Showing posts with label SEA. Show all posts
Showing posts with label SEA. Show all posts

Friday, 5 February 2021

VENICE -FLOATING CITY IN SEA

 


VENICE -FLOATING CITY IN SEA

வெனிஸ் ‘கடலில் மிதக்கும் நகரம்’


இத்தாலியிலிருந்து விழித்தெழு! எழுத்தாளர்

“அது கடலில் மிதக்கும் கம்பீரமான நகரம். அதன் அகன்ற தெருக்களிலும், குறுகலான தெருக்களிலும் வலம்வருகிற கடல் ஒருகணம் சீறியவாறு ஏறும், மறுகணம் சிணுங்கியவாறு இறங்கும். அதன் அரண்மனையின் பளிங்குக் கல்லில் கடற்பாசி அமர்ந்தபடி அடம்பிடிக்கும்.”​—⁠சாமுயல் ரோஜர்ஸ், ஆங்கில கவிஞர், 1822.

இங்கு விவரிக்கப்பட்டுள்ள அந்த “கம்பீரமான நகரம்” வெனிஸ் ஆகும். மிகப் பெரிய குடியரசு ஒன்றின் முன்னாள் தலைநகரான வெனிஸ், நில மற்றும் கடல் பேரரசை பல நூற்றாண்டுகளாக ஆதிக்கம் செலுத்தி வந்தது. இந்நகரம் “கடலில்” எப்படிக் கட்டப்பட்டது, ஏன் கட்டப்பட்டது? இதன் கம்பீரம் எதன் மீது சார்ந்திருந்தது? இந்தப் பேரரசு எவ்வாறு முடிவுக்கு வந்தது? இதன் மகத்துவத்திற்கு அடையாளமான சின்னங்கள் ஏதாவது இன்றைக்கு மீந்திருக்கின்றனவா?

விரும்பப்படாத இடம்




ஏட்ரியாட்டிக் கடலின் வடமேற்கு முனையில் உள்ள கடற்கழியின் மத்தியில் அமைந்திருக்கும் வெனிஸ் நகரம் 118 தீவுகளால் ஆனது. அந்தக் கடலில் விழும் நதிகள் பேரளவான வண்டல் மண்ணை ஆழமற்ற கடலோரத்தில் படிய வைக்கின்றன. கடலேற்ற அலைகளும் நீரோட்டமும் தொடர்ச்சியான மணற்திட்டுகளை உருவாக்கியிருக்கின்றன; இவை கிட்டத்தட்ட 51 கிலோ மீட்டர் நீளத்திலும் 14 கிலோ மீட்டர் அகலத்திலும் உள்ள கடற்கழியைச் சூழ்ந்து அமைந்திருக்கின்றன. கடலுக்கு வழிவிடும் மூன்று குறுகிய திறப்புகள் ஒரு மீட்டர் உயர கடலேற்ற அலைகளுக்கும் கடல்சார்ந்த போக்குவரத்துக்கும் வழிசெய்கின்றன. “ஓயாத வர்த்தக போக்குவரத்திற்குப் பல நூற்றாண்டுகளாக இந்தக் கடற்கழியே கடைசி நிறுத்தமாக இருந்தது; அப்போக்குவரத்து ஏட்ரியாட்டிக் கடல் வரை சென்றது அல்லது மத்திய மற்றும் வட ஐரோப்பாவில் இருந்து ஆறுகள் வழியாகவோ வணிகக்கூட்டத்தாரின் பாதைகள் வழியாகவோ வந்தது” என ஒரு கட்டுரை சொல்கிறது.

பொ.ச. ஐந்தாம் நூற்றாண்டுக்கும் ஏழாம் நூற்றாண்டுக்கும் இடைப்பட்ட காலத்தில் இந்நகரம் பிறந்திருக்கலாம் என அறிஞர்கள் கருதுகிறார்கள். அந்தச் சமயத்தில் வடக்கிலிருந்து வந்த நாகரிகமற்ற முரட்டுத்தனமான போராளிகள் முக்கிய நிலப்பரப்பில் இருந்த சமுதாயத்தை எரித்துப் போட்டு கொள்ளையடித்தார்கள். இந்தக் கொள்ளையர்கள் வருவதை அறிந்த அநேகர், எளிதில் சென்றடைய முடியாத, ஆனால் பாதுகாப்பான இந்தக் கடற்கழித் தீவுகளில் தஞ்சமடைந்தார்கள்.



வெனிஸ் நகரத்தார் ஆரம்பத்தில், கம்புகளைச் சேற்றில் ஊன்றி அஸ்திவாரம் போட்டு, மெல்லிய கிளைகளாலோ கோரையாலோ வேய்ந்து கட்டடங்களைக் கட்டினார்கள். பிற்பாடு, ஆயிரக்கணக்கான மரக்கட்டைகளால் அஸ்திவாரம் போட்டு அதன் மேல் கற்களை வைத்துக் கட்டினார்கள். இதற்கிடையில், பிற்பாடு நகரத்தின் மையமாக ஆன ரியால்டோ என்ற கடற்கழி தீவுகள் அடிக்கடி தண்ணீரால் நிரம்பின; இதனால், பேரளவான குடியிருப்பாளர்களுக்கு இடமளிக்கத் தேவையான ஸ்திரமும் இடமும் இல்லாமல் போயின. ஆகவே நிலத்தைச் சீர்படுத்தும் பண்டைய முறைகளைப் பயன்படுத்தி நீரை வெளியேற்றவும் இத்தீவுகளை விரிவாக்கவும் வேண்டியிருந்தது. குடியிருப்பாளர்கள் படகுகளைச் செலுத்த வசதியாக வாய்க்கால்களை வெட்டி, சிறந்த முறையில் கட்டடங்களைக் கட்டுவதற்காக இத்தீவுகளை வலுப்படுத்தினார்கள். கால்வாய்களே தெருக்களாயின; அவற்றின் குறுக்கே அமைக்கப்பட்ட பாலங்கள் ஒரு தீவிலிருந்து மற்றொன்றுக்குச் செல்ல பாதசாரிகளுக்கு உதவின.

ஒரு குடியரசின் பிறப்பும் எழுச்சியும்



மேற்கில் ரோம சாம்ராஜ்யம் வீழ்ச்சியடைந்த பிறகு, இந்தக் கடற்கழித் தீவுகள் தற்போது இஸ்தான்புல் என்றழைக்கப்படும் கான்ஸ்டான்டினோபிலை தலைநகராகக் கொண்ட பைஸான்டைன் பேரரசின் கீழ் வந்தன. என்றபோதிலும், இந்தக் கடற்கழி சமூகத்தினர் கலகம் செய்து சுதந்திரத்திற்காகப் போராடினர். இதன் விளைவாக, பிராங்கியருக்கும் பைசாண்டியருக்கும் மத்தியில் வெனிஸ் சிக்கிக்கொண்டது; அதாவது “ஒரு சீமானின் ஆட்சிக்குட்பட்ட சிறிய சுதந்திர பிராந்தியமான அது, இரண்டு பேரரசுகளின் மத்தியில் வழக்கத்திற்கு மாறான நிலைக்கு” தள்ளப்பட்டதாக விவரிக்கப்படுகிறது. இந்தத் தனிச்சிறப்பான நிலைமை ஒரு பெரிய “வணிக போக்குவரத்து மார்க்கமாக” இந்நகரம் செழிக்க வழி செய்தது.

அதற்குப் பின் வந்த நூற்றாண்டுகளில், தன்னிடமுள்ள ராணுவ பலத்தைப் பயன்படுத்தி மத்தியதரைக் கடலை ஒட்டியிருந்த சாரஸனியர்கள், நார்மனியர்கள், பைஸாண்டியர்கள் ஆகியோர் மீது நடவடிக்கை எடுத்தது. 1204-⁠ல் நான்காம் சிலுவைப் போரை ஆதாயப்படுத்தி, முக்கிய எதிரியான கான்ஸ்டான்டிநோபிலை அழித்துப்போட்ட பிறகு வெனிஸ் மிக வல்லமையான சக்தியாக ஆனது. கருங்கடல், ஈஜியன் கடல் ஆகியவற்றின் கரையோரத்திலும், கிரீஸ், கான்ஸ்டான்டிநோபில், சிரியா, பாலஸ்தீனா, சைப்ரஸ், கிரீட் ஆகிய இடங்களிலும் வெனிஸ் அநேக வியாபார ஸ்தலங்களை அமைத்திருந்தது. இப்போது அது பைஸாண்டிய பேரரசின் வீழ்ச்சியைச் சாதகமாகப் பயன்படுத்தி, அந்த இடங்களில் ஏராளமானவற்றைத் தன் ஆட்சிக்குட்பட்ட குடியேற்றங்களாக மாற்றியது.

“மத்தியதரைக் கடல் மகாராணி”

12-⁠ம் நூற்றாண்டிலேயே, வெனிஸின் பிரம்மாண்ட கப்பல்கூடங்கள் போர்க்கப்பல்கள் ஒவ்வொன்றையும் சில மணி நேரத்திற்குள் முழுமையாக உற்பத்தி செய்யும் திறனுடையதாக இருந்தன. உள்ளூர் தொழிற்சாலைகள் கண்ணாடி மற்றும் ஆடம்பர துணிவகைகளான லேஸ், பட்டுத்துணி (brocade), பளபளப்பான துணிவகை (damask), வெல்வெட் ஆகியவற்றை உற்பத்தி செய்தன. வெனிஸைச் சேர்ந்த உள்நாட்டு வணிகர்களும் வெளிநாட்டு வணிகர்களும் மேற்கிலிருந்து ஆயுதங்கள், குதிரைகள், அம்பர், ரோமங்கள், மரக்கட்டை, கம்பளி, தேன், மெழுகு ஆகியவற்றையும் அடிமைகளையும் கொண்டுவந்தனர். மறுபட்சத்தில், மத்தியதரைக் கடலின் கிழக்கிலுள்ள இஸ்லாமிய பிரதேசங்களிலிருந்து தங்கம், வெள்ளி, பட்டு, வாசனைப் பொருட்கள், பருத்தி, சாயம், தந்தம், வாசனை திரவியங்கள் போன்ற அநேக பொருட்கள் இறக்குமதி செய்யப்பட்டன. நகர அதிகாரிகள் அதன் சந்தைக்குக் கொண்டுவரப்பட்ட அல்லது அங்கிருந்து அனுப்பப்பட்ட எல்லா பொருட்களுக்கும் வரிகள் வசூலிக்கப்படுமாறு பார்த்துக்கொண்டனர்.

பலாடியோ, டிஷன், டின்டாரெட்டோ போன்ற பிரபல கட்டடக்கலை நிபுணர்களாலும் ஓவியர்களாலும் அலங்கரிக்கப்பட்ட வெனிஸ் நகரம், லா ஸேரேநிசீமா, அதாவது “மிக அமைதியானது” அல்லது “அழகானது” என்பதாக விவரிக்கப்படுகிறது. “நாகரிக உலகின் மிகவும் செல்வச் செழிப்பான வியாபார மையமாக கொடிகட்டிப் பறந்த” இந்த நகரம் “மத்தியதரைக் கடல் மகாராணி” என்று அழைக்கப்படுவது மிகப் பொருத்தமானதே. பல நூற்றாண்டுகளுக்கு அது அவ்வாறே இருந்தது. ஆனால் 16-⁠ம் நூற்றாண்டில் முக்கிய வியாபார தடம் அட்லாண்டிக்கிற்கும் மேற்கே அமெரிக்க கண்டங்களுக்கும் மாற ஆரம்பித்தபோது அதன் ஆதிக்கம் மங்க ஆரம்பித்தது.

மத்தியதரைக் கடல் பகுதி முழுவதுமாகச் சிதறியிருந்த வெனிஸ் குடியேற்றங்கள் அருகருகே அமையவில்லை; ஒரே அரசாங்கத்தின் கீழ் ஒன்றுபடவில்லை; ஒன்றாகச் சேர்ந்து ஒத்துழைக்கவுமில்லை. இதனால் குடியேற்றங்களை இழக்க வேண்டிய கட்டாயம் வெனிஸுக்கு ஏற்பட்டது. அருகிலிருந்த அரசுகள் வெனிஸின் பிராந்தியங்களை ஒன்றன் பின் ஒன்றாகக் கைப்பற்ற ஆரம்பித்தன. கடைசியில், நெப்போலியன் இந்தக் கடற்கழி நகரத்தை 1797-⁠ல் கைப்பற்றி ஆஸ்திரியாவின் ஆளுகைக்கு உட்படுத்தினார். 1866-⁠ல் வெனிஸ் நகரம் இத்தாலி நாட்டின் பாகமானது.

கனவு நகரம்

வெனிஸுக்கு விஜயம் செய்யும் அநேகருக்கு இரண்டு, மூன்று நூற்றாண்டுகள் பின்னோக்கிச் சென்றது போல் இருக்கும். இந்நகரத்தின் சூழல் தனித்தன்மையுடையதாக இருக்கிறது.

அமைதியே அங்கு காணப்படுகிற ஒரு முக்கிய அம்சம். பாதசாரிகளுக்கான குறுகிய நடைபாதை பெரும்பாலும் கால்வாய்களிலுள்ள போக்குவரத்திலிருந்து பிரித்து வைக்கப்பட்டிருக்கிறது; ஆனால் கால்வாயை ஒட்டியுள்ள பாதைகளும், கால்வாயுக்குக் குறுக்கே செல்லும் வளைந்த கற்பாலங்களின் பாதைகளும் இதற்கு விதிவிலக்கு. படகுகளே இந்தத் ‘தண்ணீர்த் தெருக்களில்’ செல்ல முடிகிற ஒரே மோட்டார் வாகனங்கள். வெனிஸ் நகரம் கண்கவர் காட்சிகள் நிறைந்ததாக இருக்கிறது. தேவாலயத்தோடு கூடிய புனித மார்க் சதுக்கம், மணிக் கூண்டு, பச்சைக் கடற்கழியில் சூரிய ஒளிக்கதிர்கள் பிரகாசிக்கிற பிரம்மாண்ட கடற்பகுதி ஆகியவை ஓவியர்களின் மனதைத் தூண்டுகின்றன.

முக்கிய சதுக்கத்தில் எப்போதும் பிஸியாக காணப்படும் கஃபேக்கள் சுற்றுலாப் பயணிகளையும், உள்ளூர்வாசிகளையும் ஒருசேர சுண்டி இழுக்கின்றன. சிறிய ஆர்கெஸ்ட்ராக்கள் இசைக்கும் பாரம்பரிய இன்னிசையைக் கேட்டுக்கொண்டே நீங்கள் ஒரு பானத்தையோ அல்லது ஜெலாட்டோ ஐஸ்கிரீமையோ ருசிக்கலாம். அங்கு உட்கார்ந்து, வருவோர் போவோரை வேடிக்கை பார்த்துக் கொண்டும், சுற்றியுள்ள பிரமாதமான கட்டடக் கலையை ரசித்துக் கொண்டும், இதுவரை எந்தக் காரையும் காணவில்லையே என்று நினைத்துக் கொண்டும் இருக்கையில், ஏதோ பல காலம் பின்னோக்கிச் சென்றுவிட்டதைப் போன்றே நீங்கள் உணருவீர்கள்.

கலைப் பொக்கிஷங்களைத் தேடுவோரை இந்நகரம் சுண்டி இழுக்கிறது. இங்குள்ள எண்ணற்ற அரண்மனைகள், அருங்காட்சியகங்கள், தேவாலயங்கள் போன்றவற்றில் பல பிரபல ஓவியர்களின் ஓவியங்கள் குடி கொண்டிருப்பது தெரியவரும். ஆனால் பார்வையாளர்கள் சிலர், குறுகலான பாதைகளில் ‘ஹாயாக’ நடந்துசென்று, தங்களைச் சுற்றியுள்ள வித்தியாசமான காட்சிகளைப் பார்ப்பதிலேயே திருப்தியடைந்து விடுகிறார்கள். சுற்றுலாப் பயணிகளுக்கென்றே எண்ணிறந்த கடைகள் உள்ளன; கடற்கழித் தீவான பூரானோவின் லேஸ் மற்றும் எம்பிராய்டரி வேலைகள், முரானோவின் கிரிஸ்டல் மற்றும் கண்ணாடிப் பொருட்கள் ஆகியவை அங்கு விற்கப்படுகின்றன; இவற்றிற்காக இந்நகரம் புகழ்பெற்று விளங்குகிறது. வாப்பரிட்டோ, அதாவது மோட்டார் படகுகளில் கொஞ்ச நேரம் சவாரி செய்து இத்தீவுகளுக்குச் செல்லலாம், அங்கே இந்தப் பொருட்கள் எவ்வாறு தயாரிக்கப்படுகின்றன என்பதை நீங்கள் கண்கூடாகக் காணலாம். இப்படகுகளில் சிறிது நேரம் சவாரி செய்வதே ஓர் அலாதியான அனுபவம்தான்.

கூரிய முகடுள்ள வளைவுகளோடு கூடிய பிரம்மாண்டமான அரண்மனைகள், கடந்த காலத்து கிழக்கத்திய செல்வாக்கைப் பறைசாற்றுகின்றன. இந்நகரத்தின் முக்கிய போக்குவரத்துப் பாதையான கிராண்ட் கேனாலின் மீதுள்ள புகழ்பெற்ற ரியால்டோ பாலத்தையும், அதன் கீழே அமைதியாக நீந்திச் செல்லும் பளபளப்பான கருப்புப் காண்டோலா படகுகளையும் நின்று வேடிக்கை பார்க்க அநேகர் கூட்டம் கூட்டமாகச் செல்கின்றனர்.

தப்பிப்பிழைக்க இன்னும் போராட்டம்

“அழகான குடியரசு” வீழ்ந்து இரண்டு நூற்றாண்டுகளுக்குப் பின்னர், வெனிஸ் இன்னமும் தப்பிப்பிழைக்க போராடிக் கொண்டிருக்கிறது; ஆனால் வித்தியாசமான போராட்டங்களில் ஈடுபட்டுள்ளது. சரித்திரப் புகழ்மிக்க இந்த மையப் பகுதியில், 1951-⁠ல் இதன் ஜனத்தொகை 1,75,000; 2003-⁠ல் 64,000 ஆகக் குறைந்தது. இதற்குக் காரணம் சொத்துக்களின் விலையேற்றம், வேலையின்மை, சொற்ப நவீன வசதிகள் ஆகியவையே. அழிவை நோக்கிச் சென்றுகொண்டிருக்கும் இந்நகரம் புதுப்பிக்கப்பட வேண்டுமா வேண்டாமா, எப்படி அதைச் செய்வது போன்ற சிக்கலான சமூக மற்றும் பொருளாதார பிரச்சினைகள் தீர்க்கப்பட வேண்டும்.

இங்குள்ள பொருளாதார நிலைமை சரிசெய்யப்படும் என்ற நம்பிக்கையில் 1920-களில் புதிய தொழிற்சாலைப் பகுதியொன்று முக்கிய நிலப்பரப்பில் உருவாக்கப்பட்டது. எண்ணெய்க் கப்பல்கள், சுத்திகரிப்பு மையங்களைச் சென்றெட்ட உதவியாக இந்தக் கடற்கழியின் குறுக்கே ஆழமான கால்வாய் ஒன்று வெட்டப்பட்டது. தொழிற்சாலைப் பகுதி வேலைவாய்ப்புகளை அளித்தது. இருந்தாலும், தூய்மைக்கேட்டுக்கும், ஆக்வா ஆல்டா (உயரளவு தண்ணீர்) என்ற அழிவுண்டாக்குகிற கடலலை ஏற்றங்களுக்கும் காரணமாக இருப்பதாக குற்றம் சாட்டப்பட்டிருக்கிறது. இந்தக் கடலலை ஏற்றங்கள் அடிக்கடி இந்நகரின் வரலாற்று மையத்தை வெள்ளக் காடாக்குகின்றன.

இக்கடற்கழியின் சுற்றுச்சூழலும், அதன் தண்ணீரின் போக்கும் இயல்பாகவே வெகு நுட்பமாக செயல்பட்டு வந்ததும் இந்நகரம் தொடர்ந்திருப்பதற்கு முக்கிய காரணிகள் என்பது முன்பே அறிந்த விஷயம்தான். 1324-லேயே, இக்கடற்கழியை சேற்றுப்படிவுகளால் நிரப்பும் ஆறுகளைத் திசை திருப்பும் பிரம்மாண்ட வேலைகளை வெனிஸ் நகரத்தார் மேற்கொண்டனர். 18-⁠ம் நூற்றாண்டில், ஏட்ரியாட்டிக் கடல் இக்கடற்கழியை அழிக்காதபடிக்கு அக்கடலில் தடுப்புச் சுவர்களை அவர்கள் எழுப்பினர்.

நிலைமை முன்பைவிட அதிக அபாயகரமாக இருப்பதாகத் தோன்றுகிறது. தொழிற்சாலைகள் நிலத்தடி நீர்த்தேக்கங்களை காலியாக்கி வருவதன் காரணமாக நிலம் அமிழ்ந்துவிடும் அபாயம் நிறுத்தப்பட்டிருப்பதாக நம்பப்படுகிறது. ஆனால் உலகெங்கும் கடல்மட்டம் உயர்ந்து கொண்டே போகிறது. அதுமட்டுமின்றி, கடற்கழிப் பகுதியும் நிலச்சீர்ப்படுத்துதல் காரணமாக குறைந்து வருகிறது. இவ்வாறாக நிலம் மற்றும் நீரின் இடையே உள்ள சமநிலை பாதிக்கப்பட்டுள்ளது. தண்ணீரின் ஏற்றம் முன்னொருபோதும் இந்தளவு அச்சுறுத்தலாக இருந்ததில்லை. 20-⁠ம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் புனித மார்க் சதுக்கம் வருடத்திற்கு கிட்டத்தட்ட ஐந்து முதல் ஏழு தடவை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டது. நூறு ஆண்டுகளுக்குப் பிறகு, ஒரு வருடத்தில் மட்டுமே அது 80 முறை அவ்வாறு பாதிக்கப்பட்டது.

வெனிஸின் தனிச்சிறப்பான வரலாற்று மற்றும் கலைநயமிக்க பாரம்பரிய ஆஸ்தியும், அது எதிர்ப்பட்டு வருகிற பிரச்சினைகளும் சர்வதேச அக்கறையைத் தூண்டியுள்ளன. அதன் துறைமுகத்தின் செயல்பாடுகளையோ மக்களின் தினசரி வாழ்க்கையையோ எவ்விதத்திலும் பாதிக்காத வகையில் வெள்ளத்திலிருந்து பாதுகாப்பு அளிக்கவும், சுற்றுச்சூழலுக்கு கவனம் செலுத்தவும் ஒரு விசேஷ சட்டம் அமலாக்கப்பட்டிருக்கிறது. சிறந்த முறையில் அதை எப்படிச் செயற்படுத்தலாம் என்பது இன்னமும் கேள்விக்குறியாகவே இருக்கிறது.

கால்வாய்க் கரைகளை உயர்த்தவும், ஆக்வா ஆல்டா ஏற்படும் சமயத்தில் அடிமண்ணிலிருந்து தண்ணீர் மேலே வராதவாறு தளங்களை அமைக்கவும், நகரக் கழிவுநீர்க் குழாயிலிருந்து கழிவுநீர் திரும்பி வருவதைத் தடுக்கவும் வேலை நடைபெற்று வருகிறது. நீர்மட்டம் அச்சுறுத்துகையில் கடற்கழியின் வாயில்களில் தடுப்புகளை எழுப்புவதற்காக, நகர்த்தும் வசதியுள்ள தடுப்புச்சுவர்களை அமைக்கும் நடவடிக்கையே மிக அதிக சர்ச்சைக்குரியதாய் இருக்கிறது.

இந்த லட்சியத்தைச் சாதிப்பதற்கு ரொம்பவே பாடுபட வேண்டியுள்ளது. “கடலில் மிதக்கும் கம்பீரமான நகரம்” ஆர்வத்தைத் தூண்டுகிற கடந்த காலத்துக்குச் சாட்சி பகர்கிறது. ஆனால் வித்தியாசமான எழுத்தாளர்கள் குறிப்பிட்டுள்ளபடி, “வெளியாட்கள் இந்நகர மக்களின் தேவைகளை உதாசீனப்படுத்தி, இங்கிருந்து துரத்திவிட்டுக்கூட இந்நகரை ஓர் அருங்காட்சியகமாக” மாற்றும் ஆபத்திருக்கிறது. பல காலமாக வெனிஸ் மோசமான இயற்கைச் சூழலோடு போராட வேண்டியிருந்தது. இந்நகரை “சமூக ரீதியிலும் பொருளாதார ரீதியிலும் புதுப்பித்து, குடியேற்றி, உயிரூட்டினால் தவிர மற்றபடி வெறும் தண்ணீரிலிருந்து இதைப் பாதுகாப்பது வீணான ஒன்றாகவே இருக்கும்


Sunday, 2 August 2020

HOW KENNEDY SAVED THEIR TEAM 1943 AUGUST 2 IN SEA COLLISION



HOW KENNEDY SAVED THEIR TEAM 
1943 AUGUST 2 IN SEA COLLISION





இளமைப் பருவத்தில் இவருக்குப் பல முறை உடல்நிலை சரியில்லா மல் போவதுண்டு. 1940-ல் ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றார். அமெரிக்க கடற்படையில் அதிகாரியாக சேர்ந்தார். இரண்டாம் உலகப் போர் நடைபெற்று வந்த சமயத்தில் இவர் பொறுப்பிலிருந்த கடற்படைக் கப்பலை ஜப்பானியப் போர்க்கப்பல் தாக்கி மூழ்கடித்தது.

l காயம் பட்ட நிலையிலும் கடலில் நீந்தி தன் வீரர்களைக் காப்பாற்றினார். ஒரு வீரரைக் காப்பாற்றி சுமார் மூன்று மைல் தூரம் கடலில் இழுத்து வந்து கரை சேர்த்தார். இந்த துணிகரமான செயலுக்காக அவருக்கு ‘பர்பிள் ஹார்ட்’ என்ற வீரப் பதக்கம் வழங்கப்பட்டது. போர் முடிந்த பிறகு தீவிர அரசியலில் ஈடுபட்டார்.
இவர் எழுதிய  profiles in courage என்ற நூலுக்காக 1957ஆம் ஆண்டு ‘புலிட்சர் பரிசு’ வழங்கப்பட்டது. 1960ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் வெற்றி பெற்று அமெரிக்காவின் 35வது அதிபராக 43வது வயதில் பதவி ஏற்றார்.

உலக மக்கள் அனைவராலும் நேசிக்கப்பட்ட, மனித உரிமைக்காகக் குரல் கொடுத்த இவர் 1963ஆம் ஆண்டு மறைந்தார்.


Crew on PT-109's last mission

Top L to R, Ensign Al Webb, Leon Drawdy, Edger Mauer, Edmund Drewitch, John Maguire, Kennedy. Bottom L to R, Charles Harris, Maurice Kowal, Andrew Kirksey, Ensign Lenny Thom. (Webb, Drewitch, Drawdy, and Kowal not aboard during collision, Barney Ross not in photo)
The following men were aboard on PT-109's last mission:

John F. Kennedy, Lieutenant, Junior Grade (LTJG), commanding officer (Boston, Massachusetts).
Leonard J. Thom, ensign (ENS), Ohio State football athlete, and excellent swimmer, executive officer (Sandusky, Ohio).
George H. R. "Barney" Ross, Ensign (ENS) On board as an observer after losing his own boat. Attempted to operate the 37 mm gun but suffered from night blindness. (Highland Park, Illinois).
Raymond Albert, Seaman 2/c, gunner. Killed in action 8 October 1943 (Akron, Ohio).[18]
Charles A. "Bucky" Harris, gunner's mate 3/c (GM3) (Watertown, Massachusetts).
William Johnston, Motor Machinist's Mate 2/c (MM2) (Dorchester, Massachusetts).
Andrew Jackson Kirksey, Torpedoman's Mate 2/c (TM2) Killed in collision. (Reynolds, Georgia).[19]
John E. Maguire, Radioman 2/c (RM2) (Dobbs Ferry, New York).
Harold William Marney, Motor Machinist's Mate 2/c (MM2). Killed in collision, manning turret closest to impact point. (Springfield, Massachusetts)[20]
Edman Edgar Mauer, Quartermaster, cook, 3/c (QM3) (St. Louis, Missouri).
Patrick H. "Pappy" McMahon, Motor Machinist's Mate 1/c (MM1) (Wyanet, Illinois). Only man in engine room during collision, was badly burned, but recovered from his wounds. Only member of the crew besides Kennedy mentioned by name in the song.
Ray L. Starkey, Torpedoman's Mate 2/c (TM2) (Garden Grove, California).

Gerard E. Zinser, Motor Machinist's Mate 1/c (MM1) Erroneously called "Gerald" in many publications, Zinser remained in the Navy for a career following the end of World War II, eventually retiring as a Chief Petty Officer. The last living survivor of PT-109, he died in Florida in 2001. (Belleville, Illinois).


Separation of the 109 from her division

JFK, Lieutenant JG, official naval photo, 1942
Lieutenant Brantingham on PT-159, leader of Kennedy's division, and originally stationed near Kennedy, first saw radar blips indicating the southbound destroyers just arriving on the scene, and fired his torpedoes from about 1 mile (1.6 km) away. As he advanced, he did not radio Kennedy's 109 to follow, leaving Kennedy and his crew behind in the darkness. All of Brantingham's torpedoes missed the destroyers, and his torpedo tubes caused a small fire, requiring Lieutenant Liebenow's PT, also in Kennedy's division, to swing in front of Brantingham's PT to block the light emitting from his burning torpedo tubes as they could have given away their location to the destroyers. Liebenow's 157 fired two more torpedoes that failed to hit their target as well, then both boats laid smoke from their smoke generator and zigzagged away to avoid detection. No signal of the destroyer's presence was ever radioed or received by Kennedy's 109, or the other boat in the division, and skippers Brantingham and Liebenow headed blindly west to Gizo Island and away from the destroyers and Kennedy's 109.[26]

Many of the torpedoes that were fired exploded prematurely or ran at the wrong depth. The odds that a Mark 8 torpedo that made it to a destroyer would explode was less than 50%, due to faulty calibration of the detonators, a problem that was not known nor corrected by the Navy until later in the war. A few other PTs, including the leader of Division A to the south of Kennedy, intercepted the destroyers on their southbound route close to Kolombangara, but were unable to hit any with torpedoes. The boats were radioed by Warfield to return when their torpedoes were expended, but the four boats with radar fired their torpedoes first and were ordered to return to base. Commander Warfield's concept of sending orders to the PTs in darkness by radio from 40 miles (64 km) away and without a view of the battle, was inefficient at best. The radar sets the four boats carried were relatively primitive, and sometimes malfunctioned. When the four boats with radar left the scene of the battle, the remaining boats, including PT-109, were deprived of the ability to determine the location or approach of the oncoming destroyers, and were not notified that other boats had already engaged the enemy.

Late in the night, Kennedy's 109 and two accompanying PTs became the last to sight the Japanese destroyers returning on their northern route to Rabaul, New Britain, New Guinea, after they had completed dropping their supplies and troops at 1:45 a.m. on the southern tip of Kolombangara.[27] The official Navy account of the incident listed radio communications as good, but PT commanders were also told to maintain radio silence until informed of enemy sightings, causing many commanders to turn off their radios or not closely monitor their radio traffic, including Kennedy.[28][29][30]

Collision with the Amagiri, 2 August

Destroyer Amagiri in 1930, 400 feet (120 m) and heavily armed
By 2 a.m. on 2 August 1943, as the battle neared its end, PT-109, PT-162, and PT-169 were ordered to continue patrolling the area on orders previously radioed from Commander Warfield.[31] The night was cloudy and moonless, and fog had set amidst the remaining PTs. Kennedy's boat was idling on one engine to avoid the detection of her phosphorescent wake by Japanese aircraft when[32] the crew realized they were in the path of the Japanese destroyer Amagiri, which was heading north to Rabaul from Vila Plantation, Kolombangara, after offloading supplies and 902 soldiers.

Contemporary accounts of the incident, particularly the work of Mark Doyle, do not conclude that the sole cause of the collision was the initial lack of speed and maneuverability caused by the idling engines of the 109. Kennedy believed the firing he had heard was from shore batteries on Kolombangara, not destroyers, and that he could avoid detection by idling his engines and reducing his wake.[28][33]

Kennedy said he attempted to turn PT-109 to fire a torpedo and have Ensign George "Barney" Ross fire their newly installed 37 mm anti-tank gun from the bow at the oncoming northbound destroyer Amagiri. Ross lifted a shell but did not have time to load it into the closed breech of the powerful weapon that Kennedy hoped might deter the oncoming vessel.[34] Amagiri was traveling at a relatively high speed of between 23 and 40 knots (43 and 74 km/h; 26 and 46 mph) in order to reach harbor by dawn, when Allied air patrols were likely to appear.[35][36]

Kennedy and his crew had less than ten seconds to get the engines up to speed and evade the oncoming destroyer, which was advancing without running lights, but the PT boat was run down and severed between Kolombangara and Ghizo Island, near 8°3′S 156°56′E.[37] Conflicting statements have been made as to whether the destroyer captain had spotted and steered towards the 109. Most contemporary authors write that Amagiri's captain intentionally steered to collide with the 109. Amagiri's captain, Lieutenant Commander Kohei Hanami [ja], later admitted it himself and also stated that the 109 was traveling at a steady pace in their direction.[38]

PT-109 explodes
When PT-109 was cut in two around 2:27 a.m.,[39] a fireball of exploding aviation fuel 100-foot-high (30 m) announced the collision, and caused the sea surrounding the ship to flame. Seamen Andrew Jackson Kirksey and Harold W. Marney were killed instantly, and two other members of the crew were badly injured and burned when they were thrown into the flaming sea surrounding the boat. For such a catastrophic collision, explosion, and fire, there were few men lost when contrasted to the losses on other PT boats hit by shell fire. PT-109 was gravely damaged, with watertight compartments keeping only the forward hull afloat in a sea of flames.[33][40]

PT-169, closest to Kennedy's craft, launched two torpedoes that missed the destroyer and PT-162's torpedoes failed to fire at all. Both boats then turned away from the scene of the action and returned to base without checking for survivors from PT-109. There had been no procedure outlined by Commander Warfield of how to search for survivors or what the PT flotilla should do in case a ship was lost.[33] In the words of Captain Robert Bulkley, naval historian, "This was perhaps the most confused and least effectively executed action the PTs had been in. Eight PTs fired 30 torpedoes. The only confirmed results were the loss of PT 109 and damage to the Japanese destroyer Amagiri" [from striking the 109].[41]

Survival, swim to Plum Pudding Island, 2 August

Map of the events of 2 August 1943, click map to view Plum Pudding, Olasana, and Naru Islands[37]
Kennedy was able to rescue MM1 Patrick McMahon, the crew member with the most severe wounds, which included burns that covered 70 percent of his body, and brought him to the floating bow. Kennedy also rescued Starkey and Harris, bringing them both to the bow.[42] On instructions from Kennedy, the eleven survivors thrown from the 109 first regrouped, and then hoping for rescue, clung to PT-109's bow section for 12 hours as it drifted slowly south. By about 1 p.m.,[4] on 2 August, it was apparent that the hull was taking on water and would soon sink, so the men decided to swim for land, departing around 1:30 p.m.[43][44] As there were Japanese camps on all the nearby large islands including Kolombangara, the closest, they chose the tiny deserted Plum Pudding Island southwest of where the bow section had drifted. They placed their lantern, shoes, and non-swimmers on one of the timbers that had been used as a gun mount and began kicking together to propel it. Kennedy, who had been on the Harvard University swim team, used a life jacket strap clenched between his teeth to tow McMahon.[45] It took four hours to swim to the island, 3.5 miles (5.6 km) away, which they reached without encountering sharks or crocodiles.[46][35]

Additional swims, 2, 4, and 5 August
Plum Pudding Island was only 100 yards (91 m) in diameter, with no food or water. The exhausted crew dragged themselves behind the tree line to hide from passing Japanese barges. The night of 2 August, Kennedy swam 2 miles (3.2 km) to Ferguson Passage to attempt to hail a passing American PT boat. On 4 August, he and Lenny Thom assisted his injured and hungry crew on a demanding swim 3.75 miles (6.04 km) south to Olasana Island which was visible to all from Plum Pudding Island. They swam against a strong current, and once again, Kennedy towed McMahon by his life vest. They were pleased to discover Olasana had ripe coconuts, though there was still no fresh water.[47] On the following day, 5 August, Kennedy and George Ross swam for one hour to Naru Island, visible at an additional distance of about .5 miles (0.80 km) southeast, in search of help and food and because it was closer to Ferguson Passage where Kennedy might see or swim to a passing PT boat on patrol. Kennedy and Ross found a small canoe, packages of crackers and candy, and a fifty-gallon drum of drinkable water left by the Japanese, which Kennedy paddled back to Olasana in the acquired canoe to provide his crew. It was then that Kennedy first spoke to native Melanesian coastwatchers Biuku Gasa and Eroni Kumana on Olasana Island. Months earlier, Kennedy had learned a smattering of the pidgin English used by the coastwatchers by speaking with a native boy. The two coastwatchers had finally been convinced by Ensign Thom that the crew were from the lost 109, when Thom asked Gasa if he knew John Kari, and Gasa replied that he worked with him.[48] Realizing they were with Americans, the coastwatchers brought a few yams, vegetables, and cigarettes from their dugout canoe and vowed to help the starving crew.[33][49] But it would take two more days for a full rescue.[50]

Rescue

Thom's and Kennedy's rescue messages
Kennedy's message scratched on a coconut while he was on Naru, where he had spent some time from 4–7 August, was not the only communication given to the coastwatchers. A more detailed message was written by the executive officer of PT-109, Ensign Leonard Jay Thom on 6 August. Thom's message was a "penciled note" written on paper, which read:[51][52]

To: Commanding Officer--Oak O
From:Crew P.T. 109 (Oak 14)
Subject: Rescue of 11(eleven) men lost since Sunday, August 1 in enemy action. Native knows our position & will bring P.T. Boat back to small islands of Ferguson Passage off NURU IS. A small boat (outboard or oars) is needed to take men off as some are seriously burned.
Signal at night three dashes (- - -) Password--Roger---Answer---Wilco If attempted at day time--advise air coverage or a PBY could set down. Please work out a suitable plan & act immediately Help is urgent & in sore need. Rely on native boys to any extent
Thom
Ens. U.S.N.R
Exec. 109.[53][52]


The coconut with the carved message, cast in a paperweight

Though the 1963 movie depicted Kennedy offering a coconut inscribed with a message as his idea and the sole form of communication, it was Gasa who suggested it and Kumana who climbed a coconut tree to pick one. On the instructions of Gasa, Kennedy painstakingly scratched the following message on the coconut husk with a knife:[33]

NAURO ISL
COMMANDER... NATIVE KNOWS POS'IT...
HE CAN PILOT... 11 ALIVE
NEED SMALL BOAT... KENNEDY[54]


Battle of Vella Gulf, Admiral Halsey, 6–7 August
On the night of 6–7 August, while Kennedy still awaited rescue, Admiral William Halsey, now convinced that PTs were unsuitable against Japanese destroyers, sent six U.S. Navy destroyers equipped with more advanced radar to intercept the "Tokyo Express", again on their frequent run to Kolombangara Island. This time, the U.S. forces succeeded and sank four Japanese destroyers, two of which, the Arashi and Hagikaze, had eluded Kennedy and the 14 PT crews on the night of 1–2 August. This action became known as the "Battle of Vella Gulf".[58]

PT-157 makes final rescue, 8 August
On 7 August, when the coastwatcher scouts carrying the coconut and paper message arrived at Rendova, PT Commander Warfield was at first skeptical of the messages and the trustworthiness of the native scouts Gasa and Kumana. After finally receiving Evans' radioed message of the discovery of the 109 crew, and facing overwhelming evidence that Kennedy had returned from the dead, he cautiously consented to risk two PTs to rescue them. Warfield selected PT-157, commanded by Kennedy's friend and former tentmate Lieutenant William Liebenow for the rescue, as he and his crew were experienced and familiar with the area. Liebenow later said that his crew were chosen because they were "the best boat crew in the South Pacific."[59] PT-171 would travel ahead and radio Liebenow of any sightings of the enemy. Departing just after sunset from Rendova at 7:00 p.m. on 8 August, Liebenow motored PT-157 to Reginald Evans' base at Gomu Island, off Kolombangara. To prevent making a wake, Liebenow traveled at 10-15 knots, muffled his engines, and zigzagged to prevent being tracked by planes or shore batteries. The arranged signal when Liebenow picked up Kennedy on Gomu was four shots, but since Kennedy only had three bullets in his pistol, Evans gave him a Japanese rifle for the fourth signal shot. With Kennedy aboard, PT-157 rescued the weak and hungry PT-109 crew members on Olasana Island in the early morning of 8 August, after dispatching row boats to pick them up. The 157 then motored the full crew and the coastwatcher scouts forty miles (64 km) back to the Rendova PT base where they could begin to receive medical attention.[60]



PT-157 makes final rescue, 8 August
On 7 August, when the coastwatcher scouts carrying the coconut and paper message arrived at Rendova, PT Commander Warfield was at first skeptical of the messages and the trustworthiness of the native scouts Gasa and Kumana. After finally receiving Evans' radioed message of the discovery of the 109 crew, and facing overwhelming evidence that Kennedy had returned from the dead, he cautiously consented to risk two PTs to rescue them. Warfield selected PT-157, commanded by Kennedy's friend and former tentmate Lieutenant William Liebenow for the rescue, as he and his crew were experienced and familiar with the area. Liebenow later said that his crew were chosen because they were "the best boat crew in the South Pacific."[59] PT-171 would travel ahead and radio Liebenow of any sightings of the enemy. Departing just after sunset from Rendova at 7:00 p.m. on 8 August, Liebenow motored PT-157 to Reginald Evans' base at Gomu Island, off Kolombangara. To prevent making a wake, Liebenow traveled at 10-15 knots, muffled his engines, and zigzagged to prevent being tracked by planes or shore batteries. The arranged signal when Liebenow picked up Kennedy on Gomu was four shots, but since Kennedy only had three bullets in his pistol, Evans gave him a Japanese rifle for the fourth signal shot. With Kennedy aboard, PT-157 rescued the weak and hungry PT-109 crew members on Olasana Island in the early morning of 8 August, after dispatching row boats to pick them up. The 157 then motored the full crew and the coastwatcher scouts forty miles (64 km) back to the Rendova PT base where they could begin to receive medical attention.[60]


Kennedy receiving the Navy and Marine Corps Medal
Aftermath

There were reporters aboard PT-157, when they rescued Kennedy and his crew from Olasana Island. After the rescue, the New York Times announced, "KENNEDY'S SON IS HERO IN PACIFIC AS DESTROYER SPLITS HIS BOAT". Other papers wrote "KENNEDY'S SON SAVES 10 IN PACIFIC", and "SHOT FROM RUSTY JAP GUN GUIDES KENNEDY RESCUERS". All the published accounts of the PT-109 incident made Kennedy the key player in rescuing all 11 crew members and made him a war hero.[61] His father, Joseph Kennedy Sr., made sure that these articles were widely distributed, and that it was known that his son was a hero.[61] The articles focused on Kennedy's role in the incident, omitting most of the contributions of Thom, the crew, and the coastwatchers.[62][63]

Thom, Ross, and Kennedy were each awarded the Navy and Marine Corps Medal, though senior officer Lt. Commander Alvin Cluster had recommended Kennedy for the Silver Star.[64] Kennedy was also awarded the Purple Heart for injuries he sustained in the collision.[65][66] Following their rescue, Thom was assigned as commander of PT-587 and Kennedy was assigned as commander of PT-59 (a.k.a. PTGB-1).[65] Kennedy and Thom remained friends, and when Thom died in a 1946 car accident, Kennedy was one of his pallbearers.[65][35]

The PT-109 incident aggravated Kennedy's ongoing health issues. It contributed to his back problems, until his symptoms eventually progressed to a point where they were incapacitating.[67] The incident also contributed to his gastrointestinal problems.[61][54][35]

The coconut shell came into the possession of Ernest W. Gibson Jr., who was serving in the South Pacific with the 43rd Infantry Division.[68] Gibson later returned it to Kennedy.[69] Kennedy preserved it in a glass paperweight on his Oval Office desk during his presidency. It is now on display at the John F. Kennedy Library in Boston, Massachusetts.

Sunday, 27 October 2019

IMPORTANCE OF HARD LABOUR



 IMPORTANCE OF HARD LABOUR

உழைப்பின் உன்னதத்தை 
உணர்த்துகின்ற கதை.


கடற்கரை ஓரமாக பெரிய மரம் ஒன்று வளர்ந்திருந்தது. அதன் கிளை ஒன்று மிக நீண்டு கடல் நீருக்கு மேலாக நீட்டிக் கொண்டிருந்தது. அதன் உச்சியில் கடற்குருவி ஒன்று கூடு கட்டியது. அதனுள் நாலைந்து முட்டைகளை இட்டு அடைகாத்து வந்தது. ஆண் குருவியும் பெண் குருவியும் அதே கூட்டில் வசித்தபடி தங்கள் குஞ்சுகள் வெளிவரும் நாளை ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருந்தன.

ஒரு நாள் பெரும் காற்று வீசியது. பெரிய அலைகள் பொங்கி எழுந்தன. கிளையில் இருந்த கூடு நழுவி காற்றின் வேகத்தில் கடலில் விழுந்து மூழ்கியது. குருவிகள் மனம் பதறிக் கதறின. கடல் நீரில் விழுந்து கூடு மூழ்கிய இடத்திற்கு மேலாக கீச், கீச் என்று கத்தியபடியே சுற்றிச் சுற்றி வந்தன.

பெண் குருவி மனம் உடைந்து சொல்லியது. எப்படியாவது முட்டைகளை மீண்டும் நான் காண வேண்டும். இல்லையேல் நான் உயிர் வாழ மாட்டேன் என்றது .

ஆண் குருவி சொன்னது. அவசரப்படாதே ஒரு வழி இருக்கிறது. நமது கூடு கரையின் ஓரமாகத் தான் விழுந்துள்ளது. கூட்டுடன் சேர்ந்து முட்டைகள் விழுந்ததால் நிச்சயம் உடைந்திருக்காது. அதனால் இந்த கடலிலுள்ள தண்ணீரை வற்றவைத்து விட்டால் போதும். முட்டைகளை நாம் மீட்டுவிடலாம்.என்று பெண் குருவிக்கு தன்னம்பிக்கை ஊட்டியது .

கடலை எப்படி வற்றவைப்பது?

முட்டைகள் பொரிந்து குஞ்சுகள் வெளிவர இன்னும் பல நாட்கள் ஆகலாம். எனவே நாம் இடைவிடாமல் சில நாட்கள் முயல வேண்டும். நம் வாயில் கொள்ளும் மட்டும் தண்ணீரை எடுத்துக் கொண்டு பறந்து சென்று தொலைவில் கொட்டுவோம். மறுபடியும் திரும்பி வந்து மீண்டும் நீரை நிரப்பிக் கொண்டு போய் தொலைவில் உமிழ்வோம். இப்படியே இடைவிடாமல் செய்து கடல் நீரை வேறு இடத்தில் ஊற்றினால் கடல் நீர் மட்டம் குறைந்து தரை தெரியும். நமது முட்டைகள் வெளிப்படும்.

இதையடுத்து இரண்டு குருவிகளும் தன்னம்பிக்கையுடன் ஊக்கத்துடன் செயலில் இறங்கின. விர்ரென்று பறந்து போய் தங்களது சிறிய அலகில் இரண்டு விழுங்கு நீரை நிரப்பிக் கொண்டன. பறந்து சென்று தொலைவில் போய் உமிழ்ந்தன. மீண்டும் பறந்து வந்து இரண்டு வாய் தண்ணீரை அள்ளின. கொண்டுபோய் தொலைவில் கக்கின.

இப்படியே இரவு பகல் நாள் முழுவதும் இடைவிடாமல் நடந்து கொண்டிருந்தது, இவற்றின் நீர் அகற்றும் படலம்.

அப்போது அந்தக் கடற்கரை ஓரமாக முனிவர் ஒருவர் நடந்து வந்து கொண்டிருந்தார். மகா சக்திகள் நிறைந்த மகான் அவர். ஆளில்லாத அந்தப் பகுதியில் கீச் கீச் என்ற சப்தம் கேட்கவும் அவர் திரும்பிப் பார்த்தார். இரண்டு குருவிகள் பறந்து போவது கண்டு சிரித்தபடி மேலே நடந்தார்.

மீண்டும் கீச் கீச் என்ற சப்தம். குருவிகள் கடலுக்கு மேல் பறந்தன. எதையோ அள்ளின. மீண்டும் பறந்தன. இப்படி பலமுறை நடைபெறவும், முனிவருக்கு வியப்பு. கடலில் இருக்கும் எதைக் கொத்துகின்றன இவை? அங்கு இரை ஏதும் இல்லையே என்று நினைத்தார் அவர்.

உடனே அந்த மகான் கண்களை மூடினார். உள்ளுக்குள் அமிழ்ந்தார். மறுகணம் அவர் மனதில் எல்லா நிகழ்ச்சிகளும் படம்போல் ஓடின. அவர் மனம் உருகியது. முட்டைகளை இழந்த தாயின் தவிப்பும் கடலையே வற்ற வைத்தாவது முட்டைகளை மீட்க வேண்டும் என்ற அதன் துடிப்பும் அவரது உள்ளத்தை நெகிழச் செய்தன.

உடனே தனது தவ பலத்தை ஒன்று திரட்டிய முனிவர் கையை உயர்த்தினார். மறுகணம் கடல் சில அடிகள் பின் வாங்கியது. அங்கே கூட்டுடன் இருந்த முட்டைகள் தென்பட்டன. குருவிகள் அதைப் பார்த்து குதூகலத்துடன் கீச்சிட்டன. ஆளுக்கொன்றாக முட்டைகளை பற்றிக் கொண்டு போய் வேறிடத்தில் சேர்த்தன.

நான் அப்போதே சொன்னேன் பார்த்தாயா? நமது ஒரு நாள் உழைப்பில் கடல் நீரை குறைத்து முட்டைகளை மீட்டு விட்டோம் பார்த்தாயா? என்றது ஆண் குருவி பெருமிதமாக.

முனிவர் சிரித்தபடி தொடர்ந்து நடந்தார். இங்கே குருவிகள் முட்டைகளை மீட்டது அவற்றின் உழைப்பாலா? இல்லை. முனிவரின் அருளால். ஆனால் அந்தக் குருவிகளுக்கு முனிவர் என்ற ஒருவரைப் பற்றியோ தவ வலிமை என்றால் என்ன என்பது பற்றியோ, எதுவுமே தெரியாது.ஆனால் தன்னம்பிக்கையுடன் கடல் நீரை அள்ளின .

அதே சமயம் குருவிகள் மட்டுமே கடல் நீரை மொண்டு சென்று ஊற்றிக் கொண்டிருக்காவிட்டால் முனிவர் தம் வழியே போயிருப்பார்.
அவரை மனம் நெகிழ வைத்தது எது? அவற்றின் உழைப்பும் முயற்சியும்தான். ஆக இங்கே முட்டைகள் மீட்கப்பட்டது, குருவிகளாலும் தான். முனிவராலும் தான். முனிவரின் ஆற்றல் அவற்றுக்குப் பக்க பலமாக வந்து சேர்ந்தது. குருவிகளின் உழைப்புத்தான் அதற்கு அடிப்படையாக அமைந்தது.

போதிமரம்



Sunday, 15 September 2019

செத்த கடலுக்கு எப்போ சங்கு! DEAD SEA








செத்த கடலுக்கு எப்போ சங்கு! DEAD SEA


உலகின் வித்தியாசமான கடலான செத்த கடல், அதன் பெயருக்கேற்ப விரைவில், முற்றிலும் இறந்து போகலாம் என்று நிபுணர்கள் கவலை தெரிவிக்கின்றனர். உலகின், சுற்றுச்சூழல் பொக்கிஷங்களில் ஒன்றாக கருதப்படும் செத்தகடல், அதிகமாக உப்பு கரிக்கும் கடல்.
சற்று பெரிய, உப்பு ஏரியை போல காணப்படும் செத்த கடலுக்கு, இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீன நாடுகளின் வழியாக ஓடும் யோர்தான் ஆறு தான் நீராதாரமாக உள்ளது. ஆனால், மத்திய கிழக்கு நாடுகள், தங்கள் குடிநீர்த் தேவைக்காக, இதன் நீர்வரத்தை தடுப்பது அதிகரி்தது வருவதால், இக்கடல் விரைவில் மரணித்துப் போகும் என்று அஞ்சப்படுகிறது.


கனிம வள அடர்த்தி மிக்க இந்த கடல்நீர் மட்டம், ஆண்டுக்கு ஒரு மீட்டருக்கு மேல் குறைந்து கொண்டிருக்கிறது. நீர் வடிய வடிய, ஆழமான புதை பள்ளங்கள் உருவாகின்றன. பூமிக்குள், உள்ள உப்புப்பாறைகள் திடீரென நொறுங்குவது தான் இதற்கு காரணம். இவை, இப்பகுதிக்கு நிலவின் மேற்புறத்தை போன்ற அழகை தருகின்றன.

கடந்த ஆண்டு, கடலோர தங்கும் விடுதி ஒன்றின் கட்டடங்கள் இப்படிப்பட்ட புதை பள்ளத்தில் புதைத்துபோயின. தற்போது அந்த விடுதி மூடப்பட்டுவிட்டது. இது மிக மெதுவாக நடக்கும் நிலநடுக்கத்தின் பாதிப்பு போல உள்ளது. வற்றாத ஜீவநதியான யோர்தான், ஒருகாலத்தில் இந்த செத்த கடலின் நீர் ஆதாரமாக இருந்தது.
ஆனால், இஸ்ரேல், ஜோர்டான், சிரியா போன்ற நாடுகள், விவசாயத்துக்கும், குடிநீருக்கும் சார்ந்திருக்க துவங்கியதால், யோர்தான் ஆறே படிப்படியாக மடிந்துகொண்டிருக்கிறது.
செங்கடல் நீரை பாலைவனத்தின் வழியாக, இந்தசெத்த கடலுக்கு கொண்டு வருவதன் மூலம், இதை காப்பதற்கு ஒரு திட்டம் தீட்டப்படிருக்கிறது. மிகுந்தசெலவு பிடிக்கும் அத்திட்டத்தை விரைந்து நிறைவேற்றாவிட்டால் செத்த கடலை நிஜமாகவே காப்பாற்ற முடியாமல் போகலாம் என்று சுற்றுச்சூழல் நிபுணர்கள் எச்சரிக்கை விடுக்கின்றனர்.

செத்தகடலைக் சுற்றியுள்ள நாடுகள்தான் அதன் உயிரை காப்பாற்ற வேண்டும்.







The Dead Sea (Hebrew: יָם הַמֶּלַח About this soundYam ha-Melah lit. Sea of Salt; Arabic: البحر الميت‎ About this soundAl-Bahr al-Mayyit[5]) is a salt lake bordered by Jordan to the east and Israel and the West Bank to the west. It lies in the Jordan Rift Valley, and its main tributary is the Jordan River.

Its surface and shores are 430.5 metres (1,412 ft) below sea level,[4][6] Earth's lowest elevation on land. It is 304 m (997 ft) deep, the deepest hypersaline lake in the world. With a salinity of 342 g/kg, or 34.2% (in 2011), it is one of the world's saltiest bodies of water[7] – 9.6 times as salty as the ocean – and has a density of 1.24 kg/litre, which makes swimming similar to floating.[8][9] This salinity makes for a harsh environment in which plants and animals cannot flourish, hence its name. The Dead Sea's main, northern basin is 50 kilometres (31 mi) long and 15 kilometres (9 mi) wide at its widest point.[1]

The Dead Sea has attracted visitors from around the Mediterranean Basin for thousands of years. It was one of the world's first health resorts (for Herod the Great), and it has been the supplier of a wide variety of products, from asphalt for Egyptian mummification to potash for fertilisers.


The Dead Sea is receding at a swift rate; its surface area today is 605 km2 (234 sq mi), having been 1,050 km2 (410 sq mi) in 1930. The recession of the Dead Sea has begun causing problems, and multiple canals and pipelines proposals exist to reduce its recession. One of these proposals is the Red Sea–Dead Sea Water Conveyance project, carried out by Jordan, which will provide water to neighbouring countries, while the brine will be carried to the Dead Sea to help stabilise its water level. The first phase of the project is scheduled to begin in 2018 and be completed in 2021.[10]

Sunday, 29 April 2018

ARCHIPELAGO CINEMA , SEA CINEMA THEATRE IN THAILAND





ARCHIPELAGO CINEMA , 
SEA CINEMA THEATRE IN THAILAND





Archipelago Cinema, an auditorium raft designed to float on the sea, premiered at the inaugural edition of the Film on the Rocks Yao Noi Festival, curated by Apichatpong Weerasethakul and Tilda Swinton. The Festival, which took place from 9th-12th March 2012, is set to become an annual meeting place for art and film.

The final night of the first edition of Film on the Rocks Yao Noi took place on Archipelago Cinema, designed by German-born and Beijing-based architect Ole Scheeren. Guests were taken by boat through the darkness of the sea to arrive on a glowing raft in the middle of the quiet waters of Nai Pi Lae lagoon on Kudu Island. Surrounded by a dramatic landscape of towering rocks emerging from the ocean, the audience experienced an atmospheric convergence of nature and cinematic narratives – primordial notions of light, sound and stories suspended in the darkness between sea and sky.


The thought of watching films here seemed surprising“ said Ole Scheeren. „A screen, nestled somewhere between the rocks. And the audience… floating… hovering above the sea, somewhere in the middle of this incredible space of the lagoon, focused on the moving images across the water: A sense of temporality, randomness, almost like driftwood. Or maybe something more architectural: Modular pieces, loosely assembled, like a group of little islands that congregate to form an auditorium.

A work with a strong connection to the local community, Archipelago Cinema is based on the techniques used by fishermen to construct floating lobster farms. The raft is built out of recycled materials as a series of individual modules to allow for flexibility for its future use. Subsequent to a journey which will see the raft travel to further places as an auditorium for other film screenings on water, it will eventually return to the island and be donated to its actual builders, the community of Yao Noi, as its own playground and stage in the ocean.


Archipelago Cinema is a collaboration between Studio Ole Scheeren and the Film on the Rocks Yao Noi Foundation, founded by Nat Sarasas, Chomwan Weeraworawit and Apichatpong Weerasethakul. It is the first project of Studio Ole Scheeren since he established his architecture practice, Buro Ole Scheeren, in Beijing and Hong Kong in 2010. With Archipelago Cinema, Ole Scheeren further explores his continued interest in non-architectural projects and interventions, and in creating alternative scenarios and realities by combining an ability to comprehend diverse yet specific contexts with the power of imagination and fantasy. Previous projects by Ole Scheeren which transcend the boundaries of architectural production include, among others, the Marfa Drive-In (a drive-in cinema in the desert of Texas), and the exhibition Cities on the Move, which Ole Scheeren co-curated and scenographed in Bangkok in 1999.

Friday, 20 October 2017

MANIMEGALAI ,GOD OF THE SEA


MANIMEGALAI ,GOD OF THE SEA

கடற்காவல் தெய்வம் மணிமேகலை





1. கடற்காவல் தெய்வம் மணிமேகலை

பௌத்தமதத்தின் உயர்ந்த தெய்வம் புத்தர் பெருமான். புத்தர் பரிநிர்வாணம் அடைந்தபிறகு அவருடைய உடம்பைக் கொளுத்தி அதில் எஞ்சிய எலும்பு சாம்பல் ஆகிய இவற்றை எட்டுப் பங்காகப் பங்கிட்டு ஒவ்வொரு பங்கையும் ஒவ்வோர் ஊரில் கொண்டுபோய்ப் புதைத்து அதன்மேல் சேதியங்களைக் கட்டினார்கள். புத்தருடைய தலைமயிர், நகம், பல் முதலிய தாதுக்களையும் சேமித்து அவற்றின்மேல் சேதியங்களைக் கட்டினார்கள். இவற்றிற்குச் சாரீரிக சைத்தியம் என்பது பெயர். சேதியம் எனினும் சைத்தியம் எனினும் ஒன்றே.
புத்தர் பெருமான் உபயோகித்துவந்த கைத்தடி, ஆடை, பாத்திரம், மிதியடி முதலிய பொருள்களையும் சேமித்து வைத்து, அவரின் நினைவுக்குறியாக அவற்றை வணங்கினார்கள். இவற்றிற்குப் பாரிபோக சைத்தியம் என்பது பெயர். புத்தகயாவில் புத்தர் போதிஞானம் பெற்ற அரசமரம் இன்றும் வணங்கப்படுகிறது. இந்த அரசமரமும் பாரிபோக சைத்தியமாகும்.
பகவன் புத்தர் காலமான பிறகு சில நூற்றாண்டு வரையில் அவருக்கு உருவம் அமைக்கப்படவில்லை. ஆனால், தரும பீடிகை, பாதபீடிகை ஆகிய உருவங்கள் மட்டும் பௌத்தர்களால் வணங்கப்பட்டன. தருமபீடிகை என்பது சக்கரம் போன்ற உருவமாக அமைக்கப்பட்டது. பாதபீடிகை என்பது புத்தரின் பாதங்கள் போன்று உருவம் அமைத்து வணங்கப்பட்டது.
சில நூற்றாண்டுகளுக்குப் பிறகு புத்தரின் உருவங்கள் கல், கதை, செம்பு முதலிய பொருள்களால் அமைக்கப்பட்டு வணங்கப்பட்டன. இவ்வுருவங்களுக்கு உத்தேசிக சைத்தியம் என்பது பெயர்.
பௌத்தர்கள் புத்தரின் உருவங்களை வணங்கி வந்ததோடு, வேறுசில சிறு தெய்வங்களையும் வணங்கி வந்தார்கள். அந்தத் தெய்வங்களைப்பற்றி கூறுவோம்.
சிலப்பதிகாரக் கதைத்தலைவனாகிய கோவலன் என்னும் வணிகன் மகளுக்கு மணிமேகலை என்பது பெயர். இந்த மணிமேகலையைப் பற்றித் 'தமிழ்நாட்டுப் பௌத்தப் பெரியார்' என்னும் அதிகாரத்தில் கூறியிருக்கின்றோம்.
இந்த மணிமேகலையைக் கதைத் தலைவியாகக் கொண்டு, அவளது வரலாற்றினைக் கூறும் சீத்தலைச் சாத்தனாரியற்றிய காப்பியத்துக்கும் 'மணிமேகலை' என்பது பெயர். இந்த நூலினைப் பற்றித் ' தமிழ்ப் பௌத்த நூல்கள்' என்னும் அதிகாரத்தில் கூறியிருக்கின்றோம்.
இங்கு 'மணிமேகலை' என்னும் கடல் தெய்வத்தைப் பற்றி ஆராய்வோம். இந்தத் தெய்வம் 'சமுத்திர மணிமேகலை' என்றும் கூறப்படும். 'முது மணிமேகலை' என்றும் கூறுவர். இது பௌத்தர்களுக்குரிய சிறு தெய்வங்களில் ஒன்று. இதன் வரலாறு வருமாறு:
பௌத்தர்களுக்குரிய ஆறு தெய்வலோகங்களுள் 'மகாராஜிக லோகம்' என்பது ஒன்று. இந்த உலகத்தின் குணதிசையைத் 'திருதராட்டிரர்' என்பவரும், குடதிசையை 'விருபாக்ஷர்' என்பவரும், வடதிசையைத் 'வைசிரவணர்' என்பவரும் ஆட்சி செய்து வருகின்றார்கள். இவர்களுக்குச் 'சாதுர் மகராஜிகர்' என்பது பெயர். துடிதலோகத்தில் வீற்றிருக்கும் போதிசத்துவர் மாயாதேவியின் திருவயிற்றில் கருத்தரித்து மண்ணுலகிற் பிறந்து வாழ்ந்து இறுதியில் பரிநிர்வாணம் அடைகின்றவரையில், அவருக்கு யாதோர் இடையூறும் நேரிடாவண்ணம் காப்பதாக மேற்சொன்ன நான்கு தெய்வ அரசர்களும் பொறுப்பேற்றுக் கொண்டார்கள். அன்றியும், பௌத்த தர்மத்தைப் பின்பற்றி யொழுகும் நல்லோர்க்கும், பெற்றோர், ஆசிரியர் முதலியவரை வழிபட்டொழுகும் சீரியோர்க்கும் யாதேனும் இடையூறு நேரிடுமாயின், அவற்றினின்று அன்னவரைக் காப்பாற்றவும் இவர்கள் பொறுப்பேற்றுக் கொண்டார்கள். இவ்வாறு கடமை ஏற்றுக்கொண்ட இவர்கள் மண்ணுலகில் ஆங்காங்க்கே சிறு தெய்வங்களை இருக்கச் செய்து, நல்லோருக்கு நேரிடும் துன்பத்தைத் தீர்க்கும்படி அச் சிறு தெய்வங்களுக்குக் கட்டளையிட்டார்கள். இவ்வாறு இருத்தப்பட்ட தெய்வங்களில் மணிமேகலையும் ஒன்று. கடலில் கப்பல் யாத்திரை செய்யும் நல்லோருக்கு இடுக்கண் நேரிடுமாயின், அன்னவரின் துயர்தீர்த்து உதவிசெய்வது மணிமேகலைத் தெய்வத்தின் பொறுப்புவாய்ந்த கடமையாகும்.
இவ்வாறு பொறுப்பேற்றுக்கொண்ட மணிமேகலை, தனது கடமையைச் செய்துவருவதாகப் பௌத்தர்கள் கருதுகின்றார்கள். நடுக்கடலில் கப்பல் உடைந்து நீரில் மூழ்கி இறக்குந் தறுவாயிலிருந்த நல்லோரை இந்தத் தெய்வம் காப்பாற்றிய செய்திகள் பௌத்த நூல்களில் கூறப்பட்டுள்ளன. மிகப் பழைமையானதென்று கருதப்படுகின்ற புத்தஜாதகக் கதைகளில் இரண்டு இடங்களில் இத்தெய்வத்தைப் பற்றிய வரலாறு கூறப்படுகின்றது. அவற்றின் சுருக்கமான வரலாற்றினைக் கீழே தருகின்றோம்.
சங்கஜாதகம்: 'மோலினி' என்னும் பெயருடைய காசிமா நகரத்தில் சங்கன் என்னும் அந்தணன் செல்வத்திற் சிறந்தவன். இவன் காசிநகரத்தின் நான்கு கோட்டை வாயிலிலும், நகரத்தின் நடுவிலும் தனது இல்லத்திலும் ஆக ஆறு அறச்சாலைகள் அமைத்து நாள்தோறும் அறவினையை முட்டின்றிச் செய்துவந்தான். ஒருநாள் இவன் 'குன்றத்தனை செல்வமும் ஒரு காலத்தில் குன்றும். அக்காலத்து அறம் செய்யப் பொருள் முட்டுப்படுவதற்கு முன்னரே யான் மேன்மேலும் பொருள் ஈட்டுவேன்' என்று சிந்தித்துத் தேர்ந்து மனைவியை அழைத்து அவளுக்குத் தன் கருத்தைத் தெரிவித்து, 'யான் திரும்பிவருமளவும் நான் செய்துவரும் இவ்வறச்சாலைகளைச் செவ்வனே நடத்திக் கொண்டிரு' என்று கட்டளையிட்டு, சொர்ணபூமி என்னும் பர்மா தேசத்திற்குச் செல்லப் புறப்பட்டான். ஏவலாளர் தன் பின்னர் வர, இவன் காலில் செருப்பணிந்து, குடைபிடித்துச் செல்லும்போது, நண்பகல் ஆயிற்று. அப்போது கந்தமாதன மலையில் வீற்றிருந்த பாச்சகபுத்தர் என்னும் போதிசத்வர் இந்தச் சங்கன் என்னும் அந்தணன் போவதையறிந்து, ஒரு மனிதனாக உருக்கொண்டு, அனல்வீசும் மணல்வழியே செருப்பும் குடையுமின்றி இவன் எதிரில் தோன்றினார். ஓர் ஆள் வெயிலில் வாட்டமுற்று வருந்தி வருவதைக் கண்ட சங்கன்,அந்த வழிப்போக்கனை அருகில் அழைத்து, ஒரு மரநிழலில் அமரச்செய்து, காலை நீர்கொண்டு கழுவி, தான் அணிந்திருந்த செருப்பைத் துடைத்து எண்ணெயிட்டு அவருக்குக் கொடுத்ததுமின்றி, தன் குடையினையும் கொடுத்துதவினான். இவற்றைப் பெற்றுக்கொண்ட அந்த ஆள் தமது உண்மை உருவத்தோடு வானத்தில் பறந்து தம் இருப்பிடம் சேர்ந்தார்.

பிறகு சங்கன் துறைமுகம் அடைந்து, கப்பலேறிக் கடல்யாத்திரை புறப்பட்டான். கப்பல் கடலில் ஏழு நாள்கள் சென்றன. ஏழுநாள்களுக்குப் பின்னர், புயலடித்துக் கப்பல் பாறைமேல் மோதி உடைந்துவிட, பிரயாணிகள் மூழ்கி இறந்தனர். சங்கனும் அவன் வேலையாள் ஒருவனும் உயிருடன் கடலைக் கையினால் நீந்திக் கொண்டிருந்தனர். ஏழுநாள் வரையில் இவர்கள் நீந்திக் கொண்டிருந்தனர். அப்போது கடற்தெய்வமாகிய மணிமேகலை அங்குவந்து சங்கன் கண்களுக்கு மட்டும் தோன்றி, தங்கத்தட்டில் அமிர்தம் போன்ற அறுசுவை உணவை அவனுக்குக் கொடுத்தது. அதனைச் சங்கன் மறுத்து 'இன்று உபவாசநாள்; ஆகையால், இன்று நான் உணவு உட்கொள்ளேன்.' என்றான். சங்கன் தனக்குள் ஏதோ உளறுகிறான் என்று அவனுடன் நீந்திக் கொண்டிருந்த வேலையாள் கருதி, 'ஐயா, என்ன பிதற்றுகின்றீர்?' என்றான். சங்கன், 'நான் பிதற்றவில்லை; என் கண்முன் நிற்கும் பெண்முன் பேசுகிறேன்' என்றான். ஏவலாளன், 'அங்ஙனமாயின் அவள் மண்ணுலக மங்கையா, தெய்வலோகத் தெய்வமா என்பதைக் கேளும் அன்றியும் இப்போது இந்தத் துன்பத்தினின்றும் காப்பாற்ற உதவி செய்ய முடியுமா என்றும் கேளும்' என்றான். சங்கன் மணிமேகலையை இக்கேள்விகளைக் கேட்க, அவள், 'நான் இக்கடலில் வாழ்கின்ற தெய்வம். நீ செய்த நற்செயலுக்காக உன்னைக் காப்பாற்ற வேண்டுவது எனது கடமையாதலால் நான் இவ்விடம் வந்தேன். நீ இப்பொது எங்குச் செல்ல விரும்புகின்றாய்?' என்று கேட்க, அவன் 'எனது காசிமாநகரம் செல்லவேண்டும்' என்று சொன்னான். உடனே மணிமேகலை தனது தெய்வ ஆற்றலினால் பெரிய கப்பல் ஒன்றினைச் செய்தது. அது நிறைய விலையுயர்ந்த பண்டங்களை அமைத்துச் சங்கனையும் அவனது ஏவலாளையும் அதில் ஏற்றி, தானே கப்பலைச் செலுத்திக் காசிமாநகரம் கொண்டு போய்விட்டது.
'மகாஜனக ஜாதகம்' என்னும் கதையிலும் இந்தத் தெய்வம் உதவி செய்த வரலாறு கூறப்பட்டிருக்கின்றது. அதன் சுருக்கம் பின்வருவது:
மிதிலை தேசத்து அரசன் ஜனகன் என்பவனுக்கு அரிட்டஜனகன், பொலஜனகன் என்னும் இரண்டு பிள்ளைகள் இருந்தார்கள். தகப்பன் இறந்த பின்னர், மூத்தவனான அரிட்டஜனகன் அரசனானான். இப்போது இளையவனான பொலஜனகன் தமையன் மேல் பகைகொண்டு, படை திரட்டி வந்து சண்டை செய்தான். சண்டையில் அரிட்டஜனகன் இறக்க, அவன் தம்பி அரசனானான். இறந்த அரிட்டஜனகனின் மனைவி, அப்போது வயிறு வாய்த்திருந்தவள், பெருஞ் செல்வத்தை எடுத்துக்கொண்டு, ஒருவருமறியாமல் சண்பை நகரம் சென்று, அங்கு ஓர் ஆண்மகவைப் பெற்றாள். அக்குழந்தைக்கு மகாஜனகன் என்று பெயர் இடப்பட்டது. குழந்தையாகிய மகாஜனகன் பெரியவனாக வளர்ந்தபிறகு, தன் சிற்றப்பன் தனது நாட்டைக் கவர்ந்து ஆள்கிறான் என்பதறிந்து, தன் நாட்டை மீட்கக் கருதி, அதன் பொருட்டுச் செல்வம் தேட உறுதி கொண்டான். இக்கருத்தைத் தன் தாய்க்குத் தெரிவித்து, அவள் உத்தரவு பெற்றுக் கப்பல் ஏறிச் சுவர்ண பூமிக்குப் புறப்பட்டான். இடைவழியில் நடுக்கடலில் புயலடித்துக் கப்பல் உடைந்துவிட, மற்றவர் மூழ்கி இறந்தனர்

. மகாஜனகன் முயற்சியை விடாமல் கையினால் கடலை நீந்திக் கொண்டிருந்தான். ஏழாம் நாள், மணிமேகலை அவன் முன்தோன்றி 'இப்பெரிய கடலைக் கையினால் நீந்திக் கடக்க முடியுமா?' என்று கேட்க, 'கரை சேர்வது கூடுமா கூடாதா என்பது பற்றி கவலையில்லை; ஆனால் முயற்சி செய்ய வேண்டுவது என் கடமையல்லவா?' என்று விடையிறுத்தான். இவனது ஊக்கத்தை மெச்சிய மணிமேகலை, இவன் செய்துள்ள நற்கருமங்களுக்காக இவனது இடுக்கணைத் தீர்க்கக் கருதி, தான் யார் என்பதை அவனுக்குத் தெரிவித்து, அவன் போக நினைத்த இடம் யாது எனக் கேட்டது. மகாஜனகன் தான் மிதிலை நகரஞ் செல்ல விரும்புவதாகச் சொல்ல, மணிமேகலை, தாய் குழந்தையைத் தூக்குவது போல, அவனை இரு கையாலும் தூக்கிக் கொண்டு வானத்தில் எழுந்து பறந்து சென்று, மிதிலை நகரத்து மாஞ்சோலையில் விட்டுவிட்டுச் சென்றது.
இதற்குள் மிதிலை நகரத்தை ஆண்ட பொலஜனகன் இறந்துவிட, அவனின் ஒரே மகளாகிய 'சீவாலி தேவி' என்பவளை மகாஜனகன் மணந்துகொண்டு அரசனானான். அவளை மணப்பதற்குமுன், ஆயிரம் வீரராலும் வளைக்க முடியாத வில்லை வளைத்தல் முதலியவற்றைச் செய்தான். பிறகு இவன் தன் பிள்ளைக்கு முடிசூட்டிவிட்டுக் காட்டிற்குத் தவம் செய்யச் சென்றான்.
பௌத்தக் கதைகள் அடங்கிய இரசவாகிளி என்னும் நூலிலும் 'பலக கண்டதின்னஸ்ஸ வத்து' என்னும் துண்டுப் பலகை கொடுத்தவன் கதையில், மணிமேகலை கடலில் ஒருவனைக் காப்பாற்றிய செய்தி சொல்லப்பட்டிருக்கின்றது. அதன் சுருக்கம் இது:
வறட்சிமிக்க வேனிற் காலத்தில், தென்னாட்டினின்றும் வடநாட்டிற்கு யாத்திரை சென்ற ஒருவன், நீர் வேட்கை கொண்டு எங்கும் நீர் கிடைக்காமல் வருந்தி, ஒரு மரநிழலில் அமர்ந்து, தன்னிடமிருந்த இரண்டு வெற்றிலைகளையாவது மென்று சாற்றினை விழுங்கி, வேட்கை தீர்க்கலாம் என்று எண்ணினான். அவ்வமயம் அவனைப் போலவே வடநாட்டினின்று தென்னாட்டிற்கு யாத்திரை வரும் ஒருவன், நீர் வேட்கை மிக்கவனாய், பருக நீர் கிடைக்காமல் வருந்தி, அதே மரத்தடியில் வந்து அமர்ந்தான். வந்தவன் முன்னவனைப்பார்த்து, 'ஐயா, எனது நீர் வேட்கை தீர ஒரு வெற்றிலையாவது கொடும்,' என்று இரந்து வேண்டினான். அதற்கு அவன், 'எனக்கும் நீர் வேட்கை மிகுதியாயிருக்கின்றது. என்னிடமுள்ளது இரண்டு வெற்றிலைகளே; ஒன்றை உமக்குக் கொடுத்துவிட்டு யான் என்ன செய்வது?' என்று சொல்லி மறுத்தான். பின்னவன், 'என்னிடம் காசு இருக்கிறது; தருகிறேன்; ஒரு வெற்றிலை தாரும்' என்று கேட்க, அதற்கும் அவன் மறுத்தான். பின்னர், பெருந்தொகை கொடுப்பதாகச் சொன்னபோது, அவன் அப்பெருந்தொகையைப் பெற்றுக்கொண்டு ஒரு வெற்றிலையைக் கொடுத்தான். இருவரும் ஒவ்வொரு வெற்றிலையை மென்று ஒருவாறு நீர்வேட்கையைத் தீர்த்துக் கொண்டனர்.
பின்னர், இருவரும் புறப்பட்டு வெவ்வேறு வழியே சென்று, கடைசியாக ஒரு துறைமுகத்தை அடைந்து, மரக்கலம் ஏறிக் கப்பல் யாத்திரை புறப்பட்டனர். ஆனால், அக்கப்பலில் இருவரும் ஒருங்கே யாத்திரை செய்வது அவர்களுக்குத் தெரியாது. சில நாள் சென்றபின், நடுக்கடலில் புயல் அடிக்க, மரக்கலம் உடைந்துவிட்டது. கப்பல் யாத்திரிகரில் சிலர் மூழ்கி இறந்தனர். சிலர் தம் உயிரைக் காக்கக் கடலில் நீந்திக் கொண்டிருந்தனர். அவ்வாறு நீந்தியவர்களில் வெற்றிலையைப் பெரும் பொருள் கொடுத்து வாங்கியவன் ஒரு மரப்பலகையைப் பற்றிக்கொண்டு அதன் உதவியினால் நீந்திக் கொண்டிருந்தான். வெற்றிலையை விற்றவனோ யாதொரு பற்றுக்கோடுமின்றி அப்பெருங்கடலினைத் தன் வெறுங்கைகளால் நீந்தித் தவித்துக் கொண்டிருந்தான். அப்போது பலகையுள்ளவன் அவனைக் கண்டு, பெருந்தொகை பெற்றுக்கொண்ட போதிலும், தக்க நேரத்தில் ஒரு வெற்றிலையையாவது கொடுத்து உதவி செய்த அவனது நன்றியை நினைவுகூர்ந்து, தன்னிடமிருந்த ஒரே மரப்பலகையை அவனுக்குக் கொடுத்துவிட்டுத் தான் வெறுங்கைகளால் நீந்தத் தொடங்கினான்.
அப்போது மணிமேகலை இவனது இரக்கமுள்ள மனப்பான்மையினையும் தன்னலமற்ற உதவியையுங் கண்டு மெச்சி, இத்தகைய நன்மகனைக் காப்பாற்ற வேண்டுவது தனது நீங்காக்கடமை எனக்கண்டு, அவன் மீது அருள் கூர்ந்து, அவன் கண்களுக்குத் தோன்றாமலே அவனை ஒரு கரையிற் கொண்டு போய்விட்டது. பின்னர், நெடுநேரஞ் சென்று, தனக்குக் கிடைத்த மரப்பலகையின் உதவியினால் மற்றவன் கடலை நீந்தி அதே கரையையடைந்தான். அடைந்தவன், தனக்கு முன்பே தன் நண்பன் வந்திருப்பதைக் கண்டு வியப்புற்று, 'ஐயா, வெறுங்கையினால் இப்பெருங்கடலை நீந்தி எனக்கு முன்னரே எவ்வாறு வந்தீர்? பலகையுள்ள எனக்குக் கரைசேர இவ்வளவு நேரம் சென்றதே! கையினால் கடலை நீந்தியதோடு, களைப்பின்றியும் காணப்படுகின்றீரே!' என்று வினவினான். அதற்கு மற்றவன், 'நான் இங்கு வந்த விதம் எனக்குத் தெரியாது,' என்று சொன்னான். அப்போது, அதுவரையில் அவர் கண்களுக்குப் புலப்படாதிருந்த மணிமேகலா தெய்வம் அவர் கண்முன்னர்த் தோன்றி, 'நானே உன்னை இங்குக் கொண்டு வந்தேன். பெற்றோரைப் பேணி ஒழுகுகின்றவர்களையும், புத்த தர்ம சங்கம் என்னும் மும்மணிகளைச் சரணடைந்து ஒழுகுகின்றவர்களையும், பஞ்சசீலம், அஷ்டாங்க சீலம், பிரதிமோக்ஷ சம்வரசீலம் என்னும் சீலங்களை மேற்கொண்டு ஒழுகுகின்றவர்களையும், மெய் மொழி மனங்களால் பிறருக்கு நன்மை செய்கின்றவர்களையும், செய்ந்நன்றி அறிந்து உதவி செய்கின்றவர்களையும் துன்பத்திலிருந்து தேவர்கள் காப்பாற்றுவார்கள்' என்று சொல்லிற்று.

இதைக் கேட்டுக்கொண்டிருந்த அவர்களில் பலகை கொடுத்துதவியவன், 'தாங்கள் சொல்லிய தர்மங்களில் ஒன்றையேனும் நான் செய்தவனல்லவே! அப்படியிருக்க, என்னைக் கடலினின்றுங் காப்பாற்றிய வகை என்ன?' என்று வியப்புடன் வினாவினான். அதற்கு அத்தெய்வம், 'உனக்கு ஒரு வெற்றிலை கொடுத்து உதவிய நன்றியை நினைத்து, நடுக்கடலில் உன் உயிரையும் பாராமல் மற்றவனுக்கு உன் பலகையைக் கொடுத்து உதவினாய். இந்த நன்றியறிதல் என்னும் உனது நற்குணத்துக்காக உன்னை நான் காப்பாற்றினேன்' என்று சொல்லி, அக்கடற்றெய்வம் மறைந்து விட்டது.
கம்போடியா தேசத்திலும் சீயாம் தேசத்திலும் மணிமேகலையைப் பற்றிய கதைகள் வழங்குகின்றனவென்று திரு. 'சில்வன் லீவி' (Silvain Levi) என்னும் ஆசிரியர் எழுதியிருக்கின்றார். அதன் சுருக்கம் இதுவாகும்:
கம்போடியா தேசத்து இராமாயணத்தில் கீழ்கண்ட பகுதி காணப்படுகின்றது. தேவர்களும் தெய்வமகளிரும் ஓர் அரங்கத்தில் கூட நடனம் செய்கிற வழக்கப்படி, அரங்கத்தில் ஒருநாள் தேவர்கள் கூடியிருந்தார்கள். அக்கூட்டத்தில் கலந்துக்கொள்ள மணிமேகலா தெய்வம் தனது ஒளிவீசும் அணிகளை அணிந்து, கையில் மாணிக்கக் கல் ஒன்றனை எடுத்துக் கொண்டு சென்றது. செல்லும் வழியில் 'ராமசூரன்', அல்லது 'ராம பரசு' என்னும் பெயருள்ள அசுரன் அவள் கையில் உள்ள ஒளிவீசும் மாணிக்கக் கல்லைப் பிடுங்கிக்கொள்ள விரும்பி அவளைத் தொடர்ந்தான். அதனை அறிந்த மணிமேகலை மேகத்தில் மறைந்தொளிந்தாள். அசுரன் அங்கும் அவளைத் தொடர அவள் தன் கையிலிருந்த மாணிக்க நகையை அவன் கண்முன் காட்ட அதன் ஒளியினால் கண்கூசி, அவ்வரக்கன் திகைத்து நின்றான். அப்போது மணிமேகலை அவனிடமிருந்து தப்பி ஓடினாள். அவ்வமயம் தெய்வங்களின் அரங்கத்திற்குச் செல்லுவதற்காகப் போய்க்கொண்டிருந்த வீரமிக்க 'வர்ஜூன்' என்னும் தேவன், ராமபரசு என்னும் அசுரன் மணிமேகலையைத் துரத்துவது கண்டு, அவ்விடம் வர, அவனுக்கும் ராமசூரனுக்கும் பெரும் போர் நடந்து, கடைசியில் வர்ஜூன் என்பனை ராமசூரன் தன் பரசு என்னும் ஆயுத்திதினால் கொன்று வென்றான். இந்தக் கதை கம்போடியா தேசத்து அரண்மனையில் நாடகமாக நடிக்கப்பட்டு வருகின்றது.
சயாம் தேசத்து இராமாயணத்திலும் இதே கதை கூறப்பட்டிருக்கின்றது. கி.பி 1783 முதல் 1809 வரையில் அரசாண்ட சயாம் தேசத்து அரசன், 'முதலாவது ராமன்' என்பவன் காலத்தில், இந்த இராமாயணம் எழுதப்பட்டது. இதுவும் கம்போடியா தேசத்து இராமாயணம் போன்றதே. இதில் காணப்படும் சிறு மாறுபாடு என்னவென்றால், 'வர்ஜூன்' என்னும் தேவன் பெயர் 'அர்ஜூனன்' என்று காணப்படுவதுதான். கம்போடியா, சயாம் தேசத்துக் கதைகளும் மணிமேகலை சமுத்திரத்தில் வாழ்வதாகவும் அது கடற்தெய்வம் என்பதாகவும் கூறுகின்றன.

'ச-கேச-தாது வம்சம்' என்னும் (Cha-Kesa-Dhatuvamsa) பிற்காலத்துப் பாலிமொழிப் பௌத்த நூலில், புத்தர் தமது ஆறு சீடர்களுக்கு ஆறு உரோம தாது கொடுத்ததாகவும், அவர்கள் அவற்றைக் கொண்டு தென்னாட்டிற்கு வந்தபோது, கடலால் சூழப்பட்ட ஓர் அசோக வனத்துக்கு வந்ததாகவும், அப்போது அந்தத் தாதுவை வைக்கத் தூபி கட்டுவோரைக் காணாமல் அச்சீடர்கள் வருந்த, புத்தர் கட்டளையினால் மணிமேகலா தெய்வம் அவர்களுக்குத் தோன்றி, ஒரு தூபியைக் கட்டியதாகவும் காணலாம். (மணிமேகலை 'பாசாத' என்னும் பெயருள்ள பௌத்தப் பள்ளி ஒன்று இலங்கையில் இருந்த தென்பதும், அதனை 'இரண்டாவது சேனன்' என்னும் அரசன் பிற்காலத்தில் பழுதுபார்த்துப் புதுப்பித்தான் என்பதும் தெரிகின்றன. இந்தப் பள்ளி மணிமேகலை கட்டியதாகக் கூறபடும் தூபி அன்றென்பது உறுதி.)
இலங்கையில் சிங்களவர் வழங்கும் கதை சிலவற்றிலும் மணிமேகலையைப் பற்றிய குறிப்புகள் காணபடுகின்றன. அவற்றையெல்லாம் இங்கு எழுதவேண்டுவதில்லை. ஆனால், அக்கதைகள் ஒன்றில் தமிழருக்கு வியப்பைத் தருவன எவையென்றால், 'பாலங்கா' என்பவன் தன் மனைவி 'பத்தினி' என்பளுடன் மதுரைக்குச் செல்லும் வழியில் 'வைத' என்னும் ஆறு குறுக்கிட்டதால், பத்தினி தன் விரலில் அணிந்திருந்த ஆழியைக் கழற்றி ஆற்றில் எறிய, அந்த ஆற்றுநீர் விலகி இவர்களுக்கு வழிவிட்டது என்பதும், அக்கரையையடைந்த பின்னர், மணிமேகலா தெய்வம் வந்து ஆற்றில் எறியப்பட்ட மோதிரத்தை எடுத்து பத்தினியிடம் கொடுத்தது என்பதுவுமே. இங்கே பாலங்கா என்பவன் கோவலன்; பத்தினி என்பவள் கண்னகி: வைத என்பது வைகை ஆறு.
சிலப்பதிகாரம், மணிமேகலை என்னும் இரண்டு தமிழ்க் காவியங்களிலும் மணிமேகலா தெய்வத்தைப் பற்றிக் கூறப்பட்டுள்ளது. கடலில் கப்பலோட்டி வாணிகம் செய்த கோவலனுடைய குலதெய்வமாக இருந்தது மணிமேகலா தெய்வம் என்றும், கோவலனுடைய மூதாதையார் ஒருவர் வாணிகத்தின் பொருட்டுக் கடலில் கப்பலேறிச்சென்றபோது, நள்ளிருளில் கப்பல் கவிழ்ந்து துன்புற்றபோது, அத்தெய்வம் அவரைக் காப்பாற்றியதென்றும், அந்நன்றியை மறவாமல் கோவலன் தன் மகளுக்கு அத்தெய்வத்தின் பெயரையே சூட்டினான் என்றும் சிலப்பதிகாரம் கூறுகிறது; (சிலம்பு, அடைக்கலக் காதை 21-39) கோவலன் மகள் மணிமேகலைக்கு, உதயகுமரனால் நேர இருந்த இடையூறுகளை மணிமேகலா தெய்வம் நீக்கிய செய்தி மணிமேகலை நூலினால் அறியப்படும். காவிரிப்பூம்பட்டினத்தில் ஆண்டுதோறும் நடைபெற்று வந்த இந்திரவிழாவை, ஓர் ஆண்டு, சோழமன்னன் நடைபெறாமல் நிறுத்திய காரணத்திற்காக மணிமேகலா தெய்வம் கோபங்கொண்டு சபிக்க, அவ்வூர் வெள்ளத்தினால் அழிந்தது என்று நூலினால் அறியப்படுகிறது. இத்தெய்வத்தைக் கடல் காவலுக்காக இந்திரன் நிறுவினான் என்று சிலப்பதிகாரம் கூறுகிறது.
(மணிமேகலைத் தெய்வத்தின் படம் சயாம் தேசத்து அரசரின் அரண்மனையில் இருக்கிறது.)
2. தரைக்காவல் தெய்வம் சம்பாபதி
சாதுர் மாகராஜிக லோகம் என்னும் தெய்வலோகத்தில் உள்ள நான்கு தேவர்கள், நிலவுலகத்திலே நல்லவர்களுக்கு நேரிடுகிற துன்பங்கங்களைப் போக்கச் சில தெய்வங்களை நிறுவினார்கள் என்பது பௌத்தர்கள் நம்பிக்கை. அவ்வாறு நிறுவப்பட்ட தெய்வங்களுள் மணிமேகலை என்பது ஒன்றென்றும், இத்தெய்வம் கடலில் மரக்கலத்தில் செல்வோருக்கு ஏற்படும் துன்பங்களைப் போக்கி அவர்களைக் காப்பாற்றியது என்று மேலே விளக்கினோம். தரையில், நல்லவர்களுக்கு ஏற்படும் துன்பங்களைப் போக்க, அத்தேவர்கள் சம்பாபதி என்னும் தெய்வத்தை நிறுவினார்கள் என்று கருத வேண்டியிருக்கிறது. ஏனென்றால், சம்பாபதி என்னும் தெய்வத்தைக் கோதமை என்பவள் இவ்வாறு போற்றியதாக மணிமேகலை நூல் கூறுகிறது.

"துறையும் மன்றமும் தொல்வலி மரனும் 
உறையுளும் கோட்டமும் காப்பாய், காவாய்!"
(மணி 9-ஆம் காதை)
"நாவலோங்கிய மாபெருந் தீவினுள், காவல் தெய்வம்" என்று சம்பாபதி கூறப்படுகிறபடியினாலே, இத்தெய்வம் நாவலந் தீவு (இந்தியா தேசம்) முழுமைக்கும் காவல் தெய்வமாக அமைந்திருந்தது. இமயமலையினின்று இத்தெய்வம் தமிழ்நாட்டிற்கு வந்ததாகவும், நாவல் மரத்தின் கீழ்த் தங்கி அரக்கரால் மக்களுக்கு நேரும் துன்பங்களைப் போக்க இத்தெய்வம் தவம் கிடந்ததாகவும் கூறப்படுகிறது.
"இளங்கதிர் ஞாயிறு எள்ளும் தோற்றத்து 
விளங்கொளி மேனி விரிசடை யாட்டி 
பொன் திகழ் நெடுவரை யுச்சித் தோன்றித்
தென்றிசைப் பெயர்ந்த இத்தீவத் தெய்வதம் 
சாகைச் சம்பு தன்கீழ் நின்று 
மாநில மடந்தைக்கு வருந்துயர் கேட்டு 
வெந்திறல் அரக்கர்க்கு வெம்பகை நோற்ற 
சம்பு என்பாள் சம்பா பதியினள்."
(மணி பதிகம் 1-8)
சம்பாபதி தெய்வம், முந்தை முதல்வி, முதுமூதாட்டி, தொன்மூதாட்டி, முதியாள், அருந்தவமிதியோள் என்றும்; சம்பு, கன்னி, குமரி என்றும் மணிமேகலை நூலில் கூறப்படுகிறது. இத்தெய்வத்தின் கோயில் குச்சரக்குடிகை எனப் பெயர் கொண்டிருந்ததென்றும், இக்கோயில் காவிரிப் பூம்பட்டினத்தில் இடுகாட்டிற்கு அருகில் இருந்ததென்றும் அந்நூல் கூறுகிறது.
இத்தெய்வத்தைப் பற்றி ஒரு கதை கூறப்படுகிறது. சார்ங்கலன் என்னும் பார்ப்பனச் சிறுவன், தன்னந் தனியனாய்ச் சுடுகாட்டிற்குச் செல்ல, அங்கு ஒரு பேய்மகள் பிணத்தின் தலையொன்றினைக் கையிலேந்திக் கூத்தாடியதைக் கண்டு அஞ்சி நடுங்கினான். அவ்வச்சம் நீங்காமல் அவன், வீட்டிற்குச் சென்று நடந்தவற்றைக் கூறி அச்சத்தினாலே உயிர்விட்டான். அவனுடைய தாய் கோதமை என்பவள், ஆறாத் துயரத்துடன், அவனது உடலைத் தோளில் தூக்கிக் கொண்டு சம்பாபதி கோயிலுக்கு வந்து, அவனை உயிர்பித்துக் கொடுக்கும்படி வரம் வேண்டினாள். சம்பாபதி தெய்வம் அவள்முன் தோன்றி, "அவன் விதிவசத்தினால் இறந்தானேயன்றி அவனைப் பேய் கொல்லவில்லை. அவன் ஆயுள் அவ்வளவுதான். இறந்தவரைப் பிழைப்பிக்கும் ஆற்றல் எனக்குக் கிடையாது" என்று கூறியது. இதனைக் கேட்ட கோதமை மனம் வருந்தி, "தெய்வங்கள் கேட்ட வரத்தைக் கொடுக்கும் என்று உலகோர் கூறுகிறார்கள். உனக்கு இறந்தவரைப் பிழைப்பிக்கும் ஆற்றல் இல்லை என்று கூறுவது என்னை?" என்று வினவினாள். அப்போது சம்பாபதி தெய்வம், அவள் முன்பாக, சக்கரவாளங்களிலுள்ள எல்லாத் தெய்வங்களையும் தனது தெய்வ ஆற்றலினால் வரவழைத்து, "இவர்களில் யாரேனும் இறந்தவரைப் பிழைப்பிக்கும் ஆற்றல் உடையவராயிருந்தால், நானும் உன் மகனை உயிர்ப்பித்துக் கொடுப்பேன்" என்று கோதமைக்குக் கூறியது. வந்த தெய்வங்கள் எல்லாம், 'தமக்கு அத்தகைய ஆற்றல் இல்லை' என்று கூறின. அதனால் மனம் தெளிந்த கோதமை, தன் இறந்த மகனது உடலைச் சுடலையில் அடக்கம் செய்து சென்றாள். இக்கதை மணிமேகலை (6-ஆம் காதை) யில் கூறப்பட்டுள்ளது.
சாயாவனம் என்னும் ஊரில் உள்ள சிவன் கோயிலின் தென்பக்கத்தில் சம்பாபதி கோயில் ஒன்று இப்போதும் இருக்கிறதென்றும், இக்கோயில் சம்பாபதியம்மன் தெய்வம் என்றும், பிடாரி கோயில் என்றும் வழங்கப்படுகிறதென்றும் கூறுவர் டாக்டர் சுவாமிநாத ஐயர் அவர்கள். (மணி. அரும்பத அகராதி)
பிடாரி என்பது பீடையை (துன்பத்தை) அரிப்பவள் (போக்குபவள்) என்று பொருள்படும். சம்பாபதி அம்மன், உலகில் உள்ள நல்லவர்களுக்கு வரும் துன்பங்களைப் போக்குகிறவள் ஆதலின், பிடாரி என்று கூறப்படுகிறாள் போலும்.
சீர்காழி இரயில் நிலையத்திற்குத் தென்கிழக்கே 14 மைல் தூரத்தில் உள்ள காவிரிப்பூம்பட்டினம் (இப்போது சிறுகிராமமாக) இருக்கிறதென்றும், இங்குள்ள மருவத்தூர் கிராமம் என்னும் இடத்தில், சம்பாபதி கோயில் இருக்கிறதென்றும், இங்குள்ள பல்லவனேச்சரம் என்னும் சிவன் கோயிலுக்கருகில் இரண்டு மண்மேடுகளும், சம்பாபதி கோயிலுக்கருகில் இரண்டு மண்மேடுகளும் காணப்படுகின்றன என்றும் ஆர்க்கியாலஜி இலாகா அறிக்கை கூறுகிறது.
இவ்வறிக்கையில் கூறப்படுகிற மருவத்தூர் கிராமம் என்பது சிலப்பதிகாரத்தில் கூறப்படுகிற காவிரிப்பூம்பட்டினத்தின் மருவூர்ப்பாக்கமாக இருக்கக்கூடுமோ? இவ்வறிக்கையில் கூறப்படுகிற மேடுகளை அகழ்ந்து பார்த்தால், தமிழ்நாட்டுச் சரித்திர சம்பந்தமான பழைய பொருள்கள் ஏதேனும் கிடைக்கக்கூடும்.
3. கந்திற் பாவை
காவிரிப்பூம்பட்டினத்தில் இருந்த குச்சரக்குடிகை என்னும் பெயருள்ள சம்பாபதி கோயிலிலே ஒரு தூணில் கந்திற்பாவை என்னும் தெய்வ உருவங்கள் அமைக்கப்பட்டிருந்தன. (கந்து - தூண், பாவை - பதுமை) இவை இரட்டைத் தெய்வங்களின் உருவங்கள். துவதிகன், ஓவியச்சேனன் (சித்திரச்சேனன்) என்னும் பெயருடையவை. இவையும் பௌத்தர்களால் போற்றப்பட்ட சிறு தெய்வங்களாம். இத்தெய்வங்கள் முக்கால நிகழ்ச்சிகளை அவ்வப்போது, தம்மை வழிபடுவோருக்குக் கூறிவந்தன என்று மணிமேகலை நூலினால் அறிகிறோம்.
4. சாதுர் மகாராஜிகர்
உலகத்தின் நான்கு திசைகளிலும் நான்கு தெய்வங்கள் காவலாக நிறுத்தப்பட்டனர். அவர்களுக்குச் சதுர் மகாராஜிகர் என்பது பொதுப் பெயர். உலகத்திலே மனிதர் செய்கிற நன்மை தீமைகளை அறிந்து அவற்றை அவ்வப்போது இந்திரனுக்குத் தெரிவிக்கவேண்டியது இவர்கள் கடமை. இவர்களைத் திசைக் காவலராக நியமித்தவன் இந்திரனே. இவர்களின் பெயர் வருமாறு;
திருதராட்டிரன்: இவன் கிழக்குத் திசைக்குத் தெய்வம். இவன் கந்தவர்களுக்கு அரசன்.
விருதாட்சன்: இவன் தெற்குத் திசைக்குத் தெய்வம். இவன் கும்பாண்டர்களுக்கு அரசன்.
விருளாட்சன்: இவன் மேற்குத் திசைக்குத் தெய்வம். இவன் இயக்கருக்கு அரசன்.
வைசிரவணன்: இவன் வடக்குத் திசைக்குத் தெய்வம். இவன் நாகர்களுக்கு அரசன்.
இந்த நான்கு தெய்வங்களும் சக்கனுக்கு (இந்திரனுக்கு) அடக்கமானவர்கள் என்பதும், உலகத்திலே நான்கு திசைகளிலும் நிகழ்கிற எல்லாச் செய்திகளையும் இவர்கள் அவ்வப்போது இந்திரனுக்குத் தெரிவிக்கிறார்கள் என்பதும் பௌத்தர்களின் நம்பிக்கை.
5. சக்கன்
சக்கன் என்னும் சக்கரன் விண்ணுலகத்துக்கு அரசன். இவனை இந்திரன் என்றும் கூறலாம். இவன் பௌத்தச் சிறு தெய்வங்களுக்கெல்லாம் தலைவன். இவன் பௌத்த தர்மப்படி நடக்கிற நல்லவர்களுக்கு உதவி செய்கிறான் என்பது பௌத்தர்களின் நம்பிக்கை. இவன், விண்ணுலகத்திலே சிம்மாசனத்தின் மேல் விரிக்கப்பட்ட பாண்டு கம்பளத்தின்மேல் அமர்ந்திருக்கிறான் என்றும், ஏதேனும் சிறப்பான நிகழ்ச்சிகள் உலகத்தில் நிகழுமானால் இவனுடைய பாண்டு கம்பளம் சூடுகொள்ளும் என்றும், அப்போது இவன் அந்நிகழ்ச்சிகளை அறிந்துகொள்கிறான் என்றும் பௌத்தர்கள் நம்புகிறார்கள். இந்திரனைப் பற்றிய பல கதைகள் பௌத்த நூல்களிலே கூறப்படுகின்றன. இந்தச் சக்கனாகிய இந்திரன் வேறு; வைதீக மதத்தில் கூறப்படுகிற இந்திரன் வேறு.
6. அவலோகிதர்
பௌத்தரால் வணங்கப்படும் தெய்வங்களில் அவலோகிதரும் ஒருவர். இவர் மேலே கூறப்பட்ட தெய்வங்களுக்கு மேற்பட்டவர். ஆனால், புத்தருக்குக் கீழ்ப்பட்டவர். இவருக்கு உலகநாதர் என்றும் போதிசத்துவர் என்றும் பெயர் உண்டு. துஷிதலோகத்திலே இவர் இருக்கிறார். அறநெறியைப் பூவுலகத்தில் போதிப்பதற்காகப் புத்தராகப் பிறக்கிறவர் இவரே.
"அறிவு வறிதா யுயிர்நிறை காலத்து 
முடி தயங் கமரர் முறைமுறை யிரப்பத்
துடித லோக மொழியத் தோன்றித்
போதி மூலம் பொருந்தி யிருந்து
மாரனை வென்று வீர னாகிக்
குற்றம் மூன்றும் முற்ற வறுக்கும் 
வாமன் வாய்மை யேமக் கட்டுரை 
யிறந்த காலத் தெண்ணில் புத்தர்களும்"
என்று மணிமேகலை கூறுவது காண்க.
இந்த அவலோகிதர் இடத்திலே அகத்திய முனிவர் தமிழ்மொழியைக் கற்றார் என்பது தமிழ்நாட்டுப் பௌத்தர்களின் நம்பிக்கை. வீரசோழிய நூலாசிரியராகிய புத்தமித்திரர் இதனைக் கூறுகிறார்.
"ஆயுங் குணத்தவ லோகிதன் பக்கல் அகத்தியன்கேட்
டேயும் புவனிக் கியம்பிய தண்டமிழ் ..."
என்று அவர் கூறுகிறார்.
அவலோகிதரைப் பௌத்தர்கள் வணங்குகிறார்கள். தமிழ்நாட்டிலும் பௌத்தமதம் பரவியிருந்த காலத்தில் அவலோகிதர் உருவ வழிபாடு நடந்து வந்தது. நாகைப்பட்டினத்தில் இருந்து கிடைத்த அவலோகிதரின் செம்பு உருவங்களைச் சென்னைக் காட்சிச் சாலையில் இன்றும் காணலாம்.
Image may contain: 1 person