Showing posts with label SINHALAS. Show all posts
Showing posts with label SINHALAS. Show all posts

Sunday, 18 August 2019

MUSLIMS COJOINED WITH SINGALAS , EVICTED TAMILS






MUSLIMS COJOINED WITH SINHALAS , 
EVICTED TAMILS




கிழக்கில் சிந்திய இரத்தங்கள் – 03

மட்டக்களப்பு மாவட்டத்திற்கு உட்பட்டிருந்த தென்கிழக்கு பிரதேசங்களை பிரித்து பதுளை மொனராகல பகுதிகளில் உள்ள சில பகுதிகளையும் இணைத்து அம்பாறை மாவட்டம் 1961ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 10 ஆம் திகதி உருவாக்கப்பட்டது. கல்லோயா திட்டத்தின் மூலம் இம்மாவட்டத்தில் சிங்கள குடியேற்றங்கள் செய்யப்பட்டு அம்பாறை மாவட்டத்தில் சிங்களவர்களின் சனத்தொகை வீதமும் அதிகரிக்கப்பட்டது.

மட்டக்களப்பு மாவட்டத்துடன் இருந்த கல்முனை, சம்மாந்துறை, பொத்துவில் தொகுதிகளுடன் அம்பாறை தொகுதியையும் இணைந்து திகாமடுல்ல என்ற பெயரில் அம்பாறை மாவட்டம் உருவாக்கப்பட்டது.

திருகோணமலை மாவட்டத்தில் சிங்களவர்களை பெரும்பான்மையாக கொண்ட சேருவில தேர்தல் தொகுதி அமைக்கப்பட்டது போல அம்பாறை மாவட்டத்தில் சிங்களவர்களை பெரும்பான்மையாக கொண்ட அம்பாறை தேர்தல் தொகுதியும் உருவாக்கப்பட்டது.

அம்பாறை மாவட்டத்தில் ஒரு புறம் சிங்கள குடியேற்றங்கள் செய்யப்பட்ட சமகாலத்தில் தமிழ் மக்கள் பாரம்பரியமாக வாழ்ந்து வந்த கிராமங்களிலிருந்து தமிழ் மக்களை வெளியேற்றி விட்டு அக்கிராமங்களை முஸ்லீம்கள் ஆக்கிரமித்து கொண்டனர்.

காலத்திற்கு காலம் தமிழர்கள் மீது முஸ்லீம்கள் தாக்குதல்களை நடத்தியதால் தமிழ் மக்கள் தங்கள் பூர்வீக கிராமங்களிலிருந்து வெளியேற வேண்டிய அவலநிலை ஏற்பட்டது. யுத்தத்தை பயன்படுத்தி சிறிலங்கா படைகளின் துணையுடன் தமிழ் மக்களை வெளியேற்றுவதில் முஸ்லீம் அரசியல்வாதிகள் முனைப்புடன் செயற்பட்டனர்.

அம்பாறை மாவட்டத்தில் பரம்பரையாகத் தமிழர்கள் வாழ்ந்து சூறையாடப்பட்டு இன்று சிதைவுக்குள்ளான கிராமங்களாக பாலமுனை, பாணமை, திராய்கேணி, மீனோடைக்கட்டு, ஒலுவில், நிந்தவூர் அட்டப்பள்ளம், சம்மாந்துறை, கரவாகு, தீகவாவி, மாந்தோட்டம், கொண்டாவெட்டுவான், செம்மணிக்குளம், தங்கவேலாயுதபுரம், உடும்பன்குளம் சவளக்கடை, சொறிக்கல்முனை, மீராச்சோலை என தமிழ் கிராமங்களின் பட்டியல் நீண்டு செல்கிறது.

தமிழர்கள் வாழ்ந்தமைக்கான சுவடுகள் துடைத்தழிக்கப்பட்டு இக்கிராமங்கள் இன்று முஸ்லிம் கிராமங்களாக மாறியுள்ளன.
அம்பாறை மாவட்டத்தில் நூறு வீதம் தமிழ் மக்கள் வாழ்ந்த கிராமங்களில் ஒன்று மீனோடைக்கட்டு. இன்று அவர்கள் முற்றாக துரத்தியடிக்கப்பட்டு அக்கிராமம் இன்று நூறு வீதம் முஸ்லீம் கிராமமாக மாற்றப்பட்டிருக்கிறது.

இக்கிராமம் மட்டக்களப்பு பொத்துவில் வீதியில் திராய்கேணிக்கும் பாலமுனைக்கும் இடையில் அமைந்துள்ளது.

1982ஆம் ஆண்டு காலப்பகுதியில் திருக்கோவிலுக்கு செல்லும் வழியில் மீனோடைக்கட்டு கிராமத்தில் தரித்து சென்ற ஞாபகம். அப்போது அக்கிராமத்தில் முழுமையாக தமிழ் மக்களே வாழ்ந்து வந்தனர். மீனோடைக்கட்டு அரசினர் தமிழ் வித்தியாலயம் என்ற பாடசாலையும் சைவக்கோவிலும் இருந்தன.

மிகவும் அழகான வளம் நிறைந்த கிராமம். அம்பாறை மாவட்டத்தில் பழமைவாய்ந்த தமிழ் கிராமங்களில் மீனோடைக்கட்டு கிராமமும் ஒன்றாகும்.
மீனோடைக்கட்டு கிராமத்தை ஆக்கிரமிக்க முற்பட்ட அயல்கிராமங்களில் வாழ்ந்த முஸ்லீம்கள் தமிழ் மக்கள் மீது நெருக்குதல்களையும் தாக்குதல்களையும் 1978ஆம் ஆண்டிலிருந்து மேற்கொண்டு வந்தனர்.

முஸ்லீம்களின் அச்சுறுத்தல் காரணமாக தமது உயிரை பாதுகாத்து கொள்வதற்காக தமிழ் மக்கள் இக்கிராமத்திலிருந்து இடம்பெயர தொடங்கினர் என்றும் இடம்பெயர்ந்தவர்களின் காணிகளை முஸ்லீம்கள் ஆக்கிரமித்து கொண்டனர் என்றும் சில காணிகளை முஸ்லீம்கள் பணம் கொடுத்து வாங்கினர் என்றும் அழிக்கப்பட்ட தமிழ் கிராமங்கள் என்ற நூலில் எஸ்.ஜெயானந்தமூர்த்தி குறிப்பிட்டுள்ளார்.

தொடர்ந்து தாம் அக்கிராமத்தில் வாழ முடியாது என்ற நிலை வந்த போது தமது வீடுவாசல்களை முஸ்லீம்களுக்கு விற்பதை தவிர வேறு வழி இருக்கவில்லை என அக்கிராமத்திலிருந்து வெளியேறிய தமிழ் மக்கள் கூறுகின்றனர்.

அச்சுறுத்தல் காரணமாக பலர் வெளியேறியதால் தமது பூர்வீககிராமத்திலேயே வாழ வேண்டும் என உறுதியுடன் இருந்தவர்களும் அச்சம் காரணமாக வெளியேற வேண்டிய துர்ப்பாக்கிய நிலை ஏற்பட்டது.

1984ஆம் ஆண்டுக்கு பின் விசேட அதிரடிப்படையினரின் உதவியுடன் முஸ்லீம்கள் அக்கிராமத்தில் இருந்த தமிழ் மக்களுக்கு நெருக்குதல்களை கொடுத்தனர்.

இதனால் 1985ஆம் ஆண்டில் இக்கிராமத்திலிருந்து தமிழ் மக்கள் முற்றாக வெளியேறினர்.
300க்கு மேற்பட்ட தமிழ் குடும்பங்கள் வசித்த இக்கிராமத்தில் இன்று ஒரு தமிழ் குடும்பங்கள் கூட இல்லை.
தமிழ் மக்களின் வெளியேற்றத்தை தொடர்ந்து அங்கு பாலமுனை ஒலுவில் உட்பட வேறு கிராமங்களை சேர்ந்த முஸ்லீம்கள் மீனோடைக்கட்டு கிராமத்தில் குடியேறினர்.

மீனோடைக்கட்டு தமிழ் கலவன் பாடசாலை மீனோடைக்கட்டு டாக்டர் ஜமால்டீன் முஸ்லீம் வித்தியாலயமாக பெயர் மாற்றம் செய்யப்பட்டது. 
அங்கிருந்த சைவக்கோவில்கள் இடிக்கப்பட்டு இருந்த அடையாளமே தெரியாமல் மாற்றப்பட்டிருக்கிறது. ஆலயங்கள் இருந்த இடங்களில் இப்போது முஸ்லீம்களுக்கு சொந்தமான கட்டிடங்கள் காணப்படுகின்றன.

மீனோடைக்கட்டிலிருந்து வெளியேறியவர்களில் கணிசமானவர்கள் அயல்கிராமமான திராய்க்கேணியில் குடியேறினர். ஏனையவர்கள் வேறு இடங்களில் குடியேறினர்.

திராய்க்கேணி படுகொலை.

மீனோடைக்கட்டை தொடர்ந்து திராய்க்கேணியில் வாழ்ந்த தமிழ் மக்களையும் வெளியேற்றும் சதி முயற்சிகளில் முஸ்லீம் அரசியல்வாதிகள் ஈடுபட்டனர். அதற்கு துணையாக முஸ்லீம் பொதுமக்களும் செயற்பட்டனர்.

தர்மரட்ணம் வன்னியனாரின் தென்னம் தோட்டம் இருந்த காணியில் 1954ஆம் ஆண்டு அமைக்கப்பட்ட குடியேற்ற கிராமமே திராய்க்கேணி கிராமமாகும்.

மறைந்த ஊடகவியலாளர் டி.சிவராமின் பேரனான தர்மரட்ணம் வன்னியனாருக்கு ஒலுவில், பாலமுனை, திராய்க்கேணி பகுதிகளில் பெருந்தொகையான காணிகள் இருந்தன. இந்த காணிகளில் தமிழ் மக்களும் முஸ்லீம் மக்களும் குடியேற்றப்பட்டனர்.

ஒலுவில் துறைமுகம், மற்றும் தென்கிழக்கு பல்கலைக்கழகம் ஆகியவற்றிற்கு சுவீகரிக்கப்பட்ட காணிகளில் பெரும்பகுதி தர்மரட்ணம் வன்னியனாருக்கு சொந்தமானதாகும்.

திராய்க்கேணிக்கு கிழக்குப் பக்கத்தில் ஒலுவில் கிராமமும் தெற்குப் பக்கத்தில் பாலமுனையும் அமைந்துள்ளது. இக்கிராமம் பொத்துவில் தொகுதியில் உள்ள அட்டாளைச்சேனை பிரதேச செயலாளர் பிரிவின் கீழ் திராய்க்கேணி கிராமத்தில் சுமார் 350 குடும்பங்கள் வாழ்ந்து வந்தனர்.
முஸ்லீம் அரசியல்வாதிகளும் பாலமுனை ஒலுவில் கிராம முஸ்லீம்களும் திராய்க்கேணியில் வாழ்ந்த தமிழ் மக்களை வெளியேற்றும் நோக்குடன் 1985ஆம் ஆண்டில் கலவரங்களை உருவாக்கினர். விசேட அதிரடிப்படையினரின் உதவியுடன் தமிழர்கள் மீது முஸ்லீம்கள் தாக்குதல்களை நடத்தினர்.

இரவோடு இரவாக தமிழர்களின் வீடுகளுக்கு முஸ்லீம்கள் தீவைத்தனர். தமிழர்கள் மீது முஸ்லீம்கள் தாக்குதல் நடத்தினர். விசேட அதிரடிப்படையினரின் துணையுடனேயே இத்தாக்குதல்களை முஸ்லீம்கள் நடத்தினர்.   இதனால் தமிழ் மக்கள் இடம்பெயர்ந்து அகதி முகாம்களில் தஞ்சமடைந்தனர்.

1985ஆம் ஆண்டிலிருந்து 1990ஆம் ஆண்டுவரை இக்கிராம மக்கள் இடம்பெயர்வதும் மீளக்குடியமர்வதுமாக அவல நிலையிலேயே வாழ்ந்து வந்தனர்.
1990ஆம் ஆண்டு ஓகஸ்ட் 06ஆம் திகதி திராய்க்கேணி கிராமத்தில் நடந்த படுகொலையே இக்கிராமத்தை முற்றாக நிலைகுலைய வைத்தது.

1990.08.05 இல் திராய்க்கேணியை அண்டியுள்ள ஒலுவில் கிராமத்தை சேர்ந்த வசித்து வந்த முஸ்லீம்கள் 13பேர் தீகவாபி சிங்கள கிராமத்திற்கு தொழிலுக்கு சென்ற வேளை இனந்தெரியாதவர்களால் காட்டுப்பகுதியில் வைத்து வெட்டிக்கொலை செய்யப்பட்டனர்.
தமிழ் முஸ்லீம் மக்கள் மத்தியில் மோதல்களை உருவாக்குவதற்காக விசேட அதிரடிப்படையினரே இதனை செய்ததாக சில மாதங்களின் பின்னர் தெரியவந்தது.

13 முஸ்லீம்கள் கொல்லப்பட்டதை தொடர்ந்து மறுநாள் காலையில் 06.08.1990 அன்று ஒலுவில், பாலமுனை கிராமங்களை சேர்ந்த முஸ்லீம்கள் சுமார் நூற்றுக்கு மேற்பட்டவர்கள் கத்திகள் வாள்கள் சகிதம் திராய்க்கேணி கிராமத்திற்குள் புகுந்தனர்.

இவர்களுக்கு உதவியாக விசேட அதிரடிப்படையினர் கவச வாகனங்களில் வந்து அக்கிராமத்தை சுற்றி வளைத்தனர்.

திராய்க்கேணி கிராமத்திற்குள் புகுந்த முஸ்லீம்கள் ஒவ்வொரு வீடாக சென்று தமிழர்களை தாக்கினர். வீடுகளையும் அவர்களின் உடமைகளையும் தீயிட்டு எரித்தார்கள். முஸ்லிம்களின் தாக்குதல் தீவிரமடைய கிராமமக்கள் அருகிலிருந்த பிள்ளையார் கோயிலில் அடைக்கலம் புகுந்தார்கள்.

பிள்ளையார் கோவிலுக்குள் நுழைந்த முஸ்லீம்கள் தமிழர்களை வெட்டிக்கொலை செய்தனர். இவர்களின் தாக்குதலில் குழந்தைகள், பெண்கள், சிறுவர்கள், முதியவர்கள் என பலரும் கொல்லப்பட்டனர்.

பிள்ளையார் ஆலயத்திற்குள் இருந்தவர்களை முஸ்லீம்கள் வெட்டிக்கொலை செய்து கொண்டிருந்த போது அங்கிருந்த சில பொதுமக்கள் அதன் பின்புறமிருந்த நாகதம்பிரான் கோவிலுக்குள் சென்று தஞ்சமடைந்தனர்.

நாகதம்பிரான் ஆலயத்திற்குள்ளும் நுழைந்த முஸ்லீம்கள் அங்கிருந்தவர்களையும் வெட்டிப்படுகொலை செய்தனர். இதிலிருந்து சிலர் தப்பி காடுகளுக்குள் ஒழிந்து கொண்டனர்.

தப்பி சென்ற சிலரை பிடித்த விசேட அதிரடிப்படையினர் அவர்களை முஸ்லீம்களிடம் கொடுத்தனர். கொலை வெறியுடன் காணப்பட்ட முஸ்லீம்கள் தமிழ் மக்களை வீதியிலும் கோவிலிலும் வைத்து வெட்டிக்கொன்றனர்.

சுமார் 3மணி நேரம் கொலை வெறியாட்டம் நிகழ்ந்தது. ஆலயத்திற்குள் மாத்திரம் 36பேரின் சடலங்கள் காணப்பட்டன. வீதிகளில் 10 சடலங்கள் காணப்பட்டதாக அப்பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர். எனினும் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை 90க்கு மேல் என வடக்கு கிழக்கு மனித உரிமை ஆணைக்குழுவின் வெளியீடு ஒன்றில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

இதன் பின்னர் சம்பவத்தை கேள்விப்பட்ட காரைதீவு முகாமிலிருந்த விசேட அதிரடிப்படையினர் உயிர் தப்பியிருந்தவர்களை தமது வாகனங்களில் ஏற்றி வந்து காரைதீவு பாடசாலையில் தங்க வைக்கப்பட்டனர்.

திராய்க்கேணியில் இருந்த 360 குடும்பங்களின் வீடுகளும் முற்றாக தீயிட்டு கொழுத்தப்பட்டது.

1990ஆம் ஆண்டிலிருந்து 1994ஆம் ஆண்டுவரை இம்மக்கள் காரைதீவு அகதி முகாமிலேயே வசித்து வந்தனர்.

1994ஆம் ஆண்டு பதவிக்கு வந்த சந்திரிக்கா தலைமையிலான அரசாங்கத்திற்கும் விடுதலைப்புலிகளுக்கும் இடையில் சமாதான ஒப்பந்தம் செய்யப்பட்டதை தொடர்ந்து காரைதீவு அகதி முகாமில் 4 வருடங்களாக தங்கியிருந்த மக்கள் மீண்டும் திராய்க்கேணிக்கு சென்று குடியேறிய போதிலும் அப்போது புனர்வாழ்வு புனரமைப்பு மீள்குடியேற்ற அமைச்சராக இருந்த அஷ்ரப் இக்கிராம மக்களுக்கு எந்த வித உதவியும் செய்யவில்லை.

அகதி முகாமில் இருந்தவர்களில் சொற்ப தொகையினரே திராய்க்கேணியில் குடியேறினர். ஏனையவர்கள் அச்சம் காரணமாக வேறு கிராமங்களில் குடியேறினர்.

மீண்டும் முஸ்லீம்கள் தங்களை தாக்குவார்கள் என அஞ்சி தங்களின் பூர்வீக இடங்களில் குடியேற தமிழர்கள் தயங்கியதை தமக்கு சாதகமாக பயன்படுத்திக்கொண்ட முஸ்லீம் அரசியல்வாதிகள் தமிழர்களின் நிலங்களில் முஸ்லீம்களை குடியேற்றினர்.

தமிழர்களின் பூர்வீக கிராமமான திராய்க்கேணியில் இன்று முஸ்லீம்களே அதிகம் வாழ்கின்றனர்.

Saturday, 26 November 2016

HISTORY OF SINHALAS சிங்களவர் இலங்கை வந்த வரலாறு!





HISTORY OF SINHALAS
சிங்களவர் இலங்கை வந்த வரலாறு!

1956-ல் "விஜயனின் வருகை'' என்ற தலைப்புடன் சிறப்பு தபால் தலை ஒன்றை இலங்கை அரசு வெளியிட்டது. குவேனி ஒரு மரத்தடியில் அமர்ந்திருப்பது போலவும், கப்பலில் வந்த விஜயன் அவளிடம் அடைக்கலம் கோருவது போலவும் இந்த தபால் தலை அமைந்திருந்தது.

தபால் தலையை பார்த்த சிங்கள தலைவர்கள், அதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். "விஜயன் இந்தியாவில் இருந்து இலங்கைக்கு வந்தவன் என்ற கருத்து ஏற்கத் தக்கது அல்ல. தவிரவும், விஜயன் வந்தபோதே இங்கு குவேனி என்ற தமிழ்ப்பெண் இருந்திருக்கிறாள் என்று கூறினால், இலங்கையின் பூர்வகுடிகள் தமிழர்கள் என்பதை நாமே ஒப்புக்கொண்டது போலாகிவிடும். எனவே, இந்த தபால் தலையை வாபஸ் பெறவேண்டும்'' என்று கூறினார்கள்.

இதன் காரணமாக, இந்த தபால் தலையை இலங்கை அரசு வாபஸ் பெற்றுக்கொண்டது. ஆனால், அதற்குள் இந்த தபால் தலை உலகம் முழுவதும் பரவி விட்டது


வட இந்தியாவில் இருந்து இலங்கைக்குச் சென்ற விஜயன் என்ற இளவரசன்தான், முதல் சிங்கள அரசை நிறுவியவன் என்று, சிங்களரின் வரலாற்று நூலான மகாவம்சம் கூறுகிறது.

இந்தியாவின் இதிகாசங்களான "ராமாயணம்'', "மகாபாரதம்'' போன்றது பாலி மொழியில் எழுதப்பட்ட "மகாவம்சம்'' என்ற நூல். இதை தங்களின் வேத புத்தகம் போல சிங்களர்கள் மதிக்கிறார்கள்.

இதை தங்கள் "வரலாறு'' என்று சிங்களர்கள் கூறினாலும், நம்ப முடியாத கட்டுக் கதைகளும் இதில் உண்டு.

விஜயன்

இலங்கையில் சிங்கள வம்சத்தை தோற்றுவித்தவன் - இலங்கையின் முதல் சிங்கள மன்னன் விஜயன் என்று மகாவம்சம் கூறுகிறது.

விஜயன் பற்றி மகாவம்சத்தில் பின்வருமாறு கூறப்பட்டுள்ளது:-

"வட இந்தியாவில் உள்ள வங்காளம், ஒரிசா ஆகிய பகுதிகள் ஒரு காலத்தில் லாலாதேசம் என்று அழைக்கப்பட்டது. இந்த ராஜ்ஜியத்தை ஆண்ட மன்னன் பெயர் சிங்கபாகு. இவர் சிங்கத்துக்கும் ஒரு ராஜகுமாரிக்கும் பிறந்தவர்!

பிற்காலத்தில் இவருக்கு உண்மை தெரிகிறது. ஒரு குகையில் இருந்த சிங்கத்தை (தன் தந்தையை) கண்டுபிடித்து தலையை வெட்டி துண்டிக்கிறார்.

சிங்கபாகு, சிகாசிவாலி என்ற பெண்ணை மணந்து அவளை பட்டத்து ராணி ஆக்குகிறார். இவர்களுக்கு 16 முறை இரட்டைக் குழந்தைகள் பிறக்கின்றன! (அதாவது 32 குழந்தைகள்)

இந்தக் குழந்தைகளில் மூத்தவன் விஜயன். அவனை பட்டத்து இளவரசனாக சிங்கபாகு நியமிக்கிறார்.

மக்கள் புகார்

விஜயன் மிகவும் கொடூரமானவன். அவன் செய்த அட்டூழியங்கள் பற்றி, மன்னனிடம் மக்கள் முறையிடுகிறார்கள். மகனைத் திருத்த முயற்சிக்கிறார், சிங்கபாகு. ஆனால் விஜயன் திருந்தவில்லை. நண்பர்களுடன் சேர்ந்து கொண்டு, மக்களைத் துன்புறுத்துகிறான்.

அவன் அட்டூழியங்கள் எல்லை மீறிப்போனதால், மன்னனிடம் மக்கள் மீண்டும் முறையிடுகிறார்கள். "விஜயனுக்கு மரண தண்டனை விதியுங்கள்'' என்று வற்புறுத்துகிறார்கள்.

இதன் காரணமாக, விஜயனையும், அவன் நண்பர்கள் 700 பேர்களையும் நாடு கடத்துகிறார், மன்னர். இவர்களை மூன்று கப்பல்களில் ஏற்றி, "எங்காவது போய் பிழைத்துக் கொள்ளுங்கள். இனியாவது திருந்தி வாழுங்கள்'' என்று புத்திமதி கூறி அனுப்பி வைக்கிறார். மூன்று கப்பல்களும் இலங்கையை அடைகின்றன.

அடைக்கலம் கொடுத்த அழகி


விஜயன் கப்பலை விட்டு இறங்கி, இலங்கைத் தீவில் காலடி வைக்கிறான். இது கி.மு. 543-ல் நடந்தது.

விஜயன் இறங்கிய இடம் அழகிய இயற்கைக் காட்சிகள் கொண்டது. அங்கு ஒரு மரத்தடியில் குவேனி என்ற பெண் அமர்ந்திருக்கிறாள். இவள் ராட்சச குலத்தைச் சேர்ந்தவள்.

(குவேனி என்ற சொல், கவினி என்ற தமிழ்ச் சொல்லின் திரிபு ஆகும். கவினி என்றால் "பேரழகு படைத்தவள்'' என்று பொருள்.

இலங்கையை ஆண்ட ராவணன் ராட்சதன் என்று கூறப்பட்டதுபோல, குவேனியையும் ராட்சத குலம் என்று வர்ணிக்கிறது, "மகாவம்சம்'')
குவேனியை விஜயன் சந்தித்து அடைக்கலம் கோருகிறான். அவள் அடைக்கலம் அளிக்கிறாள்.

இருவருக்கும் காதல் ஏற்பட்டு, திருமணம் செய்து கொள்கிறார்கள். இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் பிறக்கிறார்கள்.

பாண்டிய இளவரசி

விஜயனுடன் இலங்கை சென்ற அவனுடைய 700 நண்பர்களும் பல நகரங்களையும், கிராமங்களையும் உருவாக்குகிறார்கள். அந்தப் பகுதிகளை உள்ளடக்கிய ராஜ்ஜியத்துக்கு மன்னனாகும்படி, விஜயனை கேட்டுக் கொள்கிறார்கள்.

ஆனால், விஜயன் மறுத்து விடுகிறான். "ராஜ குடும்பத்தைச் சேர்ந்த ஒரு இளவரசியை நான் மணந்தால்தான், சிம்மாசனம் ஏறமுடியும்'' என்று கூறுகிறான்.

இதன் காரணமாக, விஜயனின் நண்பர்கள் மதுரைக்கு செல்கிறார்கள். மதுரை மன்னனுக்கு முத்துக்கள், தங்க ஆபரணங்கள் முதலியவற்றை பரிசாக வழங்கி, தங்கள் மன்னனான விஜயனுக்கு இளவரசியை மணமுடித்து வைக்குமாறு கேட்டுக்கொள்கிறார்கள்.

இதற்கு பாண்டிய மன்னன் சம்மதிக்கிறார். பாண்டிய இளவரசியுடன், விஜயனின் 700 நண்பர்களுக்கும் 700 பெண்களை தேர்வு செய்து, இலங்கைக்கு அனுப்பி வைக்கிறார்.

குவேனியின் கதி

பாண்டிய இளவரசி தன்னை மணப்பதற்கு இசைந்து இலங்கைக்கு வந்து விட்டதை அறிந்து விஜயன் மிகவும் மகிழ்ச்சி அடைகிறான்.

குவேனியை அழைத்து, "நான் பாண்டிய ராஜகுமாரியை மணக்கப்போகிறேன். என்னுடைய இரண்டு குழந்தைகளையும் என்னிடம் ஒப்படைத்துவிட்டு, இங்கிருந்து போய்விடு'' என்று கூறுகிறான்.

இதனால் வேதனை அடைந்த குவேனி, குழந்தைகளை அழைத்துக்கொண்டு "லங்காபுரா'' என்ற இடத்துக்கு போய்விடுகிறாள். இவர்களுடைய வம்சாவளியினர், இலங்கையின் பழங்குடியினராக உள்ள வேட்டுவர்கள்.

திருமணம்

பாண்டிய ராஜகுமாரியை மணந்து கொண்ட விஜயன், அவளுடன் வந்த 700 பெண்களுக்கும் அமைச்சர்களாக உள்ள தன் நண்பர்களை அவரவர் தகுதிக்கு ஏற்ப மணம் முடித்து வைக்கிறான்.

முன்பு கொடியவனாகவும், முரடனாகவும் இருந்த விஜயன் நல்லவனாக திருந்தி, 38 ஆண்டு காலம் தர்மம் தவறாமல் இலங்கையை ஆண்டான். அவனது சந்ததிகளே சிங்களர்கள்.''

இவ்வாறு மகாவம்சம் கூறுகிறது.