது.’ கோகலே சொல்லச் சொல்ல, சாயாஜி ராவுக்கு நிலைமை புரிந்தது. வைஸ்ராய் ஹார்டிங்குக்குத் தன்னிலை விளக்கக் கடிதம் ஒன்றை எழுதி அனுப்பினார் சாயாஜி ராவ். ஆனால், ஹார்டிங்கின் கோபம் குறையவில்லை. கூடவே பிரிட்டன் பத்திரிகைகளும் சேர்ந்து கொண்டன. ‘சாயாஜி ராவின் செயல் ஷேம் ஷேம் பப்பி ஷேம்’ என்று இஷ்டத்துக்கு எகிறின. ‘அவரைப் பதவியிலிருந்து தூக்குங்கப்பா!’, ‘அந்த ஆளை நாடு கடத்துங்கப்பா!’, ‘அவருக்கான குண்டு மரியாதை குறைச்சாத்தான் சரிப்படுவாரு!’ - இப்படி எத்தனையோ எதிர்க்குரல்கள்.

ஆனால், இந்திய சுதந்தரப் போராட்டத்தில் தீவிரமாக ஈடு
பட்டிருந்த தேசியத் தலைவர்களும் தொண்டர்களும் சாயாஜி ராவைக் கொண்டாட ஆரம்பித்தார்கள். ‘கிங்குன்னா என்ன பெரிய கொம்பா? குனிஞ்சு கூழைக்கும்புடு போடணுமாமே! சாயாஜி ராவ் பண்ணுனதுதான் சரி. தைரியமா நடந்துகிட்ட அவரைப் பார்த்து மத்த மகாராஜாக்களும் திருந்தினா நல்லா இருக்கும்!’

இப்படி தேசியத் தலைவர்களிடமும் மக்கள் மத்தியிலும் சாயாஜி ராவுக்கு ஆதரவு பல்கிப் பெருகியதால், பிரிட்டிஷ் அரசு அவர்மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. ‘விடுறா விடுறா’ எனத் தன் மீசை மண்ணைத் தட்டிவிட்டுக் கொண்டது.

இன்னும் மூன்று விஷயங்கள் மட்டும்.

1911 தர்பாரை நடத்துவதற்காக பிரிட்டிஷ் இந்திய அரசு செலவழித்த நம் பாட்டன் வீட்டுப் பணத்தின் மதிப்பு இரண்டு கோடி அமெரிக்க டாலர்.

மூன்றாம் தர்பாரில் தனக்குத்தானே சூட்டிக்கொண்ட அந்தக் கிரீடத்தை, ஜார்ஜ் அதற்குப் பின்பு அணியவே இல்லை. காரணம், அதன் எடை அவருக்கு எரிச்சலைக் கொடுத்தது. அவருக்குப் பின்னும் யாரும் அதை அணியவில்லை. இப்போது அந்தக் கிரீடம்  லண்டன் டவரில் ஜுவல் ஹவுஸில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது.

நான்காவதாக ஒரு டெல்லி தர்பார் நடத்தப்படுவதற்கான ஒரு சூழல் 1937-ல் உருவானது. அப்போது கிங்காகப் பதவியேற்றிருந்த ஆறாம் ஜார்ஜ், எட்வர்ட்போலவே இந்தியாவிலும் ஒருமுறை முடிசூட்டிக்கொள்ள விரும்பினார். ஆனால், சுதந்தரப் போராட்டம் வலுவடைந்திருந்த காரணத்தினாலும் இந்திய தேசிய காங்கிரஸ் கிங்கின் வருகைக்குக் கடும் எதிர்ப்பு தெரிவித்துப் போராடியதாலும் ஜார்ஜ் தன் யோசனையைத் தள்ளிவைத்தார். ‘காலம் கனியும்போது இந்தியாவுக்கு வருகிறேன்’ என்றார்.

காலம் கனியவே இல்லை.

.

Friday, 13 September 2019

DELHI BOMB PLAST 2008 SEPTEMBER 13





DELHI BOMB PLAST 2008 SEPTEMBER 13


1
13 செப்டம்பர் 2008 தில்லி தொடர் குண்டுவெடிப்புகள் 2008 செப்டம்பர் 13ஆம் தேதி மாலை 6:10 மணிக்கு தில்லியில் இடம்பெற்ற ஐந்து தொடர் குண்டுவெடிப்புகளை குறிக்கும். அடுத்தடுத்து இந்த குண்டுகள் வெடித்து 30 பேர் உயிரிழந்தனர். மேலும் 90 பேர் படுகாயம் அடைந்தனர்.

இதே ஆண்டில் ஜெய்ப்பூர், பெங்களூர், மற்றும் அகமதாபாத் ஆகிய நகரங்களில் குண்டுவெடிப்புகள் இடம்பெற்றன. அந்த நிகழ்வுகளை தாங்களே நடத்தியதாக அறிவித்த இந்திய முஜாஹிதீன் அமைப்பு மின்னஞ்சல் மூலமாக பல தொலைக்காட்சி நிறுவனங்களுக்கு தில்லி குண்டுகளையும் ஒருங்கிணைத்தது என்று தெறிவித்துள்ளது.

இதனால் தில்லி தேசிய தலைநகர் வலயம் (இந்தியா), பஞ்சாப், அரியானா மற்றும் இந்தியாவில் பல்வேறு பகுதிகளில் அவசர நிலை ஏற்பட்டது.

தில்லியில் கடந்த 2008-இல் நிகழ்ந்த தொடர் குண்டுவெடிப்பு தொடர்பான வழக்கில் இந்திய முஜாஹிதீன் பயங்கரவாத இயக்கத்தை ஏற்படுத்தியவர்களில் ஒருவரான யாசின் பத்கல் மற்றும் அவரது கூட்டாளிக்கு எதிராக தில்லி நீதிமன்றத்தில் செவ்வாய்க்கிழமை குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டன.
தில்லியில் கடந்த 2008, செப்டம்பர் 13-இல், கரோல் பாக், பாரகம்பா சாலை, கிரேட்டர் கைலாஷ் ஆகிய பகுதிகளில் அடுத்தடுத்து குண்டுகள் வெடித்தன. இதில் 26 பேர் பலியாகினர். 135 பேர் காயமடைந்தனர்.
இந்த குண்டுவெடிப்புகளுக்கு மூளையாக செயல்பட்டதாக இந்திய முஜாஹிதீன் பயங்கரவாத இயக்கத் தலைவர் யாசின் பட்கல், அவரது கூட்டாளி அஸதுல்லா அக்தர் உள்ளிட்டோருக்கு எதிராக காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்தனர்.

இதனிடையே, கடந்த 2013, ஆகஸ்ட் 28-இல் இந்திய - நேபாள எல்லையில் யாசின் பத்கலை தேசிய புலனாய்வு அமைப்பினர் கைது செய்தனர். இதைத் தொடர்ந்து, தில்லி காவல்துறையினர் அவரை காவலில் எடுத்து விசாரணை மேற்கொண்டனர். தற்போது திகார் சிறையில் யாசின் பட்கல் அடைக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில், கிரேட்டர் கைலாஷில் நிகழ்ந்த இரட்டை குண்டுவெடிப்பு தொடர்பான வழக்கில், சட்டவிரோத செயல்கள் தடுப்புச் சட்டம், இந்திய தண்டனையியல் சட்டம், பயங்கரவாதச் சட்டம், வெடிபொருள்கள தடுப்புச் சட்டம் ஆகியவற்றின்கீழ் யாசின் பட்கல் மற்றும் அவரது கூட்டாளி அஸதுல்லா அக்தர் ஆகியோருக்கு எதிரான
குற்றச்சாட்டுகளை, தில்லி கூடுதல் செஷன்ஸ் நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை பதிவு செய்தது. எனினும், இருவர் மீதான குற்றச்சாட்டுகளையும் அவர்களது தரப்பில் ஆஜரான வழக்குரைஞர் மறுத்தார். இதையடுத்து, அடுத்தகட்ட விசாரணையை வரும் 28-ஆம் தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்தார்.

Friday, 16 August 2019

DELHI CHIEF MINISTER ARAVIND -LEGEND



DELHI CHIEF MINISTER ARAVIND -LEGEND



 அரவிந்த் கெஜ்ரிவால்

அரவிந்த் கெஜ்ரிவால் (Arvind Kejriwal, இந்தி:अरविंद केजरीवाल) (பிறப்பு:16 ஆகஸ்ட் 1968) 8ஆம் தில்லி முதல்வர் ஆவார். இவர் அரசுத்துறையில் ஒளிவின்மை இருக்க வேண்டும் என்று போராடி வரும் ஓர் இந்திய தன்னார்வல சமூக சேவகரும் ஆவார். தகவல் பெறும் உரிமை சட்டமாக்கலுக்கான இயக்கத்தை அடித்தட்டு மக்களிடம் கொண்டு சேர்த்ததற்காகவும் வறியவர்களும் அரசின் ஊழலுக்கு எதிராகப் போராடும் வகையில் அரசைப் பொறுப்பேற்க வைத்ததற்காகவும் மலரும் தலைமைப்பண்புக்காக 2006ஆம் ஆண்டுக்கான ரமன் மகசேசே பரிசு இவருக்கு அளிக்கப்பட்டது.[1]

வாழ்க்கை வரலாறு

அரவிந்த் கெஜ்ரிவால் அரியானாவிலுள்ள இசாரில் 1968 ஆம் ஆண்டு‍ ஆகஸ்டு‍ 16 ஆம் நாள் பிறந்தவர்[2],[3]. கேஜ்ரிவாலின் தந்தை கோவிந்த ராம் கேஜ்ரிவால், தாய் கீதா தேவி. ஐஐடி கரக்பூரில் 1989 ஆம் ஆண்டு இயந்திரவியல் பொறியியல் பட்டம் பெற்றவர். 1992ஆம் ஆண்டு இந்தியக் குடியுரிமைப் பணிகளில் ஒன்றான இந்திய வருவாய்த்துறைப் பணியில் (IRS) சேர்ந்து தில்லியில் வருமானவரி ஆணையர் அலுவலகத்தில் பணி புரிந்தார். அங்கு பணி புரியும்போது அரசுத்துறையில் தகவல்கள் வெளிப்படையாக இல்லாமையே ஊழலுக்கு வழிவகுப்பதை உய்த்தறிந்தார். தான் பணியில் இருக்கும்போதே ஊழலுக்கு துணைபுரியும் செயலாக்கங்களை மாற்றவும் எதிர்க்கவும் போராடி வந்தார்.[4] வருமானத்துறை அலுவலகத்தில் ஒளிவின்மையைக் கொண்டுவரப் பல மாற்றங்களை துவக்கி வைத்தார்.

சனவரி 2000 ஆம் ஆண்டில் தற்காலிக பணிஓய்வு பெற்றுக்கொண்டு பரிவர்த்தன் என்ற தில்லியை மையமாகக் கொண்ட குடிமக்கள் இயக்கமொன்றைத் துவக்கினார். இது நியாயமான, ஒளிவுமறைவற்ற, பொறுப்புள்ள அரசாண்மைக்காகப் பாடுபடுகிறது. பெப்ரவரி,2006ஆம் ஆண்டில் முழுவதுமாக பணிஓய்வு பெற்றுக் கொண்டு பரிவர்த்தன் பணிகளில் இறங்கினார்[5].

அருணா ராய் போன்றவர்களுடன் இணைந்து தகவல் பெறும் உரிமைக்காக அமைதியான சமூக இயக்கத்தை நடத்தினார். 2001ஆம் ஆண்டில் தில்லியில் தகவல்பெறும் உரிமைச்சட்டம் நிறைவேறியது[3]. நாட்டளவில் 2005ஆம் ஆண்டு நிறைவேறியது. அதன்பிறகும் சட்டத்தை ஏட்டளவில் நிற்கவிடாது மக்களறியும் வண்ணம் இந்தியா முழுவதும் பயணித்து பரப்புரை யாற்றினார்[6],[7]. மேலும், தனது அமைப்பின் மூலம் இச்சட்டத்தின் மூலம் சிறப்பான தகவல்களைப் பெற்று அரசாண்மையில் மாற்றங்களைக் கொண்டு வருபவர்களுக்கு விருதுகள் வழங்கத் தொடங்கினார்[8]. இவ்வகையில் அரசின் செயல்களை மக்களும் கண்காணித்து பங்கேற்கத் தூண்டுகிறார்.

பெப்ரவரி6, 2007இல் சிஎன்என்-ஐபிஎன் தொலைக்காட்சி 2006ஆம் ஆண்டுக்கான "ஆண்டின் சிறந்த இந்தியர்" பட்டத்தை பொதுமக்கள் சேவைக்காக அரவிந்துக்கு வழங்கியது.

அரசியல்
அண்ணா அசாரே தலைமையில் ஊழல் எதிர்ப்புப் போராட்டங்களில் ஈடுபட்டார். 26 நவம்பர் 2012ல் ஆம் ஆத்மி கட்சியைத் துவக்கி, 2013 இல் தில்லி சட்டப்பேரவைத் தேர்தலில் அரசியல் பின்னணி இல்லாதவர்களை வேட்பாளர்களாக போட்டியிடச் செய்து மக்களின் ஆதரவைப் பெற்றார்[9]. 15 ஆண்டுகளாக காங்கிரஸ் கட்சியின் ஆட்சியில் தில்லி முதல்வர் பதவியில் இருந்த சீலா தீக்‌சித்தை புது தில்லி சட்டமன்ற தொகுதியில் 25,864 வாக்குகள் வேறுபாட்டில் தோற்கடித்தார்[10],[11]. திசம்பர் 28ஆம் தேதி டெல்லி முதல்வராகப் பதவியேற்றார் அரவிந்த் கெஜ்ரிவால்[12]. சன லோக்பால் என்ற சட்டத்தை நிறைவேற்ற சட்டமன்றத்தில் போதிய ஆதரவு இல்லாததால் அறிவித்த படி அவர் பதவி விலகினார்[13][14].

ஆதரவில் பிரச்சினைகள்

டெல்லியில் 38 ஆதரவு எம்.எல்.ஏக்களுடன் ஆட்சி அமைத்த இவருக்கு ஆம் ஆத்மி கட்சியின் அதிருப்தி எம்.எல்.ஏ., வினோத் குமார் பின்னியின் ஆதரவு திரும்பப் பெற்றுக்கொள்ளப்பட்டதையடுத்தும், 10.02.2014 முதல் முண்டுகா தொகுதியின் சுயேட்சை எம்.எல்.ஏ., ரம்பீர் சோகீன் தனது ஆதரவை விலக்கிக்கொண்டதாலும் நெருக்கடி உண்டாகியது[15].

பதவி முடிவு
புது டெல்லி முதல்வரான அரவிந்த் கேஜ்ரிவால் 13.02.2014 அன்று அவையில் ஜன்லோக்பால் மசோதாவை தாக்கல் செய்தார். இதில் ஆதரவு 27ம், எதிராக 42 பேரும் ஓட்டு அளித்தனர். ஆகையால் இது தாக்கல் ஆகவில்லை. அதனால் 14.02.2014 வெள்ளிக்கிழமை அன்று இவர் பதவி விலகினார்.[16]

2014ஆம் ஆண்டுப் பொதுத் தேர்தலில் பங்கேற்பு
தம் முதல்வர் பதவியை விட்டு விலகுமுன் 2014 சனவரியில் கேஜ்ரிவால் தாம் இந்தியப் பொதுத்தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என்று கூறியிருந்தார்.[17] ஆனால் அம்மாத இறுதியில் ஆம் ஆத்மி கட்சியினரின் வற்புறுத்தலால் கேஜ்ரிவால் தம் எண்ணத்தை மாற்றிக்கொண்டார்.[18] மார்ச்சு 25ஆம் நாள் கேஜ்ரிவால் பா.ஜ.கட்சியால் பிரதமர் பதவிக்கென்று நிறுத்தப்பட்ட நரேந்திர மோடியை எதிர்த்து தாம் வாரணாசித் தொகுதியிலிருந்து பாராளுமன்ற இடத்திற்குப் போட்டியிடப்போவதாக அறிவித்தார்.[19][20]

தில்லி சட்டமன்றம் (2015)
தில்லி சட்டமன்றத்துக்கு நடந்த தேர்தலில் புது தில்லி தொகுதியில் மீண்டும் போட்டியிட்டு பாசகவின் நிபுர் சர்மாவை 31,583 வாக்குகள் வேறுபாட்டில் தோற்கடித்தார். 2015 பிப்பரவரி 13ஆம் தேதி தில்லியின் எட்டாவது முதல்வராக பதவியேற்றார்.[21] இவர் எந்த துறையையும் தனக்கு எடுத்துக்கொள்ளவில்லை.[22][23] 2014 ஆம் ஆண்டு மார்ச் மாதம் இவர் வெளியிட்ட அறிக்கையில் தலைமைச்செயலகத்தில் பணிபுரிபவர்கள் சனிக்கிழமையும் பணிக்கு வரவேண்டும் என்று குறிப்பிட்டப்பட்டுள்ளதால் அலுவலர்கள் மத்தியில் பெரும் சர்ச்சை ஏற்பட்டுள்ளது .[24]

தனி வாழ்க்கை
கேஜ்ரிவாலின் மனைவி பெயர் சுனிதா. அவர்களுக்கு இரு குழந்தைகள்
உள்ளனர். கேஜ்ரிவால் சைவ உணவு அருந்துபவர். பல ஆண்டுகளாக விபாசனா செய்துவருகிறார்.[25] சடங்கு சம்பிரதாயங்களை விரும்பாத அவர் தமது பிறந்த நாளைக் கொண்டாடுவதில்லை[26

Thursday, 15 August 2019

HISTORY OF DELHI RED FORT - HISTORICAL SURPRISING





டெல்லி செங்கோட்டை: வரலாற்றின் பிரம்மாண்ட சுவாரஸ்யங்கள்
அபர்ணா ராமமூத்தி
பிபிசி தமிழ்

பழைய டெல்லியில் இருக்கும் செங்கோட்டை
டெல்லி செங்கோட்டை - இன்றும் ஒவ்வொரு ஆண்டும் சுதந்திர தினத்தன்று, பிரதமர் செங்கோட்டையில் கொடியேற்றும் வழக்கம் பின்பற்றப்பட்டு வருகிறது.

இந்தியாவின் 73ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு இன்று பிரதமர் நரேந்திர மோதி செங்கோட்டையில் கொடி ஏற்றினார்.

செங்கோட்டைக்கு என்று ஒரு நீண்ட நெடிய வரலாறு உண்டு. இந்தியா சுதந்திரம் அடைந்தவுடன், முதன்முதலில் தேசியக் கொடி ஏற்றப்பட்டது இங்குதான். சுதந்திரத்தை குறிக்கும் வகையில், ஆகஸ்ட் 15, 1947ஆம் ஆண்டு இந்தியாவின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேரு செங்கோட்டையில் கொடியேற்றி வைத்தார்.


ஒவ்வொரு ஆண்டும் சுதந்திர தினத்தன்று பிரதமர் செங்கோட்டையில் கொடியேற்றுவார்




400 ஆண்டு கால வரலாறு

செங்கோட்டையானது, டெல்லி மாநகருக்கு ஷாஜகான் அளித்த பரிசு என்று குறிப்பிடப்படுகிறது. முகலாய ஆட்சிக் காலத்தின் அரசியலையும், பொருளாதார ஸ்திரத்தன்மையையும் இது பிரதிபலிக்கிறது.

முதலில் முகலாயர்களின் தலைநகராக ஆக்ராதான் இருந்தது. ஆனால், பல்வேறு காரணங்களுக்காக ஆக்ராவில் இருந்து ஷாஜகானாபாத்துக்கு (தற்போதைய பழைய டெல்லி) 1638ஆம் ஆண்டு தலைநகரை மாற்றினார் மன்னர் ஷாஜகான்.

'முகலாய சாம்ராஜ்யத்தின் பயணம்' என்ற தனது புத்தகத்தில் இதுகுறித்து எழுதியிருக்கிறார் ஐரோப்பிய பயணி ப்ரான்காயிஸ் பெர்னியர். அதில், ஆக்ராவில் தாங்க முடியாத வெப்பம் நிலவியதால், டெல்லிக்கு தலைநகர் மாற்றப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

சாமராஜ்யத்தை கட்டுப்படுத்த டெல்லி பொருத்தமாக இருந்ததால், ஆக்ராவில் இருந்து தலைநகர் மாற்றப்பட்டது என்ற காரணமும் கூறப்படுகிறது.

மதில்களும், மாளிகைகளும்


1639 ஆம் ஆண்டு மே 12ஆம் தேதி செங்கோட்டை கட்ட அடிக்கல் நாட்டப்பட்டது. இதை கட்டி முடிக்க 9 ஆண்டுகாலம் ஆனது. அப்போதைய மதிப்பிலேயே இதற்காக சுமார் ஒரு கோடி ரூபாய் செலவிடப்பட்டது. இதில் பெரும்பாலான செலவு, மாளிகை கட்டவே பயன்படுத்தப்பட்டுள்ளது.

சிவப்பு நிற கற்கல் பயன்படுத்தி கட்டப்பட்டதாலே, இது செங்கோட்டை என்று பெயரிடப்பட்டது.

கலை வடிவம் மற்றும் அலங்கார வேலைப்பாடுகளின் உச்சத்தை செங்கோட்டை நமக்கு காண்பிக்கிறது என்று பலராலும் புகழப்படும் இக்கட்டடம் பாரசீக, ஐரோப்பிய மற்றும் இந்திய கலைவடிவங்களின் தொகுப்பில் கட்டப்பட்டுள்ளது.

யமுனை நதியின் மேற்கு கரையில் இருக்கும் செங்கோட்டை, மேற்கு மற்றும் கிழக்கில் நீண்டு செல்கிறது. செங்கோட்டையின் மதில் சுவர்கள், 2.41 கிலோ மீட்டர் சுற்றளவு கொண்டதாகும்.

இதன் பிரதான கட்டட அமைப்பாளர்கள் இரண்டு பேர். மற்ற அதிகாரிகளின் மேற்பார்வையில் ஹமித் மற்றும் அஹமத் ஆகிய இருவருமே இதனை கட்டும் வேலையில் முக்கிய பங்காற்றியவர்கள். இதற்காக பின்னாளில் இருவருக்கும் முகலாய மன்னரால் தக்க சன்மானம் வழங்கப்பட்டது.

செங்கோட்டைக்கு இரண்டு பிரதான நுழைவாயில்கள் உள்ளன. ஒன்று லாகூர் நுழைவாயில் மற்றொன்று டெல்லி நுழைவாயில்.

லாகூர் நுழைவுவாயில்


முக்கிய பிரமுகர்கள், தூதர்கள் மற்றும் மனுதாரர்களால் லாகூர் நுழைவாயில் பயன்படுத்தப்பட்டது






செங்கோட்டையின் மிக முக்கியமான நுழைவாயில் இதுதான். முக்கிய பிரமுகர்கள், தூதர்கள் மற்றும் மனுதாரர்களால் அப்போது இந்த நுழைவாயில் பயன்படுத்தப்பட்டது.

இரண்டாம் அக்பர் ஆட்சிகாலத்தில் செங்கோட்டையை பார்வையிட வந்த பிஷப் ஹீபர், "நான் பார்த்ததிலேயே சிறந்த நுழைவாயில் மற்றும் நடைக்கூடம் இதுதான்" என்று இதனை குறிப்பிட்டுள்ளார்.

ஔரங்சிப் காலகட்டத்தின் போது (1658-1707), அனைத்து பிரதான நுழைவுவாயில்களுக்கு முன்பும் 10.5 மீட்டர் உயரம் கொண்ட பாதுகாப்பு அரண்கள் அமைக்கப்பட்டன.

கோட்டையை மணமகளாக்கி, அந்த முகத்திற்கு முக்காடு அணிந்திருக்கிறாய் என்று ஆக்ராவில் சிறையில் இருந்த ஷாஜகான், தன் மகன் ஔரங்சிப்பிற்கு, இந்த பாதுகாப்பு அரண்கள் அமைக்கப்பட்டது குறித்து கடிதம் எழுதியதாக கூறப்படுகிறது.

டெல்லி நுழைவுவாயில்

ஷாஜகானாபாத்தின் தெற்கு வாயிலே இந்த டெல்லி நுழைவாயில். வெள்ளிக்கிழமை தொழுகைகளுக்காக ஜம்மா மசூதிக்கு செல்ல மன்னரால் இது பயன்படுத்தப்பட்டது. ஆனால், 1857க்கு பின், செங்கோட்டையை பிரிட்டன் கைபற்றிய பிறகு இந்த நுழைவாயில் பொதுமக்களுக்கு மூடப்பட்டது.

டெல்லி நுழைவாயிலின் இரு பக்கங்களும் யானைகளின் சிலை அமைந்திருந்தது. ஆனால், ஔரங்கசீப்பின் மத நம்பிக்கைகள்படி, சிலை வைத்திருப்பதை பொறுத்துக் கொள்ள முடியவில்லை என்பதனால் அதனை இடிக்க உத்தரவிட்டார்.

தற்போது அங்கு காணப்படும் யானை சிலைகள், 1903ல் லார்ட் கர்சனால் எழுப்பப்பட்டதாகும்.

சூறையாடப்பட்ட செங்கோட்டை

நாம் வரலாற்றை சற்று திரும்பிப் பார்த்தோமேயானால், செங்கோட்டை பலரால் தொடர்ச்சியாக கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.

யார் கொள்ளையடித்தார்கள்?


1739ஆம் ஆண்டு இரானிய ஆட்சியாளர்களில் ஒருவரான நதிர்ஷா, கோஹினூர் வைரம் பதித்த மயில் சிம்மாசனத்தை இங்கிருந்து கொள்ளையடித்து சென்றார்.

பின்னர் 18ஆம் நூற்றாண்டில், மராத்தியர்களாலும், ரொஹிலாக்களாலும் (உருது மொழி பேசக்கூடியவர்கள்) முகலாய கோட்டை கொள்ளையடிக்கப்பட்டது.

இறுதியாக 1857ஆம் ஆண்டு, கடைசி முகலாய மன்னர் பகதுர் ஷா சஃபரிடம் இருந்து பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள் இந்த இடத்தை தங்கள் கட்டுப்பாட்டில் எடுத்துக்கொண்டனர். பிரிட்டன் படையினரால், செங்கோட்டை கட்டடத்தில் பல மாற்றங்கள் கொண்டுவரப்பட்டது.

அவர்களின் தலைமையகமாக செங்கோட்டை மாற்றப்பட்டது. அங்குள்ள கட்டடங்கள் மற்றும் மாளிகைகள் ராணுவ முகாம்களாக செயல்பட்டன. சமகால ஆவணங்களின்படி, சுமார் 80 சதவீத கோட்டை கட்டடங்கள் இடிக்கப்பட்டு, ராணுவ குடியிருப்புக்காக பயன்படுத்தப்பட்டது.

பிரம்மாண்டமான செங்கோட்டையில் உள்ள மற்ற இடங்களை பற்றி பார்க்கலாம்.

நவுபுத் கானா (இசை மன்றம்)

செங்கோட்டையின் உள்நுழைந்தவுடன் இதனை நீங்கள் பார்க்க முடியும். இதன் மேல் தளம் இசை மன்றமாக இயங்கியது. முக்கிய பிரமுகர்கள் மற்றும் அரச வம்சத்தை சார்ந்தவர்கள் வரும்போது அவர்களை வரவேற்க மேளம் அடித்து இசை இசைக்கப்படும்.

தற்போது இது 'இந்திய போர் நினைவு அருங்காட்சியம்' ஆக மாற்றப்பட்டுள்ளது.

திவான்-இ-அம் (பொது மன்றம்)


திவான்-இ-அம்
திவான்- இ-அம் உடைய சிறப்பம்சம் அதில் இருக்கும் பளிங்கு அரியணையும், பின் சுவரும். 1648, 16 ஏப்ரல் அன்று செங்கோட்டையை ஷாஜகான் திறந்து வைத்தபோது முதல் மன்றத்தை இங்குதான் நடத்தினார்.

இங்கு அமர்ந்தே பொதுமக்களின் புகார்கள் பெறப்பட்டு விசாரிக்கப்பட்டது.

திவான்-இ-கஸ் (சிறப்பு மன்றம்)


திவான்-இ-கஸ்
அழகு நிறைந்த பிரம்மாண்டத்திற்கு பெயர் போனது இந்த கட்டடம். இங்குதான் முக்கிய மற்றும் ரகசிய அரசு விவகாரங்களை அதிகாரிகளுடன் மற்றும் பிற நாட்டு தூதர்களுடன் மன்னர் விவாதிப்பார். இக்கட்டடத்தின் நடுவில் பளிங்கு மேடை ஒன்று இருக்கும். அலங்கரிக்கப்பட்ட அந்த மேடையில்தான் பிரபலமான மயில் அரியணை இருந்தது. 1739ல் இந்த அரியணை பெர்ஸியாவின் நதிர் ஷாவால் எடுத்து செல்லப்பட்டது.

ஹம்மாம் (குளியலறை)

திவான்-இ-கஸ் கட்டடத்தின் வடக்கே இது அமைந்துள்ளது. இதில் மூன்று முக்கிய அறைகள் இருக்கும். ஒன்று குளிர் தண்ணீரில் குளிக்கும் அறை, வெந்நீரில் குளிக்கும் அறை மற்றும் ஆடை மாற்றும் அறை. பளிங்கு கற்கள் மற்றும் மலர் வடிவத்திலான இரண்டாம் ரக ஆபாரண கற்கள் வைத்து இந்த அறைகள் அலங்கரிக்கப்பட்டிருக்கும்.

மோட்டி மஸ்ஜித்


மோட்டி மஸ்ஜித்
மோட்டி மஸ்ஜித் என்பது பளிங்கால் கட்டப்பட்ட சிறிய மசூதியாகும். மன்னர் ஔரங்கசிப்பால் அவரின் தனிப்பட்ட பயன்பாட்டிற்காக கட்டப்பட்டது. அரச குடும்பத்து பெண்களுக்கு இதில் தனி வழி இருந்தது.

கஸ் மகால் (சிறப்பு மாளிகை)

இதுதான் மன்னரின் குடியிருப்பு பகுதி. இதில் மூன்று பகுதிகள் இருக்கும். இதில் ஒரு அறை மன்னர் தனியாக வழிபாடு செய்வதற்கும், நடு அறையானது உறங்குவதற்கும், மூன்றாவது அறையானது ஆடை மாற்றும் அறையாகவும் பயன்படுத்தப்பட்டது. மலர் வடிவிலான ஓவியங்களால் இவை அழகாக அலங்கரிக்கப்பட்டிருக்கும்.

ரங்க் மஹால் (வண்ணமயமான மாளிகை)

இந்த பெரும் கட்டடம் மூத்த அரசிகளுக்காக கட்டப்பட்டது. அழகான வண்ணமயமான உள்அறை அலங்காரங்களால், இது ரங்க் மஹால் என்று அழைக்கப்பட்டது.

மும்தாஜ் மஹால்

முதலில் ஜஹனரா பேகம் மேன்ஷன் என்று அழைக்கப்பட்ட இது, அரச அந்தப்புரத்தின் ஒரு பகுதியாக இருந்தது. தற்போது, முகலாய சகாப்தத்தின் பொருட்களை வைத்திருக்கும் அருங்காட்சியமாக விளங்குகிறது.

பழைய டெல்லியின் இறைச்சலுக்கு இடையே பெரும் சகாப்தத்தின் வரலாற்றை ஏந்தி நிற்கும் செங்கோட்டையின் வரலாற்றை இந்த வார்த்தைகளில் அல்லது ஒரு கட்டுரையில் முழுவதுமாக கூறிவிட முடியாது.

சற்று அமைதியாக நின்று கோட்டையை உயர்ந்து பார்த்தால், இந்திய மன்னர்கள் வாழ்ந்த வாழ்க்கையையும், அனுபவித்த சுகதுக்கங்களையும் நம் கண் முன் பார்க்கலாம்.















Wednesday, 1 August 2018

DELHI GANESH ,TAMIL STAGE /FILM ACTOR BORN 1944 AUGUST 1






DELHI GANESH ,TAMIL STAGE /FILM ACTOR
BORN 1944 AUGUST 1




டெல்லி கணேஷ் திருநெல்வேலியில் பிறந்த மூத்த தமிழ் நடிகர். BORN AUGUST 1 ,1944

இவர் பெரும்பாலும் குணசித்திர வேடங்களில் காணப்படும் ஒரு தமிழ் திரைப்பட நடிகர். கமலஹாசன் உடன் இணைந்து அவர் நடித்த நகைச்சுவைத் திரைப்படங்களில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியவர். அவரது பாத்திரம் நாயகன் மற்றும் மைக்கேல் மதன காமராஜன் திரைப்படங்களில் மிகவும் சிறப்பாக அறியப்பட்டது. அவர் 1976 இல் இருந்து தற்போது வரை 400 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். அவர் தக்ஷிண பாரத நாடக சபா (DBNS) எனப்படும் 'தில்லி' நாடகக் குழுவில் ஒரு உறுப்பினராக இருந்தார். கணேஷ் படங்களில் நடிப்பதற்கு முன் 1964 முதல் 1974 வரை இந்திய உணவு கார்ப்பரேஷன் நிறுவனத்தில் பணியாற்றினார். [1]

டெல்லி கணேஷ் நடித்து வெளியான முதல் திரைப்படம் பட்டினப்பிரவேசம்(1977), தமிழ் திரையுலகுக்கு இவரை அறிமுகம் செய்தவர் இயக்குனர் கே. பாலசந்தர். டெல்லி கணேஷ் நடித்த பெரும்பாலான கதாபாத்திரங்களில் துணை நடிகர் அல்லது நகைச்சுவை நடிகர் வேடங்களே இருந்தது. ஆனால் அவர், அபூர்வ சகோதரர்கள் (கதாபாத்திரம்-பிரான்சிஸ்) போன்ற படங்களில் வில்லனாகவும் நடித்தார். இவரது மிகவும் குறிப்பிடத்தக்க படங்கள் சிந்து பைரவி, நாயகன், மைக்கேல் மதன காமராஜன், ஆஹா மற்றும் தெனாலி.

டெல்லி கணேஷ் ஒரு முக்கியமான தமிழ் வானொலி மற்றும் தொலைக்காட்சித்தொடர் நடிகர். இவர் இதுவரை 8 முக்கிய சின்னத்திரை தொடர்களில் நடித்துள்ளார். சன் டிவியில் ஒளிபரப்பான வசந்தம் மற்றும் கஸ்தூரி போன்ற தொடர்களில் அப்பா வேடங்களில் நடித்தார்

பெற்ற விருதுகள்[தொகு]

முதலமைச்சர் திரு. எம். ஜி. ராமச்சந்திரன் (எம்.ஜி. ஆர்) அவர்களிடம் இருந்து பசி (1979) திரைப்படத்துக்காக "தமிழ்நாடு மாநில அரசு சிறந்த நடிகருக்கான" விருதினைப் பெற்றார்.
டெல்லி கணேஷ் முதலமைச்சர் ஜெ. ஜெயலலிதா அவர்களிடம் இருந்து தமிழ்நாடு மாநில அரசின் 1993 - 1994 ஆம் ஆண்டிற்கான "கலைமாமணி" விருது பெற்றார்.[2]

"சம்பாத்தியமே இல்லாமல் ரூ.3 கோடி போட்டுட்டு ரூ.3 லட்சம் சம்பாதித்தால் என்ன முடிவெடுக்க முடியும்" என்று டெல்லி கணேஷ் தெரிவித்திருக்கிறார்.

டெல்லி கணேஷ் தயாரிப்பில் அவருடைய மகன் மகா, வின்சென்ட் அசோகன், அண்ணாமலை உள்ளிட்ட பலர் நடிப்பில் ஏப்ரல் 22ம் தேதி வெளியான படம் 'என்னுள் ஆயிரம்'. இப்படத்திற்கு போதிய வரவேற்பு கிடைக்கவில்லை.

இந்நிலையில் டெல்லி கணேஷ் தனது படத்திற்கு நிலவிய பிரச்சினை என்ன என்பதை வாட்ஸ்-அப் பேசி நண்பர்களுக்கு பகிர்ந்திருக்கிறார்.

அதில் டெல்லி கணேஷ் பேசியிருப்பது, "’என்னுள் ஆயிரம்’ என்ற படத்தை எடுத்து எப்படியோ ரிலீஸ் பண்ணிட்ட ஒரு தயாரிப்பாளர் நான். ரொம்ப சிரமம். யாருமே மதிக்க மாட்டேங்கறாங்க. ஒரு இந்தி படம், தெலுங்கு படம், ஆங்கில கார்ட்டூன் படம் இதுக்கு எல்லாம் முக்கியத்துவம் கொடுக்கறாங்க. தமிழ் வாழ்க, தமிழன் என்று சொல்லடா தலைநிமிர்ந்து நில்லடா என்றெல்லாம் சொல்றாங்க.. ஆனால் தமிழ்நாட்டில் தமிழ் படத்திற்கு ஒரு ஷோ கொடுக்க மாட்டேங்கறாங்க.

அந்த இந்திப் படத்தையும், ஆங்கில படத்தையும் மதியம் 1 மணிக்கு போட்டால் ஒன்றும் குடிமுழுகி போகப் போறதில்லை.. பார்ப்பார்கள். ஆனால், நம்ம படத்தை மதியம் 1 மணிக்குப் போட்டால் ஒரு பய வரமாட்டேங்கறான். 3 மணி ஷோ இல்லையா சார், 6 மணி ஷோ இல்லையா சார் அப்படினு கேக்கறாங்க. அது ரொம்ப மோசம்.

திருச்சியில் எல்லாம் என் படம் ரிலீஸாகவே இல்லை. கோயம்புத்தூரில் கொடுத்திருக்கும் தியேட்டர் எங்கேயோ ஒரு ஓரத்தில் இருக்கிறது.

திருநெல்வேலியில் ஒரு ஷோ கூட எங்கேயோ ஒரு மூலையில் இருக்கும் தியேட்டரில் கொடுத்தி ருக்கிறார்கள். அதில் ஏ.சி. கூட கிடையாது. 'உங்களுக்காக தான் போனேன் சார்.. இல்லையென்றால் மனுஷன் போக மாட்டான்' என்கிறார்கள்.

ஒன்றரை மணிக்கு வருகிற படங்களுக்கு வாசலில் ப்ளாக்கில் டிக்கெட் விற்கும் பையன் என்ன சொல்கிறான் என்றால் "இதெல்லாம் உப்புமா கம்பெனி என்று சொல்வார்கள்.. நார்மலா" என்கிறான்.

3 கோடி ரூபாய் போட்டு நல்ல தொழில்நுட்ப கலைஞர்களை வைத்து படமெடுத்தால், ஒன்றரை மணிக்கு ரிலீஸானால் உப்புமா கம்பெனி என்று சொல்வார்களாம். யார் சொல்றா.. ப்ளாக்ல டிக்கெட் விற்கிறவன் சொல்றான். எல்லாருக்கும் எல்லாமும் தெரிந்திருக்கிறது. நமக்குத் தான் ஒண்ணும் தெரிய மாட்டங்குது. யாரும் சொல்லவும் மாட்டேன்கறாங்க. என்ன பண்றது.. யார்கிட்ட போய் கேட்கிறது?

தியேட்டர் கிடைக்கல.. 1ம் தேதி வந்தால், ஐயோ வந்திராதீங்க.. 8ம் தேதி வந்தால் நிறைய படம் வருகிறது, பக்கத்திலேயே வந்திராதீங்க. 14ம் தேதி அய்யோ ’தெறி’ வருது.. 22ம் தேதி, ம்ம்ம் பார்க்கலாம். ’தெறி’ எப்படி போனாலும் உங்களுக்கு வரும் கூட்டம் வரும் என்று ஆரம்பித்து, இப்ப, 'நீங்க 29 வந்திருக்க வேண்டும் சார். ஏன் 22 வந்தீங்க?' என்று கேட்கிறார்கள்.

மொத்தத்துலே என்னமோ பைத்தியக்காரன் மாதிரி ஆக்கிடறாங்க. சரி போகட்டும். ஒரு படம் எடுத்து நிறைய கற்றுக் கொண்டேன். இத்தனை வருடங்களில் கற்றுக் கொள்ளாதது எல்லாம் இப்போது கற்றுக் கொண்டேன். நண்பரும் பகை போல் தெரியும், அது நாட்பட நாட்பட புரியும் அப்படிங்கிற பாட்டு தான் ஞாபகத்திற்கு வருகிறது.

எல்லாரும் சேர்ந்து என்ன முடிவெடுக்கணும் என்று தெரியாதபடி, என்ன கொஞ்சம் சம்பாதித்தால் முடிவெடுக்க உட்காரலாம். சம்பாத்தியமே இல்லாமல் 3 கோடி போட்டுட்டு 3 லட்சம் சம்பாதித்தால் என்ன முடிவெடுக்க வருவான். பார்ப்போம். ஆவண செய்வோம்." என்று அந்த ஆடியோ பதிவில் தெரிவித்திருக்கிறார்.
Image may contain: 1 person, smiling