Showing posts with label AUGUST 26. Show all posts
Showing posts with label AUGUST 26. Show all posts

Saturday, 4 September 2021

NEERU BAJWA PUNJABI -HINDI ACTRESS BORN 1980 AUGUST 26

 

NEERU BAJWA PUNJABI -HINDI 

ACTRESS BORN 1980 AUGUST 26


 Neeru Bajwa – Indian Female – Hindi – Punjabi – Film Actress – Canadian Actress- Director - Producer -Associated with Punjabi Cinema TV – Television Actress-  




Name : Neeru Bajwa


Date of Birth :  26 August 1980  


Place of Birth : Surrey, Canada


Brother – Sister :  Rubina Bajwa


Husband :  Harry Jawandha (Marriage : 2015)


 


***** Neeru Bajwa *****


***** Neeru Bajwa is a Canadian Actress, 


***** director and producer associated with Punjabi cinema.


*****  She started her career in 1998 





***** with Dev Anand's Bollywood film 


***** Main Solah Baras Ki 


***** and then moved on to working in Hindi soap operas


*****  and Punjabi language films


***** ***** ***** *****  


  




***** Neeru Bajwa started her career in Indian 


***** daily soap operas in 2005 


***** with Hari Mirchi Lal Mirchi on DD1 


***** before moving on to Astitva...Ek Prem Kahani 


***** on Zee TV followed by Jeet on Star Plus 


***** and then Guns and Roses on Star One.  







***** ***** *****


***** In January 2013, Bajwa appeared in the 


***** multi-starer Punjabi film 


***** Saadi Love Story, produced by Jimmy Sheirgill


*****  productions, directed by Dheeraj Rattan 


***** and starring 


***** Diljit Dosanjh, 


***** Amrinder Gill, 


***** and Surveen Chawla. 


***** She paired up opposite Diljit Dosanjh 


***** again in the film Jatt and Juliet 2 


***** which broke all the previous opening day 


***** collection records for Punjabi cinema. 


***** In August 2013, her film, Naughty Jatts 


***** was released in which she featured 


***** along with Binnu Dhillon, 


***** Arya Babbar 





***** and Roshan Prince. 


***** The movie got mixed reviews from critics. 




*****  ***** ***** 


***** Neeru Bajwa debuted as a director in 2017 


***** with the Punjabi movie Sargi, 


***** which stars her sister Rubina Bajwa in the 


***** leading role alongside 


***** Jassi Gill 


***** and Babbal Rai.  


***** She also owns a production company 


***** called Neeru Bajwa Entertainment. 


***** In November 2019, Bajwa starrer 


***** and produced film Beautiful Billo went on floors, 


***** in which she will be sharing the screen 


***** with her sister Rubina Bajwa.  


***** Since April 2021, Neeru Bajwa is hosting 


***** a Punjabi show Jazba. 




***** ***** *****


***** In her documentary film Bollywood Bound, 


*****Neeru Bajwa admits to being a high school 


***** drop out who had little interest in studies 


***** and was always inspired by the glamour 


***** of Bollywood, so she moved 


***** to Mumbai to fulfill her dreams. 




***** ***** *****




***** Bajwa married Harry Jawandha in 2015. 


***** The couple had their first child in August 2015. 


***** In 2020, Bajwa gave birth to twins, both girls. 


Wednesday, 26 August 2020

THIRU V.KALYANA SUNDARANAR , TAMIL SCHOLAR BORN 1883 AUGUST 26 - 1953SEPTEMBER 17





THIRU V.KALYANA SUNDARANAR ,
TAMIL SCHOLAR BORN 
1883 AUGUST 26 - 1953SEPTEMBER 17

திரு. வி. கலியாணசுந்தரனார். 


திருவாரூர் விருத்தாசலம் கலியாணசுந்தரனார் அல்லது திரு. வி. க., (ஆகத்து 26, 1883 - செப்டம்பர் 17, 1953[1]) அரசியல், சமுதாயம், சமயம் எனப் பல துறைகளிலும் ஈடுபாடுகொண்டு பல நூல்களை எழுதிய தமிழறிஞர். சிறந்த மேடைப் பேச்சாளர். இவரது தமிழ்நடையின் காரணமாக இவர் தமிழ்த்தென்றல் என்ற சிறப்புப் பெயரால் அழைக்கப்படுகிறார்.
வாழ்க்கைச் சுருக்கம்
காஞ்சிபுரம் மாவட்டத்தில் துள்ளம்(தண்டலம்) என்னும் சிற்றூரில் விருத்தாசல முதலியார் - சின்னம்மா தம்பதிகளுக்கு ஆறாவது மகனாகப் பிறந்தார். இவரின் முன்னோர்கள் சோழ நாட்டில் திருவாரூர் என்ற ஊரைச் சேர்ந்தவர்கள்.

கல்யாணசுந்தரனாரின் தந்தை இலக்கியப் பயிற்சியும் இசைப்பயிற்சியும் உடையவர். ஆசிரியத் தொழிலுடன் வணிகமும் புரிந்தவர். இவர் பச்சையம்மாள் என்பவரை மணந்து மூன்று ஆண்களையும் ஒரு பெண் குழந்தையையும் பெற்றார். இவ்வம்மையார் இறந்த பின்னர் சின்னம்மாள் என்பாரை மணந்து நான்கு ஆண் மக்களையும் நான்கு பெண் மக்களையும் பெற்றார். இவர்களுள் ஒருவரே கல்யாணசுந்தரனார்.

கல்வி

தொடக்கத்தில் தம் தந்தையிடம் கல்வி பயின்றார். பின்னர் சென்னையில் இராயப்பேட்டையில் தங்கி ஆரியன் தொடக்கப் பள்ளியில் சேர்ந்தார். அதன் பின்னர், 1894 இல் வெஸ்லி பள்ளியில் நான்காம் வகுப்பில் சேர்ந்தார். அங்கு அவருக்கு ஒரு காலும் ஒரு கையும் மூடங்கின. இதனால் பள்ளிப் படிப்பு சிறிது காலம் தடைப்பட்டது. படிப்பில் நல்ல திறமையுடையவராக விளங்கினார். 1904 ஆம் ஆண்டில் ஆறாம் படிவத் தேர்வு எழுத முடியாமல் போனது. அத்தோடு அவரது பள்ளிப் படிப்பும் முடிந்தது.[2]

தமிழ்க் கல்வி
வெஸ்லி பள்ளியில் ஆசிரியராக இருந்த யாழ்ப்பாணம் நா. கதிரவேற்பிள்ளை என்ற தமிழறிஞரிடம் நட்பு ஏற்பட்டது. அவரிடம் தமிழ் பயிலத் தொடங்கினார். அவரிடம் தமிழ் நூல்களை முறையாகப் பயின்று சிறந்த புலமை பெற்றார். கதிரெவேற்பிள்ளை நீலகிரிக்குச் சென்ற பொழுது அங்கு காலமானார். அதன் பின்னர் கல்யாணசுந்தரனார் மயிலை தணிகாசல முதலியாரிடம் தமிழ், மற்றும் சைவ நூல்களையும் பாடம் கேட்டார்.

ஆசிரியப் பணி

1906 ஆம் ஆண்டில் ஸ்பென்சர் தொழிலகம் என்ற ஆங்கில நிறுவனத்தில் கணக்கர் ஆகச் சேர்ந்தார். அக்காலத்தில், பால கங்காதர திலகர் போன்றோரின் விடுதலைக் கிளர்ச்சிகளில் ஈடுபாடு கொண்டதனால் அவ்வேலையிலிருந்தும் அவர் நீங்கினார். பின்னர் 1909 இல் ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள வெஸ்லியன் பள்ளியில் ஆசிரியராகச் சேர்ந்து ஆறு ஆண்டுகள் பணி புரிந்தார். அப்போது அவருக்குத் திருமணம் நடந்தது. அவருக்கு இரண்டு பிள்ளைகளும் பிறந்தனர். 1918 ஆம் ஆண்டிற்குள் தம் மனைவி, பிள்ளைகளை இழந்து மீண்டும் தனியரானார். இராயப்பேட்டை வெஸ்லி கல்லூரியில் தலைமை ஆசிரியராகச் சேர்ந்தார். நாட்டிற்கு உழைப்பதற்காக அவர் அப்பணியில் இருந்து விலகினார்.

பத்திரிகைப் பணி
பின்னர் தேசபக்தன் என்ற பத்திரிகையில் இரண்டரை ஆண்டுகள் அதன் ஆசிரியராகப் பணி புரிந்தார். அதன் பின்னர் திராவிடன், நவசக்தி போன்ற பத்திரிகைகளில் ஆசிரியராக இருந்து நாட்டு விடுதலைக்குத் தொண்டாற்றினார்.

அரசியல் பணி
தொழிற்சங்கத்தைத் தோற்றுவித்துத் தொழிலாளர்களின் உரிமைக்கும் முன்னேற்றத்திற்கும் பாடுபட்டார். சிறந்த மேடைப் பேச்சாளரான இவர் அரசியல், சமுதாயம், சமயம் எனப் பல துறைகளிலும் ஈடுபாடுகொண்டு பல நூல்களை எழுதினார்.

எழுதிய நூல்கள்
வாழ்க்கை வரலாறுகள்
யாழ்ப்பாணம் தந்த சிவஞானதீபம், நா.கதிரைவேற்பிள்ளை சரித்திரம் - 1908
மனித வாழ்க்கையும் காந்தியடிகளும் - 1921
பெண்ணின் பெருமை அல்லது வாழ்க்கைத்துணை - 1927
நாயன்மார் வரலாறு - 1937
முடியா? காதலா? சீர்திருத்தமா? - 1938
உள்ளொளி - 1942
திரு.வி.க வாழ்க்கைக் குறிப்புகள் 1 - 1944
திரு.வி.க வாழ்க்கைக் குறிப்புகள் 2 - 1944
உரை நூல்கள்
பெரிய புராணம் குறிப்புரையும் வசனமும் - 1907
பட்டினத்துப்பிள்ளையார் திருப்பாடற்றிரட்டும் பத்திரகிரியார் புலம்பலும் விருத்தியுரையும் - 1923
காரைக்கால் அம்மையார் திருமுறை - குறிப்புரை - 1941
திருக்குறள் - விரிவுரை (பாயிரம்) - 1939
திருக்குறள் - விரிவுரை (இல்லறவியல்) 1941
அரசியல் நூல்கள்
தேசபக்தாமிர்தம் - 1919
என் கடன் பணி செய்து கிடப்பதே - 1921
தமிழ்நாட்டுச் செல்வம் - 1924
தமிழ்த்தென்றல் (அல்லது) தலைமைப்பொழிவு - 1928
சீர்திருத்தம் (அல்லது) இளமை விருந்து - 1930. (இதன் ஒரு பகுதியை ஒலிப்பு வடிவில் இங்கு காணொலி)
தமிழ்ச்சோலை கட்டுரைத் திரட்டு 1 - 1935
தமிழ்ச்சோலை கட்டுரைத் திரட்டு 2 - 1935
இந்தியாவும் விடுதலையும் - 1940
தமிழ்க்கலை - 1953
சமய நூல்கள்
சைவசமய சாரம் - 1921
நாயன்மார் திறம் - 1922
தமிழ்நாடும் நம்மாழ்வாரும் - 1923
சைவத்தின் சமசரசம் - 1925
முருகன் அல்லது அழகு - 1925
கடவுட் காட்சியும் தாயுமானவரும் - 1928
இராமலிங்க சுவாமிகள் திருவுள்ளம் - 1929
தமிழ் நூல்களில் பௌத்தம் - 1929
சைவத் திறவு - 1929
நினைப்பவர் மனம் - 1930
இமயமலை (அல்லது) தியானம் - 1931
சமரச சன்மார்க்க போதமும் திறவும் - 1933
சமரச தீபம் - 1934
சித்தமார்கக்ம - 1935
ஆலமும் அமுதமும் - 1944
பரம்பொருள் (அல்லது) வாழ்க்கை வழி - 1949
பாடல்கள்
முருகன் அருள் வேட்டல் - 1932
திருமால் அருள் வேட்டல் - 1938
பொதுமை வேட்டல் - 1942
கிறிஸ்துவின் அருள் வேட்டல் - 1945
புதுமை வேட்டல் - 1945
சிவனருள் வேட்டல் - 1947
கிறிஸ்து மொழிக்குறள் - 1948
இருளில் ஒளி - 1950
இருமையும் ஒருமையும் - 1950
அருகன் அருகே (அல்லது) விடுதலை வழி - 1951
பொருளும் அருளும் (அல்லது) மார்க்ஸியமும் காந்தியமும் - 1951
சித்தந் திருத்தல் (அல்லது) செத்துப் பிறத்தல் - 1951
முதுமை உளறல் - 1951
வளர்ச்சியும் வாழ்வும் (அல்லது) படுக்கைப் பிதற்றல் - 1953
இன்பவாழ்வு - 1925
பயண இலக்கிய நூல்கள்
இலங்கைச் செலவு (இலங்கைப் பயணம் குறித்த தொகுப்பு நூல்)
பொதுவுடைமை தொடர்பான கட்டுரைகள்
தொழிலாளர் லட்சியங்களைப் பற்றி
ஓர் இந்திய ஒர்க் ஷாப்பிலிருந்து
கர்னாடிக் மில் வேலைநிறுத்தம்
தொழிலாளர் நிலையும் சென்னை சர்க்காரும்
இந்திய தொழிலாளரின் சர்வதேச நோக்கு
ஆம்ஸ்டர்டாம் சர்வதேச ஸ்தாபனமும், மாஸ்கோ சர்வதேச ஸ்தாபனமும்
பெரம்பூர் பட்டாளத்தில் போலீஸ் அட்டூழியம்
வேலைநிறுத்த உரிமை - கில்பர்ட் ஸ்லேடருக்குப் பதில்
மில் வட்டாரத்துக் கலகங்கள்
மேற்கோள்கள்

MENAKA GANDHI , ACTIVIST OF PETA, BORN 1956 AUGUST 26



MENAKA GANDHI , ACTIVIST OF PETA,
BORN 1956 AUGUST 26




மேனகா காந்தி (பிறப்பு: ஆகஸ்டு 26, 1956 மேனகா ஆன்ந்த்) ஒரு இந்திய அரசியல்வாதி, விலங்குகள் உரிமை ஆதரவாளர் மற்றும் முன்னாள் பத்திரிக்கையாளர் ஆவார். தற்போது மத்திய மகளிர் மற்றும் குழந்தைகள் நல அமைச்சராக உள்ளார். இந்தியப் பெயர்கள் மற்றும் விலங்குகள் நலன் பற்றிய நூல்களும் வெளியிட்டுள்ளார். இவர் நேரு-காந்தி குடும்பத்தின் விலகிய உறுப்பினர்.
இளமைப் பருவம்[தொகு]
புது தில்லியில் பிறந்த மேனகா அங்குள்ள லாரன்சு பள்ளி மற்றும் மங்கை ஸ்ரீராம் கல்லூரி ஆகியவற்றில் கல்வி பயின்றார். அப்போதைய இந்தியப் பிரதமர் இந்திரா காந்தியின் மகனான சஞ்சய் காந்தியும் இவரும் காதலித்துத் திருமணம் செய்து கொண்டனர். முன்னாள் விளம்பர நடிகை[1] மற்றும் சூர்யா இந்தியா இதழின் தொகுப்பாளரான இவர் 1982-ல் சஞ்சய் காந்தி ஒரு விமான நேர்ச்சியில் இறந்தபின் அரசியலில் இறங்கினார். இதனால் இந்திரா காந்திக்கும் இவருக்கும் வெளிப்படையான மோதல்கள் ஏற்பட்டன.[2]
அரசியல் வாழ்வு[தொகு]
1979-ல் இந்தியக் குடிமக்களின் நகருதலுக்கான அடிப்படை உரிமை தொடர்பில் "மேனகா காந்தி எதிர் இந்திய ஒன்றியம்" என்ற வழக்கில் இவர் ஒரு தொடுப்பாளர்.[3] அவ்வழக்கு மேனகாவிற்கு இந்திய அரசு பயண உரிமம் வழங்க மறுத்ததை எதிர்த்து தொடரப்பட்டது.[4] இவ்வழக்கின் தீர்ப்பில் இந்திய உச்சநீதிமன்றம் "ஏ. கே. கோபாலன் எதிர் மெட்ராஸ் மாநிலம்" என்ற வழக்கில் எடுத்திருந்த தனது நிலைப்பாட்டிலிருந்து விலகி வாழ்வு மற்றும் விடுதலை உரிமைகளின் வீச்சை விரிவுபடுத்தி "வரம்பற்ற சரியான முறை" என்ற கருத்தை இந்தியச் சட்டத்தில் சேர்த்தது.[4] அத்தீர்ப்பில் "மக்களாட்சி என்பது விடுதலைச் சூழலில் அமையும் கட்டற்ற உரையாடல் மற்றும் கருத்தாடலை அடிப்படையாகக் கொண்டது, ஏனெனில் அவற்றின்வழியே ஒரு அரசின் செயல்பாடுகளைத் திருத்த முடியும்." என்று குறிப்பிட்டது.[5][6]
இவர் 1983-ல் "சஞ்சய் விசார் மஞ்ச்" (சஞ்சய் எண்ண மேடை) என்ற அமைப்பு ஒன்றைத் துவக்கினார். பின்னர் 1988-ல் ஜனதா தளத்தில் இணைந்தார். 1988 முதல் 1989 வரை அக்கட்சியின் பொதுச் செயலாளராகவும் பணிபுரிந்தார். 1989-ல் தனது முதல் தேர்தல் வெற்றியைக் கண்ட இவர் வி. பி. சிங் அரசில் 1989 முதல் 1991 வரை சுற்றுச்சூழல்துறை அமைச்சராகப் பொறுப்பு வகித்தார். 1996-இலும் 1999-இலும் உத்திரப் பிரதேசத்திலுள்ள பிலிபிட் தொகுதியிலிருந்து மக்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட இவர் பாஜக அரசில் சமுதாய நலத்துறை துணை அமைச்சராகவும் பண்பாட்டுத்துறை அமைச்சராகவும் பணிபுரிந்தார். விலங்குகள் நலத்துறையை உருவாக்கி அதன் அமைச்சுப் பொறுப்பிலும் இருந்தார். சமுதாய நலத்துறையில் புதிய ஓய்வூதியத் திட்டம் ஒன்றைக் கொண்டு வந்தார்.
2004 பொதுத்தேர்தலில் பாஜக உறுப்பினராக பிலிபிட் தொகுதியிலிருந்து இவர் மீண்டும் வெற்றி பெற்றார். இவர் அத்தொகுதியில் வெவ்வேறு கட்சி சார்பிலும் தனியாகக் கட்சி சாராமலும் நின்று தான் போட்டியிட்டதில் ஒருமுறை தவிர ஒவ்வொரு முறையும் வெற்றி பெற்றுள்ளார். இது இவர் தொகுதி நலனில் காட்டும் அக்கறை மற்றும் சீக்கிய சமயத்தைப் பின்பற்றும் குடும்பத்தில் பிறந்தவர் என்ற காரணங்களால் இவருக்குள்ள ஆதரவைக் காட்டுகிறது என்று அரசியல் ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.[7][8] இவரது மகன் வருண் காந்தியும் ஒரு பாஜக அரசியல்வாதி.
விலங்குகள் நல போராளி[தொகு]
மேனகா காந்தி விலங்குகள் நல போராளி ஆவார். இவர் போராட்டம் காரணமாக இந்தியாவில் விலங்குகள் உரிமை பற்றிய விழிப்புணர்வு பெரும்பாலருக்கு ஏற்பட்டது. 1995 ஆம் ஆண்டு CPCSEA எனப்படும் ஆய்வுக்கு உட்படும் விலங்குகளை மேற்பார்வையிடும் அமைப்புக்கு தலைவரனார். இவரின் வழிகாட்டுதலில் இவ்வமைப்பு அறிவிக்கப்படாத சோதனைகளை விலங்குகளை அறிவியல் ஆய்வுக்கு உட்படுத்தும் ஆய்வங்களில் மேற்கொண்டது. இதன் காரணமாக அவ்வாய்வகங்களில் விலங்குகள் மோசமான நிலையில் கொடுமை படுத்தப்படுவது ஆவணபடுத்தப்பட்டு வெளிப்படுத்தப்பட்டது. CPCSEA பல கட்டுப்பாடுகளை விதித்ததின் காரணமாக ஆய்வக விலங்குகள் மீதான கொடுமை சிறிது குறைந்தது. 1992 ஆம் ஆண்டு விலங்குகளுக்கான மனிதர்கள் (People for Animals) என்ற அமைப்பை தொடங்கினார். விலங்குகள் உரிமை மற்றும் நலங்களுக்காக போராடும் அமைப்பில் இந்தியாவில் இதுவே பெரியதாகும். இந்தியா முழுவதும் இதற்கு காப்பகங்கள் உள்ளன. இவர் சைவ உணவு உட்கொள்பவர், அசைவம் தவிர்க்க சொல்லி அனைவரும் சைவம் உட்கொள்ளும் வாழ்க்கை முறைக்கு மாற வேண்டும் என்று நன்னெறி & உடல் நலத்தை காரணம் காட்டி வழியுறுத்தினார். ஹெட்ஸ் அண்ட் டெயில்ஸ் (Heads and Tails) என்ற வாரமொரு முறை நிகழ்ச்சியை தொலைக்காட்சியில் நடத்தினார். இதில் விலங்குகள் படும் துன்பத்தை விளக்கினார், குறிப்பாக வணிக முறையில் பயன்படும் விலங்குகள் எவ்வாறு துன்புறுத்தப்படுகின்றன என்று விளக்கினார். இவர் பல புத்தகங்களை எழுதியுள்ளார் [9].
பத்திரிக்கையாளர்[தொகு]


பத்திரிக்கையாளராக மேனகா காந்தி சூர்யா இதழில் வெளியிட்ட அதிர வைக்கும் செய்திக்காக புகழடைந்தார். அப்போதய பாதுகாப்பு அமைச்சர் பாபு ஜகஜீவன் ராமின் மகன் சுரேஷ் ராமுக்கும் டெல்லி பல்கலைக்கழக மாணவி சுஷ்மா சௌதிரிக்கும் இடையேயான உடலுறவு புகைப்படக் காட்சிகளை[10] சூர்யா இதழில் வெளியிட்டார். இப்புகைப்படங்கள்[11] சுரேஷ் ராமும் சுஷ்மா சௌதிரியும் நெருக்கமான பாலுணர்வுத் தூண்டற் செய்கைகளில் ஈடுபட்டு இருந்ததை வெளிப்படுத்தின. இப்புகைப்படங்கள் பாபு ஜகஜீவன் ராமின் பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் நோக்கில் வெளியிடப்பட்டதாக கருதப்படுகிறது. பாபு ஜகஜீவன் ராம் இந்திரா காந்தி அரசிலிருந்து விலகி ஜனதா கட்சி 1977-ல் பதவிக்கு வர உதவியவர். அப்போது இந்திய பிரதமர் பதவிக்கு தேர்வாக கூடியவர்களில் ஒருவராக இவர் கருதப்பட்டார்.[12]

MAA.RAA , DIALOGUE WRITER DIED 2014 AUGUST 26



MAA.RAA  , DIALOGUE WRITER  
DIED 2014 AUGUST 26


மா. ரா. என பிரபலமாக அறியப்பட்ட மா. ராமச்சந்திரன் ஒரு எழுத்தாளரும், திரைப்பட கதை வசனகர்த்தாவும், இயக்குநரும், தயாரிப்பாளருமாவார்.

தொழில் வாழ்க்கை
சாண்டோ சின்னப்பா தேவருக்குச் சொந்தமான தேவர் பிலிம்ஸ் நிறுவனத்தின் கதை இலாகாவில் பணியாற்றினார். நூற்றுக்கும் மேற்பட்ட திரைப்படங்களுக்கு கதை வசனம் எழுதியுள்ளார். முன்னணி நடிகர்களான எம். ஜி. ஆர், சிவாஜி கணேசன், ஜெமினி கணேசன், ரஜினிகாந்த், கமல் ஹாசன் போன்றோர் நடித்த படங்களுக்கு கதை வசனம் எழுதியுள்ளார். இவற்றுள் என் அண்ணன், பலே பாண்டியா, ராமன் தேடிய சீதை என்பன குறிப்பிடத்தக்கவை.[1]

கல்யாண மண்டபம் (1965)[2] என்ற திரைப்படத்தைத் தயாரித்து இயக்கியுள்ளார். அப்பா அம்மா (1974) என்ற திரைப்படத்தை இயக்கியுள்ளார்.


சென்னை இராயப்பேட்டையில் ஒரு பதிப்பகத்தை நடத்தி நூல்களை வெளியிட்டார்.

இறப்பு
உடல்நலக் குறைவு காரணமாகத் தனது 81-ஆவது வயதில் சென்னை வேளச்சேரியில் 2014 ஆகஸ்ட் 26 செவ்வாய்க்கிழமை காலமானார்.[

திரைப்பட வசனகர்த்தா மா.ரா. (வயது 81) மாரடைப்பு காரணமாக சென்னையில் செவ்வாய்க்கிழமை (ஆக.26) காலமானார்.

மா.ரா. என்று அழைக்கப்பட்ட மா.ராமச்சந்திரன், சிறிது காலமாக உடல்நலக் குறைவால் அவதிப்பட்டு வந்தார். இந்நிலையில், திடீர் மாரடைப்பு காரணமாக செவ்வாய்க்கிழமை அவர் உயிரிழந்தார்.

தேவர் பிலிம்ஸின் கதை இலாகாவில் முக்கியப் பங்கு வகித்த மா.ரா. - எம்.ஜி.ஆர்., சிவாஜிகணேசன், கமல்ஹாசன், ரஜினிகாந்த் உள்ளிட்ட பிரபல நடிகர்களின் ஏராளமான படங்களுக்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதியவர். "என் கடமை', "தாய் மீது சத்தியம்', "பலே பாண்டியா', "என் அண்ணன்', "ராமன் தேடிய சீதை' உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்ட படங்களுக்கு திரைக்கதை, வசனத்தை எழுதியுள்ளார் மா.ரா..

இவருக்கு மனைவி கஸ்தூரி, 3 மகன்கள், 1 மகள் ஆகியோர் உள்ளனர். சென்னை வேளச்சேரி டாக்டர் சீதாபதி நகரில் உள்ள இல்லத்தில் மா.ரா.வின் உடல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. இறுதிச் சடங்கு வியாழக்கிழமை (ஆக.28) காலை நடைபெறவுள்ளது.

Friday, 30 March 2018

CHITTOOR RANI PADMINI COMMITTED JUHAR 1303 AUGUST 26




CHITTOOR RANI PADMINI COMMITTED 
JUHAR 1303 AUGUST 26





உடன் பிறவாச் சகோதரியின் அழகை காண வந்திருக்கிறேன் என்று அலாவுதீன் கில்ஜீ சித்தூர் வந்த போது கலவரமான ராஜபுதனம் சற்றே பெருமிதமும் கொண்டது.தங்கள் ராணியின் பேரழகு டெல்லி பாதுஷாவரை எட்டியிருப்பதை நினைத்து வந்த பெருமிதமது.!பெரும் விபரீதம் அது என்பதை யாரும் அப்போது அறியவில்லை.!
உபரிகையில் நின்ற ராணி பத்மினி பேரழகின் எதிரொளியை கண்ணாடியில் பார்த்த அலாவுதீன் உன்மத்தம் பிடித்தவன் ஆனான்.ராணியின் அழகு முறையற்ற,நெறியற்ற ஆசை நோக்கி அவனைத் தள்ளியது.மணமான மங்கை என்பதை மறந்தான்.மறுநாள் வேட்டையாட சிறு குழுவுடன் கிளம்பிய ரத்தன்சிங் டெல்லி பாதுஷாவால் சுற்றி வளைக்கப்பட்டு கைது செய்யப்பட்டான்."என்ன வேண்டும் நண்பா.?"என்ற கேள்விக்கு இடியாய் பதில் வந்தது.

"என் அந்தப்புரத்தில் உன் மனைவி வேண்டும்.!"தீ யென திக்கெட்டும் பரவியது அலாவுதீனின் அறமற்ற ஆசை.உருகிய உலோகத்தின் கொதி நிலையில் ராஜபுதனம் சீறி சிவந்தது.வந்த அந்நியருக்கெல்லாம் பொன் கொடுத்த,பொருள் கொடுத்த,பூமியும் கொடுத்த இந்திய சரித்திரம் வெட்கி தலைகுனிந்தது.மணமான மங்கையின் மானம் கேட்கும் மதி கெட்டவனை நினைத்து குமுறியது ராஜபுத்திர ரத்தம்.தான் அழகாய் பிறந்ததற்காய் முதன் முதலாய் வருந்தினாள் ராணி பத்மினி.ரூபாவதி பார்யாள் பதிக்கு சத்ரு என்ற பழமொழி மீண்டும்
நிதர்சனமானது.கொதிநிலையிலும் மனதில் சமநிலையோடு யோசித்தான் சித்தூரின் தளபதி."இன்று இரவு.!ராணியுடன் உறவு.!"என்று தகவல் அனுப்பி எழுச்சியுடன் காத்திருந்த அலாவுதீனை சந்திக்க கிளம்பியது பல்லக்குடன் ஒரு படை."முதலில் மன்னன்.!பிறகு மானம்.!"என்ற தீர்மானத்தில் பெண்ணுடை தரித்து காத்திருந்தான் தளபதி.இரவு கவிழ்ந்தது.நடந்த சிறு யுத்தத்தில் மன்னனை காப்பாற்றி விட்டு மதியுக தளபதி மரணித்தான்.மோகத்தீயுடன்,கோபத்தீயும் சேர சினத்தின் உச்சியில் நின்றான் கில்ஜி.அலைகடலென கிளம்பியது அராஜகத்தின் படை.!சித்தூர் போட்டது அதற்கு தடை.!ராஜபுதினத்தின் சிறுபடை அலைகடலில் சிறு துரும்பானது.அடுத்தது கோட்டை.!ராணியின் மீதான மோகம் அதிகரிக்க நெருப்பில் நின்றான் கில்ஜி.கோட்டையின் கதவுகள் வெடித்து திறந்தன.உடல் முழுவதும் குங்குமம் பூசி நிர்வாணமாக வந்த கோட்டையின் சிறு காவல் படை கில்ஜியின் படையை துவம்சம் செய்தது.அதே நேரம் கோட்டையின் உள்ளிருந்து கரும்புகை வான் நோக்கி எழும்பியது.எதிர்ப்புகளை முழுதாக அடக்கி கில்ஜி கோட்டையினுள் நுழைந்த போது அரண்மனையின் எரியும் பொருள்களை போட்டு குண்டம் வளர்த்து ஆயிரம்
பெண்களுடனும்,குழந்தைகளுடனும் தன்னையே தீயிற்கு தின்னக் கொடுத்திருந்தாள் ராணி பத்மினி.!ஒரு கருத்த சாம்பல் மேடு கில்ஜியை வரவேற்றது.1303 august 26


கில்ஜியின் முகம் சாம்பலால் மேலும் கறுத்தது.சித்தூர் அன்று வீழ்ந்தது.!தன் மானம் காத்த வீரத்தால் சரித்திரத்தில் இன்றும் வாழ்கிறது.!