Showing posts with label GANESAN. Show all posts
Showing posts with label GANESAN. Show all posts

Sunday, 28 February 2021

SIVAJI GANESAN `S MARRIAGE

 

SIVAJI GANESAN `S MARRIAGE


சிவாஜி கண்ட இந்து ராஜ்யம்" நாடகம்
3 மணி நேரம் நடந்த நாடகத்தை, தந்தை பெரியார் கடைசி வரை இருந்து பார்த்தார்,
`யாரோ ஒரு சின்னப்பையன் சிவாஜியாக நடித்தானே, அவன் யார்?" என்று கேட்டார். சிவாஜிகணேசனை பெரியார் முன் கொண்டுபோய் நிறுத்தி, ``இந்தப் பையன்தான். பெயர் கணேசன்" என்று அறிமுகம் செய்து வைத்தனர்.
சிவாஜியாக ரொம்ப நன்றாக நடித்தாய்! இன்று முதல் நீ கணேசன் அல்ல; சிவாஜி!" என்று பெரியார் வாழ்த்தினார்.
பெரியாரின் இந்த வாழ்த்து பெரிய பட்டமாக அமைந்து விட்டது. அதுவரை ``வி.சி.கணேசன்" என்று அழைக்கப்பட்டவர், அன்று முதல் ``சிவாஜி கணேசன்" ஆனார்.
திண்டுக்கல்லில் இருந்து பெங்களூர் சென்றுவிட்டு, வேலூர் சக்தி நாடகசபா முகாமிட்டது. அப்போது ``நூர்ஜஹான்" என்ற நாடகத்தில், நூர்ஜஹானாக சிவாஜி நடித்தார்.
நேஷனல் பிக்சர்ஸ்" பி.ஏ.பெருமாள், இந்த நாடகத்தைப் பார்த்தார். சிவாஜியின் நடிப்பு அவரை வெகுவாகக் கவர்ந்தது.
எதிர்காலத்தில் மிகப்பெரிய நடிகராக சிவாஜி வருவார்" என்று நினைத்தார்
பி.ஏ.பெருமாள்பராசக்தி கதையை படமாகத் தயாரிக்க வேண்டும். அதில் சிவாஜி கணேசனை கதாநாயகனாக நடிக்க வைக்க வேண்டும்" என்று தீர்மானித்தார். நினைத்ததை செயலில் காட்டினார்.
படத்துக்குப் பண உதவி செய்த ஏ.வி.எம். செட்டியாரும், புதுமுகத்தை வைத்துப் படமெடுப்பதை அவ்வளவாக விரும்பவில்லை.
மேக்கப் டெஸ்டுக்காகத் திருச்சியிலிருந்து சென்னைக்கு விமானத்தில் அழைத்து வரப்பட்ட கணேசனைப் புகைப்படமெடுத்து வசனம் பேசச் செய்தனர்.
பி.ஏ. பெருமாள் முதலியார் மட்டும், தான் படமெடுத்தால் கணேசனை வைத்துத் தான் எடுப்பது என்ற முடிவு செய்து விட்டிருந்தார்.
அவரின் திடமான தீர்க்க தரிசனத்தால் திரையுலகுக்குக் கிடைத்த ஒரு பொக்கிஷம் தான் நடிகர் திலகம் சிவாஜி கணேசன்.
``பராசக்தி"யில் நடித்துக் கொண்டிருந்தபோதே, சிவாஜி கணேசனுக்குத் திருமணம் நடந்து விட்டது. சொந்த அக்காள் மகள் கமலாவை அவர் மணந்தார்.
பெரியவர்களால் முடிவு செய்யப்பட்ட இத்திருமணம், சுவாமிமலையில் 1952 மே 1-ந் தேதி நடைபெற்றது. காளிங்கராயர் குல மகள் ராஜாமணி அம்மையார் விருப்பப்படி ஆறுபடைவீட்டில் ஒன்றான சுவாமி மலை முருகப் பெருமானின் சந்நிதியில் சீர்திருத்த முறைப்படி எளிமையாக இத்திருமணம் நடந்தது
திருமணத்துக்கு மு.கருணாநிதி, எம்.ஜி. ஆர்., நேஷனல் பிக்சர்ஸ் அதிபர் பெருமாள் முதலியார், கவிஞர் கண்ணதாசன், அரங்கண்ணல், டி.ஏ. மதுரம், எஸ்.வி. சகஸ்ரநாமம், டைரக்டர்கள் கிருஷ்ணன்.பஞ்சு வந்திருந்து வாழ்த்தினர்
May be an image of 2 people, people standing, people sitting and text
146
19 Comments
18 Shares



திருச்சியில் தமிழாசிரியராக இருந்த ரத்தினம் பிள்ளை, திருக்குறளைப்படித்து திருமணத்தை நடத்தி வைத்தார். கண்ணதாசன் மாலையை எடுத்துக் கொடுக்க அதை மணமகளுக்கு அணிவித்தார், சிவாஜி. பின்னர் தாலி கட்டினார்.
மணமக்களை கண்ணதாசன் வாழ்த்தி பேசினார். ஓட்டலில் இருந்து எடுத்து வந்த சாப்பாடு அனைவருக்கும் பரிமாறப்பட்டது. கல்யாணச் செலவு 500 ரூபாய்தான் என்று சிவாஜி கூறியுள்ளார்.
திருமணத்துக்குப் பிறகு சென்னை கோடம்பாக்கத்தில் வீடு பார்த்து, மனைவியுடன் குடியேறினார், சிவாஜிகணேசன். சில நாட்கள் கழித்து ராயப்பேட்டை பெசன்ட் ரோட்டுக்கு குடிபோனார்.
அங்குதான் இப்போது சிவாஜி பிலிம்ஸ் அலுவலகம் இருக்கிறது. ராம்குமார், பிரபு என்ற மகன்களும், சாந்தி, தேன்மொழி என்ற மகள்கள்கள் உள்ளனர்
சிவாஜி தன்னுடைய திருமணம் எளிமையாக நடந்துவிட்டதால்
தன்னுடைய தம்பிசண்முகத்தின்
திருமணத்தை ஆடம்பரமாக நடத்தினார் 100 புரோகிதர்களை வைத்து ஆச்சாரப்படி நடத்தினார்.
பாடி லாங்குவேஜ்' என்று சொல்கிற உடல்மொழி அவருக்கு முதல் படத்திலேயே வந்து விட்டதை
"கல்லைத்தான், மண்ணைத்தான், காய்ச்சித்தான், குடிக்கத்தான், கற்பித்தானா' என்று நடிக்கும் ஒரே காட்சியை "பராசக்தி' படத்தில் பார்த்தாலே புரிந்துவிடும்.
தமிழை அவர்போல் உச்சரித்த நடிகர்கள் இதுவரை பிறக்கவில்லை.
தமிழ் மொழியில் அவரளவுக்கு அதிகப்படியான எண்ணிக்கையில் தமிழ் வார்த்தைகளைப் பேசி நடித்த நடிகர் வேறு யாருமே இருக்க முடியாது
கட்டபொம்மன்', "கர்ணன்', "ராஜ ராஜ சோழன்', "அரிச்சந்திரன்', "ஜஹாங்கீர்' என ராஜா வேடம் போடும்போது உடைகள், கீரிடம், முகத்தின் தோற்றம், தாடி, மீசை, புருவம் இவற்றிலும், தலை முடியிலும் மாற்றங்களைத் தெளிவாகக் செய்வார்.
அதேபோல் ராமன், இராவணன், கிருஷ்ணன், நாரதர் என்று புராண வேடங்களை ஏற்கும்போதும் தேர்ந்த நாடகத்துறை உடையலங்கார நிபுணர்களை வைத்துக்கொண்டு
காதில் அணியும் தோடு, ராமர், பரசுராமர், அர்ஜுனன் கையில் உள்ள ஆயுதங்களை எல்லாம சரி பார்ப்பார்.
உலகின் எந்த ஒரு நடிகனும் ஒரே நாளில் மூன்று வித வேடங்கள் ஏற்று நடித்ததில்லை.
சிவாஜி காலையில் (பாபு திரையில்) ரிக்ஷாக்காரன் வேடம் போட்டு நரைத்த தாடியும், பரட்டைத் தலையும் கிழிந்த கோட்டுமாய் கைரிக்க்ஷா இழுத்து நடிப்பார்.
பிற்பகல் பக்தி படத்தில் வேடம் போட்டு, பாடல் காட்சியில் நடிப்பார்.
இரவு அந்த வேடத்தைக் கலைத்துவிட்டு பள பளப்பாக மின்னும் கோட்டும் சூட்டுமாக சொர்க்கம்' படத்தில் நடிப்பார்.
ஹாலிவுட்டில் எந்த நடிகரும் இப்படி செய்திருக்க வாய்ப்பில்லை.
May be an image of 2 people
46
10 Comments
9 Shares





சிவாஜி கண்ட இந்து ராஜ்யம்" நாடகம்
3 மணி நேரம் நடந்த நாடகத்தை, தந்தை பெரியார் கடைசி வரை இருந்து பார்த்தார்,
`யாரோ ஒரு சின்னப்பையன் சிவாஜியாக நடித்தானே, அவன் யார்?" என்று கேட்டார். சிவாஜிகணேசனை பெரியார் முன் கொண்டுபோய் நிறுத்தி, ``இந்தப் பையன்தான். பெயர் கணேசன்" என்று அறிமுகம் செய்து வைத்தனர்.
சிவாஜியாக ரொம்ப நன்றாக நடித்தாய்! இன்று முதல் நீ கணேசன் அல்ல; சிவாஜி!" என்று பெரியார் வாழ்த்தினார்.
பெரியாரின் இந்த வாழ்த்து பெரிய பட்டமாக அமைந்து விட்டது. அதுவரை ``வி.சி.கணேசன்" என்று அழைக்கப்பட்டவர், அன்று முதல் ``சிவாஜி கணேசன்" ஆனார்.
திண்டுக்கல்லில் இருந்து பெங்களூர் சென்றுவிட்டு, வேலூர் சக்தி நாடகசபா முகாமிட்டது. அப்போது ``நூர்ஜஹான்" என்ற நாடகத்தில், நூர்ஜஹானாக சிவாஜி நடித்தார்.
நேஷனல் பிக்சர்ஸ்" பி.ஏ.பெருமாள், இந்த நாடகத்தைப் பார்த்தார். சிவாஜியின் நடிப்பு அவரை வெகுவாகக் கவர்ந்தது.
எதிர்காலத்தில் மிகப்பெரிய நடிகராக சிவாஜி வருவார்" என்று நினைத்தார்
பி.ஏ.பெருமாள்பராசக்தி கதையை படமாகத் தயாரிக்க வேண்டும். அதில் சிவாஜி கணேசனை கதாநாயகனாக நடிக்க வைக்க வேண்டும்" என்று தீர்மானித்தார். நினைத்ததை செயலில் காட்டினார்.
படத்துக்குப் பண உதவி செய்த ஏ.வி.எம். செட்டியாரும், புதுமுகத்தை வைத்துப் படமெடுப்பதை அவ்வளவாக விரும்பவில்லை.
மேக்கப் டெஸ்டுக்காகத் திருச்சியிலிருந்து சென்னைக்கு விமானத்தில் அழைத்து வரப்பட்ட கணேசனைப் புகைப்படமெடுத்து வசனம் பேசச் செய்தனர்.
பி.ஏ. பெருமாள் முதலியார் மட்டும், தான் படமெடுத்தால் கணேசனை வைத்துத் தான் எடுப்பது என்ற முடிவு செய்து விட்டிருந்தார்.
அவரின் திடமான தீர்க்க தரிசனத்தால் திரையுலகுக்குக் கிடைத்த ஒரு பொக்கிஷம் தான் நடிகர் திலகம் சிவாஜி கணேசன்.
``பராசக்தி"யில் நடித்துக் கொண்டிருந்தபோதே, சிவாஜி கணேசனுக்குத் திருமணம் நடந்து விட்டது. சொந்த அக்காள் மகள் கமலாவை அவர் மணந்தார்.
பெரியவர்களால் முடிவு செய்யப்பட்ட இத்திருமணம், சுவாமிமலையில் 1952 மே 1-ந் தேதி நடைபெற்றது. காளிங்கராயர் குல மகள் ராஜாமணி அம்மையார் விருப்பப்படி ஆறுபடைவீட்டில் ஒன்றான சுவாமி மலை முருகப் பெருமானின் சந்நிதியில் சீர்திருத்த முறைப்படி எளிமையாக இத்திருமணம் நடந்தது
திருமணத்துக்கு மு.கருணாநிதி, எம்.ஜி. ஆர்., நேஷனல் பிக்சர்ஸ் அதிபர் பெருமாள் முதலியார், கவிஞர் கண்ணதாசன், அரங்கண்ணல், டி.ஏ. மதுரம், எஸ்.வி. சகஸ்ரநாமம், டைரக்டர்கள் கிருஷ்ணன்.பஞ்சு வந்திருந்து வாழ்த்தினர்
May be an image of 2 people, people standing, people sitting and text
146
19 Comments
18 Shares

Thursday, 18 February 2021

VASANTHA MALIGAI -DIALOGUE SIVAJI GANESAN

 

VASANTHA MALIGAI -

DIALOGUE SIVAJI GANESAN




நாம் எவ்வளவோ வசனங்கள் ரசித்திருப்போம். ஆனால் !

இந்த காதல் காவிய கவிதை நடைக்கு இணையேது ! ...


(இந்த வசனம் படமாக்குவதற்கு பத்து நிமிடம் இருக்கும் போது 

பாலமுருகனால் எழுதப்பட்டது 

சிவாஜிக்கு மனப்பாடம் செய்ய ஐந்தே நிமிடம் )

ஆனந்த்: லதா… இந்த இதயம் இருக்கே அதை ஒருத்தருக்கு கொடுக்காத வரைக்கும் விசாலமாயிருக்கும். கொடுத்ததுக்கு அப்புறம் ரொம்ப சுருங்கிப் போய்விடும். அடுத்தவங்களுக்கு கொடுக்க சம்மதிக்காது.

லதா: அப்படி என்றால் உங்கள் இதயம்…!

ஆனந்த்: அதை ஒரு தேவதைக்கு அர்ப்பணித்து விட்டேன். அந்த அன்பு தெய்வம் குடியிருக்கும் கோயிலை நீ பார்க்க வர்றீயா?

லதா: பார்க்கிறேன்..

ஆனந்த்: வா.. பார்.. பார் 

என் காதல் தேவதைக்கு நான் கட்டியிருக்கும் இந்த ஆலயத்தை பார்! 

உள்ளத்திலே படர்ந்திருக்கும் முல்லைக் கொடிக்கு நான் அமைத்திருக்கும் இந்த பந்தலைப்பார்! 

என் இதய சாம்ராஜ்ஜிய தலைவியின் ஆட்சி ஆரம்பமாகப்போகும் அன்பு மாளிகையைப் பார்! 

என் கண்களைத் திறந்து விட்ட காதல் தெய்வம் காலமெல்லாம் களித்திருக்க நான் கட்டிய வசந்த மண்டபத்தை பார்! 

வானத்து நிலா நீராட இறைவன் மேகத்தைப் படைத்தான். என் வாழ்வின் நிலா நீராட இந்த பொய்கையை படைத்தேன். 


இது இறந்துபோன ராணிக்காக கட்டப்பட்ட தாஜ்மஹால் அல்ல! 

உயிரோடு இருக்கும் என் காதலிக்காக கட்டப்பட்ட வசந்த மாளிகை! 

இது சமாதி அல்ல! 

சன்னிதி! ..

ஆண்டவன் மட்டும் எனக்கு பறக்கும் சக்தியை கொடுத்திருந்தால் ஆகாயத்திலே மின்னிக் கொண்டிருக்கும் அத்தனை நட்சத்திரங்களையும் எடுத்து வந்து தோரணமாக கட்டி தொங்கவிட்டு இருப்பேன். 


வானத்து நிலவைப் பறித்து வந்து இந்த வசந்த மாளிகைக்கு வண்ண விளக்காக அமைத்திருப்பேன்! 

என்ன செய்வது! 

எனக்கு அந்த சக்தி இல்லையே..! சக்தி இல்லையே…! 

என்ன பார்க்கிறாய்…!


லதா: இந்த அளவிற்கு உங்கள் இதயத்தில் குடிகொண்டிருக்கும் அந்த பாக்கியவதி எங்கே என்று பார்க்கிறேன்.

ஆனந்த் : 

அவளைப் பார்க்க வேண்டுமா… 

வா என்னோடு… 

உள்ளே சென்று பார்! …

அங்கு தான் என் இதயம் இருக்கிறது. 

அவளும் இருக்கிறாள்..! 

நீ திரும்புகின்ற திசையெல்லாம் அவள் திருவுருவம் தான் காட்சியளிக்கும். 


        காதலிக்கத் தெரியாதவனையும் காதல் செய்ய வைக்கும் பாலமுருகனின் வசனங்கள் நிறைந்தகாட்சி இது!

பகிர்ந்த பதிவு 

💥💥

இதயக்கனி விஜயன்

KANTHAN KARUNAI -SIVAJI GANESAN DIALOGUES

 


KANTHAN KARUNAI -SIVAJI GANESAN DIALOGUES




தமிழ்க் கடவுள் முருகனின் அருமையை சுவைபடக்கூற எடுக்கப்பட்ட படம் தான் `கந்தன் கருணை’.
இந்தப் படத்தில் சிவாஜி, கவுரவ வேடத்தில் வீரபாகு தேவனாக நடித்திருப்பார்.
இந்தப் படத்தில்தான் தமிழ் எப்படி விளையாடியிருக்கிறது?
டி. ராஜேந்தர் எழுதும் வசனங்களையெல்லாம் ஏ.பி. நாகராஜன் அப்போதே புராணப் படங்களில் எழுதிவிட்டார்.
`கந்தன் கருணை’ ஒரு உதாரணத்திற்கு பார்ப்போம்!
சூரனை வதைக்கும் போரில் கந்தனின் படைத் தளபதி வீரபாகு தேவர் வேடம்தான் சிவாஜி கணேசனுக்கு !
போரில் கந்தன் வெற்றி பெற்றவுடன், பாடும் பாடல் வெற்றிவேல்
வீரவேல், சுற்றி நின்ற பகைவர் தம்மை தோள்நடுங்க வைக்கும் எங்கள் சக்திவேல், ஆதி சக்திவேல்’ பாட்டிற்கு சிவாஜி ஒரு நடை நடந்து வருவார்.
தியேட்டரே அதிரும் வண்ணம் கைத்தட்டல்! இந்த படத்தில் ஒரு காட்சி!
போருக்கு முன் சூரபத்மனிடம், வீரபாகுவை தூதாக அனுப்புவார் முருகன். இதில் சூரபத்மனாக அசோகன் நடித்திருப்பார்.
சூரனின் சபை. அங்கே சூரன் `என்னை வெல்லுமளவிற்கு அந்த குமரனுக்கு வல்லமை எங்கிருந்து வந்தது? எவர் கொடுத்த சக்தி அது? எப்படிப்பட்டவன்? அவன் யாராக இருப்பான்?’ என்று சபையில் உரக்க கேட்டுக்கொண்டிருப்பான். அப்போது தூதனாக வீரபாகு அவனது சபையில் தோன்றுவான்.
வீரபாகுவான சிவாஜி கணேசன்
பேசுவார் –`அவனையா யார் என்று கேட்கிறாய்? உன்னை ஒழிப்பதற்கென்றே உலகில் தோன்றியவன்! வேலோடு வந்திருப்பவன்! உன்னால் வேதனைப்படும் அமரர்களை விடுவிக்கப் போகிறவன்! வேலன்! வேதத்திற்கு சீலன்! பார்வைக்கு பாலன்! பகைவருக்கு காலன்!’ என்பான் வீரபாகு!
`எத்தனை பெயர்கள் அவனுக்கு ?’ இது சூரபத்மன்.
`கந்தனென்பார், கடம்பனென்பார், கார்த்திகேயனென்பார்! முருகனென்பார், குகனென்பார், சண்முகனென்பார்! உன்னையும் வதைத்த பின் சூரனையும் வதைத்த சூரன் என்பார்.’
`போதும் நிறுத்து, வார்த்தையிலே அழகு கூட்டி, வர்ணனையில் ஜாலம் காட்டி,சொல் அலங்காரத்துடன் என்னைப் பேட்டி காண வந்திருப்பவனே! யார் நீ?’
`சொல்லுக்கும் பொருளுக்கும், முத்தமிழுக்கும், தமிழின் இனிமைக்கும்,ஆயகலை அறுபத்தி நான்கிற்கும், ஆறு சாஸ்திரத்திற்கும், நான்கு வேதத்திற்கும், முன்னை பழமைக்கும், பின்னை புதுமைக்கும் தலைவன் அவன்! அவனே வேலவன்! அவன் அனுப்பிய தூதுவன்! வீரபாகு தேவன்!’
`ஓ! வேலவன் அனுப்பிய தூதுவனோ?’
`தூதுவன் மட்டுமல்ல நன்மையை எடுத்து ஓதுபவனும் கூட !’
அப்போது சூரபத்மனிடம் தம்பிமார்கள் சீற்றமாக எழுந்து `வீரபாகு’ என்று கத்துவார்கள்.
`ஏய்! சூரன் மட்டும் பேசட்டும். மற்றவர்கள் வாயடக்கி இருக்கட்டும். இருக்கையில் அமரட்டும்’ – இது வீரபாகு!
`சற்றுப்பொருங்கள். இவனை நான் பார்த்துக் கொள்கிறேன்’ என்பான் சூரபத்மன்!
`நீ பார்த்துக் கொள்வாய்! நான் பார்த்துக் கொல்வேன்.’
`ம்! எங்கு வந்தாய்? எதற்காக வந்தாய்? வந்த விஷயத்தைக் கூறு! சுருக்கமாகச் சொல்லிவிட்டு ஓடிவிடு!’
`படிப்பையெல்லாம் கற்றாயே தவிர, பண்பை கற்க மறந்துவிட்டாய்! நீ என்ன செய்வாய் பாவம்! என்று உன் தங்கை அகமுகி அடிபட்டு வந்தாளோ அன்றே உன் அறிவு மங்கிவிட்டது! தூதாக வந்தவனை கவுரவித்து, ஆசனமளித்து, அமரச் செய்து பிறகு வந்த நல்ல விஷயத்தை கேட்பதை விடுத்து, நிற்க வைத்துக் கொண்டே பேசுகிறாயே! இதுதான் நீ கற்ற கலையோ?’
`ஹா! ஹா! ஹா! ஆசனமா? உனக்கு நான் கொடுக்கவா ? பைத்தியக்காரா! அசுர குலத்தவர் அமரும் அரசவையிலே மாற்றான் எவனுக்கும் ஆசனமில்லை என்று அன்றே ஆணையிட்டுவிட்டேன். தேவையென்றால் நின்று சொல்! அல்லது ஓடிவிடு!’
` நீ என்ன எனக்கு ஆசனம் தருவது? சரவணப் பெருமான் அருளால் உனக்கு சமமான ஓர் ஆசனத்தை நானே ஏற்படுத்திக்கொண்டு, அதில் அமர்ந்து பதில் சொல்வேனேயல்லாமல் நானாவது நின்றாவது பதில் சொல்வதாவது! பேசுவதாவது!’
`முருகா’ என்பான் வீரபாகு, சூரனுக்கு சமமான ஆசனம் வரும். அதில் அமர்ந்து கொள்வான் வீரபாகு!
`இப்போது உனக்கும் சிம்மாசனம்! எனக்கும் சிம்மாசனம்! அங்கே பணிப்பெண்கள்! இங்கேயும் பணிப்பெண்கள்! நீ சூரன்! நான் வீரன்! சரிதானா?’ என்றபடி வாய்விட்டு சிம்ம கர்ஜனையோடு சிவாஜி ...
சூரபத்மன் : வீரபாகு! இந்த மாதிரி மந்திரஜாலங்களைக் கண்டு நான் பயந்துவிடுவேன் என்று எண்ணிவிடாதே! மாயை என்பவள்தான் என்னைப் பெற்றெடுத்த தாய். தெரியுமா உனக்கு?
வீரபாகு : அந்த மாயையைப் படைத்த பரமனின் பிள்ளைதான் வேலவன். அது தெரியுமா உனக்கு?
சூரபத்மன் : அவன் தந்தையிடம்தான் உலகில் எந்த சக்தியாலும் என்னை அழிக்கக் கூடாது என்கிற வரத்தைப் பெற்றிருக்கிறேன். அதை அறிந்தாயா நீ?
வீரபாகு : வரத்தைப் பெற்றபின் உன் தரத்தில் நீ தாழ்ந்துவிட்டாயென்றுதான் பன்னிரண்டு கரத்தோடு ஆறுமுகத்தைப் படைத்திருக்கிறான் பரமன் என்பதை அறிந்தாயா நீ?
சூரபத்மன் : ஆறுமுகமானால் என்ன, ஆறாயிரம் முகம் படைத்தவனானா என்ன? இந்த சூரனை அழிக்க ஒருவன் பிறக்கவுமில்லை. இனி பிறக்கப் போவதுமில்லை.
வீரபாகு : உன்னை வெல்லவோ,கொல்லவோ குமரன் தேவையில்லை. நான் என் சொல்லினாலேயே கொன்றுவிடுவேன். ஆனால், அது வேலவனின் வேலுக்கு பெருமையில்லையே என்று உன்னை மன்னித்தேன் போ!
சூரபத்மன் : நீயா, என்னை வெல்லவா? உன்னால் என்ன செய்ய முடியும்?
வீரபாகு : என்ன செய்ய முடியுமா? உனக்காகவே தாண்டி வந்தேன் கடலை! வாங்குவேன் உன் உடலை! அணிவேன் மாலையாய் குடலை! ஆனால் என் முருகன் கட்டளை இடலை! அதனால் உன்னைத் தொடலை!