Wednesday 10 March 2021

ATHALAKKAI MEDICAL MERITS

 ATHALAKKAI MEDICAL MERITS



அதலக்காய் மருத்துவப் பயன்கள்

தூத்துக்குடி, விருதுநகர், மதுரை ஆகிய மாவட்டங்களில் புகழ்பெற்ற காய்களில் ஒன்று ‘அதலைக்காய்’. பாகற்காய் குடும்பத்தைச் சேர்ந்த இக்காய், பேச்சுவழக்கில் ‘அதலக்காய்’ என்று அழைக்கப்படுகிறது. கோவைக்காய்போலக் கண்மாய்க் கரைகள், வேலியோரங்கள் போன்றவற்றில் வளரும் கொடி வகை இது. கார்த்திகை மறறும் மார்கழி மாதப் பருவத்தில் மட்டும் விளையும் காய் என்பதால், இதை வற்றல் போட்டு வைத்தும் பயன்படுத்துகிறார்கள் மக்கள். நம்மில் அதிகமானோர் பாதிக்கப்படும் பிரச்சனைகளில் ஒன்று நீரிழிவு நோய் தான். இந்த நோய் வருவதற்கு மிக முக்கியமான காரணமே நமது உணவு முறைதான். நமது தமிழ் பாரம்பரியம் என்று மறக்கப்பட்டதோ, அன்றே பல நோய்கள் வந்துவிட்டது. மேலை நாட்டு உணவு முறைகளை நாம் என்று நாகரீகமாக கருத்தினோமோ, அன்றே பல நோய்களுக்கு நாம் அடிமையாகிவிட்டோம். இன்று பலரையும் அடிமைப்படுத்தி தன கட்டுக்குள் வைத்திருக்கும் நோய்களில் முதன்மையான நோயாக உள்ளது நீரிழிவு நோய் தான். தற்போது இந்த பதிவில் அதலக்காயின் மருத்துவ குணங்கள் பற்றி பார்ப்போம்.


மருத்துவப் பயன்கள்




அதலகாயை பொறுத்தவரையில், உலகத்தில் எந்த நாட்டிலும் விளையாத ஒரு காய். ஆனால், இந்த காய் நம் தமிழ்நாட்டில் மட்டும் விளையக்கூடியது. இது, தமிழ்நாட்டில் தூத்துக்குடி, விருதுநகர், மதுரை, விருதுநகர், சிவகங்கை போன்ற மாவட்டங்களில் அதிகமாக கிடைக்கும். இந்தக் காயில் பல வகையான மருத்துவக் குணங்கள் உள்ளது.


இந்தக் காயில், துத்தநாகம், வைட்டமின்சி, பாஸ்பரஸ் போன்ற சத்துக்கள் இதில் அதிகமாக உள்ளது. இந்தக்காய் அதிகமாக மழைக்காலங்களில் மட்டுமே கிடைக்கக் கூடியது. இந்தக் காய் மூலிகை செடி கொடிகளில் ஒன்றாக கருதப்படுகிறது. இதன் விதையை எடுத்து நாம் வைத்தாலும் இந்த செடி வலராதாம். ஏன்னென்றால் இந்த செடி மழைக்காலங்களில் தானாக வளரக் கூடிய ஒரு செடி.


நீரிழிவு நோய்

நீரிழிவு நோய் உள்ளவர்களுக்கு அதலைக்காய் ஒரு சிறந்த மருந்தாகக் கருதப்படுகிறது. இதில் உள்ள சத்துக்கள் இரத்தத்தில் சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்தி, சர்க்கரை நோயின் தாக்கத்தை கட்டுப்படுத்துகிறது.


மஞ்சள் காமாலை

மஞ்சள்காமாலை பிரச்னை உள்ளவர்களுக்கு அதலைக்காய் ஒரு சிறந்த மருந்தாக கருதப்படுகிறது. மஞ்சள் காமாலை நோய் உள்ளவர்கள் இந்த காயை தினந்தோறும் அவர்களது உணவில் சேர்த்துக் கொண்டால் மஞ்சள் காமாலை பிரச்சனையில் இருந்து விடுபடலாம்.


No comments:

Post a Comment