Showing posts with label Alexander. Show all posts
Showing posts with label Alexander. Show all posts

Sunday, 28 November 2021

ALEXANDER CUNNINGGHAM , EPIGRAPHY BORN 1814 JANUARY 23-1893 NOVEMBER 28

 

ALEXANDER CUNNINGGHAM , EPIGRAPHY BORN

 1814 JANUARY 23-1893 NOVEMBER 28



சர். அலெக்சாண்டர் கன்னிங்காம் (Alexander Cunningham, 23 ஜனவரி 1814 – 28 நவம்பர் 1893) ஒரு பிரித்தானியத் தொல்லியலாளரும், படைத்துறைப் பொறியாளரும் ஆவார். இந்தியத் தொல்லியல் ஆய்வுகளின் தந்தை எனப்போற்றப்படும் இவர் இந்தியத் தொல்லியல் ஆய்வகத்தின் முதல் தலைமை இயக்கரான பதவி வகித்தவர்.[1][2] இவரது உடன் பிறந்தோரான பிரான்சிஸ் கன்னிங்காம், ஜோசப் கன்னிங்காம் என்போரும் தத்தமது வேலைகளுக்காகப் பிரித்தானிய இந்தியாவில் பெயர் பெற்றவர்களாக இருந்தனர்.


இளமைக் காலம்

இவர் 1814 ஆம் ஆண்டில், இலண்டனில், ஸ்கொட்டியக் கவிஞரான அலம் கன்னிங்காம் என்பவருக்கு மகனாகப் பிறந்தார். இலண்டனில் உள்ள கிறிஸ்துவின் மருத்துவநிலையம் எனப்பட்ட நிறுவனத்தில் தொடக்கக் கல்வியைப் பெற்றார். பின்னர் அடிஸ்கோம்பே என்னும் இடத்திலிருந்த எம். ஈ. ஐ கம்பனியின் மடாலயத்திலும், சத்தாமில் இருந்த ஆர். ஈ. எஸ்ட்டேட்டிலும் கல்வி கற்றார். 19 ஆவது வயதில் வங்காளப் பொறியாளர் குழுவில் இரண்டாம் லெப்டினண்டாக இணைந்த அவர், அடுத்த 28 ஆண்டுகள் இந்தியப் பிரித்தானிய அரச சேவையில் பணியாற்றினார். 1833 ஆம் ஆண்டில் இவர் இந்தியாவுக்கு வந்ததுமே, ஜேம்ஸ் பிரின்செப் என்பவருடன் இவருக்குக் கிடைத்த சந்திப்பு, இந்தியத் தொல்லியல் மீது வாழ்நாள் முழுதும் இவர் கொண்டிருந்த ஆர்வத்துக்குக் காரணமாகியது. இந்தியத் தொல்லியல் ஆய்வகத்தின் முதல் தலைமை இயக்குனராக பணியாற்றியவர்.





சாஞ்சி தூபி எண் 2 (Stupa No.2) பௌத்த தூபிகளில் மிகவும் பழைமையானது. கிமு இரண்டாம் நூற்றாண்டு காலத்திய இத்தூபி சாஞ்சி பௌத்த தொல்லியல் வளாகத்தில் உள்ளது. 1849 - 1851 முடிய பிரித்தானிய தொல்பொருள் அறிஞர் மேஜர் அலெக்சாண்டர் கன்னிங்காம் மற்றும் லெப்டினண்ட் மேய்சி ஆகிய இருவரும் இணைந்து, சாஞ்சியின் இப்பௌத்த தொல்லியல்களத்தின் தூபி எண் 2ல் அகழாய்வு செய்து அறிக்கை வெளியிட்டனர்.[1]

சாஞ்சி பௌத்த தொல்லியல் களத்தின் பெரிய தூபிக்குப் பின்னர் இரண்டாவதான இத்தூபி நிறுவப்பட்டது. இவ்விரண்டாம் தூபி மௌரியப் பேரரசின் ஆட்சிக் காலத்தில் (கிமு 323-185) கிமு இரண்டாம் நூற்றாண்டில் நிறுவப்பட்டது.


இந்த இரண்டாம் தூபி, இந்தியாவின் மத்தியப் பிரதேச மாநிலத்தின் ராய்சென் மாவட்டத்தில் உள்ள சாஞ்சி முக்கியத்தூபி வளாகத்திற்கு மேற்கில் 300 மீட்டர் தொலைவில், சாஞ்சி மலையின் சாய்வில் அமைந்துள்ளது.[3]


தூபி எண் 2 -தொல்பொருட்கள்


சாஞ்சி இரண்டாவது தூபியில் கண்டெடுக்கப்பட்ட பௌத்த நினைவுச் சின்னங்களின் மாதிரி வடிவங்கள்

சாஞ்சி அகழாய்வின் போது தூபி எண் 2 அருகே கிடைத்த நான்கு சிறிய அழகிய பேழைகளில் எலும்புகள் கொண்டிருந்தது. பேழைகளில் பண்டைய பிராமி எழுத்துக்களில், பௌத்த குருமார்களின் அஸ்திகள் இப்பேழைகளில் உள்ளது என குறிப்புகள் கொண்டிருந்தது.


மேலும் இப்பேழைகளில், அசோகர் ஆதரவில் நடைபெற்ற மூன்றாம் பௌத்த சங்கத்தில் கலந்து கொண்டு, பின் இறந்து போன பத்து பௌத்த அறிஞர்களை எரித்த சாம்பலுடன் கூடிய எலும்புகள் உள்ளது என்ற குறிப்புகளும் கொண்டுள்ளது. [3]


தொல்பொருட்களின் உள்ளடக்கம்

சாஞ்சி தூபி எண் 2ன் சிற்பங்கள் கிமு 115 - கிமு 80 முடிய வரையிலான காலத்தில் செதுக்கப்பட்டது என ஆய்வில் அறியப்படுகிறது.[4]


முந்தைய காலம் (கிமு 115)

சாஞ்சி தூபி எண் 2ன் (கிமு115) தொல்பொருட்கள், இந்தியச் பாறைச் சிற்பக் கலையின் முன்னுதாரணமாக உள்ளது. [5][4][6]



குதிரைத் தலை பெண் சிற்பம், மகாபோதி கோயில், புத்தகயா

சாஞ்சி தூபி எண் 2ல் கண்டெடுக்கப்பட்ட குதிரைத் தலையுடன் கூடிய பெண் சிற்பம், மகாபோதி கோயில், புத்தகயாவில் உள்ள குதிரைத் தலை பெண் சிற்பத்துடன் ஒத்துப் போகிறது. இச்சிற்பங்கள் போதிசத்துவரின் ஜாதக கதைகளை விவரிக்கிறது எனக் கருதப்படுகிறது. [5]



சுங்கர் காலத்திய சிற்ப வேலைப்பாடுகளுடன் கூடிய மறைப்பு கிராதிகள் (இடது:சாஞ்சி பெரிய தூபி), மற்றும் கிமு 115ல் அலங்கரிக்கப்பட்ட தூபி எண் 2 (வலது) [5][7]

இத்தூபியின் 455 துண்டுச் சிற்பங்களில் 293 தாமரை மலர்ச் சிற்பங்களுடனும், பிற சிற்பங்கள் தாமரை மற்றும் பிற சிற்பங்களுடன் இணைந்தும் காணப்படுகிறது. [5]


புத்தரின் வாழ்வில் நடைபெற்ற நான்கு முக்கிய நிகழ்வுகளை எடுத்துரைக்கும், நான்கு சிற்பங்கள் உலகில் முதல் முறையாக இத்தூபியில் சிற்பங்களாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.[8]


காந்தாரச் சிற்பக் கலைஞர்கள்


இத்தூபியில் உள்ள சிற்பங்கள், இந்தோ கிரேக்க நாட்டின் பகுதியான காந்தார சிற்பக் கலைஞர்களால், கிமு இரண்டாம் நூற்றாண்டின் இறுதிக் கால் நூற்றாண்டில், கிரேக்க-பௌத்த சிற்பக் கலைநயத்தில் வடிக்கப்பட்டுள்ளது. மேலும் தூபியின் கல்வெட்டுக்களில், காந்தாரி எழுத்தில் குறிப்புகள் உள்ளது. [9] [9]


கிமு 115ல் சுங்கப் பேரரசிற்கு வருகை புரிந்த இந்தோ கிரேக்க நாட்டின் தூதுவர் ஹெலியோடோரஸ் என்பவர், விதிஷாவில் ஒரு வெற்றித் தூணை நிறுவினார்.[10]


Thursday, 3 September 2020

ALEXANDER `S FRIENDSHIP



ALEXANDER `S FRIENDSHIP



அலெக்சாண்டரின், அரண்மனை வைத்தியனான பிலிப், அவனது ஆரூயிர் நண்பரும் கூட! அமைச்சர்களிடம் விவாதிக்க விரும்பாத விஷயங்களை கூட, பிலிப்புடன் ஆலோசிப்பான், அலெக்சாண்டர். இது, அமைச்சர்களுக்கு பிடிக்கவில்லை. படையெடுப்பின் போது ஒருநாள், அலெக்சாண்டருக்கு கடும் வயிற்று வலி; அதற்குரிய மருந்தை தயாரித்து எடுத்து, அலெக்சாண்டரின் கூடாரத்துக்குள் போனான், பிலிப்.
அவன் கண்களை ஊடுருவிப் பார்த்த அலெக்சாண்டர், 'இந்த மருந்து, என் உயிரை காப்பாற்றுமா?' என்று கேட்டான்.
'ஆம்; அதிலென்ன சந்தேகம்?'
'சந்தேகமில்லை; சந்தோஷம் தான்...' என்று கூறி, பிலிப் கொடுத்த மருந்தை வாங்கி, ஒரே மூச்சில் பருகி, 'நண்பா... இக்கடிதத்தை நான் படித்து விட்டேன்; நீயும் ஒருமுறை படித்துப் பார்...' என்று கொடுத்தான்.
கடிதத்தை வாங்கிய பிலிப், அதைப் படித்தான்...
மன்னர் அலெக்சாண்டருக்கு...
தங்களால், நாடுகளை இழந்த மன்னர்கள் பலர் ஒன்று கூடி, தங்களை கொல்வதற்கு, சதித் திட்டம் தீட்டியுள்ளனர்; அதற்கு உடந்தையாக இருப்பவன், உங்கள் நண்பன் பிலிப். இதற்கென, அவர்களிடம், பெரும் பணம் பெற்றுள்ளான். அவன், தங்களுக்கு தரவிருக்கும் மருந்தில், கொடிய விஷம்கலந்துள்ளான். அவன் மருந்துக்கு இரையாகாமல், உங்கள் வாளுக்கு, அவனை இரையாக்கி விடுங்கள்!

தங்கள் நலம் நாடும் அமைச்சன்,
பார்மீனியோ.
கடிதத்தை படித்து அதிர்ச்சியடைந்து, உடல் நடுங்க, 'மன்னா... இது வீண் பழி; நான் கொடுத்தது மருந்து தான்; விஷமல்ல...' என்றான் பிலிப்.
'அதனால் தான், அதை, நம்பிக்கையுடன் குடித்தேன்...' என்று கூறி, 'இப்போது நீ கொடுத்திருக்கும் மருந்து, என்னை கொன்று விட்டால், உலகத்தின் துரோகிகள் பட்டியலில், உன் பெயர் நிலைத்திருக்கும்;
மாறாக,
என்னை காப்பாற்றி விட்டால், உலகத்தின் நட்பு பட்டியலில், என்னுடைய பெயர் நிலைத்திருக்கும்...' என்று சொன்னான்

Saturday, 6 June 2020

ALEXANDER PUSHKIN ,RUSSIAN WRITER BORN 1799 JUNE 6 -1837 FEBRUARY 10



ALEXANDER PUSHKIN ,RUSSIAN WRITER
 BORN 1799 JUNE 6 -1837 FEBRUARY 10

அலெக்சாந்தர் செர்கேயெவிச் பூஷ்கின் (Aleksandr Sergeyevich Pushkin,[1] உருசியம்: Алекса́ндр Серге́евич Пу́шкин, சூன் 6 [யூ.நா. மே 26] 1799 - பெப்ரவரி 10 [யூ.நா. சனவரி 29] 1837) உருசிய மொழியின் ஒரு சிறந்த கவிஞர், நாடகாசிரியர், எழுத்தாளர்.[2] மிகப்பெரிய கவிஞராக பலரால் கருதப்படும் இவர் நவீன உருசிய இலக்கியத்தின் நிறுவனர்.

பூஷ்கின் தனது கவிதைகளிலும் நாடகங்களிலும் உரைநடையைக் கையாள்வதில் முன்னோடியாகவிருந்தார். அத்துடன் ரஷ்ய இலக்கியத்தில் ஒரு தனித்துவமான கதைசொல்லும் பாங்கையும் உருவாக்கியிருந்தார். இவை முன்னெப்போதுமில்லாத அளவில் பிற்கால ரஷ்ய எழுத்தாளர்களிடம் மிகுந்த தாக்கத்தினை ஏற்படுத்தின.

வாழ்க்கை
அலெக்சாந்தர் புஷ்கின் ரஷ்ய உயர்குடியைச் சேர்ந்த செர்கேய் புஷ்கினுக்கும் நதேழ்தா கண்ணிபாலுக்கும் மகனாக 1799ல் பிறந்தார். தன் மைத்துனரான ஜார்ஜா த அந்தேசுடனான துப்பாக்கிச் சண்டையில் குண்டடிபட்டு இறந்தார்.


அலெக்சாண்டர் புஷ்கின் ருஷ்ய இலக்கிய,அரசியல் வரலாற்றில் தவிர்க்க முடியாத, மறக்க முடியாத படைப்பாளி. ஆம், அவர் சரியாக பதினெட்டாம் நூற்றாண்டின் இறுதியில் பிறந்து, பத்தொன்பதாம் நூற்றாண்டின் முற்பகுதியில் வெறும் 37 ஆண்டுகள் மட்டுமே வாழ்ந்த,கவிஞர், நாவலாசிரியர், நாடக  ஆசிரியர் ஆவார். ஒத்துமான் பேரரசின் கிரேக்க ஆதிக்கத்தை வீழ்த்திய  காலத்தில் தன்னார்வமாய் களமாடியவர், பிரபுக்கள் குடும்பத்தில் பிறந்த போதும் தனது எழுத்து, செயல்பாடுகளால் ஜார் அரச குடும்பத்திற்கு உறுத்தலாகவே இருந்தவர்.

சரியாக இங்கே மருது  சகோதரர்கள் போரிட்டு தோற்ற பின்பு வெள்ளையர் ஆட்சி நிலைபெற்ற போது, அங்கே  அவர்  வளர் பருவக் குழந்தை. தனது பதினைந்தாம் வயதில் முதற்  கவிதை எழுதி ருஷ்ய இலக்கிய உலகை திரும்பிப்  பார்க்கச்  செய்தவர்.



பேச்சுத் திறன், அடக்குமுறைக்கு எதிரான எழுத்து, காதலைச்  சொல்வது போல் புரட்சியை வித்திடும் உக்தி, சொல்ல  வருவதை மனதில் பதித்து அரசாங்கக்  கெடுபிடிகளை பனிமூட்டமாய் புகை  போடும் மாய மந்திர எழுத்து. இதுவே புஷ்கின் அவர்களின் வெற்றிக்கும், அவர்  தனது முதன்மை நோக்கம்  மறைத்து, ஆனால் அந்த முதன்மை  நோக்கம் எளிய மக்களிடம்  செல்ல பயன்படுத்திய சித்து வேலை.  அதுதான் பின்  நாளைய புரட்சிகளின் முதல் வித்தாக இருந்ததை யாரும் மறுக்க முடியாத, சமூகப்  பங்களிப்பாக விட்டுச்  சென்றார். ருஷ்ய இலக்கியத்தின் உச்ச  நிலைக்கு இவரே  முதல்படி.

அடிக்கல்  இருப்பது  தெரியாமல் இருந்தாலும், அந்தக்  கட்டுமானமே கோபுரத்தின் தாங்கு தளமாய் இருப்பது  போல இவரது படைப்புத் திறன் அடியுரமாய் வேலை செய்தது. காப்டன் மகள் என்ற படைப்பில் தலைவனையும் தலைவியையும் முன்னிலைப்  படுத்தி, அவர்கள் தேடப்படும் குற்றவாளியான, வில்லனையே முடிவில் கதையின்  நாயகனாக ஒளிரச் செய்யும் வித்தை புஷ்கினுக்கு மட்டுமே உண்டு.

நாடோடிகள் என்ற கவிதையில்,கட்டற்று, இயற்கையுடன் கால் போன போக்கில் வாழும் நாடோடிகளின் ஊடாக, ஒரு உடைமைவாதியின் காதலையும் புகுத்தி, அந்த உடமைவாதியின் காதலில் இருக்கும் உடைமை எண்ணத்தையும், வெறும் உடைமைப் பொருளாக மட்டுமே நினைத்து காதலிக்கும் பேதமைத் தனத்தை, ஒரு நாடோடியின் வாயிலாக சராசரி மனிதர்களின் கொள்முதல் வாழ்க்கையினை, எள்ளி  நகையாடுவதும், பார்வையாளர்களின் மனதில் அதிர்வுகளை ஏற்படுத்தும். 




அவர் காதல் என்று தொட்ட தலைப்புகளில் புரட்சியும், கவிதையாக கதை சொல்லும் போதுசமூக விமர்சனமும் கலந்து, ஒரு படைப்பாளி தான் சார்ந்த இனத்திற்கு என்ன செய்ய வேண்டுமோ, அதனைச் சரிவர செய்துவிடுவார். முப்பத்து ஏழு வயதில் ஒரு பன்முகப்பட்ட சிந்தனைகளுடன், ஆளுமை கொண்ட எழுத்தாற்றலுடன் காலத்தின் தேவையறிந்து, காலத்தின் தேவைகேற்ற வகையில் தனது படைப்பினையும் வெளிப்படுத்திய, முன்னோடியான எழுத்தாளர்.

தமிழ் இனமும், தமிழர்களும் இவரிடமிருந்து கற்றுக் கொள்ள வேண்டிய உக்திகள் பல.


டெல்லியில் உள்ள சாஹித்ய அகாடமி கட்டிடத்துக்கு வெளியே, சாலையோரத்தில் உயரமான பீடத்தின்மீது நின்றபடி  விரையும் வாகனங்களைப் பார்த்துக்கொண்டிருக்கிறார் அலெக்ஸாண்டர் புஷ்கின். கைகளைப் பின்னால் கட்டியபடி முதுகை சற்று முன்னோக்கி சாய்த்தது போன்ற நிலையில் அந்த ரஷ்யக் கவிஞனின் சிலையைக் கடந்துசெல்லும் டெல்லிவாசிகளில் எத்தனைபேர் அவரை அறிந்திருப்பார்கள். ‘கேப்டன் மகளை’ அவர்கள் தரிசித்திருப்பார்களா என்று எண்ணம் அவ்வப்போது வந்துபோகும்.
கருப்பு நிறத்திலான அந்த சிலையை முதலில் பார்த்தபோது மனதுக்கு நெருக்கமான ஒரு ஆளுமையை முதன்முதலாக நேரில் பார்த்ததுபோன்ற பரவசம் ஏற்படுவது நிஜம். சாகித்ய அகாடமி அருகே அமைக்கப்பட்டுள்ள இலக்கியவாதியின் சிலை புஷ்கினுடையது மட்டும் தான்.  1988-ல் ஒன்று பட்ட இந்தியாவுக்கு வந்திருந்த சோவியத் தலைவர் மிகயீல் கோர்பச்சேவ் இந்த சிலையைத் திறந்துவைப்பதாக இருந்தது. கடைசி நேரத்தில் அவர் வராமல் அந்நாட்டின் வெளியுறவுத் துறை அமைச்சர் எடுவர்ட் ஷெவர்ட்னாட்ஸே அந்த சிலையைத் திறந்துவைத்தார் என்று ஒரு குறிப்பு சொல்கிறது. யார்
திறந்துவைத்தால் என்ன? ரஷ்ய இலக்கிய பிதாமகரின் உருவச்சிலை இந்திய மண்ணில் நிலைகொண்டிருப்பதே பெருமை தானே! அந்த அற்புத எழுத்தாளனின் நினைவு நாள் இன்று.

அடிப்படையில் கவிஞரான புஷ்கின் ரஷ்ய நவீன இலக்கியத்தின் முன்னோடியாகக் கொண்டாடப்படுபவர். ரொமான்டிசிஸ காலத்திய இலக்கியப் படைப்பாளி. நியூசெஞ்சுரி புக் ஹவுஸ் வெளியீடாக தமிழில் மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளிவந்த ‘கேப்டன் மகள்’ நாவல் புஷ்கினின் மகத்தானப் படைப்புகளில் ஒன்று. அவர் எழுதிய இறுதி நாவலும் அது தான். வெள்ளையான வழவழப்பான தடித்த அட்டையில் பதிப்பிக்கப்பட்ட அந்தப் புத்தகத்தில் 18-ம் நூற்றாண்டில் ரஷ்யாவில் வெடித்த விவசாயப் புரட்சியின் பின்னணியில் ஒரு அற்புதமான காதல் கதை ஒளிந்திருந்தது. பிறப்பதற்கு முன்னரே தனது தந்தையால் ராணுவத்துக்கு கிட்டத்தட்ட ‘நேர்ந்துவிடப்பட்ட’ இளைஞன் பியோத்தர் ஆந்திரேயிச் தான் கதையின் நாயகன். செல்வச்செழிப்பு மிக்கக் குடும்பத்தில் பிறந்து செல்லமாக வளரும் அவன் தன் தந்தையின் கண்டிப்பான உத்தரவுக்குக் கீழ்ப்படிந்து ஓரென்பெர்க்குக்கு அருகில் உள்ள பெலகோர்ஸ்க்  கோட்டையின்  படைப்பிரிவில் சேர்வதற்காக, விசுவாசமிக்க முதிய வேலைக்காரனுடன் தனது பயணத்தைத் தொடங்குவான். செயிண்ட் பீட்டர்ஸ்பெர்க்கில் ராணுவ உயரதிகாரியாக உல்லாசமான வாழ்க்கை வாழலாம் என்று கற்பனையில் மிதந்தவனை, ஒரு அரதப்பழசான கோட்டைக்கு அவனது தந்தை அனுப்பிவிடுவார். அந்தக் கோட்டையில் அவனுக்கு அழகான காதலி கிடைப்பாள். கேப்டனின் மகள்!

பனிபடர்ந்த நிலத்தில் பியோத்தர் தொடங்கும் பயணத்தில் விவசாயப் புரட்சியின் தலைவன் புகச்சோவ், கேப்டனின் மகளும் நாயகியுமான மாஷா, வஞ்சக மனம் படைத்த ஷ்வாப்ரின், கேப்டனின் மனைவி என்ற பெருமையுடன் படைப்பிரிவைத் தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் பெண்மணி என்று பலரும் நம்முடன் பயணிப்பார்கள். பனிப்புயலில் சிக்கிக்கொள்ளும் பியோத்தரின் ஸ்லெட்ஜ் வண்டியை வழிநடத்தி ஒரு தங்கும் விடுதிக்கு அழைத்துச் செல்லும் நாடோடி தான் பின்னாட்களில் விவசாயப் புரட்சிக்குத் தலைமையேற்று ரஷ்யாவின் பல இடங்களைக் கைப்பற்றி ஜார் மன்னனுக்கு பெரும் சவாலாக இருந்த புகச்சோவ். பத்திரமான இடத்தைக் காட்டிய அந்த நாடோடி யாரென்று தெரியாமல் விலையுயர்ந்த ஒரு மேலங்கியை அவனுக்குப் பரிசளிப்பான பியோத்தர். அந்த நன்றிக்கடனை மறக்காத புகச்சோவ், தான் கைப்பற்றும் பெலகோர் ஸ்க்  கோட்டை படைப்பிரிவில் இருக்கும் பியோத்தரை அடையாளம் கண்டு அவனைக் கொல்லாமல் விடுவிப்பதுடன், சதிகார ஷ்வாப்ரினிடமிருந்து பியோத்தரின் காதலி மாஷாவையும் மீட்டுக் கொடுப்பான். ஒரு பெரும் புரட்சிக்கே தலைவனான புகச்சோவ், பியோத்தரிடம் இத்தனை கருணை காட்ட அந்த மேலங்கி தான் காரணம். எதற்கும் அஞ்சாத ஒரு வீரனுக்குள் கருணையும் நன்றியும் கலந்திருப்பதை புஷ்கின் அற்புதமாக விவரித்திருப்பார். 

கேப்டன் மகள் மாஷா மீது காதல் கொள்ளும் பியோத்தர் அவளை வர்ணித்து எழுதிய கவிதையை ஷ்வாப்ரின் கிண்டல் செய்வதுடன் அவளது நடத்தை பற்றி இழிவாகப் பேசுவதைக் கேட்டு வெகுண்டெழும் பியோத்தர் ஷ்வாப்ரினுடன் வாட்சண்டைக்குப் போவான். அந்தக் காலத்தில் தங்கள் தனிப்பட்ட பகையைத் தீர்த்துக்கொள்ள எதிரிகள் இருவரும் நேருக்கு நேர் மோதிக்கொள்ளும் சண்டை Dual எனப்பட்டது. இருவரும் சண்டைக்குத் தயராகும்போதே, படைப்பிரிவின் மற்ற அதிகாரிகள் வந்து தடுத்துவிடுவார்கள். இருவரின் வாட்களும் பறிமுதல் செய்யப்படும். இதுவரையான சம்பவங்களை யாராலும் எழுதிவிட முடியும். அதற்குப் பிறகு பியோத்தரும் ஷ்வாப்ரினும் நடந்துகொள்வதை எழுத புஷ்கினால் தான் முடியும். தாங்கள் இருவரும் எப்படியாவது சண்டையிட்டுக் கொள்ள வேண்டும் என்று இருவரும் ரகசியமாகத் திட்டமிடுவார்கள். ஒருவரையொருவர் கொல்ல வேண்டும் என்று மனதுக்குள் பகைமை கொண்ட  இருவரும் மீண்டும் சண்டையிட்டுக் கொள்வதற்காக சந்தித்து ரகசியமாகத் திட்டமிடுவார்கள்.  பகைவர்கள் தங்கள் பகையைத் தீர்த்துக்கொள்ள தாங்களே திட்டமிடுவது வழக்கத்தை விட எத்தனை முரணானது.அது தான் புஷ்கினின் தனித்தன்மை. அதனால் தான் “புஷ்கின் எழுத்துக்கு முன்னால் யதார்த்தம் கூட செயற்கையாகத் தான் தெரியும்” என்று நிக்கலாய் கோகல்  குறிப்பிடுகிறார். நாவலில் முக்கியமாகக் குறிப்பிடப்பட வேண்டியவர் மொழிபெயர்ப்பாளர் தர்மராஜன். அந்நிய நிலத்தின் வாசனை என்றாலும் அதை உறுத்தலில்லாமல் முகரச்செய்யும் மொழி அவருடையது. இதனால், நேரடி தமிழ் நாவலைப் படிக்கும் உணர்வு தான் வாசகர்களுக்கு ஏற்படும்.

கதையில் வருவதுபோலவே, புஷ்கினும் அடிக்கடி வாட்சண்டையில் ஈடுபட்டவர்தான். 20-க்கும் மேற்பட்ட வாட்சண்டையில் அவர் ஈடுபட்டதாக ஒரு குறிப்பு சொல்கிறது.  இறுதியாக தனது மனைவியின் மீது மையல் கொண்ட பிரபுவுடன் வாட்சண்டையில் ஈடுபட்ட புஷ்கின் அந்த சண்டையிலேயே மரணமடைந்தார். ஒரு எழுத்தாளர் உடல்வலிவுடன் சண்டைத்திறனும் கொண்டிருந்தார் என்பது முற்றிலும் நம்பமுடியாத விஷயம் அல்ல. தமிழ் இலக்கிய வரலாற்றில் பாரதியும் உடற்பயிற்சிகளில் ஆர்வம் காட்டியவர் தான். எனினும் யாருடனும் சண்டைக்கெல்லாம் சென்றதில்லை. புஷ்கின் எழுதிய பல கவிதைகள் ரஷ்ய இலக்கியத்தில் கொண்டாடப்படுகின்றன. 

புஷ்கினின் முன்னோர்கள் பற்றிய தகவல்கள் ஆச்சரியம் தருபவை. அவரது தாயின் தாத்தா ஆப்ராம் பெத்ரோவிச் கேனிபல், கருப்பின அடிமையாக இருந்தவர். அவரை 17-ம் நூற்றாண்டின் புகழ்மிக்க பேரரசரான முதலாம் பீட்டர் அடிமை வாழ்விலிருந்து மீட்டெடுத்து வளர்த்தார். பின்னாட்களில் ரஷ்ய ராணுவத்தில் மிக உயர்ந்த பதவிக்கு உயர்ந்தார் ஆப்ராம் பெத்ரோவிச். அவரது வழிவந்த புஷ்கினுக்கு அடிமைகள், விவசாயிகள் உள்ளிட்ட விளிம்புநிலை மனிதர்கள் மீது கரிசனம் இருப்பதில் ஆச்சரியமில்லை. விசாரணை என்ற பெயரில் சித்திரவதை செய்யப்படுபவர்கள் பற்றிய அவரது பரிவான குரல் ‘கேப்டன் மகள்’ நாவலில் ஒலிக்கிறது. “குற்றம்சாட்டப்பட்ட ஒருவன் தான் நிரபராதி என்று எத்தனை முறை சொன்னாலும் அது ஏற்கப்படுவதில்லை. ஆனால் பல சித்திரவதைகளுக்குப் பின்னர், தான் குற்றவாளி என்று அவன் ஒப்புக்கொள்ளும் பட்சத்தில் மட்டும் அது ஏற்கப்பட்டு அவனுக்கு தண்டனை வழங்கப்படுவது என்ன நியாயம்?” என்று புஷ்கினின் கேள்வி இன்றைய சூழலிலும் பொருத்தமானதாக இருப்பது  துரதிருஷ்டமானது.
அதேபோல், ரஷ்ய அரசுக்கு எதிராகக் கலகத்தில் ஈடுபடும் புகச்சோவ் தன்னைக் கொல்லாமல் விட்டாலும் அவனைப் பாசாங்குக்காரன் என்றே கடைசிவரை சொல்கிறான் பியோத்தர். எனினும் ஒரு கட்டத்தில் புகச்சோவை அனைத்து அபாயங்களில் இருந்தும் காப்பாற்ற வேண்டும் என்று அவன் மனம் துடிக்கிறது. பியோத்தர் எழுதிய குறிப்புகளை அடிப்படையாக வைத்து எழுதியது தான் என்றாலும் நேர்மையும் துணிச்சலும் நிறைந்த பியோத்தரின் மன ஓட்டத்தை அதே குணங்கள் கொண்ட புஷ்கினால் தான் புரிந்துகொண்டிருக்க முடியும் என்று தோன்றுகிறது.

’கேப்டன் மகள்’ நாவலை அடிப்படையாகக் கொண்டு இதுவரை 4 திரைப்படங்கள் எடுக்கப்பட்டுள்ளன. ரஷ்ய மொழியிலேயே வெளியான அந்தத் திரைப்படங்களில் ஒன்றான Kapitanskaya Dochka என்ற ரஷ்ய மொழித் திரைப்படம்  யூடியூபில் காணக்கிடைக்கிறது. நாவலை முழுமையாக உள்வாங்கி எடுக்கப்பட்ட இந்தப்படத்தில் நடிகர்கள் தேர்வு பிரமிக்க வைக்கிறது. பொதுவாக நாவல்கள் திரைப்படமாக்கப்படும்போது அதுவரை ஒவ்வொரு வாசகனின் பிரத்யேகக் கற்பனையுலகில்   உலாவந்த பாத்திரங்க்ளைத் திரையில் சித்தரிப்பது என்பது திரைக்கலைஞர்களுக்கு சவாலான விஷயம். ஹாலிவுட் முதல் தமிழ் சினிமா வரை இதற்கு உதாரணங்கள் உண்டு. ஒரே நேரத்தில் பலர் காணும் கனவான சினிமாவில் அது சிரமமான காரியம் தான். வாசகன் ரசிகனாகும்போது திருப்தியடையாமல் போவதும் உண்டு. சில சமயம், தங்கள் படைப்புகள் திரையில் சரியாக சித்தரிக்கப்படவில்லை என்று அங்கலாய்க்கும் எழுத்தாளர்களும் உண்டு.

புகழ்பெற்ற ஹாலிவுட் இயக்குநர் ஸ்டான்லி குப்ரிக், அமானுஷ்யமான கதைகளுக்குப் புகழ்பெற்ற எழுத்தாளரான ஸ்டீஃபன் கிங்கின் ‘தி ஷைனிங்’ நாவலை அதே பெயரில் திரைப்படமாகத் தந்தபோது அப் படத்தை ஸ்டீஃபன் கிங் முற்றிலுமாகப் புறக்கணித்தார். ஆனால் அந்தப் படத்தை ரசிகர்கள் கொண்டாடினர். இதுபோல் பல உதாரணங்களைச் சொல்லலாம். ஆனால், புஷ்கினின் கேப்டன் மகளின் திரைவடிவம் நேர்த்தியான இயக்கம், அற்புதமான நடிகர்கள், உயிர்ப்பான பின்னணி இசை போன்ற அம்சங்களால் நாவலுக்கு முடிந்த அளவுக்கு நேர்மை செய்திருக்கிறது. 1959-ல் வெளியான இந்த கறுப்பு வெள்ளைப் படத்தில் நாவலில் வரும் பல காட்சிகள் வாசகனின் கற்பனைக்கு உயிர்கொடுத்திருக்கின்றன. குறிப்பாக ஓடன்பெர்க் கோட்டையைக் கைப்பற்றும் புகச்சோவ்  கேப்டன் உள்ளிட்டவர்களைத் தூக்கிலிட்ட பின்னர் அந்த உடல்கள் கயிற்றில் ஊசலாடும் காட்சி, ஜார் படையினரால் கைதுசெய்யப்படும் புகச்சோவ் கம்பிகளாலான கூண்டுக்குள் சிறைவைக்கப்பட்டு வண்டி ஒன்றில் வைத்து எடுத்துச்செல்லப்படும் காட்சி போன்றவை நாவலின் ஜீவனைக் கண்முன் நிறுத்துகின்றன. அதேபோல், சிரச்சேதம் செய்வதற்காகக் கொண்டு செல்லப்படும் புகச்சோவ், பலிபீடத்தின் அருகே நிற்கும் பியோத்தரைக் கண்டு தலையை உயர்த்திப் புன்முறுவல் செய்யும் காட்சியும் அற்புதம். புஷ்கின் இருந்திருந்தால்  படத்தின் இயக்குநர் விளாதிமிர் கப்லுநோவ்ஸ்கியைப்  பார்த்து, உடலில் செருகப்பட்ட வாளுடன் அதேபோன்றதொரு ஸ்னேகப் புன்னகையை சிந்தியிருப்பார். 

புஷ்கின் 4 வயதிலிருந்தே தன்னை நினைவு கூர்ந்தார். ஒரு முறை நடைப்பயணத்தின் போது பூமி எவ்வாறு நகர்கிறது மற்றும் நெடுவரிசைகள் நடுங்குகிறது என்பதைக் கவனித்தார், மாஸ்கோவில் கடைசியாக ஏற்பட்ட பூகம்பம் 1803 இல் பதிவு செய்யப்பட்டது. மேலும், அதே நேரத்தில், புஷ்கின் பேரரசருடன் முதல் சந்திப்பு நடந்தது - சிறிய சாஷா கிட்டத்தட்ட அலெக்சாண்டர் I இன் கால்களின் கீழ் விழுந்தார், 
 புஷ்கின் மிகவும் அன்பானவர் என்று அறியப்படுகிறது. 14 வயதிலிருந்தே அவர் விபச்சார விடுதிகளைப் பார்க்கத் தொடங்கினார். ஏற்கனவே திருமணமாகி, அவர் தொடர்ந்து "மகிழ்ச்சியான சிறுமிகளை" பார்வையிட்டார், மேலும் திருமணமான காதலர்களையும் கொண்டிருந்தார்.

. புஷ்கின் புத்திசாலி, ஆனால் அழகாக இல்லை, இந்த விஷயத்தில் அவரது அழகான மனைவி நடாலியா கோன்சரோவாவுடன் முரண்பட்டார், அதே நேரத்தில் அவரை விட 10 செ.மீ உயரம் கொண்டவர். இந்த காரணத்திற்காக, பந்துகளில் இருப்பதால், புஷ்கின் தனது மனைவியிடமிருந்து தனது தூரத்தைத் தக்க வைத்துக் கொள்ள முயன்றார்: இதனால் மற்றவர்கள் அத்தகைய விரும்பத்தகாத வேறுபாட்டைக் காண மாட்டார்கள்.

பெண்கள் புஷ்கினை வணங்கினர், பல ஆண்கள் இலக்கிய வட்டங்களில் வெறுத்து போற்றப்பட்டனர்.

புஷ்கினின் குழந்தைகளில், அலெக்ஸாண்டர் மற்றும் நடால்யா என்ற இரண்டு சந்ததியினர் மட்டுமே உள்ளனர். ஆனால் கவிஞரின் சந்ததியினர் இப்போது உலகம் முழுவதும் வாழ்கின்றனர்: இங்கிலாந்து, ஜெர்மனி, பெல்ஜியம் ... சுமார் ஐம்பது பேர் ரஷ்யாவில் வாழ்கின்றனர். டாட்டியானா இவனோவ்னா லுகாஷ் குறிப்பாக சுவாரஸ்யமானது. அவரது பெரிய பாட்டி (புஷ்கின் பேத்தி) கோகோலின் பேத்தியை மணந்தார். இப்போது டாட்டியானா கிளினில் வசிக்கிறார்.

Thursday, 5 September 2019

ALEXANDER






அலெக்சாண்டர்


அலெக்சாண்டரின், அரண்மனை வைத்தியனான பிலிப், அவனது ஆரூயிர் நண்பரும் கூட! அமைச்சர்களிடம் விவாதிக்க விரும்பாத விஷயங்களை கூட, பிலிப்புடன் ஆலோசிப்பான், அலெக்சாண்டர். இது, அமைச்சர்களுக்கு பிடிக்கவில்லை. படையெடுப்பின் போது ஒருநாள், அலெக்சாண்டருக்கு கடும் வயிற்று வலி; அதற்குரிய மருந்தை தயாரித்து எடுத்து, அலெக்சாண்டரின் கூடாரத்துக்குள் போனான், பிலிப்.

அவன் கண்களை ஊடுருவிப் பார்த்த அலெக்சாண்டர், 'இந்த மருந்து, என் உயிரை காப்பாற்றுமா?' என்று கேட்டான்.
'ஆம்; அதிலென்ன சந்தேகம்?'
'சந்தேகமில்லை; சந்தோஷம் தான்...' என்று கூறி, பிலிப் கொடுத்த மருந்தை வாங்கி, ஒரே மூச்சில் பருகி, 'நண்பா... இக்கடிதத்தை நான் படித்து விட்டேன்; நீயும் ஒருமுறை படித்துப் பார்...' என்று கொடுத்தான்.
கடிதத்தை வாங்கிய பிலிப், அதைப் படித்தான்...


மன்னர் அலெக்சாண்டருக்கு...
தங்களால், நாடுகளை இழந்த மன்னர்கள் பலர் ஒன்று கூடி, தங்களை கொல்வதற்கு, சதித் திட்டம் தீட்டியுள்ளனர்; அதற்கு உடந்தையாக இருப்பவன், உங்கள் நண்பன் பிலிப். இதற்கென, அவர்களிடம், பெரும் பணம் பெற்றுள்ளான். அவன், தங்களுக்கு தரவிருக்கும் மருந்தில், கொடிய விஷம் கலந்துள்ளான். அவன் மருந்துக்கு இரையாகாமல், உங்கள் வாளுக்கு, அவனை இரையாக்கி விடுங்கள்!
தங்கள் நலம் நாடும் அமைச்சன்,
பார்மீனியோ.
கடிதத்தை படித்து அதிர்ச்சியடைந்து, உடல் நடுங்க, 'மன்னா... இது வீண் பழி; நான் கொடுத்தது மருந்து தான்; விஷமல்ல...' என்றான் பிலிப்.
'அதனால் தான், அதை, நம்பிக்கையுடன் குடித்தேன்...' என்று கூறி, 'இப்போது நீ கொடுத்திருக்கும் மருந்து, என்னை கொன்று விட்டால், உலகத்தின் துரோகிகள் பட்டியலில், உன் பெயர் நிலைத்திருக்கும்;
மாறாக,
என்னை காப்பாற்றி விட்டால், உலகத்தின் நட்பு பட்டியலில், என்னுடைய பெயர் நிலைத்திருக்கும்...' என்று சொன்னான்,

Wednesday, 5 December 2018

ALEXANDRE DUMAS, FRENCH WRITER 1802 JULY 24-1870 DECEMBER 5




ALEXANDRE DUMAS, FRENCH WRITER 
1802 JULY 24-1870 DECEMBER 5




அலெக்சாண்டர் டூமா , {Alexandre Dumas, அலெக்சாண்டர் டூமாஸ், ஒலிப்பு: [a.lɛk.sɑ̃dʁ dy.ma], பிறப்பு டூமா டாவி டெலா பயெற்றி ([dy.ma da.vi də pa.jət.ʁi]) (24 சூலை 1802 – 5 திசம்பர் 1870)[1] அவரது சாகசமிக்க வரலாற்றுப் புதினங்களுக்காக உலகெங்கும் படிக்கப்படுகின்ற ஓர் பிரெஞ்சு எழுத்தாளர் ஆவார். த கௌன்ட் டெ மான்டி கிரிஸ்டோ, த த்ரீ மஸ்கிடீர்ஸ், ட்வென்டி இயர்ஸ் ஆஃப்டர், த வைகௌன்ட் டெ ப்ராக்லோன் உட்பட அவரது பல புதினங்கள் துவக்கத்தில் தொடர்கதைகளாக வெளிவந்தவை. நாடகங்களும் இதழ்களில் கட்டுரைகளும் ஆசிரியருக்குக் கடிதங்களும் எழுதி வந்தார்.

பிரெஞ்சு பிரபுவிற்கும் ஹைத்திய அடிமைக்கும் பேரனாகப் பிறந்த டூமா இளமையில் வறுமையில் வாடியவர். கல்வி கற்கவும் வழியில்லாது கையில் கிடைத்ததை எல்லாம் படித்து வந்தார். தனது தந்தையின் வீரச்செயல்களை அன்னை மூலம் கேட்டறிந்த டூமாவிற்கு சாகசங்கள் நிறைந்த கற்பனை விரிந்தது. தமது 20வது அகவையில் பாரிசுக்கு இடம் பெயர்ந்து அங்கு அரண்மனையில் பணி புரிந்து வந்தார்.அப்போது தான் இதழ்களுக்கு கதை எழுதத் துவங்கினார். விரைவிலேயே அவரது திறமை வெளிப்பட்டு புகழ்பெறத் துவங்கினார்.












வால்ட் டிஸ்னி உருவாக்கிய புகழ்பெற்ற கற்பனை பாத்திரங்களான மிக்கி மவுஸ், டோனால்டு டக் மற்றும் ஸ்கூபி ஆகியவை அனிமேஷன் திரைப்படத்தில் தனித்தனியாக வந்தாலே நகைச்சுவை தெறிக்கும். இவர்கள் மூவரும் இணைந்து வந்தால் எப்படி இருக்கும்? அப்பாவிகளாகவும் முட்டாள்களாகவும் உள்ள இந்த மூன்று பாத்திரங்களும், தங்களின் நட்பின் ஒற்றுமையால் உத்வேகம் பெற்று, சாகசங்களின் வழியாக ஓர் இளவரசியைக் காப்பாற்றுவதுதான் கதை. சுவாரஸ்யம், நகைச்சுவை, பரபரப்பும் இணைந்த காட்சிகள் Mickey, Donald, Goofy: The Three Musketeers திரைப்படத்தின் காணனுபவத்தை உன்னதமாக்குகின்றன. 

பாடுவதில் விருப்பமுள்ள ஓர் ஆமை வாய்ப்புக்காக ஒரு கதை சொல்லியிடம் கெஞ்சுகிறது. ஆமைக்குத் தந்த வாக்குறுதியை அலட்சியப்படுத்தும் அவர், கவனக்குறைவாக நடந்துசென்று பள்ளத்தில் விழுந்துவிட, கேமிராவின் முன்பு கதை சொல்லும் அதிர்ஷ்டம் ஆமைக்கு தற்செயலாக கிடைக்கிறது. மகிழ்ச்சியில் திகைத்துப்போகும் ஆமை சுதாரித்துக் கொண்டு, அப்போது கையில் கிடைக்கும் ‘The Three Musketeers’ என்ற புத்தகத்திலிருந்து உற்சாகமாகக் கதை சொல்கிறது. அதன் வழியாக விரிகிறது இந்தத் திரைப்படம். 


மிக்கி மவுஸ், டோனால்டு டக், ஸ்கூபி மற்றும் அவர்களின் வளர்ப்பு நாயான புளூட்டோ ஆகியவை சாலையில் வசிக்கும் சிறு உருவங்களாக இருக்கின்றன. சில கெட்டவர்கள் அவர்களை தொந்தரவு செய்ய, ராயல் மஸ்கிடியர்ஸ் வந்து காப்பாற்றுகிறார்கள். அதில் ஒருவர், மிக்கிக்கு தனது தொப்பியைப் பரிசாக அளிக்கிறார். 

‘அவர்களைப்போல வீரர்களாக வளரவேண்டும்’ என்கிற கனவும் லட்சியமும் நம் நண்பர்களுக்குள் உருவாகிறது. தங்களை வீரர்களாக கருதிக்கொண்டாலும் அடிப்படையில் அவர்கள் கோழைகளாகவும் முட்டாள்களாகவும் இருப்பதால், பரிகாசங்களுக்கு உள்ளாகிறார்கள். அரண்மனையில் வாயிற்காப்போர்களாகப் பணிபுரியும் இவர்கள் செய்யும் குளறுபடிகளால், ‘நீங்கள் எந்த வேலையையும் உருப்படியாக செய்யத் தெரியாத அறிவில்லாதவர்கள்’ என்று திட்டுகிறார் கேப்டன் பீட்.

இளவரசியைக் கடத்திச்சென்று எங்காவது விட்டுவிட்டு தானே அந்த ராஜ்ஜியத்தை ஆள வேண்டும் என்கிற ரகசிய விருப்பமும் சதி திட்டங்களும் கேப்டன் பீட்டிடம் உண்டு. இளவரசியான மின்னி, (இதுவும் ஒரு மிக்கி மவுஸ்) காதல் சார்ந்த கற்பனைகளில் இருக்கிறாள். 'என் வருங்கால காதலனை முதல் பார்வையிலேயே கண்டுகொள்ள முடியும். அது சார்ந்த துல்லியமான அடையாளங்கள் என் மனதில் இருக்கின்றன’ என்று தோழியிடம் கூறுகிறாள். ‘ராஜவம்சத்தைச் சேர்ந்த ஒருவன்தானே உங்களுக்கு மணமகனாக வர முடியும்?’ என்கிற தோழியின் ஆட்சேபம் மின்னியின் காதில் விழுவதில்லை.

இந்நிலையில், பீட் அனுப்பிய அடியாட்களால் இளவரசிக்கு ஆபத்து ஏற்பட்டு தற்செயலாக அதிலிருந்து மீள்கிறாள். ‘எனக்குப் பாதுகாவலர்கள் வேண்டும்’ என்று கேப்டனிடம் கறாராக கூறுகிறாள் இளவரசி. 'அந்த மூன்று முட்டாள்களையும் இவளுக்குப் பாதுகாவலர்களாக நியமித்தால், தனது திட்டத்தில் இடையூறும் இருக்காது' என நினைக்கிறார் பீட். 

ராயல் மஸ்கிட்டியர் பரிசாக வழங்கிய தொப்பியை அணிந்துவரும் மிக்கி மவுஸை காணும் இளவரசி, முதல் பார்வையிலேயே காதலில் விழுகிறாள். ‘தன் காதல் இளவரசன் வந்துவிட்டான்’ என்று உற்சாகம் அடைகிறாள். இதனால், அவர்களின் முட்டாள்தனங்களை இவளால் உணரமுடிவதில்லை. 

இளவரசியைப் பாதுகாப்பதற்காகவே கேப்டன் தங்களை நியமித்திருக்கிறார் என்று மூவரும் நினைத்துக்கொண்டிருக்க, 'இந்த முட்டாள்களை எளிதாக அப்புறப்படுத்தி இளவரசியைக் கடத்தும் திட்டத்தை நிறைவேற்றலாம்' என்கிற கனவில் இருக்கிறார் பீட். 

கேப்டனின் நோக்கம் நிறைவேற்றியதா? கோழைகளான மூன்று பேரால் இளவரசியைக் காப்பாற்ற முடிந்ததா? இளவரசிக்கு என்னவாயிற்று என்பதையெல்லாம் ஜாலியான கலாட்டாக்களுடன் சொல்லியிருக்கிறார்கள். 


அலெக்சாண்டர் டூமா எழுதிய ‘தி திரீ மஸ்கிடியர்ஸ்’ நாவலை அடிப்படையில் மூன்று கார்ட்டூன் பாத்திரங்களை இணைத்த இதன் திரைக்கதை சுவாரசியமாக அமைந்துள்ளது. கதை சொல்லியான ஆமையும், கதையின் இடையிடையே வந்து பொருத்தமான பாடல்களைப் பாடுவது அருமை. 

கேப்டனின் அடியாட்களால் எளிதாக வீழ்த்தப்படும் மூன்று உருவங்களும், தங்களின் நீண்ட கால நட்பின் அடிப்படையில் மீண்டும் ஒன்றிணைந்து, இளவரசியைக் காப்பாற்ற முடிவுசெய்வதும், நகைச்சுவையான சாகசங்களின் மூலம் அதைச் செயலாக்குவதும் அருமையான காட்சிகள். இவர்களை எளிதாக எடைபோட்ட கேப்டன், இவர்கள் ஒன்றாக இருந்தால் வீழ்த்துவது சிரமம் என்பதைத் தாமதமாக உணர்கிறார். அவர்களை தனித்தனியாக பிரித்துப் பயமுறுத்தி துரத்துவதும், அச்சம் காரணமாக பிரிந்து நிற்கும் இவர்கள், ‘All For One and One For All’ என்கிற பாடலின் மூலம் உத்வேகம் பெற்று நேரடியாக கேப்டனுடன் மோதி வெல்வதும் அபாரமான கிளைமாக்ஸ். 




நேரடி வீடியோவாக தயாரிக்கப்பட்டது இந்த அனிமேஷன் திரைப்படம். வால்ட் டிஸ்னியின் உருவாக்கம் என்பதால், ஒவ்வொரு பிரேமும் வசீகரமான வண்ணங்களுடனும் அபாரமான கற்பனை வளத்துடனும் உள்ளது. Bruce Broughton இசையும் பாடல்களும் இந்த அனுபவத்தை மேலதிக தரத்துக்கு இட்டுச்செல்கின்றன. திரைப்படத்தை அற்புதமாக இயக்கியிருக்கிறர் டோனோவன் குக் (Donovan Cook). 

Sunday, 10 June 2018

ALEXANDER THE GREAT BORN JULY 20,356 B.C - 323 ,JUNE 10





ALEXANDER THE GREAT 
BORN JULY 20,356 B.C - 323 ,JUNE 10


பேரரசன் அலெக்சாந்தர் அல்லது மகா அலெக்சாண்டர் (Alexander the Great, கிரேக்கம்: Αλέξανδρος ο Μέγας அல்லது Μέγας Aλέξανδρος,[1] Megas Alexandros; சூலை 20, கிமு 356 - சூன் 10/ 11, கிமு 323), கிரேக்கத்தின்[2][3] பகுதியான மக்கெடோனின் பேரரசர் (கிமு 336–323). மக்கெடோனின் மூன்றாம் அலெக்சாண்டர் எனவும் இவர் அழைக்கப்படுகிறார். உலக வரலாற்றில் பெரும் வெற்றிகளைப் பெற்ற இராணுவத் தலைவர்களில் ஒருவராகப் போற்றப்படுகிறார். இவர் ஈடுபட்ட எந்தப் போரிலும் தோல்வியடைந்ததில்லை எனவும் சொல்லப்படுகிறது. இவரது காலத்தில் பண்டைய கிரேக்கர்களுக்குத் தெரிந்த உலகின் பெரும் பகுதியைக் கைப்பற்றி ஆண்டார்.

அலெக்சாந்தர் அவரது தந்தை இரண்டாம் பிலிப் இறந்த பின்னர் மக்கெடோனின் மன்னனாக முடிசூடிக்கொண்டார். பிலிப் மன்னன் பண்டைய கிரேக்கப் பெருநிலப்பரப்பைச் சேர்ந்த பல நகரங்களை மக்கெடோனிய ஆட்சியின் கீழ் ஒன்றிணைத்தார். அலெக்சாந்தர் கிரேக்கத்தின் தெற்குப்பகுதி நகரங்களை முறியடித்து அவைகளை மக்கெடோனிய ஆட்சியின் கீழ் இணைத்தார். பின்னர் கிழக்குப் பகுதியில் அக்கீமனிட் பாரசிகப் பேரரசைக் கைப்பற்றினார். இவர் அனதோலியா, சிரியா, பினீசியா, காசா, எகிப்து, பாரசீகம், பாக்திரியா, மெசொப்பொத்தேமியா ஆகிய நாடுகளைக் கைப்பற்றியது மட்டுமல்லாமல், தனது பேரரசின் எல்லைகளை இந்தியாவின் பஞ்சாப் வரை நீட்டியிருந்தார்.

இறப்பதற்கு முன்பே, அரேபியக் குடாநாட்டுக்குள் தனது வணிக நடவடிக்கைகளையும், படை நடவடிக்கைகளையும் விரிவாக்குவதற்குத் திட்டமிட்டிருந்தார். இதன் பின்னர் மேற்கே கார்த்தேஜ், ரோம், ஐபீரியக் குடாநாடு ஆகியவற்றை நோக்கிச் செல்லவும் அவரிடம் திட்டம் இருந்தது. அலெக்சாந்தர் பல வெளிநாட்டவர்களைத் தனது படையில் சேர்த்திருந்தார். இதனால் சில அறிஞர்கள் இவர் இணைப்புக் கொள்கையைக் கடைப்பிடித்தார் என்றனர். தனது படை வீரர்களையும், பிற நாட்டுப் பெண்களை மணம் செய்யுமாறு ஊக்கப்படுத்தினார். அவரும் கூட இரண்டு வெளிநாட்டு இளவரசிகளை மணம் செய்தார்.

பன்னிரண்டு ஆண்டுகாலத் தொடர்ச்சியான படை நடவடிக்கைகளுக்குப் பின்னர் அலெக்சாந்தர் காலமானார். இவரது இறப்புக்கான காரணம் தெளிவில்லை. மலேரியா, நஞ்சூட்டல், தைபோய்ட்டுக் காய்ச்சல், வைரஸ் தொற்று போன்ற ஏதாவது ஒன்றால் அல்லது அளவு மீறிய குடிப்பழக்கத்தால் இறந்திருக்கக்கூடும் என நம்பப்படுகிறது. அலெக்சாந்தரின் விரிவாக்கங்களும், மரபுரிமைப் பேறுகளும் (legacy) அவர் இறந்து பலகாலங்களின் பின்னரும் நிலைத்திருந்ததுடன், தொலைதூர இடங்களிலும், கிரேக்கக் குடியேற்றங்களும், அதன் பண்பாட்டுச் செல்வாக்கும் பல நூற்றாண்டுகள் நீடிப்பதற்கு உதவின. இக்காலம் ஹெலெனிய காலம் எனப்படுவதுடன், இது கிரேக்கம், மையக்கிழக்கு, இந்தியா ஆகியவற்றின் ஒரு கலப்புப் பண்பாடாக விளங்கியது.


தொடக்க காலம்
வம்சாவழி மற்றும் குழந்தைப்பருவம்

அலெக்சாண்டர் பண்டைய கிரேக்க நாட்காட்டியின் மாதமான ஹெகடோம்பியன் மாதத்தில் ஆறாம் நாள் (தற்போதைய நாட்காட்டியில் தோராயமாக கிமு 356 ஆம் ஆண்டு சூலை மாதம் 6 ஆம் நாள்) அன்று பண்டைய கிரேக்கப் பேரரசின் மக்கெடோனின் தலைநகர் பெல்லாவில் அவரது தந்தை இரண்டாம் பிலிப்பின் நான்காம் மனைவி ஒலிம்பியாசுக்கும் பிலிப்புக்கும் மகனாக பிறந்தார். இவரது தாயார் ஒலிம்பியாசின் தந்தை எபிராஸ் நாட்டின் அரசர் நியாப்டோலேமஸ் ஆவார். இவரது தந்தை இரண்டாம் பிலிப்பிற்கு ற்கு ஏழு அல்லது எட்டு மனைவிகள் இருந்த போதிலும் இவரது தாயார் ஒலிம்பியாஸ் மூலம் மட்டுமே சட்டப்பூர்வ வாரிசு உண்டு. பண்டைய கிரேக்க வரலாற்றாசிரியர் புளூட்டாக்கின் கூற்றுப்படி அலெக்சாண்டரை சுற்றிலும் அவரது குடும்பத்தில் பல்வேறு சகாப்தம் படைத்த மாவீரர்கள் இருந்துள்ளனர் என்று தெரியவருகிறது. அலெக்சாண்டரின் இளமைப்பருவத்தில் அவர் ஒரு செவிலியரால் வளர்க்கப்பட்டார். அலெக்சாண்டரும் பிற்காலத்தில் அவரது படையினை வியூகம் வகுக்கும் க்ளைடஸ் தி ப்ளாக் என்னும் பதவியில் அமர்ந்த அவரது சகோதரியுமான லனைகியும் இவர்களது தாயான ஒலிம்பியாசின் உறவினாரான லியோநிடாஸ் என்பவரிடம் கட்டுபாடான கல்விமுறையில் பயின்றனர். அலெக்சாண்டர் மக்கெடோனியானின் மென்மையான இளைஞனாக வளர்ந்தார். யாழிசை மீட்டுவதிலும், படிப்பதிலும், போர்க்கலையிலும், வேட்டையாடுவதிலும் வல்லவராகத் திகழ்ந்தார்.

அலெக்ஸாண்டர் பத்தாவது வயதில் இருந்தபொழுது தேச்சாலி என்னுமிடத்தில் இருந்து வந்த ஒரு வணிகர் அவரது தந்தையிடம் ஒரு குதிரையை விற்க முனைந்தார். அப்போது அந்தக் குதிரை மிகவும் முரட்டுத்தனமாக யாருக்கும் அடங்காமல் இருப்பதை உணர்ந்து அவரது தந்தை பிலிப் அதை வாங்காமல் வெளியில் அனுப்ப நினைத்தார். அந்த தருணத்தில் அங்கிருந்த அலெக்சாண்டர் அந்த குதிரையானது தனது சொந்த நிழலை பார்த்தே மிரட்சி அடைவதை கண்டறிந்தார். அதோடு அந்த குதிரையை தானே பழக்கப்படுத்தி கொள்வதாகவும் தெரிவித்தார். சொன்னதைப்போல அதை அடக்கி பழக்கப்படுத்தியும் காட்டினார். புளூட்டாக் இதை தனது குறிப்பில் மிக விரிவாக புகழ்ந்து குறிப்பிடுகிறார். அரசர் பிலிப் தனது மகனாகிய அலெக்சாண்டரிடம், "மகனே நீ கண்டிப்பாக இந்த உலகத்தையே வெல்லப்போகிறாய், உன்னை பொருத்தமட்டில் மக்கெடோன் மிகச்சிறியது," என்று கூறினதாக புளூட்டாக் விளக்குகிறார். அதோடு அந்த குதிரையை அலெக்சாண்டருக்கே பரிசாக அளித்தார்.

அலெக்சாண்டர் அந்த குதிரைக்கு பூசிஃபலாஸ் (ox-head) என்று பெயரிட்டார். அந்த பூசிஃபலாஸ் என்கிற குதிரை தான் மாவீரன் அலெக்சாண்டரை இந்திய துணைக்கண்டம் வரை போர்களினூடே சுமந்து வந்தது. பிற்காலத்தில் வயோதிகம் (தனது 30ஆம் வயதில்) காரணமாக அந்த குதிரை இறந்த பின்னர் அதன் நினைவாக ஒரு நகரத்திற்கு அலெக்சாண்டர் பூசிஃபலா (Bucephala) என்று பெயரிட்டார்.

இளமைப்பருவமும் கல்வியும்

மாவீரன் அலெக்ஸாண்டருக்கு அரிஸ்டாட்டில் கல்வி போதித்தல்
அலெக்சாண்டரின் 13 ஆம் வயதின் ஆரம்பத்தில் அவரது தந்தை அவருக்கு கல்வி போதிக்க ஐசோக்ரேட்ஸ், ஸ்பீயூசிபஸ் போன்ற மிகச்சிறந்த அறிஞர்களை நியமித்தார். அவர்களுக்கு பின்னராக இரண்டாம் பிலிப் மன்னர் அரிஸ்டாட்டிலைக் கல்வி போதிக்க நியமித்தார். கல்வி போதிப்பதற்காக மைசாவில் இருந்த நிம்பஸ் கோயிலை வகுப்பறையாக கொடுத்தார். அலெக்சாண்டர் கல்விகற்று திரும்பும் தருணத்தில் அவரது ஆசிரியரான அரிஸ்டாட்டிலின் சொந்த நகரான தன்னால் அழிக்கப்பட்ட ஸ்டாகிரா-வை மீண்டும் நிர்மாணித்து தருவதென ஒப்புக்கொண்டார். மேலும் அங்கு மக்களை குடியேற செய்து அங்கிருந்து அடிமைகளாக பிரிக்கபட்ட மக்களை விடுவிப்பதாகவும் உறுதியளித்தார்.

மைசா கோயிலானது டாலேமி, ஹேஃபைசன் மற்றும் காசந்தர் போன்ற இடங்களை போலவே இதுவும் அலெக்சாண்டரும் மற்றும் மாக்கெடோனியானின் மேன்மக்கள் வகுப்பினரின் குழந்தைகளும் பயிலும் வாரிய பள்ளி போலானது. அவருடன் பயின்ற பல மாணவர்கள் பிற்காலத்தில் அலெக்சாண்டரின் உற்ற நண்பர்களாகவும் நம்பிக்கைக்குரிய அரசு அதிகாரிகளாகவும் திகழ்ந்தனர். மேலும் சிலர் துணைவராகவும் இருந்ததாக அறியப்படுகிறது. அரிஸ்டாட்டில் அலெக்சாண்டருக்கும் அவரது தோழர்கள் அனைவருக்கும் மருத்துவம், தத்துவம், நன்னெறி, மதம், தருக்கம், மற்றும் கலை போன்றவற்றை பயிற்றுவித்தார். அரிஸ்டாட்டிலின் போதனையில் அலெக்சாண்டர் அவரை சுற்றியுள்ள திசைகள் அனைத்திலும் உள்ள நாடுகளை அறிவது போன்ற பாடங்களில் மேம்பட்டிருந்தார். குறிப்பாக அரிஸ்டாட்டில் அலெக்சாண்டரை திசையனைத்திலும் உள்ள நாடுகளை பற்றிய கல்விதனை போதித்து வல்லுனராக மாற்றினார். அந்த அறிவே பின்னாளில் அலெக்சாண்டரை உலகம் முழுமையையும் சுற்றிவந்து வெற்றிகொள்ள வழிவகுத்தது.

இரண்டாம் பிலிப்பின் வாரிசு
மாக்கெடோனின் ஆட்சியாளராகவும் எழுச்சியும்

இரண்டாம் ஃப்லிப், அலெக்ஸாண்டரின் தந்தை
தனது 16 ஆம் வயதில் தனது கல்வியை அரிஸ்டாட்டிலிடம் பயின்று முடித்தார் அலெக்சாண்டர். பய்சான்டியான் உடனான மன்னர் பிலிப்பின் வாரிசு போட்டியில் வெற்றிபெற்ற அலெக்சாண்டர் வெளிப்படையான ஒரே வாரிசாக அறிவிக்கப்பட்டார். பிலிப் இல்லாத காலகட்டங்களில் திரேசிய நாட்டினர் மாக்கெடோனின் மீது படையெடுத்தனர். அலெக்சாண்டர் உடனே அதற்குத் தக்க பதிலடி கொடுத்தார். அவர்களை தனது எல்லையில் இருந்து ஓட ஓட விரட்டியடித்தார். பின்னர் கிரேக்கத்தில் குடியேற்ற ஆதிக்கத்தை விதைத்தார். அது மட்டுமல்லாது அலெக்சாண்ட்ரோபோலிஸ் என்கிற நகரையும் நிர்மாணித்தார்.

பின்னர் பிலிப் திரும்பி வந்ததும் அலெக்சாண்டரை ஒரு சிறு படைக்குத் தலைமையாக நியமித்து அனுப்பி தெற்கு திரேசை கைப்பற்றி வரப் பணித்தார். கிரேக்கத்தின் பெரிந்தஸ் நகரத்திற்கு எதிரான போரில் அலெக்சாண்டர் தனது தந்தையின் உயிரை காப்பாற்றினார். இதை தொடர்ந்து கிரேக்கத்தில் நடந்த பல போர்களில் தனது தந்தையின் வழிகாட்டுதலின் பேரில் நிறைய வெற்றிகளை ஈட்டினார்.

பின்னாளில் சில காலம் கழித்து கி.மு.338 ல் அலெக்சாண்டரின் படைகளும் அவரது தந்தை இரண்டாம் பிலிப்பின் படைகளும் இணைந்தன. மேலும் அவை தெற்கு தெர்மொபைலியா வழியாக வலம் வந்தன. பின்னர் தேபான் காரிசன் கூட்டத்திடம் வெற்றியை ஈட்டிய பின்னர் தேபெஸ் மற்றும் ஏதென்சிலிருந்து சிலநாள் பயண தூரத்திலிருந்த ஏலாடிய நகரை வெற்றி பெற்றனர். பின்னர் டிமொஸ்திநீசால் ஆளப்பட்ட ஏதென்சு, தேபெசு மாக்கெடோனியாவை வெல்ல முயன்றனர். அதேநேரம் ஃபிலிப்பும், ஏதென்சும் தேபெஸ் மீது முகாமிட்டு வெல்ல முயன்றனர். ஆனால் இந்தப் போட்டியில் ஏதென்ஸ் வென்றது. பின்னர் ஃபிலிப் அம்பிச்ஸா நோக்கி சென்றார்.

ஃபிலிப் தெற்கு நோக்கி சென்ற பொழுது அவரது எதிரிகள் கேரோனிய பகுதியில் அவரை சுற்றி வழிமறித்து தாக்கினர். அப்பொழுது நடந்த சண்டையில் அலெக்ஸாண்டர் வலது புறமிருந்த படையையும் அவரது தந்தை இடப்புறமிருந்த படையையும் திறம்பட வழிநடத்தி நம்பிக்கைக்குரிய தளபதிகளின் துணையுடன் அந்த போரில் வெற்றி கண்டனர்.

கேரோனிய போரில் வென்ற பிறகு ஃபிலிப்-ம் அலெக்ஸாண்டரும் எதிர்ப்பில்லாத பெலோபோன்நீஸ்-ஐ வென்றனர். பின்னர் அவர்கள் ஸ்பார்ட்டாவை அடையும் வரைக்கும் அடுத்திருந்த அனைத்து நகரங்களனைதிலும் அவர்களுக்கு வரவேற்பே கிடைத்தது. ஸ்பார்ட்டாவை தவிர்த்து தான் வெற்றி பெற்ற அனைத்து நகரங்களையும் இணைத்து ஹெல்லேனிக் கூட்டாட்சியை ஏற்படுத்தினார் ஃபிலிப். பின்னன் அதற்கு ஹெகேமொன் கூட்டமைப்பு என பெயரிட்டார். மேலும் அந்த கூட்டமைப்பை பாரசீக சாம்ராஜ்யத்தின் மீது படையெடுக்க பணித்தார்.

நாடு கடத்தலும் திரும்புதலும்
பெல்லா நாட்டிற்கே திரும்பிய ஃப்லிப் அந்த நாட்டில் கிளியோபாட்ரா யூரிடைஸ் என்ற பெண்ணை மணந்துகொண்டார். இந்த திருமணத்தின் மூலம் ஃப்லிப்பின் வாரிசு என்கிற அலெக்ஸாண்டரின் நிலைமை கீழிறங்கியது, ஏனென்றால் அலெக்ஸாண்டரின் தாயார் பெல்லாவை சேர்ந்தவரல்லர். இதன் மூலம் கிளியோபாட்ராவிற்கு பிறக்கும் குழந்தையோ அல்லது அவரது உறவில் நெருங்கிய ஆணோ தான் அரியணை ஏற முடியும் என்கிற நிலை உருவானது. இவ்வாறிருக்கையில் ஃப்லிப்பின் உறவினரும் அவரின் படைத்தளபதியுமான அட்டாலூஸ் திருமண விருந்தின் பொழுது மதுபோதையில் சட்டபடியான நீராடி வாரிசுக்கே அரியணை என்று பிரார்த்தனை செய்தார்.

இந்த பிரச்சனை பெரிதாகி வெடித்த பொழுது சதிகாரர்களினால் அலெக்ஸாண்டருக்கு தொல்லைகள் பெருகின அப்பொழுது இளவரசானாக இருந்த அலெக்ஸாண்டர் தனது தாயாருட மாசிடோனை விட்டு வெளியேறினார். தாயை மொலோசியன்ஸ் நாட்டின் தலைகரான டோடோனாவில் இருந்த அவரது சகோதரரான மன்னர் எபிரசின் முதலாம் அலெக்ஸாண்டர் வீட்டில் விட்டுவிட்டு தனது பயணத்தை தொடர்ந்தார். தனது பயணத்தில் அவர் இலிரியன் அரசரிடம் சென்று தஞ்சம் புகுந்தார், அலெக்ஸாண்டர் சில வருடங்களுக்கு முன்னர் அலெக்ஸாண்டரின் படையினரால் தோற்க்கடிக்கப்பட்ட இலிரியன் மன்னர் அகதியாக அலெக்ஸாண்டர் வந்திருந்த போதும் அவரை ஒரு விருந்தாளியாகவே பாவித்து நடத்தினார். இந்த நேரத்தில் அனைத்து ராணுவ பயிற்சியிலும் தேர்ச்சி பெற்ற தனது மகனை மீட்க மன்னர் ஃப்லிப் எந்த முயற்சியும் எடுக்கவில்லை. இதற்கிடையில் அலெக்ஸாண்டருடைய குடும்ப நண்பரான டிமரட்டஸ்-கோரிந்தியான் என்பவற்றின் முயற்சியால் அலெக்ஸாண்டர் ஆறு மாதங்கள் கழித்து மீண்டும் மாசிடோனியாவிற்கு வந்தார்.

பின்வந்த வருடங்களில் பாரசீகத்தின் காரியாவின் ஆளுநர் அலெக்ஸாண்டரின் சகோதரர் ஃப்லிப் அரிடியாசுக்கு அவரது மகளை மணமுடித்து கொடுக்க முன்வந்தார். இது அலெக்ஸாண்டர் மற்றும் அவரது தாயார் ஒலிம்பியாஸுக்கும் அலெக்ஸாண்டரின் நண்பர்களுக்கும் மன்னர் இரண்டாம் ஃப்லிப் தனது மற்றொரு மகானான அரிடியாசை தனக்கு அடுத்தபடியான அரியணைக்கான வாரிசாக கருதுவது போல தோன்றியது. இதனால் ஒரு தூது மூலம் இந்த திருமண ஏற்பாட்டை அலெக்ஸாண்டர் தடை செய்ய நினைத்தார். அந்த பெண்ணை அரிடியாசுக்கு பதிலாக தானே மணமுடித்து கொள்ள முயற்சித்தார். இதையறிந்த மன்னர் இரண்டாம் ஃப்லிப் இளவரசன் அலெக்ஸாண்டரை காரியா ஆளுநரின் மகளை கவர நினைத்த செயலுக்காக கண்டித்தார். மேலும் அலெக்ஸாண்டருக்கு இதைவிட சிறந்த ஒரு இடத்தில் பெண்ணை மனைவியாக்க நினைப்பதாக கூறினார். இந்த விளைவில் அலெக்ஸாண்டரின் நான்கு நண்பர்களை (ஹர்பளுஸ், நியர்சுஸ், டாலமி, மற்றும் எரிகையுஸ்) மன்னர் நாடுகடத்தினார்.

மாசிடோனின் மன்னனாக
வாரிசாக ஏற்றல்

கி.மு.336ல் மாசிடோன் சாம்ராஜ்யம்
கி.மு.336-ல் ஏகே'யில் ஒலிம்பியாஸின் சகோதரர் எபிரசின் முதலாம் அலெக்ஸாண்டரின் மகள் கிளியோபட்ராவின் திருமணத்தின் பொழுது மன்னர் இரண்டாம் ஃபிலிப் அவரது பாதுகாவல தலைவனால் (பாசநியாஸ்) கொலைசெய்யப்பட்டார். பின்னர் தப்பிசெல்ல முற்பட்ட பொழுது அவரும் மற்றும் அலெக்ஸாண்டரின் இறந்து துணைவர்களும் (பெர்டிக்காஸ் மற்றும் லியோனாடஸ்) அவருடன் சேர்த்து காவலர்களால் பிடித்து கொல்லப்பட்டனர். இதன்பின்னர் அலெக்ஸாண்டர் தனது 20 ஆம் வயதில் மன்னனாக அரியணை ஏறினார்.

வலிமையின் ஒருங்கிணைப்பு
அரியணைக்கு தன்னுடன் போட்டியிட்ட அனைவரையும் வென்று தனி ஒருவராக மகத்தான ஆட்சியை அலெக்ஸாண்டர் துவக்கினார். இதில் தனது உறவினர் நான்காம் அமைண்டாஸ்-ஐ அலெக்ஸாண்டர் இழந்தார். மேலும் லின்செஸ்டிஸ் எல்லைக்கு உட்பட்ட இரு மாசிடோனியன் இளவரசர்களையும் இழக்க நேரிட்டது. மேலும் அலெக்ஸாண்டர் ஒலிம்பியாஸின் துணையுடன் கிளியோபாட்ரா, அட்டாலஸ், மற்றும் பலரை இந்த போட்டியில் கொன்று தீர்த்தார்.

மன்னர் ஃபிலிப்பின் மரணச்செய்தி தேபெஸ், ஏதென்ஸ், தேசாலி, மற்றும் திரேசிய பழங்குடிகள் மேலும் வடக்கு மாசிடோன் ஆகிய இடங்களில் பெரும் கிளர்ச்சியை உண்டாக்கியது. இந்த கிளர்ச்சியை கேள்விப்பட்ட அலெக்ஸாண்டர் உடனுக்குடன் பதில் நடவடிக்கைகளை மேற்கொண்டார். தந்திரமும் செயல்திறனும் ஒருங்கே இணைத்து செயல்பட்ட அலெக்ஸாண்டர் 3000 குதிரைப்படையை கொண்டு தேசாலி நோக்கி பயணித்தார். அப்பொழுது ஒலிம்பஸ் மலைகளுக்கும் ஒஸ்ஸா மலைகளுக்கும் இடையில் த்ரேசியன் படைகளால் சூழபட்டார். அப்பொழுது அலெக்ஸாண்டர் தனது படைகளை ஒஸ்ஸா மலைகளின் மீதாக கடந்து செல்ல ஆணையிட்டார். மறுநாள் காலை திரேசிய படைகள் விழித்தெழுந்த பொழுது தாம் சுற்றி வளைத்த அலெக்ஸாண்டரின் படைகள் தற்பொழுது தங்களை சுற்றி வலைத்திருப்பதை உணர்ந்தனர். பின்னர் அவர்களது குதிரைப்படையையும் தனது குதிரைப்படையுடன் இணைத்துக்கொண்டு அங்கிருந்து பிலோபோநீஸ் நோக்கி பயணித்தார்.

வழியில் தெர்மொபைலியில் முகமிட்ட அலெக்ஸாண்டர் அங்கிருந்த அம்பிக்டையோனிக் கூட்டமைப்பிற்கு தலைவராக அங்கீகாரம் செய்யப்பெற்றார். பின்னர் கோரிந்த் நோக்கி முன்னேறினார். ஏதேன்ஸும் அலெக்ஸாண்டருடன் அமைதியாக பணிந்தது. அலெக்ஸாண்டரும் பழங்குடியினரை மன்னித்தார். அலெக்ஸாண்டரின் சரித்திரத்தில் புகழ் வாய்ந்த சைனிக் டியோஜெனிஸ் உடனான போர் அலெக்ஸாண்டர் கோரிந்தில் தங்கியிருந்த பொழுது தான் நிகழ்ந்தது. அந்த போரில் வென்ற அலெக்ஸாண்டர் டியோஜெனிஸிடம் உங்களுக்கு என்ன வேண்டும் என்று கேட்ட பொழுது தந்ததுவ வாதிகள் அலெக்ஸாண்டரிடம் ஏளனமாக பதில் கூறினர். நீங்கள் கொஞ்சம் தள்ளி நிற்க வேண்டும் எங்கள் மீது சூரியனின் ஒளி படவில்லை என்று கூறினர். இந்த பதில் அலெக்ஸாண்டரை பிரமிக்க வைத்தது. அதற்க்கு பதிலாக அலெக்ஸாண்டர் அவர்களிடம் நான் அலெக்ஸாண்டராக இல்லாமலிருந்தால் நான் ஒரு டியோஜெனிஸாகத்தான் இருக்க விரும்புகிறேன் என்று கூறினார். அலெக்ஸாண்டருக்கு கோரிந்தில் தான் அவர் தந்தை ஃபிலிப்பை போன்று முன்னின்று நடத்தும் தலைவர் என்று பொருள் படும் HEGEMON என்ற பட்டம் சூட்டப்பட்டது. மேலும் இதன் பின் தான் த்ரேசியர்களின் போர் மற்றும் பாரசீக போர் போன்றவை அலெக்ஸாண்டரால் நிகழ்த்தபெற்றன.

பால்கன் குடா போர்கள்

ஆசியாவின் மீது போர்தொடுத்து செல்லும் முன்பாக அலெக்ஸாண்டர் தனது வடக்கு மாகாண எல்லைகளை வலுப்படுத்த எண்ணினார். கி.மு.335 வசந்த காலத்தின் பொழுது இவர் பல்வேறு படையெடுப்புகளை நிகழ்த்தினார். ஆம்பிபோலிஸில் இருந்து கிளம்பி கிழக்கு நோக்கி பயணித்து சுதந்திர த்ரேசியா'வை ஹேமுஸ் மலையிலும், ட்ரீபள்ளி, லைகிநூஸ் ஆற்றின் அருகில் டானூப்-ஐயும், கேடே பழங்குடிகளை கடற்கரை போரிலும் வென்றார். பின்னர் க்ளிடுஸில் இல்லிரியா மன்னர், மற்றும் டாலண்டியின் க்ளுகியாஸ் போன்றவர்கள் கிளப்பிய எழுச்சியை போரில் அடக்கினார். அவர்களை போரில் தங்களது படைகளுடன் புறமுதுகிட்டு ஓடசெய்தார். இந்த வெற்றிகளின் மூலம் அலெக்ஸாண்டர் வடக்கு எல்லைப்பகுதிகளில் ஈடு இணையற்ற பலம்கொண்ட பாதுகாப்பை நிறுவினார்.

அலெக்ஸாண்டர் வடக்கில் போர் புரிந்து கொண்டிருந்த சமயத்தில் தேபேஸும், ஏதேன்ஸும் மீண்டு ஒருமுறை கிளர்ச்சியை விதைத்தனர். அலெக்ஸாண்டர் உடனே தெர்க்குக் நோக்கி விரைந்து தேபேஸுடன் போரிட்டு வென்றார். இந்த போரில் தேபேஸின் தாக்குதல் சொல்லிகொள்ளும்படியாக இல்லை. மேலும் அந்த தேசத்தை அலெக்ஸாண்டர் துண்டாடினர். தேபேஸின் இந்த முடிவில் பயந்து போன ஏதென்ஸ் கிரீஸை விட்டு பின்வாங்கி ஓடியது. இதனால் கிரீஸில் தற்காலிகமாக அமைதி நிலைநாட்டப்பட்டது. பின்னர் ஆன்டிபெட்டர்-ஐ ஆட்சிபொறுப்பில் அமர்த்திவிட்டு அலெக்ஸாண்டர் ஆசியா நோக்கி பயணிக்க ஆரம்பித்தார்.

பாரசீகப் பேரரசில் வெற்றிகள்
சின்னாசியா

அலெக்ஸாண்டரின் சாம்ராஜ்யமும் அவர் போரிட்ட வழித்தடங்களும்
கி.மு.334 ல் தோராயமாக 48,100 காலாட்படை வீரர்களுடனும், 6,100 குதிரைப்படை வீரர்களுடனும் 120 கப்பல்களில் 38,000 கப்பற்படை வீரர்களுடனும் மாசிடோனில் இருந்து பல்வேறு கிரேக்க மாநிலங்களின் வழியாக அலெக்ஸாண்டரின் படையானது ஹெல்லஸ்போன்ட்-ஐ கடந்தது.

பிரமாண்ட படையுடன் த்ரஸ், பையோனியா, மற்றும் இல்லிரியாவுடன் இணைந்து பாரசீகம் வழியாக ஆசிய மண்ணில் அலெக்ஸாண்டர் தனது ஆளுமையை ஊன்றினார்.

மேலும் ஆசியாவை கடவுளின் பரிசாகவும் கருதினார். இதுவே அலெக்ஸாண்டருக்கு போர் மீதிருந்த நாட்டத்தை விளக்குகிறது. பாரசீகத்தின் க்ராநிகஸ்-ஸில் பெற்ற முதல் வெற்றிக்கு பிறகு ஹளிகர்நாஸ்ஸஸ்-ஸில் அலெக்ஸாண்டர் பாரசீக மாகாணங்களின் சரணடைவை ஏற்றுக்கொண்டார். அலெக்ஸாண்டரால் தேர்ந்தெடுக்கப்பட்ட அடா-விடம் காரியா அரசின் ஆட்சிபொறுப்பை ஒப்படைத்தார்.

ஹளிகர்நாஸ்ஸஸ்-ஸில் இருந்து அலெக்ஸாண்டர் மலைநாடான லிசியா மற்றும் பம்பிலியா வழியாக பயணித்தார். கண்ணில்பட்ட நாடுகள அனைத்தையும் வெற்றி கொண்டார். பாரசீக கடற்படைத்தளங்கள் அனைத்தையும் அழித்தொழித்தார். பம்பிலியா-விலிருந்து கடலோரங்களை வென்ற பின்பு நிலபகுதிகள் நோக்கி வேகமாக முன்னேறினார்.

லிவன்ட் மற்றும் சிரியா

போம்பெயில் உள்ள இஸூஸ் போர் நிகழ்வை காட்டும் மொசைக் முறையில் வரையப்பட்ட அலெக்ஸாண்டரின் ஓவியம்
ஆசியாவின் குளிகால போர்தொடர்களை மேற்கொண்ட பின்பு அலெக்ஸாண்டரின் படை சிலிசியன் வாயில் வழியாக கி.மு.333-ல் கடந்து சென்று பாரசீகத்தின் பிரதான படைகளான மூன்றாம் டாரியஸ்-ன் படைகளை நவம்பர் மாதத்தில் இஸ்சுஸ் போரில் வெற்றிபெற்றார்.

இந்த போரில் டாரியஸ் தனது மனைவியுடனும் இறந்து மகள்களுடனும் புறமுதுகிட்டு பின்வாங்கியதால் அவரது படைகள் சின்னாபின்னபடுத்தபட்டன. இதனால் டாரியஸ் தனது தாய் சிசிகம்பிஸையும், மேலும் தனது அளவற்ற செல்வங்களையும் இழக்க நேரிட்டது.
இதன்பின்னர் அலெக்ஸாண்டர் சிரியாவை நோக்கி முன்னேறினார்.

அதில் பெரும்பாலான லிவன்ட் கடற்கரை அரசுகளையும் வென்றார். பின் கி.மு.332-ல் நெடிய போருக்கு பின் டைர்-ஐயும் வென்றார். பின்னர் போரில் பிடிபட்ட போய்க்கைதிகளை கொன்று அவர்களது மனைவி குழந்தைகளை அடிமை வியாபாரிகளிடம் விற்றார்.

எகிப்து

பாரிசின் லூவர் அருங்காட்சியகத்திலுள்ள பண்டைய எகிப்த்தின் எழுத்துமுறையான ஹைரோக்ளிப்ஸில் தோராயமாக கி.மு.330ல் எழுதப்பட்ட (வலமிருந்து இடமாக) அலெக்ஸாண்டரின் பெயர்.
அலெக்ஸாண்டர் டைரை கைப்பற்றிய பின்பு அவரது வழியில் காஜாவை தவிர இடைப்பட்ட அனைத்து எகிப்திய அரசுகளனைத்தையும் சுலபமாக வென்றார். வலிமையாக செரிவூட்டபட்டிருந்த காஜா குன்றுகளின் மீது கட்டபட்டிருந்த நகரமாகும்.

அதை வெல்ல அலெக்ஸாண்டர் கடுமையாக போராட வேண்டி இருந்தது. மூன்று வெற்றிகரமான திடீர் தாக்குதல்களுக்கு பின்பு அதன் வலிமை குன்றி காஜா வீழ்ந்தது. இந்த போருக்கு முன்பு அலெக்ஸாண்டருக்கு இப்போரில் ஏற்பட்டதை போல கடுமையான காயம் ஏற்பட்டதில்லை. அதேபோல ஜெருசலேம் அலெக்ஸாண்டரிடம் போரிடாமலேயே பணிந்து சரணடைந்தது.

கி.மு.332-ல் அலெக்ஸாண்டர் எகிப்தில் நுழைந்தார். அங்கு அலெக்ஸாண்டரை விடுதலையளிக்க வந்த ஒரு போராளியாக தான் மதித்தனர். அங்கு அவர் தன்னை பிரபஞ்சத்தின் தலைவராக உணர்ந்தார். கடவுளின் மகனாக பாவித்தனர். இதற்கு பின்பு தான் அலெக்ஸாண்டர் அடிக்கடி கடவுள் சியுசு-அம்மோன்-ஐ தனது தந்தையாக சுட்டிக்காட்டினார். மற்றும் தான் மேம்பட்ட உருவம் பொறித்த நாணயங்களையும் வெளியிடலானார்.

இவர் எகிப்தில் தங்கி இருந்த பொழுது எகிப்தில் எழுப்பப்பட்ட அலெக்ஸாண்ட்ரியா-வை நிறுவினார். அதுவே இவரது மறைவிற்கு பிறகு டோலேமைக் சாம்ராஜ்யத்தின் தலைமையாக பிற்காலத்தில் இருந்தது.

அசிரியா மற்றும் பாபிலோனியா
கி.மு.331-ல் அலெக்ஸாண்டர் எகிப்தை விட்டு வெளியேறி கிழக்கு நோக்கி மெசபடோமியா நோக்கி பயணித்தார் (தற்போதைய வடக்கு ஈராக்). அங்கு குகமேலா-வில் நடந்த போரில் மீண்டும் டாரியஸை வீழ்த்தினார். அந்த போரிலும் போர்க்களத்திலிருந்து டாரியஸ் மீண்டும் புறமுதுகிட்டு ஓடினார்.

இந்த முறை அலெக்ஸாண்டர் டாரியஸை அரபெல்லா மலைத்தொடர் வரை துரத்திசென்றார். இங்கு குகமேலாவில் நடந்த சண்டையே இவர்களிருவருக்கிடையே நடந்த கடைசிப்போராகும். அலெக்ஸாண்டர் பாபிலோனை கைப்பற்றிய பொழுது டாரியஸ் அந்த போரிலிருந்து தப்பித்து எக்பட்டானா மலைத்தொடர்களை கடந்து ஓடினார்.

பாரசீகம்
பாபிலோனில் இருந்து அசீமேனிட்-ன் தலைநகரங்களில் ஒன்றான அலெக்ஸாண்டர் சூசா-விற்கு சென்றார். அங்கு பெரும் செல்வங்களை தனதாக்கினார். இவரது படையின் பெரும்பகுதியை பாரசீகத்தின் பிரபல தலைமையிடமான பேர்ஸ்போலிஸ்-ஸுக்கு அனுப்பினார்.

அலெக்ஸாண்டரே தானே தலைமையேற்று அந்த பயணத்திற்கான படைப்பிரிவுகளை தேர்ந்தெடுத்தார். மேலும் அந்த நகரையும் அங்கிருந்த கருவூலத்தையும் சூறாவளியை போன்று கவர்ந்தெடுத்தார். அவர் பேர்ஸ்போலிஸ்-ஸில் நுழைந்த பின்பு அவரது படையினரை அந்த நகரில் பலநாட்கள் கொள்ளையிட அனுமதித்தார். அலெக்ஸாண்டர் பேர்ஸ்போலிஸ் நகரில் ஐந்து மாதங்கள் தங்கினார்.

அங்கு அவர் தங்கியிருந்த பொழுது கிழக்கு சேர்சேஷ் மாளிகையும் அந்த நகரும் தீ விபத்தில் சாம்பலான பின்ம்பு அங்கிருந்து வெளியேறினார். இந்த தீ விபத்திற்கு மதுவிருந்து மாளிகையில் ஏற்பட்ட விபத்து காரணமென்றும், இரண்டாம் பாரசீக போரின் பொழுது ஏதென்ஸின் அக்ரோபோலிஸ் எரிக்கப்பட்டதற்கு பழிவாங்கும் நிகழ்வென்றும் இரு வேறு காரணங்கள் நிலவின.

பேரரசின் வீழ்ச்சியும் கிழக்கும்

இங்கிலாந்து அருங்காட்சியகத்தில் உள்ள சிங்க முகம் தரித்த கிரீடம் அணிந்த அலெக்ஸாண்டர் உருவம் பதித்த வெள்ளி நாணயம்
அலெக்ஸாண்டர் டாரியஸை முதலில் மீதியாவில் இருந்தும் பின்னர் பார்த்தியாவில் இருந்தும் விரட்டியடித்தார்.

அதன் பின்னர் அந்த பாரசீக மன்னன் பெஸ்சுஸ் என்கிற ராஜியத்தினரால் கைது செய்யப்பட்டு கொண்டு செல்லப்பட்டான். அவர்கள் பின்னர் தாங்கள் கொண்டு சென்று கொலைசெய்த நபர் தான் டாரியஸ் மன்னன் என்று அறிவித்தனர்.

பின்னலில் அலெக்ஸாண்டருடன் மத்திய ஆசியாவில் குரில்லா போரிட்டு பின்வாங்கிய ஐந்தாம் அர்தஷெர்ஷெஸ் தான் பெஸ்சுஸ் ராஜ்யத்தின் மன்னன் ஆவார். அலெக்ஸாண்டர் டாரியஸை எரித்தார் அவனது இறுதி சடங்கை அசீமேனிட் வாரிசுகளை செய்ய அனுமதித்தார். டாரியஸ் இறந்த வேளையில் அசீமேனிட் அரியணைக்கு தனது பெயரை சூட்டியிருந்தான். இதுவே அதற்குப் பின்பு அந்த அரியணை ஏறிய அனைவரின் வீழ்ச்சிக்கு காரணம் என அசீமேனிடை ஆண்டவர்கள் கருதினர்.

அலெக்ஸாண்டர் இல்லாத வேளையில் மாசிடோன்
ஆன்டிபெட்டர்-ஐ ஆட்சி பொறுப்பில் அமர்த்திவிட்டு ஆசியாவில் வெகுகாலம் அலெக்ஸாண்டர் தங்கிவிட்ட்மையால் இரண்டாம் ஃப்லிப்பின் பழைய காவலர்கள் மாசிடோனின் ஆட்சிக் கட்டிலை ஆன்டிபெட்டரிடம் இருந்து பறித்தனர். அலெக்ஸாண்டர் தேபெஸ் நாட்டிலிருந்தும் வெளியேறியமையால் அங்கும் மீண்டும் கிரீஸின் ஆதிக்கம் பெற்றது.

மாறாக ஸ்பார்டா-வின் அரசன் மூன்றாம் அகிஸ் ஆன்டிபெட்டர்-ஐ மெகாலோபோலிஸ் போரில் வென்று கொலைசெய்தான். ஆன்டிபெட்டர் இதை ஸ்பார்டா அரசன் அலெக்ஸாண்டருக்கு அளித்த தண்டனையாக குறிப்பிட்டார். மேலும் அவ்வேளையில் ஆன்டிபெட்ட'ருக்கும் அலெக்ஸாண்டரின் தாயார் ஒலிம்பியாஸுக்கும் இடையே மனக்கசப்பும் இருந்தது.

ஒருவர் மீது ஒருவர் அலெக்ஸாண்டரிடம் இதை புகராகவே அளித்திருந்தனர். மொத்தத்தில் கிரேக்கம் அலெக்ஸாண்டர் இல்லாத வேளையில் மிகவும் சுதந்திரமாக அமைதியாக பழையபடிக்கே திரும்பியிருந்தது. அவர் வென்ற நாடுகளில் பலவற்றை அலெக்ஸாண்டரே விரும்பி திரும்ப போகட்டும் என்று விட்டிருந்தார்.

இந்த வேளையில் அவருடன் இருந்த பல வீரர்கள் மிகுந்த சோர்வில் இருந்தனர். இருந்தாலும் அலெக்ஸாண்டரின் கட்டளைக்கு பணிந்து தொடர்ந்து மாசிடோனியாவிலிருந்து அவருடன் பயணித்திருந்தனர். நீண்ட பயணமும் இடையறாத போர்களும் அவர்களை மிகுந்த சோர்வில் தள்ளியிருந்தது.

அவர்களில் விரும்பிய பலரை திரும்ப ரோம் நகருக்கே அனுப்பியும் வைத்தார். லட்சிய தாகம் கொண்டிருந்தவர்களை மட்டுமே தன்னுடன் வைத்துக்கொண்டார்.

இந்தியப் படையெடுப்பு

ஆந்த்ரே காஸ்டைன்(1898-1899) வரைந்த ஹைதாஸ்பேஸ்-ஸில் படையின் சிறுகுழுக்கள் போரிடும் காட்சி
இந்திய துணைக்கண்டத்தில் அலெக்ஸாண்டரின் படையெடுப்பு
ஸ்பிடமெனிஸ்-ஸின் மரணத்திற்கு பின்பும், ரோக்ஷனா (பாக்டரியான் இனத்தின் ரோஷனக்) உடனான மரணத்தினாலும் அலெக்ஸாண்டர் இந்திய துணைக்கண்டத்தின் பக்கம் கவனம் செலுத்தினார். காந்தார (தற்போதைய வடக்கு பாகிஸ்தான்) நாட்டின் குழுக்களின் தலைவரும் முன்னாள் ஆளுநருமானவரின் அழைப்பின் பெயரில் அலெக்ஸாண்டர் அங்கு பயணித்தார்.

இண்டஸ் முதல் ஹைடஸ்பஸ் வரை விரிந்திருந்த அப்போதைய டக்ஸ்ஸில்லா ராஜ்யத்தின் அரசர் ஒம்பிஸ், சில மலைவாசி குழுக்கள், மற்றும் ஆஸ்பஸியோய், அஸ்ஸாகேநோயி போன்றவர்கள் அலெக்ஸாண்டரின் நண்பரிடம் பணிய மறுத்தனர்.

கி.மு.327/326-ஆம் ஆண்டின் குளிர்காலங்களில் அலெக்ஸாண்டர் தானே தலைமையேற்று அந்த மலைவாசி குழுக்களுடன் போர் புரிந்தார். குனார் சமவெளியில் ஆஸ்பஸியோய், சுவாத் மற்றும் புநர் சமவெளியில் அஸ்ஸாகேநோயி போன்றோரிடம் சண்டையிட்டார். இவற்றிலெல்லாம் அலெக்ஸாண்டர் எளிதில் வென்ற பொழுதிலும் அவரது தோளில் ஆஸ்பஸியோய்-உடன் சண்டையிட்ட பொழுது காயம் பெரிதானது.

பலம் வாய்ந்த அஸ்ஸாகேநோயி-யிடம் போரிட்ட அலெக்ஸாண்டர் ஓரா மற்றும் ஒர்நோஸ் போன்ற கோட்டைகளில் பெரும் ரத்தவெள்ள சண்டைக்கு பின்பே வெற்றியை ஈட்ட முடிந்தது. அப்பொழுது நடந்த சண்டையில் அலெக்ஸாண்டரின் கணுக்காலில் பலத்த காயம் உண்டானது.

கியூரிடஸ்-ஸின் கூற்றுப்படி அலெக்ஸாண்டர் மாஸ்ஸாகாவை முற்றிலும் அழிக்காவிட்டாலும் ஓரா-வில் ஏற்படுத்தியதை போன்றே பெரும் சேதத்தை உண்டு பண்ணினார் என்று அறிய முடிகிறது. மாஸ்ஸாகா-வின் துயர முடிவினால் அங்கிருந்த பெரும்பாலோர் வெளியேறினர். தொடர்ந்து நெருக்கமாக சண்டையிட்ட அலெக்ஸாண்டர் அந்த மலைக்கோட்டைகளை இரத்தம் தோய்ந்த நான்கு நாள் சண்டைக்கு பிறகு வென்றார்.

இதன் பிறகு அலெக்ஸாண்டர் சிந்து நதியை கடந்து வந்து, வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த போரில் பஞ்சாப் பகுதியை ஆண்டு வந்த இந்திய மன்னன் போரஸை வென்றார். அதுவரை யானைப்படையையே பார்த்திராத அலெக்ஸாண்டரின் படைகள் முதல் முறையாக யானைப்படையை பார்த்ததில் பிரமித்து பயந்து முதல் முறையாக பின்னோக்கி அடியெடுத்து வைத்தனர். ஹைடஸ்பேஸ்-ஸில் கி.மு.326-ல் நடந்த இந்த போர்களில் ஆச்சர்யம் அடைந்த அலெக்ஸாண்டர் மன்னர் போரஸின் வீரத்தை கண்டு பிரமித்து போரஸிடம் நட்பு பாராட்டினார்.

மேலும் போரஸையே அவன் அதுவரை ஆண்டு வந்த பகுதிகளுக்கு சத்ரப் எனப்படும் பொறுப்பாளியாக நியமித்து அதுவரை அவனது ஆளுகைக்குட்படாத பகுதிகளையும் அவனது கட்டுபாட்டில் கொடுத்தார். கிரீஸில் இருந்து வெகுதூரத்தில் இந்த நிலப்பகுதிகள் தன்னால் கவனித்துக்கொள்ள முடியாத படியால் இந்த பகுதியில் இருந்த பெரும் பகுதியை போரஸின் ஆளுகையின் கீழ் தனது பிரதிநிதியாக நியமித்து கௌரவப்படுத்தினார்.

ஹைடஸ்பேஸ் ஆற்றின் இரு கரைகளிலும் இரு நகரங்களை அலெக்ஸாண்டர் நிர்மாணித்தார் அவற்றில் ஒன்றிற்கு இத்தருணத்தில் இறந்த தனது குதிரையின் நினைவாக பூசிஃபலா என்று பெயரிட்டார். மற்றொரு நகரத்தின் பெயர் நிசிய(வெற்றி) அதுவே தற்போதைய பாகிஸ்தானின் பஞ்சாப் மாநிலத்தின் மாங் பகுதி.


இந்திய துணைக்கண்டத்தில் அலெக்ஸாண்டரின் ஆளுகைக்குட்பட்ட பகுதிகள்
அலெக்ஸாண்டர் படையில் ராணுவப்புரட்சி
போரஸ் மன்னனின் சாம்ராஜ்யத்திற்கு கிழக்கே இருந்த மகத நாட்டின் நந்தர் அரசும் வங்காளத்தின் கங்கரிடை அரசும் அலெக்ஸாண்டரின் மாபெரும் படைகள் அடுத்தது கிழக்கு நோக்கி தங்களை தான் குறிவைக்கும் என்று பயந்தன.

அதே சமயம் ஹைபசிஸ் ஆற்றின் கரையில் அலெக்ஸாண்டரின் படையில் உட்பூசல் வெடித்தது. தொடர்ந்து அவர்கள் கிழக்கு நோக்கி பயணிக்க தயாராக இல்லை. இந்த ஆறு தான் அலெக்ஸாண்டரின் கிழக்கு திசையின் எல்லையாக இருந்தது. அதே சமயம் லட்சிய வேட்கை தணிந்து சோர்ந்திருந்த மாசீடோனிய படையினர் அங்கேயே தங்கினர்.

இதன் காரணமாக அலெக்ஸாண்டர் அவர்களை கங்கை ஆற்றையும் கடக்க வேண்டும் என்று கட்டாயமாக கூறிய பொழுது அலெக்ஸாண்டரை கடுமையாக வெறுத்தனர். மேலும் இந்த ஆற்றை கடக்கையில் வெகுவானோர் இறக்க நேரிடும் என்றும் மறுகரையில் கண்டேரி மற்றும் ப்ரேசி போன்ற அரசர்களிடம் எண்பதாயிரம் எண்ணிக்கை கொண்ட குதிரைப்படையும், இரண்டு லட்சம் காலாட்படை வீரர்களும், எட்டு ஆயிரம் தேர்ப்படையும், மேலும் ஆறாயிரம் யானைப்படையும் கொண்ட மிகப்பெரிய படையணிகள் இருப்பதாலும் மேற்கொண்டு நகர கண்டிப்பாக மறுத்துவிட்டனர்.

ஆகிலும் அலெக்ஸாண்டர் மேற்கொண்டு முன்னேற வீரர்களை தயார் படுத்தலானார். ஆனால் அவரது தளபதி கொயேநூஸ் அலெக்ஸாண்டருடன் வாக்குவாதம் செய்து அவரது எண்ணத்தை மாற்றினார். அந்த தளபதி அலெக்ஸாண்டரிடம் நமது படை வீரர்கள் தங்களது பெற்றோரையும், மனைவியரையும், குழந்தைகளையும் விட்டு பிரிந்து வந்து பல வருடங்கள் ஆகிறதென்றும், அவர்களுக்கு வாழ்வில் மிச்சமுள்ள நாட்களை அமைதியாக செலவிட அனுமதிக்க வேண்டுமென்றும். அனைவரையும் தாயகம் திரும்ப அனுமதிக்க வேண்டுமென்றும் விவாதித்தார். ஒருவழியாக அலெக்ஸாண்டர் தெற்கு நோக்கி திரும்ப சம்மதித்தார். மீண்டும் சிந்து நதி கடந்து வழியில் மல்லி மலைவாழ் (தற்போதைய முல்தான்) மக்களையும் மேலும் சில இந்திய பழங்குடியினரையும் எதிர்கொண்டார்.

அலெக்ஸாண்டர் தனது படையின் பெரும்பகுதியை தனது தளபதி கிராடேராஸ் தலைமையில் கார்மேனியாவிற்கு (தற்போதைய தெற்கு ஈரான்) அனுப்பிவைத்தார். மற்றும் தனது கடற்படை தொகுதியை பாரசீக குடா பகுதிகளுக்கு தனது கடற்ப்படை அதிகாரி நியர்சுஸ் தலைமையில் அனுப்பினர். மீதமுள்ள படையினரை தானே தலைமை ஏற்று தெற்கு நோக்கி கடுமையான கேட்ரோசியன் பாலை நிலம் வழியாக வழிநடத்தி பாரசீகம் சென்றார். வழியில் அவர் கி.மு.324'ல் சூசா-வை அடைந்த பொழுது இதற்க்கு முன்பு எப்பொழுதும் இல்லாத அளவு தனது படையின் பெரும்பகுதியை அந்த பாலை நிலத்தின் கொடுமைக்கு பலியாக இழந்திருந்தார்.

பாரசீகத்தில் அந்திம காலங்களில் அலெக்ஸாண்டர்

அலெக்ஸாண்டர் (இடது) மற்றும் ஹெபெஷன் (வலது)
இவர் இல்லாத காலகட்டங்களில் இவர் ஆட்சி பொறுப்பில் அமர்த்திய பல சர்வாதிகார ஆளுநர்களும் சத்ரப்'களும் எல்லை மீறிய செயல்களில் ஈடுபட்டதை அலெக்ஸாண்டர் கண்டறிந்தார் இதன் காரணமாக அவர்களில் பலரை கொன்றார். மேலும் அவரது வீரர்களுக்கு கடன் வழங்கினார்.

மேலும் இவர் க்ராடேருஸ் தலைமையில் வாலிபம் கடந்த பலவீனமான வீரனாக மாசீடோன்-க்கு திரும்புவதாக அறிவித்தார். இவரது படையினர் அந்த கூற்றை தவறாக புரிந்துகொண்டு ஒபிஸ் நகரில் கழகத்தில் ஈடுபட்டனர். பாரசீகத்தின் இறையாண்மையை மதிக்க தவறினர். மூன்று நாட்களுக்கு பின்னும் அடங்காத கழகத்தினால் வெறுப்புற்ற அலெக்ஸாண்டர் மசீடோனியர்களால் அளிக்கப்பட்ட அலகுகளையே பாரசீகத்தில் பின்பற்றலாம் என்று அறிவித்தார்.

இதன் பின் தவறை உணர்ந்த மாசீடோனியர்கள் மன்னிப்பு கோரினர். அலெக்ஸாண்டரும் மன்னித்தார். அதற்காக அவரளித்த விருந்தில் பல்லாயிரகணக்கனோர் ஒன்றாக உணவருந்தி களித்தனர். பாரசீகத்தினருக்கும் மாசீடோனியர்களுக்கும் இடையில் சமாதானம் உண்டுபண்ணும் முயற்சியாக பாரசீகத்தின் குலத்திலிருந்து ஒருவரை அலெக்ஸாண்டர் மணந்துகொண்டார்.

எக்பட்டானா-விற்கு திரும்பிய பின்பு அலெக்ஸாண்டர் பாரசீகத்தின் கருவூலத்தை மீட்டெடுத்தார். இவரது நெருங்கிய ரகசிய தோழனான ஹெபெஷன் மர்மமான முறையில் இறந்தார். அவர் உடல்நலமின்றி இறந்தாலும் நஞ்சூட்டப்பட்டு கொல்லப்பட்டதாகவும் சான்றுகள் இருந்தமையால் அலெக்ஸாண்டர் மிகவும் மனம் வெதும்பினார். அலெக்ஸாண்டர் ஹெபெஷனின் மரணத்தினால் குலைந்து போனார்.

மேலும் துணைவனும் தோழனுமான ஹெபெஷனின் ஈமசடங்கிற்கு பாபிலோனில் மிக்க பொருட்செலவில் ஏற்பாடுகள் செய்ய கட்டளையிட்டார். இதன் பின்னர் மீண்டும் ஒரு பெரிய அளவிலான போர்த்தொடருக்கு அலெக்ஸாண்டர் திட்டம் தீட்டினார். ஆனால் அவற்றை எல்லாம் ஆரம்பிக்கும் முன்பே அவர் மரணித்தார்.

மரணம்
கி.மு.323-ல் ஜூன் 10 அல்லது 11 ஆம் நாளில் தனது 32 ஆவது வயதில் அலெக்ஸாண்டர் பாபிலோனிலுள்ள இரண்டாம் நெபுகன்ட்நேசர் மாளிகையில் உயிர்நீத்தார். இருப்பினும் இவரது மரண தேதியின் மீது இன்றும் கூட நிறைய விவாதங்கள் நிகழ்ந்துகொண்டு தான் இருக்கிறன.

அலெக்ஸாண்டரின் சொந்த உறவுமுறைகள்
அலெக்ஸாண்டருடைய வாழ்வில் பெரும்பாலான காலங்கள் அவரது தோழனும், ரகசிய துணையும், மெய்க்காப்பாளனும், தளபதியுமான, ஹெபெஷன் உடன் தான் கழிந்தன. ஹெபெஷனின் மரணம் அலெக்ஸாண்டரை தனது அந்திம காலத்திற்கு இட்டுசென்றது. இந்த நிகழ்வே அவரது அந்திம காலங்களில் அவரை உடல்நல குறைவிற்கும், மனநல சிதைவிற்கும் உண்டாக்கியது.

அலெக்ஸாண்டர் இருமுறை திருமணம் செய்து கொண்டார். ரோக்ஷனா (பாக்டரியான் மேன்குடியினரின் மகள்), மற்றும் பாரசீக அரசன் மூன்றாம் டாரியஸின் மகள் இரண்டாம் ஸ்டாடீரா ஆகியோரை மணந்தார். அதே போல அவருக்கு இரு ஆண் குழந்தைகள் இருந்தனர். ரோக்ஷனா மூலமாக நேரடி சட்டபூர்வ வாரிசாக மாசீடோனின் நான்காம் அலெக்ஸாண்டர்-உம், பர்ஷைன் மூலமாக மாசீடோனின் ஹெரகில்ஸ். மேலும் அவர் தனது ஒரு மகவை ரோக்ஷனா பாபிலோனில் இருந்த பொழுது கவனமின்மையால் இழந்தார். அலெக்ஸாண்டரின் பாலீர்ப்பு பற்றி நிறைய கருத்து விவாதங்கள் தொடர்ந்துகொண்டு தான் இருக்கின்றன. எந்த ஒரு பண்டைய குறிப்பிலும் அலெக்ஸாண்டரை ஓரின சேர்க்கையாளர் என்றோ ஹெபெஷன் உடனான உறவு காமம் கலந்த உறவு என்றோ குறிப்பிடபடவில்லை. அதே சமயம் ஆயிலியன் தனது எழுத்துகளில் அலெக்ஸாண்டரின் ட்ராய் பிரவேசத்தின் பொழு நிகழ்ந்த நிகழ்வினை பின்வருமாறு குறிப்பிடுகிறார்.
அலெக்ஸாண்டர் அக்கீலியஸின் சிலைக்கும் ஹெபெஷன் பேட்ரோகுலஸின் சிலைக்கும் மாலை அணிவித்தார்கள்


கி.மு.324-ல் அலெக்ஸாண்டருக்கும் பர்ஷைன்-க்கும் இடையில் நிகழ்ந்த திருமணத்தில் மணமக்கள் இருவரும் மண அலங்காரத்தில் இருப்பதில் விளக்கும் சுவரோவியம், போம்பெய்.
இதை தவிர வேறு எந்த வித கொச்சை குறிப்புகளும் பண்டைய கிரேக்க பண்பாடு பற்றிய குறிப்புகளில் காணப்படவில்லை. ஆனாலும் இந்த வார்த்தைக்கு காமம் கலந்த அர்த்தம் மட்டுமே கொள்ளப்படும் என்கிற கட்டாயமும் இல்லை. ஒருவேளை அலெக்ஸாண்டர் இருபாலீர்ப்பும் கொண்டிருக்க வாய்ப்புண்டு. அது அவரது காலகட்டங்களில் கிரேக்க கலாசாரத்தில் தவறானதுமில்லை

மேலும் அவர் தனது அந்திமகாலம் நெருங்கும் தருவாய் வரைக்கும் தனக்கென்று ஒரு வாரிசை உருவாக்கவில்லை. மேலும் அலெக்ஸாண்டரின் பெண்தேடும் படலம் அவரது தந்தையாரின் பெண் தேடலை விட மிக பிரமாண்டமானது என்று ஆக்டேன் கருத்துகளை முன்வைக்கிறார். மனைவியரை தவிர அலெக்ஸாண்டருக்கு நிறைய பெண் தொடர்புகள் உண்டு. மேலும் அலெக்ஸாண்டர் தனக்கென பாரசீக மன்னர்களின் வழக்கத்தின் படி அந்தப்புரங்கள் அமைத்து அதில் எண்ணற்ற பெண்களை நிறைத்திருந்தார். ஆனால் அவர்களிடத்தில் வெகு அரிதாக தான் பொழுதினை கழித்தார். அலெக்ஸாண்டர் இந்த சிற்றின்ப விஷயத்தில் மிகுந்த தன்னடக்கத்துடன் வாழ்ந்தார். இருந்த போதிலும் ப்ளுடர்ச் அலெக்ஸாண்டர் ரோக்ஷனாவிடம் மதிமயங்கியதாக குறிப்பிடுகிறார். அவளிடத்தில் மட்டும் காதலை கொடுத்ததாகவும் குடிப்பிடுகிறார். கிரீனும் இதையே வழிமொழிகிறார், அலெக்ஸாண்டர் தன்னை தத்தெடுத்த காரியாவின் அடா மற்றும் அலெக்ஸாண்டரின் மரணசெய்தி கேட்டதும் துக்கத்தில் உயிர்நீத்த டாரியஸின் தாயார் சிஸிகம்பிஸ் முதற்கொண்டு பல பெண்களுடன் நட்பு கொண்டிருந்தார் என்று குறிப்பிடுகிறார்.

அலெக்சாண்டருக்குப் பின்

தியாடோச்சி எனும் வாரிசுரிமைப் போருக்குப் பின்னர் செலூக்கியப் பேரரசு, தாலமைக் பேரரசு, சசாண்டர், ஆண்டிகோணஸ், லிசிமச்சூஸ் என ஐந்தாக பிளவு பட்ட அலெக்சாண்டரின் கிரேக்கப் பேரரசின் பகுதிகள்
முதன்மை கட்டுரை: தியாடோச்சி
அலெக்சாண்டரின் மறைவிற்குப் பின் நான்காம் அலெக்சாண்டர் கிரேக்கப் பேரரசை 13 ஆண்டுகள் ஆண்டார். 

கி மு 311இல் நடந்த முதல் வாரிசுரிமைப் போரின் முடிவில் அலெக்சாண்டரின் நண்பரும், படைத்தலைவருமான செலூக்கஸ் நிக்காத்தர் கிரேக்கப் பேரரசின் மேற்காசியா பகுதிகளுக்கு கி மு 305இல் மன்னராக முடிசூட்டுக்கொண்டார். வட ஆப்பிரிக்கா பகுதிகளுக்கு தாலமி சோத்தர் எனும் கிரேக்கப் படைத்தலைவர் மன்னராக கி மு 305இல் முடிசூட்டிக் கொண்டு ஆண்டார். 

பின்னர் அலெக்சாண்டரின் வேறு படைத்தலைவர்களான லிசிமச்சூஸ், ஆண்டிகோணஸ் மற்றும் சசாண்டர் ஆகியவர்கள் கிரேக்கப் பேரரசின் சில பகுதிகளை கைப்பற்றி ஆண்டனர்.

இதனையும் காண்க
போரஸ்
மாசிடோனியா
ஹெலனிய காலம்
வாரிசுரிமைப் போர்
செலூக்கியப் பேரரசு
தாலமைக் பேரரசு
சசாண்டர்
ஆண்டிகோணஸ்
லிசிமச்சூஸ்
கிரேக்க பாக்திரியா பேரரசு
இந்தோ கிரேக்க நாடு