Tuesday 9 March 2021

IDA SOPHIA SCUTTER ,AMERICAN DOCTOR FOUNDED C M C HOSPITAL ,VELLORE BORN 1870 DECEMBER 9 -1960 MAY 23

 

IDA SOPHIA SCUTTER ,AMERICAN DOCTOR 

FOUNDED C M C HOSPITAL ,VELLORE BORN  

1870 DECEMBER 9 -1960 MAY 23




ஐடா ஸோஃபியா ஸ்கட்டர் என்பவர் அமெரிக்காவைச் சேர்ந்த ஒரு பெண் மருத்தவராவார். இவர் வேலூரில் உள்ள கிருத்தவ மருத்துவக் கல்லூரியை நிறுவியதற்காக அறியப்படுகிறார்.

இளமைப்பருவம்

இவரது பெற்றோர் அமெரிக்காவைச் சேர்ந்த, ஜான் ஸ்கடர் - சோஃபியா வெல்ட் ஸ்கடர் ஆவர். இவரின் தந்தையும் ஒரு மருத்தவராவார். அவர்கள் இராணிப்பேட்டையில் தங்கி மருத்துவத் தொண்டு புரிந்துகொண்டிருந்த காலகட்டத்தில் ஐடா ஸோஃபியா ஸ்கட்டர் 1870 திசம்பர் 9 இல் பிறந்தார். எட்டு வயதுவரை தமிழ்நாட்டின் இராணிப்பேட்டையில் வளர்ந்த ஐடா பிறகு தன் பெற்றோர்களுடன் தாயகமான அமெரிக்காவுக்குச் சென்றார். அதன்பின் சமயத் தொண்டுக்காக சப்பான் நாட்டுக்குப் பயணமானார். அதனால் நார்த் பீல்டில் உள்ள கிறித்துவப் பெண்கள் பள்ளியில் சேர்ந்து விடுதியில் தங்கியிருந்து படிப்பைத் தொடர்ந்தார். பள்ளி இறுதித் தேர்வெழுதிய நிலையில் உடல்நிலை சரியில்லாத தாயாரைப் பார்பதற்காக இந்தியாவுக்குப் புறப்பட்டு வந்தார்.


அப்போது ஒருநாள் இரவு அந்தணர், முஸ்லிம், இந்து சமயத்தை சார்ந்தவர்கள் தங்கள் மனைவிகளின் பிரசவ உதவிக்காக அவர்கள் வீட்டுக்கு வந்து, ஐடாவை பெண் மருத்துவராக கருதி உதவ வேண்டினர். அவர்களிடம் தான் மருத்துவர் இல்லை என்றும், மருத்துவரான தன் தந்தையை அழைப்பதாகச் சொன்னார் ஆனால் அவர்கள் ஆண் மருத்தரிடம் காட்ட விரும்பாமல் திரும்பிச் சென்றனர். மறுநாள் அந்த மூன்று பென்களும் பிரசவத்தின்போது இறந்து அவர்களுடைய சவஊர்வலங்கள் சென்றன அதைக் கண்ட ஐடா வருந்தினார்.


இந்தியப் பெண்களின் அவலநிலை குறித்து ஆழமாகச் சிந்தித்த ஐடா மருத்துவம் படித்து மிஷனரி பணியில் ஈடுபட விரும்புவதாக தன் பெற்றோரிடம் தெரிவித்தார். பின்னர் மருத்துவம் படிக்க அமெரிக்கா சென்ற ஐடா ஸ்கடர், பிலடெல்ஃபியா மருத்துவக் கல்லூரியில் 1895 இல் சேர்ந்தார். மருத்துவப் படிப்பு முடிந்ததும், வேலூரில் பெண்களுக்கென மருத்துவமனை கட்ட வேண்டும் என்ற எண்ணம் ஐடாவுக்கு இருந்தது. மருத்துவமனை தொடங்க எட்டாயிரம் அமெரிக்க டாலர்கள் தேவைப்பட்டது. நிதி திரட்டும் பணியில் ஈடுபட்டார். அப்போது ஷெல் என்ற முதியவர் 10 ஆயிரம் அமெரிக்க டாலர்களுக்கான காசோலையை ஐடாவிடம் தந்து, என் அன்பு மனைவி மேரி டேபர் ஷெல்லின் நினைவாக, வேலூரில் பெண்கள் மருத்துவமனை அமைக்க நிதியுதவி அளிக்கிறேன். அவர் உயிரோடு இருந்திருந்தாலும் உதவி செய்திருப்பார் என்று கூறினார்.


வேலூரில் மருத்துவமனை:

தோழி ஆனி ஹான்காக்குடன் 1900 சனவரி மாதம் வேலூருக்கு வந்தார் ஐடா. இருவரும் மருத்துவப் பணியை உடனடியாகத் தொடங்கினர். கூடவே மருத்துவமனை கட்டிடம் கட்டும் பணியும் தொடங்கியது. திட்டமிட்டபடி நாற்பது படுக்கைகளுடன் பெண்களுக்கான மேரி டேபர் ஷெல் நினைவு மருத்துவமனை தொடங்கப்பட்டது. 1904 ஆம் ஆண்டில் தென்னிந்தியாவில் பரவியபிளேக் நோயைத் தடுப்பதில் டாக்டர் ஐடா பெரும் பங்கேற்றார்.


அப்போது போதிய பயிற்சி பெற்ற செவிலியர்கள் இல்லாதது, ஐடாவின் மருத்துவப் பணிக்குப் பெருந்தடையாக இருந்தது. இதன் தொடர்ச்சியாக செவிலியர் பயிற்சிப் பள்ளி ஒன்றைத் தொடங்க வேண்டும் என்ற எண்ணம் ஐடாவின் மனதில் உதித்தது. செவிலியர் பள்ளியைத் தொடங்குவதற்கான பணியை ஐடா ஸ்கடர் 1908 இல் தொடங்கினார். சுற்றுவட்டார மிஷன் பள்ளிகளில் படித்த ஐந்து மாணவிகளுடன் செவிலியர் பயிற்சி பள்ளியைத் தொடங்கினார்.


மருத்துவக் கல்லூரி

1913-லேயே பெண்களுக்கென ஒரு மருத்துவக் கல்லூரி தொடங்கவேண்டுமென்று டாக்டர் ஐடா திட்டமிட்டு அவர் எண்ணத்தை வெளியிட்டார். ஐடாவின் எண்ணத்தை, தென்னிந்திய மிஷனரி மன்றம் ஏற்றுக்கொண்டது. வேலூரில் பெண்களுக்கான மருத்துவக் கல்லூரி தொடங்குவது என்றும் அதற்கு ஐடாவே முதல்வராக இருக்க வேண்டுமென்றும் முடிவெடுக்கப்பட்டது. மருத்துவக் கல்லூரி தொடங்குவதற்காக 200 ஏக்கர் நிலமும் தயாராக இருந்தது.


1914 இல் நெடு விடுப்பில் ஐடா அமெரிக்காவுக்குச் சென்றார். அதேநேரம் முதல் உலகப் போர் மூண்டது. 1915 இல் கடுமையான போர்ச் சூழலில் இந்தியா திரும்பிவந்தார், மருத்துவக் கல்லூரி தொடங்குவதற்கான பணியைத் விரைவுப்படுத்தினார் இதையணுத்து 1918 இல் பட்டைய மருத்துவப் படிப்புடன் பெண்களுக்கான மருத்துவப் பள்ளி நடத்துவதற்கான அனுமதியானது, சென்னை மாகாண மருத்துவத் துறை தலைவர் கர்னல் பிரைசனிடமிருந்து பெற்றார். 1918 ஆகத்து 12 இல் யூனியன் மிஷனரி பள்ளியை சென்னை மாகாண கவர்னர் பென்ட்லண்ட் பிரபு தொடங்கி வைத்தார். 1948 இல் யூனியன் மருத்துவப் பள்ளி, கிறிஸ்தவ மருத்துவக் கல்லூரியாக தரம் உயர்த்தப்பட்டது. அப்போதுதான், பெண்களுடன் ஆண்களும் மருத்துவம் படிக்கத் தொடங்கினர்.[1]


விருதுகள்:

அம்மையாரைப் போற்றும்விதத்தில் இந்திய அரசு கெய்சர்-இ-இந்து என்ற பொற்பதக்கத்தை அளித்தது.

அமெரிக்கா 1935இல் டி.எஸ்ஸி பட்டம் அளித்துக் கௌரவித்தது. மேலும் எப் ஏசிஎஸ் என்னும் ஒரு மதிப்பியல் பட்டத்தையும் உவந்து தந்தது.

மறைவு:

1960 மே 24 அன்று ஐடா கொடைக்கானலில் தம் தொண்ணூறாவதுவயதில் இயற்கை எய்தினார்.[2]





ஐடா.S.ஸ்கட்டர் - கிறிஸ்தவ மருத்துவக் கல்லூரி, வேலூர்


Ida S. Scudder

இன்று அனைத்து   வசதிகளுடனும் , நவீன சிறப்புப் பிரிவுகளுடனும், வேலூரின் அடையாளமாகவும் உலகஅளவில் பிரபலமான மற்றும் மிகப் பெரிய  மருத்துவமனையாகவும், செயல் பட்டு அதன்மூலம் இந்தியத் திருநாட்டிற்கு பெருமை சேர்க்கும் Vellor CMC மருத்துவ மனையின் கட்டிடங்களில் இழையோடியிருக்கும் “ஐடா ஸ்கட்டர்”  என்ற அமெரிக்க பெண்மணியின் தியாகம் உங்களுக்கு தெரியுமா? 


பிறப்பு மற்றும் கல்வி

       திண்டிவனத்தில் மருத்துவ மிஷனரியாக ஊழியம் செய்து வந்த டாக்டர். ஜான் ஸ்கட்டர் II,  சோபியா ஸ்கட்டர் தம்பதியினரின் ஐந்தாவது குழந்தை தான் “ஐடா ஸ்கட்டர்” . (DOB: 09-12-1870). ஐடா ஸ்கட்டருக்கு ஆறு வயது இருக்கும்பொழுது சரியாக 1877 ஆம் ஆண்டில் இந்தியாவில் கொடியபஞ்சம் ஏற்பட்டது. பஞ்சத்தின்கொடுமையை நேரில் கண்ட ஐடா தன் வாழ்நாளில் ஒருபோதும் மிஷனரி ஆகப்போவது இல்லை என தீர்மானித்தார். பள்ளி மற்றும் இறையியல் படிப்புக்காக அமெரிக்கா சென்ற ஐடா- அவர்களின் . பள்ளி வாழ்க்கையும் Missionary பயிற்சியும்,  20 வயதில் நிறைவு பெற்றது.


கிராமத்து வாழ்க்கை

       தந்தை ஜான் ஸ்கட்டரின் மருத்துவப் பணியில் உதவி வந்த தாய் சோபியா ஸ்கட்டருக்கு உடல் நலம் குன்றிய காரணத்தால் ஐடா 1890- ல் இந்தியாவிற்கு வரவேண்டிய கட்டாயம் உருவானது. கடல் மார்க்கமாக சென்னை துறைமுகத்தை அடைந்த ஐடா வையும் அவரது சகோதரன் ஹாரியையும் அழைத்து செல்ல அவரது தந்தை டாக்டர் ஜான் ஸ்கட்டர் துறைமுகம் வந்திருந்தார்.  துறைமுகத்திலிருந்து மாட்டு வண்டியில் பயணம் செய்து திண்டிவனத்தில் உள்ள கூரைவேய்ந்த மிஷன் வீட்டுக்கு வந்தனர். பாமர மக்கள் இவரையும் ஒரு மருத்துவராக எண்ணினர். மருத்துவ சிகிச்சைக்காக மிஷன் விட்டுக்கு வரும் திண்டிவன மக்கள், ஐடா ஸ்கட்டரை   “மிஸ்ஸியம்மா”   என்று அழைத்தனர்.


 மனதைத் தொட்ட நிகழ்வுகள்

       1870 ஆம் வருடம்!, நள்ளிரவை நெருங்கும் நேரம் கதவை யாரோ தட்டும் சத்தம் கேட்டு கதவைத் திறந்தார் ஐடா, சிம்னி  விளக்கின் ஒளியில் ஒரு இஸ்லாமியர் பதற்றத்துடன் காணப்பட்டார். “மிஸ்ஸியம்மா நீங்கள் தான் என் மகளைக் காப்பாற்ற வேண்டும், தலைப் பிரசவம்! வலியால் துடிக்கிறாள் ” என்று  அவர் மன்றாடினார். ஐடாவோ, நான் டாக்டர் இல்லை. பிரசவம் பாக்க எனக்கு தெரியாது, இருங்கள். அப்பாவை (டாக்டர் ஜான் ஸ்கட்டர்) எழுப்புகிறேன். என்றவாறு மாடி அறைக்குச் செல்ல திரும்பினாள். அந்த மனிதனோ, “வேண்டாம் மிஸ்ஸி அவரை எழுப்பவேண்டாம்” என்று கூறி தடுத்தார்.! ஒரு முஸ்லீம் பெண்ணுக்கு ஆண் பிரசவம் பார்க்க எங்களின் வேதத்தில் இடம் இல்லை. அதைவிட அவள் செத்தாலும் பரவாயில்லை. நான் வருகிறேன் தாயே!” கைகள் கூப்பி விடை பெற்று இருளில் மறைந்துபோனார்.


       அதிக நேரம் ஆகவில்லை, மீண்டும் கதவு தட்டப்பட்டது. அவர் ஒரு இந்து, வணக்கம் கூறிவிட்டு, “மிஸ்ஸியம்மா என் மனைவி பிரசவ வலியால் துடிக்கிறாள், உடனே என்னோடு வாருங்கள் அம்மா அந்த இரு உயிரையும் காப்பாற்றுங்கள் தாயே!” அவரும் கெஞ்சினார், மீண்டும் அதே பதிலைத்தான் ஐடா கூறினார். ஐடா தந்தையை அழைக்கவா என்று கேட்டாள். ஆனால் அந்த மனிதனோ, “வேண்டாம் தாயே! எங்கள் சாஸ்த்திரத்தில் அதற்கு இடமில்லை. என் மனைவி செத்தாலும் சாகலாமே தவிர ஒரு ஆண் அவளுக்கு பிரசவம் பார்க்க முடியாது தாயே” அவரும் ஏமாற்றத்துடன் திரும்பினார். மீண்டும் கதவு தட்டப்படும் சத்தம்  கேட்டு கதவைத் திறந்து பார்த்தபோது வேறொரு நபர்! அவரும் ஒரு இந்துதான்.  


       மறுநாள் மாலையில் வீதியில் ஒன்றன் பின் ஒன்றாக மூன்று சவ ஊர்வலங்கள் சென்று கொண்டிருப்பதைப் பார்த்தார் . அந்த மூவரும் பிரசவ சிக்கலில் இரவில் இறந்துபோன பெண்மணிகள் என்பதைத் தெரிந்து கொண்டபின் மனம் வெதும்பினார்.!. ஐடா, இந்தியப் பெண்மணிகளுக்கு உடனடி தேவை பெண் மருத்துவர்கள் என்பதை அன்றே உணர்ந்து கொண்டார்.


 மருத்துவக் கல்வி மற்றும் பணி

       1899 ஆம் வருடம் நியூயார்க் நகரில் கார்நெல் பல்கலைக்கழக மருத்துவக் கல்லூரியில் (Cornell University Medical College) சேர்ந்தார்., பெண்கள் மருத்துவம் பயில அனுமதிக்கப்பட்ட முதல் வகுப்பு அது!. தேர்ச்சியுற்று மருத்துவரான உடனே தமிழ்நாடு திரும்பி மருத்துவப் பணியை, குறிப்பாக பெண்களுக்கு செய்யவேண்டும் என்ற ஆர்வம் கொண்டார். பலரிடம் தனது திட்டத்தைக் கூறினார்.  மான்ஹாட்டான் நகரைச் சேர்ந்த வங்கியாளர் ஷெள் (Schell)  என்பவர் தமிழ் நாட்டு பெண்களின் நலனுக்காக 10,000 அமெரிக்க டாலர்களை அவரின் மனைவியின் நினைவாக ஐடாவிடம் வழங்கினார். அவர் தமிழ் நாடு திரும்பியபோது அவரின் தந்தை வேலூரில் மருத்துவப் பணியில் ஈடு பட்டிருந்தார்.. 1900 ஆம் ஆண்டில் அவரின் தந்தை ஜான் ஸ்கட்டர் மரணமடையும்வரை அவருடன் இணைந்து மருத்துவப் பணியை திறம்பட செய்து வந்தார்.


ஐடா ஸ்கட்டரின் சாதனைகள்:

       தந்தையின் மரணத்திற்கு பின் மருத்துவப் பணியின் முழுப் பொறுப்பையும் ஐடா ஏற்றுக்கொண்டார். அமெரிக்காவிலிருந்து கொண்டு வந்திருந்த நன்கொடையைப் பயன்படுத்தி 1902 ஆம் வருடம் ஒரு சிறு மருத்துவமனையை வேலூரில் அமைத்து அதற்கு ஷெல் மருத்துவமனை (Schell Hospital) என்று பெயரிட்டார். சிகிச்சையும் மருந்துகளும் இலவசமாக தரப்பட்டன. (தற்போது இது Mary Tabler Schell Eye Hospital என்று கண் மருத்துவமனையாக பெரிய அளவில் இயங்கி வருகின்றது). அப்போது தமிழகத்தில் பரவலாக காணப்பட்ட ப்ளேக் (plague), காலரா, தொழுநோய் ஆகியவற்றிலிருந்து மக்களைக் காப்பாற்றப் போராடினார்.



       சென்னைப் பல்கலைக்கழக சம்மதத்துடன் இந்தியாவிலேயே   முதல் தாதியர் பயிற்சிப் பள்ளியை நிறுவினார். இன்றுவரை பெண் கல்விக்காக விழிப்புணர்வு பிரசாரம் செய்யவேண்டிய சூழ்நிலையில் நாம் இருந்து கொண்டிருக்கும் நிலையில், அரசு அனுமதியுடன் சென்னைப் பல்கலைக்கழக அங்கீகாரத்துடன் 1918  ஆம் வருடத்திலேயே பெண் மருத்துவர்களை உருவாக்க மருத்துவக் கல்லூரி நிறுவி பெண்கல்வியில் புரட்சி செய்தார்.  இதுவே கிறிஸ்துவ மருத்துவக் கல்லூரியின் ஆரம்பம். 1945 ஆம் ஆண்டில் மருத்துவக் கல்லூரியில் ஆண்களும் சேர்த்துக் கொள்ளப்பட்டனர்.  1952 ஆம் வருடம் உலகின் சிறந்த 5 டாக்டர்களில் ஒருவராக டாக்டர் ஐடா ஸோஃபியா ஸ்கட்டர்   தேர்ந்தெடுக்கப் பட்டார் .


Dr. Ida Sophia Scudder 

(December 9, 1870 – May 23, 1960)

பாசத்திற்குரிய ஐடா அத்தை (Aunt Ida)

       டாக்டர் ஐடா ஸ்கட்டர் வேலூர் நகர மக்களாலும்,  வட   ஆற்காடு மக்களாலும் பெரிதும் போற்றப்பட்டார். அவரை பாசத்துடன் ஐடா அத்தை (Aunt Ida) என்றே அழைத்தனர். ஐடா,   தமது 85 வது வயதில் ஒரு நாள் வழக்கம்போல் தபால்களைப் பார்த்துக் கொண்டிருந்தார். அமெரிக்காவிலிருந்து வந்திருந்த ஒரு தபாலில் “டாக்டர் ஐடா, இந்தியா” என்று மட்டும் முகவரி எழுதப்பட்டிருந்தது. நாடு தழுவிய அளவில் அவர் அறியப்பட்டிருந்தார்  என்பதற்கு இது ஒரு சான்றாகும். 


விண்ணகப் பிறப்பும் மண்ணகச் சிறப்பும்

        கடைசிவரை  திருமணமே  செய்துகொள்ளாமல்  மக்கள் நலனுக்காகவே  பணியாற்றிவந்த ஐடா அத்தை, 1960 ஆம் வருடம் மே  மாதம் 24 ஆம் நாள் அதிகாலையில் இறைவனடி  சேர்ந்தார்.   அப்போது அவருக்கு வயது 90.     இந்தியப் பெண்களுக்காக அவர் செய்த  மாபெரும்  தியாகத்தையும்  சேவையையும்  பாராட்டும் வகையில் அவருடைய நூற்றாண்டு தினமான  ஆகஸ்ட்  12, 2000  நாளன்று   அவரின்  படமும் சி.எம்.சி. மருத்துவக் கல்லூரியும்,  மருத்துவமனையும்  பொறிக்கப்பட்ட  சிறப்பு  தபால்  தலை வெளியிட்டு பெருமை சேர்த்தது இந்திய  அரசு!  இன்று அனைத்து வசதிகளுடனும் , நவீன சிறப்புப் பிரிவுகளுடனும், 2000 படுக்கைகள் கொண்டு, ஆசியாவின் மிகப் பெரிய மருத்துவமனையாகவும்,  உலகின் மிகப் பெரிய மிஷன்   மருத்துவமனையாகவும் விளங்குகிறது!


Dr. Ida S. Scudder;Vellore 1900Tiruvalla Medical Mission1935


1905-FIRST SEVEN INDIAN NURSES WITH IDA SCUDDER VELLORE



Dr. Ida Sophia Scudder (December 9, 1870 – May 23, 1960) was a third-generation American medical missionary in India of the Reformed Church in America. She dedicated her life to the plight of Indian women and the fight against bubonic plague, cholera and leprosy. In 1918, she started one of Asia’s foremost teaching hospitals, the Christian Medical College & Hospital, Vellore, India.

Early life

She was born of Dr. John Scudder Jr. and his wife, Sophia (née Weld), part of a long line of medical missionaries (see Scudders in India). The granddaughter of John Scudder, Sr., as a child in India, she witnessed the famine, poverty and disease in India. She was invited by Dwight Moody to study at his Northfield Seminary in Massachusetts, where she earned a reputation for pranks.[1]

Screen Shot 2016-05-14 at 9.36.01 AM



She initially expected to get married and settle down in the United States after seminary, but in 1890 she went back to India to help her father when her mother was ailing at the mission bungalow at Tindivanam. Ida had expressed a resolve not to become a medical missionary, but during that stay, she had the enlightening experience of not being able to help three women in childbirth who died needlessly in one night.

That experience convinced her that God wanted her to become a physician and return to help the women of India. She never married.

She graduated from Cornell Medical College, New York City in 1899, as part of the first class at that school that accepted women as medical students. She then headed back to India, fortified with a $10,000 grant from a Mr. Schell, a Manhattan banker, in memory of his wife. With the money, she started a tiny medical dispensary and clinic for women at Vellore, 75 miles from Madras. Her father died in 1900, soon after she arrived in India. In two years she treated 5,000 patients. She opened the Mary Taber Schell Hospital in 1902.

Auntie Ida (2)


Ida Scudder realized that she would be foolish to go on alone in her fight to bring better health to South India’s women, so she decided to open a medical school for girls. Skeptical males said she would be lucky to get three applicants; actually she had 151 the first year (1918), and had to turn many away ever since. At first, the Reformed Church in America was the main backer of the Vellore school, but after Dr. Scudder agreed to make it coeducational, it eventually gained the support of 40 missions. Of 242 students today, 95 are men.



cmc-vellore (1)

Christian Medical College, Vellore

In 1928 ground was broken for the “Hillsite” medical school campus on 200 acres (0.8 km²) at Bagayam, Vellore.


Ida S. Scudder with Mahatma Gandhi, 1928


In 1928, Mahatma Gandhi visited the medical school. She traveled a number of times to the United States to raise funds for the college and hospital, raising a total in the millions. In 1945, the college was opened to men as well as women. In 2003 the Vellore Christian Medical Center was the largest Christian hospital in the world, with 2000 beds, and its medical school is now one of the premier medical colleges in India.



Screen Shot 2016-05-14 at 9.37.12 AMOne day in 1953, aged 82, she was at “Hilltop”, her bungalow at Kodaikanal, and opened a stack of letters and telegrams. Her name is a famous one in India and her letters  reached her addressed simply, “Dr. Ida, India.”

No comments:

Post a Comment