Showing posts with label MAY 23. Show all posts
Showing posts with label MAY 23. Show all posts

Tuesday, 9 March 2021

IDA SOPHIA SCUTTER ,AMERICAN DOCTOR FOUNDED C M C HOSPITAL ,VELLORE BORN 1870 DECEMBER 9 -1960 MAY 23

 

IDA SOPHIA SCUTTER ,AMERICAN DOCTOR 

FOUNDED C M C HOSPITAL ,VELLORE BORN  

1870 DECEMBER 9 -1960 MAY 23




ஐடா ஸோஃபியா ஸ்கட்டர் என்பவர் அமெரிக்காவைச் சேர்ந்த ஒரு பெண் மருத்தவராவார். இவர் வேலூரில் உள்ள கிருத்தவ மருத்துவக் கல்லூரியை நிறுவியதற்காக அறியப்படுகிறார்.

இளமைப்பருவம்

இவரது பெற்றோர் அமெரிக்காவைச் சேர்ந்த, ஜான் ஸ்கடர் - சோஃபியா வெல்ட் ஸ்கடர் ஆவர். இவரின் தந்தையும் ஒரு மருத்தவராவார். அவர்கள் இராணிப்பேட்டையில் தங்கி மருத்துவத் தொண்டு புரிந்துகொண்டிருந்த காலகட்டத்தில் ஐடா ஸோஃபியா ஸ்கட்டர் 1870 திசம்பர் 9 இல் பிறந்தார். எட்டு வயதுவரை தமிழ்நாட்டின் இராணிப்பேட்டையில் வளர்ந்த ஐடா பிறகு தன் பெற்றோர்களுடன் தாயகமான அமெரிக்காவுக்குச் சென்றார். அதன்பின் சமயத் தொண்டுக்காக சப்பான் நாட்டுக்குப் பயணமானார். அதனால் நார்த் பீல்டில் உள்ள கிறித்துவப் பெண்கள் பள்ளியில் சேர்ந்து விடுதியில் தங்கியிருந்து படிப்பைத் தொடர்ந்தார். பள்ளி இறுதித் தேர்வெழுதிய நிலையில் உடல்நிலை சரியில்லாத தாயாரைப் பார்பதற்காக இந்தியாவுக்குப் புறப்பட்டு வந்தார்.


அப்போது ஒருநாள் இரவு அந்தணர், முஸ்லிம், இந்து சமயத்தை சார்ந்தவர்கள் தங்கள் மனைவிகளின் பிரசவ உதவிக்காக அவர்கள் வீட்டுக்கு வந்து, ஐடாவை பெண் மருத்துவராக கருதி உதவ வேண்டினர். அவர்களிடம் தான் மருத்துவர் இல்லை என்றும், மருத்துவரான தன் தந்தையை அழைப்பதாகச் சொன்னார் ஆனால் அவர்கள் ஆண் மருத்தரிடம் காட்ட விரும்பாமல் திரும்பிச் சென்றனர். மறுநாள் அந்த மூன்று பென்களும் பிரசவத்தின்போது இறந்து அவர்களுடைய சவஊர்வலங்கள் சென்றன அதைக் கண்ட ஐடா வருந்தினார்.


இந்தியப் பெண்களின் அவலநிலை குறித்து ஆழமாகச் சிந்தித்த ஐடா மருத்துவம் படித்து மிஷனரி பணியில் ஈடுபட விரும்புவதாக தன் பெற்றோரிடம் தெரிவித்தார். பின்னர் மருத்துவம் படிக்க அமெரிக்கா சென்ற ஐடா ஸ்கடர், பிலடெல்ஃபியா மருத்துவக் கல்லூரியில் 1895 இல் சேர்ந்தார். மருத்துவப் படிப்பு முடிந்ததும், வேலூரில் பெண்களுக்கென மருத்துவமனை கட்ட வேண்டும் என்ற எண்ணம் ஐடாவுக்கு இருந்தது. மருத்துவமனை தொடங்க எட்டாயிரம் அமெரிக்க டாலர்கள் தேவைப்பட்டது. நிதி திரட்டும் பணியில் ஈடுபட்டார். அப்போது ஷெல் என்ற முதியவர் 10 ஆயிரம் அமெரிக்க டாலர்களுக்கான காசோலையை ஐடாவிடம் தந்து, என் அன்பு மனைவி மேரி டேபர் ஷெல்லின் நினைவாக, வேலூரில் பெண்கள் மருத்துவமனை அமைக்க நிதியுதவி அளிக்கிறேன். அவர் உயிரோடு இருந்திருந்தாலும் உதவி செய்திருப்பார் என்று கூறினார்.


வேலூரில் மருத்துவமனை:

தோழி ஆனி ஹான்காக்குடன் 1900 சனவரி மாதம் வேலூருக்கு வந்தார் ஐடா. இருவரும் மருத்துவப் பணியை உடனடியாகத் தொடங்கினர். கூடவே மருத்துவமனை கட்டிடம் கட்டும் பணியும் தொடங்கியது. திட்டமிட்டபடி நாற்பது படுக்கைகளுடன் பெண்களுக்கான மேரி டேபர் ஷெல் நினைவு மருத்துவமனை தொடங்கப்பட்டது. 1904 ஆம் ஆண்டில் தென்னிந்தியாவில் பரவியபிளேக் நோயைத் தடுப்பதில் டாக்டர் ஐடா பெரும் பங்கேற்றார்.


அப்போது போதிய பயிற்சி பெற்ற செவிலியர்கள் இல்லாதது, ஐடாவின் மருத்துவப் பணிக்குப் பெருந்தடையாக இருந்தது. இதன் தொடர்ச்சியாக செவிலியர் பயிற்சிப் பள்ளி ஒன்றைத் தொடங்க வேண்டும் என்ற எண்ணம் ஐடாவின் மனதில் உதித்தது. செவிலியர் பள்ளியைத் தொடங்குவதற்கான பணியை ஐடா ஸ்கடர் 1908 இல் தொடங்கினார். சுற்றுவட்டார மிஷன் பள்ளிகளில் படித்த ஐந்து மாணவிகளுடன் செவிலியர் பயிற்சி பள்ளியைத் தொடங்கினார்.


மருத்துவக் கல்லூரி

1913-லேயே பெண்களுக்கென ஒரு மருத்துவக் கல்லூரி தொடங்கவேண்டுமென்று டாக்டர் ஐடா திட்டமிட்டு அவர் எண்ணத்தை வெளியிட்டார். ஐடாவின் எண்ணத்தை, தென்னிந்திய மிஷனரி மன்றம் ஏற்றுக்கொண்டது. வேலூரில் பெண்களுக்கான மருத்துவக் கல்லூரி தொடங்குவது என்றும் அதற்கு ஐடாவே முதல்வராக இருக்க வேண்டுமென்றும் முடிவெடுக்கப்பட்டது. மருத்துவக் கல்லூரி தொடங்குவதற்காக 200 ஏக்கர் நிலமும் தயாராக இருந்தது.


1914 இல் நெடு விடுப்பில் ஐடா அமெரிக்காவுக்குச் சென்றார். அதேநேரம் முதல் உலகப் போர் மூண்டது. 1915 இல் கடுமையான போர்ச் சூழலில் இந்தியா திரும்பிவந்தார், மருத்துவக் கல்லூரி தொடங்குவதற்கான பணியைத் விரைவுப்படுத்தினார் இதையணுத்து 1918 இல் பட்டைய மருத்துவப் படிப்புடன் பெண்களுக்கான மருத்துவப் பள்ளி நடத்துவதற்கான அனுமதியானது, சென்னை மாகாண மருத்துவத் துறை தலைவர் கர்னல் பிரைசனிடமிருந்து பெற்றார். 1918 ஆகத்து 12 இல் யூனியன் மிஷனரி பள்ளியை சென்னை மாகாண கவர்னர் பென்ட்லண்ட் பிரபு தொடங்கி வைத்தார். 1948 இல் யூனியன் மருத்துவப் பள்ளி, கிறிஸ்தவ மருத்துவக் கல்லூரியாக தரம் உயர்த்தப்பட்டது. அப்போதுதான், பெண்களுடன் ஆண்களும் மருத்துவம் படிக்கத் தொடங்கினர்.[1]


விருதுகள்:

அம்மையாரைப் போற்றும்விதத்தில் இந்திய அரசு கெய்சர்-இ-இந்து என்ற பொற்பதக்கத்தை அளித்தது.

அமெரிக்கா 1935இல் டி.எஸ்ஸி பட்டம் அளித்துக் கௌரவித்தது. மேலும் எப் ஏசிஎஸ் என்னும் ஒரு மதிப்பியல் பட்டத்தையும் உவந்து தந்தது.

மறைவு:

1960 மே 24 அன்று ஐடா கொடைக்கானலில் தம் தொண்ணூறாவதுவயதில் இயற்கை எய்தினார்.[2]





ஐடா.S.ஸ்கட்டர் - கிறிஸ்தவ மருத்துவக் கல்லூரி, வேலூர்


Ida S. Scudder

இன்று அனைத்து   வசதிகளுடனும் , நவீன சிறப்புப் பிரிவுகளுடனும், வேலூரின் அடையாளமாகவும் உலகஅளவில் பிரபலமான மற்றும் மிகப் பெரிய  மருத்துவமனையாகவும், செயல் பட்டு அதன்மூலம் இந்தியத் திருநாட்டிற்கு பெருமை சேர்க்கும் Vellor CMC மருத்துவ மனையின் கட்டிடங்களில் இழையோடியிருக்கும் “ஐடா ஸ்கட்டர்”  என்ற அமெரிக்க பெண்மணியின் தியாகம் உங்களுக்கு தெரியுமா? 


பிறப்பு மற்றும் கல்வி

       திண்டிவனத்தில் மருத்துவ மிஷனரியாக ஊழியம் செய்து வந்த டாக்டர். ஜான் ஸ்கட்டர் II,  சோபியா ஸ்கட்டர் தம்பதியினரின் ஐந்தாவது குழந்தை தான் “ஐடா ஸ்கட்டர்” . (DOB: 09-12-1870). ஐடா ஸ்கட்டருக்கு ஆறு வயது இருக்கும்பொழுது சரியாக 1877 ஆம் ஆண்டில் இந்தியாவில் கொடியபஞ்சம் ஏற்பட்டது. பஞ்சத்தின்கொடுமையை நேரில் கண்ட ஐடா தன் வாழ்நாளில் ஒருபோதும் மிஷனரி ஆகப்போவது இல்லை என தீர்மானித்தார். பள்ளி மற்றும் இறையியல் படிப்புக்காக அமெரிக்கா சென்ற ஐடா- அவர்களின் . பள்ளி வாழ்க்கையும் Missionary பயிற்சியும்,  20 வயதில் நிறைவு பெற்றது.


கிராமத்து வாழ்க்கை

       தந்தை ஜான் ஸ்கட்டரின் மருத்துவப் பணியில் உதவி வந்த தாய் சோபியா ஸ்கட்டருக்கு உடல் நலம் குன்றிய காரணத்தால் ஐடா 1890- ல் இந்தியாவிற்கு வரவேண்டிய கட்டாயம் உருவானது. கடல் மார்க்கமாக சென்னை துறைமுகத்தை அடைந்த ஐடா வையும் அவரது சகோதரன் ஹாரியையும் அழைத்து செல்ல அவரது தந்தை டாக்டர் ஜான் ஸ்கட்டர் துறைமுகம் வந்திருந்தார்.  துறைமுகத்திலிருந்து மாட்டு வண்டியில் பயணம் செய்து திண்டிவனத்தில் உள்ள கூரைவேய்ந்த மிஷன் வீட்டுக்கு வந்தனர். பாமர மக்கள் இவரையும் ஒரு மருத்துவராக எண்ணினர். மருத்துவ சிகிச்சைக்காக மிஷன் விட்டுக்கு வரும் திண்டிவன மக்கள், ஐடா ஸ்கட்டரை   “மிஸ்ஸியம்மா”   என்று அழைத்தனர்.


 மனதைத் தொட்ட நிகழ்வுகள்

       1870 ஆம் வருடம்!, நள்ளிரவை நெருங்கும் நேரம் கதவை யாரோ தட்டும் சத்தம் கேட்டு கதவைத் திறந்தார் ஐடா, சிம்னி  விளக்கின் ஒளியில் ஒரு இஸ்லாமியர் பதற்றத்துடன் காணப்பட்டார். “மிஸ்ஸியம்மா நீங்கள் தான் என் மகளைக் காப்பாற்ற வேண்டும், தலைப் பிரசவம்! வலியால் துடிக்கிறாள் ” என்று  அவர் மன்றாடினார். ஐடாவோ, நான் டாக்டர் இல்லை. பிரசவம் பாக்க எனக்கு தெரியாது, இருங்கள். அப்பாவை (டாக்டர் ஜான் ஸ்கட்டர்) எழுப்புகிறேன். என்றவாறு மாடி அறைக்குச் செல்ல திரும்பினாள். அந்த மனிதனோ, “வேண்டாம் மிஸ்ஸி அவரை எழுப்பவேண்டாம்” என்று கூறி தடுத்தார்.! ஒரு முஸ்லீம் பெண்ணுக்கு ஆண் பிரசவம் பார்க்க எங்களின் வேதத்தில் இடம் இல்லை. அதைவிட அவள் செத்தாலும் பரவாயில்லை. நான் வருகிறேன் தாயே!” கைகள் கூப்பி விடை பெற்று இருளில் மறைந்துபோனார்.


       அதிக நேரம் ஆகவில்லை, மீண்டும் கதவு தட்டப்பட்டது. அவர் ஒரு இந்து, வணக்கம் கூறிவிட்டு, “மிஸ்ஸியம்மா என் மனைவி பிரசவ வலியால் துடிக்கிறாள், உடனே என்னோடு வாருங்கள் அம்மா அந்த இரு உயிரையும் காப்பாற்றுங்கள் தாயே!” அவரும் கெஞ்சினார், மீண்டும் அதே பதிலைத்தான் ஐடா கூறினார். ஐடா தந்தையை அழைக்கவா என்று கேட்டாள். ஆனால் அந்த மனிதனோ, “வேண்டாம் தாயே! எங்கள் சாஸ்த்திரத்தில் அதற்கு இடமில்லை. என் மனைவி செத்தாலும் சாகலாமே தவிர ஒரு ஆண் அவளுக்கு பிரசவம் பார்க்க முடியாது தாயே” அவரும் ஏமாற்றத்துடன் திரும்பினார். மீண்டும் கதவு தட்டப்படும் சத்தம்  கேட்டு கதவைத் திறந்து பார்த்தபோது வேறொரு நபர்! அவரும் ஒரு இந்துதான்.  


       மறுநாள் மாலையில் வீதியில் ஒன்றன் பின் ஒன்றாக மூன்று சவ ஊர்வலங்கள் சென்று கொண்டிருப்பதைப் பார்த்தார் . அந்த மூவரும் பிரசவ சிக்கலில் இரவில் இறந்துபோன பெண்மணிகள் என்பதைத் தெரிந்து கொண்டபின் மனம் வெதும்பினார்.!. ஐடா, இந்தியப் பெண்மணிகளுக்கு உடனடி தேவை பெண் மருத்துவர்கள் என்பதை அன்றே உணர்ந்து கொண்டார்.


 மருத்துவக் கல்வி மற்றும் பணி

       1899 ஆம் வருடம் நியூயார்க் நகரில் கார்நெல் பல்கலைக்கழக மருத்துவக் கல்லூரியில் (Cornell University Medical College) சேர்ந்தார்., பெண்கள் மருத்துவம் பயில அனுமதிக்கப்பட்ட முதல் வகுப்பு அது!. தேர்ச்சியுற்று மருத்துவரான உடனே தமிழ்நாடு திரும்பி மருத்துவப் பணியை, குறிப்பாக பெண்களுக்கு செய்யவேண்டும் என்ற ஆர்வம் கொண்டார். பலரிடம் தனது திட்டத்தைக் கூறினார்.  மான்ஹாட்டான் நகரைச் சேர்ந்த வங்கியாளர் ஷெள் (Schell)  என்பவர் தமிழ் நாட்டு பெண்களின் நலனுக்காக 10,000 அமெரிக்க டாலர்களை அவரின் மனைவியின் நினைவாக ஐடாவிடம் வழங்கினார். அவர் தமிழ் நாடு திரும்பியபோது அவரின் தந்தை வேலூரில் மருத்துவப் பணியில் ஈடு பட்டிருந்தார்.. 1900 ஆம் ஆண்டில் அவரின் தந்தை ஜான் ஸ்கட்டர் மரணமடையும்வரை அவருடன் இணைந்து மருத்துவப் பணியை திறம்பட செய்து வந்தார்.


ஐடா ஸ்கட்டரின் சாதனைகள்:

       தந்தையின் மரணத்திற்கு பின் மருத்துவப் பணியின் முழுப் பொறுப்பையும் ஐடா ஏற்றுக்கொண்டார். அமெரிக்காவிலிருந்து கொண்டு வந்திருந்த நன்கொடையைப் பயன்படுத்தி 1902 ஆம் வருடம் ஒரு சிறு மருத்துவமனையை வேலூரில் அமைத்து அதற்கு ஷெல் மருத்துவமனை (Schell Hospital) என்று பெயரிட்டார். சிகிச்சையும் மருந்துகளும் இலவசமாக தரப்பட்டன. (தற்போது இது Mary Tabler Schell Eye Hospital என்று கண் மருத்துவமனையாக பெரிய அளவில் இயங்கி வருகின்றது). அப்போது தமிழகத்தில் பரவலாக காணப்பட்ட ப்ளேக் (plague), காலரா, தொழுநோய் ஆகியவற்றிலிருந்து மக்களைக் காப்பாற்றப் போராடினார்.



       சென்னைப் பல்கலைக்கழக சம்மதத்துடன் இந்தியாவிலேயே   முதல் தாதியர் பயிற்சிப் பள்ளியை நிறுவினார். இன்றுவரை பெண் கல்விக்காக விழிப்புணர்வு பிரசாரம் செய்யவேண்டிய சூழ்நிலையில் நாம் இருந்து கொண்டிருக்கும் நிலையில், அரசு அனுமதியுடன் சென்னைப் பல்கலைக்கழக அங்கீகாரத்துடன் 1918  ஆம் வருடத்திலேயே பெண் மருத்துவர்களை உருவாக்க மருத்துவக் கல்லூரி நிறுவி பெண்கல்வியில் புரட்சி செய்தார்.  இதுவே கிறிஸ்துவ மருத்துவக் கல்லூரியின் ஆரம்பம். 1945 ஆம் ஆண்டில் மருத்துவக் கல்லூரியில் ஆண்களும் சேர்த்துக் கொள்ளப்பட்டனர்.  1952 ஆம் வருடம் உலகின் சிறந்த 5 டாக்டர்களில் ஒருவராக டாக்டர் ஐடா ஸோஃபியா ஸ்கட்டர்   தேர்ந்தெடுக்கப் பட்டார் .


Dr. Ida Sophia Scudder 

(December 9, 1870 – May 23, 1960)

பாசத்திற்குரிய ஐடா அத்தை (Aunt Ida)

       டாக்டர் ஐடா ஸ்கட்டர் வேலூர் நகர மக்களாலும்,  வட   ஆற்காடு மக்களாலும் பெரிதும் போற்றப்பட்டார். அவரை பாசத்துடன் ஐடா அத்தை (Aunt Ida) என்றே அழைத்தனர். ஐடா,   தமது 85 வது வயதில் ஒரு நாள் வழக்கம்போல் தபால்களைப் பார்த்துக் கொண்டிருந்தார். அமெரிக்காவிலிருந்து வந்திருந்த ஒரு தபாலில் “டாக்டர் ஐடா, இந்தியா” என்று மட்டும் முகவரி எழுதப்பட்டிருந்தது. நாடு தழுவிய அளவில் அவர் அறியப்பட்டிருந்தார்  என்பதற்கு இது ஒரு சான்றாகும். 


விண்ணகப் பிறப்பும் மண்ணகச் சிறப்பும்

        கடைசிவரை  திருமணமே  செய்துகொள்ளாமல்  மக்கள் நலனுக்காகவே  பணியாற்றிவந்த ஐடா அத்தை, 1960 ஆம் வருடம் மே  மாதம் 24 ஆம் நாள் அதிகாலையில் இறைவனடி  சேர்ந்தார்.   அப்போது அவருக்கு வயது 90.     இந்தியப் பெண்களுக்காக அவர் செய்த  மாபெரும்  தியாகத்தையும்  சேவையையும்  பாராட்டும் வகையில் அவருடைய நூற்றாண்டு தினமான  ஆகஸ்ட்  12, 2000  நாளன்று   அவரின்  படமும் சி.எம்.சி. மருத்துவக் கல்லூரியும்,  மருத்துவமனையும்  பொறிக்கப்பட்ட  சிறப்பு  தபால்  தலை வெளியிட்டு பெருமை சேர்த்தது இந்திய  அரசு!  இன்று அனைத்து வசதிகளுடனும் , நவீன சிறப்புப் பிரிவுகளுடனும், 2000 படுக்கைகள் கொண்டு, ஆசியாவின் மிகப் பெரிய மருத்துவமனையாகவும்,  உலகின் மிகப் பெரிய மிஷன்   மருத்துவமனையாகவும் விளங்குகிறது!


Dr. Ida S. Scudder;Vellore 1900Tiruvalla Medical Mission1935


1905-FIRST SEVEN INDIAN NURSES WITH IDA SCUDDER VELLORE



Dr. Ida Sophia Scudder (December 9, 1870 – May 23, 1960) was a third-generation American medical missionary in India of the Reformed Church in America. She dedicated her life to the plight of Indian women and the fight against bubonic plague, cholera and leprosy. In 1918, she started one of Asia’s foremost teaching hospitals, the Christian Medical College & Hospital, Vellore, India.

Early life

She was born of Dr. John Scudder Jr. and his wife, Sophia (née Weld), part of a long line of medical missionaries (see Scudders in India). The granddaughter of John Scudder, Sr., as a child in India, she witnessed the famine, poverty and disease in India. She was invited by Dwight Moody to study at his Northfield Seminary in Massachusetts, where she earned a reputation for pranks.[1]

Screen Shot 2016-05-14 at 9.36.01 AM



She initially expected to get married and settle down in the United States after seminary, but in 1890 she went back to India to help her father when her mother was ailing at the mission bungalow at Tindivanam. Ida had expressed a resolve not to become a medical missionary, but during that stay, she had the enlightening experience of not being able to help three women in childbirth who died needlessly in one night.

That experience convinced her that God wanted her to become a physician and return to help the women of India. She never married.

She graduated from Cornell Medical College, New York City in 1899, as part of the first class at that school that accepted women as medical students. She then headed back to India, fortified with a $10,000 grant from a Mr. Schell, a Manhattan banker, in memory of his wife. With the money, she started a tiny medical dispensary and clinic for women at Vellore, 75 miles from Madras. Her father died in 1900, soon after she arrived in India. In two years she treated 5,000 patients. She opened the Mary Taber Schell Hospital in 1902.

Auntie Ida (2)


Ida Scudder realized that she would be foolish to go on alone in her fight to bring better health to South India’s women, so she decided to open a medical school for girls. Skeptical males said she would be lucky to get three applicants; actually she had 151 the first year (1918), and had to turn many away ever since. At first, the Reformed Church in America was the main backer of the Vellore school, but after Dr. Scudder agreed to make it coeducational, it eventually gained the support of 40 missions. Of 242 students today, 95 are men.



cmc-vellore (1)

Christian Medical College, Vellore

In 1928 ground was broken for the “Hillsite” medical school campus on 200 acres (0.8 km²) at Bagayam, Vellore.


Ida S. Scudder with Mahatma Gandhi, 1928


In 1928, Mahatma Gandhi visited the medical school. She traveled a number of times to the United States to raise funds for the college and hospital, raising a total in the millions. In 1945, the college was opened to men as well as women. In 2003 the Vellore Christian Medical Center was the largest Christian hospital in the world, with 2000 beds, and its medical school is now one of the premier medical colleges in India.



Screen Shot 2016-05-14 at 9.37.12 AMOne day in 1953, aged 82, she was at “Hilltop”, her bungalow at Kodaikanal, and opened a stack of letters and telegrams. Her name is a famous one in India and her letters  reached her addressed simply, “Dr. Ida, India.”

Thursday, 1 October 2020

.BONNIE AND CLYDE ,CRIMINALS BORN 1910 OCTOBER 1 - 1934 MAY 23

 




.BONNIE AND CLYDE ,CRIMINALS 

BORN 1910 OCTOBER 1 - 1934 MAY 23



..பொன்னி மற்றும் க்ளைட் இரட்டையர்களில் ஒரு பாதி, போனி பார்க்கர் 1930 களில் அமெரிக்காவின் மிகவும் பிரபலமான  சட்டவிரோதமானவர் களில் ஒருவரானார். போனி பார்க்கர் யார்? 1930 இல் க்ளைட் பாரோவை சந்தித்த பின்னர், போனி பார்க்கர் இறுதியில் ஒரு குற்ற உலகில் நுழைந்தார். தனது பங்குதாரர் மற்றும் இணைந்த கும்பலுடன் வங்கிகளையும் சிறு வணிகங்களையும் கொள்ளையடித்த அவர், 1930 களில் அமெரிக்காவின் மிகவும் பிரபலமற்ற சட்டவிரோதமானவர்களில் ஒருவரானார். அவர்களது கிட்டத்தட்ட இரண்டு ஆண்டு குற்றச் சம்பவம் பல மாநிலங்களில் பரவியது, சட்ட அமலாக்க அதிகாரிகளை உள்ளடக்கிய பல நபர்களின் கொலைக்கு கும்பல் பொறுப்பேற்றது. மே 23, 1934 அன்று லூசியானாவில் நெடுஞ்சாலையில் பொலிஸ் பதுங்கியிருந்து போனி மற்றும் கிளைட் கொல்லப்பட்டனர்.


ஆரம்ப கால வாழ்க்கை

போனி எலிசபெத் பார்க்கர் அக்டோபர் 1, 1910 அன்று டெக்சாஸின் ரோவெனாவில் எம்மா மற்றும் சார்லஸ் பார்க்கருக்கு பிறந்தார். அவருக்கு ஒரு மூத்த சகோதரரும் ஒரு தங்கையும் இருந்தனர். அவளுக்கு வெறும் 4 வயதாக இருந்தபோது, ​​அவரது தந்தை காலமானார், அவரது தாயார் குடும்பத்தை டன்னஸின் ஏழ்மையான புறநகர்ப் பகுதிக்கு சிமென்ட் சிட்டி என்று அழைத்தார், இது போனியின் தாத்தா பாட்டிகளுடன் வாழ. போனி அங்குள்ள உள்ளூர் பள்ளிகளில் பயின்றார் மற்றும் கவிதை மற்றும் இலக்கியத்தில் மிகுந்த ஆர்வம் காட்டிய ஒரு பிரகாசமான மாணவி, தனது படிப்பில் க ors ரவங்களைப் பெற்றார். ஒரு தீர்மானகரமான குறைவான அந்தஸ்தும், விதிவிலக்காக அழகாக இருக்க வேண்டும் என்று நினைத்தவள், அவளுக்கு ஒரு நடிகையாக வேண்டும் என்ற கனவுகள் இருந்தன, அவளுடைய இளமை பருவத்தில் அவள் பின்பற்றும் குற்றவியல் பாதையின் அறிகுறிகள் எதுவும் இல்லை.


தனது உயர்நிலைப் பள்ளியின் இரண்டாம் ஆண்டில், போனி வகுப்புத் தோழர் ராய் தோர்ன்டனுடன் தொடர்பு கொண்டார். செப்டம்பர் 1926 இல், போனியின் 16 வது பிறந்தநாளுக்கு சில நாட்களுக்கு முன்பு, அவர்கள் திருமணம் செய்து கொண்டனர், போனி அவர்களின் காதல் கொண்டாடும் பொருட்டு தனது வலது தொடையில் தங்கள் பெயர்களை பச்சை குத்தியுள்ளார். இருப்பினும், அவர்களது திருமணம் ஒரு கொந்தளிப்பானது, இருப்பினும், தோர்ன்டன் உடல் ரீதியாக துஷ்பிரயோகம் செய்வதை நிரூபித்தார். தம்பதியினர் ஒருபோதும் விவாகரத்து செய்யவில்லை என்றாலும், தொழிற்சங்கம் விரைவில் பிரிந்தது. 1929 ஆம் ஆண்டில், கொள்ளை குற்றத்திற்காக தோர்ன்டனுக்கு ஐந்து ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது, மேலும் போனி தனது பாட்டியுடன் சென்றார். அவளும் தோர்ன்டனும் ஒருவரையொருவர் மீண்டும் பார்த்ததில்லை.


.போனி மற்றும் க்ளைட்

போனி பார்க்கர் முதன்முதலில் க்ளைட் பாரோவை ஒரு பரஸ்பர நண்பர் மூலம் ஜனவரி 1930 இல் சந்தித்தார், அப்போது போனி 19 வயதாக இருந்தார். 20 வயதான பாரோ, ஒரு கொந்தளிப்பான சிறைக்கு செல்ல விரும்பாத குற்றவாளி 


. அடுத்த வாரங்களில் ஒன்றாக அதிக நேரம் செலவழித்த பின்னர், கிளைட் கைது செய்யப்பட்டு, கார் திருட்டு தொடர்பான பல குற்றவியல் குற்றச்சாட்டுகளுக்கு தண்டனை பெற்றபோது அவர்களின் வளர்ந்து வரும் காதல் தடைபட்டது. சிறையில் திரும்பியதும், கிளைட்டின் எண்ணங்கள் உடனடியாக தப்பிக்கத் திரும்பின. இந்த நேரத்தில், அவரும் போனியும் ஆழ்ந்த காதலில் விழுந்தனர், மேலும் கிளைட் மன வேதனையால் முந்தப்பட்டார். அவரது உணர்ச்சிகளைப் பகிர்ந்துகொள்வது, தனது தாயின் சொல்லை மீறி ,  அன்பான போனி, தனது ஆத்ம தோழன் என்று அழைக்கப்பட்டவருக்கு உதவ தயாராக . இருந்தார், மேலும் அவர் குற்றம் சாட்டப்பட்ட உடனேயே அவர் அவருக்காக சிறைக்குள் துப்பாக்கியைக் கடத்தினார்.


மார்ச் 11, 1930 இல், க்ளைட் தனது செல்மேட்களுடன் தப்பிக்க ஆயுதத்தைப் பயன்படுத்தினார், ஆனால் அவர்கள் ஒரு வாரம் கழித்து கைப்பற்றப்பட்டனர். கிளைட் பின்னர் 14 ஆண்டுகள் கடின உழைப்புக்கு தண்டனை பெற்றார், இறுதியில் ஈஸ்ட்ஹாம் ஸ்டேட் ஃபார்முக்கு மாற்றப்பட்டார், அங்கு அவர் மற்றொரு கைதியால் பலமுறை பாலியல் வன்கொடுமைக்கு ஆளானார். பிப்ரவரி 1932 இல், கிளைட் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டார், அவரது தாயார் தனது வழக்கில் நீதிபதியை வெற்றிகரமாக பரோல் வழங்குமாறு சமாதானப்படுத்தினார். (அவரது உடனடி விடுதலையை அறியாமல், ஈஸ்டாமின் கடுமையான ஆட்சியில் இருந்து விடுபடுவார் என்ற நம்பிக்கையில், கிளைட் தனது பெருவிரல் மற்றும் மற்றொரு கால்விரலின் ஒரு பகுதியை ஒரு 'விபத்தில்' சில நாட்களுக்கு முன்பு துண்டித்துவிட்டார். அவர் ஒரு நிரந்தர மூட்டுடன் நடந்து செல்வார் . அவரும் போனியும் மீண்டும் ஒன்றிணைந்தனர், மேலும் க்ளைட் ஒரு சிறிய குழுவினருடன் ஒரு குற்றச் செயலைத் தொடங்கினார், வங்கிகள் மற்றும் சிறு வணிகங்களைக் கொள்ளையடித்தார்.



ஏப்ரல் மாதத்தில் போனி கும்பலில் சேர்ந்தார், ஆனால் தோல்வியுற்ற கொள்ளை முயற்சியின் போது பிடிக்கப்பட்டு இரண்டு மாதங்கள் சிறையில் அடைக்கப்பட்டார். அவர் சோதனைக்காகக் காத்திருந்தபோது, ​​அவர் கவிதை எழுதுவதன் மூலம் காலத்தைக் கடந்து சென்றார், அவற்றில் பெரும்பாலானவை கிளைடுடனான தனது உறவைக் குறிப்பிட்டன. பின்னர் கண்டுபிடிக்கப்பட்ட எழுத்துக்களின் தொகுப்பில் 'தி டிரெயில்ஸ் எண்ட்' உள்ளது, அதன் கடைசி சரணம் அவர்களின் தலைவிதியை முன்னறிவிப்பதாகத் தெரிகிறது: 'சில நாள் அவர்கள் ஒன்றாகச் செல்வார்கள் / மேலும் அவர்கள் அருகருகே புதைப்பார்கள் / சிலருக்கு அது வருத்தமாக இருக்கும் / சட்டத்திற்கு ஒரு நிவாரணம் / ஆனால் இது போனி மற்றும் கிளைட்டுக்கு மரணம். '



.One half of the notorious Bonnie and Clyde duo, Bonnie Parker became one of America's most famous outlaws during the 1930s.

Who Was Bonnie Parker? After meeting Clyde Barrow in 1930, Bonnie Parker eventually entered a world of crime. Robbing banks and small businesses with her partner and affiliated gang, she became one of America's most infamous outlaws of the 1930s. Their almost two-year crime spree spanned several states, with the gang responsible for the murder of several people that included law enforcement officials. Bonnie and Clyde were killed in a police ambush in a stretch of highway in Louisiana on May 23, 1934.

Early Life

Bonnie Elizabeth Parker was born on October 1, 1910, in Rowena, Texas, to Emma and Charles Parker. She had an older brother and a younger sister. When she was just 4 years old, her father passed away and her mother moved the family to an impoverished suburb of Dallas known as Cement City to live with Bonnie's grandparents. Bonnie attended the local schools there and was a bright student who showed a keen interest in poetry and literature, earning honors in her studies. Of a decidedly diminutive stature and thought to be exceptionally pretty, she had dreams of becoming an actress, and in her youth there were no signs of the criminal path that she would follow. 

During her second year of high school, Bonnie became involved with classmate Roy Thornton. In September 1926, just days before Bonnie's 16th birthday, they were married, with Bonnie having gotten a tattoo of their names on her right thigh to celebrate their romance. However, their marriage was a tumultuous one, however, with Thornton proving to be physically abusive. The union soon fell apart, though the couple never divorced. In 1929, Thornton was sentenced to a five-year prison sentence for robbery, and Bonnie moved in with her grandmother. She and Thornton never saw each other again..


Bonnie and Clyde

Bonnie Parker first met Clyde Barrow through a mutual friend in January 1930, when Bonnie was 19 years old. Barrow, who was 20, was a volatile ex-con and a wanted man who had vowed that he would never go back to prison. After spending much time together during the following weeks, their budding romance was interrupted when Clyde was arrested and convicted of several criminal charges pertaining to auto theft.Once back in prison, Clyde's thoughts immediately turned to escape. By this time, he and Bonnie had fallen deeply in love, and Clyde was overtaken by heartache. Sharing his sentiments, much to the dismay of her mother, a lovesick Bonnie was more than willing to help the man she called her soulmate, and soon after his conviction she smuggled a gun into the prison for him. 


On March 11, 1930, Clyde used the weapon to escape with his cellmates, but they were captured a week later. Clyde was then sentenced to 14 years of hard labor, eventually being transferred to Eastham State Farm, where he was repeatedly sexually assaulted by another inmate. In February 1932, Clyde was released from prison when his mother successfully convinced the judge in his case to grant him parole. (Not knowing of his imminent release and hoping to be relieved from Eastham's harsh regime, Clyde had his big toe and part of another toe cut off in an "accident" just days before. He would walk with a permanent limp and be forced to drive in his socks.) He and Bonnie reunited, and Clyde embarked on a crime spree with a small group of men, robbing banks and small businesses. 

.

Bonnie joined the gang in April, but was captured during a failed robbery attempt and imprisoned for two months. While she awaited trial, she passed the time by writing poetry, much of which chronicled her relationship with Clyde. Among Bonnie's collection of later found writings is "The Trail's End," whose last stanza seems to foretell their fate: "Some day they'll go down together / And they'll bury them side by side / To few it'll be grief / to the law a relief / but it's death for Bonnie and Clyde."  

.

Sunday, 24 May 2020

Douglas Elton Fairbanks SILENT FILM HOLLYWOOD BORN 1883 MAY 23 -1939 DECEMBER 12


Douglas Elton Fairbanks

SILENT FILM HOLLYWOOD BORN 1883 MAY 23 -1939 DECEMBER 12



.டக்ளஸ் ஃபேர் பேங்க்ஸ் - ஹாலிவுட் பேசா பட யுகத்தின் அரசன்

உலக சினிமா உலக வரலாறு
நடிகவேள் எம்.ஆர்.ராதாவை தமிழகத்தின் டக்ளஸ் என்று அழைப்பதுண்டு. யார் அந்த டக்ளஸ் என்று பலருக்குள்ளும் ஒரு கேள்வி எழுந்திருக்கக்கூடும். அது 1920. வாரன் ஜி.ஹார்டிங் அமெரிக்காவின் ஜனாதிபதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார். மது விலக்கு அங்கு முழு வீச்சில் அமலாகியிருக்கிறது. 19-வது சட்டத்திருத்தத்தின் மூலம் பெண்களுக்கு வாக்களிக்கும் உரிமை வந்துசேர்ந்திருந்தது. அமெரிக்காவின் முதல் வர்த்தக ரீதியிலான வானொலி நிலையம் காற்றில் தனது அலைவரிசையை முதன்முதலில் பரப்பத் துவங்கியிருந்தது. இந்தச் சூழலில்தான் பேசாப்படம் தனது உச்சக்கட்டப் புகழில் மக்களிடையே ஒருவிதக் கலைக் காய்ச்சலையே உண்டுபண்ணியிருந்தது.

Douglas Fairbanksபழைய நாடக இசை அரங்குகள் சில எஞ்சியிருந்த போதும், புதிய சினிமா மாளிகைகள் மிகுந்த எழுச்சியோடு உதயமாகத் தொடங்கின. முழுமையான மேற்கத்திய இசைக் குழுக்களின் வீரியமிக்க இசையுடனான அமெரிக்காவின் சினிமா முழு வீச்சில் மக்களிடையே பிரபலமாகி விட்டது. தங்களின் சினிமா நாயக-நாயகிகளின் மீதான வெறித்தனமான ஈடுபாடு ரசிகர்களை நோய்போலத் தொற்றிக் கொண்டு ஆட்டிப் படைத்தது. அதிலும் குறிப்பாக ஒரே ஒரு மனிதர் அமெரிக்கப் பேசாப்பட யுகத்தின் சக்கரவர்த்தியாக-பேரரசனாகவே கொடிகட்டிப் பறந்தார்.
‘அவர் பெயரை உச்சரித்த மாத்திரத்திலேயே பெண் ரசிகைகளுக்கு கிறக்கம் வந்துவிடுகிறது’ என்று அன்றையப் பத்திரிகைகள் எழுதின. அவரின் காதல் சாகச நடிப்பும் வீரத்தனமான வெளிப்பாடும் ஆண்களையும் அவரின் ரசிகர்களாக்கி விட்டனவாம். அவர்தான் ஹாலிவுட் பேசாப் படயுகத்தின் மன்னன் எனப் போற்றப்படும் டக்ளஸ் ஃபேர்பாங்க்ஸ்.

டக்ளஸ் 1883-ஆம் ஆண்டு மே 23 அன்று அமெரிக்காவின் கொலொராடோவிலுள்ள டென்வர் எனுமிடத்தில் ஹெசக்கியா சார்லஸ் உல்மான் என்பவரின் மகனாகப் பிறந்தார். உல்மான் நியூயார்க்கின் புகழ்மிக்க வழக்கறிஞராக இருந்தவர். சுரங்கத் தொழிலில் ஆர்வமிக்கவர். தாயார் எல்லா அடிலெய்டு மார்ஷ் வீக் ஒரு பேரழகி.

டக்ளஸ் தந்தை உல்மானுக்கு ஏற்கெனவே திருமணமாகி, குழந்தைகள் இருந்தன. எல்லா அவருக்கு முன்பே அறிமுகமாகியிருந்தவர். எல்லாவின் முதல் கணவர் டி.பி.நோயால் இறந்துவிட, அவரின்
சட்டப்பூர்வ உரிமைகளை எல்லாவுக்கு உல்மான் பெற்றுத் தந்தார்.
அதன் பிறகு எல்லா அட்லாண்டா சென்று அங்கு நீதிபதியாக இருந்த எட்வர்ட் வில்காக்ஸ் என்பவரைத் திருமணம் செய்து கொண்டார். அவரோ எல்லாவைக் கொடுமைப்படுத்தி, தவறாக நடத்தத் தலைப்பட்டார். 1870களில் சட்டப்பூர்வ மணமுறிவு அபூர்வமாகவே வழங்கப்பட்டு வந்த நிலையில் உல்மான் தனது வாதத் திறமையால் எல்லாவுக்கு விவாகரத்து பெற்றுத்தந்தார். வழக்கில் வெற்றிபெற்ற அதே நேரத்தில் எல்லாவின் இதயத்தையும் வென்றவராக ஆகிவிட்டார் உல்மான். அது இருவரையும் தம்பதி களாக்கியது. 1881-ல் அவர்களுக்கு ராபர்ட் எனும் மகனும், 1883-ல் டக்ளசும் பிறந்தனர்.


உல்மான் நாடக ரசிகராக இருந்தார். அடிக்கடி நாடகங் களுக்குத் தன் மகன்களை அழைத்துச் செல்வார். மேடைக்குப் பின்னால் சென்று நாடக நட்சத்திரங்களோடு உரையாடுவார். ஊர் ஊராகச் சென்று கொண்டிருக்கும் அந்த நாளைய நாடகக்குழுக்களை அழைத்துத் தன் வீட்டில் தங்க வைத்து, விருந்து கொடுக்கிற ஆர்வமும் உல்மானிடம் இருந்தது. இதனால் கலை ஆர்வம் டக்ளசுக்கு இயல்பாகவே தொற்றிக் கொண்டது. ஷேக்ஸ்பியரின் நாடக வரிகளை மனப்பாடமாக ஒப்புவிக்க டக்ளசுக்கு அதிக சிரமம் ஏற்படவில்லை. எதிர்கால ஹாலிவுட்டின் அசல் அரசன் இவ்வாறு உருவாகத் தொடங்கினான்.

டக்ளஸ் தனது தந்தையுடன் மலையேறுவது வழக்கமானது. அவரது குழந்தைப் பருவம் பல வகைகளிலும் மகிழ்ச்சிகரமாகத்தான் சென்றது. ஆனால் அவரது தந்தை உல்மான் குடிப்பழக்கத்துக்கு அடிமை யானார். தொழிலில் பெரும் சரிவு ஏற்பட்டது. குடும்பத்தை விட்டுப் பிரிந்துபோக நேர்ந்தது.

டக்ளசுக்கு ஐந்து வயதுதான் முடிந்திருந்தது. அதற்குள் அவரது வாழ்க்கையில் இவ்வளவும் நடந்து முடிந்துவிட்டது. என்ன நடந்தாலும் டக்ளசிடம் அவரது தந்தையால் ஏற்பட்ட கலைத் தாகம் மட்டும் குறைத்து மதிப்பிடத்தக்கதாக இல்லை. அதன் காரணமாக டக்ளஸ் நடிப்புத் துறையைத் தேர்ந்தெடுத்தார். சமூகத்தில் உயர்ந்த அந்தஸ்து பெற்று அரசர்களோடும், அரசியரோடும், அதிபர்களோடும் தோளோடு தோள் உரசும் பெரு விருப்பம் அவரைக் கவ்வியிருந்தது.

தாயின் சிறகுக் கதகதப்பிலேயே அந்தப் பிள்ளைகள் வளர்ந்தன. தந்தை உல்மான் பிரிந்து போனபின் எல்லா அந்தக் குழந்தைகளை பெரும் பாடுபட்டு வளர்த்தார். எல்லாவின் முதல் கணவனுக்குப் பிறந்த ஜான் ஃபேர்பாங்க்ஸ் மற்றும் டக்ளஸின் அண்ணன் ராபர்ட் மற்றும் டக்ளஸ் ஆகியோர் மிகுந்த சிரமத்திற்கிடையிலும் நன்கு வளர்ந்தனர். தனது மூத்த கணவரின் கௌரவமிக்கதாகக் கருதப்பட்ட ஃபேர் பாங்க்ஸ் எனும் குடும்பப் பெயரையே எல்லா தன் மற்ற இரு குழந்தை களின் பெயர்களோடும் சேர்த்தார். டக்ளஸ் எல்டன் தாமஸ் உல்மான் ‘டக்ளஸ் ஃபேர்பாங்க்ஸ்’ ஆனார்.


டக்ளஸ் தனது 11 வயதில் மேடையேறத் தொடங்கினார். பிரபலமாக இருந்த எலிட்ச் கார்டன்ஸ் தியேட்டரில் தனது பதின் பருவத்தில் டக்ளஸ் தனது உணர்ச்சிப் பூர்வமான நடிப்பால் முக்கிய கவனம் பெற்றார். ஒரு நடிகராக நல்ல வரவேற்பைப் பெற்ற டக்ளஸ் அதனால் தனது உயர்நிலைப்பள்ளிப் படிப்பைக் கை கழுவ நேர்ந்தது. அதற்காக அவர் எந்தக் கவலையும் படவில்லை.

1900 ல் அவர் நியூயார்க் சென்றார். அங்கு 1902 ல் பிராட்வே நாடக அரங்கில் தனது முதல் தடம் பதிக்கிற வரையில் வயிற்றுப் பிழைப்பிற் காகக் கால்நடைகளை ஓரிடத்திலிருந்து இன்னோர் இடத்திற்குக் கொண்டு செல்லும் கூலியாகவும், வால் ஸ்டிரீட்டில் குமாஸ்தாவாகவும் கிடைக்கிற வேலைகளையெல்லாம் செய்ய நேர்ந்தது. பிரடெரிக் வார்ட் கம்பெனி தயாரித்த ‘தி டியூக்ஸ் ஜெஸ்டர்’ அவருக்குப் பெயர் வாங்கித் தந்த முதல் நாடகமானது. டக்ளஸ் லட்சியப்பூர்வ மாக உழைத்தார், நடிப்பின் உன்னத உயரங்களைத் தொடுமளவு கடுமையாக உழைத்தார். இருப்பினும், உண்மையி லேயே ஒரு இமாலய வெற்றி அவரை வந்தடைய நீண்ட காலம் பிடித்தது.

1907 ல் அன்னா பெத் சல்லி என்ற அழகிய மங்கையை டக்ளஸ் மணந்தார். ‘பருத்தி அரசர்’ எனப் புகழ் பெற்றிருந்த பெரிய தொழிலதிபர் டேனியல் சல்லி யின் அன்பு மகள் அன்னா. டேனியல் தன் மருமகனை நாடகத்தை விட்டு விட்டுத் தன்னோடு தொழிலுக்கு வந்து விடும்படி வேண்டினார். டக்ளஸ் மறுத்தார். ஆனால், வறுமை காரணமாக பின்னர் புச்சானன் சோப் கம்பெனி அலுவலக வேலைக்கு அவர் போக நேர்ந்தது. அதுவும் நீடிக்கவில்லை. 6 மாதங்களில் டக்ளஸ் மீண்டும் பிராட்வே நாடக அரங்கம் நோக்கித் திரும்பினார்.

1909 டிசம்பர் 9 அன்று டக்ளஸ் மனைவி ஒரு ஆண் குழந்தையைப் பெற்றெடுத்தார். அந்தக் குழந்தைக்கு டக்ளஸ் பெயரே சூட்டப்பட்டது. பின்னாளில் அந்தக் குழந்தையும் டக்ளஸ் போலவே ஜுனியர் டக்ளஸ் என்ற பெயரில் பெரிய நடிகனானது தனிக் கதை. டக்ளஸ் தனது நாடக வருவாயில் குடும்பத்தை நடத்துவதற்கே மிகவும் சிரமப்பட்டார். அமைதியாக ஓடக்கூடிய சலனப்படம் எனும் அன்றைய சினிமாவின் மீது டக்ளஸ் உள்ளிட்ட நாடகக் கலைஞர்களுக்கு ஒரு விதப் பரிகாசப் பார்வைதான் இருந்தது.


1914-ல் ஒரு மிகப் பெரிய அதிர்ஷ்டம் அவரின் வீட்டுக் கதவைத் தட்டியது. டிரை ஆங்கிள் ஃபிலிம் கார்ப்பரேஷன் எனும் சினிமா நிறுவனம் அவருக்கு அப்போதே ஒரு லட்சத்து 4 ஆயிரம் டாலர் சம்பளமாகத் தந்து தனது சினிமாவில் நடிக்க அழைத்தது. டக்ளஸ் எனும் அந்த நாடகக் கலை மேதை என்ன செய்தார் தெரியுமா?

அன்றைய நிலையில், நாடகம்தான் மிகச்சிறந்த கலை எனும் எண்ணமும், பெருமிதமும் ஓங்கியிருந்த சூழலில் டக்ளஸ் தனக்கு வந்த வாய்ப்பை மறுத்தார். அவர் சொன்னார்: “இது மிகப்பெரிய தொகைதான் என்று எனக்கும் தெரிகிறது. ஆனாலும் என்னை சினிமாவில் அல்லவா நடிக்க அழைக்கிறீர்கள்?” - சினிமாவை அன்று எவ்வளவு கேவலமாகப் பார்த்திருக்கிறார்கள் பாருங்கள்!

1915-இல் நிலைமை கொஞ்சம் மாறியிருந்தது. டக்ளஸ் விருப்பமில்லாத ஒரு விருந்தாளிபோல ஹாலிவுட் போய்ச் சேர்ந்தார். அதற்குள் நாடகத்துறையில் நடிப்பில் புலமை பெற்று, புகழ்பெற்ற கலைஞராகிவிட்டிருந்தார் டக்ளஸ். அப்போது அவருக்கு வயது 31.

டி.டபிள்யூ. கிரிஃபித் என்ற நம்பிக்கை வறட்சி கொண்ட ஒரு நபரின் பாதுகாப்பில் அவர் வேலை செய்ய நேர்ந்தது. டக்ளஸ் பற்றி அந்த நபர் இப்படிச் சொன்னார். “இவர் தலை ஒரு பூசணிக்காய் மாதிரி இருக்கிறது, இவரால் நடிக்க முடியாது”. இப்படிப்பட்ட எத்தனை யோ தடைகள் வந்த போதிலும் டக்ளஸ் தனது விடாமுயற்சியின் பயனாக பேசாப் படயுகத்தின் முன்னணி நகைச்சுவை நடிகர்களுள் ஒருவராக உயர்ந்து காட்டி னார். அன்று அவரைப்போலவே முன்னணி நகைச்சுவை நடிகர்களாக பஸ்டர் கீடன், ஹெரால்டு லாய்ட் மற்றும் டக்ளசின் ஆப்த நண்பர் சார்லி சாப்ளின் ஆகியோர் இருந்தனர்.

அவருடைய முதல் 26 படங்கள் காதல் முதல் முறைகேடுகள் வரை அனைத்து விதமான மேற்குலக சமுதாயப் போக்கு களையும் பகடி செய்யும் நகைச்சுவைப் படங்களாக இருந்தன.

1916-ல் தனது புகழின் உச்சத்திலிருந்த டக்ளஸ் ஃபேர் பாங்க்ஸ் சொந்தமாக திரைப்படங்களைத் தயாரிக்க எண்ணி ஒரு புதிய நிறுவனத்தைத் தொடங்கினார். புனைபெயரில் அவரே அடிக்கடி சினிமா வுக்குக் கதைகள் எழுதினார். முதல் உலகப் போரின்போது மனம் பதைத்திருந்த மக்களுக்கு தொடர்ந்து வெளிவந்த டக்ளசின் படங்களால் கவலை மறந்து சிரிக்க முடிந்தது.

Douglas Fairbanks and Danielleயுத்த வீரர்களுக்கு மக்களின் உற்சாக ஆதரவு வேண்டி டக்ளஸ் பிரச்சாரம் செய்தார். செஞ்சிலுவைச் சங்கத்திற்காகவும் அமெரிக்கா மற்றும் கனடா நாடுகளின் விடுதலை மற்றும் வெற்றிக்காகவும் சார்லி சாப்ளினை இணைத்துக் கொண்டு நிதி திரட்டும் பொருட்டு யுத்தப் பத்திரங்களை விற்பனை செய்யும் பயணத்தை 1918 ல் மேற்கொண்டார். அந்தச் சமயத்தில்தான் ‘அமெரிக்காவின் இனிய இதயம்’ எனப் புகழப் பட்ட முன்னணி நடிகையான மேரி பிக்ஃபோர்டு உடன் அவருக்கு இரகசியக் காதல் பிறந்தது. மேரி இப்போது டக்ளசின் இனிய இதயமா னார். அவரின் மனைவி பெத் இதனைக் கேள்விப்பட்டு நீதி மன்றத்தில் விவாகரத்து வழக்கு தாக்கல் செய்தார்.

மேரிக்கும் ஏற்கெனவே திருமணம் ஆகியிருந்தது. இந்தச் சமயத்தில் டக்ளஸ் தன்முன்னேற்ற நூல்கள் பலவற்றை எழுதி வெளியிட்டார். பத்திரிகைகளில் ஏராளமான சிறுகதைகளையும், கட்டுரைகளையும் எழுதினார். எல்டன் தாமஸ் எனும் தனது தந்தையின் நினைவாக, அந்தப் பெயரிலேயே நிறைய திரைக்கதைகளை எழுதினார். அவரது எழுத்துக்கள் மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றன. மிகச்சிறந்த படைப்பாளியாக அவை அவரை அடையாளம் காட்டின.

சினிமாத் துறையிலும் அவர் தன்னை ஒரு முக்கியமானவராக நிலைநிறுத்திக் கொண்டார். 1919 ல் தனது காதலி மேரி பிக் ஃபோர்டு, சார்லி சாப்ளின் மற்றும் தனக்கு முதலில் அடைக்கலம் தந்து, தன் மீது அவநம்பிக்கையும் கொண்டிருந்த டி.டபிள்யூ. கிரிஃபித் ஆகியோருடன் இணைந்து ஐக்கிய கலைஞர்கள் கழகத்தை நிறுவினார். அதன் நோக்கம் சொந்தப்படம் எடுக்கும் கலைஞர்களுக்கு விநியோகத்தில் உதவுவது என்பதாக இருந்தது.

மேரியும், டக்ளசும் தங்களது முதல் திருமண பந்தங்களை சட்டப் படி முறித்துக் கொண்டு இணைய 1920-இல் முடிவெடுத்தனர். மேரி பிக்ஃபோர்டு - டக்ளஸ் ஃபேர் பாங்க்ஸ் திருமணம் அமெரிக்கா முழுவதும் சிலிர்ப்பூட்டும் நிகழ்வானது. அந்த இருவரையும் நேசிக்கும் ரசிகர்கள் அந்தத் திருமணநாளைத் தங்களது திருவிழாபோல எண்ணி மகிழ்ந்து போனார்கள்.

மேரிக்காக அழகிய பிவர்லி மலைப்பிரதேசத்தில் டக்ளஸ் ஒரு மாளிகையை வாங்கினார். அதை மேலும் அழகுறச் செப்பனிட்டார். அதைப் பத்திரிகை நிருபர் ஒருவர் ‘Pick fair’ என்று இருவர் பெயரையும் இணைத்துப் பெயர் சூட்டி அழைத்தார். அமெரிக்க ரசிகர்களின் இதயங்களில் தங்களின் மதிப்புமிகு அரண் மனையானது அந்தப் பிக் ஃபேர். அதற்கு அடுத்த இடத்திற்குத் தள்ளப்பட்டு, தன் முக்கியத்துவத்தை இழக்கிற நிலைக்குப்போனது வெள்ளை மாளிகை. டக்ளஸ் மீது அமெரிக்க மக்கள் வைத்திருந்த அளப்பரிய அன்பு அத்தகையதாக இருந்தது. டக்ளஸ் நகைச்சுவை வேடங்களிலிருந்து வரலாற்று நாயகர்கள் வேடங்களை ஏற்கத் தொடங்கினார். மிடுக்கும், கம்பீரமும், நுட்பம் நிறைந்த நடிப்பும் அவருக்கு எந்தப் பாத்திரத்திலும் வெற்றியையே பெற்றுத் தந்தது.

தனது 44வது வயதில், 1927 ஆம் ஆண்டு தனது நீண்ட, அனுபவ மிக்க நடிப்புக் கலைக்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்க எண்ணினார் டக்ளஸ். இனி, வயதான காலத்தில் எப்படி மாவீரனாக வந்து சண்டை-சாகசங்கள் செய்வது என எண்ணினார். ஆனாலும் அவர் தன் கலைப் பயணத்தை நிறுத்திக் கொள்ள விரும்பவில்லை. சலனப்படக் கலை மற்றும் அறிவியல் அகாடமியை நிறுவினார். அதன் முதல் தலைவராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

கிராமானின் சீன நாடக அரங்கை ஹாலிவுட்டில் திறக்கிற பணியில் பிரதான பங்கு வகித்தார். அது உலகின் முன்னணி சினிமா மாளிகையானது. மரபார்ந்த வழக்கப்படி டக்ளசும், மேரியும் தங்களது கை மற்றும் கால்களை அந்த மாளிகை முகப்பில் உலராமல் இருந்த சிமெண்ட்டில் பதித்துப் பெருமை சேர்த்தனர். முதல் அகாடமி விருதுகள் 1929 ல் வழங்கப்பட்டன.

ஒரு தலைமுறைக்கும் அதிகமான காலம் டக்ளசும், மேரியும் ஹாலி வுட்டின் அரசனாகவும், அரசியாகவும் கலை ஆட்சி புரிந்தனர். அவர் கள் காலத்திய மிக முக்கியமான படங்களை அவர்களே தந்தனர். இருந்தபோதும் அவர்கள் இருவரும் சேர்ந்து ஒரு படத்தைக்கூட உருவாக்கியதில்லை. ஷேக்ஸ்பியரின் கதையொன்றை வைத்து 1929 ல் அப்படியொரு முயற்சி செய்த அவர்கள் அந்தப்படம் தந்த தோல்வி யால், ஒருவர் மீது ஒருவர் புகார் செய்யத் தொடங்கினர். மேரி குடிக்கு அடிமையானார். இருவரிடையே கசப்பு முதன்முதலாக ஏற்பட்டு அது விரிசலாக விரிந்தது.

30 களின் ஆரம்ப நாட்களில் ஹாலிவுட் முற்றிலுமாக மாறியிருந்தது. புதுமுகங்கள் ஏராளமாக திரையில் உருவாகியிருந்தனர், டக்ளஸ் மகன் ஜுனியர் டக்ளஸ் உள்பட. 1931-இல் சினிமா தொழிலின் புதிய மனிதா பிமானமற்ற போக்கைப் பிடிக்காத டக்ளஸ் தொலைதூரப் பயணங்களை மேற்கொள்ளத் துவங்கினார். அது ஆவணப் படமாக-‘80 நிமிடங்களில் உலகைச் சுற்றி’ (Around the world in 80 minutes) என்ற பெயரில் 1931 ல் வெளியானது.

1933-ல் டக்ளசும், மேரியும் சினிமாவிலிருந்து விலகிக் கொள்வதாக அறிவித்தனர். அதோடு அவர்கள் தங்கள் காதல் மணவாழ்விலிருந்தும் பிரிந்தனர். பின்பும் 1934-ல் இறுதியாக ஒரு படத்தை டக்ளஸ் எடுத்தார்.

1939-ல் மீண்டும் ஒரு சினிமா சிந்தனை வந்து, கதையை எழுதத் துவங்கினார். ஆனால், அது முடிவுறுமுன்பே, அவரின் வாழ்க்கை ஒரு முடிவுக்கு வந்துவிட்டது. டிசம்பர் 12, 1939 அன்று டக்ளஸ் ஃபேர் பாங்க்ஸ் எனும் அந்த பேசாப்பட உலகின் அரசன் உண்மையிலேயே பேசாது போய்விட்டான். தூக்கத்திலேயே டக்ளஸ் உயிர் பிரியும்போது அவருக்கு 56 வயதே முடிந்திருந்தது.

தமிழில் ஈடிணையற்ற நடிகவேள் எம்.ஆர். ராதாவை தென்னாட் டின் டக்ளஸ் என்று அழைப்பதுண்டு என்று பார்த்தோம். டக்ளசின் நாடகத்தின் மீதான காதல் போன்றதே நமது நடிகவேளின் நாடக ஈடுபாடும். டக்ளஸ் வெளிப்படுத்திய நவரச நடிப்பும் ராதாவின் நடிப்பும் பல வகைகளிலும் ஒத்தமைந்திருந்தன. டக்ளஸ் பல ஆண்டுகளுக்கு முன்னர், பேசாப்பட காலத்தைச் சார்ந்தவர் என்ற போதிலும் நடிகவேள் எம்.ஆர்.ராதாவுக்கு ‘தென்னகத்தின் டக்ளஸ்’ என்ற பெயர் பொருத்தமானதாகவே நிலைத்து விட்டது.

நடிகராக, திரைக்கதை ஆசிரியராக, இயக்குநராக, தயாரிப்பாளராக சாகசங்கள் ததும்பி வழிந்த வாழ்க்கை டக்ளசுடையது. சினிமாவின் துவக்க காலத்திலேயே அதன் ஆன்மாவைப் புரிந்துகொண்டு, அதற் கொரு உன்னத சிம்மாசனத்தைப் பெற்றுத்தந்த டக்ளஸ் எனும் அந்தக் கலைஞன் உலக சினிமா வரலாற்றில் என்றும் ஒளி வீசும் ஒரு தாரகைதான்!


Douglas Elton Fairbanks[1] (born Douglas Elton Thomas Ullman; May 23, 1883 – December 12, 1939) was an American actor, screenwriter, director, and producer.[2] He was best known for his swashbuckling roles in silent films including The Thief of Bagdad, Robin Hood, and The Mark of Zorro, but spent the early part of his career making comedies.

Fairbanks was a founding member of United Artists. He was also a founding member of The Motion Picture Academy and hosted the 1st Academy Awards in 1929. With his marriage to actress and film producer Mary Pickford in 1920, the couple became 'Hollywood royalty', and Fairbanks was referred to as "The King of Hollywood",[3] a nickname later passed on to actor Clark Gable.

Though widely considered as one of the biggest stars in Hollywood during the 1910s and 1920s, Fairbanks' career rapidly declined with the advent of the "talkies". His final film was The Private Life of Don Juan (1934).

Early life
Fairbanks was born Douglas Elton Thomas Ullman (spelled "Ulman" by Douglas Fairbanks Jr. in his memoirs) in Denver, Colorado, the son of Hezekiah Charles Ullman (September 15, 1833 – February 23, 1915) and Ella Adelaide (née Marsh; 1847–1915). He had two half-brothers, John Fairbanks, Jr. (born 1873) and Norris Wilcox (February 20, 1876 – October 21, 1946),[4] and a full brother, Robert Payne Ullman (March 13, 1882 – February 22, 1948). His father was born in Berrysburg, Pennsylvania, and raised in Williamsport. He was the fourth child in a Jewish family consisting of six sons and four daughters. Charles' parents, Lazarus Ullman and Lydia Abrahams, had immigrated to the U.S. in 1830 from Baden, Germany.

When he was 17, Charles started a small publishing business in Philadelphia. Two years later, he left for New York to study law.

Charles met Ella Adelaide Marsh after she married his friend and client John Fairbanks, a wealthy New Orleans sugar mill and plantation owner. The couple had a son, John, and shortly thereafter John Senior died of tuberculosis. Ella, born into a wealthy southern Roman Catholic family, was overprotected and knew little of her husband's business. Consequently, she was swindled out of her fortune by her husband's partners. Even the efforts of Charles Ullman, acting on her behalf, failed to regain any of the family fortune for her.[citation needed]

Distraught and lonely, she met and married a courtly Georgian, Edward Wilcox, who turned out to be an alcoholic. After they had another son, Norris, she divorced Wilcox, with Charles acting as her own lawyer in the suit. She soon became romantically involved with Charles, and agreed to move to Denver with him to pursue mining investments. They arrived in Denver in 1881 with her son John. (Norris was left in Georgia with relatives and was never sent for by his mother.) They were married; in 1882 they had a son, Robert, and then a second son, Douglas, a year later. Charles purchased several mining interests in the Rocky Mountains, and re-established his law practice. After hearing of his wife's philandering, he abandoned the family when Douglas was five years old. Douglas and his older brother Robert were brought up by their mother, who gave them the family name Fairbanks, after her first husband.[citation needed]

Career
Early career

Fairbanks in the Broadway production A Case of Frenzied Finance, 1905
Douglas Fairbanks began acting at an early age, in amateur theatre on the Denver stage, performing in summer stock at the Elitch Gardens Theatre, and other productions sponsored by Margaret Fealy, who ran an acting school for young people in Denver.[5] He attended Denver East High School, and was expelled for cutting the wires on the school piano.[5]

He left school in the spring of 1899, at the age of 15.[5] He variously claimed to have attended Colorado School of Mines and Harvard University, but neither claim is true. He went with the acting troupe of Frederick Warde, beginning a cross country tour in September 1899. He toured with Warde for two seasons, functioning in dual roles, both as actor and as the assistant stage manager in his second year with the group.[5]

After two years he moved to New York, where he found his first Broadway role in Her Lord and Master, which premiered in February 1902. He worked in a hardware store and as a clerk in a Wall Street office between acting jobs.[6] His Broadway appearances included the popular A Gentleman from Mississippi in 1908–09. On July 11, 1907, Fairbanks married Anna Beth Sully, the daughter of wealthy industrialist Daniel J. Sully, in Watch Hill, Rhode Island. They had one son, Douglas Fairbanks Jr., also a noted actor. The family moved to Los Angeles in 1915.[citation needed]

Hollywood

D. W. Griffith, Mary Pickford, Charlie Chaplin (seated) and Fairbanks at the signing of the contract establishing United Artists in 1919
After moving to Los Angeles, Fairbanks signed a contract with Triangle Pictures in 1915 and began working under the supervision of D. W. Griffith. His first film was titled The Lamb, in which he debuted the athletic abilities that would gain him wide attention among theatre audiences.[7] His athleticism was not appreciated by Griffith, however, and he was brought to the attention of Anita Loos and John Emerson, who wrote and directed many of his early romantic comedies.

In 1916, Fairbanks established his own company, the Douglas Fairbanks Film Corporation,[8] and would soon get a job at Paramount.[8]



Fairbanks speaking in front of a crowd at a 1918 war bond drive in New York City
Fairbanks met actress Mary Pickford at a party in 1916, and the couple soon began an affair. In 1917, they joined Fairbanks' friend Charlie Chaplin[7] selling war bonds by train across the United States. Pickford and Chaplin were the two highest paid film stars in Hollywood at that time. To curtail these stars' astronomical salaries, the large studios attempted to monopolize distributors and exhibitors. By 1918, Fairbanks was Hollywood's most popular actor,[9] and within three years of his arrival, Fairbanks' popularity and business acumen raised him to the third-highest paid.

In 1917, Fairbanks capitalized on his rising popularity by publishing a self-help book, Laugh and Live which extolled the power of positive thinking and self-confidence in raising one's health, business and social prospects.[10]

To avoid being controlled by the studios and to protect their independence, Fairbanks, Pickford, Chaplin, and D. W. Griffith formed United Artists in 1919, which created their own distributorships and gave them complete artistic control over their films and the profits generated.


The Mark of Zorro

Sully was granted a divorce from Fairbanks in late 1918, the judgment being finalized early the following year. After the divorce, the actor was determined to have Pickford become his wife, but she was still married to actor Owen Moore. Fairbanks finally gave her an ultimatum. She then obtained a rapid divorce in the small Nevada town of Minden on March 2, 1920. Fairbanks leased the Beverly Hills mansion Grayhall and was rumored to have used it during his courtship of Pickford. The couple married on March 28, 1920. Pickford's divorce from Moore was contested by Nevada legislators, however, and the dispute was not settled until 1922. Even though the lawmakers objected to the marriage, the public widely supported the idea of "Everybody's Hero" marrying "America's Sweetheart". That enthusiasm, in fact, extended far beyond the borders of the United States. Later, while honeymooning in Europe, Fairbanks and Pickford were warmly greeted by large crowds in London and Paris. Both internationally and at home, the celebrated couple were regarded as "Hollywood Royalty" and became famous for entertaining at "Pickfair", their Beverly Hills estate.


Fairbanks in the title role in Robin Hood (1922)

By 1920, Fairbanks had completed twenty-nine films (twenty-eight features and one two-reel short), which showcased his ebullient screen persona and athletic ability. By 1920, he had the inspiration of staging a new type of adventure-costume picture, a genre that was then out of favor with the public; Fairbanks had been a comic in his previous films.[3] In The Mark of Zorro, Fairbanks combined his appealing screen persona with the new adventurous costume element. It was a smash success, and parlayed the actor into the rank of superstar. For the remainder of his career in silent films he continued to produce and star in ever more elaborate, impressive costume films, such as The Three Musketeers (1921), Douglas Fairbanks in Robin Hood (1922), The Thief of Bagdad (1924), The Black Pirate (1926), and The Gaucho (1927). Fairbanks spared no expense and effort in these films, which established the standard for all future swashbuckling films.

In 1921, he, Pickford, Chaplin, and others, helped to organize the Motion Picture Fund to assist those in the industry who could not work, or were unable to meet their bills.

During the first ceremony of its type, on April 30, 1927, Fairbanks and Pickford placed their hand and foot prints in wet cement at the newly opened Grauman's Chinese Theatre in Hollywood. (In the classic comedy Blazing Saddles, Harvey Korman's villain character sees Fairbanks' prints at Grauman's and exclaims, "How did he do such fantastic stunts...with such little feet?")

Fairbanks was elected first President of the Motion Picture Academy of Arts and Sciences that same year, and he presented the first Academy Awards at the Roosevelt Hotel. Today, Fairbanks also has a star on the Hollywood Walk of Fame at 7020 Hollywood Boulevard.

Career decline and retirement

Fairbanks in The Private Life of Don Juan, 1934

While Fairbanks had flourished in the silent genre, the restrictions of early sound films dulled his enthusiasm for film-making. His athletic abilities and general health also began to decline at this time, in part due to his years of chain-smoking.[11] On March 29, 1928, at Pickford's bungalow, United Artists brought together Pickford, Fairbanks, Charlie Chaplin, Norma Talmadge, Gloria Swanson, John Barrymore, D.W. Griffith and Dolores del Río to speak on the radio show The Dodge Brothers Hour to prove Fairbanks could meet the challenge of talking movies.[12]

Fairbanks' last silent film was the lavish The Iron Mask (1929), a sequel to the 1921 release The Three Musketeers. The Iron Mask included an introductory prologue spoken by Fairbanks. He and Pickford chose to make their first talkie as a joint venture, playing Petruchio and Kate in Shakespeare's The Taming of the Shrew (1929). This film, and his subsequent sound films, were poorly received by Depression-era audiences. The last film in which he acted was the British production The Private Life of Don Juan (1934), after which he retired from acting.[citation needed]

Fairbanks and Pickford separated in 1933, after he began an affair with Sylvia, Lady Ashley. Pickford had also been seen in the company of a high-profile industrialist. They divorced in 1936, with Pickford keeping the Pickfair estate.[13] Fairbanks and Ashley were married in Paris in March 1936.[14]

He continued to be marginally involved in the film industry and United Artists, but his later years lacked the intense focus of his film years. His health continued to decline. During his final years he lived at 705 Ocean Front (now Pacific Coast Highway) in Santa Monica, California, although much of his time was spent traveling abroad with his third wife, Lady Ashley.

Death
On December 12, 1939, Fairbanks suffered a heart attack. He died later that day at his home in Santa Monica at the age of 56.[15] His last words were reportedly, "I've never felt better."[16] His funeral service was held at the Wee Kirk o' the Heather Church in Glendale's Forest Lawn Memorial Park Cemetery where he was placed in a crypt in the Great Mausoleum.


Fairbanks' tomb at Hollywood Forever Cemetery.

Two years following his death, he was removed from Forest Lawn by his widow, Sylvia, who commissioned an elaborate marble monument for him featuring a long rectangular reflecting pool, raised tomb, and classic Greek architecture in Hollywood Forever Cemetery in Los Angeles.[17] The monument was dedicated in a ceremony held in October 1941, with Fairbanks's close friend Charlie Chaplin reading a remembrance. The remains of his son, Douglas Fairbanks Jr., were also interred there upon his death in May 2000.[18]

Legacy

Reissued film poster for 1916 "cocaine comedy" The Mystery of the Leaping Fish


In 1992 Douglas Fairbanks was portrayed by actor Kevin Kline in the film Chaplin.

In 1998, a group of Fairbanks fans started the Douglas Fairbanks Museum in Austin, Texas. The museum building was temporarily closed for mold remediation and repairs in February 2010.[19]

In 2002, AMPAS opened the "Fairbanks Center for Motion Picture Study" located at 333 S. La Cienega Boulevard in Beverly Hills. The building houses the Margaret Herrick Library.[20]

On November 6, 2008, the Academy of Motion Picture Arts and Sciences celebrated the publication of their "Academy Imprints" book Douglas Fairbanks, authored by film historian Jeffrey Vance, with the screening of a new restoration print of The Gaucho with Vance introducing the film.[21]

The following year, opening on January 24, 2009, AMPAS mounted a major Douglas Fairbanks exhibition at its Fourth Floor Gallery, titled "Douglas Fairbanks: The First King of Hollywood". The exhibit featured costumes, props, pictures, and documents from his career and personal life.[22] In addition to the exhibit, AMPAS screened The Thief of Bagdad and The Iron Mask in March 2009. Concurrently with the Academy's efforts, the Museum of Modern of Art held their first Fairbanks film retrospective in over six decades, titled "Laugh and Live: The Films of Douglas Fairbanks" which ran from December 17, 2008, to January 12, 2009. Jeffrey Vance opened the retrospective with a lecture and screening of the restoration print of The Gaucho.[23]

Recently, due to his involvement with the USC Fencing Club, a bronze statue of Fairbanks was erected in the Academy of Motion Picture Arts & Sciences Courtyard of the new School of Cinematic Arts building on the University of Southern California campus. Fairbanks was a key figure in the film school's founding in 1929, and in its curriculum development.[24][citation needed]

The 2011 film The Artist was loosely based on Fairbanks, with the film's lead portraying Zorro in a silent movie featuring a scene from the Fairbanks version.[citation needed] While thanking the audience in 2012 for a Golden Globe award as Best Actor for his performance in the film, actor Jean Dujardin added, "As Douglas Fairbanks would say," then moved his lips silently as a comedic homage. When Dujardin accepted the 2011 Academy Award for Best Actor in a Leading Role, Fairbanks was cited at length as the main inspiration for Dujardin's performance in The Artist.[citation needed]

An important accolade given to the Douglas Fairbanks legacy was a special screening of his masterpiece, The Thief of Bagdad, at the 2012 edition of the Turner Classic Movies Film Festival. On April 15, 2012, the festival concluded with a sold-out screening of the Fairbanks film held at the historic Egyptian Theatre in Hollywood. The evening was introduced by TCM host Ben Mankiewicz and Fairbanks biographer Jeffrey Vance.[25]

The nickname for the sports teams of the University of California-Santa Barbara is The Gauchos in honor of Fairbanks' acting in the eponymous film.[26]