Sunday 26 March 2017

MAHABHARAT மகாபாரதம் வாழ்க்கையின் விதை


MAHABHARAT மகாபாரதம் வாழ்க்கையின் விதை





மகாபாரதம் வாழ்க்கையின் விதை
மகாபாரதம் ஒரு படிப்பினை -
வாழ்க்கையின் தத்துவங்களை கதையாய் அடுக்கி சொல்பவை -

மகாபாரத்தில் ஒவ்வொரு பாத்திரமும்
எப்படி நாம் வாழவேண்டும் ,நாம் எப்படி வாழக்கூடாது என்று சொல்பவை
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@


“மகாபாரதம் ஒரு இதிகாசம். ஒரு மாபெரும் காவியம். அது உண்மை என்பதை விட அது ஒரு தத்துவம்.
அதை தான் அனைவரும் புரிந்துகொள்ள முயற்சிக்கவேண்டும்…”
அந்த காவியுடை பெரியவர் வருணைப் பார்த்து மர்மப் புன்னகை ஒன்றை உதிர்த்தார்.
“அது என்ன தத்துவம் ஐயா?
எனக்கு கொஞ்சம் விளக்குங்களேன்…”
“நிச்சயம்! அதற்காகத் தானே வந்திருக்கிறேன்”
“பஞ்சபாண்டவர்கள் வேறு யாருமல்ல. கண், காது, மூக்கு, வாய், மெய் ஆகிய நம் ஐம்புலன்கள் தான்!!!!

கௌரவர்கள் யார் தெரியுமா?”
“………………..”
“இந்த ஐந்துபுலன்களை தினந்தோறும் தாக்கி தங்களுக்கு இரையாக்க முயற்சிக்கும் தீமைகள் தான் கௌரவர்கள்!!!”
“………………..”
“எண்ணிக்கையில் பெரிதான இவர்களை எதிர்த்து உன்னால் (ஐம்புலன்களால்) போரிட முடியுமா?
“………………..”
“முடியும்…! எப்போது தெரியுமா?”

வருண் மலங்க மலங்க விழித்தான்.
“கிருஷ்ண பரமாத்மா உன் தேரை செலுத்துவதன் மூலம்.”
வருண் சற்று பெருமூச்சு விட்டான்.
பெரியவர் தொடர்ந்தார்.
“கிருஷ்ணர் தான் உன் மனசாட்சி. உன் ஆன்மா. உன் வழிகாட்டி. அவர் பொறுப்பில் உன் வாழ்க்கையை நீ ஒப்படைத்தால் எதற்கும் கவலைப்பட வேண்டியதில்லை.”
வருண் பெரியவர் சொல்வதை கேட்டு மெய்மறந்து போனான். ஆனால் வேறொரு சந்தேகம் அவனுக்கு தோன்றியது.“கௌரவர்கள் தீயவர்கள் என்றால் அப்போது பெரியவர்களான துரோணாச்சாரியாரும் பீஷ்மாரும் அவர்கள் பக்கம் நின்று அவர்களுக்காக போரிடுகிறார்கள்?”

“வேறொன்றுமில்லை…. நீ வளர வளர உனக்கு மூத்தவர்கள் குறித்த உன் கண்ணோட்டம் மாறுகிறது.
நீ வளரும் காலகட்டங்களில் யாரெல்லாம் குற்றமற்றவர்கள், அப்பழுக்கற்றவர்கள் என்று எண்ணினாயோ அவர்கள் உண்மையில் அப்படி கிடையாது.
அவர்களிடமும் தவறுகள் உண்டு என்று உணர்கிறாய்.
எனவே அவர்கள் உனது நன்மைக்காக இருக்கிறார்களா, அவர்கள் உனக்கு தேவையா இல்லையா என்று நீ தான் தீர்மானிக்க வேண்டும்.”
“மேலும் அவர்கள் உன் நன்மைக்காக போராடவேண்டும் என்று நீ ஒரு கட்டத்தில் விரும்புவாய்.

இது தான் வாழ்க்கையின் கடினமான பகுதி.
கீதையின் பாடமும் இது தான்.”
வருண் உடனே மண்டியிட்டு தரையில் அமர்ந்தான்.
களைப்பினால் அல்ல. கீதை உணர்த்தும் பாடத்தை ஓரளவு புரிந்ததும் அதன் மீது ஏற்பட்ட பிரமிப்பினால்.
“அப்போது #கர்ணன்?” அவன் கேள்வி தொடர்ந்தது.
“விஷயத்துக்கு வந்துவிட்டாய் மகனே.
உன் ஐம்புலன்களின் சகோதரன் அவன். அவன் பெயர் தான் ஆசை. மோகம். அவன் உன் இந்திரியங்களின் ஒரு பகுதி. உன்னுடன் பிறந்தவன்.
ஆனால், தீமைகளின் பக்கம் தான் எப்போதும் நிற்பான்.

தான் செய்வது தவறு என்று அவனுக்கு தெரியும். ஆனாலும் ஏதேனும் சாக்குபோக்கு சொல்வான். உன் விருப்பம் போல. ஆசை போல.”

CHANDRA SHEKHAR AZAD சந்திரசேகர ஆசாத்.!




CHANDRA SHEKHAR AZAD

சந்திரசேகர ஆசாத்.!




சந்திரசேகர ஆசாத்.!
பகத்சிங்கை "தம்பி இன்குலாப்.!"என்று அன்புடன் அழைத்தவர்.

இந்திய வரலாற்றிலேயே முதல்முறையாக ஒரு புரட்சிக்காரனை பிடிக்க முடியவில்லை என்று ஆங்கில அரசு கோர்ட்டில் அறிக்கை தாக்கல் செய்த புகழுக்கு சொந்தக்காரர்.



மாறுவேடமிடுவதில் கில்லாடி.சாண்டர்ஸனை சுட்டு விட்டு தப்பிய பகத்சிங்கை பிடிக்க முயன்ற கான்ஸ்டபிள் சனான்சிங்கை சுட்டு தள்ளி பகத்தை தப்பிக்க வைத்தவர்.
அலகாபாத்பூங்கா ஒன்றில் நண்பர்களை சந்திக்க காத்திருந்தவரை துரோகி ஒருவன் காட்டிக் கொடுக்க போலீஸ் சுற்றி வளைத்தது.
உத்திரபிரதேச காவல்துறை உயர் அதிகாரியாக பணியாற்றிய ஹார்லிஸ் என்பவர் தனது ‘பணிக்கால நினைவலைகள்’ என்ற தலைப்பில் (1958 அக்டோபர் மாத ‘Men only’ ஆங்கில மாத இதழில்) ஆசாத்தை சுட்டுக் கொன்ற நிகழ்ச்சி குறித்து கீழ்க்கண்டவாறு எழுதியுள்ளார்.
"ஆசாத்தின் முதல் துப்பாக்கிக் குண்டு வெள்ளைக்கார காவல்துறை கண்காணிப்பாளர் நாட்பாவர் கையைப் பதம் பார்த்தது. காவலர்கள் புதர்களில் மறைந்திருந்து ஆசாத்தை குறிபார்த்துச் சுட்டனர்.

மற்றொரு காவல் துறை கண்காணிப்பாளர் விஸ்வேஸ்வரர்சிங் குறிபார்த்துச் சுட்டார். தனது உடலில் மூன்று, நான்கு குண்டுகள் துளைத்துக் குருதி ஒடிக் கொண்டிருந்த நிலையிலும், தன்னைச் சுட்ட விஸ்வேஸ்வர்சிங்கின் முகத்தைக் குறிபார்த்துச் சுட்டு அவரது தாடைகளைச் சிதறடித்தார்.
ஆசாத்தின் கடைசியானதும், ஆனால், பாராட்டுக்குரியதுமான செயல்திறமை அவர் குறி தவறாமல் சுடுவதே" என்று குறிப்பிட்டுள்ளார்.ஆசாத்தின் மீதிருந்த பயத்தால் மூன்று மணி நேர காத்திருப்புக்கு பிறகு இறப்பு உறுதியான பின்பே உடலை நெருங்க முடிந்தது.!
ஆசாத்தை சுட்டுத் தள்ளிய ஆர்பர்ட் பூங்காவில் இருந்த மரத்தில் துப்பாக்கிக் குண்டுகள் பதிந்தன. அந்த மரம் மக்களின் தெய்வமானது. பல்லாயிரக்கணக்கான இளைஞர்களும், பொதுமக்களும் வந்து மரத்தை வணங்கி மரியாதை செலுத்தினர்.

எரிச்சலுற்ற பிரிட்டிஷ் அரசு அந்த மரத்தையே வெட்டி வீழ்த்தியது!தீரமாக போராடி மரித்த போது February 27, 1931ஆஸாத்தின் வயது பகத்தை போலவே இருபத்தி நான்கு.!









February 27, 1931


Achievements: Involved in Kakori Train Robbery (1926), the attempt to blow up the Viceroy's train (1926), and the shooting of Saunders at Lahore (1928) to avenge the killing of Lala Lajpatrai; formed Hindustan Socialist Republican Association with fellow compatriots Bhagat Singh, Sukhdev, and Rajguru. Chandrashekhar Azad was a great Indian freedom fighter. His fierce patriotism and courage inspired others of his generation to enter freedom struggle. Chandrasekhar Azad was the mentor Bhagat Singh, another great freedom fighter, and along with Bhagat Singh he is considered as one of the greatest revolutionaries that India has produced. Chandra Shekhar Azad was born on July 23,1906 in Badarka village of Unnao district in Uttar Pradesh. His parents were Pandit Sitaram Tiwari and Jagarani Devi.Pandit Sitaram Tiwari was serving in erstwhile estate of Alirajpur (situated in present day Madhya Pradesh) and Chandra Shekhar Azad's childhood was spent in the village Bhabra . On the insistence of her mother Jagrani Devi, Chandra Shekhar Azad went to Kashi Vidyapeeth, Benaras for studying Sanskrit. Chandrashekhar Azad was deeply troubled by the Jallianwala Bagh Massacre in Amritsar in 1919. In 1921, when Mahatma Gandhi launched Non-Cooperation movement, Chandrasekhar Azad actively participated in revolutionary activities. He received his first punishment at the age of fifteen. Chandra Shekhar was caught while indulging in revolutionary activities. When the magistrate asked him his name, he said "Azad" (meaning free). Chandrashekhar Azad was sentenced to fifteen lashes. With each stroke of the whip the young Chandrasekhar shouted "Bart Mata Kid Jai". From then on Chandrashekhar assumed the title of Azad and came to known as Chandrashekhar Azad. Chandrashekhar Azad vowed that he would never be arrested by the British police and would die as free man. After the suspension of non-cooperation movement Chandrashekhar Azad was attracted towards more aggressive and revolutionary ideals. He committed himself to complete independence by any means. Chandrashekhar Azad and his compatriots would target British officials known for their oppressive actions against ordinary people and freedom fighters. Chandrashekhar Azad was involved in Kakori Train Robbery (1926), the attempt to blow up the Viceroy's train (1926), and the shooting of Saunders at Lahore (1928) to avenge the killing of Lala Lajpatrai. Along with Bhagat Singh and other compatriots like Sukhdev and Rajguru, Chandrashekhar Azad formed the Hindustan Socialist Republican Association (HRSA). HRSA was committed to complete Indian independence and socialist principles for India's future progress. Chandrashekhar Azad was a terror for British police. He was on their hit list and the British police badly wanted to capture him dead or alive. On February 27, 1931 Chandrashekhar Azad met two of his comrades at the Alfred Park Allah bad. He was betrayed by an informer who had informed the British police. The police surrounded the park and ordered Chandrashekhar Azad to surrender. Chandrashekhar Azad fought alone valiantly and killed three policemen. But finding himself surrounded and seeing no route for escape, Chandrashekhar Azad shot himself. Thus he kept his pledge of not being caught alive.Read more at http://www.iloveindia.com/indian-…/chandrashekhar-azad.html…

அமெரிக்கா ஐரோப்பாவில் கூட இஸ்லாமிய அடிப்படைவாதத்திற்கு எதிராக பேசுபவர்கள் தான் ஆட்சிக்கு வரமுடியும்



அமெரிக்கா ஐரோப்பாவில் கூட இஸ்லாமிய அடிப்படைவாதத்திற்கு எதிராக பேசுபவர்கள் தான் ஆட்சிக்கு வரமுடியும்

நம்முடைய பகுதி இஸ்லாமியர்கள் அதிகம் வசிக்கும் பகுதி என்பதால் பல இஸ்லாமிய நண்பர்கள் உண்டு முன்பெல்லாம் பலரின் வீடுகளுக்கு நேரம் காலம் பார்க்காமல் செல்வோம் அந்த நண்பர்கள் எங்களுடன் முழு நேரமும் சுற்றுவார்கள் கிரிக்கெட் விளையாடுவோம் பல மணி நேரங்கள் அரட்டை அடித்துக்கொண்டு இருப்போம்

 இன்று மெல்ல அவர்களில் பலர் நட்பு வட்டத்தில் இருந்து விலகி விட்டார்கள் சிலர் வெறும் ஹலோ நண்பர்கள் ஆகிவிட்டார்கள் என்னை விட வயது முதிர்ந்த இஸ்லாமிய நண்பர்கள் கூட என்னிடம் நல்ல உறவு கொண்டிருந்தார்கள் இன்று அவர்களே சிறிது தள்ளி தான் இருக்கிறார்கள் பொதுவாகவே இஸ்லாமியர்கள் ஹிந்துக்களிடம் இருந்து விலகி போக ஆரம்பித்து விட்டார்கள் தமிழ்நாடு போன்ற மாநிலத்தில் இது நடக்கும் என்று நாம் கற்பனை கூட செய்திருக்க முடியாது.


முன்பெல்லாம் அவர்கள் வீட்டு பெண்கள் புடவையை தலைப்பாக சுற்றியிருப்பார்கள் இல்லை வெள்ளையாக ஒரு அங்கி இருக்கும் அதை மேலே சுற்றிக்கொண்டு இருப்பார்கள் இளம் பெண்கள் நம் வீட்டு பெண்களை போல் தான் இருந்தார்கள் அவர்கள் எல்லா சுதந்திரத்தையும் அனுபவித்தார்கள் அயத்துல்லா கொமேனி ஈரானில் கல்லூரி படிக்கும் பெண்களை கருப்பு அங்கியால் மூடியபோது கூட நம் ஊர் பெண்கள் சாதாரண ஆடைதான் அணிந்திருந்தார்கள் பாரதவிலாஸ் என்ற ஒரு சிவாஜி படம் நினைவிருக்கும் அதில் வி.கே.ராமசாமி மற்றும் ராஜசுலோச்சனா ஒரு கேரளா மாப்பிளா முஸ்லீம் ஜோடியாக நடித்திருப்பார்கள்

அதில் கூட ராஜசுலோச்சனா பாவாடை சட்டை போன்ற ஒரு உடை தான் அணிந்திருப்பார் பின்னந்தலையில் ஒரு அங்கி தொங்கும் அவ்வளவு தான் 











இன்று கேரளா முஸ்லிம்கள் முழு கருப்பு உடையில் தான் தங்கள் வீட்டு பெண்களை வைத்திருக்கிறார்கள்.
முன்பெல்லாம் இஸ்லாமிய இளைஞர்கள் நீண்ட ஜிப்பாவும் மார்பு வரை புரளும் தாடியும் முக்கா காலிற்கு கைலியும் அணிந்தெல்லாம் பார்த்தது கிடையாது இன்று 20 வயது பையன்கள் கூட அதை போல் திரிகிறார்கள்.

 கல்லூரி படிக்கும் பையன்கள் கூட லேசாக தாடி வைத்துக்கொள்கிறார்கள் கேட்டால் மார்க்கம் என்கிறார்கள் திடீரென்று இவர்கள் இப்படி மாற காரணம் என்ன.
மௌல்விகளும் முல்லாக்களும் இருக்கும் தோரணையில் சாதாரண மக்கள் இருக்க என்ன காரணம் இவர்கள் நமக்கு எதை உணர்த்துகிறார்கள்
.
ஈரான் ஈராக் சண்டை நடந்த போதும் அமெரிக்காவின் டெல்டா போர்ஸ் படை ஈரானில் தன்னுடைய தூதரகத்தில் மாட்டிக் கொண்டிருந்தவர்களை மீட்க தாக்குதல் நடத்தியபோதும் சதாம் ஹுசைன் குவைத்தை ஆக்ரமித்தபோதும் சோவியத் ரஷ்யா ஆப்கானிஸ்தானை ஆக்கிரமித்த போதும் எந்த சலனமும் காட்டாதவர்கள் இன்று இஸ்ரேல் பாலஸ்தீன் பிரச்சனையில் போஸ்டர் அடித்து ஒட்டுகிறார்கள் அமெரிக்கா ஆப்கானை ஆக்ரமித்துவிட்டது என்று புலம்புகிறார்கள் இவர்கள் எப்படி சர்வதேசமயமானார்கள்.


இன்று உலகின் இரண்டாவது பெரிய மதம் எப்படி தன்னை மற்றவர்கள் வஞ்சிக்கிறார்கள் என்று குற்றம் சொல்லி தன்னை பாதிக்கப்பட்டவனாக ஆக்குகிறது. சோவியத் ரஷ்யா ஆப்கானை ஆக்ரமித்தபோது வாளாவிருந்த இந்திய கம்யூனிஸ்ட் தலைவர்கள் இன்று இஸ்ரேல் பாலஸ்தீனில் குண்டு போடுகிறது என்று பாராளுமன்றத்தை முடக்குகிறார்கள் என்ன நடக்கிறது இங்கே.




இஸ்ரேலில் 20% அரேபிய முஸ்லிம்கள் வசிக்கிறார்கள் உயர்பதவிகளில் இருக்கிறார்கள் ஆனால் ஈரானிலோ ஈராக்கிலோ சவுதியிலோ ஒரு சதவீதம் யூதர்கள் கூட கிடையாது 

ஆனால் இந்த நிலங்களில் அவர்கள் வரலாற்று காலம் தொட்டே பல்கி பெருகி வாழ்ந்தவர்கள் துருக்கிய ஆட்டமன் அரசு காலத்தில் வாழ்ந்த அவர்களால் இந்த நவநாகரீக உலகில் இதே இடங்களில் வாழமுடியாமல் போன காரணம் என்ன. சவுதியின் வாஹாபி இஸ்லாமின் நீட்சியா இது.



இன்று பாரூக் என்ற இஸ்லாமியர் கோவையில் படுகொலை செய்யப்பட்டிருக்கிறார் அவர் பெரியார் விடுதலை கழகத்தை சேர்ந்தவர் கடுமையான நாத்திகம் பேசினார் என்று சொல்கிறார்கள் அதற்காக அவரின் நண்பர்களே அவரை கொலை செய்யும் வரை சென்றிருக்கிறார்கள்.
ஹிந்து கடவுள்களை பற்றி இந்த பெரியார் திராவிட கும்பல் பேசாத பேச்சா அதற்காக அவர்கள் படுகொலையா செய்யப்பட்டார்கள். என்னிடமே சண்டைக்கு வந்த திராவிட கழக நண்பர்கள் இருக்கிறார்கள் கைகலப்பு கூட நடந்திருக்கிறது அதற்காக யாரும் இந்த எல்லைக்கு போனதில்லையே. கிறிஸ்தவர்கள் தங்கள் மதத்தை பற்றி வைக்காத விமர்சனமா அவர்களின் சீர்திருத்தவாதிகள் அவர்களில் இருந்தே எழுந்தல்லவா வந்தார்கள் இஸ்லாம் மட்டும் மீண்டும் மீண்டும் தன்னை ஒரு கூட்டுக்குள் அடைத்துக்கொள்ளும் காரணம் என்ன.

மற்றவர்களிடம் நேசக்கரம் நீட்டாமல் மறுப்பதன் நோக்கம் என்ன. 1000 வருடங்கள் பழமைக்கு செல்வேன் என்று இந்த நவீன யுகத்தில் அடம்பிடிப்பதன் காரணம் தான் என்ன.



இன்று உலகம் முழுக்க தீவிரவாத செயல்களில் ஈடுபடுபவர்களாகவும் பலரின் பயத்திற்கும் வெறுப்பிற்கும் ஆளானவர்களாக அவர்கள் மாறிக்கொண்டு இருக்கிறார்கள் இது அவர்களுக்கே தெரியுமா என்று தெரியவில்லை இன்று அமெரிக்கா ஐரோப்பாவில் கூட இஸ்லாமிய அடிப்படைவாதத்திற்கு எதிராக பேசுபவர்கள் தான் ஆட்சிக்கு வரமுடியும் என்ற நிலை வந்திருக்கிறது இது அவர்களுக்கு நல்லதல்ல.இன்று நம் அறிவுஜீவிகள் கடைபிடிக்கும் கள்ள மௌனத்தின் மூலம் இதை கண்டும் காணாமலும் இருந்துவிட்டால் மறுமையில் கூட இதற்கு மன்னிப்பு கிடையாது என்பதே நிதர்சனம்..

Friday 24 March 2017

“இந்தியப் பெண்மணிகளுக்கு உடனடி தேவை பெண் மருத்துவர்கள்”- இறைவனின் வார்த்தை


“இந்தியப் பெண்மணிகளுக்கு உடனடி தேவை பெண் மருத்துவர்கள்”- இறைவனின் வார்த்தை


தமிழ் நாட்டில், திண்டிவனம் என்ற நகரை எல்லோரும் அறிந்திருப்பார்கள். அந்த நகரில் ஒரு இரவு பொழுது மின்சாரம் இல்லாத காலம்., வருடமோ 1890. அந்த கிறிஸ்தவ மிஷின் பங்களாவில், சிம்னி விளக்குவெளிச்சத்தில், 20 வயதான அமெரிக்க நங்கை ஆங்கில நாவல் படித்துக் கொண்டிருந்தாள். அவளின் பெயர் :ஐடா சோபியா ஸ்கட்டர்.
 
அமெரிக்காவில் கிறிஸ்தவ இறை பணி செய்ய பயிற்சியும் பெற்ற இவளது தந்தை ஜாண் ஸ்கட்டர், திண்டிவனத்தில் மருத்துவ சேவையையும், இறை பணியும் செய்து வந்தார். தந்தையை பார்க்க திண்டிவனத்துக்கு ஐடா சோபியா ஸ்கட்டர் வந்திருந்த போதுதான், இரவு நேரத்தில் அந்த சோக காட்சிகள் அரங்கேறின…. ஐடா ஸ்கட்டர், நாவல் புத்தகத்தை படித்துக்கொண்டு இருந்த போது, தலையில் குல்லா அணிந்திருந்த ஒரு இஸ்லாமியர் ஓடி வந்து, கதவை தட்டினார்.
கதவை திறந்த போது அந்த இஸ்லாமியர்,”எனது மகளுக்கு இது தலை பிரசவம்., அவள் பிரசவ வேதனையால் துடிக்கிறாள்., அவளுக்கு பிரசவம் பார்க்க நீங்கள் வாருங்கள்” என்று கதறினார். இதனை கேட்ட ஐடா ஸ்கட்டர், “ நான் டாக்டர் அல்ல., எனது தந்தையார்தான், மருத்தவர். உங்கள் மகளுக்கு பிரசவம் பார்க்க, எனது தந்தையை அனுப்புகிறேன்” என்று கூற, அந்த இஸ்லாமியரோ,” எங்கள் மத வழக்கத்தின் படி, ஒரு பெண்ணின் பிரசவத்தை, ஒரு பெண்தான் பார்க்க வேண்டும்” என்று கூறி மறுத்து விட்டு,வெளியேறினார். சிறிது நேரத்தில், அந்த இஸ்லாமியரின் மகள், பிரசவத்தில் இறந்து விட்டார் என்ற தகவலை கேட்ட ஐடா ஸ்கட்டர் மிகுந்த வேதனை அடைந்தார்.

இது போல, ஒரு இந்து கர்ப்பிணி பெண்ணுக்கு, ஆண் மருத்துவரான ஐடா ஸ்கட்டரின் தந்தையை பிரசவம் பார்க்க அனுமதிக்காததால், அந்த பெண்ணும் இறந்து போனாள். இந்த சம்பவமும் ஐடா ஸ்கட்டரின் மனதில் மிகுந்த துக்கத்தை ஏற்படுத்தியது. இப்படியாக ஏராளமான இஸ்லாமிய பெண்களும், இந்து பெண்களும், “ பிரசவத்தினை, ஆண் மருத்துவர்களை பார்க்க அனுமதிப்பது இல்லை., பெண் மருத்துவர் மட்டுமே பார்க்க வேண்டும்” என்ற ஒரே காரணத்தினால் இறந்து போனார்கள். இதனால், ஐடா ஸ்கட்டர் அமைதி இழந்து போனார்.

ஒருநாள் இரவில் அவரின் உள் மனதில் தோன்றிய உள்ளொளி
,” நீ டாக்டர் ஆக வேண்டும்., இது போன்று இந்தியாவில் கர்ப்பிணி பெண்களை சாக விடக்கூடாது” என்ற இறைவனின் வார்த்தைகளை உறுதியாக உணர்ந்தாள். “இந்தியப் பெண்மணிகளுக்கு உடனடி தேவை பெண் மருத்துவர்கள்” என்ற இறைவனின் வார்த்தைகளை, அன்றே உணர்ந்து கொண்டாள்., அவர்களுக்காக தன்னையே அப்போது அர்ப்பணம் செய்து கொண்டாள். அதை கடவுளின் அழைப்பாகவும் உறுதியாக ஏற்றாள். அந்த கணத்திலேயே, அவள் தனது திருமணம் பற்றிய எண்ணத்தையும் கைவிட்டாள்.

அதன்பின், அமெரிக்கா சென்று, 1893–ம் வருடம் நியூ யார்க் நகரில் கார்நெல் பல்கலைக்கழகமருத்துவக்கல்லூரியில் சேர்ந்தாள். 1899-ம் ஆண்டில் அவர் தேர்ச்சியுற்று மருத்துவரானார். உடனே தமிழ் நாடு திரும்பினார். அப்போது அவரது தந்தை, வேலூரில் இறை பணியுடன், மருத்துவ பணியையும் செய்துவந்தார்.

1902-ம் வருடம் ஒரு சிறு மருத்துவமனையை வேலூரில் அமைத்து தனது மருத்துவ சேவையை ஐடா ஸ்கட்டர் தொடங்கினார். அதுதான் இன்றைய சி.எம்.சி. மருத்துவ மனையாகும். இதன் தொடர்ச்சியே, ஷெல் கண் மருத்துவமனையும், மருத்துவ கல்லூரியும், செவிலியர் பயிற்சி கல்லூரியுமாகும். 1960-ம் வருடம் மே மாதம் 24-ம் நாள் அதிகாலையில் ஐடா இறைவனிடம் சேர்ந்தார். அப்போது அவருக்கு வயது 90. அப்போது அவருக்கு, சிறப்பு தபால் தலை வெளியிட்டு பெருமை சேர்த்தது, இந்திய அரசு!!!.

மகாத்மாவின் இறுதி நேரம் .....


மகாத்மாவின் இறுதி நேரம் .....



மகாத்மாவின் இறுதி நேரம் .....

மஹாத்மா காந்தி சரியாக மாலை 5 மணிக்கு பிரார்த்தனைக்கு கிளம்பி விடுவார் .அவருக்கு தாமதம் பிடிக்காது .ஆனால் அன்று வல்லபாய் படேலுடன் முக்கியமான சர்ச்சையில் ஈடுபட்டிருந்தார் .சுதந்திரம் அடைந்ததும் படேலை முக்கிய மந்திரி பொறுப்பிலும் ,நேருவை பிரதமராகவும் ஆக்கி விட்டிருந்தார் படேல் தன் பதவியை ராஜினாமா செய்ய உத்தேசிப்பதாய் கூறியது காந்தியை  சற்று கோபம் கொள்ள செய்திருந்தது .எனவே அவரை சமாதானம் செய்ய மெனக்கெட வேண்டியிருந்தது 

அப்போது மனுகாந்தி கத்தியவாரிலிருந்து ரெண்டு பேரு வந்திருக்காங்க .உங்களைப்பார்த்து பேசணுமாம் ..என்கிறார் 

இப்போ நேரம் இல்லை .இன்னைக்கு பிரார்த்தனை முடிஞ்சதும் உயிரோட இருந்தேன்னா அவங்களோட பேசுறேன்   என்கிறார் காந்தி சூடாக 

மணி ஐந்தாக போகிறது .நேரத்தை நினைவூட்ட சில ஆரஞ்சு சுளைகள் ,காய்கறி ஜூஸ் ,14  அவுன்ஸ் ஆட்டுப்பால் அவர் முன் வைத்தார்கள் .காந்தி நூல் ஒரு கையால்  நூற்றுக்கொண்டே படேலுடன் பேசிக்கொண்டிருந்தார் காந்தியின் கடிகாரம் அவர் முன் காட்டப்பட்டாலும் அவர் அக்கறை காட்ட வில்லை 

படேலின் மகள் மணிபென் ' பாபுஜி உங்களுக்கு பிரார்த்தனை க்கு நேரமாகிறது அப்போது கடிகாரத்தை பார்த்தவர் அதிர்ந்தார் .மணி 5.10 

பாபுஜி நீங்கள் நேரத்தை கவனிக்காமல் ,நினைவூட்டினாலும் புரியமாட்டீர்கள் என்று சொன்ன பேத்தியை ,மனு காந்தியை கண்டித்தார் .
உங்களோடு படேல் இருந்ததால் தயங்கினோம்
படேல் என்ன ? அந்த ராமபிரானே வந்தாலும் நாம் நம் கடமையில் இருந்து தவறக்கூடாது !
தாமதமாகிவிட்ட காந்தி குறுக்கு வழியில் தன் பேத்திகள் அபா,மனு இருவர் தோளிலும் கைபோட்டு வேகமாய் வந்து கொண்டிருந்தார் .அந்த பாதையின் முடிவில் கோட்ஸே நின்று கொண்டிருந்தார்

இதை எதிர்பாராத கோட்ஸே சட்டென்று துப்பாக்கியை சரி செய்தார் 
காந்தியை கண்டவர்கள் வழி விட்டு ஒதுங்க கோட்ஸே மட்டும் பாதையை மறித்து நமஸ்தே என்று கூறி குனிந்தார் 
சகோதரரே ! நேரமாகி விட்டது வழி விடுங்கள் என்று கோட்ஸே யை நோக்கி நடந்தார் மனுகாந்தி கோட்ஸே விற்கு இன்னொரு பயம் ! இந்த பெண் காந்தியின் குறுக்கே விழுந்தால் ...

இடது கையால் மனுகாந்தியை தள்ளிவிட்டு துப்பாக்கியின் விசையை அழுத்தினார் 
ஒன்று ...இரண்டு ...மூன்று ....மணி 5.17 ...தலை சாய்ந்தார் காந்தி மகான் 

கோட்ஸே அடிக்கப்பட்டார்.நெற்றியில் ரத்தம் வழிந்தது 
யாரோ துப்பாக்கியை பிடிங்கினார்கள் 
ஜாக்கிரதை ...உங்கள் மேல் வெடித்துவிட போகிறது 
உன்னைத்தான் சுடப்போகிறேன் 
நான் தயார் ..என் வேலை முடிந்தது