Showing posts with label HASAN. Show all posts
Showing posts with label HASAN. Show all posts

Monday, 12 October 2020

AKSARA HASAN ,ACTRESS BORN 1991 OCTOBER 12

 

AKSARA HASAN ,ACTRESS BORN 1991 OCTOBER 12




அக்சரா ஹாசன் (பி. 12 அக்டோபர் 1991) திரைப்பட நடிகை, திரைக்கதை ஆசிரியர், உதவி இயக்குநர் என பன்முகத் தன்மை கொண்டவராவார். இவர் பிரபல திரைப்பட நடிகரான கமல்ஹாசனின் மகளாவார். ஏழாம் அறிவு, 3 ஆகிய திரைப்படங்களில் நடித்த சுருதி ஹாசன், இவரது மூத்த சகோதரியாவார். மணிரத்னம் இயக்கிய கடல் திரைப்படத்தில் கவுதம் கார்த்திக்குடன் நடிக்க வந்த வாய்ப்பை தவிர்த்து விட்டார்

சொந்த வாழ்க்கை
அக்சரா ஹாசன் அவரது தாயாருடன் மும்பையில் வசித்து வருகிறார்.[4]

ஆரம்பகால வாழ்க்கை
அக்சரா ஹாசன், அக்டோபர் 12, 1991 அன்று சென்னையில் நடிகர்கள் கமல்ஹாசன், சரிகா தம்பதிக்கு இரண்டாவது மகளாகப் பிறந்தார்.[5][6] இவரது தந்தை தமிழ் வம்சாவளியையும், அவரது தாயார் மராத்தி மற்றும் ராஜ்புட் வம்சாவளியையும் சேர்ந்தவர்களாவர்.[7] சூர்யாவுடன் ஏழாம் அறிவு திரைப்படத்திலும், தனுஷ் உடன் 3 திரைப்படத்திலும் கதாநாயகியாக நடித்த நடிகை சுருதி ஹாசன் இவரது மூத்த சகோதரியாவார். அக்சரா ஹாசன் தனது பள்ளிப்படிப்பை



சென்னையிலும், பின்னர் பெங்களூர் இண்டஸ் சர்வதேச பள்ளியிலும் பயின்றவராவார்.[8] அக்சரா சென்னையில் அபாகஸ் மாண்டிசோரி பள்ளி யில் படித்தார் .பின்னர் லேடி ஆண்டாள் ஸ்கூலில் படித்தார் .இவ்வமையம் இவருடைய தாயும் ,தந்தையும் பிரிய நேரிட்டதால் இவர் தன் அன்னையுடன் மும்பையில் வசிக்க நேரிட்டது . மற்றொரு உடன் பிறப்பு ஸ்ருதி ஹாசன் சென்னையிலேயே தந்தையுடன் தங்கி விட்டார்

திரைப்பட வாழ்க்கை
2015 ஆம் ஆண்டில் ஷமிதாப் என்ற இந்தி படத்தில் அமிதாப் பச்சன் மற்றும் தனுஷ் உடன் நடித்தார். இதற்கு முன்னதாக மணிரத்னம் இயக்கிய கடல் படத்தில் நடிப்பதற்கு வாய்ப்பு கிடைத்தும் நடிக்க மறுத்து விட்டார். பின்னர் தமிழில் அஜித்குமார் உடன் விவேகம் படத்தில் நடித்தார். தன்னுடைய தந்தை இயக்கி வந்த சபாஷ் நாயுடு படத்தில் உதவி இயக்குனர் ஆக பணிபுரிந்தார். ஆனால் அப்படம் சில காரணங்களால் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. 2019 ஆண்டில் சொந்த நிறுவனமான ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேசனல் தயாரித்த கடாரம் கொண்டான் படத்தில் நடித்தார். அதே ஆண்டில் ஜீ தமிழ் தொலைக்காட்சி நிறுவனத்திற்கு சொந்தமான ஜீ5 என்ற இணைய செயலி யில் Fingertip என்ற இணையதள நாடக தொடரிலும் நடித்தார்.

பிரத்தியேக வாழ்க்கை




அக்சரா ஹாசன் அவரது தாயாருடன் மும்பையில் வசித்து வருகிறார்.[4] இளமையிலேயே கடவுள் நம்பிக்கையை இழந்தார் .தற்போது புத்த மத கோட்பாடுகளில் கவனம் செலுத்தி வருகிறார் .சென்னையில் உள்ள ஹாட் ஷூ டான்ஸ் கம்பெனியில்தான் அக்சரா பால் ரூம் டான்ஸ் கற்றுக் கொண்டுள்ளார். அக்சரா, இங்கிலாந்தின் பால் ரூம் தொழில்முறை நடனக் கலைஞர்கள் பயிற்சி அமைப்பு நடத்திய முதலாவது பரீட்சை தேறியுள்ளார்

.
.

Sunday, 11 February 2018

ALAVUDIN HASAN BAHMAN SHAH 1 ST SULTANATE OF BAHMINI KINGDOM DIED FEBRUARY 11 , 1358





ALAVUDIN HASAN BAHMAN SHAH 
1 ST SULTANATE OF BAHMINI KINGDOM
DIED FEBRUARY 11 , 1358



அலாவுதீன் ஹாசன் பாமினி ஷா , 
தக்காணப் பீடபூமியின் 1வது பாமினி சுல்தான் 
இறப்பு  பெப்ரவரி 11 .

பாமினி சுல்தானகம் (Bahmani Sultanate) என்பது இந்திய தக்காணப் பகுதியில் அமைந்த ஒரு இசுலாமியச் சுல்தானகம் ஆகும். மேலும் இதுவே தென்னிந்தியாவில் அமையப்பெற்ற முதல் சுதந்திர மற்றும் ஒரே சன்னி இசுலாம் பேரரசு ஆகும்.

வரலாறு[தொகு]
டெல்லி சுல்தான் முகம்மது பின் துக்ளக்கின் ஆட்சி காலத்தில் தக்காண பகுதிக்கு ஆளுநராக நியமிக்கப்பட்டவர் அலாவுதீன் ஹாசன் பாமினி ஷா என்பவர். தாஜிய-பாரசீக வம்சத்தில் வந்த இவர் 1347ம் ஆண்டு ஆகஸ்ட் 3ம் நாள் டெல்லி சுல்தானை எதிர்த்து, தனது ஆளுகைக்கு உட்பட்ட பகுதிகளை தனி சுதந்திர அரசாக அறிவித்தார். இதன் பிறகு 1425ம் ஆண்டு வரை அஸன்பாத் (இன்றைய குல்பர்கா) நகரை தலைநகரமாக கொண்டு பாமினி சுல்தான்கள் ஆண்டு வந்தார்கள். 1425ம் ஆண்டு தலைநகர் முகம்மதாபாத் (இன்றைய பைதர்) நகருக்கு மாற்றப்பட்டது.

இதன் பிறகு இந்த பேரரசு, விஜயநகர பேரரசால் கட்டுப்படுத்தப்பட்ட போதிலும், முகம்மது கவுன் (1466 - 1481) ஆட்சி காலத்தில் தனது உச்சத்தை அடைந்தது. இவரது காலமே பாமினி பேரரசின் பொற்காலமாக விளங்கியது. இதற்கு பிறகு தனது வீழ்ச்சியை அடையத்தொடங்கிய இந்த பேரரசு 1518ம் ஆண்டு ஐந்து பகுதிகளாக பிரிந்தது. அஹமதுநகர், பேரர், பீதர்,பிஜப்பூர் மற்றும் கோல்கொண்டா ஆகிய இந்த ஐந்து பேரரசுகளே பின்னாளில் தக்காணத்து சுல்தானகங்கள் என அழைக்கப்பட்டன.

பாமினி சுல்தான்கள்[தொகு]
பாமினி சுல்தான்கள், தென்னிந்தியப் பகுதிகளை 191 ஆண்டுகள் ஆண்டனர். பொதுவாக இவர்களின் ஆட்சியில் சமயச்சார்பின்மை காணப்பட்டது.அவர்களின் பெயர்களுக்கு பின்வரும் சா(shah=ஷா) என்பது மரபுப் பெயராகும்.

தலைநகரம்1[தொகு]

15.குல்பர்கா
இந்திய நாட்டின் கருநாடக மாநிலத்திலுள்ள குல்பர்கா ( 75 ஆண்டுகள் )
எட்டு சுல்தான்கள், இதனைத் தலைநகராகக் கொண்டு ஆண்டனர்.
1. அலாவுதின் பாமன் சா - கி.பி. 1347 - 1358

2. முதலாம் முகம்மது ஷா - கி.பி. 1358 - 1375

3. அலாவுதின் முசகிது சா - கி.பி. 1375 - 1378

4. தாவுத் சா I - கி.பி. 1378 - 1378

5. இரண்டாம் முகம்மது சா - கி.பி. 1378 - 1397

6. கியாசுதின் தோமதன் சா - கி.பி. 1397 - 1397

7. சம்சுதின் தாவுத் சா II - கி.பி. 1397 - 1397

8. தசிவுதின் பைரோசு சா - கி.பி. 1397 - 1422

தலைநகரம்2[தொகு]

6.பைதர்
பைதர் (116 ஆண்டுகள் )
பத்து சுல்தான்கள், இதனைத் தலைநகராகக் கொண்டு ஆண்டனர்.
9. சிகாபுதின் அகம்மது சா I - கி.பி. 1422 - 1436

10. அலாவுதின் அகம்மது சா II - கி.பி. 1436 - 1458

11. அலாவுதின் உமாயுன் சா - கி.பி. 1458 - 1461

12. நிசாமுதின் அகம்மது சா III - கி.பி. 1461 - 1463

13. சம்சுதின் முகம்மது சா III - கி.பி. 1463 - 1482

14. சிகாபுதின் மமூத் - கி.பி. 1482 - 1518

15. அகம்மது சா IV - கி.பி. 1518 - 1520

16. அலாவுதின் சா - கி.பி. 1520 - 1523

17. வைவுல்லா சா - கி.பி. 1523 - 1526

18. கலீம்வுல்லா சா - கி.பி. 1526 - 1538

கலாச்சாரம்[தொகு]

தலைநகர் குல்பர்காவின் மசூதி
பாமினி சுல்தான்கல், இராணீய மன்னர் பரம்பரையான பாமான் வம்சத்தில் வந்தவர்கள் என நம்பப்படுகின்றனர். இவர்கள் பெரும்பாலும் பாரசீக கலாச்சாரத்தையே பின்பற்றினார். இவர்களது காலத்தில்தான் பாரசீக கலாச்சாரம் இந்தியாவில் பரவ தொடங்கியது.