Showing posts with label V.O.CHIDAMBARAM. Show all posts
Showing posts with label V.O.CHIDAMBARAM. Show all posts

Sunday, 18 April 2021

V.O.CHIDAMBARAM AND GANDHIJI CORRESPONDENCE

 


V.O.CHIDAMBARAM AND GANDHIJI CORRESPONDENCE


வ.உ.சி. 150. நினைவலைகள் (பதிவு எண். 9/150)



சென்னையில் பெரியவர் வ.உ.சி – மகாத்மா காந்தியடிகள் கடித பரிவர்த்தனை


கடந்த 106 வருடங்களுக்கு முன்பாக (17.04.1915) இதே நாளில் திரு. காந்தியடிகள் தனது மனைவியுடன் சென்னை வருகிறார்.   சென்னை வந்த காந்தியை பெரியவர் வ.உ.சி. இரயிலில் இறங்கும் வேளையில் பார்த்திருக்கிறார். அச் சமயம் வ.உ.சிதம்பரனார் மயிலாப்பூர் முண்டக கன்னியம்மன் கோவில் அருகே உள்ள எண்: 40, இலக்கம் கொண்ட பரிபூர்ண விநாயகர் கோவில் தெருவில் வசித்திருக்கிறார். மறுநாள் அதாவது 106 வருடங்களுக்கு முன்பாக இதே நாளில் 18.04.1915 அன்று தம்பு செட்டித் தெருவில் ஜி.ஏ. நடேசன்  வீட்டில் தங்கியிருந்த காந்தியடிகள் அவர்களுக்கு ஒரு கடிதம் எழுதுகிறார்.


டியர் பிரதர் காந்தி,



நேற்று தாங்களும்  தங்களது மனைவி கஸ்தூரிபாய் அவர்களும் ரயிலில் இருந்து இறங்கும் போது, உங்கள் இருவரையும் பார்க்கும் பேறு  எனக்குக் கிடைத்தது.

இந்த ஊரில் இருந்து கிளம்பும் முன்பாக உங்களைச் சந்தித்து உரையாட விரும்புகிறேன்.


இப்படிக்கு


வ.உ. சிதம்பரனார்

மயிலாப்பூர்.


20.04.1915 அன்று சென்னை பிராட்வேயில் உள்ள தம்பு செட்டி தெருவில் ஜி.ஏ. நடேசன் வீட்டில் தங்கியிருக்கும்  காந்தியின் கைக்கு கடிதம் கிடைத்து விடுகிறது. இதற்கு பதில் கடிதம் காந்தி எழுதுகிறார்.



“அடுத்த வெள்ளிக்கிழமை காலை ஆறு மணிக்கு தாங்கள் வந்தால் உங்களுக்கு ஒரு சில நிமிடங்களை ஒதுக்கித் தர இயலும். 


இக் கடிதம் வ.உ.சி.யின் கைக்கு கிடைத்துவிடுகிறது.  “ஒரு சில நிமிடங்கள்” என்பது பெரியவர் வ.உ.சி.யை கொஞ்சம் யோசிக்கத்தான் வைத்திருக்கும். மிகப் பெரிய பாய்ச்சலை, அதிர்வை பிரிட்டீசாரை தூங்க விடாமல் ஆக்கிய பெரியவருக்கான மதிப்பு ஒரு சில நிமிடங்கள் என்பது அவருடைய ஆளுமைக்கு உகந்ததல்ல என்பதே என் கருத்து.


ஆனால் பெரியவர் வ.உ.சி. இந்த தடவை பதில் கடிதம் எழுதுகையில்  “டியர் பிரதர் ” என்று விளிக்காமல் அலுவலக மொழி தொனியில் “ டியர் சார் காந்தி”  என்று குறிப்பிட்டு பின் வருமாறு பதிலளிக்கிறார்.


ஏறகனவே காந்தி அவர்களுடைய கடிதத்தில் குறிப்பிடப்பட்ட “ஒரு சில நிமிடங்களுக்கு மேல் நமது உரையாடல்   தாண்டிச் சென்று விடுமென அஞ்சுகிறேன். உங்களது மதிப்பு மிக்க நேரத்தில் குறுக்கீடு செய்து  தொந்தரவு செய்ய விரும்பவில்லை என்று எழுதியுள்ளார்.


இக் கடிதம் வந்தடைந்த பின்பு காந்தி,  வ.உ.சி. அவர்களே! நீங்கள் என்னை பார்க்க வர முடியாவிட்டால் நானே வந்து உங்களைச் சந்திக்கிறேன். ஆனால் வெள்ளி அல்லது சனிக் கிழமை காலை ஆறு மணிக்கு நான் தங்கியுள்ள இடத்தில் நாம் சந்திக்க சில நிமிடங்கள் ஒதுக்க முடியுமா என்று எழுதுகிறார்.


இக் கடிதத்திற்கு பதில் எழுதிய வ.உ.சி.  ‘என்னால் நீங்கள் குறிப்பிடும் நேரத்தில் வந்து உங்களைச் சந்திக்க இயலாது. ஏனென்றால் மயிலாப்பூருக்கு டிராம் வண்டி காலை 5.30 மணிக்குப் புறப்படும். அந்த வண்டியில் ஏறி நீங்கள் குறிப்பிட்ட 6.00 மணிக்கு தம்பு செட்டி தெருவுக்கு வந்து சேர இயலாது என கருதுகிறேன். மேலும் ஒரு சில நிமிடங்களில் மட்டுமல்ல … எனது தேசப் பற்றாளர்களுக்காக எனது வாழ்க்கை முழுவதையுமே நான் செலவிட தயாராக இருக்கிறேன். என்னுடைய அனைத்து நேரமும், எனது நாட்டுக்கும், நாட்டின் மீது பற்றுள்ளவர்களுக்கும் மட்டுமே ஓதுக்க விரும்புகிறேன். இவை இரண்டிற்கும் பிறகு தான் கடவுளுக்கே நேரம் ஒதுக்குகிறேன். என்று வ.உ.சி. எழுதுகிறார்.


1915 ல் பரிபூர்ண விநாயகர் கோவில் தெருவில் வ.உ.சி இத் தெருவில் வாழ்ந்த போதுதான்  சுப்பிரமணிய சிவாவின் ஞானபானு  பத்திரிக்கை அலுவலகம் இருந்தது. அச் சமயம் சிவா – வ.உ.சி சந்திப்பு நிகழ்வு அடிக்கடி இருந்திருக்கலாம். சிவா தொழிலாளர் சங்க அமைப்புக் கூட்டம் எல்லாவற்றிலும் வ.உ.சி.யும் பங்கேற்றிருக்கிறார்.


1915 வாக்கில் தமிழில் எழுத்து குறை என்ற ஞானப்பானு இதழில் வெளிவந்த கட்டுரைக்கு பாரதியை விமர்சித்து வ.உ.சி கட்டுரை எழுதினார். 


இன்று மயிலாப்பூர் பரிபூர்ண விநாயகர் கோவில்  தெருவில் வ்சிக்கும் குடிமைவாசிகளுக்கு வ.உ.சி. வாழ்ந்த தெரு என்ற தடயமே தெரியாது கடந்து போகின்றனர்.


வரவிருக்கிற வ.உ.சி. 150 ஆம் ஆண்டை ஒட்டி அவரைச் சிறப்பிக்கும் வகையில் மயிலாப்பூர் பரிபூர்ண விநாயகர் வீதியில் பெரியவர் வ.உ.சி வாழ்ந்த தடயங்களை ஞாபகப்படுத்தும் விதமாக என்றும் அழியாத நினைவுப்பலகை வைத்து அவரை கவுரப்படுத்தினால் நல்லதாக இருக்கும். அரசாங்கமே எடுத்து செய்தால் நல்லதே அல்லது மயிலாப்பூர் தொகுதிக்குட்பட்ட சட்டமன்ற உறுப்பினருக்கு இந்த விசயத்தை கொண்டு செல்லுங்கள்.  மயிலாப்பூர் சமூக அமைப்பைச் சார்ந்த ஏதாவது அமைப்பினர் கூட நினைவுப் பலகை வைத்து போற்ற முன்னெடுப்பு செய்யலாம்.


மூலம்: அனிதா கு. கிருஷ்ணமூர்த்தி. 2013. காந்தி கணக்கு. சூரியன் பதிப்பகம்.


பெ.சு. மணி.  2012. ஜி.ஏ.நடேசன்: பதிப்பாளர், இதழாளர், தேசபக்தர். பூங்கொடி பதிப்பகம்.


கடிதம்: மயிலாப்பூரில் பெரியவர் வ.உ.சி. வசித்த போது காந்தி அவர்களிடம் தென்னாப்பிரிக்கா தமிழர்கள் தனக்கு கொடுத்தனுப்பிய பணத்தை கொடுக்க வேண்டி திரு. காந்தி அவர்களுக்கு எழுதிய மடலின் ஒரு பகுதி.

Thursday, 15 April 2021

V.O.CHIDAMBARAM PILLAI - NAMAKKAL KAVIGNAR

 




வ.உ.சி.150 நினைவலைகள் 

( பதிவு எண் 5/150)

குலவுப் பிள்ளைச் சிதம்பரம்

நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை



1944 ல் வெளியாகிய நாமக்கல் இராமலிங்கம் பிள்ளையின் “என் கதை” சுயசரிதை தமிழின் ஆகச் சிறந்த மூன்று சுய சரிதைகளுள் அடங்கும். சுமார் 76  வருடங்களுக்கு முன்பாக வந்த ” என்கதை” யில் வரும் காலம், பாத்திரங்கள் பழையதாகி விடவில்லை. அவர் வாழ்ந்த காலத்து நிகழ்வுகளை, நண்பர்களை, தேசிய தலைவர்களை இதில் உயிர்ப்புடன் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. 


அதில் பெரியவர் வ.உ.சி. குறித்து கிலாபாத் சிறப்பு இரயில் வண்டியில் காந்தியடிகளை ஆதரிக்க பல உறுப்பினர்ளும், திலகர் அணியின் முக்கிய பிரதிநிதியாக வ.உ.சி, சிவா முதலானவர்களும் இந்த ரயிலில் பயணிக்கும் அனுபவ பதிவும் வரலாற்று முக்கியத்துவமானது.




பெரியவர் வ.உ.சி. யும்,சிவாவும் காந்தியை ஆதரிக்கக்  கூடாது என நம் நாட்டு ஒவ்வொரு பிரதிநிதியிடமும்  இரயில் பெட்டியில் பிரச்சாரம் செய்து வந்தனராம்.  காந்தியின் சாத்வீக வழியை ஏற்றுக் கொண்டால்  நாடு முழுவதும் வீரியமற்று கோழையாக ஆகிவிடுவீர்கள் என்று அறிவுறுத்திய போது வரதராஜ முதலியார்  பெரியவர் வ.உ.சியின் மீது கோபப்பட்டு தரக்குறைவாக அவமதித்து பேசினாராம்.


ஆனால் அந்த வரதராஜ முதலியாருக்கு வ.உ.சி. ஆங்கிலேயர்களை எதிர்த்து  கப்பல் விட்டார் என்ற  சேதி கூடத் தெரியாத தமிழக காந்திய பக்தர் போலும்.  அடிதடியில் இறங்கும் அளவிற்கு வ.உ.சி.யிடம் சண்டையிட்டுக் கொண்டதை கண்ட மற்ற தேச பக்தர்களுக்கு வரதராஜ முதலியாரின் செயல் உடன்பாடானதாக இல்லை. 


பின்பு  நாகராஜன்  ஐயங்கார், நாமக்கல் இராமலிங்கமும்  சேர்ந்து  வரதராஜ முதலியாரிடம்  தமிழகத்தின் தவப்புதல்வர் ஒருவரான பெரியவர் வ.உ.சி.யிடம் அப்படி அவமதிப்பது போல் நடந்து கொண்டது  மகாபாதகம்,  அது வரை அறியாத வ.உ.சி.யின் அருமை பெருமைகளை எல்லாம் எடுத்துக்  கூற வரதராஜ  முதலியார் வெட்கித் தலை குனிந்தாராம். பின்பு நேரிடையாக பெரியவர் வ.உ.சி.யைக் கண்டு கை கூப்பி என்னை மன்னித்து விடுங்கள் என்று கண்ணீர் மல்க வருத்தம் தெரிவிக்க, அப்படியே பெரியவர் வ.உ.சி.  முதலியாரை கட்டித் தழுவி கண்ணீர் கலங்க தேற்றி விட்டாராம்.


இதிலிருந்து இரு செய்தி என்னவெனில் 1912 சிறையில் இருந்து வந்த   பிறகு ஒரு சிலகாந்திய பக்தர்களுக்கு வ.உ.சி.யை யார் எனத் தெரியாமலே இருந்திருக்கிறது என்று இவரது என் கதை சரித்திரம் மூலம் தெரிய வருகிறது.


அதே போன்று நாமக்கல் இராமலிங்கம் பிள்ளையின் “தேச பக்தர் மூவர்” நூலில் பெரியவர் வ.உ.சி. காரக்பூர் ரயில் நிலையத்தில் தான் பயணித்த இரயில் வண்டியை நீண்ட நேரம் காத்திருக்க வைத்து, அதன் பின்னால் வரும் இரயில் வண்டியை விடுவிக்க இரயில்வே நிர்வாகம் எண்ணிய போது வடநாடாக இருப்பினும் உடனடியாக இரயில் தண்டவாளத்தில் போய் படுத்து தடுப்பேன் என சிங்கமாய் கர்சித்து அத்தனை நபர்களையும் தன் வசமாக்கி வீரத் தமிழ்த் தலைவனாக  கர்ச்சிப்பதையும் ஆவணப்படுத்தியிருப்பார்.


நாமக்கல்லாரின் மாணிக்க வரிகள் மூலமாக எழுதப்பட்ட இக் கவிதையில் பெரியவருடைய தேசபக்தி யாவருடனும் ஒப்பிட முடியாதது.  தொழிற் சங்கத்துக்கு வித்திட்ட மூத்த தேசபக்தர். கள்ளம் கபடம் இல்லாத கறுப்புத்  தங்கம் ,  சொல்லொண்ண முடியாத சிறைக் கம்பியில் பட்ட  துயர வாழ்க்கையை மனம் இறுகச் செய்யும் துயரவரிகள் நம்மை மனம் கரைந்து விடச் செய்கிறது.


பேசிவிட்டே சுயராஜ்யம் பெறலாம் என்று

 பெரிய பல தீர்மானக் கோவை செய்து

காசு பணப் பெருமையினால் தலைவ  ராகிக்

 காங்கிரசை நடத்தியது கண்டு நொந்து

‘தேச நலம் தியாகமின்றி  வருமோ?’ என்று

 திலகர் பிரான் செய்த பெருங் கிளர்ச்சி சேர்ந்தே

ஓசைபடா துழைத்த சில பெரியோர் தம்முன்

 உண்மை மிக்க சிதம்பரனும் ஒருவ னாகும்.


உழுது பல தொழில் செய்தே உழைப்போ ரெல்லாம்

 உணவும் உடை வீடின்றி உருகி வாடப்

பழுது மிக அன்னியர்க்குத் தரக ராகிப் 

 பசப்புகின்ற வீணருக்கோ சுகங்கள்! என்றே

அழுதுருகித் தொழிலாளர் இயக்கம்  கண்டே

 அந் நாளில் சிதம்பரன் முன் நட்ட  வித்தாம்

விழுதுபல விட்ட பெரு மரமாய் இன்று

 வெவ்வேறு கிளைகளுடன் விளங்கக் காண்போம்.


கள்ளமற்றுக் கலகலத்த பேச்சுக் கேட்கும்

 கறுப்பெனினும் சிரிப்பு முகம் கருணை காட்டும்

குள்ளமென்னும் ஓர் உருவம் இருகை கூப்பிக்

 குண்டெடுத்து கடைந்ததெனக் குலுங்க  நிற்கும்

வெள்ளையன்றி வேறு நிறம் அறியா ஆடை

 வேதாந்த சித்தாந்த ஒளியே வீசும்;

கொள்ளை கொள்ளை சிறையிருந்த குறிகள் தோன்றும்

 குலவு பிள்ளைச் சிதம்பரத்தை நினைவு கூர்ந்தால்.


எல்லாரும் தேசபக்தர் இந்த நாளில்

 எத்தனையோ சிறைவாசம் இனிதாய்க் காண்போர்

சொல்லாலும் எழுத்தாலும் விளக்க  வொண்ணாத்

 துன்பமெல்லாம் சிறைவாசம் அந்த நாளில்

வல்லாளன் சிதம்பரனார் சிறையிற் பட்ட

 வருத்தமெல்லாம் விரித்துரைத்தால் வாய் விட் டேங்கிக்

கல்லான மனத்தவர்க்கும்  கண்ணீர் கொட்டக்

 கனல் பட்ட வெண்ணெயெனக்  கரைவார் இன்றும்”

Friday, 12 March 2021

V.O.CHIDAMBARAM PILLAI `S CREDIT WILL

 

V.O.CHIDAMBARAM PILLAI `S  CREDIT WILL


.நண்பர் ஒருவர் பதிவிலிருந்து,!.

,,,!!!,,,!!,,,!...(rkssa)))ஆங்கிலேய ஆட்சியை எதிர்த்து கப்பலோட்டிய தமிழன் வ. உ.சிதம்பரம் பிள்ளை 4 ஆண்டுகாலம் சிறை வாசத்திற்குப் பிறகு சிறையில் இருந்து விடுதலையாகிறார். சிறை வாசலில் சுப்பிரமணிய சிவா உள்பட குடும்பத்தினர் மட்டுமே வந்திருந்தனர். ஆங்கிலேய அரசு அவர் வக்கீல் தொழிலில் ஈடுபட தடை விதித்தது. அவரின் கடைசி காலம் பற்றி கேட்டால் கண்ணீர் வரும். அடுத்த நேரம் உணவுக்கே திண்டாடினார்.
சென்னையில் மயிலாப்பூரில் வீடு வாடகைக்கு எடுத்து தங்கி இருந்தார். வீட்டுக்காரர் வாடகையை உயர்த்தி கேட்டதால் அங்கிருந்து பெரம்பூருக்கு மாறினார். குறைந்த வாடகைக்கு வீடு சுடுகாடு பக்கமே கிடைத்தது. அதனால் சுடுகாட்டுப் புகை அவரை மிகவும் பாதித்தது. அங்கிருந்து சிந்தாதிரிப்பேட்டைக்கு மாறினார்.
ஒரு பெரிய சுதந்திரப் போராட்ட வீரர் தனது கடைசி கால வயிற்றுப் பிழைப்புக்காக சென்னையில் அரிசி கடை , மளிகை கடை , மண்ணெண்ணெய் கடை என வியாபாரம் செய்து வந்தார். இந்த சூழ்நிலையிலும் வ.உ.சிக்கு தென்னாப்பிரிக்கா வாழ் இந்தியர்கள் கொடுத்து அனுப்பிய 5000 ரூபாய் பணத்தை காந்தி வ.உ.சியிடம் கொடுக்கவில்லை.ஏழ்மையில் வ.உ.சி கஷ்டப்படுவதைக் கேள்விப்பட்ட பாலகங்காதர திலகர் மாதந்தோறும் வ.உ.சி.க்கு 50 ரூபாய் அனுப்பி வைத்தார் .
வாழ்வின் கடைசி நாள் சாகும் தறுவாயில் தேவாரம் , திருவாசகம் கேட்கலாமே என்று அவருக்குத் தோன்றவில்லை. மரணத்தை எதிர்பார்த்த அவர் அங்கிருந்தவரிடம் பாரதியின் " என்று தணியும் இந்த சுதந்திர தாகம் " பாடலை பாடச் சொன்னார். பாடலைக் கேட்டுக் கொண்டே அவரின் உயிர் பிரிந்தது.
எல்லோரும் சேர்த்து வைத்த சொத்தை யார் யாருக்கு சேரவேண்டும் என்பதாக உயில் எழுதி வைப்பார்கள். வ.உ.சி. எழுதிய உயில் வித்தியாசமாக இருந்தது. எந்தவிதமான சொத்துக்களும் இல்லை என்பது மட்டுமல்ல தான் யார்யாருக்கு கடன் கொடுக்க வேண்டும் என எழுதியிருந்தார். வீட்டு வாடகை பாக்கி ரூ.135, துணிக்கடை பாக்கி ரூ.130 , எண்ணெய்க்கடை பாக்கி ரூ.30, சில்லரைக்கடன் ரூ.50 , தனி நபர் கடன் ரூ.80 என்பதாக எழுதி வைத்திருந்தார்.
நாட்டிற்க்காக குடும்பத்தையும் சொத்துக்களையும் இழந்த தியாகிகளைக்கொண்டாடாமல் வேதசாரிகளையும் பதவிப்பித்தர்களையும் தேசத்தலைவர்களாகக்கொண்டாடியது காங்கிரஸ்.என்னைப்பொறுத்தவரை இவரும் நம் தேசிய கடவுள் தான்!!,,,!!!,,,!!,,,!...(((rkssa))),,!...