Showing posts with label italy. Show all posts
Showing posts with label italy. Show all posts

Friday, 5 February 2021

VENICE -FLOATING CITY IN SEA

 


VENICE -FLOATING CITY IN SEA

வெனிஸ் ‘கடலில் மிதக்கும் நகரம்’


இத்தாலியிலிருந்து விழித்தெழு! எழுத்தாளர்

“அது கடலில் மிதக்கும் கம்பீரமான நகரம். அதன் அகன்ற தெருக்களிலும், குறுகலான தெருக்களிலும் வலம்வருகிற கடல் ஒருகணம் சீறியவாறு ஏறும், மறுகணம் சிணுங்கியவாறு இறங்கும். அதன் அரண்மனையின் பளிங்குக் கல்லில் கடற்பாசி அமர்ந்தபடி அடம்பிடிக்கும்.”​—⁠சாமுயல் ரோஜர்ஸ், ஆங்கில கவிஞர், 1822.

இங்கு விவரிக்கப்பட்டுள்ள அந்த “கம்பீரமான நகரம்” வெனிஸ் ஆகும். மிகப் பெரிய குடியரசு ஒன்றின் முன்னாள் தலைநகரான வெனிஸ், நில மற்றும் கடல் பேரரசை பல நூற்றாண்டுகளாக ஆதிக்கம் செலுத்தி வந்தது. இந்நகரம் “கடலில்” எப்படிக் கட்டப்பட்டது, ஏன் கட்டப்பட்டது? இதன் கம்பீரம் எதன் மீது சார்ந்திருந்தது? இந்தப் பேரரசு எவ்வாறு முடிவுக்கு வந்தது? இதன் மகத்துவத்திற்கு அடையாளமான சின்னங்கள் ஏதாவது இன்றைக்கு மீந்திருக்கின்றனவா?

விரும்பப்படாத இடம்




ஏட்ரியாட்டிக் கடலின் வடமேற்கு முனையில் உள்ள கடற்கழியின் மத்தியில் அமைந்திருக்கும் வெனிஸ் நகரம் 118 தீவுகளால் ஆனது. அந்தக் கடலில் விழும் நதிகள் பேரளவான வண்டல் மண்ணை ஆழமற்ற கடலோரத்தில் படிய வைக்கின்றன. கடலேற்ற அலைகளும் நீரோட்டமும் தொடர்ச்சியான மணற்திட்டுகளை உருவாக்கியிருக்கின்றன; இவை கிட்டத்தட்ட 51 கிலோ மீட்டர் நீளத்திலும் 14 கிலோ மீட்டர் அகலத்திலும் உள்ள கடற்கழியைச் சூழ்ந்து அமைந்திருக்கின்றன. கடலுக்கு வழிவிடும் மூன்று குறுகிய திறப்புகள் ஒரு மீட்டர் உயர கடலேற்ற அலைகளுக்கும் கடல்சார்ந்த போக்குவரத்துக்கும் வழிசெய்கின்றன. “ஓயாத வர்த்தக போக்குவரத்திற்குப் பல நூற்றாண்டுகளாக இந்தக் கடற்கழியே கடைசி நிறுத்தமாக இருந்தது; அப்போக்குவரத்து ஏட்ரியாட்டிக் கடல் வரை சென்றது அல்லது மத்திய மற்றும் வட ஐரோப்பாவில் இருந்து ஆறுகள் வழியாகவோ வணிகக்கூட்டத்தாரின் பாதைகள் வழியாகவோ வந்தது” என ஒரு கட்டுரை சொல்கிறது.

பொ.ச. ஐந்தாம் நூற்றாண்டுக்கும் ஏழாம் நூற்றாண்டுக்கும் இடைப்பட்ட காலத்தில் இந்நகரம் பிறந்திருக்கலாம் என அறிஞர்கள் கருதுகிறார்கள். அந்தச் சமயத்தில் வடக்கிலிருந்து வந்த நாகரிகமற்ற முரட்டுத்தனமான போராளிகள் முக்கிய நிலப்பரப்பில் இருந்த சமுதாயத்தை எரித்துப் போட்டு கொள்ளையடித்தார்கள். இந்தக் கொள்ளையர்கள் வருவதை அறிந்த அநேகர், எளிதில் சென்றடைய முடியாத, ஆனால் பாதுகாப்பான இந்தக் கடற்கழித் தீவுகளில் தஞ்சமடைந்தார்கள்.



வெனிஸ் நகரத்தார் ஆரம்பத்தில், கம்புகளைச் சேற்றில் ஊன்றி அஸ்திவாரம் போட்டு, மெல்லிய கிளைகளாலோ கோரையாலோ வேய்ந்து கட்டடங்களைக் கட்டினார்கள். பிற்பாடு, ஆயிரக்கணக்கான மரக்கட்டைகளால் அஸ்திவாரம் போட்டு அதன் மேல் கற்களை வைத்துக் கட்டினார்கள். இதற்கிடையில், பிற்பாடு நகரத்தின் மையமாக ஆன ரியால்டோ என்ற கடற்கழி தீவுகள் அடிக்கடி தண்ணீரால் நிரம்பின; இதனால், பேரளவான குடியிருப்பாளர்களுக்கு இடமளிக்கத் தேவையான ஸ்திரமும் இடமும் இல்லாமல் போயின. ஆகவே நிலத்தைச் சீர்படுத்தும் பண்டைய முறைகளைப் பயன்படுத்தி நீரை வெளியேற்றவும் இத்தீவுகளை விரிவாக்கவும் வேண்டியிருந்தது. குடியிருப்பாளர்கள் படகுகளைச் செலுத்த வசதியாக வாய்க்கால்களை வெட்டி, சிறந்த முறையில் கட்டடங்களைக் கட்டுவதற்காக இத்தீவுகளை வலுப்படுத்தினார்கள். கால்வாய்களே தெருக்களாயின; அவற்றின் குறுக்கே அமைக்கப்பட்ட பாலங்கள் ஒரு தீவிலிருந்து மற்றொன்றுக்குச் செல்ல பாதசாரிகளுக்கு உதவின.

ஒரு குடியரசின் பிறப்பும் எழுச்சியும்



மேற்கில் ரோம சாம்ராஜ்யம் வீழ்ச்சியடைந்த பிறகு, இந்தக் கடற்கழித் தீவுகள் தற்போது இஸ்தான்புல் என்றழைக்கப்படும் கான்ஸ்டான்டினோபிலை தலைநகராகக் கொண்ட பைஸான்டைன் பேரரசின் கீழ் வந்தன. என்றபோதிலும், இந்தக் கடற்கழி சமூகத்தினர் கலகம் செய்து சுதந்திரத்திற்காகப் போராடினர். இதன் விளைவாக, பிராங்கியருக்கும் பைசாண்டியருக்கும் மத்தியில் வெனிஸ் சிக்கிக்கொண்டது; அதாவது “ஒரு சீமானின் ஆட்சிக்குட்பட்ட சிறிய சுதந்திர பிராந்தியமான அது, இரண்டு பேரரசுகளின் மத்தியில் வழக்கத்திற்கு மாறான நிலைக்கு” தள்ளப்பட்டதாக விவரிக்கப்படுகிறது. இந்தத் தனிச்சிறப்பான நிலைமை ஒரு பெரிய “வணிக போக்குவரத்து மார்க்கமாக” இந்நகரம் செழிக்க வழி செய்தது.

அதற்குப் பின் வந்த நூற்றாண்டுகளில், தன்னிடமுள்ள ராணுவ பலத்தைப் பயன்படுத்தி மத்தியதரைக் கடலை ஒட்டியிருந்த சாரஸனியர்கள், நார்மனியர்கள், பைஸாண்டியர்கள் ஆகியோர் மீது நடவடிக்கை எடுத்தது. 1204-⁠ல் நான்காம் சிலுவைப் போரை ஆதாயப்படுத்தி, முக்கிய எதிரியான கான்ஸ்டான்டிநோபிலை அழித்துப்போட்ட பிறகு வெனிஸ் மிக வல்லமையான சக்தியாக ஆனது. கருங்கடல், ஈஜியன் கடல் ஆகியவற்றின் கரையோரத்திலும், கிரீஸ், கான்ஸ்டான்டிநோபில், சிரியா, பாலஸ்தீனா, சைப்ரஸ், கிரீட் ஆகிய இடங்களிலும் வெனிஸ் அநேக வியாபார ஸ்தலங்களை அமைத்திருந்தது. இப்போது அது பைஸாண்டிய பேரரசின் வீழ்ச்சியைச் சாதகமாகப் பயன்படுத்தி, அந்த இடங்களில் ஏராளமானவற்றைத் தன் ஆட்சிக்குட்பட்ட குடியேற்றங்களாக மாற்றியது.

“மத்தியதரைக் கடல் மகாராணி”

12-⁠ம் நூற்றாண்டிலேயே, வெனிஸின் பிரம்மாண்ட கப்பல்கூடங்கள் போர்க்கப்பல்கள் ஒவ்வொன்றையும் சில மணி நேரத்திற்குள் முழுமையாக உற்பத்தி செய்யும் திறனுடையதாக இருந்தன. உள்ளூர் தொழிற்சாலைகள் கண்ணாடி மற்றும் ஆடம்பர துணிவகைகளான லேஸ், பட்டுத்துணி (brocade), பளபளப்பான துணிவகை (damask), வெல்வெட் ஆகியவற்றை உற்பத்தி செய்தன. வெனிஸைச் சேர்ந்த உள்நாட்டு வணிகர்களும் வெளிநாட்டு வணிகர்களும் மேற்கிலிருந்து ஆயுதங்கள், குதிரைகள், அம்பர், ரோமங்கள், மரக்கட்டை, கம்பளி, தேன், மெழுகு ஆகியவற்றையும் அடிமைகளையும் கொண்டுவந்தனர். மறுபட்சத்தில், மத்தியதரைக் கடலின் கிழக்கிலுள்ள இஸ்லாமிய பிரதேசங்களிலிருந்து தங்கம், வெள்ளி, பட்டு, வாசனைப் பொருட்கள், பருத்தி, சாயம், தந்தம், வாசனை திரவியங்கள் போன்ற அநேக பொருட்கள் இறக்குமதி செய்யப்பட்டன. நகர அதிகாரிகள் அதன் சந்தைக்குக் கொண்டுவரப்பட்ட அல்லது அங்கிருந்து அனுப்பப்பட்ட எல்லா பொருட்களுக்கும் வரிகள் வசூலிக்கப்படுமாறு பார்த்துக்கொண்டனர்.

பலாடியோ, டிஷன், டின்டாரெட்டோ போன்ற பிரபல கட்டடக்கலை நிபுணர்களாலும் ஓவியர்களாலும் அலங்கரிக்கப்பட்ட வெனிஸ் நகரம், லா ஸேரேநிசீமா, அதாவது “மிக அமைதியானது” அல்லது “அழகானது” என்பதாக விவரிக்கப்படுகிறது. “நாகரிக உலகின் மிகவும் செல்வச் செழிப்பான வியாபார மையமாக கொடிகட்டிப் பறந்த” இந்த நகரம் “மத்தியதரைக் கடல் மகாராணி” என்று அழைக்கப்படுவது மிகப் பொருத்தமானதே. பல நூற்றாண்டுகளுக்கு அது அவ்வாறே இருந்தது. ஆனால் 16-⁠ம் நூற்றாண்டில் முக்கிய வியாபார தடம் அட்லாண்டிக்கிற்கும் மேற்கே அமெரிக்க கண்டங்களுக்கும் மாற ஆரம்பித்தபோது அதன் ஆதிக்கம் மங்க ஆரம்பித்தது.

மத்தியதரைக் கடல் பகுதி முழுவதுமாகச் சிதறியிருந்த வெனிஸ் குடியேற்றங்கள் அருகருகே அமையவில்லை; ஒரே அரசாங்கத்தின் கீழ் ஒன்றுபடவில்லை; ஒன்றாகச் சேர்ந்து ஒத்துழைக்கவுமில்லை. இதனால் குடியேற்றங்களை இழக்க வேண்டிய கட்டாயம் வெனிஸுக்கு ஏற்பட்டது. அருகிலிருந்த அரசுகள் வெனிஸின் பிராந்தியங்களை ஒன்றன் பின் ஒன்றாகக் கைப்பற்ற ஆரம்பித்தன. கடைசியில், நெப்போலியன் இந்தக் கடற்கழி நகரத்தை 1797-⁠ல் கைப்பற்றி ஆஸ்திரியாவின் ஆளுகைக்கு உட்படுத்தினார். 1866-⁠ல் வெனிஸ் நகரம் இத்தாலி நாட்டின் பாகமானது.

கனவு நகரம்

வெனிஸுக்கு விஜயம் செய்யும் அநேகருக்கு இரண்டு, மூன்று நூற்றாண்டுகள் பின்னோக்கிச் சென்றது போல் இருக்கும். இந்நகரத்தின் சூழல் தனித்தன்மையுடையதாக இருக்கிறது.

அமைதியே அங்கு காணப்படுகிற ஒரு முக்கிய அம்சம். பாதசாரிகளுக்கான குறுகிய நடைபாதை பெரும்பாலும் கால்வாய்களிலுள்ள போக்குவரத்திலிருந்து பிரித்து வைக்கப்பட்டிருக்கிறது; ஆனால் கால்வாயை ஒட்டியுள்ள பாதைகளும், கால்வாயுக்குக் குறுக்கே செல்லும் வளைந்த கற்பாலங்களின் பாதைகளும் இதற்கு விதிவிலக்கு. படகுகளே இந்தத் ‘தண்ணீர்த் தெருக்களில்’ செல்ல முடிகிற ஒரே மோட்டார் வாகனங்கள். வெனிஸ் நகரம் கண்கவர் காட்சிகள் நிறைந்ததாக இருக்கிறது. தேவாலயத்தோடு கூடிய புனித மார்க் சதுக்கம், மணிக் கூண்டு, பச்சைக் கடற்கழியில் சூரிய ஒளிக்கதிர்கள் பிரகாசிக்கிற பிரம்மாண்ட கடற்பகுதி ஆகியவை ஓவியர்களின் மனதைத் தூண்டுகின்றன.

முக்கிய சதுக்கத்தில் எப்போதும் பிஸியாக காணப்படும் கஃபேக்கள் சுற்றுலாப் பயணிகளையும், உள்ளூர்வாசிகளையும் ஒருசேர சுண்டி இழுக்கின்றன. சிறிய ஆர்கெஸ்ட்ராக்கள் இசைக்கும் பாரம்பரிய இன்னிசையைக் கேட்டுக்கொண்டே நீங்கள் ஒரு பானத்தையோ அல்லது ஜெலாட்டோ ஐஸ்கிரீமையோ ருசிக்கலாம். அங்கு உட்கார்ந்து, வருவோர் போவோரை வேடிக்கை பார்த்துக் கொண்டும், சுற்றியுள்ள பிரமாதமான கட்டடக் கலையை ரசித்துக் கொண்டும், இதுவரை எந்தக் காரையும் காணவில்லையே என்று நினைத்துக் கொண்டும் இருக்கையில், ஏதோ பல காலம் பின்னோக்கிச் சென்றுவிட்டதைப் போன்றே நீங்கள் உணருவீர்கள்.

கலைப் பொக்கிஷங்களைத் தேடுவோரை இந்நகரம் சுண்டி இழுக்கிறது. இங்குள்ள எண்ணற்ற அரண்மனைகள், அருங்காட்சியகங்கள், தேவாலயங்கள் போன்றவற்றில் பல பிரபல ஓவியர்களின் ஓவியங்கள் குடி கொண்டிருப்பது தெரியவரும். ஆனால் பார்வையாளர்கள் சிலர், குறுகலான பாதைகளில் ‘ஹாயாக’ நடந்துசென்று, தங்களைச் சுற்றியுள்ள வித்தியாசமான காட்சிகளைப் பார்ப்பதிலேயே திருப்தியடைந்து விடுகிறார்கள். சுற்றுலாப் பயணிகளுக்கென்றே எண்ணிறந்த கடைகள் உள்ளன; கடற்கழித் தீவான பூரானோவின் லேஸ் மற்றும் எம்பிராய்டரி வேலைகள், முரானோவின் கிரிஸ்டல் மற்றும் கண்ணாடிப் பொருட்கள் ஆகியவை அங்கு விற்கப்படுகின்றன; இவற்றிற்காக இந்நகரம் புகழ்பெற்று விளங்குகிறது. வாப்பரிட்டோ, அதாவது மோட்டார் படகுகளில் கொஞ்ச நேரம் சவாரி செய்து இத்தீவுகளுக்குச் செல்லலாம், அங்கே இந்தப் பொருட்கள் எவ்வாறு தயாரிக்கப்படுகின்றன என்பதை நீங்கள் கண்கூடாகக் காணலாம். இப்படகுகளில் சிறிது நேரம் சவாரி செய்வதே ஓர் அலாதியான அனுபவம்தான்.

கூரிய முகடுள்ள வளைவுகளோடு கூடிய பிரம்மாண்டமான அரண்மனைகள், கடந்த காலத்து கிழக்கத்திய செல்வாக்கைப் பறைசாற்றுகின்றன. இந்நகரத்தின் முக்கிய போக்குவரத்துப் பாதையான கிராண்ட் கேனாலின் மீதுள்ள புகழ்பெற்ற ரியால்டோ பாலத்தையும், அதன் கீழே அமைதியாக நீந்திச் செல்லும் பளபளப்பான கருப்புப் காண்டோலா படகுகளையும் நின்று வேடிக்கை பார்க்க அநேகர் கூட்டம் கூட்டமாகச் செல்கின்றனர்.

தப்பிப்பிழைக்க இன்னும் போராட்டம்

“அழகான குடியரசு” வீழ்ந்து இரண்டு நூற்றாண்டுகளுக்குப் பின்னர், வெனிஸ் இன்னமும் தப்பிப்பிழைக்க போராடிக் கொண்டிருக்கிறது; ஆனால் வித்தியாசமான போராட்டங்களில் ஈடுபட்டுள்ளது. சரித்திரப் புகழ்மிக்க இந்த மையப் பகுதியில், 1951-⁠ல் இதன் ஜனத்தொகை 1,75,000; 2003-⁠ல் 64,000 ஆகக் குறைந்தது. இதற்குக் காரணம் சொத்துக்களின் விலையேற்றம், வேலையின்மை, சொற்ப நவீன வசதிகள் ஆகியவையே. அழிவை நோக்கிச் சென்றுகொண்டிருக்கும் இந்நகரம் புதுப்பிக்கப்பட வேண்டுமா வேண்டாமா, எப்படி அதைச் செய்வது போன்ற சிக்கலான சமூக மற்றும் பொருளாதார பிரச்சினைகள் தீர்க்கப்பட வேண்டும்.

இங்குள்ள பொருளாதார நிலைமை சரிசெய்யப்படும் என்ற நம்பிக்கையில் 1920-களில் புதிய தொழிற்சாலைப் பகுதியொன்று முக்கிய நிலப்பரப்பில் உருவாக்கப்பட்டது. எண்ணெய்க் கப்பல்கள், சுத்திகரிப்பு மையங்களைச் சென்றெட்ட உதவியாக இந்தக் கடற்கழியின் குறுக்கே ஆழமான கால்வாய் ஒன்று வெட்டப்பட்டது. தொழிற்சாலைப் பகுதி வேலைவாய்ப்புகளை அளித்தது. இருந்தாலும், தூய்மைக்கேட்டுக்கும், ஆக்வா ஆல்டா (உயரளவு தண்ணீர்) என்ற அழிவுண்டாக்குகிற கடலலை ஏற்றங்களுக்கும் காரணமாக இருப்பதாக குற்றம் சாட்டப்பட்டிருக்கிறது. இந்தக் கடலலை ஏற்றங்கள் அடிக்கடி இந்நகரின் வரலாற்று மையத்தை வெள்ளக் காடாக்குகின்றன.

இக்கடற்கழியின் சுற்றுச்சூழலும், அதன் தண்ணீரின் போக்கும் இயல்பாகவே வெகு நுட்பமாக செயல்பட்டு வந்ததும் இந்நகரம் தொடர்ந்திருப்பதற்கு முக்கிய காரணிகள் என்பது முன்பே அறிந்த விஷயம்தான். 1324-லேயே, இக்கடற்கழியை சேற்றுப்படிவுகளால் நிரப்பும் ஆறுகளைத் திசை திருப்பும் பிரம்மாண்ட வேலைகளை வெனிஸ் நகரத்தார் மேற்கொண்டனர். 18-⁠ம் நூற்றாண்டில், ஏட்ரியாட்டிக் கடல் இக்கடற்கழியை அழிக்காதபடிக்கு அக்கடலில் தடுப்புச் சுவர்களை அவர்கள் எழுப்பினர்.

நிலைமை முன்பைவிட அதிக அபாயகரமாக இருப்பதாகத் தோன்றுகிறது. தொழிற்சாலைகள் நிலத்தடி நீர்த்தேக்கங்களை காலியாக்கி வருவதன் காரணமாக நிலம் அமிழ்ந்துவிடும் அபாயம் நிறுத்தப்பட்டிருப்பதாக நம்பப்படுகிறது. ஆனால் உலகெங்கும் கடல்மட்டம் உயர்ந்து கொண்டே போகிறது. அதுமட்டுமின்றி, கடற்கழிப் பகுதியும் நிலச்சீர்ப்படுத்துதல் காரணமாக குறைந்து வருகிறது. இவ்வாறாக நிலம் மற்றும் நீரின் இடையே உள்ள சமநிலை பாதிக்கப்பட்டுள்ளது. தண்ணீரின் ஏற்றம் முன்னொருபோதும் இந்தளவு அச்சுறுத்தலாக இருந்ததில்லை. 20-⁠ம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் புனித மார்க் சதுக்கம் வருடத்திற்கு கிட்டத்தட்ட ஐந்து முதல் ஏழு தடவை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டது. நூறு ஆண்டுகளுக்குப் பிறகு, ஒரு வருடத்தில் மட்டுமே அது 80 முறை அவ்வாறு பாதிக்கப்பட்டது.

வெனிஸின் தனிச்சிறப்பான வரலாற்று மற்றும் கலைநயமிக்க பாரம்பரிய ஆஸ்தியும், அது எதிர்ப்பட்டு வருகிற பிரச்சினைகளும் சர்வதேச அக்கறையைத் தூண்டியுள்ளன. அதன் துறைமுகத்தின் செயல்பாடுகளையோ மக்களின் தினசரி வாழ்க்கையையோ எவ்விதத்திலும் பாதிக்காத வகையில் வெள்ளத்திலிருந்து பாதுகாப்பு அளிக்கவும், சுற்றுச்சூழலுக்கு கவனம் செலுத்தவும் ஒரு விசேஷ சட்டம் அமலாக்கப்பட்டிருக்கிறது. சிறந்த முறையில் அதை எப்படிச் செயற்படுத்தலாம் என்பது இன்னமும் கேள்விக்குறியாகவே இருக்கிறது.

கால்வாய்க் கரைகளை உயர்த்தவும், ஆக்வா ஆல்டா ஏற்படும் சமயத்தில் அடிமண்ணிலிருந்து தண்ணீர் மேலே வராதவாறு தளங்களை அமைக்கவும், நகரக் கழிவுநீர்க் குழாயிலிருந்து கழிவுநீர் திரும்பி வருவதைத் தடுக்கவும் வேலை நடைபெற்று வருகிறது. நீர்மட்டம் அச்சுறுத்துகையில் கடற்கழியின் வாயில்களில் தடுப்புகளை எழுப்புவதற்காக, நகர்த்தும் வசதியுள்ள தடுப்புச்சுவர்களை அமைக்கும் நடவடிக்கையே மிக அதிக சர்ச்சைக்குரியதாய் இருக்கிறது.

இந்த லட்சியத்தைச் சாதிப்பதற்கு ரொம்பவே பாடுபட வேண்டியுள்ளது. “கடலில் மிதக்கும் கம்பீரமான நகரம்” ஆர்வத்தைத் தூண்டுகிற கடந்த காலத்துக்குச் சாட்சி பகர்கிறது. ஆனால் வித்தியாசமான எழுத்தாளர்கள் குறிப்பிட்டுள்ளபடி, “வெளியாட்கள் இந்நகர மக்களின் தேவைகளை உதாசீனப்படுத்தி, இங்கிருந்து துரத்திவிட்டுக்கூட இந்நகரை ஓர் அருங்காட்சியகமாக” மாற்றும் ஆபத்திருக்கிறது. பல காலமாக வெனிஸ் மோசமான இயற்கைச் சூழலோடு போராட வேண்டியிருந்தது. இந்நகரை “சமூக ரீதியிலும் பொருளாதார ரீதியிலும் புதுப்பித்து, குடியேற்றி, உயிரூட்டினால் தவிர மற்றபடி வெறும் தண்ணீரிலிருந்து இதைப் பாதுகாப்பது வீணான ஒன்றாகவே இருக்கும்


Sunday, 29 July 2018

MUSSOLINI ,DICTATOR OF ITALY SHOT DEAD HANGED UPSIDE DOWN BORN JULY 29, 1883- 1945 APRIL 28







MUSSOLINI ,DICTATOR OF ITALY 
SHOT DEAD HANGED UPSIDE DOWN 
BORN JULY 29, 1883- 1945 APRIL 28





முசோலினி பார்டிசன்களால் பிடிக்கப்பட்டு ,மரண பயத்தில் சிறுநீர் கழித்தார் .காதலியுடன் சுட்டு கொல்லப்பட்டார் . JULY 28, 1945

பார்டிசன்களுக்கு எச்ச்சரிக்கை செய்ய எட்டு மாதங்களுக்கு முன் 15 பேரை கொன்று எஸ்ஸோ பெட்ரோல் பங்கில் தலைகீழாக தொங்க விட்டான்.முசோலினி .எனவே பார்டிசங்கள் முசோலியை கொன்று அதே போன்று தொங்க விட்டனர் .JULY 29,1945

பிணங்கள் கல்லால் அடிக்கப்பட்டு ,மிதிக்கப்பட்டு தொங்க விடப்பட்டது .முசோலியால் தன் ஐந்து மகனை இழந்த ஒரு தாய் முசோலினியின் பிணத்தில் ஐந்து குண்டுகள் பாய்ச்சினார் .

முசோலினி நீ ஒரு கடவுள் என்று கூறி வீரவணக்கம் வைத்து என் தலைவனுக்காக நான் என்ன கொடுக்கமுடியும் என்று கூறியவுடன் அக்கிலி ஸ்டாரேஸ் தலையில் குண்டுகள் பாய்ந்தன தன் தலைவனின் பக்கத்தில் அந்த விசுவாசியும் சரிந்து விழுந்தார்.
#################################################
பெனிட்டோ அமில்கார் அன்டிரியா முசோலினி (ஜுலை 29, 1883 - ஏப்ரல் 28, 1945) என்ற முழுப்பெயர் கொண்ட முசோலினி இத்தாலி நாட்டுக்கு 1922 - 1943 காலப்பகுதியில் தலைமை வகித்தவர். இத்தாலிய அரசை பாசிச அரசாக மாற்றி ஏகபோக சர்வாதிகார ஆட்சியை முசோலினி நடத்தினார். அரச கட்டமைப்புகளையும், தனியார் நிறுவனங்களையும், ஊடகங்களையும், திறனாளர்களையும் தன் கட்டுப்பாட்டுக்குள் வைத்து வன்முறை, பரப்புரை, ஏகபோக அணுகுமுறை ஊடாக பாசிச அரசை உருவாக்கி பேணினார். ஹிட்லருடன் சேர்ந்து இரண்டாம் உலகப் போரின் போது நேச நாடுகளுக்கு எதிராகப் போரிட்டுத் தோற்றார். ஏப்ரல் 1945 இல், முசோலினி தம் மனைவி கிளாரா பெட்டாசியுடன் சுவிட்சர்லாந்துக்குத் தப்பியோட முற்படுகையில், இத்தாலியின் கோமோ ஆற்றின் அருகில் பார்ட்டிசான்களால் பிடிபட்டு பின் அவரும் அவர் மனைவியும் சுட்டு கொல்லப்பட்டனர். இவரது உடல் மிலானுக்கு எடுத்துச் செல்லப்பட்டு அங்குள்ள ஒரு எண்ணெய் விற்பனை நிலையத்தில் தலைகீழாகக் கட்டித் தொங்கவிடப்பட்டு மக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டது.

இளமைக்காலம்[தொகு]
தோற்றம்[தொகு]
முசோலினி எமிலியா-ரொமக்னா என்னும் ஊரிலுள்ள போர்லி மாகாணத்தினலுள்ள டோவியா டை பிரிடாப்பியோ என்னும் நகரத்தில் ஓர் உழைக்கும் பாட்டாளியின் குடும்பத்தில் பிறந்தார். இவர் பெற்றோருக்கு இவரே மூத்தவர் இவரின் உடன் பிறந்தோர் அமால்டோ முசோலினி மற்றும் எட்விக் முசோலினி. இவர் தந்தை பெயர் அலெக்சாண்ட்ரோ முசோலினி. இவர் ஒரு இரும்பு அடிக்கும் கொல்லர். இவர் தாய் ரோசா முசோலினி ஆசிரியை. இவர் தாய் கத்தோலிக்க மதத்தில் அதிக இறை பற்றுடையவர்.

கல்வி[தொகு]

முசோலினி சிறு வயதில் தன் தந்தையின் தொழிலுக்கு மிகவும் உதவி புரிந்தார். தந்தையாரின் சீர்திருத்தக் கொள்கையினால் அவருக்கு ஞானஸ்நானம் செய்யப்படவில்லை. தன் தந்தையின் பொதுவுடமை, சீர்திருத்த கருத்துக்களால் ஈர்க்கப்பட்டு அதன் காரணமாக மெக்சிக்கன் சீர்திருத்தவாதியான பெனிட்டோ ஜீவாரசின் பெயரை தன் பெயரோடு சேர்த்து பெனிட்டோ முசோலினி என்று மாற்றி கொண்டார். பிறகு விடுதிப்பள்ளி ஒன்றில் சேர்க்கப்பட்டார் அப்பள்ளியில் இவர் செய்த குறும்புகளின் காரணமாக பள்ளியைவிட்டு நீக்கப்பட்டு வேறு பள்ளியில் சேர்க்கப்பட்டார், அங்கு சிறப்பானதொரு கல்வி பயின்றார். 1901 ஆம் ஆண்டு பள்ளி இறுதி தேர்வுக்குப்பின் தொடக்க கல்வி ஆசிரியராக அப்பள்ளியிலேயே நியமிக்கப்பட்டார்.

இராணுவத்தில் பணிபுரிதல்[தொகு]

முசோலினி இராணுவத்தில் 1917
1902 ம் ஆண்டு முசோலினி தன் சொந்த மண்ணை விட்டு சுவிட்சர்லாந்துக்கு குடியேறினார்.அங்கு வேலை கிடைக்காமல் குடும்ப வறுமைக்கு தள்ளபட்டார். அதன் சோசலிச இயக்கத்தில் சேர்ந்தனினால் இத்தாலிக்கு நாடு கடத்தப்பட்டு அங்கு தன்னிச்சையாக இராணுவத்தில் சேர்ந்து பணி புரிந்தார். அவருடைய இராணுவப்பணியில் குறைகள் குற்றங்கள் ஏதுமின்றி சிறப்பான பணி புரிந்தார். இத்தகவல்கள் அவருடைய இராணுவத்தொழில் குறிப்பேடுகளில் குறிப்பிடப்பட்டுள்ளது. 1917 வரை இராணுவத்தில் சிறப்பானதொரு பணிபுரிந்தமையால் 40 க்கும் அதிகமான பதக்கங்கள் அவர் உடையை அலங்கரித்தன. அதன்பின் டைபாய்டு விஷக்காய்ச்சலின் காரணமாகவும் மார்ட்டர் வெடிவிபத்தில் சிக்கி விபத்துக்கள்ளானதல் அப்பணியை தொடரமுடியாமல் போனது.

பாசிசம் உருவாதல்[தொகு]

முசோலியின் பாசிசம்
முதலாம் உலகப் போரில் நேச நாட்டு படைபிரிவுக்காக பணிபுரிந்து திரும்பியவுடன் தன் சோசலிச கருத்துக்களுக்கு முற்றுப்புள்ளி வைத்தார். சோசலிசம் தோற்றுப்போன ஓன்று. ஆகையால் தன்னை கொடுரகுணம் கொண்ட மனிதனாக மாற்றிக்கொண்டார். இப்படியிருந்தால் மட்டுமே இத்தாலியை அதன் பழையநிலைக்கு நிமிர்த்தமுடியும் என நம்பினார். சோசலிசம் இறந்துபோன ஓன்று; அவற்றால் நாட்டுக்கு பயன் இல்லை என்பதை அறிவித்தார்.

பாசிசத்தின் முக்கிய பங்கு[தொகு]
பாசிசம் வகுப்பு வாதத்தையும் வகுப்பு வாதக்கலவரங்களையும் எதிர்த்த்து. பாசிசம் தேசியவாதிகளின் உரிமைகளை நிறைவேற்றவும் அவர்களின் பங்கினால் தேசத்தை ஒருங்கிணைத்து இத்தாலியை அதன் பழைய உயரத்துக்கு உயர்த்தியது. பிரபுக்களையும் நடுத்தரவர்க்கத்தினரையும் இணைக்கும் பாலமாக பாசிசம் பயன்பட்டது. இதன் மூலம் ரஷ்யாவில் ஏற்பட்ட புரட்சியை இத்தாலியில் நுழைய முடியாமல் செய்தது. தொழிலாள வர்க்கத்துக்கு முசோலினி எதிரியல்ல என்றாலும் பாசிச கொள்கைக்கு எதிராக யார் செயல்படுவதையும் பாசிஸ்டுகள் தடுத்தனர். இதன் கொள்கை விளக்க அறிவிப்பான பாசிசப் போராட்ட அறிக்கை (The Manifesto of the Fascist Struggle)[1] ஜூன்,1919 ஆண்டு வெளியிடப்பட்டது. இதில் குறைந்தபட்ச ஊதியம், பொதுத்துறை மற்றும் தனியார்த்துறை ஊழியர்களின் தொழிற்சங்க கோரிக்கைகளையும் உள்ளடக்கி வெளியிடப்பட்டது. இந்த கொள்கை பழமைவாதிகளையும், புதுமைவாதிகளையும் ஒரு சேர கட்டுபடுத்தியது. அனைவராலும் வித்தியாசமாகப் பார்க்கப்பட்டு பின் அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டது,

அரசியலின் மூன்றாம் வழி[தொகு]


முசோலினியின் கருஞ்சேனை
முசோலினியின் பாசிசக் கொள்கையில் அதிக பற்று கொண்ட முசோலினியின் நம்பிக்கைக்குரிய டினோ கிராண்டி என்பவர் இராணுவத்தில் ஒய்வு பெற்றவர்களிடம் பரப்புரை செய்து அவர்களை ஒன்று திரட்டி கருஞ்சேனை (Black Shirts) என்ற தனி இராணுவப்பிரிவை உருவாக்கினார். இந்த கருஞ்சேனைப் படையினர் கம்யூனிசவாதிகளையும், பொதுவுடமை வாதிகளையும் மற்றும் குழப்பவாதிகளையும் அடக்கும் பணியினை மேற்கொண்டது. இது அரசியலின் மூன்றாம் வழியாக (The Third Way) கையாளப்பட்டது. கம்யூனிசத்தை அப்போதய அரசு வெறுத்ததினால் இவற்றின் வளர்ச்சியையும், செயல்பாடுகளையும் அப்போதைய அரசு கண்டுகொள்ளவில்லை. இதன் காரணமாக பாசிஸ்டுகளின் எண்ணிக்கை இரண்டு வருடங்களில் கணிசமான எண்ணிக்கையை எட்டியது. பின் தேசிய பாசிசக் கட்சியாக (National Fascist Party) ரோமில் உருவெடுத்தது. 1921 தேர்தலில் முசோலினி முதன் முறையாக இத்தாலி கீழ் சபை பாரளுமன்றக்குழு தலைவராகத் (Chamber of Deputies) தேர்ந்தெடுக்கப்பட்டார். இக்கொள்கையால் முசோலினி 1911 முதல் 1938 வரை யூதர்களின் கணிசமான எதிர்ப்பையும் பெற்றுக்கொண்டார்.

இட்லரும் முசோலினியும்[தொகு]
இட்லருடன் முரண்பாடு[தொகு]

முசோலினியும் இட்லரும் ஆரம்பத்தில் எதிரிகளாகத்தான் இருந்தனர். 1933 இல் முசோலினியின் நண்பர் எய்ஞ்பெட் டால்பஸ் மற்றும் அவருடைய நண்பரும் ஆஸ்திரிய நாசிக்களால் கொல்லப்பட்டனர். அது முதல் முசோலினி இட்லரை எதிரியாகத்தான் பாவித்தார். முசோலினியின் பாசிசக் கட்சியில் யூதர்கள், யூதரல்லாதவர், யூதபகைமை என்ற கோட்பாடுகள் கடைப்பிடிக்கப்படவில்லை. பாசிசக்கொள்கையை மட்டுமே வலியுறுத்தினார். ஆகையால் முசோலினிக்கு இட்லரின் கொள்கை பிடிக்கவில்லை. முசோலினி போப்பிடம் பற்றுகொண்டவர். அது மட்டுமில்லாமல் கலாச்சார பண்புகளையும், செயல்களையும் வைத்து ஒருவர் உயர்ந்தவர் தாழ்ந்தவர் என்ற வர்க்கபேதத்தை உருவாக்கலாம் ஆனால் பிறப்பினால் உயர்ந்தவர் தாழ்ந்தவர் என்ற பேதம் எடுபடாது என்ற நம்பிக்கையுடையவர் என்பதால் இட்லரின் நாசிசத்தை ஏற்றுக்கொள்ளவில்லை. 1920 முதல் 1934 வரை உள்ள கால ஒட்டத்தில் யூதர்கள் சமூகத்தின் எல்லா மட்டங்களில் இருந்ததால் இத்தாலிய பாசிசம் யூதர்களுக்கு எதிரான வர்க்கபேதத்தையும், வகுப்புவாதத்தையும் வளர்க்கவில்லை. அவர்கள் ஒரு சிறு கூட்டமாக இருந்ததால் ரோம் அரசர் காலத்திலிருந்து அவர்களால் எந்த தொல்லையும் ஏற்படவில்லை.

இட்லருடன் இணக்கமாதல்[தொகு]

1938 ல் இட்லரின் தாக்கம் இத்தாலியில் அதிகமிருந்த நேரத்தில் இனவேறுபாட்டுணர்வு அறிக்கையை முசோலினி தயாரித்து வெளியிட்டார் அந்த அறிக்கை முழுக்க முழுக்க இட்லரின் கொள்கையை பறை சாற்றியது. அதில் எந்த நேரத்திலும் எந்த பதவியிலிருந்தும், குடியுரிமையிலிருந்தும் யூதர்களை விலக்க உரிமையுண்டு என்பதை அறிவித்தது. இந்த அறிக்கை இத்தாலிய பெரும்பான்மை பாசிசவாதிகளின் ஆதரவை பெறவில்லை மாறாக முசோலினிக்கு எதிர்ப்பை வளர்த்தது. ரோம ஆலயத்தின் போதகர் பதினேழாம் போப் பயஸ் இந்த அறிக்கைக்கு கண்டனம் தெரிவித்து கடிதம் எழுதினார்.

முசோலினியை கொல்ல முயற்சி[தொகு]

முசோலினியின் பரப்புரைகள் அவ்வப்போது எதிர்ப்புகளை காட்டத்தயங்காது பெரும்பாலும் சிறிய எதிர்ப்புகளை அவரே ஒன்றுமில்லாமல் செய்துவிடுவார். 7 ஏப்ரல், 1926 வையலட் ஜிப்சன் துப்பாக்கியால் சுட்டதில் அவர் மூக்கில் காயம் ஏற்பட்டது. பின் 31 அக்டோபர், 1926 ஐரிஷ் பெண்ணும் அவர் மகளும் சுட்டதில் தப்பித்துகொண்டார், 15 வயதுடைய ஆன்டியோ ஜாம்போனி சுடமுற்பட்டபோது பிடிபட்டு அங்கேயே மரண தண்டனை கொடுக்கப்பட்டது. ரோமிலும் அவரை கொல்ல இரு கலகக்காரர்கள் முயன்றனர். முயற்சி முறியடிக்கப்பட்டு இருவரும் சுட்டுக்கொல்லப்பட்டனர். 1938 ல் சிலோவேனிய பாசிசபகைமைவாதி கோபரிட் முயற்சித்தான் அவன் முயற்சி தோல்வியுற்றது.

வாழ்க்கைக் குறிப்பு[தொகு]
முசோலினியின் முதல் மனைவி பெயர் இடா டாலசர், 1914 ம் ஆண்டு டிரன்டோ வில் திருமணம் புரிந்தார் இவர்களுக்கு பெனிட்டோ அல்பினோ என்ற மகன் உள்ளார், ஓராண்டு கழித்து முசோலினி ராச்சிலி குடி என்பவரை 1915 ல் மணந்தார். 1910 ஆண்டே இவருக்கு திருமணம் நடந்ந்துவிட்டதாகவும் தன் அரசியல் கவுரவத்திற்காக இருவரிடமும் மறைத்துவிட்டார். முதல் மனைவியும் மகனும் பின்னாளில் அதிக தொல்லைகொடுத்தனர். ரேச்சலுக்கு இரு மகள்கள் எட்டா (1910-1995) அன்னா மரியா (3 செப்டம்பர் 1929- 25 ஏப்ரல் 1968), அதற்குபின் ரவேன்னாவை 11 ஜூன் 1960, நன்டோ புசி நெக்ரி ல் திருமணம் செய்துகொண்டார், இவர்களுக்கு விட்டோரியோ (1916-1997). புருனோ (அக்டோபர் 1918-7 ஆகஸ்டு 1947). ரோமேனோ (1927-2006) என மூன்று மகள்கள் பிறந்த்னர். முசோலினிக்கு பல தாரங்கள் உண்டு. மார்கெரிடா சபாட்டி கடைசியாக கிளாரா பெட்டாசி இன்னும் பல பெண்களுடன் லீலா விநோதங்கள் புரிந்துள்ளதாகவும் அதனால் பெண்களின் சூழல் அதிகம் இருந்ததாக அவருடைய சுயசரிதையாளர் நிக்கோலஸ் பேரல் குறிப்பிடுகிறார்.

முசோலியின் மரணம்[தொகு]

முசோலினி மற்றும் மனைவி கிளாரா பெட்டாசி மரணம்
28 ஏப்ரல் 1945 இல், முசோலினி தம் மனைவி கிளாரா பெட்டாசியுடன் சுவிட்சர்லாந்துக்குத் தப்பியோட முற்படுகையில், இத்தாலியின் கோமோ ஆற்றின் அருகில் பார்ட்டிசான்களால் பிடிபட்டு பின் அவரும் அவர் மனைவியும் சுட்டு கொல்லப்பட்டனர். 29 ஏப்ரல், 1945 ம் ஆண்டு முசோலினி மற்றும் அவர் மனைவி கிளாரா பெட்டாசியின் உடல்களும் மிலனில் உள்ள பியஜேல் லொரெட்டோ விற்கு எடுத்துசெல்லப்பட்டு தலைகீழாக எரிவாயு நிரப்பும் நிலையத்தின் கூரையிலுள்ள இறைச்சியை தொங்கவிடும் கொக்கியில் மாட்டித் தொங்கவிட்டனர். இந்த செயல்களின் நோக்கம் பாசிசவாதிகளை அச்சுறுத்துவதற்காகவும், இதற்குமுன் பார்ட்டிசான்களை இக்கொடுரமான முறையிலேயே முசோலினியும் அச்சு நாட்டு அதிகாரிகளும் செய்ததற்கு பழிவாங்கும் நோக்கில் தொங்கவிடப்பட்டது, அதன் கீழேயிருந்து அங்குவாழ் மக்கள் அவர்களின் உடல்கள் மீது கற்களைக்கொண்டு அடித்து தங்கள் ஆத்திரத்தை தீர்த்துகோண்டனர். பலரும் வசைவு மொழிகொண்டு பதவியிழந்த தலைவரின் அட்டூழியங்களை கேலியும் கிண்டலுமாக பேசினர். முசோலினியின் விசுவாசியும் தீவிர பாசிசவாதியுமான அக்கிலி ஸ்டாரேஸ் தன்னைத்தானே ஒப்படைத்து பின் மரணதண்டனை விதிக்கபட்டு முசோலினியின் உடல் தொங்கவிடப்பட்டிருக்கும் இடத்திற்கு அழைத்துச்சென்று காட்டினர் உன்னைவிட யார் இது மாதிரி செய்யமுடியும் முசோலினி நீ ஒரு கடவுள் என்று கூறி வீரவணக்கம் வைத்து என் தலைவனுக்காக நான் என்ன கொடுக்கமுடியும் என்று கூறியவுடன் அக்கிலி ஸ்டாரேஸ் தலையில் குண்டுகள் பாய்ந்தன தன் தலைவனின் பக்கத்தில் அந்த விசுவாசியும் சரிந்து விழுந்தார்.

After a failed attempt to flee Italy with his mistress, Benito Mussolini was executed on April 28, 1945. On the 70th anniversary of the Italian dictator’s death, read about his final hours, the desecration of his corpse in a public square and his body’s strange journey in the ensuing years.
By April 25, 1945, Benito Mussolini’s dream of re-creating the Roman Empire, much like the crumbling Roman Forum itself, lay in ruins. With the Allies closing in from the south and anti-fascist partisans rising up to seize city after city in northern Italy, Mussolini’s power base was quickly evaporating.

The 61-year-old Italian dictator who sought to become a modern-day Julius Caesar had first risen to power more than two decades earlier when he became prime minister in 1922. “Il Duce” allied himself with fellow fascist Adolf Hitler and Nazi Germany in World War II, but his outdated Italian military was badly outclassed. By July 1943, the Allied invasion of Sicily and bombing of Rome caused the Italian high command and King Victor Emmanuel III to remove Mussolini from power and place him under house arrest.
In September 1943, Nazi paratroopers staged a daring commando raid that rescued Mussolini from the Apennine Mountain ski resort where he was being detained. Hitler installed Mussolini as the figurehead of the Social Republic of Italy (known informally as the Republic of Salo), a Nazi puppet state in German-occupied northern Italy.

By April 25, 1945, however, the Third Reich was quickly losing its grip on northern Italy. With his stronghold of Milan teetering on the precipice, Mussolini agreed to meet with a delegation of partisans at the palace of Milan’s Cardinal Alfredo Schuster. There, a furious Mussolini learned that, unbeknownst to him, the Nazis had begun negotiations for an unconditional surrender.

Clara PetacciClara Petacci
Mussolini stormed out of the palace and fled Milan with his 33-year-old mistress, Clara Petacci, in the 1939 Alfa Romeo sport car he had bought as a gift for his girlfriend. The following day, the pair joined a convoy of fellow fascists and German soldiers heading north toward Lake Como and the border with Switzerland. Mussolini donned a German Luftwaffe helmet and overcoat, but the disguise did little to save him when partisans stopped the convoy at the lakeside town of Dongo on April 27. For 20 years, Mussolini had built a cult of personality with his image emblazoned on posters and newspapers. Now, the familiarity of his distinctive shaved head and granite jaw, even in disguise, did him in.
The partisans seized Mussolini and Petacci. Fearing that the Nazis would again try to liberate the dictator, the partisans hid the pair in a remote farmhouse for the night. The following day, Mussolini and Petacci were removed from the house and driven to the small village of Giulino di Mezzegra on the shores of Lake Como. They were ordered to stand in front of a stone wall at the entrance to Villa Belmonte where both were executed by machine gun fire. The identity of the triggerman remains a point of contention, but it was likely communist partisan commander Walter Audisio.

There’s no uncertainty, however, about what happened to Mussolini’s body in the hours after his execution. In the pre-dawn hours of April 29 the corpses of Mussolini, Petacci and 14 fellow fascists were placed in a truck and dumped like garbage in Milan’s Piazzale Loreto, a deeply symbolic public square for the anti-fascist forces. There, eight months earlier, fascists acting under orders from Hitler’s SS publicly displayed the bodies of 15 executed partisans.
After Mussolini’s arrest in July 1943, jubilant crowds mutilated images of the dictator. Now, as the sun rose on the “Square of the Fifteen Martyrs,” residents of Milan had the chance to do the same thing, only this time for real. They hurled invectives and vegetables at the dictator’s corpse before kicking, beating and spitting upon it. One woman, deciding Mussolini wasn’t dead enough for her, emptied a pistol into the dictator’s body and shouted, “Five shots for my five assassinated sons!” The crowd then strung the bodies of Mussolini, Petacci and other fascists by their feet from the girders of a gasoline station in a corner of the square.

Cross marking the execution location.Cross marking the execution location.
In early afternoon, American troops ordered the bodies to be taken down and Mussolini’s bullet-ridden corpse transported to the city morgue. By this point, Mussolini’s badly beaten body was barely recognizable, but a U.S. Army photographer still staged the bodies of the former dictator and his mistress in each other’s arms in a macabre pose.
As the Soviets closed in on Berlin, Hitler received news of Mussolini’s death. Determined not to give his enemies the satisfaction of killing him or defiling his body, Hitler committed suicide on April 30 and had his corpse subsequently burned. Mussolini’s body, meanwhile, was buried in an unmarked grave in a Milan cemetery. Its location was hardly a secret, however, and anti-fascists made regular pilgrimages to the cemetery to desecrate his grave until Mussolini made a resurrection of sorts on Easter Sunday 1946 when Domenico Leccisi and fellow fascists dug up Il Duce’s body, washed it in a nearby fountain and pushed it in a wheelbarrow to a getaway car. The note left behind by the “Democratic Fascist Party” stated they would no longer bear “the cannibal slurs made by human dregs organized in the Communist Party.” The corpse was missing for nearly four months before it was found in August 1946 in a monastery outside Milan.

Once the Italian government recovered Mussolini’s corpse, it kept its whereabouts secret for more than a decade. In 1957, however, newly elected prime minister Adone Zoli needed the support of a far-right party and in return for its votes, he delivered the bones of Mussolini to his widow. After spending 11 years in the cupboard of a Capuchin monastery, Mussolini’s body finally received a burial in the family crypt in his birthplace of Predappio, which has become a pilgrimage site for neo-fascists. In 1966, the last piece of Mussolini’s body was returned to his widow as the United States handed over a sample of the dictator’s brain that was removed at autopsy and tested inconclusively for syphilis.


Mussolini’s Final Hours, 
APRIL 28, 1945 
By Christopher Klein


After a failed attempt to flee Italy with his mistress, Benito Mussolini was executed on April 28, 1945. On the 70th anniversary of the Italian dictator’s death, read about his final hours, the desecration of his corpse in a public square and his body’s strange journey in the ensuing years.

By April 25, 1945, Benito Mussolini’s dream of re-creating the Roman Empire, much like the crumbling Roman Forum itself, lay in ruins. With the Allies closing in from the south and anti-fascist partisans rising up to seize city after city in northern Italy, Mussolini’s power base was quickly evaporating.

The 61-year-old Italian dictator who sought to become a modern-day Julius Caesar had first risen to power more than two decades earlier when he became prime minister in 1922. “Il Duce” allied himself with fellow fascist Adolf Hitler and Nazi Germany in World War II, but his outdated Italian military was badly outclassed. By July 1943, the Allied invasion of Sicily and bombing of Rome caused the Italian high command and King Victor Emmanuel III to remove Mussolini from power and place him under house arrest.

In September 1943, Nazi paratroopers staged a daring commando raid that rescued Mussolini from the Apennine Mountain ski resort where he was being detained. Hitler installed Mussolini as the figurehead of the Social Republic of Italy (known informally as the Republic of Salo), a Nazi puppet state in German-occupied northern Italy.

By April 25, 1945, however, the Third Reich was quickly losing its grip on northern Italy. With his stronghold of Milan teetering on the precipice, Mussolini agreed to meet with a delegation of partisans at the palace of Milan’s Cardinal Alfredo Schuster. There, a furious Mussolini learned that, unbeknownst to him, the Nazis had begun negotiations for an unconditional surrender.



Clara PetacciClara Petacci

Mussolini stormed out of the palace and fled Milan with his 33-year-old mistress, Clara Petacci, in the 1939 Alfa Romeo sport car he had bought as a gift for his girlfriend. The following day, the pair joined a convoy of fellow fascists and German soldiers heading north toward Lake Como and the border with Switzerland. Mussolini donned a German Luftwaffe helmet and overcoat, but the disguise did little to save him when partisans stopped the convoy at the lakeside town of Dongo on April 27. For 20 years, Mussolini had built a cult of personality with his image emblazoned on posters and newspapers. Now, the familiarity of his distinctive shaved head and granite jaw, even in disguise, did him in.

The partisans seized Mussolini and Petacci. Fearing that the Nazis would again try to liberate the dictator, the partisans hid the pair in a remote farmhouse for the night. The following day, Mussolini and Petacci were removed from the house and driven to the small village of Giulino di Mezzegra on the shores of Lake Como. They were ordered to stand in front of a stone wall at the entrance to Villa Belmonte where both were executed by machine gun fire. The identity of the triggerman remains a point of contention, but it was likely communist partisan commander Walter Audisio.

There’s no uncertainty, however, about what happened to Mussolini’s body in the hours after his execution. In the pre-dawn hours of April 29 the corpses of Mussolini, Petacci and 14 fellow fascists were placed in a truck and dumped like garbage in Milan’s Piazzale Loreto, a deeply symbolic public square for the anti-fascist forces. There, eight months earlier, fascists acting under orders from Hitler’s SS publicly displayed the bodies of 15 executed partisans.

After Mussolini’s arrest in July 1943, jubilant crowds mutilated images of the dictator. Now, as the sun rose on the “Square of the Fifteen Martyrs,” residents of Milan had the chance to do the same thing, only this time for real. They hurled invectives and vegetables at the dictator’s corpse before kicking, beating and spitting upon it. One woman, deciding Mussolini wasn’t dead enough for her, emptied a pistol into the dictator’s body and shouted, “Five shots for my five assassinated sons!” The crowd then strung the bodies of Mussolini, Petacci and other fascists by their feet from the girders of a gasoline station in a corner of the square.

Cross marking the execution location.Cross marking the execution location.
In early afternoon, American troops ordered the bodies to be taken down and Mussolini’s bullet-ridden corpse transported to the city morgue. By this point, Mussolini’s badly beaten body was barely recognizable, but a U.S. Army photographer still staged the bodies of the former dictator and his mistress in each other’s arms in a macabre pose.

As the Soviets closed in on Berlin, Hitler received news of Mussolini’s death. Determined not to give his enemies the satisfaction of killing him or defiling his body, Hitler committed suicide on April 30 and had his corpse subsequently burned. Mussolini’s body, meanwhile, was buried in an unmarked grave in a Milan cemetery. Its location was hardly a secret, however, and anti-fascists made regular pilgrimages to the cemetery to desecrate his grave until Mussolini made a resurrection of sorts on Easter Sunday 1946 when Domenico Leccisi and fellow fascists dug up Il Duce’s body, washed it in a nearby fountain and pushed it in a wheelbarrow to a getaway car. The note left behind by the “Democratic Fascist Party” stated they would no longer bear “the cannibal slurs made by human dregs organized in the Communist Party.” The corpse was missing for nearly four months before it was found in August 1946 in a monastery outside Milan.

Once the Italian government recovered Mussolini’s corpse, it kept its whereabouts secret for more than a decade. In 1957, however, newly elected prime minister Adone Zoli needed the support of a far-right party and in return for its votes, he delivered the bones of Mussolini to his widow. After spending 11 years in the cupboard of a Capuchin monastery, Mussolini’s body finally received a burial in the family crypt in his birthplace of Predappio, which has become a pilgrimage site for neo-fascists. In 1966, the last piece of Mussolini’s body was returned to his widow as the United States handed over a sample of the dictator’s brain that was removed at autopsy and tested inconclusively for syphilis.


Monday, 11 December 2017

SONIA GANDHI , THE MOST DANGEROUS POLITICIAN BORN IN ITALY 1946 DECEMBER 9





SONIA GANDHI ,
THE MOST DANGEROUS POLITICIAN 
BORN IN ITALY 1946 DECEMBER 9






சோனியா காந்தி (ஹிந்தி:सोनिया गांधी; இத்தாலியில் உள்ள லூசியானாவில், எட்விகி அண்டோனியா அல்பினா மையினோ என்பவராக 1946 டிசம்பரில் பிறந்தார். இவர் இந்திய தேசியக் காங்கிரஸின் தலைவரும் மறைந்த இந்தியப் பிரதம மந்திரி ராஜிவ் காந்தியின் மனைவியும் ஆவார்.[2] அவர் ஆளுங்கட்சியான ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் தலைவராகவும், மற்றும் காங்கிரஸ் கட்சித் தலைவராகவும் உள்ளார்.

இந்திய அரசியலில் ஒரு செல்வாக்கு மிகுந்த நபரான அவர், 2004ல் போர்பஸ் [3] பத்திரிகையால் உலகில் மிகச் சக்திவாய்ந்த பெண்மணிகளில் மூன்றாவது இடம் வகிப்பவராகவும் மற்றும் 2007ல் அந்தப் பட்டியலின் தரவரிசையில் ஆறாவது இடம் வகிப்பவராகவும் குறிப்பிடப்பட்டுள்ளார்.[4] மேலும் டைம்பத்திரிகையும் இவரை 2007 [5] மற்றும் 2008 ஆண்டுகளில் உலகில் உள்ள 100 அதிகச் செல்வாக்கு மிக்க மக்களில் ஒருவராகத் திகழ்கின்றார் எனவும் குறிப்பிட்டுள்ளது.[6]

ஆரம்பகால வாழ்க்கை[மூலத்தைத் தொகு]
சோனியா காந்தி பிறந்த இடம்: 31, மினி ஸ்ட்ரீட் - லூசியான (விசென்சா) - இத்தாலி
இத்தாலியில், வெனிடோப்பிரதேசத்தில், 30 கிலோ மீட்டர் தொலைவில் விசென்ஸாவில், உள்ள லூசியானா எனும் ஒரு சிறுகிராமத்தில் ஸ்டெஃபனோ மற்றும் பாவ்லோ மையினோ தம்பதியர்களுக்கு மகளாகப் பிறந்த அவர், டுரின் என்ற நகருக்கு அருகில் உள்ள ஆர்பாஸனோவில், பாரம்பரிய ரோமன் கத்தோலிக்கக் குடும்பத்தில் தன் வளரிளமைப் பருவத்தை ஒரு கத்தோலிக்கப் பள்ளியில் பயில்வதில் கழித்தார். [7] ஒரு கட்டிட ஒப்பந்தக்காரரான அவர் தந்தை, 1983ல் மரணமடைந்தார்.[7] அவரது அன்னையும் மற்றும் இரு சகோதரிகளும் இன்னமும் ஆர்பாஸனோவில் வசித்து வருகின்றனர்.[8]

1964ல், கேம்பிரிட்ஜ் நகரில் உள்ள பெல் கல்வி அறக்கட்டளையின் மொழிப் பள்ளியில் அவர் ஆங்கிலம் கற்கச் சென்றார். அங்கு அவர் கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழகத்தில் டிரினிட்டி கல்லூரியில் சேரப் பதிவுசெய்திருந்த ராஜிவ் காந்தியை 1965ல், ஒரு கிரேக்க உணவகத்தில் சந்தித்தார்.[9] [10] சோனியாவும் ராஜிவ் காந்தியும் 1968ல் மணம்புரிந்து கொண்டனர், அதைத்தொடர்ந்து அவர் தனது மாமியாரும் அப்போதைய பிரதம மந்திரியுமான இந்திரா காந்தியின் இல்லத்திற்குச் சென்றார்.[10]
இந்த தம்பதிகளுக்கு , ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தி என்ற இரு பிள்ளைகள் பிறந்தனர். செல்வாக்கு மிக்க நேரு குடும்பத்தைச் சார்ந்திருந்த போதிலும் ராஜிவ் ஒரு ஏர்லைன் விமானியாக பணிபுரிய, சோனியா தன் குடும்பத்தைக் காக்கும் பணியை மேற்கொண்டார்.[11] 1980 ஜூன் 23ல் தனது இளைய சகோதரர் சஞ்சய் காந்தி விமான விபத்தில் இறந்தமையால் ராஜிவ் 1982ல் அரசியலில் பிரவேசிக்க நேர்ந்தாலும், சோனியா தனது குடும்பத்தின் மேல் உரிய கவனத்தை தொடர்ந்து செலுத்திவந்தாரே தவிர பொதுமக்களிடம் அனைத்துத் தொடர்பையும் விலக்கியே வைத்திருந்தார்.[12]

அரசியல் வாழ்க்கை[மூலத்தைத் தொகு]
பிரதம மந்திரியின் மனைவி[மூலத்தைத் தொகு]
இந்தியப் பொதுவாழ்வில் சோனியா காந்தியின் ஈடுபாடு அவரது மாமியார் படுகொலைக்குப் பிறகும் மற்றும் அவரது கணவர் பிரதம மந்திரியாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகுமே தொடங்கியது. பிரதம மந்திரியின் மனைவியாக அவரது அதிகாரப் பூர்வ உபசரணியாக அவர் செயல்பட்டார் மற்றும் ஏராளமான மாநில விஜயங்களில் அவர் உடன் சென்றார்.1984ல், அமேதியில் ராஜிவை எதிர்த்து அவரது தம்பி மனைவியான மேனகா காந்தி தேர்தலில் அவருக்கு எதிராக போட்டியிட்ட போது சோனியா தனது கணவருக்கு ஆதரவாகப் பிரசாரத்தில் களமிறங்கினார்.
காங்கிரஸ் தலைவர்[மூலத்தைத் தொகு]

ரஷ்ய ஜனாதிபதி டிமிட்ரி மெட்வெடேவ் அவரது அரசுமுறை விஜயம் டிசம்பர் 2008.
அவரது கணவர் ராஜிவ் காந்தி படுகொலை செய்யப்பட்டப் பிறகு அவர் பிரதம மந்திரியாக மறுத்தமையால், காங்கிரஸ் கட்சியானது பி.வி நரசிம்மராவை தலைவராகவும் தொடர்ந்து பிரதம மந்திரியாகவும் தேர்வு செய்தது. எனினும், அடுத்த சில வருடங்களுக்கு, காங்கிரஸின் எதிர்காலம் ஊசலாட்டம் காணவே 1996 தேர்தல்களில் அது தோல்வி கண்டது. பல மூத்தத் தலைவர்கள் மாதவராவ் சிந்தியா, ராஜேஷ் பைலட், நாராயண் தத் திவாரி, அர்ஜூன் சிங், மம்தா பானர்ஜி, ஜி.கே. மூப்பனார், ப.சிதம்பரம், ஜெயந்தி நடராஜன் போன்றவர்கள் அப்போதைய காங்கிரஸ் தலைவராகப் பதவி வகித்த
பி.வி.நரசிம்மராவை, சீதாராம் கேசரியை வெளிப்படையாக எதிர்த்து கட்சியை விட்டு வெளியேறியதால், காங்கிரஸ் கட்சி பல பிரிவுகளாகச் சிதறியது.
கட்சியின் தொய்வுற்ற எதிர்கால நிலைகளை புதுப்பிக்க வேண்டி, 1997ல் கல்கத்தா வருடாந்திரக் கூட்டத்தில் சோனியா காந்தி காங்கிரஸ் அடிப்படை உறுப்பினராகி அடுத்த ஆண்டு 1998ல் அதன் கட்சித் தலைவரானார்.[13]
அடிப்படை உறுப்பினராக 62 நாட்கள் ஆகியதும், அவரையே கட்சியின் அவைத்தலைவராக்க வலியுறுத்தப்பட்டது. அவர் லோக்சபா தேர்தல்களில் பெல்லாரி, கர்நாடகா, மற்றும் 1999ல் உத்திரப் பிரதேசத்தில் அமேதி என்ற இடங்களில் போட்டியிடலானார், பெல்லாரியில் பிஜேபியின் அனுபவமிக்கத் தலைவர், சுஸ்மா சுவராஜைத், தோற்கடித்தார். 2004, 2009-ல் அவர் உத்தரப்பிரதேசத்தில் ராய்பரேலியிலிருந்து லோக்சபாவிற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
எதிர்கட்சி தலைவர்[மூலத்தைத் தொகு]

சோனியா காந்தி பில் கிளிண்டன் உடன் அவரது விஜயம் 2000
1999ல் பதிமூன்றாவது லோக்சபாவின் எதிர்க்கட்சித் தலைவராக அவர் தேர்ந்தெடுக்கப்பட்டார். பிஜேபி-ஏற்படுத்திய என்டிஏ(தேசிய ஜனநாயக முன்னணி) அடல் பிஹாரி வாஜ்பாய் தலைமையில் அரசமைத்த போது, அவர் எதிர்க்கட்சித் தலைவராகப் பொறுப்பேற்றார். அந்த எதிர்க்கட்சித் தலைவர் என்ற பொறுப்பில், அவர் என்டிஏ அரசாங்கத்திற்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானம் 2003ல் கொண்டுவந்தார். அவர் காங்கிரஸ் தலைவராக பத்து வருடங்களுக்குத் தொடர்ந்து பதவி வகித்தவர் என்ற நிலைச்சான்றை (ரெக்கார்டு) சாதித்துக் காட்டினார்.
2004 தேர்தல்களும் பின்விளைவும்[மூலத்தைத் தொகு]

2004 பொதுத்தேர்தல்களில், சோனியா காந்தி ஒரு நாடுதழுவிய பிரசாரம் செய்ததில், குறுக்கு-மறுக்குக் கட்டமாக, ஆம் ஆத்மி (சாதாரண மனிதன்) என்ற கோஷத்தை பிஜேபி-ஏற்படுத்திய தேசிய ஜனநாயக முன்னணி (என்டிஏ) எழுப்பிய 'இந்தியா மிளிர்கின்றது' என்ற கோஷத்திற்கு எதிரிடையாக எழுப்பினார். அப்பொழுது பிஜேபியை "யாருக்காக இந்தியா மிளிர்கின்றது?" என்று மறுதலையாக வினவினார். தேர்தலில், அவர் உத்திரப்பிரதேச ராய்பரேலி தொகுதியில் இருந்து பெரும்வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். என்டிஏயின் தோல்வியைத் தொடர்ந்து, அவர்தான் அடுத்த இந்தியாவின் பிரதம மந்திரி என்று பரவலாக எதிர்பார்க்கப்பட்டார். மே பதினாறாம் நாள், இடதுசாரிகளின் ஆதரவுடன் 15-கட்சி கூட்டணி அரசாங்கத்தை நடத்த அவர் ஒருமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார், தொடர்ச்சியாக அவ்வரசாங்கம் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி (யுபிஏ) என்ற பெயரிடப்பட்டது.

தேர்தலுக்குப் பின்னர், தோற்ற என்டிஏ அவரை 'அந்நியப் பிறப்பு' என்று எதிரிடையாகக் கிளர்ச்சி செய்தது. மற்றும் மூத்த என்டிஏ தலைவர் சுஷ்மா சுவராஜ் அவர்கள், சோனியா காந்தி பிரதமரானால், தலையை மொட்டை அடித்துக் கொள்வதாக அச்சுறுத்தியோடு நில்லாமல் "தரையில் படுத்துறங்குவேன்" என்றும் கூறினார்.[14] என்டிஏ அவர் பிரதம மந்திரி பதவிக்கு நிற்க பல சட்ட பூர்வமான காரணங்கள் தடையாக இருந்ததாக உரிமை கோரியது.[15] அவர்கள் சுட்டிக்காட்டியது, குறிப்பாக, 1955 இந்திய குடி உரிமைச் சட்டத்தின் ஐந்தாம் பிரிவு ஆகும், அதன்படி, அவர்கள் 'ஏற்றெதிரிடை' (கொண்டு கொடுப்பது செய்வது) உட்பொதிந்த கருத்தென்று உரிமை கோரினார்கள். இதை மற்றவர்கள் கூடாதென வாதிட்டதால்[16] இறுதியில்உச்ச நீதி மன்றம் மனுக்களை தள்ளுபடி செய்து சோனியா காந்தி பிரதமராக சட்டப்படி எந்த தடையுமில்லை என தீர்ப்பு வழங்கியது.

ஒரு சில நாட்களுக்குப் பின்னர், சோனியா காந்தி லோக் சபாவின் காங்கிரஸ் பாராளுமன்றத் தலைமைப் பொறுப்பேற்க மறுத்ததால், மற்றும் அப்படி செய்தமையால், பிரதம மந்திரி பதவியே வேண்டாம் என்று புறக்கணித்தார். பெருவாரியான இந்திய மக்கள் அவரது நிலையை பழமையான இந்தியப் பாரம்பரியமான முடிதுறத்தலுக்கு ஒப்பிட்டனர், ஆனால் அதேசமயம் எதிர்க்கட்சியினர் அது ஒரு அரசியல் தந்திரம் என்று சாடினர்.[17]
யுபிஏ கூட்டத்தலைவர்.[மூலத்தைத் தொகு]
சோனியா காந்தி இந்திய பொருளாதார உச்சி மாநாடு பேசுதல் 2006
மே பதினெட்டாம் நாள், அவர் பிரசித்தி பெற்ற பொருளாதார நிபுணர் டாக்டர். மன்மோகன் சிங் பெயரை பிரதம மந்திரி பதவிக்காகப் பரிந்துரைத்தார்.

மார்ச் மாதம் 23 ஆம் நாள், சோனியா காந்தி தனது லோக்சபா பொறுப்பிலிருந்தும் மற்றும் தேசிய ஆலோசனைக் குழவின் மன்றத்தலைவர் பதவிப்பொறுப்பிலிருந்தும் ராஜினாமா செய்தார். லாப-நோக்குடைய அந்த தேசிய ஆலோசனைக் குழுவின் தலைமைப்பதவியில் அவருக்கு விலக்கு அளிக்கப்படப்போகிறது என்ற யூகத்திற்காக அப்படி செய்தார். 2006 மே மாதம் நிகழ்ந்த ராய்பரேலி பாராளுமன்றத் தொகுதித் தேர்தலில் மறுமுறை பெரும்வாக்கு வித்தியாசத்தில் அதாவது 4,00,000 ஓட்டுக்களில் வெற்றிபெற்றார்.

தேசிய ஆலோசனைக் குழுவின் கூட்டத்தலைவர் மற்றும் யுபிஏயின் கூட்டத்தலைவர் பொறுப்புகளில், அவர் தேசிய கிராமிய வேலைவாய்ப்பு உறுதித் திட்டம் மற்றும் தகவல் அறியும் உரிமைச்சட்டம் இரண்டும் கொண்டுவர வேண்டி முக்கியப் பங்காற்றினார்.[18][19]
2007 ஜூலை 15 ஆம் நாள் ஐ.நா.சபை கொணர்ந்த தீர்மானத்தின் படி அவ்வாண்டு அக்டோபர் 2 ஆம்நாள், அதாவது மகாத்மா காந்தியின் பிறந்தநாளை சர்வதேச அஹிம்சை தினம் என்று அனுசரித்த வேளையில் அவர் ஐ.நா சபையில் உரையாற்றினார்.[20]
அவரது தலைமையின் கீழ், இந்தியாவில் மறுபடியும் காங்கிரஸ்-ஏற்படுத்திய-யுபிஏ 2009 பொதுத்தேர்தல்களில் ஒரு
அறுதிப்பெரும்பான்மை பெறக்கூடிய அளவில், அதுவும் மன்மோகன் சிங்கே பிரதம மந்திரி என்ற நிலையில் வெற்றி பெற்றது. காங்கிரஸ் 206 லோக்சபா இடங்களில் வென்றதே, எண்ணிக்கையில் 1991லிருந்து பெற்ற அதிகபட்ச மொத்தம் ஆகும்.
திறனாய்வு[மூலத்தைத் தொகு]
அவரது தலைமை பற்றி தொடக்கத்தில், காங்கிரஸ் கட்சிக்குள்ளேயே விமர்சனம் கிளம்பியது. 1999ல் மே மாதம், மூன்று மூத்த கட்சித்தலைவாகள் (ஷரத் பவார், பூர்ணோ ஏ. சங்மா, மற்றும் தாரிக் அன்வர்)அவரது அந்நிய மூலங்கள் என்பதைக் காட்டி இந்தியப் பிரதம மந்திரி ஆகும் அவரது உரிமையையே சவால்விட்டனர்.
அதற்குப் பதிலளிக்க வேண்டி, அவர் கட்சித்தலைவர் பதவியிலிருந்தே விலக முன்வந்தார் எனினும், அதன் விளவு வெகுஜன ஆதரவுப்பொங்கியது மற்றும் தொடர்ந்து மூன்று கிளர்ச்சியாளர்களும் வெளியேற்றப்பட, அவர்கள் தேசியவாத காங்கிரஸ் கட்சியைத் தொடங்க நேர்ந்தது.[21]
எளிமையான பழக்க வழக்கங்களில் முனைப்பு[மூலத்தைத் தொகு]
சோனியா காந்தி தனது பிள்ளைகளை பிற காங்கிரஸ் எம்.பிகளுக்கு எளிமையான பழக்க வழக்கங்கள் மேற்கொள்ள வலியுறுத்தினார், அதற்கு முன்னுதாரணமாக அவர் 2009 செப்டம்பர் மாதம் 14 ஆம்நாள் புதுடெல்லியில் இருந்து மும்பைக்கு சிக்கன வகுப்பில் விமானப்பயணம் செய்தார். அதனால் அவர் ரூ 10,000 மிச்சப்படுத்தினார்.[22][23] எம்பிக்களின் ஊதியத்திலிருந்து (ஒரு எம்.பியின் மாத ஊதியம் ரூ 16000)20% இந்தியாவில் பஞ்சத்தால் பாதிக்கப்பட்டோர்களுக்கென நிதியளிக்க வலியுறுத்தினார்.
சொந்த வாழ்க்கை[மூலத்தைத் தொகு]
சோனியா காந்தி 2009

இந்திரா காந்தியின் மூத்த புதல்வரான மறைந்த ராஜிவ் காந்தியின் மனைவி சோனியா ஆவார், அவரது மைந்தர் ராகுல் காந்தி, (உபி) அமேதி தொகுதியிலிருந்து பாராளுமன்றத்திற்கு 2004,2009ல் தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளார். அவர் மகள் பிரியங்கா காந்தி பதவிக்காக நிற்கவில்லை எனினும், காங்கிரஸ் கட்சியின் பிரசாரப்பொறுப்பு மேலாளராக பணிபுரிந்தார். எதிர்காலத்தில் காங்கிரஸ் கட்சியில் பொறுப்புகளை வகிப்பார் என்ற போதுமான ஊடக யூகங்கள் அவரைப்பற்றி உள்ளன.
Image may contain: 3 people

Saturday, 16 September 2017

COLLOSIUM OF ROME BUILT 72 A.D




COLLOSIUM OF ROME  BUILT  72 A.D




‘எல்லாச் சாலைகளும் ரோம் நோக்கி’ என்ற வழக்குச் சொல், ஒரு மனிதன் தான் இறப்பதற்குள் ஒரு முறையேனும் ரோம் நகரை பார்த்துவிட வேண்டும் என்ற அர்த்தத்தில்தான்!

அப்படிப்பட்ட ரோம் நகரில் இருக்கும் ஒரு பயங்கரமான அரங்கத்தைத் தெரிந்துகொள்வோமா! ஒரு பிறந்த நாள் கேக்கை உள்பகுதியில் குடைந்து வைத்தது போல் இருக்கிறது சிதலமடைந்த அந்த அரங்கம். அதன் பெயர் கொலோசியம். இது ஒரு பயங்கரமான அரங்கம். இத்தாலியின் தலைநகர் ரோமில், கேலியன், எஸ்க்யூலன், பாலட்டைன் மலைகளுக்கு இடைப்பட்ட பள்ளத்தாக்கில் இந்த கொலோசியம் அமைந்துள்ளது. கொலோசியம் என்பது, தொழில்முறைப் போர்வீரர்கள்,
ஒரு பள்ளத்தாக்குப் பகுதியில் அமைந்திருக்கிறது கொலோசியம். இதன் உயரம் 150 அடி. நீரோ மன்னனின் அரண்மனைக்கு அருகில் அமைக்கப்பட்டது இது.
அரச குடும்பத்தினருக்கு, பெரும் நிலப் பிரபுக்களுக்கு, முக்கியமான வர்களுக்கு, பிறருக்கு என மொத்தம் நான்கு பார்வையாளர்கள் பகுதிகளைக் கொண்டது இது. கொலோசியத்துக்குக் கீழே உள்ள அடித்தளத்தில் அடிமைகளும் மிருகங்களும் தனித்தனியாகத் தங்க வைக்கப்பட்டனர். ஆயுதங்களைச் சேமித்து வைக்க தனிப் பகுதி உண்டு

தங்களுக்குள்ளும், விலங்குகளுடனும், பயங்கரமான குற்றவாளிகளுடனும், சண்டையிடுவதற்காகக் கட்டப்பட்ட ஒரு அரங்கம் ஆகும். இது நீள்வட்ட வடிவமான கட்டிடம். இதற்குக் கூரை கிடையாது. இக் கட்டிடத்தின் மத்தியில் உள்ள களத்திலேயே நிகழ்ச்சி நடக்கும். யாராவது ஒருவர் இறக்கும் வரையில் பயங்கரமான சண்டை நிகழ்வதுண்டு. இதனைப் பார்ப்பதற்காகக் கூடும் மக்கள் இருப்பதற்காக நடுவில் உள்ள களத்தைச் சுற்றி வட்டம் வட்டமாகப் படிகள் அமைந்திருக்கும். இக் கட்டிடவகை அம்ஃபிதியேட்டர் எனப்பட்டது.
இலத்தீன் மொழியில் வட்டவடிவ அரங்கம் என்று பொருள். அக்காலத்தில் இந்த அரங்கம், 50,000 மக்கள் இருந்து பார்க்கக்கூடிய அளவு இடவசதியைக் கொண்டிருந்ததாகக் கணக்கிட்டுள்ளார்கள். கி.பி 72 ம் ஆண்டில், வெஸ்பாசியன் என்பவன் ரோமப் பேரரசனாக இருந்தபொழுது, இதன் கட்டிடவேலைகள் தொடங்கின. எனினும், கி.பி 80 ம் ஆண்டில் அவன் மகனான டைட்டஸ் காலத்திலேயே கட்டிடம் நிறைவு பெற்றது. 217 ம் ஆண்டு மின்னல் தாக்கியதால் ஏற்பட்ட தீயில் சேதமாகும் வரை, கொலோசியம் தொடர்ச்சியாகப் பயன்பாட்டில் இருந்தது. 238 ல் மீண்டு புதுப்பிக்கப்பட்டது.
காட்டு விலங்குகளை வேட்டையாடும் விளையாட்டுகளுக்காகவும், வேறு நிகழ்ச்சிகளுக்காகவும், கொலோசியம் 524 ம் ஆண்டுவரை பயன்பட்டது. 847 மற்றும் 1349 ஆகிய ஆண்டுகளில் புவியதிர்வுகளால் கடுமையாகச் சேதமடைந்த இது, பின்னர் ஒரு கோட்டையாக மாற்றப்பட்டது. இதன் ஒரு பகுதியில் கிறிஸ்தவ தேவாலயம் ஒன்றும் அமைக்கப்பட்டது. நீண்ட காலமாக ஆம்ஃபி தியேட்டர் என்றே அழைக்கப்பட்டு வந்த அந்தரங்கினை பெடெ என்ற வரலாற்று ஆய்வாளர் கொலோசியம் என்று பெயர் மாற்றினார்.

நீரோ பூங்காவுக்கு அருகில் மிகப்பிரம்மாண்டமாக அமைந்திருந்த நீரோவின் சிலையை ஒட்டி அந்த அரங்கு அமைக்கப்பட்டதால் அந்த பெயர் வந்தது.
கோலோஸ்ஸியம் என்ற பெயர் நீரோவின் ஒரு பெரிய சிலையின் பெயரில் இருந்து வந்திருக்கலாம் எனக் கருதப்படுகிறது [4] (நீரோவின் சிலை ரோடஸின் கொலோசஸின் பெயரால் அழைக்கப்படுகிறது)
ஆறு ஏக்கர் நில பரப்பில் 615 அடி நீளமும், 510 அடி அகலமும் உடைய அந்த அரங்கின் சுற்றுச்சுவர் 157 அடி உயரம் கொண்டது. மொத்தம் ஒரு லட்சம் க்யுபிக் மீட்டர் ட்ராவெல்டன் கற்கள் அருகிலிருந்த டிவோலி மலைப்பிரதேசத்திலிருந்து 2,40,000 முறை வண்டி களில் எடுத்துவரப்பட்டு யன்படுத்தப்பட்டிருக்கின்றன. கட்டுமானப் பணிகளில் 40 ஆயிரம் யூத அடிமைகள் பயன்படுத்தப்பட்டனர். இத்தனை சிறப்புகள் கொண்ட கொலோசியம், கட்டப்பட்டதற்கான காரணம் அத்தனை உன்னதமானது இல்லை.
மனித மனத்தின் வக்கிர எண்ணங்களுக்கு வடிகாலாய் அந்த காலத்தில் அரசுகளை ஆண்ட மன்னர்களே பல அநீதியான காரியங்களை சட்டப்பூர்வமாக செய்திருக்கின்றனர். அதற்கு உதாரண சாட்சியாக இருப்பதுதான் அவர்கள் காலத்தில் கட்டப்பட்ட கொலோசியம். கொலோசியம் அரங்குகளில் மனிதர்களை மட்டுமல்ல விலங்குகளோடு மோதி அவற்றைக் கொல்லும் விளையாட்டுக்களும் உண்டு. டைட்டஸ் காலத்தில் அரங்கின் துவக்க விழா நிகழ்ச்சியின்போது 9000 விலங்குகள் கொல்லப்பட்டிருக்கின்றன.
கிறுஸ்துவ சமயம் வேகமாக இத்தாலியில் பரவத்தொடங்கிய பின் க்ளேடியேட்டர் விளையாட்டுக்கள் தடை செய்யப்பட்டு 6ம் நூற்றாண்டில் முற்றிலுமாக நிறுத்தப்பட்டன. வரலாற்றின் பக்கங்களை கொலோசியம் பயங்கரத்தை நிரப்பினாலும், இத்தாலி நாடு அதன் பயங்கரத்தை அழித்து, அதனை ரோமன் -கிரேக்க கட்டடக்கலைக்கு உதாரணமாக சொல்லும்படி மாற்றிவருகிறது.


இத்தாலிய அரசு 1948 ம் ஆண்டு தனது நாட்டில் மரணதண்டனையை முற்றிலுமாக ஒழித்து சட்டம் இயற்றியது. அதன் அடையாளமாக கொலோசியத்தை அலங்கரித்து பிரகாசிக்கச்செய்து உலகுக்கு அறிவித்தது.
மரணதண்டனைக்கு எதிரான குரலை பிரதிபலிக்கும் சின்னமாக கொலோசியத்தை அப்பொழுது பிரகடனப்படுத்தியது. அன்றிலிருந்து எந்த நாட்டில் மரணதண்டனையை ஒழித்து சட்டம் இயற்றினாலும், கொலோசியம் பொன்விளக்குகளால் மின்னும். ஒரு காலத்தில் மரண ஓலங்களால் நிரம்பிய கொலோசியம் இன்று மரணதண்டனைக்கு எதிரான அடையாளச்சின்னமாக கருதப்படுவது விசித்திரமான வரலாற்று முரண்தானே!

Tuesday, 11 July 2017

Tavolara Island - உலகின் குட்டி நாட்டின் மக்கள் தொகை 11 பேர்!




Tavolara Island

உலகின் குட்டி நாட்டின் மக்கள் தொகை 11 பேர்!

ஒரு குட்டித்தீவு தவோலாரா

உலகின் மிகச் சிறிய ராஜ்ஜியத்தின் ராஜாபடத்தின் காப்புரிமைELIOT STEIN
உலகின் மாபெரும் பேரரசுகளைப் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறோம். பல காலணி நாடுகளில் ஆதிக்கம் செலுத்தி, சூரியன் அஸ்தமிக்காத நாடு என்று அழைக்கப்பட்ட பிரிட்டன் சாம்ராஜியம், சீனாவில் இருந்து இந்துஸ்தான் வரை எல்லையை விரிவாக்கியிருந்த செங்கிஸ்தானின் மங்கோலிய பேரரசு. காபூலின் கந்தஹாரில் இருந்து கர்நாடகம் வரை பரவியிருந்த முகலாயர்களின் சாம்ராஜியம்.
ஆனால் உலகிலேயே மிகச் சிறிய ராஜியம் எது? அதன் அரசர் யார் என்று தெரியுமா? உலகின் சிறிய ராஜியத்தின் மக்களின் எண்ணிக்கை வெறும் 11 தான். இந்த ராஜா ஓர் உணவு விடுதியை நடத்துகிறார். சாதாரண கால்சட்டை அணிந்து, ரப்பர் செருப்பணிந்து வாழ்ந்துவரும் அரசரின் ஆட்சிக்கு உட்பட்டது தவோலாரா.

உலகின் மிகச் சிறிய ராஜ்ஜியத்தின் ராஜாபடத்தின் காப்புரிமைELIOT STEIN

இத்தாலியின் சர்டானியா பிராந்தியத்தின் அருகில் மத்திய தரைகடல் பகுதியில் அமைந்துள்ள ஒரு குட்டித்தீவு தவோலாரா. இத்தாலியால் ஒரு நாடாக அங்கீகரிக்கப்பட்ட இந்தத் தீவின் ஒட்டுமொத்த பரப்பளவே ஐந்து சதுர கிலோமீட்டர்தான்.
ராஜாவின் பெயர் எந்தோனியோ பர்த்லியோனி. தவோலாராக்கு சென்றால் அரசரை பார்க்க அரசவைக்குச் செல்லவேண்டாம். எந்தவித முன்னனுமதியும் இன்றி அரசரை சுலபமாகவே பார்த்துவிடலாம். ஆடம்பரமில்லாமல் இயல்பாக தோற்றமளிக்கும் அரசரே தீவில் உள்ள ஒரேயொரு உணவு விடுதிக்கும் உரிமையாளர். சுற்றுலாப் பயணிகளுக்கு படகுச் சவாரி ஓட்டுபவரும் அவரே.

தனது உணவுவிடுதியிக்கு வெளியே அரசர் அந்தோனியாபடத்தின் காப்புரிமைRICCARDO FINELLI
Image captionதனது உணவுவிடுதியிக்கு வெளியே அரசர் அந்தோனியா

180வது நிறுவக தினத்தை கொண்டாடும் தவோலாரா ராஜ்ஜியம் மிகச் சிறிய தீவாக இருப்பதால் அதை நாடு என்று சொல்வது வேடிக்கையானதாக தோன்றலாம். ஆனால், அரசர் அந்தோனியோ பர்த்லியோனி தனது ராஜ்ஜியத்தைப் பற்றி பெருமைப்படுகிறார்.
இத்தாலியில் வசித்துவந்த அந்தோனியா பர்த்திலியோனியின் முப்பாட்டனார் குஸெப் பர்த்லியோனி சகோதரிகளான இருவரை திருமணம் செய்துகொண்டார். அப்போது இத்தாலி ஒரு தனி நாடல்ல. சர்டீனியாவில் ஒரு பாகமாக இருந்த இத்தாலியில் இரண்டு திருமணம் செய்து கொள்வது சட்டப்படி குற்றம். எனவே அவர் 1807 ஆம் ஆண்டில் இத்தாலியில் இருந்து இந்தத் தீவில் குடியேறினார்.

ஆடுபடத்தின் காப்புரிமைREDA &CO SRL/ALAMY

ஆடு வேட்டை
ஜெனோவா நகரில் வசித்து வந்த குஸெப் பர்த்லியோனிக்கு, இந்தத் தீவில் இருக்கும் மின்னும் பற்கள் கொண்ட ஆடுகளைப் பற்றி தெரிந்துக்கொண்டார். இந்த அரிய வகை ஆடுகள் உலகிலேயே இங்கு மட்டுமே வசிக்கக்கூடியவை. இந்த ஆடுகள் பற்றிய தகவல் இத்தாலி வரை சென்றது. சர்டீனியாவின் ராஜா கார்லோ அல்பர்ட்டோ இந்த ஆடுகளை பார்க்கவும், வேட்டையாடவும் தவோலாரா தீவுக்கு வருகைபுரிந்தார்.
1836ஆம் ஆண்டில் தீவுக்கு வந்தபோது தன்னை அறிமுகப்படுத்திக்கொண்ட கார்லோ அல்பர்டோ, "நான் சார்டீனியோவின் ராஜா" என்று சொன்னாராம். அவரிடம் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்ட குசெப்பின் மகன் பாவோலோ, "நான் தவோலாராவின் ராஜா" என்று கூறினார் என்று மூதாதையர்களின் தைரியத்தை பெருமையுடன் நினைவுகூர்கிறார் அந்தோனியோ.

மத்திய தரைக்கடல்படத்தின் காப்புரிமைREALY EASY STAR/ALBERTO MAISTO/ALAMY

மத்திய தரைக்கடல்
பாவோலோ, கார்லோ அல்பர்டோவுக்கு தீவு முழுவதையும் சுற்றிக் காண்பித்து, இந்த சிறப்பு ஆடுகளை வேட்டையாட உதவியும் செய்தார். தீவை மூன்று நாட்கள் சுற்றிப் பார்த்த அரசர் கார்லோ அல்பர்டோ நாடு திரும்பியதும், தவோலாரவை தனிநாடாக அறிவித்து சாசனம் எழுதிக்கொடுத்தார். அதைத்தொடர்ந்து, தன்னை புதிய ராஜ்ஜியத்தின் அரசராக பாவோலா அறிவித்துக்கொண்டார். புதிதாக உதித்த ராஜ்ஜியத்தின் மொத்தப் பிரஜைகள் 33 பேர் மட்டுமே.
அரசரான பாவோலோ இறப்பதற்கு முன்னதாக அரச கல்லறையை அமைத்தார். அங்கு தான் புதைக்கப்பட்ட பிறகு, கல்லறையின் மேற்புரத்தில் கிரீடம் ஒன்றை அமைக்கவேண்டும் என்றும் உத்தரவிட்டார். அரசராக வாழ்ந்தபோது, ஒருமுறை கூட மணிமகுடம் சூடாத பாவோலோ, கல்லறைக்குள் அடங்கிய பிறகு அதன்மேல் மகுடம் அமைக்கப்பட்டது என்பது சுவராசியமான தகவல்.

உலகின் மிகச் சிறிய ராஜ்ஜியத்தின் ராஜாபடத்தின் காப்புரிமைREALY EASY STAR/ALBERTO MAISTO/ALAMY

அமைதி ஒப்பந்தம்
இத்தாலியின் நிறுவனர் என்று அழைக்கப்படும் குசெப் கைரிபால்டி உட்பட பல நாட்டு அரசர்களுடன் தவோலாரா சமரசங்களை செய்து கொண்டது. சர்டீனியாவின் அரசராக இரண்டாம் விக்டோரியா இமானுவெல், தவோலாராவுடன் ஒரு ஒப்பந்தத்தை மேற்கொண்டார்.
19ஆம் நூற்றாண்டில் பிரிட்டன் மகாராணி விக்டோரியா, உலக அரசர்கள் அனைவரின் புகைப்படங்களையும் சேகரிக்கும் முயற்சியில் ஈடுபட்டார். அதற்காக உலகம் முழுவதும் பயணித்த கப்பல், தாவோலாராவிற்கும் சென்று அரசரின் புகைப்படத்தை பெற்றது. அன்றுமுதல் இன்றுவரை இங்கிலாந்தின் பக்கிம்ஹாம் அரண்மனையை அலங்கரிக்கும் புகைப்படங்களில் தவோலாரா அரசரின் புகைப்படமும் ஒன்று.

பசிபிக் பெருங்கடலில் அமைந்துள்ள டோங்கா நாடு 748 கிலோமீட்டர் பரப்பளவு கொண்டதுபடத்தின் காப்புரிமைTORSTEN BLACKWOOD/AFP/GETTY IMAGES
Image captionபசிபிக் பெருங்கடலில் அமைந்துள்ள டோங்கா நாடு 748 கிலோமீட்டர் பரப்பளவு கொண்டது

நேட்டோ ராணுவத் தளம்
இன்றும் அதே புகைப்படம் அந்தோனியாவின் உணவு விடுதியை அலங்கரிக்கிறது. 1962-ல், நேட்டோவின் ராணுவத்தளமாக மாறிய பிறகு இந்த சிறிய ராஜ்ஜியத்தின் இறையாண்மை முடிவுக்கு வந்துவிட்டது. பல இடங்களுக்கு செல்வதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால் இத்தாலி எப்போதுமே தவோலாராவை தனது நாட்டின் ஒருபகுதி என முறைப்படி குறிப்பிட்டதேயில்லை.
உலகின் எந்தவொரு நாடும் தவோலாராவை ஒரு நாடாக ஏற்றுக்கொள்ளவில்லை. தவோலாராவின் அரசர் அந்தோனியோவும் அவரது குடும்பத்தினரும் இத்தாலியில் இருந்து இந்த தீவுக்கு படகு சேவைகளை வழங்குகின்றனர். உலகில் இங்கு மட்டுமே காணக்கிடைக்கும் தனிச்சிறப்புத்தன்மை கொண்ட ஆடுகளையும், அழிவின் விளிம்பில் இருக்கும் ஒரு கழுகு இனத்தையும் பார்க்க பெருமளவிலான மக்கள் இங்கு ஆவலுடன் சுற்றுலாப் பயணம் மேற்கொள்கின்றனர்.

அரசரின் அலுவலகப்பணிபடத்தின் காப்புரிமைAFP/GETTY IMAGES
Image caption5 ஆயிரத்து 765 சதுர கிலோமீட்டர் பரப்பளவு கொண்ட புரூணையின் மக்கள்தொகை 4 லட்சத்து 13 ஆயிரம்

பரம்பரைத் தொழில்
தீவு நாடான தவோலாராவை சுற்றி இருக்கும் கடல்பகுதியில் பல்வேறு வகையிலான கடல்வாழ் உயிரனங்கள் சுற்றுலாப் பயணிகளை கவர்கின்றன. அந்தோனியோவும் அவரது மருமகனும் படகு போக்குவரத்தை நிர்வகிக்க, மற்றொரு உறவினர் மீன்பிடித் தொழிலிலும், இன்னும் ஒருவர் வேட்டைத் தொழிலிலும் ஈடுபட்டுள்ளனர்.
ராஜ்ஜிய பரிபாலனம் என்பது குடும்பத்தை நிர்வகிப்பது போல என்று அந்தோனியா சொல்கிறார். சுற்றுலா அதிகரித்து வருவதால் கணிசமான வருவாய் ஈட்டுவதாக கூறும் அந்நாட்டு அரசர், சாதாரண வாழ்க்கையே என்றும் சிறந்தது என்கிறார்.

உள்ளூர் மக்கள்படத்தின் காப்புரிமைGIANLUIGI GUERCIA/AFP/GETTY IMAGES
Image captionஆப்பிரிக்க நாடான ஸ்வாசிலேண்ட், 17360 சதுர கிலோமீட்டர் பரப்பளவு கொண்டது

தினமும் காலையில் குடும்பத்தினரின் கல்லறைகளுக்கு சென்று மலர் தூவி வழிபடுவது அந்தோனியாவுக்கு பிடித்தமானது. ஆனால் அசல் பூக்களை எடுத்துச் சென்றால், ஆடுகள் மென்றுவிடுவதால், பிளாஸ்டிக் மலர்களையே கல்லறைகளில் வைத்து வழிபடுகிறார்.
தொழில்நுட்பரீதியில் பார்த்தால் அந்தோனியா மற்றும் குடும்பத்தினர் இத்தாலியின் குடிமக்கள். தனது ஆட்சிக்கு அங்கீகாரம் வழங்கும்படி, டியூக் ஆஃப் சவாயிடம் கோரிக்கை வைக்கலாமா என ஒரு காலகட்டத்தில் யோசித்த அந்தோனியா, பிறகு அதனை கைவிட்டுவிட்டார்.
தவலோராவின் அரசர் கேட்கிறார் "சிறிய நாடாக இருந்தாலும், எங்கள் முன் விரிந்திருக்கும் மிகப்பெரிய கடல் சாம்ராஜ்ஜியத்தின் கோட்டையாக தவோலாரா திகழ்கிறது. இதைவிடப் பெரிய பேறு வேறென்ன இருக்கமுடியும்?"

கார் மற்றும் பேருந்துபடத்தின் காப்புரிமைCHRIS JACKSON/GETTY IMAGES
Image captionதென்னாப்பிரிக்காவில் இருக்கும் லெசோதே 30 ஆயிரம் கிலோமீட்டர் பரப்பளவு கொண்டது

தவோலாரா போன்ற மக்கள் வசிக்கும் வேறு சில சிறிய ராஜ்ஜியங்கள்
1. ரெடோண்டா, இங்கிலாந்தின் செளத்ஹாம்ப்டனில் அமைந்திருக்கும் இது, புகையிலைத் தடையில் இருந்து விலகியிருப்பதற்காக தன்னைத்தானே தனி ராஜ்ஜியமாக அறிவித்துக்கொண்டது.
2. பசிபிக் பெருங்கடலில் அமைந்துள்ள டோங்கா 748 கிலோமீட்டர் பரப்பளவு கொண்டது. ஒரு லட்சத்து ஆறாயிரம் மக்கள் வசிக்கும் இந்த நாடு, 1773இல் பிரிட்டனின் கேப்டன் ஜேம்ஸ் குக்கால் ண்டுபிடிக்கப்பட்டது. கேப்டன் குக் இந்த தீவை நட்புத் தீவு என்று அழைத்தார். ஆனால், இங்கு வசித்தவர்களோ கேப்டன் குக்கை கொல்ல நினைத்தார்கள்.
3. போர்னியோத் தீவில் அமைந்துள்ள புரூணை ஐந்தாயிரத்து 765 சதுர கிலோமீட்டர் பரப்பளவு கொண்டது. இங்கு மக்களிடம் எந்தவித வரியும் வசூலிக்கப்படுவதில்லை. புரூணை சுல்தான், உலகின் மிகப் பெரிய செல்வந்தர்களில் ஒருவர்.
4. ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள ஸ்வாசிலாந்து 17 ஆயிரத்து 360 சதுர கிலோமீட்டர் பரப்பளவு கொண்டது. இந்த நாட்டின் அளப்பரிய இயற்கை அழகினால் இது மர்மங்கள் சூழ்ந்த நாடு என்று அழைக்கப்படுகிறது. ஸ்வாசிலாந்தின் மொத்த மக்கள்தொகை சுமார் 13 லட்சம்.
5. 30 ஆயிரம் கிலோமீட்டர் பரப்பளவில் அமைந்திருக்கும் லெசோதே, தென்னாப்பிரிக்காவால் சூழப்பட்டது. கடற்கரை மட்டத்தைவிட கீழே அமைந்திருக்கும் இந்த நாட்டின் மக்கள்தொகை சுமார் இருபது லட்சம்.