Friday 13 September 2019

DELHI BOMB PLAST 2008 SEPTEMBER 13





DELHI BOMB PLAST 2008 SEPTEMBER 13


1
13 செப்டம்பர் 2008 தில்லி தொடர் குண்டுவெடிப்புகள் 2008 செப்டம்பர் 13ஆம் தேதி மாலை 6:10 மணிக்கு தில்லியில் இடம்பெற்ற ஐந்து தொடர் குண்டுவெடிப்புகளை குறிக்கும். அடுத்தடுத்து இந்த குண்டுகள் வெடித்து 30 பேர் உயிரிழந்தனர். மேலும் 90 பேர் படுகாயம் அடைந்தனர்.

இதே ஆண்டில் ஜெய்ப்பூர், பெங்களூர், மற்றும் அகமதாபாத் ஆகிய நகரங்களில் குண்டுவெடிப்புகள் இடம்பெற்றன. அந்த நிகழ்வுகளை தாங்களே நடத்தியதாக அறிவித்த இந்திய முஜாஹிதீன் அமைப்பு மின்னஞ்சல் மூலமாக பல தொலைக்காட்சி நிறுவனங்களுக்கு தில்லி குண்டுகளையும் ஒருங்கிணைத்தது என்று தெறிவித்துள்ளது.

இதனால் தில்லி தேசிய தலைநகர் வலயம் (இந்தியா), பஞ்சாப், அரியானா மற்றும் இந்தியாவில் பல்வேறு பகுதிகளில் அவசர நிலை ஏற்பட்டது.

தில்லியில் கடந்த 2008-இல் நிகழ்ந்த தொடர் குண்டுவெடிப்பு தொடர்பான வழக்கில் இந்திய முஜாஹிதீன் பயங்கரவாத இயக்கத்தை ஏற்படுத்தியவர்களில் ஒருவரான யாசின் பத்கல் மற்றும் அவரது கூட்டாளிக்கு எதிராக தில்லி நீதிமன்றத்தில் செவ்வாய்க்கிழமை குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டன.
தில்லியில் கடந்த 2008, செப்டம்பர் 13-இல், கரோல் பாக், பாரகம்பா சாலை, கிரேட்டர் கைலாஷ் ஆகிய பகுதிகளில் அடுத்தடுத்து குண்டுகள் வெடித்தன. இதில் 26 பேர் பலியாகினர். 135 பேர் காயமடைந்தனர்.
இந்த குண்டுவெடிப்புகளுக்கு மூளையாக செயல்பட்டதாக இந்திய முஜாஹிதீன் பயங்கரவாத இயக்கத் தலைவர் யாசின் பட்கல், அவரது கூட்டாளி அஸதுல்லா அக்தர் உள்ளிட்டோருக்கு எதிராக காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்தனர்.

இதனிடையே, கடந்த 2013, ஆகஸ்ட் 28-இல் இந்திய - நேபாள எல்லையில் யாசின் பத்கலை தேசிய புலனாய்வு அமைப்பினர் கைது செய்தனர். இதைத் தொடர்ந்து, தில்லி காவல்துறையினர் அவரை காவலில் எடுத்து விசாரணை மேற்கொண்டனர். தற்போது திகார் சிறையில் யாசின் பட்கல் அடைக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில், கிரேட்டர் கைலாஷில் நிகழ்ந்த இரட்டை குண்டுவெடிப்பு தொடர்பான வழக்கில், சட்டவிரோத செயல்கள் தடுப்புச் சட்டம், இந்திய தண்டனையியல் சட்டம், பயங்கரவாதச் சட்டம், வெடிபொருள்கள தடுப்புச் சட்டம் ஆகியவற்றின்கீழ் யாசின் பட்கல் மற்றும் அவரது கூட்டாளி அஸதுல்லா அக்தர் ஆகியோருக்கு எதிரான
குற்றச்சாட்டுகளை, தில்லி கூடுதல் செஷன்ஸ் நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை பதிவு செய்தது. எனினும், இருவர் மீதான குற்றச்சாட்டுகளையும் அவர்களது தரப்பில் ஆஜரான வழக்குரைஞர் மறுத்தார். இதையடுத்து, அடுத்தகட்ட விசாரணையை வரும் 28-ஆம் தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்தார்.

No comments:

Post a Comment