Thursday 5 September 2019







எப்புடியெல்லாம் துன்பம் வரும் ?
ஒரு அலைபேசி உரையாடல்.....

சொல்லு, எதுக்கு கால் பண்ணுனே?

ஏன் ரெண்டு தடவையும் எடுக்கல?

ஒரு மீட்டிங்ல இருந்தேன்.

எனக்குத் தோணும் போது போன் பண்ணி சொல்ல நினைச்சா, 
அப்போ எடுக்காதீங்க!

அப்படி ஏதாவது அவசரமான விஷயம்னா 
வாட்ஸாப் மெசேஜ் அனுப்பி யிருக்கலாமே?

ஆமாம், மெசேஜ்லேயே குடும்பம் நடத்திக்கலாம்! 
பொண்டாட்டிகிட்ட இருந்து வர்ற ஒரு போன் கூட 
அட்டெண்ட் பண்ணமுடியாத ஆபீஸ்!

விடுடி, அதுதான் கூப்பிட்டுட்டேன்ல, சொல்லு!

இப்போவாவது ஃப்ரீயா, இல்லையா?

ஃப்ரீதான் ே சொல்லு!

என்ன சொல்ல வந்தேன், ஆ! ஞாபகம் வந்துருச்சு!

சொல்லு!

டிகாஷன் போடலாம்னு கிச்சனுக்கு போனேன், 
காஃபித்தூள் டப்பாவை தேடுனா எங்கேயோ தூக்கி வெச்சுட்டீங்க!

அடியே, நான் அதை கண்டிப்பா இங்க எடுத்துக்கிட்டு வரல! 
தேடிப்பாரு ப்ளீஸ்!

ஐயோ, என்னை பேச விடுங்களேன், 
இப்போ உங்களை எடுத்துக்கிட்டு போயிட்டீங்கன்னு யாரு சொன்னா!

வேற என்னதான் சொல்ல வர்றே?

ஒரு நிமிஷம் பொண்டாட்டிகிட்ட பேச பொறுமை இருக்கா உங்களுக்கு? 
இதே மத்தவங்க கிட்ட மணிக்கணக்குல பேசமுடியுது! 

சரி, கேட்கறேன், சொல்லு, என்ன?

இப்படி குறுக்க குறுக்க பேசுனா 
சொல்லவர்றதே மறந்து போகுது!

சரி பேசல, சொல்லு!

என்ன சொல்லிக் கிட்டிருந்தேன்?

ம்ம்ம்.. காஃபித்தூள்!

அதுக்கு ஏன் சலிச்சுக்கறீங்க!

இல்லடி, சொல்லு!

ம், காஃபித்தூள் டப்பாவை தூக்கி மேல வெச்சுட்டீங்க! 
எட்டி எடுக்கலாம்ன்னு பார்த்தா, 
இந்த ஆப்ரேஷன் பண்ணுன கால்ல சுரீர்ன்னு வலிக்குது! 
எதுக்கும் வேற ஒரு நல்ல டாக்டர் கிட்ட காட்டணும் !

அதுக்குதான் ஃபோன் பண்ணுனியா?

இல்லை சாமி, உங்களை ஆஸ்பத்திரிக்கு கூட்டிட்டு போகச் சொல்ல 
நான் என்ன பைத்தியமா? ஆபரேஷன் அன்னைக்கும் விட்டுட்டு ஆபீஸ கட்டிக்கிட்டு 
அழப்போன ஆள்தான நீங்க!

அதுக்கு இப்போ எதுக்குடி போன் பண்ணி சண்டை போடறே?

ஆமா, என்னப்பாத்தா  சண்டைக்காரி மாதிரிதான் தெரியும் உங்களுக்கு! 
உங்கள மாதிரியே தான் உங்க புள்ளைகளும்! 
அம்மான்னாலே அதுங்களுக்கு எளக்காரம்!

சரி, நம்ம சண்டையெல்லாம் வீட்டுக்கு வந்ததும் வெச்சுக்கலாம்! 
இப்போ எதுக்கு கால் பண்ணுனே, அதைச் சொல்லு!

என்னை எங்க சொல்ல விடறீங்க! 
ஒரு வார்த்தை பேசறதுக் குள்ள குறுக்க பேசுனா மனுஷி என்ன பேசறது?

மறுபடியும் ஆரம்பிக்காதே, சொல்லு, என்ன விஷயம்?

ச்சே, இந்த நைட்டி வேற கால்ல சிக்குது! இந்த அழுக்கு கலர்ல வாங்காதீங்கன்னு சொன்னா கேட்டாத்தானே! 
தொவைச்சுப் போட்டாலும் அழுக்கு மாதிரியே தெரியுது!

எதுக்கு ஃபோன் பண்ணுனே, 
அதை சொல்லு ப்ளீஸ்! இன்னைக்கு நிறைய வேலை இருக்கு!

சரி நீங்க போய் வேலையைப் பாருங்க, 
நான் அப்புறமா கூப்பிடுறேன்!

 வதைக்காதே, 
எதுக்கு ஃபோன் பண்ணுனே? சொல்லு!

அதென்ன, வீட்டிலிருந்து ஃபோன் வந்தாலே 
இவ்வளவு சலிச்சுக்கறீங்க?

இல்லம்மா, 
சொல்லு!

எங்க சொல்லவிடறீங்க? 
வீட்டுக்கு ஒன்னு வேணும்ன்னா கூட ஃபோன் பண்ணக்கூடாதா?

என்னதான் வேணும் உனக்கு இப்போ!

அதுதான் மறந்தே போச்சு, 
எத்தனை தடவை குறுக்கே பேசறீங்க! 
ஞாபகம் வந்ததும் சொல்றேன்!

சரி!

வெச்ச மறுநொடி அடுத்த போன்!

ஏன் கட் பண்ணீங்க?

நீதானடி ஞாபகம் வந்ததும் சொல்றேன்னே?

இப்போ ஞாபகம் வந்துருச்சு!

சரி சொல்லு!

காஃபித்தூள் டப்பாவை அவ்வளவு கஷ்டப்பட்டு எடுக்க வேண்டி இருக்கு! 
ஏன் மேல தூக்கி வெச்சீங்க? இனிமேல் இப்படி எல்லாத்தையும் கலைச்சு வைக்காதீங்க!

சரி, இனிமேல் வைக்கல! சொல்லு!

அவ்வளவு கஷ்டப்பட்டு எடுத்துப் பார்த்தா, காஃபித்தூள் கொஞ்சம்தான் இருக்குது! 
காலைல காஃபி நீங்கதானே போட்டீங்க? சொல்லமாட்டீங்களா?

மறந்துட்டேன்! விடு! இப்போ எதுக்கு போன் பண்ணுனே?

ஒரு வார்த்தை பேச விட்றாதீங்க! சரி, 
மறக்காம சாயங்காலம் வரும்போது 
கால் கிலோ காஃபித்தூள் வாங்கிக்கிட்டு வந்துடுங்க!

உனக்கே இது நியாயமா இருக்கா? 
காஃபித்தூள் வாங்கிட்டு வாங்கன்னு ஒரு வார்த்தைல சொல்லமுடியாதா?

ம்க்கும்! தப்புதான் சாமி! ஒரு வார்த்தை எக்ஸ்டரா பேசக்கூடாது!
உங்களுக்கு எதுக்கு தொந்தரவு!
 நீங்க ஒன்னும் வாங்கிக்கிட்டு வரவேண்டாம், 
நானே வாங்கிக்கறேன்! நீங்க உங்க ஆபீஸையே பாருங்க!

ஹலோ, ஹல்லோ ......

No comments:

Post a Comment