Showing posts with label TIPS. Show all posts
Showing posts with label TIPS. Show all posts

Sunday, 15 October 2017

SWEET TIPS


SWEET TIPS



* சர்க்கரைப் பாகு காய்ச்சும் போது, சில துளிகள் எலுமிச்சை சாறு விட்டால், பாகு முறுகாமல் இருக்கும்.
* கடலை மாவை நெய் விட்டு லேசாக வறுத்து, பின், மைசூர் பாகு செய்தால், மணம் தூக்கலாக இருக்கும். நெய்யில், கடலை மாவை குழைத்து, சர்க்கரை பாகில் விட்டால், வாயில் கரையும் அளவுக்கு, பதமாக இருக்கும்.
* இரண்டு பங்கு பாசி பருப்பு, ஒரு பங்கு கடலைப் பருப்பு என்ற விதத்தில் அரைத்து செய்தால், மிருதுவாகவும், ருசியாகவும் இருக்கும், மைசூர்பாகு.
* லட்டு பிடிக்கும் போது, ஏதாவது பழ எசென்சை சிறிது விட்டு லட்டு பிடித்தால் சுவையாகவும், மணமாகவும் இருக்கும்.
* போளி செய்யும் போது, மைதா மாவுடன், சிறிது பால் பவுடரும் சேர்த்து பிசைந்தால், போளி மிருதுவாக இருக்கும். போளிக்கு, கடலைப்பருப்பு பூரணம் செய்யும் போது, வெல்லத்துக்கு பதில் பொடித்த சர்க்கரையை பயன்படுத்தினால், போளி மெல்லியதாக, வெண்மையாக, ருசியாக இருக்கும்.
* கேழ்வரகை ஊற வைத்து அரைத்து, பால் எடுத்து அல்வா செய்யலாம். இது, கோதுமை அல்வாவை விட ருசியாக இருக்கும். அல்வா செய்யும் போது, ஜவ்வரிசியை இரண்டு மணி நேரம் ஊற வைத்து, மிக்சியில் அரைத்து, அல்வா மிக்சுடன் கலந்து செய்தால், கண்ணாடி போல் பளபளப்பாக, சுவையாக இருக்கும்.
* குலாப் ஜாமூன் மிக்சுடன் பொடித்த முந்திரி தூள் மற்றும் பாதாம் தூள் சேர்த்து பிசைந்து செய்தால், சுவையாக இருக்கும், குலாப் ஜாமூன்.
* ரவா லட்டு செய்யும் போது, கால் பங்கு பால் பவுடரை கலந்து செய்தால், சுவையாக இருக்கும்.
* வெல்லப்பாகு வைக்கும் போது, ஒரு தேக்கரண்டி நெய்யில், தூளாக்கிய வெல்லத்தை போட்டு கிளறினால், பதமான பாகு வரும்.
* பாதுஷா செய்யும் போது, மாவில் ஒரு சிட்டிகை ஆப்பச் சோடாவுடன், சிறிதளவு டால்டாவை சூடு செய்து பிசைந்தால், பாதுஷா மிருதுவாகவும், சுவையாகவும் இருக்கும்

DEEPAVALI TIPS





DEEPAVALI TIPS


ஐ.எஸ்.ஐ., உரிமம் பெற்ற, தரமான பட்டாசுகளை பார்த்து வாங்க வேண்டும். மேலும், பட்டாசு வெடிக்கும் போது, பட்டாசு பெட்டியை மூடி வைப்பது அவசியம்.

* பட்டாசு வெடிக்கும் போது, காலில் செருப்பும், கெட்டியான காட்டன் உடையும் அணிந்திருப்பதுடன், அருகில், வாகனங்கள் இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். 
* குழந்தைகள், கம்பி மத்தாப்பு மற்றும் புஸ்வாணம் கொளுத்தும் போது, வாழைமட்டையை கைப்பிடியாக பயன்படுத்த வேண்டும். 
* ஒரு பக்கெட் தண்ணீர் நிரப்பி, எரித்த பட்டாசுகளை அதில் போட வேண்டும்.
* மக்கள் கூட்டமாக உள்ள இடம், இட நெருக்கடி மற்றும் குறுகிய பாதை போன்ற இடங்களில் பட்டாசு வெடிக்க கூடாது.

* பெரியவர்களின் உதவியின்றி, குழந்தைகள், தனியாக பட்டாசு வெடிக்க கூடாது.
* பட்டாசுகளை, சட்டை பாக்கெட்டில் வைத்து, ஒவ்வொன்றாக எடுத்து வெடிக்க கூடாது; ஆபத்து.
* பட்டாசு வெடிக்கவில்லை எனில், அதை கையில் எடுத்து, பரிசோதிக்க கூடாது. வேறொரு பட்டாசை எடுத்து வேறு இடத்தில் வைத்து வெடிக்க வேண்டும்.
* வெடிகளை கையில் எடுத்து, நேரடியாக விளக்கில் கொளுத்தி எறியக் கூடாது.

* மிகவும் தளர்வான மற்றும் பாலியஸ்டர் ஆடைகளை அணியக்கூடாது; தீப்பட்டால், வேகமாக பரவும் அபாயம் உண்டு. 





* ராக்கெட் போன்ற வாண வேடிக்கைகளை, திறந்த மைதானத்தில் சென்று வெடிக்க வேண்டும்.


KITCHEN TIPS


KITCHEN TIPS
சமையல் டிப்ஸ்   


* சர்க்கரைப் பாகு காய்ச்சும் போது, சில துளிகள் எலுமிச்சை சாறு விட்டால், பாகு முறுகாமல் இருக்கும்.
* கடலை மாவை நெய் விட்டு லேசாக வறுத்து, பின், மைசூர் பாகு செய்தால், மணம் தூக்கலாக இருக்கும். நெய்யில், கடலை மாவை குழைத்து, சர்க்கரை பாகில் விட்டால், வாயில் கரையும் அளவுக்கு, பதமாக இருக்கும்.
* இரண்டு பங்கு பாசி பருப்பு, ஒரு பங்கு கடலைப் பருப்பு என்ற விதத்தில் அரைத்து செய்தால், மிருதுவாகவும், ருசியாகவும் இருக்கும், மைசூர்பாகு.
* லட்டு பிடிக்கும் போது, ஏதாவது பழ எசென்சை சிறிது விட்டு லட்டு பிடித்தால் சுவையாகவும், மணமாகவும் இருக்கும்.
* போளி செய்யும் போது, மைதா மாவுடன், சிறிது பால் பவுடரும் சேர்த்து பிசைந்தால், போளி மிருதுவாக இருக்கும். போளிக்கு, கடலைப்பருப்பு பூரணம் செய்யும் போது, வெல்லத்துக்கு பதில் பொடித்த சர்க்கரையை பயன்படுத்தினால், போளி மெல்லியதாக, வெண்மையாக, ருசியாக இருக்கும்.
* கேழ்வரகை ஊற வைத்து அரைத்து, பால் எடுத்து அல்வா செய்யலாம். இது, கோதுமை அல்வாவை விட ருசியாக இருக்கும். அல்வா செய்யும் போது, ஜவ்வரிசியை இரண்டு மணி நேரம் ஊற வைத்து, மிக்சியில் அரைத்து, அல்வா மிக்சுடன் கலந்து செய்தால், கண்ணாடி போல் பளபளப்பாக, சுவையாக இருக்கும். 
* குலாப் ஜாமூன் மிக்சுடன் பொடித்த முந்திரி தூள் மற்றும் பாதாம் தூள் சேர்த்து பிசைந்து செய்தால், சுவையாக இருக்கும், குலாப் ஜாமூன்.
* ரவா லட்டு செய்யும் போது, கால் பங்கு பால் பவுடரை கலந்து செய்தால், சுவையாக இருக்கும்.
* வெல்லப்பாகு வைக்கும் போது, ஒரு தேக்கரண்டி நெய்யில், தூளாக்கிய வெல்லத்தை போட்டு கிளறினால், பதமான பாகு வரும்.
* பாதுஷா செய்யும் போது, மாவில் ஒரு சிட்டிகை ஆப்பச் சோடாவுடன், சிறிதளவு டால்டாவை சூடு செய்து பிசைந்தால், பாதுஷா மிருதுவாகவும், சுவையாகவும் இருக்கும்.