Showing posts with label TOP. Show all posts
Showing posts with label TOP. Show all posts

Saturday, 5 June 2021

Bollywood's Top 15 unforgettable dresses

 


 Bollywood's Top 15 

unforgettable dresses



1 Madubala, Mughal-E-Azam



K Asif's glorious epic depicting a doomed romance between a Prince and a courtesan saw Madhubala bow out of the picture in grand style sporting a resplendent and embellished costume now famously addressed as the Anarkali style.


A sweeping mix of old world glamour and unabashed gorgeousness, the Anarkali has inspired everyone from Madhuri Dixit to Mallika Sherawat.


2 Mumtaz, Brahmachari



Even though it was Rajashree and not Mumtaz who played the leading lady in the musical entertainer Brahmachari, the button-cute star livened things up by turning on her impish charm in a bright orange sari, draped in an unconventional yet uber cool manner.  







3 Sharmila Tagore, An Evening in Paris


Long before there were enough bikini adorning babes to compile a full-fledged slide show, the rather elfin Ms Tagore stormed into Bollywood flaunting her sexy sophistication in nothing more than a ultra-glam printed blue swimsuit to portray the modern Indian woman in An Evening in Paris.




4 Helen, Teesri Manzil



Being the ultimate show girl of Hindi films, Helen's costumes were quite the highlight.


In Vijay Anand's sleek whodunit, however, Helen upped her ante to wow-inducing levels showcasing a series of elaborate costumes for the remarkable on all counts (music, choreography, sets) -- O haseena zulfonwali.




5 Sadhana, Waqt



Besides playing a delectable ghost, Sadhana also made fringe and tight-fitting churidar kurtas a rage.  


Not only did her fashionable offerings in Yash Chopra's lost and found multi-starrer found a massive following of besotted copycats, including some colleagues but also set the bar of what to expect from the future Yashraj heroine.


Her appearance in this Spanish flamenco costume is the one that remains etched in our minds though.

6 Zeenat Aman, Hare Rama Hare Krishna



Zeenat Aman pays the ultimate 'Flower child' ode with her fabulously hippie look -- floral prints, bell sleeves, bell bottoms, over-sized glasses, rudraksha beads in Dev Anand's equally compelling brother-sister melodrama, Hare Rama Hare Krishna.


On anybody else this would look like sham but the innately classy Lazy Zee totally works it.


7 Dimple Kapadia, Bobby


Bobby celebrates the mad rush of adolescence through the child-woman quality of its leading lady, Dimple Kapadia.  


And so trust the actress with the best mane in the business to lend a carefree sensuality while romping about in a knotted polka-dotted shirt and hot black mini musing over the matters of the heart.  


8 Rekha, Umrao Jaan



Dripping in jadau and polkis from practically every ornament-friendly corner of her anatomy, Rekha is a vision of opulence, poetry and heartbreaking beautiful. 


While tragedy might mark the fate of her lovelorn character as a courtesan in Muzzafar Ali's refined classic, Rekha sashaying in this pearl-hued brocade is stuff pleasant memories are made of.


Mujhse dosti karoge, she asks!




9 Sridevi, Mr India


To think it's only a plain chiffon blue sari. Drape it around Sridevi and you have molten lava hotness to deal with.


10 Madhuri Dixit, Hum Aapke Hain Koun!


Be it Ek do teen (Tezaab) Dhak dhak (Beta), Choli ke peeche (Khal Nayak) or Humko aaj kal (Sailaab), Madhuri Dixit's flamboyant picks always make an impression.


Nothing beats the popularity of her Didi tera devar outfit though.


La Dixit wore a crystal-encrusted purple satin sari to sizzling effect in Sooraj Barjatya's biggest blockbuster. Like the movie itself, the sari, too, became a huge hit in wedding circles.   


11


Like Madhuri's purple number, the Dulhania, too, found quite a few takers for her shiny green ensemble in Bollywood's longest-running romance.


12

Rangeela is filled with fashion fantastic moments of Urmila Matondkar's breathtaking transformation.  


Besides kick-starting a crazy trend courtesy stylist Manish Malhotra's chic designs of short, frilly dresses it also made Bollywood more 'look' savvy. 


Among a bunch of Urmila's many-a-striking avatars in the rollicking caper, the lissome beauty particularly stood out in her east-meets-west fusion of an Amrapali-inspired bustier paired with a tiny flowing skirt.


13 Sushmita Sen, Main Hoon Na



The best thing about Bollywood are its fans. They're almost obsessive in their fascination and range from all walks of life.


And so when Sushmita Sen's black and red polka dotted sari caught a majority's collective fancy, 

you could see its customers ranging from the grumpy aunty-next-door to the permanently cheery Kanta Bai.  


14 Aishwarya Rai Bachchan, Kajra re



Make way for the new-age Umrao!


Putting her guarded glamour ways aside, Ash reveals her seductive side in a saucy, deep neck choli and glitzy lehenga as part of the extra special appearance in Bunty Aur Babli's spectacular item ditty, Kajra re.  


As much as one loves her looks in the numerous costume dramas, this is Ash at her hottest best.


Too bad Preity Zinta's attempt at the same wasn't 'Happening' enough.


Now ordinarily, the shade of Shrek's complexion wouldn't look becoming on most but on Kajol it's almost too fetching to be true. Le jayenge, indeed!


Her iconic appearance in the same in a bid to lure a certain Mr India had the invisible super hero and the entire male population of India weak in the knees.  


Clearly, this one refuses to fade into black. Or blue.


15 Kareena Kapoor, Jab We Met



Extra long tee shirts teamed with Patiala salwars? Sounds ugh, right? Wrong.


Judging by the ensemble's popularity among young girls, Kareena Kapoor sure knows how to make a trendy statement with this unlikely combination as the chatty but endearing Geet of Jab We Met.

Saturday, 24 March 2018

RANI MUKHERJI ,ONE OF THE TOP ACTRESS IN HINDI CINEMA BORN 1978 MARCH 21




RANI MUKHERJI ,ONE OF THE TOP ACTRESS
IN HINDI CINEMA BORN 1978 MARCH 21




ராணி முகர்ஜி (வங்காள: রাণী মুখার্জী) 21, மார்ச் 1978 இல் பிறந்தார், இவர் பாலிவுட் படங்களில் நடிக்கும் ஒரு இந்திய திரைப்பட நடிகை ஆவார். ராஜா கி ஆயேகி பாராத் என்கிற படத்தில் அறிமுகமாகிய முகர்ஜி, கரன் ஜோகரின் குச் குச் ஹோதா ஹே என்கிற காதல் திரை படத்தில் தன்னுடைய முதல் வணிக வெற்றியைப் பெற்றார். அவரது மிகப்பெரிய வெற்றி படம் இதுவே மற்றும் இந்தப்படத்தில் சிறந்த துணைநடிகைக்கான ஃபிலிம்ஃபேர் விருதை பெற்றார். அதன் பிறகு அவர் நிறைய படங்களில் நடித்தார். ஆனால் எல்லா படங்களும் எதிர்பார்த்ததற்கு குறைவான வெற்றியையே கண்டது. பிறகு அவர் சாத்தியா என்கிற வணிகரீதியாக வெற்றிபெற்ற திரைப்படத்தில் நடித்து அவரது நிலையை தக்கவைத்தார். இத்திரைப்படத்திற்கு அவருக்கு பல விருதுகள் கிடைத்தன.[1]

2004 ஆம் ஆண்டில், அவருடைய இரு திரைப்படங்கள் ஹம் தும் மற்றும் யுவா , அவருக்கு சிறந்த நடிகை மற்றும் சிறந்த துணை நடிகைக்கான ஃபிலிம்ஃபேர் விருதை வழங்கியது அதுமட்டும் இல்லாமல் இத்திரைப்படங்களே இவருக்கு இரு மிக பெரிய விருதுகளை ஒரே வருடத்தில் வாங்கிய முதல் நடிகை என்ற புகழையும் கொடுத்தது. செவிடு, ஊமை மற்றும் கண் பார்வையற்ற பெண்ணாக நடித்த பிளாக் என்கிற படத்திற்கு அவருக்கு ஒருமனதான பாராட்டும் கிடைத்தது. அத்துடன் பல விருதுகளும் கிடைத்து அவர் பாலிவுட் படங்களில் ஒரு முன்னணி நடிகையாய் திகழ்ந்தார்.
ஆரம்ப வாழ்க்கையும் பின்னணியும்

முகர்ஜி பெங்காலி திரைக்குடும்பத்திலிருந்து வந்தவர். இவரின் தந்தை ராம் முகர்ஜி ஒரு பணியிலிருந்து விலகிய இயக்குனர் மற்றும் ஃபிலிம்மாலயை ஸ்டுடியோவின்[2] ஒரு பங்குதாரரும் ஆவார், இவரின் தாயார் ஒரு பின்னணிப் பாடகி இவரின் சகோதரர் ஒரு படத் தயாரிப்பாளர், இப்போது இயக்குனராக மாறியுள்ளார். இவர் அத்தை, தேபாஷ்ரே ராய், தேசிய விருதுபெற்ற ஒரு பெங்காலி நடிகை மேலும் அவரின் ஒன்றுவிட்ட சகோதரி, காஜோல், ஒரு பிரபல பாலிவுட் நடிகை மற்றும் அவரின் மற்றொரு சகோதரர், அயன் முகர்ஜி வேக் அப் சிட் டின் எழுத்தாளரும் இயக்குனரும் ஆவார்.

முகர்ஜி ஒடிசி நாட்டியத்தைப் பயின்றவர்,[3] மேலும் நாட்டியத்தை பத்தாம் ஆண்டிலிருந்து பழகத்தொடங்கினார். ஜுகுவில் உள்ள மனேக்ஜி கூப்பர் மேல்நிலைப் பள்ளியில் முகர்ஜி பயின்றார், பிறகு மும்பையில் உள்ள மிதிபாய் கல்லூரியில் சேர்ந்தார்.

நடிப்பு வாழ்க்கை

முந்தைய வேலை மற்றும் இடைவெளி, 1997-2002
ப்யார் பூல் (1992) என்ற அவர் தந்தையின் பெங்காலி படத்தில் ஒரு சிறிய வேடத்தில் தோன்றியபிறகு, முகர்ஜி அவரது நடிப்பை ஐந்து வருடங்களுக்குப் பிறகு தொடர்ந்தார், ராஜா கி ஆயாகி பாரத் (1997) படத்தில் முக்கிய வேடத்தில் நடித்தார். வணிக ரீதியாக படம் வெற்றிப்பெறா விட்டாலும், கற்பழிப்புக்கு பலியான ஒருவராக அவரின் பாத்திரம் நல்ல வரவேற்ப்பைப் பெற்றது. இதனால் ஸ்டார் ஸ்கிரீன் விருதில் நடுவரின் சிறப்பு அடையாளத்தைப் பெற்றார். பாக்ஸ் ஆஃபிஸில் படம் தோல்வியுற்றதால் அவர் மீண்டும் கல்லூரிப்படிப்பைத் தொடர்ந்தார்.[4]

குலாம் மில் 1998 இல் முகர்ஜி திரும்பவும் வெற்றிபெற்றார், அமிர்கானுக்கு எதிராக; பாக்ஸ் ஆஃபீசில் படம் நன்றாக வந்தது.[5] ஆத்தி க்யா கன்டாலா பாடல் முகர்ஜியை பிரபலமாக்கியது, மேலும் அவருக்கு கன்டாலா பெண் என்ற பட்டப்பெயரையும் வழங்கியது. அந்த வருடத்தில் தொடர்ந்து கரன் ஜோகர்ரின் முதலாவதாக இயக்கி வந்த, குச் குச் ஹோத்தா ஹே யில், ஷாருக்கான் மற்றும் கஜோல் உடன் நடித்தார். படம் மிகப் பெரிய வெற்றிகண்டது,[5] மேலும் தனது முதல் ஃபிலிம் ஃபேர் விருதை சிறந்த துணை நடிகைக்காக பெற்றார்.

மேலும் பல திட்டங்களில் நுழைந்து இவர் தனது தொழிலைத் தொடர்ந்தார். துரதிஷ்டவசமாக அவைகளில் பல பாக்ஸ் ஆஃபீஸில் நன்றாக ஓடவில்லை. இருப்பினும் பதல் 2000 இல் ஒரு நல்ல படமாக திகழ்ந்தது, இருப்பினும் அந்நேரத்தில் அவரால் அவரது பெயரை நிலைநாட்ட இயலவில்லை.[6][7]

2001 இல், முகர்ஜி அப்பாஸ் முஸ்தானின் காதல் நாடகமான சோரி சோரி சுப்கே சுப்கே வில், சல்மான் கான மற்றும் பிரீத்தி ஜிந்தாவுடன் இணைந்து நடித்தார். ஓர் ஆண்டு தாமதத்திற்குப் பிறகு படம் வெளிவந்தது, மாற்று குழைந்தை பிறப்பு பற்றிய முதல் பாலிவுட் படமாகும்.[8] முகர்ஜியின் பாத்திரம் பிரியா மல்ஹோத்ரா, ஒரு கருக்கலைப்பிற்கு பிறகு தாயாக முடியாமல் வாடகைப் பெண்ணைக் கொண்டு குழந்தைபெறும் பெண்ணாக நடித்துள்ளார். Rediff.com கூறியதாவது, "அழுகை சோகத்தைத் தவிர வேறு எதுவுமே இல்லாத ஒரு கதாப்பாத்திரத்தில் முடங்கியுள்ளார். அவரின் சிறப்புக்காக, பார்திய நாரி யில் அச்சடிக்கும் விதமான தியாகியாக தன்னையே எடுத்துச்சென்றார்."[9]

2002 இல், குனால் கோஹிலியின் காதல் படமான முஜ்சே தோஸ்தி கரோகே! யில், ரித்திக் ரோஷன், கரீனா கபூர் உடன் இணைந்து முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்தார். இந்தியாவில் படம் நன்றாக ஓடவில்லை என்றாலும்,[10] வெளிநாடுகளி்ல் நல்ல வணிகத்தைப் பெற்றது,[11] மேலும் இந்தியாவின் மிகப்பெரிய தயாரிப்பு நிறுவனத்தில் அவரை நுழையவிட்டது: யஷ் ராஜ் ஃப்லிம்ஸ். அடுத்த வருடத்தில், ஷாத் அலியின் பரபரப்பான சாத்யாவில் விவேக் ஓப்பராய்க்கு எதிராக முகர்ஜி நடித்தார். சுஹானி ஷர்மா என்ற பாத்திரத்தில், சிறு வயதிலேயே திருமணம் செய்து அதனால் துண்டிக்கப்பட்ட மற்றும் மனஉளைச்சல் கொள்ளும் மருத்துவ மாணவியாக நடித்துள்ளார், சிறந்த நடிப்பிற்கான ஃபிலிம்ஃபேர் க்ரிட்டிக்ஸ் விருதை பெற்றார், மேலும் பல பரிந்துரைப்புகள், அவருக்கு இது ஃபிலிம்ஃபேரில் சிறந்த நடிகைக்கான பரிந்துரைப்பைத் தந்தது. பிபிசி மானிஷ் காஜர் குறிப்பிட்டதாவது, "...ராணி முகர்ஜி...நடுத்தர குடும்ப பெண்ணாக தனது நடிப்பை சிறப்பாக எடுத்து நிரூபித்துள்ளார்."[12]


வெற்றி, 2003-06
ஆசிஸ் மிஷ்ராவின் படமான சல்தே சல்தே யில் ஷாருக்கானிற்கு எதிர்மறை கதாப்பாத்திரத்தில் முகர்ஜி நடித்து 2003 இல் வெளிவந்த முதல் படம்.[13] சாத்தியா வைப் போன்ற கதாப்பாத்திரத்தில் அவர் நடித்ததாக இது காட்டியது, மேலும் அவர் அவரின் இரண்டாவது ஃபிலிம்ஃபேர் சிறந்த நடிகைக்கான விருதின் பரிந்துரைப்பைப் பெற்றார். அந்த ஆண்டில் மற்ற மூன்று படங்களுடன், முகர்ஜி சோரி சோரி யைத் தொடங்கினார், இதில் அவர் முதன்முதலில் நகைச்சுவைக் கதாபாத்திரத்தில் நடித்தார்.[14] பாக்ஸ் ஆஃபீஸில் படம் நன்றாக ஓடவில்லை என்றாலும், அவரின் நகைச்சுவைத் திறன் பேசப்பட்டது.[15]

2004 இல், மணிரத்திரனத்தின் யுவா வில் பெங்காலி மனைவியாக நடித்தது அவருக்கு அவரது இரண்டாவது சிறந்த துணை நடிகைக்கான ஃபிலிம்ஃபேர் விருதை பெற்றுத் தந்தது. படம் நன்றாக ஓடவில்லை என்றாலும்,[16] அவரது நடிப்பு ஒரு திறனாய்வில் இவ்வாறு எழுதப்பெற்றது, "கதாப்பாத்திரமானது ஒரு நடிகைக்கான சாராம்சம் மேலும் ராணி அதில் எதிர்பார்ப்பை விட மிகவும் நன்றாக நடித்துள்ளார்".[17] காதல் மற்றும் நகைச்சுவைப் படமான ஹம் தும்மில் முக்கிய கதாப்பாத்திரத்தை ஏற்றார், அந்த வருடத்தில் மிகப்பெரிய வெற்றிப்படங்களில் இதுவும் ஒன்றாக அமைந்தது.[16] படமானது, 1989 ஆண்டின் வென் ஹேர்ரி மெட் சால்லி ..., குனால் கோலியால் தயாரிக்கப்பட்டது. முகர்ஜி ஏற்ற பாத்திரம் ரியா ஷர்மா, இன்றையத் தலைமுறைப் பெண், அவர் நிறைய விருதுகளைப் பெற்றார், இதில் அவரின் முதல் சிறந்த நடிகைக்கான ஃபிலிம்ஃபேர் விருதும் உட்படும். பிபிசி அவரின் நடிப்பைப் பற்றி," ராணி விரைவில் அவர் தலைமுறையில் பல துறைகளில் திறமைவாய்ந்தவராக இருப்பார்."[18]

கடைசியாக வெளிவந்த இவரின் படம் யஷ் சோப்ராவின் லவ் சகா வீர் ஜாரா, ஷாருக்கான், பிரீத்தி ஜிந்தாவுடன் நடித்தார். இப்படம், இந்தப்படம் இந்தியாவிலும் வெளிநாட்டிலும் அதிகளவில் பேசப்பட்டது,[11][16] இந்திய அதிகாரியின் காதல் கதையைச் சொல்கிறது, வீர் பிரதாப் சிங்காக ஷாருக் நடித்தார், பிரீத்தி ஜிந்தா பாக்கித்தான் பெண்மணி ஜாராவாக நடித்தார். ராணி சாமியா சித்திக்யூ என்ற துணைப்பாத்திரத்தில் நடித்தார், இவர் ஒரு பாக்கித்தான் வக்கில், வீர் பிரதாப் சிங்கின் வழக்கை எடுத்து அவரைப் பற்றி அறிய முயற்சிக்கும் ஒருவர்.

2005 இல், முகர்ஜி நான்கு பெரிய படங்களில் தோன்றினார்: சன்சய் லீலா பன்சாலியின் பிளாக் , ஷாத் அலியின் பன்டி ஆர் பப்லி , அமோல் பலேக்கரின் பெஹ்லே மற்றும் கேதன் மெக்தாவின் தி ரைசிங் . ப்ளாக் கில் அவரது நடிப்பு முக்கியமாக பேசப்பட்டது. பன்சாலி முகர்ஜியிடம் இந்த கதையைக் கொண்டுவந்த போது, அவர் மறுத்துவிட்டார்[19].மேலும் அவர் குருடு செவிடாக நடிக்குமளவுக்கு போதுமான நம்பிக்கை எனக்கு இல்லை எனக் கூறினார்.[19] இயக்குனர் அவர்மீது நம்பிக்கை வைத்தவுடன், அவர் இதில் நடிக்க சம்மதித்தார் மற்றும் மும்பய் ஹெலென் கெல்லர் கல்வி நிறுவனத்தில் சைகை மொழியை இதற்காக கற்றார்.[20] ராணி முகர்ஜி இதற்காக நல்ல மதிப்புரையைப் பெற்றார் மற்றும் அவரது நல்ல நடிப்பிற்கு பலவற்றில் சிறந்த நடிகை க்கான விருதுகளைப் பெற்றார். இந்தியா எப்எம் குறிப்பிட்டதாவது, "ராணி இதுவரை நல்ல திறனை வெளிப்படுத்தியுள்ளார் என்பதை மறுக்க இயலாது. எந்த உரையாடலுமே இல்லாமல், இவரது நடிப்பின் மூலம் எல்லா உணர்ச்சிகளைம் வெளிக்காட்டினார் மேலும் பெரும் பரபரப்பை அவர் உண்டாக்கினார். நல்ல நடிகராக வேண்டும் என்பவர்களுக்கு இதுவே ஒரு நல்ல வழிகாட்டி".[21] அவரின் அடுத்த வெளியீடு, பன்டி ஆர் பப்லி , மிகப்பெரிய வெற்றிப்படங்களில் ஒன்றாக அமைந்தது.[22] படமானது, பாக்ஸ் ஆஃபீஸில் வெற்றிகரமாக ஓடினாலும், எல்லா வகையான திறனாய்வையும் பெற்றது, மேலும் ராணி முகர்ஜியின் நடிப்பு, ஒரு கட்டுரையில், "எப்பொழுதும் ராணி நன்றாகவே செய்துள்ளார், ஆனால் அவர் அழுகு அளவிற்கு போகவில்லை.[23] இருப்பினும், ஐபா விருதுகள் மற்றும் ஃப்லிம்ஃபேர் விருதுகளில் சிறந்த நடிகை க்கான பரிந்துரைப்புகளைப் பெற்றார்..


மீரா நாயரின் ஹோலிவுட் படத்தில் முக்கிய பாத்திரம் முகர்ஜிக்கு வந்தது, தி நமேசகே (2007) கபி அல்விதா நா கெஹ்னா வின் தேதியுடன் ஒத்துப்போகாததால், இதில் அவர் நடிக்க இயலவில்லை.[24] கரன் ஜோகரின் படமான கபி அல்விதா நா கெஹ்னா 2006 இல் வெளிவந்த இவரின் முதல் படம் கபி அல்விதா நா கெஹெனா வாகும், அதில் அமிதாப் பட்சன், ஷாருக்கான், அபிஷேக் பச்சன், பிரீத்தி ஜிந்தா மற்றும் கிரோன் கேர் உள்பட பல நட்சத்திரங்கள் நடித்திருந்தனர். படம் பலதரப்பட்ட விமர்சனத்தைப் பெற்றாலும் வெளிநாட்டில் நல்ல வெற்றியைப் பெற்றது.[11] நியூயார்க்கில் சந்தோஷமில்லாமல் வாழும் இரு கணவன் மனைவியைப் பற்றிய கதை, இது வெளிப்புற ஈர்ப்பை விளைவிக்கிறது. முகர்ஜி தன்னம்பிக்கையற்ற மற்றும் அவரக்கும் அவரது அபிஷேக் பச்சன் ஏற்று நடித்த கணவருக்குமான உறவில் கேள்விக்குறியோடு இருக்கும் மாயா தல்வாராக நடித்துள்ளார்; அவரது நடிப்பு நல்ல வரவேற்பைப் பெற்றது. சிஎன்என்-ஐபிஎ னிலிருந்து ராஜிவ் மசந்த் கூறியது, "ராணி மில்லியன் பக்ஸாக தெரிகிறார் மேலும் அதிக நாள் நினைவிலிருக்கும் வண்ணம் அவர் அந்த பாத்திரமாகவே மாறியுள்ளார்."[25] அவர் சிறந்த நடிகைக்கான பல பரிந்துரைப்புகளைப் பெற்றார், மூன்றாவது வருடமாக அவர் சிறந்த நடிகைக்கான IIFA விருதைப் பெற்றார். முகர்ஜியின் அடுத்த வெளியீடு B.R. சோப்ராவின் பாபுல் . இந்தியாவில் படமானது பாக்ஸ் ஆஃபீஸில் நன்றாக ஓடவில்லை என்றாலும்,[26] வெளிநாட்டில் வெற்றிபெற்றது..[11] அவரின் விதவைக் கதாபாத்திரம் பலவிதமான விமர்சனத்தைத் தந்தது.

அண்மைக்காலப் பணி, 2007–முதல் தற்போது வரை.
முகர்ஜிக்கு 2007 இல் முதல் வெளியீடு, தா ரா ரம் பம் , இதில் அவர் வலியுள்ள இல்லத்திலிருக்கும் மனைவியாக மற்றும் முதன் முதலில் தாயாகவும் நடித்துள்ளார், இது பாதி வெற்றியடைந்தது.[27] அவரின் நடிப்பு பரவலாக பேசப்பட்டது, ஒரு குறிப்பிட்ட விமர்சனத்துடன், "ராணி தொழில் ரீதியாக ஒரு தாய்/மனைவியாக நடித்துள்ளார்."[28] அந்த வருடத்தில் கடைசி இரண்டு வெளியீடானது, ப்ரதீப் சேகரின் லாக சுனாரி மே டாக் அதில் அவர் வலுக்கட்டாயமாக விபச்சாரத்தில் ஈடுபடுத்தப்படும் பெண்ணாக நடித்தார் மேலும் சஞ்சய் லீலா பன்சாலியின் சாவர்யா வில் திரும்பவும் விபச்சாரியாக நடித்துள்ளார், இந்தியாவில் இது வணகரீதியாகவும் தோல்வியடைந்தது.[27]

குனால் கோஹிலின் தோடா ப்யார் தோடா மேஜி க்கில் முகர்ஜி நடித்தார், 27 ஜூன் 2008 இல் வெளிவந்தது, க்ரிடிக்ஸிடமிருந்து நல்ல விமர்சனத்தைப் பெற்றது; இருப்பினும், பாக்ஸ் ஆஃபீஸில் படம் நன்றாக ஓடவில்லை. அவரின் சமீபத்திய படமான, தில் போலே ஹடிப்பா டோரோன்டோ சர்வதேச பட நிகழ்ச்சியில் இடம்பெற்றது, யஷ் ராஜ் ஃப்லிம்ஸின் பேனரில் 18 செப்டம்பர் 2009 உருவாக்கப்பட்டது மேலும் பாக்ஸ் ஆஃபீஸில் ஓரளவு ஓடியது. என்ன வந்தாலும், முதல் தரத்தில் கிரிக்கெட் விளையாடவேண்டும் என்ற கனவைக் கொண்ட பஞ்சாபி கிராமத்து பெண்ணாக வந்தார். மக்களிடையே இவர் நடிப்பு பொதுவாக நல்லவறேப்பைப் பெற்றது.[29] படத்தில் ஷாகித் கபூர் மற்றும் அனுபம் கேர் நடித்திருந்தன.

சொந்த வாழ்க்கை
பல வருடங்களுக்கு முன்னால் ராணி அவரின் குடும்பப் பெயரை முகர்ஜீயிலிருந்து முகர்ஜியாக ஒலிமாற்றம் செய்தார். அந்நேரத்தில், இவர் நியூமராலஜிப்படியே பெயரை மாற்றிவைத்ததாக கூறப்பட்டது. 2006 இல், நியூமராலஜி ஒரு காரணமில்லை என்று அறிக்கைவிட்டார்; அவர் பாய்போர்ட்டில் பெயர் முகர்ஜி என எழுதப்பட்டதாகவும், மேலும் எல்லா இடத்திலும் ஒரே மாதிரி இருக்கவேண்டும் எனக் கூறினார்.

மும்பையில் முகர்ஜிக்கு மூன்று வீடுகள் இருந்தன, குழந்தப்பருவ வீடு உட்பட. அவருக்காகவும் அவர் பெற்றோருக்காகவும் ஜுகுவில் 2005 மத்தியில் பங்களா வாங்கினார். ட்விங்கில் கன்னா மற்றும் சுசன்னே ரோஷனால் வீட்டின் உட்புற வடிவமைப்பு இரண்டு வருடங்கள் தொடர்ந்தது.[30]

சர்ச்சைகள்
2005 ஜூனில், முகர்ஜி பிரித்தானிய செய்தித்தாள் தேசி எக்ஸ்ப்ரெஸ் உடனான பேட்டியால் பரவலாக பேசப்பட்டார். முகர்ஜி அவரது முன்மாதிரியை பெயரிடச்சொன்னார்கள் அவர் அதற்கு, "அடோல்ஃப் ஹிட்லர்" என பதிலளித்தார்.[31] ஒரு வருடத்திற்குப் பிறகு டைம்ஸ் நௌவ் பேட்டியில், ஹிட்லர் பெயரை சொன்னதை மறுத்தார்.[31]

2006 நவம்பரில், முகர்ஜி லாகா சுனாரி மே டாக் படத்திற்காக வாரனாசியில் நடித்த போது அவித் ரசிகர்கள் செட்டில் நுழைந்தார்கள். பாதுகாவலர்கள் கூட்டத்தை விரட்டினர்.[32] மீடியாவில் முகர்ஜி பாதுகாவலர்களைத் தடுத்திருக்க வேண்டும் என்று கூறினர். முகர்ஜி பின் அதற்காக மன்னிப்புக் கேட்டார்.[32]

இதர பணி(கள்)
2004 மார்ச்சில், முகர்ஜி ராஜஸ்தான் மணல் குவியலில் ஜாவான்களின் மதிப்பை அதிகரிக்கச் சென்றார். இது ஒரு பொழுதுபோக்கு மற்றும் தொலைதூர இடங்களை ஊக்குவிக்க NDTV உடனிணைந்த இந்திய நட்சத்திரங்களின் வருகை நிகழ்ச்சி.[33]

2005 பிப்ரவரியில், பிற பாலிவுட் நடிகர்களுடன் டீசுனாமியில் பாதிக்கப்பட்ட மக்களுக்காக நிதி திரட்டுவற்காக HELP! Telethon Concert இல் பங்கேற்றார்.[34]

அவர் முற்றிலும் டெம்ப்டேஷன்ஸ் 2005 நியூடெல்கி நிகழ்ச்சியில் பங்கேற்றார். முன்னனி முடியாதவர்களுக்கான உரிமைக் குழுவான, நேஷனல் சென்டர் ஃபார் ப்ரொமோஷனல் ஆஃப் எம்ப்ளாய்மென்ட் ஃபார் ட்ஸ்ஸேபில்டு ப்யூப்பில் க்காக நிதித்திரட்ட நடிகை உதவினார் (NCPEDP).[35]

முகர்ஜி அவரின் பரிசுத் தொகையை, அதாவது ப்ரீத்தி ஜிந்தாவுடன் கோன் பனேகா க்ரோர்பதி யில் பெனெகா க்ரோர் பதி 2007 இல் அவரின் பகுதியான 50 லட்சத்தை ஹோலி ஃபேமிலி ஹாஸ்பிட்டலுக்கு வழங்கினார். அவர் இந்த நிலையம் இருதய நோய் உடைய குழந்தைகளுக்கானது என்று கூறினார்.[36]

முகர்ஜி ஒரு மேடை நடிகர் மேலும் அவர் இரண்டு உலகப் பயணத்தில் கலந்துகொண்டார். அமிர் கான், ஐஸ்வர்யா ராய், அக்ஷய் கன்னா மற்றும் டுவிங்கில் கன்னாவுடன் 1999 இல் அவர் முதல் உலகப்பயணம் மேற்கொண்டார். இது மேக்னிஃபீஷியன்ட் ஃபைவ் என அழைக்கப்பட்டது.[37]

ஐந்து வருடங்கள் கழித்து, டெம்ப்டேஷன்ஸ் 2004 வந்தது. அந்த நேரத்தில் பாலிவுட்டில் இதுவே வெற்றியாக இருந்தது. ராணி முகர்ஜி ஷாருக்கான், சாயிஃப் அலி கான், ப்ரீத்தி ஜிந்தா, அர்ஜூன் ராம்பால் மற்றும் பிரியங்கா சோப்ராவுடன் இணைந்து உலகம் முழுவதும் பத்தொன்பது மேடை நிகழ்ச்சியில் பங்கேற்றார்.[38]



கடந்த பல ஆண்டுகளாக, ராணி முகர்ஜி ஆண்டுக்கு ஒன்றிரண்டு படங்களில் மட்டுமே நடித்துவருகிறார். விரைவில் வெளிவரவிருக்கும் அவரது ‘ஹிச்க்கி’ (Hichki) திரைப்படத்தை சித்தார்த் பி. மல்ஹோத்ரா இயக்கியிருக்கிறார். ராணி முகர்ஜியின் நடிப்பில் ‘மர்தானி’ வெளியாகி நான்கு ஆண்டுகள் இடைவெளிக்குப் பிறகு இந்தப் படம் வெளியாகிறது. இந்த இடைக்காலம் அவரது திருமணம், குழந்தைபேறுக்கானதாக அமைந்திருக்கிறது.

இந்த அம்சம் எப்படி அவர் தனது பணியை அணுகுவதைப் பாதித்திருக்கிறது? நேர மேலாண்மையுடன் பணியையும் வீட்டையும் சம நிலையில் நிர்வகிக்க முடிவதாக வாழ்க்கை இப்போது மாறியிருக்கிறது என்று சொல்லும் அவர், “என்னால் ஒரு நொடியைக்கூட விட்டுக்கொடுக்க முடியவில்லை. நான் படப்பிடிப்புத் தளத்துக்கு வருவதற்கு முன்னரே எல்லா ஏற்பாடுகளையும் கவனிக்க இயக்குநர்களிடம் சொல்கிறேன். நான் வந்ததும் உடனடியாகப் படப்பிடிப்பில் கலந்துகொள்கிறேன்.

படப்பிடிப்புத் தளத்தில் சாப்பிடுவதற்குக்கூட நேரம் எடுத்துக்கொள்வதில்லை. பணியை முடித்ததும் என் குழந்தையிடம் சென்றுவிடுவேன். ஆனால், அதற்காக ஏனோதானோவென்று நடித்துக்கொடுப்பதில்லை. எப்போதும் என் சிறந்த நடிப்பைக் கொடுக்கவே விரும்புகிறேன்” என்கிறார். அதனால், ‘ஹிச்க்கி’ திரைப்படத்துக்காக இன்னும் கூடுதலாகப் பணியில் கவனம்செலுத்துகிறார் அவர்.

மீண்டும் திரைப்படங்கள்

‘ஹிச்க்கி’ திரைப்படத்தில் மீண்டும் தன்னை நடிக்கத் தூண்டியது தன் கணவர்தான் என்று சொல்லும் ராணி, “என் மகளுடன் நான் ஒன்றிப்போயிருப்பதை அவர் சுட்டிக்காட்டினார். என்னை ஒரு தனிமனுஷியாக, நடிகையாக அவர் மதிக்கிறார். அதுதான் என் இலக்குகளைப் புரிந்துகொள்ள உதவியது. முன்பு இதுபோன்ற தூண்டுதல்களை என் அம்மாதான் செய்துகொண்டிருந்தார். இப்போது என் கணவர் அதைச் செய்கிறார்” என்று சிரிக்கிறார்.

சமீபத்தில் அவர் பெரிய படங்கள் எதிலும் நடிக்கவில்லை. அவர் நடிக்கும் படங்களில் ராணியே பிரதானமாக இருக்கிறார். பெரிய நட்சத்திரங்கள் யாருடனும் அவர் இணைந்து நடிக்கவில்லை. அவர் தன் மகளுக்காக, ஒரு நேரத்தில் ஒரு படத்தில் நடிப்பதற்கே முன்னுரிமை கொடுக்கிறார். அவர் ‘யஷ்ராஜ் ஃபிலிம்ஸ்’ படத்தில் நடிப்பதில் எந்த ஆச்சரியமுமில்லை. ஏனென்றால், அவருக்கு வசதியான நேரத்தில் அங்கே பணியாற்ற முடிகிறது.

“இந்த மாதிரியான நேரச் சுதந்திரம் எனக்கு வேறு தயாரிப்பு நிறுவனத்தில் கிடைத்தால் நான் மகிழ்ச்சியாகப் படங்களில் நடிப்பேன். ஆனால், நான் எப்போதும் தனித்துவமான நபராகத்தான் இருந்துவருகிறேன். என் சாதனைகள் எனக்குச் சொந்தம். என் கணவரின் சாதனைகள் அவருக்குச் சொந்தம். அவரது தயாரிப்பு நிறுவனத்தின் வளர்ச்சிக்கு அவர்தான் காரணம். அவரது படங்களில் நான் ஒரு பகுதியாக இருந்திருக்கிறேன். ஆனால், அந்நிறுவனத்தின் வளர்ச்சிக்கு அவருடைய தந்தையும் அவரும்தான் காரணம்” என்று விளக்குகிறார் அவர்.

ராணி, பதினாறு வயதிலிருந்து திரைப்படங்களில் நடித்துவருகிறார். தன் தந்தையின் உடல்நிலை பாதிக்கப்பட்ட பிறகு, குடும்பத்துக்கு உதவுவதற்காக அவர் 90-களின் பாதியில் நடிக்கவந்துவிட்டார். “இளம்வயதிலேயே பணிவாழ்க்கையைச் செதுக்க தொடங்குவதில் எந்தத் தவறுமில்லை. நம் வாழ்க்கையைத் தீர்மானிக்கும் விஷயமாக வயது எப்போதும் இருக்க முடியாது. 80 வயதாகும்போதுகூட நீங்கள் பணியாற்றலாம்” என்கிறார் அவர்.

இயல்பான நடிப்பே சிறந்தது

‘ஹிச்க்கி’ திரைப்படம் ‘தூரே நோய்க்குறியீடு’ (Tourette Syndrome) என்ற நோய் பற்றிப் பேசுகிறது. ஒரு தாயாக மாறிய பிறகு, இதுபோன்ற பிரச்சினைகளைக் கூடுதல் அக்கறையுடன் அணுக முடிவதாக அவர் தெரிவிக்கிறார். ஹாலிவுட்டில் 2008-ம் ஆண்டு வெளியான ‘ஃப்ரன்ட் ஆஃப் தி கிளாஸ்’ (Front of the Class) திரைப்படத்தைத் தழுவி ‘ஹிச்க்கி’ திரைப்படம் எடுக்கப்பட்டிருக்கிறது. இந்தத் திரைப்படம், பிராட் கோஹனின் ‘Front of the Class: How Tourette Syndrome Made Me the Teacher I Never Had’ என்ற புத்தகத்தைத் தழுவி எடுக்கப்பட்டது.

இந்தத் திரைப்படத்தில் அவர் நடித்திருக்கும் ‘நைனா’ கதாபாத்திரம் பிராட் கோஹனை அடிப்படையாக வைத்து கட்டமைக்கப்பட்டிருக்கிறது. அதனால், தொடர்ந்து கோஹனிடம் பேசிவந்திருக்கிறார் ராணி. “நான் கோஹனுடன் ஸ்கைப்பில் உரையாடினேன். அவர் குழந்தையாக, வளரும்போது இருந்த மனநிலையைப் புரிந்துகொள்ள இது உதவியது. அவர் ஆசிரியராக விரும்பியபோது, பலமுறை நிராகரிக்கப்பட்டிருக்கிறார்.


இப்போது ராணி முகர்ஜி   -  PTI

ஆனால், இப்போது அவர் பள்ளி முதல்வராக இருக்கிறார். அவர் எப்படி இந்தப் பாகுபாடுகளை எதிர்கொண்டார்? எப்படித் தன் இலக்குகளை அடைந்தார்? போன்ற அம்சங்களை அவரிடம் பேசிய பிறகு புரிந்துகொண்டேன்” என்று சொல்கிறார் அவர்.

இயல்பான நடிப்புதான் ராணியின் வலுவான அம்சமாக எப்போதும் இருந்திருக்கிறது. அவர் பிராட் கோஹனின் வாழ்க்கையையும் பிரச்சினைகளையும் தன்னுடையதாக உணர ஆரம்பித்திருக்கிறார். “அவரின் உணர்வுகளை எனக்குள் உள்வாங்கி, அதைப் படத்தில் இயல்பாக வெளிப்படுத்த முயன்றிருக்கிறேன். ‘தூரே நோய்க்குறியீடு’ பற்றிய பெரிய விழிப்புணர்வை ‘ஹிச்க்கி’ திரைப்படம் ஏற்படுத்தும். இந்த நோயால் பாதிக்கப்பட்டிருப்பவர்கள் எதிர்கொள்ளும் பலவிதமான பாகுபாடுகளை இந்தப் படம் பேசியிருக்கிறது” என்கிறார் அவர்.

நம்பர் 1

பதின்மூன்று ஆண்டுகளுக்கு முன், ராணி முகர்ஜி, தனக்குத் திருமணமாகும் வரை நம்பர் 1 இடத்தைத் தக்க வைப்பேன் என்று சொல்லியிருந்தார். ஆனால், இப்போது வெற்றியைப் பற்றிய அவரது அணுகுமுறை எளிதானதாக மாறியிருக்கிறது. “என்னுடைய ஆட்டத்தில் நான் நம்பர் 1 ஆக இருக்கிறேன். அப்படி நான் நம்புவதுதான் நல்லது. இல்லையென்றால், என் பணிவாழ்க்கை தேக்கமடையத் தொடங்கிவிடும்.


தற்போது என்னுடன் போட்டிபோடவே நான் விரும்புகிறேன். தொடர்ந்து கற்றுக்கொள்கிறேன்; புதுமையான வழிகளை அறிந்துகொள்கிறேன். என் வாழ்க்கையிலிருந்து புதுமை நீங்கிவிட்டால், என் ரசிகர்களையும் நான் இழந்துவிடுவேன். ஒரு நடிகர் எல்லாவற்றையும் சாதித்து விட்டேன் என்று நினைத்தால், அந்த நடிகரின் நடிப்பு முடிவுக்கு வந்துவிட்டதாகத்தான் அர்த்தம்” என்று சொல்கிறார் ராணி.


Monday, 17 October 2016

SMITHA PATIL A LEGEND, SELECTED BY FORBES AS TOP INDIAN 25 ACTRESS BORN 1955 OCTOBER 17


SMITHA PATIL A LEGEND, SELECTED BY FORBES 
AS TOP  INDIAN 25 ACTRESS BORN 1955 OCTOBER 17






Smita Patil (17 October 1955[1] – 13 December 1986[3][4]) was an Indian actress of film, television and theatre. Regarded among the finest stage and film actresses of her times,[5] Patil appeared in over 80[2] Hindi and Marathi films in a career that spanned just over a decade.[6] 

During her career, she received two National Film Awards and a Filmfare Award. She was the recipient of the Padma Shri, India's fourth-highest civilian honour in 1985.

Patil graduated from the Film and Television Institute of India in Pune and made her film debut with Shyam Benegal's[7] Charandas Chor[8] (1975). She became one of the leading actresses of parallel cinema, a New Wave movement in India cinema, though she also appeared in several mainstream movies throughout her career.[

9] Her performances were often acclaimed, and her most notable roles include Manthan[1][8] (1977), Bhumika[1] (1977),[8] Aakrosh (1980), Chakra (1981), Chidambaram (1985) and Mirch Masala[10] (1985).[1][9]

Apart from acting, Patil was an active feminist and a member of the Women's Centre in Mumbai. She was deeply committed to the advancement of women's issues, and gave her endorsement to films which sought to explore the role of women in traditional Indian society, their sexuality, and the changes facing the middle-class woman in an urban milieu.[11]


Patil was married to actor Raj Babbar. She died on 13 December 1986 at the age of 31 due to childbirth complications. Over ten of her films were released after her death. Her son Prateik Babbar is a film actor who made his debut in 2008

Early life[edit]

Smita Patil was born in Pune[12] into a Kunbi Maratha family to a Maharashtrian politician, Shivajirao Girdhar Patil and social worker mother Vidyatai Patil, from Shirpur town (Village-Bhatpure) of Khandesh province of Maharashtra State. She studied at Renuka Swaroop Memorial high school in Pune.

Her first tryst with the camera was in the 1970s as a television newscaster on Mumbai Doordarshan, the Indian government run broadcaster.[13]

Career[edit]

Smita Patil belongs to a generation of actresses, including Shabana Azmi and, like her, who are strongly associated with the radically political cinema of the 1970s. Her work includes films with parallel cinema directors like Shyam Benegal,[8] Govind Nihalani, Satyajit Ray (Sadgati, 1981),[4]

 G. Aravindan (Chidambaram, 1985) and Mrinal Sen as well as forays into the more commercial Hindi film industry cinema of Mumbai. Patil was working as a TV news reader and was also an accomplished photographer when Shyam Benegal discovered her.[14]

She was an alumna of the Film and Television Institute of India, Pune. In 1977, she won the National Award for 'Best Actress' for her performance in the Hindi film Bhumika.[10]


 In her films, Patil's character often represents an intelligent femininity that stands in relief against the conventional background of male-dominated cinema (films like Bhumika, Umbartha, and Bazaar). Smita Patil was a women's rights activist and became famous for her roles in films that portrayed women as capable and empowered.

"I remained committed to small cinema for about five years ... I refused all commercial offers. Around 1977-78, the small cinema movement started picking up and they needed names. I was unceremoniously dropped from a couple of projects. This was a very subtle thing but it affected me a lot.

 I told myself that here I am and I have not bothered to make money. I have turned down big, commercial offers because of my commitment to small cinema and what have I got in return? If they want names I'll make a name for myself. So I started and took whatever came my way."

In time she was accepted by commercial filmmakers and from Raj Khosla and Ramesh Sippy to B.R. Chopra, they all agreed that she was "excellent." Her fans, too, grew with her new-found stardom. Patil's glamorous roles in her more commercial films — such as Shakti and Namak Halaal — 

revealed the permeable boundaries between "serious" cinema and "Hindi cinema" masala in the Hindi film industry. In 1984, she served as a jury member of the Montreal World Film Festival.[15]

Her association with artistic cinema remained strong, however. Her arguably greatest (and unfortunately final) role came when Smita re-teamed with Ketan Mehta to play the feisty and fiery Sonbai in Mirch Masala (1987). Smita won raves for playing a spirited spice-factory worker who stands up against a lecherous petty official.

 On the centenary of Indian cinema in April 2013, Forbes included her performance in the film on its list, "25 Greatest Acting Performances of Indian Cinema".[16]

During the making of Chakra, Smita Patil used to visit the slums in Bombay. It culminated in another National Award.

Personal life[edit]

When she became romantically involved with actor Raj Babbar,[17] Patil drew severe criticism from her fans and the media, clouding her personal life and throwing her into the eye of a media storm. Raj Babbar left his wife Nadira Babbar to marry Patil.[18]



Death and legacy[edit]

Smita died from childbirth complications on 13 December 1986,[4] age 31, barely two weeks after having given birth to her son, Prateik Babbar.[19]

Nearly two decades later, one of India's greatest film directors, Mrinal Sen alleged that Smita Patil had died due to gross medical negligence.[20]

In 2011, Rediff.com listed her as the second-greatest actress of all time, behind Nargis.[21] According to Suresh Kohli from Deccan Herald, "Smita Patil was, perhaps, the most accomplished actress of Hindi cinema. Her oeuvre is outstanding, investing almost every portrayal with a powerhouse realistic performance."[22]

In 2012, the Smita Patil Documentary and Short Film Festival was initiated in her honor.[23]

In 2016, Katrina Kaif was awarded the Smita Patil Memorial Award for her contribution to Hindi cinema. [2]




இந்தி நடிகை ஸ்மிதா பாட்டீல் (Smitha Patil) பிறந்த தினம் இன்று அக்டோபர் 17 ,1955
கலைப்படங்கள் உட்பட அனைத்துவிதமான திரைப்படங்களிலும் சிறப்பான நடிப்புத் திறமையை வெளிப்படுத்தி, ரசிகர்கள் மனதில் நீங்கா இடம்பிடித்த இந்தி நடிகை ஸ்மிதா பாட்டீல் (Smitha Patil) பிறந்த தினம் இன்று (அக்டோபர் 17). அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து:

l மகாராஷ்டிர மாநிலம் புனேயில் (1955) அரசியல் குடும்பத்தில் பிறந்தவர். தந்தை சிவாஜிராவ் பாட்டீல். தாய் சமூக சேவகி. புனே ரேணுகா ஸ்வரூப் மெமோரியல் பள்ளியில் பயின்றார். தூர்தர்ஷனில் செய்தி வாசித்தபோது, கேமராவுடனான பந்தம் தொடங்கியது.
l நடிப்பில் ஆர்வம் கொண்டவர், புனேயில் உள்ள இந்தியத் திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி பயிற்சி நிறுவனத்தில் பட்டம் பெற்றார். தொலைக்காட்சித் தொடர்கள், மேடை நாடகங்களிலும் நடித்து வந்தார்.
l ஷ்யாம் பெனகலின் ‘சரண்தாஸ் சோர்’ என்ற கலைப்படத்தில் (1975) முதன்முதலாக நடித்தார். தொடர்ந்து, சிறந்த கலைப்பட இயக்குநர்களான கோவிந்த் நிஹலானி, சத்யஜித் ரே, ஜி.அரவிந்தன், மிருணாள் சென் ஆகியோரின் படங்களில் நடித்தார். கலைப்பட உலகின் முன்னணிக் கதாநாயகியாக வலம்வந்தார். கலைப்படங்களில் மட்டுமே நடிப்பது என்பதில் உறுதியாக இருந்தவர், கமர்ஷியல் திரைப்பட வாய்ப்புகளை மறுத்தார்.

l ஒருசில கசப்பான அனுபவங்களுக்குப் பிறகு, கமர்ஷியல் படங்களிலும் நடிக்கத் தொடங்கினார். ராஜ் கோஸ்லா, ரமேஷ் சிப்பி, பி.ஆர்.சோப்ரா ஆகியோரது இயக்கங்களில் நடித்தார். இவர் நடித்த ‘மந்தன்’, ‘பூமிகா’, ‘சக்ரா’, ‘ஆக்ரோஷ்’ திரைப்படங்கள், ரசிகர்கள் மனதில் நீங்காத இடம்பிடித்த காவியங்கள்.
l எப்படிப்பட்ட வேடத்திலும் தன்னால் ஜொலிக்க முடியும் என்பதை ‘ஷக்தி’, ‘நமக் ஹலால்’ ஆகிய திரைப்படங்களில் நிரூபித்தார். இவரது அற்புத நடிப்பாற்றல், நாடு முழுவதும் ரசிகர்களைப் பெற்றுத் தந்தது. இவரது அபார நடிப்பால் கமர்ஷியல் படங்களும் கலைப்பட அந்தஸ்து பெற்றன. வியாபார ரீதியிலும் வெற்றிபெற்றன.
l நடிகர் ராஜ் பாபரை மணந்தார். சிறந்த நடிகைக்கான தேசிய திரைப்பட விருதுகள், ஃபிலிம்ஃபேர் விருதுகள் உள்ளிட்ட பல விருதுகளை வென்றுள்ளார். பத்ம விருது 1985-ல் வழங்கப்பட்டது. இவர் சிறந்த புகைப்பட நிபுணரும்கூட.

l இவர் ஒரு பெண்ணியவாதி. பெண்களின் அடிப்படை உரிமைகளுக் காகப் போராடியவர். சமூக அக்கறையுடன் பல பிரச்சினைகளுக்காக குரல் கொடுத்தார். பெண்களின் பிரச்சினைகளை மையமாகக் கொண்டு தயாரிக்கப்படும் படங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்தார்.
l ‘சக்ரா’ என்ற படத்தில் நடிப்பதற்காக மும்பையின் குடிசைப் பகுதிகளுக்குச் சென்று அங்குள்ள மக்களின் வாழ்வை நேரடியாகப் பார்த்து தெரிந்துகொண்டு, திரையில் அந்தக் கதாபாத்திரமாகவே வாழ்ந்து காட்டி பாராட்டு பெற்றார். இத்திரைப்படம் அவருக்கு 2-வது தேசிய விருதைப் பெற்றுத் தந்தது.
l இந்தி, மராத்தியில் 80-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். இந்திய சினிமாவின் தலைசிறந்த நடிகை என்று போற்றப்பட்ட ஸ்மிதா பாட்டீல் பிரசவத்தில் ஏற்பட்ட சிக்கல் காரணமாக 31 வயதில் (1986) மறைந்தார்.

l மறைவுக்குப் பிறகு, இவரது 10-க்கும் மேற்பட்ட திரைப்படங்கள் வெளிவந்து வெற்றிபெற்றன. ஒரு நடிகையாக குறுகிய காலமே வலம்வந்த ஸ்மிதா பாட்டீலின் பெயர், இந்திய சினிமா வரலாற்றிலும், ரசிகர்களின் மனதிலும் ஆழமாக பதிந்துவிட்டது.











யார் மாமா இது, ஸ்மிதா பாட்டீல் மாரியே?’
சிறு கதை / உண்மை கதை
-வேணுவனம்
----------------------------------------------------------------------------------

கே.ஏ.அப்பாஸ்தான் அதுக்குக் காரணம். இன்னைக்கும் ராஜ்கபூர் படங்கள்லயே ‘மேரா நாம் ஜோக்கர’ அதானெ நம்மால மறக்க முடியல. அப்பாஸ லேசுப்பட்டவன்னு நெனச்சுராதெ. ‘ஆவாரா’வும் அவன் கததான்’. சஞ்சீவி மாமா இப்படித்தான் திடீரென பாதியிலிருந்து பேசத் துவங்குவார். அதற்கு முந்தைய நாளோ, முந்தைய சந்திப்பிலோ எங்களது உரையாடலின் தொடர்ச்சியாக, விட்ட இடத்திலிருந்து தொடங்கிப் பேசிக் கொண்டேபோவார். அவர் பேசப் பேசத்தான் எனக்கு முதல்நாள் என்ன பேசினோம் என்பது மெல்ல நினைவுக்கு வரும். சஞ்சீவி மாமா பேசுவது போலவே அவரைப் பற்றிய தகவலொன்றும் இப்படி திடீரென்று வந்தது.
ஒருவாரமாக திருநெல்வேலியிலேயே இருந்தவன், சஞ்சீவி மாமாவைப் போய்ப் பார்த்திருக்கலாம்தான். இன்னும் நான்கு நாட்கள்தான் இருக்கப் போகிறோமே, சென்னைக்குக் கிளம்புமுன் போய்ப் பார்த்துக் கொள்ளலாம் என்று அசட்டையாக இருந்தது, எவ்வளவு பெரிய மடத்தனம் என்பதை தொலைபேசியில் வந்த தகவல் உணர்த்திவிட்டது. இத்தனைக்கும் டவுணிலிருந்து ஒரு அழுத்து அழுத்தினால் பதினைந்து நிமிடங்களில் பாளையங்கோட்டை கோபால்சாமி கோயில் பக்கம் போய் விடலாம். அதற்குப் பக்கத்தில்தான் சஞ்சீவி மாமாவின் வீடு. பாளையங்கோட்டை சதக்கத்துல்லா கல்லூரியிலிருந்து பஸ்ஸில் திரும்பிக் கொண்டிருக்கும் போது, சமாதானபுரம் பஸ்ஸ்டாப் பக்கத்தில் ‘காதி வஸ்திராலயத்தில்’ சஞ்சீவி மாமாவின் தலை தெரிந்தால் உடனே இறங்கி விடுவேன். அருகில் போய் ‘மாமா’ என்றழைத்தாலும் உடனே ஏதும் பேசிவிட மாட்டார். ஒரு சின்ன சிரிப்பைக் கூட எதிர்பார்க்க முடியாது. சில நிமிடங்கள் கழித்து, அவராகப் பேசத் தொடங்குவார். முரட்டு கதரில் முழுக்கைச் சட்டையும், கதர் பேண்டுமே சஞ்சீவி மாமாவின் உடை. நடுமுதுகு வரைக்கும் புரளும் நீண்ட தலைமுடி. பின்னால் இருந்து பார்க்கிறவர்கள், திருநவேலி ஊருக்குள் பேண்ட் சட்டையில் ஒரு பெண் போகிறாள் என்று சந்தேகித்து முன்னால் வந்து பார்த்து, சஞ்சீவி மாமாவின் தொங்கு மீசையைப் பார்த்து முகம் கோணி, நாணி பின்வாங்குவதை பலமுறை பார்த்து சிரித்திருக்கிறேன்.


 மாமாவுடன் அவரது ராஜ்தூத் பைக்கின் பின்னால் உட்கார்ந்து ஒருமுறை கிருஷ்ணாபுரம் சென்று கொண்டிருக்கும் போது, மற்றொரு பைக்கில் ஒரு இளைஞன் எங்களை ரொம்ப நேரமாகப் பின் தொடர்ந்து கொண்டேயிருந்தான். கூந்தல் பறக்க மாமா பைக் ஓட்டுவதைப் பின்னால் இருந்து பார்த்தவன், ஒரு முடிவோடு எங்களை முந்தாமல் வந்து கொண்டிருந்தான். இதை புரிந்து கொண்ட மாமா, வேண்டுமென்றே வேகத்தைக் குறைத்தார். ஆனாலும் அவன் அசரவில்லை. கிருஷ்ணாபுரம் வந்தவுடன் மாமா, ஓரமாக பைக்கை நிறுத்தியபிறகு, வேறு வழியில்லாமல் கடந்து சென்றபடி திரும்பிப் பார்த்தவன், தன்னை மறந்து ‘ச்சை’ என்றபடி ஆக்ஸிலேட்டரை முறுக்கி பறந்தான்.
அன்றைக்கு முழுவதும் கிருஷ்ணாபுரம் சிற்பங்களை சஞ்சீவி மாமா புகைப்படங்களாக எடுத்துத் தள்ளிக் கொண்டிருந்தார். கிருஷ்ணாபுரம் சிற்பங்கள் உலகப் புகழ்பெற்றவைதான். ஆனால் அவற்றை சஞ்சீவி மாமாவின் புகைப்படங்களில் அவரது கேமரா கோணங்களில் பார்க்கும் போது, அச்சிற்பங்கள் அனைத்தும் ஓர் இனம்புரியாத அழகும், உயிர்ப்பும் அடைந்து விடும். சிற்பங்கள் மட்டுமில்லை. மனிதர்களும்தான். மாமாவின் புகைப்படங்களில் சாலையோரத்தில் நுங்கு விற்பவர்கள், ரைஸ்மில்லிலிருந்து மரப்பொடி சுமந்து திரும்புபவர்கள், திருச்செந்தூர் கோயிலில் மொட்டை போட்டுவிட்டு சந்தனத் தலையோடு பேரூந்தின் ஜன்னலோரம் தூங்குபவர்கள், சின்ன டிரான்ஸிஸ்டரில் பாட்டு கேட்டபடியே மார்க்கெட் பூக்கடையில் பூ சுற்றிக் கொண்டிருக்கும் பெண்கள், வேண்டா வெறுப்பாக புத்தப்பை சுமந்து வாடிய முகத்துடன் தளர்ந்து பள்ளிக்குச் செல்லும் குழந்தைகள், மாலையில் பள்ளி முடிந்து குதூகலத்துடன் துள்ளலாக நடந்து வரும் அதே குழந்தைகள் என சஞ்சீவி மாமாவின் கேமராவில் சிக்கிய முகங்கள் ஏராளம்.
கேமரா மட்டுமல்ல. கிதார் என்னும் வாத்தியத்தை எனக்கு முறையாக அறிமுகப்படுத்தியவரும் சஞ்சீவி மாமாதான். அதற்கு முன்னால் கிதார் என்றால் எனக்கு ’மூடுபனி’ திரைப்படத்தின் ‘என் இனிய பொன்நிலாவே’ பாடலில் பிரதாப் போத்தன் கையிலும், இன்னும் வேறு சில ஹிந்தி திரைப்படங்களிலும் மட்டுமே பார்த்திருக்கிறேன். கிதாரில் எத்தனை வகைகள் உள்ளன, அவை என்னென்ன போன்றவற்றை சஞ்சீவி மாமாதான் விளக்கினார். மாமாவிடம் நான்கைந்து கிதார்கள் இருந்தன. ’இது அகௌஸ்டிக், இது எலக்ட்ரிக், இப்படி வாசிக்கறது லீட் கிதார், இப்படி வாசிச்சா பாஸ்’. இவை போக சின்ன கிதார் என்று நான் நினைத்துக் கொண்டிருந்த மாண்டலினும் மாமாவிடம் இருந்தது.
‘நம்ம ஊர்ல எல்லா பயலுவளும் பேஸ் கிதார்னு சொல்லுதானுவொ. பாஸ் கிதார்னுதான் சொல்லணும்’.

மாமா திருத்துவார். தேவ் ஆனந்தின் ‘Guide’ படப்பாடலான ‘தேரே மேரே சப்னே’ பாடலையெல்லாம் கிதாரில் வாசிக்க முடியும் என்பது, சஞ்சீவி மாமா வாசிக்கும்போதுதான் தெரிந்தது. நிறைய பழைய ஹிந்தி பாடல்களை கிதாரில் வாசித்து காண்பிப்பார். தமிழ்ப் பாடல்களும் வாசிப்பார்தான். அப்படி மாமா அடிக்கடி தன்னை மறந்து ஒரு பாடலை ரகசியக் குரலில் ‘என் கானம் இன்று அரங்கேறும்’ என்று பாடியவாறே ரசித்து வாசிப்பார். அதற்கு முன்னர் அந்தப் பாடலை நான் கேட்டதே இல்லை. ‘இந்தப் பாட்ட மட்டும் இல்ல மாப்ளெ . . இந்தப் படத்தயும் ஒரு பய பாக்கல. படம் பேரு ‘ஈரவிளிக்காவியங்கள்’. ஒவ்வொரு முறை அந்தப் பாடலை வாசித்து முடிக்கும் போதும் ’ராஸ்கல்’ என்று முணுமுணுக்க மாமா தவறுவதில்லை.
நான்கைந்து வீடுகள் உள்ள ஒரு காம்பவுண்டின் ஒரு மாடியறையில் மாமா தனியாகவே இருந்தார். மாமாவின் மனைவி எதிரே உள்ள பெரிய வீட்டில் தனது சகோதரர்களுடன் வசித்தார். சஞ்சீவி மாமாவுக்கும், அத்தைக்கும் பேச்சு வார்த்தை அறவே இல்லாமல் போனதற்கு அவர்களுக்கு குழந்தைப் பேறு இல்லாமல் போனதுதான் காரணம் என்று ஊருக்குள் பேசிக் கொண்டார்கள். ஒரே ஒருமுறை இது பற்றிப் பேசும் போது மாமா தனக்குத் தானே சொல்வது போல, ‘எல்லா டெஸ்ட்டும் எடுத்து பாத்தாச்சு. கம்ப்ளெயிண்ட் எண்ட்ட இல்லன்னு எல்லா டாக்டரும் சொல்லிட்டாங்க. அதுல ஒங்க அத்தைக்கு தாங்கல’ என்றார். அதற்கு ஏற்றாற் போலத்தான் அத்தையின் நடவடிக்கைகளும் இருந்தன. அத்தையின் தகப்பனார் சேர்த்து வைத்திருந்த சொத்துக்கள் போதுமான அளவுக்கு இருந்ததால், யாரையும் எதிர்பார்க்காமல், வீட்டு வாடகைகள், நிலபுலன்கள் மூலம் வரும் வருமானத்தை வைத்து தன் சகோதரர்களின் குடும்பங்களையும் கவனிக்கும் அளவுக்கு அத்தை செழிப்புடனே வாழ்ந்து வந்தார். மாமாவைப் பற்றிச் சொல்லும் போதெல்லாம் ‘அவன்’ என்று ஒருமையிலேயே சொல்லுவார். மாமாவை விட அத்தை ஒரு வயது மூப்பு என்றும் ஒரு தகவல் உண்டு. ‘என்ன சொல்லுதான் ஒன் மாமன்காரன்?’ ஆனால் என்னிடத்தில் பாசமாக இருப்பார். வாய் நிறைய ’மருமகனே’ என்றழைப்பார். ‘நீ பாட்டுக்கு மச்சுல இருந்து அரவமில்லாம எறங்கி அவன் கூட ஓட்டலுக்கு கீட்டலுக்கு போயிராதெ. சாப்ட்டுட்டு போ’ என்பார். ‘என்னய மட்டும் அத்தைக்கு எப்பிடி மாமா புடிச்சு போச்சு?’ வியப்புடன் மாமாவிடம் ஒருமுறை கேட்டேன். ‘நீ என்னய மாரி இல்லாம சாமி கும்பிடுதெல்லா? அதான்’ . சிரித்தபடி சொன்னார்.

சஞ்சீவி மாமாவுக்கு கடவுள் நம்பிக்கை இல்லை. வைணவ குடும்பத்தில் பிறந்தவரான மாமா, திருநெல்வேலி மாவட்டத்திலுல்ள ‘நவதிருப்பதி’ கோயில்கள் அனைத்துக்கும் என்னை அழைத்துச் சென்றிருக்கிறார். ஆனால் அங்கு வந்தாலும் அவரது கேமராவுக்குத்தான் வேலை. சிற்பங்கள், அக்ரஹாரத்து திண்ணைகள், ஆடுமாடுகள், மண் தெருக்கள், பழைய வீடுகள், டூரிங் தியேட்டர் போஸ்டர்கள் என எல்லாவற்றையும் புகைப்படம் எடுத்துக் கொண்டிருப்பார். தென் திருப்பேரை மகரநெடுங்குழைக்காதர் பெருமாள் கோயிலுக்கு ஒருமுறை மாமாவுடன் சென்றிருந்த போது மாமா கோயிலுக்குள் வரவேயில்லை. ‘நீ போயிட்டு வாடே’ என்று சொல்லிவிட்டு கேமராவுடன் வாசலிலேயே நின்று கொண்டார். இருட்டுக்குள் இருந்த பெருமாளைப் பார்த்து
‘ஓடும் புள்ளேறி சூடும் தன்துழாய்
நீடுநின்றவை ஆடும் அம்மானே
அம்மானாய் பின்னும் எம்மாண்பும் ஆனான்
வெம்மாவாய் கீண்ட செம்மா கண்ணனே’
என்று உருகி வணங்கி விட்டு வெளியே வந்தால், தயிர் விற்கும் ஒரு மூதாட்டியுடன் பேச்சு கொடுத்துக் கொண்டே அவளை புகைப்படங்கள் எடுத்துக் கொண்டிருந்தார், மாமா. ஒருசில தினங்களில் அவற்றை பிரிண்ட் போட்டு காண்பித்தபடி சொன்னார். ‘இந்த அம்மா மொகத்துல இருக்குற சுருக்கங்கள பாத்தியா? ஒவ்வொண்ணும் ஒவ்வொரு கத சொல்லுது, பாரு. அவ ஸ்கின் டோன கவனி’.

வழக்கமாக மாமா தென்படும் ‘காதி வஸ்திராலயம், காளி மார்க் கேண்டீன், வ.உ.சி மைதானம்’ போன்ற எந்த இடத்திலும் மாமாவை சில நாட்கள் பார்க்க முடியாமல் போனது. எங்கெல்லாமோ தேடிப் பார்த்து விட்டு அத்தையிடமும் கேட்காமல் விட்டு விட்டேன். ஒரு இடைவெளிக்குப் பிறகு மாமாவின் வீட்டுக்குச் சென்ற போது, மாமாவின் வீட்டில் ராஜ்தூத் நின்று கொண்டிருந்தது. உடனே மாமாவைப் பார்க்க சென்றால் அத்தை ஏசுவார் என்பதால் சிறிது நேரம் அவருடன் பேசிக் கொண்டிருந்துவிட்டு, மாடியறைக்குச் சென்றேன். குமார் கந்தர்வாவின் ஹிந்துஸ்தானி சங்கீதம் சன்னமாக ஒலித்துக் கொண்டிருந்தது. கமாஸ் போன்ற ஏதோ ஒரு வடநாட்டு ராகம். மாமா ஒரு புகைப்படத்தை எடுத்து என் முன்னால் இருந்த சிறிய மர மேஜையில் போட்டார். மாமாவால் எனக்கு அறிமுகம் செய்யப்பட்ட ஸ்மிதா பாட்டீலை நினைவுபடுத்துகிற ஒரு பெண்ணின் புகைப்படம். வியப்புடன் எடுத்துப் பார்த்தேன். ‘யார் மாமா இது, ஸ்மிதா பாட்டீல் மாரியே?’. இந்தக் கேள்விதான் என்னிடமிருந்து வரும் என்பதை ஏற்கனவே அறிந்திருந்தவராக, ‘அவளேதான்’ என்றார், மாமா. ‘அவளேதான்’ என்று அவர் சொன்னது ஸ்மிதா பாட்டீலை இல்லை. சுமி அக்காவை. சுமி அக்காவை சஞ்சீவி மாமா, ஸ்மிதா பாட்டீலாகவேதான் நினைத்தார்.

அருஞ்சுணை காத்த அய்யனார் கோயிலில் வைத்து சுமி அக்காவை முதன் முறையாக எனக்கு அறிமுகம் செய்து வைக்கும் போதும் ‘இது ஸ்மிதா’ என்றார். பார்த்த மாத்திரத்திலேயே ஆண்பிள்ளைகள் மாதிரி, என் கைகளைப் பற்றிக் குலுக்கியபடி சுமி அக்கா, ‘எப்டி இருக்கெ மக்கா?’ என்றாள். கழுத்தில், காதில் எதுவும் இல்லை. பளிச்சென்ற பவுடர் பூசிய முகம். நெற்றியில் கூர்ந்து கவனித்தால் தென்படுகிற ஒரு துளி சாந்துப் பொட்டு. ’நீங்க சோஃபியா பவுடர் போட்டிருக்கீங்க. கரெக்டா?’ என்றேன். சட்டென்று சிரித்தபடி ’அடப்பாவி’ என்றாள். சுமி அக்காவுக்கு என்னை ரொம்பவே பிடித்து போய்விட்டது. என்னைவிட நான்கு வயது அதிகமான அவளை ‘சுமி அக்கா’ என்று இயல்பாக என்னால் கூப்பிட முடிந்தது.
சுமி அக்காவுக்கு திருச்செந்தூர் பக்கம் என்றார் மாமா. தாய், தந்தை இல்லாத சுமி அக்கா முதுகலை பட்டப்படிப்பு முடித்திருந்தாள். ஆதரவற்றோர் விடுதி ஒன்றிற்கு மாமா சென்றிருந்த போது பழக்கம் ஏற்பட்டிருக்கிறது. சுமி அக்காவின் வருகைக்குப் பிறகு சஞ்சீவி மாமாவைப் போய்ப் பார்ப்பது வெகுவாகக் குறைந்து விட்டது. மாமாவும் ‘என்னடே ஆளையே காணோம்?’ என்று சம்பிரதாயமாகக் கேட்பதோடு சரி. ஒருநாள் மாமா தன் கிதார் ஒன்றின் கம்பிகளை சரி பார்த்துக் கொண்டிருக்க, நான் அவரது புத்தக அலமாரியைக் குடைந்து கொண்டிருந்தேன். அதுவரைக்கும் மாமாவின் மாடியறைக்கு வந்தேயறியாத அத்தை, மூச்சு வாங்க மாடியேறி வந்து, அந்த அறையில் ஃபிரேம் போட்டு மாட்டப்பட்டிருந்த சுமி அக்காவின் கருப்பு வெள்ளை புகைப்படத்தை எடுத்து கீழே போட்டு சுக்குநூறாக உடைத்தார். வேறேதும் பேசாமல் கீழே இறங்கி சென்று விட்டார். சிறிது நேர மௌனத்துக்குப் பிறகு மாமா எழுந்து உடைந்த கண்ணாடித் துண்டுகளை எடுக்க குனிந்தார். ‘நான் எடுக்கென் மாமா’. மாமாவைத் தடுத்து விட்டு, ஒவ்வொரு கண்ணாடித் துண்டாகப் பொறுக்கி எடுத்தேன். ’பூமிகா’ திரைப்படத்தின் ஸ்மிதா பாட்டீலை நினைவுபடுத்தும் விதமாக கழுத்திலும், காதுகளிலும் நகையணிந்து சிரித்தபடி சுமி அக்கா இருக்கும் கிழிந்த, கசங்கிய புகைப்படத்தை மாமாவின் மேஜை டிராயரில் வைத்தேன். மாமா என் முகத்தைப் பார்ப்பதைத் தவிர்க்கும் விதமாக கிடார் கம்பிகளில் மும்முரமாக ஏதோ செய்யும் பாவனையில் இருந்தார். அதற்குப் பிறகு கொஞ்சம், கொஞ்சமாக எனக்கும் சஞ்சீவி மாமாவுக்குமான உறவு குறைந்து போனது. சென்னையிலிருந்து திருநெல்வேலிக்குப் போகும் போதெல்லாம் சஞ்சீவி மாமாவைப் பார்க்க வேண்டும் என்று நினைப்பேன். பிறகு ஏதேதோ காரணங்களால் தொடர்பே இல்லாமல் போய்விட்டது.

பதினைந்து வருடங்களுக்குப் பிறகு மாமாவின் வீட்டு காம்பவுண்ட் சுவரைத் தாண்டி உள்ளே நுழையும் போது ஏதோ ஒரு புதிய இடத்துக்கு வருவது போல தோன்றியது. அத்தை வீட்டு வாசலில் ஷாமியானா போட்டு நான்கைந்து பிளாஸ்டிக் சேர்கள் போடப்பட்டிருந்தன. வீட்டுக்கு உள்ளே அத்தை சோஃபாவில் சாய்ந்திருந்தார். முன்பை விட உடல் கனம் கூடியிருந்தது. உடன் ஏதேதோ புதிய மனிதர்கள். என்னைப் பார்த்ததும் உடனே அடையாளம் பிடிபடாமல், பிறகு சுதாரித்து, சிநேகப் பார்வை பார்த்து ‘வந்துட்டியா? ம்ம்ம், போ. அங்கனயேதான்’ என்று மாடியை காண்பித்தார்.
சுற்றிலும் கிதார்கள்,பழைய ரீடர்ஸ் டைஜஸ்ட், இல்லஸ்ட்ரேட்டட் வீக்லி உட்பட பழைய புத்தகங்களின் வாசனையுடன் கண்ணாடிப் பெட்டிக்குள் சஞ்சீவி மாமா தூங்குவது போல கண்மூடி படுத்திருந்தார். நெற்றியில் சூர்ணம் இடப்பட்டிருந்தது. அருகில் அத்தையின் சகோதரர் அமர்ந்திருந்தார். ‘வெயில் தாள எடுத்துரலான்னு இருக்கொம்’ என்றார். நான் பார்க்காத காலங்களில் மாமாவின் முகத்தில் என்னென்ன மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது என ஆராயும் விதமாக மாமாவின் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தேன்.
‘நீங்கள்லாம் மெட்ராஸ்ல இருக்கணும் மாமா’. பலமுறை சொல்லுவேன்.
‘மெட்ராஸ்ல இருந்து?’ எதிர்க்கேள்வி கேட்பார்.
‘பெரிய ஆளா ஆயிரலாம்லா’. சிறுபிள்ளைத்தனமாகச் சொல்லியிருக்கிறேன்.

‘பெரிய ஆளுன்னா என்னதுடே?’. என்பார்.
அதற்குள் கீழே இருந்து சத்தம் கேட்டது. ‘நவநீதா சீக்கிரம் கீள வா. அந்த முண்ட வந்திருக்கா’.

அத்தையின் இன்னொரு சகோதரரின் குரலது. என்னருகில் இருந்தவர், ‘இந்தா வாரேன்’ என்று பாய்ந்து செல்லவும், நிலைமையை உணர்ந்து அவருக்குப் பின்னால் மாடிப்படிகளில் இறங்கி ஓடினேன். காம்பவுண்டுக்கு வெளியே அழுதபடி சுமி அக்கா நின்று கொண்டிருந்தார். உடன் பத்து வயது மதிக்கத்தக்க ஒரு சிறுவன். சிறு வயது புகைப்படத்தில் சஞ்சீவி மாமா இருப்பது போலவே இருந்தான். அத்தையின் சகோதரர்கள் இருவரும் சுமி அக்காவை, ‘எங்கெட்டி வந்தெ?’ என்று சத்தம் போட்டபடியே நெருங்கினார்கள். அவர்கள் சுமி அக்காவை எதுவும் செய்துவிடக் கூடாதே என்கிற பதைபதைப்பில் நான் அவர்களைத் தாண்டிச் சென்றேன். என்னைப் பார்த்ததும் அடையாளம் கண்டு கொண்ட சுமி அக்கா, ‘மக்கா’ என்று என் கைகளைப் பிடித்து, என் மீது சாய்ந்த படி கதறி அழுதாள். சத்தம் கேட்டு வீட்டுக்குள்ளிருந்து வெளியே வந்து எட்டிப் பார்த்த அத்தை, முறைத்தபடி நிற்கும் தன் சகோதரர்களிடம், ‘எல, இங்கெ வாங்க’ என்று அதட்டி அழைத்தார். சுமி அக்காவுடன் நிற்கும் என்னைப் பார்த்து, ‘மருமகனே, அவள மச்சுக்குக் கூட்டிட்டு போ’ என்றார்.