Showing posts with label 10. Show all posts
Showing posts with label 10. Show all posts

Saturday, 15 February 2020

KOTHAMANGALAM SUBBU ,A LEGEND , 10 நவம்பர் 1910 - 15 பெப்ரவரி 1974)




KOTHAMANGALAM SUBBU ,A LEGEND , 10 நவம்பர் 1910 - 15 பெப்ரவரி 1974)


தில்லானா மோகனாம்பாளை திரைக்குத் தந்த கொத்தமங்கலம் சுப்பு! பிறந்தநாள் சிறப்புப் பகிர்வு

கவிஞர், சிறந்த எழுத்தாளர், சினிமா கதை வசனகர்த்தா, இயக்குநர் கொத்தமங்கலம் சுப்புவின் பிறந்தநாள் இன்று. இலக்கியவாதிகள் பொதுவாக சினிமாவில் சோபிப்பதில்லை என்ற அரதப்பழசான குற்றச்சாட்டு இன்றளவும் திரையுலகில் உண்டு. அதைத் தகர்த்த முன்னோடிகளில் ஒருவர் கொத்தமங்கலம் சுப்பு. தமிழ்த்திரையுலகின் தவிர்க்கமுடியாத சினிமா தயாரிப்பு நிறுவனமான ஜெமினி நிறுவனத்தின் பல வெற்றிப்படங்களின் ஆதாரமாக இயங்கியவர் சுப்பு.

அங்கு ஜெமினி பட இலாகாவிலும், வாசன் அவர்கள் நடத்திய ஆனந்தவிகடன் பத்திரிகையில் எழுதும் எழுத்தாளராகவும், ஜெமினி படங்களில் நடிக்கும் நடிகராகவும் இப்படிப் பல துறைகளிலும் பிரகாசித்தவர் சுப்பு.


கொத்தமங்கலம் சுப்பு என்கிற சுப்பிரமணியன் தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டையை அடுத்த கன்னாரியேந்தல் எனும் கிராமத்தில் 1910-ம் ஆண்டு நவம்பர் மாதம் 10-ம் தேதி பிறந்தார். இளம் வயதில் தாயாரை இழக்கநேர்ந்ததால் தந்தை மகாலிங்க ஐயரின் கட்டுப்பாட்டில் வளர்ந்தார் சுப்பு. இயல்பாக கலை விஷயங்களில் ஈடுபாடு இருந்ததால் எட்டாம் வகுப்புவரை மட்டுமே படிக்க முடிந்தது. மகனை பொறுப்பானவனாக ஆக்க உறவுக்காரப் பெண்ணை திருமணம் செய்துவைத்தார் தந்தை. பின்னர் ஒரு மரக்கடையில் வேலைக்குச் சேர்ந்து பணிபுரிந்த சுப்புவுக்கு கவனம் முழுவதும் நாடகம், நடிப்பு, பாடல் புனைவது, என்ற விஷயங்களிலேயே இருந்தது. வியாபாரத்தில் துளியும் கவனமில்லை. ஒருமுடிவாக காரைக்குடி அருகே இயங்கிவந்த நாடகக் குழு ஒன்றில் இணைந்தார். நாடக குழுவின் நாடகங்கள் பலவற்றில் நடிக்கத்துவங்கினார்.

தென்னிந்திய திரைப்படத்தொழில் மும்முரமாக வளர்ச்சியடைந்துகொண்டிருந்த நாடக அனுபவம் பட வாய்ப்புகளை பெற்றுத்தந்தது சுப்புவுக்கு. 1936-ல் ‘சந்திரமோகனா’ என்ற திரைப்படத்தில் கதாநாயகன் எம்.கே.ராதாவின் தோழன் வேணுகோபால் என்ற கதாபாத்திரத்தில் முதன்முதலாக திரைத்துறையில் காலடி எடுத்து வைத்தார் சுப்பு. அக்காலகட்டத்தில் 'பட்டினத்தார்' 'மைனர் ராஜாமணி", "அநாதைப் பெண்" போன்ற படங்களில் தலைகாட்டத்துவங்கினார். அதுவரை படத்தில் அவரது சுப்ரமணியன் என்ற அவரது நிஜப்பெயரே இடம்பெற்றது. 1939-ல் திருநீலகண்டர் படத்தில்தான் முதன்முதலாக கொத்தமங்கலம் சுப்பு என்ற பெயர் இடம்பெற்றது. இந்த பெயர் காரணம் சுவாரஸ்யமானது. சுப்பு நாடகங்களிலும் படங்களிலும் சிறுசிறு வேடங்களில் நடித்துவந்த காலத்தில் கொத்தமங்கலம் சீனு என்பவர் திரைப்படத் துறையில் புகழ்பெற்றிருந்தார். அவர்தான் சுப்புவை அன்றைய பிரபல இயக்குநர் டைரக்டர் கே.சுப்பிரமணியத்திடம் அறிமுகம் செய்து வைத்தவர். அதிலிருந்து கொத்தமங்கலம் சுப்பு என்றே அழைக்கப்பட்டார்.

தொடர்ந்து கே.சுப்ரமணியத்தின் "பக்த சேதா , "கச்ச தேவயானி" உள்ளிட்ட படங்களில் நடித்தார். 1941-ல் எதிர்பாராதவிதமாக ஏற்பட்ட தீ விபத்தில் கே.சுப்பிரமணியத்தின் சினிமா ஸ்டுடியோ முழுவதுமாக எரிந்துவிட நட்டத்தை சமாளிக்க தனது மெட்ராஸ் யுனைடெட் ஆர்டிஸ்ட்ஸ் கார்ப்பரேஷன் எனும் நிறுவனத்தை எஸ்.எஸ்.வாசன் அவர்களுக்கு விற்றார் சுப்ரமணியம். அப்போது சுப்ரமணியத்தால் 'சிறந்த கலைஞர், பன்முக திறன் மிக்கவர்' என்ற அறிமுகத்துடன் எஸ்.எஸ்.வாசனிடம் அறிமுகம் செய்துவைக்கப்பட்டார் சுப்பு.

கொத்தமங்கலம் சுப்புவின் திறமையை பல விஷயங்களில் நேரில் கண்ட வாசன் அவரை தன்னுடனேயே பணிபுரியக் கேட்டுக்கொண்டார்.
இந்த காலகட்டத்துக்குள் மைனர் ராஜாமணி, அனாதைப் பெண், அதிர்ஷ்டம், திருநீலகண்டர், சாந்தசக்குபாய், அடங்காப்பிடாரி, சுகுணசரசா, பக்த சேதா, சூர்ய புத்ரி, கச்ச தேவயானி, மதனகாமராஜன், பக்த நாரதர், தாசி அபரஞ்சி, போன்ற படங்களில் நடித்துமுடித்தார்.

ஜெமினியில் சுப்புவின் கொடி பறக்க ஆரம்பித்தது. ஜெமினியில் அவருக்கு அளிக்கப்பட்ட ஊதியம் மாதம் 300 ரூபாய். கொஞ்சநாளில் வாசனின் பிரியமான நண்பராகவும் ஆகிப்போன சுப்பு, ஜெமினி கதை இலாகாவில் முக்கிய பங்காற்றினார். ஜெமினியின் புகழ்பெற்ற படங்களான சந்திரலேகா, ஒளவையார், நந்தனார், மிஸ் மாலினி, வஞ்சிக்கோட்டை வாலிபன் போன்ற படங்களின் வெற்றியில் சுப்புவின் பங்கு அளப்பரியது.

ஜெமினியில் நடிகர், கதாசிரியர், இயக்குநராக, கதை வசனகர்த்தா கவிஞர் என தன் பன்முக திறமையுடன் இயங்கி திரையுலகில் புகழ்பெற்றார் சுப்பு. ஜெமினியில் நான்கு படங்களை இயக்கிய சுப்பு, ஏழு படங்களுக்குத் திரைக்கதை எழுதினார். அவரது பல நுாறு பாடல்கள் மக்களால் பெரிதும் பேசப்பட்டது.

ஜெமினியின் தயாரிப்பான ஒளவையார் கொத்தமங்கலம் சுப்புவுக்கு பெரும்புகழ் அளித்தது. சினிமாவையே பார்த்திராத, அதன் மீதுவெறுப்பு கொண்ட ராஜாஜி விரும்பி பார்த்த திரைப்படம் ஔவையார் திரைப்படம். அத்தனை சிறப்பான முறையில் வாசனின் எண்ணத்துக்கு திரையில் உயிர்கொடுத்திருந்தார் படத்தை இயக்கிய கொத்தமங்கலம் ணசுப்பு. படத்தின் திரைக்கதை, பாடல், இயக்கம் அனைத்தும் அவரே. 1954-ல் ஔவையார் படக்குழுவினருக்கு நடந்த பாராட்டுவிழாவில் கலந்துகொண்ட ராஜாஜி, பக்தவத்சலம் “தமிழ் உலகுக்கு கொத்தமங்கலம் சுப்புவும் வாசனும் செய்த சேவையை யாராலும் மறக்கமுடியாது” என பாராட்டித்தள்ளினர்.

இப்படத்தில் கொத்தமங்கலம் சுப்பு நடித்தும் இருந்தார். மனைவிக்கு பயந்தவரான அந்த கதாபாத்திரத்தின் சேஷ்டைகள் ரசிகர்களை சிரிக்கவைத்தது.

திரையுலகிலிருந்து விலகியிருந்த நடிகை கே.பி சுந்தராம்பாளை ஔவையாராக நடிக்க வைத்து ஹாலிவுட் படத்துக்கு இணையான பிரமாண்ட காட்சியமைப்புகளுடன் வெளியான ஔவையார் படம் இன்றைக்கும் ஜெமினியின் மாஸ்டர் பீஸ் என்றால் மிகையாகாது.
ஜெமினியின் ‘கண்ணம்மா என் காதலி’ திரைப்படம் கொத்தமங்கலம் சுப்புவுக்கு நற்பெயருடன் வாழ்க்கைத் துணையையும் தந்தது. ஆம்...1945-ல் வெளியான இந்த படத்தின் கதாநாயகி நடிகை எம்.எஸ்.சுந்தரிபாய் கொத்தமங்கலம் சுப்பு பின்னாளில் திருமணம் செய்து கொண்டார்.

கொத்தமங்கலம் சுப்புவுக்கு புகழை தந்த படங்களில் முக்கியமானது,‘மிஸ். மாலினி’ பிரபல எழுத்தாளர் ஆர்.கே.நாராயணனின் மிஸ்டர் சம்பத் என்கிற நாவலை ஜெமினி நிறுவனத்தார் திரைப்படமாகத் தயாரித்து 1947-ல் வெளியிட்டனர். இப்படத்தில் ‘சம்பத்’ கதாபாத்திரத்தில் சிறப்பாக நடித்தார் கொத்தமங்கலம் சுப்பு. இப்படத்தில் இன்னுமொரு சிறப்பு ஜெமினி ஸ்டுடியோ அலுவலகத்தில் பணியாற்றிய அழகான ஒரு ஊழியர் ஒரு காட்சியில் நடித்திருந்தது. அவர்தான் பின்னாளில் காதல் மன்னன் என திரையுலகில் புகழ்பெற்ற ஜெமினி கணேசன்.

இரண்டாவது உலகப் போர் முடிந்து நாட்டில் பஞ்சம் நிலவிய இப்படம் வெளியான காலகட்டத்தில் ரேஷன் கடை அமலில் இருந்தது. உணவுத் தேவையில் கட்டுப்பாட்டை கொண்டுவந்த இந்த அவலத்தை கிண்டல் செய்து பாடல் எழுதியிருந்தார் கொத்தமங்கலம் சுப்பு...
‘காலையில எழுந்திரிச்சு
கட்டையோட அழுவணும்’
‘சக்கரைக்குக் கியூவில போய்
சாஞ்சுகிட்டு நிக்கணும்
சண்ட போட்டு பத்து பலம்
சாக்கட மண் வாங்கணும்’- என்ற அந்தப்பாடல் அன்றைக்கு மக்கள் மத்தியில் வெகு பிரபலமாயிற்று. தொடர்ந்து ‘ஞான சௌந்தரி’ யில் வசனம் எழுதியிருந்தார். இதையடுத்து வி.நாகையா நடித்த ‘சக்ரதாரி’ என்கிற படத்தில் பாடல்களை எழுதியிருந்தார்.

இந்த ஆண்டில் ஜெமினியின் ‘சந்திரலேகா’ வெளியாகி அதன் வெற்றி ஒட்டுமொத்த இந்திய திரையுலகையும் அசைத்துப்பார்த்தது. இப்படத்தில் மூன்று வசனகர்த்தாக்களில் கொத்தமங்கலம் சுப்புவும் ஒருவர்.

எம்.கே.ராதா இரட்டை வேடத்தில் நடித்த ஜெமினியின் சிறந்த படங்களில் ஒன்றான ‘அபூர்வ சகோதரர்கள்’ அன்றைக்கு பேசப்பட்ட படம். ‘கார்சிகன் பிரதர்ஸ்’ என்கிற ஆங்கில நாவலான இந்தப்படத்தில் சுப்பு சில பாடல்களை இயற்றியிருந்தார். இது ஜெமினியின் மகத்தான வெற்றிப்படங்களில் ஒன்று. 1949-ல் வெளிவந்தது.

1951 இல் ‘சம்சாரம்’ படத்திலும் சுப்பு உருக்கமான பாடல்களை எழுதியிருந்தார். ‘அம்மா பசிக்குதே, தாயே பசிக்குதே’ என்கிற இப்படப்பாடல் தமிழ்நாட்டின் பிச்சைக்காரர்களை திரும்பத் திரும்ப தியேட்டருக்கு அழைத்துவந்தது எனலாம். 1955-ல் சிறுவர்களை மையமாக வைத்து எடுக்கப்பட்ட ‘வள்ளியின் செல்வன்’ படத்தினை இயக்கியிருந்தார் சுப்பு. ஜெமினியின் வெற்றிப்படங்களில் ஒன்று இது.

‘வஞ்சிக்கோட்டை வாலிபன்’ படத்துக்குப் பிறகு ஜெமினி நிறுவனத்திலிருந்து சற்று விலகி விகடனில் எழுத ஆரம்பித்தார். கலைமணி என்ற பெயரில் அவர் எழுதிய கதைகள் வாசகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றன. விகடனின் அவரது மாஸ்டர் பீஸ் ‘தில்லானா மோகனாம்பாள்’. அது வெளிவந்த காலத்தில் ஆனந்தவிகடன் பரபரப்பான விற்பனையானது. திரையுலகில் அவரது அத்தனை புகழையும் இந்த ஒற்றை நாவல் அவருக்கு அளித்தது.

தொடர்ந்து விகடனில் அவர் எழுதிய‘ராவ் பகதூர் சிங்காரம்’ என்னும் ஒரு தொடரும் வாசகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. இவை பின்னாளில் திரைப்படமாகத் தயாரிக்கப்பட்டது. இதில் ‘தில்லானா மோகனாம்பாள்’ நாவலைவிடவும் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. இந்த படத்தின் தயாரிப்பின்போது நிகழ்ந்த ஓர் சம்பவம் வாசன் மற்றும் சுப்புவின் அரிய குணத்தை பறைசாற்றியது.

கொத்தமங்கலம் சுப்புவின் இந்த நாவலை ஜெமினி நிறுவனமே தயாரிக்க இருந்த நிலையில், இயக்குநர் ஏ.பி நாகராஜன் சினிமாவாக தயாரிக்க முன்வந்தார். தானே அப்படி ஒரு திட்டம் வைத்திருந்த நிலையில் ஏ.பி.நாகராஜனின் ஆர்வத்தைக் கண்டு அவருக்கு விட்டுக்கொடுத்தார் ஜெமினி அதிபர் வாசன். ஆரம்ப காலங்களில் சமூகப் படங்களை எடுத்து பின்னாளில் திருவிளையாடல் உள்ளிட்ட படங்களை எடுத்து புகழ்பெற்றவர் ஏ.பி நாகராஜன். அவரது ஆசைக்கு குறுக்கே நிற்காமல், அந்த படத்தின் உரிமையை அவருக்கு விட்டுக்கொடுத்தார் வாசன்.

உண்மையில் அந்த நாவலின் உரிமை கொத்தமங்கலம் சுப்புவிடம் இருந்தது. ஆனந்த விகடனில் இடம்பெற்றதால் வாசன், சுப்புவின் அனுமதியுடன் அதை ஏ.பி.என்- க்கு விட்டுக்கொடுத்தார். இங்கு சுவாரஸ்யமான சம்பவம் ஒன்றை குறிப்பிடவேண்டும்.

வாசனின் அனுமதி கிடைத்தவுடன் நேரே ஏ.பி.என் கார் சென்றது கொத்தமங்கலம் சுப்புவின் வீட்டுக்கு. சுப்புவை வணங்கிவிட்டு, நாவலின் ஆசிரியர் என்ற முறையில் 10 ஆயிரம் ரூபாய்க்கான செக் ஒன்றை சுப்புவிடம் நீட்டினார் ஏ.பி. என்.

ஆனால் அதை வாங்க மறுத்த சுப்பு, "நீங்கள் வருவதற்கு கொஞ்சநேரம் முன்புதான் வாசன் அவர்களிடமிருந்து ஒரு குறிப்பிட்ட தொகைக்கான செக் வந்தது. அதனால் நீங்கள் எனக்கு தனியே எதுவும் தரவேண்டாம்“ என்றார். ஆச்சர்யத்தின் உச்சிக்கு சென்றார் ஏ.பி.என்.

எழுத்தாளரின் மதிப்பை உணர்ந்து சினிமா உரிமை கொடுத்த பின் கொஞ்சமும் தாமதிக்காமல் எழுத்தாளருக்கான சன்மானத்தை கொண்டு சேர்த்த வாசனை பாராட்டுவதா அல்லது, தனக்குரிய பணம் வந்த தகவலை மறைக்காமல் இவ்வளவு பெரிய தொகையை வாங்க மறுத்த சுப்புவை பாராட்டுவதா என்ற குழப்பத்தில் ஆழ்ந்துபோனார் ஏ.பி. என்.

1960-ல் ‘இரும்புத்திரை’ ஏவிஎம் நிறுவனத்தாரின் ‘களத்தூர் கண்ணம்மா’ 1965-ல் 'படித்த மனைவி' உள்ளிட்ட சில படத்துக்கு வசனம் எழுதினார். சில படங்களில் தலைகாட்டினார்.

1970-க்குப்பிறகு முற்றாக திரையுலகில் இருந்து விலகினார். 1967-ம் ஆண்டு தமிழக அரசின் கலைமாமணி விருது இவருக்கு வழங்கப்பட்டது. 1971-ல் மத்திய அரசு பத்மஸ்ரீ விருது தந்து கொத்தமங்கலம் சுப்புவை கவுரவித்தது.

வில்லுப்பாட்டில் பெரிதும் ஆர்வம் கொண்டிருந்த கொத்தமங்கலம் சுப்பு பின்னாளில் காந்திமகான் கதையை இவர் வில்லுப்பாட்டு மூலமாக தமிழகம் முழுவதும் நடத்தினார்.

கொத்தமங்கலம் சுப்பு பங்கேற்ற படங்கள்....

1.அனாதைப்பெண்- நடிப்பு 1938
2. அதிர்ஷ்டம்- நடிப்பு 1939
3. சாந்த சக்குபாய் -வசனம், நடிப்பு 1939
4. அடங்காப்பிடாரி -நடிப்பு 1939
5. சுகுண சரசா -நடிப்பு 1939
6. பக்த சேதா -நடிப்பு 1940
7. சூர்ய புத்ரி- நடிப்பு 1941
8. மதனகாமராஜன் -நடிப்பு 1941
9. நந்தனார் - நடிப்பு (ஜெமினி) 1942
10. பக்த நாரதர் -நடிப்பு 1942
11. தாசி அபரஞ்சி - கதை, வசனம், பாடல், நடிப்பு (ஜெமினி) 1944
12. கண்ணம்மா என் காதலி- வசனம், இயக்கம் (ஜெமினி) 1945
13. மிஸ் மாலினி- வசனம், இயக்கம் (ஜெமினி) 1947
14. ஞான சௌந்தரி -வசனம் (கூட்டாக) 1948
15. சந்திரலேகா- வசனம் (கூட்டாக) (ஜெமினி)
16. அபூர்வ சகோதரர்கள்- பாடல் (ஜெமினி) 1949
17. சம்சாரம் -பாடல் (ஜெமினி) 1951
18. மூன்று பிள்ளைகள் -பாடல் (ஜெமினி) 1952
19. ஔவையார்- திரைக்கதை, பாடல், இயக்கம், நடிப்பு (ஜெமினி) 1953
20. வள்ளியின் செல்வன்- திரைக்கதை, நடிப்பு, இயக்கம் (ஜெமினி) 1955
21. வஞ்சிக்கோட்டை வாலிபன் -வசன பாடல், நடிப்பு (ஜெமினி) 1958
22. இரும்புத் திரை -வசனம், பாடல் (ஜெமினி) 1960
23. களத்தூர் கண்ணம்மா -பாடல் (ஏவிஎம்) 1960
24. படித்த மனைவி வசனம் -(கூட்டாக) 1965
25. தில்லானா மோகனாம்பாள் -கதை 1968
26. விளையாட்டுப் பிள்ளை 1970
27. சக்ரதாரி பாடல் (ஜெமினி) 1948

திரையுலகிலிருந்து முற்றாக விலகி ஓய்விருந்த கொத்தமங்கலம் சுப்பு, 1974-ம் ஆண்டு பிப்ரவரி 15 ந்தேதி தனது 63 வயதில் மறைந்தார். தமிழ்த் திரையுலகின் ஆரம்ப கால வளர்ச்சியில் பங்களிப்பு செய்த திரையுலக முன்னோடிகளில் கொத்தமங்கலம் சுப்புவுக்கு தனியிடம் உண்டு.

Wednesday, 12 February 2020

10 Best Bengali Actresses of All Time



10 Best Bengali Actresses of All Time
Rhiteek Chatterjee
December 3, 2017 

The Bengali film industry has been producing some of the most iconic works through the history of the art. The artists themselves have been a huge cultural influence throughout generations. Dating back in 1932, it has been known to have produced critically acclaimed global parallel cinema and art films, with several of its filmmakers gaining international acclaim. Another important creation of “Tollywood” is actors. The artistic industry has seen some of the finest actors who have masterfully gripped the attention of filmmakers like Martin Scorsese and Stanley Kubrick.


Frankly speaking, there is no way to constrict number of “best” Bengali actors. However, what can we do? For this list, I have taken in account the actor’s acting prowess, work, cultural prominence and of course, how may Satyajit Ray films the actress has starred in. These actors have made me feel proud of being a Bengali, and so, here is the list of 10 best Bengali actresses of all time.

10. Sandhya Roy



A pioneer of Bengali cinema, this actress was a veteran in playing “character roles” with eccentricity and an enigmatic awe. Sandhya Roy gained fame for essaying sweet and bubbly characters, glacially transforming herself into a versatile actress. Some of her acclaimed works are ‘Dadar Kirti’ (1980), ‘Ashani Sanket’ (1973) and ‘Thagini’.

9. Sabitri Chatterjee


A career spanning over 50 years, the actress has seen critical and commercial fame with some of the biggest personalities. Debuting in ‘Pasher Bari’ (1952), Chatterjee went on to star in Satyajit Ray’s ‘Pather Panchali’ (1955) and ‘Aparajito’ (1956), earning critical acclaim.


Following her initial works, she continued to give out praise worthy performances in ‘Subhada’ (1952), ‘Basu Parivar’ (1952).  The actress made a strong onscreen duo with cinematic great Uttam Kumar, starring in remarkable flicks such as ‘Lakh Taka’ (1953), ‘Kalyani’ (1954), ‘Anupama’ (1954), ‘Raikamal’ (1955).

8. Sumitra Devi


An exquisite beauty and a superstar, Sumitra Devi represented the woman of the mid 1950s, incarnating their supressed calmness.  Remembered for her sensitive women characters in Hindi films like ‘Mashal’ (1950), ‘Deewana’ (1952), ‘Mamta’ (1952) and ‘Mayurpankh’ (1954), she made a strong impact in the Bengali film industry.


Devi impressed all with ‘Abhijog’ (1947), ‘Pather Dabi’ (1947), ‘Pratibad’ (1948), ‘Joyjatra’ (1948), ‘Swami’ (1949) and ‘Devi Chowdhurani’ (1949); the actress got instant offers from the industry of dreams – Bollywood. Due to her immense fame and strong foothold over the audience’s hearts, she has starred in blockbuster films like ‘Dasyu Mohan’ (1995), ‘Saheb Bibi Golam’ (1956) and ‘Aandhare Alo’.

7. Konkona Sen Sharma


Konkona Sen Sharma is one of the most underrated actresses in Bollywood and Bengali cinema. The actress is a gift to us, a gift which we don’t deserve. The actress has an unbelievable critically extoled works throughout her career. One of the leading figures in contemporary parallel cinema, she has been known to be a favourite among the critics’ circle. What makes her such a sensation, is the fact that she is the daughter of an immensely successful stalwart, and yet managed to break all odds.


The artist has received the National Film Award for Best Actress for ‘Mr. and Mrs. Iyer’ (2002) and the National Film Award for Best Supporting Actress for ‘Omkara’ (2006). The actress has had dazzling acts in Madhur Bhandarkar’s ‘Page 3’ (2005), where she played young aspiring journalist Madhavi Sharma; the schizophrenic Meethi in Aparna Sen’s ‘15 Park Avenue’ (2005) and desperate Shruti in Anurag Basu’s ‘Life in a… Metro’ (2007). Her most recent work, ‘Lipstick Under My Burkha’ has been hailed as one of the best in modern cinema. The multi-talented actress is also venturing into direction, with her debut directorial feature, ‘A Death In The Gunj’ (2017) receiving praise. It suffices to say that we should collectively pray that the immensely talented actor should continue to shine through in cinema.

6. Kajol


One of the raging stars of the nineties, Kajol was the leading lady throughout the nineties. Her array of works holds impressive records, winning six Filmfare Awards and the he Padma Shri to name a few.  She reined the commercial scenes, with ‘Yeh Dillagi’ (1994), ‘Ishq’ (1997), ‘Pyaar Kiya To Darna Kya’ (1998), ‘Pyaar To Hona Hi Tha’ (1998) and ‘Hum Aapke Dil Mein Rehte Hain’ (1999) being annual top grossers. Despite such success, the actress boldly accepted a role as the primary antagonist in ‘Gupt: The Hidden Truth’(1997), breaking numerous stereotypes.


The actress went on to form partnership as romantic duo with fellow legend Shah Rukh Khan, forming one the most celebrated and loved on screen couples in the history of Indian cinema. With him, she gave spluttering performances in ‘Dilwale Dulhania Le Jayenge’ (1995), ‘Kuch Kuch Hota Hai’ (1998), ‘Kabhi Khushi Kabhie Gham…’ (2001) and ‘We Are Family’ (2010), and established herself as one of the greats.

5. Sharmila Tagore


A descendent of the Tagore family, Sharmila Tagore represented the new generation of actresses in the 1960s. Debuting and playing the titular character in Satyajit Ray’s ‘Apur Sansar’ (1959), she gained commercial prominence in Bollywood. The actress had a successful pairing with Rajesh Khanna and gave hits such as ‘Aradhana’ (1969), ‘Amar Prem’ (1972), ‘Safar’ (1970), ‘Daag’ (1973) and Maalik (1972). The actress tore into critical geniuses with ‘Mausam’ (1975) and ‘Mississippi Masala’ (1991). Her performance in Gulzar’s ‘Mausam’ earned her National Award Best Actress. Her immense bankability made her one half of the highest paid Bollywood actress from 1970 to 1976 along with Mumtaz and made her a huge star. The actress broke many social barriers that plagued Bollywood and proved to be the catalyst of change through her acting expertise.

4. Rani Mukherjee



Bollywood was in serious trouble during the late 90s and early 2000s. At a time when the industry was primarily focussing on dominant male roles and using female characters as eye-candy, Mukherjee generated a wave of strong female characters; and that too in the commercial cinema.  Debuting in her father, Ram Mukherjee’s Bengali flick ‘Biyer Phool’ (1996), and broke into the commercial stardom with essaying the gorgeous Tina Malhotra in Karan Johar’s ‘Kuch Kuch Hota Hai’ (1998), bagging the Filmfare Award for Best Supporting Actress. Although quite wonderfully shining in the star personas of Shah Rukh Khan and Kajol, her career did not seem to take her any further. However, this proved to be the actress’ seasoning period where she would slowly gain prominence as an actor who portrayed roles which were different from the traditional female characters. Kamal Hassan’s ‘Hey Ram’ provided her a podium for nurturing her talent. Since then, the actor has been splurging out brilliant performances in ‘Saathiya’ (2002), ‘Saathiya’ (2003) and ‘Hum Tum’ (2004) and ‘Veer-Zaara’ (2004). However, the bong beauty really started transforming Bollywood with strong and bold acts in mid 2000s.

3. Aparna Sen



Superseding daughter Konkona Sen Sharma is mother Aparna Sen. The versatile artist has exceptionally transformed from a successful actor to a successfull director. Debuting in Satyajit Ray’s ‘Teen Kanya’ (1961) at the tender age of 15, her acting roots were strappingly established. Since her debut, the actress has incessantly given out path breaking performances. Throughout the 70s till the 80s; before transitioning into a director worked some of the most critically lauded films in Indian cinema. Some of her supremely finest films are ‘Aparachito’ (1969), ‘Sujata’ (1974), ‘Mahaprithibi’ (1991) and ‘Abhishapta Prem’ (1996). The actress proved to be an enormously bankable star as a well as gifting the world with critically outstanding films.

2. Suchitra Sen


Madhabi Mukherjee is one of the distinctive figures in the history of Bengali cinema. She has acted some of the most critically lauded performances in the art. Finding her acting roots in the; the actress slowly caught the critical eyes of Mrinal Sen and starred in ‘Baishey Shravan’ (1960). Playing a 16 year old embroiled in a horrifying famine set during the World War; she garnered her first critical applause. She continued to work with iconic directors like Ritwik Ghatak before breaking into critical and commercial eminence with Satyajit Ray. She was since recognised as the top actress in Bengali cinema. Her performances in ‘Mahanagar’ (1960), ‘Charulata’ (1964) and the ‘Apu’ trilogy are some of the finest in cinema. Legendary Film critic Roger Ebert said “…it might be useful to see the performance of Madhabi Mukherjee in this film. She is a beautiful deep, wonderful actress who simply surpasses all ordinary standards of judgment. Madhabi Mukherjee represents whatever is good in Bengali cinema.

1. Suchitra Sen


Suchitra Sen speared through triumph with Uttam Kumar; and with him redefined the concept of blockbuster cinema and star-power. She was often applauded for her art of bringing a poise, grace and dignity to her roles. She made her debut in the unreleased ‘Shesh Kothaay’ (1952) and then instantly became a cultural icon in Nirmal Dey’s ‘Sharey Chuattor’ (1953). Although the actress was a legendary figure in the romantic genre, some of her best works came in the dramas ‘Deep Jwele Jaai’ (1959), ‘Uttar Falguni’ (1963) ‘Khamoshi’ (1969); and the political drama ‘Aandhi’ (1975). Sen broke all barriers in her Bengali romantic drama film ‘Saptapadi’ (1961). In this film, she essayed the role of Rina Brown, a talented and attractive Anglo-Indian Christian to whom Uttam Kumar’s Krishnendu falls for. For this particular performance, she received immense praise and received the Silver Prize for Best Actress in Moscow International Film Festival. She had the power swaying the viewers with her emotive vigour which connected to all. She was the actress who defines cinema.

Read More: Best Bollywood Actresses

SPONSORED LINKS













Monday, 4 June 2018

TIANANMAN SQUARE STUDENT`S REVOLT JUNE 4,1989 -DIED 10,454 WOUNDED 40,000




TIANANMAN SQUARE STUDENT`S REVOLT
JUNE 4,1989 -DIED 10,454 WOUNDED 40,000


இந்தியாவில் இன்று ஜூன் 4
ஆனால் நாசகார சீனாவில் இன்று மே 35

சீனாவில் தியனன்மென் சதுக்கத்தில் இடம்பெற்ற மாணவர் போராட்டம்

பலி - 10,454; காயம் - 40,000



உலக மனித உரிமைகள் தினம் - டிசம்பர் 10. மனித உரிமைகள் நினைவு தினம்....? மே 35. இது என்ன.... புது தேதியாக இருக்கிறது....? ஒரு நாட்டின் சர்வ வல்லமை பொருந்திய அரசாங்கம், தனது நாட்டு எல்லைக்குள், இணைய தளத்தில் ஜூன் 4 என்கிற தேதியையே தடை செய்து வைத்து இருக்கிறது.

அதற்காக.....? சுதந்திரப் பிரியர்கள் சும்மா இருக்க முடியுமா.....? மே மாத 31 நாட்களுடன் ஜூன் மாத 4 நாட்களை சேர்த்து, மே 35 ஆக்கி விட்டார்கள். இந்த ஆண்டு, மே 35-க்கும் தடை வந்து, காணாமல் போய் விட்டது என்கிறார்கள். ஆமாம்.... ஜூன் 4க்கு தடை விதித்த நாடு... மனித உரிமைகளை, மனித மாண்புகளை அடியோடு அழித்த நாடு சீனா!

மா சே துங்கின் சிவப்புப் படை

1960 - 70-களில் சீனாவின் அசைக்க முடியாத தலைவராக மா சே துங் இருந்தார். ‘கலாச்சாரப் புரட்சி’ என்று புதிதாக ஒரு கோட்பாட்டை 1966-ல் அறிமுகம் செய்தார். ‘அரசு நிர்வாகத்தில் சீர்திருத்தவாதிகள் நுழைந்து விட்டனர்; வர்க்க வன்முறையால் அவர்கள் எல்லாரும் நீக்கப்பட வேண்டும்; உண்மையான கம்யூனிசக் கோட்பாட்டைத் தக்க வைக்க வேண்டும்' என்று முழங்கிய மா சே துங், செயலிலும் இறங்கினார். ‘சிவப்பு காவல் படை’ உருவாக்கப்பட்டது. மக்கள் தொகையில் பெரும்பாலோர் நாட்டுக்குள்ளேயே இடம் பெயர நேரிட்டது. எல்லா மட்டங்களிலும் மக்களிடையே பிளவு தோன்றியது. ‘சந்தேகக்காரர்கள்’, சிவப்புப் படையால், கைது, சிறை, சித்திரவதை, சில சமயங்களில், மரண தண்டனைக்கு உள்ளானார்கள். வரலாற்று சின்னங்கள், கலாச்சார சமய நம்பிக்கை அடையாளங்கள் தகர்க்கப்பட்டன.

மா சே துங் கொண்டு வந்த மாற்றங்களால், சீனா பயன் அடையவில்லை; பாதிப்புக்கே உள்ளானது. சீன அரசியலை செயலிழக்கச் செய்தது. பொருளாதாரத்தை மோசமாக பாதித்தது. இதை யாரோ சொல்லவில்லை; 1981-ல், சீன கம்யூனிஸ்ட் கட்சியே அதிகாரப்பூர்வமாக இப்படிக் கூறியது. ‘கட்சியின், நாட்டு மக்களின் மோசமான பின்னடைவுக்கு, கலாச்சாரப் புரட்சியே காரணம்!’ 1976 செப்டம்பரில், மா சே துங் மறைந்தார்.

மாணவர் போராட்டம்

1986-ல், பேராசிரியர் ‘ஃபாங் லிஸி’ தலைமையில் மாணவர் போராட்டம் துளிர் விட்டது. சிறிது சிறிதாக மாணவர் இயக்கங்கள் வலுப் பெறத் தொடங்கின. தமது ஜனநாயக உரிமைகள், ஒவ்வொன்றாக பறிக்கப்படுவதை மக்கள் உணரத் தொடங்கினர்.

இந்த நிலையில்தான், மக்களின் பக்கம் நின்று நியாயம் பேசுபவராக, கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் ஹூ யாபாங் பிரபலமாகி வந்தார். அரசின் செயல்பாடுகளில் இயன்றவரை, ஒரு வெளிப்படைத் தன்மை யைக் கொண்டு வர யாபாங் முயற்சித்தார். விளைவு...? மக்களிடையே ஆதரவு; கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்தவர்கள் மத்தியில் கசப்புணர்வு. ஒரு கட்டத்தில் அதாவது 1987 ஜனவரியில் யாபாங் பொதுச் செயலாளர் பொறுப்பில் இருந்து, கட்டாயப் பதவி விலகலுக்கு உள்ளாக்கப்பட்டார். இதற்குப் பிறகு இரண்டு ஆண்டுகள் கழித்து 1989 ஏப்ரல் 15 அன்று 74 வயது ஹூ யாபாங் திடீர் மாரடைப்பால் மரணம் அடைந்தார்.


யாபாங் மறைவில் மர்மம் உள்ளதாக, மாணவர்கள் மத்தியில் சந்தேகம் எழுந்தது. ஆங்காங்கே யாபாங் நினைவு அஞ்சலிக் கூட்டம் நடைபெற்றது. ஒரு வாரம் கழித்து, ஏப்ரல் 22 அன்று - அரசு மரியாதையுடன், தியானன்மென் சதுக்கத்தில் ஹூ யாபாங் இறுதி சடங்கு நடைபெற்றது.

இதில் கலந்து கொள்வதற்காக, முதல் நாள் மாலையிலேயே சுமார் ஒரு லட்சம் மாணவர்கள் திரண்டனர். ஆனால் இவர்கள் யாரும் சதுக்கத்துக்குள் அனுமதிக்கப்படவில்லை. கண்ணீருடன் பல்லாயிரம் மாணவர்கள் வெளியில் நிற்க, இறுதி சடங்கு நிகழ்ச்சிகள் அவசர அவசரமாக நடத்தி முடிக்கப்பட்டன. இதன் பிறகுதான் மாணவர் போராட்டம் தீவிரம் அடைந்தது. நாள்தோறும் தியானன்மென் சதுக்கம் நோக்கி மாணவர்கள் வருகை புரிய ஆரம்பித்தனர். கூடவே பல்வேறு கோரிக்கைகளையும் முன் வைத்தனர்.

அதிபர் லீ பெங் அடக்குமுறை

உண்மையான ஜனநாயகம், பேச்சு சுதந்திரம், பத்திரிகை சுதந்திரம், ஊழலற்ற கட்சி நிர்வாகம், மக்களுக்கு அரசு பதில் அளிக்கிற கடமை ஆகியவற்றை மாணவர்கள் வலியுறுத்தினர். உண்ணாவிரதம், உள்ளிருப்புப் போராட்டம் என்று போராட்டம் தீவிரம் அடைந்தது. சதுக்கத்தில் ஏராளமான மாணவர்கள் குவிந்த வண்ணம் இருந்தனர். சுமார் 10 லட்சம் பேர் வரை திரண்டனர். மாணவர்களின் போரட்டம், சீனத் தலைநகருக்கு வெளியேயும், பல நகரங்களில் பரவியது.

புதிய பொதுச் செயலாளர் ஜாவோ ஜியாங் - மாணவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த வலியுறுத்தினார். ஆனால், அதிபர் லீ பெங் - தீவிர அடக்குமுறையே சரி என்று வாதிட்டார்.



ஒவ்வொரு நாளும் போராட்டம் வலுத்தது; கூடவே, அரசின் பிடிவாதமும். மே 20-ம் தேதி ‘அரசியல் அச்சுறுத்தல்’ காரணமாக, ‘ராணுவ சட்டம்’ அமலுக்கு வருவதாக அறிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து 2,50,000 படைகள், தலைநகர் பெய்ஜிங் விரைந்தன. அங்கிருந்த மாணவர்கள் படைகளை சூழ்ந்து கொண்டனர். திரும்பிச் செல்ல வலியுறுத்தினர். பல சுற்று பேச்சுவார்த்தைகளின் முடிவில் மே 24-ம் தேதி வேறு வழியின்றி, படைகள் திரும்பிச் சென்றன. இதற்கிடையே, பல்வேறு குழுக்களாக இருந்த மாணவர்கள் மத்தியில் ஒருங்கிணைப்பு குன்றி கருத்து வேறுபாடுகள் தோன்றத் தொடங்கின. ஜூன் 1-ம் தேதி பொலிட்பீரோ உறுப்பினர்களுக்கு, அதிபர் லீ பெங், ‘குழப்பத்தின் உண்மைத் தன்மை’ என்று ஒரு சுற்றறிக்கை அனுப்பினார். போராளிகள் மத்தியில் ‘அமெரிக்க ஆட்கள்’ புகுந்து விட்டதாக ராஜாங்க பாதுகாப்பு அமைச்சகம் ஓர் அறிக்கை தந்தது. ஜூன் 2-ம் தேதி ராணுவம் ஊருக்குள் நுழைந்து, 4 பேரைக் கொன்றதாய் தகவல் பரவியது. மாணவர்கள், ஊருக்குள் நுழைவதற்கான எல்லாத் தெருக்களிலும் தடைகளை ஏற்படுத்தினர். ஆனால் சாதாரண உடை அணிந்து, சாமான்யர்களைப் போல, ராணுவ வீரர்கள், ஆயுதங்களுடன் உள்ளே நுழைந்தனர்.

ராணுவ தாக்குதல்

ஜூன் 3 மாலை சுமார் 6 மணி. ‘எக்காரணம் கொண்டும், வீட்டை விட்டு யாரும் வெளியே வராதீர்கள்’ என்று தொலைக்காட்சி எச்சரித்தது. ‘அப்படி என்ன ஆகி விடப் போகிறது....? என்று எண்ணி, ஆயிரக்கணக்கில் பொது மக்கள், வீதிக்கு வந்தனர். அடுத்த சில நிமிடங்களில், எல்லா திசைகளில் இருந்தும் ராணுவம், தானியங்கி துப்பாக்கிகள், ‘டாங்கர்கள்’, புல்டோசர்கள் மற்றும் வாகனங்களுடன், தெருக்களில் வந்து குவிந்தன. கண்ட மேனிக்கு, குண்டுகளைப் பொழிந்தது.

32 வயது விண்வெளி தொழில்நுட்ப இளைஞன் சோங் ஜியோமிங், முதல் பலியாய் விழுந்தான். தியானன்மென் சதுக்கத்தின் உள்ளே இருந்தவர்கள் வெளியேறுவதற்கு, ஒரு மணி நேரம் அவகாசம் தரப்பட்டது. ஆனால்.....? அடுத்த ஐந்தே நிமிடங்களில் ராணுவத் தாக்குதல் தொடங்கியது. கொல்லப் பட்டவர்களின் சடலங்களை மிதித்துக் கொண்டு சென்றன படைகள்.

அதன் பிறகு புல்டோசர் வைத்து சேகரித்து கும்பலாய் எரித்தனர்; எஞ்சியவற்றை அள்ளிச் சென்று கழிவுநீர்க் கால்வாயில் எறிந்தனர். சதுக்கத்தை விட்டு வெளியேறியவர்களையும் விட்டு வைக்கவில்லை. பெய்ஜிங் இசை அரங்கம் அருகே அவர்கள், கொத்து கொத்தாகக் கொன்று வீழ்த்தப்பட்டார்கள்.

உயிருக்குக் கெஞ்சிய கல்லூரி மாணவிகள் 4 பேரை, துப்பாக்கியில் பொருத்தப்பட்ட கத்தியால் குத்திக் கொன்றனர். தனது மூன்று வயதுக் குழந்தையைக் காப்பற்றச் சென்ற தாயையும் சேர்த்து சுட்டனர். தாக்குதலுக்கு உள்ளானவர்களின், மருத்துவ உதவிக்கு வந்த சீன - ஜப்பானிய ஆம்புலன்ஸ் வண்டி தகர்க்கப்பட்டது. ஆணையை நிறைவேற்றத் தயங்கியதால், சுடுகிற பணியில் சுணக்கம் காட்டியதாக, ராணுவப் படை அதிகாரி ஒருவரே சுடப்பட்டார். ஜூன் 4-ம் தேதி வரை அடக்குமுறை கட்டவிழ்த்து விடப்பட்டது.

தாக்குதல் நடத்திய வீரர்கள் யார்?


ஆமாம்..... படை வீரர்களால், தமது நாட்டு குடிமகன்கள் மீதே எப்படி இத்தனை குரூரமாகத் தாக்க முடிந்தது....? இதைச் செய்தது - ‘ஷாங்க்ஷி மாகாண 27-ஆவது படை’. இதில் இருந்த வீரர்கள் எழுத்தறிவில்லாத வர்கள். இவர்களை, ‘உங்களின் முகம், டி.வி.யில் வரும்’ என்று சொல்லி பணிக்கு எடுத்தார்களாம்.

வீட்டு மொட்டை மாடிகளில் இருந்தவர்கள், தெரு பெருக்கும் தொழிலாளர்கள் ஆகியோரை சுட்டுக் கொன்று, அவசர அவசரமாக இவர்களுக்கு ‘பயிற்சி’ தரப்பட்டதாம். முக்கியமான செய்தி. இப்படையின் தளபதி ‘யாங் ஜென்ஹுவா'. அப்போதைய அதிபர் ‘யாங் ஷங்குன்', இவரின் மாமா!

ஜூன் 4 ராணுவ நடவடிக்கையில் இறந்தவர்கள் எத்தனை பேர்...? 21 ஜூன் 1989 அன்று ‘நியூயார்க் டைம்ஸ்’ சொன்னது - பொதுமக்களில் 400 முதல் 800 பேரும், அரசுத் தரப்பில் 12 பேரும் பலி; இதுதவிர, 2600 மாணவர்களைக் ‘காணவில்லை’. 'ஜொங்னான்ஹாய்' அரசுத் தலைமை அலுவலக ஆவணத்தைக் குறிப்பிட்டு, வெள்ளை மாளிகை ஆவணங்களை ‘டி- கோட்’ செய்து, 2014-ல், வெளியான செய்தி சொன்னது - பலி - 10,454; காயம் - 40,000. சீனாவின் ஸ்டேட் கவுன்சில் உறுப்பினர் ஒருவரும் இதனையே உறுதிப்படுத்துகிறார்.

இன்று நினைவு தினம்


இதோ.... தியானன்மென் சதுக்கப் படுகொலை யின் 30-வது நினைவு நாள் இன்று. இப்போது என்ன நிலைமை....? கொலம்பியா பல்கலைக்கழகப் பேராசிரியர் ஆண்ட்ரூ ஜே நாதன் கூறுகிறார். “சீனாவில் பொருளாதார சீர்திருத்தங்கள் நடைபெறுகின்றன; ஆனால், அரசியல் தாராளமயம் உறைந்துபோய் விட்டது.”

இவர் இருக்கட்டும். இன்னொருவர் இருக்கிறார் - ‘டிங் ஜிலிங்’. தம் மகனை, சதுக்கத்தில் பறி கொடுத்தவர். ஜூன் 4 அன்று தமது பிள்ளைகளை இழந்த அன்னையர்களைக் கொண்டு, ‘தியானன்மென் அம்மாக்கள்’ என்று ஓர் அமைப்பு வைத்து இருக்கிறார். ‘இறந்தவர்களுக்காக வாதாடுபவர்’ என்று புகழப்படுகிறார். சுமார் 30 ஆண்டுகளாக, தொடர்ந்து போராடிக் கொண்டு இருக்கிறார். இவர் வைக்கும் ‘பயங்கரமான’ கோரிக்கைகள் என்ன தெரியுமா...?

பொதுஇடத்தில் கூடி அஞ்சலி செலுத்த அனுமதி; மனிதாபிமான உதவிகள் பெற உரிமை; இனியேனும் அரசு வழக்குகள் கைவிடப்படல்; இன்னமும் சிறையில் உள்ள எல்லாரையும் விடுவித்தல்; 1989 ஜூன் 4 சம்பவம் மீது, நியாயமான முழு விசாரணை.

தியானன்மென் படுகொலையை அடுத்து, உலக நாடுகள் என்ன செய்தன...? அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஐரோப்பிய நாடுகள் கண்டித்தன. கியூபா, அப்போதைய கிழக்கு ஜெர்மனி ஆதரித்தன. சீனாவைச் சுற்றி இருக்கிற ஆசிய நாடுகள், எந்த எதிர்வினையையும் வெளிக் காட்டவில்லை. ‘காந்தி தேசம்’ என்ன செய்தது....? அதிகாரப்பூர்வமற்ற, உறுதி செய்யப்படாத தகவல் கூறுகிறது - சீனாவுடன் ‘நல்லுறவு’ பாதிக்கப்படக் கூடாது என்று, இந்தச் செய்தியையே, அடக்கி ‘வாசிக்கச் சொல்லி’, ஊடகங்கள் கேட்டுக் கொள்ளப்பட்டதாம்.

Thursday, 8 September 2016

10,000-year-old human remains found in underwater cave in Mexico




10,000-year-old human remains found
 in underwater cave in Mexico 




CONCLUSION

“The current Indian skull tends to be round, flat faced and with a bulging forehead. It closely resembles that of modern Chinese,”

Asian group that arrived more than 15,000 years ago via the Bering Strait, at the easternmost tip of Siberia and Alaska

 a second migration wave occurred around 8,000 – 9,000 years ago and are the ancestors of today’s Native Americans.




10,000-year-old human remains found in underwater cave in Mexico shed light on ancient migrations

In May last year, archaeologists made the exciting announcement that a complete Ice Age skeleton had been found in an underwater cave in Tulum, Mexico. Since then, more than eight well-preserved skeletons, ranging in age from 9,000 to 13,000 years have been retrieved from cenotes in Mexico and now scientists are beginning to unravel the secrets that they hold, remaining hopeful that the bones may eventually reveal how the Americas were first populated.

El Universal reports that three skeletons were found in the Naharon cenote, Los Palmas cenote, and the Temple cenote.  


Out of the eight sets of human remains, at least one of the individuals is believed to have accidentally fallen in the cenote – a natural pit resulting from the collapse of limestone bedrock that exposes groundwater underneath, while at least two of the skeletons were intentionally deposited.  Cenotes were later used by the ancient Maya for sacrificial offerings.

Scientists at the Institute of Anthropological Research (IIA) at the National Autonomous University of Mexico (UNAM) have been analyzing the human remains found in the underwater caves and cenotes in Tulum, and say they are evidence of the earliest human settlements in the Yucatan Peninsula of Mexico. Each of the eight skeletons closely resemble each other in their features and are therefore believed to come from the same population of people, who lived in the region at the end of the Ice Age.


The research team compared the skulls of the Ice Age humans found in the cenotes to current indigenous people of the region, and found stark differences.

“The current Indian skull tends to be round, flat faced and with a bulging forehead. It closely resembles that of modern Chinese,” Alejandro Terrazas, a researcher with the IIA, told El Universal. 

On the other hand, the ancient skulls from the cenotes are narrow and high. Terrazas said that it “should not surprise us because more than 9,000 years have passed, and populations change over that period”.
The researchers also compared the cenote skulls to other sets of human remains found throughout Mexico that belong to approximately the same time period (more than 9,000-years-old), such as the well-known Chimalhuacán Man and Tlatilco Man, which have been well studied.


 Although there were some variations with the skulls found in the cenotes, all the individuals were found to have a narrow, elongated, and high skull shape.

The differences in skull shapes between the current indigenous people of Mexico and the Ice Age samples, led some experts to argue that Native Americans arrived in a later migration to the earliest inhabitants, who came from elsewhere. 




 According to this theory, the first wave of people was an Asian group that arrived more than 15,000 years ago via the Bering Strait, at the easternmost tip of Siberia and Alaska (the Paleoamericans), while a second migration wave occurred around 8,000 – 9,000 years ago and are the ancestors of today’s Native Americans.