Showing posts with label GEMINI. Show all posts
Showing posts with label GEMINI. Show all posts

Thursday, 6 May 2021

GEMINI K.CHANDRA ACTRESS

 


GEMINI K.CHANDRA ACTRESS



உத்தம புத்திரன் படத்தில் சிவாஜிகணேசனுடன் சேர்ந்து “யாரடி நீ மோகினி” என்ற பாடலுக்கு நடனமாடியவர் தான் ஜெமினி சந்திரா. நாகமலை அழகி என்ற படத்தில் கதாநாயகியாகவும் “தெய்வத்தாய்” படத்தில் எம்.என்.நம்பியார் அவர்களின் ஜோடியாகவும் நடித்தவர் பட்டினத்தார் படத்தில் ரி.எம்.சௌந்தரராஜனுடன்  ஜோடியாக நடித்தார். மற்றும் கப்பலோட்டிய தமிழன், தாய் சொல்லைத் தட்டாதே, சந்திரோதயம் உட்பட பல படங்களில் நடித்துள்ளார்.

இவரது கணவர் கஜபதி. எம்.ஆர்.ராதா அவரது மகன் எம்.ஆர்.ராதாரவி ஆகியோரின் மேக்கப் கலைஞராவார். இத்தம்பதிகளுக்கு  சந்தியா என்ற ஒரு மகளும் ஒரு மகனும் உள்ளனர்.




இவர் ஓராள் கூடி கள்ளனாயி என்ற மலையாளப் படம் உள்ளிட்ட சில மலையாளப் படங்களிலும் நடித்துள்ளார்.

ஜெமினி சந்திரா கடந்த 02.06.1998 அன்று உடல் நலம் சரியில்லாமல் தனது 62-ஆவது வயதில் மரணமடைந்தார்.

இவர் நடித்த மேலும் சில படங்களின் பட்டியல்:-

மாடப்புறா [1962], பாகப்பிரிவினை [1959], இந்திரா என் செல்வம் [1962], மாதவி [1959], அமுதவல்லி [1959], புதையல் [1957]

கப்பலோட்டிய தமிழன் படத்தில் ஜெமினிச்சந்திரா

Image  Image

Monday, 10 August 2020

GEMINI GANESAN AND SAVITHRI LOVE / DEATH STORY



GEMINI GANESAN AND 
SAVITHRI LOVE / DEATH STORY


``ஜெமினியின் வருகை சாவித்திரியின் பணத்தை அனுபவித்துக்கொண்டிருந்தவர்களுக்கு இடைஞ்சலாக இருந்திருக்கிறது.’’

சினிமா நட்சத்திரங்களுடைய காதல், கல்யாணம் என்ற வார்த்தைகளைக் கேட்கும்போதெல்லாம், சாவித்திரி - ஜெமினி கணேசன் ஜோடியின் பெயரும் கட்டாயம் நினைவில் வரும். அதுவும் சென்ற வருடம் `நடிகையர் திலகம்’ படம் வந்த பிறகு, இந்த ஜோடியின் காதல் வாழ்க்கை பற்றிய பேச்சுகள் அதிகரித்துவிட்டது. இந்த நிலையில் காதலர் தினமான நேற்று `காதலின் மென்பொருள் சாவித்திரி கணேஷ்’ என்ற புத்தகத்தை வெளியிட்டிருக்கிறார் எழுத்தாளர் மு.ஞா.செ.இன்பா. சாவித்திரி - ஜெமினி தம்பதியரின் மகள் விஜய சாமுண்டீஸ்வரி புத்தகத்தைப் பெற்றுக்கொண்டார். ஒரு சக்ஸஸ்ஃபுல் கதாநாயகி என்ற பிம்பத்தைத் தாண்டி, சாவித்திரி தன் கணவர் ஜெமினி மீதான காதலை, எப்படியெல்லாம் வெளிப்படுத்தியிருக்கிறார் என்று இன்பா நம்மிடம் பகிர்ந்துகொண்டார். அவற்றில் சில இங்கே...




``மனம் போல் மாங்கல்யம் படத்தில் நடிப்பதற்காகச் சாவித்திரி வரும்போது, அவருக்குத் தமிழ் கற்றுக் கொடுத்தது ஜெமினி கணேசன்தான். சாவித்திரிக்கு அப்போது பதினாறு வயது. ஜெமினியின் நாசுக்காக பழகும் விதம் அவரை ஈர்த்துவிடுகிறது. அதுதான் பின்னாளில் காதலாக மலர்கிறது. காதல் கணவருக்காக அவர் கட்டிய வீட்டில் இருந்த நீச்சல் குளத்தை, அதே காதலுக்காக உடைத்து நொறுக்கிய சம்பவமும் சாவித்திரி வாழ்க்கையில் நடந்திருக்கிறது. `அந்த நீச்சல் குளத்தைக் கட்டிய விதத்தில் வாஸ்து சரியில்லை. அதனால்தான், உங்களுக்கும் கணவருக்குமிடையில் பிரச்னைகள் வருகின்றன’ என்று ஜோதிடர் ஒருவர் சொல்ல, மறுநாளே, அத்தனை காலம் குழந்தைகளுடன் ஆனந்தமாக ஆடிப்பாடிய அந்த நீச்சல் குளத்தையே இடித்து மூடியிருக்கிறார். அந்த அளவுக்குக் கணவர் மேல் காதல் கொண்ட மனைவியாக இருந்திருக்கிறார் நடிகையர் திலகம்’’ என்றவர் தொடர்ந்தார். 



`` `தேனிலவு’ பட ஷூட்டிங். `ஓஹோ எந்தன் பேபி' பாடல் ஒத்திகையின்போது நடிகை வைஜெயந்தி மாலா ஜெமினியின் மீது விளையாட்டாகக் காலால் தண்ணீரை வாரியிறைத்து விளையாடியிருக்கிறார். அப்போது, ஷூட்டிங் ஸ்பாட்டில் இருந்த சாவித்திரி, வைஜெயந்தி மாலாவிடம் பெரிதாகச் சண்டை போட்டிருக்கிறார். இந்த மாதிரி சம்பவம், பல படங்களுடைய ஷூட்டிங்கின்போதும் நடந்திருக்கிறது. கணவர் விஷயத்தில், தான் ஒரு மகா நடிகை என்பதை மறந்து சராசரிப் பெண்ணாகத்தான் இருந்திருக்கிறார் சாவித்திரி.  

சாவித்திரியுடன் மகளிர் அமைப்பைச் சேர்ந்த சில பெண்கள் நெருக்கமாக இருந்திருக்கிறார்கள். சாவித்திரி தன் வீட்டில் இருக்கிற நகை, பணம் எதற்குமே கணக்கு வைத்துக்கொள்ளாதவர் என்பதால், அவர்கள் எல்லாம் அதை தங்கள் இஷ்டத்துக்கு அனுபவித்து வந்திருக்கிறார்கள். சாவித்திரிக்கு இதெல்லாம் தெரியாது. ஆனால், ஜெமினி சிக்கனவாதி. எவ்வளவு வருமானம், எவ்வளவு செலவு, என்னென்ன செலவழித்தீர்கள் என்று கேள்வி கேட்கிற கேரக்டர். அதனால், ஜெமினியின் வருகை சாவித்திரியின் பணத்தை அனுபவித்துக் கொண்டிருந்தவர்களுக்கு இடைஞ்சலாக


இருந்திருக்கிறது. அதனால், அவர்கள் சாவித்திரியைத் தூண்டிவிட்டு, ``நீ எவ்வளவு பெரிய ஆர்ட்டிஸ்ட். நீ ஒரு படம் டைரக்ட் பண்ணு.  புரொடியூஸ் பண்ணு' என்று உசுப்பேற்றிவிட்டிருக்கிறார்கள். ஜெமினியோ, `இதெல்லாம் உனக்குச் சரிப்பட்டு வராது' என்று  கடுமையாகச் சொல்ல, கணவர் - மனைவிக்கு இடையே கருத்து வேறுபாடுகள் வர ஆரம்பித்திருக்கின்றன.  இதற்கிடையில் அந்த மகளிர் அமைப்பைச் சேர்ந்த பெண்கள், `நீ பெரிய ஆளாகிடுவேன்னு உன் கணவருக்கு பொறாமை’ என்று ஏற்றிவிட, அதன் விளைவாகத்தான் ஜெமினியை தன் வீட்டுக்குள் வரக் கூடாது என்று சொல்லிவிடுகிறார் சாவித்திரி. அதன் பிறகு சமாதானமாகிறார்கள். ஜெமினி வேறொரு நடிகையுடன் பழகுவதை தெரிந்துகொண்ட பிறகுதான், கணவரை கூர்க்காவை விட்டு விரட்டிய சம்பவங்கள் எல்லாம் நடந்திருக்கிறது. 


இந்தோனேசியாவில் நடந்த சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடுவதற்காக, `மிஸ்ஸியம்மா’, `பாவ மன்னிப்பு’, `பாசமலர்’ ஆகிய மூன்று படத்தையும் தேர்ந்தெடுக்கிறார்கள். அந்த விழாவில் சாவித்திரி - ஜெமினி கணேசன் உள்ளிட்ட பல்வேறு மொழிகளைச் சேர்ந்த திரைக் கலைஞர்கள் பங்கேற்று இருக்கிறார்கள். அந்த விழாவில் நாகரிகம் கருதியும் கணவரின் வேண்டுகோளுக்காகவும் சிறிதளவு ட்ரிங்க் எடுத்துக்கொண்டிருக்கிறார் சாவித்திரி. பின்னாளில் ஜெமினி வேறொரு கதாநாயகியுடன் நெருக்கமாகப் பழகுவதாக கிசுகிசுக்கள் வர, அதன் பிறகுதான் வெறும் நாகரிகத்துக்காகத் தொட்ட மதுவை அடிக்கடி தொட ஆரம்பித்திருக்கிறார். அதுவே, அவரை மரணம் வரை அழைத்துச் சென்றிருக்கிறது’’ என்று முடித்தார் இன்பா.

     Jamuna reveals the last days of Savithri garu!
.

In a recent interview, yesteryear Actress Jamuna revealed some interesting facts about the last stages of all-time great and legendary actress Savithri. In her own words:

‘I and Savithri are very close to each other. I used to call her Akka (elder sister). She got addicted to drinking towards the end of her life. I, Akkineni Nageshwar Rao, Nagi Reddy, Chakrapani have intervened in her marriage and advised her not to. But she still went ahead. Post that, she came to my son’s ‘Barasala’ function. She hugged me and cried that day. I consoled her and gave her moral support.

I told her, Akka you know what kind of a man he is [referring to her husband, Gemini Ganesan]. So don’t try to think about him anymore. Try to forget the past and move ahead. Your two kids are your life.By that time, itself, Savithri Akka has lost a lot of money due to thefts and robberies. Many people deceived her. I visited her while she was in Kodaikanal. I advised her, ‘Akka listen to me. Sell your house and take a fixed deposit of one crore. You will once again lead the high-life that you led in the past.’

Shortly after that, she went into a coma. Then Andhra Pradesh CM Anjaiah garu, even arranged medical assistance for Savithri garu in the US on my request. But the doctors said it was too late by then,’ said Jamuna.

....




A  day after Gemini Ganesan’s death anniversary, we remember his life and work

It was literally over a chopping board that Tamil actor Gemini Ganesan decided to lay bare the details of his life. When journalist and writer Jayashree Viswanath first met him in 1999, Ganesan was not interested in working on his autobiography, immersed as he was in watching a cricket match. A few weeks later, though, he changed his mind.

“His daughter, Dr Kamala Selvaraj, was keen on getting her `appa’ to pen his autobiography. Since he didn’t have enough time to do it himself, she roped me in and also persuaded him,“ recalls 62-year-old Viswanath on the superstar’s death anniversary .

When Viswanath next met Ganesan, he was busy chopping vegetables. Asking her to take a seat, he asked if she knew why he had married his first wife, Alamelu, whom he fondly called Bobji. “He said he had wanted to become a doctor and his fatherin-law promised to help him do MBBS in London, so he agreed to the marriage,“ says Viswanath. His frankness set the tone for his autobiography , `Vaazhkai Padagu’.

Ironically, soon after their marriage, Alamelu lost her father and Ganesan had to abandon his dreams and shoulder the re sponsibility of a family. Moving to Madras, he first worked as a lecturer at Madras Christian College before landing a job in the administrative section at Gemini Studios.

Popularly known as the romantic hero, Ganesan began his career as a villain in `Thai Ullam’. His handsome looks and charming attitude soon got him a slew of offers and he soon earned the title `Kadhal Mannan’ (King of Romance). Despite this stereotyping, Ganesan did not shy away from different roles. When he was cast in `Kanavaney Kankanda Deivam’, directed by T R Raghunath, Ganesan visited the producer’s house dressed as a beggar.“They thought he was a real beggar, only later did they recognise Ganesan and were very impressed by his acting skills,“ says Viswanath.

Even as his film career put him in the spotlight, his personal life also came under scrutiny . Though he remained married to Bobji till death, several women entered his life. In his book, Ganesan has admitted that he seemed to attract women who were in distress. It was while acting in `Moonru Pillaigal’, that he met his second wife Pushpavalli, sister of co-star Suryaprabha.“They used to go to the beach, and one evening, she confided in him her problems. He consoled her and they slowly became close,“ says Viswanath.

Ganesan and Pushpavalli had three children -Rekha, who went on to become a famous actor, Radha and a son who died young. But their union was short-lived and the couple separated after four years.

Co-star of his hit film `Missiamma’, Savithri, was the next woman in his life.Ill-treated by her uncle, Savithri found refuge in the Ganesan. “He had four daughters with Alamelu -Revathi, Kamala, Jayalakshmi and Narayani, and a daughter Vijayachamundeeswari, and son Satheesh with Savithri,“ says Viswanath.

Though the late superstar made no secret about his dalliances, he remained a family man trying to be a good father to his children. While Bobji did show her anger and displeasure, she remained by his side and accepted his other children. “The children maintained cordial relationships.Bobji too remained dignified despite the emotional trauma she must have gone through,“ says Jayashree.

In some ways Bobji went beyond the duties of a wife. Though Ganesan and Savithri separated, when Savithri fell sick and went into coma, Bobji took in Savithri’s children and visited her in hospital. “When Savithri died, Bobji brought her body back to her house in Chennai and held the funeral,“ says Viswanath. “She also brought Satheesh home and looked after him.“ In fact, when Vijayachamundeeswari got married, Bobji and Savithri did the `kanyadaanam’ as Ganesan was away .

Despite the many women in his life, Bobji was the pillar of strength for Ganesan till he passed away on March 22, 2005.“He was a great star but also a good human being,“ says Viswanath, who remained in touch with the actor and his family after the book was published in 2000. “He was approachable, kind hearted and always ready to help.“

Sunday, 12 April 2020

GEMINI GANESAN ,LEGEND OF TAMIL CINEMA


GEMINI GANESAN ,
LEGEND OF TAMIL CINEMA



..காற்று எப்போதும் ஒரே திசையில் வீசிக் கொண்டிருக்காது, திசை மாறும். உறவு முந்தி வந்தால், பிரிவு பின்னால் வரும்.
காதல் சிறகை காற்றினில் விரித்து, வான வீதியில் பறந்த, கணேசன் - புஷ்பவல்லி எனும் ஜோடி, திசை மாறின.
நடிகை, புஷ்பவல்லி, கணேசனை கண்டதும், காதல் கொண்டதும், அந்தக் காதல் கொடி எவ்வளவு வேகமாக மேல் நோக்கி படர்ந்ததோ, அதே வேகத்துடன் இறங்கியது.
நான்கு ஆண்டுகள் தொடர்ந்த அவர்களின் காதல் ராஜ்ஜியம், மூன்றாம் ஆண்டின் இறுதியில், முறிந்தே போனது.
அவர்கள் காதலின் நினைவாக, ரேகா, ராதா என, இரண்டு குழந்தைகள் பிறந்தனர்.

தெலுங்கிலும், தமிழிலும், கதாநாயகியாக நடித்துக் கொண்டிருந்தார், புஷ்பவல்லி. கணேசனோ சிறு சிறு வேடங்களில் தோன்றி, வில்லன், இரண்டாம் நாயகன் என்று வளர்ந்து, 10வது படத்தில் தான், கதாநாயகன் ஆனார்.
'உங்களின் காதல் முறிவுக்கு பின்னால் இருப்பது யார்...' என, ஒரு பேட்டியில், ஜெமினி கணேசனிடம் கேட்ட போது, அவரது மனம் திறந்த பதில்:
புஷ்பவல்லி, என்னை அடைவதிலும், தன்வசப்படுத்திக் கொள்வதிலும் கொண்டிருந்த ஆர்வமும், அவசரமும், என்னை விட்டுப் பிரிவதிலும் இருந்தது. நான்கு ஆண்டு நட்பை, என்னைப் புரிந்து கொள்ளாமலேயே, காதலை முறித்துக் கொண்டார், என்றார்.
அடுத்து, ஜெமினி கணேசன் வாழ்வில், இன்னொரு சுந்தரத் தெலுங்கு அழகி நுழைந்தார்.
'ஒன்றிருக்க ஒன்று வந்தால் என்றும் அமைதியில்லை...' என்று, கண்ணதாசன் பாடியது போல, இன்னொரு பெண், தன் காதலன் வாழ்வில் வந்தால், பெண்கள் என்ன செய்வரோ, அதைத் தான் செய்தார், புஷ்பவல்லி. கணேசனின் புதிய காதலால் வருத்தமுற்று, ஒதுங்கிக் கொண்டார்.
ஜெமினி நிறுவனத்தில், நட்சத்திரங்களை தேர்வு செய்யும் பொறுப்பாளராக கணேசன் இருந்த சமயத்தில், 12 வயது நிரம்பிய, ஒரு அழகிய சிறுமியை அழைத்து வந்தார், ஆந்திரக்காரரான, கே.வி.சவுத்ரி.
'இவள், என் மகள், நடனமும், நடிப்பும் வரும். நடிக்க வாய்ப்பு கொடுக்க வேண்டும்...' என, கேட்டார்.
அந்தப் பெண் கொஞ்சம் மாநிறத்தில் இருந்தாள். அவளுடைய குறுகுறுப்பான கண்களும், துறுதுறுவென்ற சுபாவமும், அவள் சரளமாக தமிழ் பேசிய அழகும், கணேசனை வெகுவாக ஈர்த்தன.
அவளாகவே சில வசனங்களை பேசி, நடித்துக் காட்டினாள். அவள் பேச்சில், சிரிப்பில், நடிப்பில் ஒரு நளினம், அழகு இருந்தது. குச்சுப்புடி நடனம் ஒன்றை, அழகாக ஆடிக் காட்டினாள்.
நடிப்பின் மேல் அவள் கொண்டிருந்த ஈடுபாடும், அதில் இருந்த நேர்த்தியையும், பார்த்த கணேசன், 'இவளுக்கு வாய்ப்பு கொடுத்தால், நல்ல நடிகையாக வருவதற்கான அறிகுறிகள் இருக்கின்றன. உதடுகள் பேசாமலேயே பேசுகின்றன. வருங்காலத்தில், இவள் ஒரு சிறந்த நடிகையாக வருவாள்...' என்று, அவளது விண்ணப்பத்தில் குறிப்பு எழுதி, அனுப்பி வைத்தார்.
அப்போது, ஜெமினி நிறுவனத்தில் தயாரான படங்களில் அந்தப் பெண்ணுக்கு எந்த வேடமும் கொடுக்க முடியவில்லை.
ஜெமினி ஸ்டூடியோவை விட்டு விலகிய நிலையில், பெண் என்ற படத்தில், ஜெமினி கணேசனை கதாநாயகனாக ஒப்பந்தம் செய்திருந்தார், ஏவி.எம்., செட்டியார்.
ஒரு நாள், ஏவி.எம்., ஸ்டூடியோவில், கணேசனை சந்தித்த, கே.வி.சவுத்ரி, 'என் மகளுக்கு, நீங்கள் தான் வாய்ப்பு கொடுக்கவில்லை. அவளை, தேவதாஸ் படத்தில், நாகேஸ்வர ராவுக்கு ஜோடியாக நடிக்க ஒப்பந்தம் செய்திருக்கின்றனர்.
ஏவி.எம்., செட்டியார் கூட, ஒரு படத்தில் நடிக்க வாய்ப்பு கொடுத்திருக்கிறார்...' என்றார்.

'அப்படியா... ரொம்ப நல்ல விஷயம்...' என்ற கணேசன், அருகில், புன்னகை பூத்த முகத்துடன் நின்று கொண்டிருந்த அப்பெண்ணை பார்த்தார்.
மூன்றாண்டு இடைவெளி, அவளை மேலும் அழகியாக மாற்றியிருந்தது, இயற்கை. கண்களால் கவிதை பேசும் அந்த பேரழகி தான், சாவித்திரி. அவளை பார்த்ததும், கணேசனுக்குள் என்னமோ செய்தது. மீண்டும் ஒரு காதல் ஆரம்பம்.








மனம் போல் மாங்கல்யம் படப்பிடிப்பின் இடைவேளையில், ஜெமினிகணேசன் உட்காருவதற்காக, ஈசி சேர் போடப்பட்டிருந்தது. அந்த ஈசி சேரின், உருளையை உருவி எடுத்து விட்டு, துணியை மூடி வைத்து விட்டார், குறும்புக்கார பெண், சாவித்திரி.
இது தெரியாத, ஜெமினி, ஈசி சேரில், 'ஹாயாக' சாய்ந்தவர், 'டமால்' என்று விழுந்தார். முதுகில் நல்ல அடி.
'அய்யோ... என்ன இப்படி செய்திட்டே... கணேஷ் மண்டை உடைந்திருந்தால் என்ன ஆகியிருக்கும்...' என்று, சாவித்திரியை கண்டித்தார், இயக்குனர் புல்லையா.
தன் குறும்புத்தனத்தால், விபரீத விளைவு ஏற்பட்டதை கண்டு கலங்கினார், சாவித்திரி; அடிபட்ட ஜெமினியே, சமாதானம் செய்தார்.
கணேசனின் தலையை தடவிக் கொடுத்து, 'நான் விளையாட்டாக செய்தேன்; உங்களுக்கு பலமாக அடிபட்டு விட்டதா...' என்று, அப்பாவியாக மன்னிப்பு கேட்டார், சாவித்திரி.
கடந்த, 1953ல், தீபாவளி அன்று வெளிவந்த, மனம் போல் மாங்கல்யம் படம், மாபெரும் வெற்றி பெற்றது. அந்த வெற்றியோடு, தனக்கும், சாவித்திரிக்கும் இடையில் மலர்ந்த காதலையும் வெளிப்படுத்தினார்.
'மனம் போல் மாங்கல்யம் படத்தில், என் வேடம் மனதுக்கேற்றபடி அமைந்ததுடன், எனக்கு ஒரு மனைவியும் கிடைத்தாள்; சாவித்திரியை சந்தித்தேன்; பின்னாளில் வாழ்க்கையில் இணைந்தோம்...' என்று, அந்த மகிழ்ச்சியை பதிவு செய்திருந்தார், கணேசன்.
அடுத்து, பி.நாகிரெட்டி - சக்கரபாணி தயாரிப்பில், மிஸ்ஸியம்மா படத்தில், ஒப்பந்தமானார், ஜெமினி. இதில், முதலில், கதாநாயகியாக ஒப்பந்தமானவர், பானுமதி. சக்கரபாணிக்கும், அவருக்கும் ஏதோ பிரச்னை வர, பானுமதி விலகிக்கொள்ள, ஜெமினியின் ஜோடியானார், சாவித்திரி.
அப்போது, அவர்கள், நிஜ காதலர்களாகவே சினிமாவிலும் நடித்துக் கொண்டிருந்தனர்.

மிஸ்ஸியம்மா படத்தின் மாபெரும் வெற்றி, அந்த ஜோடியை, தொடர்ச்சியாக, 10 படங்களுக்கு மேல் ஒப்பந்தம் செய்தது. இவர்களின் காதல், மணம் வீச துவங்கியது.
புஷ்பவல்லி, கணேசனின் குழந்தைக்கு தாயான நேரத்தில், ஜெமினியும், சாவித்திரியும் ரகசிய திருமணம் செய்து, ரகசியமாகவே வாழத் துவங்கி விட்டனர். இதுகுறித்து, சாவித்திரி கூறுகையில்...
'நானும், அவரும் திருமணம் செய்து கொண்டோம். என் வீட்டில் யாருக்குமே தெரியாது. உலகிற்கும், எங்கள் உறவு புரியாத நேரம். நாங்கள் நடித்த, மனம் போல் மாங்கல்யம் படம், தீபாவளியன்று வெளியாகி, மாபெரும் வெற்றி பெற்றது.
'படம் பிரமாதமான வரவேற்பை பெற்று, எங்களது நடிப்பு, பாராட்டப் படவே, அவரே, என் வீட்டுக்கு இதை சொல்ல வந்தார். நான், அப்போது மாடியில் இருந்தேன். என் தந்தை கீழே இருந்தால், நான் வீட்டை விட்டு வெளியே போகவும் முடியாது, அவருடன் பேசவும் முடியாது.
'அன்றைய தினம் மட்டும், இந்த படத்தை ஒரு சாக்காக வைத்து, என்னை நேரில் சந்தித்து, இரண்டு வார்த்தை பேசி போகவே, நான்கு முறை வந்தார் என்பதை தெரிந்து கொண்டேன். ஆனாலும், ஒரு வார்த்தை கூட பேச முடியவில்லை.
'அன்றிரவு தொலைபேசியில், 'இப்படி தான், உன் தீபாவளி இருக்கணும்ன்னு ஆண்டவன் எழுதி வைத்து விட்டான் போலிருக்கு...' என்று, அவர் சொன்னபோது, என்னால் துக்கத்தை அடக்க முடியவில்லை. 'அழாதே சாவித்திரி... எல்லாரும், தீபாவளியன்று, சிரித்து, சந்தோஷமாக இருக்காங்க... நீ அழுதுகிட்டு இருக்கலாமா... அடுத்த தீபாவளியை, நாம் பிரமாதமாக கொண்டாடுவோம்...' என்று, ஆறுதல் கூறினார்.
'என்னை பொறுத்தவரை, அவர் வாங்கிக் கொடுத்த புடவையை அன்று கட்டிக் கொண்டதில், சிறு திருப்தி கிடைத்தது. எனக்கு வெள்ளை புடவை என்றால் ரொம்ப பிடிக்கும் என்பதை அறிந்த அவர், 'பம்பாய் பார்டர்' போட்ட வெள்ளை புடவையை, தீபாவளிக்காக வாங்கிக் கொடுத்திருந்தார். இது, வீட்டில் யாருக்கும் தெரியாது. தீபாவளியன்று, ஸ்நானம் செய்ததும், அந்த புடவையை கட்டிக் கொண்டேன்.
'என் தாயார், தகப்பனார் உட்பட அனைவரும், 'தீபாவளியும், அதுவுமா இந்த வெள்ளை புடவை தானா உனக்கு கிடைத்தது...' என்று, கடிந்து கொண்டனர். அவர்களுக்கு தெரியுமா, அந்த புடவைக்கு பின்னால் இருக்கும் மதிப்பும், காதலும். 'படப்பிடிப்பு தான் இல்லையே... வீட்டில் இருப்பதற்கு இது போதாதா...' என்று மழுப்பி விட்டேன்.
'வெள்ளை புடவை அணிந்து, நான் மாடியில் நின்றதை, காலையில் அவர் வந்தபோது, பார்த்து விட்டார். ரொம்ப மகிழ்ச்சியடைந்து, பின்னர், போனில் பேசும்போது அதை குறிப்பிட்டார். 'சாவித்திரி... வெள்ளை புடவையில், நீ மாடியில் நின்றபோது, ஷேக்ஸ்பியர் வர்ணித்த ஜூலியட் மாதிரியே இருந்தாய்... அதில் வரும், 'ரோமியோ' எப்படி கீழே இருந்தானோ, அப்படி நான் இருந்துட்டேன். காதலர்கள் என்றால் இப்படித்தான் இருக்கணும்...' என்றபோது, எனக்கு ஒன்றுமே தோன்றவில்லை.
'கடைசியில் அவர், 'தீர்க்க சுமங்கலியாக இருக்கணும்...' என்று, தொலைபேசியில் வாழ்த்தியபோது, என் கைகள் இரண்டும் என்னை அறியாமலேயே, தொலைபேசியின் மறுபக்கத்தில் இருக்கும் கணவரை உருவகப்படுத்தி, அந்த ரிசீவருக்கு என் வணக்கத்தை தெரிவித்து கொண்டேன்...' என்று, சாவித்திரி சொல்லியிருக்கிறார்.
ஜெமினி கணேசன் - சாவித்திரி காதல் விஷயம் தெரிந்தபோது, சாவித்திரியின் பெரியப்பா கொதித்தெழுந்தார்.

Wednesday, 4 March 2020

GEMINI GANESAN,A LEGEND



GEMINI GANESAN,A LEGEND


பேச்சில், சிரிப்பில், செயலில், வாழ்வில் மென்மையான போக்கை கடைப்பிடிப்பவர்களை அனைவருக்கும் பிடிக்கும். அப்படி அனைவராலும் கொண்டாடப்பட்ட கலைஞர் தான், ஜெமினி கணேசன்.
நவ., 17, 1920ல் பிறந்த, ஜெமினி கணேசன் என்ற, நுாற்றாண்டு நாயகனின் கதை இது.
திரையுலகில், 1960 - 70களில், ஆளுமை செய்த மூவேந்தர்கள், எம்.ஜி.ஆர்., - சிவாஜி கணேசன் மற்றும் ஜெமினி கணேசன்.

இந்த மூவரும், கதாநாயக அந்தஸ்து பெற்று பிரபலமான, சம காலத்தில், 1951ல், மந்திரி குமாரி படத்தில், எம்.ஜி.ஆரும்; 1952ல், பராசக்தி படத்தில், சிவாஜி கணேசனும்; 1953ல், மனம் போல் மாங்கல்யம் படத்தின் மூலம், ஜெமினி கணேசனும், ஜொலிக்க ஆரம்பித்தனர்.
சமூக படங்களின் வருகைக்கு மகத்தான வரவேற்பு பெற்ற காலத்தில், நாராயணன் அண்ட் கம்பெனியின், மனம் போல் மாங்கல்யம் படம், ஜெமினி கணேசனை அறிமுகப் படுத்தியது; அதுவும் இரட்டை வேடம்.
எம்.ஜி.ஆர்., - சிவாஜிக்கு முன், இரட்டை வேடம் ஏற்ற பெருமை, இவருக்கு உண்டு.

மனம் போல் மாங்கல்யம் படத்தில், அவரது நடிப்புத் திறன் பெரிதாக பேசப்பட்டது. 'இவர், பல ஆண்டுகள் நாடக அனுபவம் பெற்றிருக்க வேண்டும்...' என்று, சிலர் நம்பினர். ஆனால், இவருக்கு மேடை அனுபவம் பெறும் வாய்ப்பு அமைந்ததில்லை. சில படங்களில், சிறிய வேடங்களில் நடித்த அனுபவம் உண்டு. அதை, பின்னர் பார்க்கலாம்.
தன்னை கதாநாயகனாக இரட்டை வேடத்தில் நடிக்க வைத்த, நாராயணன், அடுத்து தயாரித்த கதையிலும் நடிக்க விரும்பினார். அதற்காக சந்தித்து, வாய்ப்பு கேட்டார், ஜெமினி. ஆனால், தயாரிப்பாளரோ, 'நீ அழகான இளைஞனாக தான் பொருந்துவாய். இந்த கதாபாத்திரத்திற்கெல்லாம் நீ சரிபட்டு வரமாட்டே...' என்று, திருப்பி அனுப்பி விட்டார்.

அதை கேட்டு மிகவும் கலங்கினார், ஜெமினி கணேசன். வருத்தமுடன், 'விடு போகட்டும்...' என்று இருந்து விடவில்லை. அவருக்கு, அந்த வேடத்தை விட மனமில்லை.
உணர்ச்சிவயப்பட்டவர்களுக்கு, வாழ்க்கை, ஒரு கரடு முரடான பாதை. ஆழமாக சிந்திக்கிறவர்களுக்கு, அது ஒரு இனிய பயணம் என்பதை உணர்ந்த, ஜெமினி, அந்த படத்தில் நடித்ததற்கான அனுபவத்தை அவரே சொல்கிறார்:
ஆரம்பத்தில், இந்த வேடத்தை எனக்கு கொடுக்க, கம்பெனி அதிபர், நாராயண அய்யங்கார் விரும்பவில்லை. என் மனதிலோ, இதை, நாம் செய்ய முடியும் என்ற தன்னம்பிக்கை இருந்தது. நம் வாழ்நாளில், இந்த மாதிரி ஒரு வேடத்தில் நடித்து, வெற்றி பெற்று விட்டால், ரசிகர்கள் நினைவில் என்றும் இருக்க முடியும் என்ற ஆசையும் எழுந்தது.
பாலன் என்ற உதவி இயக்குனரிடம் மட்டும் சொல்லி, அடையாளம் தெரிந்து கொள்ள முடியாத வகையில், பழங்காலத்து ஆங்கில - இந்திய பிச்சைக்காரனை போல, தாடி, மீசையெல்லாம் ஒட்டி, நாராயண அய்யங்கார் வீட்டுக்கு போனேன்.

அப்போது தான் பூஜை முடித்து, கையில் வெள்ளி டம்ளருடன் வெளியே வந்தார்.
அவரை பார்த்ததும், நான், மெல்ல கூனி குறுகி நடந்து, குரலை மாற்றி, பரிதாபமாக பார்த்து, 'அய்யா... பிச்சை போடுங்கய்யா...' என்றேன்.
என் வேடத்தை கண்டவருக்கு அருவறுப்பு.
'போ... போ...' என்று விரட்டினார். நானோ, அதை காதில் வாங்கிக் கொள்ளாமல், அவரை நோக்கியே நடந்தேன்.
'யாரது, பிச்சைக்காரனை உள்ளே விட்டது?' என்று, அதட்டி கேட்டார்.
'போ... போ...' என்று, என்னை விரட்டிக் கொண்டே இருந்தார்.
நான், மெல்ல படிகளில் ஏற ஆரம்பித்தேன்.
காலடி சத்தம் கேட்டு, 'யார்றா, முரட்டு பிச்சைக்காரனா இருக்கான். விரட்டுனா கூட போக மாட்டேங்கறானே...' என, உதவியாளரான, பட்டண்ணாவிடம் கூறினார்.
வேகமாக திரும்பிய, பட்டண்ணா, என்னிடம் வந்தார்.
பட்டண்ணாவுக்கு கண்ணடித்து, ஜாடை காட்டி, என்னை யார் என்று புரிய வைத்து விட்டேன். அவர் சிரித்தபடியே, தடுக்காமல் விட்டு விட்டார். படிகளில் ஏறி, வீட்டுக்குள் நுழைந்தேன்.
'என்னடா... நீ கூட பார்த்துகிட்டே நிக்குறே...' என்று, பட்டண்ணாவை கடிந்து கொண்டார்.
சிரித்தபடியே, 'இது, யார் தெரியலையா உங்களுக்கு...' என்றார், பட்டண்ணா.
'தெரியலையே... யாரு?' என்றார்.
'நம்ம, கணேசன் தாங்க... நல்லா பாருங்க...' என்று, உண்மையை போட்டுடைத்தார், பட்டண்ணா.
அருகில் வந்து, என்னை பார்த்து, 'அட... நீயா... அடையாளமே தெரியலையே... உனக்கு, எதுக்கு இந்த பிச்சைக்கார வேஷம்...' என்றார்.
'வேஷம் தான். அந்த பிச்சை (கதாபாத்திரம்) தான் வேண்டும். கணவனே கண் கண்ட தெய்வம் படத்தில் என்னை நடிக்க வைக்க வேண்டும் என்பதற்காக தான்...' என்று சொல்லி, சிரித்தேன்.
'உனக்கு தான் அந்த வேஷம். உன் ஆர்வத்தை பாராட்டுகிறேன்...' என்றார்.
'பாத்திரத்தில் பிச்சை எடுக்காமல், ஆனால், பிச்சை எடுத்து பெற்ற பாத்திரம் அது. கணவனே கண் கண்ட தெய்வம் படத்தின் பாத்திரம்...' என்று கூறுவார், ஜெமினி கணேசன்.
அழகும், இளமையும் கொண்ட ஜெமினிகணேசன், ஆர்வத்தோடும், மகிழ்ச்சியோடும் வலிய ஏற்றுக்கொண்ட, கணவனே கண் கண்ட தெய்வம் படத்தில், விஜயன் பாத்திரமும், நடிப்பும், அவரை நட்சத்திர நடிகர் அந்தஸ்திற்கு உயர்த்தியது. அதுமட்டுமல்ல, அவரையே, ஹிந்தி பதிப்பில், தேவதா படத்திலும் நடிக்க செய்தனர்.
கணவனே கண் கண்ட தெய்வம் படத்தின் வெற்றி, அவரை, திரும்பிப் பார்க்க வைத்தன. பல படங்களுக்கு ஒப்பந்தமானார்.
வாழ்க்கை, பல போராட்டங்களை கொண்டது. ஜெமினிகணேசனின் ஆரம்ப கால திரை பிரவேசம், தடை கற்களை கொண்டிருந்தது.

Thursday, 4 January 2018

BALA NAGAMMA 1942







BALA NAGAMMA 1942

Director:
Chittajalu Pullayya
Writer:
Balijepalli Lakshmikanta Kavi (writer)






GOVINDARAJULA SUBBA RAO

Cast
Kanchanamala ... Balanagamma 
Govindrajulu Subba Rao ... Mayala Maraathi
Banda Kanakalingeshwara Rao ... Kaaryavardhi Raju
Balijepalli Lakshmikanta Kavi ... Navabhoja Raju







Kamala Devi T.G. T G KAMALA DEVI





Kamala Kotnis 
Pushpavalli ... Sangu 
Narayana Rao Addala ... Nagarju
Bellary Lalitha 
Satyam Lanka ... Kakali
Relangi Venkatramaiah ... Kotwalu
Viswam ... Balavardhi Raju (as Master Viswam)

Story;Gemini Pictures Circuit was started by Vasan in 1939 and distributed movies both in Andhra and Tamil Nadu. After distributing Raithu Bidda and Illalu in Tamil Nadu and meeting with considerable success, he bought a bankrupt studio at an auction and renamed it as Gemini Studios. After making movies such as Madana Kamaraju, Nandanar and Jeevan Mukthi, he made Bala Nagamma in 1942.

Now Bala Nagamma was one of the most popular Burrakathas, which was incidentally a popular means of entertainment then. In spite of the beginning of the folk era of movies in 1938 with Gulebakavali Katha, Bala Nagamma still set trends. The protagonists were two-Bala Nagamma and the 'Mayala Marathi/Mayala Fakir' (Translated: Evil Magician).

The story of Bala Nagamma was known to one and all. The King prays for progeny and is blessed with children, the youngest of who is named Bala Nagamma. She is married off to Karyavardi Raju but is kidnapped by Mayala Marathi who turns her into a dog and whisks her off to his cave. Once there, he tries to take advantage of her, but she keeps him away quoting some Holy Rites and Pujas that she is involved in. Fearful, she is a prisoner in the cave for 14 years, where the Fakir's mistress, Sangu, is jealous of his obsession with Bala Nagamma. In the meantime, her son [Balavardi Raju] grows up and gets to know the truth about his mother. He seeks the Fakir out and defeats him.

Chittajallu Pullaiah directed Vara Vikrayam and Malathi Madhavam under the East India Film Company. He directed Bala Nagamma under Gemini after shifting base to Madras, and later made Apoorva Sahodarargal and Vindhya Rani, also under Gemini. Kanchanamala was the most glamorous star of that era, and was cast in the title role. Dr. Govindarajula Subbarao was Mayala Fakir. These two garnered the maximum amount of mileage from the movie, especially Govindarajula as the legendary Mayala Fakir. He was just two movies old, having been noticed earlier in Mala Pilla. Relangi in a humorous role, who takes advice from the Fakir only to face comical adversities, also became a highlight for the movie.

Govindarajula's laugh was such that it is rumored to have frightened little kids. But there is another, more amusing rumor-Kanchanamala herself fainted in the scene where he kidnaps her and brings her to his cave and starts laughing. The cave, the statues of all the Evil Deities the Fakir worships and all the sets were spent lavishly on by Gemini. The art director SVS Rama Rao worked tirelessly on little details targeting perfection, but unfortunately he and Vasan had a rift during the making. This resulted in SVS leaving Gemini's camp and starting his own version of Bala Nagamma-Shanta Bala Nagamma for which he was the producer, director and art director. This movie starred Manuluri Krishna Rao, Shakuntala and S. Rajeshwara Rao. Kodavatiganti Kutumba Rao wrote a part of the script. Shanta Bala Nagamma, however, proved to be a dud at the Box Office.

The reverse was true for Bala Nagamma. Gemini raked in the money, which came in incessantly. The repeat audience for the movie was plenty. Pushpavalli, who did some positive lead roles before, was cast as a vamp in the movie which surprised many. Her song 'Aha Naa Sogase Kani' proved to be an instant hit. Saluri Rajeswara Rao composed the music which struck all the right chords with the listeners and the background music was also appreciated by viewers and critics alike.

As with SVS Rama Rao, Vasan had a spat with Kanchanamala after this movie regarding her contractual agreement. This was in fact Kanchanamala's last movie, and perhaps her most memorable one. Pushpavalli became more prominent after this, with Gemini signing her on for numerous productions during which time she married Gemini Ganesan, consequently Bhanurekha, better known as the sultry evergreen actress Rekha was born. But this movie marked the end of Kanchanamala, a rage amongst the youth of that era.

Gemini remade this movie much later with Madhubala in the lead and Savithri as Sangu in Hindi. The movie, titled 'Bahut Din Hue' did reasonably well. This was Savithri's first Hindi movie, after which she acted in a few other Hindi productions, but never in the lead. In Telugu, however, Bala Nagamma became a huge hit commercially. With the elaborate sets, lilting tunes, strong background score, picturization and of course, Kanchanamala-Govindarajula, the movie worked wonders. In Andhra and Tamil Nadu alike, the movie was a trendsetting folk-based successful venture and ran for more than 25 weeks. After Bala Nagamma, there was no looking back for Gemini.

Sunday, 17 September 2017

KARUKURICHI ARUNACHALAM ,DIVINE MUSICIAN



KARUKURICHI ARUNACHALAM ,DIVINE MUSICIAN




திருநெல்வேலி, பிரபல நாதஸ்வர கலைஞர், காருகுறிச்சிஅருணாசலத்தின் சொந்த கிராமத்தில், அவரது சிலை யை சுற்றி, புதர் மண்டி கிடக்கிறது. 'அவருக்கு நினைவிடம் அமைக்க வேண்டும்' என, கிராமத்தினர்வலியுறுத்தி உள்ளனர்.

திருநெல்வேலி மாவட்டம், சேரன்மகாதேவியை அடுத்துள்ளது காருகுறிச்சி கிராமம். மறைந்த பிரபல நாதஸ்வர கலைஞர் அருணாசலம் பிறந்த ஊர். அவரது தந்தை பலவேசம், கோவிலில் பூ கட்டும் தொழில் செய்து வந்தார்.
சினிமா துறைஅங்குள்ள பண்ணையார் வீட்டில் நடந்த திருமண நிகழ்ச்சியில், நாதஸ்வரம் வாசிக்க, கூறை நாடு நடேச பிள்ளை என்ற நாதஸ்வர வித்வான்வந்திருந்தார்.அவருக்கு தரப்பட்ட மரியாதையை பார்த்த பலவேசம், தாமும் நாதஸ்வரம் கற்றுக் கொள்ள விரும்பினார். அது முடியாமல் போகவே, தன் மகன் அருணாசலத்தை, சிறு வயதில் அதற்காக பழக்கினார்.

திருவாவடுதுறை ராஜரத்தினத்திடம், தன் மகனை நாதஸ்வரம் கற்க அனுப்பி வைத்தார். குருகுல வாசம் போல, அவரிடம் இசையை கற்றுத் தேர்ந்த அருணாசலம், பின்னாளில் சினிமா துறையிலும் கோலோச்சினார்.கொஞ்சும் சலங்கை என்ற படத்தில், எஸ். ஜானகி பாட, அருணாசலம் நாதஸ்வரம் வாசித்துள்ள, சிங்காரவேலனே தேவா' என்ற பாடல் மிகவும் பிரபலம்.சென்னை தமிழிசை சங்கத்தின் இசை விழாவில், அருணாசலத்தின் நாதஸ்வர கச்சேரியை, வானொலி நிலையம், வழக்கத்திற்கு மாறாக, நள்ளிரவு வரை ஒலிபரப்பியது.


அருணாசலத்தின் கச்சேரிக்குப் புகழ் பெற்ற தவில் கலைஞர்கள் கும்பகோணம் தங்கவேல், வடபாதிமங்கலம் தட்சிணாமூர்த்தி, யாழ்ப்பாணம் தட்சிணாமூர்த்தி உள்ளிட்ட பலர், தவில் வாசித்துள்ளனர்.அவருக்கு சங்கீத கலாநிதி விருதை, அரசு வழங்கியது. காருகுறிச்சியை விட்டு, கோவில்பட்டிக்கு புலம் பெயர்ந்த அருணாசலத்தின் வீட்டு கிரக பிரவேச நிகழ்ச்சியில், நடிகர் ஜெமினிகணேசனும், சாவித்திரியும், வந்திருந்த விருந்தினர்களுக்கு உணவு பரிமாறிய சம்பவம், இன்றளவும் காருகுறிச்சியில் பெருமையாக பேசப்படுகிறது.
கோரிக்கை

காருகுறிச்சி கிராமத்தின் முகப்பில், நாதஸ்வரத்தை கையில் பிடித்தாற் போல, அருணாசலத்தின் சிமென்ட் சிலை அமைக்கப்பட்டுள்ளது. சிலை பராமரிப்பின்றி, சுற்றிலும் முட்புதர்கள் மண்டி கிடக்கிறது. அவரது பூர்வீக வீட்டையும் யாரோ வாங்கி விட்டனர்.காருகுறிச்சியில், அனேக மாக எல்லோரது வீடுகளிலும், அருணாசலம் நாதஸ்வரம் வாசிக்கும் படமோ, அவர் நேரு, காமராஜ் போன்றோருடன் இருக்கும் கருப்பு, வெள்ளை படங்களோ சுவற்றில் இடம் பிடித்திருக்கின்றன.

1907ல் பிறந்து, 1964ல் மறைந்த இசை மேதைக்கு, காருகுறிச்சியில் நினைவிடம் அமைக்க வேண்டும்என்பதே, அந்த ஊர் மக்களின் கோரிக்கை.மேலும், 'அங்கு, அவரது இசைத்தட்டுகள், பழைய புகைப்படங்கள் போன்றவற்றை, காட்சிப்படுத்த வேண்டும்; அதற்கு, தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்' எனவும், காருகுறிச்சி கிராம மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

Monday, 3 July 2017

TEN REAL HUSBAND-WIFE OF TAMIL FILM INDUSTRY






தமிழ் சினிமாவின் சூப்பர்10 காதல்ஜோடிகள்




திரையில் என்னதான் கெமிஸ்ட்ரி, பிசிக்ஸ் பயாலஜியோடு நடித்தாலும் காதல் சில ஜோடிகளுக்கு இடையில் மட்டுமே தன் மாய வித்தையை காட்டி இருக்கிறது. பிரகாஷ்ராஜ் பாஷையில் சொன்னால், சிலரை பார்த்தவுடன் மட்டும் மனசுக்குள் பலப் எரிந்து காதுக்குள் மணி ஒலித்து வயிற்றுக்குள் பட்டாம் பூச்சி பறக்கத் தொடங்குகிறது. அது சரி, ஆனால் காதல் வந்த எல்லாரும் மணம் முடிப்பது இல்லையே..மணம் முடித்த அனைவரும் சேர்ந்து வாழ்வதும் இல்லை. திரையில் ஆயிரம் ஜோடிகள் டிஜிட்டல் வண்ணங்களில் ட்யூலிப் தோட்டத்துக்கு நடுவில் அஸ்கு லஸ்கா பாடினாலும் ஒன்றாக வாழும் வாழ்க்கை சில ஜோடிகளுக்கு மட்டுமே சாத்தியமாகி இருக்கிறது.

தமிழ் சினிமாவில் ஆரம்பகட்ட கிசு கிசுக்களை தாண்டி, போராட்டம், குழப்பம் எல்லாவற்றையும் கடந்து  நிஜத்திலும் ஒன்று சேர்ந்த சூப்பர் ஜோடிகளின் பட்டியல் இது.

10 ) ஜெமினி கணேசன்- சாவித்திரி
ஆடாத மனமும் ஆடுதே...

இது மிஸ்ஸியம்மா காலத்து காதல். கறுப்பு வெள்ளையில் நடந்த ரொமான்ஸ்  காவியம்.  'கண்களின் வார்த்தைகள் புரியாதோ?' என்று பைஜாமா ஜிப்பா போட்டபடி ஜெமினி ரொமான்ஸ் பார்வை பார்த்து கேட்டது சாவித்ரிக்கு மட்டுமே புரிந்தது போலும். காதல் மன்னனுக்கு நடிகையர் திலகம் சாவித்திரி  மூன்றாவது மனைவி! காதல் வரும்போது மனத்தைக் கட்டுப்படுத்த நித்யானந்தாவுக்கு கூட முடியாத போது காதல் மன்னனுக்கு அது சாத்தியமா என்ன ?!  இவர்களின் கல்யாணம், நடந்து மூன்று ஆண்டுகளின் பின்னர் சாவித்திரி லக்ஸ் சோப் விளம்பரத்துக்கு ' சாவித்திரி கணேஷ்' என்று கையொப்பமிட்ட போதே நல்லுலகுக்கு தெரிய வந்தது. விஜய சாமுண்டீஸ்வரி, சதீஷ்குமார் என்று இந்த அழகான ஜோடிக்கு இரண்டு குழந்தைகள். பிறகு ஜெமினியுடனான   மனக்கசப்பால் சாவித்ரி குடிக்கு அடிமையானதும் கோமா நிலைக்கு சென்று மீளாமலே 46  வயதில் இறந்ததும் இந்த காதல் கதையின் சோகமான இறுதி அத்தியாயம்.

09 ) மணிரத்னம்- சுஹாசினி
நீ அழகா இருக்கேன்னு நினைக்கல..லவ் பண்ணனும்னு நினைக்கல...ஆனா இதெல்லாம் நடந்திடிச்சே..!

மணி ரத்னத்தின் படைப்புகளில் சிறந்தது ரோஜாவா பாம்பேயா என்றால் நந்தன் என்று தான் தோன்றுகிறது. இந்த ஜோடியின் அறிவாளிக் குழந்தை. இப்போது வளர்ந்து விட்ட இந்த இளைஞன், கம்யூனிஸ்ட் கட்சியின் தொண்டராக வேலை செய்யும் அளவுக்கு மனப்பக்குவமும், அரசியலை கரைத்து குடித்த அறிவும் கொண்ட ஒரு வாரிசு நம்பர் 1. இந்த மகனை வளர்த்து எடுத்த விதத்தில் இருந்து இந்த ஜோடியைப் பற்றி தெரிந்து கொள்ளலாம். குஷ்பூவின் கற்பு பிரச்சனையில் துணிந்து குஷ்பூவை ஆதரித்துக் கருத்து சொல்லிய ஒரே குரல் சுஹாசினியுடையது. சரியோ பிழையோ மனதில் பட்டதை வெளிப்படையாக பேசி சர்ச்சைகளைக் குவிக்கும் ஒரு பெண்ணுக்கு, நடிப்பு இயக்கம் வசனகர்த்தா  என்று பல தளங்களில் இயங்கும் ஒரு பெண்ணுக்கு ஏற்ற ஒரு கணவராக மணி அமைந்தது தான் இந்த ஜோடியின் அதிகம்  சக்சஸ் ஆன திருமண வாழ்க்கையின் சூட்சுமமோ என்னவோ? மணி பொதுவாக தன்  படங்களில் வைக்கும் வசன ஸ்க்ரிப்ட் போல தான் வீட்டிலும் பேசுவார் போலும்! 

08)  எம்.ஜி.ஆர்- ஜானகி 


இரத்தத்தின் ரத்தம்...?
இந்த மலைக்கள்ளன் மனத்தை திருடிய மருத நாட்டு இளவரசி, எம்.ஜி.ஆர். மேல் கொண்ட காதலால் தன் கணவரை விவாகரத்து செய்து விட்டு எம்.ஜி.ஆருடன் வாழ்க்கையை மைத்தவர்.இருவரும் முதலமைச்சர்கள், ஜானகி தமிழ் நாட்டின் முதல் பெண் சி.எம். ( முதல் ' அம்மா?' ) ' நாடோடி மன்னன்' இல் புரட்சித் தலைவரும் எம்.என்.ராஜமும் போட்டி போட்டு கொண்டு தங்கள் சொத்தை நாட்டு  மக்களுக்கு வழங்குவார்களே, அது போல நிஜத்தில் எம்.ஜி.ஆருக்கு அமைந்த ஜோடி.


07  )  அஜித்-ஷாலினி



 அஜித், தமிழ் சினிமாவின் மோஸ்ட்  ஹான்ட்சம் ஹீரோ. ஷாலினி, பேபி ஆக இருந்ததில் இருந்தே தமிழ் மக்கள் பார்த்து வளர்ந்த பக்கத்து வீட்டுப் பெண். நடித்தது ஒரே ஒரு படம். அதுக்குள் அஜித் வானத்தில் பூவுக்கெல்லாம் சிறகு முளைத்தது எப்படி எப்படி நியாயம்?! அஜித் கிசுகிசுக்கப்படாத நடிகைகள் குறைவு. ஹீராவுடன் நீண்ட காலக் காதல், சுவாதி தற்கொலைக்கு முயன்றது என்று ப்ளே பாய் இமேஜ் வைத்திருந்த  அஜித், ஷாலினியை கண்டதும் தலைகீழாக மாறி பொறுப்பான கணவனாக நல்ல அப்பாவாக மாறியது கொலிவூட் எதிர்பார்க்காத ஆச்சர்யம். வயது வித்தியாசம், வேறு மதம், அஜித் இன்  பழைய ரெகார்ட்  என்று காதலுக்கு ஆப்பு உறுதி  என்று காத்திருந்த மீடியாக்களின் வாயை மூடிவிட்டு இந்த ஜோடி நடத்தும் காதல் வாழ்வுக்கு அனோஷ்கா என்ற குட்டி தேவதை சாட்சி.  ஷாலினி ஒரு முறை சொல்லி இருந்தது, " சில நேரம் தனியா இருக்கணும் போல தோணும், சில நேரம் பிரெண்ட்ஸ் கூட  டைம் ஸ்பென்ட் பண்ணனும் எண்டு தோணும், அந்த நேரங்களில 2  பேரும் புரிஞ்சுகிட்டு     இருப்போம், எப்பவும் மத்தவங்க என்னோட தான் இருக்கணும் எண்டு 2  பேருமே நினைக்கிறது இல்ல.." 

06  ) ரோஜா- செல்வமணி 


தெலுங்கானாவை பிரிச்சாலும்  எங்களை பிரிக்க முடியாது!
செம்பருத்தி போல இருந்தா யாருக்கு தான் பிடிக்காது? அண்ணன்களுக்கு மத்தியில்   செல்லமாக வளர்ந்த  ரோஜாவை தன் வீட்டு தோட்டத்தில் நட செல்வமணிக்கு ஆசை வந்தது போலும். தன்னை அறிமுகப்படுத்திய செல்வமணியை நீண்ட காலமாக காதலித்து வந்த ரோஜாவும் செல்வமணியும் ஒரு கட்டத்தில்  பல பிரச்சனைகளால் பிரிந்து விட முடிவெடுத்து ஒரு பொது நிகழ்ச்சி ஒன்றில் பிரிவை அறிவித்து விட முடிவெடுத்திருக்கிறார்கள். அப்போது அந்த நிகழ்ச்சிக்கு வந்த பாரதி ராஜா, மேடையில் வைத்து இருவரின் ஆடை தலைப்புகளையும் முடிந்து கலாட்டா செய்ததும், அறிவிக்க நினைத்திரிந்த முடிவை அறிவிக்க முடியாது போனதாக ரோஜா ஒரு பேட்டியில்  சொல்லி இருந்தார்.  தெலுங்கு தேச அரசியலில் தீவிரம் காட்டிய ரோஜாவுக்கு  செல்வமணி ஒரு பெரிய பலம். 

05 )  குஷ்பூ- சுந்தர்
கடவுளே  இவங்க இன்னிக்கு கற்பு பத்தி ஏதும் சொல்லாம இருக்கணுமே...?!



காமடி படங்களாக எடுத்துத் தள்ளிக் கொண்டிருந்த சுந்தர்.சி. , தான் ஒரு அதிரடி ஆக்க்ஷன் படத்தை தன் வீட்டுக்குள்ளேயே இயக்க வேண்டி வரும் என்று கனவிலும் நினைத்திருக்க மாட்டார். திருமணத்துக்கு முன்னரான உறவு குறித்து கருத்து சொன்ன குற்றத்துக்காக செருப்பு மாலை, விளக்குமாறுகளோடு தமிழகமே கூச்சல் போட்ட போதும், 27  வழக்குகளை சந்திக்க வேண்டி வந்த போதும் சுந்தர் உள்ளத்தை அள்ளித் தா என்று கேட்டது தப்போ என்று சிந்திக்காமல் குஷ்புவுக்கு தோள் கொடுத்தது தான் இந்த திருமண வாழ்வின் சக்சஸ்.  குஷ்பு பிரபுவிடம் சகஜமாக பழகும் ஒரு அழகான சூழலை ஏற்படுத்தி  இருப்பதை பார்க்கும் போது, டாக்டர் ஷாலினியின் பாஷையில் சொன்னால், சுந்தர் ஒரு 'ஆல்பா ' ஆண். ஒரு வார்த்தை தமிழ் தெரியாமல் வந்து இன்று மதம், மொழி, ஊர் என்று முற்றிலும் வேறுபட்ட ஒரு சூழலில் வாழ்க்கையை அமைத்து சந்தோஷமாக வாழும் குஷ்பூ - சுந்தர் காதல் ஒரு அழகான ஓவியம். 

04  )  தேவயானி- ராஜகுமாரன் 


'அபி'யும் நானும்....
அழகான நடிகைகள் ஹான்ட்சம்மான , சக்சஸ்புல்லான  இயக்குனரை காதலிப்பது வழமை, அது அமலா போல்-விஜய் வரை தொடர்கிறது. ஆனால் ஒரே ஒரு வெற்றிப்படம் மட்டுமே கொடுத்த, உருவத்தில் தனக்கு சற்றும் பொருத்தமில்லாத, வேறு மொழி பேசுகின்ற, வேறு மாநிலத்தைச் சேர்ந்த ஒரு இயக்குநருக்காக, வீட்டின் கடும் எதிர்ப்பையும் மீறி மதில் ஏறி  தாண்டி வந்து இயக்குனர் ராஜகுமாரனை கைப்பிடித்த வித்தியாசமான காதல் இது. அதுவும் அவர் ஒரு உதவி இயக்குனராக மட்டும் இருந்த நிலையிலேயே  காதல் தொடங்கியது தன் இன்னும் வியக்க வைக்கிறது. ராஜகுமாரன் தன்னிடம் இல்லாதவைகளை எல்லாம் அன்பால் நிரப்பி இருந்தால் மட்டுமே இது சாத்தியம். பிரபலமான, பிசியான   நடிகை- பிரபலம் அற்ற கணவன் என்னும் போது வழமையாக வரும் எந்த வித ஈகோ மோதல்களும் இல்லாமல் இனிய இரண்டு பெண் குழந்தைகளோடு இந்த ஜோடி  நடத்தும் வாழ்க்கை ஒரு உதாரணம் . 'காதலுடன்' படம் ப்ளாப்  ஆனாலும் இந்த ஜோடி சூப்பர்  ஹிட் ! 

03 )  என்.எஸ்.கிருஷ்ணன்- டி.ஏ.மதுரம் 


உன் மேல நான் மயங்கி ஒரு வாரம் ஆச்சுதடி..!
இருவரின் பெயரையும் தனித் தனியே பிரித்து சொல்ல முடியாத அளவுக்கு சினிமாவில் சேர்ந்தே பாப்புலரரான ஜோடி. ஆனால் இவர்களின் காதலின் சிறப்புக்கு அதுவல்ல காரணம். இன்பத்தில் சேர்ந்திருப்பது சாதாரணமானது. என்.எஸ்.கிருஷ்ணன் லக்ஷ்மி காந்தன் கொலை வழக்கில் கைதாகி சிறையில் இருந்த காலங்களில் கணவரின் விடுதலைக்காக மதுரம் நிகழ்த்திய போராட்டம் ஷாஜகான் கட்டிய தாஜ்மகாலை  விட உயர்வானது. அதனால் தான் என்.எஸ்.கே. மனைவி இறந்த பிறகு ஒரு தூபி எழுப்பினார். இருவருக்கும் பிறந்த குழந்தை இறந்த பிறகு, மதுரத்துக்கு குழந்தை இல்லாமல் போக, தன் தங்கை வேம்பு வை தன் கணவருக்கே திருமணம் முடித்து வைத்தார் மதுரம். ( மதுரம்-வேம்பு; பெயரில் என்ன ஒரு வேற்றுமை!) 

02 )   சூர்யா- ஜோதிகா
கலாபக் காதலி...!

' ஒளி மயமான '  நடிகருக்கும் ' ஒளி மயமான'  நடிகைக்கும் இடையே நெருக்கம் என்று ' உயிரிலே கலந்தது' படத்தில் நடிக்கும் போது வந்த அந்த வீக்கான கிசு கிசுவை சிவகுமார் கூட நம்பி இருக்க மாட்டார். ' சூர்யா போல நைஸ் ஆ பேசற ஜென்டில்மேன் ஐ இண்டஸ்ட்ரில பார்த்ததே இல்ல' என்று ஜோ பெட்டி கொடுக்கும் போது கூட தமிழ் கூறும் நல்லுலகம் நம்பவில்லை. நெருக்கம் நட்பாகி ' காக்க காக்க' வில் காதலானதும்   தான் உலகம் விழித்துக் கொண்டது. ஜோதிகாவுக்கு அக்கா இருவருமே நடிகைகள், வேறு மாநிலம், அதிலும் தாய் ஒரு முறை விவாகரத்து பெற்றவர். சிவகுமார் குடும்பமோ வெகு பாரம்பரியமான மார்க்கண்டேயர் குடும்பம்.  கிளம்பிய கடுமையான எதிர்ப்பை சமாளித்து, பெற்றார் சம்மதத்துடன் திருமணம் செய்வதற்காக கிட்டத்தட்ட 4  வருடங்கள் காதலித்து, நீண்ட காலப் போராட்டத்துக்கு பிறகு ஜோ என் மகள் என்று அதே சிவகுமார் வாயால் சொல்ல வைத்தது இந்த காதல் ஜோடியின் மன உறுதிக்கு கிடைத்த வெற்றி.முழு தமிழ் நாடும் இந்த கல்யாணம் நடக்க வேண்டும் என்று விரும்பியது. இன்று நொடிக்கு நூறு  முறை ஜோ ஜோ என்று புகழ் பாடும் சூர்யா, தியாவை  இடுப்பில்  தூக்கியபடி வளம் வரும் ஜோ, அப்புறம் லேட்டஸ்ட் வரவு தேவ், கார்த்தி திருமணத்தில் பொறுப்பான அண்ணன் அண்ணி பதவி என்று இந்த அழகான ஜோடியின்  வாழ்க்கை " ஜில்லுன்னு ஒரு காதல் "!

01  ) கமல்-கௌதமி
அபிராமிங்கிறதுக்கு  பதிலா  கௌதமின்னு வச்சிருக்கணும் !

 இரண்டு மனங்களுக்கு இடையில் உருவாகும் நேசமும் காதலும் திருமணம் என்ற ஒரு ஏற்பாட்டால்  மட்டுமே முழுமை அடையுமா? ஒருவரைக் காதலிக்கிறோம், அளவில்லாமல் அன்பு செய்கின்றோம் என்றால் , அந்த அன்பிற்கு இடையில் திருமணம் என்ற சட்ட ஏற்பாடு, அல்லது சம்பிரதாயம் எங்கிருந்து வந்து முளைக்கும்? திருமணம் செய்யவில்லை என்ற ஒரு காரணத்துக்காக இருக்கின்ற காதல் இல்லை என்று ஆகி விடுமா? ஏற்கனவே இரண்டு திருமணங்களின் பிரிவின் பின் கமலும், ஒரு விவாகரத்தின் பின் கௌதமியும், இருவரின் குழந்தைகளோடும் ஒன்றாக சேர்ந்து வாழ்வது, குறிப்பாக இந்த உறவில் அவர்களின் குழந்தைகள் உட்பட சம்பந்தப்பட்ட அனைவரும் சந்தோஷமாக வாழ்வது, எழுத்தில் விவாகப்பதிவு வைத்திருக்கும், அம்மி மிதித்து தாலி கட்டி வாழ்பவர்களிடம் கூட காண முடியாதது.   கௌதமி கான்சர் வந்து சிகிச்சையில் இருந்த காலகட்டத்திலும், திருமணம் என்ற பந்தம் இல்லாத காரணத்தால் இலகுவாக விலகிச் சென்றுவிட முடியும் என்ற போதிலும், கூடவே இருந்து கமல் தோள் கொடுத்து, சிகிச்சை முறையின் ஒவ்வொரு படிநிலையையும் ஒளிப்பதிவு செய்து, கௌதமி மீண்டும் பழைய வாழ்க்கைக்கு பொலிவோடு மீண்டு வர துணை நின்றதுக்கு காரணம், இருவரும் மற்றவர் நம்மவர் என்று நினைத்தது தான். சமூகத்தின் எதிர்ப்புக்களுக்காக சமரசம் செய்ய  போலியான முகமூடிகள் அணியாமல் விட்டதற்காக இந்த அபூர்வக் காதலர்களுக்கு முதல் இடம்.