Thursday 11 March 2021

RAFEL SCANDAL

 RAFEL SCANDALS



*#ரபேல் #ஒரு #பொன்முட்டையிடும் #வாத்து.*

ஓய்வு பெற்ற ராணுவ தளபதி கர்னல் சுந்தர் அவர்கள்ஒரு டிவி விவாதத்தில்  சொன்ன தகவல் கொஞ்சம் கூட மாறாமல் அப்படியே

1.15 அடுக்கு வலிமையான பாதுகாப்பு அமைப்பு உள்ள ஒரு பாதுகாப்பு துறை அமைச்சகத்திலிருந்து நாட்டின் உயரிய மிக ரகசியமான ஆவணங்கள் காணாமல் போனதாக ஒரு அட்டார்னி ஜென்ரல் நாட்டின் உச்சநீதி மன்றத்தில் சொன்னது  உலகில்  இது தான் முதல் முறை 

2.இதற்கு முழுக்க முழுக்க நிர்மலா சீதாராமனே பொறுப்பு

3.பாதுகாப்பு அமைச்சகத்தில் ஒரு ராணுவ வீரர் கூட கிடையாது முழுக்க முழுக்க ஐ ஏ எஸ் அதிகாரிகள் மட்டுமே இருக்கிறார்கள்

4.ராணுவத்துக்கு ஒதுக்கப் பட்ட மொத்த நிதி 3லட்சத்து75ஆயிரம் கோடிகள் ஆனால் செலவழித்து இருப்பது வெறும் 50000 ஆயிரம் கோடிகள் மட்டுமே.. மீதி நிதி எங்கே

5.இந்த கோப்புகள் காணாமல் போனதாக 2நாட்களுக்கு முன்பு வரை யாருக்கும் தெரியாது... அப்டி ன்னா இந்த திருட்டு எப்ப நடந்துச்சு

6.சுப்ரீம் கோர்ட்ல் இவர்கள் கொடுத்த தகவல்கள் ஓன்று கூட உண்மையில்லை எப்படியென்றால்...

7.ரபேல் வாங்கியிருப்பது காங்கிரஸ் ஆட்சியை விடா 2.8% குறைவு என்றும் அதை பொது நல கமிட்டிக்கு தெரிவித்து விட்டதாக CAG ஆடிட்டர் ஜெனரலிடமும் ... CAG அதை ஒப்புக்கொண்டதாக  சுப்ரீம் கோர்ட்டிடமும் சொல்லி தீர்ப்பை வாங்கி விட்டார்கள்...

8பொதுநல கமிட்டிக்கு தலைவர் மல்லிகார்ஜுனகார்கே அவருக்கு சுப்ரீம் கோர்ட்டு அந்த ஆவணத்தில் உங்கள் கையெழுத்தே இல்லயே ன்னு கேக்க

9கார்கே அட்டர்னி ஜெனரல்  kk வேணுகோபால் அய்யங்காரிடம் நீங்க எப்போ என்னோட டேபிள்க்கு அனுபசிங்க ன்னு கேக்க... 

10 சாரி தெரியாம ஒரு grammar மிஸ்டேக் நடந்திருச்சு...அதனால CAG தப்பா சொல்லிரிச்சு CAG சொன்னத நம்பி நீங்க தீர்ப்ப சொன்னதால உங்க தீர்ப்பு தப்பாயிருச்சு அதனால ன்னு so பீளிஸ் உங்க தீர்ப்பை திருத்திக்கோங்க ன்னு கண்ணீர் விட  

10.அதற்கான ஆவணங்கள் எங்கே ன்னு  நீதிபதி ஜோசப் கேக்க... சீலிடப் பட்ட கவரில் இருக்கு ன்னு சொல்ல

11எந்த நீதிபதியும் சீலிடப் பட்ட கவரப் பிரித்து இதுவரைப் பார்க்கவில்லை ஆனால் மத்திய அரசின் கெட்ட நேரம் ஜஸ்டிஸ் ஜோசப் பார்த்தார்

12.உள்ளே இருந்த ரபேல் அனுமதி கடிதத்தில் ஒரு அதிகாரி கூட கையெழுத்துப் போடாமல் இருந்ததைப் பார்த்ததும் நீதிபதி கடுப்பாக

13 ரபேல் ஒப்பந்த ஆவணங்கள் எங்கே ன்னு கேட்க புதன்கிழமை(நேற்று)சமர்பிப்பதாக சொல்லிட்டு போக 

14. புதன்கிழமை  வந்து ஆவணங்கள் திருடு போயிருச்சு ன்னு சொல்ல நல்லா  கவனிங்க அவர் ஆவணம் missed ன்னு சொல்லல stolen ன்னு சொல்றார்.நீதிபதிகளுக்கு தலை சுற்றிப் போச்சு..

15.திருட்டு போனதை எப்போ யாரு கண்டு பிடிச்சாங்க ன்னு கேக்க தெரியல அரசை கேட்டு சொல்றேன் ன்னு சொல்ல 

16 Hindu N ராம் ஆதாரங்களை வெளியிட்டாரே அவருக்கு எப்டி போச்சு ன்னு கேக்க .. அவர்மேல் தான் திருட்டு கேஸ் போட போறோம் ன்னு சொல்ல

17 நீங்கதானே போன வாரம் அவர் வெளியிடுவது எல்லாம் போலியான ஆவனங்கள்  ன்னு இதே கோர்ட்ல சொன்னீங்க இப்போ இப்டி சொல்ரிங்க நீதிபதி கேக்க... வேணுகோபால் முழிக்க நாலு நாள் அவகாசம் கேட்டுட்டு போயிருக்கார்

18.ரபேல் ஊழலை வெளியிட்டது N ராம் தான்... போபர்ஸ் ஊழலை வெளியிட்டதும் இதே ஹிந்து N ராம்தான்(அதை அம்பலப் படுத்தியவர் சித்ரா சுப்ரமணியம்)..ஆரியர்கள் வந்தேரிகள் ங்கிற டோனி ஜோசப் அறிக்கையை வெளியிட்டதும் இதே N ராம் தான்... அவர்மீது நமக்கு ஆயிரம் விமர்சனங்கள் இருந்தாலும் *தமிழ்நாட்டில் இப்படி ஒரு பத்திரிக்கையாளர் இருப்பது இந்தியாவுக்கே பெருமை...*


ரபேல் ஒப்பந்தத்தில் என்னதான் நடந்தது? ஏன் இந்த வழக்கு? அதிர்ச்சி உண்மைகளும் அதிரடி ஆதாரங்களும்!

டெல்லி: ரபேல் வழக்கில் நாளை தீர்ப்பு வழங்கப்பட உள்ள நிலையில், ரபேல் ஒப்பந்தம் என்றால் என்ன? இது ஏன் சர்ச்சையானது? இதில் என்ன பிரச்சனை என்று பார்க்கலாம்!

எல்லோரும் எதிர்பார்த்த ரபேல் வழக்கில் நாளை உச்ச நீதிமன்றத்தில் தீர்ப்பு வழங்கப்பட உள்ளது. ஆனால் நாளை வழங்கப்படும் தீர்ப்பு என்பது ரபேல் வழக்கில் ஊழல் நடந்ததா என்று கூறாது.. மாறாக ரபேல் ஒப்பந்தம் குறித்து நீதிமன்ற கண்காணிப்பில் அல்லது சிபிஐ மூலம் விசாரணை நடத்த வேண்டுமா என்று கூறப்படும்.

அதாவது ரபேல் ஒப்பந்தத்தை விசாரிக்க வேண்டுமா? அல்லது கூடாதா? என்று நாளை தீர்ப்பு வழங்கப்படும். இதில் நீதிமன்ற கண்காணிப்பில் விசாரணை தேவையில்லை என்று உச்ச நீதிமன்றம் ஏற்கனவே தீர்ப்பு வாங்கிவிட்டது. அதற்கு எதிராக மறுசீராய்வு மனுதாக்கல் செய்யப்பட்டது. அதன் மீதான தீர்ப்பு நாளை வழங்கப்பட உள்ளது.

யாரெல்லாம் மனுதாக்கல்

யாரெல்லாம் மனுதாக்கல்

ரபேல் வழக்கில் முதலில் 5 பேர் உச்ச நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தனர். வழக்கறிஞர்கள் எம்.எல்.ஷர்மா மற்றும் வினீத் தண்டா, யஷ்வந்த் சின்கா, பிரசாந்த் பூஷன், ஆம் ஆத்மி கட்சியின் சஞ்சய் சிங் உள்ளிட்டோர் தொடர்ந்த பொதுநல வழக்கு ஆகும் இது. தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், நீதிபதிகள் கேஎம் ஜோசப், எஸ்கே கவுல் அமர்வு இந்த விசாரணையை நடத்தியது.

ரபேல் என்றால் என்ன

ரபேல் என்றால் என்ன

ரபேல் வழக்கை பற்றி தெரிந்துகொள்ளும் முன் ரபேல் விமானம் குறித்து தெரிந்து கொள்ள வேண்டும். முதலில் இந்தியாவின் தேர்வு ரபேல் விமானம் கிடையாது. ஆம் இந்தியா ரபேல் மீது தன் கவனத்தை செலுத்தவே இல்லை. ரபேல் விமானம் சீனுக்கு வந்ததே கடைசியில்தான். ரபேல் போலவே நிறைய MMRCA ரக விமானங்கள் உலகின் பிற நாடுகளில் தயாரிக்கப்படுகிறது.

மார்டின் எஃப் - 16, போயிங் எஃப்/ஏ 18, யூரோபைட்டர் டைபூன், ரஷ்யா மிக் 35, ஸ்வீடன் சாப் கிரிப்பேன் மற்றும் ரபேல் ஆகிய விமானங்கள் இதற்காக சோதனை செய்யப்பட்டது. கடைசியில் விலை மற்றும் தேவையை வைத்து ரபேல் தேர்வு செய்யப்பட்டது.

முடிவு எடுக்கப்பட்டது

முடிவு எடுக்கப்பட்டது

முதலில் இந்த ரபேல் ஒப்பந்தம் என்பது இந்திய விமான படையின் பலத்தை அதிகரிக்கவே தேர்வு செய்யப்பட இருந்தது. இதன் மூலம் புதிய ரபேல் ரக விமானங்களை வாங்கி ராணுவ பலத்தை அதிகரிக்க திட்டமிடப்பட்டது. ஆனால் இதை வாங்க நினைத்தது பாஜக அல்ல. காங்கிரஸ் அரசுதான் காங்கிரஸ் அரசின் ஆட்சியில் 2001ல் இதற்காக திட்டம் போடப்பட்டு, 2007ல் பல பேச்சுவார்த்தைகள் நடத்தி, 2012 தொடக்கத்தில் ரபேல் விமானங்களை வாங்கலாம் என்று முடிவு எடுக்கப்பட்டது.

விமானம் எப்படி

விமானம் எப்படி

ரபேல் இரண்டு இன்ஜின் கொண்ட மல்டி ரோல் வகை காம்பேட் ரக MMRCA வகை விமானம் ஆகும். ரபேல் என்பது ஒரு வகையான, புதிய தலைமுறை போர் விமானம் ஆகும். இதன் மூலம் போர் சமயங்களில் ஒரு நாடு எளிதாக தாக்குதல் நடத்த முடியும். சர்ஜிக்கல் ஸ்டிரைக்குகளை எளிதாக தூரத்தில் இருந்து செய்ய முடியும். அமெரிக்காவின் எப் 14ஐ விட இது சக்தி வாய்ந்தது. அணு ஆயுதங்களை ஏந்தி சென்று தாக்கும் வல்லமை கொண்டது இந்த விமானங்கள். மிக மோசமான சூழ்நிலையில் கூட இது தாக்கு பிடிக்கும்.

பிரான்ஸ் எப்படி

பிரான்ஸ் எப்படி

ரபேலை வாங்குவதற்காக பல நாடுகள் இதற்காக கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட்டது. முதலில் அமெரிக்கா, ஐரோப்பா, ரஷ்யா, பிரான்ஸ் ஆகிய நாடுகள் கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட்டது. இதில் மற்ற நாடுகளை விட குறைந்த விலையில் விமானம் தருவதாக பிரான்ஸ் கூறிய காரணத்தால் இந்த ஒப்பந்தம் பிரான்ஸ் நாட்டுடன் போடப்பட்டது.

டஸால்ட் வந்தது எப்படி

டஸால்ட் வந்தது எப்படி

மன்மோகன் சிங் பிரதமராக இருந்த காங்கிரஸ் ஆட்சியில் இருந்த போதே இந்த விமானம் வாங்க Dassault என்ற பிரான்ஸ் நிறுவனத்திடம் ஒப்பந்தம் போடப்பட்டது. ஆனாலும் இந்த ஒப்பந்தம் இழுத்தடிக்கப்பட்டது. கிட்டத்தட்ட 4 வருடங்கள் இந்த ஒப்பந்தம் செய்யப்படாமல் இழுத்தடிக்கப்பட்டது. 2014ல் இரண்டு நாட்டிலும் மாற்றி மாற்றி தேர்தல் நடந்த காரணத்தால் ஒப்பந்தம் செய்யப்படாமல் தள்ளி போய் கொண்டே இருந்தது.

வேகம் எடுத்தது

வேகம் எடுத்தது

அதன்பின் 2014ல் பாஜக ஆட்சிக்கு வந்தது. அதன்பின்தான் பாஜக ஆட்சியில்தான் வெற்றிகரமாகக் கையெழுத்து ஆனது. ராஜ்நாத் சிங் பாதுகாப்பு துறை அமைச்சராக இருந்த போது இறுதி பேச்சுவார்த்தை நடந்து, முழுமையான ஒப்பந்தம் நிர்மலா சீதாராமன் பாதுகாப்பு துறை அமைச்சராக இருந்த போது செய்யப்பட்டது. பிரதமர் மோடி பிரான்ஸ் சென்று இதற்காக அதிகாரிகளை சந்தித்து ஒப்பந்தத்தை கையெழுத்திட்டார்.

என்ன ஊழல்

என்ன ஊழல்

இனி என்ன ஊழல் புகார் என்று பார்க்கலாம், இந்த வழக்கில் காங்கிரஸ் ஒப்பந்தத்தின் படி, மொத்தம் 126 விமானங்களை இந்திய அரசு வாங்க இருந்தது. அதில் 18 விமானங்கள் ஏற்கனவே தயார் நிலையில் உருவாக்கப்பட்டு இந்தியாவிற்கு அனுப்பப்படும். மற்ற 108 விமானங்கள் உதிரி பாகங்களாக அனுப்பப்பட்டு இந்தியாவில் உருவாக்கப்படும். இதுதான் இந்த திட்டத்தின் முக்கிய நோக்கம் ஆகும். Dassault என்ற நிறுவனம்தான் இந்த விமானங்களை இந்தியாவிற்கும் அளிக்கும்.

பாஜக எங்கு சிக்கல்

பாஜக எங்கு சிக்கல்

ஆனால் பிரதமர் மோடி தலைமையிலான பாஜக ஆட்சிக்கு வந்த பின், 126 விமானங்களை வாங்க வேண்டாம் என்று முடிவு செய்யப்பட்டது. விலை அதிகமாக இருக்கிறது என்று கூறி, வெறும் 36 விமானங்களை மட்டும் வாங்குவோம் என்றும், பிரான்ஸ் விமான தொழில்நுட்பத்தை இந்தியாவுடன் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்றும் ஒப்பந்தம் செய்யப்பட்டது. இதில் என்ன தவறு என்று கேட்கலாம்.. தவறு இருக்கிறதாம்!

தவறு என்ன

No comments:

Post a Comment