Showing posts with label 16 TH DAY. Show all posts
Showing posts with label 16 TH DAY. Show all posts

Monday, 9 April 2018

16 TH DAY OF MY FATHER - A SHORT STORY




16 TH DAY OF MY FATHER 
- A SHORT STORY




“அஞ்சல் வழியில் இளங்கலை வணிகவியல்
படிக்கப் போகிறேன்” என அப்பா சொன்னபோது,
அவருக்கு வயது 47.

அப்பா அப்படித்தான். கோ ஆப்பரேட்டிவ் டிப்ளோமா முடித்துவிட்டு, நூற்பாலை ஒன்றின் பண்டகசாலையில் விற்பனையாளராக இருந்தவர். தனது மேலாளர் இன்னும் சில ஆண்டுகளில் ஓய்வு பெற்று விடுவார், அந்த இடத்துக்குத் தன்னைத் தகுதி உள்ளவனாக ஆக்கிக் கொள்ளும் முயற்சி அது. சொன்னது போலவே, தேர்வில் வெற்றி பெற்று மேலாளராக ஆகிவிட்டார்.

“பிஞ்சு போன செருப்பை அதைத் தைப்பவரிடம் கொடுத்துவிட்டு அவரைக் கூர்ந்து கவனிச்சிருக்கியா? அதைத் தைப்பதில்தான் தன் முழு வாழ்க்கையுமே இருக்கிறது என்பதுபோல் ஈடுபாட்டுடன் இருப்பார். தைத்து முடித்ததும் செருப்பின் பிற வார்களையும் சோதிப்பார். அதன் பிறகு உன்னுடைய இன்னொரு கால் செருப்பையும் வாங்கி சோதிப்பார். உன்னிடம் கொடுத்துப் போடச்சொல்லி, உன் கால்களில் அது சரியாகப் பொருந்துகிறதா என்பதைக் கவனிப்பார். சட்டென உன் முகத்தையும் பார்ப்பார் பாத்திருக்கியா? அதுதான் செய் நேர்த்தி, தான் செய்த வேலை மீதான நம்பிக்கை.”


“அது மாதிரித்தான் நம்ம வேலாயுதமும், முடி வெட்டிமுடித்ததும், நாம காசைக் கொடுக்கும்போது, மீண்டும் ஒரு முறை இருபக்கமும் பார்ப்பார். கிருதா ஒரு ரோமக்கணம்தான் வித்தியாசம் இருக்கும், அதையும் சரி பண்ணித் திருப்தியாகிக் கொள்வார். இந்த செய்நேர்த்தி கைகூடினாப் போதும் மற்றெதெல்லாம் உனக்கு சுலபமாக் கைசேரும்.”

சொல்லுவதோடு நில்லாமல். செய்தும் காட்டினார். அவர் மேலாளராகி, ஓய்வு பெறும்வரை, திண்டுக்கல் மாவட்டத்திலேயே சிறந்த கூட்டுறவு பண்டகசாலை என்ற விருதைத் தொடர்ந்து பெற்றார்.

இன்று அப்பாவின் 16ஆவது நினைவு நாள்.

வடகரை வேலன்