Showing posts with label PULIMOOTTAI. Show all posts
Showing posts with label PULIMOOTTAI. Show all posts

Saturday, 6 June 2020

PULIMOOTTAI RAMASAMY COMEDY ACTOR


PULIMOOTTAI RAMASAMY COMEDY ACTOR


கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் அவர்களின் குருகுலத்திலிருந்து வரப்பெற்ற நடிகர்களுள் இவரும் ஒருவர். பெரிய உருவம்.  ஆனால் குழந்தைத்தனமான முகம் கொண்டவர். மனம் போல் மாங்கல்யம், நாடோடி மன்னன் [1958], மருத நாட்டு இளவரசி [1950], கடவுளைக் கண்டேன், மோகன சுந்தரம் [1951], சின்னத்துரை [1952], துளிவிஷம் [1954], காவேரி [1955], பெரிய இடத்துப் பெண் [1962], எங்க வீட்டுப் பெண், சக்கரவர்த்தித் திருமகள், கூண்டுக்கிளி போன்ற 50-க்கும் அதிகமான படங்களில் நடித்துள்ள பழம்பெரும் நகைச்சுவை நடிகர்.



நாடோடி மன்னனில் எம்.ஜி.ஆர். ”தூங்காதே தம்பி தூங்காதே நீ சோம்பேறி என்ற பெயர் வாங்காதே என்று பாடுவாரே….” அது சிறைக்காவலராக தூங்கித் தூங்கி விழுந்து நடித்திருக்கும் கொட்டாப்புளி ஜெயராமனைப் பார்த்துத்தான். மோகனசுந்தரம் படத்தில் தலைமைக் காவலராக நடித்திருப்பார். எனினும் இவரது நடிப்பிற்குத் தீனி போடும் கதாபாத்திரமாக இது இல்லை. எங்க வீட்டுப் பெண் படத்தில் கொட்டாப்புளி ஜெயராமன் சிறிய கதாபாத்திரத்தில் வருவார். சக்கரவர்த்தி திருமகள் படத்தில் கலைவாணரின் முட்டாள்  சீடனாக வரும் இவர் கலைவாணர், நான் போடும் ஒரு கோடு ஒன்றை அழிக்காமல் சிறிதாக்க வேண்டும் என்பார். அதற்கென்ன அதை விடப் பெரிய கோடு ஒன்றைப் பக்கத்தில் போட்டால் போதும் என்று கலைவாணரையே அசர வைத்துவிடுவார்.

இன்றைய விரசமான நகைச்சுவையைப் போலல்லாது இயற்கையாக நகைச்சுவையை வழங்கிய நகைச்சுவை நடிகர்களுள் இவரும் ஒருவர்.



இவர் நடித்த மேலும் சில படங்கள்:

டணால் கே.ஏ.தங்கவேலு கதாநாயகனாக நடித்தப் படமான “நான் கண்ட சொர்க்கம்”, ரமபையின் காதல் (அல்லது) யத்பவிஷ்யன் [1940] ,தங்கமலை ரகசியம் [1957] , தேவகன்யா (1943) , மனோன்மணி [1942], மணமகள் [1951], ஜெனோவா [1953], ரத்தக்கண்ணீர் [1956], அமரதீபம் [1956], பொம்மை [1964], நடு இரவில் [1970], இருவர் உள்ளம் [1963], ஆயிரம் ரூபாய் [1964], பராசக்தி [1952], தெனாலி ராமன் [1956], பிரஹ்லாதா [1939], குடும்ப விளக்கு [1956], பந்தபாசம் [1962], சுதர்ஸன் [1951]

”பிரஹ்லாதா” 1939 படத்தில் கொட்டாப்புளி ஜெயராமன்

கலைவாணரின், 'அசோகா பிலிம்சின்' தயாரிப்புகளில் நடிக்கவும், பங்கு பெறவும், பலதுறை கலைஞர்கள் அவருக்கு தேவைப்பட்டனர். அதை அறிந்து, பலர் கோவையில் ஆர்வத்தோடு கூடினர். அப்படி, கலைவாணரின் கலைக்கூடத்தில் இடம் பெற்றோர் தாம், உடுமலை நாராயணகவி, புளிமூட்டை ராமசாமி, ஆழ்வார் குப்புசாமி, காக்கா ராதாகிருஷ்ணன், சி.எஸ்.பாண்டியன் மற்றும் கொட்டாப்புளி ஜெயராமன் ஆகியோர்.
ராமசாமிக்கு, புளிமூட்டை என்ற அடைமொழியை சூட்டியவர் கலைவாணர். அதற்கு முன், அவர் ராமசாமியாகத் தான் இருந்தார். அவரது உருவமும், அதற்கேற்ற கம்பீரமான சாரீரமும், கலைவாணரை கவர்ந்திருந்தன. அத்துடன், அவர் சமையல் செய்வதிலும், நிபுணராக இருந்தார். ராமசாமி பேசும் போது, அவருடைய அங்கங்கள் குழைவதையும், முகத்தில், நெளிவு சுழிவுகள் விழுவதையும் கவனித்த கலைவாணர், நடிகர் குழுவில், அவருக்கு இடம் அளித்தார்; சமையலை விட்டு, அவர் சங்கீதம் பாடப் போனார்!
கலைவாணர் தயாரித்த, அலிபாபாவும் 40 திருடர்களும் என்ற படத்தில் (எம்.ஜி.ஆர்., நடித்த படம் அல்ல) ராமசாமிக்கு, திருடன் வேடம். கதை அமைப்பின் படி, கள்வர் கூட்டத்தில் சிக்கிய கலைவாணர், ராமசாமியை தேடுவார்; இக்காட்சியில் நடிக்கும் போது, ராமசாமியை தேடிய கலைவாணர், அருகில் இருந்தவனிடம், 'எங்கே அந்தப் புளிமூட்டை...' என்று வேடிக்கையாகக் கேட்பார்.
இதைக் கேட்டவுடன், சிரித்தபடியே, கட்டிலுக்கு அடியிலிருந்து, பருத்த மேனியை கஷ்டப்பட்டு, விடுவித்தபடி வெளியே வருவார், ராமசாமி. அப்படத்திலிருந்து தான் அவருக்கு, 'புளிமூட்டை' எனும் பெயர் வந்தது.
அதற்கு பின், புளிமூட்டை ராமசாமிக்கு, நிறைய படங்களில் வாய்ப்பளித்தார் கலைவாணர். 'கிந்தனார்' காலட்சேபத்தில், கலைவாணரோடு சேர்ந்து, பின்பாட்டுப் பாடி வந்தார். கலைவாணரிடம், புளிமூட்டைக்கு, கடைசி வரை குறையாத பக்தி இருந்தது.
புளிமூட்டை என்பதைப் போல, வேறு சில நடிகர்களுக்கும், பொருத்தமான பெயர்களைச் சூட்டியுள்ளார், கலைவாணர். நாடக வாத்தியாரும், பழம் பெரும் நடிகருமான, டி.பி.பொன்னுசாமி பிள்ளைக்கு, 'யதார்த்தம்' பொன்னுசாமி என்று பெயர் சூட்டியவர் கலைவாணர் தான்.
மனோன்மணி படத்தில், மதுரத்திற்கு தந்தையாக நடித்திருந்த பொன்னுசாமி, ஒரு காட்சியில், எருமை மாட்டின் கழுத்தில் கயிற்றைக் கட்டி, தெருவில் இழுத்து வருவார். மாட்டுக்கு பின், பிச்சைக்காரன் வேடத்தில் வந்த கலைவாணர், மெல்ல மாட்டை அவிழ்த்து, தம் கழுத்தை, கயிற்றிலே பிணைத்துக் கொள்வார்.
திரும்பிப் பார்த்த பொன்னுசாமி, வியப்போடு நிற்பார். அப்போது, என்.எஸ்.கிருஷ்ணன்,
மாடாய் இருந்த நானே
மனுஷனாய் மாறிட்டேனே
மாயம் ஒண்ணுமில்லை யதார்த்தம்...
- என்று பாடுவார்.
இப்படத்தில் தான், பொன்னுச்சாமி பிள்ளைக்கு, 'யதார்த்தம்' பொன்னுச்சாமி என்று நாமகரணத்தை சூட்டினார், கலைவாணர். அத்துடன், தன் நாடகக் குழுவுக்கும், 'யதார்த்தம்' என்றே பெயர் வைத்தார்.
கலைவாணரின் நாடகக் குழுவில் இடம் பெற்றிருந்த நடிகர் ஆழ்வார் குப்புசாமிக்கும், 'ஆழ்வார்' என்று பெயரிட்டவர் கலைவாணரே!
ஜுபிடர் பிக்சர்ஸ் தயாரித்த, கண்ணகி என்ற படத்தில், கிருஷ்ண பரமாத்மாவின் பக்தையாக நடித்திருப்பார் மதுரம். அவரின், வெறித்தனமான பக்தியை தணிக்கும் காட்சியில், கிருஷ்ண பரமாத்மா வேடத்தில் வருவார், என்.எஸ்.கிருஷ்ணன். அவரிடம், 'நீங்கள் ஏறி வரும் கருடாழ்வார் எங்கே...' என்று கேட்பார் மதுரம். அதே சமயத்தில், கருடாழ்வார் போல், இறக்கைகளை அசைத்து, பறவை கத்துவது போல், 'கீகீ' என்று கத்தியபடி வருவார், குப்புசாமி. உடனே, கிருஷ்ண வேடதாரியான கலைவாணர், குப்புசாமியைப் பார்த்து, 'ஏ ஆழ்வாரு...' என்று அழைக்க, அன்று முதல், அவர் ஆழ்வாரானார்.
கலைவாணரின் கருணையால், பல படங்களில் நடித்திருந்த ஆழ்வார் குப்புசாமி, கலைவாணரிடம் அதிக உரிமை எடுத்துக் கொள்வார்.
ஒருசமயம், மணமகள் படத்தில், தாம் எதிர்பார்த்த வேடம் தராமல், சிறிய வேடம் தரப்பட்டதற்காக, உரிமையோடு கலைவாணரிடம் கோபித்து, கிளம்பிச் சென்றார், குப்புசாமி. அருகில் இருந்தவர்கள், 'கலைவாணரிடம், ஆழ்வார் இப்படி பேசலாமா...' என்று மனம் வருந்தினர்.
ஆனால், கலைவாணரோ சிரித்து, 'நீங்க ஏன் வேதனை படுறீங்க... நம்ப ஆழ்வார் என்னிடம் கோபித்துக் கொள்ளாமல் வேறு யாரிடம் கோபித்துக் கொள்வான்...' என்றார். கலைவாணரின் பெருந்தன்மை, அவர்களை மெய் சிலிர்க்கச் செய்தது.
வருவாயை எதிர்பார்க்காமல், தம் அபிமான நடிகர்களுக்காக அடிக்கடி நாடகங்களிலும் நடித்து வந்தார் கலைவாணர். 'படப்பிடிப்பு இல்லாத நாட்களில், நாடகத்தின் மூலம் கிடைக்கும் ஊதியம் அவர்களுக்கு உதவியாக இருக்கட்டுமே...' என்ற எண்ணத்தோடு தான், நாடகங்களை நடத்தி வந்தார்.
ஒருசமயம், மேலூரில் என்.எஸ்.கே., நாடக குழுவின் நாடகம் நடைபெறவிருந்தது. கலைவாணரின் நீண்ட நாள் நண்பரான சிங்காரம் பிள்ளை என்பவர் தான், அந்த ஊரில் நாடகம் நடத்த, ஏற்பாடு செய்திருந்தார். நாடகத்தில் நடிக்க கலைவாணர், மதுரம் மற்றும் நாடகக் குழுவைச் சார்ந்த நடிக, நடிகையர் மேலூருக்குச் சென்றிருந்தனர்.
நாடகம் முடிந்து, சென்னைக்கு திரும்புவதற்காக, கலைவாணர், மதுரம் மற்றும் நாடகக் குழுவினர் காரில் ஏற, பரபரப்பு அடைந்தார் மதுரம். காரணம், நாடகம் நடத்தியவர், சென்னையில் முன்பணம் தந்தது போக, மீதி பணத்தை கொடுக்காதது தான்.
'அவரிடம் சென்று பாக்கிப் பணத்தை யார் கேட்பது... அவ்விதம் கேட்பது கலைவாணருக்குப் பிடிக்காதே...' என்று நினைத்த மதுரத்திற்கு, தமக்கும், கலைவாணருக்கும் ஊதியம் கிடைக்கா விட்டாலும் பரவாயில்லை. இதையே நம்பியிருக்கும் மற்ற நடிகர்களுக்கு பணம் கொடுத்தாக வேண்டுமே என்ற தவிப்புடன் இருந்தார், மதுரம்.
ஆனால், அதைப் பற்றி சிறிதும் கவலை இல்லாமல், வெள்ளி வெற்றிலைப் பெட்டி சகிதம், காரில் ஏறி உட்கார்ந்தார், கலைவாணர். அப்போது, இரண்டு ரோஜாப் பூ மாலைகளோடு, காரை நோக்கி ஓடி வந்தார் சிங்காரம்பிள்ளை.
கலைவாணருக்கும், மதுரத்திற்கும் மாலைகளை சூட்டியவர், பணத்தை மதுரத்திடம் நீட்டினார். அதைப் பெற்றுக் கொண்ட மதுரம், நிம்மதிப் பெருமூச்சு விட்டார். அவரிடமிருந்து விடைப்பெற்று, 10கி.மீ., தூரம் கடந்த பின், கையிலிருந்த பணத்தை எண்ணிப் பார்த்தார் மதுரம். 700 ரூபாய்க்கு பதில், 500 ரூபாய் இருந்தது. அதனால், டிரைவரிடம், 'காரை, மேலூருக்கு திருப்பு; 'கான்ட்ராக்ட்' பேசிய தொகையிலிருந்து, 200 ரூபாய் குறைகிறது. அதை, அவரிடம் வசூல் செய்தாக வேண்டும்...' என்றார், மதுரம்.
பயணம் புறப்பட்டு விட்டால், இடையில், காரை நிறுத்துவது கலைவாணருக்கு பிடிக்காது. அதனால், டிரைவர் சிறிது தயங்கி, காரின் வேகத்தை குறைத்தாரே தவிர, நிறுத்தவில்லை.
மீண்டும் மதுரம், 'என்ன, நான் சொல்றது கேட்கலையா... காரை மேலூருக்கு திருப்பு; அவரிடம் பணத்தை வாங்காமல் விடக்கூடாது...' என்றார் கோபமாக!
அதுவரை கண்களை மூடி சிந்தனையில் ஆழ்ந்திருந்த கலைவாணர், மதுரத்தின் குரல் கேட்டு, 'எதுக்கு மேலூருக்கு வண்டிய திருப்பச் சொல்றே...' என்று கேட்டார். கொடுக்க வேண்டிய பணத்தில் இருந்து, சிங்காரம்பிள்ளை, 200 ரூபாய் குறைவாகப் கொடுத்திருப்பதாக சொன்னார், மதுரம்.
உடனே, 'பணத்தை அவர் குறைத்துக் கொடுத்தார் என்பதற்கு என்ன ஆதாரம்... நீ, பணத்தை எண்ணும் போது, சில நோட்டுக்கள் காற்றில் பறந்து போயிருக்கலாமே...' என்றார் கலைவாணர்.
'என்னய்யா நீங்க... இந்த நேரத்தில், 'தமாஷ்' செய்கிறீர்... கையில மூடி வைத்திருக்கும் பணத்த, காற்று எப்படி அடிச்சுட்டுப் போகும்... உங்க சிநேகிதர் பணம் கொண்டு வர தாமதிக்கும் போதே, இப்படி தான் நடக்கும்ன்னு நினைச்சேன்...' என்று முணுமுணுப்போடு சொல்லி, 'காரை மேலூருக்குத் திருப்பச் சொல்லய்யா...' என்றார்.
'இந்தாம்மா, காரைத் திருப்பி பயனில்ல; அந்த மனிதர், கார் கிளம்புகிற நேரத்தில் ஓடி வந்து, அவசரமாக மாலைகளைப் போட்டு, அதே வேகத்தில பணத்தை உன் கையில் திணித்த போதே யூகிக்க வேணாமா... அவரிடம் பணப் பற்றாக்குறைன்னு! விட்டுத் தள்ளு... இப்ப, மேலூருக்கு போனால் மட்டும் அவர், மீதி பணத்தை கொடுத்துடவா போறார்... நம்மைக் கண்டவுடன் கைகளை பிசைந்து, முகத்தை சோகமாக வைத்து, ஏதாவது சொல்லப் போறார்... அதையெல்லாம் பாத்துட்டு திரும்பணும்ன்னு ஆசையா...' என்று, கான்ட்ராக்ட்காரரின் நிலைமையை புரிந்து, மதுரத்திடம் எடுத்துக் கூறியவர், அதுவரை மெதுவாக சென்று கொண்டிருந்த காரை, வேகமாகக் ஓட்டச் சொன்னார்.

Friday, 15 May 2020

PULIMOOTTAI RAMASAMY ,COMEDY ACTOR BORN 1912-MAY 15



PULIMOOTTAI RAMASAMY ,
COMEDY ACTOR BORN 1912-MAY 15


புளிமூட்டை ராமசாமி (மே 15, 1912 - ) எனப் பரவலாக அறியப்பட்ட டி. ஆர். ராமசுவாமி ஐயர் தமிழ் நாடகத், திரைப்பட நகைச்சுவை நடிகராவார்.[1]

இவரது இயற்பெயர் தூத்துக்குடி இராமசுவாமி ஐயர்.[2] என். எஸ். கிருஷ்ணன் குழுவினருடன் பல திரைப்படங்களில் நடித்துள்ளார்.[1] 1941 ஆம் ஆண்டில் வெளிவந்த அலிபாபாவும் நாற்பது திருடர்களும் திரைப்படத்தில் நடிக்கும் போது என். எஸ். கிருஷ்ணன் இவரை "புளிமூட்டை" என்றே அழைத்து வந்தார். இதனால் இவர் "புளிமூட்டை ராமசாமி'" என்றே பிரபலமாக அழைக்கப்பட்டார்.[3]

ராமசாமி முதலில் டி.கே.எஸ். நாடகக்கம்பனியில் சேர்ந்து நடித்துக் கொண்டிருந்தார். கம்பனி கலைக்கப்பட்டதும், தனது சொந்த ஊரான தூத்துக்குடிக்குச் சென்று அங்கேயே திருமணமும் செய்து கோவில் ஒன்றில் பட்டர் வேலையில் சேர்ந்தார். சில மாதங்களில் மனைவி இறந்து விடவே, அவரது தந்தை மகனுக்கு இரண்டாவது திருமணம் செய்துவைத்தார். பின்னர் என். எஸ். கிருஷ்ணனின் நாடகக் கம்பனியில் சேர்ந்தார்.[4]

புளிமூட்டை ராமசாமி அய்யர்
கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் தன்னுடன் நாடகத்தில் நடித்த பல நடிகர், நடிகைகளுக்கும் தொழிலாளர்களுக்கும் தமது சொந்தப்படங்களில் வாய்ப்புக்கொடுத்தார்.   கலைஞர்கள் அனைவருக்கும் இருக்க இடம், சாப்பாடு கொடுத்து அவர்களுக்குத் தேவையான அனைத்து வசதிகளையும் செய்து கொடுத்தார்.  

மாதந்தோறும் அவர்களுக்குச் சம்பளமும் கொடுத்து வந்தார்.  இது தவிர, கலைஞர்களின் பிற பணத் தேவைகளுக்கும் உதவி செய்து வந்தார் கலைவாணர்.  புளிமூட்டை ராமசாமி, ரி.எஸ்.துரைராஜ், எஸ்.என்.லட்சுமி, காக்கா ராதாகிருஷ்ணன் என்று ஒரு நட்சத்திரப் பட்டாளமே இருந்தது.  பாடல்கள் எழுதுவதற்கு உடுமலை நாராயணகவிராயர், கதை விவாதத்திற்கு வில்லிசைவேந்தர் சுப்பு ஆறுமுகம் உட்பட ஒரு பெருங்கூட்டமே இருந்தது கலைவாணரின் கலைக்கூடத்தில். ரி.கே.எஸ். நாடகக்குழுவில் இருந்து வந்தவர் ராமசாமி.  அக்குழு கலைக்கப்பட்டதும் தனது சொந்த ஊர் தூத்துக்குடிக்குச் சென்றுவிட்டார். அங்கே தாயின் வற்புறுத்தலால் திருமணம் செய்துகொண்டு, கோவிலில் பட்டர் வேலையில் சேர்ந்துவிட்டார். சில மாதங்களில் ராமசாமியின் மனைவி இறந்துவிட்டார். இதனால் மனவேதனை அடைந்த ராமசாமி, மீண்டும் நாடக வாழ்க்கைக்கே திரும்பிவிடலாம் என்று இருந்தார்.  இது ராமசாமியின் தந்தைக்குப் பிடிக்கவில்லை. மகன் மீண்டும் நாடக வாழ்க்கைக்குப் போகாத அளவிற்கு, இரண்டாவது திருமணம் செய்துவைத்துவிட்டார். இரண்டாவது மனைவியுடன் ஒரு நாள் தூத்துக்குடியில் ஓடிக்கொண்டிருந்த கலைவாணர் நடித்த படத்திற்குச் சென்றார். படம் முடிந்து வெளியே வந்ததும் ராமசாமியிடம், ‘‘இந்த கிருஷ்ணன்தான் உங்க சினேகிதராச்சே. நீங்க இரண்டு பேரும் ரி.கே.எஸ்.நாடகக்குழுவில்  இருந்தேளே? அவரைப்போய் பார்த்தால் ஏதேனும் விமோசனம் ஏற்படாதா?’’ என்று கேட்டார் மனைவி.
மனைவியின் ஆலோசனையின் படி, கலைவாணரைப் பார்க்கப் புறப்பட்டார் ராமசாமி.  அப்போது கலைவாணர் ‘’நவீன விக்கிரமாதித்தன்’’ படம் தயாரித்துக்கொண்டிருந்தார். ராமசாமி தெருவில் வருவதைக் கவனித்துவிட்ட கலைவாணர், தெருவாசலுக்கே ஓடிப்போய் கட்டிப்பிடித்து நலம் விசாரித்தார்.  ‘‘அசோகா பிலிம் கம்பெனின்னு நீங்க ஒரு கம்பெனியை ஆரம்பிச்சிருக்கேளாமே? அடியேன் இப்போது எந்த ஜோலியும் இல்லாது அவஸ்தைப்பட்டுக் கொண்டிருக்கிறேன். உங்க கம்பெனியில் அடுக்களையில் ஒரு சமையல்காரர் வேலை கொடுத்தாக்கூட போதும்’’ என்று கண் கலங்கியபடி சொன்னார் ராமசாமி. ராமசாமி இப்படி சொன்னதும் கலைவாணருக்குக் கண்கள் கலங்கியது. ‘’என்னாப்பா… நீயும் ஒரு நடிகர், நானும் ஒரு நடிகன்.  அப்படி இருக்கும்போது நீ மட்டும் சமையல் வேலை ஏனப்பா செய்யணும்?  நீயும் என் கம்பெனியிலே நடிகனாகவே இரு’’ என்று கூறினார் கலைவாணர்.  ராமசாமி
சமையலிலும் நிபுணர். இது கலைவாணருக்குத் தெரியும்.  ஆனாலும், அவரை மதித்து நடிக்கும் வாய்ப்பை வழங்கினார். ராமசாமியின் உருவம் பெரியது.  அதற்கு ஏற்றார் போல் குரலும் கம்பீரமாக இருக்கும்.  ராமசாமி பேசும்போது அவரது அங்கங்கள் ஆடும்.  இது கலைவாணருக்குப் பிடிக்கும்.  அதற்காகவே அவருக்கு நல்ல நல்ல கதாபாத்திரங்கள் தருவார். கலைவாணர் தயாரித்த ‘‘அலிபாபாவும் நாற்பது திருடர்களும்’’ திரைப்படத்தில் ராமசாமிக்குத் திருடன் வேடம்.  ஒரு நாள் படப்பிடிப்பில் திருடனுக்குரிய ஒப்பனையோடு ராமசாமி நடித்துக்கொண்டிருந்தார். கதை அமைப்பின்படி திருடர் கூட்டத்தில் சிக்கிய கலைவாணர், ராமசாமியைத் தேடினார். அவரைக் காணவில்லையே என்று அருகில் இருந்த  நடிகரிடம், ‘’ எங்கே அந்தப் புளிமூட்டை’’ என்று சிரித்துக்கொண்டே கேட்டார்.   அப்போது
ராமசாமியும் இதோ இருக்கிறேன் என்று சிரித்துக்கொண்டே, கட்டிலுக்கு அடியில் இருந்து வெகு சிரமப்பட்டு தனது உடம்பை வளைத்து வெளியே வந்தார்.  கலைவாணர் அன்று அந்தக்காட்சிக்காக வேடிக்கையாக புளிமூட்டை என்று சொன்னதை பலரும் வேடிக்கையாக அடிக்கடி சொல்லி வந்தார்கள்.   அதிலிருந்து ராமசாமியின் பெயரே ‘’புளிமூட்டை ராமசாமி’’ என்று நிலைத்து, அதுவே அவரைப் பிரபலப்படுத்திவிட்டது.



.

1953-இல் வெளிவந்த வெற்றிச் சித்திரமான “மதன மோகினி”யில் ஒரு காட்சி. அங்கமுத்து சேவற்கோழி ஒன்றைத் திருடன் ஒருவன் திருடிச் செல்லும் போது அதைப் பெருமையாக பாடிக்கொண்டே செல்வார். அப்போது ஒரு மண்டபத்திலிருந்து இதைக் கவனித்து வரும் வி.எம்.ஏழுமலை , புளிமூட்டை ராமசாமியும் அவனை மடக்கி நீ சொல்வதெல்லாம் உண்மைதானே என கேட்க, அதற்கு எதற்கெடுத்தாலும் “இது அப்பவே தெரியுமே” என அடிக்கடி கூறும் ஏழுமலை நான் சொல்லல உலகத்துல எவ்வளவோ அதிசயங்கள் எல்லாம் நடக்கும். அதுல இதுவும் ஒண்ணு என சொல்ல., அதக் கேட்டுப் பாத்துருவோம் என புளி மூட்டையும் சொல்ல, சேவல் திருடியவன் தங்க முட்டையைப் பத்தித்தான கேக்கப்போறீங்க என்பார். தினம் ஒரு முட்டையிடும் என்றும் கூற , புளிமூட்டை  அவன் கையிலிருக்கும் சேவலை, இத வெலைக்குக் கொடுக்கிறீங்களா என கேட்பார்..ஆகாங்…. இத வெலைக்குக் கொடுக்கறதுல்ல.  வேணா வாடகைக்குத் தரேன் என்று அதற்கு வாரத்திற்கு 100 வராகன்கள் என கேட்பார். அட போயா என்பார் புளிமூட்டை ராமசாமி. அதற்கு வி.எம்.எழுமலை அடப் பொறு அண்ணே அவசரப் படாதேண்ணே , தங்கமுட்டை விடுதில்ல. மூஞ்சியைப் பாத்தா தெரியல்ல. அது சாதாரண கோழியில்ல. தங்கமுட்டை நாளைக்கு ரெண்டொண்ணு விழும். அப்படீன்னா கணக்குப் பாரு.  ஆறு நாலும் பத்து, நாலும் ஆறும் பத்து என்பார், கேட்டேன். உன் கணக்குல மண்ணள்ளிப் போட என்பார் புளிமூட்டை. அட இருக்கட்டும் விடண்ணே அத வாங்கு என்பார் ஏழுமலை. ஆனால் கையில பணமில்லையே என்பார் புளிமூட்டை. “இது அப்பவே தெரியுமே” என்பார் ஏழுமலை. உடனே இருவரும் தத்தமது கரங்களில் அணிந்திருந்த காப்புக்களைக் கொடுத்து அச்சேவலை வாங்கிவிடுவர். வெளியில் தெரியாமல் கொண்டு செல்லவேண்டுமென கொடுத்தவர் கூறிவிடுவார். இவர்களும் அது போலவே மறைத்துக் கொண்டு செல்வர். அப்போது எதிரே சேவலைத் தேடி உரிமையாளரான அங்கமுத்து வர இவர்கள் மறைக்க துணிக்குள்ளிருந்து சேவல் ஒலியெழுப்ப அகப்பட்டுவிடுவர் இருவரும். அப்போது இருவரும் இது பொன் முட்டையிடும் கோழி. அதனால் ஒருவரிடம் விலை கொடுத்து வாங்கி வருகிறோம் என்பர். அதற்கு அங்கமுத்து அது சரி பொன் முட்டையிடுவதிருக்கட்டும். எங்கேயாவது சேவல் முட்டையிடுமாடா சேவலத் திருடி மறைச்சிகிட்டாடா போறீங்க என கேட்க இருவரும் ஓட்டம்பிடிப்பர்.  இக்காட்சி மிகவும் சுவாரஸியமாக இருக்கும்.

கண்ணகி [1942], மனோன்மணி [1943], மங்கம்மா சபதம் [1943], பார்த்துஹரி [1944], ஹரிதாஸ் [1944], பிரபாவதி [1944], தெய்வ நீதி [1947], தன அமராவதி [1947], ராஜகுமாரி [1947], அபிமன்யு [1948], மோகினி [1948], மருதநாட்டு இளவரசி [1948] , விசித்திர வனிதா [1948], கிருஷ்ண பக்தி [1948], பாரிஜாதம், கன்னியின் காதலி [1949], வனசுந்தரி [1951], மணமகள் [1951],  சர்வாதிகாரி [1951], மதன மோகினி [1953], நல்ல தங்கை  [1955] , எல்லோரும் வாழ வேண்டும் [1962] போன்ற 100-க்கும் மேற்பட்ட படங்களில் இவர் நடித்துள்ளார்.

நடித்த திரைப்படங்கள்
அலிபாபாவும் நாற்பது திருடர்களும் (1941)
கண்ணகி (1942)
குபேர குசேலா (1943)[5]
மனோன்மணி (1943)
ஹரிதாஸ் (1944)
பிரபாவதி (1944)
தெய்வ நீதி (1947)
தன அமராவதி (1947)
ராஜகுமாரி (1947)
அபிமன்யு (1948)
மோகினி (1948)
மருதநாட்டு இளவரசி (1948)
விசித்ர வனிதா (1948)
பில்ஹணா (1948)
கன்னியின் காதலி (1949)
பாரிஜாதம் (1950)
வனசுந்தரி (1951)
மணமகள் (1951)
சர்வாதிகாரி (1951)
குமாரி (1952)
மதன மோகினி (1953)
நல்ல தங்கை (1955)