Friday, 4 September 2026

GANDHIMATHI 1945 AUGUST 30

 

 


 

காந்திமதி (30 August 1945 –இறப்பு: செப்டம்பர் 9, 2011) தமிழ் திரையுலகில் ஓர் பழம்பெரும் நடிகை. கிட்டத்தட்ட 350 திரைப்படங்களில் பல்வேறு மண்வாசனையுடன் கூடிய குணச்சித்திர வேடங்களில் நடித்து பரவலாக "காந்திமதி அக்கா" என அழைக்கப்பட்டவர்.[1]

வாழ்க்கைக் குறிப்பு

சிவகங்கை மாவட்டத்தில் பிறந்த இவர் திருமணம் செய்துகொள்ளவில்லை. தீனதயாளன் என்பவரும் மற்றொருவரும் இவரின் வளர்ப்பு பிள்ளைகள்.

எழுத்தாளர் ஜெயகாந்தனின் கதையான யாருக்காக அழுதான் திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். பல புகழ்பெற்ற நடிகர்களுடன் நடித்துள்ளார். 16 வயதினிலே, சின்னதம்பி பெரியதம்பி, கரகாட்டக்காரன், முத்து, மாணிக்கம், அகல் விளக்கு, வால்டர் வெற்றிவேல், போர்ட்டர் பொன்னுசாமி ஆகியவை இவர் நடித்த குறிப்பிடத்தக்க படங்கள்.

இந்தியப் பொதுவுடமை இயக்கத்தால் ஈர்க்கப்பட்டு, அக்கட்சியின் மேடைகளில் பாடியும், புரட்சிகர நாடகங்களில் நடித்தும் வந்தார். முக்குலத்தோர் சமூகத்தைச் சேர்ந்த இவர், ஒரு கட்டத்தில் அதிமுகவில் இணைந்தார் [2]

மறைவு

சில காலமாக தனது உடல்நிலை காரணமாக திரைப்படங்களில் நடிப்பதைக் குறைத்து வந்த காந்திமதி செப்டம்பர் 9, 2011 அன்று காலையில் தனது 65வது அகவையில் காலமானா‌ர்[3][4][5][6]

 

 

 

அவருடைய இடத்தை யாராலும் நிரப்ப முடியாது’ என்று ஒரு சில நடிகர் நடிகைகளைச் சொல்லுவார்கள். அந்தப் பட்டியல் மிகச்சிறியதுதான். சின்னஞ்சிறிய பட்டியலுக்குள், விஸ்வரூபமெடுத்து நிற்கும் முக்கியமான நடிகை... காந்திமதி.

சிறுவயதில் இருந்தே நடிப்பின் மீதும் கூத்தின் மீது அப்படியொரு ஈடுபாடு காந்திமதிக்கு. மானாமதுரையில் கோயில் திருவிழா, ஊரில் ஒரு விழா என்றால் குதூகலமாகிவிடுவார் காந்திமதி. வள்ளி திருமணம் முதலான நாடகங்கள், விடிய விடிய போடுவார்கள். கண்கொட்டாமல், விடிய விடிய பார்த்துக்கொண்டிருந்துவிட்டு, வீட்டில், அக்கம்பக்கத்தில் நடித்துக்காட்டுவார். ராஜபார்ட், ஸ்த்ரீ பார்ட், கள்ளபார்ட் என நாடகத்தின் அத்தனை கதாபாத்திரமாகவும் மாறிப் பேசுவார். ஒரு வசனம் விடாமல் பேசுவார்.

 

நடிப்பின் மீது கொண்ட ஆர்வமும் வெறியும்தான் நாடகத்துக்குள் இவரைக் கொண்டு வந்து சேர்த்தது. எஸ்.வி.சகஸ்ரநாமத்தின் நாடகக் குழு, அந்தக் காலத்தில் வெகு பிரபலம். இந்தக் குழுவில் சேர்ந்து நடிக்கத் தொடங்கினார். இவரின் நடிப்பும் வசனமும் குறிப்பாக வசன உச்சரிப்பும் தனித்து இவரை அடையாளம் காட்டியது.
ஜோசப் தளியத் இயக்கத்தில் வந்த ‘இரவும் பகலும்’ தான் ஜெய்சங்கரின் முதல் படம். ஜெய்சங்கருக்கு மட்டுமல்ல... காந்திமதிக்கும் இதுவே முதல்படம். பிறகு, காந்திமதியே மறந்துவிட்ட அளவுக்கு எத்தனையோ படங்கள். ஒரு காட்சி, கூட்டத்தில் ஒருவர், ஒரேயொரு வசனம்... என்றெல்லாம் நடித்து வந்தார். ஜெயகாந்தனின் ‘யாருக்காக அழுதான்’ படத்தில்தான் இவரின் முகம் பரிச்சயமானது ரசிகர்களுக்கு.

எம்ஜிஆர், சிவாஜி உள்ளிட்டோரின் கருப்பு வெள்ளை, கலர் படங்களில் தொடர்ந்து நடித்து வந்தார். எம்ஜிஆருக்கு அம்மா, சிவாஜிக்கு அம்மா என்றெல்லாம் நடித்திருக்கிறார்.

 

 

 

தமிழ் சினிமாவில் மிகப்பெரிய கதவு திறந்த படம், மிகப்பெரிய பாதையையே உருவாக்கித் தந்த படம் என்றெல்லாம் போற்றப்பட்டு, மொத்த திரையுலகையும் தமிழ் உலகையும் வியக்க வைத்தது பாரதிராஜாவின் ‘16 வயதினிலே’. படத்தில் சப்பாணி, மயிலு, பரட்டையன், டாக்டர் எல்லோரும் நம் நினைவில் நிற்கிறார்கள். அதேபோல் இன்றைக்கும் நம் மனதில் நிற்கிற குருவம்மா கேரக்டரை அவ்வளவு சுலபமாக எவரும் மறந்துவிடமுடியாது.

மயிலின் அம்மா குருவம்மா... அச்சு அசலான கிராமத்து அம்மா. வந்த வம்படியை விடாமல், நீயா நானா என்று பார்த்துவிடுகிற ஆவேச அம்மா. மானம் போய்விட்டதை அறிந்து துடித்துக் கதறி, உயிர்விடுகிற யதார்த்த எளிமையான மாந்தராக, அம்மாவாக, குருவம்மாவாக அப்படியொரு அவதாரம் எடுத்தார் காந்திமதி.

கவுண்டமணிக்கு ஜோடியாக, பாரதிராஜாவின் ‘கிழக்கே போகும் ரயில்’ படத்தில் மிகச்சிறந்த நடிப்பை வழங்கியிருந்தார். இந்த இரண்டு படங்களும் காந்திமதி எனும் நடிகை, சாதாரணரில்லை என்பதை தெளிவுற பறைசாற்றின. கே.பாக்யராஜ் முதன் முதலாக இயக்கிய ‘சுவரில்லாத சித்திரங்கள்’ படத்தில் கல்லாபெட்டி சிங்காரத்தின் மனைவியாக, பாக்யராஜின் அம்மாவாக இவர் கொடுத்த அலப்பறை செம காமெடி.

இன்று போய் நாளை வா’ உள்ளிட்ட படங்களிலெல்லாம் இவரும் தனித்துத் தெரிந்தார். இவர் நடிப்பும் புதுபாணி என்று பேரெடுத்தது. மளமளவென படங்கள் குவிந்தன. முன்னதாக, ‘சட்டம் என் கையில்’ படத்தில் கமலுக்கு அம்மாவாக, அசோகனுக்கு மனைவியாக, குடிசை வாழ் பெண்மணியாக வெளுத்து வாங்கியிருப்பார்.

இந்த சமயத்தில்தான் எம்.ஏ.காஜாவின் ‘மாந்தோப்பு கிளியே’ வந்தது. படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. தமிழகத்தின் பட்டிதொட்டிகளில், வீடுகளில் நடைபெறும் விசேஷங்களில், லவுட் ஸ்பீக்கரில், ‘மாந்தோப்பு கிளியே’ காமெடியும் ‘16 வயதினிலே’ ஒலிச்சித்திரமும் ஓடின. ஊரே அமைதியாகக் கேட்டு ரசித்தது. கஞ்சக் காமெடியைக் கேட்டு வெடித்துச் சிரித்தது. சுருளிராஜன் - காந்திமதி இல்லையென்றால், ‘மாந்தோப்புக் கிளியே’ வெற்றிப்படமாக அமைந்திருக்காது. இன்றைக்கும் மனங்களில் நின்றிருக்காது.

மணிவண்ணனின் ‘சின்னதம்பி பெரியதம்பி’யில், பிரபு, சத்யராஜ் அம்மாவாக அட்டகாசமான நடிப்பை வழங்கியிருப்பார். ‘அக்கா...’ என்று ‘கரகாட்டக்காரன்’ படத்தில் சண்முகசுந்தரம் பேசுகிற வசனம் பிரபலம். அந்த அக்காவாக, ராமராஜனின் அம்மாவாக சிறந்த நடிப்பை வழங்கியிருப்பார் காந்திமதி.

அக்காவாக நடிப்பார். உருகுவார். அம்மாவாக நடிப்பார். பாசம் பொழிவார். மாமியாராக நடிப்பார். மிரட்டியெடுப்பார். ‘கால்கேர்ள்’ வைத்து வியாபாரம் செய்வார். கொஞ்சிக்குழைவார். எந்தக் கதாபாத்திரம் என்றில்லாமல் அசத்துவார். நல்ல கதாபாத்திரமோ நெகட்டீவ் கதாபாத்திரமோ... அதில் தன் முத்திரையைப் பதித்துவிடுவார். செட்டிநாட்டு பாஷை, மதுரை பாஷை, கோவை பாஷை, சென்னை பாஷை என்பதெல்லாம் காந்திமதிக்கு சரள பாஷை. சகஜ பாஷை. ஆனால் எந்த பாஷையில், எந்தக் கேரக்டராக இருந்தாலும், கொஞ்ஞ்ஞ்ஞ்ஞ்ஞ்சம் இழுத்துப் பேசுகிற காந்திமதி ஸ்டைல்தான்... டாப்டக்கர்! 

 

திரையுலகில் எல்லோருக்கும்... கமல் உட்பட சகலருக்கும் காந்திமதி அக்காதான். ‘அக்கா அக்கா’ என்று அன்புடன் பழகுவார்கள். கமல், தன் படங்களில் ஏதேனும் ஒரு கேரக்டர் கொடுத்துவிடுவார். ‘அபூர்வ சகோதரர்கள்’ முதலில் எடுக்கப்பட்டு 20 நாளுடன் நின்றுவிட்டது. அப்போது மெக்கானிக் கமலுக்கு அம்மாவாக காந்திமதிதான் நடித்தார். பிறகுதான் மனோரமா. ‘உங்க அம்மாவோட காலைத்தொட்டு கும்பிடணும்டோய்’ என்ற பாடல், படத்தின் 75வது நாளில் இருந்து இடைவேளையில் திரையிடப்பட்டது. அப்போது கமலும் காந்திமதியும் ஆடிய பாடலைப் பார்ப்பதற்காகவே அடுத்தடுத்து வந்தார்கள் ரசிகர்கள்.

எல்லாவற்றுக்கும் மேலாக, காந்திமதியை ‘குருவம்மா’வாக்கிய பாரதிராஜா, ‘மண்வாசனை’ படத்தில், ‘ஒச்சாயி’ கிழவியாக ஆக்கியிருந்தார். கையில் கோல், காதில் தண்டட்டி, சுருக்கம் விழுந்த பார்வை, கூன் விழுந்த முதுகு... வார்த்தைக்கு வார்த்தை பழமொழிகள்... என ’மண்வாசனை’யில் ஒச்சாயிக் கிழவி எடுத்ததெல்லாம் விஸ்வரூபம். 

 

'விருமாண்டி’யில் விருமாண்டியையும் அன்னலட்சுமியையும் தன் வீட்டில் அடைக்கலம் கொடுத்துக் காப்பாற்றுவார் காந்திமதி. இரண்டு மூன்று காட்சிகள்தான். ஆனாலும் மனதில் நின்றுவிடுவார் காந்திமதி. இரண்டரை மணி நேர ‘தேவர் மகன்’ படத்தில், க்ளைமாக்ஸ் காட்சியில், தேரோட்டம் நடைபெறும் காட்சியில், ஒரேயொரு காட்சியில் வருவார் காந்திமதி. ‘யாரு தேவர்மகன்... கூப்பிடு அவரை’ என்பார். ‘உங்க அப்பாருதான் எனக்கு கல்யாணம் பண்ணி வைச்சாரு’என்று சொல்லுவார். வடத்தைப் பிடித்துக் கொண்டு, ‘நான் காசு பணமா கேட்டேன். தேரை இழுக்க இடம்தானே கேட்டேன். போற வழிக்கு புண்ணியம் கிடைச்சாப் போதுமே’ என்பார். அந்த க்ளைமாக்ஸ், தேர் வெடிக்கும் காட்சி, காந்திமதிக்கான காட்சி. அவர் நடிப்புக்கான சாட்சி.

இப்படி எத்தனையோ படங்கள். எந்த சாய்ஸும் இல்லாத, எவர் சாயலுமில்லாத நடிகை காந்திமதி.

2011ம் ஆண்டு செப்டம்பர் 9ம் தேதி காலமானார் காந்திமதி. மகத்தான நடிகை காந்திமதி காலமாகி ஒன்பது ஆண்டுகளாகின்றன. அவர் நடித்துக் கொண்டிருந்தபோதும் சரி... காலமாகிவிட்ட இந்த ஒன்பது ஆண்டுகளும் சரி... இனி வரப்போகும் காலங்களும் சரி... காந்திமதியின் நடிப்புக்கு நிகரான நடிகை இன்னும் வரவில்லை; இனியும் வரமாட்டார்.

இன்னும் கொஞ்சம் வாய்ப்புகள், தமிழ்த்திரையுலகம் கொடுத்திருந்தால், ‘நடிப்பு ராட்சஷி’ என்று தமிழ்த் திரையுலகமே இன்னும் கொண்டாடிக்கொண்டிருக்கும்.
காந்திமதி எனும் கலைநயமிக்க நடிகையைப் போற்றுவோம்.

 

 Ganthimathi (30 August 1945 – 9 September 2011) was a Tamil stage and film actress. She acted in over 500 films. 

Early life

Kanthimathi was born in Manamadurai in the then Ramanathapuram district of India. She started acting in dramas and entered films at the age of eleven.

Career

The role which got her noticed was the portrayal of Mayil's mother in 16 Vayathinile. Other important Tamil films in which she acted include Mann Vasanai, Muthu and Karagattakaran. She was awarded the Kalaimamani Award by the Government of Tamil Nadu for her contribution to Tamil cinema.

She acted as mother and grandmother almost to all actors and actresses like M.G.R, Rajinikanth, Kamalhassan, Vijaykanth, Sathyaraj, Prabhu, Vijay, Revathi, Radha, Ambika, Radhika, etc. Other actors or actresses cannot utter the non-lexical filler proverbs like "Chithada kalli viragu odaika ponalam kathala mullu kothoda kuthidichan" (When a lazy girl is forced to go for the work of cutting the firewood she may complain that aloe vera thorns poked her in a bunch) like she could. 

 

Partial filmography

1940s

1960s

1970s

1980s

1990s

2000s


Year Film Role Note
1948 Vedhala Ulagam


Year Film Role Note
1965 Iravum Pagalum

1966 Kumari Penn

Thenmazhai

1969 Adimai Penn


Year Film Role Note
1970 Kanthimathi

Kalam Vellum

Thirumalai Thenkumari

1971 Savaale Samali

Thangaikkaaga Akilandam
1972 Nawab Naarkali

Raja

Pattikada Pattanama

Thavaputhalvan

Needhi

1973 Engal Thanga Raja

Suryakanthi

Rajaraja Cholan

Ponnunjal

1974 En Magan

Vani Rani

Netru Indru Naalai

Naan Avanillai

Athaiya Mamiya

1975 Ninaithadhai Mudippavan

Dr. Siva

Melnaattu Marumagal

Mayangukiral Oru Maadhu

Anbe Aaruyire

1977 16 Vayathinile Kuruvamma
1978 Vanakkatukuriya Kathaliye

Kizhakke Pogum Rail Karuthamma
1979 Inikkum Ilamai

Manthoppu Kiliye

Suvarilladha Chiththirangal


Year Film Role Note
1980 Enga Ooru Rasathi

Rusi Kanda Poonai

Moodu Pani

Bhama Rukmani

1981 Indru Poi Naalai Vaa

Oruthi Mattum Karaiyinile

Andhi Mayakkam

1982 Erattai Manithan

Moondram Pirai

Neram Vandhachu

1983 Mann Vasanai Ochaayi
Uyirullavarai Usha

1984 Tharaasu

Uravai Kaatha Kili

Vai Pandal

1985 Mannukketha Ponnu

Thendrale Ennai Thodu Sundari
Engal Kural

Puthiya Theerpu

Saavi Pachaiyamma
Chidambara Rahasiyam Ponnazhagi
1986 Natpu

Aayiram Kannudayaal

Mannukkul Vairam

1987 Chinna Thambi Periya Thambi

Ninaive Oru Sangeetham

1988 Therkathi Kallan

1989 Panthaya Kuthiraigal

Karagattakaran

Solaikuyil

Padicha Pulla

Thangamana Raasa

Annanukku Jai

En Arumai Manaivi

Manidhan Marivittan


Year Film Role Note
1990 Mallu Vetti Minor

Sandhana Kaatru

Periya Veetu Pannakkaran

En Kadhal Kanmani

1991 Gnana Paravai

Kumbakarai Thangaiah

Namma Ooru Mariamma

1992 Solaiyamma

Unna Nenachen Pattu Padichen

Oor Mariyadhai

Idhu Namma Bhoomi

Thirumathi Palanisamy

Nadodi Pattukkaran

1993 Walter Vetrivel

Thalattu

Sakkarai Devan

Chinna Jameen

1994 Namma Annachi

Atha Maga Rathiname

Ilaignar Ani

1995 Aanazhagan

Mr. Madras

Muthu Poongavanam
Varraar Sandiyar

1996 Amman Kovil Vaasalile

Namma Ooru Raasa

1997 Nalla Manusukkaran

Vivasaayi Magan

Namma Ooru Raasa

1999 Nesam Pudhusu


Year Film Role Note
2001 Ponnana Neram

Thavasi Priyadarshini's grandmother
2003 Anbu Thollai

2004 Virumaandi

Settai Pankajam
Oru Murai Sollividu

2005 Ayya

2006 Iyappa Saamy

 

 

 

Tuesday, 1 September 2026

srilanka - dutch colony

 




  •  

உலக நாடுகளில் உயர்ந்த நிலையிலுள்ள ஜரோப்பிய நாடுகள் மறுமலர்ச்சியை அடுத்து பின்பற்றிய குடியேற்றக் கொள்கைகளினால் பல நாடுகள் கைப்பற்றப்பட்டு பல ஆண்டுகள் ஆதிக்கத்திற்குட்படுத்தப்பட்டு பின்பு சுதந்திரமும் வழங்கப்பட்டது. ஜரோப்பிய நாடுகளான போத்துக்கல், நெதர்லாந்து, பிரித்தானியா, பிரான்ஸ், ஸ்பெயின் முதலான நாடுகளினால் இலங்கை, இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷ், சிங்கப்ப+ர், மலேசியா, இந்தோனேசியா முதலான தென், தென் கிழக்காசிய நாடுகளுடன் ஆபிரிக்க, இலத்தீன் அமெரிக்க நாடுகளும் காலனித்துவத்திற்கு உட்படுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.

 காலனித்துவமானது ஏகாதிபத்தியம் எனும் பதத்தடன் நெருங்கிய தொடர்புடையது. Webster என்கின்ற சமூகவியல் அகராதி காலனித்துவம் (colonialism) என்ற சொல் COLONIA எனும் உரோமச் சொல்லிலிருந்து பிறந்து எனக் குறிப்பிடுகின்றது. இது குடியமர்த்துதல், பண்ணை வளர்த்தல் எனும் பொருள்களைத் தருகின்றது. மற்றும் அதிகாரத்துடன் ஆக்கிரமிக்கப்பட்ட புதிய நிலங்கள், பிராந்தியங்களில் தமது வசதிக்கு ஏற்ப மக்களை குடியமர்த்துவது மற்றும் மையச் சமூகங்களோடு காலனித்துவப்பட்ட விளிம்பு நிலைச் சமூகங்களை இணைப்பது முதலான கருத்துக்களைத் தருகின்றது.

 காலனித்துவம் என்பது ஜரோப்பிய, ஜரோப்பியரல்லாத நாடுகள் பரந்த நிலப்பரப்பினைக் கையகப்படுத்தி தமது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவருதல் எனும் நோக்குடன் குறிப்பிட்ட நாடுகளை தமது அறிவாற்றல், அரசியல் நுட்பங்கள், இராணுவ தந்திரோபாயங்களைப் பயன்படுத்தி ஏகாதிபத்தியத்தின் கீழ்க் கொண்டுவருகின்ற செயன்முறையே காலனித்துவமாகும். அதாவது ஒருநாட்டின் எல்லைக்கு வெளியே உள்ள ஆட்சிப்பகுதி ஒன்றின் மீது குடியேற்றம் செய்வதன் மூலமோ, நிர்வாக முறையில் அடிமைப்படுத்துவதன் மூலமோ அதன் இறைமையை விரிவாக்கம் செய்வதனைக் குறிக்கின்றது. இதன்போது உள் நாட்டு மக்கள் நேரடியாக ஆளப்படுகின்றார்கள் அல்லது இடம்பெயரச் செய்யப்படுகின்றார்கள். காலனித்துவத்தின் நோக்கமே குடியேற்றப்பகுதிகளின் நிலங்கள், வளங்கள், உழைப்பு, சந்தைகள் முதலானவற்றில் ஆதிக்கம் செலுத்துவதாகும்.

 காலனித்துவமானது பல்வேறு வகைகளைக் கொண்டதாகக் காணப்படுகின்றது. அதாவது குடியேற்றக் காலனித்துவம், சுரண்டல் காலனித்துவம், பெருந்தோட்டம் சார்ந்த காலனித்துவம், அடக்குமுறை சார்ந்த காலனித்துவம், உள்ளக ரீதியான காலனித்துவம் முதலானவை முக்கியமானவையாகக் காணப்படுகின்றன.

 இலங்கையில் காலனித்துவமானது முக்கியமாக மூன்று காலகட்டங்களை கொண்டதாகக் காணப்படுகின்றது. அதாவது போத்துக்கீசரின் ஆட்சிக்காலப்பகுதி (1505-1658), ஒல்லாந்தரின் ஆட்சிக்காலப்பகுதி (1658-1796), பிரித்தானியரின் ஆட்சிக்காலப்பகுதி (1796-1948) முதலானவையாகும். இவற்றுடன் சுதந்திரத்திற்குப் பிற்பட்ட காலப்பகுதி, இரண்டாம் உலகப்போர், உள்நாட்டுப் போர், தற்காலம் என்கின்ற பகுப்புக்களையும் உள்ளடக்கியுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

 இலங்கையில் காலனித்துவத்தின் காரணமாக பல்வேறு பட்ட விளைவுகள் ஏற்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும். அந்தவகையில் இலங்கைக்கு ஏற்பட்ட சாதகமான விளைவுகள் பற்றி நோக்குகையில் அரசியல் கட்டமைப்பக்களில் மாற்றங்கள் கொண்டுவரப்பட்டமை, பொருளாதார விருத்தி ஏற்பட்டமை, தொழிற்சாலைகள் நிறுவப்பட்டமை, போக்குவரத்து வசதிகள் மேற்கொள்ளப்பட்டமை, சமூக முன்னேற்றம் ஏற்பட்டமை, வாழ்க்கை முறைகளில் மாற்றம் ஏற்பட்டமை, மொழிக்கலப்புக்கள் ஏற்பட்டமை, கல்வி செயற்பாடுகள் விருத்தி செய்யப்பட்டமை, தொலைத் தொடர்பு சாதனங்களின் விருத்தி, அச்சுசாலைகள் நிறுவப்பட்டமை, இலக்கியப் படைப்புக்கள் வெளிக்கொணரப்பட்டமை முதலான நலன்கள் ஏற்படுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.

 அரசியல் கட்டமைப்பக்களில் மாற்றங்கள் கொண்டுவரப்பட்டமை தொடர்பாக நோக்குகின்ற போது கி.பின் 1815 காலப்பகுதிகளில் மன்னராட்சி முறையானது முடிவுக்குக் கொண்டுவரப்பட்டது, மற்றும் இலங்கையை சோசலிச நாடாகப் பிரகடனப்படுத்தியமை, இவற்றுடன் 1931இல் டொனமூர் யாப்பு முன்வைக்கப்பட்டதுடன் சர்வஜன வாக்குரிமை கொண்டுவரப்பட்டதுடன் 1945இல் ஊ.று.று கன்னங்கர இலவசக் கல்வியை முன்வைத்தமை முதலானவை காலனித்துவத்தினால் இலங்கை மக்களுக்கு ஏற்பட்ட நன்மைகளாகும்.

 பொருளாதாரத்தில் விருத்தி ஏற்படுத்தியமை தொடர்பாக நோக்குகின்ற போது கறுவா, 1876களில் இறப்பர், 1939களில் தேயிலை, முதலானவற்றினை அறிமுகப்படுத்தியதுடன், இவற்றினைத் தமது நாடுகளுக்கு ஏற்றுமதியும் செய்தனர். இவற்றுடன் முத்து, இரத்தினக்கல், யானைகள், யானைத் தந்தங்கள், ஆமை ஓடுகள் முதலானவற்றினை தமது நாடுகளுக்கு ஏற்றமதி செய்து கொள்ளவும் தமது நாட்டுப் பொருட்களை இறக்குமதி செய்வதற்கும், அந்நியச் செலாவணிகளைப் பெற்றுக்கொள்வதற்கும் வழிவகுத்தமையினால் இலங்கைப் பொருளாதாரம் விருத்தியடைய ஏதுவாக அமைந்தது. மற்றும் தொழிற்சாலைகள் நிறுவப்பட்டமையும் குறிப்பிடத்தக்கதாகும். அதாவது இரும்புத்தொழிற்சாலைகள், கைத்தொழிற்பேட்டைகள் நிறுவப்பட்டன. எடுத்துக்காட்டாக போத்துக்கீசரின் (1530) ஆட்சிக் காலத்தில் சீதாவாக்கையில் அமைக்கப்பட்ட தொழிற்சாலையின் மூலமாக உருக்கிலான போர்க்கவசங்கள், முகமூடிகள் முதலானவை உருவாக்கப்பட்டமையினைக் குறிப்பிடலாம்.

 போக்குவரத்து வசதிகள் மேற்கொள்ளப்பட்டமை தொடர்பாக நோக்குகின்ற போது போத்தக்கீசர்கள் வீதிகளை அமைத்து தமது இலக்குகளை அடைந்தமை, ஒல்லாந்தர்கள் டச்சு வீதிகளை அமைத்தமை, எடுத்துக்காட்டாக யாழ்ப்பாணத்திலுள்ள நச்சிமார் வீதி(டச்சு) முதலானவற்றுடன் பிரித்தானிய கால வீதிகளாக 1825 காலப்பகுதிகளில் கொழும்பு - கண்டி வீதியும், 1830களில் குருநாகல் - கண்டி வீதியும் அமைக்கப்பட்டதுடன், கிழக்கு மாகாணத்தினை இணைக்கும் தம்புள்ள, கந்தளாய், திருகோணமலை வீதிகளும், வடமாகாணத்தினை இணைப்பதற்காக தம்புள்ள, அநுராதபுரம், பருத்தித்துறை, யாழ்ப்பாண வீதிகளும் மற்றும் 1853 - 1863 களில் கொழும்பு – கண்டி புகையிரதப்பாதையும், 1871இல் பேராதனை - நாவலப்பிட்டி, 1905இல் அநுராதபுரம் - யாழ்ப்பாணம், மாகோ – திருகோணமலை - மட்டக்களப்பு புகையிரதப்பாதைகளும் அமைக்கப்பட்டு போக்குவரத்து வசதிகளை ஏற்படுத்தியமையினால் மக்கள் பல்வேறு நலன்களைப் பெற்றுக்கொள்ள இலகுவாகக் காணப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

 வாழ்க்கை முறைகளில் மாற்றம் ஏற்பட்டமை தொடர்பாக நோக்குகின்ற போது போத்துக்கீசர்களின் காலப்பகுதிகளில் தான் நிலையான திருமண முறையானது பின்பற்றப்பட்டமை மற்றும் மத சுதந்திரங்களும், சிந்தனைச் சுதந்திரம், பேச்சுச் சுதந்திரம் வழங்கப்பட்டமை, பிரித்தானியராட்சிக் காலத்தில் கல்வி வளர்ச்சி ஏற்பட்டமை முதலானவைகளின் காரணமாக மக்களின் வாழ்க்கை முறையானது சிறப்பாகக் காணப்பட காரணமாகியமை குறிப்பிடத்தக்கதாகும்.

 இலங்கையை ஆசியாவில் எழுத்தறிவில் இரண்டாவது நாடாக மாற்றிய பெருமைக்கு உரிமம் உடையவைகளாக காலனித்துவ நாடுகளே காணப்படுகின்றன. அதாவது போத்துக்கீசர்கள் கத்தோலிக்க மதத்தினைப் பரப்புவதற்காக கல்விக் கொள்கைகளில் மாற்றங்களை ஏற்படுத்தியமை, ஒல்லாந்தர்கள் புரட்டஸ்தாந்து மதத்தினைப் பரபு;பவதற்காக பாடசாலைகளைப் பயன்படுத்தியமை, பாடசாலைகளை மதகுருக்களின் அதிகாரத்தின் கீழ் வைத்திருந்தமை, ஆண்டு பூராகவும் பாடசாலைகள் இயங்கியமை முதலானவற்றுடன் பிரித்தானியர்கள் ஆங்கிலக் கல்வியை அறிமுகப்படுத்தியமை, மதக்கல்வியை கட்டாயப் படுத்தியமை முதலான செயற்பாடுகளின் காரணமாக மக்களின் கல்வித்தரம் உயர்வடைந்ததுடன் அவர்களினுடைய வாழ்க்கைத்தரம் உயர்வடைய காரணமாக அமைந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

 அச்சுசாலைகள் நிறுவப்பட்டமை தொடர்பாக நோக்குகின்ற போது 1737 காலப்பகுதியில் வான் இம்மோவ் என்பவரினால் கொழும்பில் முதலாவது அச்சு சாலை நிறுவப்பட்டது. இதன் மூலமாக சுவரொட்டிகள் அச்சிடப்பட்டு சட்டரீதியான அம்சங்கள் வெளியிடப்பட்டன. பிற்பட்ட காலங்களில் நூல்கள் வெளியிடப்பட்டன. எடுத்துக்காட்டாக ஒல்லாந்தராட்சிக் காலப்பகுதியில் யாழ்ப்பாண வைபவ மாலை(1736), தேசவழமை (1736), ஹெலேனா கதாவ (1708) எனும் நூல்களும் வெளியிடப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.

 வைத்தியத் துறைகளும் வளர்ச்சியடைந்திருந்தன. அதாவது இலங்கையில் காணப்பட்ட மூலிகைகளை போத்துக்கல் நாட்டுக்கு அனுப்பி பரிசோதனைகள் வருடாவருடம் இடம்பெற்றுவந்தன. இவ்வாறு 169 மூலிகைகள் அனுப்பி வைக்கப்பட்டதாக கொழும்பு அருங்காட்சியகம் குறிப்பிடுகின்றது. ஹேர்மன் என்பவர் இலங்கையின் முதலாவது தாவரவியற் துறையின் புலமையாளர் எனக் குறிப்பிடப்படுகின்றது. அத்துடன் வைத்திய சாலைகள், வைத்திய நூல்கள் என மக்கள் நலன் சார் விடயங்கள் முக்கியம் பெற்றன. உதாரணமாக கொழும்பு, யாழ்ப்பாணம், மயிலிட்டி (காச நோய்) வைத்திய சாலைகள், ஆங்கில மருத்துவ நிலையங்கள் அமைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.

 இவைமட்டுமல்லாது கட்டிடக் கலைகளிலும் சிறந்து விளங்கினார்கள். அதாவது பாதுகாப்பரண்கள், கோட்டைகள் முதலானவை அமைக்கப்பட்டன. எடுத்துக்காட்டாக கொழும்பு, காலி, மன்னார், மட்டக்களப்பு, திருகோணமலை முதலான இடங்களில் அமைக்கப்பட்ட கோட்டைகள் இ;ன்றும் காணப்படுகின்றன.

 இவ்வாறாக பல்வேறு நன்மைகளை காலனித்துவமானது ஏற்படுத்தியிருந்தாலும் பல்வேறு பாதிப்பக்களையும் ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும். அந்தவகையில் பாதக விளைவுகளை நோக்குகையில் எடுத்தக்காட்டாக “ இங்கு (இலங்கையில்) எல்லாவகையான மரங்களும் மிகத் தாராளமாகக் உள்ளமையினால் கட்டிடங்களுக்கும், கப்பல் கட்டுவதற்கும் , நீங்கள் விரும்புகின்ற அளவுகளில் விதவிதமாக படகுகளுக்கு வேண்டிய பாய்மரக் கப்பல்களுக்குரிய மரங்கள், கயிறுகள் போன்றவற்றை இங்கிருந்து இலகுவாகப் பெற்றுக் கொள்ளலாம். மற்றொரு சிறப்பான அம்சம் என்னவென்றால் இலங்கைக்கு மிகவும் அண்மையில் மாலைதீவுகளும் அமைந்துள்ளமையினால் அங்கிருந்தும் ஏராளமாக” என போத்துக்கீசத் தளபதி தெரிவித்திருந்தமையானது குடியேற்ற நாடுகளின் வளங்களை சுரண்டுவதன் நோக்கத்தினை வெளிப்படுத்துவதாகவே அமைந்துள்ளது.

 காலனித்துவ ஆட்சியாளர்களினால் நாட்டின் இறையாண்மை, நிர்வாகக் கட்டமைப்புக்களில் பாதிப்பு ஏற்படுத்தப்பட்டமை. அதாவது நாட்டின் தனித்தவம் இழக்கப்பட்டு அடிமை நிலை ஏற்படுத்தப்பட்டது. மற்றும் நிர்வாக கட்டமைப்பில் உரோம, டச்சு சட்டங்கள் அமுல்படுத்தப்பட்டு வருகின்றமை, சுயாதினமாக செயற்பட முடியாத நிலமை முதலானவை நாட்டின் சுதேசியத்தை இழக்கச் செய்து வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும். இவை காலனித்தவம் ஏற்படுத்திய பாதக விளைவாகும்.

 காலனித்துவ ஆட்சியாளர்களினால் கலாசார சீரழிவுகள் ஏற்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும். அதாவது தமது நாட்டுக்கே உரித்தான பழக்கவழக்கங்கள், மொழி, மதம் முதலானவை தமது சுயத்தினை இழந்து வருகின்றமையைக் குறிப்பிடலாம். அதாவது மேற்கத்தேய முறையிலான திருமண அமைப்பு முறைகள், குடும்பங்களின் கட்டமைப்பு மாறுதலடைந்து வருகின்றமை(தனிக்குடும்ப அமைப்பு), மக்களின் உடை அமைப்பானது பட்டுச்சேலை,சட்டையிலிருந்து நீங்கி மேற்கத்தேய சாயலைப் பின்பற்றுகின்றமை, உணவுப்பழக்கங்கள் நெல் அரிசியில் இருந்து தானிய வகைக்கு மாறிவருகின்றமை, வாழ்க்கை முறைகளில் உறவுமுறைகளின் தனித்துவம் இழக்கப்பட்டு வருகின்றமை, மற்றும் வேற்று மொழிக் கலப்புக்கள் இடம்பெற்று வருகின்றமை. அதாவது ஆங்கில மொழியின் ஊடுபரவல் , போத்துக்கீச, டச்சு மொழிகள் சுதேசிய மொழிகளுடன் கலத்தல், மதமாற்றங்கள் ஏற்படல். அதாவது கத்தோலிக்க , புரட்டஸ்தாந்து மதங்கள் பரவுதல், பல்வேறு இனக்கலப்புக்கள் ஏற்படல். எடுத்துக்காட்டாக பறங்கிய இனத்தினைக் குறிப்பிடலாம். மற்றும் உறைவிட அமைப்புக்கள் முதலானவை மேற்கத்தேயப் பாணிகளைக் பின்பற்றியதாகவே காணப்படுகின்றது. இதனால் நாட்டின் தனித்துவம் பாதிக்கப்படுகின்றது.

 இவற்றுடன் இனப்பிரச்சினைகள், சமூகப்பிணக்குகள் முதலானவற்றை ஏற்படுத்தியமை இவர்களின் முக்கிய தந்திரமாகும். தமது நாட்டிற்கு தளர்வு ஏற்படாத படி வளங்களைப் பெற்றுக் கொள்வதற்காக இவர்கள் நாட்டினை விட்டு செல்லும் போது பிணக்குகளை உருவாக்கிச் சென்றதாக வரலாற்றாசிரியர்கள் குறிப்பிடுகின்றனர். இதன் விளைவாகவே இலங்கையில் இடம்பெற்று வந்த முப்பது வருட கால இனப்பிரச்சினையாகும்.

 இவ்வாறாக தற்காலத்திலும் காலனியாதிக்கம் என்பது நேரடியாக இடம்பெறாவிட்டாலும் மறைமுகமாக தொடர்ந்து இடம்பெற்றுக் கொண்டே காணப்படுகின்றது என்பது அனைவரும் அறிந்த உண்மையாகும். அதாவது பல்தேசியக் கம்பனிகள் இன்றும் இலங்கையில் தமது செயற்பாட்டினை மேற்கொண்டிருப்பதுடன் , மதமாற்றங்கள் இடம்பெற்று வருகின்றமையும், நாட்டின் உள்விவகாரங்களில் தலையீடு செய்வதனையும் காணக்கூடியதாக உள்ளது. மற்றும் பெருந்தோட்ட வர்த்தகப் பொருட்கள் ஏற்றுமதி செய்யப்படுவதுடன் இறக்குமதிப் பொருட்கள் அதிகரித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கதாகும். இவ்வாறான நிலமையானது இலங்கையானது காலனித்துவ ஆதிக்கத்திலிருந்து சுதந்திரம் பெறாத நிலையினை வெளிப்படுத்துவதாகவே அமைகின்றது.

 இவ்வாறாக காலனித்துவம் என்பது பலவீனமான மக்கள் தொகுதி அல்லது பிராந்தியக் குழுக்களின் மேலாதிக்கம் சார்ந்த அதிகாரம் அல்லது கட்டுப்பாட்டினைப் பிரயோகிக்கும் செயற்பாட்டுடன் தொடர்புடைய கொள்கைகளும், பிரயோகங்களும் காலனித்துவம் எனப்படுகின்றது. இலங்கையில் மூன்று காலகட்டங்களில் காலனிய ஆட்சி காணப்பட்டது. போத்துக்கீசரின் ஆட்சிக்காலப்பகுதி (1505-1658), ஒல்லாந்தரின் ஆட்சிக்காலப்பகுதி (1658-1796), பிரித்தானியரின் ஆட்சிக்காலப்பகுதி (1796-1948) முதலானவையாகும். இதனால் பல்வேறு சாதக, பாதக விளைவுகள் ஏற்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும். சாதக விளைவுகளாக அரசியல் கட்டமைப்பக்களில் மாற்றங்கள் கொண்டுவரப்பட்டமை, பொருளாதார விருத்தி ஏற்பட்டமை, தொழிற்சாலைகள் நிறுவப்பட்டமை, போக்குவரத்து வசதிகள் மேற்கொள்ளப்பட்டமை, சமூக முன்னேற்றம் ஏற்பட்டமை, வாழ்க்கை முறைகளில் மாற்றம் ஏற்பட்டமை, மொழிக்கலப்புக்கள் ஏற்பட்டமை, கல்வி செயற்பாடுகள் விருத்தி செய்யப்பட்டமை முதலானவற்றுடன் பாதக விளைவுகளாக கலாசார சீர்குலைவுகள், வாழ்க்கை முறைகளில் மாற்றம், மதமாற்றங்கள் முதலான பாதிப்புக்களும் ஏற்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும். இவ்வாறான பல்வேறு விடயங்களைக் கொண்டதாக இலங்கையில் காலனித்துவம் காணப்படுகின்றது.