Showing posts with label HERO. Show all posts
Showing posts with label HERO. Show all posts

Wednesday, 28 October 2020

CINEMA HERO`S USUAL STORY

 

CINEMA HERO`S USUAL STORY



அர்ஜுன் ,தனுஷ் ,அமிதாப் ,சல்மான்கான் ,சஞ்சய் தத் கமல் ,ரஜினி ,இவர்கள் அனைவருமே பெண்களுக்கு வாய்ப்பு தருவது ,தங்கள் படுக்கைகளை
பகிர்ந்த பிறகே .இதில் ஆச்சர்யம் ஏதுமில்லை .

பெங்களூர்: நடிகை ஸ்ருதி ஹரிஹரன், நடிகர் அர்ஜுன் மீது அளித்த பாலியல் புகாரை அடுத்து பெங்களூர் போலீசார் 3 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்துள்ளனர். இதையடுத்து அர்ஜுன் கைது செய்யப்படுவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. 'விஸ்மயா' என்ற கன்னட திரைப்படத்தில் நடித்தபோது, தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக நடிகை ஸ்ருதி ஹரிகரன் சமீபத்தில் 'மீடு' இயக்கத்தின் மூலமாக தெரிவித்தார். விஸ்மயா திரைப்படத்தின் தயாரிப்பாளரும் அர்ஜுன் தான். அவர் தன்னை நெருங்கி பின்னால் இருந்து கட்டி பிடித்ததாகவும், தனியாகத்தான் இருக்கிறேன் வீட்டுக்கு வா என்று இரட்டை அர்த்தத்தில் கூறியதாகவும் சுருதி குற்றம்சாட்டி வந்தார்.

வழக்கு தொடர்ந்தார் இந்தக் குற்றச்சாட்டை அர்ஜுன் மருத்துவந்தார். இது தொடர்பாக சமீபத்தில் கர்நாடக திரைப்பட வர்த்தக சபையில் சமரச பேச்சுவார்த்தைக்கு அழைக்கப்பட்டது. ஆனால் அதில் பங்கேற்ற அர்ஜுன், தான் சமரசமாக போகத் தயாரில்லை, தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் தண்டனை அனுபவிக்கவேண்டும் என்று பேட்டியளித்தார். முன்னதாக ஸ்ருதி மீது 5 கோடி ரூபாய் கேட்டு மானநஷ்ட வழக்கை நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார் அர்ஜுன்.

கைது அச்சம் இந்த நிலையில், ஸ்ருதி ஹரிஹரன் அளித்த புகாரின் பேரில், அர்ஜுன் மீது இந்திய தண்டனைச் சட்டம் 354, 354-ஏ, மற்றும் 509 ஆகியவற்றின் கீழ் கப்பன் பார்க் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து உள்ளனர். எனவே அர்ஜுன் கைது செய்யப்படுவாரா என்ற பரபரப்பு எழுந்துள்ளது. இதுகுறித்து அவர் தரப்பு வழக்கறிஞரான சியாம் சுந்தரிடம் கேட்டபோது, இந்த புகாரின் பேரில் அர்ஜுனை கைது செய்வதற்கான வாய்ப்பு கிடையாது என்று நம்மிடம் தெரிவித்தார். வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் தனது வழக்கறிஞர்களுடன் அர்ஜுன் தொடர்ந்து ஆலோசனை நடத்தி வருகிறார்

இரண்டரை வருடங்கள் விஸ்மயா திரைப்பட ஷூட்டிங் நடைபெற்ற காலகட்டங்களில் 2015ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 2016ஆம் ஆண்டு ஜூலை மாதம் ஆகியவற்றில் அத்துமீறல் நடைபெற்றதாக ஸ்ருதி ஹரிகரன் தெரிவித்துள்ளார். அந்த காலகட்டத்தில் திரைப்பட சூட்டிங் நடைபெற்ற ஹெப்பால், யூ.பி.சிட்டி உள்ளிட்ட பெங்களூரின் பல பகுதியில் அத்துமீறல் நடந்துள்ளதாக புகாரில் ஸ்ருதி கூறியுள்ளார்.

சாட்சிகள் ஆனால் அப்பகுதிகளில் பதிவான சிசிடிவி காட்சிகள் இப்போது கிடைப்பது சிரமம் என்பதால் அர்ஜுனுக்கு எதிராக வலுவான ஆதாரங்கள் எதையும் இதுவரை ஸ்ருதி வழங்கவில்லை என்று கூறப்படுகிறது. அதேநேரம், நடந்த சம்பவத்திற்கு சாட்சிகள் இருப்பதாக ஸ்ருதி கூறியுள்ளார்..

Wednesday, 7 October 2020

KALAIGNAM FIXED RAJINIKANTH AS HERO ,FIRST HE BOUGHT HOUSE GIVE IT TO HIM AS A GRATITUDE

 

KALAIGNAM FIXED RAJINIKANTH 

AS HERO ,FIRST HE BOUGHT HOUSE 

GIVE IT TO HIM AS A GRATITUDE




தேவர் ஃபிலிம்ஸ் கதை இலாகாவில் பணையாற்றிவந்த கலைஞானத்தை...‘நீ தனியா படம் பண்ணு... நான் உனக்கு ஃபைனான்ஸ் ஏற்பாடு பண்ணித்தர்றேன்...’ எனச் சொன்னார் தேவர். இதன்படிதான்‘பைரவி’படத்தை ரஜினியை கதாநாயகனாக வைத்து தயாரித்தார் கலைஞானம். ஆனால்... ரஜினியை ஹீரோவாக்கியதில் தேவருக்கு அப்போது உடன்பாடில்லை. ‘ஜெய்சங்கரை ஹீரோவாப் போடு... ரஜினியை வில்லனாப் போடு’ என்றார். ஆனால்... ரஜினிதான் ஹீரோ என்பதில் கலைஞானம் உறுதியாக இருந்ததால்... அந்தப் படத்திற்கு ஃபைனான்ஸ் ஏற்பாடு செய்துதர மறுத்துவிட்டார் தேவர். இருப்பினும்... விடாமுயற்சியோடு போராடி... ‘பைரவி’படத்தி தயாரித்தார் கலைஞானம். இங்கிருந்துதான் ரஜினி என்கிற சூப்பர்ஸ்டார் உருவானார்.




"நான் ஐயாயிரம், பத்தாயிரம் ரூபாய் சம்பளத்தில் தெலுங்கு, கன்னடம், தமிழ் மொழிப் படங்களில் சின்னச் சின்ன கேரக்டர்களில் நடிச்சிக்கிட்டிருந்தப்போ... கலைஞானம் சார் வந்து, “பைரவி என்கிற கதையைச் சொல்லி... 25 ஆயிரம் சம்பளம் தர்றேன்... நீங்கதான் ஹீரோ.. நான் நாளைக்கி வந்து... ஃபைனல் பண்ணிக்கிறேன்னு சொன்னார். எனக்கு தர்மசங்கடமாகிவிட்டது. நான் வில்லனாகத்தான் நடிக்க ஆசைப்பட்டேன். அதுதான் எனக்கு சரியா இருக்கும்... ஹீரோன்னா... அதுல அதுல பல கஷ்டங்கள் உண்டு. என்ன செய்யலாம்?னு புரியாத நிலையில ஒரு முடிவுக்கு வந்தேன். நாளைக்கி கலைஞானம் வந்ததும்... சம்பளத்தை உயர்த்திக் கேட்டா... நம்மளை விட்டுடுவார்னு நினைச்சேன். மறுநாள்... கலைஞானம் சார் வந்தார். ‘சார்... 50 ஆயிரம் ரூபா சம்பளம் வேணும்... அட்வான்ஸா ஐயாயிரம் குடுங்க’னு சொன்னேன். உடனே அவர்...‘இந்தாங்க அட்வான்ஸ்’னு 30 ஆயிரம் ரூபாயை மொத்தமா கொடுத்து அசத்தியதோடு... ‘உங்களுக்கு ஜோடி ஸ்ரீப்ரியா’னும் சொன்னார். அடேங்கப்பா... ஆட்டுக்கார அலமேலு புகழ் நடிகையா?னு எனக்கு வியப்பு... அந்த வியப்பு முடியும் முன்னமே... ‘சில நேரங்களில் சில மனிதர்கள் படப்புகழ் ஸ்ரீகாந்த் உங்களுக்கு வில்லனா நடிக்கிறார்’னு சொன்னார். மகிழ்ச்சியில் நான் திக்குமுக்காடிப்போனேன்.



படம் வெளியான பிறகு... கலைஞானம் சார் என்னைப் பார்க்கும்போதெல்லாம் தூரத்துல இருந்தபடியே ‘ரஜினி சௌக்கியமா?’னு புன்னகையோடு... என் பதிலுக்குக்கூட காத்திருக்காமல் போய்க்கிட்டே இருப்பார். ‘ஒரு படம் செய்து கொடுங்க’னு என்கிட்ட கேட்கவே மாட்டார். அழுதபிள்ளைதானே பால் குடிக்கும்... ஆனா அவரோ...‘நான் (ரஜினி) நல்லா இருந்தாபோதும்ங்கிற நல்ல உள்ளம் கொண்டவர்.


கலைஞானம் சார்... நான் தப்பு செய்துட்டேன். அவருக்கு நான் ஒரு படம் செய்து கொடுத்திருக்கணும்... “இப்படி... 25.12.2017 அன்று... ராகாவேந்திரா திருமண மண்டபத்தில் தன் ரசிகர்களிடம் அரசியல் அறிவிப்பை வெளியிட்டபோது கலைஞனத்தை கௌரவப்படுத்தினார் ரஜினி.


ரஜினி தலைமையில், பாரதிராஜாவின் கலை இலக்கிய பண்பாட்டுப் பேரவை சார்பில் 14.08.2019 அன்று கலைஞானம் அவர்களின் கலைச் சேவையைப் பாராட்டி சென்னை கலைவாணர் அரங்கத்தில் பாராட்டுவிழா நடைபெற்றது.



இதில் பேசிய சிவக்குமார், “கலைஞானம் இன்னும் வாடகை வீட்டில்தான் வசிக்கிறார்” என்கிற தகவலைச் சொன்னார். இதையடுத்து... அமைச்சர் கடம்பூர் ராஜீ பேசும்போது... “கலைஞானத்திற்கு அரசு சார்பில் வீடு தரபப்டும்” என்றார். ரஜினி தனது பேச்சின்போது... “ஸாரி... கலைஞானம் அவர்கள் இன்னமும் வாடகை வீட்டுலதான் இருக்கார்ங்கிறது எனக்கு இப்பத்தான் தெரியும். ‘நல்லாருக்கீங்களா?’னு கேட்டா... ‘நல்ல்ல்ல்ல்ல்ல்லா இருக்கேன்’னு சொல்லுவார்.


வெள்லை வேட்டி சட்டையில பளிச்சுனு சிரிச்சமுகமா இருக்கிற அவரைப் பார்க்கும் போது... அவர் கஷ்டபப்டுறமாதிரி தோணாது. அழுத குழந்தைக்குத்தான் தாய்கூட பால் கொடுப்பா. கலைஞானம் என்கிட்ட கேட்டிருக்கணும். பத்து படமாவது அவருக்கு நான் செய்துகொடுத்திருக்கணும். கலைஞானத்துக்கு வீடு கொடுக்கிற வாய்ப்பை நான் அரசாங்கத்துக்கு தரமாட்டேன்... நான் வாங்கித்தருவேன். கலைஞானத்தோட கடைசி மூச்சு... நான் வாங்கித்தர்ற வீட்டுலதான் போகணும். இன்னும் பல்லாண்டுகாலம் கலைஞானம் நலமுடன் வாழணும்” என்றார் ரஜினி.


விழாவுக்குகான வெறும்பேச்சாக இல்லாமல்... கலைஞானத்திற்கு வீடு வாங்கித்தருவதில் கலைஞானத்தைவிட தீவிரமாக இருந்தார் ரஜினி. விழாவில் பேசிய மறுநாளே வீடு வாங்குவதற்கான தொகைக்கு செக் போட்டு ராகவேந்திரா மண்டப அலுவலகத்தில் கொடுத்துவிட்டுத்தான் ‘தர்பார்’ படப்பிடிப்பிற்குச் சென்றார் ரஜினி. கடந்த 5.10.2019 வெள்ளியன்று... அமுதினி ஃபிளாட்ஸ், 34 விநாயகம் தெரு, வெங்கடேசன் நகர், விருகம்பாக்கம், சென்னை முகவரில் அமைந்திருக்கும் அடுக்குமாடி குடியிருப்பின் தரைத்தளத்தில் 1320 சதுரடியில் மூன்ரு படுக்கையறைகளும், இரண்டு கார் பாக்கிங்களும் கொண்ட வீடு வாங்கப்பட்டது.


07.10.2019 அன்று காலை பத்துமணிக்கு தான் வாங்கிக்கொடுத்த புதுவீட்டுக்கு ரஜினி வந்தார். அவருக்கு பொன்னாடை போர்த்தி வரவேற்றார் கலைஞானம். பூஜையறையில் குத்துவிளக்கேற்றினார் ரஜினி. கூடவே பாபா படம் ஒன்றையும் பரிசளித்தார். அதன்ப்பின் ரஜினிக்கு மில்க் ஸ்வீட் தரப்பட்டது. அதைச் சாப்பிட்டபின் கலைஞானம் தன் குடும்பத்தினரை ரஜினிக்கு அறிமுகம் செய்துவைத்தார். பிறகு வீட்டைச் சுற்றிப்பார்த்த ரஜினி... “வீடு தெய்வீகமா இருக்கு” என மகிழ்ச்சி தெரிவித்தார். அதன்பின் விடைபெற்றுச் சென்றார் ரஜினி. கலைஞானத்திடம் நாம் இதுபற்றி கேட்டபோது.... மகிழ்ச்சியும், நெகிழ்ச்சியுமாக... அவர் சொன்னார்....“வீடு வாங்கிக்கொடுத்தார்... விளக்கும் ஏற்றிவைத்தார்”

Monday, 4 May 2020

TIPPU SULTAN IS HE A VILLAIN OR HERO





TIPPU SULTAN
IS HE A VILLAIN OR HERO

கர்நாடக மாநில காங்கிரஸ் அரசு, திப்பு சுல்தானின் பிறந்தநாளை கொண்டாடி இந்துக்களின் காயங்களில் உப்பைத் தூவுவது போன்ற செயல்களில் ஈடுபடக்கூடாது என்று மத்திய அமைச்சர் அனந்த் குமார் சொன்னதை ஒப்புக்கொள்கிறேன்.

திப்பு சுல்தான் மதச்சார்பற்ற அரசர் அல்ல, லட்சக்கணக்கான இந்துக்களைக் கொன்றவர். அதற்கான உதாரணங்களை பட்டியலிட்டால் அது நீண்டுகொண்டே போகும்.

இந்துக்களைப் போன்றே பெயர் வைத்துக் கொண்ட திப்புவின் அமைச்சர்கள் இந்துக்களின் துரோகிகளாக செயல்பட்டிருக்கிறார்கள்!

திப்புவின் அரசில் அங்கம் வகித்தவர்களில் பலர் இந்துக்களின் பெயர்களை வைத்திருந்தார்கள். உள்துறை அமைச்சராக இருந்தவர் இந்து பெயர் கொண்ட ஷாமையா ஐயங்கார். டெல்லியின் முகலாய அரசவையில் மைசூர் மற்றும் திப்புவின் பிரதிநிதிகளாக இருந்தவர்கள் மூல்சந்த் மற்றும் திவான் ராய். திப்புவின் பிரதமமந்திரியாக பதவிவகித்த திவான் பூர்ணையா.

திவான் பூர்ணையா மீது கண்மூடித்தனமான நம்பிக்கை கொண்டிருந்த திப்பு, ராக்கெட் படையணியின் தலைவராகவும் அவரை நியமித்தார். பிரிட்டனுடன் நடைபெற்ற போரில் காயமடைந்தபோதும், பூர்ணையாவின் கைகளில் தனது மகனை ஒப்படைத்த திப்பு, 'என் மகனை உங்கள் கையில் ஒப்படைக்கிறேன்' என்று கூறினார்.கார்ன்வாலிஸ் இந்தியாவை காப்பாற்றினாரா?

கோரட்பூரின் இந்துக்கள் மற்றும் பெரும் எண்ணிக்கையிலான மலபார் நாயர்களை திப்பு கொன்றதை ஒத்துக்கொள்கிறேன்.

ஆனால், மங்களூரின் கிறித்துவர்கள், மகாதேவியின் முஸ்லிம்கள் மற்றும் மொபலா முஸ்லிம்களை ஏன் கொன்று குவித்தார்கள்? ஒருவேளை அவர்கள் அனைவரும் பிரிட்டிஷ்காரர்களின் உளவாளிகள் என்று சந்தேகிக்கப்பட்டார்களோ?குறைந்தபட்சம் கர்நாடக பாரதிய ஜனதா கட்சியினர் லார்டு கார்ன்வாலிஸின் பிறந்தநாளை அடுத்த ஆண்டு விழாவாக கொண்டாடட்டும், ஏனெனில் அவர் திப்பு போன்ற காட்டுமிராண்டியிடம் இருந்து இந்தியாவை காப்பாற்றினார் அல்லவா?

புதிய வரலாற்றின்படி, மைசூரில் எட்டாயிரம் ஆலயங்களை இடித்துத் தள்ளினார் திப்பு. ஆனால், தனது அரண்மனைக்கு அருகில் இருந்த ரங்கநாத சுவாமி கோவிலை மட்டும் இடிக்க மறந்துவிட்டது ஏன் என்று தெரியவில்லை.

இந்துக்களின் மீது மிகப்பெரிய வெறுப்பு இருந்தபோதிலும் தனது கோட்டையில் அவர் 10 நாட்கள் தசரா கொண்டாடினார் என்ற செய்தி விசித்திரமானதாக இல்லையா? ஆனாலும், திப்புவுக்குப் பிறகும் அவருடைய குடும்பத்தினர் இந்த பாரம்பரியத்தை தொடர்ந்தது ஏன் என்று தெரியாமல் வியப்பு ஏற்படுகிறது!

ஆவணங்களின்படி, ஆண்டுதோறும் இந்துக்களின் 158 பெரிய கோயில்களுக்கு நிதியுதவி அளித்துவந்த திப்புவின் அரசு, நிலங்களையும் நன்கொடையாக கொடுத்திருக்கிறது.மராத்தாக்கள் சூறையாடிய சிருங்கேரி மடத்தை புனரமைத்த திப்பு

1791 ஆம் ஆண்டில் திப்புவுடன் நடைபெற்ற யுத்தத்தின்போது, பேஷ்வா மாதவ்ராவின் மராத்திய ராணுவம் சிருங்கேரி மடத்தையும் ஆலயத்தையும் சிதைத்தது. ஆலயத்தையும், மடத்தையும் சீரமைக்கக் கோரி சிருங்கேரியின் மடாதிபதி சங்கராச்சாரியர் திப்பு சுல்தானுக்கு 30 கடிதங்களை எழுதினார். அதையடுத்து புனரமைப்பு பணிகளுக்காக பணத்தை கொடுத்த திப்பு, பணியாளர்களையும் ஏற்பாடு செய்தார்.

1916 ஆம் ஆண்டில் எழுதப்பட்ட இந்த கடிதங்கள் அனைத்தையும், மைசூர் தொல்பொருள் இயக்குநரகம் பாதுகாத்து வைத்துள்ளது.

"18ஆம் நூற்றாண்டில் மராத்தியர்களின் படையெடுப்பின்போது, ஆலயத்தின் அனைத்து தங்கம் மற்றும் வெள்ளி நகைகள் கொள்ளையடிக்கப்பட்டது" என கொல்லூரில் பார்வதி தேவியின் அம்சமான மூகாம்பிகை ஆலயத்தின் இணையதளம் கூறுகிறது.அதுமட்டுமல்ல, இன்றும்கூட காலை 7.30 மணியளவில் திப்புவின் பெயரில் கொல்லூர் மூகாம்பிகை ஆலயத்தில் பூஜைகள் நடத்தப்படுகின்றன"


குறைந்தபட்சம் இந்த பூஜையாவது நிறுத்துங்கள். அதுமட்டுமல்ல சுமார் இருநூறு ஆண்டுகளாக, திப்புவைப் பற்றிய பாடல்களை பாடி அவரை போற்றும் கர்நாடகத்தை சேர்ந்த வயதான மூதாட்டிகள் மற்றும் பாட்டிகளின் தவறுகளை சுட்டிக்காட்டி, அவர்கள் இவ்வளவு ஆண்டுகளாக செய்துவருவது பாவம் என்பதை புரியவைத்து, அதற்கு பிராயசித்தம் செய்யச்சொல்ல வேண்டியது கன்னட பேரன்களின் கடமையல்லவா?

1970களில் கர்நாடக மாநிலத்தின் ஆர்.எஸ்.எஸ் கிளை, இந்திய மகாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும்விதமாக கன்னட மொழியில் வெளியிட்ட 'பாரத பாரதி' புத்தகத்தில் திப்பு சுல்தானும் இடம்பெற்றிருந்ததை நமக்கு வசதியாக மறந்துவிடலாம்.திப்பு மிகப்பெரிய கதாநாயகனா!

கர்நாடக மாநிலத்தில் 2008 ஆம் ஆண்டில் முதல்முறையாக ஆட்சியமைத்த பாரதிய ஜனதா கட்சியின் முதலமைச்சர் பி.எஸ். எடியூரப்பா, 2012ஆம் ஆண்டில் 'கர்நாடக ஜனதா பக்‌ஷ' என்ற கட்சியை தொடங்கினார்.

அப்போது, முஸ்லிம்களின் ஒரு கூட்டத்தில், அவருக்கு திப்பு சுல்தானைப் போல் தலைப்பாகை கட்டி, கையில் வீரவாளைக் கொடுத்து மரியாதை செய்தார்கள். அப்போது பாரதிய ஜனதா கட்சியில் இல்லை என்பதால் அதை எடியூரப்பா ஏற்றுக்கொண்டார்.

லட்சக்கணக்கான இந்துக்களின் உயிரைக் குடித்த திப்பு சுல்தானைப் போன்றே தலைப்பாகையும், வீரவாளையும் பெறுவது தவறில்லை என்று அவர் நினைத்திருக்கலாம்.

பிறகு 2014இல் எடியூரப்பா மீண்டும் பாரதிய ஜனதா கட்சிக்கே திரும்பியபிறகு, அவர் திப்புசுல்தானின் பெயரை கேட்பதற்குகூட தயாராக இல்லை.
Add caption

ஏனெனில் வரலாறும், பங்கு சந்தையும் எப்போது உச்சத்திற்கு செல்லும் எப்போது அதல பாதாளத்தில் வீழும் என்பதை யாரால் கணிக்கமுடியும்? இன்று விற்கப்படும் பங்கின் விலை நாளைக்கு என்னவா இருக்கும் என்பதை சொல்வது சுலபமா என்ன?














‘கிழக்கிந்தியக் கம்பெனியின் குலை நடுக்கம்‘, திப்புவின் மைசூர் அரசுக்கு அன்று லண்டன் பத்திரிகைகள் வைத்த பெயர் இது. “இந்தியாவில் கும்பினியாட்சி நீடிக்க முடியுமா?” என்ற அச்சத்தை எதிரிகளின் மனதில் உருவாக்கியவர் திப்பு. தென்னிந்தியாவில் தொடங்கிய முதல் விடுதலைப் போரின் நாயகர்களான கட்டபொம்மன், மருது சகோதரர்கள், கோபால் நாயக்கர், தீரன் சின்னமலை, கேரள வர்மா, தூந்தாஜி வாக் போன்ற எண்ணற்ற போராளிகளுக்கு அன்று மிகப்பெரும் உந்து சக்தியாகத் திகழ்ந்தவர் திப்பு.1782 டிசம்பரில், ஹைதர் இறந்த பின் அரசுரிமையைப் பெறும்போது திப்புவின் வயது 32. மேற்குக் கடற்கரையிலிருந்து ஆங்கிலேயர்களைத் துடைத்தெறிந்து விட வேண்டும் என்ற வேகத்துடன் போரைத் தொடர்ந்தார் திப்பு. திப்புவின் அணியில் போரிட்டுக் கொண்டிருந்தன இந்தியாவில் இருந்த பிரெஞ்சுப் படைகள். ஆனால், அன்று புரட்சியெனும் எரிமலையின் வாயிலில் அமர்ந்திருந்த பிரெஞ்சு மன்னன் 16ம் லூயி, பிரிட்டனுடன் சமரசம் செய்து கொண்டதால் திப்புவும் போரை நிறுத்த வேண்டியதாயிற்று.

1784இல் முடிவடைந்த இந்தப் போரில் ஆங்கிலப் படையின் தளபதி உள்ளிட்ட 4000 சிப்பாய்கள் திப்புவிடம் போர்க் கைதிகளாகப் பிடிபட்டு, பின்னர் அவரால் விடுவிக்கப்பட்டனர். இந்த அவமானம்தான் கும்பினியுடைய குலைநடுக்கத்தின் தொடக்கம்..
மூன்றாவது மைசூர்ப் போர் என்று அழைக்கப்படும் காலனியாதிக்க எதிர்ப்புப் போர் (1790 – 92) ஆங்கிலேயக் கைக்கூலியான திருவிதாங்கூர் மன்னனால் தூண்டிவிடப்பட்டது. தனது நட்பு நாடான திருவிதாங்கூரை ஆதரிப்பது என்ற பெயரில் கவர்னர் ஜெனரல் கார்ன்வாலிஸ், திப்புவுக்கு எதிராகக் களமிறங்கினான். திருவிதாங்கூர், ஐதராபாத் நிஜாம், மைசூர் அரசின் முன்னாள் பாளையக்காரர்கள், ஆற்காட்டு நவாப், தொண்டைமான் ஆகிய அனைவரும் ஆங்கிலேயன் பின்னால் அணிதிரண்டனர்.

எனவே எதிரிகளைத் தன்னந்தனியாக எதிர்கொண்டார் திப்பு. மைசூருக்கு அருகிலிருக்கும் சீரங்கப்பட்டினம் கோட்டை 30 நாட்களுக்கும் மேலாக எதிரிகளின் முற்றுகைக்கு இலக்கான போதிலும் எதிரிகளால் கோட்டைக்குள் நுழைய முடியவில்லை. “30 நாட்கள் முற்றுகையிட்டும் எங்களால் அந்தத் தீவையும் கோட்டையையும் தூரத்திலிருந்து தரிசிக்க மட்டுமே முடிந்தது” என்று பின்னர் குறிப்பிட்டான் ஆங்கிலேய அதிகாரி மன்றோ.

பல போர் முனைகளில் ஆங்கிலேயரை வெற்றி கொண்டன திப்புவின் படைகள். எனினும் போரின் இறுதிக்கட்டத்தில் மராத்தாக்களின் பெரும் படையும் ஆங்கிலேயருடன் சேர்ந்து கொள்ளவே, உடன்படிக்கை செய்து கொள்ளவேண்டிய கட்டாயம் திப்புவுக்கு ஏற்பட்டது.

மைசூர் அரசின் பாதி நிலப்பரப்பை எதிரிகள் பங்கு போட்டுக்கொண்டனர். இழப்பீட்டுத் தொகையாக 3.3 கோடி ரூபாயை ஒரு ஆண்டுக்குள் செலுத்த வேண்டுமென்றும், அது வரை திப்புவின் இரு மகன்களை பணயக் கைதிகளாக ஒப்படைக்க வேண்டுமென்றும் நிபந்தனை விதித்தான் கார்ன்வாலிஸ். பணயத்தொகையை அடைத்து கும்பினிக் கொள்ளையர்களிடமிருந்து தன் மகன்களை மீட்டதுடன் ஆங்கிலேயருக்கு எதிரான அடுத்த போருக்கும் ஆயத்தம் செய்யத் தொடங்கினார் திப்பு. 1792 போரில் ஏற்பட்ட இழப்புகளைச் சரி செய்தது மட்டுமல்ல, முன்னிலும் வலிமையாகத் தனது பொருளாதாரத்தையும் இராணுவத்தையும் திப்பு கட்டியமைத்துவிட்டார்.

“ஆம். நான் அவனைக் கண்டு அஞ்சுகிறேன். அவன் நாமறிந்த மற்ற இந்திய மன்னர்களைப் போன்றவன் அல்ல. மற்ற மன்னர்கள் மத்தியில் இவன் ஏற்படுத்தும் முன்னுதாரணத்தைக் கண்டும் நான் அஞ்சுகிறேன். ஆனால், அவனைப் பின்பற்றும் தகுதியில்லாத கோழைகளாக மற்ற மன்னர்கள் இருப்பது நம் அதிருஷ்டம்” என்று 1798இல் கும்பினித் தலைமைக்குக் கடிதம் எழுதுகிறான் அன்றைய கவர்னர் ஜெனரல் மார்க்வெஸ் வெல்லெஸ்லி.

திப்புவைப் போரிட்டு வெல்ல முடியாது என்ற முடிவுக்கு வந்த வெள்ளையர்கள், ‘பிளாசிப் போரில்’ பயன்படுத்திய லஞ்சம் எனும் ஆயுதத்தையும் ஐந்தாம் படையையும் ஆயத்தப்படுத்தத் தொடங்கினார்கள். அடுத்த ஓராண்டிற்குள் திப்புவின் முதன்மையான அமைச்சர்களும் அதிகாரிகளும் தளபதிகளும் விலைக்கு வாங்கப்பட்டார்கள். இதைக் குறிப்பிட்டு, “இப்போது நாம் ‘தைரியமாக’ திப்புவின் மீது படையெடுக்கலாம்” என்று 1799இல் கும்பினியின் தலைமைக்குக் கடிதம் எழுதுகிறான் வெல்லெஸ்லி. இதுதான் திப்புவின் இறுதிப்போர். நாடு தழுவிய அளவில் ஒரு ஆங்கிலேய எதிர்ப்பு முன்னணியை உருவாக்க முயன்று தோற்று, பிரான்சிலிருந்து நெப்போலியனின் உதவியும் கிடைக்காத நிலையிலும், தன்னந்தனியாக ஆங்கிலேயரை எதிர்கொண்டார் திப்பு. 3வது போரின்போது ஆங்கிலேயனுக்குத் துணை நின்ற துரோகிகள் அனைவரும் இந்தப்போரிலும் திப்புவுக்கு எதிராக அணிவகுத்தனர். மராத்தியர்களோ, கண்டுகொள்ளாமல் ஒதுங்கிக் கொண்டனர். அனைத்துக்கும் மேலாக, திப்புவின் அமைச்சர்களான மீர் சதக்கும், பூர்ணய்யாவும் செய்த ஐந்தாம்படை வேலை காரணமாக சீரங்கப்பட்டினத்தின் கோட்டைக் கதவுகள் ஆங்கிலேயருக்குத் திறந்து விடப்பட்டன. தன்னுடன் போரிட்டு மடிந்த 11,000 வீரர்களுடன் தானும் ஒரு வீரனாகப் போர்க்களத்தில் உயிர் துறந்தார் மாவீரன் திப்பு. ஆங்கிலேயப் பேரரசின் காலனியாதிக்கத்துக்குத் தடையாகத் தென்னிந்தியாவிலிருந்து எழுந்து நின்ற அந்த மையம் வீழ்ந்தது.

திப்புவின் புலி
திப்புவின் புலி - ஆங்கிலேய சிப்பாயின் குரல்வளையை கவ்விப் பிடிப்பது போல வடிவமைக்கப்பட்ட இசைக்கருவி
திப்புவைக் கண்டு ஆங்கிலேயர்கள் அஞ்சி நடுங்கியதற்குக் காரணம் அவருடைய இராணுவ வல்லமையோ, போர்த்திறனோ மட்டுமல்ல; தன்னுடைய சாம்ராச்சியத்தைக் காப்பாற்றிக் கொள்ளவேண்டுமென்று மட்டும் சிந்திக்காமல், ஆங்கிலேயரை விரட்டவேண்டுமென்பதையே தன் வாழ்க்கை இலட்சியமாகக் கொண்டிருந்த ஒரு மன்னனை, கனவிலும் நனவிலும் அதே சிந்தனையாக வாழ்ந்த ஒரு மன்னனை, அவர்கள் கண்டதில்லை.ஆம். திப்புவின் 18 ஆண்டுகால ஆட்சி அதற்குச் சான்று கூறுகிறது. ஆங்கிலேயர்க்கெதிரான நாடு தழுவிய, உலகு தழுவிய முன்னணி ஒன்றை அமைப்பதற்காக திப்பு மேற்கொண்ட முயற்சிகள் நம்மைப் பிரமிக்க வைக்கின்றன. டில்லி பாதுஷா, நிஜாம், ஆற்காட்டு நவாப், மராத்தியர்கள் என எல்லோரிடமும் மன்றாடியிருக்கிறார் திப்பு.துருக்கி, ஆப்கான், ஈரான் மன்னர்களுக்குத் தூது அனுப்பி வணிகரீதியாகவும், இராணுவ ரீதியாகவும் உலகளவிலான எதிர்ப்பு அணியை உருவாக்கவும் திப்பு முயன்றிருக்கிறார். “திப்புவின் கோரிக்கையை ஏற்று ஜமன் ஷா வட இந்தியாவின் மீது படையெடுத்தால் அந்தக் கணமே தென்னிந்தியா திப்புவின் கைக்குப் பறிபோய் விடும்” என்று 1798இல் பதறியிருக்கிறான் வெல்லெஸ்லி.

பிரான்சுடனான உறவில் ஒரு இளைய பங்காளியாக அவர் எப்போதும் நடந்து கொள்ளவில்லை. படையனுப்பக் கோரி பிரெஞ்சுக் குடியரசுக்கு அவர் எழுதிய கடிதத்தில், “அந்தப் படை தன் தலைமையில்தான் போரிட வேண்டுமென்றும், நேச நாடான தன்னைக் கலந்து கொள்ளாமல் இனி ஆங்கிலேயர்களுடன் பிரான்சு எந்த உடன்படிக்கைக்கும் செல்லக் கூடாது” என்றும் கூறுகிறார். இந்தக் கடிதத்தின் அடிப்படையில்தான், திப்புவின் இராணுவத்தில் சேருமாறு பிரெஞ்சு மக்களுக்கு அறைகூவல் விடுக்கிறார்கள் பிரெஞ்சுப் புரட்சியாளர்களான ஜாகோபின்கள்.பிரெஞ்சுப் புரட்சிக்கு முன் லூயி மன்னனின் அரசுடன் உறவு வைத்திருந்த காலத்தில் கூட, பாண்டிச்சேரியிலிருந்து பிரெஞ்சு அரசால் விரட்டப்பட்ட ஜாகோபின்களுக்கு (மன்னராட்சியை எதிர்த்த பிரெஞ்சுப் புரட்சிக்காரர்கள்) மைசூரில் இடமளிக்க திப்பு தயங்கவில்லை. புரட்சி வெற்றி பெற்றபின் அதைக் கொண்டாடுமுகமாக முடியாட்சிச் சின்னங்களையெல்லாம் தீயிட்டு எரித்து மைசூரில் ஜாகோபின்கள் நடத்திய விழாவிலும் பங்கேற்று, ‘குடிமகன் திப்பு’ என்று அவர்கள் அளித்த பட்டத்தையும் மகிழ்ச்சியுடன் ஏற்கிறார். சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் என்ற சொற்கள் இந்த நாட்டில் திப்புவின் மண்ணில்தான் முதன் முதலாக ஒலித்தன.

பிரெஞ்சுப் பத்திரிக்கையொன்றில் ஆங்கிலேயக் காலனியாதிக்கத்துக்கு எதிராக அமெரிக்கர்கள் நடத்திய போருக்கு நிதியுதவி கேட்டு பெஞ்சமின் ஃபிராங்க்ளின் வெளியிட்டிருந்த கோரிக்கையைப் படித்துவிட்டு ‘மைசூர் அரசின் சார்பாக’ உடனே நிதியனுப்பிய திப்பு, அமெரிக்காவிலும் இந்தியாவிலும் நடக்கும் காலனியாதிக்க எதிர்ப்புப் போர்களின் ஒற்றுமையைக் குறிப்பிட்டு “உலகின் கடைசி சர்வாதிகாரி இருக்கும் வரையில் நமது போராட்டம் தொடரட்டும்” என்று செய்தியும் அனுப்புகிறார்.ஒரு மன்னன் இவ்வாறெல்லாம் நடந்து கொண்டிருக்க முடியுமா என்று வாசகர்கள் வியப்படையலாம். வரலாற்றின் போக்கை உணர்ந்து சமூக மாற்றத்துக்கான நடவடிக்கைகளில் முன்கை எடுத்த மன்னர்கள் உலக வரலாற்றில் மிகச் சிலரே. அத்தகைய அறிவொளி பெற்ற மன்னர்களில் திப்பு ஒருவர். பரம்பரை அரச குடும்பம் எதையும் சாராத திப்புவின் சமூகப் பின்னணியும், ‘பென்சன் ராஜாக்கள்’ என்று வெறுப்புடன் அவர் குறிப்பிட்ட ஆங்கிலேய அடிவருடி மன்னர்கள் மீது அவர் கொண்டிருந்த வெறுப்பும், பிரெஞ்சுப் புரட்சியின் இலக்கியங்களோடு அவர் கொண்டிருந்த பரிச்சயமும், அவருக்குள் அணையாமல் கனன்று கொண்டிருந்த காலனியாதிக்க எதிர்ப்புணர்வும், மாறிவரும் உலகைப் புரிந்து கொள்ளும் கணணோட்டத்தை அவருக்கு வழங்கியிருக்க வேண்டும்.

திப்பு சுல்தான் கேலிச்சித்திரம்
ஆங்கிலேயர் படை திப்புவிடம் தோற்றதை நையாண்டி செய்து லண்டனில் வெளியான கேலிச்சித்திரம்
தனது அரசின் நிர்வாகம், வணிகம், விவசாயம், சமூகம், இராணுவம் போன்ற பல துறைகளில் அவர் அறிமுகப்படுத்த முனைந்த மாற்றங்களைப் பார்க்கும்போது, திப்பு என்ற ஆளுமையின் கம்பீரமும் செயல்துடிப்பும் நம்முன் ஓவியமாய் விரிகிறது.காலனியாதிக்கத்தை எதிர்க்க வேண்டுமானால் ஒரு தொழில் முறையில் பயிற்றுவிக்கப்பட்ட, பெரிய, நவீன இராணுவத்தை உருவாக்கியாக வேண்டும் என்ற புறவயமான நிர்ப்பந்தம் திப்புவை நவீனமயமாக்கத்தை நோக்கி உந்தித் தள்ளுகிறது. ஆனால், அரசுக்கான வருவாயை விவசாயம்தான் வழங்கியாக வேண்டுமென்ற சூழ்நிலையைப் புரிந்து கொண்டு விவசாயிகளின் வளர்ச்சி குறித்து அவர் பெரிதும் அக்கறை காட்டுகிறார்.“எந்தச் சாதி மதத்தைச் சேர்ந்தவரானாலும் சரி, உழுபவர்களுக்குத்தான் நிலம் சொந்தமாக இருக்கவேண்டும்” என்று திப்பு பிரகடனம் செய்கிறார். இந்தப் பிரகடனத்தை நடைமுறையில் அமல் படுத்தியிருப்பதற்கான வாய்ப்பு மிகவும் குறைவே என்றாலும், ரயத்வாரி முறையை அமல்படுத்தியதுடன், பார்ப்பனர்களின் நிலங்களுக்கு வழங்கப்பட்ட வரிவிலக்கையும் திப்பு ரத்து செய்திருக்கிறார். இராணுவம் மற்றும் துணை இராணுவப் படையினர் 3 லட்சம் பேருக்கு நிலம் வழங்கியிருக்கிறார். சென்னை மாகாணத்தைப் போல அல்லாமல் மைசூர் அரசில் தலித் சாதியினருக்குப் பல இடங்களில் நிலஉடைமை இருந்ததாக எட்கர் தர்ஸ்டன் என்ற ஆய்வாளர் கூறுகிறார்.

“ஏழைகளையும், விவசாயிகளையும் சொல்லாலோ செயலாலோ துன்புறுத்த மாட்டோம்” என்று வருவாய்த்துறை ஊழியர்கள் பதவி ஏற்கும்முன் உறுதிமொழி எடுத்துக் கொள்ள வேண்டியிருந்தது. அதிகாரிகள் தம் நிலங்களில் விவசாயிகளைக் கூலியின்றி வேலை பார்க்கச் சொல்வது முதல் தம் குதிரைகளுக்கு இலவசமாகப் புல் அறுத்துக் கொள்வது வரை அனைத்தும் சட்டப்படி தண்டனைக்கு உரிய குற்றங்களாக்கப்பட்டிருந்தன. விவசாயிகளைக் கொடுமைப்படுத்திய அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டதற்கான சான்றுகளும் இருப்பதாகக் கூறுகிறார்கள் ஆய்வாளர்கள். 1792 போருக்குப்பின் திப்புவிடமிருந்து ஆங்கிலேயர்கள் கைப்பற்றிக் கொண்ட சேலம் மாவட்டம் வேலூர் தாலூக்காவிலிருந்து வரிக்கொடுமை தாளாமல் 4000 விவசாயிகள் திப்புவின் அரசுக்குக் குடி பெயர்ந்ததை 1796லேயே பதிவு செய்திருக்கிறான் ஆங்கிலேய அதிகாரி தாமஸ் மன்றோ.1792 தோல்விக்குப் பிறகும் கூட ஆங்கிலேயரை தன் எல்லைக்குள் வணிகம் செய்ய திப்பு அனுமதிக்கவில்லை. மாறாக, உள்நாட்டு வணிகர்களை ஊக்குவித்திருக்கிறார். பணப்பயிர் உற்பத்தி, பெங்களூர் லால் பாக் என்ற தாவரவியல் பூங்கா, பட்டுப் பூச்சி வளர்ப்பு என விவசாயத்தை பிற உற்பத்தித் துறைகளுடன் இணைப்பதிலும், பாசன வளத்தைப் பெருக்கி விவசாயத்தை விரிவுபடுத்துவதிலும் கவனம் செலுத்தி இருக்கிறார் திப்பு. 1911இல் ஆங்கிலேயப் பொறியாளர்கள் கிருஷ்ணராஜ சாகர் அணையைக் கட்டுவதற்கான பணிகளைத் துவக்கிய போது அதே இடத்தில் அணைக்கட்டு கட்டுவதற்கு 1798இல் திப்பு நாட்டியிருந்த அடிக்கல்லையும், இந்த அணைநீரைப் பயன்படுத்தி உருவாக்கப்படும் புதிய விளைநிலங்களுக்கு வரிவிலக்கு அளிப்பது குறித்த திப்புவின் ஆணையையும் கண்டனர்.

“அன்றைய மைசூர் அரசின் மொத்த மக்கட்தொகையில் 17.5% பேர் விவசாயம் சாராத பிற உற்பத்தித் துறைகளில் ஈடுபட்டிருந்தனர்; இரும்பு, தங்கம், நெசவு போன்ற தொழில்களின் அடிப்படையிலான நகரங்கள் உருவாகியிருந்தன; உற்பத்தியின் அளவிலும் தரத்திலும் அவை ஐரோப்பியப் பொருட்களுக்கு நிகராக இருந்தன; முதலாளித்துவத் தொழிலுற்பத்தியின் வாயிலில் இருந்தது திப்புவின் மைசூர்’‘ என்று ஆங்கிலேய அதிகாரிகளின் ஆவணங்களையே ஆதாரம் காட்டி எழுதுகிறார் வரலாற்றாய்வாளர் தோழர்.சாகேத் ராமன். நகரங்களில் வளர்ந்திருந்த பட்டறைத் தொழில்கள் மற்றும் வணிகத்தின் காரணமாக சாதி அமைப்பு இளகத் தொடங்கியிருந்ததையும், நெசவு, சில்லறை வணிகம் முதலான தொழில்களில் தலித்துகள் ஈடுபட்டிருந்ததையும் தனது ஆய்வில் குறிப்பிடுகிறான் கும்பினி அதிகாரி புக்கானன்.திப்புவிடம் இருந்த புதுமை நாட்டமும் கற்றுக்கொள்ளும் தாகமும் இந்த முன்னேற்றத்தில் பெரும்பங்காற்றியிருக்கின்றன.
பிரான்சுடனான அவரது உறவில் ஐரோப்பியத் தொழில் புரட்சியை அப்படியே இங்கு பெயர்த்துக் கொண்டு வந்து விடும் ஆர்வம் தெரிகிறது. 1787 இல், பல்துறை அறிவையும் வளர்த்துக் கொள்வதற்காக 70 பேரை பிரான்சுக்கு அனுப்பி வைக்கிறார். அது மட்டுமல்ல, தொழிற்புரட்சியின் உந்துவிசையான நீராவி எந்திரத்தை உடனே அனுப்பி வைக்குமாறு பிரெஞ்சுக் குடியரசிடம் கோருகிறார் திப்பு.

இவையெதுவும் ஒரு புத்தார்வவாதியின் ஆர்வக் கோளாறுகள் அல்ல. காலனியாதிக்க எதிர்ப்புணர்வால் உந்தப்பட்டு தொழிலையும் வணிகத்தையும் வளர்க்க விரும்பிய திப்பு, 1793இல் கிழக்கிந்தியக் கம்பெனிக்குப் போட்டியாக அரசு வணிகக் கம்பெனியைத் துவக்குகிறார். இந்துஸ்தானம் முழுதும் 14 இடங்களில் வணிக மையங்கள், 20 வணிகக் கப்பல்கள், 20 போர்க்கப்பல்கள், கான்ஸ்டான்டி நோபிளில் மைசூர் அரசின் கப்பல் துறை.. என்று விரிந்து செல்கிறது திப்புவின் திட்டம்.அன்று கிழக்கிந்தியக் கம்பெனியை விஞ்சுமளவு வணிகம் செய்து கொண்டிருந்த பனியா, மார்வா, பார்ஸி வணிகர்கள் கும்பினியின் போர்களுக்கு நிதியுதவி செய்து கொண்டிருக்க, வணிகத்தையே ஒரு அரசியல் நடவடிக்கையாக, மக்களையும் ஈடுபடுத்தும் காலனியாதிக்க எதிர்ப்புப் போராக மாற்ற விழைந்திருக்கிறார் திப்பு.

திப்புவின் புலிக்கொடி
திப்புவின் புலிக்கொடி
அரசு கஜானாவுக்கு நிதியைத் திரட்டுவதற்காக மதுவிற்பனையை அனுமதித்த தனது நிதி அமைச்சரைக் கண்டித்து, “மக்களின் ஆரோக்கியத்தையும் ஒழுக்கத்தையும் அவர்களது பொருளாதார நலனையும் காட்டிலும் நம் கஜானாவை நிரப்புவதுதான் முதன்மையானதா?” என்று கேள்வி எழுப்புகிறார். கஞ்சா உற்பத்தியைத் தடை செய்கிறார். அவரது எதிரியான கும்பினியோ, கஞ்சா பயிரிடுமாறு வங்காள விவசாயிகளைத் துன்புறுத்தியது; கஞ்சா இறக்குமதியை எதிர்த்த சீனத்தின்மீது போர் தொடுத்தது; கஞ்சா விற்ற காசில் ‘சூரியன் அஸ்தமிக்காத சாம்ராச்சியத்தை’ உருவாக்கியது. அநாதைச் சிறுமிகளை கோயிலுக்கு தேவதாசியாக விற்பதையும், விபச்சாரத்தையும் தடை செய்தார் திப்பு. அதே காலகட்டத்தில் பூரி ஜகந்நாதர் கோயிலின் தேரில் விழுந்து சாகும் பக்தர்களின் மடமையிலும், அவ்வூரின் விபச்சாரத்திலும் காசு பார்த்தார்கள் கும்பினிக்காரர்கள். “எகிப்தியப் பிரமிடுகளும், சீனப் பெருஞ்சுவரும், கிரேக்க ரோமானியக் கட்டிடங்களும் அவற்றைக் கட்டுவதற்கு ஆணையிட்ட மன்னர்களின் புகழுக்குச் சான்று கூறவில்லை. கொடுங்கோல் மன்னர்களின் ஜம்பத்துக்காக ரத்தம் சிந்தி உயிர்நீத்த லட்சோப லட்சம் மக்களின் துயரம்தான் அவை கூறும் செய்தி” என்று எழுதிய திப்பு, தனது அரசில் அடிமை விற்பனையைத் தடை செய்தார். “எந்த அரசாங்க வேலையானாலும் கூலி கொடுக்காமல் வேலை வாங்கக் கூடாது” என்று தன் அதிகாரிகளுக்கு ஆணை பிறப்பித்தார்.

கும்பினிக்காரர்களோ திப்புவிடமிருந்து கைப்பற்றிய மலபார் பகுதியில் பின்னாளில் தம் எஸ்டேட்டு வேலைக்காக வாயில் துணி அடைத்துப் பிள்ளை பிடித்தனர்; முதல் விடுதலைப் போரில் தென்னிந்தியா தோற்றபின், தென் ஆப்பிரிக்கா முதல் மலேயா வரை எல்லா நாடுகளுக்கும் கொத்தடிமைகளாக மக்களைக் கப்பலேற்றினர்.

திப்புவின் ஜனநாயகப் பண்பு அவருடைய நிர்வாக ஆணைகள் அனைத்திலும் வெளிப்படுகிறது. “விவசாயிகள் மீது கசையடி போன்ற தண்டனைகளை நிறுத்திவிட்டு, 2 மல்பெரி மரங்களை நட்டு 4 அடி உயரம் வளர்க்க வேண்டும்” என்று தண்டனை முறையையே மாற்றுமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிடுகிறார். தவறிழைக்கும் சிப்பாய்கள் மீதும் உடல் ரீதியான தண்டனைகள் திப்புவின் இராணுவத்தில் நிறுத்தப்பட்டிருக்கின்றன.

“தோற்கடிக்கப்பட்ட எதிரி நாட்டின் சொத்துக்களைச் சூறையாடுவதன் மூலம் சிலர் பணக்காரர்கள் ஆகலாம். ஆனால், தேசத்தை அது ஏழ்மையாக்கும்; மொத்த இராணுவத்தின் கவுரவத்தையும் குலைக்கும். போர்களை போர்க்களத்தோடு முடித்துக் கொள்ளுங்கள். அப்பாவி மக்கள் மீது போர் தொடுக்காதீர்கள். பெண்களைக் கவுரவமாக நடத்துங்கள். அவர்களது மத நம்பிக்கைக்கு மதிப்புக் கொடுங்கள். குழந்தைகளுக்கும் முதியோருக்கும் பாதுகாப்பு கொடுங்கள்” என்று தன் இராணுவத்துக்கு எழுத்து பூர்வமாக ஆணை பிறப்பிக்கிறார் திப்பு. ஆங்கிலேயக் காலனியாதிக்கவாதிகளிடமிருந்து ஒரு பேச்சுக்குக் கூட இத்தகைய நாகரிகமான சிந்தனை அன்று வெளிப்பட்டதில்லை.

திப்பு சுல்தான்
போர் வீரர்களின் பிணக்குவியல்களுக்கு மத்தியில் திப்பு
“ஆங்கிலேயர் ஆட்சி இந்தியாவில் சந்திக்கும் முதன்மையான அபாயம் திப்புதான்” என்று கும்பினி நிர்வாகத்துக்குப் புரியவைப்பதற்காக தாமஸ் மன்றோ லண்டனுக்கு எழுதிய நீண்ட கடிதத்தில் திப்புவின் அரசைப் பற்றிக் கீழ்க்கண்டவாறு குறிப்பிடுகிறான்: “சிவில் நிர்வாகமாக இருக்கட்டும், இராணுவமாக இருக்கட்டும், உயர்குலத்தில் பிறந்தவர்கள் என்பதற்காக இங்கே சலுகை காட்டப்படுவதில்லை.. எல்லா வர்க்கத்தினர் மீதும் பாரபட்சமின்றி நீதி நிலைநாட்டப்படுகிறது.. அநேகமாக எல்லா வேலைவாய்ப்புகளும் பொறுப்புகளும் மிகச் சாதாரண மனிதர்களுக்கு வழங்கப்படுவதால், இந்தியாவில் வேறு எங்கும் காணமுடியாத அளவு செயல்துடிப்பை இந்த அரசில் பார்க்க முடிகிறது.”1799இல் திப்பு வீழ்த்தப்பட்டபின் எழுதப்பட்ட கும்பினி அதிகாரிகளின் குறிப்புகள் கீழ்க்கண்டவாறு கூறுகின்றன:

“இறுதி நேரத்தில் நமது கையாட்களாக மாறிய இந்துக்கள் கூட திப்புவை கனிவான எசமானாகவே கருதுகிறார்கள்…”, “தற்போது நாம் ஆட்சிக்கு வந்துவிட்டதால் திப்புவைப் பற்றிப் புகார் கூறினால் நாம் மகிழ்ச்சி அடைவோம் என்பதற்காகக் கூட மக்கள் யாரும் புகார் கூறவில்லை. இவர்கள் நம் ஆட்சியை வேறு வழியின்றிச் சகித்துக் கொண்டிருக்கிறார்கள். ஒரு வாய்ப்பு கிடைத்தால் மீண்டும் பழைய எசமானைத்தான் ஆதரிப்பார்கள்.”
– இவையனைத்தும் திப்புவைப் பற்றி எதிரிகள் வழங்கும் ஆதாரங்கள்

மக்கள் மீது திப்பு பாராட்டிய நேசம், சம்பிரதாயமானதோ நோக்கமற்றதோ அல்ல. எதிரிகள் கண்டு அஞ்சுமளவுக்கு ஒரு பிரம்மாண்டமான இராணுவத்தைக் கட்டி அமைத்திருந்த போதிலும், தன்னுடைய நாடே ஒரு மனிதனாக எழுந்து நின்று ஆங்கிலேயரை எதிர்த்துப் போராட வேண்டும் என்று கனவு கண்டிருக்கிறார் திப்பு.தன் அரண்மனையில் திப்பு பொறித்து வைத்துள்ள வாசகங்கள் இதற்குச் சாட்சி கூறுகின்றன.“நம்முடைய குடிமக்களுடன் சச்சரவு செய்வதென்பது, நமக்கெதிராக நாமே போர் தொடுத்துக் கொள்வதற்குச் சமமானது. மக்கள்தான் நம் கவசம். நமக்கு அனைத்தையும் வழங்குபவர்கள் மக்கள்தான். நம்முடைய சாம்ராச்சியத்தின் வலிமையனைத்தையும், வெறுப்பனைத்தையும் சேமித்து வையுங்கள். அவை அனைத்தும் அந்நிய எதிரிகளின் மீது மட்டும் பாயட்டும்.”

வெறும் சொற்களல்ல. காலனியாதிக்கத்துக்கு எதிரான போராட்டத்தில் தன் மக்களைக் கவசமாக மட்டுமின்றி, வாளாகவும் பயன்படுத்தக் கனவு கண்டார் திப்பு. “விவசாயிகள் அனைவருக்கும் துப்பாக்கி வழங்கப்பட வேண்டும். அன்றாடம் ஊருக்கு வெளியே துப்பாக்கி சுடும் பயிற்சி வழங்கப்பட வேண்டும்” என்று தன் வரி வசூல் அதிகாரிகளுக்கு எழுத்து பூர்வமாக ஆணை பிறப்பித்திருக்கிறார் திப்பு. இந்த ஆணை செயல் வடிவம் பெற்றிருக்குமா என்ற கேள்வி இருக்கட்டும். தன் குடிமக்கள் மீது எத்தனை நம்பிக்கை வைத்திருந்தால் ஒரு மன்னனே அவர்களுக்கு ஆயுதம் வழங்குமாறு உத்தரவிட்டிருக்க முடியும்?
திப்புவின் நம்பிக்கை வீண் போகவில்லை. சீரங்கப்பட்டினத்தின் கோட்டைக் கதவுகளைத் திறந்துவிட்ட நிதி அமைச்சன் மீர் சதக்கின் தலையை அந்தப் போர்க்களத்திலேயே சீவி எறிந்தான் திப்புவின் ஒரு சிப்பாய். செய்தியறிந்த மக்களோ அங்கேயே அவன் உடலின் மீது காறி உமிழ்ந்தார்கள். புதைக்கப்பட்ட பிறகும் அவன் உடலைத் தோண்டியெடுத்து அதன் மீது ஒரு வார காலம் சேற்றையும் மலத்தையும் வீசினார்கள். ‘சதக்’ என்ற பாரசீகச் சொல் துரோகத்தைக் குறிக்கும் சொல்லாக கன்னட மொழியில் ஏறியது.

காலனியாதிக்கத்துக்கு எதிராக ஒரு மக்கள் படையைக் கட்டக் கனவு கண்டார் திப்பு. அவர் மறைவுக்குப்பின் ஒன்றரை லட்சம் பேரைத் திரட்டி, ஆங்கிலேயருக்கு எதிராகப் போர் நடத்தி, தன் மன்னனுக்கு அஞ்சலி செலுத்தினான் திப்புவின் குதிரைப் படைத் தளபதி தூந்தாஜி வாக். ஒருவேளை திப்பு பிழைத்திருந்தால்? “உயிர் பிழைத்தல்’ என்ற சொற்றொடரே திப்புவின் அகராதியில் இல்லை. 1792 போரில் வெள்ளையரிடம் தோற்றவுடன் “ஆங்கிலேயரை ஒழிக்கும் வரை இனி நான் பஞ்சணையில் படுக்கமாட்டேன்” என்று அரசவையிலேயே சூளுரைத்தார் திப்பு.இதோ, குண்டுக் காயங்களுடன் கோட்டை வாயிலில் சரிந்து கிடக்கிறார் திப்பு.””மன்னா, யாரேனும் ஒரு ஆங்கிலேய அதிகாரியை அழைக்கட்டுமா, சரணடைந்து விடலாம்” என்று பதறுகிறான் அவருடைய பணியாள். “முட்டாள்… வாயை மூடு” என்று உறுமுகிறார் திப்பு. ஆம்! “ஆடுகளைப் போல 200 ஆண்டுகள் பிழைப்பதை விடப் புலியைப் போல 2 நாட்கள் வாழ்ந்து மடியலாம்” என்று பிரகடனம் செய்த அந்தப் புலி, போர்க் களத்திலேயே தன் கண்ணை மூடியது. திப்பு போர்க்களத்திற்குச் சென்று விட்டார் என்பதை நம்ப மறுத்து அரண்மனையெங்கும் தேடிய ஆங்கிலேய இராணுவம், நள்ளிரவில் சிப்பாய்களின் பிணக்குவியலுக்குள்ளே திப்புவின் உடலைக் கண்டெடுக்கிறது. அந்தக் காட்சியை அப்படியே பதிவு செய்திருக்கிறான் ஒரு ஆங்கிலேய அதிகாரி:

“நகரமே சூறையாடப்பட்டுத் தீக்கிரையாக்கப்பட்டுப் புகைந்து கொண்டிருக்கிறது. தமது வீடுகள் கொள்ளையடிக்கப்படுவதைப் பற்றிக் கவலைப்படாமல், திப்புவின் உடலை நெடுஞ்சாண் கிடையாக விழுந்து வணங்குகிறார்கள் மக்கள். அடக்க முடியாமல் நெஞ்சம் வெடிக்கக் கதறுகிறார்கள்.”“மானமிழந்தினி வாழ்வோமோ அல்லா எமக்குச் சாவு வராதா துயரும் இழிவும் கண்ணில் தெரியுதே அல்லா எமக்குச் சாவு வராதா”இரண்டு நூற்றாண்டுகளுக்கு முன் திப்புவின் உடலைத் தழுவிச் சென்ற அந்த ஓலம், இதோ நம் இதயத்தை அறுக்கிறது. திப்பு எனும் அந்தக் காப்பியத் துயரம் நம் கண்ணில் நனைகிறது.

.

Saturday, 16 November 2019

KANTHARAO ,MY FIRST HERO IN MOVIE THAN MGR,SIVAJI


KANTHARAO ,MY FIRST HERO IN MOVIE
 THAN MGR,SIVAJI




காந்தாராவ் தெலுங்கு மொழியில் 400 திரைப்பங்களுக்கு மேல் நடித்துள்ளார். ஆந்திர மாநிலம் குடிபந்தா என்ற கிராமத்தில் 1923ம் ஆண்டு பிறந்த இவர், 1951ம் ஆண்டு நிர்தோஷி என்ற படத்தின் மூலம் தெலுங்கு திரையுலகில் அறிமுகமானார். அவர் நடித்த பல திரைப்படங்களில் எம்.ஜி.ஆரைப் போல வாள் சண்டை போடுவார். இதனால் ஆந்திர எம்.ஜி.ஆர். என்று ரசிகர்கள் அழைத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. இயக்குநர் விட்டலாச்சாரியா [1]இயக்கத்தில் பல திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் 22 மார்ச் 2009 அன்று புற்று நோயால் மறைந்தார். [2

Tadepalli Lakshmi Kanta Rao (Telugu: తాడేపల్లి లక్ష్మీ కాంతారావు) (16 November 1923 – 22 March 2009), more popularly known as Kanta Rao, was an Indian film actor and producer known for his works predominantly in Telugu cinema.[1] Regarded as one of the finest method actors, Rao starred in more than four hundred feature films in a variety of genres including mythological, social and folklore. He has also acted in a few Hindi, Kannada and Tamil movies. He has produced about five films under the Hyma Films banner.[2] In the 1960s, he was one of the primary actors in Telugu cinema, along with N. T. Rama Rao and Akkineni Nageswara Rao. Kanta Rao was known for portraying the roles of Narada, Lord Krishna and Arjuna. He played Lakshmana in the blockbuster film Lava Kusha, for which he has won the Rashtrapati Award for best actor in 1963.[3][4][5]

He is very familiar with the name of Kattula Kantarao in grandma stories, because he has carried swords in many films while entering the scene.

Early life
Kanta Rao was born to Kesavarao and Seetaramamma at Gudibanda village on 16 November 1923. According to the Hindu calendar, it corresponds to Rudhirodgari Samvatsara Kartika Sudha Ashtami day. He lost his father the next year. His primary education was done in Gudibanda and Khammam. He was exposed to puranas and Hindu epic stories from his grandmother.[citation needed]

Career
Surabhi Drama troupe has visited their village. Impressed by their professional performances, he established "Balamitra Natya Mandali" and used to play Gayopakhyanam and Madhuseva plays with his friends. He played the character Brahma in Sri Krishna Leelalu in the group "Surabhi" and subsequently in the plays Madhuseva, Kanakatara and Telugu Talli.

He was sent to Tenali to deviate from the drama activities. Tenali used to be very active in drama activities with stalwarts like Pulipati Lakshminarayana. He used to stay in same street where Rentachintala Satyanarayana and Banda Kanakalingeswara Rao used to live.

He then shifted to Madras in 1950 and used stay with T. Krishnamachari, who used to work as assistant director for H. M. Reddy's Rohini Pictures.

H. M. Reddy gave him chance to play a small role in Nirdoshi in 1951 and as his hero for Pratigna in 1953. He has acted in 450 films and in about 100 films as hero, whereas in others as different character roles. They include some popular roles in films like Jayasimha (1955), Shri Krishna Pandaviyam (1966), Guruvunu Minchina Sishyudu (1963), Lava Kusha (1963), Nartanasala (1963), Pandava Vanavasam (1965) and Muthyala Muggu (1975). His last movie was Pandurangadu, with Balakrishna, directed by K. Raghavendra Rao in 2008.[6]

He made four films in between 1969 and 1974, Saptaswaralu, Gandara Gandadu, Premajeevulu and Gundelu Theesina Monagadu and lost all his previous earnings. The last film he made was Swathi Chinukulu. Subsequently he shifted to Hyderabad.[7]
Personal

He was married to Susheela and had a daughter in 1942. The daughter died of smallpox during infancy. They had a son in 1945 named after his father as Keshav. Susheela became sick. He married Hymavathi in 1950 and subsequently Susheela died of illness. His son also died of typhoid fever in childhood. He has four sons and a daughter by Hymavathi, named Pratap, Keshav, Susheela, Raja and Satyam, in that order. [8]

His son Raja (Rajeswara Rao) has acted in Sudigundalu, Prema Jeevulu, Gandara Gandadu, Gundelu Teesina Monagadu, Swati Chinukulu, Ukku Pidugu, Rajasimha, Evaru Monagadu, Maro Prapancham and Manushulu Matti Bommalu.

His son Satyam also has acted in Saptaswaralu, Prema Jeevulu and Gandara Gandadu'. His grandson Sai Eshwar also worked as child artist in Television industry.

Death
He died at 9:50 PM IST at Yashoda Hospital, Hyderabad on 22 March 2009 due to cancer complications

Sunday, 27 October 2019

SIVAKUMAR, THE ONLY HERO LIVE IN TO DAY BORN 1941 OCTOBER 27



SIVAKUMAR, THE ONLY HERO LIVE IN 
TO DAY BORN 1941 OCTOBER 27


சிவகுமார் புகழ்பெற்ற தமிழ்த் திரைப்பட நடிகர் ஆவார். இவர் தமிழ்நாட்டின் கோயம்புத்தூர் அருகில் உள்ள காசிகவுண்டன்புதூர் என்னும் ஊரில் பிறந்தார். இவர் ஒரு தேர்ந்த ஓவியரும் ஆவார். மேடைப்பேச்சாளர் எனும் பரிணாமமும் கொண்ட இவர், கம்ப இராமாயணம் சொற்பொழிவுகளும் நிகழ்த்துகிறார்.[3]

திரைப்பட நடிகர்கள் சூர்யா, கார்த்தி ஆகியோர் இவரது மகன்கள் ஆவர்.

கம்பராமாயண சொற்பொழிவு

கம்பராமாயணத்தில் ஈடுபாடு கொண்ட இவர், குறுகிய காலத்தில் கம்பராமாயணப்பாடல்கள் பலவற்றை மனனம் செய்து, அவற்றை மேற்கோள் காட்டி நிகழ்த்தும் கம்பராமாயணச் சொற்பொழிவுகள் அறிஞர்களால் பாராட்டப்பெறுகின்றன..[3]

நடிகர் சிவகுமாரின் குடும்பம் வெளிநாட்டுக்கு பயணம் மேற்கொண்டுள்ளது. இந்த ஒரு சர்ப்ரைஸ் பயணம் 20 ஆண்டுகளுக்கு பிறகு நடைபெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதில் என்ன ஒரு ட்விஸ்ட் என்றால், நடிகர் சிவகுமார், அவரது மனைவி, நடிகர் சூர்யா, நடிகர் கார்த்தி மற்றும் சிவகுமாரின் மகள் பிருந்தா ஆகிய ஐவர் மட்டுமே இந்த வெளிநாட்டு பயணத்தை மேற்கொண்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. சர்ச்சைகளில் சிக்கி படாத பாடுபட்ட நிலையில் தற்போது ரிலாக்ஸ் மூடுக்கு மாற இந்த வெளிநாடு பயணத்திற்கு சென்றுள்ளனர்.

நடிகர் சிவகுமார் பற்றியும் அவரது பன்முகத் திறமைகளை பற்றியும் அறியாதவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள். அப்படிப்பட்ட புலிக்கு பிறந்தது பூனையாகுமா என்ன. ஆம் அந்த நடிப்பு சக்கரவர்த்தியின் இரண்டு இளவரசர்களும் ஊர் அறிந்த திறமைசாலிகளே என்பதில் ஏதாவது சந்தேகம் இருக்கிறதா என்ன.முன்னர் தந்தை திரையுலகை கலக்கினார். இன்றோ மகன்கள், மருமகள் என குடும்பமே கலைக் குடும்பமாக ஜொலிக்கிறது. தற்போது சூர்யா, ஜோதிகா, கார்த்தி என அனைவருமே படு பிஸியாக அடுத்தடுத்து திரைப்படங்களில் நடித்து வருகிறார்கள்.

சில தினங்களுக்கு முன்னர் சூர்யா நடித்த காப்பான் திரைப்படம் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. ஒரு புறம் பாசிட்டிவான விமர்சனங்கள் மற்றுமொரு பக்கம், படம் பற்றின நெகட்டிவான கமெண்ட்ஸ் என்ன கலவையாய் விமர்சனங்கள் குவிந்த வண்ணம் இருக்கின்றன.

சூர்யாவின் நிலைமை இப்படி என்றால் கார்த்தியின் படமோ வேறு மாதிரி சர்ச்சையில் சிக்கி இப்போது தான் அதிலிருந்து வெளிவந்து இருக்கிறது. பாக்கியராஜ் இயக்கத்தில் கார்த்தி நடித்து வரும் திரைப்படம் தான் சுல்தான். இப்படத்தின் படப்பிடிப்பு திண்டுக்கல்லில் நடைபெற்று கொண்டிருக்கும் போது சில சர்ச்சைகள் ஏற்பட்டு படப்பிடிப்பு பாதியில் நிறுத்தப்பட்டது. தற்போது தான் அது சம்பந்தமான சிக்கல்கள் சரியாகி வருகின்றன.சிவகுமாரும் சர்ச்சைகளில் சிக்காமலில்லை. அவர் இந்து மதத்திற்கு எதிரானவர் என்ற சர்ச்சையை கிளப்ப அதற்கு சிவகுமாரே, அவரின் விளக்கத்தை மிக நீளமாக அளித்து இந்த சர்ச்சையில் இருந்து விடுபட்டார்.


குதூகலமாய் இருந்த குடும்பம் பல சர்ச்சைகளில் சிக்கி ஒரு வார காலமாக படாத பாடுபட்டு வந்திருந்த நிலையில், நடிகர் சிவகுமாரின் குடும்பம் வெளிநாட்டுக்கு பயணம் மேற்கொண்டுள்ளது. இந்த ஒரு சர்ப்ரைஸ் பயணம் 20 ஆண்டுகளுக்கு பிறகு நடைபெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இதில் என்ன ஒரு ட்விஸ்ட் என்றால், நடிகர் சிவகுமார், அவரது மனைவி, நடிகர் சூர்யா, நடிகர் கார்த்தி மற்றும் சிவகுமாரின் மகள் பிருந்தா ஆகிய ஐவர் மட்டுமே இந்த வெளிநாட்டு பயணத்தை மேற்கொண்டுள்ளனர்.

ஜோதிகா மற்றும் சூர்யாவின் மகன், மகள், கார்த்தியின் மனைவி ரஞ்சனி, மகள், பிருந்தாவின் கணவர் மற்றும் அவரது குழந்தைகள் என இவர்கள் யாரும் பயணத்தில் உடன் செல்லவில்லை என்பது தான் ஆச்சரியம்.

பள்ளி விடுமுறையை அடிப்படையாக வைத்து இந்த 10 நாட்கள் வெளிநாட்டு பயணம் மேற்கொள்ளப்பட்டுள்ளது என்று தெரிவித்தாலும் ஏன் ஜோதிகாவும் அவருடைய வாரிசுகளும் உடன் செல்லவில்லை என்பது தெரியவில்லை. மேலும் முழுக்க முழுக்க சிவகுமாரின் ரத்த சம்பந்த உறவுகள் மட்டும் எந்த நாட்டுக்கு சென்றுள்ளார்கள் அதன் காரணம் என்ன என்பதெல்லாம் புரியாத புதிராக வைத்திருக்கிறார்கள்.

என்னுடன் நடித்த நடிகைகளில் இளமையானவர் ஜெயசித்ரா தான் - நடிகர் சிவகுமார்
By Vinoth R| Published: Wednesday, September 11, 2019, 12:04 [IST]
சென்னை: நடிகை ஜெயசித்ராவின் பிறந்த நாள் விழாவில் பேசிய நடிகர் சிவகுமார் என்னுடன் இதுவரை 87 கதாநாயகிகள் நடித்திருக்கிறார்கள். அதில் சொல்லக்கூடிய அளவில் இருப்பது சிலர் தான். அதில் ஜெயசித்ராவும் ஒருவர். குடும்ப வாழ்விலும் வெற்றிபெற்று, குழந்தையையும் நன்றாக வளர்த்து, தொடர்ந்து இன்னமும் நடித்துக் கொண்டிருக்கும் மகத்தான நடிகை ஜெயசித்ரா. நான் ஜெயசித்ராவை விட மூத்தவன் என்ற முறையில் அவர் சிரஞ்சீவியாக வாழ வாழ்த்துகிறேன் என்று கூறினார்.

ஆந்திர மாநிலம் காக்கிநாடாவில் பிறந்த ஜெயசித்ரா திரையுலக வாழ்வை தனது 6 வயதில் தொடங்கினார். தெலுங்கை தாய் மொழியாகக் கொண்ட இவர், குறத்தி மகன் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். அப்படத்தைத் தொடர்ந்து சிவாஜி கணேசன், எம்.ஜி.ஆர்., போன்ற திரையுலக ஜாம்பவான்களுடன் நடித்துள்ளார்.
அதுமட்டுமல்லாமல், கமலஹாசன், பிரபு, முத்துராமன், ஜெய்ஷங்கர், விஜய், அஜித் என இன்று வரை ஒவ்வொரு காலகட்டத்திலும் உள்ள முன்னணி நாயகர்களுடனும், இளம் கதாநாயகர்களுடனும் நடித்திருக்கிறார். சமீபத்தில் வெளியான 100 % காதல் படத்தில் ஜி.வி.பிரகாஷ் உடன் நடித்திருக்கிறார். மேலும், நானே என்னுள் இல்லை என்ற படத்தில் தன் மகன் இசையமைப்பாளர் அம்ரிஷ் உடனும் நடித்திருக்கிறார்.

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் போன்ற தென்னிந்திய மொழிகளில் இதுவரை 200க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருக்கிறார். இதுதவிர, தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துள்ளார். புதிய ராகம் என்ற படத்திற்கு தானே வசனம் எழுதி, இயக்கி, தயாரித்தும் உள்ளார்.

நல்ல பிள்ளைகள் அமைவது வரம். அது நடிகை ஜெயசித்ராவுக்கு அமைந்திருக்கிறது. 2010ஆம் ஆண்டு நானே என்னுள் இல்லை என்ற படம் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானார் அம்ரீஷ். அதனைத் தொடர்ந்து மொட்ட சிவா கெட்ட சிவா, பாஸ்கர் ஒரு ராஸ்கல், சார்லி சாப்ளின் 2, பொட்டு, சத்ரு போன்ற படங்களுக்கு இசையமைத்திருக்கிறார்.

தற்போது, கர்ஜனை, யங் மங் சங், வீரமாதேவி, பரமபத விளையாட்டு, கா போன்ற படங்களுக்கு இசையமைத்து வருகிறார். கடந்த 09.09.19 அன்று நடிகை ஜெயசித்ராவின் பிறந்த நாளுக்கு அவரது மகனும், இசையமைப்பாளருமான அம்ரீஷ் திரையுலக நட்சத்திரங்கள், மக்கள் தொடர்பாளர்கள், பத்திரிகையாளர்கள் என அனைவரையும் அழைத்து பிரம்மாண்டமாக கொண்டாடி அம்மா ஜெயசித்ராவை ஆச்சரியப்படுத்தினார். விழாவில் கலந்து கொண்ட பிரபலங்கள் பேசியதாவது:-

நடிகர் சிவகுமார் பேசும்போது, என்னுடன் நடித்த வயது குறைந்த நடிகைகளில் ஜெயசித்ராவும் ஒருவர். நானும் ஜெயசித்ராவும் இணைந்து 12 படங்களில் நடித்திருக்கிறோம். அரங்கேற்றம் படம் தான் நாங்கள் இருவரும் இணைந்து நடித்த முதல் படம். சொல்லத் தான் நினைக்கிறேன் மறக்கமுடியாத படம். அதேபோல், வெள்ளிக்கிழமை விரதம் படமும் மறக்க முடியாத படம்.

பாம்பை ஜெயசித்ராவின் அருகில் வைத்து படப்பிடிப்பு நடத்தினார்கள். பாம்புடன் இணைந்து நடித்தக் காட்சிகளை சவாலாக செய்து முடித்தார் ஜெயசித்ரா. சினிமா துறை பெண்களுக்கு மிகவும் கடினமான துறை. ஏனென்றால், பல மொழிகளில் நடித்து, திருமணம் செய்து, குழந்தைகளை வளர்ப்பது என்பது சாதாரண விஷயமல்ல.

என்னுடன் இதுவரை 87 கதாநாயகிகள் நடித்திருக்கிறார்கள். அதில் சொல்லக்கூடிய அளவில் இருப்பது சிலர் தான். அதில் ஜெயசித்ராவும் ஒருவர். குடும்ப வாழ்விலும் வெற்றிபெற்று, குழந்தையையும் நன்றாக வளர்த்து, தொடர்ந்து இன்னமும் நடித்துக் கொண்டிருக்கும் மகத்தான நடிகை ஜெயசித்ரா. நான் ஜெயசித்ராவை விட மூத்தவன் என்ற முறையில் அவர் சிரஞ்சீவியாக வாழ வாழ்த்துகிறேன்.

நம் முன்னோர்கள் பதினாறும் பெற்று பெருவாழ்வு வாழ்க என்று வாழ்த்திச் சென்றிருக்கிறார்கள். எல்லோருக்கும் அப்படி அமைவதில்லை. ஆனால், ஜெயசித்ராவுக்கும், அவரது மகன் மற்றும் பேரப் பிள்ளைகளுக்கும், 16 செல்வங்களும் முழுமையாகக் கிடைக்க வேண்டும் என்று வாழ்த்துகிறேன் என்றார்.

இயக்குநர் ஆர்.வி.உதயகுமார் பேசும்போது, என்னை பொருத்தவரையில் அன்று தண்ணி கருத்துருச்சி தவள சத்தம் கேட்டிருச்சி பாட்டில் பார்த்த அதே ஜெயசித்ராவாகத்தான் இன்றும் பார்க்கிறேன். அவருடைய முக வசீகரம் 1 சதவீதம் கூட மாறாமல் இன்றளவும் அப்படியே இருக்கிறது. அதற்கு காரணம் அவருடைய கள்ளம் கபடமற்ற மனம் தான்.

பாசம் கொண்ட பிள்ளைகள் எல்லோருக்கும் வாய்ப்பதில்லை. இதற்கு முன் வாழ்த்திச் சென்ற நடிகர் சிவாகுமாருக்கு அருமையான இரண்டு பிள்ளைகள் வாய்த்திருக்கிறார்கள். அதேபோல், ஜெயசித்ராவுக்கும் அதிக அன்பு மிகுந்த மகன் கிடைத்திருக்கிறார். சினிமாவில் மட்டுமல்ல, நிஜ வாழ்விலும் ஜெயசித்ரா கதாநாயகி தான். அவருடைய வாழ்க்கையில் அவரது மகன் அம்ரீஷ் கொண்டாடும் பிறந்த நாள் விழா தான் மறக்க முடியாத நிகழ்வாக இருக்கும். இன்று போல் என்றைக்கும் அம்மாவை இதே அன்போடு பார்த்துக் கொள்ள வேண்டும் என்று இசையமைப்பாளர் அம்ரீஷுக்கு கோரிக்கை வைத்தார் இயக்குநர் ஆர்.வி.உதயகுமார்.

நடிகை ஜெயசித்ரா பேசும்போது, என் பிறந்த நாளை என் மகன் அம்ரீஷ் வெகு விமரிசையாகக் கொண்டாடுவதில் மட்டற்ற மகிழ்ச்சியடைந்தேன். நான் வெளியூர் படப்பிடிப்பிற்கு செல்லும் போது அவனை விட்டு செல்வதில் மிகுந்த மனவேதனை அடைவேன். எனக்கு ஏக்கம் வராமல் இருக்க அவ்வப்போது தொலைபேசியில் தொடர்புகொண்டு பேசுவேன். இதன்மூலம் அவனருகில் நான் இருப்பதாக எண்ணத்தை அவனுக்குக் கொடுப்பேன்.

படப்பிடிப்பு முடிந்து வீடு திரும்பும்போது அவனுக்கு பிடித்த பொம்மைகளை வாங்கி வருவேன். ஒருமுறை அமெரிக்கா செல்லும் சமயத்தில் என் கணவர் பிள்ளையை அழைத்துச் சென்றால் படப்பிடிப்பில் சரியாக கவனம் செலுத்த முடியாது என்று அனுப்ப மறுத்துவிட்டார். விமானத்தில் நீண்ட நேரம் அவனது நினைவு நீங்கவே இல்லை. பிறகு இந்தியா திரும்பும்போது அவனுக்கு பிடித்த பெரிய கார் பொம்மையை வாங்கி வந்தேன்.

இதுவரை அவனை நான் திட்டியதோ, அடித்ததோ கிடையாது. எத்தனையோ பிறந்த நாள் இதற்கு முன் கொண்டாடியிருந்தாலும் இந்த பிறந்த நாளை என்னால் மறக்கமுடியாது. எனது பிறந்த நாளைக்கு மறக்க முடியாத பரிசை என் மகன் எனக்கு கொடுத்திருக்கிறான் என்று நெகிழ்ந்ததோடு அல்லாமல், எனது பிறந்தநாள் விழாவிற்கு வருகைதந்து வாழ்த்திய அனைத்து உள்ளங்களுக்கும் எனது மனமார்ந்த நன்றிகள் என்றார்.

நடிகை ஜெயசித்ராவின் பிறந்த நாள் விழாவில், ஆர்.வி.உதயகுமார், நடிகர் சிவகுமார், சௌகார் ஜானகி, சினேகன், நமீதா மற்றும் அவரது கணவர், இயக்குநர் சாய்ராம், லக்ஷ்மன் ஸ்ருதி, நேக் ஸ்டுடியோவின் கல்யாண், பாடகர் சிவா போன்ற திரையுலகைச் சார்ந்த பிரபலங்கள் கலந்து கொண்டு தங்களது வாழ்த்துக்களைத் தெரிவித்தனர்.


சென்னை: நடிகர் சூர்யாவும் அவரது தம்பி நடிகர் கார்த்தியும் அவர்களின் ரசிகர்களுக்கு வைக்கும் வேண்டுகோள், அவர்களுடைய தாய் தந்தையரை காலம் முழுவதும் கண் கலங்காமல் ஒரு குழந்தையை போல் பாவித்து அன்போடு கவனித்து கொள்ளுங்கள் என்பது தான்.

இதை வெறும் வார்த்தையோடு மட்டும் நிறுத்தி கொள்ளாமல் அவர்கள் அதை தங்களது வாழ்வில் செய்து காட்டியும் வருகிறார்கள். இன்றும் சூர்யா, கார்த்தி இருவரும் தங்களது குடும்பத்துடன் தங்களது தாய் தந்தையுடன் தான் கூட்டு குடும்பமாக வாழ்ந்து வருகிறார்கள்.நீ இதை செய், இதை செய்யாதே அப்படி இப்படி என பலரும் பல விதங்களில் தங்களது கருத்துக்களை மற்றவர் மீது திணிக்க தான் செய்கிறார்கள். இதை யாராலும் தடுக்கவே முடியாது. ஆனால் இதில் ஒரு அழகு என்னவென்றால் மற்றவர்களுக்கு அறிவுரை சொல்வதை எத்தனை பேர் தங்களது சொந்த வாழ்வில் கடைபிடிக்கிறார்கள் என்றால் அது மிகவும் சொச்சமாக தான் இருக்கும். இது எதார்த்தம்.

ஆனால் அதிலும் சிலர் விதிவிலக்குகளாக இருப்பர். அப்படி இரு உத்தம மகன்களை பெற்றெடுத்தவர் தான் நடிகர் சிவகுமார். இதை அவர் மிகுந்த பெருமையுடன் கூறுகிறார். அகரம் அறக்கட்டளை மூலம் பல ஏழை குழந்தைகளின் கல்விக்கு உறுதுணையாய் இருந்து வருகிறார்கள் நடிகர் சூர்யா குடும்பத்தினர். அங்கு பல விழாக்கள் நடைபெறும். ரசிகர்களை சந்தித்து அவர்களின் கருத்துக்கள் பற்றி சூர்யா விசாரிப்பது வழக்கம்.அந்த வகையில், சமீபத்தில் சிவகுமார் குடும்பம் மட்டும் ஐரோப்பா நாடுகளுக்கு 20 நாட்கள் சுற்றுலா சென்று திரும்பி வந்துள்ளார்கள். தங்களது பிஸியான ஷெட்யூலுக்கு இடையிலும் சிவகுமார் அவரது மனைவி, சூர்யா, கார்த்தி மற்றும் சிவகுமாரின் மகள் பிருந்தா இவர்கள் மட்டும் இந்த சுற்றுலாவிற்கு சென்று வந்துள்ளனர்.


சூர்யாவின் மனைவி ஜோதிகா, குழந்தைகள், கார்த்தியின் மனைவி மற்றும் குழந்தைகள், பிருந்தாவின் கணவர் மற்றும் குழந்தைகள் என இவர்கள் யாரும் அந்த சுற்றுலாவிற்கு செல்லவில்லை என்பது தான் அங்கு ஹை லைட். சிவகுமாரின் மனைவி, மகள், மகன்களோடு மட்டும் லண்டன், பாரிஸ், வெனிஸ், பிரான்ஸ் என்று 20 நாட்கள் ஜாலியாக சுற்றி பார்த்துவிட்டு வந்திருக்கிறார்கள். இதை ஒரு சஸ்பென்ஸ் சுற்றுலாவாக பிளான் செய்துள்ளார்கள். திரையுலகின் ஒட்டு மொத்த கண்ணும் சிவகுமார் குடும்பத்தின் மீது தான்.

Friday, 18 October 2019

STORY IS HERO -KAJAL AGARWAL


“கதைதான் ஹீரோ!” - காஜல் அகர்வால்




``மொழிப் பிரச்னை தீர்ந்துவிட்டதா?''

``நான் மும்பைப் பொண்ணு. இந்திதான் தெரியும். வீட்டுலகூட இந்தியிலதான் பேசுவோம். தமிழ், தெலுங்கு மாதிரியான எனக்குத் தெரியாத மொழிகள்ல காட்சியைப் புரிஞ்சுகிட்டு நடிக்கிறது சிரமமா இருந்தது. ஆனா, இப்போ தயாராகிட்டேன். புதுசா ஏதாவது கத்துக்கிறது ரொம்ப சவாலான காரியம்தான். அந்தச் சவாலை ஏத்துக்கிட்டா மட்டும்தான் நாம மத்தவங்களைவிட ஸ்பெஷலா இருக்க முடியும். இங்கே வந்து நடிக்கும்போது இந்த ஊர், கலாசாரம், உணவு, லைஃப் ஸ்டைல், டிரஸ்ஸிங்னு எல்லாத்தையும் கத்துக்க முடியுது. ஊருக்கு ஊர் இது வித்தியாசப்படுறதால எனக்கு ரொம்ப சுவாரஸ்யமா இருக்கு. மும்பையில இல்லாம தமிழ்நாடு, ஹைதராபாத்னு அதிகமா இருக்கிறதனால எனக்கே தெரியாமல் நான் தென்னிந்தியப் பொண்ணா மாறிட்டேன்.’’

``சிரஞ்சீவி, விஜய், அஜித் எனப் பெரிய ஹீரோக்களுடனும் நடிக்கிறீர்கள். அதேசமயம், இளம் ஹீரோக்களுடனும் நடிக்கிறீர்கள். இது உங்கள் சினிமா வாழ்க்கையை பாதிக்கும் என்று நினைத்ததுண்டா?''

``என்னைப் பொறுத்தவரை கதைதான் ஹீரோ. கதையும் அதுல எனக்கான ரோலும் பிடிச்சிருந்தால் மட்டுமே நான் நடிக்க சம்மதிப்பேன். பெரிய ஹீரோ படம், சின்ன ஹீரோ படம்னு பார்க்குறது எனக்குப் பிடிக்காது. பெரிய படத்துல சும்மா பொம்மை மாதிரி வர்றதைவிட சின்னப் படத்துல நடிக்க ஸ்கோப் இருந்தால் நான் சின்னப் படத்தைத்தான் தேர்ந்தெடுப்பேன். பெரிய படத்துல சூப்பர் கேரக்டரா அமைஞ்சா அது எனக்கு போனஸ். சிரஞ்சீவி சார் மாதிரியான ஹீரோக்கள்கூட நடிக்கும்போது அவங்க அனுபவத்திலிருந்து நிறைய கத்துக்கலாம். அதேபோல சினிமாவுல ஜெயிக்கணும்கிற வெறி, வளர்ந்து வர்ற ஹீரோக்களிடம் அதிகமா இருக்கும். அதனால அவங்ககூட நடிக்கிற அனுபவம் நிறைய கத்துக்கொடுக்குது. `காஜல் நல்ல நடிகை'ங்கிற இமேஜைத் தவிர, வேறெந்த இமேஜையும் நான் வெச்சுக்க விரும்பலை.’’

``உங்கள் இன்ஸ்டாகிராமில் நிறைய ஃபிட்னெஸ் வீடியோக்களைப் பதிவிடுகிறீர்கள். உங்கள் ஃபிட்னெஸ் ரகசியம் என்ன?''

``ஃபிட்னெஸ் ரகசியம்னு ஒண்ணுமில்லை. பழங்களும் காய்கறிகளும் அதிகம் சாப்பிடுவேன். சிக்கன், மட்டன் உணவுகளை எடுத்துக்க மாட்டேன். புரோட்டீனுக்காக மீன் சாப்பிடுவேன். தவிர நல்ல தூக்கம் இருக்கணும். அதுவே நமக்குப் புத்துணர்ச்சியைக் கொடுத்திடும். எனக்கு ஜிம் வொர்க் அவுட்டைத் தாண்டி யோகா, தியானம் மாதிரி விஷயங்கள்ல அதிக ஆர்வம் உண்டு. ஃபிட்னெஸ்ங்கிறது உடம்பைக் கட்டுக்கோப்பா வெச்சுக்கிறது மட்டுமல்ல, அதுல மனசு சம்பந்தப்பட்ட விஷயங்களும் அடங்கியிருக்கு. எந்த ஸ்ட்ரெஸ்ஸும் குழப்பமும் இல்லாமல் மனசை ஃப்ரீயா வெச்சுக்கிட்டு நம்ம தினசரி வேலையைச் சரியா செஞ்சாலே நம்ம உடம்பு ஆரோக்யமா இருக்கும்.’’

“கதைதான் ஹீரோ!” - காஜல் அகர்வால்
``சினிமாவில் உங்கள் நண்பர்கள் யார்?''

``எனக்கு சமந்தா, தமன்னா, ரகுல்னு எல்லாரும் நல்ல பழக்கம். அதேபோல நான் நடிக்கிற எல்லா ஹீரோக்கள்கூடவும் நல்லாப் பேசுவேன். ஆனா, என் ஃபிரெண்ட்ஸ் என்கூட ஸ்கூல்ல படிச்சவங்கதான். அவங்ககூடதான் என் சந்தோஷம், சோகம், கொண்டாட்டம் எல்லாமே.’’

``சினிமாவில் ஹீரோயின்களின் காலம் மிகவும் குறைவு என்று சொல்வார்கள். இதை நீங்க எப்படிப் பார்க்கிறீர்கள்?''

``நான் ஒரு விஷயம் பண்ணும்போது, அது வொர்க்கவுட் ஆகலைனா என்ன பண்றதுன்னு ஒரு பேக்கப் பிளான் வெச்சிருப்பேன். ஆனா, இந்தத் துறையைப் பொறுத்தவரை நம்ம கரியரை ஸ்மார்ட்டா பிளான் பண்ணிக்கணும். மக்களுக்கு நம்ம உழைப்பு, நடிப்பு பிடிக்கணும். அதுக்குக் கொஞ்சம் அதிர்ஷ்டம் தேவை. நம்மை முதல்ல நல்லாப் புரிஞ்சுக்கிட்டு, அதுக்குத் தகுந்த மாதிரி நல்ல கதைகளைத் தேர்ந்தெடுத்து நடிச்சா நிச்சயம் வொர்க்கவுட் ஆகும். இதுல எங்கேயாவது மிஸ்ஸானால் கிராஃப் கீழே போயிடும். அடுத்த படங்கள் கமிட் பண்ண முடியாது. ஸோ, சினிமாவுக்குள்ள வர்றதைவிட அதுல ரொம்ப நாளைக்கு நிலைச்சு நிக்கிறது கஷ்டம். அது ஹீரோயினுக்கு மட்டுமல்ல, ஹீரோக்களுக்கும்தான்.’’

``பயோபிக் படங்கள் பற்றி என்ன நினைக்கிறீர்கள்... யாருடைய பயோபிக்கில் நடிக்க ஆசை?''

``சாதனையாளர்களைப் பத்தி நிறைய இடத்துல பதிவாகியிருந்தாலும், எல்லாத்தையும் ஒரு படத்துல கொண்டு வரும்போது அதுக்கான ரீச் அதிகமா இருக்கு. அதனால பயோபிக் படங்கள் நமக்குத் தேவைதான். அரசியல்வாதியுடைய பயோபிக் அல்லது விளையாட்டு வீராங்கனையுடைய பயோபிக்கில் நடிக்கணும்னு ஆசை. காரணம், எனக்கு அரசியல் தெரியாது; நான் ஸ்போர்ட்ஸ் ப்ளேயரும் இல்லை. அதனால இந்த மாதிரி பயோபிக்ல நடிக்கிறது எனக்கு நானே கொடுத்துக்குற சவால். அதேபோல, இன்னொருத்தரா வாழ்றது ரொம்ப சிரமம். அதனால, எனக்கு அந்த மாதிரி பயோபிக் வாய்ப்பு வந்தால் நிச்சயம் அதைத் தவிர்க்காமல் நடிப்பேன்.’’



``ஃபேன் கேர்ள் மொமன்ட்?''

``எனக்கு டென்னிஸ்ல ஆர்வம் அதிகம். ரோஜர் ஃபெடரர், செரினா வில்லியம்ஸ் இவங்க ரெண்டு பேரையும் ரொம்பப் பிடிக்கும். அவங்களை மீட் பணணினது ஃபேன் கேர்ள் மொமன்ட்டா இருந்தது. அதேபோல நான் சச்சின் டெண்டுல்கரின் தீவிர ரசிகை. அவர்கூட எடுத்த போட்டோவை பத்திரமாவெச்சிருக்கேன். சினிமாவுல சிரஞ்சீவி சாரையும் கமல் சாரையும் முதல்ல பார்க்கும்போது ஒரு ரசிகையா அவங்க பக்கத்துல நின்னேன்.’’

``காஜலைப் பற்றி இதுவரை எந்தக் கிசுகிசுவும் வந்ததில்லையே... என்ன ரகசியம்?''

``ரகசியம் எதுவும் இல்லை. ஷூட்டிங் முடிஞ்சவுடனேயே நேரா ரூமுக்குப் போய் சாப்பிட்டுட்டுத் தூங்கிடுவேன். எனக்கு ரொம்பக் குறைவான நண்பர்கள்தான் இருக்காங்க. சினிமாவுல இருக்கிற யார்கூடவும் டின்னர், பார்ட்டின்னு போக மாட்டேன். பார்ட்டின்னு போனா மும்பையில இருக்கிற என் ஸ்கூல், காலேஜ் ஃபிரண்ட்ஸ்கூடத்தான். கிசுகிசு வராமல் இருக்கிறது நல்ல விஷயம்தானே?’’

``தமிழில் விஜய், அஜித் என்று எல்லா நட்சத்திரங்களுடனும் நடித்துவிட்டீர்கள். இப்போது கமல் ஹாசனுடன் நடித்துக்கொண்டிருக்கிறீர்கள். அடுத்து என்ன?''

``சூப்பர் ஸ்டார்கூட நடிக்கணும். அவர் மட்டும்தான் பாக்கி.’’

``உங்கள் பொழுதுபோக்கு என்ன?''

``ஃப்ரீயா இருந்தால் சமைக்கிறது ரொம்பப் பிடிக்கும். குறிப்பா, ஸ்மூத்திஸ், பஞ்சாபி உணவுகள் நல்லா சமைப்பேன். அப்புறம், ஸ்கை டைவிங், ஸ்கூபா டைவிங் மாதிரியான அட்வெஞ்சர் விளையாட்டு ரொம்பப் பிடிக்கும். எனக்கா தோணுச்சுன்னா புக்ஸ் படிப்பேன்.’’

``திருமணம் எப்போது?''

``இவங்களைக் கல்யாணம் பண்ணிக்கிட்டா நல்லாருக்கும்னு நினைக்கிற மாதிரி யாரையும் சந்திக்கலை. அப்படியான நபரைச் சந்திச்சிட்டா சீக்கிரமே கல்யாணம் பண்ணிருவேன்.’’






Sunday, 19 November 2017

ARUNVIJAY ,SECOND HERO ACTOR BORN 1977 NOVEMBER 19



ARUNVIJAY  ,SECOND HERO ACTOR  
BORN 1977 NOVEMBER 19



Arun Vijay (born in November 19, 1977) an Indian actor, playback singer and stunt coordinator.[1] He is the only son of veteran film actor Vijayakumar and has been active in the Tamil film industry since 1995. An adventurous person by nature, he has his license to skydive from the United States Parachute Association.[2]
Early life and family[edit source]
Arun Vijay was born into a film family as the only son to actor Vijayakumar and his first wife Muthukannu. He studied at Don Bosco Maticulation Primary School, Egmore. After completing his schooling, Arun joined Loyola college for his higher studies. He has two eldest sisters Kavitha, who has acted in a single film, Coolie,[3] and Anitha.
Arun Vijay's step mother is actress Manjula Vijayakumar, who played lead roles in over 100 films in the 1970s, while his half-sisters Vanitha, Preetha and Sridevi have also appeared in several films.
In 2006, Arun Vijay married Aarthi, daughter of film producer Dr. N. S. Mohan and a post-graduate in Psychology,[4][5] with whom he has a daughter, Purvi and a son, Arnav Vijay. In 2010, Kavitha's daughter Hasini married N. S. Mohan's son Hemanth, who is a co-producer of Feather Touch Entertainments and has also acted alongside Arun Vijay in Malai Malai.[3][6]
Film career[edit source]
Debut Success (1995)[edit source]

Arun Vijay had a desire towards acting since childhood. He had developed a strong interest by watching his father during film shoots. In order to achieve his goal of becoming an actor, Arun's father encouraged him to join classes for extracurricular activities such as dancing, swimming, skating and horse-riding. Arun started getting film offers when he was in tenth grade but his father wanted him to complete his schooling before acting in films.[7]
Arun Vijay signed on for an A. R. Rahman musical titled Love Story to be his acting debut, but the delay of that project meant that he accepted Anbalaya Films' offer of Sundar C's Murai Mappillai (1995).[8] Arun was just 18 years old when he had signed to act in Murai Mapillai. This made him one of the youngest actors to debut as a hero in the Tamil film industry. Murai Mapillai had a star cast which included actors like Manivannan, K. Prabakaran, Kalaranjini, Goundamani and Senthil. The film was released on December 1995. Arun was praised for his dance and fight sequences in the movie.
Career Slump (1996-2000)[edit source]

In 1996 Arun's second film Priyam was released. The film's music was composed by Vidyasagar. The songs became a huge hit among the Tamil audience especially the song "Dilruba Dilruba" It was one of the top songs in 1996 and was choreographed well in the movie. It proved that Arun was a versatile dancer.
Following Priyam's release, Arun signed for two films Kathirunda Kadhal and Ganga Gowri under Ganga Gowri Productions. Both the films were released in 1997.[9][10] Kathirunda Kadhal was Arun's first film with Suvalakshmi.
In 1998 Arun had the opportunity to play the lead role in director Balasekaran's film Thulli Thirintha Kaalam. The film was produced by Kavithalayaa Productions, a company owned by K.Balachander. The film was a commercial success and was later remade in Telugu with a different cast.[11]
In 2000 Arun featured in two films, Kannaal Pesavaa and Anbudan. Kannal Pesavaa released in August and it was Arun's second film with actors Suvalakshmi, Goundamani and Senthil.Following Kannal Pesavaa, Anbudan released in November, the film had two heroines Meena and Rambha.[12] The film had a unique story line but failed to make it big in the box office because of poor marketing and publicity due to budget restraints.[13] Arun's acting was later appreciated when the film was telecast on Raj tv.

Success (2001/2003)[edit source]
In 2001 Arun played the role of a civil engineer in Pandavar Bhoomi, the film was directed by Cheran. Pandavar Bhoomi was the first movie in which Arun and his father Vijayakumar had acted together. Vijayakumar played the role of Arun's father in the movie. The film was a success in the box office, but had to be taken off movie theatres because of the release of Aalavandhan which was a big budget film during that time. Pandavar Bhoomi proved Arun's potentials and it had won the Tamil Nadu State award for Best film (Second Prize) in 2001.[14]
Arun's next film after Pandavar Bhoomi was Mutham. The film was initially titled Muthamidalamma but had to be changed to Mutham after the censor screening. Mutham was directed by S.A. Chandrasekhar and was the first film to be shot using digital cinematography in tamil cinema.[15][16]
Career Slump (2004-2008)[edit source]

Following the success of Iyarkai, Arun acted in director Ramesh Selvan's Jananam. Arun toiled hard for his role in Jananam. He had high hopes for this film as the film had a very good story line but it had to go through a lot of problems during the production period. Firstly, the film's heroine Priyanka Trivedi could not fulfill her scheduled commitments in the film as she got married in 2003,[17] the producer was not able to change the heroine as they had already filmed major portions of the film, this resulted in the film being released without a proper screenplay and an edited story line. The producer then had a huge loss and was not able to release the film despite having a scheduled release date.[18] After encountering all these difficulties, Jananam was finally released in theaters, but it failed to make a mark, despite Arun's good acting as the screenplay was not good and the story was incomplete.[19] However, critics appreciated Arun's acting in the movie.[20]
Breakthrough and Career Success (2009-Present)
In October 2006 he had changed his name from Arunkumar to Arun Vijay, hoping that a new name would bring better luck for him.[21] In 2009, Arun Vijay opted against starring in low budget films and opted to collaborate with his father-in-law's production house Feather Touch Entertainment for his future projects. The first venture, Malai Malai directed by A. Venkatesh, became a commercial success. While the next film, Maanja Velu (2010) by the same team, was also a success. He then appeared in Magizh Thirumeni's action-thriller, Thadaiyara Thaakka (2012), marking a move away from his previous two masala films. The film, which featured Mamta Mohandas alongside Arun Vijay, became a super hit.
In spite of being a very talented actor Arun vijay had to wait for 17 years to get recognized as a good hero in Tamil film industry.[22][23] Thadaiyara Thaakka was the biggest hit in Arun Vijay's career. Arun's talent and hard work was finally recognized by a wider audience.[24]
After Thadaiyara Thaakka Arun starred in Yennai Arindhaal with actor Ajith Kumar. Yennai Arindhaal was also Arun's first film with director Gautham Menon. Arun played the role of Victor, an antagonist in the film. In order to enhance the character of Victor, Arun said that he had worked at the gym for more than 6 hours a day.He was also on a high protein diet. Arun's efforts proved to be fruitful as he was well appreciated by Ajith Kumar and Gautham Menon for his dedication and hard work.[25] Arun's performance had an overwhelming response from the audience.The same year, he debuted in Telugu through the film Bruce Lee – The Fighter as the lead antagonist. The actor has completed his fourth successive film under the Feather Touch Entertainment banner, Vaa Deal co-starring Karthika Nair. He also made his Kannada debut as the lead antagonist through the movie Chakravyuha in 2016. Vaa Deal would be releasing in 2017.
Production[edit source]

On September 1, 2015 Arun launched his own production company In Cinemas Entertainment (ICE).[26] Arun had said that he had launched this company to identify and provide an opportunity to ambitious and talented youngsters.[27] Arun's first production venture was Kuttram 23, a medical crime thriller directed by Arivazhagan. Arun acted as a police officer for the first time in his career. The film was Arun's 23rd film and was expected to release during the Pongal festival but the producers were not able to get enough theaters to screen the film due to the release of Bairavaa.[28][29] The film was then postponed to release on March 3, 2017.[30] The film had a special screening for distributors before the release. Screening films for distributors was the norm in the Tamil film industry a couple of decades ago but this tradition gradually faded and films were bought by distributors based on the actor's star value.[31] Kuttram 23 released on March 3 2017 and had positive reviews from critics and the audience.[32]
Image may contain: 1 person