Showing posts with label BJP. Show all posts
Showing posts with label BJP. Show all posts

Sunday, 8 November 2020

LAL KRISHNA ADVANI , BJP CHIEF BORN 1927 NOVEMBER 8

 

LAL KRISHNA ADVANI ,

BJP CHIEF BORN 1927 NOVEMBER 8




.லால் கிருஷ்ண அத்வானி (சிந்தி மொழி: लाल कृष्ण आडवाणी لال ڪرشنا آڏواڻي, பிறப்பு நவம்பர் 8, 1927, கராச்சி) பாரதிய ஜனதா கட்சி தலைவர்களில் ஒருவர் ஆவார். அத்வானி ஆர்.எஸ்.எஸ் ஊழியர். இந்திய மக்களவையில் எதிர்க்கட்சித் தலைவராக இருந்தவர். 2002 முதல் 2004 வரை இந்தியாவின் துணைப் பிரதமராகப் பணி ஆற்றினார். பாரதிய ஜனதா கட்சி இவரை மே 2009இல் நடைபெற்ற இந்திய பொதுத் தேர்தலில் பிரதமர் வேட்பாளராக அறிவித்தது. 2015 ஆம் ஆண்டு மார்ச்சுத் திங்கள் 30 ஆம் தேதி அன்று எல்.கே. அத்வானிக்கு நாட்டின் இரண்டாவது உயரிய விருதான பத்ம விபூசன் விருது வழங்கப்பட்டது.


இளமைக் காலம்


சிந்து மாகாணத்தின் கராச்சி நகரில் பிறந்தவர். இவரது பெற்றோர் கிஷன்சந்த டி. அத்வானி மற்றும் ஞானிதேவி ஆவர். தன் பள்ளிக்கல்வியை கராச்சியிலுள்ள புனித பேட்ரிக் உயர் நிலைப்பள்ளியில் கற்றார். அதன் பின்னர் சிந்து மாகாணத்தின் ஹைதிராபாத்திலுள்ள அரசு கல்லூரியில் இணைந்தார். இந்தியா - பாகிஸ்தான் பிரிவினையின் போது இவரது குடும்பர் பாகிஸ்தானிலிருந்து இடம் பெயர்ந்து மும்பையில் குடியேறியது. மும்பை பல்கலைக்கழகத்தின் சட்டக்கல்லூரியில் சட்டப்படிப்பினை முடித்தார்.


அரசியல்

அத்வானி தனது 14 ஆம் வயதில் 1941 ஆம் ஆண்டு ராஷ்டிரிய சுயம்சேவாக் சங்கத்தில் இணைந்தார்.[1] கராச்சி பகுதி கிளையின் முழு நேர ஊழியராக பணியாற்றினார்.[2] இந்திய - பாகிஸ்தான் பிரிவினைக்குப் பின்னர் ராஜஸ்தான் மாநிலத்திற்கு பணி செய்ய அனுப்பப்பட்டார். அங்கு ஆல்வார், பாரத்பூர், கோட்டா, பிண்டி மற்றும் ஜாலாவார் மாவட்டங்களில் 1952 வரை பணியாற்றினார்.[3] ஸ்யாம் பிரகாஷ் முக்கர்ஜி 1951 ல் தொடங்கிய ஜன சங்கத்தில் ராஷ்டிரிய சுயம்சேவாக் சங்கம்


இணைந்ததும் அத்வானி ஜன சங்கத்தின் உறுப்பினரானார். ஜனசங்கத்தின் பொதுச் செயலாளராக இருந்த எஸ்.எஸ். பண்டாரியின் செயலாளராக அத்வானி ராஜஸ்தானில் நியமிக்கப்படுகிறார். பின்னர் 1957 ஆம் ஆண்டு பாராளுமன்ற விவகாரங்களைக் கையாளுவதற்காக தில்லி அனுப்பப்படுகிறார். தில்லி ஜன சங்கத்தின் பொதுச் செயலாளராக நியமிக்கப்படுகிறார். 1966 ல் ஜன சங்கத்தின் தேசியத் தலைவர்களில் ஒருவராக அத்வானி நியமிக்கப்படுகிறார்.


இந்திரா காந்தி அமுல்படுத்திய அவரசநிலைப் பிரகடனத்தின் பின்னான தேர்தலில் அத்வானி வெற்றி பெற்று மொரார்ஜி தேசாய் அமைச்சரவையில் தகவல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சராக பதவியேற்றார்.[4]



பாரதீய ஜனதாக் கட்சி உருவாக்கப்பட்ட பின்னர் 1982 களிலிருந்து இரண்டு முறை பாராளுமன்ற மேலவை உறுப்பினராக இருந்தார்.


சுயசரிதை

எனது நாடு எனது வாழ்க்கை (My country My life) எனும் பெயரில் 19 மார்ச் 2008 அன்று அப்துல்கலாம் இவரது சுயசரிதையை வெளியிட்டார். அவரது வாழ்க்கை நிகழ்வுகளை விவரிக்கும் 1040 பக்கங்களைக் கொண்டது இப்புத்தகம். புனைவல்லாத வகையில் மிக அதிகம் விற்பனையான புத்தகங்களுள் இதுவும் ஒன்றாக இருந்தது. இந்தியா - பாகிஸ்தான் பிரிவினைக் கால வரலாற்றையும், 1900 லிருந்து 2017 வரையிலான இந்திய வரலாற்றினையும் கொண்டது இப்புத்தகம்.


ராதயாத்திரைகள்

மொத்தம் ஆறு ரத யாத்திரைகளை ஒருங்கிணைத்துள்ளார்.[5]


ராமர் ரத யாத்திரை - குஜராத்தின் சோம்நாத்திலிருந்து உத்திரப் பிரதேசத்தின் அயோத்தி வரையிலான ரத யாத்திரை.[6]

ஜனதேஷ் யாத்திரை - சட்டத்திருத்தத்திற்கு எதிரான ரத யாத்திரை - மைசூரிலிருந்து போபால் வரையிலான ரத யாத்திரை.[7]

ஸ்வர்ண ஜெயந்தி ரத யாத்திரை - இந்தியாவின் 50 ஆண்டு சுதந்திர தின விழாவினை கொண்டாடும் விதமாக நடத்தப்பட்ட ரத யாத்திரை.[8]

பாரத உதய் ரத யாத்திரை - அமிர்தசரஸிலிருந்து கன்னியாக்குமரிக்கும் குஜராத்திலிருந்து ஒரிஸாவிற்கும் நடத்தப்பட்ட யாத்திரை.[9]

பாரத சுரக்‌ஷா யாத்திரை - குஜராத்திலிருந்து தில்லிக்கும்நடத்தப்பட்ட யாத்திரை.[10]

ஜனசேதனா யாத்திரை - பீஹாரில் நடத்தப்பட்ட யாத்திரை.[11]

Thursday, 22 October 2020

AMIT SHAH , PRESIDENT OF BJP BORN 1964 OCTOBER 22

 

AMIT SHAH , PRESIDENT OF BJP 

BORN 1964 OCTOBER 22



.அமித் சா அல்லது அமித் ஷா (ஆங்கில மொழி: Amit Shah, பிறப்பு:1964) பாரதிய ஜனதா கட்சியின் அகில இந்தியத் தலைவர் ஆவார். இவர் ஒரு தொழிலதிபராகத் தம் வாழ்க்கையைத் தொடங்கி அரசியல்வாதியாக ஆனவர். நரேந்திர மோதியின் வலக்கையாக அரசியல் களத்தில் வலம் வருபவர்.[1] மோதியின் அமைச்சரவையில் உள்துறை அமைச்சராகப் பதவி வகித்தவர். ஆனால் 2010இல் அவர் உத்தரவின் பேரில் குசராத் மாநில காவல்துறையால் நடத்தப்பட்டதாகச் சொல்லப்பட்ட காவல்துறை மோதல் கொலைகள் வழக்கின் காரணமாகத் தன் அமைச்சர் பதவியைத் துறக்க நேர்ந்தது.[2][3][4] 2014 இந்திய நாடாளு மன்றத் தேர்தலில் பாரதிய சனதா கட்சியின் உத்தரபிரதேச மாநிலத்தின் தேர்தல் பரப்புரை மேலாளராக நியமிக்கப்பட்டார்.[5] இத் தேர்தலில் உத்தரபிரதேச மாநிலத்தில் பாரதிய சனதா கட்சி பெரும் வெற்றி அடைந்ததற்கு அமித் சாவின் உழைப்பும் சாதுரியமும் திறமையுமே காரணம் என்ற கருதப்படுகிறது.[6]


பிறப்பு, கல்வி, பணி


அமித் சா 1964 ஆம் ஆண்டில் ஒரு வசதியான குடும்பத்தில் பிறந்தார். அவருடைய தந்தை ஒரு தொழில் அதிபர் ஆவார். பயோவேதியியலில் இளையர் பட்டம் பெற்றார்.[3] சிலகாலம் பங்குச் சந்தைத் தொழிலில் ஈடுபட்டார். குசராத்து மாநில நிதிக் குழுமத்தில் தலைவராகவும் ஆமதாபாது மாவட்ட கூட்டுறவு வங்கியின் தலைவராகவும் பணி செய்தார்.


அரசியல் வாழ்க்கை


தொடக்கத்தில் இராட்டிரிய சுயம்சேவக் சங்க உறுப்பினராகவும், பாரதிய சனதா கட்சியின் மாணவர் பிரிவான அகில பாரத வித்யார்த்தி பரிசத் (ABVP) என்ற அமைப்பின் தலைவராகவும் இருந்தார். 1985இல் நரேந்திர மோதியின் கீழ் இளைஞர் அணியில் பணியாற்றினார். பின்னர் பா.ஜ.க.வில் இணைந்தார். குசராத்தில் காந்திநகர் மக்களவைத் தொகுதியில் அத்வானிக்காக தேர்தல் பொறுப்பாளராகப் பலமுறை பணி செய்தார்.[7] 2002ஆம் ஆண்டில் நரேந்திர மோதி அமைச்சரவையில் குசராத்து மாநில உள்துறை அமைச்சராகப் பதவி ஏற்றார். 2005ஆம் ஆண்டில் நிகழ்ந்த சொராப்தீன் சேக் கொலை வழக்கில் அமித் சா மீது குற்றம் சாட்டப் பட்டது. 2007 ஆம் ஆண்டில் அமைந்த அமைச்சரவையிலும் அமைச்சரானார். 2009 ஆம் ஆண்டில் இளம்பெண் வேவு பார்க்கப்பட்ட சிக்கலில் அமித் சாவின் பெயர் அடிபட்டது. காவல்துறை மோதல் வழக்கில் சிக்கிய அமித் சா குசராத்தை விட்டு வெளியேறவேண்டும் என்று இந்திய உச்ச நீதிமன்றம் ஆணையிட்டது. இதனால் அவர் உத்தரப்பிரதேச மாநிலத்திற்கு அனுப்பப்பட்டார். சொராப்தீன் சேக் கொலை வழக்கில் இருந்து சில ஆண்டுகளுக்கு பிறகு நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்டார்.



2014 இந்திய பொதுத் தேர்தல்

சூன் 2013 இல் உத்தரப் பிரதேசத் தேர்தல் பிரசாரக் குழுத் தலைவராக அமர்த்தப்பட்டார்.[8][9] ஓராண்டுக் காலம் அங்கு தங்கி பா.ஜ.க. வளர்ச்சிக்காகக் கிராமங்கள் தோறும் சென்று மக்களைச் சந்தித்துப் பேசினார். 2014 இல் நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் உ.பி.யின் 80 தொகுதிகளில் 71 தொகுதிகளில் பா.ஜ.க வெற்றி பெற்றதற்கு அமித் சாவின் உழைப்பும் சாதுரியமும் திறமையும் காரணங்கள் என்று அரசியல் நோக்கர்கள் கருதுகிறார்கள்.[10][11] உள்துறை அமைச்சராகப் பொறுப்பேற்ற ராஜ்நாத் சிங், பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் பதவியிலிருந்து விலகியதால் அமித் ஷா அப்பதவிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[12]

Monday, 12 October 2020

KUSHPOO , ACTRESS POLITICAL HISTORY - DMK TO BJP VIA CONGRESS

 

KUSHPOO , ACTRESS POLITICAL HISTORY 

- DMK TO BJP VIA CONGRESS




`காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகி பா.ஜ.க-வில் இணையப்போகிறார் குஷ்பு' என்ற வதந்தியை உண்மையாக்கியிருக்கிறார் நடிகை குஷ்பு. திரையுலகிலிருந்து தமிழக அரசியல் வரையிலான அவரது பயணங்கள் குறித்த மீள்பார்வை இந்தக் கட்டுரை. ``காங்கிரஸ் கட்சியில் எனக்கு எந்தப் பிரச்னையும் இல்லை; மகிழ்ச்சியாக இருக்கிறேன். ஆனால், ஒரு ட்வீட்டுக்கு 2 ரூபாய் வாங்கிக்கொண்டு, `நான் பா.ஜ.க-வில் சேரப்போவதாக’ச் சிலர் வதந்தி பரப்பிக்கொண்டிருக்கிறார்கள்’’ என்று கடந்த வாரம் டெல்லியில் பேட்டி கொடுத்த குஷ்பு, இப்போது அதே டெல்லியில், பா.ஜ.க-வில் இணைந்திருக்கிறார்.


.

தமிழ்த் திரையுலகில், 80-களின் இறுதியில் இளம் கதாநாயகியாக அறிமுகமான குஷ்பு, 90-களில் முன்னணிக் கதாநாயகியாக வலம்வந்தார். கோயில் கட்டும் அளவுக்கு, கதாநாயகர்களுக்கு ஈடான ரசிகர்களைக்கொண்டிருந்தவர். திரையுலகில் பிரபலமாக இருந்தபோதே, அ.தி.மு.க ஆதரவு தொலைக்காட்சியான ஜெயா டி.வி-யில் 'ஜாக்பாட்' நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கியதோடு, சின்னத்திரை தொடர்களிலும் பிஸியான நடிகையாக வலம்வந்தார்.இந்த நிலையில்தான், தமிழக அரசியலுக்குள்ளும் காலடி எடுத்துவைக்க நினைத்தார். ஜெயா டி.வி-யில் நிகழ்ச்சித் தொகுப்பு, ஜெயலலிதாவின் துணிச்சலைப் பாராட்டிப் பேசிய பேச்சுகள் என குஷ்புவின் செயல்பாடுகளைவைத்து அவரது அரசியல் ஈர்ப்பை கணித்தவர்கள், `அ.தி.மு.க-வில் இணைவார் குஷ்பு' என்று ஆரூடம் எழுதினர். ஆனால், அவரோ யாருமே எதிர்பாராதவகையில், தடாலடியாக தி.மு.க-வில் தன்னை இணைத்துக்கொண்டார்.

.




அங்கேயும்கூட, 2013-ம் ஆண்டில், கட்சியின் தலைமை குறித்து அவர் சர்ச்சைக்குரிய கருத்துகளைத் தெரிவித்ததாகக் கூறி, தி.மு.க தொண்டர்களாலேயே கடுமையாக விமர்சிக்கப்பட்டார். இதையடுத்து கட்சியிலிருந்து விலகியவர், 2014-ம் ஆண்டு ராகுல் காந்தி, சோனியா காந்தி முன்னிலையில் தன்னை காங்கிரஸ் கட்சியில் இணைத்துக்கொண்டார். தமிழ்நாட்டில், அப்போது மாநிலத் தலைவராக பொறுப்பு வகித்துவந்த ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனின் தீவிர ஆதரவாளராகவும் தன்னைக் காட்டிக்கொண்டார். இந்தநிலையில், தமிழக காங்கிரஸ் தலைவராக ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனுக்குப் பிறகு பொறுப்பேற்றவர்கள், தன்னைப் பெரிதாக மதிக்கவில்லை என்ற மனக்குறை அவருக்குள் எழ ஆரம்பித்தது. இதை வெளிப்படுத்தும்விதமாக, ``காங்கிரஸ் கட்சியை நம்பி நான் இல்லை'', ``தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியினர் என்னை மதிப்பதில்லை'' என்று தனது அதிருப்திகளை அவ்வப்போது பேட்டியாகக் கொடுத்துவந்தார்.ஆனால், கட்சித் தரப்பிலோ, ``கட்சியின் தேசிய செய்தித் தொடர்பாளர் பதவியில் இருந்தாலும்கூட, மாநில அளவிலான கட்சிச் செயல்பாடுகளில் அவர் பெரிதாக ஆர்வம் காட்டுவதில்லை. தேர்தல் சமயங்களில் மட்டுமே தலைகாட்டுகிறார். மக்கள் பிரச்னைகளைத் தீர்ப்பதற்கான போராட்டக் களங்களில் கலந்துகொள்வதையே தவிர்க்கிறார்'' என்று குற்றச்சாட்டுகள் வாசிக்கப்பட்டன. ஆனால், குஷ்புவோ ``ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் முன்னாள் தலைவர் அல்ல... அவர்தான் எந்நாளும் தமிழக காங்கிரஸ் கமிட்டியின் தலைவர்!'' என்றார் அதிரடியாக. மேலும், கட்சிக் கொள்கைகளுக்கு மாறான தனது தனிப்பட்ட கருத்துகளையும் ட்விட்டரில் தொடர்ந்து பதிவிட்டு வந்தார்.



.

`முத்தலாக் முறையால் முஸ்லிம் பெண்கள் மிகப்பெரிய அளவில் பாதிக்கப்படுகிறார்கள். இனியும் அதைப் பொறுத்துக்கொள்ள முடியாது' என்று கூறி `முத்தலாக் தடைச் சட்டத்தை'க் கொண்டுவந்தது மத்திய பா.ஜ.க அரசு. இந்தச் சட்டத்தை காங்கிரஸ் கட்சி மிகக் கடுமையாக எதிர்த்துவந்தபோதும், ``பெண்களின் உரிமையைக் காக்குவிதத்தில், முத்தலாக் முறையில் மாற்றம் கொண்டுவர வேண்டும்'' என்று கூறி முத்தலாக் தடைச் சட்டத்தை ஆதரித்தார் குஷ்பு. இது குறித்து, கடந்த 2017-ம் ஆண்டு விகடன் டிஜிட்டல் தளத்தில், ``முத்தலாக் விவகாரத்தில், காங்கிரஸ் கட்சியின் நிலைப்பாட்டுக்கு எதிரான உங்களது கருத்தில் இப்போதும் உறுதியாக இருக்கிறீர்களா?’’ என்ற கேள்விக்கு பதிலளித்தவர்,``நான் எப்போதும் கட்சிக்கு எதிராகப் பேசியதே கிடையாது. `மாற்றங்கள் வர வேண்டும். அந்த மாற்றங்களும் அந்தந்த மதங்களைச் சார்ந்தவர்களை அழைத்துப் பேசியே கொண்டுவரப்பட வேண்டும்’ என்றுதான் நாங்கள் எல்லோருமே சொல்லிவருகிறோம். இந்த விவகாரத்தைப் பொறுத்தவரையில் ஏற்கெனவே அம்பேத்கர் தனியாக ஒரு சட்டத்தைக் கொண்டுவந்திருக்கிறார். அதாவது, அவரவர் மத நம்பிக்கைகள் சார்ந்து முடிவு எடுக்கக்கூடிய உரிமைகள் மக்களுக்கு இருக்கின்றன. காலங்கள் மாறும்போது, மாற்றங்களும் வரும். அது எந்தவிதமான மாற்றம் என்பதை அவர்கள்தான் முடிவெடுக்க வேண்டும்'' என்றார்.


பா.ஜ.க-வின் அடிப்படைக் கொள்கைகளின் ஒன்றான, `பொது சிவில் சட்டம் சிறுபான்மையினரின் உரிமையைப் பறிக்கும் செயல்' எனக் கூறி எதிர்க்கட்சிகள் ஒருசேர எதிர்ப்பு குரல் எழுப்பிவந்த வேளையிலும், ஆதரவுக் குரல் கொடுத்து அனைவரையும் அதிரவைத்தார் குஷ்பு.

2019 தேர்தல் தோல்விக்குப் பிறகு கட்சியின் தலைவர் பொறுப்பை ராஜினாமா செய்தார் ராகுல் காந்தி. ஆனாலும் `தலைவராக ராகுல் காந்திதான் மீண்டும் பொறுப்பேற்க வேண்டும்' என்ற ஆதரவுக் குரல்கள் கட்சிக்குள் பெரும்பான்மையாக இருந்துவரும் சூழலிலும், ``அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவராக ஜோதிராதித்ய சிந்தியா அல்லது சச்சின் பைலட் ஆகிய இருவரில் ஒருவரைத் தேர்ந்தெடுக்கலாம்’' என்று அதிரடியாகக் கருத்து தெரிவித்து கட்சியின் அகில இந்தியத் தலைமையின் வெறுப்பையும் சம்பாதித்தார்.அண்மையில், பா.ஜ.க கொண்டுவந்திருந்த `புதிய கல்விக் கொள்கை'யின் மும்மொழித் திட்டம் தமிழ்நாட்டில் கடும் கொந்தளிப்பு சூழலை உருவாக்கியிருக்கும் நிலையிலும்கூட, புதிய கல்விக் கொள்கை, மும்மொழித் திட்டத்தை வரவேற்று ட்விட்டரில் பதிவிட்டார் வட இந்தியரான குஷ்பு. காங்கிரஸ் கட்சியின் கொள்கைகளுக்கு மாறான அவரது கருத்துகள் மாநிலத் தலைமைக்கு கடும் கோபத்தை வரவழைத்தது. `காங்கிரஸில் கருத்து சுதந்திரம் உண்டு. கட்சியின் அமைப்புக்குள் பேசினால் அதற்கு வரவேற்பு உண்டு. வெளியில் பேசினால், அதன் பெயர் முதிர்சியின்மை. விரக்தி, ஒழுக்கமின்மையிலிருந்து வருகிறது. விரக்திக்குச் சிறந்த மருந்து யோகா!' என்று ட்விட்டரிலேயே காரசார பதிலடி கொடுத்தார் மாநிலத் தலைவர் கே.எஸ்.அழகிரி. ஆனால், இப்படிச் சொந்தக் கட்சிக்குள்ளாகவே அவர் தெரிவித்துவரும் எதிர்க் கருத்துகள் குறித்த கேள்விகள் எழும்போதெல்லாம், `அது என்னுடைய நேரடியான கருத்து இல்லை' என்றோ அல்லது `இது என்னுடைய தனிப்பட்ட கருத்து' என்றோ வார்த்தை ஜாலங்களினால் தன் நிலைப்பாட்டை நியாயப்படுத்திவந்தார் குஷ்பு.



சொந்தக் கட்சிக்குள்ளாகவே கலகக் கருத்துகளை வெளியிட்டுவந்தவர், எதிர்க்கட்சியான பா.ஜ.க-வை விட்டுவைப்பாரா என்ன... பா.ஜ.க-வையும் அதன் தலைவர்களையும் மிகக் கடுமையான வார்த்தைகளால் வதம் செய்தார்.``தாம்பரத்தைத் தாண்டினா தாமரைன்னா என்னன்னு யாருக்கும் தெரியாது'' என்று சில வருடங்களுக்கு முன்னர் கிண்டலடித்தவர், பா.ஜ.க-வின் தேசியச் செயலாளரான ஹெச்.ராஜாவைப் பற்றிக் குறிப்பிடும்போது, ``ஹெச்.ராஜா லெவலுக்குப் பேச வேண்டுமென்றால், பாதாளச் சாக்கடையில் இறங்கி நின்றுதான் பேச வேண்டும்'' என்று நேரடியாகப் போட்டுத் தாக்கியிருந்தார். அண்மையில், ஜூனியர் விகடனுக்கு அவர் அளித்திருந்த பேட்டியில், ``ஹெச்.ராஜாவுக்கு பதில் கொடுப்பது என் கௌரவத்துக்கு இழுக்கு” என்று `கெத்து' காட்டியிருந்தார்.



பிரதமர் நரேந்திர மோடி குறித்துப் பேசும்போது, ``பிரதமர் மோடி, ஆடம்பரமாக 10 லட்சம் ரூபாய் செலவில் ஆடை அணிகிறார்; உலகம் சுற்றும் வாலிபராக இருக்கிறார். மோடி மஸ்தான் வேலை காட்டி, ஆட்சியைப் பிடித்தவர் நரேந்திர மோடி'' என்றெல்லாம் கடந்த காலங்களில், மிகக் கடுமையான வார்த்தைகளில் விளாசியிருக்கிறார் குஷ்பு.இவை எல்லாவற்றுக்கும் மேலாக, இதுநாள்வரை தன்னை ஒரு பகுத்தறிவாளராகக் காட்டிவந்தவர் குஷ்பு. மேலும், `நான் ஒரு பெரியாரிஸ்ட்' என்று வெளிப்படையாகவே அறிவித்துக்கொண்டவர். `பெரியார்' திரைப்படத்தில் மணியம்மை பாத்திரத்தில் தான் நடித்திருந்ததைப் பற்றிப் பேசும்போது, அதைத் தனது திரையுலக வாழ்வின் பெருமையாகக் குறிப்பிட்டிருக்கிறார்.



காங்கிரஸ் கட்சிக்கு எதிரான கருத்துகளை அவர் தெரிவித்தபோதெல்லாம், `பா.ஜ.க-வில் இணைகிறார் குஷ்பு' என்ற செய்திகள் படபடக்கும். ஆனால், `காங்கிரஸ் கட்சியின் கொள்கைகளுக்கு மாறாக எனது தனிப்பட்ட கருத்துகளை நான் தெரிவிப்பதாலேயே பா.ஜ.க-வில் நான் இணையப்போவதாக எண்ணிவிடாதீர்கள். அது ஒருபோதும் நடக்காது' என்று திட்டவட்டமாகப் பேசிவந்தவர் குஷ்பு..


இயல்பாகவே முற்போக்குச் சிந்தனைகளைக்கொண்டிருந்த குஷ்பு, இந்துத்துவா அரசியலை முன்னிறுத்தும் பா.ஜ.க-வில் தற்போது அடைக்கலமாகியிருப்பது, பல்வேறு கேள்விகளை எழுப்பியிருக்கிறது.இப்போதும்கூட, 'குஷ்புவின் கணவர் சுந்தர்.சி-க்கு பணப் பிரச்னை ஏற்பட்டிருக்கிறது. கணவர் கொடுத்த அழுத்தத்தினாலேயே அவர் பா.ஜ.க-வில் இணைந்திருக்கிறார்' என்றெல்லாம் காங்கிரஸ் தலைவர்களே பேச ஆரம்பித்திருக்கிறார்கள். ஆனால், உண்மை என்னவென்பதை குஷ்புதான் வாய் திறந்து சொல்ல வேண்டும்!


.


Saturday, 22 August 2020

BJP VS ADMK




BJP VS ADMK


நீங்கள் ராமன் பெயரை சொல்லிக் கொண்டு ரத யாத்திரை நடத்திக் கொண்டிருந்தபோது...
நாங்கள் கள்ளிப்பாலிடமிருந்து, பெண் குழந்தைகளை தொட்டில் குழந்தை திட்டங்கள் மூலம் காப்பாற்றியிருந்தோம்.
நீங்கள் மத கலவரத்தில் முனைப்பாய் இருந்தபோது....
நாங்கள் ஐடி பார்க்குகளையும் ஆட்டோமொபைல் தொழிற்சாலைகளையும் உருவாக்கியிருந்தோம்!
நீங்கள் மாட்டுக்கறி வைத்திருந்ததாக சொல்லி அங்கு அப்பாவிகளை கொலை செய்து கொண்டிருந்தபோது.....
இங்கு நாங்கள் அம்மா உணவகங்களை அமைத்து அனைவருக்கும் வயிறார உணவு பரிமாறியிருந்தோம்‌.
கோமியமே அருமருந்து, அதை வைத்து சகல நோய்களையும் தீர்க்க முடியும் என நீங்கள் பேசிக் கொண்டிருந்தபோது.....
இங்கு நாங்கள் மாவட்டத்திற்கு ஒரு மருத்துவக்கல்லூரி கட்டியிருந்தோம்!

நீங்கள் ஹஜ் மானியத்தை நிறுத்தியபோது.....
நாங்கள் ஹஜ் மானியத்தோடு சேர்த்து ஜெருசலேம் புனித பயணத்திற்கும், கைலாச யாத்திரைக்கும் மானியங்களை வழங்கியிருந்தோம்!
நீங்கள் வடக்கே பள்ளிக்கூடங்களை கோசாலைகளாக மாற்றிக் கொண்டிருந்தபோது.....
நாங்கள் எங்கள் மாணவச் செல்வங்களுக்கு மடிக்கணினிகளை கொடுத்திருந்தோம்!
இதுபோல் இன்னும் நிறைய பட்டியலிடலாம்
ஏனென்றால், நீங்கள் வேறு, நாங்கள் வேறு!
உங்கள் சித்தாந்தம் மனு நீதி,
எங்கள் சித்தாந்தமோ சமூக நீதி!
உங்களால் எப்போதும் ஒடுக்கப்பட்ட, எளிய மக்களின் பக்கம் நிற்கவே முடியாது.
அதுவரை நீங்கள் எந்த வேஷம் போட்டுக்கொண்டு எங்களிடம் வந்தாலும் #இந்த_தமிழ்_மண்_உங்களை_நம்பாது!

Tuesday, 16 August 2016

DELHI CHIEF MINISTER ARVIND KEJRIVAL BORN ON 1968 AUGUST 16


DELHI CHIEF MINISTER ARVIND KEJRIVAL BORN ON 1968 AUGUST 16


About Arvind Kejriwal

Arvind Kejriwal is a social activist and politician. He is the CM designate of Delhi as his party AAP won 67 of the 70 assembly seats of Delhi.
 He launched the Aam Aadmi Party (AAP) in 2012. 


A former Indian Revenue Service officer, he is better known for his key role in drafting the Jan Lokpal Bill.


In 1999, Kejriwal founded Parivartan, an NGO aiming to assist the citizens in electricity, income tax and food ration-related matters. He won the 2006 Ramson Magsaysay Award for Emergent Leadership for his contribution to empower the poorest at the grassroots level and implement the Right to Information Act (RTI). He created a corpus fund with the award money and founded the NGO ‘Public Cause Research Foundation’ in 2006. 

Kejriwal also published a book called Swaraj in 2012. 


Arvind Kejriwal was sworn in as Delhi Chief Minister for the first time on 28 December 2013 at the Ramlila Maidan and formed the government with Congress's support. However, his tenure lasted for only 49 days as he decided to resign from his post after both BJP and Congress turned adamant and put their foot down against giving clearance to Aam Aadmi Party's Jan Lokpal Bill. 

One Year of Kejriwal Government


Kejriwal’s one-year-old government has seen quite a few hits and misses. While he started the AAP government started delivering on the promises of subsidy on power consumption, the government was put in the dock when a rift within party came out in open after Yogendra Yadav and Prashant Bhushan were kicked out of the party. 


Some of the promises that the AAP government kept include regularisation of unauthorised colonies, launching anti-corruption helpline, and providing licences to e-rickshaws. What brought much ill repute to AAP government is the constant spat with the Centre. 

Kejriwal not only accused the LG Najeeb Jung of rendering an elected government ineffective, he took pot-shots at Delhi police chief B. S. Bassi for not being "competent enough" to ensure the safety of the people. 

Personal background of Arvind Kejriwal

Arvind Kejriwal was born on 16 August 1968 in Bhiwani, Haryana, to a well-educated couple, Gobind Ram Kejriwal and Gita Devi.


 Arvind Kejriwal has a younger brother and a younger sister. His father, Gobind Ran Kejriwal, was an electrical engineer from the Birla Institute of Technology, Mesra. His father’s work related transfers led him to several different places. Consequently, Arvind Kejriwal had to spend his childhood mostly in towns like Ghaziabad, Hisar and Sonepat.



 He studied at the Campus School in Hisar. Arvind Kejriwal graduated in mechanical engineering from the Indian Institute of Technology, Kharagpur, in 1989. He also spent some time at the Ramkrishna Mission and Nehru Yuva Kendra in Kolkata. 
KEJRIWAL IN RIGHT IN BACK


Kejriwal is married to Sunita, his batch mate from the National Academy of Administration, Mussoorie. She is an IRS officer. They have two children - a daughter, Harshita, and a son, Pulkit. Arvind Kejriwal is a pure vegetarian and has been a regular practitioner of Vipassana.