Tuesday 10 September 2019

MANJU WARRIYAR ,MALAYALAM ACTRESS BORN செப்டம்பர் 10, 1978





MANJU WARRIYAR ,MALAYALAM ACTRESS BORN செப்டம்பர் 10, 1978


மஞ்சு வாரியர் (பிறப்பு: செப்டம்பர் 10, 1978) இந்தியத் திரைப்பட நடிகை ஆவார். இவருடைய பூர்விகம் தமிழ்நாட்டிலுள்ள கன்னியாகுமரி மாவட்டம் ஆகும்.இவர் மலையாளத் திரைப்படங்களில் நடித்துள்ளார்.[3]

இவர் சாட்சியம் என்ற மலையாளத் திரைப்படத்தில் நடிக்கத் தொடங்கினார். பின்னர், சல்லாபம், ஈ புழையும் கடந்நு, தூவல் கொட்டாரம், களியாட்டம், கிருஷ்ணகுடியில் ஒரு பிரணயகாலத்து (1997), சம்மர் இன் பெத்லஹேம், உள்ளிட்ட வெற்றித் திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் இந்திய தேசிய திரைப்பட சிறப்பு விருதையும், சிறநத நடிகைக்கான கேரள அரசின் விருதையும், சிறந்த நடிகைக்கான பிலிம்பேர் விருதையும் பெற்றார்.[4] இவர் திலீப் என்ற மலையாள நடிகரை திருமணம் செய்துகொண்ட இவர் 2014 ஆம் ஆண்டு மணமுறிவு பெற்றார்.[5][6][7]

சென்னை: நடிகை மஞ்சு வாரியர் நடிப்பதை பார்த்து தான் பயந்ததாக நடிகர் தனுஷ் தெரிவித்துள்ளார். தனுஷ் - வெற்றிமாறன் கூட்டணி நான்காவது முறையாக இணைந்துள்ள படம் 'அசுரன்'. இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நேற்று மாலை நடந்தது. இதில் தனுஷ், வெற்றிமாறன், மஞ்சு வாரியர் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். விழாவில் பேசிய நடிகர் தனுஷ், நடிகை மஞ்சு வாரியரின் நடிப்பை புகழ்ந்து தள்ளினார். இதுகுறித்து அவர் பேசியதாவது,

நாகேஷ் அறிவுரை "காதல் கொண்டேன் படத்தில் நடித்த போது, மற்றவர்கள் நடிப்பதை பார்த்து வியந்து நாகேஷ் சாரிடம் நிறைய பேசுவேன். எப்படி நடிக்கிறாங்க பாருங்க சார், நானும் அப்படி நடிக்க வேண்டும் என்று மிக ஆர்வமாகச் சொல்லுவேன். எது நடிப்பு அப்போது அவர் , 'டேய் யார் உன் கண் முன்னால் பயங்கரமாக நடிக்கிறார்கள் என்று தெரிகிறதோ அதுதான் சுமாரான நடிப்பு. நடிப்பதே தெரியாமல் நடிப்பதுதான் பெரிய நடிப்பு' என்றார். அப்படிப் பார்த்து பயப்பட வேண்டிய ஒரு நடிகை மஞ்சு வாரியர்.

இயல்பான நடிகை அவர் நடிப்பதே தெரியாது. எப்படி ஒரு கதாபாத்திரமாக நடித்துவிட்டு சட்டென இயல்பாக மாறிவிடுகிறார் என்பதே எனக்குத் தெரியவில்லை. சில முக்கியமான காட்சிகளில் நடித்துவிட்டு என்னால் அந்த கதாபாத்திரத்திலிருந்து சட்டென வெளியே வர முடியாது
ஆச்சர்யம் அப்படியே இருப்பேன். ஆனால் அவர் நடித்து முடித்த அடுத்த நொடியே ஜாலியாக சிரித்துக் கொண்டிருப்பார். எப்படி அவரால் முடிகிறது என்பதே தெரியாது" என ஆச்சர்யம் தெரிவித்துள்ளார் தனுஷ்.

ஹிமாச்சல் பிரதேசத்தில் நடந்த படப்பிடிப்பில் கலந்துகொண்ட நடிகை மஞ்சு வாரியார் அங்கு ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் சிக்கிக்கொண்டதாக அவரது சகோதரர் தகவல் வெளியிட்டதை அடுத்து உடனடியாக களத்தில் இறங்கிய மீட்புக் குழுவினர் மஞ்சு வாரியரையும் மற்றவர்களையும் பத்திரமாக மீட்டனர்.

இயக்குனர் சணல் குமார் சசிதரன் இயக்கும் மலையாள திரைப்படத்தில் நடிகை மஞ்சு வாரியர் நடிக்கிறார். இந்த படப்பிடிப்பு ஹிமாச்சல் பிரதேசம் மணாலியில் இருந்து 80 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள சத்ரா என்ற அழகிய குக்கிராமத்தில் கடந்த இரண்டு வரமாக நடைப்பெற்றது.

தற்சமயம் அங்கு சில நாட்களாக கன மழை பெய்து வருகிறது. அதனால் திரைப்பட குழுவினர் 30 பேர் மற்றும் அந்த கிராமத்து மக்கள் மழையால் தவிக்கிறார்கள்.
வெள்ளத்தில் மஞ்சுவாரியார் நடிகை மஞ்சு வாரியர், இது பற்றி அவரது சகோதரர் மது வாரியரிடம் சேட்டிலைட் போன் மூலம் பேசியுள்ளனர். அவர்கள் அங்கு சிக்கி உள்ளது தெரிய வந்தது. நடிகை மஞ்சு வாரியர் பேசும் பொது, கடும் மழையால் அந்த கிராமத்தில் திரைப்பட குழுவினர் 30 பேர் உள்பட சுமார் 200 பேர் வரை கடுமையாக சிக்கிக்கொண்டு தவித்து வருகிறோம். எங்களுக்கு இன்னும் இரண்டு நாட்களுக்கு மட்டுமே உணவு உள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.

மஞ்சுவாரியாருக்கு உணவு இதனையடுத்து, நடிகை மஞ்சு வாரியரின் சகோதரர் மது வாரியர், மழை வெள்ளத்தில் மாட்டிக்கொண்டுள்ள தன்னுடைய சகோதரி மஞ்சு வாரியார் மற்றும் அவர்களுடன் சேர்ந்து சிக்கிக் கொண்டவர்களுக்கும் உணவும் பிற அத்தியாவசிய பொருட்களும் கொடுக்க வேண்டும் என்று ஹிமாச்சல் பிரதேச அரசிடம் கேட்டுக் கொண்டார்.
மஞ்சுவாரியார் மீட்பு இதனை அடுத்து வெள்ளத்தில் மாட்டிக்கொண்டுள்ள அவர்களை மீட்பதற்கு உடனடி நடவடிக்கையில் மாநில அரசு இறங்கியது. மீட்புப் படையினர் உடனடியாக களத்திற்கு சென்று நேற்று திரைப்படக் குழுவினர் மற்றும் கிராமத்து மக்களை மீட்டனர். இந்த தகவலை ஹிமாச்சல் பிரதேச மாநில முதல்வர் ஜெய்ராம் தாக்கூர் தகவல் தெரிவித்தார்

கடும் மழை ஹிமாசல பிரதேசம், உத்தரகாண்ட், பஞ்சாப், அரியானா போன்ற வடமாநிலங்களில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவால் அந்த மாநிலங்களில் ஆயிரக்கணக்கானோர் பாதிக்கப்பட்டு உள்ளனர். இமாசல பிரதேசத்தில் மழைக்கு இதுவரை 26 பேர் பலியாகி உள்ளனர்.மழை வெள்ளம் இயக்குனர் சணல் குமார் சசிதரன் இயக்கும் மலையாள திரைப்பட படப்பிடிப்பு ஹிமாச்சல் பிரதேசம் மணாலியில் இருந்து 80 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள சத்ரா என்ற அழகிய குக்கிராமத்தில் கடந்த இரண்டு வரமாக நடைபெற்றது. இந்த வெள்ளத்தில் சிக்கிக்கொண்ட மஞ்சுவாரியாரும் படப்பிடிப்பு குழுவினரும் மீட்கப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.



Manju Warrier had almost died while filming Sallapam
Manju made her debut as a leading actress in 1996 with the Malayalam film Sallapam. The movie was a blockbuster and was remade in Telugu as Egire Paavurama.Her portrayal of the character Radha, from a poor family and dreaming of becoming a great singer, was much appreciated by audiences and critics. The movie also featured Manoj K Jayan and Dileep in the lead roles. In a recent TV show Onnum Onnum Moonu, Manju opened up about a scary episode during the shoot of Sallapam.

Manju recalled how, while filming the climax sequence of the movie,  she was nearly killed. 

In the scene, Manju tries to attempt suicide, so she runs towards a fast moving train. Unfortunately, the train was too fast in real life as well, and Manju forgot to move aside on time as she was so involved in her shot. Back then rumours had gone around that Manju was overtaken by some unknown force which propelled her towards her death unknowingly. So much so, that actor Jayan had to slap her to make her come out of her trance. However, in the interview Manju made no mention of this. Instead she described how fate had other plans for her and as luck would have it, actor Manoj K Jayan pulled the actress back in the nick of time and saved her life.Manju Warrier stated that she will always be thankful to Manoj for saving her life.In Manju's professional front, she has bagged several projects one after the other. After being roped in for Mohanlal's villain, C/O Saira Banu, directed by Antony Sony and Kamal’s Aami, Manju will next be seen in Charlie director Martin Prakkat and actor Joju George's upcoming production.

No comments:

Post a Comment