Showing posts with label spain. Show all posts
Showing posts with label spain. Show all posts

Saturday, 27 March 2021

WORLD WONDERS IN ARCHITECT - PANAMA CANAL IN SPAIN -PERU ROUTE

 


WORLD WONDERS IN ARCHITECT - PANAMA CANAL IN SPAIN -PERU ROUTE

உலகப் பொறியியல் சாதனை ஒப்பற்ற பனாமா கடல் இணைப்புக் கால்வாய்


மனிதர் படைத்த கடல் இணைப்புக் கால்வாய்;

மலைமேல் கட்டிய அணை நீர்க் கணவாய்;

வட தென் அமெரிக்கக் கண்டங்கள் இடையே​

​புனை​த்தொட்டி நிரம்பி ஏறி இறங்கும் கப்பல். 

மனிதர் கட்டிய மகத்தான பனாமாக் கால்வாய்

கப்பல்கள் போய்வரும் ​ஒப்பிலா நீர் மார்க்கம். 

முன்னுரை: இருபதாம் நூற்றாண்டின் உன்னதப் பொறியியல் படைப்புகளில் ஒன்றாகப் பனாமா கால்வாய் கருதப்படுகிறது. அலாஸ்கா விலிருந்து டெக்ஸஸ் வர பனாமா கால்வாய் வழியாகக் கப்பல் பயணம் செய்தால் 16 நாட்கள் ஆகின்றன. அவ்வித மின்றி கப்பல் தென்னமெரிக்கா வின் ஹோர்ன் முனையைச் [Cape Horn] சுற்றி வந்தால் 40 நாட்கள் எடுக்கும்! பனாமா கால்வாய் இல்லாவிட்டால், நியூ யார்க்கிலிருந்து கடல் மார்க்கமாகத் தென்னமெரிக்க முனையைச் சுற்றி, ஸான் ஃபிரான்சிஸ்கோவை அடைய 9000 மைல் மிகையாக 18,000 மைல் தூரமும், நீடித்த நாட்களும் எடுக்கும்! உலக வணிகப் பணிகளுக்குக் கடல் மார்க்கக் கதவுகளைத் திறந்து விட்ட பனாமா கால்வாய், கடந்த 90 ஆண்டுகளாக கோடான கோடி டாலர் மதிப்புள்ள வாணிபப் பண்டங்களையும், கார் வாகனங்களையும் இருபுறமும் பரிமாறி வந்துள்ளது! அனுதினமும் கடக்கும் சுமார் 32 கப்பல்கள் சராசரி ஒவ்வொன்றும் 28,000 டாலர் பயணக் கட்டணம் செலுத்துகின்றன!


ஒவ்வொரு ஆண்டும் 140 மில்லியன் டன் வணிகச் சுமைகள் [Commercial Cargoes] பனாமா கால்வாய் மூலமாகக் கடந்து செல்கின்றன. அவற்றில் 22% பெட்ரோலியம், பெட்ரோலியம் சம்பந்தப்பட்ட பண்டங்கள் 16% தானியங்கள் குறிப்பிடத் தக்கவை. எல்லாவற்றிலும் மேலாக 2.4 மில்லியன் டன் கார் வாகனங்கள், கால்வாய் வழியாகக் கொண்டு செல்லப்பட்டு, புதுக்கார் வணிகம் பெருகி வளர்கிறது. அமெரிக்கா கட்டி முடித்து பூர்வ ஒப்பந்தம் எழுதி 96 ஆண்டுகள் உரிமை கொண்டாடி 1999 டிசம்பர் 31 ஆம் தேதி, பனாமா கால்வாய் ஆட்சி உரிமையை, பனாமா குடியரசின் கைவசம் அளித்தது!

சூயஸ் கால்வாயும், பனாமா கால்வாயும்

சூயஸ் கால்வாய் உலகத்திலே நீளமானது! பனாமா கால்வாயைப் போல் இருமடங்கு நீளமானது! 1869 ஆம் ஆண்டு நவம்பர் 17 இல் கட்டி முடித்துத் திறந்து விடப்பட்ட 100 மைல் நீளமான சூயஸ் கால்வாய் [Suez Canal] இயங்கி வரும் போது, புதுக் கண்டங் களான வட அமெரிக்கா, தென்னமெரிக்கா ஆகியவற்றின் நடுவில் குறுகிய தளமான [Isthmus] பனாமா நாட்டின் வழியே, அட்லாண்டிக் பசிபிக் கடல்களை இணைக்க 400 ஆண்டுகளாய்த் திட்டங்கள் உருவாகி இடையிடையே பலமுறைக் கைவிடப் பட்டன! இறுதியில் 1914 ஆம் ஆண்டில் பூர்த்தியான பனாமா கால்வாய் 50 மைல் நீளம் கொண்டது. மத்தியதரைக் கடலை விட 30 அடி உயர்ந்த செங்கடலை இணைக்க, கடல்மட்ட நேரடித் தொடர்புக் கால்வாய் வெற்றிகரமாய் வெட்டப் பட்டது. ஆனால் பனாமா நாட்டின் குறுக்கு வழியில் அட்லாண்டிக் கடலிலிருந்து ஐம்பது மைல் தூரத்தைக் கடந்து பசிபிக் கடலை அடைவது அத்தனை எளிதான பயணம் அன்று! மலை மீது செயற்கையாக உண்டாக்கப் பட்ட 90 அடி உயர ஏரியின் நீர் மட்டத்துக்கு முதலில் கப்பல் ஏறிப் பின்னால், 90 அடி உயரத்துக்குக் கீழிறங்கிக் கடல் மட்டத்துக்கு வர வேண்டும்!

சூயஸ் கால்வாயைப் பூர்த்தி செய்த பிரென்ச் நிபுணர் ஃபெர்டினென்ட் தி லெஸ்ஸெப்ஸ் [Ferdinand De Lesseps] பிரென்ச் அரசின் ஆணையில் பனாமா கால்வாயைக் கட்ட முன்வந்தார். அடிப்படை வேலைகளை ஆரம்பித்து ஏழாண்டுகள் உழைத்து, பலவித இன்னல்களால் முடிக்க இயலாமல் பிரென்ச் அரசாங்கம் திட்டத்தைக் கைவிட்டது! பின்னர் அமெரிக்க அரசு கால்வாய்த் திட்டத்தை வாங்கி அமெரிக்க எஞ்சினியர் மேஜர் ஜெனரல் கோதல்ஸ் [Goethals] 1914 இல் பூர்த்தி செய்தார். பனாமா கால்வாயைக் கட்ட பிரென்ச், அமெரிக்க மேற்பார்வைகளில் பணி செய்த 80,000 நபர்களில் 30,000 பேர் நோயிலும், விபத்திலும் மாண்டனர்! பயங்கர பனாமா மலைக் காடுகளில் 44 ஆண்டுகள் (1870-1914) சிக்கலான அந்த இமாலயப் பணியை முடிக்க எஞ்சினியர்கள் எவ்விதம் திறமையாகப் போராடினார்கள் என்பதைப் பற்றி விளக்கிறது, இந்தக் கட்டுரை.


#பனாமா #கால்வாய் #தோற்றத்தின் #வரலாறு

ஐநூறு ஆண்டுகளுக்கு முன்பே, பொற்களஞ்சியம் தேடிப் புதிய கடல் மார்க்கத்தில் புகுந்து, அமெரிக்காவை நெருங்கிய கிரிஸ்டொபர் கொலம்பஸ் (1451-1506) முதன் முதலில் தரைவழியாக அதைக் கடக்க முயன்று தோல்வியுற்றார்! சுமார் 400 ஆண்டுகளாக பனாமா நாட்டின் குறுகிய தளப்பரப்பின் வழியே கால்வாய் ஒன்றை அமைத்திட ஸ்பெயின், பிரான்ஸ், அமெரிக்கா ஆகிய நாடுகள் அடுத்தடுத்துத் தலையிட்டு முயற்சிகள் செய்தன! ஸ்பெயின் ராணுவக் கடல்தீரர் வாஸ்கோ நுனீஸ் தி பல்போவா [Vasco Nunez de Balboa (1475-1519)] 1513 இல் முதன்முதல் பனாமா நகரை அடைந்து, குன்று ஒன்றில் ஏறி நின்று பரந்து விரிந்த பசிபிக் கடலைப் பிரமிப்போடு கண்டு, உலகுக்கு அறிவித்த ஐரோப்பியர்! 1534 இல் ஸ்பெயின் மன்னர் முதலாம் சார்ல்ஸ், கால்வாய் அமைத்திட முதன்முதல் பனாமாவின் சுருங்கிய பீடத்தில் தளஆய்வு [Land Survey] செய்ய உத்தரவிட்டார். ஆனால் அவரது ஆணைக்குக் கீழ் பணியாற்றிய ஸ்பானிஸ் ஆளுநர் [Spanish Governor] ஓர் அதிருப்தியான தகவலை அனுப்பியதால், கால்வாய்த் திட்டம் கைவிடப்பட்டது. ஆயினும் பல்லாண்டுகளாக ஸ்பானிஸ் கடல்வணிகர் பனாமா நாட்டின் இரண்டு கடற்கரைகளையும் நீர்வழியாக இணைக்க முயன்று தோல்வி யுற்றனர்!

பிரென்ச் பேரரசர் மூன்றாம் நெப்போலியன் (1808-1873) பிரான்சுக்கு உரிமையான பனாமா தளப் பகுதியில் கால்வாய் ஆக்கிட 1860 இல் முயன்றார். கடல்மட்டக் கால்வாய் ஒன்றைப் பனாமா கட்டி முடிக்க, 1882 இல் பிரென்ச் கம்பெனி ஒன்று தயாரானது. 1855 இல் அமைத்த பனாமா ரயில் பாதையை ஒட்டியே, கால்வாயும் வெட்டத் திட்டமிடப் பட்டது. 1869 இல் வெற்றிகரமாக சூயஸ் கால்வாயைக் கட்டி முடித்து ‘சூயஸ் கால்வாய் தீரர் ‘ [The Hero of Suez] எனப் பெயர் பெற்ற ஃபெர்டினட் தி லெஸ்ஸெப்ஸ் [Ferdinand De Lesseps], சில ஆண்டுகளுக்குப் பிறகு, 74 ஆம் வயதில் பனாமா கால்வாயை அமைக்க நியமனம் ஆனார்! ஃபெர்டினட்


லெஸ்ஸெப்ஸ் ஏழு வருடங்கள் பணிசெய்த பின், 1889 இல் பிரென்ச் கம்பெனி நொடித்துப் போனது! காரணம், பனாமா தளத்தையும், பாறைகளையும் தோண்டிய 20,000 கூலியாட்கள் வேனிற்தள நோய்களால் [மலேரியா, மஞ்சள் காய்ச்சல்] செத்து மடிந்தனர்! பிரென்ச் கட்டிட, மருத்துவ நிபுணர்களுக்கு ஒருவிதக் கொசுக்கள் மலேரியா, மஞ்சல் காய்ச்சலை உண்டாக்குவது, அப்போது தெரியாமல் போனது! பெருமழை பெய்து குட்டை, குளங்களில் நீர் நிரம்பி, வேனிற் தளப் பனாமாவின் ஈரடிப்புப் பூமியில் கொசுக்கள் கோடிக் கணக்கில் பெருகிப் பணியாட்கள் பலரது உயிரைக் குடித்தன!

அமெரிக்க அரசாங்கம் பனாமா அல்லது நிகராகுவா நாட்டின் வழியாகக் கால்வாய் ஒன்றை அமைக்க 1887 இல் முடிவு செய்து, 1889 இல் காங்கிரஸ் ‘மாரிடைம் கால்வாய்க் கம்பெனி ‘ என்னும் ஒரு குழுவைத் தயாரித்தது. அப்போது நியமனமாகிய அமெரிக்க ஜனாதிபதி தியோடர் ரூஸ்வெல்ட் [26th American President, Theodore Roosevelt (1858-1919)] பனாமா புதுக் குடியரசுடன் தொடர்பு கொண்டு, பிரான்ஸிடமிருந்து கால்வாய்த் திட்டத்தை வாங்க ஏற்பாடுகள் செய்தார். பிரான்ஸ் பனமா கால்வாய்த் திட்ட வேலைகளை 100 மில்லியன் டாலருக்குக் குறைவாக விற்கப் போவதில்லை என்று அறிவித்தது! அதே சமயம் நிகாராகுவாவில் கால்வாய் கட்டி முடிக்க 40 மில்லியன் டாலரே (1900 நாணய மதிப்பு) தேவைப்பட்டது! இறுதியில் 40 மில்லியன் டாலருக்கே பிரான்ஸ் பனாமா கால்வாயின் திட்டப் பணிகளையும் உரிமையையும் [ஆபீஸ், தளவாடங்கள், கருவிகள், உபகரணம், ரயில் வண்டிகள், தளப்படங்கள், தளவியல் ஆய்வுகள், 50 மில்லியன் குயூபிக் மீடர் தோண்டல் கால்வாய்] அமெரிக்காவுக்கு விற்றது! பனாமா குடியரசுக்குச் சொந்தமான குறுக்குத் தளத்தில் [Isthmus] 43 மைல் நீளமும் 10 மைல் அகண்ட கால்வாய் அரங்கம் [Canal Zone] அமெரிக்க அரசின் பொறுப்பில் 100 வருடத் தொடர் ஒத்திக்கு [100 Year Perpetual Lease] விடப்பட்டது.

அமெரிக்க பனாமா பூர்வ ஒப்பந்தம், கால்வாய்த் திட்டம்.

பனாமா நாடு 1900 ஆண்டுகளில் கொலம்பியா அரசின் ஆணைக்குக் கீழிருந்தது. முதல் ஒப்பந்தப்படி [Hay-Herran Treaty], அமெரிக்கா கொலம்பியாவுக்கு முன்பணம் ஒரு மில்லியன் டாலரும், ஆண்டு தோறும் 250,000 டாலரும் அளிக்க வேண்டும். கொலம்பியா நூறாண்டுகளுக்கு கால்வாயை நெருங்கிய ஆறு மைல் அகற்சி நிலப்பகுதியை அமெரிக்காவுக்கு ஒப்பந்த வாடகைக்கு விட வேண்டும். டிசம்பர் 31, 1999 இல் அமெரிக்கா பனாமா கால்வாயை, பனாமா நாட்டுக்கு முடிவில் ஒப்படைத்து விட வேண்டும். கொலம்பியா அந்த உடன்படிக்கைக்கு ஒப்புக் கொள்ளா விட்டாலும், பனாமா அரசு நில உரிமையை அமெரிக்காவுக்கு விற்க விழைந்தது.

அமெரிக்கா முதல் ஆக்கிரமிப்புப் போரில் வெற்றி பெற்று, அடுத்து பனாமா நாட்டில் பரவிய நோய்களின் மீது தொடுத்தது! மழைநீர்க் குளம், குட்டைகளில் பெருகும் கொசுக்களால் ஏற்படும் கடும் வேனிற் தள நோய்களான மலேரியா, மஞ்சள் நோய் மற்றும் காச நோய், காலரா, டிப்திரியா, அம்மை, பிளேக் போன்ற கொடும் நோய்களை ஒழிக்க அமெரிக்க மருத்துவ நிபுணர் வில்லியம் கார்கஸ் பனாமா நாட்டுக்கு அனுப்பப் பட்டார். டாக்டர் கார்கஸின் ஆணை ஆட்கள் எங்கெங்கு குளம், குட்டைகள் உண்டோ அங்கெல்லாம் பூச்சி கொல்லி தூளையும், ஆயிலையும் கலந்து ஊற்றினார்கள். நோயில் தாக்கப்பட்ட பணியாட்கள் கொசுவலைக் குள்ளே தனித்து அடைக்கப் பட்டனர். நாட்டின் இரு முனைகளில் இருந்த கொலான் [Colon], பனாமா நகரங்கள் நவீன முறையில் புதுப்பிக்கப் பட்டன. அடுத்து கால்வாய் அமைப்பில் அமெரிக்கா ஈடுபட்டது.

பல கால்வாய்த் திட்டங்களில் அனுபவம் பெற்ற அமெரிக்க எஞ்சினியர் மேஜர் ஜெனரல் கோதல்ஸ் (1828-1928) பனாமா திட்டத்திற்குப் பிரதம எஞ்சினியராக நியமனம் ஆனார். நான்கு ஆண்டுகளாய் சிவில் எஞ்சினியர்கள் பனாமா கால்வாய்த் திட்ட முறைகளையும், விவரங் களையும் மாற்றிக் கொண்டே வந்தனர். சூயஸ் கால்வாய் போன்று கடல்மட்டக் கால்வாயை அட்லாண்டிக், பசிபிக் கடல்களுக்கும் நேரடியாக அமைக்க முதலில் திட்டம் உருவானது! அவ்விதம் கால்வாய் படைப்பதற்குப் பல மைல் நீளமுள்ள மலைகளையும், பாறைகளையும் வெடிமருந்தால் பிளக்கத் தேவையான ஏராளமான நிதிச் செலவுக்கும், கால நீடிப்புக்கும் அமெரிக்க அரசு தயாராக வில்லை! இறுதியில் மூவடுக்குத் தடாகப் படிகள் கொண்ட, ‘நீரழுத்த புனைத் தொட்டிகள் ஏற்பாடுத் ‘ [Three Stage Hydraulic Locks System] திட்டம் ஒன்று ஒப்புக் கொள்ளப் பட்டது. ஐயமின்றி அத்திட்டம் நிதிச் செலவையும், கட்டும் நேரத்தையும் பெருமளவில் குறைத்தது.

கொலானுக்கும், பனாமா நகருக்கும் இடையே உள்ள மலைப் பிரதேசத்தில், அணைகள் கட்டப்பட்டு மழைநீர் சேமிக்கப்பட்டது. மூன்று அணைகள் கட்டப் பட்டு, மூன்று ஏரிகள் செயற்கையாக அமைக்கப் பட்டன. அவற்றில் காட்டுன் ஏரி [Gatun Lake] என்று பெயர் பெற்றது மனிதன் அமைத்த உலகப் பெரும் ஏரியாகக் கருதப்படுகிறது! அதன் நீளம் 1.5 மைல், அகலம் அரை மைல், ஆழம் 80 அடி! கடல்மட்டத்திற்கு சுமார் 90 அடி [26 மீடர்] மேலுள்ள அந்த செயற்கை ஏரியில் வேனிற் கால மழை எப்போதும் பெய்து, நீரை நிரப்பிக் கொண்டே வருகிறது. பனாமா கால்வாயில் செல்லும் கப்பல் முதல் 7 மைல் தூரம் கடல்மட்டத்தில் கடந்து, ஏரியை நெருங்கும் போது மூவடுக்குப் புனைத் தொட்டிகளில் ஒவ்வொரு படிக்கட்டிலும் 30 அடி வீதம் நீரால் தூக்கப்பட்டு 90 அடி உயரத்தில் உள்ள காட்டுன் ஏரியில் பயணத்தைத் தொடர்கிறது. பிறகு பனாமா நகரை நெருங்கும் போது மறுபடியும் மூவடுக்குப் புனைத் தொட்டிகளில் ஒவ்வொரு படிக்கட்டிலும் 30 அடி வீதம் தணிந்து, முடிவில் 90 அடி இறங்கி மீண்டும் கடல்மட்டக் கால்வாயில் தொடர்கிறது. அத்தகைய அதிசயப் பொறியியல் நூதனப் பனாமா கால்வாய் 1914 ஆகஸ்டு மாதம் கட்டி முடிக்கப் பட்டது.

அத்திட்டத்துக்கு மொத்த நிதி ஒதுக்கம்: 23 மில்லியன் டாலர் [1900 நாணய மதிப்பு]. பனாமா கால்வாயில் பணிசெய்தவர் எண்ணிக்கை: 40,000! 1904 முதல் 1914 வரைச் செலவான தொகை: 400 மில்லியன் டாலர்! கால்வாய்த் தளபதி: அமெரிக்க கர்னல் ஜியார்ஜ் கோதல்ஸ். தொன்னூறு வயதாகப் போகும் [2004] பனாமா கால்வாய், இன்றும் உலகப் பெரும் மனிதச் சாதனைகளில் ஒன்றாக எண்ணப்படுகிறது!

பனாமா கால்வாய் கட்டமைப்பில் பொறியியல் பிரச்சனைகள்

அமெரிக்க எஞ்சினியர்களுக்கு பனாமா மலைகளில் வெட்டித் தோண்டிய ‘குலேபிரா கணவாய் ‘ [Culebra Cut] பெரும் இன்னல்களைக் கொடுத்தது! அடுத்து தாறுமாறாய் ஓடும் ஆறுகளைத் திருப்பி, காட்டுன் அணையைக் கட்டி [Gatun Dam], மலைகளுக்கு இடையே செயற்கை முறையில் காட்டுன் ஏரியை [Gatun Lake] உண்டாக்கியது இமாலயச் சவால் பணியாய் ஆகிவிட்டது! ஏரியின் உயரத்துக்கு ஏற்றி, இறக்கும் சிக்கலான மாபெரும் காங்கிரீட் புனல் தொட்டிகளைக் [Three Stage Hydraulic Locks] கட்டுவதும், அவற்றின் உள்ளே மூடித் திறக்கும் பூதக் கதவுகளைத் தயாரித்து இயக்குவதும் பெரும் பிரச்சனைகளைத் தந்தன! இரட்டைத் தொட்டிகளான அவற்றின் நீளம்: 1000 அடி, அகலம்: [110+110] =220 அடி, ஆழம்: 80 அடி. நீரழுத்தக் கதவுகளின் அகலம்: 55 அடி, உயரம்: 80 அடி.

1000 அடி நீண்ட கப்பல்கள், ஆயிரக் கணக்கான டன் சுமைக் கப்பல்கள், சுற்றுலா மாளிகைக் கப்பல்கள் பல, கம்பீரமாகக் கால்வாயில் மிதந்து, 85 உயரம் தூக்கப்பட்டு காட்டுன் ஏரியில், கண்கொள்ளாக் காட்சிகளின் இடையே ஊர்ந்து, 85 அடி கீழே இறக்கப் பட்டு 50 மைல்களைக் கடந்து இருபுறமும் கடலைத் தொடுகின்றன! பயணத்தின் போது கப்பல் ஒன்று ஆறு புனல் தொட்டிகளின் வழியே கடக்கின்றன. பயங்கரப் பனாமாக் காடுகளை முதலில் செப்பணிட்டு இரயில் பாதை அமைக்கப்பட்ட போது, ஒவ்வோர் தண்டவாள இணைப்புக்கும் ஒரு நபர் உயிர்ப்பலி யானதாக அறியப் படுகிறது!

பனாமா கால்வாயை இயக்கத் தனிப்பட்ட எந்த வித வெளிப்புறச் சக்தியும் தேவை யில்லை! புனல் தொட்டிகளில் கப்பலை அடைத்து ஏற்றவோ, இறக்கவோ நீர்த் தேவையாகும் போது செயற்கையாக ஆக்கப்பட்ட ஏரிகளிலிருந்து எடுத்துக் கொள்ளப் படுகிறது! கடந்து செல்லும் ஒவ்வொரு கப்பலுக்கும் 30 மில்லியன் காலன் நீர் தேவைப்படுகிறது. உயர்ந்த மலைகளுக்கு இடையே பரந்த ஏரியின் செலவு நீரை அடிக்கடி பெய்யும் மழை 1914 ஆண்டு முதல் மீண்டும் மீண்டும் நிரப்பி வருகிறது. ஏரியில் கட்டப்பட்ட அணைகள், நீரின் மட்டத்தைச் சீராக ஒரே உயரத்தில் நிலை நிறுத்தி வருகின்றன.

அணைக்கட்டு மின்சக்தி நிலையம் ஏரிநீரைக் கீழனுப்பி மின்சார உற்பத்தியும் தொடர்ந்து நிகழ்கிறது. அந்த மின்சக்தியே, புனல் தொட்டியின் பூதக் கதவுகளைத் திறக்கவும், பூட்டவும் செய்யும் மின்சார மோட்டார்களை ஓட்டுகிறது. கப்பலை முன்னும், பின்னும் வழி இழுக்கும் ‘கழுதை எஞ்சின்களுக்கு ‘ [Mule Engines] வேண்டிய மின்சக்தியும் நீர்நிலை மின்சக்தி நிலையத்தி

​ ​லிருந்து கிடைக்கிறது. கப்பலை முதலில் இழுத்து எல்லைக் கோட்டில் முன்னிறுத்தும் ‘வழிகாட்டிப் படகு ‘ [Rowboat] பெட்ரோலில் இயங்குகிறது.

1000 அடி நீளம், 110 அடி அகலமுள்ள ஒவ்வொரு புனல் தொட்டியும், 70,000 டன் கனக்கும் பளுக் கப்பலை 28 அடி உயரத்துக்குத் தூக்கவோ அல்லது 28 அடிக்குத் தணிக்கவோ திறமை யுடையது. கப்பல் நகர்ச்சியைப் புனல் தொட்டியில் கையாள்பவை, இருபக்கமும் நகரும் கழுதை எஞ்சின்கள். பெரும் கப்பல் புனல் தொட்டியில் சுய ஆற்றலில் நகர்ந்தால், அதன் அசுரப் பளுவேகம் [Momentum (Mass X Velocity)] கதவுகளை உடைத்துப் பழுதாக்க வாய்ப்புகள் நேரிடலாம்! எதிர்பாராத அவ்வித விபத்துகள் நேரா வண்ணம், கப்பல் நகர்ச்சியைக் கழுதை எஞ்சின்கள் முன்புறம் இரண்டும், பின்புறம் இரண்டும் கட்டுப் படுத்துகின்றன.

புனல் தொட்டியில் கீழ் மட்ட நீரளவு 50 அடி உயரம். பூத வடிவான அதன் கதவுகள், கப்பலின் 10 மாடித் தள உயரத்தைத் தாங்கிக் கொள்ள முடியும்! இரட்டை வடிவில் கட்டப்பட்ட மூவடுக்குக் காட்டுன் புனல் தொட்டிகள் [Gatun Locks] கடல் கட்டத்துக்கு 85 அடி உயரத்தில் அமைக்கப் பட்டுள்ளன. இரட்டைப் புனல் தொட்டிகளில் ஒன்று நேர்போக்குப் பயணக் கப்பலை உயர்த்தவும், அடுத்தது எதிர்போக்குக் கப்பலை இறக்கவும் ஒரே சமயத்தில் பயன்படலாம்.

புனல் தொட்டியில் கப்பல் நகர்வதற்கு இரு புறத்திலும் தண்டவாளங்களில் மும்மூன்று இழுப்பு எஞ்சின்கள் நகர்ந்து வரும். கதவுகள் திறந்த பின்பு, காத்திருக்கும் கப்பல் புனல் தொட்டிக்குக் கழுதை எஞ்சினால் இழுத்து வரப்படுகிறது. கப்பல் சுய ஆற்றலில் உள்ளே நுழைந்தால், சரியான சமயத்தில் நிறுத்த முடியாமல், கதவுகளை உடைத்து விடக் கூடும்! அதனால் முன்புறம் கப்பலை இழுக்க ஒன்று அல்லது இரண்டு எஞ்சின்களும், பின்புறம் பளுவேகத்தைக் குறைத்துக் கட்டுப்படுத்த ஒரு எஞ்சினும் புனல் தொட்டில் பயணத்தின் போது பயன்படுகின்றன. மோட்டர் இயக்கத்தில் பழுது ஏற்பட்டுக் கதவுகள் திறக்க முடியாமல் போனால், அபாய அணைநீர் பயன்படத் தயாராகச் சேமிக்கப் பட்டுள்ளது.

கப்பல் ஒன்று பனாமா கால்வாயில் எவ்விதம் கடக்கிறது ?

பூத வடிவான சில பயணக் கப்பல்கள் ஒற்றைவழிக் கட்டணமாக 100,000 டாலர் கொடுக்கின்றன! இதுவரை மிகையான தொகை தந்தது, பிரிட்டனின் மாளிகைக் கப்பல் ‘ராணி எலிஸபெத் II ‘ தொகை 150,000 டாலர்! கப்பல் ஒன்று அட்லாண்டிக் கடலிலிருந்து, இரண்டு முறை மூவடுக்குப் புனல் தொட்டிகளில் ஏறி இறங்கிக் கால்வாய் வழியாக 50 மைலைக் கடந்து, பசிபிக் கடலை அடைய குறைந்தது 23 மணி, கூடியது 30 மணி நேரமாகிறது! புனல் தொட்டியைக் கப்பல் நெருங்குவதும், தொட்டிக்குள் கப்பல் நகர்வதும், நீர்மட்டம் ஏறி இறங்குவதும், கதவுகளைத் திறந்து மூடிக் கப்பலை விடுவிப்பதும், கால்வாய் அதிபதிகள் கவனிப்பாக மின்சார ரயில்களைக் கையாண்டு, கண்காணிப்பாகச் செய்ய வேண்டி யிருப்பதால், அதிக காலதாமதம் அங்குதான் நேரிடுகிறது. நீர் உயரம் சீராக மட்டமாக ஆகாவிட்டால், கதவுகளைத் திறக்க சுயத்தடுப்பு இயக்கிகள் தடை செய்யும்!

5:0 PM. உதாரணமாக மாலை 5 மணிக்கு அட்லாண்டிக் கடலிலிருந்து புகும் கப்பல் 7 மைல் தூரம் மண்டிக் கால்வாயில் மிதந்து, லிமான் வளைகுடாவைத் [Lemon Bay] துறைமுகத்தை அடைகிறது. வளைகுடாவில் நுழையும் போது கப்பல் காப்டன், துறைமுக அதிபதிக்கு அறிவிப்பு செய்கிறார். அப்போது கப்பலின் பெயர், எண், நீளம், அகலம், சுமக்கும் பொருள், பாரத்தின் எடை போன்ற விபரங்கள் அறிவிக்கப் படவேண்டும். கால்வாய்ப் பயணப் போக்கைக் கையாளும் அதிகாரிகளின் எண்ணிக்கை, வழிகாட்டிப் படகுகள் எண்ணிக்கை ஆகியவற்றுக்கு ஏற்றபடி, அந்தக் கப்பலுக்கு நுழைவு அனுமதி விரைவாகவோ, தாமதமாகவோ அளிக்கப்படலாம்.

7:30 PM. கால்வாய் அதிபதி கப்பலைச் சோதித்து, அறிக்கைத் தாள்களைச் சரிபார்க்கிறார். கப்பலின்

நீளம், அகலம், உயரம், வடிவ அமைப்பு சோதனைக் குள்ளாகிறது.

8:30 PM. துறைமுக அதிபதி கடப்புக் கட்டணத் தொகையைக் [Toll Charges] கணக்கிட்டுப் பெற்றுக் கொள்கிறார். கப்பல் ஒன்று சுமார் 80,000 -100,000 டாலர் தொகை கொடுக்க நேரிடலாம்.

5:30 AM. கால்வாய் அதிபதி ஒருவர் கப்பலில் ஏறித் தூரத் தொடர்பு இணைப்பை ஏற்படுத்துகிறார்.

6:10 AM. கப்பல் கால்வாய்ப் பயணத்தைத் துவங்குகிறது. கடல் பரப்பில் 11.5 மைல் தொலைவு நகர்ந்து 85 அடி உயரமுள்ள காட்டுன் ஏரியை நெருங்குகிறது. அந்த உயரத்தில் ஏற முதல் காட்டுன் புனல் தொட்டியின் [First Gatun Locks] முன்னால் நிற்கிறது, கப்பல். புனல் தொட்டியின் இருபுறமும் இருப்புப் பாதையில் நகரும் 170 H.P. [170 Horse Power] ரயில்களுடன், கப்பலின் முன் முனை வளையம் வடக் கயிறுகளால் பிணைக்கப் படுகிறது. அந்த ரயில்கள் அங்கு மிங்கும் மெல்ல அசைத்துக் கப்பலைத் தொட்டியின் மையத்துக்குக் கொண்டு வந்து, உட்புறம் இழுக்கின்றன. பிறகு கப்பலின் பின் வளையம் அடுத்த இரண்டு ரயில் வண்டிகளுடன் வடக் கயிற்றால் பிணைக்கப் பட்டு கப்பலின் நகர்ச்சி கதவுகளின் மீது மோதி விடாதபடி தடை செய்யப் படுகிறது.

6:30 AM. கப்பல் முதல் புனல் தொட்டியின் நடுவில் முழு உடம்பும் மிதக்க நிற்க பின்புறக் கதவுகள் மூடுகின்றன. தொட்டியில் ஏரியின் நீர் செலுத்தப்பட்டு நீர்மட்டம் 28 அடி உயர்ந்து, கப்பலும் 28 அடி எழும்புகிறது. இரண்டாம் தொட்டியில் அதே நீர்மட்ட அளவு ஏற்கனவே உள்ளதால், முன்புறக் கதவுகள் திறக்கப் பட்டு, கப்பல் அடுத்த புனல் தொட்டிக்குள் இழுக்கப் படுகிறது.

அடுத்த தொட்டிக் கதவுகள் மூடிய நிலையில் நீர்மட்டம் 28 அடி அதிகமாக்கப்பட்டு, கப்பல் இன்னும் 28 அடி உயர்கிறது. இதே போல் மூன்றாவது புனல் தொட்டியிலும் நிகழ்ந்து கப்பல் அடுத்து 28 அடி உயரத்துக்குக் கொண்டு வரப்படுகிறது. அவ்விதம் ஒவ்வொரு கப்பலை 85 அடி மேலே கொண்டு வர சுமார் 26 மில்லியன் காலன் ஏரி நீர் தேவைப் படுகிறது.

7:30 AM. கயிறுப் பிணைப்புகள் அகற்றப்பட்டு, கப்பல் விடுபட்டு காட்டுன் ஏரியில் இப்போது பயணம் செய்கிறது. 32 மைல் நீளமான காட்டுன் ஏரி மனிதர் அமைத்த உலகப் பெரும் ஏரி! சாக்ரஸ் ஆறு [Chagres River] காட்டுன் ஏரியில் சங்கமம் அடைகிறது. ஏரியின் முடிவில் உள்ள கம்போவா [Gamboa] முதல் குறுகிய குலிபிரா கணவாய் [Culebra Cut] நீர் வழியாக அடுத்துக் கப்பல் செல்கிறது. கணவாயின் குறுகிய அகலம் 500 அடி!

11:20 AM. கப்பல் இப்போது 8.5 மைல் தூரம் கெய்லார்டு நீர்க் கணவாய் [Gaillard Cut] வழியாகச் செல்கிறது. கப்பலின் கால்வாய் அனுமதி வேகம் 7 mph [6 Knots]. குறுகிய ஆழமற்ற கால்வாய் பகுதி அது! 1:00 PM. நீர்க் கணவாய் முடிவில் அடுத்த முதல் புனல் தொட்டி, ‘பெட்ரோ மிகியூவல் ‘ [Pedro Miguel Locks] வருகிறது.

2:30 PM. கப்பல் முதல் புனல் தொட்டியுள் நிறுத்தப் படுகிறது. அதன் மூலம் கப்பல் 30 அடி உயரம் கீழ் இறங்குகிறது.

3:10 PM. முதல் புனல் தொட்டியைக் கடந்து, கப்பல் இப்போது மிராபுளோரஸ் ஏரியில் [Miraflores Lake] நகர்கிறது.

3:30 PM. இப்போது கடைசி இரண்டு மிராபுளோரஸ் புனல் தொட்டிகளை [Miraflores Locks] நெருங்குகிறது. அவற்றை இரண்டையும் தனித்தனியாகக் கடந்து கப்பல் 55 அடி உயரம் [27 அடி+28 அடி] கீழே இறக்கப்பட்டு கடல்மட்டத்தில் மீண்டும் கப்பல் பயணம் செய்கிறது.

4:10 PM. மூன்றாவது மிராபுளோரஸ் புனல் தொட்டியை விட்டுக் கப்பல் இப்போது பல்போவா துறைமுகத்தை அண்டுகிறது. அப்போது அமெரிக்கன் பாலத்தைக் [Bridge of America] கடந்து 7.5 மைல் பயணம் செய்து பசிபிக் கடலை அடைகிறது. அங்கிருந்து கப்பல் ஸான் பிரான்சிஸ்கோ, டோக்கியோ, ஹாங்ஹாங், சிட்னி, சிங்கப்பூர், பாம்பே அல்லது சுற்றுலா நகருக்கு கிளம்புகிறது.

பனாமா கால்வாயில் எதிர்காலப் புதிய செம்மைப்பாடுகள்

1914 ஆண்டில் கட்டி முடித்த பனாமா கால்வாய், உலக வரலாற்றில் எகிப்தின் மகத்தான மாபெரும் பிரமிட்டுகளுக்கு அடுத்தபடியான அசுர சாதனையாகக் கருதப் படுகிறது! அதை டிசைன் செய்து, 50 மைல் நீளம் பனாமா மலைக் காடுகளைத் தோண்டிக் கால்வாய் அமைத்த அமெரிக்காவின் பிரதம எஞ்சினியர் ஜியார்ஜ் கோதல்ஸ் உன்னத வெற்றித் தீரராக வரலாற்றில் இடம் பெறுகிறார். தற்போது பனாமா கால்வாய் வயதானாலும், ஆண்டுக்கு 12,000 கப்பல்களைத் தன்வழியே இருபுறமும் கடத்திப் பெரு ஊதியம் பெற்று வருகிறது! ஆயினும் ஐம்பது மைலைக் கப்பல் கடக்க ஆகும் சராசரி 30 மணி நேரத்தைக் [காத்திருக்கும் 6 மணி நேரம் உள்பட] குறைக்க புது முறைகள் வழிகள் கையாளப்பட வேண்டும்!

தொன்னூறு ஆண்டுகளாகப் [2004] பணியாற்றும் பனாகா கால்வாயின் நீர்க் கணவாயும், புனல் கதவுகளும் பழமையாகி, முழுவதும் மாற்ற வேண்டிய காலம் நெருங்கி விட்டது! மழைப் பொழிவுகளால் நேரும் நிலச் சரிவுகளால், கால்வாயில் சகதி மண்டி அடிக்கடி நீக்க வேண்டிய கட்டாயம் நேருகிறது. புதிதாய் ஆக்கப் படும் கப்பல்களின் நீட்சி, அகலம் மிக நீண்டு விட்டதால், கால்வாயின் அகலம், புனல் தொட்டிகளின் நீள, அகலம் அதிகமாக்க வேண்டிய எதிர்காலச் செம்மைப்பாடு தேவையாகி விட்டது! தற்போது 106 அடி அகலமுள்ள கப்பல்கள்தான் பனமா கால்வாயில் பயணம் செய்ய முடியும்! கப்பலின் சுமைதாங்கிப் பாரத் திறம் 65,000 டன்னிலிருந்து, 300,000 டன்னாக இப்போது பெருகி விட்டது! கெய்லார்டு குறுகிய நீர்க் கணவாய் 500 அடி அகலத்திலிருந்து 730 அடி அகலத்துத் தோண்டப்பட்டு, இரட்டைப் போக்குவரத்து [Two-Way Passage] அமைக்கப் பட வேண்டும்! பனாமா கால்வாயை எதிர்காலத்தில் திருத்தங்கள் செய்யத் தேவைப் படுவது ஒரு பில்லியன் டாலர் என்று கணிக்கப் படுகிறது!

அட்லாண்டிக் பசிபிக் கடல்களை வேறு வழிகளில் இணைக்க, அமெரிக்கா தயாரித்த மூன்று விதப் புதுத் திட்டங்கள் பனாமா குடியரசுக் கைவசம் உள்ளன. 1. கொலம்பியா 2. மெக்ஸிகோ 3. நிகராகுவா ஆகிய மூன்று கடற் பாதைத் திட்டங்கள். மெக்ஸிகோ, கொலம்பியா வழியாகச் செல்லும் கால்வாய், கடல் மட்டக் கால்வாய்கள். நிகராகுவா தேர்ந்தெடுக்கப் பட்டால், புனல் தொட்டி ஏற்பாடுகள் தேவைப்படும். இம்மூன்றில் ஒரு புதிய கால்வாய் எதிர்காலத்தில் அமைக்கப் பட்டால், பனாமா குடியரசில் தற்போது பணிபுரியும் 14,000 நபர்களின் பிழைப்பில் பெரும் பாதகம் விளையும்! அவர்களில் பணிபுரியும் 4000 பேர்கள் பனாமா குடிமக்கள்!

++++++++++++++++++++++

தகவல்:

1. The New American Desk Encyclopedia [1989]

2. National Geographic Picture Atlas of Our World [1990]

3. National Geographic Society -The Builders, Marvels of Engineering [1992]

4. The Panama Canal, G.W. Goethuls By: The Columbia Electronic Encyclopedia [2003]

5. History of Canal Construction, Panama Canal Lakes & Locks By: Broadcast Partners [2003]

6. Panama Canal Completed, Two Oceans Joined By: Patricia Maloney Markun.

7. Infrastructure: Panama ‘s Canal Holds Vision of New Growth By: Aileen Cho in Panama [2001]

8. The Panama Canal [1994 Report]

9.  http://www.industrytap.com/panama-canal-expansion.../450  [January 2, 2013]

10.  http://www.theatlantic.com/.../expanding-the.../396716/  [Photos]

11. https://en.wikipedia.org/wiki/Panama_Canal [January 25, 2016]

12. https://en.wikipedia.org/wiki/Panama_Canal_expansion_project   [January 25, 2016]


Wednesday, 22 April 2020

ISABELLA I ,QUEEN OF SPAIN BORN 1451 APRIL 22 - 1504 NOVEMBER 26



ISABELLA I ,QUEEN OF SPAIN 
BORN 1451 APRIL 22 - 1504 NOVEMBER 26




.முதலாம் இசபெல்லா (ஸ்பானிய மொழி: Isabel I, Ysabel) இடைக்காலத்தில் இருந்த நாடான காஸ்டைலின் (தற்போதைய ஸ்பெயினின் பகுதி) அரசியாக இருந்தார். இவளே கொலம்பசை ஆதரித்த அரசியாவாள்தடைகளைத் தாண்டி நடந்த திருமணம்
இவளுக்கு 3 வயதாக இருக்கும் போதே இவளுக்கும் அரகானின் அரசனான இரண்டாம் ஜானின் மகன் ஃபெர்டினாண்டுக்கும் திருமண நிச்சயம் செய்யப்பட்டது. ஆனால் இவளின் தந்தை ஹென்றி ஆறு வருடம் கழித்து இந்த ஒப்பந்தத்தை இரத்து செய்தார். இவளுக்கு எத்தனையோ மணத்துணைவர்கள் பார்க்கப்பட்டார்கள். ஆனால் இறுதியில் பல தடைகளைத் தாண்டி ஃபெர்டினாண்டே இவளை மணந்து கொண்டார்.


மணக்கோலத்தில் இசபெல்லாவும் ஃபெர்டினாண்டும்
கொலம்பஸ்

கிறிஸ்டோஃபர் கொலம்பசின் நாடு காணும் திட்டத்தை ஆரம்பத்தில் எதிர்த்தாலும் ஓரிரு ஆண்டுகள் கழிந்ததும் ஒப்பந்தத்தின் படி பொருட்செலவை ஏற்றுக் கொண்டார். (கொலம்பஸ் அலைகடலின் தளபதி என்று பட்டம் சூட்டப்பட்டுப் புதிதாகக் கண்டுபிடிக்கும் தீவுகளுக்கு அவரே ஆளுநர் என்ற உறுதிமொழியும் வருவாயில் பெரும்பங்கை அவருக்குக் கொடுக்கவும்)

ஆணுக்குப் பெண் நிகர்
தன் துணைவருடன் புரிந்துணர்வுடனும் சம உரிமையுடனும் இவர் ஆட்சி நடத்தினார். கிரனடாவில் உள்ள அரண்மனையில் இவர்களின் சமஉரிமைச் சாசனம் பொறிக்கப்பட்டுள்ளது.

சாதனைகள்
ஸ்பெயினை ஒருங்கிணைத்தது


கொலம்பசை ஆதரித்தது

அடுத்த நூற்றாண்டுக்கான இராணுவக் கட்டமைப்பை அமைத்து வைத்தது

புனிதர் பட்டத்திற்கான பாதையில்
இசபெல்லாவிற்கு போப்பரசரால் கடவுளின் பணியாளர் (servant of god) பட்டம் வழங்கப்பட்டு விட்டது. ஆனால் யூத அமைப்புகளின் எதிர்ப்பால் புனிதர் பட்டம் வழங்கப்படவில்லை.

சிறப்பிக்கப்படல்

அரசி இசபெல்லாவும் கொலம்பசும்
1893 இல் வெளியிடப்பட்டது

அமெரிக்க அஞ்சல் தலையில் இடம் பெற்ற முதல் பெண் இசபெல்லா ஆவார். இவளின் படம் இடம் பெற்ற அஞ்சல் தலைகள் பல ஆயிரம் டாலர்களுக்கு ஏலம் போயின. அமெரிக்கா வெளியிட்ட நாணயத்தில் இடம் பெற்ற முதல் பெயரிடப்பட்ட பெண்மணியும் இவளே.

அட்லாண்டிக்கைக் கடந்து பயணம் செய்வதற்கு கிறிஸ்டோபர் கொலம்பசுக்குக பணவுதவியளித்த அரசியாகவே காஸ்டீல் பகுதியைச் சேர்ந்த முதலாம் இசபெல்லா அரசியைப் பற்றி இன்று பலருக்குத் தெரியும். அவர் திறமையும், ஆற்றலுமிக்க அரசியாவார். அவர் செய்த முக்கிய முடிவுகள் ஸ்பெயினையும் லத்தீன் அமெரிக்காவையும் பல நூற்றாண்டுகளாகப் பாதித்தன. அவை இன்று பல கோடி மக்களையும், மறைமுகமாகப் பாதித்துள்ளன.

அவர் தமது முக்கியத் திட்டங்களைப் பற்றி தம்மைப் போன்று அறிவாற்றலும் திறமையுமுள்ள தம் கணவரான ரகான் பகுதியைச் சேர்ந்த பெர்டினாண்டைக் கலந்து பேசியே முடிவெடுத்தார். அவர் ஒத்துழைப்புடனே தான் அவற்றைச் செயல்படுத்தினார். ஆகவே அவர்கள் இருவரையும் ஒன்றாகவே இந்நூலில் பார்ப்பது பொருந்தும். ஆயினும், இக்கட்டுரையின் தலைப்பில் இசபெல்லாவின் பெயரே இருக்கின்றது. இருவரின் பெயர்களும் இல்லை. எனவே, பல முக்கிய முடிவுகளில் அரசியின் கருத்துரைகளே ஏற்றுக் கொள்ளப்பட்டன.

1451 ஆம் ஆண்டில் இன்றைய ஸ்பெயினின் ஒரு பகுதியான காஸ்டீல் அரசில் மாட்ரிகல் நகரில் இசபெல்லா பிறந்தார். அவர் கடுமையான சமயப் பயிற்சி பெற்றார். அதனால் சமயப் பற்றுள்ள கத்தோலிக்கராக வளர்ந்தார். அவருடைய சகோதரரான நான்காம் ஹென்றி 1454 முதல் காஸ்டீலின் அரசராக இருந்தார். 1474 இல் அவர் இறந்தார். அப்போது ஸ்பெயின் அரசு இல்லை. இன்றைய ஸ்பெயின் நிலப்பரப்பு நான்கு முடியரசுகளாகப் பிரிந்திருந்தது. காஸ்டீல் அவற்றுள் மிகப் பெரியது. ஆரகான் இன்றைய ஸ்பெயின் வட கிழக்குப் பகுதி கிரானடா தெற்கிலும் நவார் வடக்கிலும் இருந்தன.

1460களின் இறுதிப் பகுதிகளில் காஸ்டீல் அரசின் வாரிசாக இருந்தார். ஆகவே பல இளவரசர்கள் அவரை மணம்புரிய விரும்பினர். அவருடைய சகோதரர் நான்காம் ஹென்றி அவர் போர்ச்சுகள்ல மன்னரை மணக்க வேண்டுமென்று விரும்பினார். ஆயினும் 1469இல் இசபெல்லா தம் 18 ஆம் வயதில் ஹென்றி மன்னரின் எதிர்ப்பையும் பாராமல் ஆரகான் அரசின் வாரிசான பெர்டினாண்டை மணந்தார். இசபெல்லா தமக்குப் பணியாததைக் கண்டு சினங்கொண்ட ஹென்றி தம் மகளாகிய ஜூவானாவைத் தமக்கு வாரிசாக நியமித்தார். ஆயினும், 1474இல் ஹென்றி இறந்ததும், இசபெல்லா காஸ்டீல் அரசுக்கு உரிமை கொண்டாடினார். ஜூவானாவின் ஆதரவாளர்கள் இதை ஏற்க மறுத்தனர். ஆகவே உள்நாட்டுப் போர் மூண்டது. 1479இல் பிப்ரவரியில் இசபெல்லாவின் படைகள் வெற்றி பெற்றன. அதே ஆண்டில் ஆரகான் அரசர் 2 ஆம் ஜான் இறந்தார். பெர்டினாண்டு ஆரகான் அரசரானார். அதன் பிறகு பெர்டினாண்டும், இசபெல்லாவும் ஸ்பெயினின் பெரும்பகுதியை ஆண்டனர்.


ஆரகான், காஸ்டீல் ஆகிய அரசுகளும் அவற்றின் அரசாங்க நிறுவனங்களும் தனித்தனியாகவே இருந்த போதிலும், நடைமுறையில் பெர்டினாண்டும், இசபெல்லாவும் ஒன்று சேர்ந்தே எல்லாவற்றையும் தீர்மானித்தனர். தம்மாலியன்ற வரையில் ஸ்பெயினின் இணை அரசர்களாகச் செயலாற்றினர். அவர்களுடைய 25 ஆண்டு இணை ஆட்சி முழுவதும் ஒரு வலிமைமிக்க முடியாட்சியின் கீழுள்ள ஒருங்கிணைந்த ஸ்பானிய அரசை நிறுவுவதே அவர்களது அடிப்படைக் கொள்கையாக இருந்தது. கிரானடா மட்டும் இன்னம் ஐபீரியத் தீபகற்பத்தில் முஸ்லிம் ஆட்சியிலிருந்தது. அதைப் பிடிப்பதே அவர்களுடைய முதல் திட்டமாக இருந்தது. 1481 இல் போர் தொடங்கியது. ஜனவரி 1492 இல் அது முடிவடைந்தது. பெர்டினாண்டும், இசபெல்லாவும் முற்றிலும் வெற்றி பெற்றனர். கிரானடா பிடிபட்டதும், ஸ்பெயின் ஏறக்குறைய இன்றுள்ள எல்லைப் பரப்பைப் பெற்றது. (இசபெல்லா இறந்தபின், 1512இல் பெர்டினாண்டு சிறிய அரசான நவாரைக் கைப்பற்றினார்.)

பெர்டினாண்டும், இசபெல்லாவும் தமது ஆட்சியின் தொடக்கத்திலேயே ஸ்பானிய கடும் விசாரணை மன்றத்தை நிறுவினர். அம்மன்றம் ஒரு சமய நீதிமன்றமாகும். அது நீதிபதி, சான்று நடுவர், குற்றஞ்சாட்டும் வழக்குரைஞர், புலனாயும் காவலர் ஆகியோரின் அதிகாரங்களை ஒருங்கே பெற்றிருந்தது. அது கொடிய தண்டனைகளை வழங்கி, அநீதியான நடைமுறைகளைப் பயன்படுத்தும் மன்றமெனப் பெயர் பெற்றிருந்தது. குற்றம் சாட்டப் பெற்றோர் அதை மறுத்து வாதாட வாய்ப்புப் பெறவில்லை. அவர்களுக்கு எதிரான சான்றுகள் அனைத்தும், அவர்களைக் குற்றம் சாட்டுவோரின் பெயர்கள்கூட அவர்களுக்கு அறிவிக்கப்படுவதில்லை. தமக்கு எதிரான குற்றச்சாட்டினை மறுத்தோர் அவற்றை ஏற்கும்வரை கொடிய சித்திரவதைக்குள்ளாயினர். ஸ்பானிய கடும் விசாரணை மன்றத்தின்முதல் 25 ஆண்டுகளில் மிகக் குறைந்த மதிப்பீட்டின்படி 2000 பேர் கம்பத்தில் கட்டப்பட்டு எரிக்கப்பட்டனர். அதைப் போல் பன்மடங்கு அதிகமான தொகையினர் குறைந்த தண்டனை பெற்றனர்.

தோமாஸ் தெ தோர்குவமாதா என்னும் சமய வெறியரான ஒரு துறவி ஸ்பானிய கடும் விசாரணை மன்றத்திற்கு தலைவராக இருந்தார். அவர் இசபெல்லாவின் தனிச் சமய அறிவுரையாளர். கடும் விசாரணை மன்றம் போப்பாண்டவரின் இசைவு பெற்றிருந்த போதிலும், அது ஸ்பெயின் அரசர்களின் கட்டுப்பாட்டுக்கு அடங்கிச் செயலாற்றியது. சமய ஏற்பை நிலை நாட்டுவதற்காகவும், அரசர்களுக்கு எதிரான கிளர்ச்சியை ஒடுக்குவதற்காகவும் கடும் விசாரணை மன்றம் பயன்பட்டது. இங்கிலாந்தில் நிலமானியப் பிரபுக்கள் அரசரின் அதிகாரத்தைக் கட்டுப்படுத்துவதற்குப் போதிய ஆற்றல் பெற்றிருந்தனர். ஸ்பானிய பிரபுக்களும் ஒரு காலத்தில் ஆற்றலுள்ளவர்களாக இருந்தனர். ஆயினும், ஸ்பெயின் அரசர்கள் தம்மை எதிர்த்த நிலமானியப் பிரபுக்களை அடக்குவதற்கு கடும் விசாரணை மன்றத்தை ஒரு கருவியாகப் பயன்படுத்தினர். ஆகவே, அவர்கள் அதிகாரம் குவிந்த, வரையிறந்த ஒரு முடியாட்சியை நிறுவ முடிந்தது. அவர்கள் ஸ்பானிய மதக் குருக்களை கட்டுப்படுத்துவதற்கும் அம்மன்றத்தைப் பயன்படுத்தினர்.

சமயத்தை விட்டுப் பிரிந்தவர்களாகக் கருதப்பட்டவர்களை குறிப்பாக கத்தோலிக்க மறையைத் தழுவி, பிறகு, இரகசியமாகத் தம் முந்திய மதத்தையே பின்பற்றி வந்த யூதரையும், முஸ்லிம்களையும் தண்டிப்பது கடும் விசாரணை மன்றத்தின் முக்கிய இலக்காக இருந்தது.

தொடக்கத்தில் கடும் விசாரணை மன்றம், தம் சமயத்தைப் பின்பற்றி வந்த யூதர்களை தண்டிக்கவில்லை. ஆயினும், 1492இல் சமய வெறியரான தோமாஸ் தெ தோர்குவமாதா வலியுறுத்தியதன் விளைவாக, பெர்டினாண்டும், இசபெல்லாவும் ஸ்பெயினிலுள்ள யூதர்கள் அனைவரும் கிறிஸ்தவ மறையைத் தழுவ வேண்டும், இல்லையெனில் நான்கு மாதங்களுக்குள் தம் சொத்துக்களை விட்டுவிட்டு, நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என்று ஆணை பிறப்பித்தனர்.

கிரானடா சரணடைந்த போது, கையொப்பமிடப் பெற்ற உடன்படிக்கையின்படி, ஸ்பெயினில் வாழும் முஸ்லிம்கள் தம் சமயத்தைப் பின்பற்றும் உரிமை பெற்றனர். ஆனால், ஸ்பெயின் அரசாங்கம் விரைவில் இவ்வொப்பந்தத்தை மீறியது. ஆகவே, முஸ்லிம்கள் புரட்சி செய்தனர். ஆனால், அவர்கள் தோற்கடிக்கப்பட்டனர். 10ஆண்டுகளுக்கு முன் யூதர்களுக்கு அளிக்கப்பட்ட அதே தேர்வுரிமை இப்போது 1502இல் முஸ்லிம்களுக்கும் கொடுக்கப்பெற்றது. அதாவது ஸ்பெயினில் வாழும் முஸ்லிம்கள் கிறிஸ்துவ மதத்தைத் தழுவ வேண்டும் அல்லது நாட்டை விட்டு வெளியேற வேண்டும்.

இசபெல்லா சமயப் பற்றுள்ள கத்தோலிக்கராக இருந்த போதிலும், அவருடைய வைதீகப் பற்று அவர் ஸ்பெயின் நாட்டின் மீது கொண்டிருந்த பற்றைக் குறைத்து விடவில்லை. ஸ்பானிய கத்தோலிக்க திருச்சபையில் போப்பாண்டவர் கட்டுப்பாட்டைக் குறைத்து, ஸ்பெயின் முடியரசின் அதிகாரத்தை வளர்ப்பதற்காக இசபெல்லாவும், பெர்டினாண்டும் பெரிதும் முயன்று வெற்றி பெற்றனர். 16 ஆம் நூற்றாண்டில் எதிர்ப்புச் சமய சீர்திருத்தம் பரவாவதற்கு இது ஒரு காரணமாகும்.

இசபெல்லாவின் ஆட்சியில் நிகழ்ந்த மிகவும் முக்கியமான நிகழ்ச்சி கிறிஸ்டோபர் கொலம்பஸ் புதிய உலகைக் கண்டுபிடித்ததுதான். அது 1492 ஆம் ஆண்டில் நடைபெற்றது. காஸ்டீல் அரசு கொலம்பசின் பயணத்திற்கு உதவியது. (அப்பயணத்திற்காக இசபெல்லா தம் நகைகளை அடகு வைத்தார் என்பது உண்மையன்று).

1504 இல் இசபெல்லா இறந்தார். அவர் தம் வாழ்நாளில் ஒரு புதல்வனையும், நான்கு புதல்விகளையும் பெற்றார். 1497இல் ஜூவான் எனும் மகன் இறந்தான். புதல்வியருள் புகழ் பெற்றவர் ஜூவானா. பெர்டினாண்டும், இசபெல்லாவும் ஜூவானாவை (எழில்மிகு) முதலாம் பிலிப்புக்கு மணமுடித்து வைத்தனர். பிலிப் ஆஸ்திரிய ஹாப்ஸ்பர்க் பேரரசரின் மகன். அவர் பர்கண்டி அரசின் வாரிசாகவும் இருந்தார். இந்த வம்ச வழி திருமணத்தின் பயனாக இசபெல்லாவின் பேரரான ஐந்தாம் சார்லஸ் பேரரசர் ஐரோப்பிய வரலாற்றில் மிகப் பெரிய பேரரசுகளுள் ஒன்றை மரபுரிமையாகப் பெற்றார். அவர் புனித ரோமானியப் பேரரசராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர் அக்கால ஐரோப்பிய அரசர்களுள் செல்வமும், அதிகாரமுமிக்கவராகத் திகழ்ந்தார். ஸ்பெயின், ஜெர்மனி, ஹாலந்து, பெல்ஜியம், ஆஸ்திரியா, சுவிட்சர்லாந்து, இத்தாலியின் பெரும்பகுதி, பிரான்சின் சில பகுதிகள், செக்கோஸ்லாவிய, போலந்து, ஹங்கேரி, யூகோஸ்லாவியா இன்னும் மேற்கு நாடுகளில் பெரும்பகுதி ஆகியவற்றை அவர் நேராகவோ, பெயரளவிலோ ஆண்டு வந்தார். ஐந்தாம் சார்லசும் அவருடைய மகன் 2 ஆம் பிலிப்பும் சமயப்பற்றுள்ள கத்தோலிக்கர்கள். அவர்கள் வட ஐரோப்பிய எதிர்ப்பு சமய அரசுகளுடன் போர் புரிவதற்குப் புதிய உலகச் செல்வத்தைப் பயன்படுத்தினர். இவ்வாறாக, பெர்டினாண்டும், இசபெல்லாவும் ஏற்பாடு செய்த வம்சாவழித் திருமணம் அவர்கள் இறந்த பிறகு ஐரோப்பிய வரலாற்றை ஒரு நூற்றாண்டளவாகப் பாதித்தது.

பெர்டினாண்டு, இசபெல்லா ஆகியோரின் சாதனைகளையும் அவர்களது ஆட்சியின் விளைவுகளையும் இங்கு சுருக்கமாகப் பார்ப்போம். அவர்கள் தம் கூட்டு முயற்சியால் ஒன்றுபட்ட ஸ்பெயின் அரசை உருவாக்கினர். அதே எல்லைகளுடன் ஸ்பெயின் கடந்த 5 நூற்றாண்டுகளாக இருந்து வருகின்றது. அவர்கள் இருவரும் ஸ்பெயினில் அதிகாரம் குவிந்த, வரையிறந்த முடியாட்சியை நிறுவினர். அவர்கள் முஸ்லிம்களையும், யூதர்களையும், வெளியேற்றியதனால், வெளியேறியவர்களுக்கும், ஸ்பெயினுக்கும் பெரும் விளைவுகள் ஏற்பட்டன. அவர்களின் சமய வெறியும், அவர்கள் நிறுவிய கடும் விசாரணை மன்றமும் ஸ்பெயின் நாட்டின் வருங்கால வரலாற்றில் பெரும் விளைவுகளை ஏற்படுத்தின.

இறுதியில் குறிப்பிட்ட செய்தியை ஓரளவு விரிவாகப் பார்ப்போம். கடும் விசாரணை மன்றம் ஸ்பெயினின் அறிவு வளர்ச்சிக்குத் தடையாக இருந்தது. 1492 க்குப் பிந்திய நூற்றாண்டுகளில் மேற்கு ஐரோப்பிய நாடுகள் பலவற்றில் அறிவுத் துறையிலும், அறிவியல் துறையிலும் மலர்ச்சி ஏற்பட்டது. ஆனால், ஸ்பெயினில் அவ்வாறு நிகழவில்லை. மாறுபட்ட கருத்தைத் தெரிவித்தால் கடும் விசாரணை மன்றம் கைது செய்யும் எனும் அச்சம் நிலவிய சமூகத்தில் தனிப்பட்ட சிந்தனை தோன்றவில்லை என்பதில் வியப்பில்லை. பிற ஐரோப்பிய நாடுகள் பல்வேறு கருத்துகளை வெளியிட ஓரளவு உரிமையளித்தன. ஸ்பெயினில் கடும் விசாரணை மன்றம் வைதீக கத்தோலிக்க சமயக் கருத்துகளை மட்டும் அனுமதித்தது. பிற ஐரோப்பிய நாடுகளுடன் ஒப்பிடும் போது 1700இல் ஸ்பெயின் அறிவு தேக்க நிலையிலிருந்தது. பெர்டினாண்டும், இசபெல்லாவும் ஸ்பெயினில் கடும் விசாரணை மன்றத்தை நிறுவி 500 ஆண்டுகளாயினும் அம்மன்றம் இறுதியில் கலைக்கப்பட்டு ஏறக்குறைய 140 ஆண்டுகளாயினும்இன்னும் ஸ்பெயின் அதன் விளைவுகளினின்று மீளவில்லை.

மேலும், இசபெல்லாவின் உதவியுடன் கொலம்பஸ் தம் பயணத்தை நடத்தியதால், தென் மத்திய அமெரிக்கப் பகுதிகள் பெரும்பாலும் ஸ்பெயினின் குடியேற்ற நாடகளாயின. இதனால் ஸ்பானியப் பண்பாடும், கடும் விசாரணை மன்றம் உட்பட பல நிறுவனங்களும் உலகில் மேற்குப் பகுதியில் பரவின. ஆகவே, மேற்கு ஐரோப்பாவுடன் ஒப்பிடும்போது, ஸ்பெயின் அறிவு வளர்ச்சியில் பின்தங்கிய நாடாக இருந்ததுபோல், தென் அமெரிக்காவிலுள்ள ஆங்கிலேயக் குடியேற்ற நாடுகளை விட அறிவுத் துறையில் குறைந்த வளர்ச்சியடைந்திருந்தன என்பதில் வியப்பில்லை.

இப்பட்டியலில் இசபெல்லாவுக்குக எந்த இடம் அளிப்பது என்பதை எண்ணும்போது, அவர் காலத்திலும் நிகழ்ந்த நிகழ்ச்சிகள் அவர் இல்லையென்றால் நிகழ்ந்திருக்குமா எனப் பார்க்க வேண்டும். சமயப் பகை உணர்வு ஏற்கெனவே ஸ்பெயினில் இருந்து வந்தது என்பது உண்மை. ஏனெனில், 700 ஆண்டுகளாக ஐபீரியத் தீபகற்பத்தை முஸ்லிம்களிடமிருந்து திரும்பக் கைப்பற்றுவதற்கு நீண்ட போராட்டம் நடைபெற்று வந்தது. ஆயினும், 1492இல் அப்போராட்டம் வெற்றியுடன் முடிவடைந்ததும், ஸ்பெயின் தனது பாதையைத் தெரிந்து கொள்ளும் வாய்ப்பைப் பெற்றிருந்த பெர்டினாண்டும், இசபெல்லாவும் குறிப்பாக இசபெல்லா, மறுப்பின்றி வைத்த கருத்துகளை ஏற்கும் பாதையைத் தெரிந்து கொண்டனர். இசபெல்லாவின் செல்வாக்கு இல்லையெனில், ஸ்பெயின் ஓரளவு பன்மைக் கருத்துகள் நிலவு சமூகமாக மாறியிருக்கும்.

இசபெல்லாவை, அவரைவிடப் புகழ்மிக்க ஆங்கிலேய அரசியான முதலாம் எலிசபெத்துடன் ஒப்பிடத் தோன்றலாம். எலிசபெத், இசபெல்லாவைப் போல திறமையுடையவர். மேலும், அவர் பண்பு நயமும், சகிப்புத் தன்மையுமுள்ளவராக இருந்ததால், இசபெல்லாவை விட போற்றுதற்குரியவராக இருக்கின்றார். ஆனால் அவர் இசபெல்லாவைப் போல் புதியன புனையும் திறமை பெறவில்லை. இசபெல்லாவின் கடும் விசாரணை மன்றத்தைப் போல அவருடைய செயல்கள் எதுவும் பெரும் விளைவுகளை ஏற்படுத்தவில்லை. இசபெல்லாவின் சில கொள்கைகள் அருவருக்கத்தக்கவையாக இருப்பினும், வரலாற்றில் ஒரு சில அரசர்களே அவரைப் போல பெரும் விளைவுகளை ஏற்படுத்தியுள்ளனர்.




.

Saturday, 15 September 2018

SPAIN







SPAIN 


In the 8th century, nearly all of the Iberian Peninsula was conquered (711–718) by largely Moorish Muslim armies from North Africa. These conquests were part of the expansion of the Umayyad Caliphate. Only a small area in the mountainous north-west of the peninsula managed to resist the initial invasion.
The death of the Frankish leader
 
Roland defeated by a Basque and Muslim-Muladi (Banu Qasi)
alliance at the 
Battle of
Roncevaux Pass (778)

Under Islamic law, Christians and Jews were given the subordinate status of dhimmi. This status permitted Christians and Jews to practice their religions as People of the Book but they were required to pay a special tax and had legal and social rights inferior to those of Muslims.[27][28]

The Muslim community in the Iberian Peninsula was itself diverse and beset by social tensions. The Berber people of North Africa, who had provided the bulk of the invading armies, clashed with the Arab leadership from the Middle East.[k] Over time, large Moorish populations became established, especially in the Guadalquivir River valley, the coastal plain of Valencia, the Ebro River valley and (towards the end of this period) in the mountainous region of Granada.[30]














The Great Mosque of Córdoba is among the oldest mosque buildings in the world.Córdoba, the capital of the caliphate since Abd-ar-Rahman III, was the largest, richest and most sophisticated city in western Europe. Mediterranean trade and cultural exchange flourished. Muslims imported a rich intellectual tradition from the Middle East and North Africa. . The County of Barcelona and the Kingdom of Aragon entered in a dynastic union and gained territory and power in the Mediterranean. In 1229 Majorca was conquered, so was Valencia in 1238.

The break-up of Al-Andalus into the competing taifa kingdoms helped the long embattled Iberian Christian kingdoms gain the initiative. The capture of the strategically central city of Toledo in 1085 marked a significant shift in the balance of power in favour of the Christian kingdoms. Following a great Muslim resurgence in the 12th century, the great Moorish strongholds in the south fell to Christian Spain in the 13th century—Córdoba in 1236 and Seville in 1248

 In the 13th and 14th centuries, the Marinid dynasty of Morocco invaded and established some enclaves on the southern coast but failed in their attempt to re-establish North African rule in Iberia and were soon driven out.After 800 years of Muslim presence in Spain, the last Nasrid sultanate of Granada, a tributary state would finally surrender in 1492 to the Catholic monarchs Queen Isabella I of Castile[33] and King Ferdinand II of Aragon.[34][35][36]

In 1469, the crowns of the Christian kingdoms of Castile and Aragon were united by the marriage of Isabella I of Castile and Ferdinand II of Aragon. 1478 commenced the completion of the conquest of the Canary Islands and in 1492, the combined forces of Castile and Aragon captured the Emirate of Granada from its last ruler Muhammad XII ending the last remnant of a 781-year presence of Islamic rule in Iberia. That same year, Spain's Jews were ordered to convert to Catholicism or face expulsion from Spanish territories during the Spanish Inquisitio

The Treaty of Granada guaranteed religious tolerance towards Muslims,[40] for a few years before Islam was outlawed in 1502 in the Kingdom of Castile and 1527 in the Kingdom of Aragon, leading to Spain's Muslim population becoming nominally Christian Moriscos.












he year 1492 also marked the arrival of Christopher Columbus in the New World, during a voyage funded by Isabella. Columbus's first voyage crossed the Atlantic and reached the Caribbean Islands, beginning the European exploration and conquest of the Americas, although Columbus remained convinced that he had reached the Orient. As Renaissance New Monarchs, Isabella and Ferdinand centralised royal power at the expense of local nobility, and the word España, whose root is the ancient name Hispania, began to be commonly used to designate the whole of the two kingdoms.


Spain was Europe's leading power throughout the 16th century and most of the 17th century, a position reinforced by trade and wealth from colonial possessions and became the world's leading maritime power. It reached its apogee during the reigns of the first two Spanish Habsburgs—Charles I (1516–1556) and Philip II (1556–1598). This period saw the Italian Wars, the Revolt of the Comuneros, the Dutch Revolt, the Morisco Revolt, clashes with the Ottomans, the Anglo-Spanish War and wars with France.[

In the late 16th century and first half of the 17th century, Spain was confronted by unrelenting challenges from all sides. Barbary pirates, under the aegis of the rapidly growing Ottoman Empire, disrupted life in many coastal areas through their slave raids and the renewed threat of an Islamic invasion.[46] This was at a time when Spain was often at war with France.

The Protestant Reformation dragged the kingdom ever more deeply into the mire of religiously charged wars. The result was a country forced into ever expanding military efforts across Europe and in the Mediterranean Spain managed to hold on to most of the scattered Habsburg empire, and help the imperial forces of the Holy Roman Empire reverse a large part of the advances made by Protestant forces, but it was finally forced to recognise the separation of Portugal (with whom it had been united in a personal union of the crowns from 1580 to 1640) and the Netherlands, and eventually suffered some serious military reverses to France in the latter stages of the immensely destructive, Europe-wide Thirty Years' War.[48]







In the latter half of the 17th century, Spain went into a gradual decline, during which it surrendered several small territories to France and the Netherlands; however, it maintained and enlarged its vast overseas empire, which remained intact until the beginning of the 19th century.The War of the Spanish Succession was a wide-ranging international conflict combined with a civil war, and was to cost the kingdom its European possessions and its position as one of the leading powers on the Continent
.[49] During this war, a new dynasty originating in France, the Bourbons, was installed. Long united only by the Crown, a true Spanish state was established when the first Bourbon king, Philip V, united the crowns of Castile and Aragon into a single state, abolishing many of the old regional privileges and laws.[50]

In 1793, Spain went to war against the revolutionary new French Republic as a member of the first Coalition.peace was made with France in 1795 at the Peace of Basel in which Spain lost control over two-thirds of the island of Hispaniola.  In 1807, a secret treaty between Napoleon and the unpopular prime minister led to a new declaration of war against Britain and Portugal. Napoleon's troops entered the country to invade Portugal but instead occupied Spain's major fortresses. The ridiculed Spanish king abdicated in favour of Napoleon's brother, Joseph Bonaparte.

Joseph Bonaparte was seen as a puppet monarch and was regarded with scorn by the Spanish. The 2 May 1808 revolt was one of many nationalist uprisings across the country against the Bonapartist regime.

















[52] These revolts marked the beginning of a devastating war of independence against the Napoleonic regime.[53] Napoleon was forced to intervene personally, defeating several Spanish armies and forcing a British army to retreat. However, further military action by Spanish armies, guerrillas and Wellington's British-Portuguese forces, combined with Napoleon's disastrous invasion of Russia, led to the ousting of the French imperial armies from Spain in 1814, and the return of King Ferdinand VII.


The Napoleonic War left Spain economically ruined, deeply divided and politically unstable. In the 1830s and 1840s Anti-liberal forces known as Carlists fought against liberals in the Carlist Wars. Liberal forces won, but the conflict between progressive and conservative liberals ended in a weak early constitutional period. After the Glorious Revolution of 1868 and the short-lived First Spanish Republic

Saturday, 31 March 2018

ISABELLA I , SPAIN QUEEN ,WHO IMPOSED ALHAMBRA DEGREE , TO EXPEL MUSLIMS / JEWS 1492 MARCH 31




ISABELLA  I  , SPAIN QUEEN ,WHO IMPOSED 
ALHAMBRA DEGREE , TO EXPEL MUSLIMS / JEWS
1492 MARCH 31




முதலாம் இசபெல்லா (ஸ்பானிய மொழி: Isabel I, Ysabel) இடைக்காலத்தில் இருந்த நாடான காஸ்டைலின் (தற்போதைய ஸ்பெயினின் பகுதி) அரசியாக இருந்தார். இவளே கொலம்பசை ஆதரித்த அரசியாவாள்.
தடைகளைத் தாண்டி நடந்த திருமணம்

இவளுக்கு 3 வயதாக இருக்கும் போதே இவளுக்கும் அரகானின் அரசனான இரண்டாம் ஜானின் மகன் ஃபெர்டினாண்டுக்கும் திருமண நிச்சயம் செய்யப்பட்டது. ஆனால் இவளின் தந்தை ஹென்றி ஆறு வருடம் கழித்து இந்த ஒப்பந்தத்தை இரத்து செய்தார். இவளுக்கு எத்தனையோ மணத்துணைவர்கள் பார்க்கப்பட்டார்கள். ஆனால் இறுதியில் பல தடைகளைத் தாண்டி ஃபெர்டினாண்டே இவளை மணந்து கொண்டார்.


மணக்கோலத்தில் இசபெல்லாவும் ஃபெர்டினாண்டும்
கொலம்பஸ்
கிறிஸ்டோஃபர் கொலம்பசின் நாடு காணும் திட்டத்தை ஆரம்பத்தில் எதிர்த்தாலும் ஓரிரு ஆண்டுகள் கழிந்ததும் ஒப்பந்தத்தின் படி பொருட்செலவை ஏற்றுக் கொண்டார். (கொலம்பஸ் அலைகடலின் தளபதி என்று பட்டம் சூட்டப்பட்டுப் புதிதாகக் கண்டுபிடிக்கும் தீவுகளுக்கு அவரே ஆளுநர் என்ற உறுதிமொழியும் வருவாயில் பெரும்பங்கை அவருக்குக் கொடுக்கவும்)

ஆணுக்குப் பெண் நிகர்
தன் துணைவருடன் புரிந்துணர்வுடனும் சம உரிமையுடனும் இவர் ஆட்சி நடத்தினார். கிரனடாவில் உள்ள அரண்மனையில் இவர்களின் சமஉரிமைச் சாசனம் பொறிக்கப்பட்டுள்ளது.

சாதனைகள்
ஸ்பெயினை ஒருங்கிணைத்தது
கொலம்பசை ஆதரித்தது
அடுத்த நூற்றாண்டுக்கான இராணுவக் கட்டமைப்பை அமைத்து வைத்தது

புனிதர் பட்டத்திற்கான பாதையில்
இசபெல்லாவிற்கு போப்பரசரால் கடவுளின் பணியாளர் (servant of god) பட்டம் வழங்கப்பட்டு விட்டது. ஆனால் யூத அமைப்புகளின் எதிர்ப்பால் புனிதர் பட்டம் வழங்கப்படவில்லை.

சிறப்பிக்கப்படல்

அரசி இசபெல்லாவும் கொலம்பசும்
1893 இல் வெளியிடப்பட்டது
அமெரிக்க அஞ்சல் தலையில் இடம் பெற்ற முதல் பெண் இசபெல்லா ஆவார். இவளின் படம் இடம் பெற்ற அஞ்சல் தலைகள் பல ஆயிரம் டாலர்களுக்கு ஏலம் போயின. அமெரிக்கா வெளியிட்ட நாணயத்தில் இடம் பெற்ற முதல் பெயரிடப்பட்ட பெண்மணியும் இவளே.

Reign  11 December 1474 – 26 November 1504
Tenure  19 October 1469 – 26 November 1504
Role  Queen consort of Castile and Leon
Died  November 26, 1504, Medina del Campo, Spain
Spouse  Ferdinand II of Aragon (m. 1469–1504)
Children  Joanna of Castile, Catherine of Aragon
Grandchildren  Charles V, Holy Roman Emperor
Parents  Isabella of Portugal, Queen of Castile, John II of Castile

The Alhambra Decree (also known as the Edict of Expulsion; Spanish: Decreto de la Alhambra, Edicto de Granada) was an edict issued on 31 March 1492, by the joint Catholic Monarchs of Spain (Isabella I of Castile and Ferdinand II of Aragon) ordering the expulsion of practicing Jews from the Kingdoms of Castile and Aragon and its territories and possessions by 31 July of that year.[1] The primary purpose was to eliminate their influence on Spain's large converso population and ensure they did not revert to Judaism. Over half of Spain's Jews had converted as a result of the religious persecution and pogroms which occurred in 1391.[2] Due to continuing attacks around 50,000 more had converted by 1415.[3] A further number of those remaining chose to convert to avoid expulsion. As a result of the Alhambra decree and persecution in prior years, over 200,000 Jews converted to Catholicism and between 40,000 and 100,000 were expelled, an indeterminate number returning to Spain in the years following the expulsion.[4]:17

The edict was formally and symbolically revoked on 16 December 1968,[5] following the Second Vatican Council. This was a full century after Jews had been openly practicing their religion in Spain and synagogues were once more legal places of worship under Spain's Laws of Religious Freedom.

In 1924, the regime of Primo de Rivera granted Spanish citizenship to the entire Sephardic Jewish diaspora. In 2014, the government of Spain passed a law allowing dual citizenship to Jewish descendants who apply, to "compensate for shameful events in the country's past."[6] Thus, Sephardi Jews who can prove they are the descendants of those Jews expelled from Spain because of the Alhambra Decree can "become Spaniards without leaving home or giving up their present nationality."[7][



Isabella I (1451-1504) was queen of Castile from 1474 to 1504. She and her husband, Ferdinand V, founded the modern Spanish state.

Born in Madrigal on April 22, 1451, Isabella was the daughter of John II of Castile by his second wife, Isabella of Portugal, and was the half sister of Henry IV, who succeeded to the Castilian throne in 1454. Henry had recognized Isabella as his heir over the claims of his daughter Juana, whose royal paternity was questioned by the King's opponents, but when Isabella married Ferdinand of Aragon in 1469, Henry conferred the succession on Juana
When Henry died in 1474, Isabella immediately claimed the throne. In the ensuing civil war Juana was supported by a cross section of the great nobles as well as by the Portuguese king, Alfonso V. Alfonso's army was defeated at the battle of Toro in 1476, and he made peace with the Catholic Monarchs (as the pair were styled) in 1479. In that same year Ferdinand succeeded to the throne of Aragon, associating Isabella with his rule in 1481. With Juana sequestered in a convent, the crucial step in the formation of a united Spain had been taken.

Although "Spain" in 1481 was little more than a personal union of the two crowns, and remained so during Isabella's lifetime, the ultimate process of unification was facilitated by the achievements of the Catholic Monarchs, the most significant of which was the reconquest of the Peninsula from the Moorish kingdom of Granada. Begun in 1481, the war lasted until 1492, ending in a complete Spanish victory. Generous peace terms, which allowed the inhabitants to retain their Islamic religion and laws, were soon violated, and, following an abortive Moorish revolt in 1502, adult Moslems who refused Christian baptism were expelled from Spain.

Earlier, in 1492-the same year in which Isabella agreed to subsidize Columbus's first voyage—the Catholic Monarchs had ordered the expulsion of all unbaptized Castilian Jews, nearly 150,000 in all. The Inquisition, established at the Monarchs' behest in 1478, was thus offered a free field to uncover and penalize the backslidings of all remaining "New Christians" (baptized Jews and Moors).

Isabella had five children. The marriage of daughter Catherine of Aragon to Henry VIII of England eventually resulted in the controversy leading to the English Reformation; and the marriage of Joanna (Juana) the Mad to Philip of Burgundy, son of the German emperor Maximilian I, produced a successor to the Spanish crown—Charles I of Spain (Charles V of the Holy Roman Empire). Isabella, who died on Nov. 26, 1504, nearly undid the work of the Catholic Monarchs by leaving the Castilian throne, not to Ferdinand, but to her demented daughter.