Showing posts with label T.R.Rajakumari. Show all posts
Showing posts with label T.R.Rajakumari. Show all posts

Saturday, 8 August 2020

T.R.RAJAKUMARI ,A LEGEND OF TAMIL CINEMA



T.R.RAJAKUMARI ,A LEGEND OF TAMIL CINEMA


கனவுக்கன்னி பிம்பம் தொலைக்காத ராஜகுமாரி
மயக்கும் கவர்ச்சிக் கண்களால் கிறக்கமுறும் வகையில் ஒரு கீழ்ப் பார்வையை எதிராளியின் மீது ஓட விட்டு, கவர்ச்சிகரமான ஒரு மென் சிரிப்பை அழகுப் பல்வரிசை வெளிப்படச் சிரித்து, நிலம் நோகாமல் அன்ன நடை நடந்து, இனிமையான குரலில் ‘நாதா’ என்றோ ‘சுவாமி’ அல்லது ‘பிரபோ’ என்றோ அவர் கதாநாயகனையோ அல்லது தான் விரும்பும் காதலனையோ அழைக்கையில் ஒட்டுமொத்தத் தமிழக ரசிகர்களும் ராஜகுமாரியின் அழகில் கட்டுண்டு கிடந்தார்கள்.

தமிழ் சினிமா எத்தனையோ கனவுக் கன்னிகளைப் பிரசவித்திருந்தாலும் முதல் கனவுக் கன்னியாகக் கண்டறியப்பட்டு ரசிகர்களை திக்குமுக்காட வைத்தவர். 1930களின் இறுதியில் கதாநாயகி யாக அறிமுகமாகி இருந்தாலும், 50களிலும் கனவுக்கன்னியாகவும் ரசிகர்களின் மனம் ஏற்றுக் கொண்ட ‘டார்லிங்’ ஆகவும் வலம் வந்தவர். 50களில் ஏறக்குறைய பிரதான நாயகி வாய்ப்புகள் குறைந்து, வில்லி, குணச்சித்திர வேடங்களை அவர் ஏற்றிருந்தபோதிலும் ரசிகர்களின் மனங்களில் தன் இடத்தை அழுத்தமாகப் பதிய வைத்தவர் ராஜகுமாரி.

அக்காலத்தில் எஸ்.டி.சுப்புலட்சுமி, எம்.எஸ்.சுப்புலட்சுமி, எஸ்.வரலட்சுமி என்று பல முன்னணி கதாநாயகிகளை அறிமுகம் செய்திருந்த இயக்குநர் கே.சுப்பிரமணியம் தன்னுடைய  ‘கச்ச தேவயானி’ படத்தில் கதாநாயகியாக நடிக்கஎஸ்.பி.எல். தனலட்சுமியை ஒப்பந்தம் செய்வதற்காக தன் நண்பர் பாலுவுடன் அவரது வீட்டுக்குச் சென்றிருந்தார். ஏற்கனவே ‘சௌபாக்கியவதி’, ‘காளமேகம்’ போன்ற படங்களில் நடித்துப் பிரபலமாகி இருந்தவர் நடிகை எஸ்.பி.எல். தனலட்சுமி (இவர் பின்னாளில் நடிகைகளான ஜோதிலட்சுமி, ஜெயமாலினி ஆகியோரின் தாயார்).

வீட்டுக்கு வந்தவர்களை வரவேற்ற தனலட்சுமி, அவர்களுக்குக் காபி கொண்டு வரும்படி ராஜாயி என்ற பெண்ணுக்குக் குரல் கொடுத்தார். குனிந்த தலை நிமிராமல் காபி, பலகாரம் எடுத்துக்கொண்டு வந்த ராஜாயி நல்ல கருப்பு நிறம் கொண்ட பதினாறு வயது இளம் பெண். அந்தப் பெண்ணைப் பார்த்த அக்கணமே கே.சுப்பிரமணியம் எஸ்.பி.எல். தனலட்சுமியையும் அவரை நாயகியாக ஒப்பந்தம் செய்ய வந்திருப்பதையும் மறந்து போனார். ‘தன் படத்தின் கதாநாயகி இந்த ராஜாயிதான்’ என முடிவெடுத்து அங்கிருந்து வெளியேறினார். அந்த அளவுக்கு இயக்குநரின் மனதில் ராஜாயி ஆழமாகப் பதிந்து போனார்.

ஒப்பனை செய்யவும் மறுக்கப்பட்டவர் உச்ச நட்சத்திரமானார்
கே.சுப்பிரமணியம் தான் எடுத்திருக்கும் முடிவை நண்பர் பாலுவிடம் மறுநாள் வெளிப்படுத்தியபோது, அவருக்கு அதிர்ச்சி. ‘வேண்டாம், அந்தப் பெண் யாரென்றே தெரியாது. ஒருவேளை அது அவங்க வீட்டு வேலைக்காரியாகவோ சமையற்காரியாகவோ கூட இருக்கலாம்’ என்றாராம். ஆனால், இயக்குநரோ தன் பிடிவாதத்தை விடுவதாயில்லை. தனலட்சுமியிடமும் இது பற்றிப் பேசிய பின் ராஜாயியை அழைத்துக் கொண்டு வந்து கிண்டி வேல் பிக்சர்ஸ் ஸ்டூடியோவில் மேக்கப் போடச் செய்தார்.

கருப்பு நிறம் கொண்ட அந்தப் பெண்ணைப் பார்த்து அதிர்ந்துபோன மேக்கப் மேன் ஹரிபாபு அந்தப் பெண்ணுக்கு மேக்கப் போடவே மறுத்தார். ‘காக்காவையெல்லாம் பிடிச்சுட்டு வந்து கதாநாயகிங்கிறாரே, இவருக்குப் பைத்தியம்தான் பிடிச்சுடுச்சு’ என்பது அவர்களின் பேச்சாக இருந்தது. ஆனால், இந்தப் பெண்ணைத்தான் கதாநாயகியாக நடிக்க வைப்பேன் என்ற முடிவில் உறுதியாக இருந்தார் கே. சுப்பிரமணியம்.


இதையெல்லாம் பார்த்த அந்தப் பெண்ணுக்கோ பேரதிர்ச்சி. கருப்பு நிறம் அவ்வளவு இழிவானதா என்ற சிந்தனையும் அவருக்குள் எழுந்திருக்கலாம். இன்று வரையிலும் கருப்புத் தோலின் மீதான வெறுப்பு திரைத்துறை மட்டுமல்லாமல் எல்லா இடங்களிலும் ஒரு நோய் போல பீடித்திருக்கிறது என்றே சொல்லலாம். அதன் பின்னர் அந்தக் ‘கருத்த நிறமுள்ள’ பேரழகிதான் அடுத்த 80 ஆண்டுகளுக்கும் மேலாகத் தமிழ்நாட்டு சினிமா ரசிகர்களின் மனதில் மர்லின் மன்றோவாக மாறாத இடம் பிடித்திருப்பவர். அவர் தமிழ் சினிமா உலகின் முதல் கனவுக்கன்னி டி.ஆர். ராஜகுமாரி.

அவருக்குப் பின் கருப்பு நிறம் கொண்ட சாவித்திரி, சரோஜாதேவி, தேவிகா, கே.ஆர்.விஜயா, சரிதா போன்ற பல கதாநாயகிகள் கொடி கட்டாமலே பறந்தார்கள் என்றாலும் பெருமைகள் அனைத்துக்கும் வித்திட்டவர் தஞ்சாவூர் ரங்கநாயகி ராஜாயி என்ற  டி.ஆர். ராஜகுமாரி. முன்னோடி இயக்குநர் கே.சுப்பிரமணியம் தன் இயக்கத்தில் தமிழகத்தின் கனவுக் கன்னிகள் பலரையும் அறிமுகம் செய்து வைத்தார்.

அப்படித்தான் ராஜகுமாரியையும் பெருமையுடன் அறிமுகப்படுத்தி வைத்தார். அந்தப் படம் ‘கச்ச தேவயானி’. உண்மையில் டி.ஆர்.ராஜகுமாரி நடித்த முதல் படம் ‘கச்ச தேவயானி’ அல்லவாம். அதற்கு முன்பே ‘குமார குலோத்துங்கன்’ படத்தில் கதாநாயகியாக நடித்து 1939ல் அப்படம் வெளியாகி பெரிதாகப் பேசப்படாமலே போய்விட்டதாகவும் தகவல்கள் உண்டு. அந்தப் படம் பற்றிய செய்திகளும் அவ்வளவாகக் கிடைக்கவில்லை.

தஞ்சை இசைக் குடும்பத்தில் தோன்றிய நட்சத்திரம்
தஞ்சாவூரின் பிரபல பாடகி குசலாம்பாள். அவருக்கு ஐந்து மகள்கள். இரண்டாவது மகள் ரங்கநாயகி. அந்த ரங்கநாயகியின் மகள் ராஜகுமாரி. குசலாம்பாளின் ஐந்தாவது மகள் எஸ்.பி.எல்.தனலட்சுமி; அதாவது தனலட்சுமியின் அக்காள் மகள்தான் டி.ஆர். ராஜகுமாரி என்ற தஞ்சாவூர் ரங்கநாயகி ராஜாயி. தனது சித்தி எஸ்.பி.எல். தனலட்சுமி போன்றே சினிமாவில் நடித்துப் பணமும் புகழும் சேர்க்க வேண்டும் என ராஜாயி சென்னை வந்து சித்தி வீட்டில் தங்கியிருந்தார். முதலில் ஒரு பட வாய்ப்பு கிடைத்தபோதும்அது வெற்றி பெறவில்லை.

இந்த நிலையில்தான் அவர் கே. சுப்பிரமணியம் கண்களில் தென்பட்டு தமிழ்த் திரையுலகில் மறக்க முடியாத கதாநாயகி ஆனார். அவர் கண்ணில் பட வேண்டும் என்பதற்காகவே ராஜாயி கையில் எஸ்.பி.எல். தனலட்சுமி, காபி பலகாரங்களைக் கொடுத்து அனுப்பியிருக்கலாம் என்று எண்ணுவதற்கும் இடமிருக்கிறது.

இன்றைக்கு அக்காள் கதாநாயகிகள் தங்கள் தங்கைகளை அறிமுகம் செய்வதன் பூர்வீக வடிவமாகவும் இது இருக்கலாம். ஏனென்றால் எஸ்.பி.எல். தனலட்சுமி வீட்டில் இன்னொரு நடிகையும் உண்டு. அவர் ராஜாயியின் மற்றொரு சித்தி - டி.எஸ். தமயந்தி. (இவரின் மகள்  குசலகுமாரியும் ஒரு நடிகைதான்) ராஜகுமாரி தஞ்சையின் மரபான இசைக் குடும்பத்தில் பிறந்ததால் இசையில் முறையான பயிற்சி பெற்றவர்.

‘கோயில் சிற்பம்! தந்த பொம்மை! ஆடும் மயில்! பாடும் குயில்!’
சென்னை கெயிட்டி தியேட்டரில் 1941ல் ஜனவரி 9 அன்று வெளியான ‘கச்ச தேவயானி’ முதல் மூன்று நாட்களுக்குச் சரியாக ஓடவில்லை. நான்காவது நாளில் இருந்து படிப்படியாகக் கூட்டம் அலை மோதத் தொடங்கியதுடன் அல்லாமல் ஆறு வாரங்களுக்குத் தொடர்ந்து ஹவுஸ் ஃபுல். இதுவும் தேவ அசுரர்களின் யுத்தம் பற்றிய கதைதான்.

பிரகஸ்பதியின் மகன் கச்சன், அசுரர்களின் குருவான சுக்ராச்சாரியாரிடம் இருந்து சாகாவரம் அளிக்கும் சஞ்சீவனி மாமருந்தின் ரகசியம் பற்றி அறிந்து கொள்வதற்காக, போலி வேடமிட்டு சுக்ராச்சாரியாரிடம் மாணவனாக வந்து சேர்கிறான். சுக்ராச்சாரியாரின் மகள் தேவயானியை கொஞ்சம் கொஞ்சமாக வசீகரித்து அவளை  ஆட்கொண்டு சஞ்சீவனி மாமருந்தின் ரகசியத்தை அவளிடமிருந்து அறிந்து கொள்கிறான்.

ஆனால், உண்மையில் நிகழ்ந்தது என்னவென்றால் கச்சனால் தேவயானி வசீகரிப்பட்டதை விட, தேவயானியாகத் திரையில் தோன்றிய ராஜகுமாரியால் தமிழ் ரசிகர்கள்தான் நிரந்தரமாக வசீகரிக்கப்பட்டு மயங்கிக் கிடந்தனர். இடுப்பில் தண்ணீர் குடத்துடன் ஒயிலாக அவர் நடந்து வரும் காட்சி, அக்கால ரசிகர்களால் பெரிதும் புகழ்ந்து பேசப்பட்டதாம்.

இப்படத்திற்கு விமர்சனம் எழுதிய அன்றைய சினிமா பத்திரிகைகள் டி.ஆர்.ராஜகுமாரியை ‘கோயில் சிற்பம்! தந்தத்தால் செய்யப்பட்ட பொம்மை! ஆடும் மயில்! பாடும் குயில்!’ என்றெல்லாம் அடைமொழியிட்டு அழைக்கத் தொடங்கின. ஒரு நடிகையை பிடித்துப் போய் விட்டதென்றால் இவ்வாறெல்லாம் புகழ்வதும் தலையில் தூக்கி வைத்துக் கூத்தாடுவதும், கோயில் கட்டுவதும் பின்னர் அந்த நடிகையை பிடிக்காமல் போனதென்றால் கூத்தாடிப் போட்டுடைப்பதும் வழக்கம்தான் என்பதைத் தமிழகம் நன்கறியும். வெற்றி பெற்ற கதாநாயகி என்பதால் தந்தத்தால் செய்யப்பட்ட பொம்மையாகக் கருதப்பட்டவர், தோல்வியடைந்திருந்தால் நிச்சயம் அதற்கு அவரது நிறமே காரணமாகச் சொல்லப்பட்டிருக்கும். 

பாகவதர், சின்னப்பா இருவருடனும் இணையாக நடித்தார்
பாகவதரின் நடிப்பில் ‘சிவகவி’ பிரமாண்ட வெற்றியைத் தேடித் தந்த படம். இதில் பாகவதர் சிவனடிமையாக நடித்தார். பொருளாசை பிடித்த மனைவியிடம் இருந்து விலகி, மதுரை வரும் அவரை மயக்கும் மதுரை அரசின் தலைமை நர்த்தகியும் புலவரும் உள்ளூர் தாசியுமான வஞ்சி பாத்திரம் ஏற்று நடித்தவர் டி.ஆர்.ராஜகுமாரி. ‘கவலையைத் தீர்ப்பது நாட்டியக் கலையே..’ என பாகவதர் பாட அதற்கு ராஜகுமாரி பதம் பிடித்து ஆடினார். நாட்டியக்கலை கவலையைத் தீர்த்ததோ இல்லையோ, இவர் ஆட்டத்தைக் கண்டு பெருமூச்சு விட்ட ரசிகர்களின் கவலையை தன் நடிப்பின் வழியாகத் தீர்த்தார்.  

இதேபோல ‘குபேர குசேலா’வில் பி. யூ.சின்னப்பாவுடன் நடித்தார். அதில் ‘நடையலங்காரம் கண்டேன்! அன்னப் பெடையும் பின்னடையும் பொற்கொடி இவள் மலரடி’ என சின்னப்பா பாட இவர் ஆட ரசிகர்கள் மெய் மறந்தனர். பி.யூ. சின்னப்பாவின் சூப்பர் ஹிட் பாடல்களில் இதுவும் ஒன்று. ராஜகுமாரிக்கென்றே இப்பாடல்கள் எழுதப்பட்டனவோ என்று எண்ணத் தோன்றும் அளவு ராஜகுமாரியை புகழ்வதாகவே இப்பாடல்கள் அமைந்தன.

இதே போல, பி.யூ. சின்னப்பாவுடன் நடித்த ‘மனோன்மணி’யும் அதி அற்புதமான படம். யுத்த காலத் தயாரிப்புக்கே உரிய சிக்கனத்துடன் தயாரிக்கப்பட்டாலும் நேர்த்தியான படம். யுத்த நெருக்கடியால் அப்போது கச்சா பிலிம் ரோலுக்குத் தடை விதிக்கப்பட்டிருந்தது. மூன்று மணி நேர, மூன்றரை மணி நேரப் படங்களை எல்லாம் அப்போது தயாரிக்க முடியாத சூழல்.

சிக்கனமாக இரண்டு மணி நேரப் படங்கள் தயாரிக்கப்பட்டன. சுந்தரம் பிள்ளை இயற்றிய காவியமான ‘மனோன்மணீயம்’ மாடர்ன் தியேட்டர்ஸ் சார்பில் டி. ஆர். சுந்தரம் இயக்கத்தில் உருவாக்கப்பட்டது. அதன் பின் ‘மனோன்மணீயம்’ சுந்தரம் பிள்ளை என்றே அவர் அழைக்கப்பட்டார். கட்டுக்கோப்பான திரைக்கதை இப்படத்தின் வெற்றிக்குக் காரணம். காதலென்றாலும், வீரமென்றாலும் சின்னப்பாவும், டி.ஆர். ராஜகுமாரியும் தங்களின் அற்புதமான நடிப்பால் கவர்ந்தனர்.

மன்மத லீலையை வெல்ல முடியாத ‘ஹரிதாஸ்’
தொடர்ந்து அவருக்குப் பிரமாண்ட வெற்றியைத் தேடித் தந்த படம் ‘ஹரிதாஸ்’. 1944 தீபாவளி அன்று வெளியாகி மூன்று தீபாவளிகளைத் தாண்டி ஓடியது என்பது வரலாறு. இன்று வரை இந்தச் சாதனை முறியடிக்கப்படவில்லை. ‘மன்மத லீலையை வென்றார் உண்டோ? ‘என் மேல் உனக்கேன் பாராமுகம்?’ என டி.ஆர். ராஜகுமாரியைப் பார்த்து எம்.கே.டி. பாகவதர் பாடினார். அக்காலத்தில் இப்பாடல் ரெக்கார்டுகள் ஒலிக்காத வீடுகள் இல்லை.

தாசி ரம்பா, ஹரிதாஸை நோக்கி மட்டும் மன்மத பாணத்தை எய்யவில்லை. ரசிகர்களையும் நோக்கிதான் எய்தாள். ஹரிதாஸுக்கு ரம்பா அளிக்கும் பறக்கும் முத்தமும் அதே வகையைச் சார்ந்ததுதான். அக்காட்சியைப் பார்த்த அந்தக் கால ரசிகர்கள் ஒருகணம் மூச்சடைத்துப் போயிருப்பார்கள் என்றே தோன்றுகிறது. ரம்பாவின் சூழ்ச்சியால் பெற்றோரையும், மனைவியையும் விரட்டி, சொத்துகளை இழந்து திருந்த பல்வேறு சோதனைகளைச் சந்திக்கும் ஹரிதாஸ், பின் தன் பாவங்களைக் களைந்து கிருஷ்ண பக்தனாகிறான்.

தாய் தந்தைக்கும் மனைவிக்கும் செய்யாமல் விட்ட கடமைகளைச் செய்து வாழ்வைத் தொடருவதாகப் படம் முடியும். தாசி ரம்பா மனம் திருந்தி துறவியைப் போல வாழ்வதுடன், தன்னைப் போலவே மனம் திருந்தி பக்தி மார்க்கத்தில் செல்லும் அவன் செல்லும் பாதையை நோக்கி வணங்கித் தன் பாதையில் பயணத்தைத் தொடருகிறாள். இப்படி இரு வேறு விதமாகவும் நடித்து ரசிகர்களின் மனங்களை ஒருசேர அள்ளிக் கொண்டார் ராஜகுமாரி.

கன்னியாகுமரி பவனம் கண்ட கன்னிகை
41ல் நடித்த படம் மூலம் பிரபலமாகி, நான்கைந்து படங்கள் நடித்ததுமே சென்னை தியாகராய நகரில் பிரமாண்டமாக டி.ஆர்.ராஜகுமாரி 1942ல் கட்டத் தொடங்கிய வீடு 1943ல் முடிவடைந்தது. ‘கச்ச தேவயானி’, ‘சதி சுகன்யா’, ‘மனோன்மணி’, ‘குபேர குசேலா’, ‘சிவகவி’ என தொடர்ச்சியாக வெற்றிப் படங்களின் மூலம் தமிழக ரசிகர்கள் மத்தியில் கனவுக்கன்னியாக நிலைபெற்று விட்டதால், தான் எழுப்பிய மாளிகைக்குத் தெரிந்தோ தெரியாமலோ ‘கன்னியாகுமரி பவனம்’ என்ற பெயரைத் தேர்வு செய்தார். அந்த இல்லத்தில் கன்னியா குமரியாகவே இறுதி வரை வாழ்ந்தார். அது மட்டுமல்லாமல், சென்னைப் பட்டண எல்லைக்குள் முதன்முதலாகச் சொந்தமாக பங்களா கட்டியவர் என்ற பெருமையையும் நடிக, நடிகையர் மத்தியில் பெற்றார்.

ஸ்வதந்திரா தியேட்டர் பெயர் மாறியது
பங்களா கட்டியதுடன் மட்டுமல்லாமல் தியாகராய நகர் பாண்டி பஜாரில் ஒரு திரையரங்கையும் கட்டினார். அந்தக் கட்டடம் கட்டும்போது அதற்கு வைப்பதாக அவர் தேர்வு செய்து வைத்திருந்த பெயர் ‘ஸ்வதந்திரா’. ஏனோ அந்தப் பெயர் பின்னர் கைவிடப்பட்டு, ‘ராஜகுமாரி’ என்ற அவரது திரைப்பெயரே தியேட்டருக்கும் சூட்டப்பட்டது.

மதராஸப் பட்டினத்தில் முதன்முதலாகத் திரையரங்கு கட்டிய திரை நட்சத்திரம் என்ற பெருமையும் அவருக்கே உரியது. அந்தத் திரையரங்கு இடிக்கப்பட்டு வணிக வளாகமாக மாற்றப்பட்டு கால் நூற்றாண்டுகளுக்கு மேலாகிவிட்டது என்றாலும், இப்போதும் அந்த இடத்தைக் கடக்கும் தோறும் ராஜகுமாரியின் நினைவு எழுவதை மறுப்பதற்கில்லை.

சந்திரலேகா - மிகப் பிரமாண்டம்
இன்றைக்கு ‘பாகுபலி’ படம் மற்றும் அதன் பிரமாண்டம் குறித்தும் திரைப்பட ஆர்வலர்களிடையில் எழும் கடுமையான விமர்சனம் அன்றைய பிரமாண்ட தயாரிப்பான ‘சந்திரலேகா’ படத்தின் மீதும் எழுப்பப்பட்டது, சற்றே மென்மையான தொனியில். தமிழில் மட்டுமல்ல, இந்திய சினிமாவுக்கும் இத்தகைய பிரமாண்டம் மிகப் புதிது.

‘சந்திரலேகா’ கண்கள் விரியப் பார்க்க வைக்கும் பரபரப்பான திரைக்கதை, அப்போதைய நவீன தொழில் நுட்பங்களை மிகவும் சரியாகப் பயன்படுத்தித் தயாரிக்கப்பட்ட காட்சிகள். இவற்றோடு டி.ஆர்.ராஜகுமாரியின் நடிப்பும் கவர்ச்சியும் சேர்த்துத் தயாரிக்கப்பட்டு மசாலா படத்துக்கு முதல் இலக்கணமாக அமைந்தது. முன்னணி கதாநாயகன்  கதாநாயகி - வில்லன் - திடீர் திருப்பங்கள் நகைச்சுவை - நெருக்கமான காதல் காட்சிகள்  பிரமாண்டம் - விளம்பரம் எல்லாமும் தேவைக்கு அதிகமாகவே இடம் பெற்ற படம்.

படம் முழுவதும் ஒருவர் ஆதிக்கம் செய்தார் என்றால் அவர் டி.ஆர். ராஜகுமாரிதான். 3 மணி நேரமும் 20 நிமிடங்களுக்கு ஓடும் இந்த நீண்ட படத்தின் பெரும்பாலான காட்சிகளில் ஒவ்வொரு ஃபிரேமிலும் டி.ஆர். ராஜகுமாரி இருந்தார். அதனால் படத்தின் வரலாறு காணாத வெற்றியில் தயாரிப்பாளர் எஸ்.எஸ். வாசனுக்கு அடுத்து பெரும் பங்கு நாயகி ராஜகுமாரிக்கும் உண்டு.

எதிர்பாராமல் கிடைத்த வாய்ப்பு
எஸ்.எஸ். வாசனின் முந்தைய தயாரிப்புகளான ‘தாசி அபரஞ்சி’, ‘சக்ரதாரி’, ‘சம்சாரம்’ படங்களின் நாயகியான புஷ்பவல்லி ஏற்றிருக்க வேண்டிய பாத்திரம் சந்திரலேகா. சர்க்கஸ் காட்சிகளில் கதாநாயகி அணிய வேண்டிய உடைகள் மிக ஆபாசமாக இருப்பதாக புஷ்பவல்லியின் கணவர் ரங்காச்சாரி ஆட்சேபம் தெரிவித்ததால் கதாநாயகி வாய்ப்பு ராஜகுமாரியைத் தேடி வந்தது.

இப்படத்தின் சர்க்கஸ் காட்சிகளில் ராஜகுமாரி பார் விளையாட்டில் ஈடுபடும் காட்சிகள் சிறப்பாக அமைந்ததுடன் அவருக்குப் பேரையும் புகழையும் பெற்றுத் தந்தன. படத்தின் ஆரம்பத்தில் எளிய ஒரு கிராமத்துச் சிற்பியின் மகளாகத் தோன்றும் சந்திரலேகா, வாழ்க்கையில் ஏற்பட்ட எதிர்பாராத பல அதிர்ச்சிகரமான சம்பவங்களுக்குப் பின் சமயோசிதமாக சிந்தித்து உடனுக்குடன் அதற்கேற்ப முடிவுகளை எடுப்பதுடன், கதாநாயகனையும் காப்பாற்றக் கூடியவளாக மாறுகிறாள்.

குகைக்குள் வில்லனால் அடைக்கப்பட்ட கதாநாயகனும், காதலனுமான எம். கே.ராதாவை காப்பாற்றுவதற்காக அவர் எடுத்துக் கொள்ளும் முயற்சிகள், பிரயத்தனங்கள், சர்க்கஸ் கம்பெனிக்காரர்கள், யானைகள் உதவியுடன் காதலனை மீட்டுக் காப்பாற்றும் சமயோசிதம், வில்லனிடமிருந்து தந்திரமாகத் தப்பி சர்க்கஸ் கம்பெனி, ஜிப்ஸி நடனப் பெண்களின் குழுவில் ஒளிந்து கொண்டு அவர்களுடன் இணைந்து கொண்டு ஆடுவது என்று படம் நெடுக ஓடிக் கொண்டே இருப்பார்.

படத்தின் இறுதிக் காட்சியான மிக பிரமாண்ட முரசு நடனக் காட்சியில், முரசுகளின் மீது அவர் ஆடும் நடனம் என்று அனைத்துமே குறிப்பிடத்தக்கவைதான். இந்தியில் தயாரிக்கப்பட்ட ‘சந்திரலேகா’ விலும் கதாநாயகி ராஜகுமாரிதான். தமிழைப் போலவே இந்தியிலும் சந்திரலேகா பிரமாதமாக ஓடி வெற்றியை ஈட்டியது. தான் சந்திக்கும் பல நட்புகளின் உதவியுடன் நாட்டின் எதிர்காலத்தையே மாற்றிக் காட்டுகிறாள். பெண்ணை அவ்வளவு அறிவாளியாக இருக்கத் திரைப்படங்கள் அனுமதிப்பதே அரிதினும் அரிதுதான். கனவுக்கன்னி அடுத்த இதழிலும் தோன்றுவார்.

(ரசிப்போம்!)

Tuesday, 5 May 2020

T.R.RAJAKUMARI,A LEGEND ACTRESS OF TAMIL CINEMA BORN 1922,MAY 5 - 1999 SEPTEMBER 20







T.R.RAJAKUMARI,A LEGEND 
ACTRESS OF TAMIL CINEMA BORN 
1922,MAY 5 - 1999 SEPTEMBER 20




டி. ஆர் ராஜகுமாரி (மே 5, 1922 – செப்டம்பர் 20, 1999) தமிழ்த் திரையுலகின் முன்னணி நடிகையாக இருந்தவர். நடிப்பு, நடனம், பாடல் அனைத்திலும் பெயர்பெற்றவர்வாழ்க்கைக் குறிப்பு
ராஜாயி என்னும் இயற்பெயரைக் கொண்ட டி. ஆர். ராஜகுமாரி தஞ்சாவூரில் இராதாகிருஷ்ணன்-ரெங்கநாயகி தம்பதியருக்கு மகளாக பிறந்தார், இவர் தாயார் ரெங்கநாயகி தஞ்சை குசலாம்பாள் அவர்களின் புகழ் பெற்ற இசை மேதை குடும்பத்தைச் சேர்ந்தவர். ராஜகுமாாி பிறந்த சில நாட்களிலே தகப்பனரான ராதாகிருஷ்ணன் இறந்துவிட்டார். இவர் திருமணம் செய்து கொள்ளாமல் தனது இளைய சகோதரர் ஆன டி. ஆர். ராமண்ணா குடும்பத்துடன் ஆதரவாக வாழ்ந்தார்.

திரைப்படத்துறை பங்களிப்புகள்
நடிப்பு

1939 ஆம் ஆண்டு டெக்கான் சினிடோனின் குமார குலோத்துங்கன் படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார். அதைத் தொடர்ந்து மந்தாரவதி, சூர்யபுத்ரி படங்களில் கதாநாயகியாக நடித்தார். இவையனைத்தும் படுதோல்விப் படங்களாயிருந்தும் அதைத் தொடர்ந்து கே. சுப்பிரமணியத்தின் தயாரிப்பில் வெளிவந்த கச்ச தேவயானி படம் பெரு வெற்றி பெற்றது.எம். கே. தியாகராஜ பாகவதர், பி. யு. சின்னப்பா, எம். கே. ராதா, டி. ஆர். மகாலிங்கம் என அன்றைய முன்னணிக் கதாநாயகர்களுடன் நடித்துப் புகழ் பெற்றவர் ராஜகுமாரி.

பி. யு. சின்னப்பாவுடன் மனோன்மணி படத்திலும், பாகவதருடன் சிவகவி, ஹரிதாஸ் படங்களிலும் நடித்தார். ஹரிதாஸ் 1945 தீபாவளியன்று வெளியாகி 1946 தீபாவளி முடிய தொடர்ந்து 110 வாரங்கள் ஒரே திரையரங்கில் ஓடி சாதனை படைத்தது. ஜெமினியின் சந்திரலேகா படம் இவருக்கு பேரும் புகழும் தேடிக் கொடுத்தது. இதில் எம். கே. ராதாவுக்கு சோடியாக நடித்தார். அதில் இவர் ஆடிய ஜிப்சி நடனம், திரைப்படத்தின் இறுதிக் காட்சியில் இடம்பெற்ற டிரம்ஸ் நடனம் இவருக்கு இந்திய அளவில் பாராட்டுகளைக் குவித்தது. இந்தி சந்திரலேகாவிலும் நடித்தார்.

கலைஞர் மு. கருணாநிதியின் வசனத்தில் உருவான மனோகரா படத்தில் வசந்தசேனையாக இவர் நடித்திருந்தார். வானம்பாடி படத்தில் எஸ். எஸ். ராஜேந்திரனுக்கு அக்காவாக நடித்திருந்தார். சிவாஜியுடன் அன்பு திரைப்படத்திலும், தனது 37ஆவது வயதில் தங்கப்பதுமை திரைப்படத்திலும் நடித்திருந்தார். எம்.ஜி.ஆருடன் பணக்காரி திரைப்படத்தில் இணையாகவும், பெரிய இடத்துப் பெண் திரைப்படத்தில் சகோதரியாகவும் நடித்திருந்தார்.



சென்னையில் முதன் முதலாக தன்னுடைய பெயரிலேயே சொந்தமாக திரையரங்கினைக் கட்டிய முதல் நடிகை இவராவார்.

.
பின்னணிப் பாடகியாக
இதய கீதம் திரைப்படத்தில் வானுலாவும் தாரை நீ என் இதய கீதமே, ஓடி வா வெண்முகில் போலே ஆகிய இரண்டு பாடல்களை டி. ஆர். மகாலிங்கத்துடன் இணைந்து பாடியிருந்தார்.[1]




.இருபதாம் நூற்றாண்டின் ஈடு இணையற்ற தமிழ்த் திரை தேவதை டி.ஆர். ராஜகுமாரி! 1922 MAY 5-1999 முடிவதற்குள்ளாகவே தன் யாத்திரையைப் பூர்த்தி செய்து கொண்டு விட்டார்.அந்த மவுன கீதத்தின் மறைவுச் செய்தியில், மண்ணோடு மண்ணாக கலந்து போயின ராஜகுமாரியின் ரகசியக் கனவுகள்.
நான் நீ என போட்டி போட்டுக் கொண்டு அவரது காலடியில், கனகாபிஷேகம் செய்யக் காத்திருந்த கனவான்களைத் தன்னைக் காணவும் அனுமதிக்காதவர் ராஜகுமாரி.


‘அவரது பெயர் சினிமாவுக்காக ராஜகுமாரி ஆனதே தவிர, கடைசி வரையில் அவர் துறவியாகவே வாழ்ந்தார்… ‘ என்று குறிப்பிட்டுள்ளார் – அவருடன் நெருக்கமாகப் பழகிய காமெடி நடிகை டி.பி. முத்துலட்சுமி.‘நடனம், பாட்டு, நடிப்புன்னு எல்லாத் திறமையும் இருந்தும், அந்தப் புகழுக்கும் தனக்கும் சம்பந்தமே இல்லாத மாதிரி ராஜகுமாரி நடந்துகிட்டாங்க.‘சந்திரலேகா’ – அக்காவோட எனக்கு முதல் படம். கூண்டுக்கிளி அக்காவோட சொந்தத் தயாரிப்பு. அதுல அவங்க நடிக்கலைன்னாலும், நான் நடிக்கறதுக்கு வாய்ப்பு கொடுத்தாங்க.அவங்களோட நடிச்சதுல மனோகரா மிக முக்கியமானது. வசந்தசேனையா அக்கா நடிச்சாங்க. அவங்க தோழியாக நான் வருவேன். ஒரு கட்டத்துல அக்கா மன்னரை ஏமாத்த, தூக்கு போட்டுக்குற மாதிரி நடிக்கணும்.

நான் ஓடிப் போய் அரசர் கிட்ட, ‘மகாராஜா… வசந்தசேனையம்மா தூக்கு போட்டுக்கிட்டு சாகப் போறாங்க… தயவு செஞ்சு காப்பாத்துங்கன்னு… ‘ நீலிக் கண்ணீர் வடிக்கணும். ரிகர்சல் நடந்தது. டைரக்டர் எல்.வி. பிரசாத் எதிர்பார்த்த அளவு, நான் திருப்தியா நடிக்கலண்ணு அக்கா ஃபீல் பண்ணாங்க. உடனே எங்கிட்ட வந்து,‘முத்து படத்துல இது ரொம்ப முக்கியாமான சீன். நீ பசப்பற மாதிரி பேசணும். அதைப் பார்க்கிற ஜனங்க உன்னையும் என்னையும் நல்லா திட்டணும். அப்பத்தான் நம்ம நடிப்பு ஜனங்க கிட்ட சரியா போய் சேர்ந்ததா அர்த்தம்னு சொன்னார்.

அக்காவே, அந்த டயலாகை எனக்குச் சொல்லிக் கொடுத்து நடிச்சும் காட்டினார்.
வில்லி வேஷம்னா எப்படி நடிக்கணும், காமெடி நடிப்பு எவ்விதம் இருக்கணும்னு அக்கா சொல்ல கேட்கணும்.
‘முத்து… எல்லாவிதமான நடிப்பும் தெரிஞ்சாத்தான் நடிகைங்கற முழுத் தகுதியை நாம அடைவோம்… ‘ என்பார்.
டைரக்டர் எங்க ரெண்டு பேரையும் பட்டப் பெயர் வெச்சிக் கூப்பிடுவாரு. அக்காவை ‘தாராசிங்’ குன்னும், என்னை ‘கிங்காங்’ன்னும் கூப்பிடுவார். நானாவது பதிலுக்கு ஏதாவது சொல்வேன். ஆனா… சினிமால வசனம் தவிர வேற எதுக்குமே அக்கா வாயே திறக்க மாட்டாங்க.

எப்பவும் ஆழ் கடல் அமைதியா சிரிச்ச முகத்தோட இருப்பாங்க. அக்காவுக்கு தெய்வ பக்தி அதிகம். வியாழன் மற்றும் சனிக்கிழமைகள்ள பீச்சுக்குப் போய் கருட தரிசனம் பார்க்காம வீடு திரும்ப மாட்டாங்க.அவங்க கழுத்துல நகைங்கறது சும்மா பேருக்குத்தான் கிடக்கும். நினைச்சா தினம் புதுசு புதுசா நாலு பட்டுச் சேலை கட்டலாம். ஆனா சிம்பிளா ஒரே ஒரு ப்ளைன் ஸாரிதான் கட்டிட்டு வருவாங்க. ‘ஏங்க்கா இவ்ளோ சிம்பிளா இருக்கிங்கன்னு… கேட்டால், என்னத்துக்கம்மா சுமை என்பார் சிரித்துக் கொண்டே.அவங்க தம்பி சக்கரவர்த்தி இறந்தப்ப ராஜகுமாரி அக்காவ கடைசியா பார்த்தேன். ரொம்பவே உடைஞ்சு போயிட்டாங்க.ரத்த பந்தங்களோட சந்தோஷத்துக்காக பாடுபட்டாங்களே தவிர, கடைசி வரையில் தனக்காக ஒரு வாழ்க்கையை ராஜகுமாரி அக்கா நினைச்சிப் பார்க்கவே இல்ல.கதைகள்ள… நாடகங்கள்ள… குடும்பத்துக்காக தியாகம் செய்யற அக்காவைப் பார்த்திருக்கோம்.நிஜத்தில் ஒரு சினிமா கதாநாயகி தன்னையே அர்ப்பணிச்சிக்கிட்டு மெழுகுவர்த்தியா வாழ்ந்தாங்க! ‘

– டி.பி. முத்துலட்சுமி.


1963ல் தொடங்கி டி.ஆர். ராஜகுமாரி வாழ்ந்த அந்தரங்க வாழ்வின் அந்திம காலம் எவரும் அறியாதது.1981 நவம்பர். முதல்வர் எம்.ஜி.ஆரின் தலைமையில் தமிழ் சினிமா பொன்விழா கொண்டாடியது. அன்றைய குடியரசுத் தலைவர் நீலம் சஞ்சீவரெட்டி சிறப்பு விருந்தினர்.நீண்ட காலம் பணியாற்றியப் புகழ் பெற்ற மூத்த கலைஞர்களுக்குப் பாராட்டும் பரிசும் வழங்கப்பட்டது.சென்னையில் வாழ்ந்த டி.ஆர். ராஜகுமாரி ஏனோ அவ்வரிய நிகழ்வில் பங்கேற்காமல் போனார். அவரது மேன்மையை மனத்தில் இருத்தி மத்திய, மாநில அரசுகள் விருது எதுவும் அளிக்கவில்லை.

வெள்ளித்திரையில் அவரைப் பற்றிய நேர்காணல்களோ, கட்டுரைகளோ அன்றையப் பத்திரிகைகளில் வரக் காணோம்.ராஜகுமாரி தனிமையில் வாடியது ஏன்…? ‘ என்பதற்குப் பழம்பெரும் நடிகை ஒருவர் விளக்கம் அளித்துள்ளார்.‘டி.ஆர். ராஜகுமாரியின் ஏகாந்த நிலை… அவரது குடும்பத்துக்காக மட்டும் என்பதை என்னால் ஏற்றுக் கொள்ள முடியாது. அதற்குக் காரணம் பி.யூ. சின்னப்பா!அவருடன் நடித்த போதெல்லாம் புது உற்சாகத்துடன் ராஜகுமாரியைப் பார்க்க முடிந்தது. செட்டில் எல்லாரையும் போல் இயல்பாகவே இருந்தார். திடீரென பி.யூ. சின்னப்பா இறந்து போனார். அந்த இழப்பு மற்றவர்களைக் காட்டிலும் ராஜகுமாரியை அதிகம் பாதித்தது. ராஜகுமாரியின் மகிழ்ச்சியும் சின்னப்பாவின் மறைவோடு காணாமலே போய் விட்டது.

சின்னப்பாவின் மரணத்துக்குப் பின்னரே ராஜகுமாரி தன்னை ஒரேயடியாகத் தனிமைப்படுத்திக் கொண்டார். கிட்டத்தட்ட மனம் பேதலித்த நிலை.
ஒரு நாளிதழில் வெளி வந்த மேலே சொல்லப்பட்டத் தகவலை, ஊர்ஜிதப்படுத்த எந்த ஆதாரமும் கிடையாது. 1950 தைத் திருநாளில் சென்னை பாண்டிபஜாரில் டி.ஆர். ராஜகுமாரிக்கு உரிமையான திரையரங்கத்தின் திறப்பு விழா நடைபெற்றது. ஆரம்பத்தில் அதற்கு ‘ஸ்வதந்திரா’ என்று பெயரிட ஆலோசித்தார்கள். பின்பு அனைவரின் வற்புறுத்தலுக்கு இணங்க ‘ராஜகுமாரி டாக்கீஸ்’ என்றானது. முப்பது ஆண்டுகளுக்கும் மேலாகத் தென் சென்னையின் முதல் தரமான ஏ.ஸி. தியேட்டராக ராஜகுமாரி திரையரங்கம் அமைந்தது. தமிழ் சினிமாவின் மூவேந்தர்கள் அடிக்கடி சென்று பல்வேறு ஆங்கில சினிமாக்களை அங்கு கண்டு களித்திருக்கிறார்கள்!



1960ல் பிரபல வார இதழ் ஒன்றில் டி.ஆர். ராஜகுமாரி தனது திரையுலக அனுபவங்களைக் கூறி இருக்கிறார்.

அதற்குப் பின்பு டி.ஆர். ராஜகுமாரியின் பேட்டி ஏதேனும் வெளியானதா என்பது ஆய்வுக்குரிய வினா!‘திரைப்பட உலகில் உழைப்பும், உண்மையும், உயர்ந்த எண்ணமும் நிறைந்த காலம் அது. உழைத்தால் தான் உயர முடியும். திறன் இருந்தால் மாத்திரமே திரையுலகில் பிரகாசிக்க இயலும். எண்ணம் சிறந்திருந்தாலே எடுத்த காரியம் எதிலும் வெற்றி காண முடியும் என்றிருந்த பொற்காலம் அது.1940 என்று நினைக்கிறேன். திருமதி எஸ். டி. சுப்புலட்சுமி அவர்களின் புகழே எங்கும். டைரக்டர் கே. சுப்ரமணியத்துடன் அவர்கள் திறந்த காரில் மெரீனா கடற்கரையில் செல்வார்கள்.அக்காட்சியைக் காண ஏராளமான மக்கள் தினந்தோறும் காத்து நிற்பார்கள். அக்கூட்டத்தில் நானும் என் தம்பியும் கூடக் கண்டிப்பாக இருப்போம். எஸ். டி.சுப்புலட்சுமியைக் கண்டவுடன் பெருமகிழ்ச்சி!

சாதாரணமானவரா அவர்! பெரிய நட்சத்திரம் அல்லவா! தியாக பூமியின் கதாநாயகி அல்லவா!நானும் ஓரளவு நடித்துப் புகழ் பெறுவேன் என்று அப்போது நினைக்கவே இல்லை.கச்ச தேவயானி எனக்குப் புகழ் பெற்றுத் தந்தது. எனக்குக் கிடைத்த நற்பெயருக்குக் காரணமானவர் டைரக்டர் கே. சுப்ரமணியம்.
அப்போதெல்லாம் படப்பிடிப்புக்குப் போய் வருவதென்பது கிட்டத்தட்டப் பள்ளிக்கூடம் செல்வது போலிருக்கும். காலையில் ஒன்பது மணிக்குக் கிளம்பினால் மாலையில் வீடு திரும்புவேன்.எல்லா கம்பெனிகளிலும் ஒரே குடும்பத்தினர் மாதிரி பழகுவோம். டைரக்டர், நடிகை, வசனகர்த்தா, காமிராகாரர், லைட்பாய் என்ற முறையில் பாகுபாடே கிடையாது.

எல்லாரும் ஒன்றே. சாப்பாட்டின் போது டைரக்டர் கே. சுப்ரமணியத்தின் பக்கத்தில் லைட் பாயும் உட்கார்ந்து சாப்பிடுவார். அந்த அளவுக்குச் சமத்துவம் வழங்கப்பட்டிருந்த பொற்காலம் அது.அப்படியோரு பொற்காலத்தை எனக்கு வழங்கியதற்காக கடவுளுக்கு நான் நன்றி செலுத்துகிறேன்!.சுமார் 25 ஆண்டுகளுக்கு முன் சென்னையில் எனக்குச் சொந்தமாக ஒரு மனை கிடையாது. கன்னியாகுமரிக்கு ஒரு முறை சென்றேன். அங்கே குமரி அம்மன் ஆலயத்தில் பிரார்த்தனை செய்தேன்.சொந்த வீடு கட்டினால் பகவதி அம்மனின் பெயரையே என்னுடைய, புது இல்லத்துக்குச் சூட்ட வேண்டும் என்று தோன்ற, அவ்வாறே வேண்டிக் கொண்டு திரும்பினேன்.அடுத்த ஆண்டே ஆசைக் கனவு பலித்தது. சக்தி மிக்க பகவதியின் பெயரைத் தாங்கி ‘கன்யாகுமரி பவன்’ என்று என் விலாசம் மாறியது.

எம்.கே. தியாகராஜ பாகவதருடன் நான் நடித்த சிவகவியும், ஹரிதாஸும் என் நினைவிலிருந்தும் சரி, ரசிகர்களின் நினைவிலிருந்தும் சரி… என்றென்றும் நீங்க முடியாதவை.மனோன்மணி, குபேரகுசலா, விகடயோகி, பங்கஜவல்லி, கிருஷ்ணபக்தி, வனசுந்தரி என்று ஆறு படங்களில் பி.யூ. சின்னப்பாவுடன் தொடர்ந்து நடித்திருக்கிறேன்.‘பி.யூ. சின்னப்பா அவர்கள் ஒரு பிறவி நடிகர்! வசனம் சொல்வதிலும், நடிப்பிலும், பாட்டிலும், கத்திச் சண்டையிலும், சிலம்பாட்டத்திலும் அவர் ஈடு இணையற்று விளங்கினார்.சிவாஜி கணேசனுடன் நான் நடித்தவை அன்பு, மனோகரா, தங்கப்பதுமை ஆகியன.அன்பு படத்தில் நடிக்கும் போதே, வருங்காலத்தில் சிவாஜி கணேசனை விடச் சிறந்த நடிகர் இன்னொருவர் இருக்கப் போவது கிடையாது என்ற முடிவுக்கு நான் வந்து விட்டேன். ‘ டி.ஆர். ராஜகுமாரி.


தமிழ் திரையில் ஒரு மர்லின் மன்றோ - டி .ஆர் .ராஜகுமாரி BORN 1922 MAY 5

முதல் இரண்டு படமும் அக்காவுக்கு லாபத்தை ஈட்டித் தராத சூழல். மூன்றாவதை நினைக்கவே ராமண்ணாவுக்கு மூச்சுத் திணறியது.

‘பேசாமல் தயாரிப்பை மட்டும் கவனித்தவாறு, எல்.வி. பிரசாத் போன்ற திறமை மிக்க இயக்குநர்களைப் பயன்படுத்திக் கொண்டால் என்ன… ‘ என்று தோன்றியது.

டி.ஆர். ராஜகுமாரி சம்மதிக்கவில்லை.

‘ராமு நீ டைரக்டரா தோல்வி அடையல. சிறந்த தரமான இயக்குநர் என்ற பேரு கிடைச்சிருக்கு. பணம் போனதைப் பத்தி கவலைப்படாதே.

உனக்கு விருப்பமான சப்ஜெக்ட் ஜனங்களுக்குப் பிடிக்கல. மக்கள் எதை ரசிக்கிறாங்கன்னு பாரு. அதுக்கேத்தபடி நீயும் மாறு. ஆல் தி பெஸ்ட். ‘ என்றார்.

கூண்டுக்கிளி வெளியான அதே தினத்தில் தூக்கு தூக்கியும் ரிலீசானது. அதற்கு செம வசூல். தூக்கு தூக்கி போன்ற ஜனரஞ்சகக் கதையான ‘குலேபகாவலி’யை உருவாக்கினார் டி.ஆர். ராமண்ணா.

எம்.ஜி.ஆருடன் டி.ஆர். ராஜகுமாரி, ஜி.வரலட்சுமி, ராஜசுலோசனா என்று மூன்று ஹீரோயின்கள் முதன் முதலாக இணைந்து நடித்தனர்.

‘விந்தன்’ எழுதிய ‘மயக்கும் மாலைப் பொழுதே நீ போ போ’ பாடலின் இனிமை இன்னமும் நள்ளிரவுகளில் ‘இன்ப இதிகாசம்’ வாசிக்கிறது.

‘குலேபகாவலி’ யின் ஓய்வற்ற ஓட்டமும் வற்றாத வசூலும் ஆர். ஆர். பிக்சர்ஸை குபேரத்தீவாக்கின.

தொடர்ந்து எம்.ஜி.ஆர். – சரோஜாதேவி, ரவிச்சந்திரன் – ஜெயலலிதா நடித்து விழா கொண்டாடிய சித்திரங்களைப் படைத்தது. அந்த வெற்றிகளின் முதுகெலும்பில் இந்தி சினிமாவிலும் தடம் பதித்தது.

ஆரம்பத்தில் எதிர்பார்த்த வெற்றிச் சிறகு வீசிப் பறக்காதது கூண்டுக்கிளி. மறு வெளியீடுகளில் மிகப் பெரிய வசூல் சுரங்கமாகி விநியோகஸ்தர்களை வியக்க வைத்தது.

‘இரு திலகங்களும் இணைந்து நடித்த ஒரே படம் கூண்டுக்கிளியைத் தயாரித்தவர்’ என்கிற அழியாத புகழ் டி.ஆர். ராஜகுமாரிக்குக் கிடைத்தது.

புதுமைப்பித்தன் ஷூட்டிங். சீறும் நாகங்களுக்கு நடுவே டி.ஆர். ராஜகுமாரி நடிக்க வேண்டும்.

‘என்னால் இந்த சீன்ல நடிக்க முடியாது ராமு… ‘

படை எடுத்து வந்து பாதங்களில் ஏறும் பாம்புகளைப் பார்த்து பயந்து அலறினார் டி.ஆர்.ராஜகுமாரி.

‘ராஜாயி… நீ இதில் நடிக்க வேண்டாம். நானே உனக்காக டூப் போட்டுக்கறேன்.

நீ கட்டியிருக்கிற சேலையை மட்டும் என் கிட்ட கொடுத்துடு. போ… போயி ஸாரியை மாத்திக்கிட்டு கொஞ்சம் ரெஸ்ட் எடு. ‘

ஹீரோயினை ஆசுவாசப்படுத்தி விட்டு டைரக்டர் ராமண்ணா அக்காவின் புடைவையோடு களம் இறங்கினார். தன் கால்களுக்கும் அரிதாரம் பூசிக்கொண்டார்.

‘இடுப்புக்குக் கீழே கால் பக்கத்தை மட்டும் படம் ஆக்குங்க. எனக்கொன்னும் பயம் இல்லை… ‘ என்று ஒளிப்பதிவாளருக்கு உத்தரவானது.

விஷ ஜந்துகளுடன் அஞ்சியவாறே தோன்றியதில் மறு நாள் டி.ஆர். ராமண்ணாவுக்கு 104 டிகிரி ஜூரம்.

———————–
‘ஜூபிடர்’ நடிகர் திலகம் நடிக்க தங்கப்பதுமை சினிமாவைத் தயாரித்த சமயம். நாயகி பத்மினிக்கு இணையான முக்கிய வேடத்தில் அவரது சகோதரி லலிதா நடித்து வந்தார்.

லலிதாவுக்குத் திருமணம் ஏற்பாடாகி விட, தங்கப்பதுமையில் நடிப்பைத் தொடர முடியாமல் போயிற்று.

கையைப் பிசைந்தது ஜூபிடர். இடுக்கண் களைய ஓடோடி வந்தார் டி.ஆர். ராஜகுமாரி. லலிதா நடித்த ‘மாயாமோகினி’ வேடத்தை ஏற்றார்.

காபாலிகர்களின் ராஜநர்த்தகியாக சோழ மண்டலத்தில் குழப்பம் ஏற்படுத்தச் சென்று, மருத்துவர் மணிவண்ணனாக வரும் சிவாஜியின் காதலில் சிக்கி, நாயகனின் உண்மை அன்பில் திருந்தி, அதற்குப் பரிசாக வில்லன் எம்.என். நம்பியாரால் முகம் சிதைக்கப்பட்டு, காதலனுக்காகத் தன் அழகையே தியாகம் செய்யும் அருமையான வேடம்!

‘முகத்தில் முகம் பார்க்கலாம் விரல் நகத்தில் பவழத்தின் நிறம் பார்க்கலாம்’

பட்டுக் கோட்டையாரின் பவுன் வரிகளில் நடிகர் திலகமும் டி.ஆர். ராஜகுமாரியும் கூடிக் களிக்கும் டூயட். கல்யாணி ராகத்தில் ஒலிக்கும். அதன் ஒவ்வொரு அங்குலத்திலும் அந்தரங்கத்தின் தங்கரதம் தவழும்!

அத்தனை இன்ப அவஸ்தைகளையும் தன் நீள் விழிகளில் அகன்றத் திரையிட்டுக் காட்டுவார் டி.ஆர். ராஜகுமாரி.

கிருஷ்ண பக்தி, மனோகரா வரிசையில் டி.ஆர். ராஜகுமாரியின் அதி அற்புதமான குணச்சித்திர நடிப்பில் மற்றொரு மகுடம் 1959ன் தைப் பொங்கல் பரிசு தங்கப்பதுமை!

1962ல் ஆர்.ஆர். பிக்சர்ஸின் பாசம் படத்தில் எம்.ஜி.ஆரின் தாயாகவும், 1963ல் பெரிய இடத்துப்பெண் படத்தில் அக்காவாகவும் நடித்திருந்தார் டி.ஆர். ராஜகுமாரி.

கவிஞர் கண்ணதாசனின் வானம்பாடியில் ‘குட்டி கமலின்’ அம்மாவாகக் காட்சி அளிப்பார். காலத்தை வென்ற கிருஷ்ணகானம்

‘கங்கைக் கரைத் தோட்டம் கன்னிப் பெண்கள் கூட்டம் கண்ணன் நடுவினிலே’.

அப்பாடல் துவங்குவதற்கு முன் எங்கும் ஒலித்துக் கொண்டிருக்கிறது டி.ஆர். ராஜகுமாரியின் கனிவான குரல்!

வானம்பாடியோடு ஒப்பனைக்கு ஓய்வு கொடுத்தார் டி.ஆர். ராஜகுமாரி!




“கனவுக்கன்னி” ரி.ஆர்.ராஜகுமாரி 5 சூப்பர் ஸ்டார்களுடன் நடித்தார்.
தமிழ்நாட்டின் ஐந்து சூப்பர் ஸ்டார்களுடன் இணைந்து நடிக்கும் பெருமை பெற்றவர், ரி.ஆர்.ராஜகுமாரி.தியாகராஜ பாகவதர், பி.யு.சின்னப்பா ஆகியோரை அடுத்து மூன்றாவது சூப்பர் ஸ்டாராக உருவானவர் ரி.ஆர்.மகாலிங்கம். அவர் நடித்த ஸ்ரீவள்ளி, நாம் இருவர், ஞானசவுந்தரி ஆகிய படங்கள் மாபெரும் வெற்றி பெற்று, அவரை சூப்பர் ஸ்டார் அந்தஸ்துக்கு உயர்த்தின.
எனவே, மகாலிங்கத்தையும், ரி.ஆர்.ராஜகுமாரியையும் ஜோடியாக நடிக்க வைத்து “இதய கீதம்” என்ற படத்தை ஜோசப் தளியத் தயாரித்தார். (மகாலிங்கத்தைவிட ரி.ஆர்.ராஜகுமாரி மூத்தவர்).
இந்தப்படம் சூப்பர் ஹிட்டாக அமையவில்லை என்றாலும் ஓரளவு வெற்றிப்படமே. பிறகு கே.ஆர்.ராமசாமியுடன் “விஜயகுமாரி” (1950) என்ற படத்திலும், சின்னப்பாவுடன் “வனசுந்தரி” (1951) என்ற படத்திலும் ராஜகுமாரி நடித்தார்.
பாகவதர் விடுதலையாகி வெளிவந்தபின், நடித்த “அமர கவி” (1952) என்ற படத்தில் ரி.ஆர்.ராஜகுமாரி ஜோடியாக நடித்தார். விடுதலையான பிறகு பாகவதர் நடித்த ஐந்து படங்களில் ஓரளவு நன்றாக அமைந்தது இந்த படம் தான்.
சென்னை தியாகராய நகரில் தன் பெயரிலேயே ஒரு தியேட்டரைக் கட்டினார், ரி.ஆர்.ராஜகுமாரி. தமிழ் நடிகைகளில் சொந்தமாகத் தியேட்டர் கட்டிய ஒரே நடிகை ரி.ஆர்.ராஜகுமாரி தான். இதை ஜெமினி அதிபர் எஸ்.எஸ்.வாசன் திறந்து வைத்தார்.
இவரது தம்பி நீ, நான், மூன்றெழுத்து, குமரிப்பெண் போன்ற படங்களை இயக்கிய மாபெரும் இயக்குநர் ரி.ஆர்.ராமண்ணாவுடன் சேர்ந்து “ஆர்.ஆர். பிக்சர்ஸ்” என்ற படக் கம்பெனியை ரி.ஆர்.ராஜகுமாரி தொடங்கினார். இந்த கம்பெனியின் முதல் படம் “வாழப்பிறந்தவள்”. அதில் ரி.ஆர்.ராஜகுமாரி நடித்தார். ரி.ஆர்.ராமண்ணா டைரக்ட் செய்தார். படம் சுமார் ரகம்.
1954_ல் எம்.ஜி.ஆரையும், சிவாஜி கணேசனையும் ஒன்றாக நடிக்கச் செய்து, “கூண்டுக்கிளி” என்ற படத்தைத் தயாரித்தார். இதில் தனக்குப் பொருத்தமான வேடம் இல்லை என்ற காரணத்தால் பி.எஸ்.சரோஜாவையும், குசல குமாரியையும் நடிக்க வைத்தார்.ரி.ஆர்.ராமண்ணா டைரக்ட் செய்தார்.
இரு மாபெரும் நடிகர்கள் நடித்த இப்படம் படுதோல்வி அடைந்தது. தோல்வியைக் கண்டுத் துவண்டு விடாது ரி.ஆர்.ராஜகுமாரி, அடுத்த படத்தை வெற்றிகரமாகத் தயாரிக்க, தனது தம்பியுடன் தீவிரமாக ஆலோசித்தார். “குலேபகாவலி” கதையை மசாலாப்படமாகத் தயாரிக்க முடிவு செய்தனர். எம்.ஜி.ஆர். கதாநாயகன். அவருக்கு மூன்று ஜோடிகள். அவர்களில் ஒருவராக ராஜகுமாரி நடித்தார். படம் பெரிய வெற்றி பெற்று, வசூலைக் குவித்தது.

பாகவதர், சின்னப்பா, மகாலிங்கம், எம்.ஜி.ஆர். என்ற நான்கு சூப்பர் ஸ்டார்களுடன் நடித்த ரி.ஆர்.ராஜகுமாரி, சிவாஜி கணேசனுடன் “தங்கப்பதுமை”யில் சேர்ந்து நடித்தார்.
ஐந்து சூப்பர் ஸ்டார்களுடன் இணைந்து நடித்தவர் என்ற பெருமை முதன் முதலாக ரி.ஆர்.ராஜகுமாரிக்குக் கிடைத்தது. பின்னர் இந்த பெருமையை பி.பானுமதி பெற்றார்.
1963_ல் “வானம்பாடி” படத்தில் ரி.ஆர்.ராஜகுமாரி நடித்தார். அதுவே அவருடைய கடைசி படம். அதன்பின் படங்களில் நடிக்கவில்லை. தியாகராயநகரில் உள்ள தன் வீட்டில் ரி.ஆர்.ராஜகுமாரி தன் வாழ்க்கையின் பின்பகுதியை அமைதியாகக் கழித்தார். எந்த விழாக்களிலும் கலந்து கொள்வதில்லை. பத்திரிகையாளர்களை சந்திப்பதில்லை.  ல், தன்னுடைய “ராஜகுமாரி” தியேட்டரை விலைக்கு விற்று விட்டார். இந்த திரையரங்கு மிகவும் கலைநயத்துடன் கட்டப்பட்டதாகும். ஆங்காங்கே சிலைகள் அழகுற காட்சியளித்தன. அது பலருடைய கை மாறி, பின்னர் இடிக்கப்பட்டு, இப்போது வணிக வளாகமாகக் காட்சி அளிக்கிறது.

 திருமணம் செய்து கொள்ளாமல் வாழ்ந்த ராஜகுமாரி 20.9.1999_இல் தமது 77_வது வயதில் காலமானார்.
.
நடித்த திரைப்படங்களின் பட்டியல்
குமார குலோத்துங்கன் (1939)
சூர்யபுத்ரி (1941)
மனோன்மணி (1942)
சதி சுகன்யா (1942)
பிரபாவதி ‎(1942)
சிவகவி (1943)
குபேர குசேலா (1943)
ஹரிதாஸ் (1944)
சாலிவாகனன் (1945)
வால்மீகி (1946)
விகடயோகி (1946)
பங்கஜவல்லி
சந்திரலேகா (1948)
சந்திரலேகா (1948)
பிரம்மரிஷி விஷ்வாமித்திரா (1948)
கிருஷ்ணபக்தி ‎(1949)
பவளக்கொடி (1949)
இதய கீதம் (1950)
விஜயகுமாரி (1950)
வனசுந்தரி (1951)
அமரகவி (1952)
பணக்காரி (1953)
என் வீடு (1953)
அன்பு (1953)
வாழப்பிறந்தவள் ‎(1953)
மனோகரா (1954)
நல்ல தங்கை ‎(1955)
குலேபகாவலி (1955)‎
மந்தாரவதி (1956)
புதுமைப்பித்தன் (1957)
மல்லிகா (1957)
தங்கமலை ரகசியம் (1957)
தங்கப்பதுமை (1959)
பாசம் ( 1962 )
பெரிய இடத்து பெண் (1963)
வானம்பாடி (1963)
.

Saturday, 18 November 2017

B.S.SAROJA , CIRCUS ARTIST, SINGER,ACTRESS BORN 1929 NOVEMBER 18



B.S.SAROJA , CIRCUS ARTIST, SINGER,ACTRESS 
BORN 1929 NOVEMBER 18





பி. எஸ். சரோஜா (B. S. Saroja, பிறப்பு: நவம்பர் 18, 1929) தமிழ்த் திரைப்பட நடிகையாவார்.
ஆரம்ப வாழ்க்கை[மூலத்தைத் தொகு]
சரோஜாவின் பூர்வீகம் சேலம் ஆகும். இவர் பாலசுப்ரமணியம், ராஜலட்சுமி ஆகியோருக்கு திருவனந்தபுரத்தில் பிறந்தார். சரோஜா சிறுமியாக இருந்தபோதே அவரது குடும்பம் சென்னை ராயபுரத்தில் குடியேறியது. சரோஜாவின் தாத்தா ஒரு வயலின் ஆசிரியர். அம்மா வாய்ப்பாட்டில் தேர்ந்தவர். பி. எஸ். சரோஜா தாயாரிடம் வாய்ப்பாட்டு கற்றுக்கொண்டார். சிறுவயதிலேயே தெலுங்குக் கீர்த்தனைகள் பாடும் அளவுக்கு இசையில் தேறினார். சரோஜா ராயபுரம் புனித அந்தோணியார் தொடக்கப் பள்ளியில் சேர்க்கப்பட்டார்.[1]

வட்டரங்குப் பயிற்சி[மூலத்தைத் தொகு]
சரோஜா ஒன்பது வயதுச் சிறுமியாக இருந்த போது அவரது பள்ளி மைதானத்தில் ‘தமிழ்நாடு சர்க்கஸ்’ என்னும் வட்டரங்குக் குழு முகாமிட்டிருந்தது. சரோஜாவும் ஆர்வத்தின் காரணமாக பள்ளிக்கூடத்துக்கு சரிவர போகாமல் அங்கேயே பல நாட்கள் ஒளிந்திருந்து சர்க்கஸ் பயிற்சிகளைக் கவனித்துக்கொண்டிருந்தார். சர்க்கசுப் பயிற்சியாளர் டி. எம். நாமசிறீ என்பவர் சரோஜாவின் ஆர்வத்தைக் கண்டு அவளுக்குப் பயிற்சியளித்தார். நாமசிறீயிடம் சரோஜா முழுக் கலையையும் கற்றுக்கொண்டார். ஆனாலும், தனது 12வது அகவையில் சர்க்கஸ் அரங்கேற்றத்துக்காகக் காத்திருந்த நேரத்தில் ‘தமிழ்நாடு சர்க்கஸ் கம்பெனி’ மூடப்பட்டது.[1]


திரைப்பட வாய்ப்பு[மூலத்தைத் தொகு]
வட்டரங்கு நிறுவனம் மூடப்பட்டாலும் தனது மாணவர்களுக்குத் தொடர்ந்து பயிற்சியளித்துவந்தார் நாமசிறீ. இந்த நேரத்தில் ராயபுரத்தில் ராசாசி கலந்துகொண்ட காங்கிரஸ் பொதுக்கூட்டத்தில் கூட்டம் தொடங்கும்முன் தனது மாணவர்களைச் சாகசங்கள் செய்துகாட்டச் செய்தார் ஆசிரியர். ராசாசி சாகச நிகழ்ச்சியைக் குறிப்பிட்டுப் பாராட்டிப் பேசினார். இந்தக் கூட்டத்துக்கு ராசாசியுடன் வந்திருந்த காங்கிரஸ் ஊழியரான தட்சிணாமூர்த்தி என்பவர் ஜெமினி ஸ்டுடியோவில் பணியாற்றிவந்தவர். இவர் சரோஜாவின் அழகையும் சாகசத் திறமையையும் கண்டு மாதம் 45 ரூபாய் சம்பளத்துக்கு சரோஜாவை ஜெமினி ஸ்டூடியோவில் சேர்த்துவிட்டார்.[1]

1941-ல் வெளியான ‘மதன காமராஜன்' திரைப்படக் குழுநடனம் மூலம் திரைப்படத்தில் அறிமுகமானார். பின் ஜெமினியிலிருந்து வெளியேறி, ஜுபிடர் நிறுவனத்தில் சேர்ந்தார். ஜுபிடர் தயாரிப்பில் மிகப் பெரிய வெற்றிப் படமாக அமைந்த ‘குபேர குசேலா’வில் (1943) டி.ஏ.ஜெயலட்சுமியுடன் இணைந்து ஆடி பிரபலமானார்.[1]

குடும்பம்[மூலத்தைத் தொகு]

பி. எஸ். சரோஜாவின் கணவர் பண்டிட் போலாநாத் ஆக்ராவைச் சேர்ந்தவர். சரோஜா நடித்த பல படங்களுக்கு நடன இயக்குனராகப் பணியாற்றியவர். 1943 ஆம் ஆண்டில் சரோஜாவைக் காதலித்துத் திருமணம் செய்து கொண்டார்.[2] போலோநாத் பரதக் கலையுடன் மணிப்பூரி, கதக் போன்ற நடனங்களிலும் சரோஜாவுக்குப் பயிற்சி அளித்தார். போலோநாத் பர்மா ராணி, ராஜராஜேஸ்வரி ஆகிய படங்களில் தனி நடனம் ஆடும் வாய்ப்புகளை சரோஜாவுக்கு பெற்றுத்தந்தார்.[1] சரோஜா தனது கணவருடன் இணைந்து கீத காந்தி திரைப்படத்தில் நடித்துள்ளார்.[2] இவர்கள் இருவரும் நடன கலா மந்திர் என்ற பெயரில் நடனப் பயிற்சிப் பள்ளி ஒன்றை நிறுவியிருந்தனர்.[2] இவர்களுக்கு கலாராணி என்ற முதல் மகள் பிறந்தாள்.[1]

இன்பவல்லி திரைப்படத்தில் ஒரு காட்சியில் நடிப்பதற்காக 1949 மே 11 அன்று இரவு தமது வாகனத்தில் போலோநாத்தும், சரோஜாவும் பயணம் செய்தபோது சேலத்திற்கு அருகில் எட்டு மைல் தூரத்தில் வாகனம் விபத்துக்குள்ளாகியதில் போலோநாத் படுகாயம் அடைந்து மே 12 அன்று சேலம் மருத்துவமனையில் காலமானார்.[2] சரோஜா சிறுகாயங்களுடன் உயிர் தப்பினார்.[2] போலோநாத் மரணமடந்து சில காலத்திற்குப் பின்னர் பி. எஸ். சரோஜா டி. ஆர். ராமண்ணாவை திருமணம் செய்துகொண்டார்.[3]

கதாநாயகியாக[மூலத்தைத் தொகு]


பி.யு.சின்னப்பாவும், டி.ஆர். ராஜகுமாரியும் இணைந்து நடித்த விகடயோகி திரைப்படத்தில் இரண்டாவது கதாநாயகியாக நடிக்கும் வாய்ப்பு அமைந்தது. அதன் பிறகு பி.எஸ்.ராமையாவின் ‘தன அமராவதி' திரைப்படத்தில் கதாநாயகன் எஸ்.எம்.குமரேசனுக்கு இணையாக தனிக் கதாநாயகியாக நடித்தார். அன்றைய உச்ச நட்சத்திரமான டி.ஆர். மகாலிங்கத்துடன் 'பாரிஜாதம்' படத்தில் நடித்தார். எம்.ஜி.ஆர், சிவாஜி கணேசன், மலையாளத் திரைப்பட நடிகர் திக்குரிசி சுகுமாரன் நாயர் ஆகியோருடன் இணைந்து நடித்துப் புகழ்பெற்றார்.[1]



தமிழ் சினிமாவின் முதல் கனவுக் கன்னி டி.ஆர். ராஜகுமாரி, சகலகலாவல்லி பானுமதி, நாட்டியப் பேரொளி பத்மினி, நடிகையர் திலகம் சாவித்திரி, கன்னடத்துப் பைங்கிளி சரோஜாதேவி என்று பத்துக்கும் அதிகமான கதாநாயகிகள் தென்னிந்திய சினிமாவில் கொடிகட்டிப் பறந்துகொண்டிருந்த 50-களில்தான் பி.எஸ்.சரோஜாவும் பெரும்புகழ் பெற்றார். சேலம்தான் சரோஜா குடும்பத்தின் பூர்வீகம்.

பாடும் திறன், ஆடும் திறன், சர்க்கஸில் பார் விளையாடும் திறன் எனப் பன்முகத் திறமைகொண்ட பி.எஸ். சரோஜா 1929-ம் ஆண்டு நவம்பர் 18-ம் தேதி பாலசுப்ரமணியம் – ராஜலட்சுமி தம்பதிக்கு திருவனந்தபுரத்தில் பிறந்தார். பத்து மாதக் குழந்தையான சரோஜாவுடன் சென்னை ராயபுரத்தில் குடியேறியது அவரது குடும்பம். சரோஜாவின் தாத்தா தேர்ந்த வயலின் ஆசிரியர்.
அம்மா வாய்ப்பாட்டில் வல்லவர். களைப்புடன் வீடு வரும் கணவருக்காக ஆர்மோனியம் வாசித்துக்கொண்டே பாடி அசத்துவாராம். தாத்தாவும் அம்மாவும் தந்த தாக்கம் காரணமாக இசையின்பால் ஈர்க்கப்பட பி.எஸ். சரோஜா, அம்மாவிடம் வாய்ப்பாட்டு கற்றுக்கொண்டார். சிறுவயதிலேயே தெலுங்குக் கீர்த்தனைகள் பாடும் அளவுக்கு இசையில் தேறினார்.
காந்தமாய் இழுத்த சர்க்கஸ்

பாடும் திறமையை வளர்த்துக்கொண்ட சரோஜா, ராயபுரம் புனித அந்தோணியார் தொடக்கப் பள்ளியில் சேர்க்கப்பட்டார். வீட்டிலிருந்து கூப்பிடு தூரத்தில் பள்ளிக்கூடம். ஒன்பது வயதுச் சிறுமியாக மூன்றாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தபோது சர்க்கஸ் அவரது வாழ்க்கைக்குள் நுழைகிறது. பள்ளி மைதானத்தில் முகாமிட்டிருந்தது ‘தமிழ்நாடு சர்க்கஸ்’. கேரள, ஒரிய பெண்கள், ஆண்களைக் கொண்டு அமைக்கப்பட்ட சர்க்கஸ் கம்பெனிகள் புகழ்பெற்றிருந்த அந்தக் காலத்தில், தமிழ்க் கலைஞர்களைக் கொண்டு தமிழ் முதலாளிகளால் தொடங்கப்பட்டிருந்த சர்க்கஸ் கம்பெனி அது. இரவில் வண்ண விளக்குகள் மின்ன பேண்ட் வாத்திய ஒலியுடன் ஈர்த்த சர்க்கஸ் கூடாரம் பகலில் அமைதியாக இருக்கும்.
ஒருநாள் சர்க்கஸ் கூடாரத்தைக் கடந்து பள்ளிக்குப் போய்க்கொண்டிருந்த சரோஜா, கூடாரத்தின் உள்ளே “ ஆ...ஊ...” என்று கேட்டுக்கொண்டிருந்த ஒலிகளைக் கேட்டு உள்ளே நுழைந்துவிட்டார். அங்கே சிலம்பம்,
களரி, ஜிம்னாஸ்டிக்ஸ் பயிற்சிகளில் ஈடுப்பட்டிருந்தார்கள் சர்க்கஸ் கலைஞர்கள். அவர்களுக்குப் பயிற்சி அளித்துக்கொண்டிருந்தவர் சர்க்கஸ் வாத்தியார் டி.எம்.நம. மதியம்வரை பள்ளிக்கூடத்துக்கு மட்டம்போட்டுவிட்டு அங்கே ஒளிந்திருந்து சர்க்கஸ் பயிற்சிகளைக் கவனித்துக்கொண்டிருந்த சரோஜாவை ஒருநாள் கையும் மெய்யுமாகப் பிடித்தார் நாம.

“எவ்வளவு நாட்களாக இந்த வேலையைச் செய்கிறாய்?” என்று வாத்தியார் கேட்க, பயந்து நடுங்காமல் “ஒரு திங்களுக்கு மேல்” என்றார். அத்தோடு நிற்கவில்லை சரோஜா. அவர்கள் முன்னாள் அந்தர்பல்டியடித்துக் காண்பித்தார். அத்தனை சீக்கிரம் கற்றுக்கொள்ளக்கூடிய வித்தை அல்ல அது. ஆச்சரியத்துடன் சிறுமி சரோஜாவை அழைத்துக்கொண்டு அவளது வீட்டுக்கு வந்தார் வாத்தியார் நாம “ கண்களால் பார்த்த ஞானத்தில் அந்தர்பல்டி அடிக்கக் கற்றுக்கொண்டிருக்கிறாள் உங்கள் மகள். அவள் இனி என் சிஷ்யப்பிள்ளை” என்றார்.
“ஐயோ இவளது அப்பாவுக்குத் தெரிந்தால் தோலை உரித்து உப்புக்கண்டம் போட்டுவிடுவார், சர்க்கஸ் வேண்டாம் “ என்று மன்றாடிப்பார்த்தார் அம்மா. ஆனால் பட்டினிகிடந்து சாதித்தார் சரோஜா. அப்பாவுக்குத் தெரியாமல் நாமயிடம் மூன்றே ஆண்டுகளில் முழு வித்தைகளைக் கற்றுக்கொண்ட சரோஜா 12 வயதில் சர்க்கஸ் அரங்கேற்றத்துக்காகக் காத்திருந்த நேரத்தில் ‘தமிழ்நாடு சர்க்கஸ் கம்பெனி’ மூடப்பட்டது.
ஜெமினியில் தொடங்கிய பயணம்

சர்க்கஸ் கம்பெனி மூடப்பட்டாலும் தனது சிஷ்யப் பிள்ளைகளுக்குத் தொடர்ந்து சர்க்கஸ் பயிற்சியளித்துவந்தார் நாமஸ்ரீ. இந்த நேரத்தில் ராயபுரத்தில் ராஜாஜி கலந்துகொண்ட பிரம்மாண்டமான காங்கிரஸ் பொதுக்கூட்டம் நடந்தது. அதில் கூட்டம் தொடங்கும்முன் தனது மாணவர்களைச் சாகசங்கள் செய்துகாட்டச் செய்தார் வாத்தியார். இந்த சாகச நிகழ்ச்சியைக் கண்ட மக்கள் பலத்த ஆராவாரம் செய்து உற்சாகப்படுத்தினார்கள்.
ராஜாஜி பேசும்போது சாகச நிகழ்ச்சியைக் குறிப்பிட்டுப் பாராட்டிப் பேசினார். இந்தக் கூட்டத்துக்கு ராஜாஜியுடன் வந்திருந்தார் காங்கிரஸ் ஊழியரான தட்சிணாமூர்த்தி. ஜெமினி ஸ்டுடியோவில் பணியாற்றிவந்த இவர், சரோஜாவின் அழகையும் சாகசத் திறமையையும் கண்டு ஆச்சரியப்பட்டுப்போனார். பின்னர் மாதம் 45 ரூபாய் சம்பளத்துக்கு சரோஜாவை ஜெமினி ஸ்டூடியோவில் சேர்த்துவிட்டார். கோரஸ் பாடுவது, நடனமாடுவது, துணைநடிப்பு என எல்லாம் செய்யத் தெரிந்தவர் என்று ஜெமினி ஸ்டுடியோ வட்டாரத்தில் பிரபலமானர் சரோஜா. 1941-ல் வெளியான ‘மதன காமராஜன்' திரைப்படத்தில் குழுநடனம் ஆடியதன் மூலம் திரையில் முதல்முறையாகத் தோன்றினார். ஆனால் துணைநடிகை வேடத்துக்குக்கூட ஜெமினியில் கடும் போட்டி நிலவியதால் ஜெமினியிலிருந்து வெளியேறினார்.
பிறகு ‘ஜுபிடர் நிறுவனத்தில் சேர்ந்த அவருக்கு எதிர்பார்த்த வாய்ப்பு அமைந்தது. ஜுபிடர் தயாரிப்பில் மிகப் பெரிய வெற்றிப் படமாக அமைந்த ‘குபேர குசேலா’வில் (1943) டி.ஏ.ஜெயலட்சுமியுடன் இணைந்து ஆடினார் பி.எஸ். சரோஜா. இந்தப் பாடல் காட்சி பட்டிதொட்டியெங்கும் பிரபலமானது.
காதலும் கதாநாயகி வாய்ப்பும்

ஜுபிடர் நிறுவனம் அடுத்துத் தயாரித்த ‘மகா மாயா’ படத்தில் நடனமாடினார். இந்தப் படத்தின் நடன இயக்குநர் பண்டிட் போலோ நாத் சரோஜாவின் நடனத் திறமையைக் கண்டு அவரை மனம்விட்டுப் பாராட்ட, அவரிடம் மனதைப் பறிகொடுத்தார் பி.எஸ்.சரோஜா. வட இந்தியரான போலோ நாத் பரதக் கலையுடன் மணிபூரி, கதக் போன்ற நடனங்களிலும் விற்பன்னராக இருந்தார். அவற்றைத் தன் காதலியான சரோஜாவுக்குச் சொல்லிக் கொடுத்தார்.
தென்னிந்தியப் படங்களில் அந்நாளின் பிரபலமான நடன இயக்குநராகப் பணியாற்றிவந்த அவர், மார்டன் தியேட்டர்ஸ் நிறுவனம் தயாரிப்பில் 'பர்மா ராணி', 'ராஜராஜேஸ்வரி' ஆகிய படங்களில் தனி நடனம் ஆடும் வாய்ப்புகளை சரோஜாவுக்கு பெற்றுத்தந்தார். இவர்களது காதல், திருமணத்தில் முடிந்தது. கலாராணி என்ற முதல் மகள் பிறந்தாள்.
இளம் வயதில் தயாகி, இல்லறத்தில் ஈடுபாடு காட்டிய சரோஜாவுக்கு ‘தமிழ் சினிமாவின் தந்தை’கே. சுப்பிரமணியம் வழியாக முதல் கதாநாயகி வாய்ப்பு அமைந்தது. பி.யு.சின்னப்பாவும், டி.ஆர். ராஜகுமாரியும் இணைந்து நடித்த அவரது 'விகடயோகி' திரைப்படத்தில் இரண்டாவது கதாநாயகியாக நடிக்கும் வாய்ப்பு அமைந்தது. அதன் பிறகு பி.எஸ்.ராமையாவின் ‘தன அமராவதி' திரைப்படத்தில் கதாநாயகன் எஸ்.எம்.குமரேசனுக்கு ஜோடியாகத் தனிக் கதாநாயகியாக நடித்தார்.
‘தன அமராவதி’க்குப் பிறகு பிரபலமான கதாநாயகியாக உயர்ந்தார் சரோஜா. அன்றைய சூப்பர் ஸ்டார் டி.ஆர். மகாலிங்கத்துடன் 'பாரிஜாதம்' படத்தில் நடித்தவர், பின்னாட்களில் சூப்பர் ஸ்டார்களாக உயர்ந்த எம்.ஜி.ஆர், சிவாஜி, மலையாளப் பட உலகின் முதல் சூப்பர் ஸ்டார் திக்குரிசி சுகுமாரன் நாயர் ஆகியோருடன் நடித்துப் புகழ்பெரும் அளவுக்கு உயர்ந்தார். 











நடித்த படங்கள் சில[மூலத்தைத் தொகு]

ஆண்டுதிரைப்படம்மொழிகுறிப்புகள்
1941மதனகாமராஜன்தமிழ்நடனம்
1942கண்ணகிதமிழ்நடனம்
1943குபேர குசேலாதமிழ்நடனம்
1943மங்கம்மா சபதம்தமிழ்நடனம்
1944மகாமாயாதமிழ்நடனம்
1944ராஜ ராஜேஸ்வரிதமிழ்நடனம்
1945பர்மா ராணிதமிழ்நடனம்
1946விகடயோகிதமிழ்
1947விசித்ர வனிதாதமிழ்
1947தன அமராவதிதமிழ்
1949நாட்டிய ராணிதமிழ்
1949தேவ மனோகரிதமிழ்
1949கீதாஞ்சலி | தமிழ்
1949இன்பவல்லிதமிழ்
1950பாரிஜாதம்தமிழ்
1951ஜீவித நௌகாமலையாளம்
1951பிச்சைக்காரிதமிழ்
1951ஓர் இரவுதமிழ்
1952அச்சான்மலையாளம்
1952ஆத்மசகிமலையாளம், தமிழ்
1952அம்மாமலையாளம்
1952கல்யாணிதமிழ்
1952அத்தைந்தி காபுரம்தெலுங்கு
1953ஆசை மகன்தமிழ்
1953ஆசதீபம்மலையாளம்
1953ஜெனோவாதமிழ், மலையாளம்
1953வாழப்பிறந்தவள்தமிழ்
1953லோகநீதிமலையாளம்
1954அவன் வருன்னுமலையாளம்
1954கூண்டுக்கிளிதமிழ்
1954மாங்கல்யம்தமிழ்
1956ஆத்மார்ப்பணம்மலையாளம்
1957புதுமைப்பித்தன்தமிழ்
1958லில்லிமலையாளம்
1959பாண்டித் தேவன்தமிழ்
1959வண்ணக்கிளிதமிழ்
1960உம்மாமலையாளம்
1961கிருஷ்ண குசேலாமலையாளம்
1961குமுதம்தமிழ்
1962புதிய ஆகாசம் புதிய பூமிமலையாளம்
1963கடலம்மாமலையாளம்
1964அருணகிரிநாதர்தமிழ்
1966தரவத்தம்மாமலையாளம்
1978அந்தோனீசு புண்ணியவாலன்மலையாளம்