Wednesday, 26 August 2026

HISTORY OF NADARS








.நாடார் இன வரலாறு :

நமது நாடார் இனம் தமிழகத்தின் தொன்மையான இனம். தமிழகத்தில் நாடார் சாணார், கிராமணியார் போன்ற பெயர்களில் கிட்டத்தட்ட ஒன்றரைக்கோடி மக்கள் வாழ்கிறார்கள். இது தவிர கேரளத்தில் நாடார்கள் ஈழவர்கள் போன்ற பெயர்களிலும்,கர்நாடகத்தில் ஈடிகர்கள், பில்லவர்கள், தீயர்கள் என்ற பெயரிலும், மராட்டியத்தில் பண்டாரிகள் என்ற பெயரிலும் இன்னும் பல பெயர்களில் கிட்டத்தட்ட 250 வகை சாதிகளாக இந்தியா முழுவதிலும் சுமார் 10 கோடி நாடார் இன மக்கள் வாழ்கிறார்கள்.

தமிழகத்தைபொறுத்த அளவில் ஏன் இந்தியாவிலேயே மும்பை, சென்னை, போன்ற பெருநகரங்களின் பொருளாதாரத்தையே கட்டுப்படுத்தும்அளவுக்கு வலுவான இனமாக நாம் இருக்கிறோம்.

இவ்வளவு இருந்தும் மற்ற சாதி அரசியல் வாதிகள் நம்மை ஏய்க்கிறார்கள். தமிழகத்திலும் மத்திய அரசிலும் ஒரு மந்திரி கூட பலம்மிக்க நாடான் மந்திரி இல்லை. வலைத்தளத்தை எடுத்துக்கொண்டால் அனைத்து சாதியும் நம் சாதியாரை திட்டுகிறார்கள். ஈழத்தில் இருந்து பனை விளைவிக்க பனையேற அழைத்து வரப்பட்ட சாதிஎன வக்கணை பேசுகிறார்கள். இந்த நிலைமையில் நமது இளம் தலைமுறையினர் மற்ற தெலுங்கனையும், நடிகனையும் பூசை செய்து பால் அபிசேகம் நடத்துவதை விட்டுவிட்டு நமது இனத்தின் வரலாற்றையும் பண்பாட்டையும் அறிந்து கொள்ளும் வகையில் நமது இனத்தின் இளைஞர்களுக்கு வழிகாட்டும் ஒரு அமைப்பு தேவை இதற்காக நமது இளைஞர்கள் இணையத்தில் விளையாடும் நேரத்தில் ஒரு குறிப்பிட்ட நேரத்தை நமக்கு ஒதுக்கி எதிர்காலத்தில் நம் இனத்தின் மானத்தை காக்கும் வகையில் நல்ல கருத்துக்களை பேச இந்த தளத்தை பயன்படுத்தவும் தயவு செய்து நாம் தமிழ் மூவேந்தர்களின் வழிவந்தவர்கள் என்பதை மனதில் கொண்டு எந்த தெலுங்கு நடிகனையும் முன்னிருத்தி அவர்களை வளர விடுவதை தவிருங்கள். எந்த கருத்தாக இருந்தாலும் உடன் தெரிவியுங்கள்.

நாம் மூவேந்தர் பரம்பரையாக இருந்தாலும், பெரும்பாலானவர்கள் பாண்டியர்கள் என்பதாகத்தான் பேசி வருகிறார்கள். அதற்கான காரணம் நமது இன மக்கள் பெரும்பாலும் மதுரைக்கு தெற்கே அடர்த்தியாக இருப்பதுதான். அவர்கள் குடியிருக்கும் பகுதியில் உள்ள உயர்வுதாழ்வு நிலை பற்றி சிந்திப்பதால் அந்த நிலை தவசி முத்து அய்யா சொல்வது போல மற்றவர்களுக்கு பதில் கூற வேண்டாம் என்று வாழா இருந்தால் தொடர்ந்து அவை உண்மை என்று நிரூபணம் ஆவது போல ஆகிவிடும். மற்ற வலைத்தளங்களில் நம்மைப்பற்றி இழிவாக வரும் தகவல்களை தடை செய்ய நம்மால் இயன்ற நடவடிக்கைகளை வன்முறை இன்றி மற்றவர்கள் மனம் கோணாமல் எடுக்க நம் இளைஞர்கள் இப்போது உள்ள விஞ்ஞான அறிவைப்பயன்படுத்தி முயலவேண்டும். அவர்களை வழிநடத்த அய்யா போன்றவர்கள் வரவேண்டும். தொடர்ந்து தொடர்பு கொள்ளுங்கள் நீங்கள் சொல்லும் கருத்துக்களை பார்த்து வருங்காலத்தில் நடவடிக்கை எடுப்போம் பணி நேரத்தில் வரும் இடைவெளி நேரத்தை இதற்காக பயன்படுத்துவோம்.

நமது மூதாதையர்கள் ஈழத்தில் இருந்து பனை விதைகளை கொண்டு வந்து பனையேற வந்தவர்கள் என நம்மை பனங்காட்டுக்குள் விரட்டிய தெலுங்கனுக்கு வால்பிடித்த திருடர் கூட்டம் எழுதி வருகிறது பனை மரமே இந்தியாவில் அதற்கு முன் இருந்தது இல்லை என்பது போல பேசி வருகிறார்கள். கால்டு வெல்லும் எட்கர் தட்சனும் அவர்கள் கொழும்பு வழியாக இந்தியா வந்தவர்கள் வடமாநிலங்களை காஷ்மீர் வரை சென்று அறியாதவர்கள் அவர்கள் மகாபாரத சத்திரிய குல சிங்கம் பெருந்தலைவர் காமராஜரின் வடிவம் பீஷ்மர் பற்றி அறிவார்களா? அவர் தனது கொடியில் கொண்டு இருந்ததே பனைமரம்தானே? இது போன்ற வரலாற்று இதிகாச ஆய்வுகளை எல்லாம் விளக்கமாக சொல்லி நம் இன பெருமைகளை காப்பாற்ற வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. இரண்டு வெள்ளைக்காரன் சொல்வது தான் சரி என்று சொல்லும் கொள்ளைக்காரர்களுக்கு வெள்ளைக்காரன் செய்தது போல இன்னும் போலீஸ் நிலைய வாசலில் படுக்கவைத்து குற்றப்பரம்பரை என்று முத்திரை குத்தினாலும் புத்தி வராது. இதை எல்லாம் நாம் நமது இளைஞர்களுக்கு எடுத்துச்சொல்ல வேண்டும் இதற்கு நம் சொந்தங்கள் மனமுவந்து தங்களால் ஆன பணிகளை செய்ய வேண்டும்.

நாடார்கள் ஈழத்தில் இருந்து வந்தவர்கள் என்பது முற்றிலும் தவறான கருத்து.

நாயக்க மன்னர்களால் அடித்து விரட்டப்பட்டவர்கள். அவர்களின் கொடுமை தாங்காமல் நாடார்கள் பட்ட அவலம் கொஞ்ச நஞ்சமல்ல. ஒரு நாட்டை வெல்லும் அரச வம்சம் தோல்வியடைந்தவர்களை என்ன செய்யும் என்பதை நாம் தற்போதைய ஈழத்தில் நடக்கும் சம்பவங்களில் இருந்தே புரிந்து கொள்ளலாம்.

சகோதர சண்டையால் பாண்டியர்கள் விஜயநகர அரசர்களை இங்கு இழுத்து வந்து அவர்களால் அடிமைப்படுத்தப்பட்டனர். தெலுங்கர்களாகிய உங்களை நாங்கள் ஏற்க மாட்டோம் என்று விடுதலை வேட்கையால் மறுத்த பாண்டியர்களும் அவர்கள் ஆதரவாளர்களான நாடார்களும் அவர்கள் இருந்த நிலையை விட்டு கீழாக்கப்பட்டனர். அவர்களிடம் யாரும் எந்த தொடர்பும் வைக்கக்கூடாது என்று அடக்கி ஒடுக்கப்பட்டனர். தெலுங்கர்களை ஆதரித்த தமிழர்களுக்கு பட்டங்கள் வழங்கப்பட்டன.

அவர்கள் பாளையக்காரர்கள் ஆக்கப்பட்டனர். அவர்களுடன் மற்ற தெலுங்கு பாளையங்களும் இணைந்து நாயக்கர் ஆட்சியில் மலர்ச்சியுற்றன. நாடார் இனம் ஓட ஓட விரட்டப்பட்டது. அவர்களிடம் சமாதானம் செய்து தெலுங்கர்களை சகித்துக்கொண்ட தமிழ் சாதிகளை அவர்கள் வசதிக்கேற்ப சேனாதிபதிகளாகவோ, மந்திரிகளாகவோ, ஊழியர்களாகவோ வைத்துக்கொண்டனர். மற்ற அனைவரையும் அடித்து விரட்டினர். தற்போது எப்படி ஈழத்தில் கருணா கும்பலுக்கு வாழ்வு கிடைத்ததோ அப்படி தமிழகத்தில் தெலுங்கர்களை ஆதரித்த தமிழர்கள் நல்வாழ்வு பெற்றனர். மக்களாட்சி நிகழும் காலத்திலேயே இவ்வளவு கொடுமைகள் என்றால் அந்த காலத்தை சிந்தித்துப்பாருங்கள்.

கொற்கை மண்டலத்தில் இருந்த நாடார் கிராமங்கள் அனைத்தும் சிதறடிக்கப்பட்டன.

நில உடைமையாளர்களாக இருந்தவர்கள் நிலங்கள் அனைத்தும் ஆற்றுப்பாசன நிலங்கள் அனைத்தும் பறிக்கப்பட்டு அவர்கள் தேரி வனாந்திரத்துக்குள் துரத்தியடிக்கப்பட்டனர். அவர்களின் செந்தூர் கோவிலும் மற்ற கோவில்களும் பறித்துக்கொள்ளப்பட்டு அவர்கள் நுழைய கட்டியிருந்த மேற்கு வாசல் அடைக்கப்பட்டது. அவர்களின் நல்ல நிலங்கள் அனைத்தும் தெலுங்கர்களுக்கும் அவர்களை ஆதரித்த மற்ற சாதியினருக்கும் வழங்கப்பட்டன. அவர்கள் முருகனுக்கு கோவில் கட்டி வழிபட்டு வந்தது எல்லாவற்றையும் மறைத்து அது அய்யன் கோவில் என வழிபடும் நிலைக்கு தள்ளப்பட்டனர்.

குரும்பூர் நாட்டில் இந்த கொடுமை அதிகம் இருந்தது. கட்டபொம்மன் என்ற தெலுங்கு கொள்ளையன் ஆட்சியில் ஆங்கிலேயர்கள் வசம் இருந்த ஸ்ரீவைகுண்டம், ஆழ்வார் திருநகரி, திருச்செந்தூர் தாலுகாக்கள் கொள்ளையடிக்கப்பட்டன. அங்கு உள்ள நாடார்கள் மட்டும் இல்லாமல் தெலுங்கர்களை ஆதரித்த தமிழ் சாதிகளை கூட அவர்கள் விட்டு வைக்கவில்லை. திருவைகுண்டத்தில் 12 மறவர்களை கொலை செய்து நெற்களஞ்சியத்தை கொள்ளையிட்டனர்.

குரும்பூரை ஆண்ட நாடார்கள் அனைவரும் காட்டுக்குள் விரட்டப்பட்டனர். சுண்டங்கோட்டை, மேலப்புதுக்குடி ஊரைச்சேர்ந்தவர்கள் குரும்பூரில் இருந்து விரட்டப்பட்டவர்கதான். அவர்கள் கோவிலான ஆதிநாராயண பெருமாள் கோவிலில் நுழைய அவர்கள் தடுக்கப்பட்டனர்.

காயாமொழி ஆதித்தர்களுடன் கட்டபொம்மன் போர் செய்தான். திருச்செந்தூர் கோவில் அர்ச்சகர்கள் சமாதானம் செய்துவைத்தனர். நட்டாத்தி ஜமீன்தார் மட்டும் கட்டபொம்மனுடன் சமரசம் செய்து கொண்டதால் அவரை விட்டு விட்டு மற்ற அனைத்து நாடார் ஊர்களையும் தெலுங்கர்கள் தங்கள் வசப்படுத்திக்கொண்டனர். இதன் காரணமாக நாடார்கள் நட்டாத்தியர்களை தங்கள் சாதியில் இருந்தே புறக்கணிக்கும் நிலை வந்தது.

இவ்வளவு கொடுமைகள் நடந்ததால் பலர் நாடார்கள் என்ற பெயரை மறைத்து வேறு சாதி பெயரைக்கூட சொன்னதாக வரலாறு உண்டு 5 வருடம் ஆட்சி மாறும் போதே அடுத்த கட்சி ஆட்சியை தாங்க முடியாமல் கரை வேட்டியை மாற்றி கட்டும் இந்த காலத்தில் 800 வருடங்களாக நாடார்கள் பட்ட அவலத்தை சிந்தித்துப்பாருங்கள். இப்படிப்பட்ட சூழ்நிலையில் நாடார்கள் ஈழத்துக்கு செல்ல வாய்ப்பு இருந்து இருக்கலாம். மற்றபடி பனைவிதையை எடுத் து இங்கு வந்தார்கள் என்ற தகவல் ஆங்கில அதிகாரிகளின் அறைகுறை ஆராய்ச்சி முடிவாகும். சாதாரணமாக சிந்தித்துப்பார்த்தாலே புரியும் ஒரு பனை வளர்ந்து பலன் தர குறைந்தது 20 வருடம் ஆகும் யாராவது அதுவரை பனையை வளர்த்து அதன் பலனில் மட்டுமே காலம் கழிக்க முடியுமா? அவர்கள் சோற்றுக்கு எதை தின்பார்கள்? ஏற்கனவே தேரிக்காட்டுக்குள் இயற்கையாக இருந்த பனைமரங்களைத்தான் அவர்கள் பயன்படுத்தி இருக்க வேண்டும். அல்லது முன்பு அங்கு இருந்த சமூகத்தினருடன் சேர்ந்து தெலுங்கர்களுக்கு பயந்து ஒளிந்து வாழ்ந்து கொண்டு தாங்களும் பனையேறி என்று வாழ்ந்து இருக்க வேண்டும். இதுதான் நடந்தது.

பனை இந்தியாவில் 10 ஆயிரம் வரலாறு கொண்ட மரம்.

மகாபாரத்தில் வரும் பீஷ்மர் சிறந்த நீதிமான் பெருந்தலைவர் காமராஜரைப்போல அவரும் திருமணம் ஆகாமல் நாட்டுக்காக உழைத்தவர் அவருடைய கொடியில் இருந்த சின்னம் பனைமரம், இந்திய பட்டாளத்தின் மதராஸ் ரெஜிமென்டின் ஒரு படைப்பிரிவு பல்மேரா அதன் சின்னம் தங்கப்பனை, சேர மன்னர்களின் மாலை பனம்பூமாலை .

இப்படி பல்வேறு புகழ்களுடன் நாடார்குல சின்னமாக விளங்கும் பனையை ஏதோ இலங்கையில் இருந்துதான் இந்தியாவுக்கு கொண்டு வந்து கொட்டை போட்டு முளைக்கவைத்தனர் என்ற வீண் கற்பனையை 2 ஆங்கில மடையர்கள் எழுதினார்கள் என்பதற்காக
இந்தியாவில் தெலுங்கர்கள் வருகைக்கு முன்பு பனையே இல்லை என்று தமிழர்கள் நினைத்து விடக்கூடாது.

நாடார்களின் மீது தெலுங்கர்கள் கட்டவிழ்த்து விட்ட அடக்கு முறைக்கு இன்னும் ஏராளமான தகவல்கள் உள்ளன தேவைப்பட்டால் தருகிறோம்.

சான்றோர் என்ற குலப்பெயர் கொண்ட நாம் அதை குணத்திலும் கொள்ள வேண்டும். சிலர் நாடார்களை தாழ்த்தப்பட்டவர்கள்,தீண்டத்தகாதவர்கள் என விமர்சித்து வருகிறார்கள். அதை நாம் காதில் போட்டு கொள்ள வேண்டாம். அவர்களுக்கு பதில் சொல்வதன் அவர்கள் குணத்தை நாம் பெறுகிறோம் , நாம் சான்றோர் என்ற தன்மைய இழக்கிறோம். உண்மையான சான்றோர் என்பவன் ஒழுக்கத்தில் சிறந்தவனாக , உழைப்பினை உயிர் மூச்சாய் கொண்டவனாக, நீதியை கடைபிடிப்பவனாக இருக்க வேண்டும் என்பதே என் கருத்து. அதையே நாம் என்றும் இனி கடைபிடிப்போம்.

உழைப்பே உயர்வு தாய் தந்தை சொல்லை கேளுங்கள்.

நன்றி

வரண்டியவேலன்





ஒடுக்கப்பட்ட நாடர்கள்

கேரள மாநிலத்தின் பெரும் பகுதியும் தமிழ்நாட்டின் தென்மாவட்டங்களான கன்னியாகுமரி, திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களின் சில பகுதிகள் திருவாங்கூர் சமசுதானத்தின் கீழ் மன்னராட்சியின் கட்டுப்பாட்டில் இருந்தது. அப்போது இந்து நாடாக இருந்தது. அந்த காலகட்டத்தில் சாதீயக் கொடுமைகளால் மக்கள் அதிக அடக்குமுறைக்கு ஆளாகினர். இந்த திருவிதாங்கூர் நாட்டால் தாழ்த்தப்பட்டவர்கள் என்று ஒதுக்கி வைக்கப்பட்ட சாணார்[பனையேறி நாடார்], பரவர், ஈழவர், முக்குவர், புலையர் உள்ளிட்ட 18 சாதியைச் சேர்ந்த பெண்கள் மேலாடை அணிவதற்குத் தடை விதிக்கப்பட்டிருந்தது. நாடான் என்ற பட்டங்களுக்குரிய நிலக்கிழார் நாடார்களும் இப்பகுதியில் இருந்தனர். இவர்கள் உயர்சாதிகாரர்கள் போல் உயர்வான நிலைமையில் இருந்தனர். நாடான் பெண்கள் மேலாடை அணிந்து கொள்ள முழு உருமை இருந்தது.[1]. இவர்கள் மார்பகத்தை திறந்து போடுவதுதான் உயர் சாதியினருக்குத் தரும் மரியாதை என்று தரம் தாழ்ந்த எண்ணத்தில் திருவாங்கூர் நாடு ஒரு நடைமுறையை வகுத்திருந்தது. இதன்படி 18 சாதிகளைச் சேர்ந்த பெண்கள் மேலாடை அணியாமல் அவமதிப்புடன் வாழ்ந்து வந்தனர். இந்த அடக்குமுறையை எதிர்த்து சீர்திருத்த கிறித்தவத்தை ஏற்றுக்கொண்ட சாணார்(நாடார்) சாதியைச்சேர்ந்த மக்கள் தங்கள் சாதிப் பெண்களுக்கு மார்பை மறைத்து சேலை அணிய உரிமை கோரிப் போராடத் தொடங்கினர். இது தோள் சீலைப் போராட்டம் எனப்பட்டது. 37 ஆண்டு போராட்டத்துக்குப் பிறகு திருவிதாங்கூர் அரசு நாடார் கிருத்தவ பெண்களுக்கு தோள் சீலை அணியவும், மார்பகங்களை மறைக்கவும் உரிமை அளித்தது.
திருவிதாங்கூர் என்ற இந்து மன்னர் நாட்டில் பத்தொன்பதாம் நூற்றாண்டு முடிவு வரை நிலைத்து இருந்த சமுதாய கோட்பாடுகளை இவர்கள் ஆய்ந்தறிந்தால் மட்டுமே இங்கே உயர் இந்துக்கள் என்று தாங்களாகவே வகுத்துக் கொண்ட நம்பூதிரிப் பிராமணர்களும், நாயர் தறவாட்டுக்காரர்களும், வெள்ளாளப் பண்ணைகளும் இழிவு அல்லது தாழ்ந்த இந்துக்களின் மேல் அடித்தேற்றியிருந்த சமூகச் சீர்கேடுகளை அறிந்து கொள்வதற்கு இயன்றிருக்கும். தீண்டாமை, காணாமை, நடவாமை போன்ற கோட்பாடுகள் ஆழமாக பதிந்திருந்த நாடு இந்தியாவில் திருவிதாங்கூர் மட்டும் தான் என்பதை இவர்கள் உணர வேண்டும். “சாணார்(நாடார்) அல்லது ஈழவ இனத்தைச் சார்ந்த ஒருவன் பிராமனிடமிருந்து 36 அடி தொலைவிற்கப்பாலும், நாயரிடமிருந்து 12 அடி தூரத்திற்கப்பாலுமே நிற்க முடியும். புலையர் இனத்தைச் சார்ந்த ஒருவனுக்கும், பார்ப்பனுக்குமிடையே இருக்க வேண்டிய குறைந்த அளவு தொலைவு 96 அடியாகும். புலையன் ஒருவன் நாயர் இனத்தைச் சேர்ந்தவனிடமிருந்து 60 அடி அகன்று நிற்க வேண்டும். நாயடி அல்லது புலையன் ஒருவனை ஒரு பார்ப்பனன் பார்க்க நேரிட்டால் அவன் தீட்டுப்பட்டவனாகக் கருதப்படுவான். இங்ஙனம் தீட்டுப்பட்டவன் ஆற்றிலோ, குளத்திலோ மூழ்கி நீராடி தன்னைச் துப்புறவுச் செய்துக்கொள்ள வேண்டும்”. [2] வருணாசிரமக் கொடுமைகள் நிறைந்திருந்த திருவிதாங்கூர் என்ற “தெய்வத்தின்றே” நாட்டில் தாழ்த்தப்பட்ட மக்கள் தங்களது மார்பகத்தை மறைத்து, மானமாக வாழ்ந்திருக்க முடியுமா? என்று சற்று சிந்தித்துப் பார்க்க வேண்டும். இந்த நிலை தென் தாலுகாக்களான அகத்தீசுவரம், தோவாளை, கல்குளம், விளவங்கோடு, நெய்யாற்றின்கரை போன்ற தாலுகாக்களில் நிலையில் இருந்தது என்பது உண்மை. 

மேலாடை அல்லது தோள் சீலை
திருவிதாங்கூரில் “மேலாடை”, அல்லது “Upper cloth” என்பதை மலையாளிகள் “மேல்முண்டு” என்றே அழைக்கின்றனர். நாயர் பெண்கள் இன்றும் இந்த மேல் முண்டை சில சமயச் சடங்குகள் மற்றும் திருமணச் சடங்குகளில் கடைபிடித்து வருகின்றனர். நாடான் என்ற பட்டங்களுக்குரிய நிலக்கிழார் நாடார்களும் இப்பகுதியில் இருந்தனர். இவர்கள் உயர்சாதியார்களைப் போல் உயர்வான நிலைமையில் இருந்தனர். நாடான் பெண்கள் மேலாடை அணிந்து கொள்ள முழு உருமை இருந்தது.[4]. இவர்கள் சாதாரணமாக மூன்று முண்டுகளை பயன்படுத்துகின்றனர். ‘உடுமுண்டு’ அதாவது உடுத்திக் கொள்ளுகின்ற முண்டு (வேட்டி – ஒற்றை அல்லது இரட்டை), மார்பு துண்டு, அதாவது மார்பகங்களை மறைக்கின்ற கச்சை போன்ற வேட்டி, அதற்கும் மேலாக தோளோடு தோளில் இட்டு மறைக்கின்ற “மேல்முண்டு” அதாவது மேலடை போன்ற வேட்டித்துண்டுகளாகும். நம்பூரிப் பெண்கள் பொதுவாக மார்புமுண்டு அணியாமல், மேல்முண்டால் மார்பகங்களை இலைமறைவு காய்மறைவாக போர்த்திக் கொள்வர். இதை சித்தரிக்கின்ற வகையில் வரலாற்றாசியர் சங்கை எ.எசு.சாமுவேல் மேற்றீற் அவர்களின் தர்மபூமி (Land of charity) 1870-யில் பக்கம் 30-ல் படம் ஒன்று தந்துள்ளார். இதுதான் “தோள்சீலை”யே (மேல்முண்டு) தவிர ‘தோள் சேலை அல்ல’. பெண்களின் சேலை[புடவை] (Saree) முந்தாணை அல்ல தோள்சீலை என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். திருவிதாங்கூர் நாட்டு அரசிகளே கூட இந்த மேல்முண்டை (தோள் சீலை) அணிவது இல்லை. இதை திருவிதாங்கூர் வரலாற்றை விரிவாக எழுதின நாகம் ஐயாவின் முதல் பாகத்தில் பக்கம் 520-ல் காணலாம். தவிரவும் இவருக்கு முன்பு (1878-ல்) திருவிதாங்கூர் வரலாற்றை அதன் தொன்மைக்காலம் தொட்டு எழுதிய திரு.பி.சங்குண்ணிமேனன் கூட அரசி கவுரிலெட்சுமிபாய் (பக்கம் – 362) மற்றும் அரசி பார்வதிபாய் (பக்கம் – 383) மற்றும் இளவரசு உருக்குமணிபாய் (பக்கம் – 389) போன்றோர்களின் ஆடை அலங்காரமும், கீழ்முண்டு, மார்பு முண்டு, மேல்முண்டு (Upper Cloth) என்றுதான் காணப்படுகின்றது. இந்த முறைதான் உயர் சாதி இந்துக்கள் அன்று அணிந்து வந்த ஆடை அலங்காரம். இந்த முறையில் இழிவு சாதி இந்துக்களும், மதம் மாறின கிறுத்ததியியர்களும், ஆடை அணிக்கூடாது என்பது மரபு ஆகும்.
போராட்டத்திற்கான காரணம்
ஏழாம், எட்டாம் நூற்றாண்டுகளில் ஜன்மி சம்பிரதாயமும், 10 மற்றும் 11 ம் நூற்றான்டுகளில் ஆரியப் பார்ப்பனர்களும் (நம்பூதிரிகள்) ஆதிக்கம் சேர நாட்டில் ஓங்கத் தொடங்கிய வேளையில் சாதிக் கட்டுப்பாடுகள் உருவெடுத்தன. 12 ம் நூற்றாண்டில் இந்தக் கட்டுப்பாடுகள் ஜென்மி சம்பிரதாயத்தின் உத்வேகத்தால் அதிகரித்து, மேல் சாதி இந்து என்றும், கீழ் சாதி இந்து என்றும் பாகுபாடுகள் உருவாகி காணாமை, நடவாமை, தொடாமை போன்ற சமுதாய முறைகள் உருவாகிற்று. இந்த தீமைகளில் ஒரு பிரிவு தான் தாழ்த்தப்பட்ட மக்கள் இடுப்புக்கு மேலும், முட்டுக்கு கீழும் ஆடை அணியக்கூடாது என்றக் கட்டுப்பாடு. உயர்ந்த சாதி இந்துக்களின் முன்பு தாழ்த்தப்பட்ட பெண்கள் மறைக்கப்படாத மார்பகங்களுடன்தான் மரியாதை செலுத்த வேண்டும். சான்றாக நம்பூதிரிகளின் முன்பு சூத்திர நாயர் பெண்கள் மார்பகங்களை மறைக்க கூடாது, அதே போன்று சாதி வரிசையின் அடிப்படையில் கீழ் சாதி இந்து பெண்கள் அனைவரும் மார்பகங்களை மறைக்காமல் நடமாட வேண்டும் என்பது மரபாகிவிட்டது. இந்த உடைக் கட்டுப்பாட்டை மீறினால் மரணத் தண்டனை விதிக்கப்பட்டது.
உடை கட்டுபாடு
திருவிதாங்கூர் நாட்டால் தாழ்த்தப்பட்டவர்கள் என்று ஒதுக்கி வைக்கப்பட்ட மக்கள் தங்கள் இடுப்பிற்கு மேல் உடை அணிய மறுக்கப் பட்டனர். கலாச்சாரம் என்ற போர்வையில் பெண்களுக்கும் இது திணிக்கப்பட்டது. உயர் சாதி பெண்கள் தங்கள் மார்பை மறைக்க அனுமதி அளிக்கப் பட்டது என்றாலும் நம்பூதிரிப் பிரானணர்கள் முன்பு அனைத்துச் சாதிப் பெண்களும் திறந்த மார்புடனே நிற்க வேண்டும் என்ற ஈனக் கட்டுப்பாடு இருந்தது. இந்த உடை கட்டுப்பாடுகள் மிக கடுமையாக கடைபிடிக்கப் பட்டன. உடை அணியும் விதத்தை வைத்தே மக்களை உயர்ந்தவர்களாகவும் தாழ்ந்தவர்களாகவும் அடையாளப்படுத்தப்பட்டார்கள். கொத்தனாவிளை என்ற ஊரில் 1822ம் ஆண்டு ஒரு சிறிய போராட்டம் நடைப்பெற்றது. அதன் பிறகு 37 வருட காலம் இப் பேராட்டம் மூன்று கட்டங்களாக நடைபெற்றது. முதல் கட்ட போராட்டம் 1822 முதல் 1823 வரையும், இரண்டாம் கட்டப் போராட்டம் 1827 முதல் 1829 வரையும், மூன்றாம் கட்டப் போராட்டம் 1858 முதல் 1859 வரையும் நடைப்பெற்றது.
முத்துக்குட்டி சாமியார் பங்கு
முத்துக்குட்டி சாமியார் 1808-ம் ஆண்டு மார்ச் மாதம் 2-ம் தேதி (கொல்லமாண்டு மாசி மாதம் 20-ம் நாள்) பிறந்தார். இவரது தாய் தந்தையர் திருநெல்வேலி மாவட்டம், இடையன்குடியிலிருந்து பனைத்தொழில் செய்து பிழைப்புக்காக திருவிதாங்கூர் வந்தனர். வாலிப பருவத்தில் இவர் பனைத்தொழிலையே செய்தார். எனவே எஸ். இராமச்சந்திரன் சித்தாந்தத்தின்படி இவர் நாடான் அல்லது சத்திரியன் ஆக முடியாது் இவர் சாணான் ஆகவே முடியும். இவர் நோய்வாய்ப்பட்டு, திருச்செந்தூர் முருகன் சன்னிதானத்திற்கு தரிசனத்துக்காகத் தூக்கிச் சென்ற வேளையில், 1833 ஆம் ஆண்டு, தனது 25-ம் வயதில் விஞ்சைப் பெற்று ஊர் திரும்பினார். அதனைத் தொடர்ந்து சுவாமிகள் தவ வாழ்க்கை மேற்கொண்டு 1834 ஆம் ஆண்டில் தனது சமயத் தொண்டைத் தொடங்கினார். இதற்கும் நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு, அதாவது 1838 முதற்கொண்டு அருளாசிகள் வழங்கத் தொடங்கி புகழ் அடைந்தார். இவரது கொள்கையான “ஏக கடவுள், ஏகச் சமயம், ஒரே சாதி” என்ற கோட்பாட்டால் சாணார் மக்கள் அனேகர் ஈர்க்கப்பட்டு இந்து சமயத்தைவிட்டு இப்புதிய சமயத்தைத் தழுவினர். 1851 ஆம் ஆண்டு தனது 43 அகவையில் உலக வாழ்க்கையை முடித்துக் கொண்டார். இவரது பூத உடல் பூவண்டர்தோப்பு என்ற சாமித்தோப்பில் சமணமுறை போன்று உட்கார்ந்த நிலையில் அடக்கம் செய்யப்பட்டு, அதன்மேல் தலைமைப்பதி நிறுவப்பட்டுள்ளது.
இவரது மக்கள் தொண்டு 1838-ல் தான் தொடங்கப்பட்டது. ஆனால் தோள்சீலைப் போராட்டம் 1822-ல் தொடங்கப்பட்டுவிட்டது. அதன் இரண்டாவது கட்டப் பேராட்டம் கூட 1829-ல் தொடங்கப்பட்டது. அதாவது சாமியார் மக்கள் தொண்டு தொடங்குவதற்கு முன்பே, (1838-ல்) ஒன்பது ஆண்டுகளுக்கு முன்பே கலகத்தின் இரண்டாவது நிலை எட்டிவிட்டது. எனவே பெண்கள் தோள்சீலை (Upper Cloth) அணிவதில் இவருக்கு எந்தவித பங்களிப்பும் இருப்பதற்கு வாய்ப்பு இல்லை என்பதை உறுதியாகக் கூறலாம். தோள்சீலைப் போராட்டம் முழு வெற்றி பெற்றது 1859-ல் ஆகும். இதற்கும் எட்டு ஆண்டுகளுக்கு முன்பே சாமியார் காலமாகிவிட்டார்கள். அந்த வகையிலும் அவருக்கு பங்கு எடுத்துக் கொள்ள இயலவில்லை. அவரது ஆயுட் காலத்தில் சில குறுகிய காலகட்டங்களில் தோள்சீலைப் போராட்டம் நடந்தது என்பது உண்மை. இப்போராட்டங்களை கிறிஸ்தவ மிஷனறிமார்கள் முன்னின்று நடத்தினார்களேத் தவிர, முத்துக்குட்டிசாமிகள் முன்னின்று, குறைந்தபட்சம் அவரது கொள்கைகளை ஏற்றுக் கொண்டவர்களிடத்தில் கூட விரிவாகச் செய்யவில்லை.
பூமகள் நிதமுடன் போட்ட
தோள்சீலை தன்னைப் போடாதே என்றடித்தானே சிவனே அய்யா

என்று இறைவனிடம் ஆவலாதி கூறுகிறாரேத் தவிர, அடித்த உயர்சாதியானனைப் பார்த்து “ஏய் நீ ஏன் எங்கள் பெண்ணை அடிக்கிறாய், அடித்தால் உன் கையை நான் உடைப்பேன்” என்றாவது கூறி இவர் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. தவிரவும் பெண்களை அழைத்து “ஏ, கண்மணிகளா சேலையைக் கட்டிக் கொண்டும், ரவிக்கையை அணிந்து கொண்டும் தைரியமாக நடமாடுங்கள், அதனால் என்ன வந்தாலும் நான் பார்த்துக் கொள்கிறேன்” என்று பெண்களுக்கு இவர் ஊக்கமளித்ததாகக்கூட அகிலத்தில் குறிப்பு உண்டா?
முதல் போராட்டம்


சார்ல்சு மீட்
சீர்திருத்தக் கிறித்தவ சமயத் தொண்டரான மீட் பாதிரியார் [6] கிறித்தவ பெண்களின் மார்பகங்களை மறைக்க வேண்டும் என்று அறிவுறுத்தினார்.இதனால் கிறித்தவ பெண்கள் தங்கள் மார்பகங்களை துணிந்து மறைத்ததுமல்லாமல், அதற்கு மேல் ஒரு மேலாடையையும் பயன்படுத்தினர். இதனால் மேல் சாதியினர் கலவரம் செய்தனர். மே மாதம் 1822ம் வருடம் கல்குளம் மற்றும் இரணியல் பகுதிகளில் கலவரம் வெடித்தது. இதன் காரணமாக மீட் ஐயர் என்ற ஐரோப்பிய மறைப்பணியாளர் ஆங்கிலேய தளபதிகார்னல் நேவால் என்பவருக்கு இச் சம்பவங்களைப் பற்றி விரிவாக கடிதம் எழுதினார். இதன் பயனாக ஆங்கிலேய தளபதி கார்னல் நேவால் பத்மநாபபுரம் நீதிமன்ற விசாரனைக்கு உத்தரவிடுகிறார். இதன் பயனாக 1823 ம் ஆண்டு வெளியிடப்பட்ட நீதிமன்ற உத்தரவுப் படி சீர்திருத்தக் கிறித்தவர்களுக்கு மட்டும் குப்பாயம் என்ற உடையை அணியலாம் என்று தீர்ப்ளிக்கப் படுகிறது.
இரண்டாம் கட்ட போராட்டம்
மிக அதிகமாக பாதிக்கப் பட்ட இடங்களான ஆத்தூர், திற்பரப்பு, கண்ணனூர், அருமனை,உடையார்விளை,புலிப்புனம் ஆகிய இடங்களில் மீண்டும் 1827 ம் ஆண்டு போராட்டம் வெடித்தது. 1823 ம் ஆண்டு வெளியிடப்பட்ட அரசாணை ஒரு நிரந்தரமான தீர்வை அளிக்கத் தவறியது. இந்த ஆணையின் அடிப்படையில் கிறித்தவப் பெண்கள் உயர்சாதிப் பெண்கள் அணிவது போன்ற ஆடைகள் அணியக்கூடாது என்று தடை விதிக்கப் பட்டது. இதனால் கிறித்தவ நாடார் பெண்களிடம் அதிருப்தி ஓங்கியது. கிறித்தவ நாடார் பெண்கள் தங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்ட குப்பாயம் என்ற மேலாடையை விட ஐரோப்பிய மறைப்பணியாளர்கள் மற்றும் உயர் சாதி பெண்கள் அணியும் உடைகளை அணிய ஆரம்பித்தனர். இவர்களைப் பின்பற்றி இந்து நாடார் பெண்களும் மேலாடை அணிய ஆரம்பித்தனர். இவர்களுக்கு போன்றோர் மிகவும் உறுதுணையாக இருந்தனர். இதற்கு ஆட்சியில் இருந்த நாயர்கள் எதிர்பு தெரிவித்தனர். விக்டோரியா மகராணியின் பிரகடனத்தையடுத்து தோள் சீலைப் போராட்டம் தீவிரமடைந்தது. விக்டோரியா மகராணியின் பிரகடனம்
'one soceity or Government should not interfere into the religious regulations or social restrictions of other society. Government servants should not intervene and discriminate anybody in the customary affairs that is being followed in the respective soceities. The violators of this order would be punished'[7]

இந்த பிரகடனம் நவம்பர் 1, 1858 ம் ஆண்டு இங்கிலாந்து பாராளுமன்றத்தில் இந்தியாவை ஆங்கிலேய கிழக்கு இந்திய கம்பெனியிடமிருந்து அரசாங்க கட்டுப்பாட்டில் கொண்டு வரும் போது ஆற்றிய உரை. இதை எதிர்த்து கிறித்தவ மறைப் பணியாளர்கள் ஆங்கிலேய அரசிடம் முறையிட்டனர். நெய்யாற்றின்கரையில் தொடங்கியப் போராட்டம் பாறசாலை, நெய்யூர் போன்ற ஊர்களுக்கும் பரவியது. பல இடங்களில் தெருக்களிலும், சந்தைகளிலும் பெண்கள் தாக்கப்பட்டனர். பெண்களின் மேலாடைகள் கிழித்து எறியப்பட்டன. ஆண்கள் தங்கள் உயிருக்கு பயந்து பல இடங்களில் ஒளிந்து வாழ்ந்து வந்தனர். பெண்கள் மற்றும் குழந்தைகள் ஐரோப்பிய மறைபரப்பாளர்களின் பங்களாக்களில் ஒளிந்து தங்கள் உயிரைக் காப்பாற்றிக் கொண்டனர். டிசம்பர் 30, 1859 ம் நாள் கோட்டாறுப் பகுதியில் வைத்து கிறித்தவ நாடார்களுக்கும் உயர் சாதி நாயர்களுக்கும் இடையே மிகப் பெரிய சண்டை மூண்டது. இந்து நாடார்களும் கிறித்தவர்களுடன் இதில் கைகோர்த்து கொண்டனர்.
உடை உடுத்த உரிமை
1829-ம் ஆண்டு பிப்ரவரி 3-ம் நாள் திருவிதாங்கூர் அரசு வெளியிட்ட நீட்டில் (அரசு ஆணையில்) இந்து மதத்தில் நீடிக்கின்ற சாணார் பெண்டிர், கிறிஸ்தவ மதத்திற்கு மாறிய சாணார் பெண்டிர் போன்று குப்பாயம் அணியலாம் என்று கூறப்படவில்லை. இந்த உத்தரவுப்படி இந்து சமயத்தில் நீடித்த சாணார் பெண்களுக்கு தங்களது மார்பகங்களை மறைப்பதற்கு உரிமை வழங்கவில்லை என்பது வெட்ட வெளிச்சம். இதனால் கிறிஸ்தவர்களுக்கு கிடைக்கப் பெற்ற உரிமையும் பறிபோயிற்று. சுருக்கமாகக் கூறின்
“… As it is not reasonable on the part of the Shanar women to wear cloths over their breasts, such custom being prohibited, they are required to abstain in future from covering the upper part of their body. An order (circular) had been issued on the 7th Edavam 989, to all places prohibiting the Shanar women of the families of such Sanars as may have embraced Christianity from wearing cloths, over their breasts, and requiring them to substitute for these the Kuppayam (a kind of short bodice used by their Christians and by Mohamadan native females) but with regard to their (the Shanars) allegation as an authority for wearing clothes over their breasts, that a decree has been passed subsequently by a law court, permitting the Shanar women on the contrary the use of clothes on the upper part of their body. Such a decision since if it be admitted as establishing a rule, it would be a direct contravention of the order alluded to, cannot but be considered as invalid. Therefore the order referred to is hereby republished to be held as a document (or authority) in their respect”
[8].

மிஷனறிகள் அல்ல குப்பாயத்தை வடிவமைத்தது. அவர்களின் மனைவிகளே இதை உருவாக்கி கையால் தைத்துக் கொடுத்தனர். இதை உருவாக்கிக் கொடுப்பதற்கான காரணத்தை அவர்கள் கூறும் பொழுது
“… that the Shanars and such other castes women, as have embraced Christianity ought to wear an upper cloth for the sake of decency when they go to church, the fairs, markets and similar places, and they were instructed to do so and that it ought to be ordered agreeably to Christianity...” No doubt at this fag end of the nineteenth century it passes strange a government should make restrictions and laws as to the domestic economy and dress of individuals; but the Travancore Govt. was so unenlightened in those days that it made such indecent restrictions regarding the dress of inferior women”. [9].
இதற்கான அரசாணை 26, சூலைத் 1859 ம் ஆண்டு வெளியிடப்பட்டது. ஆனால் உயர் சாதி பெண்கள் அணிவது போன்ற ஆடை அணிய தடை விதிக்கப்பட்டது. இந்த உரிமை மற்ற கீழ் சாதியினருக்கு அரசு வழங்கவில்லை. எனினும் கிறித்தவப் பெண்கள் அனைவரும் மேலாடை அணிந்தனர்.
மூன்றாம் கட்ட போராட்டம்
இதனால்தான் மீண்டும் போராட்டம் தொடர்ந்தது. இப்பேராட்டத்தை மிஷனறிகள் பொறுப்பேற்று நடத்தினர். ஆனால் இப்போராட்டத்தைப் பூனூல் அணிந்த சத்திரிய நாடார்கள் எதிர்த்தனர். ஆனாலும் சாணார் கிறிஸ்தவர்கள் சற்றும் சளைக்காமல் நாயர்களை எதிர்த்துப் போராடி 1859-ல் வெற்றிவாகை சூடினர். “அதன் பயனாக 1859 ஆம் ஆண்டு ஜுலை 26-ம் நாள் அதிகாரபூர்வ அரசு அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டது. அனைத்து சமயத்தைச் சேர்ந்த நாடார் பெண்களும், கிறிஸ்தவப் பெண்களைப் போன்று குப்பாமிட்டுக் கொள்ளவோ, மீனவப் பெண்களைப் போன்று கட்டிச் (Coarse) சீலை உடுத்திக் கொள்ளவோ செய்யலாம் என்றும், ஆனால் உயர் சாதிப் பெண்கள் (நாயர், நம்பூதிரிகள், வெள்ளாளர்கள்) மேலாடை அணிவது போன்று அணியாமல் வேறு எவ்விதத்திலாவது மார்பை மறைத்துக் கொள்வதற்கு எந்தவிதத் தடையும் இல்லை என அந்த அறிக்கை தெரிவித்தது”. [10] இந்த நீட்டுப்படித்தான் இந்து சமயத்தில் நீடித்த சாணார் பெண்களுக்கும் புனூல் பூண்ட நாடார் பெண்களுக்கும் சேர்த்து குப்பாயம் அணியும் உரிமை கிடைத்தது. ஆயினும் இவ்வுரிமை தாழ்ந்த சாதிப் பெண்களுக்குக் கிடைக்கவில்லை. தாழ்த்தப்பட்ட பிற சமுதாயத்தினருக்கு இவ்வறிப்பால் உரிமை கிடைக்கவில்லை. எனவே இந்த ஆணையைக் கண்டித்து மிஷனறிகள் ஆங்கில அரசிடம் மீண்டும் மேல்முறையீடு செய்தனர். சென்னை மாகாண ஆளூனர் சார்லஸ்ட்ரெவிலின் திருவிதாங்கூருக்கான ஆங்கிலப் பிரதிநிதி மால்ட்பியை நேரடியாக அழைத்துப் பேசினார். திருவிதாங்கூரில் பெண்கள் உடை அணிவதில் இருக்கின்ற எல்லா கட்டுப்பாடுகளையும் நீக்க ஆங்கிலப் பிரதிநிதி மகாராஜாவிடம் தன்னுடைய செல்வாக்கைப் பயன்படுத்த வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். மால்ட்பி இதனைக் குறித்து மகாராசாவிடம் (ஆயில்லியம் திருநாள் ராமவர்மா – 1860 – 1080) பேசினார். ஆங்கில அரசின் உணர்ச்சிகளுக்கு மதிப்பளிக்காவிட்டால் ஆங்கில அரசுடனான தங்களது உறவு பாதிக்கப்படும் என்றுணர்ந்த மகாராஜா 1865-ம் ஆண்டு மற்றோரு அறிவிப்பு வெளியிட்டார். இதன் மூலம் இந்து கிறிஸ்தவ நாடார் பெண்களுக்கு மேலாடை அணிவதற்குக் கொடுக்கப்பட்ட உரிமை அனைத்து சாதியைச் சேர்ந்த பெண்களுக்கும் கொடுக்கப்பட்டது. ஆனால் நாயர் பெண்களைப் போன்று ஆடை அணியும் உரிமை மட்டும் அனைவருக்கும் மறுக்கப்பட்டிருந்தது”. [11]


உடை உடுத்த உரிமை வழங்கிய அரசாணை
ரவிக்கை அணிவதற்கான உரிமையை கர்னல் மன்றோ (Resident) 1813-ல் வழங்கப்பட்டு கிறிஸ்தவப் பெண்கள் அன்று முதல் பகிரங்கமாக அணிந்து கொண்டனர்.
இப் போராட்டத்திம் விளைவாகவும் ஆங்கிலேயர்களின் நெருக்கடியின் காரணமாகவும் திருவிதாங்கூர் அரசரும், திவானும் அனைத்து நாடார் பெண்களும் மத வேறுபாடு இல்லாமல் குப்பாயம் என்கின்ற மேலாடை அணியலாம் என்று உரிமை அளித்தனர்.
தாலி அறுத்தான் சந்தை சம்பவம்
போராட்டத்தின் போது குப்பாயம் அணிந்த தாழ்த்தப்பட்டவர்களது ஆடைகள் கிழிக்கப்பட்டு தனியாகத் தொங்கவிடப்பட்டன. சில இடங்களில் அவற்றிற்குத் தீ வைக்கப்பட்டன. பெண்களின் மேலாடைகளை கிழிப்பதற்காக உயர் சாதியினர், ஒரு சிறிய அரிவாளை, நீண்ட கழியின் முனையில் கட்டிப் பயன்படுத்தினார்கள். அதை தொரட்டி என்று திருநெல்வேலி, தஞ்சை மாவட்டங்களிலும் தோட்டை என்று கன்னியாகுமரி மாவட்டத்திலும் குறிப்பிடுகிறார்கள். தாழ்த்தப்பட்ட பெண்களின் அருகே சென்றால் தீட்டு என்ற காரணத்தால் இக்கருவியை பயன்படுத்தினார்கள்.ஒரு முறை சந்தைக்குக் குப்பாயம் அணிந்து வந்த ஒரு பெண்ணின் மேலாடையைக் கிழிக்கப் பயன்படுத்தப்பட்ட தொரட்டி அவரது தாலிக் கயிற்றையும் அறுத்துக் கொண்டு வந்து விட்டது. அன்றிலிருந்து அந்த சந்தைக்குத் தாலி அறுத்தான் சந்தை என்ற பெயர் ஏற்பட்டது. இன்றும் கன்னியாகுமரி மாவட்டத்திலிருக்கும் இச்சந்தை தாலி அறுத்தான் சந்தை என்ற பெயரிலேயே வழங்கப்படுகிறது.[12]
இரண்டாம் கட்ட போராட்டம்
மிக அதிகமாக பாதிக்கப் பட்ட இடங்களான ஆத்தூர், திற்பரப்பு, கண்ணனூர், அருமனை,உடையார்விளை,புலிப்புனம் ஆகிய இடங்களில் மீண்டும் 1827 ம் ஆண்டு போராட்டம் வெடித்தது. 1823 ம் ஆண்டு வெளியிடப்பட்ட அரசாணை ஒரு நிரந்தரமான தீர்வை அளிக்கத் தவறியது. இந்த ஆணையின் அடிப்படையில் கிறித்தவப் பெண்கள் உயர்சாதிப் பெண்கள் அணிவது போன்ற ஆடைகள் அணியக்கூடாது என்று தடை விதிக்கப் பட்டது. இதனால் கிறித்தவ நாடார் பெண்களிடம் அதிருப்தி ஓங்கியது. கிறித்தவ நாடார் பெண்கள் தங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்ட குப்பாயம் என்ற மேலாடையை விட ஐரோப்பிய மறைப்பணியாளர்கள் மற்றும் உயர் சாதி பெண்கள் அணியும் உடைகளை அணிய ஆரம்பித்தனர். இவர்களைப் பின்பற்றி இந்து நாடார் பெண்களும் மேலாடை அணிய ஆரம்பித்தனர். இவர்களுக்கு போன்றோர் மிகவும் உறுதுணையாக இருந்தனர். இதற்கு ஆட்சியில் இருந்த நாயர்கள் எதிர்பு தெரிவித்தனர். விக்டோரியா மகராணியின் பிரகடனத்தையடுத்து தோள் சீலைப் போராட்டம் தீவிரமடைந்தது. விக்டோரியா மகராணியின் பிரகடனம்
'one soceity or Government should not interfere into the religious regulations or social restrictions of other society. Government servants should not intervene and discriminate anybody in the customary affairs that is being followed in the respective soceities. The violators of this order would be punished'[7]

இந்த பிரகடனம் நவம்பர் 1, 1858 ம் ஆண்டு இங்கிலாந்து பாராளுமன்றத்தில் இந்தியாவை ஆங்கிலேய கிழக்கு இந்திய கம்பெனியிடமிருந்து அரசாங்க கட்டுப்பாட்டில் கொண்டு வரும் போது ஆற்றிய உரை. இதை எதிர்த்து கிறித்தவ மறைப் பணியாளர்கள் ஆங்கிலேய அரசிடம் முறையிட்டனர். நெய்யாற்றின்கரையில் தொடங்கியப் போராட்டம் பாறசாலை, நெய்யூர் போன்ற ஊர்களுக்கும் பரவியது. பல இடங்களில் தெருக்களிலும், சந்தைகளிலும் பெண்கள் தாக்கப்பட்டனர். பெண்களின் மேலாடைகள் கிழித்து எறியப்பட்டன. ஆண்கள் தங்கள் உயிருக்கு பயந்து பல இடங்களில் ஒளிந்து வாழ்ந்து வந்தனர். பெண்கள் மற்றும் குழந்தைகள் ஐரோப்பிய மறைபரப்பாளர்களின் பங்களாக்களில் ஒளிந்து தங்கள் உயிரைக் காப்பாற்றிக் கொண்டனர். டிசம்பர் 30, 1859 ம் நாள் கோட்டாறுப் பகுதியில் வைத்து கிறித்தவ நாடார்களுக்கும் உயர் சாதி நாயர்களுக்கும் இடையே மிகப் பெரிய சண்டை மூண்டது. இந்து நாடார்களும் கிறித்தவர்களுடன் இதில் கைகோர்த்து கொண்டனர்.
உடை உடுத்த உரிமை
1829-ம் ஆண்டு பிப்ரவரி 3-ம் நாள் திருவிதாங்கூர் அரசு வெளியிட்ட நீட்டில் (அரசு ஆணையில்) இந்து மதத்தில் நீடிக்கின்ற சாணார் பெண்டிர், கிறிஸ்தவ மதத்திற்கு மாறிய சாணார் பெண்டிர் போன்று குப்பாயம் அணியலாம் என்று கூறப்படவில்லை. இந்த உத்தரவுப்படி இந்து சமயத்தில் நீடித்த சாணார் பெண்களுக்கு தங்களது மார்பகங்களை மறைப்பதற்கு உரிமை வழங்கவில்லை என்பது வெட்ட வெளிச்சம். இதனால் கிறிஸ்தவர்களுக்கு கிடைக்கப் பெற்ற உரிமையும் பறிபோயிற்று. சுருக்கமாகக் கூறின்
“… As it is not reasonable on the part of the Shanar women to wear cloths over their breasts, such custom being prohibited, they are required to abstain in future from covering the upper part of their body. An order (circular) had been issued on the 7th Edavam 989, to all places prohibiting the Shanar women of the families of such Sanars as may have embraced Christianity from wearing cloths, over their breasts, and requiring them to substitute for these the Kuppayam (a kind of short bodice used by their Christians and by Mohamadan native females) but with regard to their (the Shanars) allegation as an authority for wearing clothes over their breasts, that a decree has been passed subsequently by a law court, permitting the Shanar women on the contrary the use of clothes on the upper part of their body. Such a decision since if it be admitted as establishing a rule, it would be a direct contravention of the order alluded to, cannot but be considered as invalid. Therefore the order referred to is hereby republished to be held as a document (or authority) in their respect”
[8].

மிஷனறிகள் அல்ல குப்பாயத்தை வடிவமைத்தது. அவர்களின் மனைவிகளே இதை உருவாக்கி கையால் தைத்துக் கொடுத்தனர். இதை உருவாக்கிக் கொடுப்பதற்கான காரணத்தை அவர்கள் கூறும் பொழுது
“… that the Shanars and such other castes women, as have embraced Christianity ought to wear an upper cloth for the sake of decency when they go to church, the fairs, markets and similar places, and they were instructed to do so and that it ought to be ordered agreeably to Christianity...” No doubt at this fag end of the nineteenth century it passes strange a government should make restrictions and laws as to the domestic economy and dress of individuals; but the Travancore Govt. was so unenlightened in those days that it made such indecent restrictions regarding the dress of inferior women”. [9].
இதற்கான அரசாணை 26, சூலைத் 1859 ம் ஆண்டு வெளியிடப்பட்டது. ஆனால் உயர் சாதி பெண்கள் அணிவது போன்ற ஆடை அணிய தடை விதிக்கப்பட்டது. இந்த உரிமை மற்ற கீழ் சாதியினருக்கு அரசு வழங்கவில்லை. எனினும் கிறித்தவப் பெண்கள் அனைவரும் மேலாடை அணிந்தனர்.
மூன்றாம் கட்ட போராட்டம்
இதனால்தான் மீண்டும் போராட்டம் தொடர்ந்தது. இப்பேராட்டத்தை மிஷனறிகள் பொறுப்பேற்று நடத்தினர். ஆனால் இப்போராட்டத்தைப் பூனூல் அணிந்த சத்திரிய நாடார்கள் எதிர்த்தனர். ஆனாலும் சாணார் கிறிஸ்தவர்கள் சற்றும் சளைக்காமல் நாயர்களை எதிர்த்துப் போராடி 1859-ல் வெற்றிவாகை சூடினர். “அதன் பயனாக 1859 ஆம் ஆண்டு ஜுலை 26-ம் நாள் அதிகாரபூர்வ அரசு அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டது. அனைத்து சமயத்தைச் சேர்ந்த நாடார் பெண்களும், கிறிஸ்தவப் பெண்களைப் போன்று குப்பாமிட்டுக் கொள்ளவோ, மீனவப் பெண்களைப் போன்று கட்டிச் (Coarse) சீலை உடுத்திக் கொள்ளவோ செய்யலாம் என்றும், ஆனால் உயர் சாதிப் பெண்கள் (நாயர், நம்பூதிரிகள், வெள்ளாளர்கள்) மேலாடை அணிவது போன்று அணியாமல் வேறு எவ்விதத்திலாவது மார்பை மறைத்துக் கொள்வதற்கு எந்தவிதத் தடையும் இல்லை என அந்த அறிக்கை தெரிவித்தது”. [10] இந்த நீட்டுப்படித்தான் இந்து சமயத்தில் நீடித்த சாணார் பெண்களுக்கும் புனூல் பூண்ட நாடார் பெண்களுக்கும் சேர்த்து குப்பாயம் அணியும் உரிமை கிடைத்தது. ஆயினும் இவ்வுரிமை தாழ்ந்த சாதிப் பெண்களுக்குக் கிடைக்கவில்லை. தாழ்த்தப்பட்ட பிற சமுதாயத்தினருக்கு இவ்வறிப்பால் உரிமை கிடைக்கவில்லை. எனவே இந்த ஆணையைக் கண்டித்து மிஷனறிகள் ஆங்கில அரசிடம் மீண்டும் மேல்முறையீடு செய்தனர். சென்னை மாகாண ஆளூனர் சார்லஸ்ட்ரெவிலின் திருவிதாங்கூருக்கான ஆங்கிலப் பிரதிநிதி மால்ட்பியை நேரடியாக அழைத்துப் பேசினார். திருவிதாங்கூரில் பெண்கள் உடை அணிவதில் இருக்கின்ற எல்லா கட்டுப்பாடுகளையும் நீக்க ஆங்கிலப் பிரதிநிதி மகாராஜாவிடம் தன்னுடைய செல்வாக்கைப் பயன்படுத்த வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். மால்ட்பி இதனைக் குறித்து மகாராசாவிடம் (ஆயில்லியம் திருநாள் ராமவர்மா – 1860 – 1080) பேசினார். ஆங்கில அரசின் உணர்ச்சிகளுக்கு மதிப்பளிக்காவிட்டால் ஆங்கில அரசுடனான தங்களது உறவு பாதிக்கப்படும் என்றுணர்ந்த மகாராஜா 1865-ம் ஆண்டு மற்றோரு அறிவிப்பு வெளியிட்டார். இதன் மூலம் இந்து கிறிஸ்தவ நாடார் பெண்களுக்கு மேலாடை அணிவதற்குக் கொடுக்கப்பட்ட உரிமை அனைத்து சாதியைச் சேர்ந்த பெண்களுக்கும் கொடுக்கப்பட்டது. ஆனால் நாயர் பெண்களைப் போன்று ஆடை அணியும் உரிமை மட்டும் அனைவருக்கும் மறுக்கப்பட்டிருந்தது”. [11]


உடை உடுத்த உரிமை வழங்கிய அரசாணை
ரவிக்கை அணிவதற்கான உரிமையை கர்னல் மன்றோ (Resident) 1813-ல் வழங்கப்பட்டு கிறிஸ்தவப் பெண்கள் அன்று முதல் பகிரங்கமாக அணிந்து கொண்டனர்.
இப் போராட்டத்திம் விளைவாகவும் ஆங்கிலேயர்களின் நெருக்கடியின் காரணமாகவும் திருவிதாங்கூர் அரசரும், திவானும் அனைத்து நாடார் பெண்களும் மத வேறுபாடு இல்லாமல் குப்பாயம் என்கின்ற மேலாடை அணியலாம் என்று உரிமை அளித்தனர்.
தாலி அறுத்தான் சந்தை சம்பவம்
போராட்டத்தின் போது குப்பாயம் அணிந்த தாழ்த்தப்பட்டவர்களது ஆடைகள் கிழிக்கப்பட்டு தனியாகத் தொங்கவிடப்பட்டன. சில இடங்களில் அவற்றிற்குத் தீ வைக்கப்பட்டன. பெண்களின் மேலாடைகளை கிழிப்பதற்காக உயர் சாதியினர், ஒரு சிறிய அரிவாளை, நீண்ட கழியின் முனையில் கட்டிப் பயன்படுத்தினார்கள். அதை தொரட்டி என்று திருநெல்வேலி, தஞ்சை மாவட்டங்களிலும் தோட்டை என்று கன்னியாகுமரி மாவட்டத்திலும் குறிப்பிடுகிறார்கள். தாழ்த்தப்பட்ட பெண்களின் அருகே சென்றால் தீட்டு என்ற காரணத்தால் இக்கருவியை பயன்படுத்தினார்கள்.ஒரு முறை சந்தைக்குக் குப்பாயம் அணிந்து வந்த ஒரு பெண்ணின் மேலாடையைக் கிழிக்கப் பயன்படுத்தப்பட்ட தொரட்டி அவரது தாலிக் கயிற்றையும் அறுத்துக் கொண்டு வந்து விட்டது. அன்றிலிருந்து அந்த சந்தைக்குத் தாலி அறுத்தான் சந்தை என்ற பெயர் ஏற்பட்டது. இன்றும் கன்னியாகுமரி மாவட்டத்திலிருக்கும் இச்சந்தை தாலி அறுத்தான் சந்தை என்ற பெயரிலேயே வழங்கப்படுகிறது.[12]
சி.பி.எஸ்.இ. பாடதிட்டத்திட்ட சர்ச்சை கருத்துக்கள்
மத்திய இடைநிலைக் கல்வி வாரிய (சி.பி.எஸ்.இ) பாடத்திட்டத்தின் கீழ் வெளியிடபட்டுள்ள 9ம் வகுப்புக்கான சமூக அறிவியல் பாடப் புத்தகத்தின் 168வது பக்கத்தில் காலணி ஆதிக்க இந்தியாவில் ஏற்பட்ட மாற்றங்கள் என்ற தலைப்பிலான பாடத்தில் நாடார் சமுதாயத்தை இழிவு படுத்தும் வகையில் சில கருத்துக்கள் இடம் பெற்றுள்ளதாகவும் அது உடனே நீக்க வேண்டும் என்றும் தமிழகத்தை சேர்ந்த திமுக, மதிமுக, பமக, சமக ஆகிய கட்சிகள் கூறி வருகின்றன. இப்பாட திட்டத்தை ஜானகி நாயர் என்பவர் தயாரித்துள்ளார். அவர்கள் நீக்குவதற்கு முன் வைக்கும் முக்கிய காரணங்கள்.
சாதி மற்றும் மோதலும், ஆடை மாற்றமும் என்ற குறுந்தலைப்பின் கீழ் இடம் பெற்றுள்ள பத்தியில், ஆங்கிலேயர் ஆட்சியில் தெற்கு திருவிதாங்கூர் என்றழைக்கபட்ட குமரி மாவட்டத்தின் பூர்வக்குடி மக்கள் நாயர்கள் தான் என்றும், நாடார் சமுதாயம் அங்கு பிழைப்பு தேடி இடம் பெயர்ந்து வந்தது என்றும் தவறாக குறிப்பிடபட்டிருக்கிறது. தமிழர் நாகரீகத்தின் ஓர் அங்கமாக இந்து கடலில் மூழ்கிய குமரிக்கண்டத்தின் ஒருபகுதி தான் கன்னியாக்குமரி மாவட்டம் மாகும். நாடர்கள் தான் அம்மாவட்டத்தின் பூர்வகுடிமக்கள் ஆவர். அவ்வாறு இருக்கும்போது அவர்களை பிழைப்பு தேடி வந்தவர்கள் என்றும், பிழைப்பு தேடி வந்த மலையாள நாயர்களை பூர்வகுடிமக்கள் என்றும் பாடநூலில் குறிப்பிடபட்டிருக்கிறது.
நாடார்களை சாணார்கள் என்று அழைக்கும் வழக்கம் வெகுகாலத்திற்கு முன்பே ஒழிந்துவிட்ட நிலையில், இந்த பாடத்தின் அனைத்து இடங்களிலும் நாடார் சமுதாயத்தினரை சாணார்கள் என்று குறிப்பிட்டிருப்பது அவர்களை இழிவுபடுத்தும் செயலாகும்.
நாடார் சமுதாயப் பெண்கள் மேலாடை அணியத் தடை விதிக்கப் பட்டிருந்ததை எதிர்த்து, கிறித்தவ மறைபரப்பு பணியாளர்களின் துணை கொண்டு நடத்திய போராட்டங்கள் மட்டுமே முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளது. 1836ம் ஆண்டிலிருந்து அய்யா வைகுந்தர் அவர்கள் நடத்திய போராட்டங்களை பற்றிய குறிப்புகளை பாட புத்தகத்தில் சேர்க்கவில்லை.
Posted by Nadar singam at 06:30 No comments: 
Email This
BlogThis!
Share to Twitter
Share to Facebook
Share to Pinterest
Saturday, 14 September 2013
மரமேறி தாண்டி வந்த நாடார்கள்
திருநெல்வேலி என்றால் சமீபத்தில் வருமானவ்ரித்துறை நடத்திய இருட்டுக்கடை அல்வா வரைக்கும் உங்கள் நினைவில் வந்து போகும் ஆனால் இந்த திருநெல்வேலியின் உண்மையான அர்த்தம் 'புகழ்மிகும் நெல்லின் வேலி'.
இந்தப்பகுதி தொடக்கத்தில் ஆங்கிலேயர்களின் நிர்வாகத்தில் அகண்ட இராமநாதபுரம் மாவட்டத்திற்குள் இருந்ததால் இந்தப்பகுதி மக்களை முதலில் பார்த்துவிடலாம்.


சோழநாட்டிலுள்ள காவேரிப்குதி, மதுரை, தென் திருவாங்கூர் ஆகிய பகுதிகளில் இந்த நாடார் இன மக்கள் உருவானதாக கூறப்படுகிறது. ஈழத்து வரலாற்றில் தென்னிந்திய கடற்கரையோரப் பகுதிகளில் வாழ்ந்து கொண்டிருந்தவர்கள் எளிதாக புலம் பெயர்ந்து ஈழத்தை நோக்கி நகரத் தொடங்கினர்.  ஆனால் 'உள்ளே வெளியே' என்பதாக ஈழத்துக்குள் சென்றவர்களும் திரும்பவும் இங்கேயே வந்தவர்களும் உண்டு.  அது போல ஈழத்தில் வடக்கு கடற்கரையோரத்தில் வாழ்ந்து வந்தவர்களின் ஒரு பகுதியினர் தான் இவர்கள் என்றும் கூறப்படுகிறது.  தொடக்கத்தில் சான்றார் என்று அழைக்கப்பட்டு பிறகு சாணார் என்று மருவியது. யாழ்பாணத்தில் இருந்து வந்தவர்கள் இந்த பனைவிதைகளை கொண்டு வந்து இங்கே பனை மரங்களை உருவாக்கினார்கள் என்று நம்புகிறார்கள்.


நெல்லை மற்றும் குமரி மாவட்டத்திற்குள் நுழையும் போதே நம் கண்களுக்கு பனைமரம் ஏராளமாகத் தெரியும்.  கேரளாவைப் போலவே கண்களுக்கு குளிர்ச்சி தரும் பச்சைபசேலுக்குத் தேவையான சீதோஷ்ண நிலை எங்கும் நிலவும். இராமநாத புரத்தை வறப்பட்டிக்காடு என்பது போல மேற்கு தொடர்ச்சி மலையின் கிழக்குப் பகுதியில் உள்ள தென்மாவட்டங்கள் குறிப்பாக நாங்குனேரி, ஸ்ரீவைகுண்டம்,திருச்செந்தூர் போன்றவைகள் வறண்ட பூமியாக கண்ணுக்கு எட்டியவரையில் பொட்டல்காடாகவே தெரியும்.  
மக்கள் வசிப்பதற்கு தகுதியற்றதாக, கருங்கற்கள் நிறைந்த, செம்மண் நிறைய மொத்தத்தில் பனைமரங்கள் வளர்வதற்கு ஏற்ற பூமியாக இருக்கிறது. இந்த பகுதியில் உள்ள பூமியில் ஆழத்தில் சிவந்த களிமண் இருந்த போதிலும் மேல்மட்டத்தில் உள்ள தளர்ச்சியான மணல் ஒவ்வொரு காற்று வீசும் பருவத்திலும். தென் மேற்கு சுழற்சி காற்றால் கிழக்கு நோக்கி நகர்த்தப்படுகின்றது. இந்த காற்றும், நகரும் மணல் துகள்களும் மக்களுக்கு ஒவ்வொரு சமயத்திலும் ஏராளமான பிரச்சனைகளை உருவாக்குகின்றது. காலப்போக்கில் வயல்வெளிகள், கிராமங்கள் கூட அமிழ்ந்து போயுள்ளன.  இது போன்ற பூமியில் தான் இங்கு நாம் பார்க்கப்போகும் நாடார்களின் வாழ்க்கை அமைந்திருந்தது.
இந்தியாவில் உள்ள மொத்த சாதிகள் உருவான கதைக்கு ஆயிரத்தெட்டு புராண இதிகாச சம்பவங்களைக் கூறினால் இந்த சாதி என்ற மூலக்கூறு இன்று வரைக்கும் வளர்ந்து கொண்டு இருப்பதற்கு இரண்டு முக்கிய காரணங்கள் உண்டு.  பொருளாதாரம் மற்றும் அவரவர் செய்து கொண்டிருந்த தொழிலை அடிப்படையாக வைத்து தான் இந்த சாதி ஒவ்வொரு காலகட்டத்திலும் விடாப்பிடியாக நகர்ந்து கொண்டு வந்தது.  நாடார் என்று ஒரே வார்த்தையில் சொன்னாலும் இதற்குள்ளும் ஏராளமான கிளைநதிகள் உண்டு.  குறிப்பிட்ட சில பிரிவுகளை மட்டும் பார்க்கலாம்,
சுருக்கு பட்டையர்
பனைத் தொழிலை சார்ந்து வாழ்ந்தவர்கள். நாடார் சமூகத்தில் 80 சதவிகிதத்தினர் இந்த சுருக்கு பட்டையராகத் தான் இருக்கின்றனர்.
மேல் நாட்டார்,
தென் திருவாங்கூரிலும், நெல்லை மாவட்டத்தின் மேற்குப் பகுதியிலும் வசிக்கின்றனர். இந்த வகையினர் பெரும்பான்மையாக அம்பாசமுத்திர பகுதியிலும், சொல்லக்கூடிய வகையில் தென்காசி, சங்கரன்கோவில், ஸ்ரீவைகுண்டம்,,நாங்குநேரி போன்ற பகுதிகளிலும் வசிக்கின்றனர்.
நட்டாத்தி
நெல்லை மாவட்டத்தில் சாயர்புரத்திற்கருகில் நட்டாத்தி கிராமத்தைச் சுற்றிலும் இந்த நாடார்கள் அதிகமாக வசிக்கின்றனர். ஆனால் எண்ணிக்கையில் சொற்பமாகவே இருக்கின்றனர். வட்டிக்கு பணம் கொடுப்பது, மற்ற வாணிபம், விவசாயம் போன்றவை இவர்களின் தொழிலாகும். ஆனால் காலப்போக்கில் இந்த வகையில் உள்ளவர்கள் கிறிஸ்துவத்திற்கு மாறிவிட்டனர்.
கொடிக்கால்
வெற்றிலை பயிரிட்டு வாழ்க்கை வாழ்ந்தவர்கள். அம்பாசமுத்திரம், தென்காசி போன்ற இடங்களில் அதிகமாக வாழ்பவர்கள்.


இவர்களின் தொடக்க வாழ்க்கை பாலைவனத்தில் வாழ்பவர்களை விட சற்று மேம்பபட்ட வாழ்க்கை என்பதாகத் தான் தொடங்கியது. இந்த வெப்ப பூமியில் வாழ்ந்து கொண்டு இந்த பனை மரங்களை நம்பியே தங்கள் வாழ்க்கையை வாழ்ந்து இன்று சமூகத்தில் ஜெயித்தும் காட்டியுள்ளனர்.  தென்னிந்தியாவில் சமஸ்கிருதம் ஆட்சி புரிய தொடங்கிய போது வாழ்ந்து கொண்டிருந்த ஒவ்வொரு மன்னர்களும் தங்களின் குலப்பெருமையை மேம்படுத்திக் காட்ட ஒவ்வொருவிதமான புரூடா கதைகளை எடுத்துவிடத் தொடங்கினர். இதன் காரணமாகவே பலருடைய பரம்பரை புண்ணாக்கு கதைகள் இன்று வரைக்கும் நம் மனதில் ஊறிக் கொண்டிருக்கிறது.  இதைப்போலவே நாடர்களின் தொடக்க பாரம்பரிய கதைகளிலும் ஒரு சம்பவத்தை குறிப்பிடுகிறார்கள்.
ஏழு தேவகன்னிகைகள் பூமியில் வந்து குளித்துக் கொண்டிருக்கும் போது இந்திரன் ஒளிந்து இருந்து பார்த்துக் கொண்டிருந்தார்.  இறுதியில் "எல்லாமே" சுபமங்களமாக முடிய ஏழு ஆண் குழந்தைகள் உருவானது.  இந்த குழந்தைகளை பூமியில் விட்டு விட்டு கன்னிகையர்கள் தேவலோகத்திற்கு சென்றுவிட பெண் தெய்வமான பத்ரகாளி இந்த குழந்தையை வளர்த்து வந்தாள். மதுரை நகரில் வைகைநதி பெருக்கெடுத்து ஓட பாண்டிய மன்னர் ஒவ்வொரு வீட்டுக்கும் ஒரு நாள் வந்து கூடையில் மண் சுமந்து வர வேண்டும் என்று உத்திரவிட ஏழு பயபுள்ளைங்களும் "நாங்கள் ஆளப் பிறந்தவர்கள்.  கூடை சுமக்கமாட்டோம்" என்று எதிர்த்து நின்றனர்.  மன்னர் கோபமடைந்து ஏழு பேர்களையும் தலைமட்டும் மண்ணுக்கு வெளியே தெரியும்படி புதைத்து யானையை விட்டு தலையை இடறச் செய்தார். யானை கால் கொண்டு எத்தித்தள்ள முதலாவரின் தலை உருண்ட போது விடாதும் கோஷம் போட்டுக் கொண்டே நகர்ந்தது. இரண்டாவது தலையும் அதே போல் பேச பேசியதைக் கண்ட மன்னன் மற்ற ஐந்து இளைஞர்களை விடுவித்து மரியாதை செய்தான்,


இந்த ஐந்தில் தொடங்கியது தான் நாடார் இனம் என்று கதை திரைக்கதை வசனம் ஒன்று சரித்திரங்களில் இருக்கிறது. ஆனால் பெண்கள் ரவிக்கை போடக்கூடாது,  நாடார் இன மக்கள் ஆலயங்களில் நுழையக்கூடாது போன்ற பல கேவலங்களைத்தாண்டி இன்று இந்த சமூக மக்கள் வந்துள்ள உச்சம் மெச்சத்தகுந்ததே.
Posted by Nadar singam at 05:58 4 comments: 
Email This
BlogThis!
Share to Twitter
Share to Facebook
Share to Pinterest
விருதுநகர் நாடார் வரலாறு
விருதுநகர் வரலாறு:

விருதுநகர் என்றால் வணிகம் என்று பொருள் கொள்ளும் அளவிற்கு புகழ் பெற்றது.

"Virudhunagar Produces Nothing But Controls Everything" என்று சிறப்புடன் கூறப்படுகிறது.
“பொதியை எந்தி வண்டியிடிலே, பொள்ளாச்சி சந்தையிலே

விருதுநகர் வியாபாரிக்குச் செல்லக்கண்ணு – நீயும்

வித்துப் போட்டுப் பணத்தை யெண்ணு செல்லக்கண்ணு”

என்று கவிஞர் மருதகாசி பாடியுள்ளார்.அரசியலில் காமராசரின் பங்கு மகத்தானது. விடுதலைப் போரிலும் பின் தமிழகத்தை உருவாக்குவதிலும் காமராசர் வழிகாட்டியாக இருந்தார். காமராசரின் அட்சி “பொற்காலம்” என்று கூறலாம்.

இலவச ஆங்கில வழிக்கல்வி அனைவருக்கும் வேருபாடின்றி அளித்த முதல் பள்ளி 1889ஆம் ஆண்டு விருதுநகரில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. சீருடையை முதலில் விருதுநகர் பள்ளிகள் தான் கடைபிடித்தன.

மகமை, மற்றும் உறவின்முறை மூலம் பள்ளிகள், கல்லூரிகள் இயக்குவதில் விருதுநகர் புகழ்பெற்றது என்று கூறலாம்.

ஆன்மீகத்தில் ஆலயவழிபாடு மட்டும் அல்லாமல் பல சங்கங்கள் வைத்து வேதம், கீதை புராணங்கள், தேவாரம் என அனைத்தையும் மக்கள் படிக்கும் வண்ணம் செய்வதில் பெருமை வாய்ந்தவர்கள். ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என அனைவரும் பங்குகொள்வதைக் காணலாம்.

தமிழகத்தின் “பொற்காலம்” என்று கருதப்பட்ட முன்னால் முதலமைச்சர் காமராசரின் ஆட்சியை யாரும் மறக்க முடியாது. கருப்பு காந்தி, தென்னாட்டு காந்தி என்று போற்றப்படும் கர்ம வீரர் காமராசரை தந்தது விருதுநகர். இன்று விருதுநகர் என்றால் காமராசர் பிறந்த மண் என்று உலகெங்கும் விருதுநகரின் புகழ் பரவியுள்ளது. கல்வி, தொழில், நீர் நிலைகள், மின்சாரம் என்று தமிழகத்தின் அனைத்து துறையிலும் புரட்சி செய்த காமராசர் தன் குடும்பம், தன் மக்கள், தன் ஊர் என்று பாராத தன்னலமற்ற எளிமையான நாடு போற்றும் "KingMaker“ ஆவார்.

விருதுநகரில் உள்ள நாடார் சமுகத்தினரை சாணான் என்று ஒதுக்கிவைக்கப்பட்ட காலம். பாண்டியர்களின் வீழ்ச்சியில் இருந்து நாடார்கள் ஒதுக்கி வைக்கப்பட்டனர். அக்காலத்தில் நாடார்கள் “கோவிலுக்குள்” செல்ல அனுமதி இல்லை.

ஆங்கிலேயர் காலத்தில் ஆங்கிலேயரின் முற்போக்கும்,சிந்தனையும், அப்போது அவர்களுடன் விருதுநகர் நாடார்களுக்கு ஏற்பட்ட வணிக வளர்ச்சியும் படித்த விருதுநகர் நாடார்களிடையே ஆங்கிலேயர் பால் ஈர்ப்பு இருந்தது. ஆங்கிலேயர்களின் ஆட்சியால் நாம் வளர்ச்சி அடையலாம் என்ற எண்ணம் மேலோங்கி இருந்தது. அப்போது ஆங்கிலேயர் ஆட்சி செய்த பிற நாடுகளில் வணிகம் செய்ய ஆரம்பித்தனர் விருதுநகர் மக்கள். இதனால் விருதுநகரில் ஆங்கிலேயரை ஆதரிக்கும், முற்போக்கு சிந்தனைகளையும் கொண்ட “JusticeParty” சக்தி வாய்ந்ததாக இருந்தது. “JusticeParty” யின் பங்கு விருதுநகர் அரசியலில் முக்கியமானது. “JusticeParty” யினைச் சேர்ந்தோர் விருதுநகர் மக்களின் வளர்ச்சிக்காகவும் நகர் வளர்ச்சிக்காகவும் பெரிதும் பாடுபட்டனர்.
“JusticeParty” யின் தூண் போன்று இருந்த V.V.RamasamyNadar, M.S.P.SenthikumaraNadar மற்றும் M.S.PeriyasamyNadar, M.S.P.Rajah போன்றோரின் சேவை மகத்தானது.

விருதுநகர் மக்களின் எதிர்ப்பை மீறி காங்கிரஸ் மீது நம்பிக்கை வைத்தவர் காமராசர் வீட்டில் உள்ளவர்களின் எதிர்ப்பை பொருட்படுத்தாமல் காந்திஜியின் விடுதலைப் போராட்டத்தில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டார்.காமராசரின் முயற்சியால் விருதுநகரில் விடுதலைப்போராட்டங்கள் நடந்தது. “JusticeParty” யின் கோட்டையாக இருந்த விருதுநகர் காமராசரின், காங்கிரஸ் கீழ் விடுதலைப் போராட்டத்தில் ஈடுபடுத்திக்கொண்டது. விருதுநகரில் சில தீவிரவாத விடுதலைப் போராட்டமும் நடந்துள்ளது.

பிரசுரங்களை வெளியிடுதல், சட்டமறுப்பு இயக்கம், கொடி போராட்டம்,சத்தியாகிரகப் போராட்டம், வெள்ளையனே வெளியேறு போராட்டம் என்று பல விடுதலைப் போராட்டங்களில் கலந்து சிறை சென்றனர் விருதுநகர் மக்கள். K.Kamaraj, A.S.S.S.SankarapandiyaNadar, MurugaDhanuskodi, Gurusamy, MuthusamyAasan போன்றோர்கள் விடுதலை வேட்கையில் மக்களை வழி நடத்திச்சென்றனர். அந்தப் புனிதப் போரில் வெற்றியும் கண்டனர்.
Posted by Nadar singam at 05:56 No comments: 
Email This
BlogThis!
Share to Twitter
Share to Facebook
Share to Pinterest
நாடார்கள் வரலாறு

திராவிட இனத்தின் மிகப்பெரும் ஜாதியாக நாடார் சமுதாயம் விளங்கியது. ஆரியர்கள் படையெடுப்பால் திராவிடர்கள் பலவாறு பிரிய ஆரம்பித்தனர். நம் சமுதாய மக்கள் இயற்கையிலே உடல் வலிமை, கடும் உழைப்பிற்கு சொந்தக்காரர்களாக இருந்தனர். அதாவது உண்மையான சத்திரியகுலம் நாடார் குலம் தான்.
பாண்டிய, சேர, சேழ மன்னர்கள் நாடார் குலத்தவர்கள் என்று வரலாறு கூறுகின்றது. அதற்கு சரியான ஆதாரமும், வலுவான கருத்துக்களும் நம்மிடம் உள்ளது. நாயக்க மன்னர்கள் படையெடுப்பால் நம் அரச குலம் சொல்லொன்னா துயரம் அடைந்தது. நம் சமுதாயம் சிதறி பெரும்பகுதி மக்கள் இலங்கைக்கு சென்றனர். இந்தியாவில் இருந்தவர்களும் கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தமிழகம் என பல்வேறு பகுதிகளில் மக்கள் வசிக்கமுடியாத தேரிப்பகுதிகளிலும், காட்டுப்பகுதிகளிலும் வசிக்கதொடங்கினர். நாடாண்டகுலம் நாடு பிடுங்கப்பட்டு காடு விரட்டப்பட்டு கடுந்துன்பம் அடைந்தது. நம் வரலாறுகள் பெரும்பகுதி அழிக்கப்பட்டன. இலங்கை மற்றும் நம் ஆட்சிக்கு அப்பார்பட்ட இடங்களில் உள்ள கல்வெட்டுகள் மூலமாகவே நாம் நம் பெருமைகளை அறிய முடிந்தது.
கிமு 6ம் நூற்றாண்டு முதல் இரண்டாயிரம் ஆண்டுகள் பாண்டிய, சேர, சேழ மன்னர்கள் தமிழகத்தை ஆண்டுவந்தனர். இந்த மூவருமே சகோதரர்கள் எனவும் பாண்டியன் மூத்தவன் எனவும் வரலாறு கூறுகின்றது. ஆரம்ப காலத்தில் கொற்கை தலைநகராக இருந்தது. பின் அது பாண்டிய நாட்டின் தலைநகராக மாறியது. பாண்டியனின் துறைமுகமும் கொற்கைதான்.
1292 ல் மதுரை பாண்டியனின் தலைநகர் ஆனது. பழையகாயல் பாண்டியனின் துறைமுகம் ஆனது. கொற்கை பொலிவு இழந்தது. இந்த கொற்கை இன்று கடலில் இருந்து பலகிலோமீட்டர் தொலைவில் பனைமரக்காடாய் அமைந்துள்ளது. 14ம் நூற்றாண்டில் முகமதியர் பாண்டியமன்னனை வென்றனர். அதன் பின் மீண்டும் பாண்டியர் ஆட்சி ஏற்பட்டது. ஆனால் 16ம் நூற்றாண்டில் தெலுங்கு நாயக்க மன்னர்களிடம் பாண்டிய அரசு தோற்றது. சேர, சோழ, பாண்டிய வரலாறுகள் அழிக்கப்பட்டன. அரசகுலம் நாடுவிரட்டப்பட்டனர்.
இலங்கை, தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, ஆந்திரா மற்றும் மஹாராஷ்ட்ரா போன்ற இடங்களில் நாடார் சமுதாயம் காணப்படுகின்றது. மேற்படி இடங்களில் சில இடங்களில் சில பெயர் மாறுதலுடன் நாடார்கள் வாழ்கின்றார்கள். ராவணனின் தலைமை அமைச்சரும் பிரதான தளபதியுமான மகோத்திரா நாடார் என்பதும் சீதையை ராவணன் கடத்திய ஆடி மாதம் முதல் தேதியை விழாவாக நாடார்கள் கொண்டாடினர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
அரச உரிமை மறுக்கப்பட்ட நாடார் சமுதாயத்தில் பெரும்பான்மை நாடார் சமுதாயம் பனையேறும் தொழில் செய்து வந்தனர். அவர்கள் பிற சாதி மக்களுடன் இருந்து ஒதுங்கி வாழ்ந்தனர். அவர்கள் பிறப்பு முதல் திருமணம், இறப்பு வரை அவர்களுக்கு ஷஷஅம்பட்டையர்கள்ஷஷ எனப்படும் நாவிதர்கள் தான் அனைத்து சடங்குகளையும் செய்தனர். நாடார்களுக்கு என உள்ள நாவிதர்கள் வேறு உயர்ந்த சமூகத்திற்கோ அல்லது தாழ்ந்த சமூகத்திற்கோ செல்ல மாட்டார்கள். நாடார்களுக்கு என கோவில்களில் பூஜை செய்ய பிராமண வகுப்பில் ஒரு பிரிவானவர்கள் பயன்படுத்தப்பட்டார்கள். இவர்கள் குருக்கள் என அழைக்கப்பட்டனர்.
தெந்தமிழகத்தில் உள்ள நாடார்களின் பூர்வீக குல தெய்வங்களின் கோவில்கள் ஷஷமானாடு தண்டுபத்துஷஷ எனப்படும் திருச்செந்தூர் அடுத்து உள்ள தேரிப்பகுதியை சுற்றியே அமைந்துள்ளது. ராமநாதபுரத்தின் வடபகுதியிலும் குல கோவில்கள் உள்ளன.

.
.

Tuesday, 25 August 2026

KALPANA

 





சரத் லதா 1963 ஆம் ஆண்டில் இயக்குனர் பி.ஆர்.பந்துலுவால் ராஜ்குமார் நடித்த சாகு மகலு படத்திற்காக கன்னட திரையுலகுக்கு நியமிக்கப்பட்டார். பின்னர் தனது ஸ்கிரீன் பெயரை கல்பனா என்று மாற்றினார். இருப்பினும், புட்டண்ண கனகல் இயக்கிய 1967 ஆம் ஆண்டு வெளியான பெல்லி மோடா திரைப்படம் அவரை முன்னணிக்கு கொண்டு வந்தது. அவரது இந்த சித்தரிப்பு உடனடியாக ஏற்றுக்கொள்ளப்பட்டது, மேலும் அவர் விரைவில் 1960 களின் நடிகைகளில் முதலிடத்திற்கு முன்னேறினார். 1960 கள் மற்றும் 1970 களின் பிற்பகுதியில் கன்னட திரைப்படத் துறையில் ஆதிக்கம் செலுத்திய இவர், ஷரபஞ்சரா, கெஜ்ஜே பூஜே, பெல்லி மோடா, எராடு கனசு, கப்பு பிலுபு, பாயலு தாரி, கந்தட குடி மற்றும் பங்கரடா ஹூவு போன்ற திரைப்படங்களில் சில ஆசிரியர்களின் ஆதரவு கதாபாத்திரங்களுக்காக விமர்சன ரீதியாக பாராட்டப்பட்டார். அவர் தனது காலத்தின் அனைத்து முன்னணி நடிகர்கள் மற்றும் இயக்குனர்களுடனும் பணியாற்றினார். ராஜ்குமார், கங்காதர் மற்றும் உதய குமார் ஆகியோர் இவருக்கு அடிக்கடி சக நடிகர்களாக நடித்தனர். பி.சுசீலா மற்றும் எஸ்.ஜானகி ஆகியோர் திரைப்படங்களில் அவரது பாடல்களுக்குப் பின்னால் வழக்கமான குரல்கள். ஜெயந்தி, பாரதி, ஆரத்தி, மஞ்சுளா போன்ற சமகாலத்தவர்களுக்கு போட்டி போட்டுக் கொடுத்தார்.

ஆரம்பத்தில் பிரபல இயக்குனர் புத்தன கனகலின் மிகவும் பிடித்த நடிகையாக இருந்தார். அவர்களின் கூட்டு கன்னட சினிமா வரலாற்றில் சில சிறந்த திரைப்படங்களை தயாரித்தது. அவர்களின் பல படங்கள் வலுவான, கடினமான செய்திகளைக் கொண்டிருந்தன, அவை சினிமா வரலாற்றில் பொக்கிஷமாக இருந்தன. கனகல் கல்பனாவை பெருமளவில் வளர்த்தார், மேலும் அவர்கள் ஊடகங்களால் காதலாக இணைக்கப்பட்டனர், இது அவர்களின் மறுப்புக்கு மிகவும் காரணமாகும். இருப்பினும், தவறான புரிதல்கள் காரணமாக அவர்கள் பிரிந்தனர், கனகல் ஆரத்தி மற்றும் பத்மா வசந்தி போன்ற பிற கதாநாயகிகளை வளர்த்தார், கல்பனா பின்னர் சில சராசரி மற்றும் சராசரிக்கு மேல் படங்களில் நடித்தார்

தனது வாழ்க்கையை உயிர்ப்பிப்பதற்கான அவரது முயற்சிகள் தோல்வியடைந்தன. ராஜ்குமார் (தாரி தப்பிடா மகா மற்றும் எராடு கனசு) மற்றும் அனந்த் நாக் (பாயலுதாரி) ஆகியோருடன் அவரது பிற்கால திரைப்படங்கள் வெற்றி பெற்றாலும், அவை அவளுக்கு எந்த நன்மையும் செய்யத் தவறிவிட்டன. 1977 வாக்கில் அவர் கையில் எந்த திரைப்படங்களும் இல்லை. பின்னர் அவர் உத்தர கர்நாடகாவில் உள்ள நாடக நிறுவனங்களில் கவனம் செலுத்தத் தொடங்கினார், முக்கியமாக கூடிகேரி பசவராஜின் நாடக நிறுவனத்தில் பணியாற்றினார். அதிகரித்து வரும் கடன்கள் மற்றும் குறைந்து வரும் திரைப்பட வாய்ப்புகளுடன், அவர் ஆழ்ந்த மனச்சோர்வில் சென்றார்.


மெட்ராஸ் டு பாண்டிச்சேரி மற்றும் சாது மிராண்டால் போன்ற சில தமிழ் மற்றும் தெலுங்கு திரைப்படங்களிலும் நடித்தார். இரண்டு படங்களும் பாக்ஸ் ஆபிஸில் வெற்றி பெற்றன. கே.சிவராம் காரந்த் இயக்கிய துளு திரைப்படமான கோடி சன்னையா படத்திலும் நடித்தார். மலையாளத்தில் ஸ்கூல் மாஸ்டர் என்ற படத்திலும் நடித்தார். அவர் 35 ஆண்டுகள் மட்டுமே வாழ்ந்தார், அதில் 15 ஆண்டுகள் சந்தன திரையுலகில் கழித்தார். பெல்லி மோடா, ஹன்னலே சிகுரிடாகா மற்றும் ஷாரபஞ்சரா ஆகிய படங்களுக்காக மூன்று முறை சிறந்த நடிகைக்கான கர்நாடக மாநில விருதை வென்றார். இவரது திரைப்பட வாழ்க்கையில், எண்பதுக்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார், அவற்றில் பெரும்பாலானவை கன்னடத்தில் உள்ளன. [6]

ஃபேஷன் ஐகான்


கல்பனா தனது காலத்தின் ஒரு பேஷன் ஐகானாக இருந்தார். அவரது நேர்த்தி, சுவை மற்றும் ஆடை அணிவதில் நுட்பம் ஆகியவை அன்றைய மற்ற பெண் நட்சத்திரங்களுடன் பொருந்தவில்லை. மெகா ஸ்லீவ் ரவிக்கைகள், ஃப்ரில் ரவிக்கைகள் ஆகியவை கர்நாடகாவின் பாணிக்கு அவரது பங்களிப்பு. பெரிய காதணிகள், கையில் பெரிய மோதிரங்கள், ப்ரோகேட் பட்டு புடவைகள், ஷிஃபான் புடவைகள், வளையல்கள் மற்றும் நீண்ட நெக்லஸ்கள் ஆகியவை அவரது சில ஃபேஷன் அறிக்கைகள். [7]

 சம்பாதித்த பணம் போன்றவையும் தன் குடும்ப நலனுக்கே செலவிட்டு விட்டார் . எனவே நாடகத்திலாவது நடித்து பிழைக்க லாம் என்று குடிகேரி பசவராஜ் நடத்திய நாடக கம்பெனியில் சேர்ந்தார் .அப்புறம் அவருடன் காதல் ஆரம்பம் ஆனது . ஆனால் பசவராஜ் கல்பனாவை வைத்து சம்பாரிக்க திட்டம் இட்டான் .சம்பவ நாளில் பசவராஜை செருப்பால் அடிப்பேன் என்று சொன்னதால் செமையாக அவனிடம் அடி வாங்கினார் .அன்று இரவு மோதிரத்தில் உள்ள கல்லை பொடி செய்து உட்கொண்டு தற்கொலை செய்து கொண்டார்.புது புது அர்த்தங்கள் படத்தில் வரும் சித்தாராவின் கதா பாத்திரம் இவரை கொண்டுதான் பாலச்சந்தர் படைத்தார் .முடிவில் சில மாற்றங்களை செய்து  

எனக்கு தெரிந்த சுருக்கமான வரலாறு இதுவே



Saturday, 22 August 2026

Historical Insights on Shanar Cash

 





Introduction

The Sanars (pronounced as Cāṇār), or Shanars, were a warrior community in ancient Tamil society [note 1]. The Periyapuranam, written by Sēkkilār, records that members of the Shanar community played a significant role in training royalty in the art of warfare. Additionally, the Shanars issued coins known as Shanar Cash, which were likely in circulation during the 16th and 17th centuries CE. This article is based on the research contribution of Mr. S. D. Nellai Nedumaran.

Historical Insights on Shanar Cash

The historical ballad Vengalarajan Kathai mentions that Vengalarajan, a 16th-century warrior who ruled Tirunelveli and waged war against Vettum-Perumal, minted Shanar cash. Similarly, the 18th-century literary work Paṇavidutūtu, authored by Palapaṭṭaṭai Chokkanātha Pulavar, references Shanar cash. A Modi manuscript preserved in the Saraswathi Mahal Library, Thanjavur, further attests that Shanar cash remained in use as late as 1851 CE, with one such coin valued at 132 phuli varāhans.

In 1836, J.R. Rolter suggested that Shanar cash was a gold coin featuring the impression of a toddy drawer. Winslow Miron, in his dictionary, describes Shanar cash (also referred to as Sanror Kāsu) as a gold coin introduced or minted by one of the Sanror castes. He further notes that the terms Shanar and Sanror are interchangeable.

 

Winslow Miron, in his dictionary, describes Shanar cash (also referred to as Sanror Kāsu) as a gold coin introduced or minted by one of the Sanror castes. He further notes that the terms Shanar and Sanror are interchangeable.

Description of the coin according to Valangai Malai

In the 17th-century Sanror ballad Valangai Malai, a coin is vividly described as being minted and issued by Māṭaikkācu Vallāḷaṉ—an eulogistic epithet that translates to hero who minted the gold coin in Tamil. The ballad further reveals that this distinguished coin was known as Cāṉṟār Māṭai ("Sanrar gold coin") or Valangai Uyyakondar Māṭai ("Valangai Uyyakondar gold coin"). According to the ballad, one side of the coin featured an engraving of a palm tree, while the other side depicted the image of the Sanrar, who was known for his teachings on alchemy, alongside an image of his daughter.

Notes

  1. The terms SanrarSanravar and Sanar are variants of the term Sanror. This is because of a common linguistic feature in Tamil. For instance, the word Kaṉṟu (meaning "calf") and its variant Kaṇṇu are essentially the same word with different pronunciations. The Nadars today were previously known as Sanars or Shanars.

See Also

References

  1. S. D. Nellai Nedumaran. "A note on Cāṇār Kācu." Tamiḻar Kācu Iyal, edited by Nadana Kasinathan. Tamil Archaeological Book, International Institute of Tamil Studies, Government of Tamil Nadu, 1995, pp. 153-154.
  2. A. Thasarathan. "Valaṅkai Nūlkaḷil Māṭaikkācu." Tamiḻil Āvaṇaṅkaḷ, edited by A. Thasarathan, T. Mahalakshmi, S. Nirmala Devi, and T. Bhuminaganathan. Tamil Archaeological Book. International Institute of Tamil Studies, Government of Tamil Nadu, 2001, pp. 143-149.