Showing posts with label theatre. Show all posts
Showing posts with label theatre. Show all posts

Saturday, 27 March 2021

WORLD CINEMA - A HISTORY -WORLD THEATRE DAY

 

WORLD CINEMA - A HISTORY -WORLD  THEATRE DAY


`உலக சினிமா...!' - ஒரு குட்டி வரலாறு!



கண் விழித்தபடியே ஒரே கனவை ஆயிரம்பேர் காண்பதுதான் சினிமா என்பார் பெர்டோலூசி.




மனிதனுக்கு சிந்திக்க கற்றுக்கொடுத்தது சினிமா எனலாம். நல்ல திரைப்படங்கள் பல்வேறு மக்களின் வாழ்வியலை காட்டியது. அன்பைப் போதித்தது.


ஒவ்வொரு காட்சியும் முழுமையடைந்து அது பிறவற்றுடன் இணையும்போது கூடுதல் அர்த்தம் பொதிந்ததாக மாறுகிறது. பொழுதுபோக்கிற்காக பார்த்தாலும் அதில் கூறும் கருத்தை யோசிக்கிறான்.


அவ்வாறான சினிமாக்களின் வரலாறும் உலகளவில் கவனம் பெற்ற திரைப்படங்களும் சில..


#முதல் திரைப்படம்



பாரிஸ் நகரில் 1895-ம் ஆண்டு லூமியர் சகோதரர்களால் கிராண்ட்கபே எனும் ஹோட்டலின் கீழ்தளத்தில் முதல் திரைப்படம் திரையிடப்பட்டது.


அதன் பிறகு ஜூலை 1896-ம் ஆண்டில் அதேபோல் பம்பாயில் முதலில் திரைப்படம் திரையிடப்பட்டது. இவ்வாறு படிப்படியாக வந்து இந்தியாவில் 1907-ம் ஆண்டு முதல் காட்சி படமாக்கப்பட்டது


தாதா சாகேப் ஃபால்கே 1913-ல் தயாரித்த ராஜா அரிச்சந்திராவை கிராமம் கிராமமாக மாட்டுவண்டியில் எடுத்துச் சென்றாராம். அதற்கு அவர் கொடுத்த விளம்பரமாக..


`57000 புகைப்படங்களைக் கொண்ட நிகழ்ச்சி.. ஒரு திரைப்படத்தின் நீளம் 2000 மைல்கள்.. எல்லாம் 3 அணாவுக்கு மட்டுமே' என விளம்பரப்படுத்தினாராம்.


அக்காலத்தில் இது அதிசயமாய் பார்க்கப்பட்டது.


#ஆவணப்படம்


சினிமா குறித்து பேசும்போது நினைவுகூர வேண்டியவர் ஏ.கருப்பன் செட்டியார் எனும் ஏ.கே செட்டியார். புகைப்படக்கலையை ஜப்பானிலும் திரைப்பட தொழில்நுட்பத்தை அமெரிக்காவில் பயின்றவர்.1937-ல் காந்தி குறித்து படம் இயக்க ஆரம்பித்து 1940-ல் முடித்துள்ளார். 50,000 அடி பிலிம் வாங்கி அதை 12,000 அடியில் சுருக்கி இரண்டரை மணி நேரப்படமாக கொண்டு வந்தார்.



முதல் ஆண்டு முழுவதும் தேடிச் சேகரித்ததில் திருப்தி இல்லாமல் ஐரோப்பாவுக்குப் பயணமானார்.


4 கண்டங்களில் லட்சம் மைல் பிரயாணம் செய்துள்ளார். உலகம் முழுமையிலும் 30 வருடங்களாக ஏறக்குறைய 100 கேமராக்கள் எடுத்த சேகரிப்பாக காந்தி குறித்த ஆவணப்படத்தை இயக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.



#ரஷ்யா


இன்றும் உலகத்திரைப்பட விழாவில் ஒரு பாடமாய் இருப்பவை ரஷ்ய படங்கள். ரஷ்ய புரட்சியை இன்றளவும் மக்கள் பார்க்கும் வகையில் இருக்கும் அக்டோபர் படமாக இருக்கிறது. லூமியர் சகோதர்கள் இந்தியா போலவே ரஷ்யாவில் செயின்ட் பீட்டர்ஸ்பர்க்கில் திரையிட்டதுதான் ரஷ்ய திரைப்படங்களுக்கு பிள்ளையார் சுழி. புரட்சிக்குப்பின் திரைப்படப் பள்ளிகள் ஏற்படுத்தப்பட்டன. 1930-ல் அலெக்சாண்டர் டெவ்ஷேங்கோ எடுத்த நிலம் எனும் படத்தில் ஒரு டிராக்டர் வயலில் நின்றுவிடும். ரேடியேட்டரில் ஒவ்வொரு விவசாயியும் சிறுநீர் பெய்து நிரப்புவார்கள். இதுபோன்ற காட்சிகள் அமைந்த மெளனப்படம் அக்காலத்தில் பல அதிர்வுகளை உருவாக்கியது. கார்க்கியின் நாவலான மதர் எனும் படம் 1926-ல் வெளியானது. திறம்பட புரட்சி கருத்துகளுடன் இயக்கியிருப்பார் ஐ வி புடோவ்கின்.


மாண்டேஜ் உத்தியின் தந்தை என புகழப்படும் செர்கய் ஐஸன்ஸ்டீன் Battleship potemkin போன்ற ஜாம்பவான்கள் ரஷ்ய திரைக்கலைக்கு வலு சேர்த்தனர். மேலும் தி ரிடர்ன், குட் பை லெனின் எனும் ஜெர்மானிய படமும் குறிப்பிடத்தக்கது.



#இரானிய சினிமா





இன்றளவும் உலகில் அனைவரின் கவனத்தையும் ஈர்க்கும் சக்தியாக இரானிய படங்கள் விளங்குகின்றன. பொழுதுபோக்கிற்காக படம் எடுக்காமல் வாழ்வியலையும் படைக்கலாம் என படம் எடுத்தார்கள். மஜித் மஜிதி இயக்கிய children of heaven படம்தான் இரானிலிருந்து ஆஸ்கார் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட முதல் திரைப்படம். கடைசி காட்சியில் கைதட்டாத ரசிகர்களே இருக்க முடியாது.



mohsen makhmalbaf இயக்கிய தி சைக்கிளிஸ்ட் படம் அனைவராலும் கொண்டாடப்பட்ட படம். குடும்ப சூழ்நிலையால் ஏழுநாள் சைக்கிள் ஓட்டும் நஸிம்.. இறுதிநாளில் ஒவ்வொரு சுற்றாக முடியும்போது வறுமை இன்னும் எனக்கு முடியவில்லை என நஸிம் சுற்றிக்கொண்டே இருக்கிறான். ஒரு எளியோனின் வாழ்வை திரையில் காட்டிய கண்ணாடி. இதுதவிர சிறுவர்களை மையப்படுத்தி Homework, One problem two solutions, where is my friend home, colour of paradise, The runner, white baloon,The day i became a woman போன்ற திரைப்படங்களைக் குறிப்பிடலாம்.



#ஜப்பானிய சினிமா


கதாநாயகனை காலிருந்து காட்டுவது, ஒரு வில்லன் வரும்போது அனைத்து வீடுகளின் ஜன்னல்களை மூடுவது என பல இயக்குநர்களின் வழிகாட்டியாக இருந்தவர் அகிரா குரோசவா. ரஷோமான் எனும் படம் ஒரு கொலை நடப்பதை பல்வேறு தரப்பிலிருந்து கதை சொல்லப்படும் புதிய யுத்தியைக் கையாண்டார். பல இயக்குநர்களுக்கு திரைக்கதைக்கு பாலபாடமாய் இருப்பதாகச் சொல்லலாம். மற்றுமொரு குறிப்பிடத்தகுந்த படம் ஏழு சாமுராய்.


ஏழு சாமுராய் வீரர்களுடன் கிராமத்தின் அறுவடையை திருட வரும் 40 திருடர்களிடமிருந்து காப்பாற்றப் போராடுவதாய் அமைந்திருக்கும்.


யசுஜிரோ ஒசு இயக்கி 1953-ல் வெளியான டோக்கியோ ஸ்டோரி திரைப்படம் பிள்ளைகளால் கைவிடப்பட்ட முதுமையின் வலியை கூறும் படமாக அமைந்தது.


#கொரிய திரைப்படங்கள்


1949-ல் தி வுமன்ஸ் டைரி எனும் வண்ணத்திரைப்படம் உருவானது. பின்பு பாட்டிக்கும் பேரனுக்குமான அன்பை போதிக்கும் படம் The way home. விடுமுறையில் கிராமத்தில் வந்து தங்கும் பேரன் பாட்டியின் அன்பில் உருக இறுதியில் இரு வார்த்தைகளை எழுதிக் கொடுக்கிறான்.


i am sick i miss you.


உடல் நலமில்லையெனில் முதல் வார்த்தையும், பார்க்க விரும்பினால் இரண்டாவதையும் எழுதி அனுப்புமாறு கூறி பிரியும்போது நம் கண்களும் குளமாகும். தற்போதைய காலகட்டத்தில் கிம் டு கிக், கிம் ஜி வுன் போன்ற இயக்குநர்களின் படங்களுக்கு மிகுந்த எதிர்பார்ப்பு உள்ளது.



#சாப்ளின்


இன்னும் பல ஆண்டுகள் கழித்துப் பார்த்தாலும் புதிதாய் இருக்கும் இவரின் படங்கள். 1953-ல் Tramp படத்தில்தான் தற்போது இருப்பதுபோல தோற்றம் கொண்ட கதாபாத்திரத்தில் நடித்தார்.1931-ல் வந்த city lights படம் நடித்து இசையமைத்து தயாரித்த படம். கண் தெரியாத பெண்ணுக்கும் காதலனுக்கும் இடையிலான உணர்வை விளக்கியிருப்பார். இவரின் நடிப்பில் மற்றுமொரு காவியம் The great dictator. ஹிட்லரின் குணாதிசியங்களை வெளிச்சம் போட்டுக் காட்டியிருப்பார். மற்றுமொரு முடிதிருத்தும் யூதனாக எளிய மக்கள் எவ்வாறு துயரப்படுவதாக இரு கதாபாத்திரங்களிலும் உடல் மொழி அத்தனையிலும் வேறுபடுத்திக் காட்டியிருப்பார். இதுதவிர இவரின் modern times, the circus, the gold rush, the adventurer, The bank உள்ளிட்ட பல படங்கள் பார்க்க வேண்டியவை.



#தமிழ் சினிமா


இந்திய அளவில் மிருணாள் சென், சத்யஜித் ரே எனும் ஜாம்பவான்கள் இந்திய சினிமாவை உலக அளவில் உயர்த்திச் சென்றனர். தமிழில் சுதந்திரப் போராட்ட காலத்தில் முக்கிய பங்களிப்பு கொடுத்தன திரைப்படங்கள்.


1931-ல் பேசும்படமான காளிதாஸ் வந்தது.


இப்படத்தில் காந்தியைப் பற்றியும், அவரின் ராட்டினம் குறித்தும் பாடல் இடம் பெற்றது. `ராட்டினமாம் காந்தி கை பானமாம்' எனும் பாடல் மதுரகவி பாஸ்கரதாஸ் எழுதி டி.பி. ராஜலட்சுமி பாடினார். இதுபோல் 1933-ல் வெளியான வள்ளி திருமணம் படத்தில் `வெட்கம் கெட்ட வெள்ளைக் கொக்குகளாக விரட்டி அடித்தாலும் வாரீகளா' என வெள்ளையர்களை குறித்த பாடல் பிரசித்தி பெற்றது. சென்சார் துறைகளை ஏமாற்றி புத்திசாலித்தனமாக விடுதலை உணர்வை திரையில் காட்டினர்.



வக்கீலாக இருந்து பின் திரை உலகில் நுழைந்த கே.சுப்பிரமணியம் தியாக பூமி எனும் கல்கியின் நாவலை இயக்கினார். தேச சேவை குறித்து துணிவுடன் வந்த திரைப்படம்.


ஹீரோக்கள் மட்டுமே கோலோச்சிய காலகட்டத்தில் ஒரு கழுதையை ஹீரோவாக போட்டு ஜான் ஆப்ரஹாம் `அக்ரஹாரத்தில் கழுதை' எனும் படத்தை இயக்கியது வியப்பாய் பேசப்பட்டது. 70-களின் சாதியத்தை திரையில் காட்டியிருப்பார். 70-களில் பீம்சிங் இயக்கத்தில் ஜெயகாந்தனின் சில நேரங்களில் சில மனிதர்கள், ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள், யாருக்காக அழுதான் போன்றவை யதார்த்த சினிமாவை ரசிகர்களுக்கு அறிமுகப்படுத்தின.


ஸ்ரீதரின் முக்கோணக் காதல் கதைகள், பாலசந்தரின் புதுமை, பாரதிராஜாவின் கிராமத்து மனிதர்கள், மகேந்திரனின் மனிதர்கள், ஒளியால் உயிர்ப்பூட்டிய பாலுமகேந்திரா, நவீன முகமாய் மணிரத்னம் போன்றவர்கள் வகுத்த ராஜபாட்டையில் இன்று இயக்குநர்கள் பவனி வருகிறார்கள்.


`சினிமா என்பது ஒரு கூர்வாள். அதை சவரக்கத்தி போல் பயன்படுத்தக் கூடாது' என்பார் சத்யஜித்ரே.


இதை ஒவ்வொரு திரைக்கலைஞனும் நெஞ்சில் நிறுத்திக்கொள்ள வேண்டிய வாசகங்கள்.


-மணிகண்ட பிரபு

Sunday, 10 May 2020

Tamil Cinema’s evolution from Theatre








. Tamil Cinema’s evolution from Theatre (Part 1)
.
By P V Gopalakrishnan

Tamil cinema was literally born in 1910, with the release of the first silent ‘Tamil’ film ‘Keechaka Vadham’, produced, directed, shot and edited by R. Nataraja Mudaliar, known today as the father of Tamil cinema. The film was based on an episode from the epic Mahabharata & was received very well.

It is said that Nataraja Mudaliar met one Stewart Smith, a cinematographer from Britain who was then filming a documentary on Lord Curzon & learnt the basics of cinematography from him. Later, in 1915, Mudaliar also established South India’s first film studio at Purasawalkam, Madras. In this first silent Tamil movie, stage artistes of that time, Raju Mudaliar and Jeevarathnam played the roles of Keechaka and Draupadi respectively. The cost of this 600 feet length film is said to be Rs. 35,000, then considered expensive. The production was completed in just five weeks, with Pammal Sambandha Mudaliar writing the screenplay.

download.jpg
Nataraja Mudaliar PC: unknown


REPORT THIS AD

Some sixteen long years later, ‘Kalidas’ was the first Tamil Talkie film (shot at Bombay) to be released in October 1931 on Diwali Day, as produced by Ardeshir Irani & directed by H.M.Reddy.  P. G. Venkatesan and T. P. Rajalakshmi did the lead roles in the movie, which, though principally in Tamil, also contained additional dialogues in Telugu and Hindi.

When the film reels arrived by train at Madras Central Station from Bombay, thousands flocked there to follow the reel box, showering flowers all the way to Kinema Central, the theatre where it was screened (later known as Murugan Theatre).

However, according to Randor Guy, Kalidas was a “crude experiment” with poor lip sync. Despite the numerous technical flaws the film had, it received critical acclaim & became a major commercial success. I understand, no print of this landmark talkie film is available now.

raaga_13027_imagehtmlcontent_0
PC: unknown

It is a relevant point to ponder here, as to how, when the films took avatar as above, did the film ‘industry’ then get their actors! Well, the actors for cinema were sourced from stage plays. The evolution narrated below would explain the anthology in that regard.

The stage plays had their antecedent in street plays literally called ‘theru koothu’, which, as a form of entertainment, has its origins to the Sangam periods of Tamil Nadu & forms part of its ancient Tamil culture. The subjects of Koothu have been from religion or history. Even today ‘therukoothu’ happens in rural areas particularly on special days or during temple festivals. With Its informal dance structure, therukoothu depicted scenes with little dialogues but with abundant songs, often sung by Artists in their own voice. They were dressed in complex heavy costumes and bright elaborate makeup. Males often played even female characters.

Over the time, stage plays got evolved. In Tamil Nadu there were formidable stage play troupes some of which created artistes who became to be absorbed as cine actors, when cinema appeared. As such the early cine actors had the characteristic that profiled characteristic stage actors with stopping dialogue delivery, often loud. There seems to have been seamless supply of actors to cinema, this way, as there was no other institutionalized training places like Film Institutes!

In the bygone era, many renowned Drama Companies such as Madurai Bala Meena Rasika Ranjani Sabha, Sri Bala Shanmukananda Sabha, Kannaiyar Company, Madirai Sridevi Bala Vinodha Sabha, Tiruchi Rasika Ranjani Sabha kept the flag flying high in the field of Tamil Dramatics and produced great Artistes like S.G.Kittappa, K.B.Sundarambal, T.K.S.Brothers, N.S.Krishnan, KaLi.N.Rathnam, K.P.Kesavan, K.K.Perumal, K.P.Kamatchi, P.U.Chinnappa, M.G.Ramachandran, S.V.Sahasranamam, M.V.Mani, Thyagaraja Bhagavathar & many more.

There were personalities like Sankaradas Swamigal & Pammal Sambanda Mudaliar who brought dignity to stage plays, in which people from respectable backgrounds did not part take in the prior period. They gave grammar to the stage and in their own way institutionalized play stages with astute discipline.

playwrights-tks

Sankardas Swamigal PC: unknown

Sankaradas Swamigal, who is largely considered as the father of Tamil Theatre, started in 1910 his own drama company known as ‘Samarasa Sanmarga Nataka Sabha’. It was here that the legendary actor S.G.Kittappa learnt his ropes. Around this time, the concept of “Boys Company” – some sort of Gurukula System was slowly gaining popularity. In this system, boys stayed together residentially and learnt under masters of drama.

Sankaradas Swamigal was involved with Bala Meena Ranjani Sangeetha Sabha which had on its rolls several boys who would go on to become subsequently big names in the world of theatre and cinema, such as Nawab T.S.Rajamanickam, M.R.Radha, S.V.Venkatraman and K.Sarangapani. Swamigal thus had the privilege & distinction of having mentored several stalwarts.

In 1918, Swamigal with likeminded few started his own Boys Company, ‘Tattva Meenalochani Vidwat Bala Sabha’. It was here that the celebrated T.K.S. Brothers were brought under the tutelage of Swamigal. T.K.Shanmugam, who was later known as “Avvai Shanmugam’ (Lloyds Road was renamed after him as Avvai Shanmugam Road) was the favorite of Swamigal.

Swamigal maintained very strict discipline and kept vigil over his wards against any vices and any violators were reprimanded.

In short, Sankaradas Swamigal was a one man institution in those days, which, should we say, was unknowingly emulated by later institutionalized training formats such as Film Institute or other acting schools?





.Keechaka Vadham - First and 'Lost' Tamil Film
______
Keechaka Vadham (English: The Extermination of Keechaka) alternatively spelt as Keechaka Vatham, is an Indian silent film produced, directed, filmed and edited by R. Nataraja Mudaliar. The film is based on an episode from the Hindu epic Mahabharata focusing on the characters Kichaka and Draupadi; it stars Raju Mudaliar as Keechaka and Jeevarathnam as Draupadi, the female lead.
Keechaka Vadham was the first silent film made in South India. The film was shot in five weeks at Nataraja Mudaliar's studio, India Film Company. Despite being a silent film, the cast members were from Tamil Nadu, hence it was also considered the first Tamil film. Keechaka Vadham received critical acclaim upon its release and went on to become a commercially successful venture. The film's success prompted Nataraja Mudaliar to make a series of similar historical films. Because no print of the film is known to survive, this makes it a lost film.
Nataraja Mudaliar sought the advice of his friend, Pammal Sambandha Mudaliar, one of the founding fathers of the Renaissance of Tamil Theatre, who suggested that he should picturise the story of the Mahabharata characters Draupadi and Kichaka. Some of Nataraja Mudaliar's relatives objected to it as they felt that it was not a proper story for his debut venture. But Nataraja Mudaliar decided to proceed and launched his maiden film titled Keechaka Vadham, which was based on an episode from the Mahabharatha. The episode follows the attempts made by Keechaka, one of the generals of King Virata, to woo and marry Draupadi before she reports about it to Bhima, who kills him. Nataraja Mudaliar was not a writer, so he had to take assistance from his close friend C. Rangavadivelu, a lawyer by profession. Besides writing the screenplay, Rangavadivelu agreed to coach artistes on sets. Nataraja Mudaliar engaged stage actors Raja Mudaliar and Jeevarathnam to play the roles of Keechaka and Draupadi respectively. The total budget of the film was Rs 35,000, which was then considered high.

Keechaka Vadham was released in January 1918 at the Elphinstone Theatre.

The success of the film incited Nataraja Mudaliar to make a series of historical films such as Draupadi Vastrapaharanam (1918), Lava Kusa (1919), Shiv Leela (1919), Rukmini Satyabhama (1922) and Mahi Ravana (1923). In 1923, the death of his son that occurred in a fire accident which also burnt up his entire studio led Nataraja Mudaliar to retire from filmmaking and close up shop. Nataraja Mudaliar is widely recognised as the father of Tamil cinema and his films helped in laying the foundation for the South Indian cinema industry. Nataraja Mudaliar's work inspired Raghupathi Prakasa, son of Raghupathi Venkaiah Naidu, later revered as the father of Telugu cinema, and J. C. Daniel, who was later revered as the father of Malayalam cinema._






.The Misquith and Co
10 NOV 2017MADEINMADRAS LEAVE A COMMENT
The Misquith and Co building has been an inevitable part of Madras theatre history with the famous New Elphinstone theatre or the brief but celebrated Lyric entertainment hall. The lyric entertainment hall opened in 1907 at the first floor of Misquith and Co building.

In 1913 they started screening silent films in the name Empire Cinemas as competition to Electric Theatre. But a devastating fire in 1914 put out their dreams and the building was taken over by well known theatre tycoon J.F.Madan who ran a successful theatre franchisee called the elphinstone in Calcutta. It was one of the few indian companies to film the historic 1911 Delhi Durbar attended by King George V and Queen Mary. He refurbished the place and established The New Elphinstone which was inaugrated by the governor general of Madras in 1916.


Elphinstone went on to become the first theatre with a balcony and one of the largest theatres in Madras at the time. Much later when the theatre lost out to its competiton, it became the elphinstone soda fountain that sold cold beverages.
















Sunday, 29 April 2018

ARCHIPELAGO CINEMA , SEA CINEMA THEATRE IN THAILAND





ARCHIPELAGO CINEMA , 
SEA CINEMA THEATRE IN THAILAND





Archipelago Cinema, an auditorium raft designed to float on the sea, premiered at the inaugural edition of the Film on the Rocks Yao Noi Festival, curated by Apichatpong Weerasethakul and Tilda Swinton. The Festival, which took place from 9th-12th March 2012, is set to become an annual meeting place for art and film.

The final night of the first edition of Film on the Rocks Yao Noi took place on Archipelago Cinema, designed by German-born and Beijing-based architect Ole Scheeren. Guests were taken by boat through the darkness of the sea to arrive on a glowing raft in the middle of the quiet waters of Nai Pi Lae lagoon on Kudu Island. Surrounded by a dramatic landscape of towering rocks emerging from the ocean, the audience experienced an atmospheric convergence of nature and cinematic narratives – primordial notions of light, sound and stories suspended in the darkness between sea and sky.


The thought of watching films here seemed surprising“ said Ole Scheeren. „A screen, nestled somewhere between the rocks. And the audience… floating… hovering above the sea, somewhere in the middle of this incredible space of the lagoon, focused on the moving images across the water: A sense of temporality, randomness, almost like driftwood. Or maybe something more architectural: Modular pieces, loosely assembled, like a group of little islands that congregate to form an auditorium.

A work with a strong connection to the local community, Archipelago Cinema is based on the techniques used by fishermen to construct floating lobster farms. The raft is built out of recycled materials as a series of individual modules to allow for flexibility for its future use. Subsequent to a journey which will see the raft travel to further places as an auditorium for other film screenings on water, it will eventually return to the island and be donated to its actual builders, the community of Yao Noi, as its own playground and stage in the ocean.


Archipelago Cinema is a collaboration between Studio Ole Scheeren and the Film on the Rocks Yao Noi Foundation, founded by Nat Sarasas, Chomwan Weeraworawit and Apichatpong Weerasethakul. It is the first project of Studio Ole Scheeren since he established his architecture practice, Buro Ole Scheeren, in Beijing and Hong Kong in 2010. With Archipelago Cinema, Ole Scheeren further explores his continued interest in non-architectural projects and interventions, and in creating alternative scenarios and realities by combining an ability to comprehend diverse yet specific contexts with the power of imagination and fantasy. Previous projects by Ole Scheeren which transcend the boundaries of architectural production include, among others, the Marfa Drive-In (a drive-in cinema in the desert of Texas), and the exhibition Cities on the Move, which Ole Scheeren co-curated and scenographed in Bangkok in 1999.

Tuesday, 27 March 2018

WORLD THEATRE DAY MARCH 27, தமிழர் நாடகக்கலை




WORLD THEATRE DAY MARCH 27,

தமிழர் நாடகக்கலை


தொகு

தமிழர் நாடகக்கலையின் தோற்றத்தினை விவரிக்கும் நூற்களில் பழமை வாய்ந்ததாகக் கருதப்படுவது அகத்தியம் என்னும் தலைச்சங்க காலத்து நூலாகும். நாடகம் என்பது பாட்டும், உரையும், நடிப்பும் என்பது தமிழ் மரபுவழி கூறும் இலக்கணமாக விளங்குகின்றது. சங்க காலத்தில் குணநூல், கூத்தநூல், சயந்தம் நூல், மதிவாணர் நாடகத் தமிழர், முறுவல் போன்ற நாடக நூல்கள் இருக்கப்பெற்றன என்பதனை சிலப்பதிகாரத்திற்கு உரை எழுதிய அடியார்க்கு நல்லார் குறிப்பிடுகின்றது குறிப்பிடத்தக்கது. மேலும் தொல்காப்பியம், சிலப்பதிகாரம் போன்ற நூற்களில் தமிழ்நாடகக்கலை பற்றிய சான்றுகள் பல உள்ளது குறிப்பிடத்தக்கது.



தமிழ் நாடகத் தோற்றம்

மோனத்து இருந்த முன்னோன் கூத்தில்

உடுக்கையில் பிறந்தது ஓசையின் சுழலே

ஓசையில் பிறந்தது இசையின் உயிர்ப்பே

இசையில் பிறந்தது ஆட்டத்து இயல்பே

ஆட்டம் பிறந்தது கூத்தினது அமைவே

கூத்தில் பிறந்தது நாட்டியக் கோப்பே

நாட்டியம் பிறந்தது நாடக வகையே



—(கூத்தநூல் - தோற்றுவாய்)

இறைவன் ஆடிய ஆதிக்கூத்தில், உடுக்கையிலிருந்து பிறந்தது ஓசை; ஓசையின் சுழலிலிருந்து இசையின் உயிர்ப்பும், அதனின்று ஆட்டமும், ஆட்டத்திலிருந்து கூத்தின் அமைதியும் (ஒழுங்கு), அவ்வமைதியிலிருந்து நாட்டியக் கோப்பும் (ஒழுங்கு) அவ்வித ஒழுங்கிலிருந்து நாடக வகைகளும் தோன்றின எனக் கூத்தநூலில் உள்ள பின்வரும் பாடல்வரிகள் விளக்குகின்றன. இவ்வாறு பிறந்த நாடகம், தொல்காப்பியர் காலத்தில் வளர்ச்சியடைந்து புகழ்பெற்றிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

பண்ணை

"பண்ணைத் தோன்றிய எண்ணான்கு பொருளும்

கண்ணிய புறனே நானான் கென்ப"


தொல்காப்பியரின் மெய்ப்பாட்டியலில் உள்ள முதலாம் நெறியாகும் இப்பாடல் வரிகள். பண்ணை எனக்குறிக்கப்பட்டுள்ளது விளையாட்டு ஆகும். உள்ளத்தில் உவகையூட்டுதலின் காரணத்தினால் நாடகம் பண்ணையென அழைக்கப்பெற்றது. தொல்காப்பியத்திற்கு உரையெழுதிய 'நச்சினார்க்கினியர்' கூறும் பின்வரும் உரை விளக்கத்தினால் 'பண்ணை' என்னும் சொல்லின் மெய்ப்பொருளினை அறியலாம்.

பாடல்கள்
தொல்காப்பியத்தின் பொருளதிகாரத்தில்:


"நாடக வழக்கினும் உலகியல் வழக்கினும்

பாடல் சான்ற புலனெறி வழக்கம்"


எனத் தொல்காப்பியர் தனது வாழ்நாளினிலும் முற்பட்ட இலக்கிய மரபினைப் பற்றி விளக்குகையில் 'பாடல் சார்ந்த' எனப் பொருள்படும் 'பாடல் சான்ற' எனக் கூறுகின்றார். இவ்வரியில் குறிப்பிட்டதனை ஆராய்ந்தால் தொல்காப்பியர் வாழ்ந்ததற்கு முற்பட்ட காலகட்டங்களிலேயே தமிழில் நாடகமும், நாடகங்களில் பாடல்களும் இடம்பெற்றிருந்ததும் என்பதனை அறியலாம்.

சுவைகள்
நாடக வழக்கினைப் பற்றித் தொல்காப்பியம் கூறும் நூற்பாவானது


"நகையே அழுகை இளிவரல் மருட்கை

அச்சம் பெருமிதம் வெகுளி உவகையென்று

அப்பா லெட்டாம் மெய்ப்பா டென்பர்-"


நாடக வழக்கென்பது சுவைபட வருவதையெல்லாம் ஓரிடத்தில் வந்தனவாகத் தொகுத்துக் கூறுதலென விளக்குகின்றது இவ்வரிகள்.மேலும் இச்சுவைகள் தோன்றும் நிலைக்களன்கள் (பொருள்கள்) மூலம் முப்பத்திரண்டு சுவைகள் அடங்கும். இப்பொருள்கள் இரண்டு வகைப்படும் அவையாவன பொருளின் தன்மையினை மட்டும் உணர்த்தி,வடிவம் உணர்த்தப்படாதது ஒன்று மற்றொன்று பொருளின் தன்மையினையும் உணர்த்தி வடிவத்தினையும் உணர்த்துவதாகும்.இவ்விருவகையில் பொருளின் தன்மையினை மட்டும் உணர்த்தி வடிவம் உணர்த்தப்படாதனவை:காமம், வெகுளி (சினம்), மயக்கம், இன்பம், துன்பம் முதலியனவாகும். வடிவங்கள் இல்லாத இப்பொருள்களை,பொறிகளின் வாயிலாக மனங்கொள்வதற்கு மெய்ப்பாடுகள் காரணமாக அமைகின்றது.இம்மெய்ப்பாடானது கண்ணீர், மெய்மயிர் சிலிர்த்தல், வியர்வுதல், நடுக்கம் முதலியன புறக்குறிகள் கொண்டு ஒருவரது அகவுணர்வுகளை ஆழ்ந்து ஆராயாமலே, காண்போர்க்கு புலனாகும் தன்மையே மெய்ப்பாடு எனப்படும்.இவ்வகைச் சுவைகளே நடிப்பின் இன்றியமையாக் கூறுகளாக உலகின் அனைத்து நாடுகளிலும்,அனைத்து மொழி நாடகம்,திரைப்படம் போன்ற கலை வடிவங்களிலும் கருதப்படுகின்றன.மேலும் இத்தகு நாடகச்சுவைகளினைப் பற்றித் தொல்காப்பியர் அவர் காலத்தில் குறிப்பிட்டுள்ளதனால் அவருக்கு முற்பட்ட காலத்திலேயே தமிழர் நாடகக்கலை பிரசித்தி பெற்றிருக்க வேண்டுமென்பதுமாகக் கருதப்படுவதும் குறிப்பிடத்தக்கது.

அரங்கம்
அரங்க அளவு
கி. பி. இரண்டாம் நூற்றாண்டளவில் தோற்றம்பெற்ற சிலப்பதிகாரத்தில் நாடக அரங்கத்தின் அளவுகளைப் பற்றி இப்பாடல் வரிகள் விளக்குகின்றன.


"நூல்நெறி மரபின் அரங்கம் அளக்கும்

கோலளவு இருப்பத்து நல்விர லாக

எழுகோல் அகலத்து எண்கோல் நீளத்து

ஒருகோல் உயரத்து உறுப்பின தாகி

உத்தரப் பலகையோடு அரங்கின் பலகை

வைத்த இடைநிலம் நாற்கோ லாக

ஏற்ற வாயில் இரண்டுடன் பொலியத்

தோன்றிய அரங்கில்


—(சிலப்பதிகாரம் - அரங்கேற்றுக்காதை 99-106-வது வரிகள்)

அரங்கம் அளக்கப்பயன்படும் கோள்|கோளானது, கண்ணிடை ஒரு சாண்கொண்ட மூங்கிலைக் கொண்டு, மனிதர் ஒருவரின் பெருவிரல் இருபத்துநான்கு கொண்ட அளவில் ஒரு கோல் நறுக்கினர்.அதுவே அக்கால அளவு கோலாகும்.

எட்டு அணுக்கள் கொண்டது ஒரு தேர்ந்துகள். எட்டு தேர்ந்துகள் கொண்டது ஒரு இம்மி. எட்டு இம்மிகள் கொண்டது ஒரு எள். எட்டு எள் கொண்டது ஒரு நெல். எட்டு நெல் கொண்டது ஒரு பெருவிரல்.

இவ்வகை அளவு முறையினையே பண்டைக்காலத் தமிழர் பயன்படுத்தினர்.சிலப்பதிகாரத்தில் தெரிவிக்கப்பட்டிருக்கும் அரங்கின் அகலம் ஏழு கோலாகவும். நீளம் எட்டு கோலாகவும் குறட்டின் உயரம் (அடைக்கல்) ஒரு கோல் ஆகவும் அமைத்து அரங்கின் மேற்பகுதியில் பலகை பதித்து அதற்கும் தூண்களின் மேல் பாவிய உத்தரப்பலகைக்கும் இடையே நான்குகோல் உயரம் இருக்கச் செய்து அரங்கத்தினுள் செல்லவும், வெளியேறுவதற்கும் இரண்டு வாயில்கள் அமைத்துத் தூண்களின் நிழல்கள், ஆடும் இடத்தில் (நாயகப்பத்தியில்) விழாமல் ஒளிவிடும் (மாண்சுடர் காந்தும்) நிலை விளக்குகளையேற்றினர்.

திரைகள்
மூன்று வகையான திரைகள் பண்டைக்காலந்தொட்டு உபயோகத்திலிருந்து வந்தன. அவையாவன:

ஒருமுக எழினி (ஒருபடம்) - ஒரு பக்கமாகக் சுருக்கிக் கட்டப்பெற்ற திரையாகும். (இவ்வகைத் திரைகள் இன்றளவிலும் கூத்து மேடை,சென்னை மாநகரின் சில நாடகக்குழுக்களாலும், சிற்றூர்கள் மற்றும் பயிற்று முறை நாடக மேடைகளிலும் பயன்படுத்தப்பெற்று வருகின்றன.
பொருமுக எழினி - ஒரு திரை இரண்டாகப் பிரிக்கப்பெற்று ஒன்றோடொன்று சேரவும், பிரிக்கவும் கூடியதாக அமைந்த திரையாகும். (இவ்வகைத் திரைகள் தமிழில் 'தட்டி' என அழைக்கப்படுகின்றது. மதுரை, கோவை ஆகிய பெருநகரங்களிலுள்ள பயிற்றுமுறை நாடகக்குழுக்கள் மற்றும் அரங்க அமைப்பாளர்கள் போன்றவர்களால் பெரிதும் பயன்படுத்தப்படுகின்றது.
கரந்து வரல் எழினி - மேற்கட்டிலிருந்து கீழே விரிந்து விடவும் பின்னர் சுருக்கிக் கொள்ளவும் கூடியதாகத் தொங்கும் திரையாக அமையப்பெற்றிருக்கும் திரையாகும்.

''தோற்றிய அரங்கில் - தொழுதனர் ஏத்த

பூதரை எழுதி, மேல்நிலை வைத்து;

தூண் நிழல் புறப்பட,மாண்விளக்கு எடுத்து,ஆங்கு

ஒருமுக எழினியும், பொருமுக எழினியும்,

கரந்துவரல் எழினியும், புரிந்துடன் வகுத்து-ஆங்கு

ஓவிய விதானத்து, உரை பெறு நித்திலத்து

மாலைத்தாமம் வளையுடன் நாற்றி;

விருந்துபடக் கிடந்த அரும் தொழில் அரங்கத்து-


(சிலப்பதிகாரம் - அரங்கேற்றுக்காதை 106-113 வரிகள்) எனச் சிலப்பதிகாரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.மேலும் இடைக்காலத்தில் தோற்றம் பெற்ற 'பெருங்கதை' என்னும் நூலில் அரங்கத்தில் தொங்க விடப்படும் ஏனைய திரைச்சீலைகளைப் பற்றி இவ்வாறு விளக்கம் தரப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.


"கொடியும் மலரும் கொள் வழி எழுதிப்

பிடியும் களிறும் பிறவும் இன்னவை

வடிமாண் சோலை யொடு வகைபெற வரைந்து"


என உஞ்சைக்காண்ட வரிகளான 63 - 65 ஆகியனவற்றில் விளக்கங்கள் உள்ளன.

திரைச்சீலைகளினைத் தொடர்ந்து பண்டைத்தமிழர் சித்திர விதானம் விரித்து முத்து மாலைகள், பூமாலைகளினை வளைவாகத் தொங்கவிட்டு நாடக அரங்கத்தினை அலங்கரித்தனர்.

அரங்கம் பயன்படுத்தப்பட்ட முறை
இன்று காணப்படும் நாடக மேடைகளில், காட்சி ஒன்றில் நாடக நடிகர் வீட்டின் 'உள்ளே' செல்லுவதற்கு மேடையின் வலது புறம் மூலமாகவும் 'வெளியே' செல்வதென்றால் மேடையின் இடதுபுறத்திலும் செல்வதுவேண்டும். இவ்வகை விதியினை சிலப்பதிகாரத்தில் உள்ள இப்பாடல் வரிகளில் காணலாம்.


"இயல்பினின் வழா அ இருக்கை முறைமையின்

குயிலுவ மாக்கள் நெறிப்பட நிற்ப

வலக்கால் முன்மிதித்து ஏறி, அரங்கத்து

வலத்தூண் சேர்தல் வழக்கு எனப் பொருந்தி

இந்நெறி வகையால் இடத்தூண் சேர்ந்த

தொல்நெறி இயற்கைத் தோரிய மகளிரும்"


—(சிலப்பதிகாரம் - அரங்கேற்றுக்காதை 129 - 134 ஆம் வரிகள்)

என வரும் இப்பாடல் வரிகள் குயிலுவர் (யாழ் , குழல், இடக்கினி போன்ற கருவிகளினை வாசிப்பவர்கள்) நிலையிடம் ஒரு கோல் என்ற ஒழுங்குப்படி தொழிலாளர் நின்றனர். அனைத்தும் ஒழுங்கானதும், மாதவி வலக்காலை முன் வைத்துப் பொருமுக எழினியுள்ள வலத்தூண் பக்கம் சேர்ந்தாள். ஒருமுக எழினியுள்ள இடத்தூண் பக்கம் தோரிய மடந்தையர் என்ற ஆடி மூத்தவர்; நாட்டியத்திற்குத் துணை செய்பவர், மாதலி வந்தேறியபடியே வலக்காலை முன் வைத்தேறி வந்து நின்றனர்" என இப்பாடல் வரிகள் விளக்குகின்றன.

நடிப்பும் - இசையும்

"இருவகைக் கூத்தின் இலக்கணம் அறிந்து

பல வகைக் கூத்தும் விலக்கினில் புணர்ந்து

பதினோர் ஆடலும், பாட்டும், கொட்டும்,

விதிமாண் கொள்கையின் விளங்க அறிந்து - ஆங்கு

ஆடலும் பாடலும், பாணியும், தூக்கும்,

கூடிய நெறியின் கொளுத்தும் காலை-

பிண்டியும், பிணையலும், எழில் கையும், தொழில்கையும்,

கொண்டவகை அறிந்து, கூத்து வரு காலை

கூடை செய்த கை வாரத்துக் களைதலும்

பிண்டி செய்த கை ஆடலில் களைதலும்,

ஆடல் செய்த கை பிண்டியில் களைதலும்,

குரவையும் வரியும் விரவல செலுத்தி

ஆடற்கு அமைந்த ஆசான் - தன்னோடும்"


—(சிலப்பதிகாரம் - அரங்கேற்றுக்காதை -12 -25 வரிகள்)

இப்பாடல் வரிகளின் பொருட்களாவன பின்வருமாறு:

கூத்து வகைகள்
கூத்துவகை இருவகைப்படும். அவையாவன

1- அகக்கூத்து - அரசருக்காக ஆடப்படும் 'வேத்'தியலை அகக்கூத்து என்றழைப்பர்.

2- புறக்கூத்து - பிறருக்காக ஆடும் பொதுவியலை புறக்கூத்து என்றழைப்பர்.

நாடகம் - நாட்டியம் ஆகிய இரண்டும் 'கூத்து' என்றே அழைக்கவும் பெற்றது. அகக்கூத்து இருவகையினைக் கொண்டிருந்தது சாந்திக்கூத்து மற்றும் விநோதக்கூத்து அவ்விருவகைகளாகும்.

சாந்திக்கூத்து நால்வகைப்படும் அவையாவன:

சாக்கம் - தாளத்தினை அடிப்படையாகக் கொண்ட கூத்தாகும்.
மெய்க்கூத்து - அகச்சுவையினை அடிப்படையாகக் கொண்ட கூத்தாகும்
அபிநயக்கூத்து - பாட்டின் பொருளினை அபிநயித்து கதை தழுவாது வரும் கூத்தாகும்.
நாடகக்கூத்து - கதையினைத் தழுவி நடிக்கும் கூத்தாகும்.
விநோதக்கூத்து பொது மக்களின் பொழுது போக்கு கூத்தாக ஆடல் பெற்றது. விநோதக்கூத்து ஏழுவகைப்படும் அவையாவன:

குரவைக் கூத்து - ஒன்பது கலைஞர்கள் காதல் அல்லது வெற்றிப்பாக்கள் பாடி கைக்கோத்து ஆடும் கூத்தாகும்.
கழாய்க்கூத்து - கலைநடனம் என அழைக்கப்படும் கூத்து.
குடக்கூத்து - கரகம் என அழைக்கப்படும் குடக்கூத்து.
கரணம் - பாய்ந்து ஆடப்படும் கூத்து.
பார்வைக்கூத்து - கண்களினால் நோக்கப்படும் கூத்து.
வசைக்கூத்து - நகைச்சுவை உணர்வுகளினை மையமாகக் கொண்ட கூத்தாகும்.

சாமியாட்டம் அல்லது 'வெறியாட்டம்'
வென்றிக் கூத்து - மாற்றான் ஒடுக்கப்படுதலும் மற்றும் மன்னனின் உயர்ச்சியினைப் பற்றியும் வெளிக்காட்டக்கூடிய கூத்தாகும். வசைக்கூத்து, விநோதக்கூத்து ஆகிய கூத்துக்கள் பாட்டின் உறுப்புகளிற்கேற்ப பாவனைகள் எடுத்தாளப்படும் கூத்துக்களாகும். இவ்வுறுப்புகள் விலக்குறுப்புக்களென அழைக்கப்படும். விலக்குறுப்புக்கள் பதினான்கு வகைப்படும் அவையாவன:

நாற்பொருள் - அறம், பொருள், இன்பம், வீடு.
யோனி - உள்ளவர்க்கு உள்ளது, இல்லாதவர்க்கு இல்லாதது, உள்ளவர்க்கு இல்லாதது, உள்ளவர்க்கு இல்லாதது, இல்லாதவர்க்கு உள்ளதெனக் கற்பனையானது.
விருத்தி - தேவர், வீரர், நடன் (கூத்தன்), நடி (நாடகக்கணிகை) இவரைத் தலைவராகக் கொண்டாடப்படுவது.
சந்தி - பயிர்முளைத்து, நாற்றாகி, பூத்துக்காய்ந்து, கதிர் செறிந்து, அறுவடை செய்து துய்ப்பது (புசிப்பது, உண்பது) போலப் பொருட்சுவை காட்டுவது.
வீரம், அச்சம், இழிப்பு, வியப்பு, இன்பம், அவலம், நகை, சினம், நடுநிலை ஆகிய ஒன்பது வகைச் சுவைகள்.
நாடகம் - தாளத்திற்கேற்ப இசைந்து நடிக்கப்படுவது.
குறிப்பு - ஒன்பது சுவைகளைக் காண்பிப்பது.
சத்துவம் - நன்மையே நோக்கும் தன்மையும் சுபாவம் என்ற சாத்வீகக் குணமுமாகும். உள்ள நிகழ்ச்சிகளை வெளிப்படத் தோன்றுதலும் ஆகும். விறல் (வீரம்) எனவும் அழைக்கப்படும் சத்துவம் பெருமை எனவும் பொருள்படும்.
வெகுளி, சோம்பல், ஜயம், களிப்பு,உவப்பு, பெருமை, இன்பம், மயக்கம், தெய்வாவேசம், உறக்கம்,உடன்பாடு, துயிலுணர்ச்சி, நாணம், வருத்தம், கண்ணோவு, தலைநோவு, நஞ்சு, சாவு,மழை, வெயில், பனி, தீ, குளிர், வெப்பம் ஆகியனவற்றால் உண்டாகும் கேடுகள், இருபத்து நான்கு வகை நடிப்புகளை உள்ளடக்கிய அவிநயமாம்.
வகைச்சொல் - உட்சொல், புறச்சொல், ஆகாயச் சொல் ஆகிய மூன்று சொற்களை உடையது வகைச் சொற்களாகும்.
நான்கடி, எட்டடி, பதினாறடி, முப்பத்திரண்டடியாக வரும் சுண்ணம், சுரிதகம், வண்ணம், வரிதகம் ஆகிய நான்கு சொல் வகைகள்.
வண்ணம், சந்தப்பாட்டு
இசைப்பாட்டு
சேதம் - நடனத்திற்கேற்றாற்போல் கதையினை சேதிக்கபடுவது.
ஆடல் வகைகள்
'கடையம், அயிராணி மரக்கால்விந்தை, கந்தன், குடை, துடிமால், அல்லியமல், கும்பம் - சுடர்விழியால் பட்டமதன் பேடுதிருப் பாவை அரண் பாண்டரங்கம் கொட்டியிவை காண்பதினோர் கூத்து'

ஆடல்வகை பதினொரு வகையாகும் அவையாவன:


மாயவனாடும் அல்லி
விடையோனாடும் கொட்டி
ஆறுமுகன் ஆடும் குடை
குன்றெடுத்தோன் ஆடும் குடம்
முக்கண்ணன் ஆடும் பாண்டரங்கம்
நெடியோன் ஆடும் மல்லாடல்
வேல்முருகன் ஆடும் துடியாடல்
அயிராணி ஆடும் கடையம்
காமன் ஆடும் பேரு
துர்க்கை ஆடும் மரக்கால்
திருமகள் ஆடும் பாவைக்கூத்து
இவ்வடல் வகைகள் சிலப்பதிகார உரையாசிரியரான அடியார்க்கு நல்லார் குறிப்பிடுவனவாகும்.

ஆடல் இலக்கணம்
பிண்டி - ஒற்றைக் கைக்குறியாற் காட்டுவது.
பிணையல் - இரண்டு கைகளாலும் குறித்தல்.
எழிற்கை - அழகு பெறக் காட்டும் வகை.
தொழிற்கை - தொழில்பெறக்காட்டுவது தொழிற்கை.
குடை - ஒற்றைக் கைக்கும், குவித்த கைக்கும் குடையெனப் பெயர்.
பிண்டி மற்றும் பிணையல் இரண்டும் புறத்திற்குரியன. எழிற்கை மற்றும் தொழிற்கை இரண்டும் அகத்திற்குரியன மேலும் அகக்கூத்தில் ஒற்றையிற் செய்யும் கைத்தொழில் மற்றும் இரட்டையிற் செய்யும் கைத்தொழில் போன்றனவை முரண்படாமல் இருத்தல் அவசியமாகும். ஆடும் பொழுது அபிநயம் இருத்தல் கூடாது, அபிநயிக்கும்பொழுது ஆடல் கூடாது. குரவைக்கூத்திற்கும், வரிக்கூத்திற்கும் உரியபடி கால்களை எடுத்து வைத்தல் வேண்டும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

பாடகன்
சிலப்பதிகாரக் கதை நடைபெற்ற காலத்தில் தனித்தமிழ் இசை வழங்கி வந்திருப்பது வரலாறு.

யாழ், குழல், தாளம், சீர், வாய்ப்பாட்டு, மெல்லிய குரலுடனான அமைப்பாக வாசிக்கப்படும் மத்தளம், இவற்றுடன் கூத்து வகைகள் ஆரம்பிக்கப்படும் வேளை இசைந்த பாடலினை இனிமையாக, தாளக்கட்டுடன் பொருந்தப் பாடுதல் வேண்டும்.
வரிப்பாடு மற்றும் ஆடல் போன்றவற்றிற்குரிய பொருளினை விளக்கி இயற்சொல், திரிசொல், திசைச்சொல், வேற்றுச்சொற்களின் ஓசைகளைச் சுத்தமாகக் கடைபிடித்தும் அவ்வோசைகளின் இலக்கணங்களினை பிழையின்றித் தெரிந்த அறிவாளியாகப் பாடகர்கள் இருத்தல் வேண்டும்.
பாடலாசிரியர்களின் மனக்குறிப்பு, கருத்து போன்றனவற்றினை உணர்ந்து பாடல் வேண்டும்.
ஆடலின் தொகுதியினை அறிந்து பகுதிகளிற்குப் பொருந்தும் பாடல்களைப் பாடல் வேண்டும்.
ஒன்பது சுவைகுறித்த நடனங்களில், சுவைக்கேற்றபடி பாடல் வேண்டும்.
கூத்து நடைபெறும் வேளையில் ஆடலாசிரியரின் மனம் அறிந்து பாடுதல் வேண்டும்.
இசைப் பயிற்சி மட்டும் இன்றி, இசை நூல்களிலும் மாசற்ற பயிற்சி பெற்று, பாட்டிலக்கணத்தினை விரிக்க மற்றும் வகுக்கப் போன்றனவற்றில் வல்லவர்களாகப் பாடகர்கள் இருத்தல் வேண்டுமெனப் பின்வரும் சிலப்பதிகாரப் பாடல் வரிகள் விளக்குகின்றன்.

'யாழும், குழலும், சீரும், மிடறும்

தாழ் குரல் தண்ணுமை, ஆடலொடு இவற்றின்

இசைந்த பாடல் இசையுடன் படுத்து,

வரிக்கும் ஆடற்கும் உரிப்பொருள் இயக்கி

தேசிகத்திருவின் ஓசை எல்லாம்

ஆசு இன்று உணர்ந்த அறிவினன் ஆகி,

கவியது குறிப்பும், ஆடல் தொகுதியும்,

பகுதிப்பாடலும் கொளுத்தும் காலை-

வசை அறுகேள்வி வகுத்தனன் விரிக்கும்

அசையா மரபின் இசையோன்.


—(சிலப்பதிகாரம் - அரங்கேற்றுக்காதை 26 - 36 வரிகள்)

இசைக்கருவிகள்
இசைக்கருவிகளின் பயன்பாடானது இலக்கண எல்லைக்குள் நின்று, ஏந்திழையாளின் இனிய நடன அரங்கேற்றத்திற்கு இனிமையான சத்தத்தினால் இசைக்கப்பெற்றது. அவளும், நாட்டிய இலக்கணங்களை நன்கு கடைப்பிடித்துக் காட்டினள் தன் திறமெனப் பின்வரும் பாடல் வரிகள் விளக்குகின்றன. "குழல் வழி நின்றது யாழே; யாழ்வழித்


தண்ணுமை நின்றது தகவே; தன்னுமைப்

பின்பழி நின்றது முழவே; முழவோடு

கூடி நின்று இசைத்தது ஆமந்திரிகை.


—(அரங்கேற்றுக்காதை 139 - 143 வரிகள்)


நாட்டிய நல் நூல் நன்கு கடைப்பிடித்து

காட்டினள் ஆதலின்.


—(அரங்கேற்றுக்காதை 158 - 159 வரிகள்)

கடைச்சங்க காலத்தில் நாடகத்தமிழ்

"கழைவளர் அடுக்கத்து இயலி யாடுமயில்

விளைவுகள விறலியிற் தோன்று நாடன்"


என்ற கபிலரின் அகநாநூற்றுப்பாடல் வரிகளான (82) 9-10 வரிகள் 'மூங்கில்கள் வளர்ந்திருக்கும் மலையடுக்குகளிலே உலாவி ஆடுகின்ற மயில் இனங்கள், களத்திலே புகுந்து ஆடும் விறலியைப் போலத் தோன்றும் நாட்டினன்' என விளக்குகின்றது இப்பாடல் வரிகள்.

திருப்பரங்குன்றத்தில் பாணரும், கூத்தரும், விழாக்கள் கொண்டாடி ஆடல்பாடல் நிகழ்த்தியதற்குச்ச் சான்றாக


"படுகண் இமிழ்கொளை பயின்றனர் ஆடும்

களிநாள் அரங்கின் அணி நலம் புரையும்"


என்ற பரிபாடல் 16:12 - 13 வரிகளில் ஆடல் அரங்குகள்பற்றிய சான்றுகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.கடைச்சங்க காலத்தில் தமிழ் நாடகம் செழுமைபெற்று விளங்கியதும் குறிப்பிடத்தக்கது.

வீழ்ச்சிக்காலம்
கடைச்சங்க காலம் வரை எழிலோடு இருந்த நாடகக்கலை, கி. பி. மூன்றாம் நூற்றாண்டிலிருந்து கி. பி. ஒன்பதாம் நூற்றாண்டின் காலப்பகுதியில் எவ்வித செழிப்புமற்ற நிலையில் இருந்தது. தமிழகத்தின் இருண்ட காலமாகக் கருதப்படும் கி. பி. மூன்றாம் நூற்றாண்டிலிருந்து கி. பி. ஜந்தாம் நூற்றாண்டின் பின்காஞ்சி|காஞ்சியில் புத்த, சமண சமயங்கள் பரப்பப்பட்டன. அச்சமயம் இருந்த 'நாடகக்கலை சிற்றின்ப வேட்கையினை எழுப்புவது' என்ற கருத்தினை வலியுறுத்தி நடைபெற்றன. மேலும் இக்காலத்தில் வாழ்ந்த அறிஞர்கள், வடமொழி நூல்களினைப் போற்றி பாலி, பிராகிருதம், சமஸ்கிருதம் ஆகிய மொழிகளில் தம் கருத்துக்களினை வெளியிட்டு வந்ததும் குறிப்பிடத்தக்கது. இக்காரணங்களினால் தமிழ் நாடகக் கலை தழைக்க வாய்ப்பில்லாமல் இருந்தது. இக்காலகட்டத்திலேயே தோற்றம் பெற்ற தமிழ் இலக்கியங்களான பதினெண் கீழ்க்கணக்கு நூல்களுள் பதினொரு நூல்கள் அற இலக்கியங்கள், இந்நூல்களிலில் நாடகக்கலையின் சிறப்புகள்பற்றித் தகவல்கள் குறிப்பிடப்படவில்லையென்பது குறிப்பிடத்தக்கது. ஆனாலும் செல்வம்|செல்வத்தின் இயல்புகளைக் குறிப்பிடும் பின்வரும் பாடல் வரியானது


"கூத்தாட்டு அவைக்குழாத் தற்றே பெருஞ்செல்வம்

போக்கும் அதுவி ளிந் தற்று"


—(அறத்துப்பால் - 332 ஆம் பாடல்) (திருக்குறள்)

கூத்தாட்டு அவையினை உவமையாகக் கூறுகின்றார் திருவள்ளுவர். நாடகம் சிற்றின்ப நாட்டத்தினைத் தரும் காரணத்தினால் ஒதுக்கப்பட வேண்டுமெனப் புத்த மதத்தினர் புத்தரின் கொள்கையினைப் பரப்பும் பொழுது மக்களுக்குத் தெரிவித்தனர். புத்தர் தனது சீடர்களிற்கு உரைத்த பத்து விதிகளில் ஒன்றான நுண் கலைகளில் நாட்டம் கொள்ளக் கூடாது என்பதன் காரணத்தினால் புத்த மதத்தினர் இவ்வாறான நாடகக்கலையினை பின்பற்ற வேண்டாமென மக்களுக்கு எடுத்துரைத்தனர்.

மணிமேகலையின் சிறைசெய்காதையின் 43 மற்றும் 65 ஆம் வரிகளில்


''காவிரி வாயிலிற் ககந்தன் சிறுவன்
நீவா வென்ன நேநிழை கலங்கி
மண்டிணி ஞாலத்து மழைவளந் தரு உம் - சரு (45)

பெண்டி ராயிற் பிறர் நெஞ்சு புகா அர்
புக்கேன் பிறறுளம் புரிநூன் மார்பன்
முத்தீப் பேணு முறையெனக் கில்லென
மாதுய ரெவ்வமோடு மனையறம் புகா அள்
பூத சதுக்கம் புக்கனன் மயங்கிக்-----ருரு (50)

கொண்டோற் பிழைத்த குற்றந் தானிலேன்
கண்டோ னெஞ்சித் கரப்பெளி தாயினேன்
வான்றரு கற்பின் மனையறம் பட்டேன்
யான்செய் குற்றம் யானறி கில்லேன்
பொய்யினை கொல்லோ பூத சதுக்கத்துத்-----ருரு (55)

தெய்வ நீயெனச் சேயிழை யாற்றலும்
மாபெரும் பூதந்தோன்றி மடக்கொடி
நீகே ளென்றே நேரிழைக் குரைக்கும்
தெய்வந் தொழாஅள் கொழுநற் றொழுதெழுவாள் -
பெய்யெனப் பெய்யும் பெருமழை யென்றவப்---சாரு (60)

பொய்யில் புலவன் பொருளுரை தேறாய்
பிசியு நொடியும் பிறர்வாய்க் கேட்டு
விசிபிணி முழவின் விழாக்கோள் விரும்பிக்,
கடவுள் பேணல் கடவியை யாகலின்
மடவர லேவ மழையும் பெய்யாது------சாரு
(65)


இவ்வாறு அமைந்துள்ள இப்பாடல் வரிகளானது மருதி என்ற அந்தணர் குலத்தைச் சார்ந்த பெண் காவிரி ஆற்றில் நீராடிவிட்டுச் செல்லும் வழியில் 'ககந்தன்' என்ற அந்நாட்டு இளவரசன் அவளழகில் மையல் கொண்டு காதல் மொழி பேசுகின்றான். மருதியோ அவனிடமிருந்து தப்பியோடி சதுக்கப்பூதம்|சதுக்கப்பூதத்தினிடம் முறையிட்டு நீதி வேண்டுகின்றாள். சதுக்கப்பூதம் அவளைக் குற்றமற்றவள் என்று கூறி அப்பெண்ணிற்குத் தண்டனை எதுவும் வழங்காது நின்ற வேளை மருதியும் 'மழை வளத்தைத் தரும் பத்தினிப் பெண்களாய் இருப்பவர் மாற்றான் மனதிற்கு மயக்கம் தரும் மங்கையராவதில்லை. ஆனால் நானோ இவ்விளவரசன் உள்ளம் புகுந்தேன். கொண்டவனுக்கு யாதொரும் குற்றமும் செய்யவில்லை. நான் செய்ததவறு இன்னதென்று எனக்கே புலப்படவில்லை' எனச் சதுக்கப்பூதத்திடம் எடுத்துரைத்தாள். சதுக்கப்பூதமோ 'பொய்க்கதைகளினையும், நகையை விளைவிக்கும் மொழிகளையும் பிறர் வாய்மொழிகளையும் கேட்டு, நடனம், பாடல், தாளக்கருவிகள் முழங்கும் விழாக்களை விரும்பித் தெய்வங்களை வழிபடும் நியமத்தை மேற்கொண்டிருந்தாய், ஆதலில் உன் ஏவலால் மேகம் மழையைப் பெய்யாது; உத்தம பத்தினிப் பெண்டிரைப் போலப் பிறருடைய மனத்தைச் சுடுந்தன்மையும் உனக்கு இல்லாது போயிற்று' - எனக் கூறியது சதுக்கப்பூதம். இக்கதையின் மூலம் தமிழர் நாடகக்கலை இக்காலகாட்டத்தில் பிரசித்திபெற்றிருக்கவில்லை என்பதனை அறியலாம். கி. பி. ஏழாம் நூற்றாண்டுன் காலப்பகுதியில் தமிழகத்தில் பல்லவ மன்னர்களின் ஆட்சி நிலைகொண்டிருந்த சமயம் நாடகக்கலை சிறப்புப்பெறாமலேயே இருந்தது. வடமொழியில் பற்றுக்கொண்ட பல்லவ மன்னனான மகேந்திர வர்மன் 'மத்த விலாசப் பிரகசனம்' என்னும் வடமொழி நாடகத்தினை எழுதினான் என்பதும் குறிப்பிடத்தக்கது.

மறுமலர்ச்சி காலம்
கி. பி. 900 முதல் கி. பி. 1300 வரை சோழ மன்னர்களின் ஆட்சியில் தமிழகத்தின் கலைகள் வளர்ச்சிபெற்றன. கி. பி. 846 ஆம் ஆண்டு விசயாலய சோழனால் எழுச்சிபெற்ற சோழப்பேரரசு முதலாம் பராந்தக சோழன் ஆட்சியின் பின்னர் வலுப்பெற்றது. கி. பி. 1246 முதல் 1272 வரை ஆட்சி செய்த மூன்றாம் இராசேந்திர சோழன் காலத்தில் தமிழ் நாடகக்கலை வளர்ச்சிபெற்றது.

கி. பி. பதினேழாம் நூற்றாண்டுக் காலப்பகுதியில் சோழ அரசர்களின் ஆதரவில் அரண்மனைகள், கோயில்கள் போன்றனவற்றில் நடத்தப்பெற்ற நாடகக்கலை மக்கள் மன்றங்களில் மீண்டும் நடத்தப்பட்டன. சங்க காலத்தில் நடைபெற்ற பொதுவியற் கூத்துக்கள் போலவே பதினேழாம் நூற்றாண்டுக் கால நாடக்கக்கலை மக்களின் கலையாக வளர்ச்சி பெற்று பின் பள்ளு, குறவஞ்சி, நொண்டி போன்ற நாடகங்கள் தோன்றின.

இன்றைய தமிழ் நாடகக்கலைக்கு வித்திட்டோர் கி. பி. பத்தொன்பதாம் நூற்றாண்டளவில் 'தெருக்கூத்து' என்ற நாடக வடிவம் தோற்றம் பெற்றது. தெருக்கூத்தென அழைக்கப்பட்டிருந்த நாடகக்கலையின் வளர்ச்சிக்கு வித்திட்டவராகக் கோவிந்தசாமி ராவ் விளங்குகின்றார். நாடகத்தின் நேர அமைப்பினை இக்காலத்திற்கேற்ப மாற்றி அமைத்தவரும் ஆவார் கோவிந்தசாமி ராவ். கி. பி. 1891 ஆம் ஆண்டளவில் பயின்முறை நாடகக்குழுவினைத் தோற்றுவித்த 'நாடகத் தந்தை' என அழைக்கப்பெற்ற பம்மல் சம்பந்த முதலியாரால் தமிழ் உரை நடை நாடகங்கள் தமிழ் நாடக மேடையினுள் அறிமுகம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. மேலும் இவர்மூலம் நாடக மேடைகளில் அமைக்கப்பெற்ற கட்டடம் போன்ற செயற்கையில் செய்யப்பட்ட அமைப்பு மேடையில் மேலும், கீழும் ஏறுவதும் இறங்குவதுமான புதிய யுக்திகளினை அறிமுகமும் செய்தார் பம்மல் சம்பந்த முதலியார். கி. பி. 1891 ஆம் ஆண்டு தனது 24 ஆம் அகவையில் நாடகத்துறையில் தன்னை ஈடுபடித்திக்கொண்டு 'தமிழ் நாடகத் தந்தை' 'தமிழ்நாடகத் தலைமையாசிரியர்' போன்ற பட்டங்களினைப் பெற்ற சிறப்பினை உடையவர் தவத்திரு சங்கரதாச சுவாமிகள். கி. பி. 1872 ஆம் ஆண்டு பிறந்தவரான சி. கன்னையா தமது பதினேழாவது வயதில் 'இந்து வினோத சபா' என்ற நாடகக் குழுவொன்றில் சேர்ந்து தனது 26 ஆம் வயதில் 'ஸ்ரீகிருஷ்ணவினோத சபா' என்ற நாடகக்குழுவொன்றினை தோற்றுவித்தார். மின் விளக்கு ஒளிகளால் வண்ணத்திரைகளுடன் புதிய வடிவங்களினை மேடையில் தோற்றுவித்த முதல் நாடக அமைப்பாளர் என்ற பெருமையினை உடையவர். மேலும் இவரது நாடகங்களில் உயிருள்ள மான், காளை, பசு, யானை போன்ற விலங்கினங்களை நடிக்க வைத்துப் புதுமை நிகழ்த்தினார். சி. கன்னையாவிற்கு முற்பட்ட நாடக அரங்குகள் மேடைகளாக இருந்து வந்தன இதனை மாற்றி முக்கோண கனபரிமாண அமைப்புமூலம் அரங்குகளை அமைத்து ஒரு அரங்கில் காட்சி நடந்து கொண்டிருக்கும்வேளை அடுத்த அரங்கில் அடுத்த காட்சிக்குத் தேவையான ஏற்பாடுகளைச் செய்யப்பட்டிருக்கும் இவரது நாடகங்களில். நாடகங்களின் காட்சியமைப்புக்களின் வழிகாட்டி சி. கன்னையா எனப் பலராலும் கருதப்படுகின்றவர். 'நவாப் ராஜமாணிக்கம்' என அழைக்கப்பெற்ற டி. எஸ். இராசமாணிக்கம் என்பவரால் நாடகம் ஒரு மக்கள் இலக்கியம் என்ற பொருளால் அழைக்கப்பெற்றது. மேலும் இவர் தமது நாடக மேடையினை இயங்கு உலகமாக மாற்றியமைத்தவர் என்ற பெருமையினை உடையவர். நவாப் ராஜமாணிக்கத்தின் அனைத்து நாடகங்களும் ஏறத்தாழ எட்டாயிரம் முறைகள் மேடையேறியதும் குறிப்பிடத்தக்கது. இருபதாம் நூற்றாண்டின் தொடக்கம் முதல் ஜம்பதாண்டு காலம் தமிழ் நாடகக்கலைக்குப் பெரும்பங்காற்றியவர்கள் தி. க. சங்கரன், தி. க. முத்துசாமி,தி. க. சண்முகம், தி. க. பகவதி ஆகிய தி. க. சண்முகம் சகோதரர்கள் ஆவர். இருபதாம் நூற்றாண்டின் முதல் ஜம்பது ஆண்டுகள் தமிழ்மரபுவழி நாடகங்கள் சீரான வளர்ச்சியினை எட்டியபொழுது தி. கெ. சண்முகத்தின் இராஜராஜசோழன் என்ற நாடகத்தின் மூலமும், 'நாடகக் காவலர்' என அழைக்கப்பெற்ற ஆர். எஸ். மனோகரின் இலங்கேஸ்வரன் என்ற நாடகத்தின் மூலமும் தமிழ் நாடகக்கலை மிகவும் பிரபலமடைந்தது குறிப்பிடத்தக்கது.








Sunday, 5 November 2017

TAMIL CINEMA ,THEATRE , HISTORY


TAMIL CINEMA ,THEATRE , HISTORY



சரியாக நூறு ஆண்டுகளுக்கு முன் டவுன் ஹால் என்று அழைக்கப்பட்டது மதராஸின் விக்டோரியா ஹால். சங்கரதாஸ் சுவாமிகளும் பம்மல் சம்பந்த முதலியாரும் நாடகம் நடத்திய ஹால் அது. ஜட்கா வண்டிகள், ரயிலில் வந்திறங்கி சிலுசிலு கடற்கரைக் காற்றை அனுபவித்தபடி அந்த ஹாலில் விடிய விடிய நாடகம் பார்ப்பது அன்றைய மதாராஸ்வாசிகளுக்கு ஆனந்த அனுபவமாக இருந்திருக்கிறது.

ஷேக்ஸ்பியரின் ஆங்கில நாடகங்கள் ‘ஷேக்ஸ்பியர் வீக்’ என்ற நாடகத் திருவிழாவாக இங்கே நிகழ்த்தப்பட்ட வரலாறும் உண்டு. அரங்கம் நிரம்பி வழிய பாரதியும் விவேகானந்தரும் கோபால கிருஷ்ண கோகலேவும், வல்லபாய் படேலும் பேசிய பெருமைக்குரிய இடம் இது. இன்று பயன்பாடற்றுச் சிதைந்துகொண்டிருக்கும் வரலாறாக, சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனை எதிரே உயிரைக் கையில் பிடித்துக்கொண்டு நிற்கிறது.

விக்டோரியா ஹாலின் பேசும் சித்திரம்

வெள்ளைக்காரர்களின் பால் ரூம் நடனத்துக்காக இந்தப் பொது அரங்கின் முதல் தளம் ஒதுக்கப்பட்டிருந்தது. இத்தனை பெருமைக்குரிய இந்த டவுன் ஹால், மதராஸின் முதல் திரையரங்கு என நாம் கொண்டாடும் ‘எலெக்ட்ரிக் தியேட்டர்’ உருவாக உந்துதலாக இருந்தது. இவை எல்லாவற்றுக்கும் சிகரம்போல் இந்த விக்டோரியா ஹால் மூலம்தான் தமிழக மக்களுக்கும் அன்றைய சென்னைவாசிகளுக்கும் மவுனத் திரைப்படங்கள் அறிமுகமாகின. நூற்றுக்கணக்கான மவுனத் திரைப்படங்கள் அந்நாட்களில் இங்கே திரையிடப்பட்டன. அப்படிப்பட்ட விக்டோரியா ஹாலில், பேசும்படம் பார்க்கும் உணர்வை, தாம் திரையிட்ட மவுனப் படங்களுக்கு வழங்கினார் ஒரு ஒளிப்படக்காரர். அவர்தான் ரகுபதி வெங்கய்யா நாயுடு என்கிற ஆர்.வெங்கய்யா.




ஆந்திர மாநிலம், இன்றைய கிருஷ்ணா மாவட்டத்தில் உள்ள மச்சிலிப்பட்டினத்தில் பிறந்தவர் வெங்கய்யா. அவரது தந்தையான ரகுபதி பிரிட்டிஷ் ராணுவத்தின் சுபேதாராக இருந்தார். வெங்கய்யாவின் பெற்றோர் மச்சிலிப்பட்டினத்திலிருந்து குடிபெயர, தனது 18 வயதில் மதராஸ் மண்ணில் கால் வைக்கிறார் வெங்கய்யா. ஓவியங்கள், சிற்பங்கள் ஆகியவற்றில் ஆர்வம் மிகுந்திருந்த வெங்கய்யா, தனது இருபதாவது வயதில் அப்பா அளித்த நிதியுதவியுடன் சிறு ஆர்ட் கேலரி ஒன்றைத் தொடங்குகிறார். அதில் ஸ்டில் கேமராவுக்கான சிங்கிள் பிலிம்களை விற்க ஆரம்பித்தார். அதனால் பல ஒளிப்படக் கலைஞர்கள் அவரது வியாபாரத் தலத்துக்கு வந்து சென்றனர். அவர்கள் மூலம் ஒளிப்படக் கலை மீதான ஆர்வம் வெங்கய்யாவுக்குத் தோன்றியது. ஒளிப்படக் கலையைக் கற்றுக்கொண்டு திறமையான போட்டோகிராபராக மாறுகிறார்.

அடமானம்

ஒரு கட்டத்தில் தனது ஆர்ட் கேலரியை போட்டோ ஸ்டூடியோவாகவும் மாற்றிவிடும் அவர், சிறந்த போட்டோகிராபர் என்ற பெயரையும் சம்பாதிக்கிறார். அவரது ஸ்டூடியோ தொழில் வெற்றிகரமாக நடந்துகொண்டிருந்த நேரத்தில் மவுனப் படங்களுக்குப் பெரும் வரவேற்பு இருந்தது. அப்போது ‘க்ரோனோமெகாபோன்' (Chronomegaphone) என்ற ஒலியை வெளிப்படுத்தும் கருவியைப் பயன்படுத்தி மவுனப் படங்களைப் பேசும்படங்கள்போல் காட்டலாம் என்ற செய்தி பத்திரிகைகளில் வெளியாகியிருந்தது. அதைப் படித்து ஆச்சரியப்பட்ட வெங்கய்யா, அதுபற்றித் தனது மனைவியிடம் பகிர்ந்துகொண்டார். அவரது மனைவியோ “நாம் ஏன் அந்த அந்தக் கருவியை வாங்கக் கூடாது?” என்று கேட்டிருக்கிறார்.

அதன் விலை 30 ஆயிரம் ரூபாய். எனினும் மனைவி தந்த உற்சாகத்தால் உந்தப்பட்ட வெங்கய்யா, தனது போட்டோ ஸ்டூடியோவை அடகுவைத்துக் கடன் வாங்கினார். உபகரணத்துக்கான மொத்தப் பணத்தையும் கட்டி, ஜான் டிக்கென்ஸன் நிறுவனத்தின் மூலம் (John Dickinson and Company) அந்த ஒலிக் கருவியைத் தருவித்தார்.

மவுனப் படமா? பேசும் படமா?


கருவி கைக்குக் கிடைத்ததும் அதை வைத்து அவர் வெறுமனே வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கவில்லை. க்ரோனோமெகாபோன் ஒலிப்பதிவுத் தட்டுடன் இங்கிலாந்தில் அன்று புகழ்பெற்று விளங்கிய 12 துண்டுப் படங்களை வாங்கினார். ‘அன்டர் தி பனாமா’ (Under the Panama), ‘ஸ்விங் சாங்’ (Swing Song), ‘சீ சர்பென்ட்’ (Sea Serpent), ‘ஃபயர்மேன் சாங்’ (Fireman Song), ‘மெகாடோ’ (Micado) உள்ளிட்ட அந்தப் படங்களை விக்டோரியா ஹாலில் திரையிட்டார். திரைக்குப் பின்னால் ஒளித்து வைக்கப்பட்டிருந்த க்ரோனோ மெகாபோனிலிருந்து திரையில் படம் தொடங்கும் அதே நேரத்துக்குத் துல்லியமான ஒத்திசைவுடன் (sink) ஒலிக்க விட்டார்.

பார்வையாளர்கள் இந்தப் புதிய அனுபவத்தால் சொக்கிப்போனார்கள். பேசும்படம் பார்ப்பது போன்ற அனுபவத்தை, பேசும்படங்கள் அறிமுகமாவதற்கு 20 ஆண்டுகளுக்கு முன்பே பார்வை யாளர்களுக்குக் கொடுத்தார் ஆர். வெங்கய்யா. தனது திரையிடல்கள் சாமானிய மக்களையும் மகிழ்ச்சிப்படுத்த வேண்டும் என்றும் அவர் நினைத்தார். இதனால் தனது க்ரோனோமெகாபோனுடன் சாமானிய மக்களை நாடிச் சென்றார்.

எக்ஸ்பிளனேட் டென்ட்டும் கெயிட்டியும்

அன்று ஆங்கிலேயர்களுக்குக் கலாசி வேலைகளைச் செய்வதற்காகக் குடியேற்றப்பட்ட தொழிலாளர்களும் சென்னையின் பூர்வகுடிகளும் நிறைந்திருந்த எஸ்பிளனேடில் 1910-ல் டென்ட் சினிமா கொட்டகை ஒன்றை அமைத்து அதில் தனது க்ரோனோமெகாபோனுடன் கூடிய துண்டுப் படங்களைத் திரையிட்டார். பின்னர் டென்ட் சினிமாவுடன் தனது சொந்த ஊரான மச்சிலிப்பட்டினம், பெங்களூர், பம்பாய் ஆகிய நகரங்களுக்குப் பயணம் செய்தார்.

தனது பன்னிரெண்டு படங்களும் தேய்மானம் ஏற்பட்டு, திரையில் கோடுகள் அதிகரித்து விட்டதைக் கண்ட வெங்கய்யா, ‘பேர்ல் ஃபிஷர்’ (Pearl Fisher), சிகார் பாக்ஸ் (Cigar Box), ‘ராஜாஸ் கேஸ்கெட்’ (Raja's Casket), ‘பிளாக் பிரின்சஸ்’ (Black princes) ஆகிய புதிய துண்டுப் படங்களைத் தருவித்துக்கொண்டு இலங்கை, பர்மா உட்படப் பல நாடுகளுக்குச் சென்று திரையிட்டுப் பெரும்பொருள் ஈட்டினார்.


நான்கு ஆண்டுகள் இவ்வாறு டென்டு சினிமா பயணம் மேற்கொண்ட வெங்கய்யாவுக்குச் சென்னை திரும்பும் வழியில் உதித்த எண்ணம்தான் கெயிட்டி திரையரங்கம். அலைந்து திரிந்து மக்களை நோக்கித் திரைப்படங்களைக் கொண்டுசெல்வதைவிட அவர்களைத் திரைப்படம் நோக்கி இழுக்க மேலைநாடுகளைப் போல் நாமும் திரையரங்கம் அமைக்க வேண்டும் என்று முடிவு செய்தார். 1912-ல் சிந்தாரிப்பேட்டையில் அன்று ‘கறுப்பர்கள் தெரு’ என்று அழைக்கப்பட்ட பிளாக்கர்ஸ் சாலையில் கெயிட்டி சினிமா ஹாலைத் தொடங்கினார்.

வரலாற்றில் இடம்

மவுனப்படக் காலம், க்ரோனோமெகாபோன் காலம், பேசும்படக் காலம், வண்ணத் திரைப்படக் காலம் என்று எல்லா காலத்திலும் புகழ்பெற்று விளங்கியது கெயிட்டி. 1939-ல் கே. சுப்ரமணியத்தின் ‘தியாக பூமி’ இங்கே வெளியானபோது பிரிட்டிஷ் அரசு அந்தப் படத்தைத் தடை செய்தது. அதையும் மீறி கெயிட்டியில் திரையிடப்பட்டது. அப்போது பிரிட்டிஷ் போலீஸ் முதன்முதலில் தடியடி நடத்திக் கூட்டத்தைக் கலைத்தது இந்தத் திரையரங்கில்தான்.

இவ்வாறு வரலாற்றில் இடம்பிடித்த இந்தத் திரையரங்கம் 100 ஆண்டுகளைக் கொண்டாடவிருந்த நிலையில், கடந்த 2005-ம் ஆண்டு தனது கலைச் சேவையை நிறுத்திக்கொண்டது. இன்று கெயிட்டி இருந்த இடம் வணிக வளாகமாக மாறி நிற்கிறது. கெயிட்டி திரையரங்கைத் தொடங்கிய வெங்கய்யா, பின்னர் கிரவுன், குளோப் ஆகிய திரையரங்குகளையும் சென்னையில் நிறுவி 1929-ம் ஆண்டு வரை புகழ்பெற்ற திரையரங்க அதிபராக விளங்கி 1941-ல் மறைந்தார்.



தந்தை வழியில் மகன்

வெங்கய்யாவின் மகன்களில் ஒருவரான ஆர். பிரகாஷ், தனது தந்தையின் விருப்பத்தை ஏற்று லண்டனுக்கும் ஹாலிவுட்டுக்கும் சென்று சினிமா ஒளிப்பதிவு, இயக்கம் ஆகியவற்றைத் திரைப்படப் பள்ளிகளில் முறைப்படி கற்றுத் திரும்பினார். பின்னர் 'ஸ்டார் ஆஃப் ஈஸ்ட் பிலிம்ஸ்' என்ற ஸ்டூடியோவைத் தொடங்கி 'கஜேந்திர மோட்சம்', 'நந்தனார்', 'பீஷ்மர் பிரதிக்ஞை' ஆகிய மவுனப் படங்களை இயக்கித் தயாரித்துப் புகழ்பெற்றார். இவரிடம் உதவியாளர்களாக இருந்து சினிமா பாலபாடம் கற்றுக்கொண்டவர்கள்தான் தமிழ் சினிமாவின் புகழ்பெற்ற ஆரம்ப கால இயக்குநர்கள் சி. புல்லையா, ஒய்.வி.ராவ் ஆகிய இருவரும்.